Friday, September 23, 2022
Thursday, September 22, 2022
Wednesday, September 21, 2022
மாணவர் சேர்க்கை, சான்றிதழ் முறைகேடு: காமராசர் பல்கலை முன்னாள் தேர்வாணையர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவுகாமராசர் பல்கலைக்கழகம்
மாணவர் சேர்க்கை, சான்றிதழ் முறைகேடு: காமராசர் பல்கலை முன்னாள் தேர்வாணையர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவுகாமராசர் பல்கலைக்கழகம்
மதுரை: காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை, சான்றிதழ் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் காரணமாக முன்னாள் கூடுதல் தேர்வாணையர் உட்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்ககத்தில் மதிப்பெண் பட்டியல் வழங்குதல், மாணவர் சேர்க்கை, விடைத்தாள்கள் மாயம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன.
இந்த நிலையில், கடந்த 2014-15-ம் கல்வியாண்டில் இப்பல்கலைக்கழகத்தின் கேரளாவில் செயல்பட்ட 4 மையங்களில் மூலம் கட்டணம் செலுத்தாமல் மாணவர்கள் சேர்க்கை நடந்தது, தேர்ச்சி பெறாதவர்களை தேர்ச்சி பெற்றதாகவும், தேர்வில் பங்கேற்காத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாகவும் சான்றிதழ் வழங்கி முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த முறைகேட்டில் கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் உட்பட பல்கலைக்கழக அலுவலர்கள் கேரளா மைய ஒருங்கிணைப்பாளர்கள் அனுப்பிய கட்டண விவரத்தை ஆய்வு செய்யாமல் மாணவர் சேர்க்கை வழங்கியது,
மேலும், மதிப்பெண் பட்டியல் வழங்கியதிலும் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மதுரை காமராசர் பல்கலைக் கழக தொலை நிலைக்கல்வி முன்னாள் கூடுதல் தேர்வாணையர் எம். ராஜராஜன்( கடந்த ஆண்டு இறந்துவிட்டார்), மாணவர் சேர்க்கை பிரிவு முன்னாள் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, தேர்வு பிரிவு கணினி அலுவலர் கார்த்திகை செல்வன், இளநிலை வகுப்புகளுக்கான தேர்வு பிரிவு முன்னாள் கண்காணிப்பாளர் ராஜபாண்டி மற்றும் இப்பல்கலைக்கழக கேரள மையங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜிஜி, அப்துல் அஜிஸ், சுரேஷ், ஜெயபிரகாசன் ஆகியோர் மீது மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் குமரகுரு வழக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து ஆய்வாளர் ரமேஷ் பிரபு விசாரணை நடத்தி வருகிறார்.
தீபாவளி விடுமுறை | மதுரைக்கு ரூ.3000 - ஒரு மாதம் முன்பே ஆம்னி பேருந்துக் கட்டணம் பன்மடங்கு உயர்வு
தீபாவளி விடுமுறை | மதுரைக்கு ரூ.3000 - ஒரு மாதம் முன்பே ஆம்னி பேருந்துக் கட்டணம் பன்மடங்கு உயர்வு
சென்னை : தீபாவளி விடுமுறையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கான ஆம்னி பேருந்துக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து புகார்கள் வரும்போது எல்லாம் அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்படும். ஆனால், இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
21ம் தேதி வெள்ளிக் கிழமை இரவு சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கான ஆம்னி பேருந்துக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஏசி அல்லாத பேருந்துகளில் குறைந்தபட்சமாக ரூ.1300 முதல் அதிகபட்சமாக ரூ.2000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏசி பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.1500 முதல் அதிகபட்சமாக ரூ.3100 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைப்போன்று சென்னையில் இருந்து கோவைக்கு குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகட்சம் ரூ.3000 வரை கட்டணயம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி, ஈரோடு, நாகர்கோவில் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துக் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 22 மற்றும் 23-ம் தேதிகளிலும் பெரும்பாலான பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு வழக்கம்போல் கடைசி நேரத்திலோ அல்லது பண்டிகைகள் முடிந்த பின்போ நடவடிக்கை எடுக்காமல், முன்கூட்டியே இதற்கு நிரந்திரத் தீர்வு காண வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
Honest public servants should be protected from ‘unwarranted frivolous prosecution’, says court COURTS STRESS ON SHIELD FOR THE HONEST, CENS...
-
14 from VIT chosen for Google programme TIMES NEWS NETWORK Chennai:28.7.2021 As many as 14 students from Vellore Institute of Technology (VI...













