Tuesday, June 12, 2018

வரலாற்று நிகழ்வு: கிம் ஜாங்- டிரம்ப் சந்தித்து கைகுலுக்கினர்

Updated : ஜூன் 12, 2018 06:56 | 

  சிங்கப்பூர்: வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன்- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் சந்தித்து கைகுலுக்கினர். இச்சந்திப்பு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முன்னதாக,பேச்சு நடத்துவதற்காக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், சிங்கப்பூர் வந்தடைந்தார்.ஆசிய நாடான, சிங்கப்பூரில், நாளை, வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் ஆகியோர் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது.அப்போது, அணு ஆயுதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.

சிங்கப்பூரின், பிரபல சுற்றுலா தலமான, சென்ட்டோசா தீவில் உள்ள, கேபெல்லா ஓட்டலில் பேச்சு நடக்க உள்ளது. மாநாடு நடக்கும்போது, இந்த பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதி வழியாகச் செல்லும் பொது வாகனங்கள் மற்றும் தனிநபர்கள், கடுமையான சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநாட்டை, உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. வட கொரிய அதிபர் ஒருவர், அமெரிக்க அதிபரை சந்திப்பது, இதுவே முதன்முறை.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன், நேற்று காலை சிங்கப்பூர் வந்தார். இவரைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், நேற்று மாலை வந்தார்.மாநாடு நடப்பதற்கு முன், இரு நாட்டு அதிபர்களும், சிங்கப்பூர் பிரதமர், லீ சியன் லுாங்கை சந்திக்க உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...