Thursday, November 10, 2016

MKU yet to make its theses available in ‘Shodhganga’



The Ph. D theses available in Madurai Kamaraj Unviersity, numbering around 4,000, were yet to be made available in ‘Shodhganga’ portal, the national open access platform for research work.

This is despite signing a Memorandum of Understanding (MoU) way back in 2012 with Information and Library Network Centre (INFLIBNET Centre) of University Grants Commission, which is managing the portal.

‘Shodhganga’ was launched in 2011 with the objective of making all research theses from universities in India available on a single platform. Apart from being a single repository to access research work from across the country based on research areas and other categories, the initiative also aimed at reducing plagiarism in research work.

According to data available in ‘Shodhganga,’ around 1,12,500 theses from nearly 280 universities have so far been made available in the portal. However, the contribution from MKU has been just one so far, a theses from Department of Library Sciences, uploaded in 2015.

In comparison, majority of the State-run universities have made hundreds of their theses available in the platform. For instance, Anna University tops the list in Tamil Nadu with 3,969 theses available in the portal. Universities from southern districts like Manonmaniam Sundaranar University, Alagappa University and Mother Teresa Women’s University have also made 2319, 350 and 253 theses available respectively.

A senior professor from the university said that there were exemplary research work done in MKU in the past, particularly from departments like School of Social Sciences and School of Biological Sciences, which if made available in the portal would be of immense use to researchers.

A senior official from the university blamed the delay on INFLIBNET Centre. He said that there were about 3,500 theses in the library which were to be digitized from printed format, which would be a labour intensive work involving scanning of lakhs of pages. “As per the MoU, INFLIBNET Centre had to provide fund for the digitisation work. But it is yet to be sanctioned,” he said.

He added that approval was pending from INFLIBNET Centre even to upload 603 theses submitted to MKU in the recent years, which were already available in the digital format.

HC surprised over claim of man practising homoeopathy, siddha as well as allopathy

SPECIAL CORRESPONDENT

Surprised over the claim of a person to have obtained educational qualifications to practice homoeopathy, Siddha as well as allopathy medicine, the Madras High Court Bench here has directed the Director of Public Health and Preventive Medicine to a file a detail counter affidavit with respect to genuineness of the institutes from which he claimed to have obtained those qualifications as well as his current status.

Justice V. Bharathidasan passed the interim order on a writ petition preferred by N. Kathalingam of Tiruchi with a plea to forbear the Health Secretary, Director General of Police, Director of Public Health, Tiruchi Collector and Commissioner of Police from interfering with his medical practice at his own hospital at Chinthamani Bazaar in Tiruchi city. He ordered that the DPH’s counter affidavit should be filed by November 23.

The petitioner, in his affidavit, claimed to have completed a course in homoeopathy and got his name registered with the Medical Council on April 15, 1976. Subsequently he completed a course in Siddha medicine too and registered his name with the council in 1998. “Further, I have also completed my course in allopathy medicine also from the Hippocrates Institute besides completing a training in first aid,” the affidavit read.

Claiming to have been providing medical treatment to people in Tiruchi for the last 35 years without any complaint from his patients, the petitioner said: “I got my name registered as allopathy doctor as well as siddha and homeopathy with the State Government of Tamil Nadu... I am giving treatment in my hospital in the system of allopathy, siddha and homeopathy and refer serious and complicated cases to famous private hospitals and government hospital.”

Further, “it is pertinent to mention that I cannot be termed as a quack since I am not claiming as a doctor who has completed the MBBS course or Master’s course without any valid degree... The term quack is applicable only to those who falsely claim to be a doctor without possessing qualifications... Yet, the respondents, in the guise of enquiry as if I am conducting my profession in an illegal manner, are harassing by calling me to the police station now and then,” he said.

Stating that the officials had time and again attempted to close down his hospital, the petitioner sought to restrain them from interfering with his profession.

File counter affidavit regarding genuineness of institutes from which he claimed
to have studied

When Chennai vendors turned note banks

TOI 

The first time a customer pulled out a Rs 500 note for a cup of coffee and a plate of sundal on Tuesday night, Suresh Kumar, a tea vendor in Kottupuram, didn't find anything amiss as he returned the balance. When six others followed within a span of an hour, wielding currency of the same denomination and asking for change, he frowned.

"People in big cars stopped at my shop to buy vadais and all of them gave me `500. I sensed something wasn't right," said Kumar, whose kiosk is barely more than a few discarded sheets of plywood leaning against each other. It was Marimuthu K, a vegetable vendor across the road who broke the news to him — about the Centre's decision to demonetize `500 and `1,000 notes starting Tuesday midnight.

Many like Kumar, who usually blend in to the city's dust, seemed to gain colour overnight — not for the things they sell but the notes they held. Although business was lean for small traders, wholesalers and those who earn their livelihood in cash on Wednesday, many of them said they were approached by office-goers to trade their currency notes of lower denomination for `500 notes. "Very few wanted to buy from us. The few who did, wanted it for the change," said Marimuthu, who borrowed money from a money lender to buy his stock as wholesale dealers refused to accept `500 and `1,000 notes.

By Wednesday noon, while major retail outlets remained open, the smaller vendors shut shop. "Children seem to be the only ones with money now as their pocket money is mostly in `10, `50 or `100 denominations," said Bharat Kumar, a pani-puri vendor on G N Chetty Road, T Nagar. He wound up for the day by 5PM, four hours before his usual time. Some, who didn't want to lose out on a day's wage, sold their goods on credit. A Das, a coconut vendor in Nandanam is among them. He managed to earn `300 on Wednesday, compared to the `2,000 he usually makes in a day.


Chennai has around 1.5 lakh vendors and 75,000 domestic workers, according to estimates by members of the Tamil Nadu chapter of the National Domestic Workers Movement and National Association of Street Vendors of India. A chunk of them trade in cash, and some don't even have a bank account. "I was given `3,000 in `5,00 denomination as my salary. If they had given me some sort of warning before, I would have got it changed," said K Malika, a domestic help in Arumbakkam.

Raghunathan N, an executive in Lakshmi Vilas bank, said many of these workers in the unorganised sector have bank accounts under the Pradhan Mantri Jan-Dhan Yojana scheme. "Even if they don't have an account, most banks have business correspondents to guide these people to open new accounts," he said. For transaction below `4,000 they can exchange their currency in any of the 19 RBI offices, post offices, commercial banks, private and public sector banks. "We have also been given a directive by the RBI to open accounts on priority basis. Usually opening an account will take 10 working days. Now we have to do it within 2-3 working days," he said.

When Chennai had money, no cash

TIMES OF INDIA

Usually, S Saravanakumar orders idli, sambar and coffee for breakfast. On Wednesday, though, the software engineer made do with a cup of coffee. The restaurant he frequented, like many others in the city, had pasted notices saying `500 and `1,000 currency notes would not be accepted, and requested exact change.

"I could order only coffee as I had only one `50 note," said Saravanakumar, a regular customer at Sangeetha restaurant in Mylapore. He was not the only one affected. After `500 and `1,000 notes were demonetised, the eating out and shopping scene in the city were particularly impacted, with many retailers refusing to accept the scrapped notes or even cash on delivery.

A few restaurants refused to accept cash altogether. Rain Drops, a part of KTDC hotel on Greams Road, pasted notices on the door saying the 'banned' notes would not be accepted. It also refused to accept cash for the lunch buffet, priced at `175. "The staff told us to pay by card," said a customer.

Restaurants also registered fewer footfalls. At Saravanas on Radhakrishnan Road, there were hardly any customers. "It has been dull since morning. Usually, the parking would be full during lunch hour but today it is vacant. We think it will take at least three days for things to settle down," said a staffer.

Customers logging into the website of food delivery start-up Swiggy were greeted with this message: 'Change' is great. Except for today. Use any one of our many payment options to place your order. COD has been paused temporarily."

Supermarkets and bakeries that wouldn't accept cards for purchases below `200 ensured their business wouldn't suffer by accepting cards even for amounts below `100.

Soon after the news broke on Tuesday night, many headed not just to ATMs and petrol bunks but also jewellery stores. Even the soaring price of gold on Wednesday didn't deter them from trying to turn their stashed away cash into yellow metal and many stores obliged. However, some like Tanishq sent out messages saying, as per RBI guidelines, their showrooms would not accept the demonetised notes.

Small roadside vendors took a hit, though. "I always avoid taking `500 and `1,000 notes because of the fake currency scare. We usually change it for lower denominations at the Koyambedu market at the end of the day," said Kanakavalli, a fruit vendor on C P Ramaswamy Road, Alwarpet. "Today, business has been very bad. I usually make about `4,000 a day, but today I haven't even crossed `300. Even my regular customers have bought fruits on credit and promised to pay later."

கருப்புப் பணத்துக்குக் கடிவாளம்!

By ஆசிரியர் | Published on : 10th November 2016 01:37 AM |

இப்படியொரு அதிரடி முடிவை பிரதமர் நரேந்திர மோடியால் எடுக்க முடியும் என்று அவருக்கு நெருக்கமானவர்களும், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களுமே கூட எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கத்தினரும் கணக்கில் காட்டாமல் பல கோடி ரூபாய் வைத்திருப்பவர்கள் என்று தெரிந்தும், அவர்களது வெறுப்பையும் விரோதத்தையும் தானும் அரசும் சம்பாதித்துக் கொள்ளும் என்பதை உணர்ந்தும்கூட இப்படியொரு துணிச்சலான முடிவை எடுத்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியாக வேண்டும்.
ரூ.500, ரூ.1,000-க்கான காகிதச் செலாவணியை ஒரு அதிரடி உத்தரவின் மூலம் செல்லாமல் ஆக்குவது என்பது எளிதில் எடுத்துவிடக் கூடிய முடிவல்ல. இதற்குப் பின்னால் தீவிரமான ஆலோசனைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தியா போன்றதொரு நாட்டில் இப்படியொரு திட்டம் அரசிடம் இருக்கிறது என்பதையும், அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன என்பதையும் ரகசியமாகப் பாதுகாப்பது என்பது அசாத்தியம். ஏதாவதொரு விதத்தில் அது வெளியாகிடும். ஊடகங்களுக்குக் கசிந்துவிடும். கருப்புப் பண முதலைகளால் மோப்பம் பிடிக்கப்பட்டு விடும். அதையும் மீறி, ரகசியம் காக்கப்பட்டிருக்கிறது என்றால் அதுவே மிகப்பெரிய வெற்றி.
சுதந்திர இந்திய சரித்திரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் ஐந்தாவது துணிச்சலான நடவடிக்கை இது. பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட மன்னர் மானிய ஒழிப்பும், வங்கிகள் தேசியமயமாக்கலும், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்க நேர்ந்த காலகட்டத்தில், பொருளாதார சீர்திருத்தத்திற்கு வித்திட்டு, தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்திய பிரதமர் நரசிம்ம ராவின் முடிவு, உலக வல்லரசுகளின் எதிர்ப்பையும், அவர்கள் விதிக்க இருக்கும் பொருளாதாரத் தடையையும் நன்றாகவே உணர்ந்திருந்தும், 1998-இல் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு போக்ரானில் அணுஆயுத பரிசோதனை நடத்தி இந்தியாவை அணுஆயுத பலம் பொருந்திய நாடாக அறிவித்தது ஆகியவற்றிற்குப் பிறகு, இப்போது கருப்புப் பணத்துக்கும், கள்ளப் பணத்துக்கும் எதிராக நரேந்திர மோடி அரசால் எடுக்கப்பட்டிருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களைச் செல்லாததாக்கும் இந்த முடிவு, சமூக விரோதிகளுக்கு எதிரான துல்லியத் தாக்குதல் என்றுதான் கூற வேண்டும்.
உள்நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டாலே போதும், நமது பொருளாதாரம் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளும். இதைக் குறிவைத்துத்தான், நரேந்திர மோடி அரசு மறைக்கப்பட்ட வருமானத்தை வெளிப்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. அதை பயன்படுத்தி கொண்டு கருப்புப் பணத்துக்கு வரி கட்டி சரி செய்து கொள்ள அரசு அளித்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் போனவர்கள், இப்போதைய அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்காக நாம் ஏன் அனுதாபப்பட வேண்டும்?
இந்தியாவில் ஏறத்தாழ ரூ.30 லட்சம் கோடி கருப்புப் பணம் புழங்குகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டுப் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் வெறும் 1% பேர் மட்டுமே வருமானவரி கட்டுகிறார்கள். அன்றைய புள்ளிவிவரப்படி, கணக்குத் தாக்கல் செய்யும் 2.87 கோடி பேர்களில், 1.62 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் இருப்பதாகக் கணக்குக் காட்டி வரி செலுத்துகிறார்கள். ஆனால், ஆண்டொன்றுக்கு இந்தியாவில் 26 லட்சம் கார்கள் விற்பனையாகின்றன.
இதைக் குறி வைத்துத்தான் மோடி அரசு, பரவலாக வங்கிக் கணக்குகள் தொடங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கரன்சி நோட்டுக்களின் மதிப்பு ஏறத்தாழ ரூ.16 லட்சம் கோடி. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இது வெறும் ரூ.4 லட்சம் கோடியாகத்தான் இருந்தது. இதில் புழக்கத்தில் இருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களின் அளவு மட்டுமே 85%. இந்தப் பணம் வங்கிப் பரிமாற்றமாக இல்லாமல் இருப்பதால்தான் கருப்புப் பணம் உலவ முடிகிறது. ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களைத் தடாலடியாகச் செல்லாததாக்குவதால், ஒன்று அனைத்துப் பணமும் வங்கி வளையத்துக்குள் வர வேண்டும், அதற்குக் கணக்குக் காட்டப்பட்டு வருமானவரி கட்டப்பட வேண்டும். அப்படிக் கணக்குக் காட்ட முடியாவிட்டால் குப்பைத் தொட்டிக்குச் செல்ல வேண்டும்.
அது மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தையே பலவீனப்படுத்த, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ரூ.500, ரூ.1,000 கள்ள நோட்டுக்களை அச்சடித்து உலவ விட்டிருக்கிறது. இப்போது அந்த நோட்டுக்கள் செல்லாததாகிவிடும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பட்டிருக்கிறது.
அரசு எதற்காகப் புதிதாக ரூ.500, ரூ.2,000 நோட்டுக்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. ஒரேயடியாக பணப் பரிமாற்றம் அனைத்தையும் வங்கிப் பரிவர்த்தனையாக மாற்றுவது சாத்தியமல்ல. அடுத்த சில ஆண்டுகளுக்கு, நாணயமான பரிவர்த்தனைக்கு உதவ புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தி, அதைப் படிப்படியாகக் குறைத்து வங்கிப் பரிமாற்றம் மூலம் மட்டுமே பெரிய தொகைகளுக்கான பரிமாற்றங்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதுதான் அரசின் திட்டம் என்று தோன்றுகிறது.
கடந்த ஆறு மாதங்களாக இதற்கான முன்னேற்பாடுகள் நடந்திருக்கின்றன. எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கப் புதிய கரன்சி நோட்டுக்கள் அடிக்கப்பட்டுத் தயார் நிலையில் வங்கிகளுக்கு விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று நாள்கள் சாமானிய மக்கள் சிறிது சிரமம் அனுபவிக்க நேரும்தான். ஆனால், கருப்புப் பணத்துக்கு நிரந்தரக் கடிவாளம் போடுவதற்கு நாம் ஒத்துழைத்துத்தான் தீர வேண்டும்.
சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையோ, சிரமமோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும், அதே நேரத்தில் கருப்புப் பண முதலைகள் தங்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்காமல் பார்த்துக் கொள்வதிலும் அரசு கவனமாக இருந்திருக்கிறது. இந்தியாவில் இந்த அளவுக்குத் திட்டமிட்டு ஒரு நடவடிக்கை மேற்கொள்வது எப்படி சாத்தியம் என்பதை நினைத்தால் மலைப்பு மேலெழுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய சாதனையாக சரித்திரம் இந்த முடிவைப் பதிவு செய்யப் போகிறது.
"கருப்பு வெள்ளை நிஜம்!' என்ற தலைப்பில் 14.10.2016 அன்று "தினமணி'யில் வெளிவந்த தலையங்கத்தின் கடைசிப் பத்தியில், "ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களே இல்லாமல் ஆக்குவது அனைத்துப் பரிமாற்றங்களையும் வங்கிப் பரிமாற்றமாக்குவது என்கிற இரண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் கருப்புப் பணத்துக்குக் கடிவாளம் போட்டு விடலாம். ஆனால், இதற்கு எந்த அரசும் முன்வராது. அதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அனுமதிக்கவும் மாட்டார்கள். இதுதான் கருப்பு, வெள்ளை நிஜம்!' என்று எழுதியிருந்தோம்.
துணிச்சலுடன் நரேந்திர மோடி அரசு, கருப்புப் பணத்துக்கும், கள்ள நோட்டுக்கும் கடிவாளம் போட்டிருக்கிறது. இதுதான் கருப்பு வெள்ளை நிஜம்!

உன்னத மன்னர் திப்பு சுல்தான்

By ஜெ. ஹாஜாகனி  |   Published on : 10th November 2016 01:36 AM  |

ஆடுகளாய் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதைவிட, சிங்கமாக ஒரே நாள் வாழ்வது மேல்' என்ற வீர வரிகளின் விலாசமாய் நிற்பவன் தீரன் திப்பு சுல்தான்.
நவம்பர் 10 அன்று திப்பு சுல்தானுக்கு கர்நாடக அரசு விழாவெடுக்க முன்வந்ததும், அதைக் கடுமையாக எதிர்ப்போர் திப்பு சுல்தானை மதவெறி மன்னனாக சித்திரிப்பதும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி "திப்பு ஒரு மன்னன்தானே தவிர சுதந்திரப் போராட்ட வீரன் இல்லை. அவனுக்கு விழா எடுக்க அரசு ஆர்வம் காட்டுவது அவசியமா' என்று வினாத் தொடுத்திருப்பதும், தியாக வரலாறுகள் திரும்பத் திரும்ப சொல்லப்பட வேண்டிய அவசியத்தையும், சொல்லப்படாவிட்டால் நிகழும் அபாயத்தையும் உணர்த்துகின்றன.
சென்னையிலே வால்டாக்ஸ்(Wall Tax) சாலை மிகப் பிரபலம். (Wall Tax) என்ற சுவர் வரி ஏன் விதிக்கப்பட்டது என்ற வரலாறு பலருக்கும் தெரியாது. "சென்னைப் பட்டணத்தில் நிலை கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் மீது, ஹைதர் அலி அடிக்கடி அதிரடித் தாக்குதல் தொடுத்து, அவர்களை அலற வைத்துக் கொண்டிருந்தார்.
ஹைதர் அலியின் படையெடுப்பைத் தடுக்க ஒரு நெடுஞ்சுவர் எழுப்பவும், அதற்கான நிதிக்காக விதிக்கப்பட்டதே வால்டாக்ஸ்' என்றும் தனது ஆய்வுரையில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் தஸ்தகீர்.
திப்பு சுல்தானைத் தனது "யங் இந்தியா' இதழில் மிகவும் பாராட்டி எழுதியுள்ள தேசத் தந்தை காந்தியடிகள்,
"நல்லதொரு முஸ்லிமான அவர், மதுவிலும், மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராகவும் வாழ்ந்தார். வருமான இழப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், பூரண மதுவிலக்கை அமல்படுத்திய திப்பு ஓர் உன்னதமான மன்னர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தேசத்தின் வரலாற்றை The Discovery of India என்று எழுத்தோவியமாய்த் தீட்டிய பண்டித ஜவாஹர்லால் நேரு, "ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கிழக்கிந்தியக் கம்பெனியின் பேரெதிரிகளாய் நின்றனர். படுதோல்விகளை பிரிட்டிஷாருக்கு பரிசளித்து, அவர்களின் ஆளுமைக் கனவுகளைத் தகர்த்து வந்தனர்' என்று புகழாரம் சூட்டுகிறார்.
"திப்பு விடுதலைப் போரின் முன்னோடி' என்ற முனைவர் வெ. ஜீவானந்தம் தொகுத்த நூலுக்கு எழுதிய முன்னுரையில் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர்,
"மதவாதம் பெரும் நோயாகி, நமது சமுதாயத்தைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். பைத்தியக்காரத்தனமான மதவெறியும், மூர்க்கம் மிகுந்த வழிதவறிய சிந்தனைகளுமே இந்த அவலத்தின் காரணமாகும்.
இவர்கள் வரலாற்று நாயகர்களைக் கூட பொய்யான கதை கட்டி இனவெறியர்களாகவும், மதவெறியாளர்களாகவும் சித்திரிக்கிறார்கள். சிறந்த மனிதாபிமானியும், சமய ஒற்றுமை பேணியவருமான திப்பு கூட இத்தகைய அவதூறுகளிலிருந்து தப்பவில்லை.
திப்புவின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் மசூதியும், ரங்கநாதர் ஆலயமும் அருகருகே எந்த பாதிப்பும் இன்றி, இன்னுமிருப்பதைக் காணலாம். திப்பு மதவெறியனாக இருந்திருந்தால் இந்த ஆலயம் அல்லவா முதல் பலியாகியிருக்க வேண்டும்' என்று குறிப்பிடுகிறார்.
சிறந்த மன்னனாக, சீர்திருத்த நாயகனாக, அறிவியல் தொழில்நுட்ப ஆர்வலனாக, ஆன்மிகத் தேடல் உள்ளவனாக, விவசாயிகளின் தோழனாக, வெள்ளை ஏகாதிபத்தியத்தின் எதிரியாக, அனைத்து சமயத்தினர்க்கும் பொதுவானவனாக கல்வியாளனாக, களப் போராளியாக - இப்படிப் பன்முக ஆளுமை கொண்ட திப்பு சுல்தானை, தப்பு சுல்தானாகக் காட்டும் தகாத செயலுக்கு உந்து சக்தியாக இருப்பது எது என சிந்திக்க வேண்டும்.
"தன்மானமும், மண்மானமும் காக்க இஸ்லாமிய நிஜாமையும், கிறிஸ்தவ ஆங்கிலேயரையும், இந்து மராட்டியரையும் எதிர்த்தவன் திப்பு சுல்தான்' என்று குறிப்பிடுகிறார் குமரி அனந்தன்.
மார்பை மறைக்கும் உரிமை மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்டப் பெண்களின் நிலை கண்டு துடித்து, அதற்குக் காரணமான மரபையும், வறுமையையும் மாற்றியவன். ஆயுதத் தொழிற்சாலையின் கழிவான கந்தக அமிலம் காவிரியை மாசுபடுத்துவது கண்டு பொறுக்காமல், ஆலையையே இடம் மாற்றியவன்' என்று திப்பு சுல்தான் இந்தத் திருநாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை அழகுறப் பதிவு செய்துள்ளார் குமரி அனந்தன்.
திப்பு சுல்தான் பற்றி ஆவணங்களை லண்டன் அருங்காட்சியகத்தில் தேடிப் பிடித்து, ஒரு நூலை எழுதுகிறார் பகவான் எஸ். கித்வானி. இந் நூல்தான் பிற்காலத்தில் Sword of Tipu Sultan' என்ற பெயரில் தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பானது.
இந்தத் தொடருக்குப் பெரும் நெருக்கடிகள் தரப்பட்டன. படப்பிடிப்பு நடந்த பிரிமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்ததில் 55 பேர் மரணமடைந்தனர்.
அப்போதைய அரசு மல்கானியை இத் தொடரின் ஒரு நபர் தணிக்கையாளராக நியமித்தது. அவரது வற்புறுத்தலின்படி, ஆய்வுநூலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத் தொடர் முற்றிலும் ஒரு கற்பனைக் கதை என போடப்பட்டது.
திப்பு சுல்தானைப் பற்றிய கொடிய அவதூறுகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, கொல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறைத் தலைவராக இருந்த, ஹரிபிரசாத் சாஸ்திரி எழுதிய பள்ளிப் பாடநூலுக்கான கட்டுரையில், "திப்பு முஸ்லிமாக மாற வற்புறுத்தியதால் 3,000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், ஒடிஸா மாநிலங்களின் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடிஸாவின் முன்னாள் ஆளுநருமான பி.என். பாண்டே, ஹரிபிரசாத்தைத் தொடர்பு கொண்டு, அவரது கூற்றுக்கான ஆதாரங்களைக் கேட்டபோது, அவரால் தர இயலவில்லை. பிறகு பாண்டேவின் முயற்சியால் அப்பாடப் பகுதி நீக்கப்பட்டுள்ளது.
திப்பு சுல்தானின் மிக நெருங்கிய உதவியாளரான பூர்ணய்யா, ஒரு பிராமணர். அவர் உங்களைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடும் என்று சிலர் குற்றம் சாட்டியபோது, "யாரோ சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையே நிந்திப்பது கூடாது' என்ற குர்ஆனின் கருத்தை எடுத்துரைத்து அவர்கள் கூற்றை மறுத்துள்ளார் திப்பு சுல்தான்.
சமய நிறுவனங்களுக்கு திப்புவின் ஆட்சியில், ஓராண்டில் ஒதுக்கப்பட்ட தொகை 2,33,959 வராகன்கள். இதில் 2,13,959 வராகன்கள் இந்துக் கோயில்களுக்கு செலவிடப்பட்டது.
மூன்றாம் மைசூர் போரின்போது, பரசுராம் பாவே தலைமையில் படையெடுத்து வந்த இந்து வீரர்களைக் கொண்ட மராட்டிய படை சிருங்கேரி மடத்தை சூறையாடி 17 லட்சம் வராகன் மதிப்பிலான பொருள்களைக் களவாடிச் சென்றது. அப்போது பீடாதிபதியாக இருந்த சச்சிதானந்த பாரதியும், அவரது சீடர்களும் கர்க்கலாவிற்குத் தப்பிச் சென்றனர்.
மடத்தின் மூல விக்ரகமான தங்கத்தால் ஆன சாரதா தேவி சிலையும் கொள்ளை போனது. சிருங்கேரி மடத்திற்கு மராத்தியர்கள் செய்த கொடுமைக்கு இழப்பீடாகப் பெரும் பொருளுதவிகளை வழங்கி ஆறுதல் தந்தது திப்பு சுல்தான்தான்.
நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்கு திப்பு வழங்கிய 9.5 அங்குல உயரமுள்ள பச்சை மரகதலிங்கம் பாதுஷா லிங்கம் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.
திண்டுக்கல் போரின்போது, கோட்டையைப் பின்புறமிருந்து தாக்கினால் எளிதாக வீழ்த்தலாம் என்ற ஆலோசனை திப்புவுக்கு வழங்கப்பட்டது. அப்படித் தாக்கினால் அங்கிருந்த சிவன் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதையறிந்து, அந்த வியூகத்தையே திப்பு கைவிட்டார்.
திப்புவின் ஆட்சியில் ஆளுநர் ஒருவர் காவிரி நீர் கீழ்பவானி பகுதிக்குச் செல்ல முடியாமல் தடுப்பணை கட்டினார். கீழ்பவானி விவசாயிகளான தமிழர்கள் திப்புவை சந்தித்து முறையிட்டனர்.
தமிழக விவசாயிகளின் நியாயப்பாட்டை ஏற்றுக் கொண்ட திப்பு, சூரியனும், சந்திரனும் உள்ளவரை, மேலிருந்து கீழ்நோக்கிப் பாயும் தண்ணீரைப் பிறரைப் பாதிக்கும் வகையில் தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்று கூறி தடுப்பணையை உடைத்துள்ளார்.
நிலப்பிரபுத்துவம் உருவாக்கிய சமூக அநீதிகளை சரிசெய்ய அரசு முதலாளித்துவம்(State Capitalism) என்ற கோட்பாட்டை திப்பு சுல்தான் அறிமுகப்படுத்தினார். சோஷலிசத்தை ஐரோப்பா சிந்திக்கத் தொடங்கும் முன்பே அதை நடைமுறைப்படுத்தியவர் திப்பு சுல்தான்.
அருகமைப் பள்ளிகளே கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் என்று நம்பிய திப்பு ஆறு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் திறந்ததும், கானுயிர் காப்பகத்தை முதலில் நிறுவியதும், அவரது தொலைநோக்கையும், மக்களின் மீதான பற்றையும் காட்டுவன.
17 வயதில் படைத் தளபதியான திப்பு, 1767-ஆம் ஆண்டு ஜோசப் ஸ்மித் தலைமையிலான ஆங்கிலப் படையை எதிர்த்துப் போரிட்டு முதல் வெற்றியை ருசித்த இடம் தமிழகத்தின் வாணியம்பாடி.
திப்புவைக் கொன்று, அவனது பிள்ளைகளை வேலூரில் சிறை வைத்தது வெள்ளை ஏகாதிபத்தியம். 1806-ஆம் ஆண்டு திப்புவின் பிள்ளைகள், வேலூர் புரட்சியை சிறையிலேயே நடத்தி, கோட்டையில் பறந்த யூனியன் ஜாக் கொடியை இறக்கி, புலிக்கொடியை பறக்கவிட்டனர்.
திகைக்க வைக்கும் தீரத்தை கொண்ட திப்பு சுல்தானைக் கொண்டாடுவதன் மூலம், இளைய தலைமுறை ஏற்றமிகு சிந்தனையையும், எழுச்சிமிகு தியாகத்தையும் இதயத்தில் பதியமிடும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு ஆதாரம் காண்பிக்க வேண்டும்

By DIN  |   Published on : 10th November 2016 05:29 AM 


செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் தற்போது செலுத்தும்போது, அந்தப் பணத்துக்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தார். அதேசமயத்தில், மக்களிடம் தற்போது இருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை இரு வாரங்களுக்குள் வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் மாற்றிக் கொள்ளவும், வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை வங்கிக் கணக்குகளில் செலுத்தவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு செலுத்தப்படும் பணத்துக்கு கணக்குக் காண்பிக்க வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பம் மக்களுக்கு இருந்து வரும் சூழலில், இதுதொடர்பான விளக்கத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்துள்ளார்.
இதுகுறித்து, தூர்தர்ஷன் செய்தித் தொலைக்காட்சிக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பணப்புழக்கத்தில் பெரும் பங்கு வகித்து வந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாததாக அறிவித்திருப்பது, கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஒரு மைல் கல் ஆகும். மேலும், இந்த அறிவிப்பால் ஊழலையும், கள்ளநோட்டு புழக்கத்தையும் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.
தற்போது மக்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளிலோ அல்லது தபால் அலுவலகங்களிலோ கொடுத்து அவற்றுக்குப் பதிலாக குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது. இல்லையெனில், தங்களிடம் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அவரவர் வங்கிக் கணக்குகளிலேயே செலுத்திக் கொள்ள முடியும்.
அவ்வாறு வங்கிகளில் மாற்றப்படும் அல்லது செலுத்தப்படும் பணத்துக்கான மூல ஆதாரத்தை சம்பந்தப்பட்டவர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தப் பணத்துக்கு எந்த வரிச்சலுகையும் அளிக்கப்பட மாட்டாது. அதேசமயத்தில், அன்றாடச் செலவுகளுக்காக வீடுகளில் இருக்கும் பணத்துக்கு (ரூ.50 ஆயிரம் வரை) எந்த ஆதாரமும் காண்பிக்கத் தேவையில்லை.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், சட்டவிரோதமாக கருப்புப் பணம் வைத்திருப்பவர்களும், ஊழல்வாதிகளுமே பாதிக்கப்படுவார்கள். நேர்மையாக சம்பாதிப்பவர்களுக்கும், வரி செலுத்துபவர்களுக்கும் இந்த நடவடிக்கையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்த அறிவிப்பு வெளியான முதல் இரண்டு வாரங்கள் மட்டும் வங்கிகளில் பணப் பரிமாற்றத்தில் சிறிது பாதிப்பு இருக்கும். பின்னர், புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்துவிடும் என்பதால், பணப் பரிமாற்றம் வழக்கம்போல் நடைபெறும்.
இந்த நடவடிக்கையால், நாட்டில் மின் பணப்பரிமாற்றம் அதிகரிக்கும். குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் இருப்பதால் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது, அந்தப் பணத்துக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த நிலை நீடிக்கும்போது, அதிக வரி செலுத்துவோர் வசிக்கும் நாடாக எதிர்காலத்தில் இந்தியா மாறும் என்றார் அருண் ஜேட்லி.





ரூ.500, ரூ.1000 நோட்டை மாற்ற படிவம் பூர்த்தி செய்வது அவசியம்: இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம்

By DIN  |   Published on : 10th November 2016 04:42 AM 

வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான சிறப்புப் படிவத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்கு இந்த சிறப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து அளிப்பது அவசியம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கிகளின் உயர் அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
இன்று முதல்...: நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை (நவ.8) நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு புதன்கிழமை (நவ.9) விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வியாழக்கிழமை (நவ.10) முதல் மாற்றிக் கொள்ளும் ஏற்பாடுகளை தமிழகம் உள்பட நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் செய்து தயார் நிலையில் உள்ளன.
சிறப்புக் கவுன்ட்டர்கள்: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் சிறப்புக் கவுன்ட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் கவுன்ட்டர் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை செயல்படும்.

சிறப்புப் படிவம் இலவசம்:

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு வைத்துள்ளோர் சிறப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.4,000 வரை எந்த வங்கிக் கிளையிலும் அளித்து மாற்றிக் கொள்ளலாம். அனைத்து வங்கிக் கிளைகளிலும் இந்த சிறப்புப் படிவம் இலவசமாக அளிக்கப்படும்.
அடையாள அட்டை பிரதி அவசியம்: கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையின் பெயர், வாடிக்கையாளரின் பெயர், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச் சீட்டு ("பாஸ்போர்ட்'), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட அடையாள அட்டை, பான் அட்டை ஆகியவற்றின் ஏதாவது ஒன்றின் பிரதியை சிறப்புப் படிவத்துடன் அளிப்பது அவசியமாகும். அடையாள அட்டையின் எண்ணை சிறப்புப் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.எந்த வங்கிக் கிளை
யிலும்...: தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில்தான் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; மேலும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வங்கிக் கணக்குப் புத்தகம் ("பாஸ் புக்') தேவையில்லை.

ஒவ்வொரு நாளும் ரூ.4,000 அளவுக்கு பழைய நோட்டுகளை மாற்றும்போது சிறப்புப் படிவத்தை அளிப்பது அவசியம். இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ள புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் வெள்ளிக்கிழமை (நவ.11) முதல்தான் புழக்கத்துக்கு வர உள்ளன. இதன் காரணமாக வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வியாழக்கிழமை (நவ.10) மாற்றும் பொது மக்களுக்கு ரூ.100 எண்ணிக்கையில்தான் மாற்று நோட்டுகள் வழங்கப்படும்.
கணக்கில் பணம் செலுத்த...: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் பொதுமக்கள் பதற்றப்படத் தேவையில்லை;

வங்கிகளுக்கு இருப்பில் உள்ள அனைத்து பழைய ரூ.500, ரூ.1,000 பழைய நோட்டுகளை எடுத்துச் சென்று வழக்கம்போல் சேமிப்புக் கணக்குப் படிவத்தைப் பூர்த்தி செய்து வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவது மிகவும் சிறந்தது; வாடிக்கையாளர்கள் பழைய ரூ,500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு வரம்பு எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
பழைய 500, 1,000 ரூபாய் பறிமுதல் செய்ய உத்தரவு

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றால், வழக்கம்போல் பறிமுதல் செய்ய, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, வரும், 19ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு கட்சியினரும், மாநிலம் முழு வதும் உள்ள, கட்சி நிர்வாகிகளை, மூன்று தொகுதிகளில் குவித்துள்ளனர். அவர்கள் ஓட்டல், திருமண மண்டபம், வீடு போன்றவற்றை வாடகைக்கு எடுத்து தங்கி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில், அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக, புகார் எழுந்தது; அதன் அடிப்படையில், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.இம்முறை, அது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, வாகன சோதனை நடத்தப்படுகிறது. சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.இந்நிலையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள், நேற்று முன்தினம் இரவு முதல் செல்லாது என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால், தேர்தலில் பணத்தை வாரி இறைக்க தயாராக இருந்த, கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர். எனினும், டிச., 30 வரை, வங்கி அல்லது தபால் நிலையத்தில் மாற்றிக் கொள்ளலாம் என்பதால், கையிருப்பில் உள்ள, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு களை, வாக்காளர்களுக்கு வழங்கலாமா என, ஆலோசித்து வருகின்றனர்.எனவே, வாகன சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை, பறிமுதல் செய்யாமல் இருக்கக் கூடாது; வழக்கம்போல், அவற்றையும் பறிமுதல் செய்ய வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
'பங்க்'குகளில் சில்லரைக்கு பதில் துண்டு சீட்டு

தாம்பரம்,: பெட்ரோல், 'பங்க்'களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தவர்களுக்கு, சில்லரைக்கு பதிலாக, துண்டு சீட்டே அளிக்கப்பட்டது.நேற்று நள்ளிரவு முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி அறிவித்தார். வங்கிகள், அஞ்சலகங்கள், பெட்ரோல் 'பங்க்'களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, நேற்று காலை, மேற்கு தாம்பரம், கடப்பேரியில் உள்ள தனியார் பெட்ரோல், 'பங்க்'கில், வாகன ஓட்டிகள் பலர் பெட்ரோல் போட சென்றனர். 'பங்க்' ஊழியர்கள், 'சரியான சில்லரை கொடுத்தால் மட்டுமே பெட்ரோல் போடப்படும்' என, தெரிவித்தனர்.அதே நேரம், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தள்ளி விடுவதற்காகவும், பலர் பெட்ரோல் போட வந்தனர். அவர்கள் முழு பணத்துக்கும் பெட்ரோல், டீசல் போட்டு சென்றனர்.சில வாகன ஓட்டிகள், 100, 200, ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்கள் என, 'பங்க்' ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சில்லரை பிரச்னையால், 'பங்க்' ஊழியர்கள், துண்டு சீட்டில், 'பங்க்' முத்திரையுடன், மீதி சில்லரை தொகையை எழுதி கொடுத்து, அனுப்பினர்.அடுத்தடுத்த நாட்களில், அந்த துண்டு சீட்டை காண்பித்து, அதில் உள்ள மீதி தொகைக்கு, வாகன ஓட்டிகள் பெட்ரோல் போட்டு கொள்ளலாம் என, 'பங்க்' சார்பில் தெரிவிக்கப்பட்டது.


ரூ.2.5 லட்சத்துக்கு மேல் மாற்ற போகிறீர்களா?

பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக் களை, வங்கியில் கொடுத்து மாற்றும் திட்டத் தில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்து வோரை, வருமான வரித் துறை கண்காணிக்க உள்ளது. தவறு செய்திருந்தால், 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.




இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டு வரவும், கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காகவுமே, பழைய ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்தியர்களை, நியாயமாக வரி கட்டுபவர் களாக மாற்றுவதே, இதன் மற்றொரு நோக்கம். அதனால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து வைத்திருப்போருக்கு, இந்த திட்டத்தை பயன்படுத்தி, அபராதம் விதிக்கப்படும்.

நாட்டில், புழக்கத்தில் உள்ள, 17 லட்சம் கோடி ரூபாய் கரன்சியில், 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு, 88 சதவீதம் ஆகும். எனவே, கணிசமான தொகை பதுக்கி வைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.

வங்கிகளுடன்தொடர்பு கொண்டு, இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், பழைய நோட்டுகளை கொடுத்து, புதிய நோட்டு பெறுவோர்; இரண்டு லட்சலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக, 'டெபாசிட்' செய்வோரின்விபரங்களை கேட்டுப் பெற,மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அவர்களின் விபரங்கள், வருமான வரிக் கணக் குடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். வரி செலுத்தா மல் போயிருந்தால்,தவறுக்கேற்ப,200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

-- நமது நிருபர் -

மக்கள் நினைப்பது என்ன? : கருத்து கேட்கும் பிரதமர்

நாட்டில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற மத்திய அரசின் நடவடிக்கை குறித்து, மக்களின் கருத்துகளை, பிரதமர் மோடிக்கு, 'ஆப்' வாயிலாக தெரிவிக்கலாம்.நாட்டில் கறுப்புப் பண புழக்கத்தையும், கள்ள நோட்டு புழக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் நரேந்திர மோடி துணிச்சலாக அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து, பல துறைகளைச் சேர்ந்தவர்கள், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்நட வடிக்கை குறித்து மக்களின் எண்ணத்தை நேரடியாக அறிய, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்தார். இதற்காக, 'ஸ்மார்ட் போன்'களில், 'ஆப்' வாயிலாக, பிரதமருக்கு, மக்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம். இதற்கு, கூகுள் பிளே ஸ்டோரில் சென்று, 'நரேந்திர மோடி' என, ஆங்கிலத்தில் டைப் செய்து, டவுண்லோடு செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்நடவடிக்கை குறித்து, மக்களின் கருத்துக்களை பிரதமர் நேரடியாக அறிந்து கொள்ள எடுத்துள்ள முயற்சி, பல தரப்பிலும் பாராட்டை பெற்றுள்ளது.
- நமது நிருபர் -

மத்திய அரசு செல்லாது என அறிவித்த, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, இன்று முதல், வங்கிகள், தபால் அலுவலகங்களில் புதிய நோட்டுகளாக மாற்றலாம்.




மத்திய அரசு செல்லாது என அறிவித்த, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, இன்று முதல், வங்கிகள், தபால் அலுவலகங்களில் புதிய நோட்டுகளாக மாற்றலாம்.

சில்லரை கிடைக்காமல் தவிக்கும் நிலையில், நோட்டுகளை மாற்ற ஏராளமான மக்கள் குவிவர் என்பதால், மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மக்கள் நலன் கருதி, சனி, ஞாயிறு, வங்கிகள் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில், கறுப்பு பணத்தை ஒடுக்கும் வகை யிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி நேற்று முன்தினம், அதிரடியாக அறிவித்தார். இதனால், நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு, ஏ.டி.எம்., மையங்களை நோக்கி பொதுமக்கள்விரைந்தனர். ஆனால், பெரும்பாலானோரால் பணம் எடுக்க முடியவில்லை.

அலைச்சல்

இந்நிலையில் நேற்று, ஏ.டி.எம்., மையங்களும், வங்கிகளும் மூடப்பட்டிருந்ததால், கையில் பணம் இல்லாமல் பொதுமக்கள், அன்றாட தேவைக்கான பொருட்களைக் கூட வாங்க முடியாமல், கடுமையாக அவதிப்பட்டனர். நுாறு ரூபாய் நோட்டுகளைத் தேடி, கடை கடையாக மக்கள் அலைந்தும், ஏமாற்றமே மிஞ்சியது.

பெரும்பாலான கடைக்காரர்கள்,500,1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தனர். சில இடங்க ளில்,அவற்றை வாங்கினாலும், முழுத் தொகை க்கு பொருட்களை வாங்க கட்டாயப் படுத்தினர். இந்த புதிய அறிவிப்புபற்றி அறியாத ஏழை மக்கள், அடுத்து என்ன செய்வது எனக் கேட்டு அலைந்ததை பார்க்க, பரிதாபமாக இருந்தது.

இந்நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் வகையில், வங்கிகள், தபால் நிலையங்களிலும், இன்று முதல், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது; புதிய, 500, 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும். இதற்காக, போதுமான அளவிற்கு, புதிய கரன்சி நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அச்சிட்டு, வினியோகித்துள்ளது.


பழைய நோட்டுகளை மாற்றுவதற்கும், பணம் எடுப்பதற்கும், பொதுமக்கள் அதிக அளவில் குவிவர் என்பதால், வங்கிகளில் கூடுதல் கவுன்டர்கள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன; போலீஸ் பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது.

ஆறுதல்

'இப்பிரச்னை தற்காலிகமானது தான். டிச., 30 வரை, நோட்டுகளை மாற்றலாம். டெபிட் கார்டு
பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடு இல்லை; பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

'இப்பிரச்னை தீர சிலநாட்கள் ஆகும் என்பதால், வழக்கமாக விடுமுறை தினங்களான,
இரண்டாவது சனி, ஞாயிறு அன்றும், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும்' என, ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களும், அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் செயல்படும்.

வங்கி ஏ.டி.எம்., மையங்களில், 50, 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே தரும் வகையில் மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளதால், வெள்ளிக்கிழமை காலை வரை செயல்படாது. அனைத்து, ஏ.டி.எம்., மைய பரிவர்த்தனைகளு க்கும், டிச., 30 வரை, கட்டணம் வசூலிக்கப் படாது என்பதும், பொதுமக்களுக்கு ஆறுதலான அறிவிப்பு.

ரிசர்வ் வங்கியில்உதவி மையம்

பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்று வது மற்றும் வங்கிகளில் பணம் எடுப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு, சென்னை, ரிசர்வ் வங்கி கிளையில்,உதவி மையம் செயல் பட துவங்கியுள்ளது. பொதுமக்கள், 044 - 2538 1390 மற்றும் 044 - 2538 1392 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு,சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.

- நமது நிருபர் -

அதிக பணம் டெபாசிட்டா: வரி, அபராதம் விதிக்கப்படும்

புதுடில்லி: 'காலாவதியான, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை, அதிக அளவில் வங்கி கணக்கில் செலுத்துபவர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்திருந்தால், அவர்களுக்கு வரியுடன், 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ரூ. 2.5 லட்சம் : இது குறித்து, மத்திய வருவாய் துறைச் செயலர் ஹஸ்முக் ஆதியா கூறியதாவது: காலாவதியான, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிக் கணக்கில் செலுத்த, டிசம்பர், 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், வங்கியில் அதிக அளவு தொகையை டெபாசிட் செய்பவர்கள் குறித்து ஆராயப்படும். குறிப்பாக, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் அனைத்து டெபாசிட்கள் குறித்தும் வருமான வரித்துறை ஆய்வு செய்யும். அவ்வாறு டெபாசிட் செய்பவர்களின் வருமான வரி கணக்கு தாக்கலுடன் ஒப்பிட்டு, வருவாய்க்கு அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதை வரி ஏய்ப்பாக கருதி, அதற்கு வரியும், 200 சதவீத அபராதமும் விதிக்கப்படும். இதனால், சிறு வணிகர்கள், குடும்பத் தலைவிகள், தொழிலாளர்கள் போன்றவர்கள் பீதியடைய வேண்டாம். அவர்கள், இரண்டு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்தாலும், வருமான வரி வரம்புக்குள் வராத நிலையில், அவர்களுக்கு பாதிப்பு இருக்காது.
தங்கம் காப்பாற்றுமா? : கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, பலரும், தங்கத்தை வாங்கி குவிப்பதாக கூறப்படுகிறது. தங்கம் வாங்குபவர்களின், 'பான்' எண்களை பெற வேண்டும் என, அனைத்து தங்க நகை வியாபாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது கடைபிடிக்கப்படுகிறதா என, வருமான வரித்துறை சோதனைகளை மேற்கொள்ளும். அதனால், ஏமாற்றுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, November 9, 2016

செல்லாது செல்லாது .. ரூ. 500 செல்லாது… ஈ ஓட்டும் ஓட்டல்கள்

சென்னை: நள்ளிரவு 12 மணியில் இருந்து ரூ. 500 செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது மக்கள் மத்தியில் ஒரே களேபரம் உருவாகிவிட்டது. கை உள்ள பணத்தை செலவு செய்ய முடியாததால் ஒரு ஓட்டலுக்கு போய் 2 இட்லி சாப்பிடக் கூட முடியாதவர்களாகிவிட்டனர் மக்கள்.


50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் சில்லரைகளாக மாறிப் போய் ரொம்ப நாள் ஆச்சி. 500 ரூபாய் நோட்டு என்பது எல்லோரின் பாக்கெட்டுகளிலும் கட்டாயம் இருக்கும் பணமாகிவிட்டதால், மத்திய அரசின் அறிவிப்பால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போய்விட்டது. இன்று உணவு விடுதிகள், டீக்கடைகள், மளிகைக் கடைகள், என எல்லா இடத்திலும் மக்களின் நடமாட்டம் குறைந்துவிட்டது.


இதனால் உணவு விடுதிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறுகினார். அவசரத்திற்கு சாப்பிட முடியவில்லை என்று மக்கள் புலம்புகிறார்கள். மக்கள் மத்தியில் ஒரு நெருக்கடி நிலைக்கான மன நிலையை மத்திய அரசின் அறிவிப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

ஈ ஓடும் உணவகங்கள் இன்று சென்னையில் உள்ள உணவகங்களுக்கு சென்று சாப்பிட உட்காரும் வாடிக்கையாளர்களிடம் சர்வர்கள் வந்து என்ன சாப்பிடுரீங்க என்று கேட்பதில்லை. அதற்கு முன்பாக 500 ரூபாய் நோட்டை வாங்க மாட்டோம் என்றுதான் சொல்கிறார்கள். இதனால் கையில் 100 ரூபாய் நோட்டு இருப்பவர்கள் மட்டுமே உணவகங்களில் சாப்பிட முடிகிறது. அதுவும் 100 ரூபாய்க்கு ஏற்றபடி டீயோ, காபியோ, இட்லியோ சாப்பிட்டுவிட்டு செல்ல வேண்டியதுதான். மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் எல்லா உணவகங்களில் கூட்டம் மிகக் மிகக் குறைவாகவே இருக்கிறது. வருபவர்கள் டீ அருந்துவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். காலை 8 மணிக்கு கூட்டம் அலை மோதும், திருவல்லிக்கேணி ரத்னா கேப் ஹோட்டலிலும், பீட்டர்ஸ் சாலை சரவண பவனிலும் வாடிக்கையாளர்கள் வராமல் வெறிச்சோடியே காணப்பட்டன. புலம்பும் மக்கள் இதுகுறித்து, வாடிக்கையாளர் ஒருவர், திடீர்னு சொன்னா நாங்க என்ன செய்ய முடியும். நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்க. காலையில பிள்ளைங்க பள்ளிக் கூடம் போறாங்க. அதனால் ஓட்டலுக்கு வந்து குழந்தைகளுக்கு காலை டிபன் வாங்கி கொடுத்துட்டு நானும் சாப்பிடலாம்ன்னு வந்தா 500 ரூபாய் இருந்தா சாப்பிடாதீங்கன்னு சொல்லுகிறார்கள். என்ன செய்றதுன்னு தெரியல என்று புலம்பினார்.

கை பிசையும் ஓட்டல் நிர்வாகம்

 இதுகுறித்து ரத்னா கேப் காசாளரிடம் கேட்ட போது, பாதி வியாபாரம் கூட இன்னிக்கு இல்லிங்க. மக்கள் வரமாட்டேங்குறாங்க. நாங்களும் சில்லரைக்கு எங்கு போறது. போற வரைக்கும் போகட்டும் என்று ஓட்டலை திறந்து வைத்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும், ரெண்டு மூனு நாளைக்கு இப்படித்தான் இருக்கும் போல. அட்ஜஸ்ட் பண்ண வேண்டியதுதான் என்றார் விரக்தியாக மூடப்பட்ட பெட்ரோல் பங்க் சென்னையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளன. சில்லரை கொடுக்க முடியாததாலும், வரும் வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியாத சூழல் உள்ளதாலும் முடிவிட்டால் நல்லது என்று ராயப்பேட்டை மருத்துவமனை எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.

அலைமோதும் பெட்ரோல் பங்க் சில பெட்ரோல் பங்க் மூடப்பட்டுள்ளதால், திறந்திருக்கும் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலை மோதுகிறது. திறந்திருக்கும் பெட்ரோல் பங்க்குகளிலும் பெட்ரோல் போட்டால் 500 ரூபாய்க்கு போடுங்கள். சில்லரை கிடையாது என்று வாடிக்கையாளர்களிடம் சொல்லி வருகின்றனர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சொல்லி வருகிறார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கூச்சலும் குழப்பமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவுகிறது. சில பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாடிக்கையாளர் சண்டையில் ஈடுபடுகின்றனர். மூடப்பட்ட ஏடிஎம் மையங்கள் சென்னை ராயப்பேட்டை, கோபாலபுரம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்கள், ஐடிபிஐ ஏடிஎம்கள், விஜயா பேங்க், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி என அரசு வங்கிகளின் ஏடிம்களும், தனியார் வங்கிகளின் ஏடிஎம்களும் மூடப்பட்டுள்ளன.

இதனால் 500 ரூபாய் நோட்டு செல்லாது என்ற செய்தி தெரியாத முதியவர்கள் சிலர் ஏடிஎம் மையங்களுக்கு வந்து பணம் எடுக்க முடியாமல் புலம்பிக் கொண்டே விரக்தியில் நடந்து போவதை பார்க்க முடிந்தது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/no-500-s-no-customers-hotels/slider-pf214304-266765.html

Chaos and mad rush in petrol bunks across Chennai By Express News Service |

CHENNAI: With the Modi government’s sudden decision to demonitise larger banknotes, chaos and mad rush prevailed in most of the petrol bunks in Chennai on Wednesday morning; them being one of the few places which the Central government had announced can accept the demonetised Rs 500 and Rs 1000 currencies.

The salesmen in the petrol bunks turned out to be the most sought after men since this morning with people queuing up at the bunks for their turn. In some places, policemen had to be posted to regulate the large crowd.

With a sudden escalation in the demands for Rs 100 notes, some petrol bunk sales men are also placing a weird precondition - sales for only Rs 400 and nothing less. “I have run out of Rs 100 notes. I can afford only one note per customer," says a petrol bunk salesmen giving the rationale behind his demand.

In a few other bunks, the petrol salesmen ask their customers to pool in together the bills so that one person can pay them Rs 500 currencies and he would get the share from others who have Rs 100 notes.

But the most sought after customers in the bunks were those who have Rs 100 note with them. "I give preference to them so that I can pay the change to others," says a salesman.

KP Murali, president of Tamil Nadu Petroleum Dealers Association said that petrol bunks are facing a crisis in providing change and are facing tense moments as large crowds are flocking the bunks most to get their currencies exchanged. “They are not genuine petrol buyers,” he said.

“Police bandobust is being provided at few petrol bunks. The government while announcing that bigger notes could be exchanged in petrol bunks till November 11, should have made some arrangements to provide them with the change,” he said.

Petrol bunks have been instructed to take these currencies until November 11. Murali added that all the petrol bunks in the state are working. However, some were reported to have remained closed since last night.

மோடியின் அதிரடி அறிவிப்பு - பணக்கார பிச்சைக்காரன்!


மோடியின் அதிரடி அறிவிப்பு - பணக்கார பிச்சைக்காரன்!

By சாது ஸ்ரீராம் | Published on : 09th November 2016 01:17 PM |






ஒரு பிச்சைக்காரன். கோவில் வாசலில் பிச்சையெடுப்பது அவனது வழக்கம். நல்ல குரல் வளத்துடன் பாடுவான்.

ஒரு நாள். பக்திப் பாடல்களை உருக்கமாக பாடிக்கொண்டிருந்தான். மகிழ்ந்துபோன கடவுள் அவன் முன் தோன்றினார். பிச்சைக்காரன் மகிழ்ந்துபோனான். வணங்கினான். கடவுள் பேசினார்.

‘பக்தா! உன் பக்தி என்னை கவர்ந்தது. உனக்கு ஏதாவது வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டும் என்று கேள்!' என்றார் கடவுள்

பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி.

‘கடவுளே மிக்க நன்றி. என்னுடைய வேண்டுதல் இன்றுதான் பலித்திருக்கிறது. நீங்கள் இரண்டு வரங்கள் அளிக்க வேண்டும்' என்று வேண்டினான் பிச்சைக்காரன்.

‘சரி. தருகிறேன்' என்றார் கடவுள்

‘எனக்கு இந்த பிச்சைக்கார வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது. அதனால், முதலாவது வரத்தினால் என்னை இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரனாக மாற்றிவிடுங்கள்' என்று கேட்டான்.

‘அப்படியே ஆகட்டும். இரண்டாவது வரத்தை கேள்' என்றார் கடவுள்.

‘கடவுளே! இத்தனை காலம் எல்லோரும் பணக்காரர்களாக இருந்தார்கள். நான் ஏழையாக இருந்தேன். அதனால், இரண்டாவது வரத்தினால், இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஏழையாக்கிவிடுங்கள்' என்று கேட்டான்.

கடவுள் சிரித்துக்கொண்டே, ‘அப்படியே ஆகட்டும்' என்று சொன்னார்.

பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி தெரிவித்தான்.

‘பக்தா! நீ கேட்ட வரங்களை வழங்கிவிட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த வரங்கள் பத்து நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். நாளை காலை விடியும்போது நீதான் இந்த நாட்டின் பெரிய பணக்காரன்' என்று சொல்லிவிட்டு மறைந்தார் கடவுள்.

‘பத்து நாட்களுக்கு மட்டும் வரம் கொடுக்கும் இவரெல்லாம் ஒரு கடவுளா' என்று வருத்தப்பட்டுக்கொண்டே நகர்ந்தான். இருந்தாலும் அவனுக்கு மகிழ்ச்சி.

அன்று இரவு முழுவதும் தூங்கவேயில்லை. சில்லறைக் காசுகளை சேமித்துவைக்கும் பெட்டியை திறந்து பார்த்தான். பத்து செப்புக்காசுகளே இருந்தது.

‘இன்றோடு நம் பிரச்னைகள் தீர்ந்தது. விடிந்ததும் பெட்டி நிறைய தங்கக் காசுகள் நிரம்பி வழியப்போகிறது. வசதியான வீடு ஒன்று வாங்க வேண்டும். குதிரையும், தேரும் வாங்க வேண்டும்' என்றெல்லாம் கணக்குப் போட்டான். எப்பொழுது விடியும் என்று காத்திருந்தான்.

பொழுது விடிந்தது.

வேகமாக எழுந்து பெட்டியை திறந்து பார்த்தான். அதிர்ந்துபோனான். பெட்டியில் முதல் நாள் இருந்த அதே பத்து செப்புக்காசுகளே இருந்தது.

‘கடவுள் நம்மை ஏமாற்றிவிட்டாரா?' என்று யோசித்தவாறு வீட்டுக்கு வெளியே வந்தான். நாடெங்கும் ஒரே பரபரப்பு. காரணம், ஒரே நேரத்தில் நாட்டில் இருந்த அனைவரின் பணம், ஆபரணங்கள் ஆகியவை காணாமல் போயிருந்தன. பிச்சைக்காரனுக்கு விஷயம் புரிந்தது. ‘நாட்டில் இருப்பவர்களிடம் ஒரு பைசாகூட இல்லை. அதனால், பத்து செப்புக்காசுகள் வைத்திருக்கும் தானே பணக்காரன்'.

ஆம், பிச்சைக்காரன் பணக்காரன் ஆனான்.

விடிந்ததும் வீட்டில் பணமழை பெய்யும் என்று நினைத்த பிச்சைகாரனுக்கு வருத்தமே மிஞ்சியது. தற்போது கிடைத்திருக்கும் இந்த பணக்கார பட்டத்தால் அவனுக்கு எந்த உபயோகமும் இல்லை. கோவில் வாசலுக்கு சென்று பிச்சை எடுக்கவும் வழியில்லை. காரணம் மக்களிடம் பணம் இல்லை.

அவன் யோசிக்கத் தொடங்கினான்.

‘நல்ல வேளை பத்து நாட்களில் மக்களிடம் பணம் வந்துவிடும். பிறகு நமக்கு பிச்சை கிடைக்கும். ஒருவேளை இதுவே நிரந்தரமாக இருந்தால் நம் நிலை என்னவாகும்? தப்பித்தேன். கடவுளுக்கு நன்றி' என்றவாறு பத்து நாட்கள் முடியட்டும் என்று காத்திருந்தான்.

இந்தப் பிச்சைக்காரனின் நிலையில்தான் நாம் இப்போது இருக்கிறோம்.

‘இனி 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது', என்று பாரதப் பிரதமர் மரியாதைக்குரிய மோடி அவர்கள் நேற்று இரவு அறிவித்தார். ஒரே நிமிடத்தில் பெரிய கோடீஸ்வரர்களின் பண மெத்தைகள் குப்பை மேடாக மாறிவிட்டது. இது எந்த வகையில் அரசுக்கு உதவும்?

இப்படி அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென்று அறிவிக்கப்படுவது இது முதன் முறையல்ல. இதற்கு முன், 1979-ம் ஆண்டு இதேபோல மத்திய அரசு அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் ஏராளமானோர் கடும் சிக்கலுக்கு உள்ளாகினர். அப்போது மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. அதன்பிறகு தற்போது, பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சியில் இந்த துணிச்சலான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த அரசியல்வாதி வீட்டில் 1000 கோடி பதுக்கிவைத்திருக்கிறார்கள் தெரியுமா! மொரீஷியஸ் தீவில், மாலத்தீவில் இந்தியப் பணமாகவே பூட்டி வைத்திருக்கிறார்கள் என்ற வதந்திகள் நம்மைச் சுற்றி பலமுறை வட்டமிட்டிருக்கிறது. அரசியல்வாதிகளின் பணம் கட்டடங்களாகவும், வீட்டு மனைகளாகவும் உருமாறியிருப்பதும் நமக்குத் தெரியும். எதற்கும் உதவாத உதவாக்கரை என்று கிண்டல் செய்யப்பட்ட பலர், இன்று அரசியல் கட்சிகளின் கரை வேட்டியுடன் கோடீஸ்வர வண்டுமுருகனாக ஒய்யார கார்களில் பவனி வருவதையும் பார்க்க முடிகிறது. இந்த அதிசயங்களை நிகழ்த்தியது கருப்புப்பணம். இந்த அவல நிலையை ஒரே ஒரு உத்தரவினால் சாய்த்துவிட்டார் நமது பாரதப் பிரதமர் மரியாதைக்குரிய நரேந்திர மோடி.



இதன்மூலம், பாகிஸ்தானிலிருந்து அச்சடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுக்கள் இனி பயனற்றுப் போகும். பெருமளவில் பணப்பறிமாற்றம் நிகழ்த்தி ஆயுதக்கடத்தல், உளவு பார்த்தல், தீவிரவாதம் ஆகியவற்றுக்கான நிதி உதவி தடுக்கப்பட்டுவிட்டது.

இந்த நடவடிக்கைகள் மூலம் அரசுக்கு எவ்வளவு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதை தற்போதே சொல்வது கடினம். மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தத்தை இதன்மூலம் கொண்டுவரலாம் என்பது மட்டும் புரிகிறது.

மருந்து என்பது நோயைத் தீர்ப்பதற்கு என்றாலும், சில நேரங்களில் அதன் பக்கவிளைவுகள் தரும் பாதிப்பு அதிகமாகத்தான் இருக்கும். பொருளாதார ரீதியாக கருப்புப் பண முதலைகளுக்கு ‘செக்' வைக்கப்பட்டிருந்தாலும், அன்றாட பணப்புழக்கத்துக்கு இந்த அறிவிப்பு சில சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இன்று வங்கிகளுக்கு விடுமுறை. இரண்டு நாட்களுக்கு ஏ.டி.எம்.கள் செயல்படாது என்று அறிவித்திருப்பது நிச்சயமாக எரிச்சலூட்டுகிறது. மக்களிடையே பீதியைக் கிளப்பியிருக்கிறது. திருட்டுச் சம்பவத்துக்காக திருடனைப் பிடித்து சிறையில் அடைப்பது ஒருவிதம். அப்படியில்லாமல், எல்லோரையும் சிறையில் அடைத்துவிட்டு, நல்லவர்களை தவணை முறையில் விடுவிப்பது மற்றொரு விதம். இந்த இரண்டாவது நிலையைத்தான் மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. செல்லாமல் போனது கருப்புப்பணம் மட்டுமல்ல; நியாயமாகச் சம்பாதிக்கும் மக்களிடம் இருக்கும் நல்லப்பணமும்தான்.

வங்கிக் கணக்கு ஏதுமில்லாமல் கிடைத்த பணத்தை சுருட்டி பானைக்குள் வைக்கும் கிராமத்துப் பாட்டிகளை யார் வழி நடத்தப் போகிறார்கள்?

நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் ஏடிஎம் மையங்களில் தினசரி ரூ. 16 ஆயிரம் கோடி பணப் பரிமாற்றம் நடந்து வருகிறது. இதை அரசு எப்படி கையாளப்போகிறது?

டிசம்பர் 30-ம் தேதிவரை பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வந்துள்ளது. அதுவரை வங்கியில் கூட்டம் அலை மோதும். பாமர மக்களுக்கு எப்படி இதை புரியவைக்கப்போகிறீர்கள்? ஏற்கெனவே நூறு நாள் வேலை திட்டத்தினால், தேசிய வங்கிகள் விழிபிதுங்கி நிற்கின்றன. இதை எப்படி வங்கிகள் சமாளிக்கப் போகிறார்கள்?

பெட்ரோல் பங்க்கில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். ‘எங்களிடம் சில்லறை இல்லை. வேண்டுமானால், 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொள்ளுங்கள்' என்று ஒரு பங்க்கில் சொல்வதை கேட்கவும் முடிகிறது.

நாட்டில் கருப்பு பணத்தை குவித்து வைத்திருப்பவர்கள் யார் என்பது அரசுக்குத் தெரியாதா? அப்படித் தெரியாது என்று சொன்னால், அது கையாலாகாத அரசு. அத்தகைய கருப்புப் பண முதலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாமல், சாதாரண மக்களுக்கு சிரமங்களை அளிப்பது மிகச்சிறந்த அரசு செய்யும் செயல் அல்ல.

மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதில் குற்றம் குறை கண்டுபிடித்து ஊதிப் பெரிதாக்கும் எதிர்கட்சிகள், பிரதமரின் நடவடிக்கையை வரவேற்றிருப்பது கொஞ்சம் வித்தியாசமானது. ‘இதை எதிர்த்தால் நம்மிடம் கருப்பு பணம் இருக்கிறது என்று மக்கள் நினைத்துவிடுவார்கள்' என்ற பயத்தினால் பிரதமரின் நடவடிக்கையை ஆதரித்தார்களா? யாருக்கு தெரியும்.

இந்த நேரத்தில் அரசுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நாம் நினைத்தால், நமது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். அதே நேரத்தில், கருப்புப் பணத்தை சேமித்து வைத்திருக்கும் நண்பர்களுக்கு நம் பெயரில் பணம் மாற்றிக் கொடுக்கும் செயலை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.



எது எப்படியிருந்தாலும், டாஸ்மாக் கடையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் எவ்வித தடையுமின்றி தாராளமாக வாங்கிக்கொள்ளப்பட்டது என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இதுவும் ஒரு சர்ஜிகள் ஆபரேஷனா அல்லது மயக்க மருந்து கொடுக்கப்படாமல் செய்யப்படும் அறுவை சிகிச்சையா என்பதை காலம் மட்டுமே உணர்த்தும்.

பிரதமர் மோடியின் துணிச்சலான முயற்சிக்குப் பாராட்டுகள். எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் சுமூகமாக பிரதமரின் முயற்சி வெற்றி பெற பிரார்த்திக்கிறோம்.

சாது ஸ்ரீராம் (saadhusriram@gmail.com)

indian_bride


இந்தியப் பெண்களிடையே சொந்த சாதியல்லாது பிற சாதியில் வரன் தேடும் ஆர்வம் அதிகரித்து வருகிறதா?

By கார்த்திகா வாசுதேவன் 
60 சதவிகித இந்தியப் பெண்கள் வாழ்க்கைத் துணைக்கான தேடலில் தங்களது சாதியை விட பிற சாதி வரன்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்கிறார்கள் என ’பானிஹால்’ எனும் வரன் தேடலுக்கான இணையதளம் ஒன்று சமீபத்தில் தனது சர்வே முடிவை அறிவித்திருக்கிறது.
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதெல்லாம் அந்தக் காலம், இப்போதெல்லாம் அறிவியல், மருத்துவம் இரண்டின் மூலமும் பொருத்தம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்தப் பானிஹால் தனது வாடிக்கையாளர்களின் திருமணப் பொருத்தங்களை நியூரோ சயன்ஸ் அடிப்படையில் பார்த்துத் பொருத்தமான வரன்களைத் தேர்ந்தெடுக்க உதவுகிறதாம். இந்த இணையதளம் இதுவரை 6000 வாடிக்கையாளர்களிடம் நடத்திய ஒரு ஆய்வில்;
மணப்பெண்களின் எதிர்பார்ப்பு என்பது;
  • இரண்டில் ஒரு பெண் கூட்டுக் குடும்ப வாழ்வை விரும்புகிறார். அவர்களுடைய தேடல் கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்து வாழத் தயாராக இருக்கும் மணமகனாகவே இருக்கிறது.
  • தோற்றத்தைக் கண்டு மயங்குவதெல்லாம் மலையேறிப் போய் விட்டது. பத்தில் ஆறு பெண்கள் திருமண வரன்களுக்கான இணைய தள சுய விவரப் பக்கத்தில் புகைப்படம் கூடப் பகிராத மணமகன்களைத் தொடர்பு கொண்டு விசாரிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்களாம்.
  • முன்பெல்லாம் மணமகன் தரப்பிலிருந்து தான் திருமணப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது சம்பிரதாயமாக கடைபிடிக்கப் பட்டு வந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல இந்த இணையதளத்தையே எடுத்துக் கொள்ளுங்கள், இவர்களது பயனாளர்களில் 40 சதவிகிதத்தினர் பெண்கள் என்பதோடு திருமணப் பேச்சு வார்த்தைகளின் போது ஆண் வீட்டாரை விட பெண் வீட்டார் தான் இத்தகைய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதில் தெளிவாகவும், ஆர்வமாகவும் ஈடுபடுகிறார்கள்.
  • அதோடு கூட இன்றைய பெண்கள் மணமகனைத் தேர்ந்தெடுப்பதில், அவரது சொத்து மதிப்பைக் காட்டிலும் அவரது கல்விக்கும், உத்யோகத்திற்கும்  முன்னுரிமை தருகிறார்கள். குறைந்த பட்சம் தங்களது வாழ்க்கைத் துணை பட்டதாரியாகவாவது இருக்க வேண்டும் எனும் விழிப்புணர்வும், எதிர்பார்ப்பும் 85 சதவிகிதப் பெண்களுக்கு இருக்கிறது.

ரிடையர்மெண்டுக்குப் பிறகு; என்னென்னவோ செய்யலாம்?


retire_3

ரிடையர்மெண்டுக்குப் பிறகு;

என்னென்னவோ செய்யலாம்?

மனமுவந்தும், மனத் திருப்தியோடும் செய்வதற்கு எத்தைனையோ விசயங்கள் இருக்கின்றன.

ஆனால் அவையெல்லாம் அவரவர் மனதளவில் நின்று போகின்றன. பின்பு நடப்பதெல்லாம்;

ஆண்கள்/ பெண்கள் என்ற வேறுபாடின்றி ரிடையர்டு ஆன எல்லோருமே ஒரு குறுகிய வாழ்க்கை வட்டத்தில் சிக்குண்டு மீள முடியாதவர்களாகிப் போகிறார்கள்
கூட்டுக் குடும்பம் எனில் பேரன் பேத்திகளை பள்ளிக்கு கொண்டு விட்டு, திரும்ப அழைக்கும் வேலையை ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆண்கள் மாதா மாதம் ரேஷன் கடைக்குச் சென்று திரும்புகிறார்கள். கரண்ட் பில் கட்டும் பொறுப்பேற்கிறார்கள். மளிகைக் கடைக்கும், மெடிக்கல் ஷாப்புக்கும் சென்று வரும் தலையாய கடமை இவர்கள் தலையில் ஏற்றப்படுகிறது.
பெண்கள் மருமகளோ, மகளோ வேலைக்குச் செல்பவர்கள் எனில் சமையற்கட்டுக்கு பொறுப்பாளராக்கப்பட்டு விடுகிறார்கள்.
ஒழிந்த நேரங்களில் பேக்கேஜ் டூர் பதிவு செய்து கொண்டு நண்பர்கள் அல்லது உறவினர்களோடு ஆன்மீகச் சுற்றுலா சென்று திரும்புகிறார்கள்.
பிள்ளைகள் வெளியூரில் இருந்தால் அடிக்கடி அவர்களிருக்கும் இடங்களுக்குச் சென்று திரும்புகிறார்கள். இரண்டுக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் எனில் மகன் வீட்டில் பத்து நாள், பெரிய மகள் வீட்டில் 7 நாள். சின்ன மகள் வீட்டில் 5 நாள் என்று கால்ஷீட்டை பிய்த்துக் கொடுத்து விட்டு மாதக் கடைசியில் சொந்தக் கூட்டில் அக்கடா என்று உட்காரும் போது மீண்டும் அடுத்த ரவுண்டு ஊர் சுற்றலுக்கு அழைப்பு வந்து விடுகிறது.
வாழ்வின் ஏதோ ஒரு திருப்தியின்மையை காம்ப்ரமைஸ் செய்து கொள்வதற்காக என்று தொடங்கி அன்லிமிடட் மீல்ஸ் போல அன்லிமிடட் டி.வி சீரியல் ரசிகையாகவோ, செய்திச் சேனல் ரசிகர்களாகவோ தங்களை மனமாற்றம் செய்து கொள்கிறார்கள்.
போதாக்குறைக்கு ரிடையர் ஆனவர்கள் தானே... வேறென்ன வேலையிருக்கப் போகிறது? என்று அவரவர் குடும்பப் பஞ்சாயத்துகளோடு சேர்த்து அறிந்தவர்,தெரிந்தவர் உற்றம், சுற்றம் என அனைத்து தரப்பினரது குழப்பப் பஞ்சாயத்துகளிலும் தலையிட்டு கருத்து சொல்லியும், சொல்லாமலும் நொந்து நூடுல்ஸ் ஆகிறார்கள்.

இது தான் ரிடையர்மெண்ட் வாழ்க்கையா?

அன்பான பெரியோர்களே, தாய்மார்களே...

உங்கள் மனதைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்களேன், பரபரப்பாய் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் ரிடையர்மெண்டுக்குப் பிறகான நாட்களில் வாழ்வை ரசிக்க பிரமாதமாய் என்னவெல்லாம் திட்டம் போட்டீர்கள் என்று? அதெல்லாம் புஸ்வாணமாய்ப் போவதேன்?!

என் அம்மா பள்ளி ஆசிரியையாக இருந்து ரிடையர் ஆனவர். அம்மா ரிடயர்மெண்டுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே வீட்டுக்கு வெளியே அம்மிக்கல்லும், ஆட்டுக்கல்லும் வாங்கிக் கொண்டு வந்து போட்டுக் கொண்டார். “ஏம்மா... அதான் கிரைண்டர், மிக்ஸில்லாம் இருக்கே? இது எதுக்கு? என்றதற்கு; ’இல்லை நான் ரிடையர்ட் ஆனதுக்கு அப்புறமா கிரைண்டர், மிக்ஸி யூஸ் பண்றதைக் குறைச்சிட்டு இனிமே நம்ம பழைய வாழ்க்கை முறைப்படி அம்மிக்கல்லும், ஆட்டுகல்லில் அரைத்துத் தான் சமைக்கப் போறேன்; அதான் ஹெல்த்தியானது, பிடிச்சதை ருசிச்சு சாப்பிட்டு வாழ்க்கையை அதன் போக்கில் ரசிச்சு வாழப் போறேன்” என்றார்.

இந்தப் பதில் நான் எதிர்பாராதது... ஆனால் சந்தோசமாக இருந்தது.

சில மாதங்கள் கடந்தன.

அடுத்த முறை அம்மா வீட்டுக்குப் போகும் போது பார்த்தால் வீட்டுக்கு வெளியே அம்மிக் கல்லும், ஆட்டுக்கல்லும் போட்டது போட்டபடி புதுக் கருக்கு மாறாமல் அப்படியே இருந்தன. அதில் மாவரைத்த சுவடே இல்லை. என்னாச்சும்மா? என்றதற்கு “ஆசையா தான் வாங்கிப் போட்டேன், ஆனா முடியலம்மா... மூட்டு வலி பாடாய் படுத்துது, குனிஞ்சு உட்கார்ந்து அரைக்க முடியல... வீடுன்னு இருந்தா சாஸ்திரத்துக்கு அம்மியும், ஆட்டுக்கல்லும் இருக்கணும், இருந்துட்டுப் போகட்டும்... அவ்வளவு தான்” என்றார்.”

அம்மாவைப் பார்க்க பாவமாய் இருந்தது. ”ம்மா மூட்டு வலி சரியானதும் அரைக்கலாம்மா” என்று சொல்லத்தான் ஆசை, ஆனால் பெரும்பாலான அம்மாக்களுக்கு மூட்டு வலி சரியாக மருத்துவத்தை தாண்டி உளவியலும் அல்லவா கருணை காட்ட வேண்டியதாக இருக்கிறது. அதனால் நான் வெறும் புன்னகையோடு நிறுத்திக் கொண்டேன்.

ஆனால் மனதுக்குள் ஒரு குரல் இப்போது வரை விடாது ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.

அம்மாவின் அந்த சின்னஞ்சிறு எதிர்பார்ப்பு பொய்த்துப் போக மூட்டு வலி மட்டுமா காரணமாக இருக்க முடியும்? இல்லை... இல்லவே இல்லை.

அட இனி என்ன? இந்த வயதில் போய் அம்மி, ஆட்டுக்கல்லில் எல்லாம் அரைத்து ரசித்து சமைத்து என்ன ஆகப் போகிறது? ருசித்துச் சாப்பிட்டு சமையலைப் பாராட்ட பிள்ளைகளா உடனிருக்கிறார்கள் என்ற வெற்று உணர்வு ஆக்ரமித்திருக்கலாம். அல்லது அறுபது கடந்தாச்சு இனி என்ன ருசி வேண்டி இருக்கு? உப்பு, புளி, காரம் என எதாவது தூக்கலாக சாப்பிட்டு விட்டால் நாள் முழுக்க அஜீரணத் தொல்லையாகி விடுகிறது. போதும்... போதும் என்ற சலிப்பு தான் எல்லாவற்றிற்கும் மூல காரணமாயிருக்க முடியும். சலிப்பு வந்த பின் வாழ்வின் மீதான் சுவாரஸ்யம் படிப்படியாக குறையத் தானே செய்யும். அப்படியே குறைந்து, குறைந்து பின்னொரு நாளில் அது தொலைக்காட்சி சேனல்களின் சீரியல் பைத்தியத்தில் வந்து முடிவுறும் பட்சத்தில் சமையலில் மட்டுமல்ல வாழ்விலும் பிறகெப்போதும் அவர்கள் திட்டமிட்ட அந்த சுவாரஸ்யங்களைத் தேடிக் கண்டடையவே முடிவதில்லை.

ஆதாலால் குடும்பச் சுமையிலிருந்தும், சேனல் சீரியல் அடிக்ஸனில் இருந்தும், குடும்பத்தின் குழப்பப் பஞ்சாயத்துகளில் இருந்தும் ரிடையர்டு சிட்டிஸன்களை காப்பாற்ற ஏதாவது சிந்திக்கலாமே என்று சிந்தித்ததன் விளைவு தான் இக்கட்டுரை :)



ரிடையர்மெண்டுக்குப் பிறகான வாழ்வின் சலிப்பை எப்படிக் கலைவது?
முதலில் ஃபேலியோ டயட்காரர்கள் சொல்வதைப் போல பிளட் டெஸ்ட் எடுத்து விடுங்கள். முடிந்தால் ஒரு மாஸ்டர் ஹெல்த் செக் அப் கூட செய்து கொள்ளலாம். சீனியர் சிட்டிஸன்களுக்கு ஆஃபர்கள் உண்டாம். வயதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை. நாம் ஆரோக்கியமாகவே இருக்கிறோம் என்ற தன்னம்பிக்கை உணர்வு தான் முதல் தேவை. இதை தள்ளிப் போட்டுக் கொண்டே போகப் போக வாழ்வும் நம்மைத் தள்ளிக் கொண்டே போய் ஒரு மூலையில் உட்கார வைத்து விடுகிறது. ஆகவே முதலில் இதைச் செய்து விடலாம்.
அடுத்ததாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் காலத்தில் நம்மோடு ஒத்த உள்ளத்தில் புரிந்துணர்வோடு பழகிப் பின் காலத்தின் கட்டாயத்தால் பிரிந்த பால்ய நண்பர்களை மெனக்கெட்டு தேடிக் கண்டு பிடியுங்கள். அவர்களோடு அலைபேசித் தொடர்பிலிருங்கள், முடிந்தால் சமயம் கிடைக்கையில் சந்திக்கவும் தவறாதீர்கள். இந்த வாழ்வு உங்களுக்கானது. குழந்தைகள், சொந்தங்களுக்காக மட்டுமே வாழ்ந்து முடித்து விட்டால் பிறகு நிறைவேறாத ஏக்கங்கள் பட்டியல் அதிகமாகிக் கொண்டே போகும்.
வயதானால் ஆன்மீகச் சுற்றுலா தான் போக வேண்டும் என்று எந்த நாட்டிலும் பிரத்யேக சட்டங்கள் இல்லை. ஆதலால் உள்ளுக்குள் இளமையாக எண்ணிக் கொண்டு அவரவர் வாழ்க்கைத் துணையோடு மனம் விரும்பும் இடங்களுக்கு அடிக்கடி இல்லா விட்டாலும் ஆண்டுக்கு ஒரு முறையாவது நான்கைந்து நாட்கள் டூர் சென்று திரும்புங்கள்.
இளமையில் எதையாவது கற்றுக் கொள்ள விரும்பி; நேரமோ, பொருளாதார நிலையோ ஏதோ ஒன்று ஒத்துக் கொள்ளாது போய் கற்றுக் கொள்ள இயலாமல் போன விசயமென ஏதாவது இருப்பின் தயவு செய்து அதை இப்போது கற்றுக் கொள்வது என தீர்மானம் செய்து கொள்ளுங்கள். நீச்சல், பாட்டு, நடனம், இப்படி ஏதாவது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ’ஸ்னாப் டீல்’ விளம்பரத்துப் பாட்டி காலில் சலங்கை கட்டி ஆடினால் தான் ரசிப்போம்; நம் வீட்டில் பாட்டி ஆடினால் கேலி செய்வோம் என்று யாரெனும் குறுக்கிட்டால் சட்டை பண்ணாமல் முன்னேறிச் செல்லுங்கள். ஜப்பானில் 50 வயதில் னடனம் கற்றுக் கொண்டு இப்போது 80 லும் ஒரு பாட்டி நடனப் பள்ளியே நடத்திக் கொண்டிருக்கிறாராம். ஆகவே உங்களது மனப்பூர்வமான விருப்பங்களுக்கு இப்போதும் கூட தடை சொல்லிக் கொண்டிருப்பதில் நியாயமே இல்லை தானே!
டைரி எழுதுவதில் விருப்பமிருந்தால் அதைச் செய்யலாம், அல்லது மரபிலிருந்து அழிந்து போன வழக்கங்களில் ஒன்றாகி விட்ட கடிதம் எழுதும் பழக்கத்தை குழந்தைகளிடையே ஏற்படுத்துங்கள். நேர விரயமென்று நினைத்தால் சொல்வதற்கேதுமில்லை. ஏனெனில் சுவாரஸ்யம் தான் முக்கியம் எனில் இது கூட சுவாரஸ்யம் தானே! பொக்கிஷமாய் பழைய கடிதங்களைப் பாதுகாப்பவர்களுக்குத் தான் தெரியும் கடிதம் எழுதுவதில் இருக்கும் பேரின்பம்.
மாலை நேர நடை பயிற்சிக்கு ஒரு செட் சேர்த்துக் கொள்வதைப் போலவே ’விட்’ அடிக்கவும் ஒரு செட் சேர்த்துக் கொண்டு வாரமொரு முறையாவது ஒன்று கூடிச் சிரிக்க மறக்காதீர்கள். சென்னையில் ’லாஃபிங் கிளப் ’செயல்படுகிறதே அதை கிராமத்தின் ரிடையர்டு வாத்தியார்களும், குமாஸ்தாக்களும், ரிடையர்டு நிலச்சுவாந்தாரர்களும் கூட பின்பற்ற ஒரு தடையும் இல்லை. ஆகவே ’சிரிச்சாப் போச்சு ரவுண்ட்’ மாதிரி ஏதாவது செய்து சிரிக்க நேரம் ஒதுக்குங்கள்.
சில பெற்றோர்களின் மனக்கவலைகளில் ஒன்று பிள்ளைகளின் வருமானக் குறைவு. வருமானம் உயர வேண்டும் என்று நினைப்பது தவறில்லை, ஆனால் சதா சர்வ காலமும் வாழ்க்கையை வருமானம் மட்டுமே தீர்மானிப்பதில்லை, என்பதையும் உணர்ந்திருப்பவர்களாய் இருப்பது நல்லது. ஏனெனில் சில பெற்றோரிடையே ரிடையர்மெண்டுக்குப் பிறகு இந்தக் கவலை அதிகரிப்பதாக ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறது.

’புதுப் புது அர்த்தங்கள்’ படத்து பூர்ணம் விஸ்வநாதன், சவுகார் ஜானகி ஜோடியைப் போல அத்தனை சுவாரஸ்யமாய் வாழ்ந்து முடிக்கா விட்டாலும் கூட குறைந்த பட்சம் வாழ்வின் சின்னஞ்சிறு ஆசைகளையாவது மிஸ் பண்ணி விட வேண்டாமே!

’மிதுனம்’ என்றொரு தெலுங்குப் படம் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், லஷ்மியும் வயதான தம்பதிகளாக நடித்திருப்பார்கள். படத்தில் எஸ்.பி.பி தான் ரிடையர்டு ,லஷ்மி இல்லத்தரசியாகத் தான் இருந்திருப்பார், ஆனால் பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் இருக்க இங்கு கணவரோடு தனித்திருக்கும் மனைவியாக அவருடையதும் ரிடையர்மெண்டுக்குப் பின்னான வாழ்க்கை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் படத்தை வயதான தம்பதிகளின் வாழ்வை சுவாரஸ்யம் குன்றாமல் இருக்கச் செய்ய மேலே சொல்லப்பட்ட அத்தனை விசயங்களும் நிறைக்கின்றன. ரிடையர்டு ஆன சீனியர் சிட்டிஸன்கள் மட்டும் அல்ல, அவர்களது வாரிசுகளும் பார்க்க வேண்டிய படமிது. வாய்ப்பிருந்தால் இணையத்தில் தேடிப் பார்க்கவும்.

மேலே சொன்ன விசயங்களைப் எப்படித் தொடங்குவது என்று சலிப்பிருந்தால் புகைப்படத்தில் சிறு பிள்ளை விளையாட்டாய் தென்னை மரப் பீப்பீ செய்து ஊதிக் கொண்டிருக்கிறார்களே அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் ப்ளீஸ்!

வாழ்க்கை எப்போதும் அழகானதே!

500ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களாக குவியும் மொய் .. கவலையில் "கல்யாணங்கள்"!



சென்னை: கள்ளப்பணம், கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியை அளித்தாலும் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். செய்தி பரவியதும் டீ கடைகள், மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆகியவற்றில் புகுந்து பொருட்களை வாங்கினர்

. இதனால், நூறு ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க முடியாமல் பலரும் தவித்தனர். VIDEO : PM Modi full speech on Rs 500 and 1000 currency notes bans 00:08 / 00:40 : Ad ends in 00:31 Powered by திருமண மண்டபங்களில் குவிந்திருந்தவர்களுக்கு மோடியின் அறிவிப்பு அதிர்ச்சியாகவே இருந்தது. கையில் இருப்பது 500 ரூபாய் நோட்டுக்கள்தான் என்பதால் அவற்றை மாற்றுவது எப்படி? மொய் எழுதினால் ஏற்றுக்கொள்வார்களா? என்ற தயக்கமே ஏற்பட்டது. 

பணமாக கையில் கொடுக்க கொண்டு வந்தவர்கள் கவரில் போட்டு 500, 1000 ரூபாய்களாக கொடுத்துச் சென்றனர். மொய் பணம் வாங்குபவர்களிடமும் பணம் மாற்றுவதற்கு ஒரு கூட்டம் முண்டியடித்தது. ரூ.1,00, ரூ.200 மொய் எழுதுபவர்கள் சிலர், தங்கள் நண்பர்களோடு சேர்ந்து ஒரே கவரில் பெயர்களை எழுதி மொய் கவர் கொடுத்தனர். இன்று காலையில் திருமணம் முடிந்த உடன் மொய் எழுதியவர்கள் பைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களாகவே இருந்தது. சிலர் மட்டுமே 100 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனர். 
வைத்திருந்தவர்களுக்கு கூடுதல் வருமானம் என்றாலும், அந்த பணம் கையில் கிடைத்தும் அனுபவிக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. மொய் பணத்தை வைத்து மண்டப வாடகை, கேடரிங், அலங்காரம் செய்தவர்கள், ஆகியோர்களுக்கு பணமாக கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மண்டப வாடகை போன்றவற்றை செக் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் செலுத்த யோசனை செய்து வருவதாக திருமணம் நடத்துபவர்கள் தெரிவித்தனர். 

500 மற்றும் 1000 நோட்டுகள் தடை: 5 முக்கிய அம்சங்கள்


நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* அரசு பஸ்கள், ரயில் நிலை யங்கள், விமான நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட் ரோல் பங்க்குகள், அரசு பால் பூத்துகள், தகன எரிமேடைகள் அடக்க ஸ்தலங்களில் அடுத்த 72 மணி நேரத்துக்கு இந்த நோட்டு கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

* இந்த நோட்டுகளை ரூ.4,000 வரைவங்கி மற்றும் அஞ்சல கங்களில் உரிய அடையாள அட் டையை காண்பித்து வரும் 24-ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம். இந்த நோட்டு களை அஞ்சலக மற்றும் வங்கிக் கணக்குகளில் நாளை முதல் டிசம்பர் 30 வரை உச்ச வரம் பின்றி டெபாசிட் செய்யலாம்.

* இன்று வங்கிகள் செயல் படாது. ஏடிஎம்கள் இன்றும் நாளையும் செயல்படாது. ஏடிஎம் களில் முதல் சில நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2000 வரை எடுக்கலாம். பின்னர் இது ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* வங்கிகளில் இருந்து சில நாட்களுக்கு நாளொன்றுக்கு ரூ.10 ஆயிரமும், வாரத்துக்கு 20 ஆயிரம் வரையிலும் எடுக்கலாம். பின்னர் இத்தொகை படிப்படியாக உயர்த்தப்படும்.

* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்பாடு, காசோலை, டிடி பரிவர்த்தனைக்கு தடையில்லை.

ஹெல்மெட் அணியாத இளைஞர்களை போலீஸ் மடக்கியபோது விபத்து: சென்னை சம்பவம் உணர்த்துவது என்ன?


'தலைக்கவசம் உயிர்க்கவசம்'. இந்த விழிப்புணர்வு வாசகத்தின் மீது வாகன ஓட்டிகளின் புரிதலும் போக்குவரத்து போலீஸாரின் கெடுபிடியும் தமிழகத்தின் நீண்ட கால விவாதப் பொருள்.

இந்த விவாதத்துக்கு இன்னுமொரு கருவாக கிடைத்துள்ளது சென்னையில் இன்று (திங்கள்கிழமை) நடந்த சம்பவம் ஒன்று.

வாரத்தின் முதல் நாள் என்பதால் வழக்கமான பரபரப்பு. "சென்னை கலங்கரை விளக்கம்பகுதியில் போக்குவரத்து போலீஸார் கெடுபிடியால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் விபத்துக்குள்ளானர்கள்" இப்படித்தான் முதல் தகவல் வெளியானது.

சம்பவத்தை நேரில் பார்த்த புதுப்பேட்டையைச் சேர்ந்த அலாவுதீன் 'தி இந்து'விடம் கூறும்போது, "நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலங்கரை விளக்கம்பகுதியில் ஹெல்மெட் அணியாத காரணத்துக்காக எனது இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்து கொண்டனர். அவசர வேலை இருந்ததால் நான் சென்றுவிட்டேன். மாலை, போலீஸாரிடம் எனது வாகனம் குறித்து கேட்டேன். ஆனால், திங்கள்கிழமை காலை வந்து ஆர்.ஐ-யை சந்திக்குமாறு சொல்லி அனுப்பிவிட்டனர். ஆர்.ஐ. பாண்டியனை சந்திப்பதற்காக காலை 8 மணியளவில் கலங்கரை விளக்கம்பகுதியில் ஆல் இந்தியா வானொலி நிலையம் அருகே நின்று கொண்டிருந்தேன்.

அப்போது பைக்கில் இரண்டு இளைஞர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. போலீஸார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்த இடத்தின் அருகே அவர்கள் வாகனம் வந்தபோது போலீஸ்காரர் ஒருவர் காலை நீட்டி வாகனத்தை நிறுத்த முயன்றார். திடீரென வாகனத்தை மறித்ததால் அந்த இளைஞரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் வாகனத்தை ஓட்டிய மோஹித் என்ற இளைஞருக்கு தலை, கை, கால்களில் அடிப்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். மற்றொரு இளைஞர் புவனுக்கு கண், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. காலை நீட்டி வண்டியை நிறுத்த முயன்ற போலீஸ்காரருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.

வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்த வேண்டும் என முடிவு செய்த போலீஸார் தடுப்பு வேலியை வைத்திருந்தால் அதைப் பார்த்துவிட்டு தூரத்திலேயே வாகனத்தின் வேகத்தை அவர்கள் கட்டுப்படுத்தியிருப்பார்கள். அதைவிடுத்து மிக அருகில் வாகனம் வந்தபோது காலை நீட்டி வாகனத்தை மறித்ததால்தான் விபத்து நேர்ந்தது" என்றார்.



சம்பவ பகுதியில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் | படம்: எல்.சீனிவாசன்.

இந்தத் தகவலின் அடிப்படையில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங்கை தொடர்பு கொண்டு இரண்டு கேள்விகளை முன்வைத்தோம்.

கேள்வி 1: கலங்கரை விளக்கம் பகுதியில் போக்குவரத்து போலீஸார் ஹெல்மெட் அணியாத இளைஞர்களை துரத்தியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது?

கேள்வி 2: போக்குவரத்து போலீஸாரே ஹெல்மெட் இல்லாமல் பயணித்த புகைப்படம் இருக்கிறது.அவர்கள் மீது உங்கள் நடவடிக்கை என்ன?

"சம்பவம் குறித்து எனக்கு இன்னும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை. அதனால் இப்போதைக்கு எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. தகவல் கிடைத்தவுடன் தெரிவிக்கிறேன்" என்றார்.

ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் அபய் குமார் சிங் கூறியதின் பேரில் பேசுவதாக 'தி இந்து' விடம் பேசிய சென்னை போக்குவரத்து இணை ஆணையர் கே.பவானீஸ்வரி, "கலங்கரை விளக்கம் பகுதியில் காலையில் நடந்த சம்பவத்தில் இளைஞர்களை போக்குவரத்து போலீஸார் துரத்தவில்லை. ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது நீதிமன்ற உத்தரவு அதை மக்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை உறுதி செய்வதே எங்கள் பணி. வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அந்த இரண்டு இளைஞர்களையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் வேகமாக வந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்திருக்கிறார்கள். இதில் போக்குவரத்து போலீஸ் ஒருவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞர்கள் இருவரும் மைலாப்பூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் உடல்நலம் சீராக இருக்கிறது.

அப்படியே போலீஸார் நிறுத்தியும் நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை அடுத்த சிக்னலில் மடக்கிப் பிடிப்பதே வழக்கம். எனவே, ஹெல்மெட் அணியாததற்காக யாரையும் துரத்தும் அவசியம் இல்லை.

போக்குவரத்து போலீஸாரே ஹெல்மெட் அணியாமல் விதிகளை மீறுவதாகக் கூறியிருந்தீர்கள். பொதுமக்களுக்கு என்ன சட்டதிட்டமோ அதேதான் போக்குவரத்து போலீஸாருக்கும். விதிகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

காயமடைந்தவர்கள் விவரம்:

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் பின்வருமாறு. மோஹித்(19) த/பெ. ஹீராலால். புவன் குப்தா (18) த/பெ. உமேஷ் குப்தா. இருவரும் யானைகவுணி பகுதியைச் சேர்ந்தவர்கள். கல்லூரி மாணவர்கள். பெசன்ட் நகரிலிருந்து யானைக்கவுணி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே சம்பவம் நடந்துள்ளது.

காயமடைந்த போக்குவரத்து போலீஸ்காரர் சாம் வெஸ்லி தாஸ்(33). இவருக்கு வலது காலில் அடிபட்டுள்ளது. ராயப்பேட்டையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காலில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் நிலை என்ன?

மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் மோகித், புவன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் தரப்பில், "மாணவன் மோகித்துக்கு தலை, கை, காலில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. புவனுக்கு கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இப்போது இருவருமே நலமாக இருக்கின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் இருவரையும் இன்னும் அவரது உறவினர்கள் நேரில் சென்று பார்க்கவில்லை. மோகித் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக அவரது சகோதரர் கூறினார்.

மருத்துவர்களிடம் விசாரித்தபோது, "அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள். சிகிச்சை அளித்துள்ளோம். இப்போது பரவாயில்லை" என்றனர்.

உயர் நீதிமன்ற உத்தரவும்.. தனிப்படையும்:

இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தீவிரமாக காவல் துறை அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி, போக்குவரத்து கூடுதல் ஆணையர் அபய் குமார் சிங் மேற்பார்வையில் வட சென்னை இணை ஆணையர் எம்.டி.கணேச மூர்த்தி, தென் சென்னை இணை ஆணையர் கே.பவானீஸ்வரி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதனடிப்படையில், சென்னையில் நாள்தோறும் ஆங்காங்கே ஹெல்மெட் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

அரசு என்பது மக்களால் ஆனதே. சட்டம் ஒன்று அமலுக்கு வரும்போது அதை முழுமையாக நடைமுறைப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது. தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் 67 ஆயிரத்து 250 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றில் 15 ஆயிரத்து 190 பேர் உயிரிழந்தனர். அதேபோல் 2015-ம் ஆண்டு நிகழ்ந்த 69 ஆயிரத்து 59 சாலை விபத்துகளில் 15 ஆயிரத்து 642 பேர் பலியானார்கள். இந்த ஆண்டும் அதிக அளவில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கின்றன. தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் 54 ஆயிரத்து 676 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 13 ஆயிரத்து 142 பேர் இறந்துள்ளனர் என்கிறது சமீபத்திய புள்ளிவிவரம். அதிகரித்துவரும் சாலை விபத்துகள் குறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறும்போது, "போக்குவரத்து விதிமீறல்களை மீறக்கூடாது, என்ற பொறுப்பு பொதுமக்களிடம் வர வேண்டும். கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். குறுகிய சாலைகளில் அதிக வேகமாக செல்லக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்கள் ஓட்டிச் செல்லக்கூடாது" என்றனர்.

இந்த பொறுப்பு நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது. ஹெல்மெட் அணிந்திருந்தால் விபத்து நேர்ந்தால் பெரியளவிலான சேதத்திலிருந்து தப்பிக்கலாம் என்பதாலேயே அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தன்னுயிரைக் காக்க தானே தயாராக இல்லாதபோது அரசு என்ன செய்ய முடியும். ஒவ்வொரு தனிநபரின் பின்னாலும் சென்று கண்காணிப்பது என்பது நடைமுறை சாத்தியமற்றது. எனவே, குறைந்தபட்ச பொறுப்புணர்வோடு மக்கள் நடந்துகொள்வது அவசியமானது.

போக்குவரத்து போலீஸார் கவனிக்க வேண்டியது என்ன?

மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது எவ்வளவு அவசியமோ அதே அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததே போக்குவரத்து போலீஸாரின் அணுகுமுறையும். மக்கள் ஹெல்மெட் அணிய தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விதிமீறல்கள் நடைபெறும்போது கண்டிப்பாக நடவடிக்கை அவசியம். ஆனால், நீதிமன்ற உத்தரவை சுட்டிக் காட்டி கடுமை காட்டுவது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். ஹெல்மெட் அணியாதவர்களை வாகனத்திலிருந்து இறக்கி சில இடங்களில் கைபலத்தை பயன்படுத்தி அடிப்பது போன்ற நிகழ்வுகள் எப்படி சட்டத்தை முழுமையாக அமல்படுத்த உதவும்? "மணிக்கணக்கில் நிற்கவைப்பது, நாள் கணக்கில் இழுத்தடிப்பது, ஹெல்மெட் வாங்கியதற்கு பில் கொண்டுவா என்று சொல்லி அதுவரை அசல் ஆவணங்களை வாங்கி வைத்துக்கொள்வது" எல்லாம் மக்களை அதிருப்தி அடையச் செய்கிறது என்கிறார் இணையவாசி ஒருவர்

'டார்கெட்' உண்மையா?

அண்மையில் போக்குவரத்து போலீஸில் ஹெல்மெட் அணியாததற்காக நண்பர் ஒருவர் சிக்கியிருக்கிறார். அவருடைய அசல் ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்ட போக்குவரத்து போலீஸார் ஹெல்மெட் வாங்கிய பில் கொடுத்துவிட்டு ஆவணங்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருக்கின்றனர். நண்பரோ, "ஸ்பாட் ஃபைன் சொல்லுங்கள் கட்டிவிடுகிறேன். ஹெல்மெட் உடனடியாக வாங்கிவிடுகிறேன்" எனக் கூறியிருக்கிறார். அதற்கு போலீஸாரோ, "நீங்கள் நேர்மையாக பேசுகிறீர்கள். ஆனால் எங்களுக்கு ஒரு நாளைக்கு 40 கேஸ் பிடிக்கும் டார்கெட் இருக்கிறது. பிடிபடுபவர்களில் பலரும் யாராவது பெரிய இடத்து நபரின் பெயரைச் சொல்லி எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். நீங்கள் நேர்மையாக இருப்பதால் ஆவணங்களை கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்" என சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். நண்பர் இப்போது ஹெல்மெட் ரசீதுடன் ஆவணத்தை மீட்கும் பணியில் இருக்கிறார்.

அபராதம் வசூலிப்பு எப்படி?

ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டியை போக்கு வரத்து போலீஸார் வழி மறித்து அவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்ததற்கான ரசீதை கொடுக்கின் றனர். பின்னர் வாகன ஓட்டியின் ஆர்.சி. புத்தகம், ஓட்டுநர் உரிமத்தை சம்பந்தப்பட்ட போக்குவரத்து ஆய்வாளர் பெற்றுக்கொள்கிறார். அபராத தொகையை நடமாடும் நீதிமன்றத்தில் கட்டி அதற்கான ரசீதையும், ஹெல்மெட் வாங்கியதற் கான ரசீதையும் காட்டினால் போலீஸார் பறிமுதல் செய்த ஆவணங்களை திரும்ப கொடுத்துவிடுவார்கள்.

சென்னையில் 135 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு மொத்தம் 2 நடமாடும் நீதிமன்ற வாகனங்கள் மட்டுமே உள்ளன. இதனால், தண்டனைக்கு உள்ளாகும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ரூ.100 அபராதம் கட்ட வாரக்கணக்கில் அலைய வேண்டியுள்ளது. எனவே, உடனடியாக அபராதம் செலுத்தும் (ஸ்பாட் ஃபைன்) திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இத்தனை காலம் மெத்தனமாக இருந்துவிட்டு உயர் நீதிமன்ற உத்தரவு வந்ததையடுத்து விழித்துக் கொண்ட போலீஸார் கெடுபிடி காட்டட்டும். ஆனால், அதற்காக இப்படி இலக்கு வைத்து ஆட்களை பிடித்தால் சட்டத்தின் நோக்கம் நிறைவேறுமா என்பதை போலீஸார் உற்று கவனித்து திட்டங்களை வகுத்தால் நல்லது.

உதய், ஜிஎஸ்டி, நீட் தேர்வுக்கு ஒப்புதல்: ஓபிஎஸ் வெள்ளை அறிக்கை வெளியிட ஸ்டாலின் வலியுறுத்தல்


அதிமுக அரசு பல வருடங்களாக எதிர்த்து வந்த பிரச்சினைகளில் திடீரென்று ஒப்புதல் அளிக்க வேண்டிய பின்னணி குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு தமிழக அரசின் நிர்வாகத்தை யார் நடத்துகிறார்கள் என்ற மிகப் பெரிய கேள்விக்குறி எழுந்திருக்கிறது. அவர் மருத்துமனைக்கு சென்றவுடன் மாநிலம் சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சினைகளில் முடிவு எடுக்க முடியாமல் ஆட்சி நிர்வாகம் தத்தளித்துக் கொண்டிருந்தது. விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையான காவிரி பிரச்சினையில் கூட கை கட்டி நின்று வேடிக்கை பார்த்ததை அனைவரும் அறிவர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் எழுந்த தன்னெழுச்சியின் காரணமாக தமிழக அரசின் நிர்வாகத்தில் பொறுப்பு ஆளுநரே நேரடிக் கவனம் செலுத்தினார். குறிப்பாக, காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நியமித்த குழு தமிழகத்தைப் பார்வையிட வந்த போது அந்த குழுவிற்கான ஏற்பாடுகள் குறித்து 7.10.2016 அன்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் நேரடியாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை அழைத்துக் கேட்டறிந்தார். ஆளுநரின் நிர்வாக நடவடிக்கை குறித்து ஆளுநர் அலுவலகமே செய்திக் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டது.

மேலும் நிதியமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திடம் முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த அனைத்து இலாகா பொறுப்புகளையும் வழங்கி 11.10.2016 அன்று ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். நிதியமைச்சர் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கலாம் என்றும் அந்த உத்தரவில் தெளிவுபடுத்தினார்.

மாநில நிர்வாக நலன் மற்றும் மக்கள் நலன் கருதி ஆளுநரின் இந்த முடிவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானே வரவேற்று அறிக்கை வெளியிட்டேன். ஆளுநரின் இந்த உத்தரவுக்குப் பிறகு இருமுறை அமைச்சரவைக் கூட்டத்தை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டியுள்ளார். ஆனால் அந்த அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பத்திரிகை செய்திக் குறிப்புகள் ஏதும் இல்லை.

திமுக ஆட்சி நடைபெற்ற போது அமைச்சரவைக் கூட்டத்தை தலைவர் கருணாநிதி கூட்டினால், அங்கே எடுக்கப்பட்ட முடிவுகள் உடனடியாக செய்திக் குறிப்பாக வெளியிடப்படும் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடித்து வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளையே ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அதிமுக ஆட்சிக்கு ஏற்பட்டிருப்பது மட்டுமின்றி, அந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து ரகசியமாக வைத்துக் கொள்ளும் அதிமுக அரசின் போக்கு வேதனைக்குரியது.

இந்த சூழ்நிலையில்தான் மத்திய அரசின் உதய் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், மருத்துவக் கல்லூரி நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மாநில அரசு தனது பழைய கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் முற்றிலும் சரண்டர் செய்து விட்டு, அந்த திட்டங்களுக்கு எல்லாம் ஒப்புதல் தெரிவித்து உள்ளதையும் பத்திரிக்கை செய்திகள் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது.

பிரதமரை 14.6.2016 அன்று நேரில் சந்தித்த முதல்வர் ஜெயலலிதா ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில், ''9270 கோடி ரூபாய் இழப்பீட்டை உருவாக்கும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவிற்கு சம்மதிக்க முடியாது'' என்றார். ''மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தும் உதய் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்றார்.

''கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் அதே நேரத்தில் மாநிலத்தின் சமூக பொருளாதார நோக்கங்களை சிதைக்கும் மருத்துவக் கல்லூரிக்கான நீட் தேர்வு முறையை நிரந்தரமாக நீக்க வேண்டும்'' என்றும் கூறியிருந்தார். ''ஆதார் எண்களை உணவு அட்டைகளுடன் இணைக்கும் பணி மாநிலத்தில் துவங்கியிருக்கிறது. அந்தப் பணி முடிந்த பிறகுதான் உணவு அட்டைப்படியான பயனாளிகளை கண்டு பிடிக்க முடியும். ஆகவே தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்'' என்றும் கோரிக்கை வைத்தார்.

முதல்வர் ஜெயலலிதா மருத்துமனையில் சேர்க்கப்படும் முன்பு இப்படி எதிர்ப்பு தெரிவித்த நான்கு முக்கியப் பிரச்சினைகளிலும் இப்போது அதிமுக அரசு மத்திய அரசின் முடிவுகளுக்கு கை கட்டி நின்று சம்மதம் தெரிவித்துள்ளது. மத்திய அரசுடன், மாநில அரசு நிர்வாகரீதியாக நெருங்கிச் செல்வது வரவேற்புக்குரியது. ஆனால் உதய் திட்டம், நீட் தேர்வு, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் ஆகிய அனைத்தையும் அதிமுக அரசு தான் முன்பு எடுத்த நிலையை மாற்றிக் கொண்டது ஏன் என்பது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டாமா?

மக்களுக்காகவே நாங்கள் என்று கூறிக் கொள்ளும் அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒப்புக்கொண்ட உண்மைகளை ஏன் விளக்க மறுக்கிறார்கள்? இப்போது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்க அதிமுக அரசு முன் வந்துள்ளது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

முதல்வர் பொறுப்புகளைக் கவனிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசு கூட்டும் எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் படி வரி விதிப்பு குறித்து விவாதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்திற்கு நிதியமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்தும் கூட அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமே ஸ்தம்பித்து நிற்கிறது.

அரசியல் சட்டப்படி அரசு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய மிக உயர்ந்த பொறுப்புள்ள ஆளுநர் பதவிக்கு தமிழகத்தில் முழு நேர ஆளுநர் இதுவரை நியமிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலைகள் யாருக்காக உருவாக்கப்படுகின்றன? யாருடயை நிகழ்ச்சி நிரலின்படி அதிமுக ஆட்சி செயல்படுகிறது? யார் ஆட்சி செய்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படுகிறது என்ற கேள்வி ஒவ்வொரு தமிழர்கள் மனதிலும் தினம் தினம் எழுகிறது.

மாநில நிர்வாகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவும் நேரத்தில் அரசு முன்பு எதிர்ப்பு தெரிவித்த அத்தனை திட்டங்கள், சட்டங்கள் எல்லாவற்றிற்கும் அவசர அவசரமாக அனுமதியளிக்க வேண்டிய நிர்பந்தம் இந்த ஆட்சிக்கு ஏன் வந்திருக்கிறது? மாநிலத்தில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடியில் எங்கிருந்தோ குளிர் காய நினைப்பது யார்? என்ற கேள்விகள் எல்லாம் அடுக்கடுக்காக எழுகின்றன.

ஆகவே, அதிமுக அரசு பல வருடங்களாக எதிர்த்து வந்த பிரச்சினைகளில் திடீரென்று ஒப்புதல் அளிக்க வேண்டிய பின்னணி குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக வெளியிட வேண்டும்.

அதேநேரத்தில் ஜனநாயக மரபுகளுக்கு விரோதமாக, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு மாறாக, மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக, கொல்லைப்புறமாக, பினாமியாக, உண்மைகளைப் புரட்டிப் போட்டு ஆட்சி செலுத்த விரும்புகிறவர்களை, முயல் வேடம் அணிந்திருக்கும் முதலைகளை, பொதுமக்கள் அடையாளம் கண்டு விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

குறள் இனிது: தண்டிக்கத் தயங்கலாமா..?


2004-ல் வெளியான காமராசர் திரைப் படத்தில் ஒரு காட்சி.முதலமைச் சரான அவர் அலுவலகத்திற்கு அவசரமாகக் கிளம்பும் பொழுது கையில் குழந்தையுடன் ஒரு ஏழைப் பெண் ஓடி வந்து அவர் காலில் விழுந்து அழுவாள்.

‘ஐயா, என் கணவரைப் போலீஸ் பிடித்துக் கொண்டு போய் விட்டாங்க' என்பவளிடம், அவள் கணவன் என்ன தப்பு செய்தான் எனக் கேட்க, அவன் சாராயம் விற்றதாகவும், இனிமேல் சாமி சத்தியமாகச் சாராயம் விற்க மாட்டான் என்றும் சொல்வாள்.

அதற்குக் காமராசர் ‘உனக்கு வெட்கமாக இல்லையா? கொலை காரனைக் கூட மன்னிக்கலாம், ஓர் உயிர் தான் போகும். ஆனால் சாராயம் விற்றால் ஊரே நாசமாகும்' என்பார்.

அப்பெண்ணோ ‘ஐயா, அவர் இல்லைன்னா இந்தப் பச்சைக் குழந்தை பட்டினி கிடந்து சாக வேண்டியது தான்' எனக் கதறுவாள்.

லட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்ளில் மதிய உணவு அளித்த கருணை உள்ளம் கொண்டவர் அவர்.ஆனால் அந்தக் கைக்குழந்தை பட்டினி கிடக்கும் என்பதைக் கேட்டும் மனம் இரங்க வில்லை, மாறவில்லை!

சிறிதும் தயங்காமல் ‘அவனை வெளியே விட்டால் ஊரில் இருக்கும் எல்லாக் குடும்பமும்ல பட்டினி கிடக்கணும்’ எனச் சொல்லி விட்டு கிளம்பி விடுவார்!

தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரமும் கடமையும் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டிய உண்மை நிகழ்ச்சி இது!

ஐயா, அலுவலகங்களில் அனுபவப்பட்டு இருப்பீர்கள்.யாரேனும் கையூட்டுப் பெற்றோ வேறு பெருந்தவறு செய்தோ மாட்டிக் கொண்டு விட்டால் அவருக்கு உரிய தண்டனை கொடுக்க நீங்கள் முற்படும் பொழுது பலரும் குறுக்கிடுவார்கள்.

இதற்குக் காலங்காலமாய் சொல்லப்படும் காரணங்கள் தெரிந் தவைதானே! ‘ஏதோ தெரியாமல் பண்ணிட்டானுங்க. முதல் தடவை மன்னித்து விடுங்க' என்பார்கள். சிலரோ ‘பாவங்க, அவன் பிள்ளை குட்டிக்காரனுங்க. அவன் செய்த தப்புக்கு அவன் குடும்பத்தைத் தண்டிக்கக் கூடாதுங்க' என்பார்கள்! ‘ ஏங்க, இவன் ஒருத்தன் தானா தப்பு செய்கிறான்? ஏதோ போறாத காலம் மாட்டிக்கினான். மத்தவனெல்லாம் சாமர்த்தியமாக தப்பிச்சுகிறானுங்க' என்பவர்களும் உண்டு!

அல்லது, ‘இவன் ஒருத்தனைத் திருத்திட்டா எல்லாம் மாறிடுமா? அதற்கு அப்புறமும் தப்பு நடந்துகிட்டு தானுங்க இருக்கும்' என்பார்கள்!

சற்றே சிந்தித்துப் பாருங்கள். இதைப் போன்ற வாதங்கள் எதுவுமே செய்த தப்பை நியாயப்படுத்த முடியாது. செய்யக் கூடாதது என்று தெரிந்தும் செய்வதில் என்னங்க முதல் முறை?

குடும்பம் இருப்பவனைத் தண்டிப்பதில்லை என்றால் எந்தக் குற்றவாளியையாவது தண்டிக்க முடியுமா? இரண்டு, மூன்று குடும்பம் வைத்திருப்பவனை அத்தனை முறைகள் மன்னிப்பதா?

தவறு செய்தவர்களென்று தெரிந்தும் தண்டிக்காவிட்டால், குற்றங்களுக்கு முடிவேது? நல்ல பணியாளர்களைப் பாதுகாப்பது போலவே கெட்ட பணியாளர்களைத் தண்டிப்பதும் மேலாளரின் கடமை தானே? பொல்லாதவனிடம் எதற்குங்க நல்ல பெயர்?

நாட்டு மக்களைக் காத்து, அவர்களிடையே உள்ள குற்றவாளிகளைத் தண்டனைகளால் ஒழிப்பது அரசனுடைய தொழிலாகும், பழி அல்ல என்கிறார் வள்ளுவர்!

குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுஅன்று வேந்தன் தொழில் (குறள்: 549)

somaiah.veerappan@gmail.com

NEWS TODAY 27.09.2024