Thursday, February 1, 2018

 போராட்டத்தில், ஈடுபட்ட, பஸ் ஊழியர்கள், சம்பளம், 'கட்!'
சென்னை:ஊதிய உயர்வு கோரி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு, பொது மக்களை பாதிப்படைய செய்ததால், பஸ் ஊழியர்கள் மீது, தமிழக அரசு, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. போராட்ட நாட் களுக்கான, சம்பளம், 'கட்' செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு, அதிகபட்சமாக, 7,000 ரூபாய் வரை, சம்பளத்தில், 'துண்டு' விழுந்துள்ளது; 'தொழிற்சங்கங்களை நம்பி மோசம் போய் விட்டோம்' என, ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.




அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின், 13வது ஊதிய ஒப்பந்தம், 2016, ஆகஸ்டில் முடிந்தது. போக்குவரத்து துறை அமைச்சர், தொழிற்சங்கத்தினருடன், 11 முறை பேச்சு நடத்தினார். ஜன., 4ல் நடத்தபேச்சில், 2.44 சதவீத ஊதிய உயர்வு தர, அரசு முன்வந்தது. இதை, 37 தொழிற்சங்கங்கள் ஏற்றன. தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஏற்கவில்லை.

வேலை நிறுத்தம்

ஒப்பந்தத்தை ஏற்காத தொழிற்சங்க   நிர்வாகிகளின் அறிவுரையை ஏற்று, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள், பஸ்களை ஆங்காங்கே நிறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

'போராட்டம் தொடரும்' என, அடுத்தடுத்த நாட்களில், தொழிற்சங்கத்தி னர் அறிவித்தனர். நீதிமன்றம் தலையிட்டு, ஊழியர்களை பணிக்கு திரும்ப உத்தரவிட்டது. 'கோரிக்கை நிறை வேறும் வரை, பணிக்கு திரும்ப மாட்டோம்' என, தொழிற்சங்க கூட்டமைப்பு, விடாப்பிடியாக இருந்தது.

பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில், பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால், வியாபாரிகள், பொதுமக்கள் என, அனைவரும் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், தொழிலாளர்கள் கோரிக்கைக்கு தீர்வு காண, ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை, மத்தியஸ் தராக நியமித்தது. ஜன., 12 முதல், தொழிலாளர் கள் பணிக்கு திரும்பினர்.

வாக்குறுதி

'போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது, நிர்வாகம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காது' என, ஊழியர்களுக்கு, தொழிற் சங்கத்தினர் வாக்குறுதி அளித்தனர். நேற்று, தொழிலாளர்களுக்கு, புதிய ஊதிய உயர்வுடன் சம்பளம் வழங்கப்பட்டது. அதில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு, வேலைக்கு வராத நாட்களுக்கான சம்பளம்
பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது, தொழிலா ளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

இது குறித்து, தொழிலாளர்கள் கூறியதாவது:'ஊதியத்தை, 2.57 சதவீதம் உயர்த்த வேண்டும்; தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை, ரத்து செய்ய வேண்டும்; வேலைநிறுத்தத்தில் ஈடு பட்ட நாட்களை, விடுப்பு நாட்களாக கணக் கிட வேண்டும்; அவற்றை அடையும் வரை, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற மாட்டோம்' என, தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

ஆனால், நீதிமன்றம் மற்றும் நீதிபதி குறித்து அவதுாறாகப் பேசி, அனைத்தையும் கெடுத்து விட்டனர். சம்பளம் பிடித்தம் மட்டுமின்றி, அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாயும் என, அதிகாரிகள் மிரட்டுகின்றனர். தொழிற்சங்க நிர்வாகிகளின் பேச்சை நம்பியதால், எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

'போராடியதால் பலன்'

இது குறித்து, போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியதாவது: தொழிற் சங்கத்தினர் நிர்வாகத்திலும், நீதி மன்றத்திலும் போராடியதால் தான், ஓய்வு பெற்றோருக்கான பலன்கள் கிடைத்துள்ளன. தொழிலாளர் களுக்கு, ஓரளவாவது ஊதிய உயர்வு கிடைத்து உள்ளது.தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இன்று, சென்னையில், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடனும் கலந்து பேசி, முடிவெடுக் கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...