Tuesday, March 10, 2015

புதிய ஒரு ரூபாய் நோட்டு மத்திய அரசு வெளியிட்டது!


உதய்பூர்:  புதிய ஒரு ரூபாய் நோட்டினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஒரு ரூபாய் நாணயங்களுக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால், சில்லரை தட்டுப்பாட்டைப்  போக்க ஒரு ரூபாய் நோட்டுக்களை மீண்டும் அச்சிட மத்திய அரசு முடிவு செய்தது.  இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன.
இந்நிலையில், இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டை உதய்ப்பூர் அருகே நத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் ராஜீவ் மெஹ்ரிஷி வெளியிட்டார். இதை முன்னிட்டு ஸ்ரீநாத்ஜி சுவாமியின் பாதத்தில் 100 நோட்டுகள் கொண்ட ஒரு ரூபாய் நோட்டு கட்டை வைத்து வழிபட்டார். அவருடன் மனைவி மீரா மெஹ்ரிஷியும் உடன் வந்திருந்தார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரூபாய் முதல் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. நாணயங்களோடு ஒப்பிடுகையில் இவற்றின் வாழ்நாள் மிகவும் குறைவு. வாழ்நாளையும், அச்சிடும் செலவையும் கருத்தில் கொண்டு இவற்றை அச்சிடுவது நிறுத்தப்பட்டிருந்தது.
புதிய ஒரு ரூபாய் 9.7 செ.மீ, 6.3 செ.மீ நீள அகலம் கொண்ட இந்த நோட்டின் முன்புறத்தில் பாரத் சர்க்கார் என இந்தியிலும், அதன்கீழ் `கவர்மென்ட் ஆப் இந்தியா` என ஆங்கிலத்திலும் உள்ளது. நிதித்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி கையெழுத்து இடம்பெற்றுள்ளது.

ரூ.1,000-க்கு ஆண்டு முழுவதும் சினிமா: கோவில்பட்டி திரையரங்கின் புதிய முயற்சி



சினிமா வரலாற்றில் முதன்முறையாக ரூ.1000 சந்தா செலுத்தி ஆண்டு முழுவது சினிமா பார்க்கலாம் - கோவில்பட்டி சண்முக திரையரங்கம்" என்ற ஒரு விளம்பரம் அனைவரையும் கவர்ந்தது.

இது உண்மையா, எதற்காக ஆரம்பித்திருக்கிறார்கள் என திரையரங்க எண்ணைத் தொடர்புக் கொண்டு பேசினோம்.

"விளம்பரப்படுத்தும் பணிகள் எல்லாம் முடிந்து இன்று முதல் தான் அதற்கான வேலையை ஆரம்பிக்கிறோம். இப்போது திரையரங்கிற்கு மக்களின் வருகை என்பது பெருமளவு குறைந்து விட்டது. ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

கடந்தாண்டு மட்டும் 37 படங்களை வெளியிட்டு இருக்கிறோம். அதில் ஒருவர் 20 படங்கள் பார்க்கிறார் என்று வைத்துக் கொண்டால் கூட, அதற்கான செலவு அவருக்கு ரூ.1000-த்தை தாண்டிவிடும். ஆகையால் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்துகிறோம். இம்முறைப்படி ரூ.1000 கட்டினால் கூப்பன் ஒன்றை கொடுத்துவிடுவோம்.

எங்கள் திரையரங்கில் வெளியாகும் படத்தை நீங்கள் இந்த கூப்பனைப் பயன்படுத்தி படத்தினைக் கண்டு மகிழலாம். கூப்பனில் ஒரு படத்தை ஒரு முறை தான் பார்க்க முடியும். ஒரு வேளை இந்த படத்தைப் பார்க்க உங்களுக்கு விருப்பமில்லை என்றால் உங்களது நண்பர்கள், குடும்ப உறுப்பினர் யாராவது உங்களது கூப்பனை எடுத்துக் கொண்டு வந்து படம் பார்க்கலாம். அதற்கும் அனுமதிக்கிறோம்." என்றார்கள்.

"ஆரம்பிக்க காரணம் என்ன?" என்று கேட்டதற்கு "முன்பு எல்லாம் ஒரு படம் திரையிட்டால் மக்கள் கூட்டம் என்பது அதிகமாக இருக்கும். எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது. தற்போது சினிமா தயாரிப்பு என்பது மிகப்பெரிய விஷயமாகி விட்டது. நடிகர்கள், நடிகைகள் என அனைவருமே சம்பளத்தை உயர்த்திவிட்டார்கள். அதுமட்டுமன்றி தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என எல்லாரையும் தாண்டி எங்களிடம் படம் வரும் போது அதன் விலை என்பது மிகவும் அதிகமாகிறது. அப்படி நாங்கள் கஷ்டப்பட்டு எடுத்து வெளியிட்டால் கூட மூன்று நாட்கள் தான் அதற்கு மதிப்பு. அதற்கு பிறகு கூட்டம் குறைந்துவிடும்.

இது ஒரு பிரச்சினை என்றால், அடுத்த பிரச்சினை திருட்டு டி.வி.டி. 80 ரூபாய் கொடுத்து படம் பார்ப்பதற்கு 30 ரூபாய் கொடுத்து டி.வி.டியில் வீட்டிலேயே படம் பார்க்கலாம் என்று மக்களும் எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் ஒரு புதுமையாக விஷயம் பண்ணலாம் என்று ஆரம்பித்தோம். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்தார்கள்.

Sunday, March 8, 2015

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் துறை வாரியாக தமிழக அரசின் நிதித்துறைக்கு அனுப்பப்படும்.

ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை (கிராஜுவிட்டி) உள்ளிட்ட பணப்பயன்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டியதிருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

அரசுப் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாகவும், ஆசிரியர்கள் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். மேலும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மற்றும் கருணை அடிப்படையிலும் பணி நியமனம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், 2015-16-ம் நிதி ஆண்டில் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஏறத்தாழ 24 ஆயிரம் பேர் ஓய்வுபெற இருப்பதாக நிதித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதான ஒன்றாகும்.

பொதுவாக, அரசுப் பணியில், 50 சதவீத காலியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படும். அந்த வகையில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் சூழல் இருப்பதால் படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். இதற்காக டிஎன்பிஎஸ்சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக அதிகளவில் பணி நியமனங்கள் நடைபெறும். இந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் அண்மையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதான ஒன்றாகும்.

உத்தமவில்லன்', 'நண்பேன்டா' உடன் போட்டியிடும் 'சகாப்தம்'



ஏப்ரல் 2ம் தேதி 'உத்தமவில்லன்', 'நண்பேன்டா' ஆகிய படங்களுடன் வெளியாக இருக்கிறது சண்முக பாண்டியன் நடித்திருக்கும் 'சகாப்தம்'

விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’. நாயகிகளாக ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற நேகாவும், ‘மிஸ் பெங்களூர்’ பட்டம் வென்ற சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள்.

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். சண்முக பாண்டியனோடு சிங்கம் புலி, ஜெகன், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், தேவயானி, ரஞ்சித் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேந்தர் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். சென்சார் பணிகள் முடிவடைந்தும் படம் எப்போது வெளியாகும் என்பதை அறிவிக்காமல் இருந்தார்கள்.

இந்நிலையில், தற்போது ஏப்ரல் 2ம் தேதி 'சகாப்தம்' வெளியாகும் என்று கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஏப்ரல் 2ம் தேதி கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் 'உத்தம வில்லன்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் 'நண்பேன்டா' உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது. அப்படங்களோடு பாக்ஸ் ஆபிஸில் மோதவிருக்கிறது 'சகாப்தம்'

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...