Tuesday, April 21, 2015

கோபமா..? அப்படின்னா..? -எம்.என்.நம்பியார்....விகடன் பொக்கிஷம்

 1964, 1969, 1974-ல் வெளியான பேட்டிகளில் இருந்து தொகுத்தது.

முப்பது வருடங்களுக்கு முன் நவாப் ராஜ மாணிக்கத்தின் நாடகக் கம்பெனி நீலகிரிக்குப் போயிராவிட்டால், சினிமா உலகிற்கு மஞ்சேரி நாராயணன் நம்பியார் கிடைத்திருக்கமாட்டார். கம்பெனியிலிருந்த சிறுவர்களைப் பார்த்துத் தானும் ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்படவே, திடீரென்று ஒரு நாள் போய்ச் சேர்ந்து விட்டார்.
''நாடகத்தில் என்ன வேஷம் போடுவீர்கள்?''
''குடி... தடி... தாடி முதலிய வேஷங்கள்...''
''அப்படின்னா?''
''குடிமக்களில் ஒருவன், தடியைப் பிடித்துக் கொண்டு அரச சபையில் நிற்கும் சேவகன், ரிஷிகள், முனிவர்கள்...''
1935-ம் வருஷம் மைசூரில் கம்பெனி 'காம்ப்' இருந்தபோதுதான், பம்பாய் ரஞ்சித் ஸ்டுடியோவில் 'பக்த ராமதாஸ்' படமாக்கப்பட்டது. நம்பியார் நடித்த முதல் தமிழ்ப் படம் அதுதான். அதில் அவர் தெலுங்கில் வசனம் பேசியிருக்கிறார். அவருக்குக் கொடுக்கப்பட்ட பணம் 40 ரூபாய்!
நம்பியார் நடித்த இரண்டாவது படம் வெளி வரவேயில்லை. 1938-ம் வருடம் ஜி.பட்டு ஐயர் டைரக்ட் செய்த 'இன்ப சாகரன்' என்ற அந்தப் படம், ஸ்டுடியோவில் தீப்பிடித்துக்கொண்டபோது எரிந்துபோய்விட்டது.
இந்த இருபது ஆண்டுகளாக நம்பியார் என்கிற நட்சத்திரம் ஒளி குன்றாமல் சினிமா வானில் சுடர் விட்டுப் பிரகாசித்துக்கொண்டு வருகிறது. இதுவரை 105 படங்களில் நடித்திருக்கிறார் அவர்.
ஒவ்வொரு வருடமும் இரண்டு மலைகளுக்குப் போக அவர் தவறுவதில்லை. ஒன்று, நீலகிரி மலை; மற்றொன்று சபரிமலை.
நம்பியார் சைவ உணவுதான் சாப்பிடுகிறார். ''நான் ஓவல்டின், கேக், ஐஸ்கிரீம் இதெல்லாம் கூட சாப்பிட மாட்டேன். ஏன்... பிஸ்கோத்துகளைக் கூட கொஞ்சம் யோசித்துதான் தின்பேன். ஏன்னா, அதுலே கூட சில சமயம் முட்டையைக் கலந்துடறாங்க'' என்று சொல்லிச் சிரிக்கிறார்.
பொதுவாக நம்பியார் என்றதும், உருட்டும் விழி களும் மிரட்டும் தொனியும்தான் நமது ஞாபகத்துக்கு வரும். வீட்டிலோ அவர் சாது; பரம சாது!
''அவருக்குக் கோபமே வராதுங்க. சாதாரணமா ஒருத்தருக்குக் கோபம் வரக்கூடிய நிகழ்ச்சி நடந் தால் கூட இவருக்குக் கோபம் வர்றதில்லை. அப்படி ஒரு குணம். பொறுமையா இருப்பார். நிதானமாக நடந்துப்பார். சமீபத்திலே ஒரு லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள நகைகள் காணாமல் போனபோதுகூட துளிக்கூடப் பதற்றப்படாமல், 'நாம நியாயமா உழைச்சு சம்பாதிச்ச பணம்னா அது திரும்பி வந்துடும்'னு சொல்லிட்டே இருந்தார். அவர் சொன்ன மாதிரியே எல்லா நகைகளும் திரும்பக் கிடைச்சிட்டுது'' என்றார் திருமதி ருக்மணி நம்பியார்.
''படப்பிடிப்புக்குப் போயிட்டு வந்ததும் வீட்டில் எப்படி இருப்பார்?''
''படப்பிடிப்பிலே என்னென்ன நடந்தது, யார் யார்கிட்டே என்னென்ன பேசினார்ங்கிறதையெல் லாம் ஒண்ணுவிடாமல் சொல்வார். என்கிட்டே மட்டுமில்லை, யார்கிட்டேயும் எதையும் மறைக் காமல் சொல்வார். எதையாவது தமாஷா பேசி சிரிக்க வெச்சுடுவாரு. இவர் வீட்டிலே இருந்தால் போதும்... எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாயிடும். நான் யாரையாவது கொஞ்சம் கோபமா கண்டிச்சேன்னா, அவங்க எதிரிலேயே என்னிடம் 'கோபப்படாம நிதானமா பேசு'ன்னு சொல்வாரு. அதனாலே மத்தவங்க என்ன சொல்றாங்க தெரி யுங்களா... 'அய்யா ரொம்ப நல்லவரு. அம்மாதான் ஒரு மாதிரி'ன்னு சொல் றாங்க'' என்று கூறிவிட்டுச் சிரித்தார் ருக்மணி.
''உங்கள் கணவர் சிகரெட் குடிக் கிறாரே, அதற்கு நீங்கள் எதுவும் ஆட்சேபனை சொன்னதில்லையா?''
''இல்லீங்க. வருஷத்துக்கு ரெண்டே மாசம்தான் சிகரெட் குடிப்பார். மீதி மாசங்களிலே குடிக்கமாட்டார்.''
''அதென்ன கணக்கு?''
''என்னவோ அப்படி ஒரு பழக்கம்.''
''உங்களுக்கு எத்தனைக் குழந் தைகள்?''
''இரண்டு பையன்கள்; ஒரு பெண். அந்தக் காலத்திலேயே நாங்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மேற்கொண்டு விட்டோம்!''
''பொதுவா எத்தனை மணிக்குத் தூங்குவார்?''
''அவராலே நினைச்சவுடனே தூங்கமுடியுங்க. காரணம், கவ லையே இல்லாத மனசு. நாமும் சந்தோஷமா இருக்கணும், நம் மோட இருக்கிற மத்தவங்களும் சந்தோஷமா இருக்கணும்னு நினைப்பார். இவ்வளவு நல்லவ ருக்கு எப்போதும் வில்லன் வேஷமே தர்றாங்களேனு நான் கவலைப்படறது உண்டு. ஆனா, அந்தக் கவலை கூட அவருக்குக் கிடையாது. வேஷம்... அது எதுவானாத்தான் என்னங்கிறது அவர் நினைப்பு!''
''குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிப்பாரா?''
''முந்திதான் அது. இப்ப பொண்ணுக்குக் கல்யாணமாகிவிட்டது. பையன்கள் காலேஜுக்குப் போனதுக்கு அப்புறம், நண்பர்கள் யாரும் வராவிட்டால் நான் சமையல் வேலைகளை முடித்துக் கொண்ட பிறகு ரெண்டு பேரும் ஏதாவது கதை பேசிக்கிட்டு இருப்போம். 'பாட்மின்ட்டன்' ஆடுவோம். அவருக்கு பூகோளத்திலே ஆர்வம் உண்டு. ருசிகரமான விஷயங்கள் சொல்வார். ராத்திரியிலே பசங்களோடு சேர்ந்து சாப்பிட்டால்தான் அவருக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கும்.''
''வருஷா வருஷம் சபரிமலைக்குப் போகிறாரே... இங்கே கோயில்களுக்குப் போவது உண்டா?''
''இல்லீங்க. வீட்டிலேயே பூஜை அறை இருக்கு. நான் பூஜை செய்துகொண்டிருக்கும் போது அவர் வந்து கொஞ்ச நேரம் சாமி கும்பிட்டுட்டுப் போவார். அவ்வளவுதான்!''
''என் மனைவியைக் கேட்காமல் நான் எதையுமே செய்வதில்லை. எனக்கு ஷர்ட் தேர்ந்தெடுப்பதிலிருந்து எனக்கு வேண்டிய எல்லாக் காரியங்களையும் என் மனைவி தான் செய்வது வழக்கம். வீட்டு நிர்வாகத்திலிருந்து என்னை நிர்வகிப்பது வரை எல்லாமே என் மனைவிதான். மனைவிக்கு அடங்கிய கணவன் நான்!'' என்கிறார் நம்பியார்.
''நல்லவர்கள் எல்லோரும் தம் மனைவியை இப்படித்தான் புகழ்வார்கள். புகழவேண்டி இருக்கும். காரணம், அவர்களுடைய வாழ்வில் மனைவி ஒரு 'அஸெட்'! எனக்கு மனைவி தான் எல்லாமே என்று சொல்லிக்கொள்ள நான் வெட்கப்படுவதில்லை. சிவனே உமையைத் தன் உடலில்தானே வைத்துக்கொண்டு இருக்கிறார். கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவுதான் (mutual understanding) வாழ்க்கையை அழகாக அமைக்க முடியும்! என் மனைவி எனக்குக் கண்கண்ட தெய்வம்!'' என்கிறார் நம்பியார்.
''இப்போதெல்லாம் வெளிப்புறப் படப் பிடிப்புக்குக்கூட நான் என் மனைவியை அழைத்துச் செல்கிறேன். அவள் நன்கு சமைப்பாள். நான்தான் மற்றவர்கள் தயாரிக்கும் உணவை விரும்பி ஏற்பதில்லையே!'' என்று நம்பியார் கூற, கலகலவெனச் சிரிக்கிறார் ருக்மணி.

PHARMACY COURSES GET GOVT APPROVAL...Deccan Chronicle


காஸ் சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் நுகர்வோருக்கு ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்: மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகிக்கும் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 50 லட்சம் பேர் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகிறார்கள். தேசிய குற்றப்பதிவகம் கடந்த 2012-ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி குஜராத் மாநிலத்துக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகளவு காஸ் சிலிண்டர் விபத்துகள் நடைபெறுகின்றன.

இந்த விபத்தினால் பாதிக்கப்படும் நுகர்வோருக்கு இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை.

காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தி வருகின்றன. சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால், அந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள் வார்கள். இந்த ஆய்வின்போது விபத்து நடைபெற்றதற்கான காரணங்கள் கண்டறியப்படும். விபத்தின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்.

இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் காஸ் ஏஜென்சியையோ, சம்பந்தப் பட்ட எண்ணெய் நிறுவனத்தையோ அணுகலாம்.

இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காஸ் சிலிண்டர் விபத்து சம்பந்தப்பட்ட நுகர்வோரின் வீட்டில் நடந்திருக்க வேண்டும். வீட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் வணிக ரீதியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது. அதேபோல் கோயில் திருவிழா மற்றும் சுற்றுலா செல்லும் இடங்களுக்கு சிலிண்டர் கொண்டு செல்லப்பட்டு விபத்து ஏற்பட்டிருந்தால் இன்சூரன்ஸ் தொகை கிடைக்காது. கூரை வீடுகளில் சிலிண்டர் விபத்து ஏற்பட்டாலும் இன்சூரன்ஸ் தொகையை பெற முடியாது. சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் குறைந்தது ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஸ் சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் அதற்கான இன்சூரன்ஸ் தொகை பெறுவது குறித்து கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

சிலிண்டர் வெடி விபத்துகளை தவிர்க்க செய்ய வேண்டியவை:

* டெலிவரி செய்யப்படும் சிலிண்டர் முறையாக சீல் செய்யப் பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

* சிலிண்டரையும் அடுப்பையும் இணைக்கும் ரப்பர் டியூப்பை 6 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். அல்லது 5 ஆண்டுகள் வரை உழைக்கும் கடினமான டியூப்பை பயன்படுத்த வேண்டும்.

* தினமும் இரவில் படுக்கப் போவதற்கு முன்பு ரெகுலேட்டரை 'ஆஃப்' செய்ய வேண்டும்.

* மின்சார சுவிட்சை போடும் போது ஏற்படும் சிறிய தீப்பொறியே காஸ் தீப்பிடிக்க போதுமானது. எனவே காஸ் கசிவு ஏற்பட்டிருப்பதை அறிந்தால் மின் சுவிட்சை போடவோ, அணைக்கவோ கூடாது.

* கசிந்த காஸ் வெளியேற கதவு, ஜன்னல் ஆகியவற்றை திறக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஜன்னல் கொக்கியை நீக்கும்போது ஏற்படும் சிறு உராய்வுகூட தீப்பொறியை உண்டாக்க போதுமானது.

* கசிவு ஏற்பட்டு இருப்பதை அறிந்தால் உராய்வு ஏற்படும் எந்த செயலையும் செய்யாமல் மெதுவாக வீட்டிலிருந்து வெளி யேறி, உடனடியாக தீயணைப்பு துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும்.

இந்த முறைகளை பின்பற்றி னாலே 95 சதவீத விபத்துகளை தவிர்க்க முடியும்.

Court ruling on grant of monetary benefits to part-time staff

Part-time employees in government institutions are entitled to monetary benefits only from the date when they are regularised in service and not from the day when they complete10 years of service, the Madras High Court Bench here has ruled.

Allowing a writ appeal preferred by the State, a Division Bench of Justices S. Manikumar and G. Chockalingam held that a single judge of the court was not right in ordering regularisation as well as grant of monetary benefits immediately after completion of 10 years of service.

The Division Bench agreed with Additional Advocate General K. Chellapandian that last year, the Supreme Court had categorically held that part-time employees in government institutions could not seek even regularisation of service as a matter of right. Nevertheless, the government had been considering the pleas for regularisation sympathetically. R. Paulian, a part-time sweeper in a government school in Kanyakumari, was one such beneficiary. A Government Order passed in his favour stated that he would be entitled to monetary benefits only from the date of passing of the G.O.

He challenged the legal validity of the G.O. and a single judge of the High Court on January 29, 2014 ordered grant of monetary benefits also from the date of completion of 10 years in service.

MCI team inspects medical college

A three-member team of the Medical Council of India on Monday inspected the Government Mohan Kumaramangalam Medical College Hospital to ascertain if the compliance report submitted earlier for granting permanent affiliation for the increased 100 seats for the first year MBBS are fulfilled.

Two years ago, the medical college was given temporary approval for increasing the intake for first year MBBS from 75 to 100 seats.

Hence, the college was asked to fulfil statutory infrastructure for giving permanent affiliation.

A team led by coordinator Dr. Biraj Kumar Das, Professor, Department of ENT, Jorhat Medical College and Hospital, Assam, and members Dr. Sachidananda Mohanty, Professor, Department of Forensic Medicine, MKCG Medical College, Orissa, and Dr. S. Aruna, Professor, Department of Anatomy, Indira Gandhi Medical College and Research Institute, Puducherry, visited various departments to ascertain whether the norms are fulfilled.

Discussion

The team also held discussions with Dr. N. Mohan, Dean of the hospital, Dr, Swaminathan, Dr. P.V. Dhanapal, Deputy Medical Superintendent, Dr. Geetha David, Resident Medical Officer, and Dr. Sundaravel, Nodal Officer. The team would in turn submit report to MCI and based on it permanent affiliation would be granted, doctors said.

The team had earlier visited the medical college on Steel Plant Road and ascertained the infrastructure present there.

பரீட்சையில் தோல்வியா? கவலையை விடுங்கள்.. வாழ்க்கையில் ஜெயிக்கலாம்!

பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் மன நெருக்கடிக்கு உள்ளாகி, நிம்மதியை இழக்கிற காலகட்டம் இது! விதைத்து பயிர் வளர்த்த விவசாயிகள் அறுவடைக்கு காத்திருப்பது போன்று, பரீட்சை எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்கு காத்திருக்கிறார்கள்.

‘நிறைய மதிப்பெண் கிடைக்கும். டாக்டர், என்ஜினீயரிங் படிப்பில் வெற்றிகரமாக சேர்ந்து அதிக செலவில்லாமல் படித்து முடித்து விடலாம்’ என்று எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள் ஒருவகை. இந்த வகை மாணவர்கள் நன்றாக படிப்பவர்கள் என்று பெயரெடுத்திருப்பார்கள். அதனால் அவர்களது பெற்றோரும், நண்பர்களும், உறவினர்களும் கூட அந்த மாணவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு சுமையினை ஏற்றி வைத்திருப்பார்கள். தேர்வு முடிவு அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் அமையாவிட்டால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகுவார்கள்.

இன்னொரு வகை மாணவர்கள் மதில்மேல் பூனை போல் வெற்றியா, தோல்வியா என்ற கேள்விக்குறியோடு காத்திருப்பவர்கள். தேர்வு முடிவு வரத் தொடங்கும்போது இவர்கள் தன்னை அறியாமலே பயப்படத் தொடங்குவார்கள். கவலையும், மன உளைச்சலும் இவர்களை உலுக்கும்.

தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதபோதும், தோல்வி அடைந்துவிட்டோம் என்ற நிலையை அடையும்போதும் எதிர்காலத்தை பற்றிய அச்சமும், சமூகத்தை-உறவினர்களை எதிர்கொள்வதை நினைத்து ஏற்படும் கவலையும், அவர்களுக்கு கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

மன உளைச்சல் எல்லை மீறும் போது ஒரு சிலர் தற்கொலை என்கிற மிக தவறான முடிவினை எடுத்துவிடுகிறார்கள். இந்தியாவில் தற்கொலை அதிகரிக்கிறது. உலக சுகாதார நிறுவனம், 'தற்கொலைகளின் உலக தலை நகரம்' என்று இந்தியாவை குறிப்பிடுகிறது. 2013-ல் 1,34,799 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். இந்தியாவில் இரண்டாம் இடத்தை தமிழ்நாடு பிடிக்கிறது. தற்கொலை செய்துகொள்கிறவர்களில் 10 சதவீதம்பேர் மாணவர்கள் என்பது அதிர்ச்சியான உண்மை! அதனால் தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் ஒவ்வொரு மாணவரும் ‘வாழ்க்கையில் நிறைய தேர்வுகள் வரும். அதில் தோல்வியும், வெற்றியும் மாறிமாறி வருவது இயற்கை. ஆனால் ஒரே ஒரு உயிர்தான்.

போனால் அது திரும்பி வராது' என்ற உண்மையை உணர வேண்டும். 'தோல்வியை நாளையே வெற்றியாக மாற்ற முடியும்' என்ற தெளிவோடு தேர்வு முடிவை எதிர்கொள்ளவேண்டும்.

மாணவர்கள் மனநெருக்கடியை அனுபவிக்கும் இந்த கால கட்டத்தில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது.

பெற்றோருக்கு:

தேர்வு எழுதிய காலத்தில் கொடுத்ததைவிட அதிக முக்கியத்துவத்தை உணர்வு ரீதியாகவும், உணவுரீதியாகவும் உங்கள் குழந்தைகளுக்கு கொடுங் கள்.
அவர்களது மனக்குழப்பத்தை அதிகரிக்கும் எந்த செயலிலும் ஈடுபடவேண்டாம்.

எப்போதும் பாசிடிவ்வாக பேசுங்கள். தோல்வியில் வென்று சாதனை படைத்தவர்களின் வாழ்க்கையை சொல்லுங்கள்.

தேர்வு முடிவு எப்படியிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள அவர்களை மனோரீதியாக தயார்ப்படுத்துங்கள்.

மனதுக்கு அமைதியை கொடுத்து நன்றாக தூங்கச் செய்யுங்கள்.

ரிசல்ட் வருவதற்கு முந்தையநாள்:

உங்கள் இதர வேலைகளை எல்லாம் ஒத்திவைத்துவிட்டு கூடுமானவரை அவர்களை உங்கள் கண்காணிப்பிலே வைத்திருங்கள்.

பயத்தை விலக்கிவிட்டு பாட்டு கேட்கட்டும். வழிபாட்டிற்கு சென்றால் அனுமதியுங்கள். மனக் குழப்பத்தையோ, பயத்தையோ ஏற்படுத்தும் உறவினர்கள்- நண்பர்களை சந்திக்காமல் இருக்கட்டும்.

‘எதுவந்தாலும் பயப்பட வேண்டியதில்லை. நாங்கள் எப்போதும் உனக்கு துணையாக இருப்போம்’ என்று நம்பிக்கையூட்டுங்கள்.

தற்கொலை பற்றி சிந்திப்பவர்களிடம் தென்படும் அறிகுறிகள்:

* நிறைய சாப்பிடுவார்கள் அல்லது சாப்பாட்டிலே ஆர்வமில்லாதவர்களாக இருப்பார்கள்.

* காரணமின்றி அதிக கோபம் கொள்வார்கள்.
* தனிமையில் எந்நேரமும் சூழன்று கொண்டிருப்பார்கள்.

* தான் அதிகம் விரும்பும், அதிகம் நேசிக்கும் பொருளை திடீரென்று
அடுத்தவர்களுக்கு இனாமாக கொடுக்க முன்வருவார்கள்.
* அதிகமாக தூங்குவது அல்லது தூக்கமே இல்லாமல் தவிப்பது.

* முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்துவது!

இப்படிப்பட்ட அறிகுறிகளில் ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்டவைகளோ தேர்வு முடிவு தெரியும் காலக்கட்டத்தில் உங்கள் பிள்ளைகளிடம் இருந்தால் அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்துங்கள்.

கீழ்கண்டவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்.
* ஏற்கனவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள்.

* எப்போதும் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பவர்கள். (impulsive dicision)
* பலகீனமான மனநிலை கொண்டவர்கள்.
* போதைப் பழக்கம் உள்ளவர்கள்.

* பெற்றோர் பிரிவு அல்லது அமைதியற்ற குடும்பத்தில் வசிப்பவர்கள்.
* அதிரவைக்கும் செயல்பாட்டை கற்பனை செய்துகொண்டு, அதை நாம் நிஜமாக்கினால் என்ன? அதை அனுபவித்து பார்த்தால் என்ன? என்ற கோணத்தில் சிந்திப்பவர்கள்.

* தற்கொலை மனோபாவத்தில் இருப்பவர்கள், அதற்கான சூழ்நிலைகளோ, பொருட்களோ கிடைத்தால் உடனே அந்த முயற்சியில் இறங்கிவிடுவார்கள்.

அதனால் அறிகுறி தென்படுபவர்கள் கண்களில் தற்கொலைக்கு பயன்படுத்தும் கயறு, கத்தி, துப்பாக்கி, தூக்க மாத்திரைகள், விஷம், ஆசிட் போன்ற பொருட்கள் படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்று வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அனைவருமே ஏதாவது ஒருமுறை தேர்வில் தோற்றவர்கள்தான். அதனால் தோல்வியை நினைத்து துவண்டுவிடாமல், ‘நாளை தானும் ஒரு உயர்ந்த மனிதன் ஆவதற்கு வாய்ப்பு உருவாகி இருக்கிறது’ என்று நம்பிக்கை கொள்ளுங்கள்!

ரிசல்ட் அன்று:

கடவுள் நம்பிக்கை இருந்தால் வழிபாட்டு மையத்திற்கு அழைத்து செல்லுங்கள்.

முடிந்தவரை உங்கள் கண்காணிப்பிலே தேர்வு முடிவை பார்க்கட்டும்.

முடிவு எப்படி இருந்தாலும் அதை விமர்சிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.

எதிர்பார்த்ததைவிட மதிப்பெண் குறைந்திருந்தாலோ, ஒருவேளை தோல்வி அடைந்திருந்தாலோ உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள்.

மகிழ்ச்சியான ரிசல்ட் என்றால் எல்லோரிடமும் கூறி சந்தோஷப்படுங்கள்.

எதிர்மறையான ரிசல்ட் என்றால் யாரிடமும் கூறவேண்டாம். முடிந்த அளவு நண்பர்கள், உறவினர்கள் போன்களை புறக்கணித்துவிட்டு முழு கவனத்தையும் மகன் மீது செலுத்துங்கள்.

தோல்வியை திரும்பிப்பார்க்க வேண்டாம். அதை பற்றி விசாரிக்கவும் வேண்டாம். அடுத்து என்ன செய்வது? என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
எந்த தோல்விக்கு பின்னாலும் மிகப்பெரிய வெற்றி ஒன்று ஒளிந்திருக்கும் என்பதை உணர்த்துங்கள்.

அந்த தோல்வியால் எழும் மன அழுத்தம்தான் தவறான முடிவுகள் எடுக்க தூண்டும். பெற்றோர், உறவினர்கள், நண்பர்களை எதிர்கொள்ள தயங்குபவர்களே தற்கொலை போன்ற முடிவுக்கு செல்வார்கள். அந்த தயக்கத்தை போக்கிவிட்டால், மன அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்.

தேர்வு முடிவு எதிர்மறையாக இருந்தால் அவர்களை தனியாக இருக்க அனுமதிக்க வேண்டாம். நல்ல நண்பர்களை சந்திக்கட்டும். அதே நேரத்தில் பிரச்சினைக்

குரிய நண்பர்களின் சந்திப்பு அவசியம் இல்லை. தனியாக எங்கேயும் அனுப்ப வேண்டாம்.

தோல்வி அடைந்தவர்களுக்கு நம்பிக்கைதான் நல்ல மருந்து. அந்த நம்பிக்கை மருந்தை வாய்ப்பேச்சாக மட்டும் வழங்காமல் திட்டமாக தயாரித்து வழங்குங்கள். அடுத்து எழுதவேண்டிய பரீட்சை பற்றியும், அதற்கான தயாரெடுப்பு பற்றியும், பின்பு சேரவேண்டிய கோர்ஸ் பற்றியும் நம்பிக்கையூட்டும் விதத்தில் அந்த திட்டத்தை தயார் செய்து கொடுங்கள்.
தேர்வில் தோற்றவர்கள் யாரும் வாழ்க்கையில் தோற்றதில்லை. தேர்வில் வென்றவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வென்றதும் இல்லை.

‘வாழ்க்கையில் நிறைய தேர்வுகள் வரும். அதில் தோல்வியும், வெற்றியும் மாறிமாறி வருவது இயற்கை. ஆனால் ஒரே ஒரு உயிர்தான். போனால் அது திரும்பி வராது' என்ற உண்மையை உணர வேண்டும்.

கட்டுரை: பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி, DSc., F.R.C.S.
தலைவர்: தமிழ்நாடு மருத்துவர் சங்கம், சென்னை.

மருந்துக்கு விலை உயர்வா?

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அதையும் மீறி நோய்வரும் நேரத்தில், அந்த நோயின் கொடுமையைக் கட்டுப்படுத்த மருந்துகள் உட்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த நிலையில், நீரிழிவு, புற்றுநோய் உள்பட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் 509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை 3.84 சதவீதம் உயர்த்திக்கொள்ள மருந்து கம்பெனிகளுக்கு, மத்திய அரசாங்கம் அனுமதி அளித்திருப்பது பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த மருந்துகளெல்லாம் தினமும் நோயாளிகள் நோயின் தன்மைக்கேற்ப ஒருமுறைக்கு மேல் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் மருந்துகளாகும். தேசிய மருந்து விலை ஆணையம் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில், இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக ஒரு அறிவிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த 509 மருந்து பட்டியலில் மஞ்சக்காமாலை, புற்றுநோய், மூட்டுவலி போன்ற நோய்களுக்கு பயன்படுத்தும் ஊசி மருந்துகளும் அடங்கும். ஒருபக்கம் குடும்பக்கட்டுப்பாடு திட்டங்களில் தீவிரம் காட்டும் அரசாங்கம், கருத்தடை சாதனங்களுக்கும் விலையை உயர்த்தியுள்ளது. அரசாங்கத்தின் விலை கட்டுப்பாட்டில் உள்ள மற்ற மருந்துகளை மருந்து கம்பெனிகள் 10 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 108 மருந்துகளை இப்படி அத்தியாவசிய மருந்துகள் மீதான விலைக்கட்டுப்பாட்டில் இருந்து நீக்கியதால், அதன் விலைகளும் இப்படி 10 சதவீதம் வரை நிச்சயமாக உயர்ந்து விடும்.

ஏற்கனவே இந்த அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ள பாரசிட்டமால், மெட்டோபார்மின், அமாக்சிலின், ஆம்பிசிலின் உள்பட 12 மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து அதில் முக்கியமாக 80 முதல் 90 சதவீதம் வரை சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சீனாவில் இருந்து ரூ.38 ஆயிரத்து 186 கோடி செலவிலான இந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறையால் அநேகமாக பெரும்பான்மையினருக்கு 40 வயதுக்கு மேல் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. முன்பெல்லாம் காலையில் நடை பயிற்சி செல்லும் நேரத்தில் ஒருவரையொருவர் நலமா என்று விசாரித்த காலம்போய், இப்போது சர்க்கரை அளவு எவ்வளவு என்று விசாரிக்கும் காலம் வந்துவிட்டது. இந்த சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக்கொதிப்பு, சிறுநீரக கோளாறு, ஆஸ்துமா, அல்சர் போன்ற பல நோய்களுக்கு தினமும் மருந்து சாப்பிடவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த மருந்து செலவுக்கெல்லாம் இன்சூரன்சும் இல்லை, வருமானவரி விலக்கும் இல்லை. வயதான காலத்தில் இந்த மருந்து செலவே மாதசெலவில் பெரும் பங்கை விழுங்கிவிடு கிறது.

இந்த நிலையில், மருந்துவிலை உயர்வு என்பது சமுதாயத்தின் அனைத்து பிரிவினரையும் பெரிதும் பாதிக்கும். எனவே, இதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே மத்திய அரசாங்கம் திட்டமிட்டு அறிவித்த ‘ஜன் அவுஷாதி’ என்ற பெயரிலான அத்தியாவசிய மருந்துகளை ஜெனரிக் மருந்துகள் என்ற அடிப்படையில், ஜூலை மாதம் முதல் விற்பனைக்கு கொண்டுவர வேண்டும். ஜெனரிக் மருந்துகள் என்றால் வணிக முத்திரையுடன் கூடிய மூலக்கூறுகளாலான மருந்துகளாகும். மருந்து ஒன்றுதான், ஆனால், கம்பெனி பெயர்தான் இருக்காது, பளபளக்கும் பேக்கிங்களிலும் இருக்காது. இந்த வகையில் 504 ஜெனரிக் மருந்துகள் விற்கப்படும். முதல்கட்டமாக 800 கடைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஜெனரிக் மருந்துகளை அனைத்து மருந்து கடைகள், அரசு மருந்து கடைகள், கூட்டுறவு மருந்துகடைகளிலும் கிடைக்கவும், டாக்டர்களையும் இந்த ஜெனரிக் மருந்துகளை எழுதிக்கொடுக்க ஆலோசனை கூறவும் மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

NEWS TODAY 09.12.2025