Saturday, January 21, 2017

Mumbai, January 20

RTI: Each Rs 500 note costs govt Rs 3.09


The Reserve Bank of India (RBI) spends Rs 3.09 for each Rs 500 note as cost towards paper, printing and other charges, an RTI query has revealed. The information was given here on Friday to Mumbai Right to Information activist Anil Galgali on his query on the printing costs incurred by the government for printing Rs 500 and Rs 1,000 notes.
RBI Deputy General Manager P Wilson in a submission said the “selling price” is Rs 3,090 per thousand pieces of Rs 500 denomination new currency notes, or Rs 3.09 per note for the current year, 2016-2017. The RBI buys the currency from the Bharatiya Reserve Bank Note Mudran Pvt Ltd (BRBNMPL), its official supplier and printer for currency notes, Galgali said.
The BRBNMPL said it did not have information pertaining to Galgali’s RTI query on the Rs 1,000 currency notes — which may be printed in future. However, the RBI declined to provide information on the orders placed for total quantity (number) of notes of Rs 500 and Rs 1,000, its value, total contract amount, amount released and pending, as it fell under the ambit of RTI Section 8(1)(a).
Galgali said it was surprising why the government was not revealing the actual data on the number of the new Rs 500 printed and proposed Rs 1,000 currency notes even almost two-and-half months after demonetisation of the earlier Rs 500 and Rs 1,000 notes on November 8. — IANS

Mumbai: CA aspirant commits suicide after failing in final exam

Days after an MBBS jumped to his death from his balcony upon scoring low marks in his MD exam, a 23-year-old CA aspirant Anamika Mathuli killed herself on Wednesday after she failed in the CA finals, whose results were announced on Jan 17.
She committed suicide at her rented flat in Kandivli. Police sources said Anamika hailed from West Bengal and was living in the flat since March last year, preparing for her CA finals. She was living alone in the flat after her friend left when she got a job, said a police official from Charkop police station.
But when the results of the exam were declared on Tuesday, she did not find her enrolment number in them. This sent her into depression.
The incident came to light when her brother reached her residence on Wednesday night as her mobile phone was switched off. He found the door locked from inside and knocked several times. After getting no response, he called some residents and the security guard. They, in turn, called the cops, who broke into the flat with the help of fire brigade officials, only to find Anamika hanging from the ceiling fan. No suicide note has been discovered yet.
Anamika was rushed to the Shatabdi Hospital where the doctors declared her dead before arrival. The body was later sent for postmortem to the Bhagwati Hospital. An Accidental Death Report has been registered and further investigation is on, said senior police inspector Vijay Kumar Bhalshankar of Charkop police station.

Young doctor jumps to death


மோடி மேஜிக் தொடருமா?

By ஆசிரியர்  |   Published on : 21st January 2017 01:24 AM  |  
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வடமாநில அரசியல் சூடு பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை. பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களும் வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரையிலான இடைவெளியில் தேர்தலை சந்திக்க இருக்கின்றன. மார்ச் 11-ஆம் தேதி அனைத்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியைப் பிடித்து, பாதியளவு பதவிக்காலம் முடிந்த நிலையில் நடைபெறும் தேர்தல் என்பதால், இந்தத் தேர்தலின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
அடுத்த மாதம் 4-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பங்குபெற இருக்கும் ஐந்து மாநிலங்களுமே, வெவ்வேறான அரசியல் சரித்திரமும், வாக்காளர்களின் கண்ணோட்டமும், ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட அரசியல் வியூகங்களையும் கொண்டவை. ஆனால், தேர்தல் முடிவுகளோ, தேசிய அளவில் தாக்கத்தையும், காங்கிரஸ், பா.ஜ.க. என்கிற இரண்டு தேசியக் கட்சிகளின் வருங்காலத்தையும் நிர்ணயிக்கக் கூடியவை.
கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைந்தன. அஸ்ஸாமில் ஆட்சியைப் பிடித்தது மட்டுமல்லாமல் கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் 10 விழுக்காட்டுக்கும் அதிகமாக வாக்குகள் பெற முடிந்தது என்பது பா.ஜ.க.வின் மிகப்பெரிய சாதனை. நடைபெற இருக்கும் தேர்தல் சுற்றில், கோவாவில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதுடன், உத்தரகண்டில் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பதும் பா.ஜ.க.வின் அடிப்படை முனைப்பு. பஞ்சாபின் அகாலிதளக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வின் வெற்றி தோல்வி, அகாலி தள அரசின் பத்தாண்டுகால ஆட்சிக்கு மக்கள் எந்த அளவுக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என்பதைப் பொருத்து அமையும்.
பஞ்சாபுக்கு, பா.ஜ.க. பெரிய அளவு முக்கியத்துவம் தர வாய்ப்பில்லை. தனது ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று அகாலிதளம் முயற்சிக்கும் என்றாலும், ஆட்சியைப் பிடிப்பதில் முனைப்புடன் களமிரங்கி இருப்பது காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும்தான். கோவாவிலும், பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடித்தால் தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றான எதிர்க்கட்சியாக மாறிவிடலாம் என்பது ஆம் ஆத்மி கட்சித் தலைவரான தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் அரசியல் கணக்கு. மும்முனைப் போட்டியின் பலன் தனக்கு சாதகமாக இருக்கும் என்று அகாலிதளமும், அகாலிதளத்துக்கு மாற்றாகத் தங்களைத்தான் மக்கள் கருதுவார்கள் என்று காங்கிரஸும் எதிர்பார்க்கின்றன.
ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான இந்தத் தேர்தலில், பா.ஜ.க.வைப் பொருத்தவரை மிக முக்கியமான போட்டியாக அது கருதுவது உத்தரப் பிரதேசத்தைத்தான். பா.ஜ.க. எதிர்பார்ப்பதுபோல, ஆளும் சமாஜவாதி கட்சி உடையாதது நிச்சயமாக ஒரு பின்னடைவு. ஆனால், முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும் முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சமாதானமும், மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் என்று பரவலாக ஒரு கருத்து ஏற்பட்டிருப்பது பா.ஜ.க.வுக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் சாதகமாகக்கூட மாறலாம்.
பிரதமர் மோடியை முன்னிறுத்தி பா.ஜ.க. உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடத்துவதில் ஒரு இடர்ப்பாடு இருக்கிறது. இதனால், ரூ.500, ரூ.1000 செலாவணிகளைச் செல்லாததாக்கும் முடிவின் மீதான மக்கள் தீர்ப்பாகத் தேர்தல் முடிவுகள் கருதப்படும். கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவை இடங்களில் 73 இடங்களை பா.ஜ.க. கூட்டணி வென்றது. அதே அளவு வெற்றியை அடையவில்லை என்றால், பிரதமர் மோடியின் செல்வாக்குச் சரிவாக முடிவுகள் கருதப்படும். இது தெரிந்தும், முதல்வர் வேட்பாளராக யாரையும் அறிவிக்காமல் பா.ஜ.க. துணிந்து களமிறங்கி இருக்கிறது.
உத்தரகண்டிலும், மணிப்பூரிலும் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதும், பஞ்சாப் மற்றும் கோவாவில் ஆட்சியைப் பிடிப்பதும் மட்டுமல்லாமல், உத்தரப் பிரதேசத்திலும் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது காங்கிரஸ். கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னால் நடைபெற்ற தேர்தல்கள் எல்லாமே காங்கிரஸுக்கு எதிராகவே அமைந்திருக்கின்றன. இந்தச் சுற்று சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியைத் தழுவினால், தேசிய அரசியலிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் அபாயம் காணப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை, சமாஜவாதி கட்சியிடமிருந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்கிற முனைப்புடன், வேட்பாளர் பட்டியலை அறிவித்துப் பிரசாரத்திலும் இறங்கிவிட்டிருக்கிறார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி. தனது வேட்பாளர் பட்டியலில் 87 தலித் வேட்பாளர்களையும், அவர்களைவிட அதிகமாக 97 முஸ்லிம் வேட்பாளர்களையும் அறிவித்திருப்பது காங்கிரஸையும் சமாஜவாதி கட்சியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 97 தொகுதிகளில் முஸ்லிம் வாக்கு பிளவுபட்டு அதுவே பா.ஜ.க.வுக்கு சாதகமாகிவிடுமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.
என்னதான் தேர்தல் ஆணையமும் உச்சநீதிமன்றமும் அடையாள அரசியலுக்கு எதிராகக் குரலெழுப்பினாலும், உத்தரவு போட்டாலும் வழக்கம்போல் ஜாதியும், மதமும், இன உணர்வும்தான் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கப் போகின்றன. அது மட்டும் உறுதி!

Friday, January 20, 2017

#Jallikattu- அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

தமிழக அரசு கொண்டு வர உள்ள அவசர சட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசர சட்ட வரைவு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் தயாரித்திருந்தது. இதையடுத்து இந்த சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அவசர சட்டத்துக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு, இந்த சட்ட வரைவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இந்த சட்ட வரைவை அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து இன்று இரவுக்குள்ளே குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

Dailyhunt
'இனிமே எல்லாம் இப்படித்தான்!' இளைஞர்கள் துவக்கிய வெற்றிக் கணக்கு

மிழகத்தில் 4 நாட்களுக்கு முன்புவரை ஒரே ஒரு அலங்காநல்லூர். இன்று, தமிழ்நாடே அடங்காதநல்லூர் ஆகிவிட்டது. காஷ்மீரைத் தொட்டால் குமரி கொந்தளிப்பது போய், மதுரையைத் தொட்டால் மெரினா தெறிக்குது. இந்த அறவழிப்போராட்டத்தால் நாம் ஏற்கெனவே ஜெயித்துவிட்டோம் என்பதுதான் உண்மை. '100 இளைஞர்களைக் கொடுங்கள். உலகை மாற்றுகிறேன்' என்றார் விவேகானந்தர்.

அவர் இல்லம் (விவேகானந்தர் இல்லம்) முன்பு எப்போது லட்சக்கணக்கில் கூடினோமோ, அந்த நொடியிலேயே வெற்றிபெறத் தொடங்கிவிட்டோம் நாம். இதன் நீட்சியாக நாம் ஜெயித்த சில பொது இடங்கள் எவையெல்லாம் தெரியுமா?

1. வீட்டில் அம்மாக்கள், 'உன் இடத்தை நீ சுத்தமா வெச்சுக்க மாட்டியாடா' எனக் கேட்கும்போதெல்லாம், 'ம்மா, கலைஞ்சு இருந்தாதான் வீடு...
இல்லாட்டி மியூசியம்னு' சொன்ன ஒவ்வொரு பையனும் பொண்ணும் சாப்பிட்டு போட்ட குப்பைகளை அப்புறப்படுத்துறாங்க; டிராஃபிக் போலீஸ் மாதிரி டிராஃபிக் கிளியர் பண்ணிவிடறாங்க; தங்கச்சிக்கிட்ட ரிமோட் சண்டை போட்ட எல்லா அண்ணன்களும் போராட்டக்களத்தில் 'தண்ணி இந்தாங்க சிஸ்டர்... சாப்பாடு இந்தாங்க சிஸ்டர்'னு சகோதரத்துவத்தை வளர்க்குறாங்க. பார்க்கும் பொதுஜனங்கள் கண்களிலெல்லாம் 'ப்பா, எங்கடா இருந்தீங்க இவ்ளோ நாளும்'ங்கற கேள்விதான் தெரியுது. அவர்களுக்கு ஒரே பதில், 'பக்கத்துலேயேதான் அண்ணாச்சி இருந்தோம்'.
  
 2. பல பீட்சா கார்னர்களில் எல்லாம் செல்ஃபிகள் எடுத்த இந்த மாடர்ன் இளைய தலைமுறை, இன்று அந்த செல்ஃபிகளை நினைத்து வெட்கப்படுகிறது. 'இனி உங்கள் வாசலை மிதிக்க மாட்டோம்' என்ற சூளுரை வேறு.


3. ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் இவ்ளோ போராட்டம் என்ற நெறியாளர்களின் கேள்விக்கு, ''மாடு, எங்க சாமி. சாமிய முன்னாடி வெச்சு இந்த விஷயத்தைத் தொடங்கி இருக்கோம். இது வெறும் மாட்டை பத்தின பிரச்னை மட்டுமில்லே. எங்க நாட்டைப் பத்தின பிரச்னைனு எங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும். 'ஏறுதழுவதல் வேண்டும்'னு போராட்டத்துக்குப் பெயர்வெச்சாலும் விவசாயிக்கான நீதிதான் இதன் முக்கிய நோக்கம். இதை நீங்க எங்களோட கோரிக்கைகளில் பார்த்திருக்க முடியும்'' என்கின்றனர். (இது ஒருத்தருடைய பதிவல்ல. ஒட்டுமொத்த போராட்டக் குழு மக்களோட கருத்தும் இதுதான்பா.) இந்தத் தெளிவு உங்கள (நம்மள) எங்கேயோ கொண்டு போகிடும் மக்களே!

4. இன்னைக்கு சென்னை மெரினாவிலேயும், மதுரை அலங்காநல்லூர்லேயும், திருச்சியிலேயும், சேலத்திலேயும் இரவு பகல் பார்க்காமல்... பனி வெயில் பார்க்காமல் கொசுக்கடியில் தூங்கி எழும் ஒவ்வொருத்தரும் யாரு? வீட்ல அம்மா மறந்துபோய் ஆல்-அவுட் ஆன் பண்ணலைன்னாக்கூட கொசுக்கடிக்காக அவர்களைக் கடிந்துகொள்ளும் கடும்கோபக்காரர்கள்தான். ''எங்க இனத்துக்காக, எங்க அடையாளத்துக்காகப் போராடும்போது எப்படிப்பட்ட கொசுத் தொல்லை இருந்தாலும் நாங்க பொறுத்துக்குவோம்'' என்கின்றனர் அசால்ட்டாக. (நோ டபுள் - மீனிங் ப்ளீஸ்) அதனால்தானோ என்னவோ, இருட்டொளியில் மொபைலில் இவர்கள் டார்ச் அடிக்கும்போது ஒவ்வொன்றும் ஸ்டார் வடிவத்தில் தெரிகிறது. நின்னுட்டீங்கப்பா... வரலாறு பேசும் நம்மள.

5. முக்கியமான விஷயத்தை விட்டுட்டோமே. பெண்களைப் பாதுகாத்த விதம், ஆயிரம். இல்லை... இல்லை. எண்ணிக்கைக்கு அடங்காத லைக்ஸ் உங்களுக்கு. ஒரு ராயல் சல்யூட்டும் கூட. போராட்டக்களத்தில் 20 ஆண்கள் சூழ்ந்து இருக்க, நடுவே அழகாய் அமர்ந்தபடி புன்சிரிப்போடு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார் அந்தப் இளம்பெண். 'அந்தப் புகைப்படத்துக்குக் கீழே, அரசு விளக்கை அணைத்தால்... எங்கள் கை ஓங்கும். எங்கள் பெண்களைப் பாதுகாக்க வேண்டித்தானே அன்றி கைகலப்புக்கோ, கைநீண்டு அவர்கள் மீது பாய்வதற்கோ இடமளிக்கவல்ல' என்று. இதுமட்டுமா? போராட்டக்களத்தில் இருந்த ஒரு பெண் கூறுகிறார், "இங்க இருந்த பசங்க எங்க அப்பா மாதிரி எங்களைப் பார்த்துக்கிட்டாங்க" என்று. உடனே வந்து மீசைய முறுக்கி, ''இதான் நாங்க. நீங்க பொறுக்கின்னு சொல்றதால நாங்க பொறுக்கியாகிடல. இதுதான் அதுக்கு எடுத்துக்காட்டு''ன்னு கெத்தா சொன்னாங்க. (இந்த இரண்டும்கூட எடுத்துக்காட்டுகள்தான். இதுமாதிரி போராட்டத்துல இருந்த அத்தனை பெண்களும் சொன்னாங்க என்பது குறிப்பிடத்தக்கது.) மீசைய முறுக்கு... காலரை ஏத்து... கெத்தா, வெயிட்டா!

6. உணவுப்பொட்டலங்கள் வந்தவுடன் ''பசி காதை அடைக்குது... மொதல்ல நான் சாப்பிடறேன்''னு சொல்லாம, பக்கத்தில் இருக்கும் முன்பின் அறிமுகமில்லாத சில இளைஞர்களைத் துணைக்கு அழைத்து... ''உள்ள இருப்பவர்களுக்குக் கொடுத்துட்டு வந்திடலாம் வாங்க ப்ரோ'' என்றனரே... வளரும் குழந்தைகளிடையே பகுத்துண்ணும் பழக்கத்துக்கு காக்கையை எடுத்துக்காட்டா சொல்லாதீங்க. இந்தப் பசங்களைச் சொல்லுங்க. இதுல இன்னொரு பாடமும் இருக்கு. என்ன தெரியுமா? நீ நல்லவனா இருக்கும்போது, உன்னைச் சுற்றி இருப்பவனும் தன்னாலயே நல்லவனாகிடறான்!

7. பசின்னு சொன்ன பிறகுதான் ஞாபகம் வருது! அந்நிய குளிர்பானங்களை புறக்கணிப்புச் செய்யணும்னு வாய்வார்த்தையா சொல்லாம, களத்துக்குள்ள செய்தும் காட்டியது இந்தப் படை. தாகம் தணிங்கன்னு சொல்லி 'கோக், பெப்சி, லிம்கா' போன்றவற்றை எதார்த்தமாய் கொடுத்த கடைக்காரர்களிடம்கூட ''தண்ணி தவிச்சு உயிர்போனாலும் பரவாயில்லே... இதைக் குடிக்கமாட்டோம்''னு சொன்னாங்களே... இதுபோதாதா, ஒரு போராட்டத்தின் வீரியத்தை நமக்கு உணர்த்த? (குறிப்பு: 'தாமிரபரணியின் நிலவளத்தைச் சுரண்டும் குளிர்பானங்களைத் தொட மாட்டோம்' என்ற வாசகம் பல விவசாயிகளின் மனதையும் இதமாய் வருடிக்கொடுத்தது.)

8. செய்தி வாசிப்பாளர்கள் யாவருக்கும் பெர்சனலாய் ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கும். எவ்வளவு பெரிய சோகச் செய்தியாய் இருந்தாலும் எளிதில் கண்ணீர்விட மாட்டார்கள். எவ்வளவு சந்தோஷமான விஷயம் என்றாலும் சிறு புன்னகையுடன் நிறுத்திக்கொள்வர். ஆனால், இந்தப் போராட்டத்தின்போது நடந்த பெரும்பாலான செய்தி வாசிப்புகளில் இந்தக் கட்டுப்பாடுகள் எதுவும் எடுபடவில்லை. ஒவ்வொருவரும் 'இளைஞர் எழுச்சி', 'களத்தில் இளைய சமூகம்'ன்னு சொல்லும்போது அகமும் முகமும் அவ்வளவு பெருமையை எக்ஸ்ப்ரஷனா காட்டியது. அவர்களும் இளைஞர்கள்தானே... அவர்களுக்குள்ளேயும் ஓர் இளைஞன் 'எழுந்திருச்சுட்டா மக்கா, இனிமே ஊழல்லாம் துச்சம்'ன்னு சொல்லத்தானே செய்வான். இந்த மகிழ்ச்சியும் பெருமையும் இவர்களைத் தாண்டி அன்றாடம் வேலைக்குவரும் காவல் துறையினர், கள நெறியாளர்கள், புகைப்படக்காரர்கள், அவ்ளோ ஏன், சோளம் விற்கும் பாட்டிகள்ன்னு எல்லோரிடமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 'வா தலைவா, அதான வேணும் எங்களுக்கும். மகிழ்ச்சியே எங்களுக்கு' என்பதுபோல் உள்ளது களத்தில் போராடுபவர்களின் பார்வை.

9. களத்துக்கு ஆதரவு தெரிவிக்கவந்த திடீர் நடிகர்கள், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் "உங்களுக்கு எங்க ஆதரவும் இல்லை, மெரினாவில் போராட்டம் பண்ண இடமும் இல்லை, வெளிய போங்கன்னு" சொல்லிட்டாங்க. முதல் நாள், முதல் ஆதரவுக் கரம் நீட்டிய சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ''ஏம்பா''ன்னு கேட்டா, ''முதல் விஷயம், காவிரிக்குப் பேசமுடியாதுன்னு சொன்னவங்க இதுக்கும் பேசவேண்டாம். இதையும் அதுமாதிரியே நீங்க கண்டுக்காம விட்டுடுடலாம். நாங்க பார்த்து பண்ணிக்கிறோம். ரெண்டாவது, நடிகர்களும், அரசியல்வாதிகளும் களத்துக்குள்ள வந்தால்... போராட்டக்குழுவை விடவும் அந்தப் பிரபலங்களின் பேட்டிகளுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுது. அதனாலயோ, என்னவோ பலர் பப்ளிசிட்டிக்காகவே வர்றாங்க. நாங்க செய்யும் போராட்டத்தை யாரும் தப்பா உபயோகப்படுத்த விடமாட்டோம்'' என்கின்றனர் கோரஸாக. சொல்ல வார்த்தையில்லை எங்களிடம்... வாழ்த்துகள்.

10. பசி தீர நாங்கள் உணவளிக்கிறோம் என தலப்பாக்கட்டி மாதிரி, கடைகளில் இருந்து வந்திருந்த பசங்களும், பீச்சில் கூடையில் பிஸ்கெட், சுண்டல், சோளம் எல்லாம் இலவசமாவே தந்த பாட்டி தாத்தாக்களும் (தங்கள் அன்றைய வருமானம் போனாலும் பரவாயில்லை என்று), வரும்போதே 4 பிஸ்கெட் பாக்கெட் வாங்கிட்டு வந்து பக்கத்துல இருக்கிறவங்களுக்கும் கொடுத்த தாய்க்குலங்களும், பெண்களுக்குத் தேவைப்படுமேன்னு எங்கிருந்தோ கொண்டுவந்து மொபைல் டாய்லெட் வைத்தவர்களும், பச்சிளங்குழந்தையோடு வந்தவர்களுக்கு குடையும், போர்வையுமாய் ஆதரவு தெரிவித்து ரெஸ்ட் எடுக்க வைத்த தம்பிகளும்... அட... அட... அட... நம்ம ஊரா இதுன்னு புல்லரிக்க வெச்சுட்டாங்க. இது எழுச்சிப் போராட்டம் என்பதைத் தாண்டி, இது ஒரு நெகிழ்ச்சிப் போராட்டம் என்று உண்மையிலேயே உணரவெச்சுட்டாங்க இவுங்க எல்லோரும்!

இந்த இடங்களிலெல்லாம் இந்தப் போராட்டம் தனது வெற்றியை உறுதிசெய்தது. உண்மையில், தீர்ப்பு இந்த 'ஒரு' போராட்டத்தின் க்ளைமாக்ஸ் காட்சிதானே அன்றி, அது அல்ல வெற்றி என்பதுதான் நிதர்சனம். அதனாலதான் சொல்றோம், 'இந்த அறப்போராட்டம் வெற்றி பெற்று 4 நாள் ஆச்சு மக்கா'. பக்கத்துல இருக்கும் நண்பர்களுக்கும், வெற்றிபெற்றதற்காக வாழ்த்துகள் கூறி... சந்தோஷத்தை பகிர்ந்துக்கோங்க. 'சீக்கிரம் க்ளைமாக்ஸ் வந்துவிடும்' என்று நம்புவோம்.!

- ஜெ.நிவேதா, மாணவப் பத்திரிகையாளர்
Dailyhunt
 

 போராட்டக்காரர்கள் எதிர்கொள்ளும் விமர்சனமும், இளைஞர்களின் 
 துல்லியப் பார்வையும்!        #SupportJallikattu

கல், பனி எல்லாம் பார்க்காமல் கூட்டம் எகிறிக் கொண்டே இருக்கிறது மெரினாவில். கறுப்புச் சட்டையும் கலகக் குரலுமாய் உற்சாகம் வற்றாமல் அமர்ந்திருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான மக்கள். சின்னப் புள்ளியில் தொடங்கிய இந்தப் போராட்டம் அரசியல் வரலாற்றின் பல பக்கங்களை நிரப்பப் போகிறது என்பதுதான் நிதர்சனம். ஆனால் ஓங்கி ஒலிக்கும் அந்த குரல்களுக்கிடையே சில எதிர்க்கருத்துகளையும் கேட்க முடிகிறது. அவற்றில் முக்கியமானது 'நாட்டுல எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறப்போ, அதுக்கெல்லாம் போராடாத மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு போராடுறது தேவைதானா? என்பது. இந்தக் கேள்விக்கு பதில் இல்லாமல் போனால் ஒட்டுமொத்த போராட்டத்துக்கான நோக்கமும் கேள்விக்குறியாகும் வாய்ப்பு இருப்பதாலேயே இந்தப் பதிவு.

ஏன் தேவை இந்தப் போராட்டம்?
 
சினிமாவில் ஒரு கணக்கு உண்டு. குழந்தைகளுக்குப் பிடித்த நடிகரே கலெக்ஷனில் கில்லியாக இருப்பார். காரணம், அந்தக் குழந்தைகளின் மூலம் மொத்தக் குடும்பமும் அந்த நடிகரின் படத்துக்குச் செல்லும் என்பதுதான். அதே லாஜிக்தான் இங்கேயும். மாணவர்கள் களத்தில் இறங்கினால் அவர்களின் குடும்பமும் களத்தில் இறங்கும். போராடும். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி சில ஆண்டுகள் முன் நடந்த இலங்கை போர்க்குற்ற விவகாரம் வரை இதுதான் நடந்தது. இப்போதும் அதுதான் நடக்கிறது. அந்த வகையில் மொத்தத் தமிழகத்தையும் இணைக்கும் புள்ளி மாணவர்கள்தான்.

ஜல்லிக்கட்டுக்குப் போராட்டம் தேவைதானா?
 
ஜல்லிக்கட்டு குறித்து பலவித கருத்துகள் நிலவுவது உண்மைதான். ஜாதீய அடையாளமாக ஜல்லிக்கட்டு பயன்படுத்தப்படுவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஆநிரைகளை கவர்வது மீட்பதுமான அந்த விளையாட்டில் இரு பிரிவினர் பெரும்பான்மையாக பங்கெடுத்ததும் உண்மைதான். (400 ஆண்டுகளுக்கு முன்புவரை ஏறுதழுவுதல் எல்லாருக்கும் பொதுவாகத்தான் இருந்தது என்பது ஒரு தரப்பின் நியாயம்). ஆனால் இந்த ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி அணிதிரள ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அது 'Why always us?' என்ற ஆதங்கம். 'அணு உலையா? அனுப்பு தமிழ்நாட்டுக்கு', தண்ணியா? அனுப்பாத தமிழ்நாட்டுக்கு' என்ற புறக்கணிப்பு.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அடிவாங்குவது, காவிரி பிரச்னையில் வயிறு காய்வது என சகலவற்றிலும் நம்மை வைத்து செய்கிறார்களே என்ற கோபத்தின் வெளிப்பாடுதான் ஒரு கட்டத்தில் இங்கே வந்து நின்றிருக்கிறது. போக, ஜல்லிக்கட்டுத் தடைக்கு பின்னால் இருக்கும் வணிக நோக்கத்தையும் பால் அரசியலையும் முற்றிலும் புறந்தள்ளிவிட முடியாது. நாட்டு மாடுகள் தரும் A2 ரகப் பால் கிடைப்பதே குதிரைக்கொம்பாகி வருவது இதன் முக்கிய சாட்சி.

தேவை அரசியல் பார்வை:
 
முன் எப்பொழுதையும்விட இப்போது அரசியல் பேசியாகவேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. காரணம், தொடர்ந்து புறக்கணிக்கப்படும் உரிமைகள் பற்றி உரக்கப் பேசிய (குறைந்தபட்சம் தேர்தல் நேரங்களிலாவது) இரு திராவிடத் தலைமைகளும் இப்போது அரசியலில் இல்லை. அந்த வெற்றிடங்களை நிரப்ப ஆளாளுக்கு துண்டு போட்டுக் காத்திருக்கிறார்கள். பெரியாரின் குரல் காற்றில் இன்னும் கேட்டபடிதான் இருக்கிறது. அதைத் தாண்டியும் வன்கொடுமைகள் நடந்து வரும் நேரத்தில், புதிதாய் நுழைய முற்படுபவர்களை தடுப்பதுதான் நாளைய தலைமுறைக்கு நாம் செய்யும் குறைந்தபட்ச நியாயமாக இருக்கமுடியும். அதற்கு தெளிவான அரசியல் பார்வை அவசியம். இந்தப் போராட்டம் ஏன் அந்தப் பார்வைக்கான தொடக்கப் புள்ளியாய் இருக்கக் கூடாது?

'போராட்டத்துல இருக்குற பாதிப் பேருக்கு ஜல்லிக்கட்டு பற்றிய பொது அறிவு இல்லை' என்பதும் சிலரின் குரலாக இருக்கிறது. இங்கே முற்றும் அறிந்த ஞானி என யாரும் இல்லையய்யா. (எல்லாம் எனக்குத் தெரியும்' என பேசுவார் என்பதால் வைகோ விதிவிலக்கு) 'மகா வம்சம்' முதல் மலிங்கா சிகை வரை அனைத்தும் தெரிந்தால்தான் பேச வேண்டும் எனச் சொன்னால் இங்கு நூற்றில் இரண்டு பேர் கூட இலங்கைப் பிரச்னை பற்றிப் பேச முடியாது. மெரினாவில் ஒரு நடை போனால் 'பெரியார் சொன்ன பகுத்தறிவு என்ன தெரியுமா? என்பதில் தொடங்கி 'இதுக்குப் பின்னால இருக்குற இந்துத்துவ நோக்கம் இதுதான்' வரை இளைஞர்கள் தங்களுக்குள் விவாதிப்பதை கண்டிப்பாய் நாம் கேட்கமுடியும். சில காலம் முன்புவரை வாட்ஸ்அப்பில் வரும் அனைத்தும் உண்மை என நம்பிய அப்பாவிகள் இவர்கள். ஆக, அரசியல் பேசும், தெரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்தப் போராட்டம் வழங்கியதை மறுக்க முடியாதே! (கல்லூரித் தேர்தல்களுக்குப் பின்னால் சில தனிநபர்களின் ஆதாயம் இருப்பதால் அவற்றை அரசியல் என ஏற்றுக்கொள்ள முடியாது)

மாணவர்களுக்கு:

தலைவன் வருவான், கைகொடுப்பான் என்ற பேன்டஸி கனவுகளில் மூழ்கியிருக்காமல் 'நானே ராஜா நானே மந்திரி' என களமிறங்கியதற்கு ஸ்பெஷல் பாராட்டுகள். முதல்நாள் 'கொஞ்ச நேரம் கத்திட்டு கலைஞ்சுடுவாங்க' என அசட்டையாக இருந்தவர்களை அடுத்தடுத்த நாட்களில் 'நான் உங்க கூடத்தான். நான் மம்மி பிராமிஸா உங்க பக்கம்தான்' என பதறடித்து குரல் கொடுக்க வைத்ததில் இருக்கிறது உங்களின் வெற்றி. ஆனால் இந்த வெற்றியை அறுவடை செய்ய சம்பந்தமில்லாத சிலர் முயற்சிக்கக் கூடும். (2013-ல் அதுதான் நடந்தது) தேவை - அதீத கவனம். அரசியல், சினிமா பிரபலங்களை முற்றிலுமாக தவிர்த்ததற்கு கைகுலுக்கல்கள். பொங்கல் சாப்பிட்ட மந்தத்தில் இருக்கும் மாநில அரசும், சதா ஐ.எஸ்.டி 'மோடி'லேயே இருக்கும் மத்திய அரசும் உங்களை கவனிக்கத் தொடங்கியிருக்கின்றன. இன்ஸ்டன்ட் தீர்வுகளை நம்பாமல் நிரந்தரத் தீர்வுகள் கிடைக்கும் வரை உறுதியாக இருங்கள். இப்போதும் எப்போதும்.

சின்ன வேண்டுகோள் - தனிநபர் தாக்குதல்களும் ஆபாச வார்த்தைகளும் வேண்டாமே!
 
மற்றவர்களுக்கு:
 
குறைகளே இல்லாத போராட்டம் என்பது ஹைப்போதெட்டிக்கல் தியரி. இத்தனை நாளாய் மொபைல் நோண்டிக்கொண்டிருந்த விரல்கள் இப்போது அதிகார வர்க்கத்தை குற்றம் சொல்ல நீண்டிருக்கின்றன. இதை வரவேற்கலாம். உடன் நிற்கலாம். குறைகளையும் தாராளமாய் சுட்டிக்காட்டலாம். ஆனால் தட்டிக் கழிக்கவோ தவிர்க்கவோ முடியாது. இந்தக் குரல் இனி அடுத்தடுத்த பிரச்னைகளிலும் ஓங்கி ஒலிக்கும் என நம்புவோம். நடக்கப் பழகுகிறோம். திசையை இனி நடக்கும் நிகழ்வுகள்தான் தீர்மானிக்க வேண்டும்.

- நித்திஷ்
Dailyhunt

related stories

NEWS TODAY 09.06.2026