Good Morning
Friday, January 2, 2026
புத்தாண்டு சபதங்கள்! புத்தாண்டையொட்டி நமக்குள் பிறக்கும் நம்பிக்கைகள், மகிழ்ச்சிகள், எதிர்பார்ப்புகள் ஏராளம்... ஏராளம்!
புத்தாண்டு சபதங்கள்! புத்தாண்டையொட்டி நமக்குள் பிறக்கும் நம்பிக்கைகள், மகிழ்ச்சிகள், எதிர்பார்ப்புகள் ஏராளம்... ஏராளம்!
புத்தாண்டுபடம் - பிடிஐ ஜி.மீனாட்சி Updated on: 02 ஜனவரி 2026, 7:01 am 2
DINAMANI
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது. ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. "இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்பதுபோல, புத்தாண்டையொட்டி நமக்குள் பிறக்கும் நம்பிக்கைகள், மகிழ்ச்சிகள், எதிர்பார்ப்புகள் ஏராளம்... ஏராளம்! சிலருக்கு புத்தாண்டு பிறந்தால்தான் புதுப் புது யோசனைகள், லட்சியங்கள், இலக்குகள் மனத்துக்குள் முகிழ்ந்தெழும்.
"கண்டிப்பா இந்த ஆண்டு முடியறதுக்குள்ளே 10 கிலோ எடை குறைச்சிடுவேன்' என்று சபதம் எடுப்பவர்கள் பலர். "வெளிநாட்டு மொழி ஒன்றை கற்றே தீருவேன்' என்று வீராவேசமாகக் கிளம்புவோர் பலர். இன்னும் சிலர், இந்தப் புத்தாண்டில் செய்ய வேண்டிய 10 விஷயங்கள், 20 காரியங்கள் என்று அவரவர் செய்ய விரும்பும் செயல்களை நாட்குறிப்பில் பட்டியலே போட்டு வைத்து விடுவார்கள்.
இன்னும் சில முன்ஜாக்கிரதைப் பேர்வழிகள் இருப்பார்கள். புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே அதிநவீன உடற்பயிற்சிக் கூடங்களிலோ அல்லது சங்கீத பயிற்சி நிறுவனங்களிலோ அல்லது ஆங்கிலப் பயிற்சிக்கூடங்களிலோ புத்தாண்டுமுதல் சேர்வதற்காக தங்கள் பெயர்களைப் பதிவு செய்து, பணமும் கட்டி விடுவார்கள்.
புத்தாண்டு பிறந்த ஜனவரி தொடங்கி இரண்டு மூன்று மாதங்களுக்குள் உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்பவர்களின் எண்ணிக்கை சில பல மடங்குகள் அதிகரித்து, பின்னர் படிப்படியாகக் குறையும் என்பதை புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள், புத்தாண்டு வரை காத்திருப்பானேன். இப்போதே... இந்த விநாடியே அதற்கான முயற்சியை எடுத்துவிடலாம் அல்லவா? புத்தாண்டு தினத்தையொட்டி தங்கள் லட்சியங்களை அமைத்துக் கொள்வது ஏன்? எந்த ஒரு நல்ல செயலைத் தொடங்குவதற்கும் நல்ல நாள், கிழமை பார்ப்பது வழிவழியாகவே நம் மனத்துக்குள் ஊறிப்போய்விட்டது. "நல்லது செய்ய நாளும் கோளும் தேவையில்லை' என்பது மூத்தோர் வாக்கு. "நன்றே செய்; அதை இன்றே செய்' என்கிறார்கள் சான்றோர்.
புத்தாண்டையொட்டி எல்லோரும் ஏதோ ஒரு பயிற்சியில் சேர்கிறார்கள் என்பதற்காக ஆர்வக் கோளாறு காரணமாக தம் பெயரையும் கொடுத்து பதிவு செய்து கொள்வார் பலர். இணையதளங்களில் வரும் பல்வேறு அறிவிப்புகளே அதற்குச் சான்று.
"அலுவலக அரசியலைச் சமாளிக்க வேண்டுமா? நான் மிகச் சிறந்த டிப்ஸ்களைத் தரத் தயாராக இருக்கிறேன். என்னுடைய இரண்டு நாள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுங்கள். கட்டணம் ரூ.199 மட்டுமே' என்று வருகிறது ஒரு விளம்பரம்.
தொழில்முறையில் ஆங்கிலத்தை எப்படிப் பேச வேண்டும் என்று கற்றுக்கொடுக்க முன் வருகிறது ஒரு நிறுவனம்.
சில நிறுவனங்கள் புத்தாண்டையொட்டி குறைந்த கட்டணத்தில் மேற்கூறிய சேவைகளை வழங்குவதாக விளம்பரப்படுத்துகின்றன.
இப்படி புதிய புதிய பயிற்சி வகுப்புகள், ஆலோசனை மையங்கள், அறிவார்ந்த பயிற்சியாளர்கள் அணிவகுத்து வருகிறார்கள். இணையத்தில் உலவுபவர்களின் கண்களில் அடிக்கடி தென்படுகின்றன இந்த விளம்பரங்கள்.
இவற்றையெல்லாம் பார்ப்பவர்கள், தங்களின் முன்னேற்றத்துக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெறுகிறார்கள். அதுவும் சில நாள்கள், மாதங்களுக்கு மட்டும்தான். பிறகு அந்தப் பயிற்சிகளைக் கைவிட்டு விடுகிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் முக்கியக் காரணம், நேரமின்மை என்பதுதான்.
புத்தாண்டு லட்சியங்களின் வாழ்நாள் இரண்டு மாதங்களுக்குள் நீர்க்குமிழிபோல் மறைந்து விடுகிறது. பெரும்பாலானவர்களின் புத்தாண்டுக் கனவுகள் கானல் நீராகிப் போவதற்கு என்ன காரணம்?
இலர் பலராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
என்கிறார் திருவள்ளுவர்.
திறமையற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர்கள் சிலராகவும், உறுதியற்றவர்கள் பலராக இருப்பதும்தான் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
கொண்ட கொள்கையில் உறுதியும், கற்றுக் கொள்வதில் தீவிர வேட்கையும் இல்லாதவர்களின் புத்தாண்டு லட்சியம், வந்த சுவடு தெரியாமலேயே மறைந்துவிடும் என்பதுதான் உண்மை.
எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் விடாமுயற்சி, பயிற்சி, மன உறுதி ஆகிய மூன்றும் அவசியம். மற்றவர்கள் செய்கிறார்களே என்பதற்காக நாமும் ஒரு செயலைச் செய்ய முற்படுவது தோல்வியில்தான்
முடியும். நமது லட்சியங்கள் "எடுத்தேன்}கவிழ்த்தேன்' என்பதாக இல்லாமல், தெளிவான, உயர்ந்த குறிக்கோள்களுடன் கூடியதாக இருக்க வேண்டும். அந்த லட்சியங்களை அடைய, தொடர் பயிற்சியும், விடாப்பிடியான முயற்சியும் இருக்க வேண்டும். நினைத்தால் பயிற்சி செய்வது, நேரம் கிடைக்காவிட்டால் விட்டுவிடுவது என்றில்லாமல், தொடர் பயிற்சியும், முயற்சியும் மட்டுமே வெற்றிக்கு வித்திடும் காரணிகள்.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்}செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்
என்ற குமரகுருபரரின் இனிய பாடல் துன்பம், பசி, தூக்கம், பிறர் செய்யும் இடையூறுகள் போன்ற எதையும் பொருட்படுத்தாமல் தாம் செய்யும் பணியில் உறுதியாக இருக்க வேண்டும் என்கிறது.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
என்ற குறளில் சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சி செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச் செய்பவர்கள் ஆவர் என்கிறார் திருவள்ளுவர். சோம்பலும், முயற்சியின்மையுமே தோல்விக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
உயர்ந்த லட்சியங்களை அடையும் செயல்களைச் செய்ய புத்தாண்டுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றே, இப்போதே தொடங்குங்கள். படிப்படியாய் உங்கள் முன்னேற்றம் சாத்தியமாகும்போது, ஒவ்வொரு நாளும் புத்தாண்டே!
NMC clears 171 additional PG seats for ’25-26 academic yr Don’t Wait For Formal Nod To Include Them, Counselling Authorities Told
NMC clears 171 additional PG seats for ’25-26 academic yr Don’t Wait For Formal Nod To Include Them, Counselling Authorities Told
Anuja.Jaiswal@timesofindia.com 02.01.2026
New Delhi : Medical aspirants seeking PG admissions will get a wider choice this year after National Medical Commission (NMC) approved 171 extra PG seats across medical colleges and directed counselling authorities to include them without waiting for formal nod.
As per a public notice, the 171 extra seats span key specialties, including general medicine, general surgery, anaesthesiology, obstetrics and gynaecology, paediatrics, radiology, dermatology, emergency medicine, psychiatry, orthopaedics, respiratory medicine and pathology. Colleges across multiple states, including UP, Maharashtra, TN, Gujarat, Odisha, Rajasthan, Andhra Pradesh, WB, Chhattisgarh and Haryana, have received extraseats under appeal process.
In a notice issued on Dec 31, 2025, NMC’s Medical Assessment and Rating Board said PG seats granted by the First Appeal Committee for the 2025–26 academic year will be treated as valid for counselling. The additional seats were approved after medical colleges challenged earlier MARB decisions under provisions of NMC Act, 2019. These appeals were examined by the First Appeal Committee in meetings held on Dec 22 and 23, following which extra seats were sanctioned.
Thursday, January 1, 2026
1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end
1st Vande Bharat sleeper train set for
Delhi-Kol run by month-end
New Delhi : 01.01.2026
The first Vande Bharat sleeper train is likely to be flagged off for the Delhi-Kolkata
route later this month, weeks before assembly elections in West Bengal, reports Dipak Dash .
“The train is now ready for commercial operation after successfully completing the final high-speed
trial.
The railways’ focus is take modern trains to all parts of the country as more such trains are
rolled out. We expect the operation of the first train to start in third week of this month,” said an
official.
Railway minister Ashwini Vaihnaw on Wednesday shared a video of the highspeed trial of the train
on social media, highlighting the successful CRS (Commission of Railway Safety) trial at 180 kmph
on the Kota–Nagda section.
The video showed a waterglass stability demonstration, in which glasses
filled with water remained steady without spillage even at high speed.
Wednesday, December 31, 2025
ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி
ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி
ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்’ செயலி மூலம் வாங்கப்படும் முன்பதிவில்லா பயணச்சீட்டுகளுக்கு 3 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திச் சேவை Updated on: 31 டிசம்பர் 2025, 3:08 am ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்’ செயலி மூலம் வாங்கப்படும் முன்பதிவில்லா பயணச்சீட்டுகளுக்கு 3 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகை வரும் ஜன. 14-ஆம் தேதிமுதல் ஜூலை 14-ஆம் தேதி வரை ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி, ‘ரயில்ஒன்’ செயலியில் ‘ஆா்-வாலட்’ மூலம் பயணச்சீட்டு வாங்குபவா்களுக்கு மட்டுமே 3 சதவீத ‘கேஷ்பேக்’ சலுகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், புதிய அறிவிப்பின்படி, அனைத்து வகையான எண்ம பணப் பரிமாற்ற முறைகளிலும் பயணச்சீட்டு வாங்குபவா்களுக்கு இந்த 3 சதவீத நேரடி தள்ளுபடி கிடைக்கும்.
இதற்கேற்ப மென்பொருள் அமைப்பில் தேவையான மாற்றங்களைச் செய்ய ரயில்வே தகவல் அமைப்பு மையத்துக்கு (சிஆா்ஐஎஸ்) ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பயணிகளின் வரவேற்பு குறித்த அறிக்கையை அடுத்த ஆண்டு, மே மாதத்தில் சமா்ப்பிக்குமாறு சிஆா்ஐஎஸ் மையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இந்தச் சலுகையை மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
இல்லறத்தின் எதிர்காலம்
இல்லறத்தின் எதிர்காலம்
DINAMANI
ஒரு விமான நிலையக் காத்திருப்பு அறையில் பிரமுகர் இருவர் சந்தித்துக் கொண்டனர்
தினமணி செய்திச் சேவை Updated on: 31 டிசம்பர் 2025, 3:02 am
ஒரு விமான நிலையக் காத்திருப்பு அறையில் பிரமுகர் இருவர் சந்தித்துக் கொண்டனர்; பரஸ்பர நல விசாரிப்புக்குப் பின்னர், பயண நோக்கங்கள் குறித்துப் பேசினர். "நடைபெறும் திருமண நிகழ்வுக்குச் செல்லும் வேலையோடு நடந்து முடிந்த திருமண வீட்டுக்கும் செல்ல வேண்டியதிருக்கிறது' என்று சொன்னவரிடம் கேட்டவர் சொன்னார்;"எதற்கும் தெரிந்துகொண்டு செல்லுங்கள்'.
சற்றே குழப்பமாய்ப் பார்த்தார் சொன்னவர். கேட்டவர் விளக்கம் சொன்னார்; "முன்னே மாதிரி இப்போது இல்லை. அண்மையில் திருமணம் முடிந்த வீட்டுக்கு நல விசாரிப்புக்குச் சென்றிருந்தேன். அவர்கள் கேட்டார்கள் தெரிந்துகொண்டுதான் வந்தீர்களா என்று'. என்னவென்று விசாரித்தால், திருமணம் முடிந்த மூன்று நாள்களுக்குள்ளே மணமுறிவு வந்து மணமக்கள் பிரிந்துவிட்டார்கள். அது தெரிந்துதான் விசாரிக்க வந்திருக்கிறீர்களா?' என்று கேட்டிருக்கிறார்கள். அதுமாதிரி, திருமணமான மணமக்கள் இப்போது ஒன்றாக இருக்கிறார்களா, நன்றாக இருக்கிறார்களா? என்று தெரிந்துகொண்டு போனால் நல்லது.
விமானத்துக்கான அறிவிப்பு வந்ததும் அவர்கள் சென்று விட்டார்கள். அந்த உரையாடல் மேலும் பல நினைவலைகளை என்னுள் எழுப்பியது.
முன்பெல்லாம் எந்தவிதக் கருத்து முரண்கள் வந்தாலும் உறவுக்காக, பிள்ளைகளுக்காக, உலகத்தவர்க்காக, சரிசெய்து கொண்டு வாழும் நிலை இருந்தது.
"ஒன்றன் கூறாடை உடுப்பாரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை' என்று கலித்தொகை அன்பில் விளைந்த அறம் மலிந்த வாழ்க்கை அனுபவத்தை அழகாகப் பாடியிருக்கிறது (பாலைக்கலி-18).
மரணம் கூடப் பிரிக்கக் கூடாது என்ற மன உறுதி கொண்டு வாழ்ந்த லட்சியத் தம்பதிகளையும் வரலாறு கண்டிருக்கிறது.
"பிறந்த வீட்டில், தேனும் பாலும் கலந்து உண்ட வசதிமிகு வாழ்க்கை இருந்தது உண்மைதான். ஆனால், தான் வாழப் புகுந்த வீட்டில், மானும் ஏனைய விலங்குகளும் கலக்கி உண்டு எஞ்சிய, இலை தழைவீழ்ந்து கலங்கிய நீர் அதைவிடவும் சுவை மலிந்தது' என்று தலைவி சொல்லும் அளவுக்கு அவர்மேல் கொண்ட அன்பின் பெருக்கத்தைக் கபிலரும் பாடியிருக்கிறார். (ஐங்குறுநூறு-203)
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு (குறள்-60)
என்கிறார் திருவள்ளுவர்.
நன்மக்களைப் பெறுதற்காக, ஆணும் பெண்ணும் கூடி வாழ்வது வாழ்வியல் அறமாகவும், குழந்தைகள் நலனுக்காக தன்னலம் துறப்பது பொதுமை நெறியாகவும் நம்மிடையே இருந்தன. இல்லறத்திலும் துறவறம் பேணுகிற நல்லறமும் நடைமுறையில் இருந்தது. வசதிக் குறைபாடுகள் மிகுந்திருந்த காலத்தில் அன்பின் குறைபாடு ஒருபோதும் இருந்ததில்லை. அன்பின் பெருக்கம், வசதிச் சுருக்கத்தையும் வாழ்க்கைத் துயர்களையும் பொசுக்கிவிடுவதாய் அமைந்தது. அன்பும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் அனைத்தையும் ஈடுகட்டிக் கொண்டிருந்தன. ஒருவர் அனைவருக்காகவும், அனைவரும் ஒருவருக்காகவும் கொண்டு-கொடுத்து உறவினைப் பேணி வளர்க்கும் தன்மை இருந்தது. தனிப்பட்ட நிலையில் ஏற்படும் விருப்பு-வெறுப்புகளை, கசப்பு-இனிப்புகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காலங்கடத்த முடிந்தது; அந்தரங்கம் புனிதமாகக் கருதப்பட்டது.
அதனால், நல்லதும் பொல்லாததும் நிகழவே செய்தன. நல்லவை நிலைக்கவும், அல்லவை போக்கவும் முயற்சிகள் நடந்தன. வெளிச்சொல்ல முடியாத துயரங்களும் தொடர் இன்னல்களும் மலியத் தொடங்கிய பிறகு, இடையீடு இல்லாத உறவில் விரிசல்கள் எழுந்தன. அவை விரியவும் பலவிதக் காரணங்கள் உதவின.
"உடன்பாடு இல்லாதவர்களுடன் இணைந்து வாழ்தல் என்பது, பாம்பு உறையும் வீட்டினுள் வாழ்வது போன்றது' என்கிறார் திருவள்ளுவர் (குறள்-890). "ஒருவருக்கொருவர் பகைத்தும் சண்டையிட்டும் வாழ்வது பொருத்தமானதாகப் படவில்லை. வாழ்நாள் எல்லாம் வதைபடவேண்டாம்' என்கிற நிலையில், விடுதலை பெற்றுக்கொள்வது உசிதமாகப்பட்டது. முரண் முற்றிய நிலையில், நீதிமன்றங்களில் முறையிட்டு முறிவு செய்துகொள்ளும் நிலையும் அமைந்தது. திருமணம் எவ்வளவு புனிதமானதோ, அதைப் போலவே திருமண முறிவும் புனிதமாகக் கருதப்பட்டது.
ஜாதகங்கள் பார்த்து, பரிகாரங்கள் செய்து, ஒருவருக்கொருவர் பேசிவிட்டு நிச்சயம் செய்வதுகூட நிச்சயமற்றுப் போய்விடுகிறது. நிச்சயம் செய்த பிறகு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ள வசதியாய்க் கைப்பேசி உதவுகிறது என்றாலும், அவர்கள் பதற்றப்படவும், கோபப்பட்டுக்கொள்ளவும், சண்டையிட்டுப் பிரிந்துகொள்ளவும் அந்தக் கைப்பேசி உரையாடலே காரணமாகிவிடுகிறது என்பது பலரது அனுபவம்.
திருமணப் பதிவு நிலையங்கள், பதிவு ஊடகங்கள் வாயிலாக அறிந்து நிச்சயிக்கப்படும் திருமணங்களிலும்கூட, பொய்யும் குற்றமும் மலிந்து வருகின்றன.
ஆடம்பரமான மண்டபங்களில், அளவுக்கு மீறிய அலங்கார அமைப்புகளுடன் ஏற்பாடு செய்யப்படும் திருமண வைபவத்தில் முதல் நாளே, திரைப்படப் படப்பிடிப்பு போல, மணப்பெண்ணையும் மணமகனையும் இயக்கிப் பதிவு செய்யும் படங்கள், திருமணத்துக்குப் பின்னரும் இப்போது தொடரப்படுகின்றனவாம். தேனிலவுக்குச் செல்லும் இடங்களில் கூட, இப்படியான காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றனவாம். என்ன செய்து யாது பயன்? புறத்தில் செய்யப்படும் ஒப்பனைகளும் அழகுகளும் அகத்தில் ஒன்றாது போய்விடுகின்ற அவலம் மிகுந்து வருகிறதே.
உறவுக்கும் பிரிவுக்கும் காரணம் ஏதும் சொல்லத் தெரியாமல் "பிடிக்கவில்லை' என்ற ஒற்றை வார்த்தையைத் தூக்கிப் போடுவது இளைய தலைமுறையினரின் போக்காக இருக்கிறது. விரும்பி இணைபவர்களின் நிலைப்பாடு எப்படியோ?
நிச்சயம் செய்த பிறகு, ஒருவருக்கொருவர் பழகிக் கொள்ளவும் பேசிக் கொள்ளவும் அனுமதிக்கிற பெற்றோர் பாடு பெரும்பாடு ஆகிவிடுகிறது. கைப்பேசி உரையாடல்களில், திருமணத்துக்கு முன்பாகவே இணைந்து பழகி வருவதில் எழுகிற முரண்கள், கோபங்கள், அத்தனை பெரியவர்களின் தீர்மானங்களையும் கலைத்துப் போட்டுவிடுகின்றன. ஊரைக்கூட்டி, உறவுகளைச் சேர்த்து பல லட்சக்கணக்கில் பணம் செலவழித்து நடத்திய திருமணம் இல்லங்களில் விரித்த பந்தல் பிரிக்குமுன்பே முறிந்துபோய் விடுகின்றன.
காரண காரியங்கள் இன்னதென அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர்களுக்குள் முரண்கள் நேர்கின்றன. அளவுக்கு மீறிய காட்சி ஊடகப் பதிவுகளின் தாக்கங்கள் அவர்களை ஆட்கொண்டு விடுகின்றன.
நடைமுறை அறியாது மேற்கொள்ளும் அவசர முடிவுகள் குடும்ப நெறிகளையே குலைத்துவிடுகின்றன.
"திருமணத்துக்குப் பிறகு மகப்பேறு தேவையில்லை என்ற கருத்தாக்கமும், பெற்றோர் உடன் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் பிரிவினைக்கு அடித்தளம் இடுகின்றன' என்கிறார்கள். "கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்ற நிலையில் இயங்குகிற பிள்ளைகள்-பெரியவர்கள் ஆகிவிட்டபடியால், அவர்களுக்கும் பெரியவர்கள் சொல்கிற எதுவும் செவியேறுவதில்லை. வயதளவில் முதிர்ந்த பலருள்ளும் மனதளவில் முதிர்ச்சி இல்லாதவர்கள் இருக்கிறார்கள் என்றும் பாலியல் தொடர்பான புரிதல் இன்னும் பலருக்குத் தெளிவாகவில்லை என்றும் உளவியல் மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.
பெற்றோரின் நிர்ப்பந்தத்தை மீற முடியாமல் மனமின்றி ஒப்புக் கொள்ளுதல், மிரட்டல்களுக்குப் பயந்து இசைதல், பதவி-பணிகளால் ஏற்படும் தன்முனைப்பு, தாழ்வுமனப்பான்மை, விருப்பு வெறுப்பு, சக தோழமைகளின் விமர்சனங்கள், ஒப்பிட்டுப் பார்ப்பதில்-சொல்வதில் ஏற்படுகிற உரசல்கள், மெல்லிய சீண்டல்கள், பரஸ்பர குற்றச்சாட்டுகள், சின்னச்சின்ன ஊடல்கள் என அனைத்தும் கூடி, ஒட்டுமொத்தப் பிரிவுக்கு வழிவகுத்து விடுகின்றன.
இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? தெரியவில்லை. யாருக்கும் எதற்கும் உத்தரவாதமில்லாத நிலை. வாழ்க்கையே நிலையாமைத் தன்மை உடையதுதான். என்றாலும், ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் இல்லறநெறியும் இவ்வாறு ஆகி வருவது கவலை அளிக்கிறது. ஆண்-பெண் எண்ணிக்கையும் சம விகிதத்தில் இல்லாத நிலையில், எதிர்காலத்தில் மக்கட்பேறு என்னவாகும்? முறிவின் தேவையை, நியாயத்தைச் சொல்லிக் காட்டும் பலரும் பிரிவின் துயரத்தைச் சொல்லாததும் பெருங்குறை.
இப்போது, எதிர்ப்படும் எவரிடத்திலும் குடும்பம், குழந்தைகள் குறித்து விசாரிக்காமல் இருப்பதே நல்லது என்கிற முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது சூழல். எப்படியும் வாழலாம் என்ற நிலை வந்துவிட்டபிறகு, அடிப்படை அறங்கள் தகர்ந்துபோகத்தான் செய்யும். என்றாலும் இப்படியே போவது நல்லதுதானா எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.
வாழ்ந்து பெற்ற அனுபவங்களின் கசப்புகள், துயரங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டாம் என்கிற நிலையில் பிரிந்து செல்வது மனித நியாயம்தான். வாழப் போகும் முன்பு, அதாவது, திருமண பந்தத்துக்கு உட்படும் முன்பு ஒரு முறைக்கு இரு முறை ஏன் பல முறைகூட நிதானித்துச் சிந்தித்து முடிவெடுத்துக் கொள்வது சரியாக இருக்கும் என்று ஏன் தொடர்புடையவர்களுக்குத் தோன்றவில்லை என்பதே புரியவில்லை.
இளமையும், வசதியும், நட்பும் உறவுகளும் ஒரு காலகட்டம் வரைக்கும்தான் துணையாகும். என்றும் துணையாகும் இல்லறத் துணையுடன் இணைந்து பயணிக்கப் பொறுமையும் நிதானமும் மிகமிகத் தேவை என்பதை முதுமையும் தனிமையும் பின்னர் உணர்த்தும். அதனால் ஆவது யாது?
இணைந்த பெற்றோரால்தான் இப்பிறவி கிட்டியது என்பதைப் பிறந்த மக்கள் நன்றியோடு உணரத் தவறுகிறார்கள். விளைவு என்னவாகும் என்று சொல்லத் தெரியாமல், கைபிசைந்து நிற்கும் மூத்தவர்களின் அக்கறையை உதாசீனம் செய்து காலம் விரைகிறது. இது நல்லதா, கெட்டதா? இல்லறத்தின் எதிர்காலம் என்னவாகும் என்று செயற்கை நுண்ணறிவைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அது மட்டும் போதுமா?
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
Subscribe to:
Comments (Atom)
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
வழிகாட்டும் ஆஸ்திரேலியா! குழந்தை பருவத்தை ஆக்கப்பூர்வமாக்கும் வகையில் ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து.. முனைவா் எஸ். பாலசுப்ரம...
