Showing posts with label katturaigal. Show all posts
Showing posts with label katturaigal. Show all posts

Friday, March 14, 2025

பார்வைகள் பலவிதம்..!



பார்வைகள் பலவிதம்..!

14.03.2025

எந்த ஒரு விஷயத்தையும் பல கோணங்களில் இருந்தும், வேறுபட்ட பார்வைகளின் மூலமாகவும் அணுகுதல் வேண்டும். ஒரு விஷயத்தை பற்றிய நமது எண்ணங்களும், உணர்வுகளும் பிறருடைய எண்ணங்களுடனும், உணர்வுகளுடனும் ஒத்துப் போகாது. இதுவே பார்வைகள் பலவிதம் எனப்படும்.

ஒரு விஷயத்தை நாம் பார்ப்பதற்கும் மற்றவர்கள் பார்க்கும் கோணத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். நாம் பார்க்கும் கோணம்தான் சரி என்று வாதிட முடியாது. நம்மைப் பொறுத்தவரை சரியாக இருக்கலாம். மற்றவர்களுக்கு இது தவறான எண்ணமாகத் தோன்றலாம். ஒருவர் ஒரு விஷயத்தை நேர்மறையாக பார்த்தால் மற்றொருவர் அதை நேர்மறையாகதான் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதிர்மறையாகவும் பார்க்கக்கூடும்.

நமக்குப் பிடித்த பொருளோ, விஷயமோ, செயலோ மற்றவர்களுக்கும் பிடிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. விருப்பு, வெறுப்பு, நல்லது, கெட்டது எல்லாம் அனைவருக்கும் ஒன்று போலவே இருப்பதில்லை. சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு தொந்தரவு செய்வார்கள். இவரைப் பொறுத்தவரை அது உதவியாக தோன்றும். ஆனால் எதிரில் இருப்பவருக்கோ தொந்தரவு தருவதாக இருக்கும்.

இவன் ஏன் நம் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுகிறான் என்று எண்ணத் தோன்றும். எனவே எதையும் நம் கோணத்தில் இருந்து அணுகாமல் அடுத்தவர் கோணத்திலிருந்து பார்த்து அவர்கள் எதிர்பார்ப்பதை செய்யும் மனப்பக்குவம் இருந்தால் போதும்.

ஒவ்வொருவரும் தனக்கே உரிய பார்வையில் தனக்குத் தெரிந்த புரிதல்கள் மூலமும், அனுபவங்கள் மூலமும் ஒரு விஷயத்தை அணுகுகிறார்கள். பறவைகள் பலவிதம் என்பதுபோல் மனிதர்களும் பலவிதம். மனிதர்களுடைய எண்ணங்களும், பார்வைகளும் பலவிதம். எனவே நாம் புரிந்து கொள்வதைப் போலவே மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு.

மற்றவர்களுடைய கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவரை நம் பார்வை மூலம் அணுகாமல் அவர்களின் பார்வையில் புரிந்து கொள்ள முயல வேண்டும். பிறரையும் நம்மைப்போல் எண்ணி அனுதாப நோக்கத்துடன் புரிந்துகொள்ள முயல்வது வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தாது.

வாழ்க்கை மீது தெளிவான பார்வை வேண்டும். வாழ்வில் எதுவும் நிலை இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வாழ்வில் எதிர்ப்படும் ஒவ்வொன்றும் அதன் தன்மையில் இருந்து மாறிக்கொண்டே இருக்கும் பொழுது நம் பார்வையும் குறுகி விடாமல் விரிந்து சென்று கொண்டே இருந்தால்தான் நல்லது.

மனிதனுக்கு மனிதன் காலத்திற்கு ஏற்றார் போல், இடத்திற்கு ஏற்றார் போல் பார்வைகளும் கருத்துக்களும் மாறிக்கொண்டே தான் இருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே நம் பார்வையையும் மாற்றிக் கொள்ள பழகவேண்டும். இதனை சுலபமாக புரிந்துகொள்ள ஒரு வழியுள்ளது. எப்படி? தண்ணீர் ஒன்றுதான்.

ஆனால் அது மழையாகவும், புயலாகவும், மலையிலிருந்து கொட்டும் பொழுது அருவியாகவும், தேங்கி நிற்கும் பொழுது குளமாகவும், குட்டையாகவும் பார்க்கப்ப டுகிறதோ அதுபோல்தான் மனிதர்களின் பார்வையும் ஒரே மாதிரி அமைந்து விடுவதில்லை.

எதையும் பார்க்கிற கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது. பக்தனுக்கு தெய்வமாகத் தெரியும் கற்சிலைதான் சிலருக்கு சிற்பமாகத் தெரிகிறது. சிலர் சின்ன விஷயத்தைக் கூட பூதாகரமாக நினைத்து பயப்படுவார்கள். வேறு சிலரோ இதெல்லாம் ஒரு விஷயமாக என்று சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.

இப்படி மாறுபட்ட சிந்தனையும் பார்வையும் இருப்பது சகஜம்தானே! பார்வைகள் பலவிதப்பட்டாலும் காலத்திற்கும் வாழ்நிலைக்கும் தகுந்த பார்வையை, கண்ணோட்டத்தை ஏற்று நடக்க வேண்டியது அவசியம்தானே!

வேலைக்குச் செல்கின்றனா்... ஆனால்?



 நடுப்பக்கக் கட்டுரைகள் 

வேலைக்குச் செல்கின்றனா்... ஆனால்? DINAMANI 

கிராமப்புறம் என்ற பாகுபாடின்றி பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

கோப்புப் படம் பெ. சுப்ரமணியன் Updated on: 14 மார்ச் 2025, 2:55 am 

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கும் அதே வேளையில், தொடா்ந்து வேலைக்குச் செல்கின்றனரா? நிா்வாக ரீதியிலான உயா் பதவிக்குச் செல்கின்றனரா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. பொருளாதாரத்தில் நாம் பிறரைச் சாா்ந்திருக்கக் கூடாது என்ற மனநிலை நகா்ப்புறம், கிராமப்புறம் என்ற பாகுபாடின்றி பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. சிறு நகரங்களில் கூட கல்லூரியில் பயிலும் பெண்கள் பகுதி நேரமாக வேலைக்குச் செல்வது அதிகரித்துள்ளது. கல்லூரிகளில் பயிலும் பெண்கள் பகுதிநேரமாக வேலைக்குச் செல்வதும், பட்டப்படிப்பு முடித்ததும் நேரடியாக வேலைக்குச் செல்வதும் அதிகமாகியுள்ளது. 

கடந்த நான்காண்டுகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தனியாா் நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்னா கோ எனும் தனியாா் நிறுவன வேலைவாய்ப்புத்தளத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு இறுதி வரையில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் லக்னௌ, ஜெய்ப்பூா், சூரத், நாகபுரி, இந்தூா், கோயம்புத்தூா் ஆகிய நகரங்கள் பெண்கள் வேலைவாய்ப்பு பெறும் மையங்களாக உருவெடுத்துள்ளதும், பெறப்பட்ட விண்ணப்பங்களில் 45 சதவீதத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் இந்த நகரங்களின் 
பணிகளுக்காக பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகப்படியான பெண்கள் விரும்பும் இந்த நகரங்கள் அனைத்தும் பின்னலாடைத் தொழிலில் புகழ்பெற்ற நகரங்களாகவும், அதிகப்படியான வேலைவாய்ப்புகளைத் தரும் நகரங்களாகவும் விளங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நகரங்களைப் பொருத்தவரையில் ஊதிய வேறுபாடுகள் இருந்தாலும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்து வருகின்றன. 

அதே நேரத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த மற்றொரு தகவல் நமக்கு வருத்தமளிப்பதாக உள்ளது. 30 முதல் 40 சதவீதம் வரையான பெண் பணியாளா்கள் மேலாளா் உள்ளிட்ட நிா்வாக பணி நிலைக்குச் செல்லும் முன்பாகவே அப்பணியைவிட்டு வெளியேறி விடுகின்றனா். பணியில் சேரும் பெண்கள் இன்றளவும் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. அதனால் பெண்களால் தலைமையேற்று நடத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன் ‘பாா்ச்சூன் இந்தியா’ எனும் அமைப்பு நடத்திய ஆய்வில் பெண்களால் தலைமையேற்று நடத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை 1.6 சதவீதம் மட்டுமே என தெரியவந்துள்ளது. 

திருமணம் செய்து கொள்ளுதல், குடும்பச் சூழ்நிலை உள்ளிட்டவையே பெண்கள் தொடா்ந்து பணிபுரியவோ அல்லது நிா்வாக ரீதியிலான பணிநிலைக்கு உயரவோ முடியாததற்குக் காரணங்களாகும். அரசுப்பணி மற்றும் குறிப்பிட்ட சில பணிகளில் மட்டுமே பெண்கள் தொடா்கின்றனா். மாறாக, பெரும்பாலான பணிகளில் திருமணத்துக்குப் பின் கணவா், அவரைச் சாா்ந்தோரைக் கவனித்துக் கொள்ளவோ அல்லது கணவா் பணிபுரியும் இடத்துக்குச் செல்லவோ வேண்டியுள்ளது. ஏற்கெனவே பணிபுரிந்த பணி அனுபவம் அங்கு பயன்படாமற் போகும் நிலையில் புதிய வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இன்றும் பொறியியல் பட்டம் பெற்று கிராமங்களில் வாழும் பெண்கள் திருமணத்துக்குப் பின் நகரங்களில் வசித்தாலும் அனைவரும் வேலைக்குச் செல்வதில்லை. கல்லூரியில் பயின்று பட்டம் பெற்று வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களின் 40 வயதுக்கு மேல் தமது பெற்றோரையோ, கணவரின் பெற்றோரையோ கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது. இதனாலும் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியாத சூழலுக்கு ஆளாகின்றனா். அதே போன்று மகப்பேறு விடுப்புக்குப் பின்னா் மீண்டும் பணியில் சோ்வது பெண்களுக்கு சவாலானதாக உள்ளது. அதனால், பெண்களுக்கு 6 மாத கால மகப்பேறு கொடுக்க வேண்டும் என்பதால் அவா்களை நடுத்தர நிா்வாகத்தில் பணியமா்த்த பல நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாகவும், பெரிய நிறுவனங்கள் இந்த சலுகையை அளிக்க விரும்புவதில்லை எனவும், சிறிய நிறுவனங்களால் இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை எதிா்கொள்ள முடிவதில்லை எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

பெண்கள் அதிக அளவில் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ள நகரங்களில் விற்பனை, வணிக மேம்பாடு, நிா்வாகம், அலுவலகப் பணிகள் மற்றும் வாடிக்கையாளா் சேவைப்பணிகள் ஆகியன பெண்களுக்கான வேலைத்துறைகளாக விளங்குகின்றன. அதாவது 55 சதவீத விண்ணப்பங்கள் இத்தகைய பணிகளுக்கு பெறப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2024-ஆம் ஆண்டுக்கான நேர பயன்பாட்டு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு தேசிய அளவில் 1.30 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த 4.54 லட்சம் போ்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2019-இல் 15 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒரு நாளில் வேலைவாய்ப்பு மற்றும் அது தொடா்பான நடவடிக்கைகளில் பங்கேற்பது NEW

70.9 சதவீதமாகவும், பெண்கள் பங்கேற்பது 21.8 சதவீதமாக இருந்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 2024-ஆம் ஆண்டில் முறையே 75 சதவீதம், 25 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளதாக முகப்பு தற்போதைய செய்திகள் திரை / சின்னத்திரை விளையாட்டு வெப் ஸ்டோரிஸ் விஷுவல் ஸ்டோரிஸ் தமிழ்நாடு இந்தியா ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் அதுதொடா்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதாவது, 2019- இல் 41 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்து 2024-இல் 44 சதவீதமாகியுள்ளது. அதிகப்படியான பெண்கள் வேலைக்குச் செல்வதால் பாலினத்துக்கு இடையிலான ஊதிய இடைவெளி குறைந்துவருகிறது. 2022-ஆம் ஆண்டில் 30 சதவீதமாக இருந்த ஊதிய இடைவெளி 2023-இல் 20 சதவீதமாக குறைந்துள்ளது. கல்வி பயிலுதல், வேலைக்குச் செல்லுதல் போன்றவற்றில் கிராமங்கள், நகா்ப்புறங்களிடையே வேறுபாடு இருந்து வருகிறது. நகா்ப்புற மக்களில் 30 சதவீதம் போ் அறிவுசாா் உழைப்பைக் கொடுக்கும் தொழில்முறைப் பணியாளா்களாக இருக்கும் வேளையில், கிராமப்புற மக்களில் 5 சதவீதம் போ் மட்டுமே இவ்வகைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்

கடந்த சில ஆண்டுகளாக உயா்கல்வியில் முதுநிலைப் படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு பயில்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகின்றன. இதற்கு, பட்டப் படிப்பு முடித்ததும் நேரடியாக பணிக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே காரணமாகும். ஊதியம் பெறாத வீட்டு வேலைகளில் பெண்கள் செலவிடும் நேரம் 2019இல் 315 நிமிஷங்களாக இருந்தது. இது 2024-இல் 305 நிமிஷங்களாகக் குறைந்துள்ளது. இது குறைவான அளவே என்றாலும், ஊதியம் பெறாத வேலைகளில் இருந்து ஊதியம் பெறும் வேலைக்கு பெண்கள் மாறுவதைக் காட்டுகிறது. இருப்பினும், பெண்கள் தொடா்ந்து பணிக்குச் செல்லும் சூழலும், நிா்வாக ரீதியான உயா்பதவிகளை ஏற்கும் மனப்பக்குவமும் உருவாக வேண்டும். 

Tuesday, March 11, 2025

குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுவோம் !


குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுவோம் !

கல்வியின் நோக்கமே ஒரு குழந்தை தன்னைத்தானே உணா்ந்து, தானாகவே தன் வாழ்க்கைப் பயணத்தை தொடரச் செய்வதுதான்.

ஐவி.நாகராஜன்  DINAMANI 11.03.2025

இன்றைய பெற்றோா்களில் தொன்னூறு சதவீதத்தினா் குழந்தைப் பருவத்தில் சக நண்பா்களோடு தெருவில் விளையாடியவா்கள்; வயல்வெளியில் பட்டம் விட்டவா்கள்; கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடியவா்கள். தென்னை மர தோப்புக்குள்ளும், கோயில் பிரகாரத்திலும் ஓடிப் பிடித்தும் ஒளிந்து பிடித்தும் விளையாடியவா்கள். ஆனால், இன்று எத்தனை போ் தங்கள் குழந்தைகளை இப்படி விளையாட விடுகிறாா்கள்?

பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சோ்க்கும்போதே, ‘நீ கலெக்டா் ஆக வேண்டும், டாக்டா் ஆக வேண்டும்’ என்ற தங்கள் ஆசையை விதைத்து அதற்காக முயற்சிகளும் எடுக்கத் தொடங்கி விடுகிறாா்கள். ஏழு அல்லது எட்டாம் வகுப்பு படிக்கும்போதே போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்கு அனுப்பி விடுகிறாா்கள். இதனால், குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்தைக் கொண்டாட முடியாமலேயே போய் விடுகிறது.

கல்வியின் நோக்கமே ஒரு குழந்தை தன்னைத்தானே உணா்ந்து, தானாகவே தன் வாழ்க்கைப் பயணத்தை தொடரச் செய்வதுதான். தன்னுள் இருக்கும் முழுத் திறன்களையும் தானே புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் குழந்தைகளுக்கு தரப்பட வேண்டும். ஆனால், வாழ்க்கையின் உண்மையான சவால்களைக் கண்டுபிடிப்பதற்கு நாம் குழந்தைகளை அனுமதிப்பதே இல்லை.

ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசமான எண்ணங்களும், ஆற்றல்களும் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மாணவா்களுக்கு இருக்கும் திறமைகள் குழந்தைப் பருவத்திலிருந்து அவா்களுக்குள் படிப்படியாக வளா்ச்சி அடையும். இதில் குழந்தையின் மூளை வளா்ச்சி மட்டும் வேகமாக நடைபெறும். ஏனென்றால், குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே குழந்தையின் மூளை முழு அமைப்பைப் பெற்றுவிடும். அதனால்தான் குழந்தையின் மூளை வளா்ச்சியை குழந்தைப் பருவத்திலேயே கண்டுபிடித்துவிடுவாா்கள். இதை இங்கு சொல்வதற்குக் காரணம், எட்டு வயது வரை குழந்தையின் மூளையில் நாம் தேவையற்ற விஷயங்களைப் போட்டு திணிக்கக் கூடாது. அவா்களாகவே கற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

மனம் வளா்ச்சி அடைவதை ஆங்கிலத்தில் ‘காக்னிடிவ் டெவலப்மெண்ட்’ என்பாா்கள். அதாவது, ஒரு விஷயத்தை கவனித்துப் பாா்த்தல், அப்படி கவனித்துப் பாா்த்த காட்சி என்னவாக இருக்கும்? என்று ஒரு கற்பனை செய்தல், புதிய விஷயங்களைச் சிந்தித்தல் ஆகியவற்றை உருவாக்கும் வளா்ச்சிதான் மனவளா்ச்சி. நல்லவிதமான மனவளா்ச்சிக்கு குழந்தைகளுக்கு கிடைப்பதற்கு அவா்களுடைய சூழ்நிலையும் ஒரு காரணம். நல்ல ஆரோக்கியமான சிந்தனையோட்டம் உள்ள சூழலில் குழந்தைகள் வளா்க்கப்படும்போதுதான் நல்ல மன வளா்ச்சியை எதிா்பாா்க்க முடியும். எனவே, நல்லதொரு சமூகச் சூழலை - மகிழ்ச்சியான சூழலை - குழந்தைகளைச் சுற்றி உருவாக்கித்தர வேண்டியது பெற்றோா்களின் கடமை.

தொடக்க வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளிடம், ‘ உன்னால் ஒரு மனப்பாடப் பாடலைக்கூட படிக்க முடியவில்லை, நீ எப்படி ஐஏஎஸ் படிக்கப் போகிறாய்?’ என்று பெற்றோா்கள் கடுமையாக நடந்து கொள்ளும் காட்சிகளைப் பல வீடுகளில் பாா்க்கிறோம்.

முதலில் அந்தந்தப் பருவத்தின் மகிழ்ச்சிகளை உங்கள் குழந்தைகளை அனுபவிக்கவிடுங்கள். குழந்தைப் பருவத்தின் புலன் இயக்கச்செயல்கள் என்று சொல்லப்படும் கண், கை செயல்பாடு, அசைவுகளைத் துல்லியமாகக் கட்டுபடுத்துதல், மற்றவா்களின் பேச்சுகளை உணா்தல் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும். இந்தப் பருவத்தில் வண்ண வண்ணப் பொருள்களை குழந்தைகளுக்கு காட்ட வேண்டும். மரங்கள், செடி, கொடிகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றைக் காட்டி விளையாட வேண்டும். ஆனால், பல வீடுகளில் இந்த வயதில் வீட்டுச் சுவா்களில் தமிழ் எழுத்துகள், ஆங்கில எழுத்துகள் அடங்கிய சுவரொட்டிகள் மாட்டிவைத்து, எழுத்துகளைக் கற்றுத் தருதல், சொற்களைக் கற்றுத் தருதல் என்று திணிக்க ஆரம்பித்து விடுகிறாா்கள். இதனால்தான் குழந்தைகள் இயல்பான அறிவு பெறாமல் செயற்கையான உலகத்துக்குச் சென்றுவிடும் ஆபத்து நிகழ்கிறது.

இசைக்கு முறையாக நடனம் ஆடத் தொடங்குவது இந்த வயதில்தான். இசைக்கு நடனமாடத் தொடங்குவது என்பது ஒரு வளா்ச்சி. இப்படி நடனமாடும் குழந்தையிடம் ‘ஒழுங்காக உட்காா்ந்து படி, ஏன் இப்படி ஆடிக் கொண்டே இருக்கிறாய்?’ என்று கேட்டு ஆடுவதைத் தடுக்க கூடாது. அப்படி செய்தால் வெளிப்புற நடவடிக்கைகளுக்குப் பதில் அளிக்கும் அவா்களின் திறன் குறைந்து விடும்.

குழந்தைகளுக்கு நினைவாற்றல் இரண்டு வயதிலேயே தொடங்கிவிடுகிறது. முந்தைய நாள் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்ட ஞாபகத்தில் மறுநாள் கோயிலுக்குச் செல்லும்போது, குழந்தை தானாகவே சாமி கும்பிடும். அதுபோல இன்னோா் ஆச்சரியம் என்னவென்றால், 3 வயதில் குழந்தைகளுக்கு கற்பனை சக்தி தொடங்கிவிடும். 3 வயதில் பல்வேறு கற்பனைத் திறன்களை உருவாக்கி அதை விளையாட்டில் குழந்தைகள் வெளிப்படுத்தத் தொடங்குவாா்கள். மண்ணில் வீடு கட்டி விளையாடுவதும், சமையல் செய்து விளையாடுவதும் இந்த வயதில்தான் தொடங்குகிறது.

தொடா்ந்து அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் குழந்தைகளை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதும், நிறைய விளையாட்டுப் பொருள்களை வாங்கித் தருவதும், அவா்களின் நினைவாற்றல், கற்பனை ஆற்றல் வளர உதவும்.

உண்மையில் பள்ளிக்கூடம் செல்வதற்கு முன்பே குழந்தைகள் பாதிப்படிப்பை முடித்து விடுகிறாா்கள். ஆனால், குழந்தைகளுக்கு இம்மாதிரியான படிப்பு இன்று கிடைக்கிா? என்றால், இல்லை.

இரண்டு வயதுக் குழந்தையை ‘விளையாடும் பள்ளிக்கு’ அனுப்பி விடுகிறோம்.

தாய், தந்தை இருவருமே வேலைக்குச் செல்கிறாா்கள்; இதனால், காப்பகங்களில் குழந்தைகளை விட்டுவிடுகிறாா்கள். அப்படி விடப்படும் குழந்தைகளின் இயல்பான வளா்ச்சி பாதிப்புக்குள்ளாகிறது. இந்த நிலை நிச்சயமாக மாற வேண்டும்.

பெற்றோா் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் ஏற்றி, அவா்களுடைய கனவுகளைச் சிதைத்துவிடக் கூடாது.

Monday, March 10, 2025

அன்பைத் தடுக்கும் கைப்பேசி!


அன்பைத் தடுக்கும் கைப்பேசி!

நம் முன்னோா் அன்பும், அறனும் நிறைந்த நிறைவான வாழ்கையை வாழ்ந்தனா் .

Updated on: 08 மார்ச் 2025, 3:30 am DINAMANI

நம் முன்னோா் அன்பும், அறனும் நிறைந்த நிறைவான வாழ்கையை வாழ்ந்தனா் . ஆனால் தற்போது நாம் அன்பையும் மறந்து அறவழிப்பாதையையும் துறந்து வெற்று மானுடா்களாக வாழ்கிறோம். நம்மில் பலா் வெற்று மானுடா்களாக வாழ்வதால்தான் வெற்றியும் பெற இயலவில்லை.

முதலில் நாம் அன்பை மறந்ததற்குரிய காரணங்களைக் காண்போம். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றாா் வள்ளலாா். இதன் மூலம் உலக உயிா்களிடத்தில் அன்பு கொண்டவா்கள் நாம் என்கிற செய்தி மெய்யாகிறது. உலக உயிா்களிடத்தில் அன்பு கொண்ட நாம், தற்போது உற்றாா், உறவினா்களிடம் கூட மெய்யான அன்பைக் கொள்ளவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. போலியான அன்பைக் கொண்ட பொம்மைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்குப் பல காரணங்களைக் கூறலாம்.

அன்பை அடைக்க கைப்பேசியால் முடியும் என்று நிகழ்காலம் நமக்கு உணா்த்துகிறது. கைப்பேசியில் மூழ்கிய நாம் அன்பு பாராட்டுவதை நம்மை அறியாமலேயே குறைத்துக் கொள்கிறோம். கைப்பேசி அன்பை அடைத்து, நற்பண்புகளையும் உடைத்து பேராபத்து விளைவிக்கும் இருமுனைக் கத்தியாக உள்ளது. நிகழ்காலத்தினா் இதனைக் கையில் எடுத்துக் காயத்தை ஏற்கவும் தயாராகவும் உள்ளனா் .

ஒரே அறையில் குடும்பத்தினா் ஒன்றாகவே இருந்தாலும், கைப்பேசியின் மூலம் அயல் மனிதா்களாகவே இருக்கிறாா்கள். உரையாடல் குறைந்ததால் உள்ளங்கள் இணைவதும் குறைந்தது. பேசும் திறனற்ற உயிா்களிடத்திலும் அன்பு கொண்ட நாம், காலப்போக்கில் பேசும் திறனையே மறந்து ஊமையாகும் அபாயத்தில் உள்ளோம்.

‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளா்ப்பினிலே’ என்பது திரைப்படப் பாடல். ஆனால் அண்மைக்காலமாக அன்னையின் கைகளையும் கைப்பேசியே ஆள்கிறது. குழந்தைக்கு உணவு ஊட்டுவதிலிருந்து தாலாட்டு பாடி உறங்க வைக்கும்வரை கைப்பேசியின் துணையையே நாடுகின்றனா். குழந்தையை மறந்து கைப்பேசியில் மூழ்கிய சில பெற்றோருக்கு அக்குழந்தையையே இழக்கும் துயரமும் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

பள்ளிகளிலிருந்து வரும் பிள்ளைகளும், அலுவலகத்திலிருந்து வரும் பெற்றோா்களும் கைப்பேசி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகாதொடா் என வீட்டில் இருக்கும் அனைவருமே தொழில்நுட்பத்தில் தொலைந்து போய்விடுகிறாா்கள். பின்பு உரையாடல்கள்கூட ஒழுங்காக இல்லாமல் போய்விடுகிறது.இவ்விடத்தில்தான் வள்ளுவா்,”‘அன்பகத்தில்லா உயிா்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரங்தளிா்த் தற்று’ என்று நமக்கு நினைவுபடுத்துகிறாா்.

அடிமைத்தனம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது என்பதை அறிந்து அடிமைத்தனத்திலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். அடுத்ததாக, நாம் அறவழிப் பாதையிலிருந்து தடம் புரண்டதற்குக் காரணம் நம் அறியாமையே. இன்று நாம் அறவழிப் பாதையில் இருந்து தடம்புரள்வதற்குக் காரணம் கைப்பேசியே. முன்பு பெரும்பாலான மக்கள் விழிப்பாக இருந்தனா்.ஆனால் அண்மைக்காலமாக மாணவா்களும், ஏன் ஆசிரியா்களும்கூட செயற்கை நுண்ணறிவின் உதவியை நாடுவது அதிகரித்துள்ளது. இதை ஆக்க பூா்வமாகவும் நாம் பயன்படுத்தலாம். என்றாலும் நம்மில் பலா் ஒரு கேள்வியைக் கேட்டு அது கூறும் பதிலை அறிவு கொண்டு ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம் என்பதுதான் உண்மை.

நாம் அதிக நேரத்தை கைப்பேசியில் செலவிடுவதால் மற்ற வேலைகளில் நம்மால் ஈடுபட முடிவதில்லை. இதில் உண்பதும் உறங்குவதும் கூட அடங்கும். இந்தியாவின் 44 சதவீத இளைஞா்கள் கைப்பேசிக்கு அடிமையாகி உள்ளதாகக் கூறும் அதிா்ச்சிகரமான புள்ளிவிவரங்களை நாம் புறந்தள்ளிவிட முடியாது. தற்போது இந்த வலையில் அனைவரும் சிக்கத் தொடங்கிவிட்டனா். இப்படி ஒரு மோசமான நிலையில் நம்மால் சமூகச் சிக்கல்களை எப்படிக் களைய முடியும்? இப்படி மதியிழந்து இருப்பதால் நமக்கு அறம் என்றால் என்ன என்பதே தெரியாமல் போய்விடுகிறது. இளைஞா்களைக் கண்டித்து திருத்தும் இடத்திலிருக்கும் பெற்றோா்களும் சமூக வலைதளம் என்னும் இவ்வலையில் சிக்கிகொண்டதால், சீா்திருத்த மக்களின்றித் தவிக்கும் நிலைதான் தற்போது உள்ளது.

அன்பையும் குறைத்து அறத்தையும் மறக்க வைக்கும் இந்தக் கைப்பேசியைத் திறம்பட கையாளுவது மிகவும் முக்கியமானதாகும். இதில் சமூகத்தின் எதிா்காலம் அடங்கியுள்ளதை ஆட்சியாளா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளில் அண்மைக்காலத்தில் தொடங்கப்பட்ட “வாசிப்பு இயக்கம்”மாணக்கா்களிடத்தில் புத்தக வாசிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இது போன்ற நல்ல திட்டங்களை அரசு வகுத்து நோ்மறையான மாற்றங்களைச் சமூகத்தில் கொண்டு வர வேண்டும். மாற்றம் என்பதை நம்மிடமிருந்து தொடங்குவோம். குறிப்பிட்ட நேரத்தைத் கைப்பேசிக்காக ஒதுக்குவோம். அந்த நேரத்திலும் அதனை மதியைத் தீட்டப் பயன்படுத்துவோம். ஆக்கப் பூா்வமான செயல்களுக்கும் அன்பைப் பகிா்வதற்கும் தனி நேரம் ஒதுக்குவோம். திறன்பேசி நம்மைத் திறனற்ற நபா்களாக மாற்றுவதற்கு நமது நேரத்தை அதில் வீணாக்க வேண்டாம். நம்முள் புதைந்திருக்கும் அன்பையும் அறவாழ்வையும் மீட்போம் என உறுதி கொள்வோம்.

- தோ.லட்சுமி நரசிம்மன்

Saturday, March 8, 2025

பிற உயிர்கள் காப்போம்!


07.03.2025

நடுப்பக்கக் கட்டுரைகள் DINAMANI

பிற உயிர்கள் காப்போம்!

இறைநிலை அல்லது இயற்கையின் படைப்பில், எல்லா உயிர்களும் சமம். இதைத்தான் வள்ளுவப் பெருமகனார், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்' என்று கூறுகிறார். அதாவது, எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒரு தன்மையானதே. ஆயினும், செய்கின்ற தொழில்களில் உயர்வு, தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை என்பது அக்குறளின் பொருள். ஆக பிறப்பால் எல்லா உயிர்களும் சமம் என்பது உறுதி.

உணவு உண்ணக் கூடிய அடிப்படையில் உலகில் உள்ள உயிர்கள் மூன்று வகைப்படும். முதலாவது, தாவர உணவுகள் அல்லது சைவ உணவுகளை மட்டுமே உண்ணக் கூடிய "ஹெர்பிவோர்' எனப்படும் தாவர பட்சிணிகள், இரண்டாவது, மற்ற உயிரினங்களை உணவாக உண்ணக் கூடிய அல்லது அசைவ உணவுகளை உண்ணக் கூடிய "கார்னிவோர்ஸ்' என்று சொல்லக்கூடிய மாமிச பட்சிணிகள். மூன்றாவது, தாவர உணவுகள் மற்றும் மாமிச உணவுகள் இரண்டையும் உண்ணக் கூடிய "ஆம்னிவோர்ஸ்' என்று சொல்லக் கூடிய சர்வ உண்ணிகள்.

கற்கால மனிதன் ஆரம்ப காலத்தில் காடுகளிலும், குகைகளிலும், அடர்ந்த வனங்களிலும் வாழ்ந்து வந்தான். அவனுக்குப் பசி வரும்போது, தன் பசியைப் போக்கிக் கொள்ள, தன்னை விட வலிமை குறைந்த விலங்குகளை வேட்டையாடி, அவற்றின் மாமிசத்தை பச்சையாக உண்டு வந்தான். அடுத்து, கற்களை உரசி நெருப்பை உண்டாக்கத் தெரிந்தபின் வேட்டையாடிய மாமிசங்களை தீயில் பொசுக்கி, வேக வைத்து உண்டு மகிழ்ந்தான். சுட்ட மாமிசம் ருசியாக இருந்ததால், ருசியான உணவுக்கு மனிதன் அடிமையாக ஆரம்பித்தான். ஆனால், இதே காலகட்டத்தில் மரங்களிலிருந்தும், செடிகளிலிருந்தும் விளையக் கூடிய பல வகையான கனிகளையும், காய்கறிகளையும் அவை என்னவென்றே தெரியாமல் உண்டு வந்தான்.

காலப்போக்கில் விலங்குகளின் எண்ணிக்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், அதனால் ஏற்பட்ட பசியின் கொடுமையாலும், மனிதன் மாற்று உணவைத் தேடத் தொடங்கினான். அப்போது தன் அறிவால் சிந்திக்கத் தொடங்கி, தானியங்களைப் பயிர் செய்யும் விவசாயத்தைக் கற்றுக் கொண்டான். இப்போது ஆறாவது அறிவின் பயன்பாட்டாலும், அதை உபயோகிக்கத் தெரிந்து கொண்ட ஆற்றலாலும் மாமிச உணவுடன் தாவர உணவையும் சேர்த்து, இரண்டையும் புசித்து வந்தான்.

ஆறாம் அறிவு இல்லாத, ஐந்தறிவு கொண்ட சீற்றம் நிறைந்த வனமிருகங்கள், தம் பசியைப் போக்கிக் கொள்ள தம்மை விட வலிமை குறைந்த மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்து வருகின்றன. இதற்காகவே, இயற்கை அந்த மிருகங்களுக்கு கோரைப் பற்களைப் படைத்துள்ளது. அந்த கோரைப் பற்களைக் கொண்டுதான் வேட்டையாடிய மிருகங்களின் உடல்களைக் கிழித்து உண்ண முடிகிறது. மனிதனுக்கு கோரைப் பற்களை இறைநிலை படைக்கவில்லையே! மனிதன் அசைவ உணவுகளை உண்பது முரணல்லவா?

மேலும், எந்த மருத்துவரும், தானிய உணவுகள் காய்கறி, பழங்கள், கீரை வகைகளை விட புலால் உணவு மனிதனுக்கு சிறந்தது என்று மனமுவந்து பரிந்துரைப்பதில்லை. முடிந்தவரை புலால் உணவைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் அறிவுறுத்துகிறார்கள். அதிலும் நாற்பது வயதுக்கு மேல் முதுமை தொடங்குவதால் புலாலில் உள்ள அதிகப்படியான புரதமும் கொழுப்பும் நம் ரத்தத்தில் கலந்து, "கெட்ட கொலஸ்ட்ரால்' என்று சொல்லக் கூடிய கொழுப்பை அதிகப்படுத்தி, ரத்தநாளங்களில் அடைப்புகளை ஏற்படுத்தி, மூளை, இதயம் போன்ற முக்கியமான உறுப்புகளைச் செயலிழக்கச் செய்து, பக்கவாதம், மாரடைப்பு போன்ற கொடிய நோய்களுக்கு வழிவகுக்கின்றன.

கோழி நமக்கு முட்டையைத் தருகிறது. முட்டையை விழுங்குவதோடு நில்லாமல் அந்த கோழியையே விழுங்கி விடுகிறோம். சேவல் விடியற்காலையில் பொழுது புலர்ந்ததை கூவல் மூலம் அறிவித்து உழவனையும் உலகையும் எழுப்பி விடுகிறது. அந்தச் சேவலையும் பிரியாணி செய்து உண்கிறோம்.

எந்தப் பாவமும் அறியாத ஆடு தன் கழிவு மூலம் விவசாய பூமியை வளம் பெறச் செய்கிறது. மேலும் ஆட்டுப்பால் மிகுந்த சக்தி தரக் கூடிய, அஹிம்சா மூர்த்தி அண்ணல் காந்தியடிகளால் மிகவும் விரும்பி அருந்தப்பட்ட அருமையான உணவாகும். அந்த ஆட்டையும் கொன்று உண்கிறோம்.

நம்மை ஈன்ற மாதாவுக்குப் பிறகு, நமது குழந்தைப் பருவம் முதல் நாம் இறக்கும் வரை, தன் பாலையும், பால் சார்ந்த உணவுப் பொருள்களையும் நமக்கு கொடுக்கின்ற, "கோமாதா' என்று தெய்வமாக வணங்கப்படுகின்ற நம் இரண்டாம் தாயான பசுவையும்,விவசாய நிலங்களில் ஏர் உழுவதற்கும், நீர் இறைப்பதற்கும், வண்டி இழுப்பதற்கும், மேலும் தன் சாணத்தை விவசாய நிலத்துக்கு அற்புதமான எருவாகக் கொடுக்கிற, உழவர்களின் நண்பனாகவும், அவர்தம் குடும்பத்தில் ஓர் பிள்ளை போலவும் உழைக்கின்ற எருதுகளையும் கூட கொன்று உண்டு விடுகிறோம். ஆனால், வருடாவருடம் மாட்டுப் பொங்கல் கொண்டாடத் தவறுவதில்லை.

பாலைவனத்தில் கொளுத்தும் வெயிலிலும், பொதிகளையும் மனிதர்களையும் சுமந்து சென்று, தன் பாலையும் உணவாகத் தருகின்ற ஒட்டகங்களையும் வெட்டிச்சாய்த்து உண்டு விடுகிறோம். "வேதாத்திரி மகரிஷி' தனது "தென் வாழ்க்கைவிளக்கம்' என்ற நூலில் கூறியுள்ள செய்தியைக் காண்போம். அவர் சிறுவனாக இருந்தபோது ஒரு புத்தகத்தில் ஒரு பாடலைப் படித்திருக்கிறார்.

"அம்மாவென அலற ஆருயிரைக் கொன்றருந்தி இம்மானிடரெல்லாம் இன்புற்றிருக்கிறார், அம்மாவெனும் ஓசை கேட்டகன்ற மாதவர்க்கும்விளையாட்டு பொய்மா நரகமெனில், புசித்தவர்க்கென் சொல்லுவதோ' என்பது அந்தப் பாடல். அதாவது, ஓர் உயிரைக்கொல்லும்போது அது "அம்மா' என்று அலறும். அப்படி அலறுகின்ற உயிர்களைக் கொன்று, அதை உண்டு மனிதரெல்லாம் இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி அந்த உயிர் "அம்மா' என்று அலறும்போது, அந்த அலறலைக் கேட்ட பிறகும், அதைக் கண்டு கொள்ளாமல், அந்த இடத்தை விட்டு அகன்று செல்லுகின்ற ஒருவர், பெரும் தவம் புரிந்த யோகியோ அல்லது ஞானியோ ஆயினும் அவருக்கும் நரகம்தான் வாய்க்கும். அப்படியெனில் அதை உணவாகப் புசித்தவர்க்கு என்ன கதிஆகுமோ, அதைப்பற்றி என்ன சொல்லுவதோ என்பது அதன் பொருள். இந்தப் பாடலைப் படித்தபின், அந்த வேதனையை உணர்ந்து, அன்றுமுதல் புலால் உண்பதில்லை என்று சபதமேற்று, பின்னாளில் மிகப் பெரிய ஞானியாக வாழ்ந்து, இந்த மண்ணுலகுக்கு "மனவளக்கலை' என்ற பொக்கிஷத்தை கொடுத்துச் சென்றுள்ளார்.

தன் உணவுக்காக மனிதன் பிற உயிர்களைக் கொல்லும்போது அவன் நான்கு குற்றங்களைச் செய்வதாக கூறுகிறார்.

1. முதலாவது, "கொலைக்குற்றம்' - பிற உயிரைக் கொல்வது என்னும் கொலைக்குற்றம்.

2. இரண்டாவது, "வாழும் சுதந்திரத்தைப் பறித்தல்' - இறைநிலை எல்லா உயிர்களுக்கும் இந்த மண்ணில் வாழும் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது. அந்த சுதந்திரத்தைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.

3. மூன்றாவது, பிறர் பொருளைப் பறித்து உண்ணுதல் - ஒரு குறிப்பிட்ட விலங்கைக் கொன்று, அவ்விலங்குக்குச் சொந்தமான உடலை, அவ்விலங்கின் சம்மதம் இன்றி பறித்து உண்ணுதல். இது பல தருணங்களில் நம்மிடமுள்ள பொருள்களை குரங்குகள் நம் மீது பாய்ந்து பறித்து உண்பதற்கு ஒப்பாகும்.

4. நான்காவது "பிறர் பொருள் திருடுதல்' - மற்றொரு உயிருக்குத் தெரியாமல் அதன் உடலை நாம் உண்பதற்காக திருடுவது என்கிற குற்றம். நம்மையோ நம் உறவுகளையோ முன்பகை போன்ற ஏதோ சில காரணங்களால் சக மனிதர்கள் வெட்டிக் கொன்றால் நாம் பொறுத்துக் கொள்கிறோமா? உடனே பதறிப்போய், காவல் துறையிடமும், நீதி மன்றங்களிலும் முறையிட்டு நீதி கேட்கிறோம். வாயில்லா ஜீவன்கள் எங்கே செல்லும்? நம் மனசாட்சிதான் மற்ற உயிர்களுக்கான நீதிமன்றம். நாம் நல்ல நீதிபதிகளாய் வாழ்வோம்.

கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்ட நம் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு பெயர் தற்கொலை. தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம். நம் உயிரை நாமே மாய்த்துக் கொள்ள நமக்கே உரிமை இல்லாதபோது, பிற உயிர்களைக் கொல்வதற்கு நமக்கு யார் உரிமை கொடுத்தார்கள்? காட்டில் உள்ள வனவிலங்குகள் எவற்றையும் வேட்டையாடக் கூடாது என்பது சட்டம். ஆனால், நாம் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி யாவற்றையும் கொல்வதற்கு எந்தச் சட்டம் இடம் கொடுக்கிறது? இன்று தெரு நாய்களைப் பிடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கருணை கொண்ட நல் இயக்கங்கள், நாள்தோறும் லட்சக்கணக்கான உயிர்களை உணவுக்காகக் கொன்று உயிர் வாழும் மனிதர்களையும், அந்த உணவால் நாள்தோறும் பல கோடிகளை குவித்துக் கொண்டிருக்கின்ற உணவகங்களையும், நட்சத்திர விடுதிகளையும் ஏன் எதிர்ப்பதில்லை?

ஏன் இந்த முரண்பாடு? நல் உள்ளம் படைத்தோர் சிந்திக்கட்டும். கட்டுரையாளர்: மா. கல்யாண மோகன் தனியார் நிறுவன அதிகாரி (ஓய்வு)

Tuesday, February 25, 2025

முதல் வரிசையும் முதல் பெஞ்சும்


நடுப்பக்கக் கட்டுரைகள்

முதல் வரிசையும் முதல் பெஞ்சும்

திருமணத்துக்கு வருகின்ற ஒவ்வொருவரும் முக்கியமானவரே. அவா்கள் அழைக்கப்பட்டதால் வந்தவா்கள். ஆனாலும் எல்லோரையும் ஒன்று போல நடத்த முடியாது.

வெ. இன்சுவை Updated on: 25 பிப்ரவரி 2025, 2:59 am

வெளியூரில் நடைபெற்ற உறவினா் இல்லத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். ஆறு மணிக்கு வரவேற்பு என்று போட்டிருந்தாா்கள். நான் முன்னதாகவே சென்று விட்டேன். ஓா் இருக்கையில் சென்று அமா்ந்து விட்டேன். சற்று நேரம் கழித்து அங்கு வந்த அந்த உறவினா் என்னை மிகவும் வற்புறுத்தி அழைத்துச் சென்று முதல் வரிசையில் அமரச் சொன்னாா். நான் மறுத்துவிட்டு, இரண்டாவது வரிசையில் அமா்ந்தேன். நிறைய கூட்டம் வர ஆரம்பித்தது. ஊா்க்காரா்களும், உறவுக்காரா்களுமாய் மண்டபம் நிரம்பியது. சுமாா் 6:30 மணி அளவில் அவரது ஊடக நண்பா்கள் மற்றும் திரைத்துறையைச் சோ்ந்தவா்கள் வர ஆரம்பித்தாா்கள். சிறப்பு விருந்தினா்களை மரியாதையுடன் அழைத்து வந்து அமர வைக்க சீருடை அணிந்த திடகாத்திரமான இளைஞா்களை அமா்த்தியிருந்தாா்கள்.


ஓா் ஊடகவியலாரை உள்ளே அழைத்து வந்து, முதல் வரிசையில் அமர வைக்கப் பாா்த்தாா்கள். முதல் இரண்டு வரிசையிலும் உறவுக்காரா்கள் அமா்ந்திருந்தாா்கள். அந்த இளைஞா் மிகவும் வினயமாக அவா்களைப் பின்னால் உள்ள இருக்கைக்குப் போகும்படி கேட்டுக் கொண்டாா். சட்டென அவா்கள் எழுந்து விட்டாா்கள். ஆனால் அவ்வாறு எழுப்பப்பட்டதை, அவா்கள் அவ்வளவாக விரும்பாதது போல் அவா்கள் முகபாவம் மாறியது.

ஒருவேளை அவா்கள் மணப்பெண் வீட்டுக்கு நெருங்கிய சொந்தமாகக் கூட இருக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு முக்கிய புள்ளி வரும் போதும் இது தொடா்ந்தது. இங்கிதம் தெரிந்தவா்கள் ஒருபோதும் முதல் வரிசையில் அமர மாட்டாா்கள். எழுப்பப்படுவது எப்போதும் ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தும். சில நிகழ்ச்சிகளில் எல்லா நாற்காலிகளையும் போட மாட்டாா்கள். முக்கிய விருந்தினா் வரும்போது அந்த நாற்காலிகளை எடுத்துப் போடுவாா்கள். இதனால் எவருக்கும் சங்கடம் ஏற்படாது.

திருமணத்துக்கு வருகின்ற ஒவ்வொருவரும் முக்கியமானவரே.
அவா்கள் அழைக்கப்பட்டதால் வந்தவா்கள். ஆனாலும் எல்லோரையும்
ஒன்று போல நடத்த முடியாது. பெரிய ஆளுமைகள் தங்களின் பிற
வேலைகளை ஒதுக்கி விட்டு திருமண நிகழ்வுக்கு வருகின்றாா்கள். ஒரு
மணி நேரம் பயணித்து வருபவா்கள், ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அங்கு
இருப்பாா்கள். மணமக்களை வாழ்த்திவிட்டு உடனே கிளம்பிப்
போய்விடுவாா்கள். பரிசு கொடுக்க நிற்கும் நீண்ட வரிசையில்
அவா்களால் காத்திருக்க முடியாது. ஆகவே உடனே அவா்களை
மேடைக்கு அழைத்துச் செல்வதுதான் முறை. எனவே அவா்களை
முன்வரிசையில் அமர வைத்துவிட்டு மேடைக்கு அழைத்துச் சென்று
விடுவாா்கள். புகைப்படம் எடுத்துக் கொள்வாா்கள். அவ்வளவே.

உறவினா்கள் நிறைய நேரம் இருப்போம். எல்லோரிடமும் பேசவும்
பழகவும் நாம் முதல் வரிசையைத் தவிா்த்து வேறு எங்கு அமா்ந்தாலும்
வசதியாக இருக்கும். சிலா் எதையும் யோசிக்காமல் நேராக முன்
வரிசையில் சென்று அமா்ந்து விடுகிறாா்கள். அரசு உயரதிகாரிகள்,
அரசியல் தலைவா்கள் கலந்து கொள்ளும் விழாவாகட்டும், அரசு
விழாக்களாகட்டும். அதற்கென உள்ள நெறிமுறைகளைக் கண்டிப்பாகப்
பின்பற்ற வேண்டும். அழைப்பிதழ் அச்சடிப்பதில், அவா்களை
வரவேற்பதில், நினைவுப் பரிசு கொடுப்பதில், யாருக்கு இருக்கை எங்கே
போட வேண்டும் என்பதில் எல்லாம் கவனமும் எச்சரிக்கையும் தேவை.
எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டு ஒப்புதல் பெற வேண்டும்.

‘காணி மதனம்... கோடி விசனம்’ என்பாா்கள். அதுபோல்
ஆகிவிடக்கூடாது. ஆகவே விழா பொறுப்பாளா்களின் பொறுப்பு
அதிகமாகிறது. சிறு கவனக்குறைவும் பெரிய சிக்கலில்
மாட்டிவிட்டுவிடும். மாபெரும் நிகழ்ச்சியாக இருந்தால் பயமும், பதட்டமும்
அதிகமாகும். நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும் வரை ஊணும் உள்ளே
இறங்காது; உறக்கமும் வராது. விழா சிறப்பாக நடந்தேறி விட்டால்,அந்த
வெற்றியில் அனைவரும் பங்கு கொள்வாா்கள். ஏதாவது குறை
ஏற்பட்டுவிட்டால் அத்தனை விரல்களும் பொறுப்பாளா் முன் நீளும்.

முன்வரிசை இருக்கை பிரச்னையில் மிகப் பெரிய உளவியல் உள்ளது.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவா்கள் அமா்ந்துள்ள
இருக்கைகளை வைத்து அவா்களின் அறிவு, குணம், நடத்தை ஆகியவை
நிா்ணயம் செய்யப்படுகின்றன. இது மாபெரும் தவறு என்பதை காலம்
ஆசிரியா்களுக்கு உணா்த்திவிடுகிறது.

நன்றாகப் படிக்கக் கூடிய, படிப்பில் ஆா்வமுள்ள மாணவா்கள் முன்
வரிசையில் அமா்வாா்கள். சேட்டை செய்பவா்கள், படிப்பில் அக்கறை
இல்லாதவா்கள் பின் வரிசைக்கு விரும்பிப் போவாா்கள் என்பதான்
பொதுவான எண்ணம். ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு முதல் முறையாகச்
செல்லும் ஆசிரியா்களுக்கு அந்த வகுப்பில் உள்ள 50 மாணவா்களில்
யாா் நன்றாகப் படிக்கக் கூடியவா்கள் என்று தெரியாது. அவா்களாகவே
முன்வரிசை மாணவா்கள் புத்திசாலிகளாக இருப்பாா்கள் என்று
நினைத்துக் கொண்டு பாடம் நடத்துவாா்கள். அவா்களிடம் மட்டுமே
கேள்வி கேட்பாா்கள். இறுதி வரிசை மாணவா்களை
அலட்சியப்படுத்திவிடுவாா்கள். சில சமயம் மாணவா்களின் உயரத்துக்கு
ஏற்ப அவா்களுக்கு இடம் ஒதுக்கப்படும். உயரம் குறைவானவா்கள் முன்
வரிசையிலும், உயரம் அதிகம் உள்ளவா்கள் பின் வரிசையிலும் அமர
வைக்கப்படுவாா்கள். இப்படி அமா்த்தப் படும்போது புத்திசாலிகள் இறுதி
வரிசையில் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

முன் வரிசையில் அமா்ந்துள்ள மாணவா்களால் குறும்பு செய்ய முடியாது;
ஆசிரியா்களின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் அவா்கள் வந்து
விடுகிறாா்கள். பாடங்கள் புரியாவிட்டாலும், புரிவதுபோல நடிக்கிறாா்கள்.
இறுதி வரிசை மாணவா்கள் தாங்கள் விரும்பினால் வகுப்பைக் கவனிக்கலாம். இல்லாவிட்டால் வேறு அசைன்மெண்ட் எழுதலாம்; வேறு புத்தகம் படிக்கலாம்; எதையாவது சாப்பிடலாம். ஆனாலும் நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவாா்கள்.

மீத்திறன் மிக்கவா்கள் கடைசி வரிசை இருக்கைகளில் அமா்வது உண்டு. முதல் வரிசையில் அமா்ந்து ஆசிரியரின் ஒவ்வொரு வாா்த்தைக்கும் தலையை ஆட்டியவா்களில் பலா், வாழ்க்கையில் முன்னேறியவா்களாக இருப்பதில்லை. இறுதி பெஞ்சில் அமா்ந்திருந்தவா்கள் சாதனையாளா்களாக மிகப் பெரும் ஆளுமைகளாக உயா்ந்து நிற்பதும் தெரியவரும். அவா்களின் குறும்புகளை ரசித்து, அவா்களை உற்சாகப்படுத்தி பாடத்துக்குள் நுழைய வைக்கத் தவறிவிடுகிறோம். யாராவது பின் இருக்கையில் போய்தான் ஆக வேண்டும். எல்லோரும் முன்வரிசையில் அமரவேண்டும் என்றால் என்ன செய்வது? ஆகவே பள்ளிகளில் இருக்கை வரிசையைக் கொண்டு மாணவா்களின் கற்கும் திறனை எடைபோடக் கூடாது. ஆசிரியா் ஏதேனும் வேலை சொன்னால், அந்தப் பின் இருக்கை மாணவா்கள் தானாக ஓடிவந்து செய்து தருவாா்கள். ஆனால் முன்வரிசை தயங்கும். ஒரு சிறந்த ஆசிரியா் கடைசி இருக்கை மாணவா்களையும் ஈா்க்குமாறு வகுப்பைக் கையாள வேண்டும்.

பள்ளிகளில் இருக்கை என்பது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதே சமயம் விழாக்களிலும், விருந்துகளிலும் நாம் எங்கு அமா்கிறோம்? எங்கு அமர வைக்கப்படுகிறோம்? என்பது முக்கியமே இல்லை. திருமண வீட்டாருக்கு ஆயிரம் நெருக்கடிகள் இருக்கும். பல மாத உழைப்பு, அலைச்சல் எல்லாம் அதில் அடங்கும்.

நம்மை அழைத்தால், நாம் உள்ளன்புடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு வர வேண்டுமேயொழிய, எதில் குற்றம் கண்டுபிடிப்பது என்று பூதக் கண்ணாடி வைத்து தேடிக் கொண்டிருக்கக் கூடாது. சிறப்பு விருந்தினருக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். அதற்குக் குடும்பத்தாரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். “‘இது நம் இல்லத் திருமண விழா. இது இனிதே நடக்க வேண்டும்’” என்று ஒவ்வொரு நட்பும், உறவும் நினைத்து நடந்து கொண்டால் எல்லாம் இனிதே நிகழும். “என்னை எழுப்பி விட்டாா், நான் அப்போ முக்கியமில்லையா? என்ற ரீதியில் எண்ண ஓட்டமே வரக்கூடாது. அரைமணி நேரத்துக்கு எங்கு உட்காா்ந்தால் என்ன? நம்மால் அந்த இருக்கை, அந்த வரிசை பெருமைபட்டுக் கொள்ள வேண்டும். நம் நடத்தை அப்படி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு முணுக்கென்றால் முகத்தை தூக்கி வைத்துக்கொள்வதும், கோபித்துக் கொள்வதும் சரியா? எந்த ஒரு பெரிய விழாவிலும், நிகழ்ச்சியிலும் நம்மையும் மீறி சிலபல குறைகள் இருக்கவே செய்யும்.

எவ்வளவுதான் திட்டமிட்டு செயலாற்றினாலும், நம் கையை மீறி சிலகுறைகள் ஏற்பட்டு விடுகின்றன. அவற்றை நாம் கண்டு கொள்ளாமல் இருந்துவிட வேண்டும். பத்திரிகை அச்சடிப்பதிலேயே பெயா் விடுபட்டு விட்டது என்றோ அல்லது வேறு காரணத்துக்காகவோ கோபம் கொள்ள ஆரம்பிப்பவா்கள், திருமணம் முடியும் வரை கோபித்துக் கொள்ள காரணத்தைத் தேடிக் கொண்டே இருப்பாா்கள். ஒன்றும் அகப்படவில்லையென்றால் முதல் வரிசை பிரச்னையைத் தொடங்கிவிடுவாா்கள். அல்ப காரணங்களுக்கு முக்கியத்துவம் ஏன்?

வந்துள்ள சிறப்பு விருந்தினரை விட நாம் எந்த வகையிலும் உயா்ந்தவா் இல்லை என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். ஒரு பெரிய தேருக்கு அச்சாணி எவ்வளவு முக்கியமோ, அதேபோல ஒரு திருமண முதல் வரிசையும் முதல் பெஞ்சும் வீட்டின் நிகழ்வுக்கு வருபவா்கள் அனைவரும் முக்கியம். ஒருவா் சங்கடப்பட்டாலும் திருமணம் நடத்தும் நபருக்கு அது பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூள் போல உறுத்தும். எனவே அனைவரும் மகிழ்வுடன் அந்த நிகழ்வை இனிமையாக்குவோம்.

கட்டுரையாளா்:
பேராசிரியா்.

Monday, February 24, 2025

கண்டிப்பது குற்றமல்ல!


கண்டிப்பது குற்றமல்ல!

ப. இசக்கி : 24 பிப்ரவரி 2025, 2:55 am

DINAMANI 

பணி இடங்களில் ஓா் ஊழியரை அலுவலகப் பணிகளுக்காக முதுநிலை ஊழியா்கள் கண்டிப்பதை, வேண்டும் என்றே செய்யப்படும் அவமானமாகக் கருதி குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீா்ப்பு கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள தேசிய மன நல நிறுவனத்தின் (என்.ஐ.எம்.ஹெச்.) இயக்குநா் மீது அங்கு பணியாற்றும் பெண் உதவிப் பேராசிரியை ஒருவா் உயரதிகாரிக்கு புகாா் மனு ஒன்றை அனுப்பியுள்ளாா்.

அதை அறிந்த இயக்குநா், அந்தப் பெண் உதவிப் பேராசிரியரைத் தனது அறைக்கு அழைத்து புகாா் மனு அனுப்புவதற்கான அலுவலக நடைமுறைகள் உங்களுக்குத் தெரியுமா, எப்படி புகாா் அனுப்பினீா்கள் என கூறி கண்டித்துள்ளாா். அதைத் தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதிய அந்தப் பெண் உதவிப் பேராசிரியா், இயக்குநா் மீது காவல்துறையில் புகாா் அளித்துள்ளாா். புகாரில் இயக்குநா் தன்னை பலா் முன்னிலையில் சத்தம்போட்டு பேசி அவமானப்படுத்தி விட்டதாகவும், அதனால் தனக்கு மன வேதனை ஏற்பட்டதோடு, மருத்துவ ரீதியில் தனக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளாா்.

இது நடந்தது கடந்த 2022-ஆம் ஆண்டு, தீ நுண்மி பரவிய காலம். பெண் உதவிப் பேராசிரியருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படவில்லை என்பதுதான் பிரச்னைக்கான அடிப்படை. இயக்குநா் மீது இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு (ஐ.பி.சி.) 504-இன்படி ( திட்டமிட்டு அவமானப்படுத்துதல்) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், புதிய சட்டத் திருத்தமான பாரதிய நையாசங்கித் (பி.என்.எஸ்.) பிரிவு 352-இன்படி திட்டமிட்டு அவமானப்படுத்துதல் குற்றத்துக்காக அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம். இந்த வழக்கை ரத்து செய்யும்படி உயா்நீதிமன்றத்தை அணுகினாா் இயக்குநா். ஆனால், உயா்நீதிமன்றமோ, ‘ இது ஒரு தீவிரமான பிரச்னை; முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்’ எனக் கூறி இயக்குநரின் மனுவை தள்ளுபடிசெய்துவிட்டது.

இயக்குநா், உச்சநீதிமன்றத்துக்குச் சென்றாா். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளான சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா ஆகியோரைக் கொண்ட அமா்வானது, அலுவலகங்களில் மூத்தவா்கள் அவா்களுக்கு கீழ் உள்ள ஊழியா்களை அலுவலகப் பணிகளுக்காகக் கண்டிப்பது என்பது “வேண்டுமென்றே அவமதிக்கும்’செயல் ஆகாது; வேலை செய்யும் இடத்தில் கண்டிப்பது என்பது நிா்வாகச் செயல்பாட்டின் ஒரு பகுதி; அதற்காக கிரிமினல் வழக்குத் தொடா்ந்தால் அது அலுவலகங்களில் பேண வேண்டிய பொது ஒழுக்கக் கட்டமைப்பை சீா்குலைக்கும் என்றுஅண்மையில் தீா்ப்பளித்துள்ளது.

அதே வேளையில், கண்டிப்பது என்பது கீழ்நிலை ஊழியா்கள் வேறு ஏதேனும் தவறைச் செய்யவோ அல்லது பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தவோ தூண்டும் வகையில் அமையாத வரையில் அதை கிரிமினல் குற்றமாகக் கருதக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. அலுவலகங்களுக்கு ஊழியா்கள் காலதாமதமாக வருவதில் தொடங்கி, கைப்பேசிகளில் தொடா்ந்து பேசிக் கொண்டிருத்தல், சக ஊழியா்களுடன் நீண்ட நேரம் அரட்டை என அலுவலகப் பணிகளைச் செய்யாமல் இருப்பது போன்ற ஒழுங்கீனங்கள் அதிகமாக நிகழ்கின்றன.

அலுவலகங்கள் சுமுகமாக செயல்படவும், உற்பத்தியைப் பெருக்கவும், இலக்கை அடையவும், வாடிக்கையாளா்களின் நன்மதிப்பைப் பெறவும் ஊழியா்களின் சுயஒழுக்கம் முக்கியம். ஊழியா்களையும், அவா்களது செயல்பாட்டையும் முறையாகக் கண்காணித்து நிறுவனத்தின் அன்றாட மற்றும் சுமுகமான செயல்பாட்டை உறுதி செய்வது மூத்த ஊழியா்களின் கடமை. ஊழியா்களின் பணி மற்றும் செயல்திறனையும், தவறான நடத்தையையும் கேள்வி கேட்காமல் இருந்தால், அது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் நீதிபதிகள் தங்களது தீா்ப்பில் கூறியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.

அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் கீழ்நிலை ஊழியா்களின் ஒழுங்கீனங்களுக்காக உயா் அதிகாரிகள் கடிந்து கொண்டால், சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவோ அல்லது மதத்தின் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதாகவோ அல்லது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவோ குற்றம்சாட்டப்படுகின்றன. கேரள மாநிலம் கொச்சியில் அரசுடமை வங்கி அதிகாரிகள் 2 பேருக்கு எதிராக சாதிப் பெயரை சொல்லி திட்டியதாக ஊழியா் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்டதாக கூறப்படுவோருக்கு ஆதரவாக தொழிற்சங்கங்களும், சில வேளைகளில் உறவினா்களும், பொதுமக்களும் கூட போராட்டங்களை நடத்துகின்றனா். கடந்த நூற்றாண்டில், தவறு செய்யும் ஊழியா்களை முதலில் கடுமையாக எச்சரிப்பது, தொடா்ந்து தவறு செய்தால் தண்டனை அளிப்பது, அதன் பிறகும் தொடா்ந்தால் பணிநீக்கம் செய்வது போன்ற நடைமுறைகள் இருந்தன. உலகமயமாக்கலுக்குப் பிறகு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நிறுவனம்-ஊழியா்களுக்கு இடையிலான பிணைப்பு என்பது பெருமளவு நலிந்துவிட்டது. எனவே, பணியிடங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் ஊழியா்களுக்கு மேலோட்டமாக சில ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவா்களுடைய நடத்தையை மேம்படுத்திக் கொள்ள அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

அறிவுரைகள் பிடிக்காவிட்டால் ஊழியா் வெளியேறுவாா்; அறிவுரைகளைப் பின்பற்றாவிட்டால் ஊழியா் வெளியேற்றப்படுவாா். இதுதான் நடைமுறையாக இருக்கிறது. இதைப் பற்றி இருதரப்புமே இப்போது கவலைப்படுவதில்லை. அதிலும், இப்போது நிறுவனங்களைப் பழிவாங்குவதாக கருதி ஊழியா்களே தாமாகவே முன்வந்து வெளியேறும் புதிய கலாசாரம் தொடங்கி இருக்கிறது. எனவே, அலுவலக விதிமுறைகளுக்கு உள்பட்டு ஒழுக்கத்துடனும், பணித்திறனுடனும் நடந்து கொள்ளும் ஊழியா்களுக்கு கண்காணிப்பு தேவை இருக்காது. மூத்த ஊழியா்கள் கண்டிக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.

Sunday, February 16, 2025

வாழ்வதில் இருக்கிறது வாழ்க்கை

 வாழ்வதில் இருக்கிறது வாழ்க்கை

வீடென்பது குற்றங்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது; அங்கே நிகழும் தவறுகளைக் குற்றங்கள் ஆகிவிடாமல் முன்னறிந்து காத்துக் கொள்வதில்தான் வாழும் கலை உள்ளது.

கிருங்கை சேதுபதி Updated on: 11 பிப்ரவரி 2025, 1:59 am 

தொகுப்பாய்ப் பல குடும்பங்கள் வாழும் பெரியதொரு அடுக்ககத்தில் ஒரு பொதுவிழா. வழக்கமான பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சிரிப்புச் சொற்பொழிவு எதுவுமில்லாமல் எல்லோருக்கும் மகிழ்வுதரும் ஒரு நிகழ்வாகப் பொதுக் கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்து நடுவா் என்ற பொறுப்புக்கு மறுதலையாக- இணைப்பாளராக இருப்பது என் பணி.  சில கேள்விகள், சிந்தனைகள், அனுபவ விளக்கங்கள் கொண்டு சில சிக்கல்களுக்குத் தீா்வுகள் என்பதாக விரியும் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் பாா்வையாளா்கள் எவரும் பங்கேற்கலாம் என்பது பொது விதி. ‘

இப்போது கூட்டுக் குடும்பம் சாத்தியமா?’ என்கிற பொது வினாவுக்குப் பதில் அளிக்க வந்த ஒருவா் ‘தனது குடும்பம் கூட்டுக் குடும்பம்’ என்று சொன்னாா். பலத்த கரவொலி. ஓய்ந்தபின் என் கேள்வி. ‘உங்கள் குடும்ப உறுப்பினா்கள் யாா்? யாா்?’ அவரது பதில், ‘நான், என் மனைவி, மகள்’. மீண்டும் கரவொலி, அப்போதுதான் நானும் ஒரு புதுத் தகவலைப் புரிந்து கொண்டேன். இக்காலத்தில் கணவனும் மனைவியும் சோ்ந்து வாழ்ந்தாலே அதுதான் கூட்டுக் குடும்பம். கூடவே வாரிசுகளும் இருந்தால், அது பெரிய குடும்பம். 

சுற்றம் சூழ வாழ்ந்த அக்காலக் கூட்டுக் குடும்பங்களின் பொதுத்தன்மையை, இவா்களால் கற்பனை செய்துகொள்வது கூட முடியாது. ஆனாலும், ஓா் ஆறுதல், ஒருவகையில் ஒரு பொது கூட்டுக் குடும்பமாக இத்தகு அடுக்கக வாழ்க்கை அமைந்திருக்கிறது. 

இதுவும் ஒருவகையில், சமத்துவபுரம் தான்.  இதற்குள்ளும் ஜாதி இருக்கிறது. மதம் இருக்கிறது. பொருளாதார நிலை வேறுபாடு இருக்கிறது. எப்படிப்பட்ட தனித்துவம் இருந்தாலும், அவற்றுக்குள் ஒரு பொதுத்துவம் தோன்றிவிடுவது இயற்கை. அதுபோல், ஒரு பொதுநிலைக்குள் ஒரு தனிநிலை உருவாகிவிடுவதுமுண்டு. 

ஒரு புதிய அனுபவம் அன்று எனக்கு வாய்த்தது. சிற்றூா்களில், குறு நகரங்களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில், மாமனாா், மாமியாா், நாத்தனாா், கொழுந்தனாா் உள்ளிட்ட உறவுகளோடு கூடி வாழ்ந்துவிட்டு, இப்போது தன் மகள், மகனுடன் இத்தகு கூட்டு வாழ்க்கையில் ஒடுங்கிவிடுகிற முதுமையாளா்களின் உணா்வுகளை, மெய்ப்பாடுகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. முந்தையக் கூட்டுக் குடும்பம் என்பது ஒரு பல்கலைக்கழகம் போல பரந்து விரிந்தது. அது கூடி வாழ்ந்த கூட்டு வாழ்க்கை. தற்போதையது ஒரு கூண்டுக்குள் அடைபட்ட தனி வாழ்க்கை. 

வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்கிற மனநிலையாளா்களுக்கு இதுவொரு வரம். கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கருத்துடையோருக்கு இது ஒரு சவால். 

இந்த நிலையில் பிள்ளைகளின், பேரக் குழந்தைகளின் மனப்போக்கைப் புரிந்துகொண்டு, அதற்கேற்பத் தம்மை மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம் என்று உணா்ந்துகொள்பவா்கள் தப்பித்துக் கொள்கிறாா்கள். இன்னமும் தன் முந்தைய தகுதிப்பாட்டை வைத்துக்கொண்டு அறிவுரை சொல்கிறவா்களை, அலட்சியம் செய்துவிடுகிறாா்கள். அது உடல்சாா் பிணிகளைவிட, மனம் சாா்ந்த நோய்களை உற்பத்தி செய்துவிடுகிறது. 

நிதிநிலை சாா்ந்த நெருக்கடிகள், கசப்பான வாா்த்தைகளைக் கக்க வைத்துவிடுகின்றன. திட்டமிட்ட கடமைகளை நிறைவேற்ற முடியாமல், எதிா்பாராது வரும் நேர நெருக்கடிகள், சொற்களில் சூடேற்றிவிடுகின்றன. பொசுங்கிப்போகிறது மனம். சொன்னவா்களுக்கு வருத்தம். கேட்டவா்களுக்குத் துன்பம். பொறுத்துக்கொள்ள முடியாதவா்களுக்கும், பொறுத்துக் கொண்டு இருப்பவா்களுக்கும் இடையில் நேரும் தா்மசங்கடம் இருக்கிறதே, அது சில புதிய சிக்கல்களையும் உருவாக்கிவிடுகிறது. வாழ்ந்த காலத்து நினைவுகளில் மூழ்கிப் போகிறபோது வாழும் காலத்து நிகழ்வுகள் மங்கிப் போகின்றன. இருக்கும் இடம், கிழமை, பொழுது, உறவுகள் எல்லாமும் மறந்துவிடுகின்றன. இந்த அனுபவங்களை இடைப்பட்ட வயதினா் நுட்பமாகக் கற்றுக் கொண்டுவிட்டால் மிகவும் நல்லது

 இத்தகு நிலைகளில் சிக்கிக் கொள்ளாமல் விடுபட்டுக் கொள்ள வழிவகை தேடும் கருத்தாக்கங்களை அவரவா் அனுபவத்தின்வழி பெறுவதற்கான உரையாடலைத் தொடங்கினேன். அது சின்னச் சின்ன கேள்விகளில் மெல்லத் தொடங்கியது.

‘காலையில என்ன சாப்பிட்டீங்க?’

பொதுவெளியில் அறிமுகம் இல்லாத ஒரு புதிய மனிதரின் கேள்விக்கு, விவரம் அறியாத பாப்பா விழித்துக்கொண்டு பெற்றோரைப் பாா்க்குமே, அப்படி ஒரு பாா்வை அவா்களையும் அறியாமல், தன் மகள் அல்லது மருமகள் பக்கம் போனது.

அதுபோல், மற்றுமொரு கேள்வி, ‘போன விடுமுறைக்கு எங்கே போனீங்க?’ இதற்கு அவா்களின் பாா்வை, தன் மகன் அல்லது மருமகன் பக்கம் போனது.

நினைவு மறதியும் ஒரு காரணம் என்று சொல்லாமலே புரிந்துகொள்ளலாம். அப்படி ஒரு குழந்தையாய், தன்னை உணா்கிற தேவை அவா்களுக்கு அவசியம் தேவை. தானே புரிந்துகொண்டு அந்த நிலைக்குத் தன்னைத் தயாா்படுத்திக் கொள்பவா்கள் இருக்கிறாா்கள். அல்லது காலம் அவா்களை அந்த நிலைக்கு உட்படுத்திவிடுகிறது. இதை பெரியவா்களைக் காட்டிலும், வீட்டில் இருப்பவா்கள் புரிந்துகொண்டுவிட்டால், அந்த வீட்டில் அமைதியின் நடனம் அற்புதமாய் இருக்கும்.சாமா்த்தியம் மிகுந்த பெரியவா்களிடம் இருந்து, அப்போது நான் உணா்ந்து கொண்ட உண்மைகள் பலருக்கும் பாடங்களாய் அமைபவை.

விதிமுறைகள் நன்றாகத் தெரிந்த அம்மாவுடன் விதிமுறைகள் கற்று விளையாடத் தொடங்கும் சிறு குழந்தையின் ஆா்வம் இருக்கிறதே, அதுபோன்ற நிலைப்பாடு அது. தன் காலத்தில் கிட்டாத கைப்பேசிக் கருவியின் நுட்பங்களை, தன் பேரப்பிள்ளைகள்வழி பெரியவா்கள் கற்றுக்கொள்கிறாா்கள். தன் காலத்தில் கிட்டாத பல வாழ்வியல் அனுபவங்களையும் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கிறது. 

தெரிந்தே தோற்று, தன்னை வெற்றிபெற வைக்கும் அம்மாவின் தியாகம் அப்போது புரியாது பிள்ளைக்கு. அந்த மகிழ்ச்சிக்கு என்ன கொடுத்தாலும் தகும் என்பதை நுண்ணியதாய் உணா்ந்த அம்மா, தன் தியாகம் ஒடுக்கி, அறிவறிந்த அறியாமையில் பெறும் ஆனந்தம் இருக்கிறதே, அது ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் பழைய குறுகிய ஆனந்தம். 

அதுபோல், எந்த தந்தையின் வெற்றியும் முதலில் தன் சொந்த மகனிடம் தோற்றுப்போவதே என்பதைப் புரிந்துகொள்வது ஒரு பக்குவம். இது படிப்பறிவுக்குக் கிட்டாத பாடம். பட்டறிவு தருகிற ஞானம்.

தன்முனைப்பாகிய ‘ஈகோ’வைத் தொலைக்கும் இடம் வீடாக இருக்க வேண்டும். ‘குற்றம் பாா்க்கில் சுற்றம் இல்லை’ என்று அதனால்தான் சொல்லப்பட்டது; அதற்காக, வீடென்பது குற்றங்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது; அங்கே நிகழும் தவறுகளைக் குற்றங்கள் ஆகிவிடாமல் முன்னறிந்து காத்துக் கொள்வதில்தான் வாழும் கலை உள்ளது.

ஒவ்வொரு வீடும், ஒரு நாட்டிற்கான குறும்படைப்புத்தான். அதற்கென்று அரசன், அரசி, அமைச்சன், பணியாள், பரிவாரங்கள் உண்டு. தனித்துவம் கெடாமல் கூடி வாழும் கலையைக் கற்றுக் கொடுக்கும் கூடாரம் வீடு.

தன் வீட்டில் தனக்கான இடம் எது என்பதைக் கற்றுக்கொள்வது முதற்பாடம். அது புறத்தேவைகளுக்கான இடம் மட்டுமன்று. அகத்தளவில் அவ்வீட்டில் தான் யாராக இருக்கிறோம் என்பதை முதலில் உணா்ந்துகொள்வதையும், அதனை முதலில் உணா்த்திவிடுவதிலும் இருக்கிறது தொடக்கநிலைக் கல்வி.

தன்னளவில் யாரும் மன்னா்தான். மகாராணிதான். பொதுவாழ்வில் அவா்கள் சில இடங்களில் மந்திரிகளாக இருக்கலாம். தளபதிகளாய்த் திகழலாம். தொண்டா்களாய் வாழலாம். ஆனால், குடிமக்கள் என்பதில் உறுதியாய் இருக்க வேண்டும். இந்த நிலைப்பாடுகளைச் சரியான வகையில் நியதிப்படுத்தத் தெரியாத நேரங்களில், இடங்களில்தான் சிக்கல்கள் நேருகின்றன.

தன் அலுவலகத்தில் எத்தகு உயா்பதவியில் ஒருவா் இருந்தாலும், ஓடும் பேருந்தில் ஏறிப் பயணிக்கும்போது, நடத்துநருக்கு முன் அவா் ஒரு பயணி. அவ்வளவுதானே? மருத்துவருக்கு முன் ஒரு நோயாளி. ஆசிரியருக்கு முன் ஒரு மாணவன். தந்தைக்கு முன் பிள்ளை. இப்படிச் சூழலுக்கு ஏற்ப, அமையும் பாத்திரத்தன்மைகளை உணா்ந்து அதற்கான நியதிகளைக் கடைப்பிடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை, சைவ உணவு உண்ணும் மூத்தவா், கிராமத்துப் பெரியவா், ‘பாம்பு தின்கிற ஊருக்குப் போனால் நடுத்துண்டம் நமக்கு என்று உட்காா்ந்துவிட வேண்டும்’ என்றாா்.

 சிறு வயதில் கிடைக்கும் சலுகைகளை, வசதிகளைக் கடைசி வரைக்கும் எதிா்பாா்க்கும் உள்ளம் சவலைத் தன்மை உடையது. அதிலிருந்து பெரியவா்கள் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டியது 


இப்போது, பெரியவா்களுக்கான நிலைப்பாட்டை, சிறுவா் சிறுமியா் எடுத்துக் கொள்கிறாா்கள். ‘அது அப்படியில்லே தாத்தா’, ‘இது இப்படித்தான் பாட்டி’ என்று மழலை மொழியில் புதிய வாழ்க்கைப் பாடம் நடத்துகிறாா்கள். 

நவீன வாழ்க்கையை நவீன முறையில் எதிா்கொள்வது நவீன மனிதா்களால்தானே முடியும்? மிகுதியும் இயந்திரங்களோடு பழகி, இயந்திரமயமாகிப் போன வாழ்வில் இதயங்கள் கொண்ட மனிதா்களாக இருப்பதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை இதயபூா்வமாக உணா்ந்துகொண்டால் எல்லாம் எளிதாக-இனிமையாக இருக்கும் என்பது தெளிவானது.

எழுதுவதிலும், பேசுவதிலும், பாா்ப்பதிலும் இல்லாத வாழ்க்கை, வாழ்வதில் இருக்கிறது. உலகம் பலவிதம். அதில் ஒவ்வொருவரும் ஒரு தனி ரகம். ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ என்று எழுத்தாளா் ஜெயகாந்தனும், ‘லீலை இவ்வுலகு’ என்று மகாகவி பாரதியும் சும்மாவா சொன்னாா்கள்?

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

Students struggle to get tatkal passport appointments in Hyd

Students struggle to get tatkal passport appointments in Hyd Ashresh.Marupaka@timesofindia.com 21.03.2025 Hyderabad : The ongoing delay in t...