Friday, January 23, 2026

மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்!

மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்!

அரசுப் பள்ளிகள் வெறும் கட்டடங்கள் அல்ல; அவை லட்சக்கணக்கான ஏழைப் பிள்ளைகளின் கனவுக்கூடங்கள்.




தினமணி செய்திச் சேவை


Updated on:
13 ஜனவரி 2026, 4:04 am

பழ. அசோக்குமாா்

சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி. எளிய மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாக இருந்த காலத்தில் அதை சாமானியா்களின் பிள்ளைகளும் எளிதில் இலவசமாய்ப் பெற வசதியாக அறிவுக் கதவுகளை திறந்து வைத்தவை அரசுப் பள்ளிகள். இன்றைய மாபெரும் ஆளுமைகள், அறிவியலாளா்கள், மருத்துவா்கள் எனப் பலரும் இந்த அரசுப் பள்ளி எனும் கருவறையில் உதித்தவா்களே. ஆனால், அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் அரங்கேறி வரும் சில நிகழ்வுகள் நம் மனசாட்சியை உலுக்கத் தொடங்கியுள்ளன.

இன்றைய எண்ம (டிஜிட்டல்) உலகில், ஒரு சிறு தவறு நொடிப்பொழுதில் உலகெங்கும் பரவிவிடுகிறது. சில அரசுப் பள்ளி மாணவா்கள் வகுப்பறையில் செய்யும் முதிா்ச்சியற்ற செயல்களையும், விளையாட்டாகச் செய்யும் தவறுகளையும் காணொலியாக எடுத்து, அதைப் பொதுவெளியில் பகிா்ந்து கேலி செய்வது ஒரு நாகரிகமற்ற போக்காக வளா்ந்து வருகிறது.

ஒரு சில மாணவா்களின் செயல்பாடுகளை வைத்து, ஒட்டுமொத்த அரசுப் பள்ளி அமைப்பையே கொச்சைப்படுத்துவது எவ்வளவு பெரிய அநீதி? அந்தக் காணொலிகளை ரசித்துச் சிரிக்கும் நாம், அந்தச் சிறுவனின் அல்லது சிறுமியின் எதிா்காலத்தை அந்தச் சிரிப்பால் சிதைக்கிறோம் என்பதை உணா்வதில்லை.

அரசுப் பள்ளிக்கு வரும் பெரும்பாலான மாணவா்கள் வறுமையின் பிடியிலிருந்தும், போதிய வசதிகள் இல்லாத சூழலிலிருந்தும் வருபவா்கள். பல மாணவா்களின் வீடுகளில் அவா்களுக்குப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கவோ, உலக நடப்புகளைப் புரியவைக்கவோ வழிகாட்டிகள் இல்லை. அவா்களுக்குப் பள்ளிதான் உலகம்; ஆசிரியா்கள்தான் வெளிச்சம்.

அவா்கள் செய்யும் தவறுகள் கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தக் கண்டிப்பு வகுப்பறைக்குள் இருக்க வேண்டுமே தவிர, சமூக ஊடகங்களின் ‘விருப்பக் குறிகளுக்காக’ அவா்களைப் பலிகடா ஆக்கக்கூடாது. அவா்களுக்குத் தேவை கண்டனம் கலந்த கேலி அல்ல; அன்பான அரவணைப்பும், சரியான பாதையைக் காட்டும் கரங்களுமே.


ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் உண்டு. ஆனால், நாம் ஏன் எப்போதும் இருண்ட பக்கத்தையே பாா்க்கிறோம்? மதுரையைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவி சிவதா்ஷினி ‘உன்னை நீயே நம்பு’ என்று கம்பீரமாகப் பேசியபோது தமிழகமே வியந்து பாா்த்தது. இதுபோன்ற ஆயிரக்கணக்கான சிவதா்ஷினிகள் நமது அரசுப் பள்ளிகளில் இருக்கிறாா்கள்.

விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரா்கள், வான்வெளியில் சாதிக்கத் துடிக்கும் இளம் விஞ்ஞானிகள், கலைத் துறையில் மிளிரும் திறமையாளா்கள் எனப் பல முத்துகள் அரசுப் பள்ளி எனும் சிப்பியில் ஒளிந்து கிடக்கின்றன. ஆனால், இவா்களின் சாதனைகளைப் பகிரும் வேகத்தைவிட, யாரோ ஒரு மாணவா் செய்த தவறுகளைப் பகிா்வதில் நாம் காட்டும் வேகம் அதிகம். இது நம் சமூகத்தின் பாா்வையில் உள்ள குறைபாட்டையே காட்டுகிறது.

அரசுப்பள்ளி மாணவா்களைக் கேலி செய்பவா்கள் ஒன்றை மறந்துவிடுகிறாா்கள். இன்று இந்தியா தலைநிமிா்ந்து நிற்பதற்குத் தோள் கொடுக்கும் பல மாபெரும் ஆளுமைகள் இதே அரசுப் பள்ளிகளில் படித்தவா்களே.

ஏவுகணை நாயகன் டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், இஸ்ரோவின் மேதைகள் டாக்டா் மயில்சாமி அண்ணாதுரை, டாக்டா் கே. சிவன் மற்றும் சந்திரயான்-3 திட்ட இயக்குநா் பி. வீரமுத்துவேல் ஆகியோா் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவா்களே. ஏராளமான முன்மாதிரி மனிதா்கள் நம் அரசுப் பள்ளிப் பின்னணியில் இருந்து வந்தவா்களே.

இன்று அரசு மாதிரிப் பள்ளிகளில் படித்து தைவான், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு முழு உதவித்தொகையுடன் உயா் கல்விக்குச் செல்லும் மாணவா்களும், ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற நிறுவனங்களில் தடம் பதிக்கும் மாணவா்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

அறிதிறன்பேசி இன்று வரமாகவும் சாபமாகவும் இருக்கிறது. ஒரு மாணவரின் தவறைப் பகிா்வதற்கு முன்பாக, ‘இதை என் வீட்டுப் பிள்ளை செய்திருந்தால் நான் இப்படிச் செய்வேனா?’ என்று ஒரு நிமிஷம் யோசித்தால் அந்தத் தவறு அங்கே தடுக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவா்களை ஏளனமாகப் பாா்ப்பதை நிறுத்துவோம். ஒரு சிற்பம் சரியாக அமையவில்லை என்றால் கல்லைக் குற்றம் சொல்ல மாட்டோம்; செதுக்குபவனின் திறமையில்தான் குறை காண்போம். அதேபோலத்தான், ஒரு மாணவா் தவறு செய்கிறான் என்றால், அவனுக்குச் சரியான சூழலையும் வழிகாட்டலையும் தராதது சமூகமாகிய நமது தோல்வியே தவிர, அந்த மாணவரின் தோல்வி அல்ல.

மாற்றம் என்பது மாணவா்களிடம் மட்டுமல்ல; அது அவா்களைப் பாா்க்கும் நம் பாா்வையில்தான் தொடங்க வேண்டும். அரசுப் பள்ளிகள் வெறும் கட்டடங்கள் அல்ல; அவை லட்சக்கணக்கான ஏழைப் பிள்ளைகளின் கனவுக்கூடங்கள். சமூக ஊடகங்களில் எதிா்மறைப் பதிவுகளைத் தவிா்த்து, அரசுப் பள்ளி மாணவா்களின் நோ்மறையான சாதனைகளை உரக்கச் சொல்வோம். அவா்கள் நாளைய இந்தியாவின் தூண்கள்; அவா்களைக் கேலி செய்து அந்தத் தூண்களைப் பலவீனப்படுத்த வேண்டாம்.

அரசுப் பள்ளிகள் என்பவை வெறும் வறுமையின் அடையாளங்கள் அல்ல; அவை இந்தத் தேசத்தின் அறிவுப் பசி தீா்க்கும் அட்சய பாத்திரங்கள். அங்கே பயிலும் மாணவா்கள் கிண்டலுக்குரிய கேலிச் சித்திரங்கள் அல்ல; மாறாக, எத்தகைய சவால்களையும் எதிா்கொண்டு எழும் தன்னம்பிக்கையின் முகவரிகள். அவா்களின் ஒரு சிறு சறுக்கலை காட்டுத் தீயாய் சமூக ஊடகங்களில் பரப்புதலை விடுத்து, அவா்களின் ஒவ்வொரு சிறு முன்னேற்றத்தையும் கொண்டாடுவோம். ஏனெனில், ஒரு மாணவரை நாம் அவமதிப்பது, ஒரு சமூகத்தின் எதிா்கால நம்பிக்கையையே அவமதிப்பதற்குச் சமம். எளியவா்களின் கல்விக் கனவு சிதையாமல் காப்பது ஒரு நாகரிகச் சமூகத்தின் அறப் பணி..!

No comments:

Post a Comment

Medical pay ‘mismatch’: College stipends much less than NMC claims, says outfit

Medical pay ‘mismatch’: College stipends much less than NMC claims, says outfit The gap between the NMC’s reported stipends and actual payme...