Saturday, December 6, 2025
கார்த்திகையில் அணைந்த தீபம்!
Sunday, November 23, 2025
மெளனம் பலவீனம் அல்ல!
‘இல்லை’ என்பது தவறல்ல!
இல்லை’ என்பது தவறல்ல!
DINAMANI 23.11.2025
Friday, November 14, 2025
நடுப்பக்கக் கட்டுரைகள் வாழ்விக்கும் தெய்வங்கள் குழந்தைகள்!
நடுப்பக்கக் கட்டுரைகள் வாழ்விக்கும் தெய்வங்கள் குழந்தைகள்!
கல்வி முதன்மைப்படுத்தப்பட்ட அளவுக்கு விளையாட்டுக்கு அவகாசம் கிடைப்பதில்லை
DINAMANI
கிருங்கை சேதுபதி Updated on: 14 நவம்பர் 2025, 5:02 am
Monday, November 10, 2025
முதியோர் நலன் நாடுவோம் !
முதியோர் நலன் நாடுவோம் !
பெற்றோரை உதாசீனப்படுத்தும் வாரிசுகளால் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை, குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகரித்து வருவதைப் பற்றி...
முதியோர் நலன் நாடுவோம்
இரா. சாந்தகுமார் Published on: Updated on: 10 நவம்பர் 2025, 3:20 am
நம் நாட்டில் தற்போது 60 வயதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை சுமார் 15 கோடி ஆகும். 2050-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 35 கோடியாக உயரக்கூடும். உலக அளவில் 65 வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டில் 140 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெயின், இத்தாலி, ஸ்விட்சர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்களின் தற்போதைய சராசரி ஆயுள் 83 ஆண்டுகளாக உள்ளது. உலகில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
ரஷியாவின் வால்கோகிரேட் மாநில மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர், எதிர்காலத்தில் மனிதர்கள் 150 ஆண்டுகள்வரைகூட வாழும் நிலை ஏற்படும் என்றும், அதற்கான மருத்துவ ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 20 முதல் 40 வயது வரை வயது உள்ள இன்றைய இளைய தலைமுறையினர் 150 ஆண்டுகள்வரை வாழும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
நம் நாட்டில் கூட்டுக் குடும்ப முறை வெகுவாகக் குறைந்து வருவதால், முதியோர் தனியே வசிக்கும் நிலை அதிகரித்துள்ளது. இதனால், முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதுடன் அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, நம் நாட்டில் 2023-ஆம் ஆண்டு முதியோர்களுக்கு எதிராக 62,41,569 குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளன. நம் நாட்டில் முதியோருக்கு எதிரான குற்றச் செயல்கள் நடைபெறும் மாநிலங்களின் வரிசையில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.
பெற்றோரை உதாசீனப்படுத்தும் வாரிசுகளால் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை நம் நாட்டில், குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகரித்து வருகிறது. வாரிசுகளில் சிலர் தங்கள் பெற்றோரின் சொத்துகளை தந்திரமாக தங்களுக்கு சட்டப்படி உரியதாகச் செய்து கொண்டு பின்னர், சம்பந்தப்பட்ட பெற்றோரை ஆதரவற்ற நிலையில் விட்டுவிடுவது நீதிமன்றங்களின் கவனத்துக்கு அவ்வப்போது கொண்டு வரப்படுகிறது.
இது தொடர்பாக வஞ்சிக்கப்பட்ட பெற்றோருக்கு அவர்களின் சொத்துகளை பிள்ளைகளிடமிருந்து பறிமுதல் செய்து மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைக்கும் வகையில் நீதிமன்றங்கள் அவ்வப்போது ஆணைகள் பிறப்பித்து வருகின்றன.
நம் நாட்டில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் 2007-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு மூன்று மாதங்கள்வரை சிறைத் தண்டனை, ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. எனினும், பெரும் எண்ணிக்கையிலான முதியவர்கள் தங்கள் பிள்ளைகளால் புறக்கணிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.
புத்தர் வலியுறுத்திய மனித குலத்துக்கான ஏழு கடமைகளில், "வாழ்நாள் முழுவதும் நான் என் பெற்றோரைப் பேணுவேனாக' என்பதுதான் முதல் கடமை. இதை இந்தக் கால இளைய தலைமுறையினர் நினைவில் கொள்ள வேண்டும்.
மூத்த குடிமக்கள் அதிக அளவில் உள்ள மாநிலங்களில் ஒன்றான கேரளத்தில் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ வசதி, நிதியுதவி போன்றவை அவர்களின் இல்லத்திலேயே கிடைப்பதற்கு அந்த மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான மூத்த குடிமக்கள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சேகரிப்பதுடன், ஒவ்வொரு உள்ளாட்சியின் வருவாயில் குறைந்தபட்சம் 10% மூத்த குடிமக்களுக்காக செலவிட வேண்டும் என்றும் தீர்மானிக்கவுள்ளது.
மூத்த குடிமக்களின் நலனுக்காக மூத்த குடிமக்கள் ஆணையம் ஒன்றையும் கேரள அரசு அமைத்துள்ளது. மகாராஷ்டிர அரசு முதியோர் தாங்கள் வசிப்பதற்காக வீடுகள் வாங்கும் நிலையில் அதற்கான முத்திரைத்தாள் வாங்கும் செலவைக் குறைத்துள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினர் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியான சூழலில் வாழ்வதற்கு கடந்த காலத்தில் இக்கால மூத்த குடிமக்கள் ஆற்றிய பணிகளும் காரணம் என்றால் அது மிகையல்ல. மூத்தகுடிமக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் இளைய தலைமுறையினர் பாராட்டுக்குரியவர்கள்.
ஆதரவற்ற முதியோர் இல்லங்களை நடத்துவோர், தொண்டு நிறுவனங்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. பதிவு செய்யப்பட்ட பல முதியோர் இல்லங்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய உதவித்தொகை ஏதும் கிடைக்காமல் உள்ளது.
அரசு நடத்தும் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் முதியோர் இல்லங்களுக்கு அரசின் நிதி உதவி, முதியோருக்கான மாதாந்திர உதவித்தொகை, 75 வயதைக் கடந்த முதியோர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு, தமிழகத்தில் 70 வயதைக் கடந்த நிலையில் தனியாக வசிக்கும் முதியோரின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் "தாயுமானவர் திட்டம்' என முதியோர் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தியது வரவேற்கத்தக்கது.
ரயில்களில் பயணிக்கும் 60 வயதைக் கடந்த முதியோருக்கு பயணக் கட்டணத்தில் சலுகை, மாநில அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற முதியோர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை தாமதமின்றித் தருவது போன்ற முதியோர் நலன் நாடும் நீண்ட நாள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பரிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறையினர் நாளைய முதியவர்களாவர். இதை உணர்ந்து முதியோர் நலன் பேண அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தந்து முதியோர்களுக்கான சமூக அங்கீகாரத்தைத் தர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
Wednesday, November 5, 2025
Inside and out... The Corporation of Chennai has launched a welcome scheme to collect waste items directly from homes.
DINAMANI
05.11.2025
சென்னை மாநகராட்சி உபயோகமற்ற பொருள்களை வீடுகளிலிருந்து நேரடியாகச் சென்று பெறும் வரவேற்கக் கூடிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு முன்னெடுப்பு. நமது வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்கள் தினமும் வாங்கிச் செல்கிறார்கள். இருப்பினும், இவற்றைத் தவிர்த்து, தாவரக் கழிவுகள், தேவையற்ற படுக்கைகள், உடைந்த தளவாடங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் குப்பையாகப் பொது இடங்களில் வீசிச் செல்கிறார்கள். இவை பொது இடங்களில் ஆங்காங்கே குவிந்து சுகாதாரச் சீர்கேடாகவும், நீர்நிலைகளில் அடைப்புகளாகவும் மாறி விடுகின்றன.
இதைத் தவிர்ப்பதற்காக, மாநகராட்சி சார்பில் வாரத்தில் சனிக்கிழமைதோறும் வீடுகளுக்கு நேரடியாகத் தூய்மைப் பணியாளர்கள் சென்று, உபயோகமற்ற பொருள்களைப் பெற்றுக் கொள்வார்கள். இந்தத் திட்டத்தை நாம் வெற்றிகரமாகச் செயல்படுத்திவிட்டால், நகரின் ஒட்டுமொத்தத் தூய்மை ஓரளவுக்கு சீரடைய வாய்ப்புள்ளது.
ஒவ்வொருவர் வீட்டிலும் தேவையற்ற பொருள்கள் குவிந்து கிடக்கின்றன. நுகர்வுக் கலாசாரம் பெருகிவிட்டதால், எதையாவது வாங்கிக் கொண்டே இருக்கிறோம். நாம் உபயோகித்த கட்டில், மேஜை போன்றவற்றை யாருக்காவது கொடுத்துவிடலாம் என்று நினைத்தால், பழைய பொருள்களைக் கொடுக்கின்றோம் என்று அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடும் என்ற அச்சம் உண்டாகிறது. எந்தப் பொருளும் நம் வீட்டை விட்டுப் போகாது; அனைத்தும் வீட்டை அடைத்துக் கொண்டு கிடக்கும்.
வீட்டுக்குள் இருக்கும் இந்தப் பொருள்களைத் தவிர, நம் வீட்டுக்கு வெளியே கண்களை உறுத்துவது கட்டடக் கழிவுகள். மக்கள் பெரும்பாலும் இரவில், சாலைகள், நடைபாதைகள் மற்றும் பிற இடங்களில் இவற்றைச் சட்டவிரோதமாகக் கொட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள். கட்டுமானக் கழிவு மேலாண்மை குறித்த விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தெளிவாக இருக்க வேண்டும். சட்டவிரோதமாகக் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதிலும், விதிகளைச் சரியாக அமல்படுத்துவதிலும் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்.
மேலை நாடுகளில் நம்மைப்போல் கட்டடக் கழிவுகளைத் தெருவில் போட்டு வைப்பதில்லை. வேலை நடக்கும்போது ஒரு பெரிய கலனில் போட்டு விடுகிறார்கள்; பின்னர், அதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்கள் அந்தக் கழிவுகளை அப்புறப்படுத்துகின்றன. ஆகவே, மாநகராட்சி இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலில் மாநகராட்சி, அறிவித்திருக்கும் திட்டத்தை முழுவீச்சில் அமல்படுத்த வேண்டும். இந்தச் சேவையைப் பயன்படுத்தப் பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற தகவல் பலருக்கும் சென்றடையவில்லை.
பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில், மக்கள் தாங்கள் விரும்பாத, ஆனால் இன்னும் பயன்படுத்தக்கூடிய பொருள்களை, குறிப்பாக சிறிய மற்றும் நல்ல நிலையிலுள்ள பொருள்களை, தங்கள் வீட்டின் முன் "எடுத்துச் செல்லுங்கள்' என்ற குறிப்புடன் வைத்துவிடுகிறார்கள். அங்கு இது ஒரு பொதுவான நடைமுறை; முறைசாரா மீண்டும் பயன்படுத்துதல் அல்லது பகிர்ந்து கொள்ளும் கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.
நல்ல நிலையில், பயன்படக்கூடிய நிலையிலுள்ள பொருள்கள் குப்பைக்குப் போவதைத் தடுக்க இது உதவுகிறது. சமூகத்தில் தேவை உள்ளவர்களுக்கு இலவசமாகப் பொருள்களை வழங்கி உதவ முடிகிறது. நமக்கு உபயோகமில்லாத பொருள்களை எளிதாக அப்புறப்படுத்தவும் ஏதுவாக இருக்கிறது. ஆனால், இவ்வாறு தினமும் வைப்பதில்லை; மாதத்தின் முதல் ஞாயிறன்று மட்டுமே வைக்கிறார்கள். தங்களின் வீட்டு முகவரியை ஆன்லைனில் தெரிவித்து விடுகிறார்கள். குழந்தைகளின் உடைகள், பொம்மைகள், புத்தகங்கள், கைப்பை, காலணிகள், கண்ணாடிக் குடுவைகள், தட்டுகள், தேநீர் கோப்பைகள் என எல்லாவற்றையும் அழகாக வைத்திருந்தார்கள். தேவைப்பட்டவர்கள் காரில் வந்து தேவையானதை மட்டும் எடுத்துப் போனார்கள். பேராசைப்பட்டு அனைத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு போகவில்லை.
இதில் வியப்பு என்னவென்றால், குழந்தைகளின் பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் அனைத்தும் மிகவும் நல்ல நிலையில் இருந்தன. உடைந்து போனது, பயனற்றது என எதுவும் இல்லை. எந்தப் பொருளையும் உடைக்கக் கூடாது, பொறுப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அதன் தேவை முடிந்த பின் யாருக்காவது தர வேண்டும் என்றும் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்கிறார்கள். அதனால் அந்தப் பொம்மைகள், சாமான்கள் எதுவும் பாழாகவில்லை. அடுத்த குழந்தைக்கு வேண்டும் என்று அவர்கள் பாதுகாத்து வைப்பதில்லை. கதவுகள் மூடப்பட்டு இருப்பதாலும், சாலைகளில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாததாலும், யாரும் கூர்ந்து பார்க்காததாலும், மக்கள் கூச்சமின்றிப் பொருள்களை எடுத்துப் போகிறார்கள்.
எந்த வீட்டுக்கும் வாசலில் கேட் கிடையாது; இரண்டு அடி பக்கவாட்டு சுற்றுச்சுவர் மட்டுமே உள்ளது. முன்பக்கம் கேட் இல்லை. தெருவுக்கும் வீட்டுக்கும் இடையே நிறைய இடம் உள்ளது. அதனால் அங்கே பொருள்களை அழகாக வைத்து விடுகிறார்கள். சில வீடுகளில் ஆப்பிள்களைக்கூட ஒரு பையில் போட்டு வைத்துவிட்டு, "எடுத்துக் கொள்ளுங்கள்' என்று வைக்கிறார்கள்; தேவைப்படுவோர் எடுத்துச் செல்கிறார்கள்.
பெரிய பொருள்களை இவ்வாறு வாசலில் வைக்கக் கூடாது. இதற்கு உள்ளாட்சி மன்றத்தின் மொத்த கழிவு சேகரிப்பு சேவையைப் பயன்படுத்த வேண்டும். ஒரு சிலர் மட்டுமே வீட்டின் முன் வைக்கிறார்கள். சிலர் பொருள்களை அப்புறப்படுத்த வேறு சில வழிகளைப் பின்பற்றுகிறார்கள். இணையவழி தளங்கள் அல்லது குழுக்கள் மூலம் தாங்கள் கொடுக்க விரும்பும் பொருள்களைப் பட்டியலிடுகிறார்கள். இலவசமாகவோ அல்லது விலைக்கோ கொடுத்து விடுகிறார்கள். பயன்படுத்திய பொருள்களை விற்கும் கடைகள் தனியே உள்ளன. மிக மிக நல்ல நிலையில் உள்ள கம்பளி உடைகள், கைப் பைகள், போர்வைகள் ஆகியவற்றை இங்கு இலவசமாகக் கொடுத்து விட்டால், அவற்றை அவர்கள் விற்பனை செய்துவிட்டு, அந்த வருவாயைத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள்.
இந்த நடைமுறையை நம் நாட்டில் முயற்சி செய்யலாம். தற்போது நிறைய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 500 - 1,000 வீடுகளுக்கு மேல் இருக்கின்றன. அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட மாதத்தில், தங்களுக்குத் தேவையில்லாத, அதேசமயம் பயன்படுத்தக்கூடிய பொருள்களைக் காட்சிப்படுத்தலாம்; அதற்கு ஒரு விலையையும் நிர்ணயிக்கலாம்; தேவைப்படுவோர் அந்தப் பொருள்களை வாங்கிக் கொள்வார்கள். இதையே ஒவ்வொரு நலச் சங்கமும் பின்பற்றலாம். இந்தத் திட்டம் ஓரளவுக்கு வெற்றி பெற்றால், ஒரு பொது இடத்தில் ஏற்பாடு செய்து இதை விரிவுபடுத்தலாம்.
மாநகராட்சியின் உபயோகமற்ற பொருளை வாங்கிப் பெறும் திட்டமானது, 15 மண்டலங்களிலும் நடைபெற்று, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும். தீவிரமான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
ஒரு வயதுக் குழந்தை எடுத்தவுடன் நடந்து விடுகிறதா என்ன? அது எழும், விழும், ஒரு தப்படி வைக்கும்; மீண்டும் விழும்; சுதாரித்துக் கொண்டு எழுந்து நடக்கும். விழுந்து எழுந்து பின் நன்றாக நடக்கக் கற்றுக் கொள்ளும்; அதேபோல்தான் நம் திட்டங்களும் அவற்றின் முன்னெடுப்புகளும், மக்களின் மனப்பான்மையும்; தொடக்கத்தில் தொய்வு ஏற்படும், சுணக்கம் வரும். மக்கள் உடனே பழகிக் கொள்ள மாட்டார்கள்.
எண்மப் பரிவர்த்தனை வந்தபோது, "படிக்காதவர்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் இது பிடிபடுமா?, சாமானியர்களால் இந்தப் பரிவர்த்தனையை செய்ய முடியுமா?" என்று பல சந்தேகங்கள் எழுந்தன. தற்போது கீரை விற்கும் பெண்மணி, தெருவில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்யும் தாத்தா, சமோசா விற்கும் நடைபாதை வியாபாரி என அனைவரும் எண்ம வர்த்தகம் செய்கிறார்கள்.
"குதிரையை தண்ணீருக்கு அருகே கொண்டு செல்லத்தான் முடியும், அதைக் குடிக்க வைக்க முடியாது' என்பார்கள். தற்போது அதைக் குடிக்க வைக்க முடியும். குதிரையின் வாயை அகலத் திறந்து, குழாய் மூலம் வம்படியாகத் தண்ணீரை உள்ளே செலுத்தி குடிக்க வைக்க முடியும். அதுபோல, எப்படியாவது, எந்த உத்தியையாவது கையாண்டு, மாநகராட்சி தொடங்கியுள்ள இந்த அருமையான திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும். 15 மண்டலங்களில் வெற்றி பெற்றுவிட்டால், பின் அனைத்து மண்டலங்களிலும் அதை அமல்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு, அனைத்து மாவட்டங்களுக்கும் இதைக் கொண்டு செல்லலாம்.
மக்கள் தாங்கள் பயன்படுத்தாத, ஆனால் நல்ல நிலையில் உள்ள பொருள்களை பிறருக்குக் கொடுப்பதில் உள்ள தயக்கத்தைப் போக்க வேண்டும். இதற்கு கலாசார ரீதியான மாற்றம் தேவை. சென்னை மாநகராட்சியின் இந்தத் திட்டம் ஒரு நல்ல தொடக்கப் புள்ளி. உபயோகமற்ற பொருள்களைப் பெற்றுச் செல்லும் பணியாளர்கள், அவற்றைத் தரம் பிரித்து, மறுபயன்பாட்டுக்கு அல்லது மறுசுழற்சிக்கு அனுப்புவதில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு திட்டத்தின் வெற்றிக்கு, அதன் செயல்பாட்டில் உள்ள நேர்மையும், நம்பகத்தன்மையும் மிக முக்கியம்.
நகர்ப்புறங்களில் வீட்டுச் சங்கங்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் தாமாக முன்வந்து, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள முறையைப் பின்பற்றி, "இலவசமாக எடுத்துச் செல்லுங்கள்' போன்ற நிகழ்வுகளைத் தொடங்கலாம்; மாநகராட்சிக்கு இது ஒரு சுமையைக் குறைக்கும்.
நீண்டகாலமாக அப்புறப்படுத்தப்படாமல் இருக்கும் கட்டடக் கழிவுகள், தேவையற்ற பொருள்கள் ஆகியவை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கவும், அவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முனைப்புக் காட்ட வேண்டும். தண்டனைகள் இருந்தாலும், அவற்றைத் துல்லியமாக அமல்படுத்தும் போதுதான் மக்கள் சட்டங்களுக்கு மதிப்பளிப்பார்கள். தேவையில்லாதது வெளியேறட்டும்; தேவைப்படும் மாற்றம் வீட்டிலிருந்து தொடங்கட்டும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
Tuesday, November 4, 2025
படித்தால் மட்டும் போதுமா?
Monday, November 3, 2025
வாரிசுகளின் கடமை!
நடுப்பக்கக் கட்டுரைகள்
முனைவா் என். மாதவன் Updated on: 03 நவம்பர் 2025, 4:24 am
அரசு ஊழியா்கள் பெற்றோரை பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
அண்மையில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட 783 குரூப்-2 அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வில் அவா் இந்தத் தகவலைத் தெரிவித்தாா். இது நடைமுறைக்கு வர காலம் ஆகலாம். அரசு ஊழியா்களின் பெற்றோருக்கு இவ்வாறான ஏற்பாடு என்றால், இவ்வாறு புறக்கணிக்கப்படும் மற்ற பெற்றோா்களின் நிலை என்ன ஆவது என்ற கேள்வியும் எழுவது இயற்கையே.
பெற்றோா் பராமரிப்பு தொடா்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் 2024-ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில், பெற்றோரைப் பராமரிக்க வேண்டியது வாரிசுகளின் சட்டபூா்வமான கடமை என அந்த மாநில உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கும் சிறிது வித்தியாசமானது. நான்கு உடன்பிறப்புகளோடு பிறந்தவரான ஒருவருக்கு அவா்களது பெற்றோா் எவ்வித சொத்தும் தராததால், அவா்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தமக்கில்லை என அவா் வழக்குத் தொடுத்திருந்தாா்.
அந்த வழக்கில் தீா்ப்பு வழங்கிய நீதிபதி, ‘பெற்றோரின் சொத்துகளைப் பெறுகிறீா்களோ இல்லையோ, அவா்களைக் கவனித்துக் கொள்ள நீங்கள் கடமைப்பட்டவா்கள்; சொத்து அளிக்காதது தொடா்பாக வேறு வழக்கை வேண்டுமானால் தொடுத்துக் கொள்ளலாம்’ என ஆலோசனை கூறினாா்.
பெற்றோா் பற்று குறித்த இந்த விஷயத்தை இரண்டு வகைகளில் அணுகுவது சரியாக இருக்கும். ஒன்று பொருளாதாரம் சாா்ந்திருப்பது; மற்றொன்று தமக்குத் தேவையான உளவியல் எதிா்பாா்ப்புகள் தொடா்பானது (அன்பு, ஆதரவு ஆகியவற்றைப் பெறுதல்). இரண்டு வகையான எதிா்பாா்ப்புகளுக்கும் தீா்வு வாரிசுகள் வளா்க்கப்படும் சூழலோடு சாா்ந்திருப்பது.
பொருளாதார பலம் குறைந்த குடும்பத்திலுள்ள பெற்றோா் தாங்கொணா இன்னல்களை எதிா்கொண்டு தமது பிள்ளைகளை வளா்க்கின்றனா். அவை எந்த அளவுக்கு அந்த பிள்ளைகளுக்குப் புரிகிறதோ அல்லது உணா்த்தப்படுகின்றனரோ அந்த அளவுக்கே அவா்கள் இளையோராக வளா்ந்த பின்னா் பெற்றோா்ப்பற்று இருக்கும். ஒருவகையில் குழந்தைப் பருவத்தில் குடும்பத்தின் கஷ்டங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படாமல் வளா்க்கப்படும் குழந்தைகள் பெரியவா்களானதும் குடும்பத்தினா் சந்தித்த கஷ்டங்களை உணா்ந்திருக்க மாட்டாா்கள்.
இதற்கு மாற்றாக, குழந்தைகளாக அவா்கள் வளரும் காலம் முதலே குடும்பத்தின் சுக துக்கங்களை பெற்றோா் பகிா்ந்துகொண்டு வளா்க்க வேண்டும். குடும்பத்தின் சிக்கலான சூழலில் தமக்கு உணவும், கல்வியும் கிடைப்பதை பெற்றோா் எவ்வாறு உறுதி செய்கின்றனா் என்பதை அவா்கள் உணர வேண்டும். இவ்வாறான உணா்வைப் பெற்று வளரும் குழந்தைகளுக்கு பிற்காலங்களில் பெற்றோா் பற்று குறித்துப் போதிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
வசதி படைத்த குடும்பத்தைச் சோ்ந்த பெற்றோரும் குழந்தைகளை வளா்க்கும்போதே பொருள்களின் அருமையை உணா்த்தி வளா்க்க வேண்டும். நம்மிடம் பணம் இருந்தாலும் ஒவ்வொரு பொருளும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரியவைக்கவேண்டும். அவ்வாறு பொருளின் அருமையைப் புரிந்துகொள்வோா் பெற்றோரின் அருமையையும் எளிதில் புரிந்துகொள்வா்.
பெரும் செல்வந்தா்களுக்கு பொருளாதாரம் சாா்ந்த எதிா்பாா்ப்பு வரப்போவதில்லை. ஆனால், பெருமளவில் அன்புக்காக ஏங்கும் நிலை இருக்கலாம். அடுத்தபடியாக உளவியல் சாா்ந்த எதிா்பாா்ப்புகள். மனிதா்கள் சமூகமாக வாழவே எப்போதும் விரும்பும் இயல்புடையவா்கள். ஒருநாள் விடுமுறையில் பெற்றோருடன் பண்டிகையைக் கொண்டாட பேருந்துகளிலும், ரயில்களிலும் நின்றுகொண்டே எவ்வளவு போ் பயணம் செய்கின்றனா்; அந்த அளவுக்கு பெற்றோா்பற்றும், குடும்பநேயமும் இந்தியாவில் தழைத்துள்ளது. அது குறைந்துள்ள இடங்களில் அதை வளா்க்கும் சமூக ஏற்பாடுகள் அவசர அவசியம்.
எது எவ்வாறு இருப்பினும், உலகமயத்தின் தாக்கம் மற்ற துறைகளில் பிரதிபலிப்பதுபோல குடும்ப அமைப்பிலும் பிரதிபலிக்கிறது. மற்ற எதையும்விட பணம் சம்பாதிப்பது அத்தியாவசியமாகியுள்ளது. பொருள் தேடும்வேட்கையில் நாடுவிட்டு, கண்டம்விட்டுப் பலரும் பணிபுரிகின்றனா். இவ்வாறு வெளிநாடுகளில் வசிப்போரால் அடிக்கடி வந்து தங்களது பாசத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருக்க இயலாது. இந்நிலையில், பெற்றோரும் பிள்ளைகளின் நிலையை உணா்ந்துகொள்ள முயல வேண்டும்.
பிள்ளைகளும் பெற்றோருக்கு தாம் உடனிருந்து கவனிக்க இயலாமையைப் புரியவைக்கும் வண்ணம் உணா்வுபூா்வமான தொடா்பில் இருக்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் வந்து உடன் தங்கியிருந்து அன்பைப் பரிமாற வேண்டும். இன்றைய தகவல் தொழில்நுட்பம் இதை எளிதாக்கி உள்ளது.இறுதியாக, தெலங்கானா மாநில முதல்வரின் கவலையில் நியாயமில்லாமல் இல்லை.
கூட்டுக் குடும்ப முறை முற்றிலும் வழக்கொழிந்துவரும் நிலையில் அதன் அருமை பெருமைகளை உணரவைத்து வாய்ப்புள்ள அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ முயற்சிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பணி நிமித்தமாக வெளியூரிலோ, வெளிநாட்டிலோ இருக்கும் பிள்ளைகள் பெற்றோரைப் பராமரிக்க ஆகும் செலவுகளையாவது முறைப்படி அனுப்ப வேண்டும். பெற்றோா் பற்றை உறுதிசெய்ய சட்டமெல்லாம் நிறைவேற்றப்படுவது சரியாக இருக்காது.
Sunday, November 2, 2025
நடுப்பக்கக் கட்டுரைகள் ‘நெடுந்தொடா்’ பரிதாபங்கள்! தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் குறித்து...
நடுப்பக்கக் கட்டுரைகள் ‘நெடுந்தொடா்’ பரிதாபங்கள்! தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் குறித்து...
முனைவர் பவித்ரா நந்தகுமார் Updated on: 01 நவம்பர் 2025, 3:01 am
Thursday, October 30, 2025
செயற்கை நுண்ணறிவு - இருமுனைக் கத்தி!
செயற்கை நுண்ணறிவு - இருமுனைக் கத்தி!
மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவை முழுமையாகச் சாராமல், மனிதநேய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
தினமணி செய்திச் சேவை Published on: Updated on: 30 அக்டோபர் 2025, 4:43 am 3 min read
எஸ். எஸ். ஜவஹர் 30.10.2025
Wednesday, October 29, 2025
பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்... அந்தக் காலத்தில்
பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்... அந்தக் காலத்தில் திமுகவின் பொதுக்கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும்.
தினமணி செய்திச் சேவை Published Updated on: 29 அக்டோபர் 2025, 3:00 am
முனைவர் கோ.விசுவநாதன்
அந்தக் காலத்தில் திமுகவின் பொதுக்கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.
அப்போதெல்லாம் திமுகவின் பொதுக்கூட்டம் இரண்டு வகையாக இருக்கும். சாதாரண பொதுக்கூட்டம், சிறப்புப் பொதுக்கூட்டம் என்று வகைப்படுத்தப்படும். சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்ற பெரிய தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். சிறப்புக் கூட்டத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஆண்களுக்கு ஒரு ரூபாய்; பெண்களுக்கு எட்டணா. அந்தக் காலத்தில் பெண்களையும் அரசியல் கூட்டங்களுக்கு அழைக்கும் அளவுக்கு திராவிட கட்சிகளின் மேடைப்பேச்சு இருந்தது. அவர்கள் பெண்களுக்காகவும் பேசினார்கள். தினந்தோறும் அண்ணாவும் மூத்த தலைவர்களும் ஏதாவது பொதுக்கூட்டங்களில் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்.
இப்போது பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றால் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும். அவர்கள் உட்காருவதற்கு இருக்கைகள், விளம்பர விளக்குகள், இதுதவிர கூட்டத்துக்கு வருபவர்களுக்கு உணவு மற்றும் இதர வசதிகளை கூட்டத்தை நடத்துபவர் செய்துதர வேண்டும். இதேபோல், கூட்டத்துக்கு வருபவர்களுக்கு வாகன வசதியும் செய்து தரவேண்டும். அந்தக் காலத்தில் நாங்கள் இந்த வசதி எல்லாம் செய்து தரவில்லை. அப்போது, கூட்டத்துக்கு வந்தவர்கள் தானாக வந்தவர்கள்தான். பொதுக்கூட்டத்துக்கு வருபவர்கள் தரையில்தான் உட்காருவார்கள்.
அண்ணா கட்சி நிகழ்ச்சிக்குச் செல்லும் போதெல்லாம் மாவட்டச் செயலாளர் முதல் கிளைக் கழகச் செயலாளர்வரை எல்லோர் பெயரும் சொல்லி "அவர்களே' என்று அழைத்து அதன்பின்தான் தமது உரையைத் தொடங்குவார். இதனால், அந்தக் கட்சித் தொண்டர்களுக்கு உள்ளூரில் மதிப்பு மரியாதை கூடியது. சில பெயர் விடுபட்டுப் போனால் தமது உரையின் நடுவில் அவர்கள் பெயரை மறக்காமல் குறிப்பிடுவார். அண்ணாவின் இந்த அரசியல்பாணி பின்னாளில் எல்லா கட்சியினராலும் பின்பற்றப்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது.
கட்சித் தொண்டர்களை "தம்பிகளே' என்றுதான் அழைப்பார் அண்ணா. கட்சியில் குடும்ப பாசத்தை புகுத்திய புதுமையாளர் அண்ணா. அதன் பிறகு கருணாநிதி "உடன்பிறப்பே' என்று அழைத்தார். எம்ஜிஆர் "என் ரத்தத்தின் ரத்தமே' என்று அழைத்தார். இவையெல்லாம் தொண்டர்களிடையே இடைவெளி இல்லா நெருக்கத்தை அதிகரித்தது.
1965-இல் குடியாத்தம் வந்தார் அண்ணா. குடியாத்தத்தில் சிறப்புக் கூட்டம் திமுக சார்பில் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அண்ணா முன்னிலையில் நான் பத்து நிமிஷம் பேசினேன். எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை இரண்டிலும் ஒரு திருப்புமுனையாக அன்றைய எனது பேச்சு அமைந்தது என்பது எனக்கு பின்னாளில்தான் தெரிந்தது. அன்றைய பொதுக்கூட்டத்தில் நான் பேசிய பேச்சுதான் நாடாளுமன்றத்துக்குச் செல்ல முக்கிய காரணமாக அமைந்தது.
குடியாத்தம் கூட்டம் முடிந்து சில வாரங்களுக்குப் பின்பு மதுரைக்குப் போனார் அண்ணா. பொதுக்கூட்டத்தில் பேசி முடித்து கட்சிப் பிரமுகர்கள் வீட்டில் இரவு உணவுக்குப் பிறகு, கட்சி வளர்ச்சி குறித்து பேசிக் கொண்டிருந்தார். குடியாத்தம் பொதுக்கூட்டத்தில் ஒரு பையன் பேசினான்; வக்கீலுக்கு படித்திருக்கிறான்; அருமையாக பேசினான் என்று அங்கு இருந்தவர்களிடம் சொன்னார் அண்ணா.
அப்போது, அங்கிருந்த சட்டக் கல்லூரியில் என்னுடன் படித்த மைனர் மோசஸ் "அவன் பெயர் விசுவநாதன். நானும் அவனும் சட்டக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம்'. மாணவர் கழகத்தில் செயலாளராக இருந்தான் என்று சொன்னார்.
அப்போது, அண்ணா அவனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பலாம் என்று சொன்னார்.
இதை மைனர் மோசஸ் சில தினங்களுக்குப் பிறகு என்னிடம் சொல்லி மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டார். இப்படித்தான் நான் ஒரு பொதுக்கூட்டம் மூலம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டேன்.
அந்தக் காலத்தில் பொதுக்கூட்டம் நடக்கும் போது, நடுவில் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் "துண்டு ஏந்தி தொண்டர்கள் வருகிறார்கள், உங்களால் ஆன நிதி உதவி செய்யுங்கள்' என்று அறிவிப்பு செய்வார். பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்கள் 10 பைசா, நாலணா, 50 பைசா என்று அவர்களால் முடிந்ததைத் தருவார்கள். அதைவைத்து கூட்டச் செலவுகளைச் சமாளிப்போம். இதேபோல், கட்சி பிரசார நாடகங்களும் போடுவது உண்டு. கருணாநிதி, இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கட்சி பிரசார நாடகங்களில் நடித்திருக்கிறார்கள்.
1967 தேர்தலின் கதாநாயகன் பேரறிஞர் அண்ணா. கட்சி தொடங்கிய சில ஆண்டுகளில் 1977-இல் எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார். இவை இரண்டுமே அரசியல் வரலாறுதான். இப்போது 1967 தேர்தல் மற்றும் 1977 தேர்தல் இரண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.
1967 தேர்தல் தேசியக் கட்சியான காங்கிரஸ் சகாப்தத்தை தமிழ்நாட்டில் முடித்துவைத்தது. அன்றைய திமுக வேட்பாளர்கள் எல்லோருமே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். ஆனால், படித்தவர்கள். இளைஞர்கள், படித்தவர்கள், சாமானியர்களை முதன்முதலில் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் அனுப்பிய பெருமை அண்ணாவையே சேரும்.
இந்திய அரசியலில் முதல்முறையாக ஆளுங்கட்சிக்கு எதிராக மிகப் பெரிய பலம்வாய்ந்த கூட்டணியை உருவாக்கினார் அண்ணா. எதிரும் புதிருமாக இருந்த அரசியல் தலைவர்களை ஒன்று சேர்ப்பதில் வெற்றி பெற்றார்அண்ணா. சுதந்திராக் கட்சியும், பொதுவுடமைக் கட்சியும் ஒரே கூட்டணியில் வந்ததே அண்ணாவின் அரசியல் சாதுரியத்துக்குக் கிடைத்த வெற்றி. அரசியல் தீண்டாமை முடிவுக்கு வந்தது; வெற்றிக் கூட்டணி உதயமானது.
திமுகவின் தேர்தல் பிரசாரம் ஆடம்பரம் இன்றி இருந்தது. மொத்த நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல் செலவுக்கு என்று பதினோரு லட்சம் ரூபாய் நிதி திரட்டி செலவு செய்தது. தேர்தல் செலவுக்கு ஒவ்வொரு வேட்பாளருக்கும் நாலாயிரம் ரூபாய் தந்தார் அண்ணா. அதுகூட காசோலையாக; அந்த தேர்தல் மாதிரி சிக்கனமான தேர்தல் வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை.
வேட்பாளர்களிடம் கட்சிக்காரர்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள் வேட்பாளர்களிடம் எதிர்பார்த்தது கொடி, தோரணம், சுவரொட்டி; இவற்றுடன் ஓட்டு கேட்க ஊருக்கு வர வேண்டும் இவ்வளவுதான்.
அதற்கு முன்பெல்லாம் காங்கிரஸ்காரர்கள் வீடுவீடாக ஓட்டுகேட்கும் வழக்கமெல்லாம் இல்லை. முக்கிய பிரமுகர்கள், மிட்டாமிராசுதாரர்கள், மணியக்காரர்கள், நாட்டாண்மை போன்றவர்களைச் சந்தித்துப் பேசி அந்தப் பகுதி மக்களை ஓட்டுபோட வைக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிடுவார்கள். அண்ணா அதை அப்படியே அடியோடு மாற்றினார். ஒவ்வொரு திமுக வேட்பாளரும் ஓட்டு கேட்க ஒவ்வொரு வீட்டு வாசல்படியும் ஏறி இறங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுக வேட்பாளர்களும் அப்படியே செய்தார்கள். இது பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அண்ணா யாரையும் அவதூறாகப் பேசமாட்டார். எனவே, தம்பிமார்களும் அப்படியே இருந்தார்கள். இதுபோதாது என்று எம்ஜிஆர் சுடப்பட்ட சம்பவம். இவை எல்லாம் சேர்த்து தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் சுனாமியை ஏற்படுத்தியது. அந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் நான் உட்பட 25 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இதை உலக சாதனை என்று பாராட்டினார் ராஜாஜி.
காமராஜர் தனது சொந்த ஊரான விருதுநகரில் கல்லூரி மாணவர் பெ.சீனிவாசனிடம் தோற்றுப் போனார். மத்திய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதனிடம் தோற்றுப் போனார். மத்திய அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் பொதுப் பணித் துறை உதவி பொறியாளர் பதவியை ராஜிநாமா செய்து வேட்பாளராக நிறுத்தப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரத்திடம் தோற்றுப் போனார்.
1977 தேர்தல் அதிமுக வெற்றிக்கு முன்பு திண்டுக்கல் இடைத்தேர்தல் வரலாறு தெரிந்து கொள்வது அவசியம். அண்ணா திமுக என்ற புதிய கட்சிக்கு வைக்கப்பட்ட சோதனைதான் திண்டுக்கல் இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், பழைய காங்கிரஸ், இந்தக் கட்சிகளுடன் புதிதாக தொடங்கப்பட்ட அதிமுகவும் களத்தில்.
அதிமுகவுக்கு ஓட்டு கேட்டவர்கள் சிறுவர்கள், இளைஞர்கள், அவர்களுடன் சிவப்பு துண்டு போட்ட சில கம்யூனிஸ்ட் தோழர்கள். அந்தத் தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார். திண்டுக்கல் தேர்தல் எம்ஜிஆருக்கும், அண்ணா திமுகவுக்கும் மக்கள் தந்த அங்கீகாரம்.
1977-ஆம் ஆண்டு தேர்தல் என்பது ஒரு வரலாறு. எம்ஜிஆர் தனிக் கட்சி தொடங்கிய பின்பு நடந்த தேர்தல்.
எம்ஜிஆரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்த போது, எதிர்க்கட்சிகள் கேட்ட மிக முக்கியமான கேள்வி எம்ஜிஆருக்கு பொருளாதாரம் தெரியுமா? பொருளாதாரம் தெரியாதவர் எப்படி ஆட்சி நடத்த முடியும்? அரசியலில் வேஷம் போட முடியாது. திரைப்படம் என்பது நடிப்பு, அரசியல் என்பது நிஜம். ஆட்சி செய்வது என்பது அவ்வளவு எளிதான பணி அல்ல என்றெல்லாம் எம்ஜிஆரை எதிர்த்து பிரசாரம் செய்தார்கள்.
ஆனாலும், எம்ஜிஆரின் கூட்டங்களுக்கு மக்கள் பெருந்திரளாக கூடினார்கள். நீங்கள் எனக்கு ஆட்சி செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள்' என்று மட்டும்தான் மக்கள் மன்றத்திடம் எம்ஜிஆர் கோரிக்கை வைத்தார்.
அவர் அரசியலில் வெற்றி பெற்றதற்கு அவர் ஒரு திரைப்பட நடிகர் என்பது மட்டும் காரணம் அல்ல. அவரது அர்ப்பணிப்புடன்கூடிய உழைப்பு. விமர்சனங்களையும் தாண்டி அரசியலில் உழைத்தவர் அவர். அண்ணாவும், எம்ஜிஆரும் அரசியல் மாற்றங்களின் நாயகர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர்:
வேந்தர், விஐடி பல்கலைக்கழகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
Tuesday, October 28, 2025
மகிழ்ச்சியைக் கூட்டும் மனநலன்!
Friday, October 24, 2025
ரீல்ஸ்’களுக்குப் பின்னால்...!
-
NBEMS launches official WhatsApp channel for real-time updates The platform will offer timely updates on examinations, accreditation, and tr...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...