Sunday, March 8, 2015

தினங்களை கொண்டாடினால் போதுமா?



நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு பெண் சுதந்திரமாக நடமாட முடியும் என்றால் அன்றுதான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம்’ என்று அறுபது வருடங்களுக்கு முன்னால் சொல்லிவிட்டுச் சென்றார் தேசத்தந்தை மகாத்மா காந்தி. இன்று வரை அவரின் கனவு நிறைவேறிய பாடில்லை. நிறைவேறாத தந்தையின் கனவை நிறைவேற்ற வந்ததாலோ என்னவோ அவரின் மகளாக அதாவது ‘இந்தியாவின் மகள்’ ஆகிப்போனாள் நிர்பயா. 'நிர்பயா ' என்றால் தைரியமானவள் என்று பொருள்.

சமீபத்தில் பிபிசி-யின் ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படம் வெளியானது. அது ஆவணப்படம் என்பதையும் தாண்டி குற்றவாளிகளின் ‘ஆணவப்’ படமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. காரணம் ஒரு பெண்ணை ஆறு பேர் சேர்ந்து வன்புணர்வு செய்து கொலை செய்துவிட்ட குற்ற உணர்ச்சி அவர்களிடத்தில் துளியும் இல்லை. மாறாக குற்றவாளிகளில் ஒருவன் கலாச்சாரம் பற்றி பாடம் எடுக்கிறான்..பெண்களின் நடத்தை, ஒழுக்கம் எனப் பேசி தன் தவறை நியாயப்படுத்துகிறான். அந்த பெண்ணுக்கு அந்த வேளையில் ஆண் நண்பருடன் என்ன வேலை? எனக் கேட்கின்றான். உண்மையில் இந்தக் காட்டுமிராண்டியின் பேச்சு, நம் நாட்டின் பெண்கள் குறித்த நம் மதிப்பீடு என்ன? என்பதை உலகிற்கு உணர்த்தி இருக்கும்.

உலகிலேயே இங்கு மட்டும்தான் பெண்ணானவள் திருமணம் முடித்து புகுந்த வீட்டிற்குள் குடி ஏற அட்வான்ஸ் (வரதட்சணை) கொடுக்க வேண்டும். கணவனின் தேவை, குடும்பத்தின் தேவை, பிள்ளைகளின் தேவை என எல்லாவற்றிற்கும் தன்னையே அர்ப்பணிக்க வேண்டும். அதுபோக சில சமயங்களில் வேலைக்குச் சென்று குடும்பத்தையும் காக்க வேண்டும். பெண் சிசுக் கொலை, ஆசிட் வீச்சு முதல் கௌரவக் கொலைகள் வரை அவள் உடலில் இருக்கும் ஆன்மாவை புரிந்து கொள்ள நாதியில்லை இந்த நாட்டில். ஆனால் அவள் உடல் என்ன மாதிரியான உடை அணிந்து இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி எக்கச்சக்க காரணங்களை அடுக்க ஆட்கள் நிறையவே உண்டு.

20 நிடமிடங்களுக்கு ஒரு பெண் இந்தியாவில் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறாள் என்கிறது புள்ளி விபரம். இரவு 9 மணிக்கு ஆண் நண்பருடன் இந்தியாவின் தலைநகரில், நெரிசல் மிகுந்த டெல்லியில் செல்லும் ஒரு பெண்ணுக்கே இந்த நிலைமை என்றால், குக்கிராமங்களில் இருக்கும் பெண்களின் நிலைமை என்ன? இதற்கு காரணம் என்ன? உண்மையில் இங்கு நிலவும் பாலியல் வறட்சியும்,பாலியல் குறித்த விழிப்புணர்வின்மையும்தான் காரணமே தவிர, பெண்களின் உடையோ, கலாச்சாரமோ அல்ல.

பெண்கள் நலன் குறித்த அதீத விழிப்புணர்வு நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். பெண்களை போகப் பொருளாக நினைக்கும் நிலை மாறவேண்டும். அவர்கள் பாதுகாப்பிற்கென பிரத்யேக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அவை எந்தவித சமாதானத்திற்கும் இடமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும். கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனைக்கு பதிலாக குற்றவாளியின் வாழ்நாளின் கடைசி புணர்ச்சியாக அது இருக்கும் வகையில் ‘என்ன?’ செய்ய வேண்டுமோ ‘அதை’ செய்து முடித்து ஆயுள் தண்டனையுடன் தனிமை சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

நிர்பயாவின் மீதான வன்புணர்ச்சிக்குப் பின் இரும்பிக் கம்பியால் தாக்கப்பட்டது அவள் உடலாக இருக்கலாம்...ஆனால் நிச்சயம் காந்தியின் கல்லறையில் விரிசல் ஏற்பட்டிருக்கும்.

மார்ச் 8 ம் நாள் உலகம் முழுவதும் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது..தினங்களை கொண்டாடுவதை விட மகளிரை கொண்டாடுவோம் என இந்த மகளிர் தினத்தில் சபதமேற்போம்.

-மஹபூப்ஜான் ஹுசைன் (காரிமங்கலம்)

.

நான் ஒரு பெண்! - சிந்திக்க சில நிமிடங்கள்...



நான்... நான் ஒரு பெண்; நான் ஒரு மகள்; நான் ஒரு தாய்; நான் ஒரு தங்கை; நான் ஒரு மனைவி; நண்பர்களுக்கு நான் ஒரு தோழி; வேலை செய்யும் இடத்தில் நான் மேலதிகாரி. 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல் இன்று என் வாழ்க்கை இல்லை. பொருளாதாரத்தில் நான் தனித்து நிற்கிறேன். விரும்பிய உடைகளை அணிகிறேன். ஆனால், எங்கேனும் ஒப்பனைகள் இன்றி நான், நானாக இருக்க முடிகிறதா?

நண்பர்களே... சில நிமிடங்கள் நான் பேசுவதைக் கேட்கிறீர்களா? சில நிமிடங்கள் போதும்... கொஞ்ச நேரத்துக்கு உங்கள் காதுகளையும் மனதையும் திறந்து அமைதியாகக் கேளுங்கள் போதும்!

'என்னது பொம்பளைப் பிள்ளையா?’ என்ற அலறல்கள் வீடுகளில் இன்று கேட்பது இல்லை. 'ஒரே ஒரு குழந்தை, அதுவும் பெண் குழந்தைதான் வேணும்’ என்று ஆசைப்பட்டு பலர் பெற்றுக் கொள்கிறார்கள். எப்போதும் பெண்ணின் அன்பில் திளைத்துக்கொண்டே இருக்க விரும்பும் ஆண் மனதுக்கு... மகள் இன்னுமொரு தாய். ஒரு தந்தைக்கு ஒரு மகளிடம் ஆயிரம் எதிர்பார்ப்புகள் உண்டு. ஒரு மகளாக நாங்கள் என்ன எதிர்பார்ப்போம் என உங்களுக்குத் தெரியுமா?

எங்களுக்குத் தேவை உங்கள் அதிகாரம் அல்ல... அன்பு; அரவணைப்பு; தோழமை. தந்தையைத் தோழனாக அமையப் பெற்ற எந்தப் பெண்ணும் தன்னம்பிக்கையோடு முதல் அடியை இந்தச் சமூகத்துக்குள் எடுத்துவைக்க முடியும். அப்பாவின் அதிகாரத்துக்குள், அவர்களின் மிரட்டலில் வளர்க்கப்படும் பெண்கள்... பார்க்கும் ஆண்களிடம் தந்தைமையைத் தேடி ஏமாந்துபோகும் உளவியலை அறிவீர்களா? ஒரு தலைகோதலில், 'நான் இருக்கேன்’ என்று ஆண் சொல்லும் வார்த்தைகளில், எல்லாவற்றையும் விட்டுவிட்டு சரணாகதி அடையும் சில பெண்களைப் பார்த்து ஆச்சரியம் வரலாம். ஆனால், இதன் பின்னணியில் வீட்டில் அப்பாவிடம் எதிர்பார்த்து ஏமாந்துபோன ஒரு மகளின் மனது இருக்கிறது.

இன்றைக்குக் காதலைச் சொல்வதற்கு முன்புபோல் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியதே இல்லை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள், எல்லாவற்றையும் சாத்தியம் ஆக்கியிருக்கிறது. ஆனாலும் இன்றும் பெண்கள் தங்கள் காதலை உணர்வதுபோல் சொல்லிவிட முடிவது இல்லை. பெண்கள் என்றால் மாநகர மால்களில் நவீன உடைகளில் நடமாடுகிற பெண்கள் மட்டும் அல்ல... கிராமங்களில் கல்யாணத்துக்கு முன்பு ஒரு டிகிரிக்காகக் கல்லூரி போகும் பெண்களையும் நினைவில் கொள்ளவும்.

காதலை மறுக்கவாவது பெண்களுக்கு உரிமை இருக்கிறதா? சமீபத்தில் மட்டும் எத்தனை ஆசிட் வீச்சுக்களைப் பார்த்தோம். தங்களை வேண்டாம் என்று நிராகரிக்க, தனக்குப் பிடித்த ஆண்களைக் காதலிக்கும் உரிமை பெண்களுக்கும் இருக்கிறது என்பதை ஏன் மறந்துபோனோம்? அலுவலகத்தில் உடன் வேலைசெய்யும் பெண் காதலை மறுத்தால், திரும்பத் திரும்ப வற்புறுத்துவதும், அந்தப் பெண்ணைப் பற்றிய வதந்திகளைப் பரப்புவதும் என்ன மாதிரியான மனநிலை நண்பர்களே?

ஆம்! காதலில்கூட இங்கு பாரபட்சம்தான். காதலனுக்குத் தன்னைப் பிடிக்கவைக்க என்ன செய்வது, காதலனின் வீட்டுக்குப் பிடிக்க எப்படி நடிப்பது என்ற பாசாங்குகளில்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது பெரும்பாலோரின் காதல்.

அவளது கனவுகளை, ஏமாற்றங்களை, பகிரப்படாத துயரங்களைப் பேச அவளை அனுமதித்தது உண்டா? கண்களில் சந்தோஷம் மினுங்க உங்கள் பால்யம் பற்றி நீங்கள் பகிரும்போது, அந்தக் கண்களில் முத்தமிட அவள் விரும்புவாள் என்பது தெரியுமா? அணைத்தலோ, முத்தமிடுதலோ ஆண் தரும்போது பெற்றுக்கொள்ள வேண்டியவளாகத்தானே பெண் இருக்கிறாள். ஒரு பெண் தானாக வந்து முத்தமிட்டால், உடனே அவளது இயல்பை, கேரக்டரை எல்லாம் சந்தேகப்படுவது ஏன்? உங்களுக்கு வந்தால் அன்பு, அதுவே எங்களுக்கு வந்தால் தீண்டத்தகாத பொருளா?

அதிகாலையில் நடக்கும்போது இருளடைந்த வீடுகளில் சமையல் அறையில் மட்டும் விளக்கு எரிவதைப் பார்க்கலாம். அந்த ஜன்னலை எட்டிப்பார்த்தால், அதற்குள் நிற்கிற பெண்ணுக்கு 20 முதல் 70 வயதுக்குள் இருக்கலாம். அவள் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பெண்ணாக இருக்கலாம்; புதிதாகத் திருமணம் ஆன பெண்ணாக இருக்கலாம்; இரண்டு குழந்தைகளின் தாயாக இருக்கலாம். மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவளாக இருக்கலாம்; வங்கி ஒன்றின் உயர் அதிகாரியாக இருக்கலாம்; பணி ஓய்வுபெற்ற ஒரு டீச்சராக இருக்கக்கூடும்; துணிக்கடை ஒன்றில் 12 மணி நேரம் நின்று மரத்துப்போன கால்கள் அவளுக்கு இன்னமும் வலிக்கக்கூடும்; இங்கே வேலைகளை முடித்துவிட்டு வேறு வீடுகளுக்கு அவள் வேலைக்குச் செல்பவளாகவும் இருக்கலாம்; கொஞ்சம் உற்றுப் பார்த்தால் இரவுப் பணியில் களைப்படைந்து தூங்கச் சொல்லிக் கெஞ்சும் கண்களையும் அந்த முகத்தில் நீங்கள் பார்க்கக்கூடும்.

அப்படியே கொஞ்சம் அந்த வீட்டின் படுக்கை அறையில் எட்டிப் பாருங்கள். அங்கே ஒரு கணவன் உறங்கிக்கொண்டு இருக்கிறான். அந்தப் பெண்ணின் காதல் கணவனாகக்கூட அவன் இருக்கக்கூடும். திருமணத்துக்குப் பிறகு சொர்க்கத்தைக் காட்டுவேன் என்று வாக்குக் கொடுத்தவனாகக்கூட இருக்கலாம். வீட்டின் செலவுகளைப் பகிர்ந்துகொள்ள பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகும், அவர்களது வேலைகளைப் பகிர்ந்துகொள்வதில் நாம் ஓர் அடியாவது முன்னே எடுத்துவைத்திருக்கிறோமா? காதல் என்பது எல்லாவற்றையும் பகிர்வதுதானே?

பெண்கள் திருமணமானால், குடும்பத்தைத் தவிர வேறு எதையுமே சிந்திக்க முடியாது. திருமணமான ஓர் ஆணின் வாழ்க்கையும், பெண்ணின் வாழ்க்கையும் இங்கு ஒரேமாதிரிதான் இருக்கிறதா என ஒப்பிட்டுப் பாருங்கள். அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தால் லேப்டாப், மொபைல் போன் கதி என்று கிடக்கும் கணவர்கள்... அதே நேரத்தில் சமையல், வீடு, குழந்தைகள் எனப் போராடிக்கொண்டிருப்பதைக் கவனிக்க மறுக்கும்போது பெண்களுக்குக் கோபம் வருவது இயல்புதானே!

திருமணத்துக்குப் பிறகு எல்லா சுதந்திரங்களும் தொலைந்துபோனதாக ஆண்கள்தான் சதாசர்வகாலமும் புலம்புகிறார்கள். ஆனால், சமூக வலைதளங்களில் அவர்களால் தொடர்ந்து இயங்க முடிகிறது; கல்லூரி நண்பர்களோடு சுற்றுலா செல்ல முடிகிறது; வெளியாகிற எல்லாத் திரைப்படங்களையும் பார்க்க முடிகிறது... இப்படியான எல்லா ஆசைகளும் பெண்களுக்கும் இருக்கும் என யோசித்திருக்கிறீர்களா?

ஆறு நாட்கள் வேலைக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஓய்வு எடுக்கிற பாக்கியம் எத்தனை பெண்களுக்கு இங்கே கிடைக்கிறது? ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆடோ, கோழியோ, கொக்கோ வாங்கிக் கொடுப்பதோடு கடமை முடிந்த பாவனையில் டி.வி-யில் மூழ்கியிருக்கும் கணவனுக்கு, தன் மனைவிக்கும் அப்படியானஇளைப்பாறுதல் தேவைப்படுகிறது என்று புரியாமல்போவது ஏன்? எங்கள் பாட்டிகளின் ஞாயிற்றுக்கிழமைகள் விறகு அடுப்பில் போனதென்றால், எங்களின் கிழமைகள் கேஸ் ஸ்டவ் முன் கழிகின்றன. அடுப்பின் வெக்கையில் மட்டும்தானே வித்தியாசம்? இப்படி அதிகப்படியான வேலைகளில்கூட நாங்கள் மனம் சோர்ந்துவிடுவது இல்லை. அந்த வேலையை நீங்கள் அங்கீகரிக்க மறுக்கும்போதுதான், மனம் கசந்துபோகிறது.

அது எப்படி கணவன்களே... டி.வி-யில் மொக்கைப் படங்களைக் கண் இமைக்காமல் பார்க்கும் உங்களால், மனைவி பேச ஆரம்பித்து மூன்றாவது நிமிடத்தில் தூங்கிவிட முடிகிறது? அது எவ்வளவு பெரிய புறக்கணிப்பும் அவமானப்படுத்துதலும் என்று ஏன் புரியவில்லை?

ஒரு குடும்பத்தில் தான் தூங்கும் நேரத்தையாவது பெண்ணால் தேர்வுசெய்ய முடிகிறதா? கணவன் தூங்கும் நேரத்தில் மனைவியும் தூங்கியாக வேண்டும். ஒருவேளை அவள் தூங்கத் தாமதமானால், பாத்திரம் கழுவுதல், மறுநாளைக்கு அயர்ன் செய்தல்... என ஏதேனும் காரணங்கள் இருக்கக்கூடும். மாறாகத் தனக்காக அவள் வாசிப்பதையோ, தனக்குப் பிடித்த ஒரு படத்தைப் பார்ப்பதையோ, தனக்காக அவள் நடனமாடுவதையோகூட நம் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.

படுக்கையறையில்கூட ஒரு பெண் தன் விருப்பங்களைச் சொல்லவோ, மறுக்கவோ அவளுக்கு வாய்ப்பு இருக்கிறதா? அவளுக்கு இதெல்லாம்தான் பிடிக்கும்... என நீங்களாக முடிவுசெய்து ஏதேதோ செய்கிறீர்கள். அவளுக்கு அது நிஜமாகவே பிடிக்கிறதா என்பதையேனும் ஒருநாள் கேட்டுப் பாருங்களேன்.

ஒரு பெண், வயதுக்கு வருவதில் இருந்து இறந்துபோவது வரை அவளது உடல் எத்தனையோ மாற்றங்களைச் சந்திக்கிறது. அவளுக்கு என்றே இயற்கை தந்த ஏராளமான வலிகளும் அவஸ்தைகளும் உண்டு. அவள் அருகே உட்கார்ந்து அவள் உடலில் நடக்கும் மாற்றங்கள் பற்றி, அப்போதைய அவள் வேதனை பற்றிப் பேச வேண்டும் என்று ஒவ்வொரு மனைவியும் எதிர்பார்க்கிறாள் தெரியுமா? ஆப்பிளின் புதிய போன் சந்தைக்கு வருவதற்கு முன்பே அதன் பயன்களை இணையத்தில் தேடி அப்டேட் செய்பவர்களால், மெனோபாஸ் நேரத்தில் பெண்கள் சந்திக்கும் மனக்குழப்பங்கள் பற்றிய கட்டுரையைப் படித்தால், மனைவியின் சிடுசிடுப்புக்குக் காரணம் அறிய முடியுமே. தேவை, நேரம் அல்ல... கொஞ்சம் அக்கறை!

நம் சமூகத்தில் ஒரு பெண் தனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் எனில், அவள் திருமணம் ஆகாதவளாக இருக்க வேண்டும். இல்லை எனில், திருமண உறவை முறித்துக்கொண்டு வந்தவளாக இருக்க வேண்டும். குடும்ப அமைப்பில் இருந்துகொண்டு தனக்குப் பிடித்த துறையிலும் முழுமையாக ஈடுபடுவது என்பது பெரும்பாலும் இங்கு பெண்களுக்குச் சாத்தியம் இல்லாத ஒன்றாகிப் போனது.

அலுவலகத்தில் தாமதமாக ஒரு பெண் வந்தால், ஒரு நாள் விடுமுறை எடுத்தால், ஒரு மாலையில் அவள் சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்று கோரினால், 'இந்தப் பொம்பளைங்களை வேலைக்கு வெச்சாலே இப்படித்தான். எப்பப் பாரு வீடு, பிள்ளைங்கனு புலம்பிக்கிட்டு...’ என்று எவ்வளவு எளிதாகச் சொல்லிவிடுகிறோம். 'ஸ்கூல் மீட்டிங்குக்கு எனக்கு நேரம் இல்லை. நீயே போய்க்கோ’ என்று காலையில் மனைவியிடம் உத்தரவிடும் போது, இதேபோன்ற ஒரு சலிப்பான வசவை அவள் வேறு ஏதோ ஒரு மேலதிகாரியிடம் வாங்க வேண்டியிருக்கும் என்பது ஏன் நினைவுக்கு வருவது இல்லை?

ஒரு பெண் மேலதிகாரியாக இருந்துவிட்டால், தனித்த ஆளுமையோடு செயல்பட்டால், கார் வாங்கிவிட்டால், வேகமாக வண்டி ஓட்டிவிட்டால், பதவி உயர்வு கிடைத்தால்... என ஒரு பெண் தன் வாழ்க்கையில் ஒரு படி முன்னால்வைக்கும்போது அலுவலகங்களில் ஏன் அவளைப் பற்றி அத்தனை ஒப்பாரிகள்? ஆணுக்கு இங்கே சாதாரணமாகக் கிடைக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் பெண் எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது தெரியுமா?

சில நாட்களுக்கு முன்பு அலுவலக வளாகத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு பெண் கொலைசெய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்த பிறகும் அந்த அலுவலகத்தில் எந்தப் பெண்ணும் வேலையைவிட்டுச் சென்றுவிடவில்லை. இங்கே ஆணுக்குப் படிப்பு, வேலை எல்லாம் இயல்பாகக் கிடைக்கும் விஷயங்கள். ஆனால், ஒவ்வொரு பெண்ணும் அதற்காகக்கூட இன்னமும் இங்கே போராடியாக வேண்டியிருக்கிறது. ஓர் அடி பின்னால் எடுத்துவைத்தால்கூட மீண்டும் முன்னால் வருவதற்கு ஆண்டுகள் ஆகும் என்பதை அவள் அறிந்தே இருக்கிறாள்.

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் முன் எப்போதையும்விட உச்சத்தில் இருக்கும் நேரம் இது. வேறு எந்தக் குற்றத்திலும் பாதிக்கப்பட்டவர் மீதே பழி சுமத்துவது நடக்குமா எனத் தெரியவில்லை. பாலியல் குற்றத்துக்குத் தீர்வு சொல்லும் அனைவருமே பெண்கள் எப்படிப் பாதுகாப்பாக இருப்பது என்றே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடம் அலுவலகத்தில் வண்டி கேளுங்கள் என்று சொல்லிவிடலாம். வாணியம்பாடியில், நாகர்கோவிலில், விழுப்புரத்தில், தேனியில் ஒரு துணிக் கடையில் கால் கடுக்க வேலை செய்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பும் பெண்களுக்கு? தவிரவும்... வேலை செய்கிற இடங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பானது என்பது போலவும், ஆபத்துகள் வெளியே இருந்து வருவதுபோலவுமே பேசுவதே எவ்வளவு முரணாக இருக்கிறது?

நாங்கள் உங்களைப் போலவே இந்த உலகுக்கு வந்தோம் நண்பர்களே. உங்களைப் போலவே இந்த உலகம் எங்களுக்கானதும்கூட என நம்பினோம். கடலும்-காற்றும், வானும்-சூரியனும், இரவும்-பகலும் அனைவருக்கும் பொதுவானவை என்றே நினைத்தோம். ஆனால், அப்படி இல்லை என்று மறுக்கிறீர்கள். 'ராத்திரியில் உனக்கென்ன வேலை, தனியா நீ ஏன் அங்கே போகணும், உன்னை யாரு பஸ்ல போகச் சொன்னது, நீ எதுக்கு அந்த ஊருக்குப் போகணும்?’ என எல்லாக் கேள்விகளையும் எங்களிடமே கேட்கிறீர்கள்.

எங்கும் எப்போதும் ஓர் ஆணைச் சார்ந்திருக்கவே நிர்பந்திக்கிறீர்கள். கூடவே, 'எதையும் தனியாச் செய்யத் தெரியாது. எல்லாத்துக்கும் ஓர் ஆள் வேணும்’ என சலித்துக்கொள்கிறீர்கள். அப்பா, அண்ணன், கணவன் எல்லோரிடமும் அந்தச் சலிப்பு தெரிகிறது. முடியாத கட்டங்களில், 'எதுக்கு நீ வெளியே போகணும்?’ என மீண்டும் வீட்டுக்குள் உட்காரச் சொல்கிறீர்கள். வேலை நிமித்தமாகத் தனியாகப் பயணம் செய்யும் பெண்கள், தனியாக வாழும் பெண்கள் என்ன செய்வது நண்பர்களே?

நாங்கள் உங்களைச் சார்ந்திருக்கும் நிர்பந்தங்களை உருவாக்கிவிட்டு, நாங்கள் சுமை என்று சொல்வது நியாயமே இல்லைதானே?

சுமைகளைக் கொஞ்சம் இறக்கிவையுங்கள். முதுகில் ஏறி உட்கார்ந்து இருப்பது எங்களுக்கும் சிரமமாகத்தான் இருக்கிறது. நீங்களும் கொஞ்சம் ஓய்வு எடுங்கள். எங்களின் பிரச்னைகளை நாங்களே எதிர்கொள்கிறோம். அண்ணனாக, அப்பாவாக, காதலனாக, கணவனாக... உங்களின் பயம் எங்களுக்குப் புரிகிறது.

பெண்களை வன்புணர்வு செய்பவனும் ஏதோ ஒரு பெண்ணுக்கு மகன், கணவன், காதலன், அண்ணன்தான் இல்லையா? தன் வீட்டுப் பெண்களைப் பத்திரமாகப் பூட்டிவைத்துவிட்டு, பிற பெண்களை மோசமாகக் கிண்டல் செய்யும், அவமதிக்கும் எல்லோரும்தான் இதில் குற்றவாளிகள் இல்லையா? அதற்கு இன்னும் எங்களால் பழி ஏற்க முடியாது.

பொழுதுகள் எங்களுக்குச் சொந்தமும் இல்லை; நேரங்களை நாங்கள் ஆள்வதும் இல்லை. 'மாலைப் பொழுதில் காலாற நடக்க விரும்புகிறேன். அது எனக்குப் புத்துணர்ச்சியைத் தரும்’ என்பது எங்கள் தேவை. ஆனால், இப்படிக் கேட்டால் அது மறுக்கப்படும் என்று அறிந்தும் தயக்கத்துடன் கேட்பது பரிதவிப்பு. இந்த நூலிழை வித்தியாசம் எப்படிப்பட்ட இரும்புச் சங்கிலியாக பெண்களின் கால்களை நடக்க முடியாமல் சுற்றியிருக்கிறது என்பதை ஒரு விநாடி யோசித்துப் பாருங்கள்.

இருந்தும்கூட இன்றைக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள், கண்களில் நம்பிக்கை ஒளிர வீடுகளில் இருந்து தினம் தினம் கிளம்பிக்கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேளுங்கள். ஏனெனில், உங்களைப்போல் நாங்கள் மௌனமாகச் சிந்திப்பது இல்லை. பதிலாக, பேசும்போதுதான் சிந்திக்கிறோம். சிந்திப்பதற்காகத்தான் பேசுகிறோம். அதேபோல் ஒருபோதும் எங்கள் கண்ணீரைத் துடைக்க விதவிதமான விரல்களுடன் எங்கள் முன்னால் வராதீர்கள். எங்களிடமே விரல்கள் இருக்கின்றன. பேசவிடுங்கள் அது போதும்.

நம் சமூக அமைப்பில் பெண்கள் இரண்டாம் பட்சம்தான் என்ற தாழ்வுமனப்பான்மை பெண்களிடமும் இருப்பதுதான் வேதனை. இதை உணரும் சில பெண்கள், ஆண்களை ஆதிக்கம் செலுத்துவது என்ற பழிவாங்கும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். இதுவும் ஆபத்தானதே. அடங்குவது அல்லது மீறுவது என்ற இரண்டுக்கும் இடையில் இணைந்து வாழ்வது என்ற இடத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதைப் பெரும்பான்மை பெண்கள் உணர்ந்தே இருக்கிறோம்.

நாங்கள் எங்கள் மகள்களுக்கு இந்த உலகை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுத்தருவோம். கூடவே... எங்கள் மகன்களுக்கு பெண்களை எப்படி நடத்துவது என்பதையும் நாங்களே சொல்லித்தருவோம். இந்தச் சமூகம் மாறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

- பொக்கிஷ பகிர்வு...

காலத்தின் தேவை



அண்மையில், வட இந்தியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வையும், தமிழகத்தில் ஓர் அரசியல் தலைவர் வெளிப்படுத்திய கருத்தையும் பலரும் கவனித்திருக்கலாம்.

சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் பேரனுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மகளுக்கும் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

வட இந்தியாவில் இதுபோன்ற அரசியல் பண்பாடு நிலவுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், அரசியலில் தனக்கு எதிராக இருக்கும் முலாயம் - லாலு இல்ல விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதைத்தொடர்ந்து, சில நாள்களுக்குப் பிறகு நடைபெற்ற முலாயம்-லாலு இல்ல திருமண விழாவிலும் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

அதே விழாவுக்கு வந்திருந்த தமது அரசியல் எதிரியான பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் கைகளை வாஞ்சையோடு பற்றிக் கொண்டு மோடி நலம் விசாரித்தார். இதுதான் அரசியல் நாகரிகம்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அண்மையில், "தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லாமல் போனதற்கு திராவிட இயக்கங்கள்தான் காரணம் என்பது கசப்பான உண்மை' என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழகத்தில் குறைந்தபட்ச அரசியல் நாகரிகத்தைக் காண்பதே மிக அரிதான ஒன்றுதான்.

சுக, துக்க நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல, அரசு விழாக்களில்கூட மாற்றுக் கொள்கையுடைய தலைவர்கள் ஒருசேர கலந்துகொள்வதே கிடையாது.

தெருமுனைக் கூட்டங்கள் தொடங்கி சட்டப்பேரவை வரையிலும், கொள்கை அரசியலைத் தாண்டிய தனிநபர் மீதான விமர்சனங்கள் இங்கு அதிகம்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், சட்டப்பேரவையில் முக்கிய விவாதங்களின்போது, எதிர்க்கட்சித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கத் தவறுவதில்லை.

இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கின்ற நிலையில், தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் கூட ஒருமித்த கருத்தையோ, தீர்மானத்தையோ ஏற்படுத்த முடியவில்லை.

நமது அண்டை மாநிலங்களில், வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு ஒருமித்த குரல் எழுப்பி போராடுவதை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்.

அண்டை மாநிலத் தலைவர்களுடன் ராஜாங்க ரீதியிலான நட்புறவு இல்லாததால் கர்நாடக, கேரள மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்னை முடியாமல் நீடித்து வருகிறது.

ஆனால், நேற்று பிரிந்து சென்ற ஆந்திர மாநிலமும், தெலங்கானாவும், பிரச்னைகளை ஒரே நாளில் பேசித் தீர்த்து வருகின்றன.

ஆம், இருமாநிலங்களுக்கும் பொதுவான நாகார்ஜுனா அணை நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. உச்சகட்டமாக, அணைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இருமாநில காவலர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

உடனடியாக, கல்வீச்சு, வாகனங்கள் உடைப்பு என வன்முறை பரவியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஏனென்றால், அணையில் மோதல் நடைபெற்ற மறுகணம், சமரச முயற்சியாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அதற்கு அடுத்த நாளே, இருமாநில முதல்வர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அணைப் பிரச்னையை சுமுகமாகத் தீர்ப்பதற்கும், தண்ணீரை பங்கிட்டுக் கொள்வதற்கும் அப்போதே கருத்தொற்றுமை ஏற்பட்டது.

இம்மாதிரியாக தமிழகப் பிரச்னைகளையும் தீர்க்க வேண்டுமென்றால், அண்டை மாநிலத் தலைவர்களுடனும், தேசியத் தலைவர்களுடனும், தமிழக அரசியல் தலைவர்கள் நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு முன்னதாக, இங்குள்ள தலைவர்களிடையே ஒற்றுமையும், நட்புறவும் இருப்பது அவசியம்.

தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லை என்னும் அதேவேளையில், எப்போதாவது அரிதிலும், அரிதாக நல்ல நிகழ்வுகள் சில நடைபெறுகின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

மதுஒழிப்பை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2013-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், சிறுதாவூர் அருகே நடைபயணம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாகச் சென்ற அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மகிழுந்தை விட்டு கீழே இறங்கி வைகோவிடம் நலம் விசாரித்தார்.

இதைப்போலவே, அண்மையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்ல திருமண விழாவில், திமுக தலைவர் கருணாநிதி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கடந்த காலங்களில் அரிதாக நடைபெற்ற இதுபோன்ற நிகழ்வுகள் இனி எப்போதும் நிகழ வேண்டுமென்றால், அனைத்து அரசியல் தலைவர்களின் மனங்களிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.

பொது மேடைகளில் மாற்றுக் கட்சித் தலைவர்களை அடைமொழி, புனைப்பெயரிட்டு ஒருமையில் பேசுவதை நமது தலைவர்கள் கைவிட்டாலே ஆரோக்கிய அரசியலுக்கான முதல் படியை எட்ட முடியும்.

அடுத்ததாக, சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும்.

தனிப்பட்ட விமர்சனங்ளைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு என்ற சொல் மக்களுடைய காதுகளில் இனி விழவே கூடாது.

தமிழகத் தலைவர்கள் அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டியது காலத்தின் தேவை.

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்தவர்கள் மறுமுறை எடுக்க தேவையில்லை



ஆதார் அட்டை இதுவரை வரவில்லை என்பதற்காக ஏற்கனவே புகைப்படம் எடுத்தவர்கள் மறுமுறை எடுக்க தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறுகிறது.

2010ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சீட்டு எண் உள்ள நபர்கள், அதனை பயன்படுத்தி புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பு சீட்டு இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துகொடுத்து புகைப்படம் எடுக்கலாம். ஏற்கனவே ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்தவர்களுக்கு, விரைவில் அஞ்சல் மூலம் ஆதார் அட்டை வந்தடையும்.

மேலும், ஆதார் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். அதற்காக, மக்கள் கணினி மையங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருமுறைக்கு மேல் புகைப்படம் எடுத்துக்கொண்டால் அது செல்லாதவையாகிவிடும்.

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க வருவோர், மக்கள் தொகை கணக்கு சீட்டு, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டை ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.

ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குறிப்பிட்ட தேதிகளில் புகைப்படம் எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சான்றிதழ்களை பாதுகாக்க 'டிஜிட்டல் லாக்கர்' அறிமுகம்

புதுடில்லி: பொதுமக்களின் முக்கிய சான்றிதழ்கள், 'டிஜிட்டல்' முறையில் இருந்தால், அதை பாதுகாப்பாக வைக்க, 'டிஜிலாக்கர்' என்ற இணைய வசதியை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

கல்விச் சான்றிதழ்கள், வங்கி டிபாசிட் சான்றிதழ்கள் போன்ற சான்றிதழ்களை, வீடுகளில் பாதுகாப்பாக, தாள்களாக பத்திரமாக வைத்திருப்போம். அது போல, அந்த சான்றிதழ்களை, டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைக்கும் புதிய முறை அறிமுகம் இப்போது செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. http:/digitallocker.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, ஆதார் எண் மற்றும் பிற தகவல்களை பதிவு செய்து, 'பீட்டா வெர்சன்' எனப்படும், டிஜிட்டல் முறையில் வைத்திருக்கும் சான்றிதழ்களை, இந்த லாக்கரில் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் பத்திரமாக வைத்திருக்கலாம். தற்போது இந்த வசதி, ஒவ்வொரு தனிநபர்களுக்கும், 10 எம்.பி., அளவுக்குத் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. யார் இந்த சான்றிதழ்களை, இந்த டிஜிட்டல் லாக்கரில் வைக்கிறாரோ, அவர் தான் அதை எடுக்க முடியும். அதற்காக ரகசிய பாஸ்வேர்டு, குறியீடு எண்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள், தங்களுக்கு என தனியாக, டிஜிட்டல் லாக்கர் வசதியை கொண்டுள்ளன. இதில், சாதாரண தாள் வடிவில் உள்ள சான்றிதழ்களை, பாதுகாக்க முடியாது. பீட்டா வெர்சன் என்ற, கம்ப்யூட்டர் நகல் வடிவில் உள்ள சான்றிதழ்களை மட்டுமே பாதுகாப்பாக வைக்க முடியும்.

Saturday, March 7, 2015

ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.400 ஆனது!

சென்னை: தமிழகத்தில் 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை சிமென்ட் தற்போது 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், கட்டுமானப்பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே சிமென்ட் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால், கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிமென்ட் விலை மேலும் உயர்ந்துள்ளது.

இது குறித்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் சிமென்ட் விநியோகஸ்தர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தென்னிந்தியாவில் உள்ள சிமென்ட் உற்பத்தி ஆலைகள் மூலம் மாதம் ஒன்றுக்கு 130 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இது தற்போது பாதியாக குறைந்துவிட்டது. சிமென்ட் தேவை குறைந்ததே இதற்கு காரணம். அரசு கொள்முதல் செய்யும் சிமென்ட் அளவும் குறைந்துவிட்டது. இதனால், சிமென்ட் ஆலைகளில் ஒரு மாதத்துக்கு 13 நாட்கள் மட்டுமே உற்பத்தி நடக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு மூட்டை சிமென்ட் 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது சிறிது சிறிதாக விலையேறி கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி 400 ரூபாயை எட்டியது. ஆலைகள் தமிழக அரசுக்கு சிமென்ட்டை குறைந்த விலைக்கு கொடுப்பதால், வெளிச் சந்தையில் எவ்வளவு விலை அதிகரித்து விற்றாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சிமென்ட் நிறுவனங்கள் இஷ்டத்துக்கு விலையை ஏற்றி வருகின்றன" என்றார்.

Lawyers consume beef on HC campus to protest Maharashtra ban

CHENNAI: The ban on sale and consumption of beef in Maharashtra by the state's BJP government provoked reactions in Chennai on Friday, when a group of advocates held a 'beef eating protest' on Madras high court campus to drive home the point that governments had no business to decide the eating habits of citizens.

Though the canteens on the high court campus themselves are off-bound for non-vegetarian food, the protesting advocates brought beef preparations from restaurants and served them to demonstrators and onlookers. "We condemn the government of Maharashtra for bringing this communal legislation, it infringes on the fundamental rights of citizens to choose their own food," said a young lawyer. Maharashtra's new law extended the existing ban on cow slaughter to bulls and bullocks also.

The demonstration managed to attract the attention of only a small group of curious litigants and fellow lawyers, but the larger significance of the event was not lost on them.

"One cannot be oblivious to the caste angle in demands for non-vegetarian food items at public/government office canteens. But Maharashtra's cow slaughter ban has added a communal tinge to the issue, besides giving rise to apprehension that it would deny affordable non-vegetarian food to millions of citizens," said advocate M Antony Selvaraj, chairman, All India Association of Jurists.

But he said the protest could have been conducted better. "Involving intellectuals and activists from different fora would have given it more acceptance," Selvaraj said.

When informed about the protest, former judge of the Madras high court K Chandru told TOI: "The state can regulate a food trade, vegetarian or non-vegetarian, from a public health point of view, not on any other grounds."

A few years ago, a Supreme Court bench which included Justice Markandey Katju had said, "What one eats is one's personal affair, and it is a part of his right to privacy, which is included in Article 21 of the Constitution. It is a right to be let alone." The bench, however, concluded that closing butcher shops for nine days was not an excessive restriction.

Incidentally, Tamil Nadu has witnessed similar protests in the past. Activist-advocate P Rathinam had led demonstrations before the Madurai bench of the Madras high court demanding non-vegetarian dishes at the canteens there.

As for the Maharashtra rule, which obtained Presidential nod nearly 19 years after it was first enacted, Chandru said it would not stand the test of law. "It is more of a religious issue than food issue," he said, "How do you suddenly say you cannot eat beef."

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...