Saturday, February 18, 2017

சிறையில் சசிகலா 'மகிழ்ச்சி'




தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபித்து விட்டத்தகவல் சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் ரஜினி ஸ்டைலில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது. முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், பதவியை ராஜினாமா செய்தார். அடுத்து அ.தி.மு.க. சட்டசபைத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதன்பிறகு அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் ஏற்பட்டது. சசிகலா, பன்னீர்செல்வம் என்ற இரண்டு அதிகார மையங்கள் உருவாகின. இந்த சூழ்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபித்து முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொண்டார். சட்டசபையில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் வெற்றியைக் கேட்ட சசிகலா 'மகிழ்ச்சி' என்று ரஜினி ஸ்டைலில் தெரிவித்துள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025