Monday, December 10, 2018

ஆட்டம்காணும் மருத்துவக் கல்வியின் அச்சாணி!

கடந்த மூன்று ஆண்டுகால நீட் தேர்வு அனுபவம் நம் மாணவர்களைச் சூறாவளியாகச் சுழற்றி அடித்துள்ளது. நீட் தேர்வை ஏற்பதா எதிர்ப்பதா என்ற நிலையிலிருந்து நீட் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்வது என்ற கட்டத்துக்கு ஒட்டுமொத்த மாணவ சமூகமும் நகர்த்தப்பட்டிருக்கிறது. பாடத்திட்ட மாற்றம், நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள்… எனத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறையும் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவருகிறது.
இந்நிலையில் மருத்துவராகும் கனவைச் சுமந்து நிற்கும் இந்திய மாணவர்களின் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் சவால் ‘நீட்’ மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவின் மருத்துவக் கல்வி, மருத்துவ சேவை. சுகாதாரத்துக்கு அச்சாணியாக விளங்கும் இந்திய மருத்துவ கவுன்சில் தற்போது அபாயகரமான நிலைக்குள் அமிழ்த்தப்பட்டிருக்கிறது. இவற்றைப் பல கோணங்களில் அலசி ஆராய்கிறது, பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் ‘மறுக்கப்படும் மருத்துவம்’ நூல்.
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை பொதுச் செயலாளராக இருந்த காலம்தொட்டு தொடர்ந்து மருத்துவ உரிமைக்காகப் போராடிவரும் மருத்துவர் சீ.ச. ரெக்ஸ் சற்குணம், மாணவர் உரிமைக்காகப் போராடிவரும் மருத்துவர் S. காசி, டெல்லி எய்ம்ஸில் மருத்துவ முதுகலைப் பட்டம் பெற்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் போராடிவரும் மருத்துவர் G.K. கலைச்செல்வம் உள்ளிட்ட மருத்துவத் துறை சார்ந்த வல்லுநர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இருக்கிறார் கல்விச் செயற்பாட்டாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு.
ஏன் கலைக்க வேண்டும்?
இந்தியா முழுவதும் சீரான மருத்துவ வசதிகளை உருவாக்கத் தவறிவிட்ட காரணத்தாலும், ஊழல் மலிந்த துறையாக மருத்துவத் துறை மாறக் காரணமாகிவிட்டதாலும் இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டுத் தேசிய மருத்துவ ஆணையத்தை ஏற்படுத்துவதற்கான மசோதா (NMC Bill, 2017) நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் 2014 ஜூலையிலேயே தொடங்கிவிட்டன. இது தொடர்பான நடவடிக்கைகளில் ஒன்றுதான் அனைவருக்குமான பொது நுழைவுத் தேர்வான ‘நீட்’.
இதன் விளைவாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது, பட்டப்படிப்பு மருத்துவக் கல்விக்கான தரத்தை நிர்ணயித்துப் பராமரிப்பது, மேற்படிப்பு மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவது, புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான அனுமதியை வழங்குவது உள்படப் பலவற்றைச் செய்துவந்த இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்குப் பதிலாகத்தான் தேசிய மருத்துவ ஆணையத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்திய மருத்துவ கவுன்சிலை மறுசீரமைக்க வேண்டும், ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அவற்றைச் செய்வதற்குப் பதிலாக இந்தப் பரிந்துரைகளைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. இதனால் மருத்துவக் கல்வி கற்க எத்தனிக்கும் ஏழை எளிய மாணவர்களின் கனவு எட்டாக் கனியாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க முயல்கிறது ‘மறுக்கப்படும் மருத்துவம்’ புத்தகம்.
வசூல் ராஜாவாகும் தனியார் மருத்துவக் கல்லூரிகள்
‘மருத்துவத்தைச் சந்தையாக்கும் மசோதா’ என்ற கட்டுரையில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் மருத்துவ ஆணையத்துக்கும் உள்ள வேறுபாடுகள் விவாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில புள்ளிகள் இந்திய மருத்துவக் கல்வி எதிர்கொள்ளவிருக்கும் அபாயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மருத்துவத் துறைக்குள் நிகழும் விவகாரங்கள் மாணவர்களுக்கு எதற்கு என்று கடந்துபோக முடியாதபடி அவை அச்சுறுத்துகின்றன.
 
இந்திய மருத்துவ கவுன்சில்தான் முறைப்படி ஆய்வு நடத்தி, பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான அங்கீகாரத்தைத் தரும். ஆனால், இதே விவகாரத்தில் அந்தந்தக் கல்லூரிகளே முதுநிலைப் படிப்புகளைத் தொடங்கி நடத்தலாம் என்கிறது தேசிய மருத்துவ ஆணையம்.
இந்திய மருத்துவ கவுன்சிலின்படி கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் கவுன்சிலுக்கும் மாநில அரசுகளுக்கும் உள்ளது. ஆனால், மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை 40 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயம் செய்யும். ஏனைய 60 சதவீத மாணவர்களிடம் தன் விருப்பம்போல கல்லூரி நிர்வாகமே கட்டணம் வசூல் செய்யலாம்.
இந்தப் பின்னணியில்தான் நீட் தேர்வைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பிளஸ் டூ மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து மருத்துவப் படிப்புக்கான சீட்டு வழங்கிய நிலைமையை மாற்றி எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வு நடத்துவது என்பது தகுதி வாய்ந்த மாணவர்களுக்கான திறவுகோல் எனச் சொல்லப்படுகிறது.
ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 119 அதாவது வெறும் 16.53 சதவீதம் மட்டுமே மதிப்பெண் பெற்றவர்கள் பணமிருந்தால் தனியார் நிர்வாக ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர முடியும். ஆனால், 250 அல்லது 300 மதிப்பெண் வாங்கும் மாணவர் பணம் செலுத்த முடியாத பட்சத்தில் எம்.பி.பி.எஸ். படிக்க முடியாது.
அடுத்த பிரச்சினை ‘நெக்ஸ்ட்’
எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வைக் கட்டாயமாக்கி ஒரு புறம் கதவை மூடியது மட்டுமல்லாமல் எம்.பி.பி.எஸ். முடித்துப் பதிவு செய்து மருத்துவப் பணி செய்ய வேண்டுமானால் ‘நெக்ஸ்ட்’ எனப்படும் தேசிய வெளித்தேர்வையும் (National Exit Exam - NEXT) கட்டாயம் எழுத வேண்டும் என்று இந்த ஆணையம் அறிவித்திருப்பதுதான் அடுத்த அதிர்ச்சி. இதனால் பல குழப்பங்கள் ஏற்படும்.
எம்.பி.பி.எஸ். படிப்பில் இறுதியாண்டில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சைகள், மகளிர் நோய் ஆகியவற்றைப் பிரதானமாகப் படிப்பார்கள். அதிலும் தற்போது நடைமுறையில் உள்ள இறுதியாண்டுத் தேர்வு என்பது எழுத்துத் தேர்வு, நோயாளிகளைப் பரிசோதிக்கும் திறன் உட்படச் செய்முறைத் தேர்வும் இணைந்த ஒன்றாகும்.
இத்தகைய விஷயங்களை Multiple Choice Questions என்ற அடிப்படையில் நடத்தப்படும் தேர்வில் மாணவரின் நோயறிதிறனை, நோய் தீர்க்கும் அறிவை முழுமையாகச் சோதிக்க இயலாது. அதேபோல, ‘காலா அஸார்’, இதயத்தின் தமனிகளில் அடைப்பு, ஜப்பானிய யானைக்கால் போன்ற நோய்கள் வட இந்தியாவில் பரவலாக உள்ளன.
இத்தகைய நோய்கள் தென் இந்தியாவில் குறைவு. இப்படி இருக்க மருத்துவக் கல்வியில் பொதுவான பாடத்திட்டம் என்பது உயிரைக் காக்கும் தொழிலான மருத்துவத்தை வெறும் ஏட்டுக் கல்வியாக மாற்றும் விபரீதமாகும் என்பது ‘தேசிய மருத்துவ கமிஷனும் அதன் விளைவுகளும்’ கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது
மறுக்கப்படும் மருத்துவம் தொகுப்பு: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018 தொலைபேசி: 044-24332924 | ரூ.30/-
முரண்களின் மூட்டையா?
இதைவிடவும் சிக்கலானது, இந்திய முறை மருத்துவப் பட்டதாரிகள், ஹோமியோபதி பட்டதாரிகள் இணைப்புப் படிப்பாக (Bridge Course) ஆறு மாதம் அலோபதி மருத்துவத்தைப் படித்துவிட்டுக் கிராமப்புறச் சுகாதாரச் சேவைகளில் ஈடுபடலாம் என்கிறது இந்த ஆணைய மசோதா. ஒரு புறம் ஐந்தரை ஆண்டுகள் படித்துப் பயிற்சி பெற்ற எம்.பி.பி.எஸ். மருத்துவரைத் தரப்படுத்துகிறோம் என்று கூறி மீண்டும் ‘நெக்ஸ்ட்’ எழுதச் சொல்கிறது. மறுபுறம் ஆறு வருடப் படிப்பை ஆறு மாதங்களிலேயே கற்றுக்கொள்ளலாம் என்கிறது. இப்படிப் பல முரண்களின் மூட்டையாக இந்த மசோதா காணப்படுவதை ‘மறுக்கப்படும் மருத்துவம்’ பக்கத்துக்குப் பக்கம் அலசுகிறது.
பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளியில் பெற்ற கல்விக்கு அப்பால் தனியாகச் சிறப்புப் பயிற்சி எடுத்து ‘நீட்’ தேர்வை எதிர்கொள்வதுபோலவே நான்கரை ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டுக் கடைசியில் தனியாகச் சிறப்புப் பயிற்சி எடுத்து ‘நெக்ஸ்ட்’ தேர்வை எழுத வேண்டிய சூழல் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதன் வழியாக நம்முடைய பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் அத்தனையும் பயனற்றவை என்ற பொதுப்புத்தியைத்தான் இந்தத் திட்டம் ஏற்படுத்திவருகிறது. மறுபுறம் மீண்டும் மீண்டும் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத, அதிகச் செலவு செய்து சிறப்புப் பயிற்சிகளை மேற்கொள்ளத் திராணி அற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு முற்றிலுமாக மருத்துவக் கல்வி மறுக்கப்படும் அபாயம் சூழ்ந்துள்ளது.

ஐந்து மாநிலத் தேர்தல்கள்: ஒரு குறுக்குவெட்டுப் பார்வை!

Published : 10 Dec 2018 09:19 IST





‘அரையிறுதித் தேர்தல்’ என்று வர்ணிக்கப்பட்ட ஐந்து மாநில சட்ட மன்றத் தேர்தல்களின் முடிவுகள் நாளை வெளியாகின்றன. மிசோரம், சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்திருக்கும் தேர்தல்களின் முடிவுகள் 2019 மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலைச் சந்தித்த மாநிலங்களைப் பற்றிய ஒரு குறுக்குவெட்டுப் பார்வை இது:

மிசோரம்

இந்தியாவின் வட கிழக்கு மாநிலம். காங்கிரஸும் மிசோ தேசிய முன்னணியும் பிரதான சக்திகள். மாநிலக் கட்சிகள்: மிசோரம் மக்கள் மாநாட்டுக் கட்சி, சோரம் தேசியவாதக் கட்சி. பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் உண்டு. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்ட மன்றத்தில், காங்கிரஸ் 34, தேசிய ஜனநாயகக் கூட்டணி 5, மிசோரம் மக்கள் மாநாட்டுக் கட்சி 1 இடங்களைக் கடந்த சட்ட மன்றத்தில் கையில் வைத்திருந்தன.

மாநிலத்தின் பின்னணி : பரப்பளவு 21,081 ச.கி.மீ. மக்கள்தொகை 10.97 லட்சம். எட்டு மாவட்டங்கள். 91% வனப்பரப்பைக் கொண்ட மாநிலம். பரப்பளவில் 25-வது இடம். மக்கள்தொகையில் 28-வது இடம். கிழக்கு, தெற்கில் மியான்மரும், மேற்கில் வங்கதேசமும், வட மேற்கில் திரிபுராவும், வடக்கில் அசாமும், வட கிழக்கில் மணிப்பூரும் இதன் எல்லைகள். எழுத்தறிவு 91.5%. மாநில உற்பத்தி மதிப்பு ரூ.6,991 கோடி. ஆட்சி மொழிகள்: மிசோ, ஆங்கிலம், இந்தி. மியான்மர், இஸ்ரேலிலிருந்து வந்த பெனேய் மெனாஸே உள்ளிட்ட பழங்குடிகள் நிரம்பிய பாரம்பரியப் பிரதேசம். கிறிஸ்தவர்கள் 87%. தேரவாத பெளத்தர்கள் 8.5%. இந்துக்கள் 2.7%. பழங்குடிகளில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள்.

பொருளாதாரம்: 21 பெரிய மலைத்தொடர்கள் உள்ள மாநிலம். ஏராளமான பள்ளத்தாக்குகள். பெரிய ஆறுகள்: சிம்துய்புய், காலா டான். ஏராளமான ஓடைகளும் அருவிகளும் இரண்டு பெரிய நன்னீர் ஏரிகளும் உள்ளன. வேளாண்மை, தொழில்வளம் இரண்டிலும் பின்தங்கியது. நெல், வாழை, இஞ்சி, மஞ்சள், ஆரஞ்சு, செளசெள, மூங்கில் விளைகின்றன. நாட்டின் மூங்கில் சாகுபடியில் மிசோரத்தின் பங்கு 14%. ஆண்டுக்கு 5,200 டன் மீன் கிடைக்கிறது. தோட்டக்கலைப் பயிர்களுக்கும் காய்கறி சாகுபடிக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. பட்டு வளர்ப்பும் உண்டு. மின்சாரம், போக்குவரத்து கட்டமைப்பு, தகவல்தொடர்பு, மூலதனம் ஆகியவை இல்லாததால் தொழில் வளர்ச்சி இல்லை. காடுகளையும் புதர்களையும் எரித்து விவசாயம் செய்வதால் விவசாய உற்பத்தி, உற்பத்தித் திறன் இரண்டுமே குறைவு.

கிராமம் - நகரம்: தலைநகரம் அய்ஜோல். சம்பாய், கோலாசிப், சாய்துல் உள்ளிட்ட நகரங்கள் உண்டு. போக்குவரத்து வசதிக்கு உகந்த நிலப்பரப்பற்ற இயற்கைப் பிரதேசங்கள் அதிகம். எனினும், நகர்மயமாதலில் முன்னேற்றம் காட்டும் மாநிலம். 52% மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள். தென்சால், ஙோப்பா, லுங்லேயி உள்ளிட்ட சிறு நகரங்களும் சுற்றுலாவுக்கு ஏற்றவை. இயற்கைப் பிரதேசங்கள் ஏராளம் என்றாலும் சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை பெரிய முன்னேற்றம் இல்லை. முய்ஃபாங், ரெய்க் உள்ளிட்ட மலை வாழிடங்களும், பாலாக் தில், டாம் தில் போன்ற ஏரிகளும் இங்கே பிரசித்தம். மிசோ கவிஞர்கள் சதுக்கம், டம்பா புலிகள் காப்பகம், முர்லன் தேசியப் பூங்கா இங்கு உள்ளன.

பேசுபொருள்: தொடர்ந்து காங்கிரஸால் ஆளப்படும் மாநிலம். பின்தங்கிய நிலைக்கு அதுதான் காரணம் என்கின்றன எதிர்க்கட்சிகள். காங்கிரஸ் அல்லாத தேசியக் கட்சிகள் இங்கு வலுவாக இல்லை. காங்கிரஸிலிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்கள்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். காங்கிரஸ் இங்கு தடுப்பாட்டம் ஆடுகிறது. இதுவரை செய்த வளர்ச்சிப் பணிகளைப் பேசுகிறது.

சத்தீஸ்கர்

மத்திய பிரதேசத்திலிருந்து பிரிந்த மாநிலம் சத்தீஸ்கர். காங்கிரஸ், பாஜக பிரதானக் கட்சிகள். பாஜகவின் கோட்டைகளில் இம்மாநிலமும் ஒன்று. பாஜக முதல்வர் ரமண் சிங் தொடர்ந்து மூன்று முறை வென்று ஆட்சியில் இருக்கிறார். மொத்தம் உள்ள 90 இடங்களில், பாஜக 49 இடங்கள், காங்கிரஸ் 39 இடங்களைக் கடந்த சட்ட மன்றத்தில் கையில் வைத்திருந்தன.

மாநிலப் பின்னணி: பரப்பளவு 1,35,192 ச.கி.மீ. மக்கள்தொகை 2.56 கோடி. பரப்பளவில் நாட்டில் 10-வது இடம். மக்கள்தொகையில் 17-வது இடம். வட மேற்கில் மத்திய பிரதேசமும், மேற்கில் மஹாராஷ்டிரமும், தெற்கில் ஆந்திரமும், கிழக்கில் ஒடிஷாவும், வட கிழக்கில் ஜார்க்கண்டும் இதன் எல்லைகள். ஜிடிபி ரூ.3.26 லட்சம் கோடி. வளர்ச்சிவீதம் 6.7%. எழுத்தறிவு 70%. ஆட்சிமொழி இந்தி. 27 மாவட்டங்கள். சட்ட மன்றத் தொகுதிகள் 90. மக்களவைத் தொகுதிகள் 10. இந்துக்கள் 97%. மக்கள்தொகையில் 34% பழங்குடிகள்.

பொருளாதாரம்: கனிம வளங்கள் நிறைந்த சத்தீஸ்கரில் சுரங்கத் தொழில் பிரதானம். பெரு நிறுவனங்களின் வேட்டைக்காடு என்ற பெயரும் உண்டு. நாட்டின் உருக்கு உற்பத்தியில் 15% இங்குதான். ஆண்டுக்கு 54 லட்சம் டன் உருக்கும், 6 லட்சம் டன் அலுமினியமும் உற்பத்தியாகின்றன. நாட்டின் சிமென்ட் உற்பத்தியில் 20% பங்களிப்பு இம்மாநிலத்துடையது. நிலக்கரி வளம் கணக்கிலடங்காதது. இரும்பு, சுண்ணாம்புக்கல், டோலமைட், பாக்ஸைட், வைரம் என்றெல்லாம் இங்கிருந்து கனிமங்கள் உலகம் முழுக்க அனுப்பப்பட்டாலும் ஏழ்மை பீடித்திருக்கும் மாநிலம். 57.88 லட்சம் ஹெக்டேரில் ஒருபோக சாகுபடிதான். சுமார் 70,000 ஹெக்டேரில் மட்டும் இருபோக சாகுபடி. நெல், சோளம், பருப்பு வகைகள், சிறுதானியங்கள், நிலக்கடலை, சோயாபீன்ஸ், சூரியகாந்தி முக்கிய சாகுபடி. விவசாயத்தையே 80% மக்கள் சார்ந்திருக்கிறார்கள்.

கிராமம் - நகரம்: தலைநகரம் ராய்ப்பூர். பிலாய், கோர்பா, பிலாஸ்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உண்டு. மகாநதியின் படுகைப் பிரதேசம். சோன் நதியின் உபநதியான ரிஹந்த், இந்திராவதி, ஜோக், அர்பா, ஷிவ்நாத் ஆகிய ஆறுகள் பாய்கின்றன. மத்தியப் பகுதியில் உள்ள ராய்ப்பூர் – பிலாய் – துர்க் நகரங்கள் தொழில்மயமாகியிருக்கின்றன என்றாலும், தென்பகுதியில் வறுமை நிலவுகிறது. 45% மேற்பட்ட நிலப்பரப்பு வனப்பகுதி. நகர்மயமாதல் விஷயத்தில் பின்தங்கிய மாநிலம். வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் வசதிக் குறைவும் சேர்ந்து மாவோயிஸ்ட்டுகளை செல்வாக்கு பெற வைத்திருக்கின்றன. மாநிலத்தின் பல வனப்பகுதிகள் அவர்களுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றன.

பேசுபொருள்: காங்கிரஸிலிருந்து பிரிந்துசென்ற முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகியின் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது மூன்றாவது சக்தியாகிறது. ரமண் சிங் ஆட்சியில் தொடர்ந்து தொடரும் பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. மாநிலத்தில் ஜனநாயக சூழல் இல்லை. ஊழல் மலிந்த ஆட்சி ஆகியவற்றை காங்கிரஸ் பேசியது. பாஜகவோ மாநிலத்தில் ஆற்றியிருக்கும் பணிகளையும் மாவோயிஸ்ட்டுகள் ஒடுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டிப் பேசியது. மூன்றாவது சக்தியாக உருவெடுத்திருக்கும் அஜீத் ஜோகி ஜெயிக்கிறாரோ இல்லையோ காங்கிரஸை காலிசெய்யும் வகையில் பேசினார்.

தெலங்கானா

இந்தியாவின் தென்னிந்திய மாநிலம். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி(டிஆர்எஸ்), காங்கிரஸ் இரண்டும் பிரதானக் கட்சிகள். மொத்தம் உள்ள 119 தொதிகளில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 90, காங்கிரஸ் 13, அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லிமீன் 7, பாஜக 5, தெலுங்கு தேசம் 3, மார்க்சிஸ்ட் கட்சி 1 இடங்களைக் கடந்த சட்ட மன்றத்தில் கையில் வைத்திருந்தன.

மாநிலப் பின்னணி: பரப்பளவு 1,12,077 ச.கி.மீ. மக்கள்தொகை 3,51,93,978. வடக்கில் மஹாராஷ்டிரம், மேற்கில் கர்நாடகம், கிழக்கு மற்றும் தெற்கில் ஆந்திரம் இதன் எல்லைகள். பரப்பளவு - மக்கள்தொகை இரண்டிலும் 12-வது இடம். ஆட்சி மொழி: தெலுங்கு, உருது, ஆங்கிலம். மாவட்டங்கள் 31. ஜிடிபி ரூ.8.43 லட்சம் கோடி. சட்ட மன்றத் தொகுதிகள் 119, மக்களவைத் தொகுதிகள் 17. இந்துக்கள் 85.1%, முஸ்லிம்கள் 12.7%, கிறிஸ்தவர்கள் 1.3%.

பொருளாதாரம்: நெல், கரும்பு, பருத்தி, புகையிலை, வாழை, நிலக்கடலை, சூரியகாந்தி, எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், சிறு தானியங்கள் சாகுபடி அதிகம். கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தோட்டக்கலை பிற தொழில்கள். தொழில் துறையிலும் முன்னேறிவரும் மாநிலம். மோட்டார் வாகனங்கள் - உதிரிபாகங்கள் தயாரிப்பாலைகள், ஜவுளி ஆலைகள், ஆயத்த ஆடைத் தயாரிப்பகங்கள், மருந்து-மாத்திரைத் தொழில், வெளிநாட்டவர்களுக்கும் மருத்துவ சேவை அளிக்கும் பெரிய மருத்துவமனைகள் ஆகியவை கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய அளவில் உத்வேகம் அடைந்துவருகின்றன. கோல்கொண்டாவில் நவரத்தினக் கற்கள் கிடைக்கும் கனிமச் சுரங்கங்கள் உண்டு. விவசாயம், தொழில்வளம் மிக்க மாநிலம். சேவைத் துறையில் தகவல்தொழில்நுட்பம் முன்னிலை வகிக்கிறது.

நகரம் – கிராமம்: தலைநகரம் ஹைதராபாத். வாரங்கல், நிஜாமாபாத், கம்மம், கரீம்நகர் பெரிய நகரங்கள். ஐந்து மாநகராட்சிகள், ஆறு நகராட்சிகள் இங்கு உள்ளன. கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா நதிகள் பாய்கின்றன. நாகார்ஜுனசாகர் என்கிற மிகப் பெரிய நில அணை திட்டத்தால் பாசன நீர் கிடைக்கிறது. பீமா, திண்டி, கின்னரசானி, மாஞ்சரா, மானேர், பிராணஹிதா, பெத்தவாகு, தலிபேரு என்ற சிறிய ஆறுகளும் உண்டு. கணிசமான நிலங்கள் வானம் பார்த்த பூமி. சார்மினார், கோல்கொண்டா கோட்டை, குதுப் ஷாஹி கல்லறை, போங்கிர் கோட்டை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உண்டு. திரைப்படத் தயாரிப்புத் தொழிலுக்குப் புகழ்பெற்ற ராமோஜி ராவ் திரைப்பட நகரம் ஹைதராபாதில் உள்ளது.

பேசுபொருள்: தெலங்கானா போராட்டத்தில் முன்னின்றதாலேயே தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்குத் தனி செல்வாக்கு. வளர்ச்சித் திட்டங்களை சாதனைகளாகப் பேசுகிறது. பரம வைரியான தெலுங்கு தேசத்துடன் கூட்டணி சேர்ந்திருக்கிறது காங்கிரஸ். பாஜகவுக்கும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கும் மறைமுகக் கூட்டு என்று அது பேசுகிறது. பாஜகவும் தனித்துக் களமிறங்குகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போட்டியிடவில்லை.

ராஜஸ்தான்

இந்தியாவின் வட மேற்கில் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப்புற மாநிலம். பாஜக, காங்கிரஸ் இரண்டும் பிரதானக் கட்சிகள். மற்ற கட்சிகளுக்கு இங்கு செல்வாக்கு கிடையாது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறுவது கேரளத்தைப் போல இங்கும் வழக்கம். மொத்தம் உள்ள 200 தொகுதிகளில், பாஜக 163, காங்கிரஸ் 21 இடங்களைக் கடந்த சட்ட மன்றத்தில் கையில் வைத்திருந்தன.

மாநிலப் பின்னணி: பரப்பளவு 3,42,239 ச.கி.மீ. நாட்டின் பரப்பளவில் 10.4%. பரப்பளவில் நாட்டின் முதல் மாநிலம். மக்கள்தொகை 6.86 கோடி. மக்கள்தொகையில் ஏழாவது மாநிலம். வட மேற்கில் பாகிஸ்தானின் பஞ்சாபும், மேற்கில் சிந்துவும் இதன் எல்லைகள். கல்வியறிவு 67.06%. ஆட்சிமொழி: இந்தி, ஆங்கிலம். ஜிடிபி ரூ.8.40 லட்சம் கோடி. மாவட்டங்கள் 33. சட்ட மன்றத் தொகுதிகள் 200. மக்களவைத் தொகுதிகள் 25. இந்துக்கள் 88.49%. முஸ்லிம்கள் 9%. கிறிஸ்தவர்கள் 0.14%.

பொருளாதாரம்: கனிம அகழ்வு, கச்சா எண்ணெய் தயாரிப்பு, கால்நடை வளர்ப்பு, வேளாண்மை முக்கியத் தொழில்கள். அன்றாடம் 3 லட்சம் பீப்பாய் கச்சா பெட்ரோலிய எண்ணெய் எடுக்கப்படுகிறது. சலவைக்கல் என்று அழைக்கப்படும் பளிங்குக் கல் வெட்டியெடுப்பு முக்கியக் கனிமத் தொழில். உப்பு, செம்பு, துத்தநாகம் வெட்டியெடுக்கப்படுகின்றன. நாட்டின் உரோம உற்பத்தியில் 40% முதல் 50% வரை ராஜஸ்தானுடையது. பாலியெஸ்டர் இழை தயாரிப்பில் நாட்டின் இரண்டாவது மாநிலம். மேற்கு பணஸ், லூனி, கக்கர் உள்ளிட்ட ஆறுகள் உண்டு.

கிராமம் – நகரம்: தலைநகரம் ஜெய்ப்பூர். பெரிய நகரங்கள் ஜோத்பூர், கோட்டா, பிகானீர், உதய்ப்பூர், அஜ்மீர். ஆரவல்லி மலைகள் அழகு செய்யும் மாநிலம் இது. சாம்பர், குச்சமான், தித்துவானா, பச்பத்ரா, ஃபலோதி ஆகிய உப்புநீர் ஏரிகள் உள்ளன. ராஜஸ்தானின் நிலைமையைக் கருதி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்கள் உபரிநீரைக் குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் தருகின்றன. சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளின் உபரிநீர் நிலத்திலிருந்து உயர்த்திக் கட்டப்பட்ட கான்கிரீட் கால்வாய்கள் மூலம் எடுத்துவரப்படுகிறது. இது விவசாயத்துக்கும் கால்நடை வளர்ப்புக்கும் பெரிதும் உதவுகிறது. ராஜஸ்தானில் வெள்ளாடு, செம்மறி ஆடு, பசு, எருது, ஒட்டகம் வளர்ப்பு அதிகம்.

பேசுபொருள்: முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் மீதான அதிருப்தி மக்களிடம் மட்டுமல்லாது கட்சிக்குள்ளும் எதிரொலித்தது. வேலைவாய்ப்பின்மையை காங்கிரஸ் பிரச்சினையாகப் பேசியது. காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார், கோஷ்டிப் பூசல் ஆகியவற்றை பாஜக பேசியது.

மத்திய பிரதேசம்

இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள மாநிலம். பாஜக, காங்கிரஸ் இரண்டும் பிரதானக் கட்சிகள். பாஜகவின் கோட்டை. 15 ஆண்டுகளாக அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான். மொத்தம் உள்ள 231 தொதிகளில், பாஜக 166, காங்கிரஸ் 57, பகுஜன் சமாஜ் 4 இடங்களைக் கடந்த சட்ட மன்றத்தில் கையில் வைத்திருந்தன.

மாநிலத்தின் பின்னணி: பரப்பளவு 3,08,252 ச.கி.மீ. பரப்பளவில் இரண்டாவது மாநிலம். மக்கள்தொகை 7.27 கோடி. மக்கள்தொகையில் ஐந்தாவது இடம். சட்ட மன்றத் தொகுதிகள் 230. மக்களவைத் தொகுதிகள் 29. ஜிடிபி ரூ.2.86 லட்சம் கோடி. வளர்ச்சியடைந்துவரும் மாநிலம். வட மேற்கில் ராஜஸ்தான், வடக்கில் உத்தர பிரதேசம், கிழக்கில் சத்தீஸ்கர், தெற்கில் மஹாராஷ்டிரம், மேற்கில் குஜராத் இதன் எல்லைகள். மொத்தம் 52 மாவட்டங்கள். ஆட்சிமொழி இந்தி. கல்வியறிவு 72.6%. இந்துக்கள் 91%. முஸ்லிம்கள் 6.6%. பழங்குடிகள் 21%.

பொருளாதாரம்: நிலக்கரி, சுண்ணாம்புக்கல், எண்ணெய் வித்துக்கள், இரும்புத் தாது, தாமிரம், மாங்கனீஸ், வைரம் என்று இயற்கை வளங்கள் ஏராளம். ஜவுளித் துறை, சிமென்ட், உருக்கு, உணவுப் பதப்படுத்துதல், ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில் துறைகள் வளர்ச்சி கண்டிருக்கின்றன. வேளாண்மை சார்ந்த மாநிலம். நர்மதை, தபதி நதிகள் பாயும் பிரதேசம். பஞ்சார், தவா, மச்னா, ஷக்கர், டென்வா, சோன்பத்ரா ஆகிய சிறு ஆறுகளும் பாய்கின்றன. கோதுமை, சோயாபீன்ஸ், உளுந்து, கரும்பு, நெல், சோளம், பருத்தி, கடுகு அதிகம் விளையும் மாநிலம். நிலப்பரப்பில் 30% காடுகள். நாட்டின் 12% காடுகள் இங்கு உள்ளன. வேளாண் துறையைப் பெரிய அளவில் வளர்த்தெடுத்திருக்கிறார் சவுஹான். அதேசமயம், விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காததும் பெரிய பிரச்சினையாகியிருக்கிறது.

கிராமம் - நகரம்: தலைநகரம் போபால். வேகமாக நகர்மயமாகிவரும் மாநிலங்களில் ஒன்று. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நகரங்கள் இந்தூர், போபால், ஜபல்பூர், குவாலியர். 14 மாநகராட்சிகள். 96 நகராட்சிகள். நகரப் பஞ்சாயத்துகள் 249. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களான கஜுராஹோ சிற்பங்கள், சாஞ்சி ஸ்தூபி, பீம்பேட்கா பாறை வாழிடங்கள் இங்கு உண்டு. மனிதவளத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலம். வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்று. ஊட்டச்சத்து குறைவால் வளர்ச்சி குன்றிய மாநிலம். பெண்களிடையே ரத்தசோகை அதிகம். பெண் சிசுக் கருக்கலைப்பும் அதிகம்.

பேசுபொருள்: வியாபம் ஊழல், விவசாயிகள் மீதான துப்பாக்கிச்சூடு, 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரே கட்சியின் ஆட்சி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைப் பேசியது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸுக்குள் முதல்வர் வேட்பாளர் யார் என்று பாஜக கேட்டது. இங்கும் காங்கிரஸின் கோஷ்டிப் பூசலை பாஜக விமர்சனமாக்கியது. பகுஜன் சமாஜ், சமாஜவாதி ஆகிய கட்சிகள் ஒருசில பகுதிகளில் மட்டும் செல்வாக்குடன் உள்ளன.
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு: லண்டன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Published : 10 Dec 2018 18:03 IST

லண்டன்




இந்திய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்று லண்டன் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப தடையில்லை என வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்திய வங்கிகளில் கிங்பிஷர் நிறுவன தொழிலதிபர் மல்லையா ரூ. 9,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றார். அமலாக்கத் துறையும், சிபிஐயும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருடைய சொத்துக்களை முடக்கியது.

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவதற்கான வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதித் தீர்ப்பு நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீ ரென்று தான் வாங்கிய கடனை 100 சதவீதம் வட்டியில்லாமல் திருப்பித் தருவதாகவும், அரசும் வங்கிகளும் தயவு செய்து இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிமன்றத்துக்கு வந்த விஜய் மல்லையா வெளியே செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்திய வங்கிளுக்கு செலுத்த வேண்டிய தொகையை திருப்பித் தர தயாராக இருப்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து, விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க எந்த தடையும் இல்லை என வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற உத்தரவு விரைவில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு பிரிட்டன் அரசு முடிவெடுக்கும்.

இதையடுத்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. எனினும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

இதனிடையே அவர் இந்தியா அழைத்து வரப்பட்டால் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அவரை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட உள்ளார். மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Indian-Origin Man Jailed For Molesting Woman On Bus In Singapore

The woman asked Kajayendran Krishnan to stop touching her but he persisted, calling her "sarakku", or "hot chick" in Tamil.

Indians Abroad | Press Trust of India | Updated: December 04, 2018 16:27 IST



The prosecutor had previous convictions for disorderly behaviour.

SINGAPORE:

An Indian-origin man in Singapore was sentenced on Tuesday to 10 weeks in prison for molesting a woman on a bus, a media report said.

Kajayendran Krishnan, a 50-year-old permanent resident from Malaysia, pleaded guilty to one charge of using criminal force intending to outrage the woman's modesty and another of insulting her modesty.

A third charge was taken into consideration for sentencing, the Channel News Asia reported.

The court heard that Mr Krishnan boarded shuttle bus service CW6 from Singapore's Boon Lay estate heading towards Tuas Checkpoint and onwards to the Southern Malaysian state of Johore on the evening of May 7.

The woman, a 44-year-old Malaysian, was sitting on the left-most seat in the last row with an empty seat beside her, the report said.

Mr Krishnan, who was drunk, sat beside her and used his hand to caress her right arm with the intention to molest her, it said.

The woman quickly moved away and shifted her body towards the window, Deputy Public Prosecutor Mark Yeo told the court.

She asked Mr Krishnan to stop touching her but he persisted, calling her "sarakku", or "hot chick" in Tamil. He also uttered expletives in Tamil and Hokkien (a Chinese dialect).

The woman tried to leave, standing up in order to cross to the accused's right. However, Mr Krishnan extended his legs, trapping the woman in the corner of the bus and grabbing her arm, caressing it, the report said.

The victim approached an Immigration and Checkpoints Authority officer to report the matter once the bus arrived at Tuas Checkpoint.

The prosecutor asked for a custodial sentence, leaving the exact term up to the judge.

He pointed out that the accused had previous convictions for disorderly behaviour and that the current incident occurred on public transport and with wrongful restraint.

Mr Krishnan, who was unrepresented, told the court at first that he was not sitting down on the bus, but standing up instead.

However, after the prosecutor said he had video footage, Mr Krishnan told District Judge Mathew Joseph that he intended to go ahead with his plea of guilt.

Telling the court about his problems of being unemployed, divorce and supporting elderly mother in Malaysia, Mr Krishnan said he was sorry and wished to apologise to the woman.

Asked by the judge if he had been drunk, he admitted that he had indeed drunk alcohol as he had "some personal problems".

District Judge Mathew Joseph said, "Far from showing remorse, you are trying to wriggle your way out of responsibility of this by saying that you were standing up, then later when the prosecutor said there was video footage, you said it was accidental. To me it shows you are not remorseful."

The Judge added that no woman passenger should have to look and see if she was about to be molested or harassed on public transport.

"Let me suggest to you that the next time you are drunk, you don't take the bus. You walk home. Lest you get into any mischief," the judge added.

The sentence was backdated to September 27 this year, when the accused was remanded.
Madras HC issues notice to Vijaya Bhaskar for riding motorcycle without helmet 

Source : Last Updated: Thu, Dec 06, 2018 17:47 hrs [India], Dec 6 (ANI): 

The Madras High Court on Thursday issued a notice to Tamil Nadu Health Minister Vijaya Bhaskar for riding a motorcycle without a helmet. The notice was in response to a petition filed by activist 'Traffic' Ramaswamy seeking action against the health minister. "As part of a health camp in Pudukottai, Vijaya Bhaskar and 100 others rode motorcycles without wearing helmets," the petition stated. (ANI)

Read more at: http://www.sify.com/news/madras-hc-issues-notice-to-vijaya-bhaskar-for-riding-motorcycle-without-helmet-news-national-smgrLxjhaichc.html
Lucknow University finds no one worthy of Chancellor's Gold Medal

TNN | Oct 2, 2018, 08.01 AM IST



LUCKNOW: Unable to find a suitable candidate, Lucknow University decided not to confer its coveted Chancellor's Gold Medal, awarded for overall excellence, this year at its 61st convocation ceremony. 

This is the second medal after the Vice-Chancellor's Gold Medal which will not be awarded to any student this year.

The Chancellor's Gold Medal is awarded to a student with a good record in academics, extra-curricular activities, has a good behaviour and has been helpful to people in general.

It is first time in LU's history that no student will be awarded the medal which is given by the Governor, the chancellor of all the state universities. As many as 19 students had applied and LU officials had interviewed many candidates on Monday but they did not find any deserving candidate.

"The medal is awarded to a student who is an all-rounder along with an excellent academic record. Other requirements are that he or she should also have leadership qualities, must have done something for the society, should have participated in sports and extra-curricular activities at the national and international-level and should have helped the university in solving its problems. We didn't anyone who had all these qualities," said LU vice-chancellor SP Singh.

Singh said that the coveted medal is given to a student for being a multi-tasker and a multi-talented student.

"It can't be awarded to any student who has performed well only in academics, sports or social work. Hence, we decided not to award the medal this year."
Gadkari faints on stage, says he felt suffocated

TNN | Dec 8, 2018, 01.28 AM IST



NASHIK: Senior BJP leader and minister for road transport and highways Nitin Gadkari on Friday fainted at a public function before recovering and continuing with his travel plans to Shirdi and Nagpur after a medical check-up.

Gadkari later told the media that he had fainted due to suffocation and heat on stage because of the heavy robes he was wearing at a university function at Ahmednagar. It was earlier felt that his sugar levels had dipped, but this was not the case, the minister said.

The minister gave his colleagues and sympathisers a scare as he sank to his seat. His office sources said he began to feel unwell as the National Anthem was to be played and was given some chocolate. As he rose thereafter, he fainted, falling back into his seat.

The visual of a staggering Gadkari, who pursues a punishing schedule, made for dramatic TV footage but he recovered quickly and maintained his schedule after being examined by doctors who were part of the ministerial entourage.

“My sugar level and BP is absolutely normal. It was a closed hall and due to the crowd and heat, I started feeling uncomfortable. Heavy convocation attire added into my discomfort and I fell down. However, now, I am absolutely all right. Available doctors at the venue immediately provided necessary treatment to me,” he said.

The Union surface transport ministser was in Rahuri to attend the 33rd convocation ceremony of the Mahatma Phule Krushi Vidyapeeth on Friday when he fainted with Maharashtra Governor C Vidyasagar Rao standing beside him.

Suspecting that Gadkari, who successfully underwent a weight- loss surgery, might have fainted due to drop of sugar level, doctors first offered him chocolates and water. But the minister fainted again during the singing of the National Anthem.

He recovered fast and, after a few minutes, walked up to the convoy ambulance without any help. Doctors conducted necessary check-up in the ambulance. The check-ups revealed that all health parameters such as sugar and blood pressure were normal and Gadkari’s fall had to do with the uneasiness he felt due to heat and suffocation at the venue.

With an all-clear from doctors, the minister went ahead with the rest of schedule. He had his lunch in Rahuri and went to Shirdi in a chopper. After landing in Shirdi, Gadkari visited the Sai Baba temple and addressed a short press conference there.

Gadkari left for Nagpur in a special aircraft. In Nagpur, he was to inaugurate the Khasdar Culture Festival, a week-long cultural festival organized by him.

Sources at the agriculture university at Rahuri told TOI that Gadkari attended the entire convocation function for more than an hour. He started feeling uncomfortable only at the end of the function.
Maharashtra allows citizens to inspect government records under RTI



Devendra Fadnavis - PTI
MUMBAI, DEC 3

Residents of Maharashtra can now inspect government records in district-level offices and local bodies under the Right to Information (RTI) Act for two hours every Monday.

A government resolution (GR) to this effect was issued by the General Administration Department (GAD) last week. However, the GR would not be applicable to Mantralaya, the state secretariat.

The move is aimed at increasing transparency and to cut down the number of RTI applications and appeals in the government offices.

“This provision to allow inspection of records will not only ensure transparency, but it will also reduce the number of first and second appeals filed under the Right to Information (RTI) Act,” stated the GR dated November 26.

“Residents can inspect government records in district level offices and local bodies such as municipal corporations and councils between 3 pm to 5 pm every Monday. In case of a public holiday on Monday, the inspection will be allowed on the next working day,” it stated.

When contacted, Chief Minister Devendra Fadnavis told PTI that the move was aimed at ensuring transparency and reducing applications under the RTI Act.

RTI activists have welcomed this initiative of the government. “Citizens must use this facility extensively and consistently to ensure its implementation,” former chief information commissioner (CIC) Shailesh Gandhi said Monday.

Mumbai-based activist Anil Galgali said they were awaiting such a move. “Success of this much-awaited initiative depends on its smooth implementation by the state,” he said. Another activist Manoranjan Roy said the order should have applied to all departments of the government. “Leaving out higher offices like the state secretariat would hardly serve its purpose,” he argued.
Hyderabad high court: Not all shrines fall under RTI ambit

TNN | Dec 9, 2018, 05.53 AM IST



HYDERABAD: Hyderabad high court has held that religious institutions like temples, churches and mosques that are not funded by the government do not fall within the purview of the Right to Information Act-2005 (RTI).

Justice Challa Kodanda Ram pronounced the judgment after hearing nearly 100 temples and their trustees from Andhra Pradesh and Telangana, who had challenged the decisions of their states' endowments departments, which had asked these religious entities to furnish information regarding their administrative activities under the RTI Act.

Stating that these temples and their officials do not fall under the definition of public authority, as defined in the RTI Act, the judge said the question of these entities following the directives issued by endowments department officials in respect of RTI does not arise.

The judge also set aside several such directives of endowments department officials asking these temples to designate some of their staff as public information officers or assistant public information officers.

‘RTI Act needs to be amended’

The judge agreed with the contention of senior counsel R Raghunandan Rao, who argued the case for temples, that for a temple to be called a public authority it should be either set up by the state, statute or controlled by it. Since none of the temples are established by the government, they cannot be brought under RTI Act, he said.

Though the two state governments are exercising some control over these temples by appointing trust boards, resolving temple staff disputes through endowment tribunals, among others, does not bestow on the state the power to bring these temples under the purview of the RTI Act, Justice Kodanda Ram said.

However, the judge said nowadays since religious institutions receive enormous donations from various sources, it is desirable to amend the RTI Act to at least bring all the registered temples and religious institutions having income over and above a particular limit under the RTI Act.
AIIMS-Patna flouts SC order on signing of lab reports

The SC had on December 12, 2017 ratified the stand of the Medical Council of India (MCI) and ruled that laboratory report could be countersigned only by a registered medical practitioner with a postgraduate qualification in pathology.PATNA Updated: Dec 10, 2018 11:32 IST

Ruchir Kumar 

Hindustan Times, Patna

All India Institute of Medical Sciences (AIIMS)-Patna campus(HT FIle Photo)

The All India Institute of Medical Sciences (AIIMS), Patna, has been found to be violating a Supreme Court (SC) order on signing of laboratory reports, a fact the institute did not agree to.

The SC had on December 12, 2017 ratified the stand of the Medical Council of India (MCI) and ruled that laboratory report could be countersigned only by a registered medical practitioner with a postgraduate qualification in pathology.

At AIIMS-Patna, however, Dr Ajit Kumar Saxena, a non-medical professional, has been signing reports on karyotype, a test to identify and evaluate the size, shape and number of chromosomes in a sample of body cells.

One such report of November 24, a copy of which is with Hindustan Times, bears Dr Saxena’s signature with his office seal, which reads, “professor and head, department of pathology and laboratory medicine, All India Institute of Medical Sciences, Patna.”

For professor in department of pathology, the MCI’s minimum qualifications for teachers in medical institutions regulations, 1998, stipulates that one should be an MD (pathology) or Ph.D (pathology) or D.Sc (pathology).

Interestingly, Dr Saxena holds a postgraduate degree in zoology, and Ph.D in anatomy, with ‘genetics’ as his topic, as confirmed by the director AIIMS-Patna, Dr Prabhat Kumar Singh.

Dr Saxena was, however, nonplussed.

“My signing karyotype report is not a violation of the Supreme Court order. Karyotyping is a kind of genetic study and not a lab report. The National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL) guideline says that a few of the reports can be signed by highly specialised persons. Investigation reports pertaining to genetics, which is a highly specialised field of science, can be signed by M.Sc, Ph.D in applied biology. Even at SGPGI, PGI-Chandigarh and AIIMS-New Delhi, investigation reports of highly specialised subjects like immunology are signed according to the NABL guidelines,” said Dr Saxena.

Dr Singh also cited the qualifications for signing lab reports, as mentioned under NABL, and said the PGI-Chandigarh had set aside the MCI order, citing that it was an autonomous body, as was the AIIMS.

“As per the qualifications mentioned by NABL, a MS in anatomy, Ph.D with M.Sc in human anatomy, Ph.D genetics and Ph.D in applied biology can sign genetics report,” said Dr Singh.

He further said the NABL also mentioned that an MD in pathology could sign genetics and even nuclear medicine reports.

Asked about his position on the issue, Dr Singh said, “As far as the institute is concerned, I will continue with the present arrangement. That is the only way. I need to provide correct facility to patients. I cannot train a person who has not read the ‘G’ of genetics and why should I? Science should work for law and law should work for science. I might take this issue to our statutory body.”

A senior professor, who superannuated from AIIMS-Delhi, and was familiar with the issue, had a different take on it.

“AIIMS-Patna or even cancer hospitals should at the very least demand a degree in subjects such as the one CMC-Vellore offers in cytogenetics and molecular biology,” said Ex-professor, AIIMS-New Delhi

“The SC order stating that medical reports must be signed by those with MD pathology clearly spells out who can and who cannot sign medical reports. The SC order is a safeguard against people with dubious qualifications and half-baked understanding and poor grounding in the subjects starting medical labs, including cytogenetics and molecular diagnosis. Judged against the SC order, therefore, non-MD professionals signing cytogenetics reports does not appear to be tenable,” said the retired professor of AIIMS-New Delhi, requesting anonymity.

He further said, “There is an additional factor that must be considered. Clinical cytogenetic services in major medical institutions, covering areas such as cancer cytogenetics or paediatric cytogenetics, both in India and abroad, are often handled by non-medical graduates who have a Ph.D, rather than MD degree. They have been, however, part of a strong clinical group that consists of clinicians and pathologists, etc. so that the specialty develops properly and becomes well equipped to take on the responsibility of patient care.”

“Strong groups such as this exist in our country, for example in CMC-Vellore, which offers separate two-year courses in laboratory cytogenetics and molecular biology as a foundation for laboratory services and research in the subject. Admissions are through an all-India test. An institution such as AIIMS-Patna or even cancer hospitals should at the very least demand a degree in the subject such as the one CMC-Vellore offers in cytogenetics and molecular biology,” the doctor added.

“If what is done in CMC-Vellore is taken as a guide, it is expected that an institution like AIIMS-Patna, being developed as a premier teaching and research institute, should have people of such reputed qualification and skill to develop subjects of cytogenetics and molecular biology, as a foundation of diagnosis and research,” he signed off.

Dr Saxena is facing the heat after separate probes by the ministry of health and family welfare and a high level internal committee of AIIMS, comprising directors of AIIMS-Bhubaneswar and AIIMS-Patna, and deputy directors (administration) of AIIMS-Bhubaneswar and New Delhi, have questioned his credentials for the post he has been appointed.

Dr Saxena refused to send a written response in defence of his claim, saying he was “busy”. “You give me some time, I’ll think about it,” he said.

This reporter waited for four days after requesting the director and Dr Saxena, but neither sent a written response either on e-mail or WhatsApp.

First Published: Dec 10, 2018 11:31 IST
I didn't steal anyone's money: Mallya 

Source : Last Updated: Mon, Dec 10, 2018 16:46 hrs [United Kingdom], Dec 10 (ANI): 

Absconding Indian liquor baron Vijay Mallya on Monday, who appeared in a court here in connection with an extradition case, said that he had not stolen anyone's money and his offer to pay back the loan amount of banks was not a bogus one. "I have not stolen anyone's money. My offer to return the loan amount of banks is not a bogus one," Mallya said while responding to questions from the media persons in the court premises. "Extradition is entirely a different matter," he said.

 Mallya said that he has filed comprehensive settlement applications before the Karnataka High Court in the matter related to repaying of loans to the banks. "I have filed comprehensive settlement applications before the Karnataka High Court which coincidently going to be head today," he said. Mallya, who arrived at the Westminster Magistrate's Court in London to hear the judgment in an extradition case, said that his legal team would review the judgment and take proper steps thereafter. "Whatever the judgment, my legal team will review the judgment and take proper steps thereafter," he said. "Yes, I have tweeted saying that I want to repay to bankers and others that have nothing to do with this extradition issue. It is a completely separate matter. 

My settlement matter is not related to the judgment which is going to be delivered today," he added. The Westminster Magistrates Court in London is expected to pronounce its judgment in the extradition case of Mallya on Monday. The court is hearing the case on India's request. On December 6, Mallya reiterated his wish to repay banks completely in a bid to end the narrative of him having "stolen" money from various lenders. A day after Mallya requested banks to accept money from him, the 62-year-old, once again, refuted reports of any connection between his proposed settlement offer and the upcoming ruling in a UK court with regard to his request to block his extradition to India. On Wednesday, the liquor baron, while refuting all allegations levelled against him, had offered to pay back the full amount of the principal loan he owed to multiple banks. 

"Respectfully to all commentators, I cannot understand how my extradition decision or the recent extradition from Dubai and my settlement offer are linked in any way. Wherever I am physical, my appeal is "Please take the money." I want to stop the narrative that I stole money," he tweeted. On Sunday, a joint team of the Central Bureau of Investigation (CBI) and the Enforcement Directorate (ED) led by CBI Joint Director A Sai Manohar left for the United Kingdom (UK) for the court proceedings. Earlier, CBI Special Director Rakesh Asthana was leading this case. Earlier on Friday, the Supreme Court had issued a notice to the ED on a plea filed by Mallya seeking a stay on the proceedings initiated by the ED to declare him a fugitive economic offender and confiscate his assets. Mallya is facing money-laundering charges in the United Kingdom after India initiated extradition proceedings against him. Both the ED and the Central Bureau of Investigation (CBI) have filed several cases for alleged loan default against him. Mallya has been residing in the UK for the past two years. (ANI)

Read more at: http://www.sify.com/news/i-didnt-steal-anyones-money-mallya-news-international-smkqKIaifbjjd.html
‘Case to answer’: Business tycoon Vijay Mallya’s extradition allowed by UK court

Westminster Magistrates’ Court Chief Magistrate Emma Arbuthnot ruled that there was no evidence which allowed her to find that if extradited, Mallya was “at real risk of suffering a flagrant denial of justice” or that “the prosecution is politically motivated”.WORLD Updated: Dec 10, 2018 19:21 IST

HT Correspondent 

Hindustan Times, London

Indian businessman Vijay Mallya gestures to the media as he takes a break outside Westminster Magistrates Court in London, Monday, Dec. 10, 2018. A British judge ruled Monday that Mallya can be extradited to India to face fraud allegations.(AP File Photo)(AP)

A United Kingdom court has allowed the extradition of businessman Vijay Mallya to India to face charges of financial irregularities running into thousands of crores.

Westminster Magistrates’ Court Chief Magistrate Emma Arbuthnot ruled that there was no evidence which allowed her to find that if extradited, Mallya was “at real risk of suffering a flagrant denial of justice” or that “the prosecution is politically motivated”.

“Having considered evidence as a whole. There is a case to answer,” she said as she ruled that the liquor baron could be extradited to India to stand trial on the charges brought by the Central Bureau of Investigation (CBI) and the Enforcement Directorate (ED).

“If the conduct occurred in this jurisdiction, the conduct would constitute the offences of making false representations to make a gain for himself, conspiracy to defraud and money laundering,” she added, referring the extradition case to Secretary of State Sajid Javid, who will pass an order based on the verdict.

The defence team has the right to file for a permission to appeal in the Chief Magistrate’s ruling in the UK High Court.

The verdict was welcomed in India. Union finance minister Arun Jaitley called it a “great day” for India.

“Great Day for India. No one who cheats India will go scot free.The Judgement of UK’s Court is welcome. An offender benefited during the UPA. The NDA brings him to book,” he said in a tweet.

“We welcome the decision and hope to bring Dr Vijay Mallya back soon. CBI has its own inherent strengths. We worked hard on this case. CBI was always strong on facts and legally we were confident while pursuing extradition process,” said CBI spokesman Abhishek Dayal. A joint team of the CBI and ED led by CBI joint director A Sai Manohar are in the United Kingdom for the court proceedings.

Before the hearing, Mallya, entering the court, told media that whatever the judgement, his legal team will review it and “take proper steps thereafter”.

“Yes I have tweeted saying that I want to repay, that has nothing to do with this extradition issue. It’s a completely separate matter,” he said

Mallya also said that he has not stolen anyone’s money and his offer to pay back the loan amount of banks is not a bogus one.

The 62-year-old former boss of Kingfisher Airlines has been on bail since his arrest on an extradition warrant in April last year. He has contested that the extradition case against him is “politically motivated” and the loans he has been accused of defrauding on were sought to keep his now-defunct airline afloat.

“I did not borrow a single rupee. The borrower was Kingfisher Airlines. Money was lost due to a genuine and sad business failure. Being held as guarantor is not fraud,” he said in a post on Twitter recently.

“I have offered to repay 100 per cent of the principal amount to them. Please take it,” the flamboyant businessman tweeted earlier.

First Published: Dec 10, 2018 19:12 IST
2 held in RGUHS fake markscard, degree certificate case

TNN | Dec 2, 2018, 12.30 AM IST

Bengaluru: More than eight months after tens of fake markscards and degree certificates bearing the seal and stamp of Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) surfaced, Nandini Layout police have arrested a physiotherapist and a computer operator working with the Bethel Medical Mission (BMM). 

The Criminal Investigation Department (CID) is already probing a case against colleges run by BMM. Fredrick John and Raji S have been taken into custody based on a complaint from the mission.

“The college had filed a complaint that these two had created fake hall tickets and edited or doctored markscards among other things. Our investigation found evidence in the hard drives seized from the accused. We had arrested them on November 24 and produced before court. They were remanded in judicial custody and we’ve now taken them into custody for questioning,” a Nandini Layout police inspector said.

CID sources said the investigators have already sought permission from their seniors to get custody of John and Raji, even as they wait for a forensic report of the documents submitted by RGUHS.

The issue was first reported by STOI on March 2. In June, RGUHS had submitted a 1,200-page report on the matter, in which it claimed that BMM was involved in the racket. The case was subsequently handed over to the CID.

“RGUHS, as part of its report, had submitted several markscards and other documents. So far, our investigation has not found any beneficiary of these fake documents, while students from the college had their original markscards and certificates. So, we sent the documents to the forensic department and are awaiting a report,” a CID official said.

College claims innocence

BMM chairman Sunny D, however, argued that his competitors have used the services of John and Raji to tarnish BMM’s image. Claiming that John is a habitual offender, Sunny said he was confident that the probe will clear the name of his college.

“Raji and John have unmatched skills in editing, drafting and photoshopping. They have plotted and drafted letters to the governor, CM, ministers, RGUHS VC, police commissioner, medical education department, registrar and various media houses,” he claimed.

He claimed that Raji, who completed her nursing course from BMM, had not paid her fees and that she had even borrowed Rs 50,000 from him for her mother’s treatment.

“When she did not pay the fees, we only gave her the markscards of the first three years and the provisional degree certificate, but withheld the final year markscard. We even employed her so she could work and repay the money she owed the institution, but she went on to get a duplicate markscard by providing a false affidavit and nursed a grudge against us. I have screenshots of her WhatsApp messages,” Sunny claimed.

‘Arrested was complainant too’

RGUHS vice-chancellor Dr Sachidananda, while stating that the university can only comment after the CID and the police complete their probes, said: “Raji was one of the complainants against BMM.”

Police, however, denied any knowledge of Raji being a complainant against BMM, and the inspector said the college had filed a complaint against her and she was arrested based on the evidence gathered during investigation.

அமெரிக்கர்களை அசரடித்த நடிகர் திலகம்

Published : 30 Nov 2018 10:11 IST

ஈஸ்வர் சாகர்





சிவாஜி கணேசனுடன் டென்னிஸ் குக்ஸ் என்ற வெளியுறவுத் துறை அதிகாரியும் வேறு இரண்டு நண்பர்களும்தான் அமெரிக்காவைச் சுற்றிவந்தனர். டென்னிஸ் குக்ஸ் சரளமாகத் தமிழ் பேசுபவர். அமெரிக்கத் திரையுலகின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், கதை வசனகர்த்தாக்கள் என்று அனைவருமே எங்கு போவதாக இருந்தாலும் மக்கள் தொடர்பு அதிகாரி, விளம்பரத் தூதர், போட்டியாளர்களை வசைபாடித் தூற்றுபவர் என்று ஐந்தாறு பேர் உள்ள சிறிய படை இல்லாமல் செல்ல மாட்டார்கள்.

சிவாஜி எளிமையாக வந்திருப்பதை வியப்போடு பார்த்தார்கள். இங்கு மட்டுமல்ல, இந்தியாவிலும் தனக்கு இப்படி யாருமில்லை என்றபோது, அவர்களுடைய விழிகள் வியப்பால் விரிந்தன. எனக்கு நானே விளம்பரத் தூதர் என்று சிரித்துக்கொண்டே அவர் சொன்னபோது ஆடிப்போனார்கள்.

சிவாஜி போன இடங்களிலெல்லாம் அனைவரும் கேட்ட கேள்விகள், உங்களுடைய சொந்த வாழ்க்கையை நிருபர்கள் மோப்பம் பிடித்துவிடாமலிருக்கவும், சொந்த விஷயங்கள் வெளியே பேசப்படாமலிருக்கவும் என்ன உத்தியைக் கையாளுகிறீர்கள் என்பவைதான். எங்கள் நாட்டு சினிமா நிருபர்கள், நாங்கள் நடிக்கும் படத்தின் கதை, அதில் எங்களுடைய கதாபாத்திரம் ஆகியவற்றோடு நிறுத்திக்கொள்வார்கள் என்று பதிலளித்திருக்கிறார்.

உங்கள் திரைப்படங்களில் முத்தக் காட்சிகளுக்கு அனுமதி இல்லையாமே, ஆணும் பெண்ணும் அன்பாக இருப்பதைக் காட்ட என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளனர். லேசாகக் கட்டி அணைப்பதன் மூலமும் கைகளைப் பற்றுவதன் மூலமுமே காதலையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவோம், அதுவே போதுமானது என்றார். ஆனால், இந்தப் பதில் அமெரிக்கர்களுக்குத் திருப்தி தரவில்லை. அழுத்தமாக ஒரு முத்தம் தருவதைப் போல இதுவெல்லாம் வருமா என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர், இந்தியர்கள் பாவம், எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக் கொள்பவர்கள்போல இருக்கிறது என்று ஆதங்கப்பட்டுள்ளனர்.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பிரெடரிக் மார்ச், ஹென்றி ஃபோன்டா, ஷெல்லி விண்டர்ஸ், பர்ட் லங்காஸ்டர் ஆனாலும் சரி, புதிதாக நடிக்க வந்தவர்களானாலும் சரி, எல்லோருடனும் உற்சாகமாகவும் கண்ணியமாகவும் பேசியிருக்கிறார் சிவாஜி.

தொலைக்காட்சியில் நடிக்க வரும் பயிற்சியற்ற கலைஞர்களுக்கான பயிற்சிப் பள்ளிக்கும் சென்றிருக்கிறார். சிறுசிறு வேடங்களை ஏற்று படிப்படியாக முன்னேறி மாபெரும் கலைஞனான அவரைச் சக கலைஞர்கள் மரியாதையோடும் பிரமிப்போடும் பார்த்தார்கள்.

அவர்களுடைய நாடக அரங்க அமைப்புகளையும் காட்சி ஜோடனைகளையும் காட்சிகளை மாற்றும் உத்தியையும் கருவிகளையும் கண்டு வியந்தார் சிவாஜி. ரேடியோ சிட்டி மியூஸிக் ஹால் என்ற அந்த அரங்கத்தைப் போல இந்தியாவிலும் நிறைய உருவாக வேண்டும் என்ற ஆசையை சிவாஜி உரக்க வெளிப்படுத்தினார்.

இந்தியத் திரைப்படங்கள் அமெரிக்காவில் ஓடாது என்று ஒரு விநியோகஸ்தர் கூறியபோது, அதை வன்மையாக மறுத்தார் சிவாஜி. சத்யஜித் ராய் படம் விதிவிலக்கு என்றார் ஒரு அமெரிக்கர். நீங்கள்கூட சத்யஜித் ராய் படத்தில் நடித்ததால்தானே புகழ்பெற்றீர்கள் என்றுகூட ஒருவர் கேட்டார். கேள்வி கேட்டவர்களின் அறியாமையை சிவாஜி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

பெருமிதத்தோடு வழியனுப்பிய சென்னை

அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில், இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 1962-ல் இரண்டு மாத சுற்றுப் பயணம் மேற்கொண்டார் சிவாஜி. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் பம்பாய் சென்று, அங்கிருந்து அமெரிக்கா சென்ற அவரை வழியனுப்ப வந்தவர்களின் எண்ணிக்கையும் உற்சாகமும் சென்னை மாநகரம் அதுவரை கண்டிராதது.

இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகரை அமெரிக்க அரசு கெளரவித்திருப்பது அதுவே முதல் முறை. சாதாரண சுற்றுலாப் பயணி அல்ல; முக்கிய அரசு விருந்தினர் என்ற அந்தஸ்து அவருக்கு. திறந்த ஜீப்பில் சென்னை விமான நிலையத்தைச் சுற்றிவந்த சிவாஜி, தன்னுடைய ரசிகர்களின் வாழ்த்துகளையும் ஆசிகளையும் அன்போடு தலைவணங்கி ஏற்றார்.

புறப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகத் தினமும் ஒரு பாராட்டுக் கூட்டம், வழியனுப்பு விழா என்று 34 வயது சிவாஜியை அயரவைத்தனர் பல்வேறு திரையுலக நண்பர்களும் சங்க நிர்வாகிகளும். வருவதற்கு இரண்டு மாதங்களாகும் என்பதால், கையில் இருக்கும் திரைப்படங்களை முடித்துக்கொடுக்க அன்றாடம் 18 மணி நேரம் இடைவிடாமல் உழைத்தார் சிவாஜி. உரிய நேரத்துக்குச் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் செயல்பட்டதால் வழியனுப்பு நிகழ்ச்சிகளில்கூடக் களைப்போடுதான் காணப்பட்டார். அவசரமான இந்த நேரத்திலும் அவர் வேகமாக நடித்துக்கொடுத்ததுதான் மூன்று வேடப் படமான ‘பலே பாண்டியா’.

இந்த விழாக்களிலேயே முக்கியத்துவம் வாய்ந்தது சர்வதேசத் திரைப்படச் சங்கம் அளித்த வரவேற்பு நிகழ்ச்சி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் அதிகாரி டாக்டர் தாமஸ் டபுள்யு. சைமன்ஸ் தலைமை வகித்தார். நகரின் தனி அடையாளமான மவுன்ட் ரோடு 14 மாடி எல்ஐசி கட்டிடத்தின் புல்தரையில் நிகழ்ச்சி நடந்தது. இந்திய, அமெரிக்கக் கொடிகள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகளும் அந்த இடத்தை அலங்கரித்தன. சிவாஜி கணேசன் இந்தியாவுக்கு மட்டுமே உரியவரல்ல, ‘உலக நாயகன்’ என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டின கொடிகள்.

இந்திய, அமெரிக்கத் திரைப்பட நடிகர்கள் பரஸ்பரம் இரு நாடுகளையும் சென்று பார்ப்பதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே புரிதல்களும் அன்பும் பெருகவும், உறவு வலுப்படவும் உதவும் என்று தூதர் தாமஸ் சைமன்ஸ் சுட்டிக்காட்டினார். சர்வதேசத் திரைப்பட சங்கத்தின் ஹாலிவுட் கிளை நிர்வாகிகள் முதல் முறையாக இந்தியத் திரைப்பட நடிகர் ஒருவரைக் கௌரவிப்பதைப் பூரிப்புடன் அவர் கூறினார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபைத் தலைவர் ஏ.எல்.சீனிவாசன், சிவாஜியை வழியனுப்பும் நிகழ்ச்சியில் சர்வதேசத் திரைப்பட சங்கத் தொடக்கமும் அமைவது மிகவும் பொருத்தமானது என்றார்.

சர்வதேசத் திரைப்பட சங்கப் புரவலரும் எல்ஐசி மண்டல மேலாளருமான எச்.பலராம் ராவ், நடிகர் ஜெமினி கணேசன் ஆகியோர் வரவேற்றுப் பேசினர். நடிகை சவுகார் ஜானகி நன்றி கூறினார். எம்.எல்.வசந்தகுமாரியின் இறைவணக்கப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ‘ஃபாலோ தி சன்’ என்ற பயணக் கதைப் படத் திரையிடலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

சிவாஜி எனும் தகப்பன் சகோதரன், காதலன், கணவன்!

Published : 30 Nov 2018 10:17 IST

தேவிபாரதி





அன்றைய திரைப்படப் பார்வையாளர்களுக்கு சினிமா வெறும் பொழுதுபோக்குச் சாதனமல்ல, நாடகத்தைப் போலவோ ஓவியம் அல்லது இசையைப் போலவோ அது வெறும் கலை அல்ல. அது அவர்களுடைய வாழ்வோடு நேரடியாக உறவாடியது, அவர்களுக்கு அன்பையும் அறத்தையும் போதித்தது, ஒருவகையில் வாழ்வின் எல்லாமுமாக இருந்தது.

குறிப்பாக, சிவாஜி நடித்த திரைப்படங்கள். 1950, 60-களில் அவரது ஒரு திரைப்படம் வெளியாகும்போது வீடுகளுக்குள் அடைந்து கிடந்த பெண்கள் அவரது ‘பாசமலர்’ அல்லது ‘பாலும் பழமும்’ போன்ற ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்காக திரைப்பட அரங்குகளுக்குப் போனார்கள். எம்ஜிஆரின் ரசிகர்களைப் போல் திரையரங்க வாசல்களில் கட்-அவுட்கள் வைத்து, பட்டாசு கொளுத்தி ஆரவாரமான கொண்டாட்டங்கள் சிவாஜி ரசிகர்களிடம் வெளிப்படாது. மாறாக, திரையரங்குக்குச் செல்லும்போது தங்களுடைய சகோதரர்களை, காதலரை, தந்தையரைக் காணச்செல்வது போன்ற ஓர் உணர்வு அவர்களுக்கு இருந்தது.

தங்களை நேசிக்கும் தங்களுக்காகக் கண்ணீர் சிந்தும் தங்களுக்காக எல்லாவிதமான தியாகங்களையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு நாயகனைத் திரையில் காணும்போது அவரோடு எளிதில் தங்களைப் பிணைத்துக்கொண்டார்கள். ‘பாசமலர்’ படத்தில் சாவித்திரியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, ‘கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கை வீசு’ என சிவாஜி விம்மியபோது திரைக்கு எதிரே உட்கார்ந்திருந்த பெண்கள் கண்ணீர் வடித்தார்கள், சிலர் கதறி அழுதார்கள், எல்லோருமே பரிதவித்துப்போனார்கள்.

சிவாஜியின் படங்களில் அவரது ஏதாவதொரு பாத்திரம் பெறும் சிறிய வெற்றியைக் கண்டு குதூகலித்தார்கள். அவர் வாய்விட்டுச் சிரிக்கும் காட்சிகளைக் காண வாய்க்கும்போது புன்னகைத்தார்கள். அவற்றை அவர்கள் தம் முழு வாழ்நாள் வரையிலும் நினைவில் வைத்திருக்க விரும்பினார்கள். அவரது திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு நிச்சயமாகப் பொழுதுபோக்கு மட்டுமே அல்ல!

- தேவிபாரதி, எழுத்தாளர், விமர்சகர்.

தொடர்புக்கு: devibharathi.n@gmail.com

தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள்: நவீனக் கொத்தடிமைகளா?


Published : 06 Dec 2018 09:05 IST




வசந்தவாணன். வயது 30. சென்னை அருகே, தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்துள்ளார். அப்போது கல்லூரி நிர்வாகம் அவருடைய கல்விச் சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டது. விதிப்படி சான்றிதழ்களைக் கல்லூரி நிர்வாகம் வாங்கி வைத்துக்கொள்ளக் கூடாது என்பது வேறு விஷயம் (சான்றிதழ்களைச் சரிபார்ப்பதற்காக வாங்கும் கல்லூரிகள், அந்தப் பணி முடிந்ததும் திரும்பத் தந்துவிட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகமும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவும் (ஏஐசிடிஇ) கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது). இதற்கிடையே, அவர் முன்பு விண்ணப்பித்திருந்த அரசுக் கல்லூரியில் அவருக்குப் பணி நியமனம் கிடைத்தது. அரசுப் பணி கிடைத்துவிட்டதால் மகிழ்ச்சியடைந்த அந்த இளைஞர், தனது சான்றிதழ்களைத் திருப்பித் தருமாறு பொறியியல் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறார். சான்றிதழ்களைக் கொடுத்து வாழ்த்தி அனுப்புவார்கள் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால், சான்றிதழ்களைக் கொடுக்காமல் தொடர்ந்து அவரை அலைக்கழித்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டார். கடந்த மாதம் நடந்த சம்பவம் இது.

தனியார் கல்லூரியில் பணிபுரிபவர்களுக்கு இம்மாதிரியான நிகழ்வுகள் புதிதல்ல. ஒவ்வொருவரும் ஏதோவொரு தருணத்தில் இம்மாதிரியான கொடுமையை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். சில மாதங்களுக்கு முன்பு நான் பணிபுரியும் பொறியியல் கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரியில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். முன்பு பணிபுரிந்த கல்லூரியில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்தக் கல்லூரியில் இயந்திரவியல் துறைத் தலைவராகப் பணிபுரிந்தவர் அவர். திடீரென்று, அனைவரின் ஊதியத்தையும் கல்லூரி நிர்வாகம் குறைத்திருக்கிறது. முறையான காரணம், முன்னறிவிப்பு இன்றிச் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணியிலிருந்து விலகிக்கொள்ள விரும்பியவர்களுக்கு, சான்றிதழ்களை வழங்காமல் அலைக்கழித்தனர் கல்லூரி நிர்வாகத்தினர்.

இதையடுத்து, அவரும் பிற ஆசிரியர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து, பிரச்சினையின் வீரியம் அதிகரித்தது. ஒருநாள், தன் வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவில் நடந்துசென்றுகொண்டிருந்த அவரைச் சிலர் இரும்புக் கம்பியால் தாக்கினர். ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றிக் கிடந்த அவரை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிர் பிழைப்பாரா என்று அஞ்சி அவரது குடும்பம் பரிதவித்திருக்கிறது. ஒருவழியாகச் சில மாதங்களில் உடல் தேறிய அவர், பிரச்சினையைத் தொடர விரும்பாமல், கல்லூரிக்கு எதிராகக் கொடுத்த புகாரைத் திருப்பி வாங்கிவிட்டார். ஆனாலும், அவரது துயரங்கள் முடிவுக்கு வரவில்லை. காரணம், அவருக்கு வேறு எந்தக் கல்லூரியிலும் வேலை கிடைக்கவில்லை. ஆம், கல்லூரி நிர்வாகிகளுக்கென்று ஒரு கூட்டமைப்பு இருக்கிறது. தங்கள் நிர்வாகத்துக்கு எதிராகப் போராடும் எந்த ஆசிரியரையும் வேறு எந்தக் கல்லூரியிலும் வேலை கிடைக்காதவாறு அவர்களால் செய்துவிட முடியும். இதையடுத்துப் பல மாதங்கள் விரக்தியான மனநிலையில் உழன்றுகொண்டிருந்தார் அவர்.

ஒருவழியாக அந்த நிர்வாகத்துக்குப் போட்டியான இன்னொரு நிர்வாகம் நடத்தும் ஒரு கல்லூரியில் அவருக்குப் பணி கிடைத்தது. ஆனால், இதிலும் இன்னொரு சிக்கல். சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பழைய கல்லூரியில் வாங்கிக்கொண்டிருந்த அதே சம்பளம்தான் இன்றுவரை அவருக்குக் கிடைக்கிறது. தொழில் நிறுவனங்களில் இத்தனை ஆண்டுகள் அனுபவத்துக்கு, இன்றைக்கு லட்ச ரூபாய் சம்பளம் கிடைத்திருக்கும். கல்லூரி நிர்வாகத்தின் அடாவடிப் போக்கைத் தட்டிக்கேட்டதால் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறார்.

இன்றைய சூழலில் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.15,000 – 18,000. ஆண்டு ஊதிய உயர்வையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஒருவர் 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் அதிகபட்சமாக அவர் பெறக்கூடிய ஊதியம் ரூ.30,000. பொறியியல் முடித்து தொழில் நிலையங்களில் பணிபுரியும் ஒருவர், மூன்றே ஆண்டுகளில் அந்தச் சம்பளத்தைப் பெற்றுவிட முடியும். அரசுக் கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு ரூ.50,000-க்கும் அதிகமான சம்பளம் கிடைக்கிறது. தனியார் கல்லூரிகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளத்தையே கண்ணில் பார்க்க முடியும்.

இன்னொரு கொடுமையும் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐந்து மாணவர்களைச் சேர்த்துவிட வேண்டும் என்று பல தனியார் கல்லூரிகள் ஆசிரியர்களுக்கு இலக்கு வைக்கின்றன. இல்லையென்றால், இருக்கிற வேலையையும் இழக்க நேரிடும். நிலையற்ற வருமானத்தால் குடும்பத்தின் அடிப்படை வசதியைக்கூட ஒருவரால் செய்ய இயலாது. இந்நிலையில், எவ்வாறு தரமான கல்வி மாணவர்களுக்கு அளிக்கப்படும்? ஒருகாலத்தில் மருத்துவத் துறைக்கு நிகராக மதிக்கப்பட்ட துறை இன்று அதன் சீரழிவின் உச்சத்தில் இருக்கிறது.

அதிகக் கட்டணங்கள் வசூலிக்கும் கல்லூரிகளைப் பற்றியும், சான்றிதழ்களைப் பிணையாகப் பெற்றுக்கொள்ளும் கல்லூரிகளைப் பற்றியும் முறையான ஊதியங்கள் வழங்காத கல்லூரிகளைப் பற்றியும் தங்களிடம் புகார் அளியுங்கள் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வியின் கூட்டமைப்பும், அண்ணா பல்கலைக்கழகமும் கூறுகின்றன. ஆனால், புகார் அளிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றிய தெளிவான வழிகாட்டுதல்களை அவர்கள் தருவதில்லை. யாரேனும் புகார் அளித்தால்தான் நடவடிக்கை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? முறையான கண்காணிப்பும் கட்டுப்பாடும் இருந்தால் தனியார் கல்லூரிகள் இப்படி அத்துமீறுமா?

சட்டரீதியாக ஒரு பிரச்சினையை எவ்வாறு அணுக வேண்டும் என்று நமக்குப் பயிற்றுவிக்கப்படவில்லை என்பது ஒரு முக்கியப் பிரச்சினை. நம் அடிப்படை உரிமைகளைக்கூடப் போராடித்தான் பெற்றாக வேண்டும் எனும் நிலையில், நமது அடிப்படை உரிமை என்ன என்பதுகூட நமக்குத் தெரிவதில்லை. இங்கு, தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு என்று ஒரு கூட்டமைப்பு இல்லை. ஜவுளிக் கடைகளில் 12 மணி நேரம் நின்றபடி வேலைசெய்யும் ஊழியர்களைப் பார்க்கும்போதும், தொழிலகங்களில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்விதப் பாதுகாப்புமின்றிப் பல மணி நேரம் பணிபுரிபவர்களைப் பார்க்கும்போதும் தோன்றுவது இதுதான். ஏன் நம்மால் ஒன்றுதிரள முடியவில்லை. ஏன் நம்மால் நம் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை?

- முகம்மது ரியாஸ்,

தொடர்புக்கு: hirifa@gmail.com
விஜய் சேதுபதி மகா நடிகன்: ரஜினி பாராட்டு

Published : 09 Dec 2018 22:15 IST




விஜய் சேதுபதியை சாதாரணமான நடிகன்னு நினைச்சிடாதீங்க. அவர் மகா நடிகன். அவ்வளவு அற்புதமான நடிகன். ஒவ்வொரு ஷாட்டுக்கும் புதுசு புதுசா பண்றாரு என்று ரஜினி பாராட்டினார்.

'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

'பேட்ட' படத்தில் ஒரு பாடல் 3-ம் தேதியும் அடுத்த பாடல் 7-ம் தேதியும் வெளியிடப்பட்டது. முழுப் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரமாண்டமாக நடைபெற்றது.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

''கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்னார். எனக்குப் பிடித்தது. பிறகு பல வருடங்கள் கழித்து திரும்பவும் அழைத்துக் கதை கேட்டேன். இந்த முறை கதையை இன்னும் அழகாக்கி, டெவலப் பண்ணி, மெருகேற்றியிருந்தார்.

பிறகு சன் பிக்சர்ஸிடம் கதை சொல்லி ஓகே பெறப்பட்டது. கலாநிதி மாறனும் மிகவும் உற்சாகமாகிவிட்டார்.

அதன் பிறகு படத்தில் ஜித்து என்றொரு கேரக்டர். இதை யார் பண்ணுறாங்கன்னு தெரியல எனக்கு. யார் பண்ணப் போறாங்கன்னு மைண்ட்ல ஓடிக்கிட்டே இருக்கு. கார்த்திக் சுப்பராஜ்கிட்ட கேட்டேன். விஜய் சேதுபதியைக் கேக்கலாமா சார்னு கேட்டார். ஒத்துக்குவாரான்னு கேட்டேன். அடுத்தநாள், சார், ஒத்துக்கிட்டார் சார்னு கார்த்திக் வந்து சொன்னார்.

இங்கே ஒரு விஷயம் சொல்லியாகணும். விஜய் சேதுபதியை சாதாரணமான நடிகன்னு நினைச்சிடாதீங்க. அவர் மகா நடிகன். அவ்வளவு அற்புதமான நடிகன். ஒவ்வொரு ஷாட்டுக்கும் புதுசு புதுசா பண்றாரு. முன்னாடி என்ன பண்ணினோம், இப்ப இப்படி பண்ணினா நல்லாருக்குமா, வேற பண்ணலாமான்னு யோசிச்சிக்கிட்டே இருக்காரு.

விஜய் சேதுபதி நல்ல நடிகன் மட்டுமில்ல. நல்ல மனிதனும் கூட. அவரோட பழகும்போதுதான் அவரோட நல்ல மனசு தெரிஞ்சுது. அவரோட பேச்சு, சிந்தனை, செயல் எல்லாமே வித்தியாசமா இருக்கு. புக்ஸ் படிக்கிறீங்களான்னு கேட்டேன். இல்லேன்னாரு. நிறைய படங்கள் பாக்கறீங்களான்னு கேட்டேன். இல்ல சார்னு சொன்னாரு. எல்லாத்தையுமே ரிவர்ஸா யோசிச்சுப் பார்ப்பேன்னு சொன்னாரு. ஒரு சைக்கியாட்ரிஸ்ட் மாதிரி யோசிச்சு செயல்படுறாரு விஜய் சேதுபதி.

ரொம்ப வருஷத்துக்குப் பிறகு நல்ல நடிகர் கூட நடிச்ச அனுபவம் கிடைச்சிச்சு. விஜய் சேதுபதி நல்லா இருக்கணும். உதவி செய்ற அவரோட நல்ல மனசுக்கு என்னோட வாழ்த்துகள்''.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

By மதுராந்தகம், | Published on : 10th December 2018 12:26 AM 




வேடந்தாங்கல் ஏரியில் போதிய தண்ணீர் இல்லாதபோதிலும், அதிக அளவில் பறவைகள் இம்முறை வராத நிலையிலும், சரணாலயத்தை வனத்துறையினர் திறந்துள்ளனர். எனினும், வழக்கத்தை விட பறவைகள் குறைவாக உள்ளதால் சரணாலயம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியாகவும், பறவைகள் சரணாலயமாகவும் வேடந்தாங்கல் திகழ்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கண்டுக்களிக்கும் இடமாக இச்சரணாலயம் உள்ளது. ஏரிகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரி வேடந்தாங்கலாகும். இங்கு பறவைகள் சரணாலயம் கடந்த 1858-இல் தொடங்கப்பட்டது. சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேடந்தாங்கல் ஏரியின் நடுவே 50-க்கும் மேற்பட்ட கருவேல மரங்கள், கடம்ப மரங்கள், செடி, கொடிகள் ஆகியவை உள்ளன. அந்த மரங்களின் மேல் கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்வதற்காக உலகத்தின் பல்வேறு பகுதிகளிருந்தும் பறவைகள் வருகின்றன.

இனப்பெருக்கத்துக்கு சாதகமான பருவநிலை, நீர், உணவு, பாதுகாப்பான சூழ்நிலை போன்ற கரரணங்களால் பறவைகள் இப்பகுதியைத் தேடி வருகின்றன. வேடந்தாங்கல் ஏரியைச் சுற்றி மதுராந்தகம் ஏரி, வேடவாக்கம் ஏரி, கருங்குழி ஏரி உள்ளிட்டவை அரணாக அமைந்துள்ளன.
ரஷியாவின் சைபீரியா, இலங்கை, மத்திய ஆசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், மங்கோலியா, வங்கதேசம் போன்ற வெளிநாட்டுப் பகுதிகளில் இருந்தும், நம் நாட்டின் வட மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மைல்களை தாண்டி ஏராளமான பறவைகள் இங்கு வந்து தங்கிச் செல்கின்றன. சிறிய நீர்க்காகம், கரண்டி வாயன், நத்தைக்குத்தி நாரை, வெள்ளை அரிவாள்மூக்கன், வெள்ளைக் கொக்கு, உண்ணி கொக்கு உள்ளிட்ட இனங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் சரணாலயத்துக்கு வருவது வழக்கம்.

வேடந்தாங்கல் ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருப்பதால், விளைநிலங்களில் பயிரிடப்படும் நெல், பருப்பு வகைகளையும் நீர்நிலைகளில் வாழும் மீன், புழு பூச்சிகள் போன்றவற்றையும் சரணாலயத்தில் முகாமிடும் பறவைகள் உட்கொள்ளும். இதனால் பறவைகளுக்கு உணவுப் பஞ்சம் இருப்பதில்லை. ஏரி நீரில் விழும் இப்பறவைகளின் எச்சம் மிகச்சிறந்த உரமாக விளங்குவதால் வேடந்தாங்கல் பாசன விவசாயிகள் நல்ல விளைச்சலைப் பெறுகின்றனர். இங்கு அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் சீசன் காலமாகும்.
இந்நிலையில், வேடந்தாங்கல் ஏரியில் போதிய தண்ணீர் இல்லாதபோதிலும், அதிக அளவில் பறவைகள் இம்முறை வராத நிலையிலும், சரணாலயத்தை வனத்துறையினர் கடந்த 6ஆம் தேதி திறந்தனர்.

இது தொடர்பாக பறவைகள் சரணாலய வனச்சரகர் சுப்பையா தினமணி செய்தியாளரிடம் கூறியது:

தற்சமயம் இந்தப் பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து இல்லை. அதேசமயம் பல்லாயிரக்கணக்கான பறவைகளும் வந்திருக்க வேண்டிய இந்த நேரத்தில் குறைந்த அளவிலேயே பறவைகள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டது.
அதேபோல் தற்போதும் பறவைகள் வந்திருக்கும் என்று கருதி, தற்போது இங்கு வரக் கூடிய பார்வையாளர்கள் ஏமாந்து போகக் கூடாது என்பதால் சரணாலயம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் ஆயிரத்துக்கும் குறைவான பறவைகள்தான் வந்துள்ளன என்றார் அவர்.
அவர்களும் மனிதர்களே
By வாதூலன் | Published on : 10th December 2018 03:00 AM

கட்டுரையின் தலைப்புக்குச் சற்று யோசித்த பின்தான் கேள்விக்குறி போட வேண்டியிருந்தது. காரணம், சில வாரங்களுக்கு முன் பிரபல ஆங்கில ஏட்டில் இசைக் கலைஞர் ஒருவர் எழுதிய கட்டுரைதான். சில நாள்களுக்கு முன்வரை பரபரப்பாகப் பேசப்பட்ட "மீ டூ' குறித்து அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்ட கருத்துகள், "மீ டூ'வில் தொடர்புள்ள இசைக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுப்பது போல அமைந்திருந்தது. "குரு என்றால் ஏன் ஒழுக்கத்தின் மறுஉருவம் என்று நினைக்கிறீர்கள்? அவர்களைக் குட்டி தெய்வமாகக் கருதுவது தவறு' என்றெல்லாம் நீளமாக வாதாடியிருந்தார். கட்டுரையின் இறுதியில், தனது வாதத்திலிருந்து சற்று பின்வாங்கி "முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்கள் செயலை நான் நியாயப்படுத்தவில்லை' என்று முடித்திருந்தார்.

பொதுவாக நாடக, திரை உலகப் பிரபலங்களைப் பற்றித்தான் அந்த நாளில் "ரகசியமான' வதந்திகள் வரும். ஏனெனில் நெருக்கமாக நடிப்பது, ஆசையுடன் பழகுவது போன்ற காட்சிகள் அவற்றில் வர சாத்தியக்கூறு அதிகம். நாட்டியத்திலும், சில சிருங்கார அங்க அசைவுகள் வரும். (ஓர் ஏட்டில், நடனம் ஆடுபவர்கள் படுகிற இன்னல்களைப் பற்றி பெரிய கட்டுரையே வெளியாகியது.) இத்தகைய கலைஞர்களைப் பற்றி பாலியல் சம்பந்தமான செய்திகள் வந்தால் அக்கருத்துகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

கவிஞர்களுள் தடுமாறும் போதையில் கவிபாடும் மேதையைப் பற்றிப் பலரும் அறிவார்கள். வேறு ஒரு எழுத்தாளர் எழுதிய, போதைப் பொருளைப் பரிந்துரைப்பது போன்ற கட்டுரை ஒன்று வாரப் பத்திரிகையில் வெளிவந்ததும் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இசை உலகில் மேதை என்று மிக புகழ் பெற்ற வித்துவானின் குறைகள் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
நம் முன் நிற்கும் கேள்வி இதுதான்: கலைஞர்களின் தனிப்பட்ட ஒழுக்கத்துக்கும் திறமைக்கும் முடிச்சு போடலாமா? காலஞ்சென்ற பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் ஓர் இரங்கற் கூட்டத்தில் இவ்விதம் பேசியுள்ளார்: "சிறிய கள் பெரினே எமக்கு ஈயும் மன்னே' என்று பாடியவர் சங்க கால மூதாட்டி என்பதை மறந்து விட்டீர்களா? கவி பாடும் ஆற்றலுள்ளவர்களுக்கு சிறு சிறு குறைகளிருக்கலாம். அவ்வாறு இருந்தால், அவையெல்லாம் கவிஞனின் உடம்பு மாயும் போது, உடன் மறைந்துவிடும். ஆனால் அவன் படைப்பு தமிழ் உள்ளவரை நின்று நிலவும்' என்றார். மேலும் அவர் "அந்தக்குறை பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் அவர்கள் குடும்பத்தினர்தானே' என்றும் பேசியிருக்கிறார். மேலே சொன்ன நிகழ்வு அறுபதுகளில் நடந்ததென்று ஊகிக்க முடிகிறது.

ஐம்பது வருடங்களுக்கு முன் அவர் சொன்ன கருத்துக்கள், இன்றுள்ள சூழலுக்கும் பொருந்துமா என்பது ஐயம்தான். இப்போது முகநூல், கட்செவி அஞ்சல் ("வாட்ஸ்அப்') போன்றவற்றில் வருகிற குறுஞ்செய்திகள் விரைவாகப் பரவி விடுகின்றன. அதுவும் பிரபலமானவரைப் பற்றிய செய்திகள் என்றால் கேட்கவே வேண்டாம். ஊடகங்கள் தகவலை மிகைப் படுத்துக்கின்றன. ஓரிரு நாள் கழித்து பாதிக்கப்பட்டவர் மறுப்பு தெரிவித்தாலும் மக்கள் மனதில் அது பதிவதில்லை. முதலில் வந்த செய்திதான் நிற்கிறது.

வேறொரு அம்சத்தையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லலாம். மது அருந்துவது, போதைப் பொருளுக்கு அடிமையாவது போன்றதல்ல பாலியல் குற்றங்கள். பாலியல் தவறுகளால், ஓர் அப்பாவிப் பெண்ணின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது. "இதுவரை மௌனம் சாதித்துவிட்டு இப்போது ஏன் முறையிடுகிறார்கள்?' என்ற கேள்வி எழாமலில்லை. பல வருடங்களாக அடைக்கப்பட்டிருக்கும் மன உளைச்சல்களுக்கு வடிகால் கிடைத்தது போலவே இதனைப் பெண்கள் உணர்கிறார்கள்.

வங்கிக் கிளையொன்றில் என்னுடன் வேலை செய்த ஒரு பெண் ஊழியரிடம், வங்கி மேலாளர் கொஞ்சம் நெருக்கமாகப் பழகினார். அரசல் புரசலாக வதந்திகள் பிறந்தன. எல்லாரும் ஊகித்தபடியே மேலாளர் அவரை இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொண்டார். (அவர் அப்போது இரண்டு குழந்தைகளுக்கு தந்தை.) தலைமை அலுவலகத்துக்கு புகார் போனதும், பெண்ணை ராஜிநாமா செய்யச் சொல்லிவிட்டார்கள்.

இது நடந்தது 1965. ஆனால் 1990-க்குப் பின்னர், தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கும் நான் ஆய்வாளாராகப் போன சமயம் பல முறைகேடான உறவுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிலர் எல்லைமீறி, வங்கியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பது போலிருந்தால், அவரை வடக்கே இருக்கும் இடங்களுக்கு மாற்றி விடுவார்கள்.

இப்போது, கணினி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் நிலைமை அலசப்பட்டு வருகிறது. இரவு நேரப் பணி அவர்களுக்கு ஒரு பாதகமான அம்சம். ஒரு சில வருடம் முன், பெங்களூரில் சில குற்றங்கள் நடந்திருக்கின்றன. நிறுவனத்தின் பெயர் கெடாதிருக்க நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றன.

ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பகுதிக்கே வருவோம். குரு என்ற ஸ்தானம் மிக உயர்ந்தது. சங்கீதம், நாட்டியம் இரண்டில் மட்டுமே இந்த உயர்நிலை உள்ளது. பெற்றோருக்கு அடுத்தபடியாக குருதான் என்று பல நீதி நூல்கள், சமயங்கள் போதிக்கின்றன. அத்தகைய நிலையிலிருந்து கொண்டு, தனக்கு இழுக்கு நேரும்படி, மாணவிகளிடம் தீய நோக்கத்துடன் பழுகுவது கீழ்த்தரமான செயல். குற்றங்களை முறையாக விசாரணை செய்ய, ஒரு குழு நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

பொதுவாகப் பெண்களிடம் "இன்ஸ்டிங்ட்' என்ற உள்ளுணர்வு அதிகம் என்று கூறுகிறார்கள். சொல்லித்தரும்போது பாடகரின் பார்வையிலோ, செயலிலோ சற்று வேறு விதமான போக்கு தென்பட்டிருந்தால் உடனே விலகியிருக்கலாமே? இப்போதுதான் இல்லத்திலிருந்தபடியே கற்க "ஸ்கைப்' வசதி உள்ளதே? எனினும் இந்த "மீ டூ' பூதம் கிளம்பியது ஒரு வகையில் நல்லதுதான். சபலபுத்தி உள்ள ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இந்த "மீ டூ' அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.
இல்லாத பதிவாளர் பெயரில் அறிவிக்கை

Added : டிச 09, 2018 23:06

சென்னை: அண்ணா பல்கலை பதிவாளர் பதவி காலியாக உள்ள நிலையில் பதிவாளர் பெயரில் வெளியிட்டுள்ள அறிவிக்கை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜி., கல்லுாரிகளுக்கு டிச., 3ல் நடந்த கணித தேர்வில் வினாத்தாள் 'லீக்' ஆனதால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல 'எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன்ஸ்' துறையில் 'ஆப்டோ எலக்ட்ரானிக் டிவைசஸ்' என்ற பாடத்துக்கு தேர்வு நடந்தது. அதில் 2017 நவம்பரில் வந்த பழைய வினாத்தாள் வழங்கப்பட்டதால் மறுதேர்வு நடத்தப்பட்டுள்ளது.

பல்கலையின் நேரடி கல்லுாரிகளுக்கான தேர்வு துறையில் என்.ஆர்.ஐ., விடைத்தாள் திருத்தத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாசலு நீக்கப்பட்டு சஞ்சீவி நியமிக்கப்பட்டுள்ளார்.அண்ணா பல்கலையின் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவி காலியாக உள்ளது. திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு துறை இயக்குனர் குமார், பதிவாளராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். பேராசிரியர், வெங்கடேசன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவியை கூடுதலாக கவனிக்கிறார்.இந்நிலையில் தொலைநிலை கல்விக்கு நேற்று மாணவர் சேர்க்கை அறிவிப்பு, பதிவாளர் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.ஆனால், பதிவாளரே இல்லாமல் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டது போல், அறிவித்தது எப்படி என உயர்கல்வி அதிகாரிகளும், பேராசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 பதிவாளர் இல்லாத நிலையில், பதிவாளர் பொறுப்பு என குறிப்பிட்டிருக்க வேண்டும் அல்லது தொலைநிலை கல்வி இயக்குனர் வழியாக மாணவர் சேர்க்கையை அறிவிக்கலாம்.மாறாக, சட்ட சிக்கலை ஏற்படுத்தும் வகையில் பதிவாளர் இருப்பது போல அறிவிக்கை செய்தது, பல்கலையின் நிர்வாகத்துக்கு சட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும் என சில பேராசிரியர்கள் கூறினர். ஏற்கனவே பல்கலை தேர்வுத்துறையில் பல்வேறு குளறுபடி நிலவும் நிலையில் பதிவாளர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னை, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


புயல்,பாதிப்பு,அடுத்த மிரட்டல்,பெய்ட்டி

DINAMALAR 10.12.2018

வங்க கடலில், புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. 'பெய்ட்டி' என, பெயரிடப்பட உள்ள இந்த புயல், வரும், 13ம் தேதி, தமிழக கடற்பகுதியை நெருங்கி, சென்னை - கல்பாக்கம் இடையே, கரையை கடக்க வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 'கஜா' புயலின் பாதிப்பும், சோகமும் தீராத நிலையில், அடுத்த புயல் தமிழகத்தை மிரட்டத் துவங்கியுள்ளது.

தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை துவங்கியது முதல், திடீர் கன மழையும், புயலும் அடுத்தடுத்து மிரட்டி வருகின்றன. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, 'கஜா' புயலாக மாறி, நவம்பர், 16ல், நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கரையை கடந்தது. இதனால், டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

மின் வினியோகம்:

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஆனாலும், பல கிராமங்களுக்கு, இன்னும் மின் வினியோகம் துவங்கவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட சோகத்தில் இருந்து மீள முடியாமல், மக்கள் தவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், தமிழகத்தை மீண்டும் ஒரு புயல் மிரட்டி வருகிறது.
கஜா புயலுக்கு பின், நவம்பர் இறுதியில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமும், டிச., 4ல், காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி, மழையை கொட்டின. டிச., 6 முதல், மழை குறைந்து, வறண்ட வானிலை நிலவுகிறது. பகலில் வெயிலும், மாலை முதல் முற்பகல் வரை பனியும் நிலவுகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு தென் கிழக்கே, நில நடுக்கோட்டு பகுதிக்கு வடக்கில், வங்க கடலின் தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது, நாளை முதல், காற்றழுத்த

தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த மண்டலம், அந்தமானுக்கு அருகில் வரும் போது, புயல் சின்னமாக மாறும். பின், புயலாக உருவெடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலுக்கு, தாய்லாந்து நாடு வழங்கியுள்ள, 'பெய்ட்டி' என்ற, பெயர் சூட்டப்பட உள்ளது.
இப்புயல், வட மேற்கு திசையில் நகர்ந்து, வரும், 13ம் தேதி நள்ளிரவு முதல், தமிழக கடற்பகுதியை நெருங்கும். டிச., 15 முதல், 16ம் தேதிக்குள், நெல்லுார் - நாகை இடையில் கரையை கடக்கலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய நிலவரப்படி, இந்த புயல், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு

இடையே, கல்பாக்கம் அருகே, கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

மாறலாம்:

புயல் உருவான பின், காற்றின் வேகம், திசை மாறுபாடு, நிலப்பகுதியில் உள்ள வெப்பநிலை ஆகியவற்றை பொறுத்து, கரையை கடக்கும் இடமும், நாளும் மாறலாம் என்றும், வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். அதேநேரத்தில், புதிய புயலால், கடலுார், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிக தாக்கம் ஏற்படலாம். ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு தடை:

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளதால், சூறாவளி காற்றுடன் அலைகள் கொந்தளிப்பாக இருக்கும். எனவே, தென் கிழக்கு, தென் மேற்கு மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு, 12ம் தேதி வரை, மீனவர்கள் செல்ல வேண்டாம் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

- நமது நிருபர் -
'நகரும் பதிவேடு' அமல்படுத்த உத்தரவு

Added : டிச 09, 2018 22:31

போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்களை கண்காணிக்கும் விதமாக, 'நகரும் பதிவேடு' அமல்படுத்த, சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள், கடந்த, 4ம் தேதி, புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் அறிவுரையை தொடர்ந்து, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், டாக்டர்கள் சங்கம், நிர்வாகத்துக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால், மருந்து குறித்த விபரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், போராட்டத்தை காரணம் காட்டி, டாக்டர்கள் பலர், முறையாக பணியில் ஈடுபடுவ தில்லை என, புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அரசு அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள, நகரும் பதிவேடு முறையை, தீவிர மாக அமல்படுத்த, சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:அனைத்து தரப்பு அரசு அலுவலர்களுக்கும், இந்த நகரும் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அரசு அலுவலர்கள் பணி நேரத்தில் வெளியில் செல்லும்போது, இப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து டாக்டர்களும் இந்நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
'இ - மார்க்கெட் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும்' : அரசு அலுவலங்களுக்கு புதிய உத்தரவு

Added : டிச 09, 2018 21:36

அரசு அலுவலகங்களுக்கு தேவையான, மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை, 'இ - மார்க்கெட்' எனப்படும், 'ஆன்லைன்' வர்த்தக முறையில் வாங்க, செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு அலுவலகங்களுக்கு தேவையான பர்னிச்சர், எழுது பொருட்கள், கணினி சார்ந்த பொருட்கள் அதிகம் வாங்கப்படுகின்றன. இப்பொருட்களை, எங்கு, எப்படி வாங்குவது என்பதற்கான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது.இதில், கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்களை, தமிழ்நாடு மின்னணு கழகமான, 'எல்காட்' வாயிலாக வாங்க வேண்டும். இதற்கும், துறை ரீதியாக கருத்துரு அனுப்புவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன

.இருப்பினும், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், அதற்கான சார்பு பொருட்களை வாங்குவதில், குளறுபடிகள் நடப்பதாக புகார் எழுகிறது. இதில், வெளிப்படை தன்மையை உறுதி செய்ய, இந்த நடைமுறையை, ஆன்லைன் முறைக்கு மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, எல்காட் நிறுவனம், இ - மார்க்கெட் என்ற ஆன்லைன் சேவையை துவக்கியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்கள், வழக்கமான முறையில் பொருட்களை வாங்குவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தலைமை செயலகத்தில், சமீபத்தில் நடந்த அனைத்து துறை செயலர்கள் கூட்டத்தில், இ - மார்க்கெட் தளத்தில், அரசு துறைகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பொருட்கள் வாங்கும் அதிகாரி, அத்துறை சார்பில், இத்தளத்தில் பதிவு செய்து, பொருட்களை வாங்க, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.துறை வாரியாக, இ - மார்க்கெட் திட்டத்தில் பதிவு செய்த விபரத்தை தெரிவிக்கவும், செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், எந்தெந்த அரசு துறைகள், என்னென்ன பொருட்களை வாங்கியுள்ளன என்ற விபரம், அரசுக்கு நேரடியாக சென்றுவிடும்.

- நமது நிருபர் -
வி.ஏ.ஓ.,க்கள் இன்று போராட்டம் : அதிகாரிகளுக்கு அரசு, 'அலர்ட்'

Added : டிச 09, 2018 21:34

சென்னை: கிராம நிர்வாக அலுவலர்களான, வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், இன்று போராட்டங்களை அறிவித்துள்ளதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.சிறப்பு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், வி.ஏ.ஓ.,க்கள், காலவரையற்ற போராட்டத்தை துவக்குகின்றனர். ரயில் நிலையங்களில், தனி கவுன்டர்களை திறக்க வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர், ரயில் நிலையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என, அறிவித்துள்ளனர்.இவ்விரு போராட்டங்களால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட கலெக்டர்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ், எஸ்.பி.,க்களுக்கும், பொதுத் துறை செயலர் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.

ரயில்களில் தண்ணீர் நிரப்ப புதிய திட்டம் அறிமுகம்

Added : டிச 09, 2018 21:52


புதுடில்லி: நீண்ட துார ரயில்களில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில், புதிய திட்டத்தை, ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது.தற்போது நீண்ட துாரம் செல்லும் ரயில்களில், 300 கி.மீ.,க்கு ஒருமுறை தண்ணீர் நிரப்பப்படுகிறது. இவ்வாறு, 24 பெட்டிகள் அடங்கிய ரயிலுக்குத் தேவையான தண்ணீரை நிரப்ப, 20 நிமிடங்கள் ஆகின்றன. ஆனால், ரயில்கள் நீண்ட நேரம் காத்திருக்க முடியாது என்பதால், குறைந்த அளவு தண்ணீரே நிரப்பப்படுகிறது.அதனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பயணியர் அவதிப்படுகின்றனர். இதை தடுக்கும் வகையில், புதிய முறையை ரயில்வே நிர்வாகம் உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து, ரயில்வே மூத்த அதிகாரிகள் கூறியதாவது:தண்ணீர் நிரப்பும் வசதியுள்ள ரயில் நிலையங்களில், தற்போது, 4 அங்குல குழாய்கள் மூலம், தண்ணீர் நிரப்பப்படுகிறது. இவை, 6 அங்குல குழாய்களாக மாற்றப்பட உள்ளன. மிகவும் அதிக தண்ணீரை அளிக்கும் வகையில், அதிகசக்தி உடைய மோட்டார்கள் பயன்படுத்தப்பட உள்ளன.மேலும், கம்ப்யூட்டர் கண்காணிப்புடன், தண்ணீர் நிரப்பப்பட உள்ளது. இந்த புதிய வசதிகளை செய்வதற்கு, ரயில்வே வாரியம், 300 கோடி ரூபாயை ஒதுக்கிஉள்ளது. இதனால், இனி, ஐந்து நிமிடங்களுக்குள், ஒரு ரயிலுக்கு தேவையான நீரை நிரப்ப முடியும். அடுத்த மார்ச் முதல், இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனால், இனி, ரயில்களில், தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்

Added : டிச 09, 2018 15:39 |



உதய்பூர்: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகள் திருமணத்தில் பங்கேற்க வரும் முக்கிய பிரமுகர்களை விமான நிலையத்தில் இருந்து அழைத்து செல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு விருந்தினர்கள்

நாட்டின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், ரியல் எஸ்டேட் நிறுவனர் அஜய் பிரமலின் மகன் ஆனந்துக்கும், 12ல், மும்பையில் திருமணம் நடக்கவுள்ளது.சங்கீதம், நாட்டியம் மற்றும் மெஹந்தி உள்ளிட்ட, திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், 10ம் தேதி வரை நடக்கின்றன.திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அம்பானி குடும்பத்தினர் மற்றும் பிரமல் குடும்பத்தினர் உதய்பூர் வந்துள்ளனர்.இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

தனியார் விமானங்கள்

சிறப்பு விருந்தினர்களை அழைத்து வர, 30 முதல் 50 தனியார் விமானங்கள் உதய்ப்பூர் மஹாராணா பிரதாப் விமான நிலையத்தில் தரையிறங்கவும், ஏறவும் உள்ளன. சாதாரண நாட்களில் இங்கு 19 விமானங்கள் தான் தரையிறங்கும்,கிளம்பி செல்லும். மேலும், சிறப்பு விருந்தினர்களை, விமான நிலையத்திலிருந்து தங்கும் இடத்திற்கு அழைத்து செல்ல ஜாக்குவார், போர்சே, மெர்சிடிஸ், ஆடி, பிஎம்டபிள்யு உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடம்பர கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. விமானத்தை தவிர்த்து உதய்ப்பூரில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், 600 விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். திருமணத்திற்கு, இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Students from other states swamp MBBS in Tamil Nadu

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN

PublishedDec 7, 2018, 12:49 am IST

There were complaints that students from other states, after illegally obtaining nativity certificates, are applying under state quota.

To keep a check on a number of students from other states joining MBBS under state quota, the directorate of medical education has introduced a new rule this year saying that their parents should have done their schooling in Tamil Nadu.

Chennai: While only four students from government schools in Tamil Nadu were able to join MBBS in government medical colleges this year, a staggering 191 students who studied in other states have joined under the state quota in 22 medical colleges owned by the state, reveals data provided by the Directorate of Medical Education (DME).

When only one student was able to join from government schools in private medical colleges, as many as 70 students from other states joined Tamil Nadu medical colleges, according to the data obtained by RTI application.

The issue created a huge uproar in the state last year as 422 students studied in other states joined the government medical colleges after NEET was made mandatory. After obtaining nativity certificates from revenue department, they competed with the state students for medical seats.

To keep a check on a number of students from other states joining MBBS under state quota, the directorate of medical education has introduced a new rule this year saying that their parents should have done their schooling in Tamil Nadu.

"After implementing a new rule that either one of the parents should have had their schooling in Tamil Nadu, the number of students from outside the state has reduced this year. From over 400 students, it has come down to over 200 students this year," sources said.

"Till 2017, the students studying outside were not able to compete with state board students who will score very high cut-off marks. After NEET, they are scoring better in the entrance test compared to the state board students," sources added.

A case was also filed in the Madras High Court which sought to prevent students who have studied in other states joining Tamil Nadu medical colleges under state quota by providing nativity certificates. However, it is still pending before the court for more than a year.

There were complaints that students from other states, after illegally obtaining nativity certificates, are applying under state quota.

“There are some genuine cases like central government employees who get frequent transfers. While respecting the rights of the natives and residents, the state government should ensure that nativity certificates are not being misused,” said Dr.G.R.

Ravindranath, general secretary, Doctors Association for Social Equality “At present, there is no restriction on these students. We will apprise the government and come up with rules to safeguard the interest of our students,” officials added.

Headmasters from government schools urged the state government to provide separate reservation for students studying in state board and government schools. “These students have other opportunities like all India quota and the quota for their residential states to join MBBS. It is clear that state board students and government school students are not able to compete with other boards. Hence, they should be provided with a special reservation to ensure the equal representation of state board school students,” they said.

Of 2,447 seats in 22 government medical colleges, only around 40 students from government and private schools in state board joined MBBS this year. Meanwhile, 1,277 students from previous years and 611 students from CBSE schools were able to get the seats in government medical colleges.

As per rules, candidates must be domiciled in Tamil Nadu to get seats under state quota. The candidates who have studied from Class 6 to 12 in Tamil Nadu do not need to submit the domicile or nativity certificate while, the candidates who have studied class 6 to 12 partly or completely outside Tamil Nadu, have to produce it.

NEWS TODAY 27.09.2024