Monday, April 16, 2018


18-இல் அட்சய திருதியை: தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு

By DIN | Published on : 16th April 2018 04:25 AM | 

அட்சய திருதியை புதன்கிழமை (ஏப்.18) வரும் நிலையில், நுகர்வோர் தேவைக்காக தங்க வியாபாரிகள் கொள்முதலை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்குவது தற்போது மக்களிடையே வாடிக்கையாகிவிட்டது. அன்றைய நாளில் தங்கம் வாங்கினால் தீராத கடன்களும், ஏழ்மையும் மிகக்குறுகிய காலத்தில் தீரும் என்ற நம்பிக்கை ஹிந்து சமய மக்களிடம் இருந்து வருகிறது. இதனால் ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளில் நகைக் கடைகளில் பெண்கள் கூட்டம் அலைமோதுவது உண்டு.

இவ்வாண்டு வரும் 18-ஆம் தேதி அட்சய திருதியை வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.24 ஆயிரத்தை நெருங்கும் நிலைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தங்கத்தை சேமிக்கவும், அட்சய திருதியை நாளில் வாங்குவதற்கும் ஆர்வம் கொண்ட மக்களிடம் இந்த விலை உயர்வு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியது: சிரியா மீது மற்ற நாடுகள் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளன. பிரிட்டன், பிரான்ஸýடன் இணைந்து அமெரிக்கா, சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும், சீனாவும் செயல்பட்டு வருகின்றன. இந்த போர் உலக நாடுகளில் உள்ள பெரிய முதலீட்டாளர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் பங்கு சந்தையை தவிர்த்து தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ஆம் தேதி, பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, ஒரு கிராம் தங்கம் ₹3,023 -க்கும், ஒரு சவரன் ₹24,184-க்கும் விற்கப்பட்டது. 17 மாதத்துக்கு பிறகு தற்போதுதான் தங்கம் விலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...