Thursday, April 16, 2015

இலங்கை நாட்டினர் விசா இல்லாமலே இந்தியா வரும் புதிய நடைமுறை அமல்!

கொழும்பு: இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கையர்கள் முன்கூட்டியே விசா எடுக்காமல் இந்தியா வந்திறங்கிய பின் விசா பெற்றுக்கொள்ளும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா அனுமதி வேண்டியதில்லை என்றும், அங்கு சென்றவுடன் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது இது நடைமுறைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

கடந்த மாதம் 14 ஆம் தேதி இந்தியப் பிரதமர் அறிவித்ததற்கு அமைவாக ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் இந்தியா செல்லும் பயணிகள், இந்தியாவுக்குச் சென்றதன் பின்னர் விசா பெற்றுக்கொள்ள முடியும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆயினும், இராஜதந்திர அலுவலக மட்டத்திலான கடவுச்சீட்டைக் கொண்டிருப்பவர்களும், பாகிஸ்தானிய வம்சாவளி இலங்கை பிரஜைகளும், இந்தியாவில் தொழில் செய்பவர்கள், அங்கு வசிக்கின்ற இலங்கைப் பிரஜைகள் ஆகியோர் இந்த இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க முடியாது என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தடவை மாத்திரமே பிரயாணம் செய்யக் கூடிய இந்த முறையின் மூலம் பெறுகின்ற விசா 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் இந்தியத் தூதரகம் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.

இந்த நடைமுறையின் மூலம் பெங்களுரூ, சென்னை, டெல்லி, கோவா, ஹைதராபாத், கொச்சி, கொல்கொத்தா , மும்பை, திருவனந்தபுரம் ஆகிய 9 விமான நிலையங்களின் வழியாக மாத்திரமே இந்தியா செல்ல முடியும். எனினும் இந்த நடைமுறையின் மூலம் விசா பெறுபவர்கள், இந்தியாவில் இருந்து வெளியேறும்போது கட்டுப்பாடுகளின்றி, எந்தவொரு விமானத்தளத்தின் வழியாகவும் அங்கிருந்து பிரயாணத்தை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கால் லிட்டர் ஆவின் பாக்கெட் பால்: இன்று முதல் சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும்


சென்னையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கால் லிட்டர் (250 மி.லி) அளவு கொண்ட பாக்கெட் பால் வியாழக்கிழமை முதல் சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 26.50 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 11.67 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

இவற்றில் ஆவின் பால் மாதாந்திர அட்டைகள் மூலம் சுமார் 7.5 லட்சம் லிட்டரும், மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் 4.17 லட்சம் லிட்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன.

தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலை விட குறைந்த விலை, தரமான முறையில் கிடைக்கும் என்பதால் ஆவின் பாலை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.

சந்தையில் தற்போது 4 வகையான பாலில், 500, 1,000 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட பாலை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

பிப்ரவரியில் அறிமுகம்: இந்த வரிசையில், நிகழாண்டில் பிப்ரவரியில் பொதுமக்கள் வசதிக்காக 250 மில்லி லிட்டர் அளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது. ஆவின் நிறுவனம், சென்னை மாநகரில் ஒவ்வொரு பகுதியாக கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனையை விரிவுப்படுத்தி வந்தது.

இதுகுறித்து ஆவின் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நிலைப்படுத்தப்பட்ட பால் வகையில் (பச்சை நிறம்) 250 மில்லி லிட்டர் அளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனை பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னையில் முதல் கட்டமாக ராயபுரம், எண்ணூர், திருவொற்றியூர், வண்ணாரப் பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப் பேட்டை போன்ற வடசென்னைக்கு உள்பட்ட பகுதிகளிலும், வேப்பேரி, பெரம்பூர், கொளத்தூர், விருகம்பாக்கம், அசோக் நகர் போன்ற பகுதிகளில் 2-ஆவது கட்டமாகவும் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனை விரிவுபடுத்தப்பட்டது.

பரிசோதனை முயற்சியாக, நாளொன்றுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஒரு பாக்கெட்டின் விற்பனை விலை ரூ.11 ஆகும். இதற்கு நுகர்வோர் மத்தியில் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆகையால் பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் சென்னை மாநகரிலுள்ள ஆவின் விற்பனையகம், ஆவின் பாலகங்களில் 250 மி.லிட்டர் கொள்ளளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தற்போது வியாழக்கிழமை முதல் சென்னை மாநகரில் உள்ள அனைத்து சில்லறை விற்பனைக் கடைகளிலும், முகவர்கள் வாயிலாக கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இதன் மூலம் நுகர்வோர் சிரமமின்றி அனைத்து இடங்களிலும் கால் லிட்டர் பாக்கெட் பாலை பெறலாம் என்றார் அவர்.

Student loses money in fraud online transaction

An MBBS student here has lost Rs. 14,000 from his bank account in an online transaction done in London, after his ATM card was possibly cloned.

According to Mangaluru South Police, Simone Sajjan, a native of Bengaluru who is pursuing his medical course at the Father Muller Medical College here, received an SMS about Rs. 14,993 being deducted from his account in a State Bank of India branch in Indiranagar in Bengaluru on Tuesday. When he checked with a local branch here, Sajjan was told that the transaction had happened in an ATM in London. Deputy Commissioner of Police (Law and Order) K. Santosh Babu said that Sajjan’s ATM card could have been cloned. Mr. Santosh Babu said that apart from card cloning, fraudsters could have made use of a duplicate ATM card. Sajjan has now got his ATM card blocked.

The police have registered a case under Section 66 (C) of the Information Technology Act and also under Section 420 of the Indian Penal Code.

Medical students’ lack of attendance cannot be condoned, says HC

The Madras High Court Bench here has said it would not entertain cases filed to condone lack of attendance, especially with respect to medical college students, since their “incomplete training will put several human lives in danger.”

Justice S. Vaidyanathan made the observation while dismissing writ petitions filed by two government doctors who were not allowed by a private medical college in Kanyakumari district to take up their postgraduate examinations this month for want of 85 per cent attendance.

“Allowing these writ petitions will amount to injustice and discrimination. It will also set a wrong precedent since, according to the college, three other students, apart from the two petitioners before the court, had been stopped from writing examinations for the same reason,” the judge said.

Well-framed rules and regulations should not be tinkered with at any cost, the judge said, adding: “It is to be remembered that implementing the rules and regulations will help the students mould the values expected from them.” He went on to state that insistence on 85 per cent attendance, prescribed by the Medical Council of India and Tamil Nadu Dr.MGR Medical University, was not to trouble the students but only to achieve the aim of imparting the requisite training and making them experts.

The judge said the petitioners were serving as Assistant Surgeons at different government hospitals in Kanyakumari district. They were on study leave to pursue PG courses in Community Medicine and Biochemistry. Though the classes for the PG courses began in April 2012, they started attending the classes only from November 2012 due to the delay in obtaining permission from their superiors. Hence, the college refused to allow them to take up their final-year examinations this month.

Nursing college sanctioned for Coimbatore Medical College

The Indian Nursing Council has sanctioned a nursing college for the Coimbatore Medical College Hospital, the tertiary referral centre for Western districts and border areas of Kerala. The college is likely to begin admitting students as early as the next academic year.

A national regulatory body for nurses and nurse education in India, the Council is an autonomous body under the Union Ministry of Health and Family Welfare.

Hospital sources told The Hindu that the building plan was discussed with the Public Works Department (Medical Wing) on Wednesday. They were likely to be approved shortly and the PWD would soon call for tender.

A hospital official said that while diploma students of nursing were sought after in India for the field experience, those going abroad will need a degree. Foreign universities gave preference for applicants with undergraduate or postgraduate degree.

The hospital already has a School of Nursing, which offered a diploma course with a duration three-and-a-half years.

The newly-sanctioned college of nursing would offer a four-year undergraduate degree of B.Sc. and a postgraduate degree of M.Sc., which will have duration of two years.

The College will offer B.Sc. alone in the initial years with 50 seats.

The postgraduate course will start at a later date.

The Nursing Council will inspect the College building, for which a site of 3.5 acres had been identified at the Coimbatore Medical College.

According to sources, the Council has directed the CMCH to reduce the number of seats in its diploma to 100 from the current seat strength of 145.

As of now, the CMCH School of Nursing had 140 students in the first year, 135 in the second and 132 in the final year.

Separately, the College will also soon begin constructing a hostel building for nursing students.

Wednesday, April 15, 2015

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-வது வாரத்தில் தொடக்கம்: 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிப்பு



எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-வது வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 383 இடங்கள் (15 சதவீதம்), அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு (மத்திய அரசுக்கு) ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 2,172 இடங்கள் (85 சதவீதம்) மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரில் 100 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இவற்றில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு உள்ளன. இவை தவிர இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) அனுமதியைப் பொறுத்து தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகள், தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளின் மூலமாக 1,000-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்க வாய்ப்புள்ளன. இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வரும் மே முதல் வாரத்தில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 2-வது வாரத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகத்தை தொடங்க மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரிகள் கூறுகையில், “மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பத்தை மே 2-வது வாரத்தில் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு பத்திரிகைகளில் வெளியிடப்படும்” என்றார்.

புதிய கல்லூரிக்கு அனுமதி கிடைக்குமா?

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை அனுமதி கேட்டு கடந்த ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் (எம்சிஐ) தமிழக அரசு விண்ணப்பித்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எம்சிஐ அதிகாரிகள் மருத்துவக் கல்லூரி மற்றும் கல்லூரிக்காக தற்காலிகமாக திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் குறைபாடுகளை சுட்டிக்காட்டி சரிசெய்யும்படி தெரிவித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து எம்சிஐ அதிகாரிகள் சொன்ன குறைபாடுகளை தமிழக அரசு சரிசெய்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக கடந்த வாரம் கல்லூரி மற்றும் மருத்துவமனையை எம்சிஐ அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது எம்சிஐ அதிகாரிகள் திருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.

மருத்துவக் கல்வி இயக்ககம் இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் கீதா லட்சுமி கூறுகையில், “ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்சிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். இந்த கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த கண்டிப்பாக ஒரு மாதத்தில் எம்சிஐ அனுமதி கொடுத்துவிடும். எம்சிஐ அனுமதி கிடைத்துவிட்டால் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி களின் எண்ணிக்கை 20 ஆகவும், எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 2,655 ஆகவும் அதிகரிக்கும்” என்றார்.

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு எடுக்கவுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு உடனடி யாக பணப்பயன்கள் கிடைக்கும்.

தமிழகத்தில் கடந்த 1.4.2003 முதல் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள் என 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் அடிப் படைச் சம்பளம், தர ஊதியம் மற்றும் அதற்கு இணை யான அகவிலைப்படி ஆகிய கூட்டுத்தொகையில் மாதம் தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதே அளவு தொகையை அரசு தனது பங்காகச் செலுத்தும். இவ்வாறு சேரும் தொகையில் 60 சதவீதம் ஊழியர் ஓய்வுபெறும்போது கொடுக் கப்படும். மீதமுள்ள 40 சதவீத தொகை, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக அளிக்கப்படும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தில், பொது வருங்கால வைப்புநிதியில் (ஜிபிஎஃஎப்) ஊழியர்கள் தங்கள் தேவைக்கு முன்பணம் எடுக்கலாம். கடன் பெறலாம். ஆனால், இத்தகைய வசதிகள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் (சிபிஎஃப்) கிடையாது.

புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 12 ஆண்டுகளில் ஏறத்தாழ 25 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், ஓய்வுபெற்றிருக்கிறார்கள்.

உயிரிழந்தவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணியை ராஜினாமா செய்தவர்கள் ஆகியோரும் இந்தபட்டியலில் அடங் குவர். இதுவரையில் அவர் களுக்கு சிபிஃஎப் ஓய்வூதிய பயணப்பயன்கள் கிடைக்க வில்லை. மாதம்தோறும் சம்பளத்தி லிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை கூட கிடைக்கவில்லையே என்று அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக அரசு தகவல் தொகுப்பு விவர மைய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வுபெற்றவர்கள், உயிரிழந் தவர்கள் குறித்த பட்டியலை அரசு கேட்டிருக்கிறது.

எனவே, ஓய்வுபெற்ற ஊழியர் களுக்கும், உயிரிழந்த பணியா ளர்களின் குடும்பத்தி னருக்கும் சிபிஎஃப் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது” என்று தெரி வித்தனர்.

இதுகுறித்து நிதித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு விரைவில் கொள்கை முடிவு எடுக்கவுள்ளது.மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வாய்ப்பில்லை. இந்தியாவில், புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படாத இரண்டு மாநிலங்களில் (திரிபுரா, மேற்கு வங்காளம்) திரிபுரா கூட அகில இந்திய பணி ஊழியர் களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவந்துவிட்டது” என்றார்.

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்கும்பட்சத்தில், இந்த திட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் கிடைக்கும். இதற்கிடையே, சிபிஎஃப் பணிகளை கருவூல கணக்குத்துறையிடம் ஒப்படைக்க முயற்சி நடப்பதாகவும் அரசு தகவல் தொகுப்பு மைய ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

துறை சீரமைப்பு என்கிற பெயரில் ஆட்குறைப்பு செய்யக்கூடாது, புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களை வேறு துறைக்கு மாற்றம் செய்யக் கூடாது என்று தகவல் தொகுப்பு விவர மைய ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...