Tuesday, November 27, 2018

போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் கார் ஓட்டிய பேராசிரியருக்கு $5,000 அபராதம்

லோரோங் சுவானில் போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் Maserati வாகனத்தைச் செலுத்திய சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகப் பேராசிரியருக்கு அதிகபட்ச அபராதமாக ஐயாயிரம் வெள்ளி விதிக்கப்பட்டுள்ளது.

13 மாதங்கள் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.
தேசியப் பல்கலையின் இணையத்தளத்தில் ஹென்ரி இயோங் வேய் சுங் (Henry Yeung Wai Chung) புவியியல் துறைப் பேராசிரியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி, பிற்பகல் ஒன்றேகால் மணியளவில் லோரோங் சுவானில் இரண்டு தடங்கள் கொண்ட பிரேடலை நோக்கிச் செல்லும் சாலையின் வலப் பக்கத்தில் இயோங் வாகனத்தைச் செலுத்தியிருக்கிறார்.
அப்போது வேறொரு காரை முந்திச் செல்லும் முயற்சியில் அவர், போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் வாகனத்தை வேகமாகச் செலுத்தினார். அப்போது அவருடைய காரின் முன் பக்கம் சேதமடைந்தது.
ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியதற்காக அபராதத்துடன், ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
த் தண்டனையும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
Read more at Education Medical Dialogues: MBBS Migration, MBBS Transfer: What MCI Guidelines say https://education.medicaldialogues.in/migrationtransfer-of-mbbs-students-what-mci-guidelines-say/

போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் கார் ஓட்டிய பேராசிரியருக்கு $5,000 அபராதம்

லோரோங் சுவானில் போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் Maserati வாகனத்தைச் செலுத்திய சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகப் பேராசிரியருக்கு அதிகபட்ச அபராதமாக ஐயாயிரம் வெள்ளி விதிக்கப்பட்டுள்ளது.
13 மாதங்கள் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.
தேசியப் பல்கலையின் இணையத்தளத்தில் ஹென்ரி இயோங் வேய் சுங் (Henry Yeung Wai Chung) புவியியல் துறைப் பேராசிரியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி, பிற்பகல் ஒன்றேகால் மணியளவில் லோரோங் சுவானில் இரண்டு தடங்கள் கொண்ட பிரேடலை நோக்கிச் செல்லும் சாலையின் வலப் பக்கத்தில் இயோங் வாகனத்தைச் செலுத்தியிருக்கிறார்.
அப்போது வேறொரு காரை முந்திச் செல்லும் முயற்சியில் அவர், போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் வாகனத்தை வேகமாகச் செலுத்தினார். அப்போது அவருடைய காரின் முன் பக்கம் சேதமடைந்தது.
ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியதற்காக அபராதத்துடன், ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.

Natural calamity

15 dangerous mobile apps

சென்னை பெருவெள்ளத்துக்கு இருந்த ஆதரவு ‘கஜா’ புயல் பாதித்த டெல்டாவுக்கு இல்லாமல் போனது ஏன்?

Published : 26 Nov 2018 10:15 IST

நெல்லை ஜெனா





தமிழகத்தில் மீண்டும் ஒரு புயல் உலுக்கி எடுத்து இருக்கிறது. தானே, சென்னை பெருவெள்ளம், ஒக்கி புயலை தொடர்ந்து ‘கஜா’ புயல் தமிழகத்தை பதம் பார்த்துள்ளது. கடலூர்,சென்னை, கன்னியாகுமரி மாவட்டத்தை தொடர்ந்து தற்போது இயற்கையின் கோரப் பசிக்கு பலியாகியுள்ளது டெல்டா மாவட்டங்கள்.

குறிப்பாக தமிழக கடல்பகுதியில் முனைப்பகுதியாக இருக்கும் வேதாரண்யம் பகுதியில் பாதிப்பு அதிகம். வேதாரண்யம் தொடங்கி பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராமபட்டினம் வரையிலும் மிக மோசமான பாதிப்பு. வேதாரண்யத்தின் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் புரட்டி போட்டுள்ளது கஜா.

உணவு, இருப்பிடம், மின்சாரம், தண்ணீர் இன்றி பல நாட்களாக மக்கள் பரிதவித்து வருகின்றனர். அதைவிட வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற எதிர்கால மிரட்டல் அந்த மக்களை மிகுந்த மன சோர்வுக்கு ஆளாக்கியுள்ளது.


பெரும்பாலும் விவசாயப் பெருங்குடி மக்கள். நெல்லை தவிர கடலோரப்பகுதி என்பதால் தென்னை விவசாயம் நடைபெறும் பகுதி. அவ்வப்போது செலவுக்காக நெல்லை பயிரிடும் விவசாயிகள் குழந்தைகளின் படிப்பு, திருமணச் செலவு, எதிர்கால தேவை என அனைத்துக்கும் நம்பி இருந்தது இந்த தென்னை மரங்களை தான்.

குழந்தையை போல பார்த்து பார்த்த வளர்த்த தென்னை ஒரு நொடியில் விழுந்துவிட்டதால் எதிர்காலம் மக்களை வெகுவாக மிரட்டுகிறது. வேறு எந்த தொழிலும் இல்லாத பூமி, விவசாயம் மட்டுமே ஒரே வாழ்வாதாரம். சோறுடைத்த சோழ வளநாடு இப்போது தேம்பி தேம்பி அழுகிறது. ஆனால் டெல்டாவின் அழுகுரல் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு கேட்கேவில்லையோ என்றே எண்ண தோன்றுகிறது. சென்னை பெருவெள்ளத்துக்கு தமிழகம் காட்டியே ஒற்றுமையும், ஆதரவும் அந்த அளவுக்கு டெல்டா பக்கம் திரும்பவில்லையோ?அதற்கு சில காரணங்களும் இருக்கதான் செய்கின்றன.

சென்னையை தெரிந்த அளவுக்கு, சென்னையுடன் இருக்கும் தொடர்பு அளவுக்கு, சென்னையை பற்றிய புரிதல் அளவுக்கு தமிழகத்தின் மற்ற பகுதிகளை பற்றி பெரும்பாலானவர்களுக்கு புரிதல் குறைவாகவே இருக்கும். சென்னை என்பது ஒரு பகுதியல்ல.

தமிழகத்தின் பல பகுதி மக்களும் சேர்ந்து உருவாக்கிய நகரம். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு சொந்தக்காரர்களும், உறவினர்களும் வசிக்கும் இடம் சென்னை. ஒவ்வொரு தமிழர்களும் வந்து செல்லும் இடமாக சென்னை உள்ளது. தாங்கள் வாழும் பகுதியை தவிர மற்ற பகுதிகளை பற்றி தெரியாத தமிழர்களுக்கும் சென்னை வந்துபோகும் இடமாக உள்ளது.

இதனால் தான் சென்னைக்கு பாதிப்பு என்றதும் ஒட்டுமொத்த தமிழகமும், ஓடோடி வந்தது; உறவாக பார்த்தது. பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிகள் பொருளாக, பணமாக குவிந்தது. மீட்பு பணிக்காக ஆயிரக்கணக்கானோர் சென்னையை நோக்கி படையெடுத்தனர். பெருவெள்ளத்தை, கடுமையான போராட்டத்தை சரியான தைரியத்துடன் எளிதாக எதிர்கொண்டது சென்னை.

ஆனால் டெல்டாவிலோ நிலைமை முற்லும் வேறானது. சென்னையை போன்று எந்த தொடர்பு அந்த மக்களுக்கு இல்லை. மற்ற பகுதி மக்களுக்கு டெல்டாவை பற்றிய புரிதலும் இல்லை. இதனால் தான் கஜா பாதிப்பிக்கு பின் ஓடோடி வந்தவர்கள், உதவி செய்தவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை.பாதிப்பும் சரி, அதை எதிர்கொள்ளும் சூழலும் சென்னையை ஒப்பிடுகையில் டெல்டாவில் மோசம்.

தொழில் சார்ந்த சென்னையில் நிறுவனங்கள்,தொழிலாளர்கள், உரிமையாளர்கள் என அனைவருக்கும் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஒரு சில மாதங்களில் சரி செய்து விட முடிந்தது. ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை இடுகட்ட அரசுமட்டுமின்றி அவர்கள் பணிபுரியம் நிறுவனங்களும் முன் வந்தன. சம்பளமாக, சலுகையாக, பணமாக, பொருள் உதவியாக வந்து குவிந்தன.

ஊழியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு கடமையாக இல்லாவிட்டாலும் தார்மீக ரீதியில் உதவி செய்ய நிறுவனங்கள் முன் வந்தன. அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுகட்ட அரசும் பலவிதங்களில் முன் வந்தது. ஆனால் அப்பாவி விவசாயிகளின் நிலையோ அப்படி இல்லையே. எந்த நிறுவனத்திலும் அவர்கள் வேலை செய்யவில்லையே; அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை எந்த நிறுவனம் ஈடுகட்ட முடியும்.

சென்னை பெருவெள்ளத்தில் இருசக்கர வாகனங்கள், கார்கள், நிறுவனங்கள், இயந்திரங்கள் என ஒவ்வொன்றுக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருந்ததால் மிக கடுமையான விதிமுறைகளை சற்றளவு தளர்த்தி இழப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூட தந்து உதவின.பெரிய நகரத்தில், தலைநகரத்தில், தொழில் சார்ந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த வசதி இருந்ததே?

ஆனால் விவசாயத்தை உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்த விவசாயிகளுக்கு அரசு சார்ந்த பயிர் இன்சூரன்ஸ் தவிர எந்த இன்சூரஸூம் வராதே; அவர்கள் என்ன செய்வார்கள். சென்னை பெருவெள்ளத்தின்போது சில ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இன்சூரன்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் கஜா பாதித்த டெல்டாவிலோ அரசு பயிர் காப்பீடு தவிர 200 கோடி ரூபாய் அளவுக்கு கூட இன்சூரன்ஸ் தொகை கொடுக்க வேண்டிய தேவை இருக்காது என்கிறது இன்சூரன்ஸ் வட்டாரங்கள்.

இன்சூரன்ஸ் தொகை கூட கட்ட முடியாத ஏழை விவசாயி, என்ன தான் செய்ய முடியும்? அவர்களுக்கு அரசு கணக்கிட்டு கொடுக்கும் இழப்பீட்டை தவிர வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது. பல ஆண்டுகளாக வளர்த்த தென்னையும், சவுக்கும், வேறு பல மரங்களும் முறிந்து விழ, வாழ்வாதாரத்தை தொலைத்து விட்ட வேதனை அந்த மக்களை உலுக்கி எடுக்கிறது.

தை பிறந்தால் திருமணம் ஏற்பாடுகள் செய்து வந்த குடும்பத்துக்கு இருந்த நிதி ஆதாரம் முழுவதையும் கஜா கபளீகரம் செய்துவிட விரக்தியின் விளிம்புக்கே சென்று விட்ட குடும்பங்கள் பல.இந்த இயற்கையின் தாக்குதலில் இருந்து எழுந்து நிற்க இன்னும் எத்தனை ஆண்டுகள் போராட வேண்டுமோ என்ற மலைப்பு டெல்டா மக்களை புரட்டி எடுக்கிறது. என்ன செய்யப்போகிறோம்? என்ற ஏக்கம் அவர்களை வாட்டி வதைக்கிறது.

இந்த வேதனையும், விரக்தியும் தான் அவர்களை, அரசியல்வாதிகள் உட்பட யாரும் ஊருக்குள்ளேயே வர வேண்டாம் என்று விரட்டும் மனநிலைக்கு தள்ளியுள்ளது. தண்ணீர் இன்றி, விவசாயம் இன்றி, மாற்று தொழில் இன்றி எப்படியாகினும் விவசாயம் செய்து தீர வேண்டும் என போராடி வந்த விவசாய பெருங்குடி மக்கள், இன்று ஒரே நாளில் இயற்கையின் கோரப்பசிக்கு ஆளாகி தவிக்கிறார்கள். இயற்கைக்கு கூட அவர்கள் மீது கருணை இல்லையா? இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ டெல்டா மீண்டும் எழுந்து நிற்க.
அவசரம் வேண்டாமே

By எஸ்ஏ. முத்துபாரதி | Published on : 26th November 2018 03:14 AM

காலைநேரம். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர் பெரும்பாலோர் கடைசி நேரத்தில்தான் கிளம்புவார்கள். ஒருவேளை பிள்ளைகள் பள்ளிப் பேருந்தில் செல்பவர்கள் என்றால், குறிப்பிட்ட நேரத்திற்குள்அந்த நிறுத்தத்தில் கொண்டு விட வேண்டும். இல்லையெனில் பேருந்து சென்று விடும். பின்னர் பெற்றோர்கள்தான் பள்ளியில் கொண்டுவிட நேரிடும். 

பள்ளிப் பேருந்து ஆனாலும் சரி, வேறு வாகனங்களில் பெற்றோரே அழைத்துச் சென்றாலும் சரி கடைசி நேரத்தில் கிளம்பாமல் சற்று முன்கூட்டியே கிளம்புவது நன்மை தருவதாக அமையும்.
காலையில் வேலைக்குச் செல்லும் தந்தை, தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டுச் வேலைக்குச் செல்லும் வீடுகளில் சற்று நிதானமாக கிளம்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் சில வீடுகளில் சரியாகத் திட்டமிடாமல் கடைசி நேர பரபரப்பு ஏற்பட்டு சூழலை நிம்மதியில்லாமல் செய்து விடுவதும் நடந்து கொண்டுதான்இருக்கிறது. 

ஒருசில வீடுகளில் குழந்தைகளின் தந்தை அதிகாலையில் சென்றுவிட்டிருக்கலாம். வேலைக்கு அப்பா சென்றுவிட, வீட்டில் இருக்கும் அம்மா இருசக்கரவாகனத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு கொண்டு விடுவதும் உண்டு. இந்த நிலையில் பெரும்பாலும் பரபரப்பாகத் தயாராகி செல்லும் சூழலே ஏற்படும்.

அப்படிச் செல்லும் பெண்மணிகளை அடிக்கடி நாம் சாலையில் கண்டிருக்கலாம். இரு சக்கரவாகனத்தில் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு வேகமாகச் சென்று கொண்டிருப்பார்கள். மணி 8.55 எனும் பொழுது, அவர்களின் வேகத்திற்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ளலாம். 9.00 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும் என்கிற விதி இருக்கலாம். இதனால் வளைவுகளில் திரும்பும் பொழுது "இன்டிகேட்டர்' போடாமலும், கையைக் காண்பிக்காமலும் திரும்பிக் கொண்டு பரபரப்போடு செல்வார்கள்.

பின்னால் வண்டியில் வரும் ஒரு சிலர், அவர்களின் அவசரத்தையும், வண்டியில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளையும் பார்த்து சற்று அவர்களுக்கு வழிவிட்டு தங்கள் வாகனத்தை இயக்குவார்கள். ஆனால், அனைவருக்கும் இந்தப் புரிதல் இருக்குமா?அப்படி இல்லாதவர்களால்தான் விபத்துகள் நடக்கின்றன. 

தனது மனைவிக்கு வண்டி வாங்கித் தருவதன் மூலம் தனக்கான வேலைகள் குறைகின்றன என்று சில கணவன்மார்கள் எண்ணுகின்றனர். ஆனால், அவர்கள் முறையாக வண்டி ஓட்டக் கற்றுக்கொண்டு ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால் நல்லது. ஆனால், பெரும்பாலோர் தாங்கள் சிறுவயதில் சைக்கிள் ஓட்டிய அனுபவத்தை இரு சக்கர வாகனம் ஓட்டி விடலாம் என்கிற புரிதலில் இருக்கிறார்கள். அதிகரித்து வரும் வாகன விபத்துகள் பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டிகளால்தான் நடக்கிறது.
பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றியேஅவற்றை இயக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. மற்றொன்று, தற்போது பெண்களுக்கு எனத் தயாராகும் இரு சக்கர வாகனங்களின் வேகம் ஆண்கள் ஓட்டிச்செல்லும் வாகனங்களின் "சிசி' ("கியூபிக் கெபாசிட்டி')யைவிட அதிகமாக இருக்கிறது. 

சில நேரங்களில் பெண்கள் தங்கள் வாகனங்களில் செல்லும்போது சாலையில் பலரையும் ஓவர்டேக் செய்து கொண்டு சென்று விடுகிறார்கள். வேகம் தவறல்ல. பாதுகாப்பு முக்கியம்.
இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு அனைவரும் அதிகாலையில் எழுந்திருப்பதுதான். இன்றைய காலகட்டத்தில் இரவு நேரம் தொலைக்காட்சி, முகநூல், கட்செவி அஞ்சல் ("வாட்ஸ் அப்') போன்றவற்றில் மூழ்கி, தாமதமாகப் படுத்து, காலையில் தாமதாக ஆரம்பிக்கிறதுஅன்றைய பரபரப்பான வாழ்க்கை. அதைவிடுத்து எல்லா வேலைகளையும் முடித்து பத்து மணிக்குப் படுத்து, காலை ஐந்து மணிக்கு எழுந்தால் அன்றைய தினம் சிறப்பாக இருப்பதை உணர முடியும். 
 
பெற்றோர் இப்படிச்செய்வதுதான்அவர்களின் குழந்தைகளுக்கும் நல்ல வழிகாட்டுதலாக அமையும். குழந்தைகளுக்குத் தூங்கும் நேரம் சற்று அதிகமாகத் தேவைப்படுவதால் குறிப்பிட்ட வயதுவரை ஆறுமணிவரை அனுமதித்து, பின்னர் படிப்படியாக ஐந்துமணிக்கு எழும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். 

இல்லாவிடில் பரபரப்புதான். தங்கள்பிள்ளையை குறிப்பிட்டநேரத்தில் பள்ளிக்கு கொண்டுவிட்டால்போதும் என்கிற மனப்பான்மையில் பெற்றோர் இருப்பார்கள். அதனால் சற்று விதிமீறல் செய்யவும் துணிந்து விடுகின்றனர். ஒருவழிப்பாதையில் செல்வது, தலைக்கவசம்அணியாமல்செல்வது, சிக்னல்களை மதிக்காமல்செல்வது, என விருப்பம்போல் செயல்படுகின்றனர். 
 
ஒவ்வொரு வருடமும் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாரம் கொண்டாடுகிறோம். பின்னர் சாலை விதிகளை பின்பற்ற மறந்து விடுகிறோம். அதனால்தான் ஆண்டுதோறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. எனவே, மக்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். தாங்கள் கடைப்பிடிப்பதோடு தங்களின் அடுத்த தலைமுறையினரையுமம் கடைப்பிடிக்க வைக்கவேண்டும்.

பெற்றோர் தவறு செய்துவிட்டுக் குழந்தைகளைத் தவறு செய்யக்கூடாதுஎனச் சொல்வது எப்படி ஏற்புடையதாகும்? எனவே, பெற்றோர் நல்வழிகளைக் கடைப்பிடித்துப் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். அப்பொழுதுதான் பிள்ளைகள் பெற்றோரின் பழக்கங்களைத் தவறாமல் கடைப்பிடிப்பார்கள்.
இதை ஒவ்வொருவரும் மனத்தில் கொண்டு செயல்பட்டால் சமுதாயத்தில் எவ்விதத் தவறும் நடைபெறாமல் இருக்கும். ஒரு ஆரோக்கியமானநல்ல சமூகம் உண்டாகும். எந்த சூழலிலும் பெற்றோர் அவசரப்படாமல் சற்று நிதானமாகச் செயல்பட்டால் சாலையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் எவ்வித விபத்தும் நடைபெறாமல் தடுக்க இயலும்.

நிவாரணம் மட்டுமே போதாது!


By ஆசிரியர் | Published on : 26th November 2018 03:12 AM

"புயலுக்குப் பின்னே அமைதி' என்று கூறுவார்கள். ஆனால், "கஜா' புயல் அடித்து ஓய்ந்து 10 நாள்கள் கடந்த பின்னும்கூட, இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. போதாக்குறைக்கு அவ்வப்போது மழையும் பெய்து கொண்டிருப்பதால் நிவாரணப் பணிகளையும் முழு மூச்சில் நடத்த முடியாத சூழல்தான் காணப்படுகிறது. இப்படியொரு பேரழிவு, இதற்கு முன்னால் தமிழகத்தைத் தாக்கிய தானே, ஒக்கி, வர்தா புயல்களின்போதுகூட இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக, மத்திய குழுவினர் தமிழகம் வந்திருக்கிறார்கள். கடந்த நவம்பர் 16-ஆம் தேதி வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அவர்கள் நேரில் சென்று புயலால் ஏற்பட்டிருக்கும் இழப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். இன்னொருபுறம், சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, மின் கம்பங்கள் சீரமைக்கும் பணி, அவ்வப்போது பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல் நடந்து வருகிறது.


கடந்த 2004 டிசம்பர் 26-ஆம் தேதி தமிழகத்தைத் தாக்கிய ஆழிப்பேரலையின்போதுகூட இப்போதைய கஜா புயல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை நாகை, திருவாரூர் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளவில்லை. பல லட்சம் மதிப்புள்ள படகுகள் உடைந்து சிதறியிருக்கின்றன. பல லட்சம் மதிப்புள்ள வலைகள் கிழிந்துபோய் காணப்படுகின்றன. பல படகுகளில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் இருந்த இடம் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. என்னதான் இழப்பீடு வழங்கப்பட்டாலும்கூட, நாகை, திருவாரூர் மாவட்ட மீனவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப பல வருடங்கள் ஆகும். குடிசை உள்ளிட்ட அவர்களது அனைத்து உடைமைகளையும் கஜா புயல் கபளீகரம் செய்துவிட்டிருக்கிறது.


கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் இன்னொரு முக்கியமான தொழில் உப்பு உற்பத்தி. கடந்த அக்டோபர் மாதமே உப்பு உற்பத்தி முடிந்து குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையில்தான் கஜா புயல் நாகை, திருவாரூர் மாவட்டங்களைத் தாக்கியது. ஒருசில மணி நேரங்களில் மலை போல் உப்பளங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த உப்பு, புயல் காற்றால் அடித்துச் செல்லப்பட்டதால் 40 நாள் உழைப்பும் சில நொடிகளில் வீணானது. ஏற்றுமதிக்குத் தயாராக, ஏறத்தாழ 4,000 ஹெக்டேர் பரப்பில் வைத்திருந்த உப்பு அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.

2,000 ஹெக்டேர் நிலப்பரப்பிலுள்ள மாமரங்கள் வேரோடு சாய்ந்திருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுக்கும் மேலான உழைப்பு சில மணி நேரங்களில் வீணானது. இந்த இழப்பின் தாக்கம், குறைந்தது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும் என்பதுதான் மிகப்பெரிய சோகம். மாமரங்கள் மட்டுமல்ல, எல்லா தரப்பு விவசாயிகளும் ஒட்டுமொத்தமாகத் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டிருக்கும் நிலைமை காணப்படுகிறது. மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டிருப்பது தென்னை மரங்கள்தான் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

வேதாரண்யத்தில் தொடங்கி, பேராவூரணி வரையிலான பகுதிதான் இந்தியாவின் தலைசிறந்த தேங்காய் களஞ்சியம் என்று கூற வேண்டும். இந்தியாவின் மொத்தத் தேவையில் குறைந்தது 30% முதல் 40% தேங்காய் இந்தப் பகுதியில்தான் உற்பத்தியாகிறது. வேதாரண்யம், கருப்பம்புலம், தொண்டியக்காடு, இடும்பவனம், தில்லை விளாகம், ஜாம்பவானோடை, முத்துப்பேட்டை, செம்படவங்காடு, தம்பிக்கோட்டை, மரவக்காடு, அதிராமப்பட்டினம், மல்லிப்பட்டினம், பேராவூரணி ஆகிய பகுதிகளில் இருந்த அத்தனை தென்னை மரங்களும் வேரோடு சாய்க்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புதான் எல்லாவற்றிலும் மிகப் பெரிய பாதிப்பு என்று கருத வேண்டும்.
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் குறைந்தது ஐந்தாறு தென்னை மரங்கள் காணப்படும். ஆயிரக்கணக்கில் மரங்கள் உள்ள தென்னந்தோப்பு வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்றால், நூற்றுக்கணக்கில் தென்னை மரம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நான்கு இலக்க அளவில்தான் காணப்படும். மற்றவர்கள் எல்லாம் நூற்றுக்கும் குறைவான, சொல்லப்போனால், 20-க்கும் குறைவான தென்னை மரங்களை வைத்திருப்பவர்கள். அதனால், பெரும்பாலான குடும்பங்களின் வாழ்வாதாரமே தென்னையிலிருந்து கிடைக்கும் வருவாய்தான். இப்போது அந்த வருவாயை இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள் பலரும்.

நிவாரணம் என்ற பெயரில் அரசு இழப்பீடு வழங்குவது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக மீட்டுக் கொடுத்துவிடாது. அதனால், ஒவ்வொரு குடும்பத்தினரும் இழந்திருக்கும் தென்னை மரங்களுக்கு ஈடாக இரண்டு ஆண்டுகளில் பலன் தரும் "ஹைப்ரிட்' தென்னங்கன்றுகளை அவர்களுக்கு வழங்குவதும், அவற்றை பராமரிப்பதற்கு ஒரு தொகையை வழங்குவதும்தான் புத்திசாலித்தனமான, திட்டமிட்ட நிவாரணமாக இருக்கும். பள்ளிக் கட்டணங்களை செலுத்தும் நிலையில் பெற்றோர் இல்லாததால் குழந்தைகளின் படிப்பு தடை படக்கூடும். அத்தனை வணிகர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பணப்புழக்கம் இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்தெல்லாம் மீண்டு சகஜ வாழ்க்கைக்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் திரும்பப் போவது எப்போது என்று புரியவில்லை.

உடனடி நிவாரணம் அத்தியாவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மறுவாழ்வு பெற்று, பாதிக்கப்பட்ட பகுதியினர் சகஜ வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு, தொலைநோக்குப் பார்வையுடன் அரசு திட்டமிட்டாக வேண்டும்.
'ஹெல்மெட்' அணியாத 3,400 பேருக்கு அபராதம்

Added : நவ 27, 2018 02:44


சென்னை: 'ஹெல்மெட்' அணியாமல், டூ - வீலரில் பயணித்த, 3,430 பேருக்கு, கடந்த ஒரு வாரத்தில் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், அதிகரிக்கும் விபத்துகளை குறைக்க, போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.அந்த வகையில், இந்த மாதம், 12ம் தேதியில் இருந்து, 18ம் தேதி வரை, ஹெல்மெட் அணியாமல் பயணித்த, 3,430 பேருக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.அவர்களில், 2,677 பேர், டிரைவர்; 753 பேர் பின்னால் அமர்ந்திருந்தவர்கள்.அதே போல, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிய, 1,081 பேர்; அதிக எடையுடன் வாகனம் ஓட்டிய, 668 பேர்; சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிய, 228 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், அதிக ஆட்களை ஏற்றிய, 562 பேர்; அதிவேகத்தில் பயணித்த, 324 பேர்; சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய, 1,320 பேர்; சிக்னலை மீறிய, 167 பேரிடமும், அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.மேலும், டேஞ்சர் லைட் இல்லாத, 292; வெள்ளை, மஞ்சள் ரிப்ௌக்டர் ஒட்டாத, 440; பாதுகாப்பு கம்பிகள் இல்லாத, 99 வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


முதன்மை கல்வி அதிகாரிகள் மாற்றம்

Added : நவ 26, 2018 23:52

சென்னை: தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர், சுபாஷினி, மதுரை முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, மாவட்ட கல்வி அலுவலர், முருகேசன், பதவி உயர்வு பெற்று, துாத்துக்குடி முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி, மாவட்ட கல்வி அலுவலர், ஜெயராஜ், பதவி உயர்வுடன், தமிழ்நாடு பாடநுால் கழக துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், மாவட்ட கல்வி அலுவலர், சாந்தா, பதவி உயர்வு பெற்று, தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்

விமானத்தில் இளைஞர் விபரீத விளையாட்டு

Added : நவ 26, 2018 20:10




கோல்கட்டா,: மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவை சேர்ந்தவர், யோகவேதாந்த் போத்தார், 21. கோல்கட்டாவிலிருந்து, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை செல்வதற்காக, ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் முன் பதிவு செய்து இருந்தார்.

நேற்று காலை, 8:15 க்கு விமானம் புறப்பட வேண்டும். காலை, 7:30க்கு, விமானத்திற்குள் ஏறிய போத்தார், தன் முகத்தை, கைக்குட்டையால் மூடினார். பின், மொபைலில் ஒரு, 'செல்பி' எடுத்து, அதன் பட விளக்கத்தில், 'விமானத்தில் பயங்கரவாதி; பெண்களை கொல்லப்போகிறேன்' என எழுதி, தன் நண்பர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பினார்.

இதை கவனித்த, போத்தாரின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண், இது குறித்து, உடனடியாக, விமான பணிப் பெண்களிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள், விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதைஅடுத்து, அங்கு வந்த, சி.ஐ.எஸ்.எப்., எனப்டும், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், போத்தாரை கைது செய்தனர்.

அவர்களிடம், தான் விளையாட்டிற்காக அப்படி செய்ததாகவும், தன்னை விடுவிக்கும்படியும், போத்தார் கெஞ்சினார். இதையடுத்து, போத்தாரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அதிகாரிகள், அவரிடம் இருந்த, அடையாள ஆவணங்களை ஆராய்ந்த பின், அவரை விடுவித்தனர்.இதையடுத்து, அந்த விமானம், தாமதமாக புறப்பட்டு சென்றது. போத்தாரும், அதே விமானத்தில், மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மாவட்ட செய்திகள்

வீட்டுமனை வரைமுறை சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் சேலம் மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது

வீட்டுமனை வரைமுறை சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சேலம் மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பதிவு: நவம்பர் 27, 2018 04:45 AM
சேலம்,


சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரசு. வெள்ளி வியாபாரி. இவருக்கு அன்னதானபட்டி பகுதியில் உள்ள அவருடைய தாயார் நிலம் சமீபத்தில் கிடைத்தது. இந்த நிலத்துக்கு வீட்டுமனை அங்கீகாரம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். இதையடுத்து சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் 3-வது தளத்தில் உள்ள நகரமைப்பு பிரிவில், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளது, எனவே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்துமாறு, வெள்ளி வியாபாரி அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து அவர் கட்டணமாக ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-யை செலுத்தினார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சியில் உள்ள நகரமைப்புபிரிவு அலுவலகத்துக்கு வீட்டுமனை வரைமுறை சான்றிதழ் பெற அவர் சென்றார். அப்போது அங்கிருந்த செயற்பொறியாளர் கலைவாணியை அரசு தொடர்புகொண்டு சான்றிதழ் குறித்து கேட்டார். அதற்கு கலைவாணி, அனுமதி சான்றிதழ் தயாராகிவிட்டது, ஆனால் இதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கூறினார். இதைக்கேட்ட வெள்ளி வியாபாரி சான்றிதழ் பெற லஞ்ச பணம் தருவதாக கலைவாணியிடம் ஒப்புக்கொண்டார்.


இதனிடையே லஞ்சம் கொடுக்க மனமில்லாத அரசு இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை அவ, நகரமைப்பு பிரிவில் இருந்த செயற்பொறியாளர் கலைவாணியிடம் கொடுத்தார். அப்போது கலைவாணி லஞ்ச பணத்தை சாமர்த்தியமாக தன்னுடைய கையால் வாங்காமல், தனது உதவியாளர் உஸ்மானிடம் கொடுங்கள் என அரசுவிடம் தெரிவித்தார்.


இதைத்தொடர்ந்து அரசு ரூ.5 ஆயிரத்தை கலைவாணியின் உதவியாளர் உஸ்மானிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையிலான போலீசார் கையும் களவுமாக உஸ்மானை பிடித்தனர். பின்னர் போலீசார் அலுவலகத்தில் உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே செல்லாத வகையில் கதவை பூட்டினர். இதையடுத்து அங்கிருந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சான்றிதழ் பெற வந்தோர் என அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.


இதைத்தொடர்ந்து உஸ்மானிடம் விசாரித்தபோது தான் லஞ்ச பணம் கேட்கவில்லை எனவும், செயற்பொறியாளர் கலைவாணி தான் லஞ்ச பணத்தை வாங்க கூறினார் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்த ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் கணினிகள் மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கலைவாணி, உஸ்மான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து சென்றனர். மேலும் பெண் அதிகாரி கலைவாணி செயற்பொறியாளராக நகரமைப்பு பிரிவில் சேர்ந்த காலத்தில் இருந்து யார், யாரிடம் லஞ்சம் வாங்கினார் என்றும், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதுவரை கலைவாணி 1,200 பேருக்கு வீட்டுமனை அங்கீகார சான்றிதழ் வழங்கியுள்ளதும், அவர்களில் சிலரிடம் தலா ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நேற்று மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலையங்கம்

சிறப்பு நிதியை கேளுங்கள்




தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் திருச்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளை சமீபத்தில் வீசிய ‘கஜா’ கோரப்புயல் புரட்டிப் போட்டு விட்டது.

நவம்பர் 27 2018, 03:30

12 நாட்களாகியும் இன்னும் இந்தப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இந்தநிலையில், தமிழக அரசு சார்பில் உடனடியாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து ரூ.15 ஆயிரம் கோடி நிதி உதவி கோரியுள்ளார். வெள்ளச்சேதத்தை பார்வையிட மத்தியகுழு வந்தது. எல்லா இடங்களையும் பார்வையிட்டு இன்று டெல்லி செல்கிறது. இந்தக்குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு பாதிக்கப்பட்ட மக்களின் வலியையும், துயரத்தையும் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. எங்கள் கற்பனைக்கும் மீறிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் தமிழக அரசு நிதிகோருவதும், மத்திய குழு வருவதும் வாடிக்கையான ஒரு நிகழ்வுதான். ஆனால், ஒரு நேரமும் தமிழக அரசு கோரிய நிதிக்கு பக்கத்தில்கூட மத்திய அரசாங்கத்தின் நிதி வந்து சேரவில்லை. 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பயங்கர வெள்ளச்சேதத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.25,912 கோடியே 45 லட்சம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசாங்கம் கொடுத்தது ரூ.1,759 கோடியே 55 லட்சம்தான். 2016-ம் ஆண்டு வார்தா புயலோடு ரூ.22,573 கோடியே 26 லட்சம் கோரப்பட்டது. ஆனால் மத்திய அரசாங்கம் கொடுத்தது ரூ.1,793 கோடியே 63 லட்சம்தான். இதுபோல கடந்த ஆண்டு கோரத்தாண்டவம் ஆடிய ‘ஒகி’ புயலுக்காக ரூ.9,302 கோடி கோரப்பட்டது. ஆனால், மத்திய அரசாங்கம் வழங்கியது ரூ.413 கோடியே 55 லட்சம்தான். இப்போது ரூ.15 ஆயிரம் கோடி தேவையான ஒன்று. ஆனால், மத்திய அரசாங்கம் மாநில தேசிய பேரிடர் மீட்புநிதியில் இருந்தும், தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும் மட்டும் பணம் ஒதுக்கினால் நாம் கேட்கும் இவ்வளவு தொகையை நிச்சயமாக பெறமுடியாது.

இந்த ஆண்டுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.786 கோடியைத்தான் நிதிக்குழு ஒதுக்கியிருக்கிறது. இதில் 90 சதவீத தொகை மத்திய அரசாங்கமும், 10 சதவீததொகை மாநில அரசும் பங்கிட்டுக் கொள்ளவேண்டும். இந்தத் தொகையில் ஏற்கனவே சில ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகையைத்தான் மத்திய அரசாங்கம் ஒதுக்க முடியும். இதுபோல, தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும் கொஞ்சம் தொகையைத்தான் வழங்க முடியும். மேலும் மத்திய அரசாங்கத்தின் சில துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து அவர்கள் ஒதுக்கீடு செய்யமுடியும். ஆனால், இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவான தொகையாகத்தான் இருக்கும். எடுத்துக்காட்டாக, ‘வார்தா’ புயல் சமயத்தில் தேசிய ஊரக குடிநீர் திட்டத்திலிருந்து ரூ.2 கோடியே 6 லட்சம்தான் கொடுத்தார்கள். எனவே, பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும், மத்திய அரசாங்கத்துறைகளில் இருந்தும் ஒதுக்கீடு பெறுவதோடு மட்டுமல்லாமல், பிரதமரிடம் இந்தப்புயலின் கோரத்தை எடுத்துக்கூறி, இதற்கென தனியாக சிறப்பு நிதி கேட்பதுதான் சாலச்சிறந்ததாகும். மத்தியகுழு அறிக்கை நிச்சயமாக புயலின் கோரத்தை வெளிக்காட்டும் வகையில் இருக்கும். ஆனால், ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்பதற்கேற்ப, பேரிடர் மீட்பு நிதியை மட்டும் எதிர்பார்த்தால் போதிய நிதி கிடைக்காது. பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து ‘கஜா’புயலுக்கு சிறப்பு நிவாரண நிதியைப்பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.
‘No exemption from poll duty’, teacher kills self

Ashish.Mehta@timesgroup.com

Jaipur:27.11.2018

Nearly 17 days after a physical training instructor (PTI) posted at a government school near Hanumangarh committed suicide, police are investigating the motive after a suicide note purportedly written by the teacher went viral.

The suicide note reveals that the teacher committed suicide after he failed to get exemption from election duty as a booth level officer (BLO). Police have now taken the suicide note on record and are verifying if it is authentic.

Police identified the PTI as Sohan Singh, who had committed suicide at his house in Sector 6 at Hanumangarh Junction on November 9. Police say they did recover any suicide note from the spot at that time.

However, Singh’s family members alleged that they had the suicide note but that the police refused to acknowledge it at that time. On Sunday, the suicide note went viral, after which the family members again requested the police to take the suicide note on record.

“Sohan Singh has stated in the suicide note that since December 2017, he had been requesting the local election officer to exempt him from election duty as a booth level officer. Singh says that the person earlier assigned this duty was injured and that he was assured by the authorities that when that person is fit, Singh would be exempted from the duty,” a senior police officer said on Monday.
WhatsApp ‘XXX’ group admin held in Mumbai

Added Woman To It Without Her Consent

Ahmed.Ali@timesgroup.com

Mumbai:27.11.2018

In a first for Mumbai, a WhatsApp group administrator has been arrested for adding a woman’s mobile number without her consent to a group that shares pornonographic content.

Mustaq Ali Shaikh, 24, a carpenter from Bengal, is now in police custody, arrested under IPC sections for outraging the modesty of a woman, and under 67 and 67-A of the IT Act. Police, who made the arrest on Thursday, said this was a lesson for all administrators to be cautious on who they add and what is posted.

Investigating officer Maruti Shelke said the complainant, a housewife, said her number was added to the group, ‘Triple XXX’, in September. “She thought it was a prank by friends but found pornographic photos and videos flooding the group. She then lodged a complaint,” said Shelke.

In her complaint, she said that when she looked at the administrator and 12 group members’ numbers in the morning, she realised she did not know any of them. Senior inspector Bharat Bhoite said that after registering a complaint, the police found that Shaikh’s phone number was from West Bengal. “Just when we were about to send a team to West Bengal, the mobile service provider told us Shaikh was very much in Mumbai. He was arrested from the Sion-Dharavi area,” he said.

“During interrogation, he apologised and said that he may have accidentally added the complainant’s number. He said he thought the number belonged to his brotherin-law and did not remember how he had the complainant’s number. He said he had no intention to hurt anybody and that the group was formed by his friend with no woman members,” added Shelke.

The police have seized Shaikh’s phone and have sent it to the Forensic Science Laboratory to retrieve its data. Cops have also sought the call detail reports of other group members who could become witnesses against Shaikh.

The maximum punishment Shaikh could get under the IT Act, 2000, is up to five years imprisonment for the first time. If he commits the crime again, he can be sent to jail for up to seven years and fined Rs 10 lakh. In July, a group administrator from Madhya Pradesh was arrested for allegedly posting anti-national messages. In August too, a group administrator from Bengaluru was arrested for circulation of communally provocative messages.



The maximum punishment Shaikh could get is up to five years’ imprisonment for the first time. If he commits the crime again, he can be sent to jail for up to seven years and fined ₹10 lakh

Sunday, November 25, 2018

Malware
Google removed 13 apps from Play Store that were installing malware on devices

 
Pointed out by a researcher, these apps were downloaded by more than half a million Android users.

M Devan 

 
Saturday, November 24, 2018 - 17:41


There has always been some apprehension on the safety of apps on the Android Play Store. Google follows a very open policy with developers who place their apps on the Play Store, which is quite different from what Apple does. It is much more difficult to get a placement in the App Store on Apple devices than it is on Google’s Play Store.

Now a researcher has come up with hard evidence of at least 13 apps, which masquerade as gaming apps and in reality, contain malware. Google has immediately arranged to have these 13 apps removed from the Play Store. But the unfortunate part is these apps have already been downloaded 560,000 or over half a million times. And a couple of these apps were even part of the list of ‘trending’ apps on the Play Store.

The apps, when downloaded, do not seem to have any functionality and simply crash. They have been designed as imitations of genuine games. The researcher who exposed this is one Lukas Stefanko of the cybersecurity firm ESET and he has posted a tweet with the details and even a video demo on how these apps would behave on your mobile. Such researchers, when they stumble across anything serious, first inform the company responsible for the lacunae and leave them adequate time to set the wrong right. Its only when the company fails to take action, they share the details in public.

As can been seen in this case, Google was the first to be told about these apps and the company has promptly removed the offending apps out of the Play Store. The next thing to be taken care of is how these half a million device owners can clean up their phones. The 13 apps had similar sounding titles like truck simulator luxury car driving simulator. This is not the first time Google has had to encounter situations where apps on the Play Store have been found to be harmful.
12 வயசு சிறுமியிடம் 63 வயது தாத்தா சேட்டை... ஆஸ்பத்திரிக்கே போய் தீர்ப்பை அறிவித்த நீதிபதி! 

By Hemavandhana Published: Saturday, November 24, 2018, 10:55 [IST] 

தீர்ப்பை வாசிக்க மருத்துவமனைக்கே சென்ற நீதிபதி- வீடியோ கடலூர்: தீர்ப்பு சொல்ல ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார் கடலூர் மாவட்ட ஜட்ஜ் டி.லிங்கேஸ்வரன்!! பென்னாடத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன். 63 வயசானாலும் அதற்கேற்ற குணம் இல்லாத சங்கரநாராயணன், 12 வயசு சிறுமி கிட்ட வேலையை காட்டியிருக்கார். போன வருடம் தன் பகுதியிலேயே வசிக்கும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்க போய், இந்த விவகாரம் பெரிதாகி கோர்ட்டில் கேஸ் நடந்துகொண்டிருந்தது. 

கூண்டில் நிறுத்தினர் 

நீதிபதி டி.லிங்கேஸ்வரன்தான் இந்த வழக்கை விசாரித்து வந்தார். பல கட்ட விசாரணை நடந்து முடிந்து தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரமும் வந்தது. கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு என தேதி கூறப்பட்டது. அதற்காக சங்கரநாராயணனை அழைத்து வந்து கூண்டில் நிறுத்தினார்கள். நீதிபதியும் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார். மயங்கி விழுந்தார் அப்போது சங்கரநாராயணன்தான் குற்றவாளி என்று தீர்ப்பில் நீதிபதி சொல்லி கொண்டிருந்தார். 

இதை கேட்டதும் சங்கரநாராயணன் கூண்டிலேயே மயங்கி விழுந்தார். இதனால் ஜட்ஜ் உட்பட எல்லோருமே அங்கு பதட்டமடைந்தார்கள். பலத்த பாதுகாப்பு உடனடியாக 108 ஆம்புலன்ஸில் சங்கரநாராயணனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும்படி ஜட்ஜ் சொன்னார். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சங்கர நாராயணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.கூடவே பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. 

ஆஸ்பத்திரியில் நீதிபதி நேத்து சங்கர நாராயணன் திரும்பவும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். ஆனால் இன்னும் உடம்பு சரியாகவில்லை. மருத்துவமனையில்தான் சிகிச்சை போய் கொண்டு இருக்கிறது. அதனால் நீதிபதி நேற்று சாயங்காலம் நேராக ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார். தீர்ப்பை வாசித்தார் படுக்கையில் படுத்து கொண்டிருந்த சங்கரநாராயணா அருகில் நின்ற நீதிபதி, "சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், சங்கரநாராயணனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை" என்று தீர்ப்பை வாசித்து முடித்தார். இத்துடன், சங்கரநாராயணன் கொலை மிரட்டல் விடுத்ததற்காக மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவதாக தீர்ப்பை வாசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். தீர்ப்பை வழங்க ஆஸ்பத்திரிக்கே நீதிபதி நேரில் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/cuddalore/cuddalore-judge-t-lingeswsaran-visited-accused-hospital-pronounced/articlecontent-pf338503-334943.html

காயமே இது மெய்யடா 10: ‘சிக்கல்’ தீர்க்கும் இரவுத் தூக்கம்!

Published : 24 Nov 2018 11:29 IST




ஒவ்வொரு உயிர்ப் பொறியும் வெப்பத்தைச் சுயமாக உருவாக்கிக்கொண்டும் வெளியேற்றிக்கொண்டும் இருக்கிறது. அதேபோல உடல், நீர்ச் சமநிலையையும் எப்போதும் தக்க வைத்துக்கொண்டே இருக்கிறது.

எனவே, உடலுக்கு எப்போது நீர் வேண்டும் என்பதை அறிவால் புறத்தில் இருந்து தீர்மானிக்க முடியாது. எப்போது தீர்மானிப்பது?. உடலுக்கு நீர்த் தேவை ஏற்படும்போது தாகமெடுக்கும். அப்போது நீர் அருந்த வேண்டும். லிட்டர் கணக்கில் அளவு வைத்தோ, இலக்கு வைத்தோ அல்ல!

நீர் அருந்துவதற்கும் மல வெளியேற்றத்துக்கும் முக்கியமான தொடர்பு உண்டு என்பதால், இப்போது நாம் அது பற்றிப் பேச வேண்டியுள்ளது. குறிப்பாக, குழந்தையின் நீர்த் தேவையைப் புறக்கணிக்கிறோம் என்பதால் இதை வலியுறுத்திச் சொல்ல வேண்டியுள்ளது.

குழந்தை எதற்காக அழுகிறது?

குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பாலில் சுமார் எழுபது சதவீதம் நீர் உண்டு என்றாலும், பாலில் உள்ள நீர், செரிமானத்துக்குத் துணை செய்யும். ஆனால், செரிமானத்தின் கூடுதல் தேவைக்கும், உடலின் வெப்ப - நீர்ச் சமநிலையைப் பேணவும் வளர்ச்சிதை மாற்றச் செயல்பாட்டுக்கும் உடலுக்குத் தனியாக நீர் அவசியம்.

அவசியமான போதெல்லாம் குழந்தைக்கு நீர் புகட்டினால்தான் மல வெளியேற்றம் எளிதாக இருக்கும். பெரும்பாலான தாய்மார்களிடம் தம் குழந்தைக்குப் பாலைத் தவிர தனியாக நீர் புகட்டும் பழக்கம் இல்லை. டயபர் உபயோகம் ஒருவகையில் வெப்பத்தை உள்நோக்கித் திருப்புகிறது என்றால், இன்னொரு வகையில் குழந்தை உடலில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போதும் உள்வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.

குழந்தையின் அழுகைக்கான காரணங்களைப் பெற்றவர்கள் நுட்பமாகக் கவனித்தால் மட்டுமே அவதானிக்க முடியும். குழந்தை தன் அனைத்துத் தேவைகளையும் அழுகையின் வழியாக மட்டுமே அறிவிக்க முடியும். அதன் தேவைகள் அனைத்தையும் பாலுக்கான அழுகை என்றே தட்டையாகப் புரிந்துகொள்கிறோம்.

பசியெடுக்கிறபோது பாலுக்காக அழும். குழந்தைக்குத் தாகம் எடுக்கிறபோது நீருக்காக அழும். பாலுக்கு அழுகிறதா நீருக்கு அழுகிறதா என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? நம்முடைய உணர்வு நுட்பமாயிருந்தால் அழுகை பாலுக்கானதா நீருக்கானதா என்பதை அறிய முடியும்.

அப்படிப் பிரித்தறிய முடியாத பெற்றோரைப் பெற்ற குழந்தையின் நிலை? இதில் ஒரு சிக்கலும் இல்லை. குழந்தை அழத் தொடங்கியதும் லேசாகச் சூடேற்றிய (காய்ச்சி ஆற வைத்து அல்ல) வெந்நீரை ஃபீடிங் பாட்டிலில் ஊற்றிக் கொடுக்க வேண்டும். குழந்தையின் தேவை நீரெனில் நீரைக் குடிக்கும். குடித்துவிட்டு ஒரு இனிய புன்னகையை மலர்த்தி நன்றி தெரிவிக்கும்.

அப்போது நீர் தேவைப்படவில்லை, பால்தான் வேண்டும் என்றால் இரண்டு வாய் நீரை உறிஞ்சி ‘புளிச்’சென்று துப்பிவிட்டு, மறுபடியும் முன்னிலும் தீவிரமாக அழத் தொடங்கும். அப்போது நாம் புரிந்துகொள்ள வேண்டும், குழந்தை பாலுக்கு அழுகிறதென்று.

ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டாம்!

பச்சிளங் குழந்தைப் பருவத்திலேயே குறைந்தபட்ச தாக – பசி உணர்வு முறைப்படுத்தப்படும் போதுதான், அது தன் இதர உணர்வுகளையும் முழுமையாக அடைவது சாத்தியமாகும்.

தனது தண்ணீர்த் தேவையை அறிவிக்கத் தெரியும்வரை முதலில் நீரைக் கொடுத்துவிட்டு அதனை மறுக்கிறபோது உணவைக் கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அதுவே மலச் சிக்கலைத் தவிர்ப்பதற்கான முதன்மை நிலை.

அடுத்து, மிக அரிதான கட்டங்களைத் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் டயபர் பொருத்துவதைத் தவிர்க்க வேண்டும். டயபரால் குழந்தையின் மென்மையான உடலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து பிறகு பார்ப்போம். குழந்தைப் பருவத்தில் மலச் சிக்கல் தோன்றுவதற்கும் ஆசன வாயில் மென்னுணர்வு மரத்துப் போவதற்கும் டயபர் ஒரு காரணி என்பதை அழுத்தமாக நினைவுறுத்திக் கொள்வோம்.

டயபர் போலவே ஆசனவாய் வழியாக வெப்பம் உள்நோக்கித் திரும்புவதற்கு இன்னொரு முக்கியக் காரணி, நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமல் அமர்ந்திருத்தல். மழலைப் பள்ளியில் குழந்தையை ‘ஆடாமல் அசையாமல் உட்கார்’ என்று சொல்வதே பெரிய வன்முறை. ஆடாமல் அசையாமல் இருக்க முடியாதது மட்டுமல்ல, அதற்குரிய மன நெருக்கடியும்கூட மலச் சிக்கலை உருவாக்கும்.

பல நேரம் மன நெருக்கடியே மலத்தை இறுகச் செய்துவிடும். குழந்தைப் பருவத்தில் எதன் பொருட்டும் அவர்களை மிரட்டிப் பணிய வைப்பது, உடல் வளர்ச்சியைக் குன்றச் செய்யும்.

சீக்கிரமாகத் தூங்குவது நல்லது

இரவு தாமதமாகப் படுப்பதும் மலச்சிக்கலுக்குக் காரணியாக இருக்கும். இரவில் விழித்திருக்கும் நேரத்தில் உடல் கூடுதலான வெப்பத்தை உருவாக்க நேரிடும். இருட்டத் தொடங்கிய பிறகு இயற்கையை மீறி பின்னிரவில் விழித்திருப்பதைச் சிலர் சாதனையாகவும், சிலர் கொண்டாட்டமாகவும், பலர் தியாகம் என்றும் கருதிக்கொண்டிருக்கின்றனர். அதன் முதல் கேடு, மலச் சிக்கல் அல்லது முழுமையாகச் செரிமானம் ஆகாமல் உணவு மலமாகிவிடுதல்.

பல வீடுகளில் ‘எங்க இந்த வாண்டுங்க ஆட்டம் அடங்கவே பன்னிரண்டு மணி ஆகுது. நாம எங்க சீக்கிரமா தூங்குறது’ என்று சலித்துக்கொள்வதுபோல், தமது குழந்தைகளின் துறுதுறுப்பில் பெருமிதம் கொள்கின்றனர்.

இரவு பத்து மணிக்காவது படுக்கைக்குச் சென்று விளக்கணைப்பதும், காலையில் காற்றின் தூய்மை முழு வீச்சில் இருக்கும் ஐந்தரை மணிக்கு விழிப்பதும் உடல் நலனுக்கு ஏற்ற பழக்கம் என்பதைப் பெரியவர்கள் உணரும்போதுதான் சிறு வயதினரும் அதைப் பழக்கமாக்கிக்கொள்ள முடியும்.

பகலில் எவ்வளவு நீண்ட தூக்கமும் இரவு நேரத்து ஆழ்ந்த, குறைவான தூக்கம் தரும் உடல் நலனைத் தர முடியாது. குறிப்பாக, செரிமானம், மலப்போக்கில் இரவுத் தூக்கக் குறைவு கண்டிப்பாகக் கெடுதல்களைத் தரும்.

வேண்டும் சுதந்திர உணர்வு

பல லட்சங்களைக் கொட்டி பிரபலமான பள்ளிகளில் பிள்ளைகளுக்கு இடம் பிடிக்கும் பெற்றோர், அதன் கழிவறைப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. எத்தனை பெரிய பள்ளிகளிலும் கழிவறைப் பராமரிப்பு படு மோசமாக இருப்பதைக் காண முடியும். விதி விலக்காக ஒன்றிரண்டு நல்லவை இருக்கலாம்.

வீட்டில் கழிப்பதைப் போன்ற சுதந்திரமான மன உணர்வு கிடைக்கப் பெறாத இடங்களில் குழந்தைகள் மலம், சிறுநீர் கழிக்க முடிவதில்லை. இந்தக் கழிப்பு அம்சங்களை அவர்கள் வெளிப்படையாகப் பேசவும் நாம் அனுமதிப்பதில்லை. அதுபோக வகுப்பு வேளையில் இயற்கையின் அழைப்பை வேடிக்கைப் பொருளாக்கிய கலாச்சாரம் நமது சமூகத்தில் நிலவுகிறது.

விளைவு சிறுநீரையும் மலத்தையும் பள்ளிகளில் கழிக்க விருப்பமில்லாமல் அடக்கி அடக்கி, ஏழெட்டு வயது பள்ளிப் பருவத்திலேயே மலச்சிக்கல் பிரச்சினையும் சிறுநீரகக் கல் பிரச்சினையும் தற்காலத்தில் பரவலாகி வருகிறது.

பள்ளிக் கழிப்பறையைத் தவிர்க்க, குழந்தைகளின் இயற்கை அழைப்பு தொடர்பான மன நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கான ஒரே தீர்வு, இரவில் பத்து மணிக்கேணும் படுப்பது. இரவில் சீக்கிரமாகத் தூங்கினால்தான் காலையில் அரக்கப்பறக்க இல்லாமல் காலைக்கடன்களைக் கழிக்க ஏதுவாக இருக்கும்.

போதிய மன அவகாசத்துடன் கழிப்பதுதான் உடலுக்கு முழுமையான நலம் பயக்கும். தற்காலப் பதற்றக் கலாச்சாரமே மலச் சிக்கல் தொடங்கி பலவிதமான நோய்களுக்கும் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது. தனது வனத்தில் சுதந்திரமாகப் பாம்பு ஊர்ந்து செல்வதுபோல, மலம் லாவகமாக ஊர்ந்து செல்ல வேண்டும். நம்மில் எத்தனை பேர் அத்தகைய போக்கு கிடைக்கப் பெற்றிருக்கிறோம்?

(தொடரும்)

கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 50 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்த நபர்: திருவான்மியூரில் கவனத்தை திசை திருப்பி துணிகரம்

Published : 23 Nov 2018 15:56 IST



பணத்தை எடுக்கும் நபர்கள் பின்னர் மோட்டார் சைக்கிளில்தப்பிசெல்லும் சிசிடிவி காட்சி

திருவான்மியூர் அருகே கொட்டிவாக்கத்தில் பைனான்ஸ் தொழில் செய்பவர் கவனத்தை திசை திருப்பி 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்துள்ளனர்.

கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பூமிநாதன் (45). வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று பகல் திருவான்மியூர் மேற்கு குளக்கரை தெருவில் உள்ள இந்தியன் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றார்.

தன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50,000 பணத்தை எடுத்துக்கொண்டு அதைப் பையில் வைத்து தனது சைக்கிளின் ஹாண்டில் பாரில் மாட்டிக்கொண்டு மார்க்கெட் சென்று வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு தனது சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை புத்து கன்னியம்மன் கோயில் அருகில் பூமிநாதன் செல்லும் போது அவரது சைக்கிள் செயினில் துணி சிக்கியதால் சைக்கிள் நின்றுவிட்டது. இதனால் சைக்கிளை நிறுத்திவிட்டு சக்கரத்தின் இடையே சிக்கிய துணியை எடுக்கும் முயற்சியில் பூமிநாதன் ஈடுபட்டார்.

அப்போது ஒரு நபர் அவர் தோளைத்தட்டி சார் பணம் உங்களுடையதா என்று பாருங்கள் என சில அடி தூரத்தில் கிடந்த 10 ரூபாய் நோட்டைக் காண்பித்துள்ளார். நன்றி அய்யா என்று சைக்கிளில் மாட்டியிருந்த துணியை எடுப்பதை விட்டுவிட்டு 10 ரூபாயை எடுக்க பூமிநாதன் சென்றார்.

அப்போது ஒரு நபர் அந்த இடைப்பட்ட நேரத்தைப் பயன்படுத்தி அவருடைய சைக்கிள் ஹாண்டில் பாரில் மாட்டியிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு தயாராக வந்த மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டார்.

பத்து ரூபாய் லாபம் என சந்தோஷத்துடன் திரும்பிய பூமிநாதன் தனது சைக்கிளில் மாட்டப்பட்டிருந்த பணப்பையை காணாமல் திடுக்கிட்டார். அங்குமிங்கும் தேடினார். ஆனால் பணப்பை போனது எங்கே என்று தெரியவில்லை. தனது பணம் பறிபோனது குறித்து பூமிநாதன் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரைப் பெற்ற போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்குள்ள கடை ஒன்றில் கண்காணிப்பு கேமரா பதிவு சிக்கியது. அதில் சைக்கிளுக்கு பத்தடி முன்னால் ஒரு நபர் நிற்பதும், பத்து ரூபாயை எடுக்க பூமிநாதன் செல்வதும், அந்த நேரத்தில் அந்த நபர் சைக்கிள் ஹாண்டில் பாரிலிருந்து பணப்பையை எடுப்பதும் எடுத்தவுடன் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நிற்பதும் அதில் அந்த நபர் பணப்பையுடன் தப்பிச்செல்வதும் பதிவாகியுள்ளது.

பூமிநாதன் வங்கியில் பணம் எடுத்ததைக் கவனித்த கும்பல் அவரைப் பின் தொடர்ந்து வந்து அவரது கவனத்தை திசை திருப்ப சைக்கிள் சக்கரத்தில் துணியை மாட்டவைத்து நிற்க வைத்துள்ளது. அப்போது பின் தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களில் ஒருவர் பூமிநாதனைக் கடந்து நின்றுகொண்டார்.

மோட்டார் சைக்கிள் பூமிநாதனுக்குப் பின்னால் பத்தடி தொலைவில் தயாராக நின்றுள்ளது. மூன்றாவது நபர் பூமிநாதன் துணியை எடுக்கும்போது 10 ரூபாயை கீழே போட்டுவிட்டு தகவல் சொல்லிவிட்டு கடந்து போயுள்ளார்.

பூமிநாதன் பத்து ரூபாயை எடுக்கச் செல்லும்போது காத்திருந்த நபர் பணப்பையை எடுக்க பத்தடி தொலைவில் தயாராக நின்ற பைக் அருகில் வந்து நிற்க எளிதாக தப்பிச் சென்றுள்ளனர். இப்படியா 10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உள்ள பணத்தை இழப்பீர்கள் என போலீஸார் பூமிநாதனைக் கேட்டுள்ளனர்.

பூமிநாதன் வைத்திருந்த பைக்குள் ரூ. 50 ஆயிரம் பணமும், 2 பாஸ்புக்கும் இருந்தன.

திருவான்மியூர் போலீஸார் வழிப்பறி நபர்களைத் தேடி வருகின்றனர்.
ஒழுங்கு நடவடிக்கையால் 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட அதிகாரி: அனைத்தையும் ரத்து செய்து பண பலன்களையும் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Published : 24 Nov 2018 21:01 IST




கோப்புப் படம்

முப்பது ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்கு வராததால் பாதிக்கப்பட்ட அதிகாரி மீதான குற்றச்சாட்டை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு சேர வேண்டிய பணபலன்களை வழங்க உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாக பணியாற்றியவர் சுந்தரராஜன் (88), சத்துணவுத் திட்டத்துக்கு வழங்கப்பட்ட பொருட்கள் இருப்பை சரிபார்க்காமல் இருந்ததாகக் கூறி, 1988-ம் ஆண்டு பணி ஓய்வு பெறுவதற்கு 10 மாதங்களுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் முடிவுக்கு வராததால், தனக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்ய கோரியும், ஓய்வு பெற அனுமதித்து, பண பலன்காலையும், ஓய்வூதியத்தையும் வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் விசாரித்தார். அப்போது குற்ற வழக்கு நிலுவையில் இருந்ததால் ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, 30 ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வராததால் பாதிக்கப்பட்ட 88 வயதான சுந்தரராஜனுக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்து, அவருக்கு வழங்க வேண்டிய பண பலன்களையும், ஓய்வூதியத்தையும் ஆறு வாரங்களில் வழங்க உத்தரவிட்டார்.

மேலும், அரசு ஊழியர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை இதுபோல பல ஆண்டுகளாக முடிவுக்கு கொண்டு வராமல் இருப்பது ஏற்று கொள்ளத்தக்கதல்ல என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கை உதாரணமாக கொண்டு அரசு அதிகாரிகள் கண் திறக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஓய்ந்தது கஜா புயல்.. தீர்ந்ததா துயரம்? : உதவிக்காக தவிக்கும் மன்னார்குடி மக்கள்

Published : 24 Nov 2018 20:16 IST


பாரதி ஆனந்த்





டெல்டா மாவட்டங்களில் புயலுக்குப் பின் அமைதி நிலவவில்லை அல்ல அவதி வதைக்கிறது. துயரத்தில் மிதக்கும் பகுதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதியும் ஒன்று. மன்னார்குடி மக்களுக்கு அரசு நிவாரணம் போதிய அளவில் கிடைக்காததால் பசியும், இருளும் அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது.

அடிப்படையில் மன்னார்குடி ஒரு விவசாய பூமி. நெல்தான் பிரதானம். அதுதவிர கரும்பு, சில சமயம் கம்பு, கேழ்வரகு எல்லாம் பயிரிடுவது வழக்கம். ஒரு வீடு இருந்தால் அதை சுற்றி நிச்சயம் குறைந்தது 30 தென்னை மரங்களாவது இருக்கும். தென்னை விவசாயமும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல் கால்நடைகள் வளர்ப்பும் அதிகம். இந்த பூமியை சில சமயம் இயற்கையும் பல சமயம் ஆட்சி அதிகாரங்களும் பதம் பார்த்துவிடுகிறது.

இந்த முறை இயற்கை ஆடிய கோரத் தாண்டவம் ஒருபுறம் அதிலிருந்து மக்களை புயல் வேகத்தில் மீட்டெடுக்காத அரசாங்கம் மறுபுறம் என விழிபிதுங்கி நிற்கின்றனர் அப்பாவி மக்கள்.

நவம்பர் 15 வரை மன்னார்குடி வாசிகள் அறிந்திருக்கவில்லை, புயல் மழையால் பயிர்களும், மரங்களும், கூரைகளும், மண் சுவர்களும், கால்நடைகளும் மண்ணோடு மண்ணாகப் போகப்போகிறது என்று. இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்ற சூழலில்தான் மன்னார்குடி மக்கள் இன்று நிற்கதியாய் நிற்கின்றனர்.



அதோ அங்கு நிவாரணம் செல்கிறது... இதோ இங்கு உதவிகள் குவிந்துள்ளது என்றெல்லாம் தகவல்களைப் பார்த்தபின்னர் தொகுதி வாரியாக கள நிலவரம் அறிய முற்பட்டதன் முயற்சியில் முதலில் மனதிற்கு வந்தது மன்னார்குடி தொகுதி.

முதல் குரலை பதிவு செய்தவர் திமுக எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா. தலைக்கு மேல் கூரை இல்லை; தரையில் விரித்து உறங்க பாயில்லை, மின் விநியோகம் கிடைக்காததால் இரவின் இருள் விலகவில்லை, தவிர எங்கே சென்றாலும் அரிசியும் உப்பும் மட்டுமாவது தாருங்கள் கஞ்சியாவது குடிப்போம் என்ற கூக்குரல் இல்லாமல் இல்லை. இதுதான் என் தொகுதி மக்களின் நிலை என வேதனையை சொன்னார். சற்று விரிவாக சொல்லும்படி கேள்விகளை முன்வைக்க அவர் அளித்த பதில்கள் அரசாங்கத்துக்கான கேள்விகள்.

எம்.எல்.ஏ., சொல்லும் சாட்சி!

தொகுதி நிலவரம் குறித்து மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா, புயல் ஒன்று வருகிறது என்று சொன்னபோது வானிலையில் இருந்த ஆர்வத்தால் யதார்த்தமாகத்தான் அதை பின்பற்றத் தொடங்கினேன். ஆனால், எங்கள் ஊரைச் சேர்ந்த வானிலை ஆர்வலர் செல்வக்குமார், மன்னார்குடி புயல் ஆபத்தில் இருப்பதாக சொன்னபோதுதான் கொஞ்சம் கிலி பிடித்தது. அப்போதிலிருந்து புயலின் போக்கை தொடர்ந்து பின்பற்ற ஆரம்பித்தேன். முடிந்தவரை முன்னெச்சரிக்கை தகவல்களை எனது ட்விட்டர் தளம் வாயிலாக பரப்பிக் கொண்டிருந்தேன்.

நவம்பர் 15-ம் தேதி இரவு அசாதாரணமான நாளாக இருந்தது. புயலின் வேகம் அப்படி இருக்கக் கூடும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. அடுத்த நாள் காலையில் 7 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால் பிரதான சாலைக்கு செல்லவே 9 மணியானது. வழியில் அரசுப் பணியாளர்கள் ஒருவர்கூட இல்லை.

இயற்கைப் பேரிடாரை கையாள்வதில் மாநில அரசு தோல்வியடைந்துவிட்டதா?

தானே, வர்தா, ஒக்கி, சென்னை பெருவெள்ளம் என இந்த அதிமுக ஆட்சி எத்தனை இயற்கைப் பேரிடர்களைப் பார்த்துவிட்டது. ஆனால், இன்று கஜாவுக்குப் பின்னும் மந்தமாகவே இருக்கிறது என்றால் அடிப்படை புரிதல் இல்லை என்றுதானே அர்த்தம்.

இயற்கைப் பேரிடர் பற்றி அரசாங்கத்துக்கு அடிப்படை புரிதல் வேண்டும். அடிப்படை புரிதல் இருந்தால்தான் அங்கு கற்றலுக்கான வாய்ப்பு ஏற்படும். அப்படி ஒரு சீற்றத்தில் பாடம் கற்றுக்கொண்டவர்கள் அடுத்த பேரிடரின்போது துரிதமாக செயல்பட்டு மீட்புப் பணிகளை செய்வார்கள். இந்த அரசுக்கு புரிதலும் இல்லை. கற்றலும் இல்லை. அப்புறம் செயல்பாடு மட்டும் எங்கிருந்து வரும்? இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்த அரசாங்கத்துக்கு திராணி இல்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உங்கள் தலைவர் பாராட்டினாரே?

ஆமாம் பாராட்டினார். அவர்கள் இதை செய்துவிட்டோம், அதை செய்துவிட்டோம் என்று பட்டியல் சொன்னார்கள் அதனால் பாராட்டினார். அப்புறம்தானே தெரிந்தது சொன்னது எல்லாம் பொய் என்பது. பேரிடர் மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு படிநிலையாகக் கடக்க வேண்டும். அப்படிப்பட்ட பிரமிட் கட்டமைப்பே அரசாங்கம் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.



இப்போது அங்கு நிலவரம் எப்படி இருக்கிறது?

நவம்பர் 16-ம் தேதி காலையில் தஞ்சை பிரதான சாலை தஞ்சாவூர் - திருவாரூர் - நீடாமங்கலம் சாலையை சீர் படுத்தும் பணியில் இறங்கினோம். என்னுடன் இளைஞர்களும், தொண்டர்களும் சேர்ந்துகொண்டனர். மாலை 5.30 மணியளவில் அந்த சாலையில் இருந்த மரங்கள் கட்டர்களால் வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட சாலை பயன்பாட்டுக்கு வந்தது. அதுவரை அந்தப் பகுதிக்கு அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை. பணி முடியும் வேளையில் டிஎஸ்பி மட்டும் வந்து சென்றார்.

மன்னார்குடி மரங்கள் நிறைந்த பகுதி. இங்கு குடிசைகளும் அதிகம். உண்மையிலேயே இந்த அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக எடுத்திருந்தால் மரங்களை வெட்ட கட்டர்கள், அப்புறப்படுத்த ஜேசிபி இயந்திரங்கள், வீடுகளுக்கு கூரை அமைக்க தார்பாலின்கள், பசியமர்த்த அரிசி, பருப்பு இப்படித்தானே ஆயத்தமாயிருக்க வேண்டும்?

ஆனால், நிவாரண முகாம்கள் முன்னரே அமைக்கப்பட்டதே? உணவும் வழங்கப்படுகிறதே?

உணவா? என்னிடம் நிவாரணமாக மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, பருப்பில் சாம்பிள் இருக்கிறது. பேரையூர் ஊராட்ட்சியில் ஒருவர் அரிசியைக் காட்டினார். புழுக்கள் நெளிந்தன. பறவாக்கோட்டை ஊராட்சியில் பருப்பு பார்த்தோம். பூஞ்சை பூத்திருந்தது. இதுவா நிவாரணம். தரமான உணவு இல்லை. இன்னமும் மின் விநியோகம் இல்லை. ஆனால், இங்கு எந்த பாதிப்பும் இல்லாததுபோல் இருட்டடிப்பு மட்டும் நடக்கிறது. இது நியாயமே இல்லை.

மத்திய அரசு பாராமுகம் காட்டுகிறதா? பிரதமர் ஒரு ஏரியல் சர்வேயாவது செய்திருக்கலாம் என நினைக்கிறீர்களா?

மத்திய அரசு தானே, வர்தா, ஒக்கி பாதிப்புகளுக்கு கோரிய நிவாரணத்தையே இன்னும் கொடுக்கவில்லையே. அப்புறம் பிரதமர் ஏரியல் சர்வே செய்யாவிட்டால் என்ன முதல்வர் ஏரியல் சர்வே செய்திருக்கிறாரே. அதிமுக மத்திய அரசின் பினாமிதானே.

அடுத்த தேர்தலில் இது பிரதிபலிக்குமா?

இப்போது அரசியலுக்கே இடமில்லை. என் மண், என் மக்கள் எனப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நாங்கள் செய்யும் உதவி திமுக-காரர்கள் வீட்டுக்கு என்று செல்வதில்லை. அது எல்லோருக்குமானது. அரசியல் பற்றியெல்லாம் இப்போது சிந்திக்கவே நேரமில்லை.

களத்தில் உங்கள் சார்பில் வழங்கப்படும் உதவிகள்..

அறிவாலயத்திலிருந்து 20 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் வந்தன. நடிகர் கருணாகரன் 150 மூடைகள் அரிசி அனுப்பிவைத்தார். தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சுப.வீர பாண்டியன் 100 மூடைகள் அரிசி அனுப்பிவைத்தார். நானும் எனது சொந்த செலவில் மக்களுக்கு தரமான அரிசி வாங்கிக் கொடுக்கிறேன்.

இப்போதைக்கு மன்னார்குடி மக்களுக்கு தேவைப்படும் பொருட்கள் டாப் 3- பட்டியிலிடுங்கள்?

முதலில் தார்பாலின் தேவை. தலைக்கு மேல் ஒரு கூரை இருந்தாலாவது அவர்கள் அண்டிக் கொள்வார்கள். இங்கே மனிதன் வாழவே வழியில்லாத நிலையில் பள்ளிகளைத் திறந்து நிவாரண முகாம்களை முடக்கியுள்ளது அரசு. வீடற்றவர்கள் எங்கே செல்வார்கள் என்ற முன்யோசனை கூட அவர்களுக்கு இல்லை.

மேலகண்டமங்கலம் ஊராட்சிக்கு சென்றிருந்தேன். ஒரு முகாமில் ஆட்டுக்குட்டிகளுடன் அவற்றின் புழுக்கைகளுடன் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

இப்போது அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க முடியாது. ஒரு தார்பாய் கொடுத்தால் கூரையை வேய்ந்து அண்டிக் கொள்வார்கள் அல்லவா? அதையாவது செய்வோம்.

இரண்டாவதாக அரிசி. இதை சொல்லவே வருத்தமாகத்தான் இருக்கிறது. நாங்கள்தான் ஊருக்கே நெல் விளைவித்தோம். ஆனால், எங்கள் பகுதிக்குத்தான் இன்று அரிசி தேவைப்படுகிறது. தரமான அரிசியை வழங்குங்கள்.

மூன்றாவதாக மெழுகுவர்த்திகள். இங்கு மின்சாரம் வர இன்னும் இரண்டு வாரங்கள் கூட ஆகலாம். மின் இணைப்புகளை வழங்குவதிலும் ஆளுங்கட்சியினர் மோசடி உள்ளது. அதிமுக பிரமுகர்கள் உள்ள பகுதியில்தான் முதலில் மின் சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.

தார்பாலின், அரிசி, மெழுகுவர்த்தி இவை பிரதான தேவை. இவை தவிர்த்து ஆடைகள், போர்வைகள் போன்றவற்றை தந்து உதவுங்கள்.

உங்களை மிகவும் வேதனைப்படுத்திய காட்சி?

தென்பறை ஊராட்சிக்கு களப் பணிக்காக சென்றிருந்தோம். அங்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்தனர். மூவரும் படிக்கின்றனர். ஒருவர் பி.இ. படிக்கிறார். தாய், தந்தை இல்லை. அவர்கள் வசித்த வீடு முற்றிலுமாக மழையில் கரைந்துவிட்டது. பக்கத்து வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அதுவும் எப்போது வேண்டுமானாலும் கீழ் விழலாம் என்ற நிலையில்தான் இருக்கிறது. அந்தப் பெண் பிள்ளைகள் நிவாரண முகாம் செல்வதற்கும் தயங்குகின்றனர். அவர்களுக்கு தார்பாய் இருந்தால் தற்காலிகமாக ஓர் இருப்பிடத்தையாவது அமைத்துக் கொள்வார்கள். அவர்களது நிலைமை மனதை மிகவும் பாதித்தது. ஒரு கூரைதான் இப்பொழுது அவர்களுக்கு மிக்கப் பெரிய கவுரவம்.

அடுத்த 4 நாட்களுக்கு பெரியளவில் மழை இருக்காது என்று செல்வகுமார் கூறியிருக்கிறார். இந்த 4 நாட்களை அரசாங்கம் சாதுர்யமாக பயன்படுத்தி மக்கள் துயர் துடைக்க வேண்டும்.

ஒரு களப் பணியாளரின் கோரிக்கை..

தொகுதி மக்களுக்காக ஒரு எம்.எல்.ஏ., சொன்ன சாட்சி இப்படியிருக்க நீடாமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் லோகேஸ்வரி இளங்கோவன் களப் பணியாற்றிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

புயல் ஓய்ந்தவுடன் என் மண் வேதனை எனை அங்கு அழைத்தது. தொப்புள்கொடி உறவுகளுக்கு கரம் கொடுக்க ஓடோடிச் சென்றபோது பாதை இல்லை, பயிர்கள் இல்லை, சாலையில் இருபுறமும் நின்றிருந்த மரங்கள் இல்லை, அவற்றில் கூடு வாழ்ந்த பறவைகள் இல்லை. குடிசை வீடுகள் இல்லை. அப்படியே அது அரைகுறையாக நின்றாலும் அவற்றின் மேலே ஓடில்லை, வேய்ந்த கூரையில்லை.

இல்லாமை மட்டுமே இருந்தது. ஆங்காங்கே நிவாரண முகாம்கள். அவற்றில் மாற்று உடைகூட இல்லாமல் என் சொந்தங்கள். ஒரு முகாமுக்கு ஒரு மூடை அரிசி என்ற வீதம் உதவி வருகிறது. முகாம் சாப்பாடு தரமாகத்தான் இருந்தது என்பது சற்றே ஆறுதலான விஷயம்.

புயல் வருகிறது என எச்சரித்த அரசு அதன் தாக்கம் இவ்வளவு கொடூரமாக இருக்கும் எனக் கூறியிருந்தால் குறைந்தபட்சம் தென்னை தவிர மற்ற மரங்களின் கிளைகளையாவது அவர்கள் வெட்டியிருப்பார்கள். கால்நடைகளை பத்திரப்படுத்தியிருப்பார்கள். கஜாவை கூஜாவாக்கிவிட்டோம் என்று கர்ஜித்துவிட்டு இன்று பாதிப்படைந்த பக்கமே திரும்பாமல் இருப்பதில் என்ன நியாயம்?

தென்னைக்கு மரம் ஒன்றுக்கு ரூ.600 என்ற இழப்பீடு எல்லாம் நிச்சயம் போதாது. சாம்பலில் இருந்து மீள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் அவர்களுக்கு குறைந்தது 6 மாதங்களாவது பென்ஷன் வழங்க வேண்டும். கூரை வீடுகளுக்கு நிவாரணம் இல்லை என அரசு கூறுகிறது. கூரை வேய குறைந்தது ரூ.5000 வேண்டும். எனவே, அரசு பாரபட்சம் காட்டாமல் உதவி செய்ய வேண்டும். மின் விநியோகம் சீராக இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம்.

களத்தில் அரசுப் பணியாளர்களைவிட தன்னார்வலர்கள்தான் அதிகமாக உதவி செய்து கொண்டிருக்கின்றனர். மனதளவில் மிகவும் துவண்டு போயிருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். அவர்களுக்கு அரசு தோள் கொடுக்க வேண்டும். இப்போதே மனமுடைந்து விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். எதுவும் இல்லதபோதாது வங்கிகள் விவசாயக் கடனை வசூலிப்பதில் தீவிரம் காட்டினால் அவர்கள் எங்கே செல்வார்கள். விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்.

சோறுடைத்த சோழநாட்டை ஒரு குவளை அரிசிக்காக கையேந்த வைப்பதெல்லாம் ஒட்டுமொத்த தமிழகத்துக்கு அவமானம். அவர்கள் நம்மிடம் யாசகம் கேட்கவில்லை. இயற்கை பேரிடரில் சிக்கி சின்னாபின்னமான அவர்களை மீட்டெடுப்பது அரசுக்கு தலையாய கடமை என்றால் எனக்கும் உங்களுக்கும் தார்மீக பொறுப்பு.

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

புயலால் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மின் இணைப்பு


Added : நவ 24, 2018 19:28 |

புயலால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளுக்கு, மின் சப்ளை செய்வதற்காக, உயிரை பணயம் வைத்து, வேலை செய்யும் ஊழியர்களுக்கு, சமூக வலைதளங்களில், பாராட்டுகள் குவிந்து வருகின்றன.தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள், 'கஜா' புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாவட்டங்களில் இருந்த, 1.07 லட்சம் மின் கம்பங்கள் உட்பட, பல மின் சாதனங்கள் சேதமடைந்து உள்ளன. இவற்றை சரி செய்யும் பணியில், 22 ஆயிரத்து, 334 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.அதில், 1,000 பேர், ஆந்திர மாநிலத்தில் இருந்தும், 500 பேர், கேரளாவில் இருந்தும் வந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், மின்சாரம் இல்லாததால், குடிநீர், சமையல் போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

இதையடுத்து, அவர்களுக்கு, விரைவாக மின் சப்ளை செய்வதற்காக, ஊழியர்கள், வயலில் கழுத்தளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல், அதில் நடந்தபடி, மின் கம்பங்களை எடுத்து செல்கின்றனர்.மின் கம்பத்தை நிறுவிய பின், அதன் மேல் ஏறி, மின் கம்பியை இணைக்கின்றனர். இதற்காக, வயிற்று பகுதியில், ஒரு கயிறை மட்டும் கட்டி, கம்பியின் மீது படுத்தபடியே ஊர்ந்து சென்று, அடுத்த கம்பத்தின் மேல் தாவுகின்றனர். தரையில் இருந்து, பல நுாறு அடி உயரம் உள்ள, மின் கோபுரம் மேல் ஏறி, அதன் கம்பியை, ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்.இவற்றை, புகைப்படம் எடுக்கும், உள்ளூர் இளைஞர்கள், 'பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அவற்றை பார்த்து, தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களும், மின் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உயர்வுக்கு காரணம்!

மின் வாரிய ஊழியர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு முறை வழங்கப்படும் ஊதிய உயர்வு, 2015 டிச., முதல் நிலுவையில் இருந்தது. சென்னையில், 2016ல் வீசிய, 'வர்தா' புயல்; கன்னியாகுமரியில், 2017ல் வீசிய, 'ஒக்கி' புயலின் போதும், களப்பிரிவு ஊழியர்கள், உயிரை பணயம் வைத்து, சேதமடைந்த சாதனங்களை சரி செய்தனர்.அதை நேரில் பார்த்த, அப்போது, மின் வாரிய தலைவராக இருந்த சாய்குமார், ஊழியர்கள் விருப்பப்படி, 2.57 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்தார். அதை ஏற்காத நிதித்துறை, கள ஊழியர்களுக்கு, நான்கு ஆண்டுகள்; அதிகாரிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதியம் வழங்குமாறு தெரிவித்தது. இருப்பினும், பிப்., மாதம், 2.57 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதற்கு காரணமான, களப் பிரிவு ஊழியர்கள், தற்போது, கஜா புயலிலும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். - நமது நிருபர் -
தென்னை மரங்களை எடுத்து செல்லுங்கள்'

Added : நவ 24, 2018 19:12

'எங்களுக்கு நீங்கள் எதுவும் தர வேண்டாம்; நாங்கள் பிள்ளை போல் வளர்த்து, சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை எடுத்து செல்லுங்கள்; கொட்டிக்கிடக்கும் இளநீரை, அள்ளிச்சென்று பருகுங்கள்; அதுவே, பேருதவியாக இருக்கும்' என, புயலால் பாதிக்கப்பட்ட, தஞ்சாவூர் மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமீபத்தில் வீசிய புயலால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் உருக்குலைந்து கிடக்கின்றன. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஆண்டிக்காடு, பள்ளத்துார், தில்லங்காடு சுற்றுவட்டார பகுதி முழுவதும், பல லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன; இளநீரும் வீணாகிக் கிடக்கிறது.'வெளி மாவட்டங்களில் வசிப்போர், இளநீரை அள்ளிச்சென்று பருகுங்கள்; தென்னை மரங்களையும் எடுத்துசெல்லுங்கள்' என, விவசாயிகள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

பட்டுக்கோட்டை தாலுகா, தில்லங்காடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர், சுப்பிரமணியன், சமூக வலைதளங்களில், 'ஆடியோ' வெளியிட்டுள்ளார். அதல், அவர் பேசி இருப்பதாவது:புயலால் துாக்கி வீசப்பட்டு, நாங்கள் பிள்ளை போல் வளர்த்த தென்னை மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இளநீர் வீணாகி வருகிறது. இதை அப்புறப்படுத்த, எங்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவாகும்; அதற்கு செலவு செய்ய, எங்களிடம் வழியில்லை. தற்போது, நாங்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் தான் உள்ளோம்.அதுவும், அடுத்தவர்களிடம் வாங்கிய கடனை திரும்பிக் கொடுக்காமல் போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில், உயிருடன் உள்ளோம். நாங்கள், பிள்ளைபோல் வளர்த்த தென்னை மரங்கள் அழிவதை பார்க்க முடியவில்லை. தென்னை மரத்தை, 30 நாளுக்குள் அறுத்து, தண்ணீர் படாமல் வைத்திருந்தால், 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். 

வெளிமாவட்டங்களில் இருப்போர், தென்னை மரங்கள் தேவைப்பட்டால், உடனே எங்கள் ஊருக்கு வாருங்கள். எங்களுக்கு நீங்கள் எதுவும் தர வேண்டாம். மரங்களை எடுத்துச் செல்லுங்கள். எங்கும் கொட்டிக் கிடக்கும் இளநீரையும் எடுத்துச் சென்று பருகுங்கள்; மற்றவர்களுக்கும் கொடுங்கள். மரங்களை அப்புறப்படுத்தினால் தான், நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். தேங்காய்களை விற்றாவது, உயிர் வாழ்ந்து விடுவோம்.இளநீர் மற்றும் தென்னை மரம் தேவைப்படுவோர், பட்டுக்கோட்டையில் இருந்து, 13 கி.மீ.,ல் உள்ள, தில்லங்காடுக்கு வாருங்கள். தற்போது, வாகன போக்குவரத்து சீராகி விட்டது. மரங்களை எடுத்துச் செல்ல சிரமமாக இருக்கும் என, கருத வேண்டாம். உடனடியாக எங்கள் பகுதிக்கு வாருங்கள். மரம் தேவைப்படுவோர், என்னுடைய, 97158 71686 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு, தகவல் அனுப்புங்கள்.இவ்வாறு அவர் உருக்கமாக பேசியுள்ளார். - நமது நிருபர் -

சித்தா, 1,235    இடங்கள் நிரம்பின

Added : நவ 25, 2018 01:50

சென்னை, 

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா படிப்புகளுக்கு, 1,235 இடங்கள் நிரம்பின.சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 1,482 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில், நவ., 19ல் துவங்கியது. நேற்று நிரம்பிய, 183 இடங்களுடன், இதுவரை, 1,235 இடங்கள் நிரம்பியுள்ளன.இதுகுறித்து, தேர்வு குழு அதிகாரிகள் கூறியதாவது:முதற்கட்ட கவுன்சிலிங்கில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், 247 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. இந்த இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், www.tnhealth.org என்ற இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'கஜா' புயல் நிவாரணம் நடிகையர் கைவிரிப்பு

Added : நவ 24, 2018 22:13 |

சென்னை, :கஜா புயல் பாதிப்புக்கு, நிவாரண உதவி வழங்கும் விஷயத்தில், தமிழ் சினிமாவைச் சேர்ந்த, முன்னணி நடிகையர் ஆர்வம் காட்டாதது, அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பல தரப்பிலிருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் திரையுலகைச் சேர்ந்த, நடிகர்கள் உள்ளிட்ட பலரும், கோடிக்கணக்கில் நிவாரண உதவியை பொருளாகவும், பணமாகவும் வழங்கி வருகின்றனர்.ஆனால், நடிகையரில், ஜோதிகா, கஸ்துாரி மட்டுமே நிவாரண உதவிகளை வழங்கிஉள்ளனர்.ஒரு படத்திற்கு, 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும், நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், தமன்னா, சமந்தா போன்ற, முன்னணி நடிகையர் கண்டுகொள்ளவே இல்லை. இது, அவர்களது ரசிகர்களிடமும், பொது மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நெடுஞ்சாலை சுங்க சாவடியில் வி.ஐ.பி.,க்களுக்கு புது வசதி

Added : நவ 25, 2018 07:26




புதுடில்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, சுங்கச் சாவடிகளில், கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள, வி.ஐ.பி.,க்கள், காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், சிறப்பு ஸ்டிக்கர் தரப்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், கட்டணம் செலுத்துவதில், எம்.பி.,க்கள் உட்பட, பலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுஉள்ளது. எம்.பி.,க்களுக்கு டெல்லியில் ஒரு வாகனத்துக்கும், சொந்த தொகுதியில், ஒரு வாகனத்துக்கும் என, சிறப்பு பாஸ் அளிக்கப்பட்டுள்ளது. சுங்கச் சாவடிகளில், இந்த பாஸை காட்டிவிட்டு அவர்கள் செல்லலாம். இதற்கிடையே, சுங்கச் சாவடிகளில் காத்திருப்பதை குறைக்கும் வகையில், 'பாஸ்டேக்' என்படும், முன்னதாகவே பணம் செலுத்தி, சிறப்பு ஸ்டிக்கரை பெற்றுக் கொள்ளலாம். இந்த ஸ்டிக்கர் உள்ள வாகனங்கள், சுங்கச் சாவடிகளில் கடக்கும்போது, அது ஸ்கேன் செய்யப்பட்டு, இருப்பில் உள்ள பணம், கழித்துக் கொள்ளப்படும்.தற்போது, இதுபோன்ற, பாஸ்டேக் சிறப்பு ஸ்டிக்கரை, கட்டண சலுகை பெற்றுள்ள, வி.ஐ.பி.,க்களுக்கும் அளிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கட்டண சலுகை பெற்றிருந்தாலும், அதற்கான பாஸை, சுங்கச் சாவடிகளில் காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.இதனால், வி.ஐ.பி.,க்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு இந்த பாஸ்டேக் சிறப்பு ஸ்டிக்கர் அளிக்கப்படுகிறது. இந்த வகையில், 12 ஆயிரம் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட உள்ளன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

புதிய டெபிட், கிரெடிட் கார்டு ஜன., 1 முதல் அமல்

Added : நவ 25, 2018 02:52




புதுடில்லி: அடுத்தாண்டு, ஜன., 1 முதல், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் மட்டுமே செயல்படும் என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக, தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

நாட்டில், சமீப காலமாக, 'டெபிட், கிரெடிட்'கார்டுகள் மூலம், ஏராள மான மோசடிகள்நடக்கின்றன.இதை தடுக்கும் நோக்கில், அனைத்துவங்கிகளும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, 'சிப்' பொருத்தப்பட்ட, புதிய, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளை வழங்கும்படி, 2015 ஆகஸ்டில், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதற்கான பணிகளை மேற்கொள்ள, மூன்று ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது.இதையடுத்து, தங்கள் பழைய, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளுக்கு பதில், புதிய, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளை, டிச., 31க்குள் பெற்றுக் கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி, ஆகஸ்ட் மாதத்தில் அறிவுறுத்தியது. இதன்படி, இந்த வங்கி யின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளை பெற்று வருகின்றனர். பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களும், புதிய கார்டுக்கு மாறிவருகின்றனர்.
'சிப்' இல்லாத, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள், 2019 ஜன., 1 முதல் செயல்படாது. எனவே, வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் கோரி விண்ணப்பிக்கலாம்; அல்லது சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று, புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம். புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட கார்டு, இ.எம்.வி.,எனப்படும், 'யூரோபே, மாஸ்டர் கார்டு, விசா கார்டு' என, அழைக்கப்படுகிறது.
சேலத்தில் 3,840 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து



சேலத்தில் இதுவரை 3 ஆயிரத்து 840 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 25, 2018 04:15 AM
சேலம்,

சேலம் மாநகர பகுதிகளில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களா?, குடிபோதையில் இயக்குகிறார்களா?, சரக்கு ஆட்டோவில் பயணிகளை ஏற்றுகிறார்களா? என போலீசார் வாகன தணிக்கையின் போது சோதனை நடத்தி வருகிறார்கள்.


கலெக்டர் அலுவலகம் அருகில், புதிய பஸ்நிலைய பகுதி, பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே, 5 ரோடு, திருச்சி மெயின்ரோடு, ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் சாலை விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் போக்குவரத்து விதி முறைகளை மீறிய வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யுமாறு போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து, ரத்து செய்து உள்ளனர். இதன் காரணமாக விபத்துகள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- சேலத்தில் விபத்துகளால் ஏற்படும் இறப்புகளை தடுக்க வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதில் மதுகுடித்துவிட்டு ஓட்டுதல், அதிவேகமாக செல்லுதல், சிக்னல்களில் விதி முறைகளை மீறுதல், அதிக பாரம் ஏற்றுதல், சரக்கு ஆட்டோவில் பயணிகளை ஏற்றுதல் ஆகிய 6 காரணங்களுக்காக வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரை 4 ஆயிரத்து 484 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 840 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். இதன் காரணமாக கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 50 சதவீதத்திற்கு மேல் விபத்துகள் குறைந்துள்ளன. மேலும் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை: வீடு-கோவில்களில் தண்ணீர் புகுந்தது

பதிவு: நவம்பர் 25, 2018 04:30 AM

திருவாரூர்,

கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்துள்ளன. இதனால் குடிநீர் வினியோகம் உள்பட அடிப்படை தேவைகள் பாதிக்கப்பட்டது. இதனை தொடந்து மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விடிய, விடிய கன மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. நகர் பகுதி மட்டுமின்றி கிராமப்புற சாலைகளில் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். குறிப்பாக திருவாரூர்-தஞ்சை சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.

கஜா புயலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்குள் திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் பொதுமக்களின இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளது. புயலினால் வீடுகளை இழந்தும், கூரைகள் சேதமடைந்த நிலையில்மழை பெய்வதால் ஒதுங்குவதற்கு இடமின்றி குழந்தைகளுடன் பரிதவித்து வருகின்றனர். கொட்டும் மழையில் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்ட போதிலும் பணிகள் சற்று தேக்கமடைந்ததுள்ளது.

திருவாரூர் பகுதியில் வன்மீகபுரம் பகுதியில் உள்ள குடிசை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. கஜா புயலின் தாக்கத்தினால் திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தின் மேற்கூரை சிமெண்டு ஷீட்டுகள் உடைந்திருந்த நிலையில் மழை பெய்ததால் அலுவலகத்திற்குள் தண்ணீர் புகுந்தது. திருவாரூர் ரெயில்வே கீழ்பாலம் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது.

கனமழையினால் திருவாரூர் புதுத்தெருவில் உள்ள பழமை வாய்ந்த கருணாகரேஸ்வரர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. பிரகாரத்தை சுற்றி தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர். இதனை தொடர்ந்து மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

திருவாரூர்-174, நன்னிலம்-97, குடவாசல்-136, வலங்கைமான்-190, மன்னார்குடி-114, நீடாமங்கலம்-153, திருத்துறைப்பூண்டி-71, முத்துப்பேட்டை-28, பாண்டவையாறு தலைப்பு-117 என மொத்தம் 1,080 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 120 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக வலங்கைமானில் 190 மி.மீ. மழை பெய்துள்ளது.
Karnataka: At least 25 dead after bus plunges into canal in Mandya

PTI

PublishedNov 24, 2018, 2:06 pm IST

Most of the killed were children, police sources said, adding they were returning home after a half-day at school.


Visuals from the site of the accident showed locals using ropes to try and pull the bus out from the water body in the middle of what appears to be a field. (Photo: ANI | Twitter)

Bengaluru: A private bus carrying passengers, mostly schoolchildren, fell into a canal in Karnataka's Mandya district Saturday, killing at least 25 people, police said.

The bus completely submerged after falling into VC canal at Kanakanamaradi of Pandavapura taluka, they said, adding bodies of 23 victims was fished out.

Most of the killed were children, police sources said, adding they were returning home after a half-day at school. Long wails from the grief-stricken inconsolable kin of the victims followed as the rescue teams fished out bodies one after another.

(Photo: ANI/Twitter)

The district authorities roped in a crane to bring out the bus from the canal. Police had a difficult time controlling the crowd as people living nearby thronged the accident site.

Locals said they rescued three people even before the police reached the spot.

"I just came to know that a bus has fallen in a canal and 25 people have died. That is the latest report," said Deputy Chief Minister G Parameshwara, expressing grief over the tragedy.

Cancelling all his official engagements, Chief Minister HD Kumaraswamy rushed to the spot where rescue operations were on in full swing. He also announced a compensation of Rs 5 lakh for families of the deceased.
Accept 8th std certificate from grad, says Madras HC

DECCAN CHRONICLE.

PublishedNov 25, 2018, 6:05 am IST

The petitioner stated that he has not obtained the degree through the open university. 



Madras high court

Chennai: The Madras high court has directed the deputy commissioner, commercial tax office, to accept the 8th standard certificate sent by a B.Com graduate and consider his candidature in the selection process for the post of office assistant, if he is otherwise eligible.

Justice S.Vaidyanathan gave the directive while disposing of a petition from K.Sandhanamurugan, which sought a direction to the commercial tax office, to accept the 8th standard certificate sent by the petitioner on August 31, 2018, and consider his candidature in the selection process for the post of office assistant.

K.Mahendran, counsel appearing for the petitioner submitted that the petitioner is a B.Com., graduate, obtained in regular stream. When the petitioner made an application for the post of office assistant, pursuant to the advertisement made by the commercial tax office, it was rejected on the ground that 8th standard certificate was not enclosed along with the application, as the qualification for the said post is 8th standard, he added.

The judge said the sum and substance of the case of the petitioner was that the request of the petitioner was not considered, on the ground that he has not enclosed 8th standard certificate. Admittedly, the petitioner was a graduate in B.Com. Without clearing 8th standard, 10th standard and plus-2 , the petitioner could not have entered in the college, unless otherwise, the petitioner has obtained a degree through open university. The petitioner stated that he has not obtained the degree through the open university.

That being the case, there was no need for any one to produce the 8th standard certificate, if they have cleared 10th standard and above.

The non-enclosure of 8thstandard certificate was not a material for the selection to said post of office assistant, as the petitioner was a graduate. That apart, the petitioner has enclosed the 8th standard certificate in the present petition, the judge pointed out and gave the direction.

Chennai: Plea rejected for job on compassionate ground

DECCAN CHRONICLE.

PublishedNov 25, 2018, 6:08 am IST

The bench said a compassionate appointment was not a matter of course but only subject to the rules and regulations governed.


Madras high court

Chennai: Pointing out that the inability to cure would depend upon the stage of the disease and not the disease by itself, the Madras high court has dismissed a petition from a son seeking compassionate appointment on the ground that his father had contracted tuberculosis disease during the course of employment, retired later and died.

A division bench comprising Justices M.M. Sundresh and Krishnan Ramasamy dismissed the petition filed by M.Velish Kumar, which sought a direction to Southern Railway to issue an appointment order to him on compassionate ground.The petitioner's father was suffering from tuberculosis. He gave a representation prior to his retirement seeking to declare himself as unfit to work any longer and consequently a request was made for compassionate appointment to the petitioner. However, he continued to serve thereafter and reached the age of superannuation. Two years thereafter, the petitioner had requested the Southern Railway to appoint him on compassionate grounds. The request was rejected holding that the petitioner’s father was not so crippled and therefore, the petitioner cannot be given any appointment on compassionate ground, more so, when he reached the age of superannuation and retired from service. Hence, the petitioner filed the present petition.Counsel for the petitioner submitted that tuberculosis by its own nature was a deadly disease, for which, there was no cure. The petitioner’s father contracted the disease during the course of employment and therefore, he cannot be treated as suffering from partially crippling disease. His case would come under complete crippling to the extent of creating an inability to work, he added.

P.T.Ramkumar, counsel for Southern Railway, submitted that the petitioner's father completed his tenure. There was no material to show that he was so crippled. In fact, salary was paid to him for the services rendered by him, he added.

The bench said a compassionate appointment was not a matter of course but only subject to the rules and regulations governed. Admittedly, the petitioner’s father completed his period of service and worked up to the age of 60 years. Thereafter, he reached the age of superannuation and died. There was no material to hold that he was so crippled leading to inability to work. If that was a case, the petitioner's father himself would have taken up the issue while he was alive. If the petitioner's case was to be treated as one coming under partially medically de-categorized employee, there was a mandatory requirement of five years of service was required before such a request was made. Admittedly, there was no such compliance. "Thus, looking from any perspective, we do not find any merit in the petition. The contention of the counsel for the petitioner on the nature of disease also cannot be accepted. The inability to cure would depend upon the stage of the disease and not the disease by itself", the bench added.
All is not well with Chennai Metro Rail

The `20,000-crore Chennai Metro Rail project has been ridden with technical glitches, internal problems, and incomplete works in underground and elevated stretches.

Published: 24th November 2018 07:28 AM 



A commuter took a picture of water leak form a/c duct

Express News Service

CHENNAI : The Rs 20,000-crore Chennai Metro Rail project has been ridden with technical glitches, internal problems, and incomplete works in underground and elevated stretches.The underground stretch, which was inaugurated in May 2017, has often been plagued by the train stopping in between, and commuters facing a harrowing time.

Even the construction has been questioned after a roof slate of Shenoy Nagar Metro station fell on a passenger a couple of months ago. On Friday, Chennai Metro was criticised, again, when a passenger took a picture of a leaking roof on the second platform of Anna Nagar Tower station which was inaugurated this year.


“Water was leaking from the a/c duct, but we have changed to a new duct. Only the board needs to be replaced,” said an official. It is reported to be repaired in a couple of days by the station controller.
However, this is not the only incident in the Metro. Sources say that many incidents have not been reported. “There was a fire at night at Pachayappas College station. It was hushed up and rectified,” the source alleged.


Meanwhile, most of the works on the Metro are yet to be completed. Sources say that works are still pending in both elevated and underground stations and many a time, these pose a threat to passengers. There have also been train disruptions. The trains have suffered a breakdown more than seven times.
While officials dismiss it as technical glitches, sources inside Metro Rail blame the lack of skilled and trained employees being used to run the trains. “They have been outsourcing manpower from MEMCO.

The previous managing director was particular that only housekeeping and ticketing should be outsourced. Now, Chennai Metro is outsourcing drivers and plans are to have station controllers also,” a source said.

Prior to outsourcing, the employees of Metro Rail had to undergo training at New Delhi Metro Rail Corporation and after that, one year skill-based training at Chennai Metro after which they were pressed into service. “Now everything is outsourced mostly to Bengaluru-based companies,” said another source.

Meanwhile, there are internal issues including employees seeking pay rise on par with executives and as per Third Pay Revision Commission. The employees, mostly technicians, junior engineers and station controllers, allege that the pay rise is not on par with the executives who got nearly 20 per cent pay rise.
The employees also claim that Chennai Metro is the only one to have two shifts at most of the stations instead of three.

Chennai Metro has said that the demands of employees are unacceptable. “The junior engineer and technicians are already paid `39,000 and `23,000 respectively, which is high as per industry standards when taken into account the pay scale in government organisations and private establishments,” said a Metro Rail official.
Nalini gives Rs. 1,000 for cyclone relief

VELLORE, NOVEMBER 25, 2018 00:00 IST



Nalini Sriharan

Nalini Sriharan, one of the life convicts in the former Prime Minister Rajiv Gandhi assassination case, contributed Rs. 1,000 to the Chief Minister’s Public Relief Fund to aid relief efforts in the wake of Cyclone Gaja.

Her advocate, P. Pugalenthi, said the money came from her prisoner cash property account — an account created for inmates to deposit the wages they earn by working in the prison, and managed by the prison authorities.
Model test for NEET candidates

CHENNAI, NOVEMBER 25, 2018 00:00 IST

With the aim of preparing students of government schools to face the NEET, the School Education department will be encouraging students to appear for a State-level model test organised by The Hindu , in association with Chennai-based SMART Learning Centre.

“We wanted the government school students aspiring for the NEET to also to get a real-time experience of this critical exam and have hence approached the government and offered the test at a highly subsidised cost. They will be partnering with us to give the students this experience,” said Archana Ram, Director of SMART training resources.

The third edition of the model test for NEET aspirants will be held on January 6, 2019.

Real-time experience

The test will aim at providing NEET aspirants a real-time experience of the exam as well as give them State-level performance srank based on their results.

Corporates willing to partner this cause with the government for Government Schools, either in full or part may contact Praveen, the project director on 7401658483.

Students from private schools can apply atwww.slc.ac.in

NEWS TODAY 27.09.2024