Wednesday, February 28, 2018


கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ஐந்து தேரோட்டம்

Added : பிப் 28, 2018 02:40




தஞ்சாவூர்: மாசிமக திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நேற்று, ஐந்து தேரோட்டம் நடந்தது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மகாமகப் பெருவிழா நடைபெறுவதால், பாஸ்கர ஷேத்திரம் எனவும் போற்றப்படுகிறது. இங்கு, மகாமகம் தொடர்புடையதாக, 12 சிவன் கோவில்களும், ஐந்து வைணவ தலங்களும் உள்ளன.மங்களாம்பிகை உடனாய ஆதி கும்பேஸ்வர சுவாமி கோவிலை முதன்மையாக கொண்டே, ஆண்டுதோறும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தன்று, மாசி மகப் பெருவிழா நடக்கிறது.மாசி மகப்பெருவிழா, 20ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. எட்டாம் திருநாளான நேற்று காலை, தேரோட்டம் நடந்தது.

அதிகாலை, 5:30 மணிக்கு விநாயகர் தேரோட்டமும், காலை, 7:30 மணிக்கு சுவாமி, அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து சுவாமிகளின் தேரோட்டமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்தனர்.

No comments:

Post a Comment

BHOPAL NEWS