Monday, March 2, 2015

பொதுத் தேர்வு: பயம், பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி?

Return to frontpage

தேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவிகளைவிட மாணவர்களே அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். வகுப்பறையில் ஆசிரியர் சொல்வதை ஊன்றிக் கவனிப்பதில் மாணவிகளைவிட மாணவர்கள் சற்றுப் பின்தங்கி இருக்கிறார்கள். வகுப்பறையில் கவனிப்பதில் தொடங்கும் மாணவர்களின் இந்தச் சரிவு, தேர்வை எதிர்கொள்வதிலும் தொடர்கிறது.

குடும்பச் சூழ்நிலை, பெற்றோரின் கவனிப்பு, நட்பு வட்டம், பொழுதுபோக்கு அம்சங்கள்… இப்படிப் பல காரணங்களும் மாணவர்களின் படிப்பில் ஆதிக்கம் செலுத்துபவையாக இருக்கின்றன.

ஆண்டு முழுவதும் படிக்க வேண்டிய பாடங்களை, தேர்வுக்கு முன்னதாக விடும் விடுமுறை நாட்களிலேயே படித்துவிடலாம் என்னும் அதீத நம்பிக்கை நிறைய மாணவர்களிடையே இருக்கும். தேர்வு நாள் நெருங்க நெருங்க நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து பதற்றமும் மனச் சோர்வுமே அவர்களிடம் நிறைந்திருக்கும்.

ஆலோசனை

தேர்வுக்குத் திட்டமிடுதல் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு உடல் ஆரோக்கியமும் முக்கியம் என்கிறார் சென்னை, சஞ்ஜீவனம் மருத்துவ மையத்தின் மருத்துவர் பி. ராஜேஷ். தேர்வு நேரத்தில் ஆண் மாணவர்களிடம் வெளிப்படும் மன அழுத்தத்தையும் அதைத் தீர்க்கும் வழிகளையும் பற்றி அவருடைய ஆலோசனைகள்:

தேர்வு நெருங்கும்போது, மாணவர்களுக்கு ஏற்படும் பதற்றத்தால் பல்வேறு விளைவுகளை அவர்கள் சந்திக்கிறார்கள். படித்ததை மறந்துவிடுதல், மனச் சோர்வு, மலச்சிக்கல், கண்களில் கருவளையம் உண்டாதல், உறக்கத்தில் சக்தி வீணாதல் போன்ற உடல் உபாதைகளும் அவர்களுக்கு ஏற்படுகின்றன.

படிப்பதை மறந்துவிடுதல்

"எம்பிள்ளையும் ராவும் பகலுமா கண் முழிச்சு கஷ்டப்பட்டுத்தான் படிக்கிறான். ஆனா கொஞ்ச நேரத்துல படிச்சது பூராவும் மறந்துடுதும்மான்னு சொல்றான்"

- தன் மகனைப் பற்றி இப்படிக் குறைபட்டுக்கொள்ளும் நிறைய பெற்றோரைச் சந்தித்திருக்கிறோம். இப்படிப்பட்ட மாணவர்களுக்குச் சிந்தனையை ஒருமுகப்படுத்திப் படிப்பதில் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். இப்படிப்பட்ட மாணவர்கள் சில வகை யோகாசனங்களைச் செய்வதன் மூலம் அவர்களுடைய சிந்தனை ஒருமுகப்படும். நொறுக்கு தீனி, குளிர்பானங்கள் போன்றவை கூர்மையான சிந்தனையை மழுங்கடிக்கும். பசு நெய், மோர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மனச்சோர்வு

தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு உண்டாகும் மனச்சோர்வைப் போக்கச் சில வகை ஆசனப் பயிற்சிகளையும் மூச்சுப் பயிற்சிகளையும் அளிக்கலாம். காலையில் சூரிய நமஸ்காரத்துடன் செய்யப்படும் பிராணாயாமப் பயிற்சி களின் மூலம் ஒருவர் நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட முடியும்.

மலச்சிக்கல்

மனப் பதற்றத்தின் விளைவாகச் சில மாணவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். இதனால் ஊன்றிப் படிக்க முடியாத நிலை ஏற்படும். இதைத் தவிர்க்க முறையான உணவுப் பழக்கம் அவசியம். காரம், புளிப்பு அதிகம் சேர்க்காத உணவு வகைகளை உண்ண வேண்டும். சில வகை லேகியங்களை உண்பதன் மூலமும் இந்தப் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

கருவளையம்

இரவு நீண்ட நேரம் கண் விழித்துப் படிப்பதால் சில மாணவர்களுக்குக் கண்களுக்கு வெளியே கருவளையம் விழும். இதற்கு ஆயுர்வேதச் சிகிச்சை உண்டு. அதேபோலச் சரியான தூக்கம் இல்லாமல் கண்ணின் உள்ளேயும் சிவந்து காணப்படும். இதற்குக் கண் பூச்சுகள் உள்ளன. தேர்வு நேரத்தில் இரவில் சரியாக உறக்கம் இல்லாவிட்டால், மறுநாள் தேர்வு எழுதுவது பெரும் சோதனையாக மாறிவிடும். அதனால் தேர்வு நேரத்தில் குறைந்தது 6 முதல் 7 மணி நேரமாவது தூங்கவேண்டியது அவசியம்.

தவிர்க்க வேண்டிய உணவு

பீட்ஸா, பர்கர், பரோட்டா போன்ற உணவு வகைகளை அவசியம் தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள் அருந்தக் கூடாது. இறைச்சி, மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். நொறுக்குத்தீனிகளை அறவே தவிர்க்க வேண்டும். காலையிலேயே அதிக அளவு உணவை உண்ணக்கூடாது. அதேநேரம் உணவைத் தவிர்க்கவும் கூடாது.

உணவு முறை

எளிதில் ஜீரணமாகக்கூடிய கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள தண்டு, பழ வகைகளை உண்ண வேண்டும். கேரட்டில் உள்ள வைட்டமின் கண்களுக்கு நல்லது. அதனால் தினமும் ஒரு கேரட் சாப்பிடலாம். பசு நெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

எளிமையான பயிற்சிகள்

மூச்சுப் பயிற்சி, எண்ணெய் தேய்த்துக் குளியல், சில வகை எளிமையான ஆசனங்களின் மூலம் மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கலாம். பத்மாசனம், மயூராசனம், தனுராசனம் போன்ற ஆசனங்களைச் செய்வதன்மூலம் மாணவர்களின் செயல்படும் திறன் அதிகரிக்கும்.

ஆயுர்வேதச் சிகிச்சைகள்

ஷீரபலா தைலம், பிரம்மி தைலம் போன்றவற்றைத் தலைக்குத் தேய்ப்பதன் மூலம் உடல் சூடு குறையும். உடலின் சக்தி மையங்கள் நன்றாக இயங்கும். சக்தி விரயமாகாது. முனைப்போடு படிப்பதற்கு உதவும். மூக்கில் மூலிகை எண்ணெய்விட்டுச் செய்யும் நஸ்யம் போன்ற சிகிச்சைகளைச் செய்தால், உடலில் தேங்கியிருக்கும் கபம் முழுமையாக வெளியேறும்.

மனித உடலில் தேவையான நிறைகள் இல்லாதது ஒரு குறை என்றால், தேவையற்ற குறைகள் நிறைந்திருப்பதும் தவறானதுதான். அதனால் அதுபோன்ற குறைகளைச் சிரோதாரா போன்ற சிகிச்சைகளின் மூலம் சரி செய்யலாம். மனமும் உடலும் ஒரே புள்ளியில் இணையும்போதுதான், ஒரு செயல் முழுமை அடையும். இதற்கு ஆயுர்வேதத்தில் பல சிகிச்சைகள் உள்ளன. மனமும் உடலும் ஒரே நேர்க்கோட்டில் இயங்கினால் தேர்வில் மட்டுமல்ல வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்கள் வெல்லலாம்.

ரூ.4.4 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறுவது எப்படி?

வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஆனாலும் ரூ.4.4 லட்சம் வரி விலக்கு பெறமுடியும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி 'சலுகை' அறிவித்தது பெரும்பாலான மாத சம்பளக்காரர்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கும்.

அதற்கான விளக்கம் இதோ:

இந்த பட்ஜெட்டில் பிரிவு '80 டி' மூலமாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகளை திரும்பப் பெறும் தொகை ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை மூத்த குடிமக்களுக்கு ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க முடியாது என்பதால், அவர்கள் செய்யும் மருத்துவ செலவுகளை வரி செலுத்தும் வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ள முடியும். இந்த தொகை 30,000 ரூபாய்.

மூன்றாவதாக, பென்ஷன் திட்டங்களில் செய்யும் முதலீடுகளில் 50,000 ரூபாய் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, மாத சம்பளக்காரர்களுக்கு போக்குவரத்து படி விலக்கு தொகை மாதத்துக்கு 1,600 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தற்போது இந்தத் தொகை மாதத்துக்கு 800 ரூபாயாக இருக்கிறது.

இந்த பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட சலுகைகள் இவ்வளவுதான். ஏற்கெனவே இருக்கும் சலுகைகளை வைத்து 4.4 லட்ச ரூபாய்க்கு விலக்கு என்பதை அருண் ஜேட்லி அறிவித்திருக்கிறார்.

எப்படி 4.4 லட்ச ரூபாய்?

* 80 சி பிரிவு முதலீடு மூலமாக கிடைக்கும் வரிச் சலுகை ரூ. 1,50,000 (காப்பீடு, மியூச்சுவல் பண்ட், பிஎப் உள்ளிட்ட முதலீடுகள்)

* 80 சிசிடி பிரிவு மூலமாக கிடைக்கும் வரிச்சலுகை ரூ.50,000 (பென்ஷன் திட்டத்தில் முதலீடு)

* வீட்டுக்கடன் வட்டி - ரூ.2,00,000

* ஆயுள் காப்பீட்டு பிரீமியம் தொகை - ரூ.25,000

* போக்குவரத்து படி மூலம் கிடைக்கும் சலுகை - ரூ.19,200

மொத்தச் சலுகை ஆண்டுக்கு - ரூ.4,44,200

Saturday, February 28, 2015

கணக்கு வாத்தியார் பளார்... செவிடான மாணவன்... ஒரு தாயின் சோகம்!


மாணவர்களை அடிக்கக் கூடாது என்று நீதிமன்றம், கல்வித்துறை, அரசு, சமூக ஆர்வலர்கள் என பலமுறை சொல்லியும் இன்னமும் சில ஆசிரியர்கள் திருந்தவில்லை. அடிக்காமல் எப்படி மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க முடியும் என்பது ஒரு தரப்பு ஆசிரியர்களின் வாதமாக உள்ளது.

திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார் அபி ஆண்டனி. இவரை அந்தப்பள்ளியின் பத்தாம் வகுப்பு கணக்கு ஆசிரியர் சுரேஷ் அடித்ததில் மாணவனின் செவிப்பறை கிழிந்துள்ளது. காவல்துறையில் புகார் கொடுத்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது மாணவன் தரப்பு வாதம்.

சிகிச்சை பெற்று வரும் மாணவன் அபி ஆண்டனி கூறுகையில், "நான், இந்தப்பள்ளியில் 7ஆம் வகுப்பு முதல் படித்து வருகிறேன். கடந்த 19ஆம் தேதி நானும், என்னுடன் படிக்கும் மாணவர்கள் ஹாலில் உட்காந்து படித்துக் கொண்டு இருந்தோம். அப்போது அவ்வழியாக பத்தாம் வகுப்பு கணக்கு சார் சுரேஷ் சென்றார். அவருக்கு இரும்பு ஸ்கேல் சப்தம் பிடிக்காது. அதை தெரிந்த ஒரு மாணவன், இரும்பு ஸ்கேலை தூக்கி தரையில் போட்டான். அந்த ஸ்கேல் என்னுடைய கால் பக்கம் வந்து விழுந்தது. இந்த சப்தம் கேட்டு திரும்பிப்பார்த்த சுரேஷ் சார், என்னை நோக்கி வந்தார். வந்த வேகத்தில் செவிட்டில் ஓங்கி ஒரு அறைவிட்டார். இதை எதிர்பார்க்காத நான் நிலைகுலைந்து சுவரில் மோதினேன். அதன்பிறகு பிரின்ஸ்பால் ரூமிற்கு என்னுடைய சர்ட்டைப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார். அங்கு வைத்து இடது காதுப்பக்கத்தில் மீண்டும் ஒரு அறை விட்டார். அதன்பிறகு எனக்கு இடதுப்பக்கத்தில் யார் பேசினாலும் கேட்கவில்லை. சகமாணவர்கள் முன்னிலையில் தவறே செய்யாத என்னை சுரேஷ் சார் அடித்ததில் எனக்கு அவமானமாகி விட்டது" என்றார்.

அபி ஆண்டனியின் அம்மா ஜெஸிஜானிடம் பேசினோம். "சம்பவத்தன்று ஸ்கூலிருந்து அபி ஆண்டனி வர லேட் ஆனது. அவனை அழைத்துக் கொண்டு சில மாணவர்கள் வீட்டிற்கு வந்தனர். ஆண்டி 'இன்னைக்கு மதியம் சுரேஷ் சார் அடிச்சதிலிருந்து அவன் ஒரு மாதிரியா இருக்கான். வீட்டிற்கு வராமல் ஸ்கூலுக்கு வெளியே நின்னுட்டு இருந்தான். அவன் எந்த தப்பும் செய்யல' என்று கூறினார்கள். இதன்பிறகு அவனை எல்லோரும் சேர்ந்து சமாதானப்படுத்தினோம். நைட்ல வலி தாங்க முடியாமல் அழுதான். இதனால் அருகில் உள்ள தனியார் டாக்டர் கிட்ட காண்பித்தோம். சம்பவத்தை கேட்ட டாக்டர், அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறிவிட்டார். அடுத்தநாள் வழக்கம் போல ஸ்கூலுக்கு போனான். ஆனால் இடதுப்பக்கம் காது கேட்கவில்லை என்று கூறினான். சென்னை அரசு மருத்துவமனை இ.என்.டி. டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போனேன். அவனை பரிசோதித்த டாக்டர், செவிப்பறையில் உள்ள சவ்வு கிழிந்து விட்டது. இனி அது வளர்ந்தாதான் காது கேட்கும். இல்லன்னா ஆபரேசன்தான் பண்ணனும் என்று சொன்னார்கள். ஸ்கூலுக்குப் படிக்க அனுப்பினா இப்படியா சார் அடிப்பது. படிக்கலன்னு அடிச்சா கூட பரவாயில்லை. சம்பந்தமே இல்லாத ஒரு பத்தாம் கிளாஸ் வாத்தியாரு, பிளஸ் ஒன் பையன அடிச்சிருக்காரு.

இதுதொடர்பா ஸ்கூல்ல பிரின்பாஸ், கரன்ஸ்பான்டன்ட் கிட்ட சொன்னா, உங்க பையன் பிரச்னைய நீங்க தான் பாத்துக்கணும். இதையெல்லாம் வெளியில அந்த வார்த்தியார்கிட்ட பேசிகிடுங்க. எங்களுக்கு ஒன்னும் தெரியாது' என்கிறார்கள். அவர்களை நம்பி தான் ஒவ்வொரு பெற்றோர்களும் பிள்ளைகள அனுப்புறாங்க. அவர்கள் இப்படி பொறுப்பில்லாமல் பதில் சொன்னா எப்படி? 'போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தா பையன் லைப் ஸ்பாயிலாகிடும். கம்பளைன்ட்டை வாபஸ் வாங்கிடுங்க!' என்று மறைமுகமாக சொல்றாங்க. இதற்கிடையில அந்த வாத்தியார் சுரேஷ், இன்னும் சிலரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து, 'மன்னிச்சிடுங்க..!' ன்னு சொன்னாரு. ஒன்னுமே செய்யாத பையனை அடிச்சிட்டு மன்னிச்சிடுங்கன்னு சொன்னா போதுமா? ஸ்கூல்ல, போலீஸ் நிலையத்தில எல்லோரும் வாத்தியாருக்கு சப்போர்ட் பண்ணாறங்க. இந்த விசயத்தில நீதி கிடைக்கும் வரை போராடுவேன்" என்றார்.

திருத்தணி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை கூறுகையில், "சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு புகார் கொடுத்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடமும் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

பள்ளி தரப்பில் பேச முயன்றோம். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்களது கருத்தையும் வெளியிட தயாராக இருக்கிறோம்.

- எஸ்.மகேஷ்

ஜிமெயில், யாஹூ மெயிலுக்கு தடை: மத்திய அரசு அதிரடி!

Vikatan.com



புதுடெல்லி: மத்திய அரசு அலுவலகங்களில் கூகுளின் ஜிமெயில் மற்றும் யாஹூ மெயில் வசதியை பயன்படுத்த தடைவிதிக்கப் பட்டுள்ளது.

தடையை மீறி பயன்படுத்தினால் பயன்பாட்டு தகவல்களை ரெக்கவர் செய்து ஈ-மெயில்களை அளிக்கவும் செய்ய மத்திய அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.

கடந்த 18 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.

அதாவது, இந்திய அரசுக்கான ஈ-மெயில் பாலிசியும், தகவல் தொழில்நுட்ப வசதியை இந்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் விதிமுறைகளும் வெளியிடப்பட்டன.


அதில் கூகுள், யாஹூ-வை பயன்படுத்தக்கூடாது என்றும், அரசு அலுவலங்களில் அதிகாரபூர்வ பணிகளுக்கு இந்திய அரசு பரிந்துரைத்துள்ள NIC மின்னஞ்சல் சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் மாநில அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். வெளிநாட்டு சர்வர்களான கூகுள், யாஹூவை பயன்படுத்துவதால் அமெரிக்க உளவு நிறுவனங்கள் ரகசிய தகவல்களை திருடக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Lawyers can't be punished for their opinion, says HC

Feb 28 2015 : The Times of India (Chennai)
Lawyers can't be punished for their opinion, says HC
Chennai
TIMES NEWS NETWORK


Legal opinion given by lawyers are advisory in nature, and hence a lawyer cannot be implicated in a case for the opinion, unless he has a role in the offence, the Madras high court has said, coming to the rescue of a lawyer cited as co-accused in a property case.

Justice P Devadas, granting anticipatory bail to Mohamed Anees on Friday , said: “A legal professional cannot be implicated for his honest and bona fide discharge of professional duty . But there is a rider. If he has participated in the commission of an offence, such as conspiracy , common intention and abetment, then he will lose the status of a lawyer, and will have another status ­ of accused. This principle applies to panel advocates, bank lawyers, chamber lawyers and court lawyers.“

The matter relates to a complaint filed by Ramasamy with an anti-land grabbing cell in Coimbatore, alleging that Anees had committed fraud and impersonation while dealing with property documents.

R Sankarasubbu, counsel for Anees, however, pointed out that the advocate had merely did documentation work. He examined the documents and discharged his professional duty. He could not be implicated in the case as an accused, Sankarasubbu said.

Concurring with the submissions, Justice Devadas said: “ Lawyers are acting as legal advisors. Their opinion is not binding, as it is advisory in nature. The client may accept it, may not accept it or he may go for further opinion to another lawyer.” The judge said, “there is no convincing incriminating material that he had active participation in the commission of the crime with requisite mens rea (criminal intent) along with the other accused persons.”

Couple looted in train of items worth Rs 15 lakh

Agra: A couple travelling on a Tamil Nadu bound train, on the Farah-Keetham route, were looted of valuables worth Rs 15 lakh at knife point by four masked assailants near the Mathura junction on Friday.

The incident took place in a first AC coach of the Tamil Nadu express, which had started from New Delhi.

According to the government railway police, Raj Kumar Garg (57) and his wife Saroj Garg (55) received several blows on their faces and heads while resisting the assailants.

The complaint lodged with the GRP said, "At around 1 am, four muscled men suddenly barged into our cabin and asked for our jewellery and cash. When we resisted, they attacked us with the butt of knife on our head and face, which led to profuse bleeding."

At the time of the incident, two armed railway protection force (RPF) personnel were on patrol in the moving train, but no security guard was present in the AC coach. Even the coach attendant was found missing during the incident which lasted for around 10 mins. After the incident, the assailants pull the chain of the train and ran into the surrounding jungle.

The victims were rushed to SN Medical College when the train reached Agra cantt station at around 2 am. The couple received several stitches. They later left for New Delhi in a bus.

According to sources in RPF, the assailants were probably tracking the couple ever since they boarded the train in New Delhi, as they quickly executed the act and did not leave any clues behind. They didn't attack two other girls and an old couple present in the same cabin.

"It might be possible that the coach attendant is also involved in the matter as he was missing at the time of the incident. He did not even inform the control room; it was the passengers who told RPF personnel about the incident," said the RPF personnel on the condition of anonymity.

Speaking on the incident, Sunil Sharma, divisional railway manager of Agra division,1 said, "We have set up a panel to enquire about the incident as the coach attendant did not respond in time. A security review would be done and the number of security personnel will also be increased in the trains, to provide more security to travelers."

In the last one year, four incidents of criminal activities in trains have been reported on the Farah Keetham route, including the case of a railway board official, Rakesh Srivastav, who along with his wife was looted of valuables.

SRI RAMACHANDRA UNIVERSITY 21ST CONVOCATION


கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...