Thursday, February 1, 2018

திருப்பதியில் பக்தர்கள் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே தரிசிக்க அனுமதி? அமைச்சர் மாணிக்கயால ராவ் அதிரடி பேட்டி

By DIN | Published on : 31st January 2018 08:59 AM



திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும் ஆந்திர மாநில அமைச்சர் மாணிக்கயால ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தினந்தோறும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் நிற்காமல் சென்றால் அரை மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யக் கூடிய நிலை உள்ளது.

மேலும் ஒருவரே பல முறை தரிசனம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டத்தால் சாமி தரிசனம் செய்து வைக்க முடியாமல் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.

எனவே, ஆதார் அட்டை மூலம் இணைத்து முதல் முறை வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து பின்னர் வாய்ப்பு இருந்தால் கூடுதல் தசரிசனத்திற்கு அனுமதிக்க உள்ளதாக அவர் தெரித்தார்.

இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மேலும் பல பக்தர்கள் பயனடைவார்கள் என்றும் இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளதாகவும் அமைச்சர் மாணிக்கயால ராவ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...