Thursday, April 9, 2015

The Domino effect of official suicides in TN..TIMES OF INDIA CHENNAI EDITION

It was around 9 pm when the doctor got a call from a young IAS officer serv ing in a central district in Tamil Nadu seeking an appointment. At the bureaucrat's residence, his officer's wife, visibly upset, started complaining about the deteriorating health of her husband. "They (politicians) are neither allowing him to work, nor letting him in peace,'' she told the doctor who prescribed a few pills and suggested some de-stressing practices. A few months after the incident, the bureaucrat sought for a transfer and went to the Central service. This incident happened a few years ago. But government officers say that there could be dozens of similar episodes before and after that.

While the image of the average babu - a pen pusher given to indolence and the cause of much of the problems plaguing India - continues to ring true, the ones that tend to do honest work are increasingly under pressure in Tamil Nadu. While the flexible and the weak-kneed succumb to the pressures the upright ones take on the powers that be. But honest officers caught in between like S Muthukumarasamy go through a nightmare unable to take the pressure from their political bosses to violate rules to favour their acolytes.

Those unable to withstand the pressure resort to suicide like Muthukumarsamy . This year there have been at least three other well publicised complaints of political interference taking a toll on government officials.

Psychiatrists say suicides can have a domino effect."When people suffering from prolonged severe depression read about suicides, they will start assuming that suicides are the solution to escape from their problems,'' said K Sasikala, another psychiatrist.

Political intervention in transfers, promotions and appointments has reached its peak in the state,'' says All India State Government Employees' Confederation general secretary K Balasubramanian. Those failing to follow politicians' di to bend rules suffer transfers, punishment postings and humiliation."You will not be left alone if you are honest,'' says a senior bureaucrat. This of ficer learnt it the hard way when even his subordinates refused to obey him after he started turning down orders from a certain minister to bend rules. Proposals mooted by the officer were turned down or put in the backburner. State president of Tamil Nadu State Revenue Officials Association B K Sivakumar says political meddling is rampant in transport, revenue, police and education departments though prevalent in other departments too."There are mediators in every district. The moment an officer gets ready to fill vacancies in his department, someone identifying himself as minister's PA will telephone you. Subsequently , the officer will receive a list of names written in a paper. It will not be a letterhead nor will it have a signature to trace the origin,'' Sivakumar said.

If the officer fails to accommodate the list, he will receive calls from people associating themselves to the powerful. "Those not falling in line would face transfers,'' Sivakumar said.

A revenue officer in his 50s said he was abused with swear words in his office by a person close to a political bigwig for refusing to entertain a request during his stint in Madurai. "The police did not register a case based on my complaint. Worse I was humiliated by the police. Even staff in my department sidelined me,'' he said. He was later forced to withdraw the complaint.

"Right from preparing a list of beneficiaries for old age pension scheme to awarding contracts, one would face pressure. But when things go wrong and the public get angry , the politicians will blame the officer and punish him,'' he said.

Officials point out that when the government changes there was additional pressure on the staff to cancel appointments and contracts approved by the previous government. An officer claimed that there were attempts to order a vigilance raid in his house, after he took on a powerful politician.

Government staff say they could sense depression and stress rising among employees. However, they are pessimistic that much can be done to end political intervention."All we can do is stage protests. A change of mind among politicians is the only solution,'' says Tamil Nadu Government Employees' Union State president Ku Paul Pandian.

மாணவர் எதிர்காலம் யார் கையில்?



தமிழ்நாட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது. இது உண்மையா? உண்மை போன்ற தோற்றமா? எங்கும் இதே பேச்சாக இருக்கிறது.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வை சுமார் 8.43 லட்சம் பேர் எழுதினர். 10-ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 3,298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் முறைகேடுகளைக் கண்காணிக்க பறக்கும் படைகள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்வு எழுதும் மாணவர்கள் துண்டுச்சீட்டு வைத்திருத்தல், பார்த்து எழுதுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் 2 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை தேர்வு எழுத முடியாது. இதுதவிர, ஆள் மாறாட்டத்தைத் தடுக்க புகைப்படத்துடன் கூடிய நுழைவுச் சீட்டுகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

"கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா?' என்பார்கள். அதுபோல எல்லாப் பாதுகாப்புகளையும் மீறி தவறுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுவரை கண்டும் காணாமலும் நடந்தவையெல்லாம் இப்போது கண் எதிரிலேயே நடக்க ஆரம்பித்து விட்டன.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில பெரிய தனியார் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை உருவாக்கி கல்வி வணிகத்தைச் சிறப்பாகச் செய்து வருவதன் ரகசியம் இப்போது அம்பலமாகியிருக்கிறது. தனியார் பள்ளி நிர்வாகங்கள் தரும் பணத்துக்கும், தங்கக் காசுகளுக்கும் கல்வித் துறையும், ஆசிரிய சமுதாயமும் சோரம் போவது பெரும் சோகமாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியார் பள்ளியில் "பிளஸ் 2' கணிதத் தேர்வின்போது செல்லிடப்பேசி மூலம் வினாத்தாளை புகைப்படம் எடுத்து கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) சக ஆசிரியர்களுக்கு அனுப்பி விடையைப் பெற்று மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்களைப் பறக்கும் படையினர் கையும், களவுமாகப் பிடித்துள்ளனர்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண், 100 விழுக்காடு தேர்ச்சி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது வழக்கம். இதற்காக சில தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு முறைகேடாக உதவுவதாக பரவலாகக் குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. அதே பள்ளி ஆசிரியரைக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது, தேர்வு அறைக்குள் ஆசிரியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்தத் தடை என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இவ்வளவு விதிகளும் இந்தப் பள்ளியில் மீறப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக ஓர் ஆசிரியை உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டக் கல்வி அலுவலர் உள்பட 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது கல்வித் துறைக்கும், ஆசிரியர் சமுதாயத்துக்கும் மாபெரும் இழுக்காகும்.

இதேபோன்ற புகார் கடந்த ஆண்டும் எழுந்தது. சில அரசுப் பள்ளி ஆசிரியர்களும், மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் சில ஊழியர்களும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் புகார் எழுந்தபோது கல்வி அலுவலர் மறுத்தார்.

இந்நிகழ்வு மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளது. மேலும், வினாத்தாள் வெளியானதால் பிளஸ் 2 கணிதப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மற்றப் பாடத் தேர்வுகள் மட்டும் ஒழுங்காக நடந்திருக்குமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 1,500 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒசூர் கல்வி மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் அளித்த பட்டியல் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இப்போது புகார் கூறப்பட்டுள்ள 2 ஆசிரியர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

அப்படியிருக்கும்போது அவர்கள் எவ்வாறு தேர்வுக் கண்காணிப்புப் பணியில் இடம்பெற்றார்கள் என்பது பற்றிய மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும். இதுபற்றி விசாரணை செய்து கல்வித் துறைக்குச் சமர்ப்பித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Dinamani

By உதயை மு. வீரையன்

மாவட்டக் கல்வி அலுவலக ஆணை ஏதும் இல்லாமல் ஆசிரியர்கள் தேர்வுக் கண்காணிப்புப் பணியில் எப்படி ஈடுபட முடியும்? அதே பள்ளியின் கணித ஆசிரியர், பள்ளி நிர்வாகம், கல்வித் துறையின் அனுமதியின்றி தேர்வுப் பணியைக் கண்காணிக்க முடியுமா? அப்படியே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டாலும் இப்படிப்பட்ட மாபெரும் தவறுகள் செய்யக் காரணம் வேண்டுமல்லவா?

அரசுப் பள்ளி ஆசிரியர்களில் சிலர் இப்படிப்பட்ட தனியார் பள்ளிகளில் தேர்வுக் கண்காணிப்பாளர்களாகச் செல்ல ஆர்வம் காட்டுவதாகவும், இதற்காக மாவட்டக் கல்வி அலுவலகத்தில் உள்ள சிலரது ஆதரவுடன் குறிப்பிட்ட தனியார் பள்ளிக்குப் பணியாற்ற ஆணை பெறுவதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக இந்த ஆசிரியர்களுக்குப் பெருந்தொகை அன்பளிப்பாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள சில தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவில் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய ஒசூர் தனியார் பள்ளி, பொதுத் தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் இடம் பிடித்து வருகிறது. இதனால், பெற்றோர் கூடுதல் பணம் கொடுத்து அப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்து வருகின்றனர். இதனால், மற்ற தனியார் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளால் கல்வி வணிகமாகிப் போனதால் தொழில் போட்டிகளும் பெருகிவிட்டன. மாணவர்கள் வெறும் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

இதற்கு உழைப்பு மட்டுமே போதாது என்பதால் குறுக்கு வழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு, கல்விச் சந்தை சீரழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு ஆங்காங்குள்ள கல்வித் துறையினரும் விலை பேசப்பட்டு துணை போகின்றனர்.

இதனால், மாநிலம் முழுவதிலும் இருந்து, பணம் படைத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவம், பொறியியல் கனவுகளோடு இப் பள்ளிகளில் சேர்க்க படை எடுக்கின்றனர். அதற்காக அந்த ஊர்களில் வீடுகள் எடுத்துத் தங்கியிருக்கும் வெளியூர் பெற்றோர்களைக் காணலாம்.

இந்தப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்துவிட்டால் எப்படியாவது உயர் கல்விக்குத் தேவையான மதிப்பெண்களைப் பெற்றுத் தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை வளர்ந்துவிட்டது.

உண்மை, ஒழுக்கம், பண்பாடு எல்லாவற்றையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது எப்படியாவது மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும்; உயர் கல்வி பயின்று மருத்துவராகவும், பொறியாளராகவும் வெளிவர வேண்டும்.

சமச்சீர்க் கல்வி யாருக்கு வேண்டும்? அண்மைப் பள்ளி, பொதுப் பள்ளி பற்றிக் கவலையில்லை. போட்டிகள் மிகுந்த இந்தச் சமுதாயத்தில் எப்படியாவது வெற்றி பெறுவதே பெரும்பாலான பெற்றோரின் நோக்கமாக இருக்கிறது.

இந்த முடிவில்லாத ஓட்டத்தை யாரால் தடுக்க முடியும்? இந்தத் தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் வேண்டுமட்டும் பெருந்தொகை பெற்றுக் கொண்டு அவர்களது ஆசையை நிறைவேற்றுகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் எவ்வளவு முயன்றாலும் இவர்களோடு போட்டி போட முடியுமா?

இரவு, பகலாகக் கடுமையாக உழைத்துப் படித்து நேர்மையுடன் தேர்வு எழுதும் அந்த மாணவர்கள் இதுபோன்ற மோசடிகளால் அடைவது ஏமாற்றம்தான். இளம் வயதில் ஏற்படும் இந்த ஏமாற்றம் அவர்களை எங்கே கொண்டு போய்விடும் என்பதை இவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் பொதுத் தேர்வின்போது இந்தச் சர்ச்சை தொடர்கிறது. சில ஆசிரியர்களும், சில கல்வித் துறை அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். ஆனால், பள்ளி நிர்வாகத்தின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையே, ஏன்? பணம் பாதாளம் வரை பாய்கிறதா?

கல்வியின் நோக்கமே மனிதர்களை உருவாக்குவதுதான். ஆனால், இப்போது மதிப்பெண்களை உருவாக்குவது என்று ஆகிவிட்டது. இந்தத் தேர்வு முறையினை மாற்றியமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் காலம் காலமாக கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். யார் செவியிலும் விழவில்லை. இந்தப் பூனைக்கு மணிகட்டுவது யார்?

இந்த மனப்பாடக் கல்வி நல்ல மனிதர்களை உருவாக்காமல் நகல் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. சிந்திக்கும் அறிவையே மழுங்கடித்து விடுகிறது. இவர்கள் படைப்பாளிகளாக மாறாமல் படிப்பாளிகளாகவே மாறிவிட்டனர்.

இதனால்தான் நம் மாணவர்கள் அகில இந்திய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். நம் நாட்டில் உலகத் தரத்திலான கல்வி நிறுவனங்கள் உருவாகாமல் போனதற்குக் காரணமும் இதுதான்.

"சிந்தனை செய்ய ஆரம்பிப்பது மிகவும் சுலபமான காரியம் அல்ல; ஆனால் மனிதன் ஒருமுறை சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், பிறகு அவன் சிந்திக்கும் பழக்கத்தைக் கைவிடமாட்டான்; மாணவன் உலகத்தையும், இயற்கையையும், பூமியின் மேல் உள்ள பல பொருள்களையும் ஊடுருவிப் பார்த்துக் கவனித்து பிறகு தனக்குத் தானே சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும்...'' என்று கல்வியைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் ரூசோ கூறுகிறார்.

மனிதர்களை மட்டுமல்ல, மாணவர்களையும், சிந்திக்கவிடாமல் பெற்றோர்கள் தங்கள் கருத்துகளைத் திணிக்கும் போக்கே எங்கும் தொடர்கிறது. இதனைக் கல்வியாளர்களும், உளவியல் வல்லுநர்களும் எதிர்க்கின்றனர்.

மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பாடங்களைக் கற்கும் போதுதான் அவர்களைச் சிந்திக்கச் செய்ய முடியும் என்பது அவர்கள் கருத்து.

"நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில்தான் முடிவு செய்யப்படுகிறது...'' என்று கோத்தாரி கல்விக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

இந்த மாணவர்களின் தலைவிதி எங்கே, யாரால் முடிவு செய்யப்படுகிறது என்பதுதான் தெரிய வேண்டும்.

ஒன்பதை வெட்டினால் ஒன்றையாவது நடு! By இடைமருதூர் கி.மஞ்சுளா



நம் முன்னோர் மொழிந்த "ஒன்றைப் பிடுங்கினால் ஒன்பதை நடு' என்கிற வாசகத்தை நாமெல்லாம் மறந்துவிட்ட காரணத்தால்தான் உலகம் இன்றைக்கு வெப்ப மிகுதியால் தாக்கப்பட்டு, ஆண்டுக்கு ஆண்டு கூடுதல் வெப்பத்தால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

காரணம், ஒன்பதைப் பிடுங்கினோம்; அதற்கு மேலும் பிடுங்கிக் கொண்டே இருக்கிறோம்; ஆனால், ஒன்றைக்கூட நம்மால் நட முடியவில்லை. அதை நடுவதற்கு இன்றைக்கு நமக்கு இடமுமில்லை; எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகிக் கொண்டிருப்பதனால்...

உலகம் வெப்பமயமாக மாறிக் கொண்டிருப்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்களை மட்டும் குறிப்பிடலாம்.

முதல் காரணம், காடுகளில் உள்ள மரங்களை அழித்து, மழை பொழிய விடாமல் தடுப்பது; இரண்டாவது, சாலை, தொழிற்சாலை, கட்டடங்கள் போன்றவற்றைப் புதிது புதிதாக அமைக்கிறோம், குடியிருப்புகளை உருவாக்குகிறோம் என்கிற பெயரில் நாட்டில் உள்ள மரங்களையும் வயல்களையும் அழித்து வருவது.

சங்க காலம் தொட்டு இன்றுவரை மரங்களை தெய்வமாக வழிபடும் மரபு தமிழருடையது. வேம்பு, அரசு, ஆல் எனப் பலவகை மரங்களை, அவை தரும் பலன்களைக் கருத்தில் கொண்டு பூஜித்து, வழிபட்டு வருகின்ற மரபு நம்முடையது.

சில தெய்வீக மரங்கள்தான் இத்தமிழ் மண்ணுக்குப் பல மகான்களை - ஞானிகளை அடையாளம் காட்டி, சமயங்களையும் மதங்களையும் தழைத்தோங்கச் செய்து, அவர்களுக்கு ஞானம் போதித்து, ஞானம் தரும் மரங்களாக இருந்துள்ளன.

சைவ சமயத்தின் தலையாய குறிக்கோளான அன்பையும், அறிவையும் உணர்த்துவதற்காக அவதாரம் செய்த வாதவூரடிகளுக்கு, திருப்பெருந்துறை என்ற தலத்தில் உள்ள "குருந்த மர'த்தடியில் ஞானம் கிடைத்தபோதுதான் அவர் "மாணிக்கவாசகர்' ஆனார்; பெளத்த மதம் சிறந்தோங்க அவதரித்த சித்தார்த்த கெளதமர் என்பருக்கு பிகாரில் உள்ள "கயை' என்ற இடத்தில் இருந்த "போதி' மரத்தடியில் ஞானம் கிடைத்தபோதுதான் அவர் "புத்தர்' ஆனார்.

சமண மதத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய வர்த்தமானருக்கு "சாலா' என்ற மரத்தடியில் ஞானம் கிடைத்த போதுதான் மாபெரும் ஜைனத் துறவியான "மகாவீரர்' எனப் போற்றப்பட்டார்.

இப்படி மணிவாசகருக்கு "குருந்த' மரமும், புத்தருக்கு "போதி' மரமும், மகாவீரருக்கு "சாலா' மரமும்தான் ஞானம் தரும் மரங்களாகத் திகழ்ந்திருக்கின்றன. அதனால்தான் இன்றைக்கும் அவை போற்றப்படுகின்றன.

காற்றில் இருக்கும் வெப்பத்தையும் அசுத்தக் காற்றையும் தாம் வாங்கிக்கொண்டு, உலகை ஒருசேர குளிர்விக்கும் ஒரே குளிரூட்டி இயந்திரம் மரங்கள்தாம். இன்றைக்கு நமக்குப் பயன் தரும் பலவகை மரங்களை நம் முன்னோர் நட்டிருக்காவிட்டால், நாம் நிழலின் அருமையையும் அதன் தண்மையையும் உணர்ந்திருக்கவே முடியாது.

சமீபத்தில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 8,000 வீடுகள் மட்டுமே உள்ள ஒரு சிறிய கிராமமான, "பிபிலாந்திரி'யில் நிகழ்ந்துள்ளது. அக்கிராமத்தின் தலைவரான ஷியாம் சுந்தர் பலிவாலின் மகள் இளம் வயதில் இறந்துவிட்டதால், அவள் நினைவாகப் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி ஒரு குழுவை (கமிட்டி) அமைத்துள்ளார்.

Dinamani

அதன்படி, அந்தக் கிராமத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்கள் நடப்படுகின்றன. ஓராண்டில் 60 பெண் குழந்தைகள் பிறந்தால், 6,660 பயன்தரும் மரங்கள் நடப்படுகின்றன.

அந்த மரங்களை பெண்களே பராமரிக்கும் வாய்ப்பையும் தந்து, அதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் இக்குழுவினர் ஏற்படுத்தித் தருகின்றனர்.

அது மட்டுமல்ல, அந்தப் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் அந்தக் குழுவின் சார்பில் அந்தப் பெண் குழந்தைகளுக்கு ரூ.21 ஆயிரம் வழங்கப்படுகிறது. அத்துடன் தாய்-தந்தையரின் பத்தாயிரம் ரூபாய் சேர்த்து அப்பெண் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, அதில் சேமித்துவிட வேண்டுமாம்.

அந்தப் பெண் 20 வயதாகும்போது மரம் வளர்வது போல இந்தத் தொகையும் வளர்ந்து அந்தப் பெண்ணின் கல்விக்கும், திருமணத்துக்கும் உதவுகிறது.

இந்த நடைமுறைகளை ஒவ்வொரு கிராமமும் பின்பற்றினால் என்ன?

சங்கப் புலவர் ஒருவர், மரத்தோடு தொடர்புடைய மிக நுட்பமான செய்தி ஒன்றை நற்றிணையில் (பா.172) பாடியுள்ளார். தலைவன்-தலைவி இருவரும் ஒரு பூஞ்சோலைக்குள் நுழைகின்றனர். அங்கே ஒரு புன்னை மரம் இருக்கிறது. அதன் அடர்ந்த கிளைகளின் நிழலில் அமர்ந்து காதல் மொழிகள் பேச ஆசைப்படுகிறான் தலைவன். ஆனால், "இந்த இடத்தில் வேண்டாம்' எனத் தலைவி வெட்கப்பட்டு மறுக்கிறாள்.

"என்ன காரணம்?' என்று கேட்கிறான் தலைவன். "இந்தப் புன்னை மரம் எனக்கு தமக்கை உறவாகும்' என்கிறாள். "மங்கைக்கு மரம் சகோதரியா?' என அவன் கேட்க நினைப்பதற்குள் அவளே சொல்கிறாள்:

"என் தாய் இளம் வயதில் இச்சோலையில் வந்து விளையாடுவாளாம். அப்போது கேட்பாரற்றுக் கிடந்த ஒரு புன்னை விதையை இந்த மண்ணில் ஊன்றி வைத்திருக்கிறாள். அவள் கன்னிப் பருவம் எய்தியபோது இந்த மரமும் வளர்ந்துள்ளது. என் அன்னை வளர்த்ததால் இந்த மரம் எனக்கு சகோதரி உறவு ஆனது. அதனால், என் சகோதரியின் முன்பு உன்னோடு காதல் கதை பேசுவது எவ்வாறு? எனக்கு நாணம் உண்டாகாதா?'' என்கிறாள்.

இப்படி அஃறிணையைக்கூட உயர்திணையாக்கிக் காட்டி, மரங்களுக்குப் பெருமை சேர்த்து மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

ஆகவே, நாம் ஒன்பதைப் பிடுங்கினால் ஒன்றையாவது நட்டு, நம் சந்ததியினரை உலக வெப்ப மிகுதிக்கு ஆளாக்காமல் பாதுகாப்போம் - நாமும் பயன் பெறுவோம்.

புது அரசு மருத்துவ கல்லூரியில் எம்.சி.ஐ., குழு ஆய்வு : வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை?

அரசு ஓமந்தூரார் தோட்டத்தில், புதிய மருத்துவ கல்லூரி பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலான எம்.சி.ஐ.,யின் குழு, நேற்று திடீர் ஆய்வு நடத்தியது. முறையான அனுமதி பெற்று, திட்டமிட்டபடி, வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை துவங்கும் என தெரிகிறது.சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில், கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, பிரமாண்டமாக, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த கட்டடம், அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு, 2014 பிப்., 22 முதல் செயல்பட்டு வருகிறது.

இங்கு, 'எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 100 மாணவர்களை சேர்க்கும் வகையில், புதிய மருத்துவக்கல்லூரி துவக்கப்படும்' என, அரசு அறிவித்தது. 200 கோடி ரூபாயில், ஏழு அடுக்கு மாடி கட்டடங்களின் கட்டுமானப் பணி நடந்தது.இந்தப்பணிகள் முடிந்து, செயல்படத் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன், மருத்துவக்கல்லூரி தயாராக உள்ளது.மூன்று பேர் கொண்ட, எம்.சி.ஐ., குழு, நேற்று ஆய்வுக்கு வந்தது.புதிய மருத்துவ கல்லூரியில் உள்ள வசதிகள்; இதற்காக உருவாக்கப்பட்ட, கஸ்தூரி பா அரசு பொது மருத்துவமனையில், நோயாளிகள் வருகை, சிகிச்சை வசதிகள், பணியாளர் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தியது.மருத்துவ கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, கல்லூரி முதல்வர் சாந்திமலர் உள்ளிட்டோர், பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். ஆய்வுப்பணி நேற்றுடன் முடிந்தது.இந்த குழுவினர் தரும் அறிக்கை அடிப்படையில், எம்.சி.ஐ., முறையான அனுமதி அளிக்கும் என தெரிகிறது.மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறுகையில், ''கல்லூரி, செயல்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. எம்.சி.ஐ., ஆய்வு முடிந்துள்ளது. திருப்திகரமாக அனைத்து பணிகளும் முடிந்துள்ளதால், நிச்சயம் செயல்பாட்டு அனுமதி கிடைக்கும். வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த, அனைத்து முயற்சிகளையும், அரசு எடுத்து வருகிறது,'' என்றார்.- நமது நிருபர் -

விண்ணப்பங்கள் குவிந்ததால் குலுக்கல் முறையில் ‘எச் 1 பி’ விசா அமெரிக்கா முடிவு

logo

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி வேலை நிமித்தமாக செல்கிறவர்களுக்கு அந்த நாட்டு அரசு ‘எச் 1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடத்தில் பெரும் வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து 3–வது ஆண்டாக இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டும் தேவைக்கு அதிகமாக குவிந்து விட்டன. அதுவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட 5 நாட்களுக்குள் குவிந்து விட்டன.

இந்த ஆண்டும் கடந்த ஆண்டுகளைப் போன்றே 65 ஆயிரம் ‘எச் 1 பி’ விசா வழங்கப்பட உள்ளது.

மேலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படும்.

தற்போது மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதை அடுத்து, இரு பிரிவிலும் கணினிவழி லாட்டரி குலுக்கல் நடத்தி விசா வழங்கப்படும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு பணிகள் அமைப்பு அறிவித்துள்ளது.

சிவப்பு ரத்தம் குடித்த செம்மரக்கட்டை

கடலில் மட்டுமல்ல, காடுகளில் எல்லைத்தாண்டி போனாலும், உயிருக்கு ஆபத்து என்பதை நிரூபிக்கும் ஒரு கொடூர சம்பவம் ஆந்திரா வனப்பகுதிகளில் அரங்கேறியிருக்கிறது. செம்மரக்கட்டைகளை வெட்டிக்கொள்ளையடித்ததாக தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 20 இளைஞர்கள், ஆந்திர மாநில போலீசைச் சேர்ந்த செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தென்மாநிலங்களில் எங்கும் இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் 20 பேர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது இதுவே முதல்முறையாகும். ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள சிலருக்கு மரம் வெட்டுவதில் உள்ள லாவகம் வேறு யாருக்கும் இருப்பதில்லை என்பார்கள். சாதாரண ரம்பத்தை பயன்படுத்தியே மரங்களை வெட்டி, பட்டையை உரித்து, லாரிகளில் ஏற்றும் வலிமை கொண்டவர்கள் என்பதால், ஆந்திராவில் உள்ள வனப்பகுதிகளில் செம்மரத்தை வெட்டி கடத்தும் தொழிலுக்கு இவர்களைத் தேடிப்பிடித்து கடத்தல்காரர்கள் இந்த வேலைகளில் ஈடுபடுத்துகிறார்கள். இது உயிருக்கு ஆபத்தான வேலை என்றாலும், ஒருநாள் காட்டுக்குள் சென்று செம்மரத்தை வெட்டிக் கொடுத்தால் பலமுள்ளவன் ரூ.20 ஆயிரத்தை சம்பாதித்துக் கொண்டு வந்து விடலாம் என்ற நப்பாசையில், உயிரை பணயம் வைத்து இந்த தொழிலுக்கு செல்கிறார்கள்.

இதுவரையில் பலர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் மே மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர்களும், ஜூன் மாதத்தில் ஒருவரும், ஜூலை மாதத்தில் 2 பேர்களும், ஆகஸ்டு மாதத்தில் 2 பேர்களும் செம்மரம் வெட்டச் சென்ற நேரத்தில் ஆந்திர போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், இப்போதும் ஆந்திரா வனப்பகுதிகளில் செம்மரம் வெட்டச் சென்ற நேரத்தில் கைது செய்யப்பட்ட 1,121 தமிழக மக்கள் கடப்பா, கர்னூல், நெல்லூர், சித்தூர் மாவட்ட சிறைகளில் கைதிகளாக இருக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் காட்டுக்குள் போய் செம்மரம் வெட்டப் போனால் பிடித்து ஜெயிலில் போடுவார்கள், துப்பாக்கியால் சுடுவார்கள் என்ற பயமில்லாமல் இப்படி போய் மாட்டிக் கொண்டு உயிரிழந்து இருக்கிறார்கள்.

ஆந்திர அரசாங்கம் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 4,160 டன் செம்மரக்கட்டைகளை ஏலம் போட்டே கடந்த டிசம்பர் மாதத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. ஒரு பக்கம் தொடர்ந்து இவ்வாறு செம்மரம் வெட்டப்பட்டுக் கொண்டே இருந்தால், தமிழக காடுகளில் சந்தன மரங்களை வெட்டிச் சாய்த்த நிலை செம்மரங்களுக்கும் வந்துவிடும், அரசுக்கு வரவேண்டிய வருமானம் களவாடப்படுவது மட்டுமல்லாமல், காடுகளும் அழிக்கப்பட்டுவிடும் என்ற எண்ணத்தில் செம்மரம் வெட்டுபவர்களை சுட்டுத் தள்ள போலீசுக்கு, ஆந்திர அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அப்படி இருந்தும் சட்ட விரோதமாக மரம் வெட்டச் சென்று உயிரை இழந்துவிட்டனர். இனி மேலும் இப்படி யாரும் செம்மரம் வெட்டவரக் கூடாது, வந்தால் இதுதான் நிலை என்று காட்டுவதற்காக இந்த துப்பாக்கி சூடு நடந்தது போல தெரிகிறது. இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தி உயிரை பறித்தற்கு பதிலாக கைது செய்து இருக்கலாம், முட்டுக்குகீழ் சுட்டு இருக்கலாம், அதைத்தவிர்த்து இப்படி செய்தது மனித உரிமை மீறிய செயல், இது போலி என்கவுண்டர், சி.பி.ஐ. விசாரணை, நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இனியும் ஜவ்வாது மலையில் இருந்து யாரும் இந்த செம்மர கடத்தல் தொழிலுக்கு செல்லாத வகையில், அவர்களுக்குரிய வாழ்வாதாரத்தை வழங்க பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்கள், மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டங்கள், வேலைவாய்ப்பு திட்டங்களை மத்திய அரசாங்கமும், மாநில அரசும் நிறைவேற்றி, அவர்களுக்கு புதிய வாழ்வை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

Wednesday, April 8, 2015

NRI couple barred from taking a flight from China to Chennai

CHENNAI: Lack of communication about the lifting of a travel ban led to officials of an airline barring a woman from the city and her husband, both US nationals, from taking a flight from Kunming, China, to Chennai, where they intended to visit the woman's mother.

The woman and her husband had to return directly to the US from China.

The Bureau of Immigration was apparently the villain of the piece, having failed to convey to airlines that the country had lifted a rule barring foreign nationals from travelling to India on a tourist visa more than once within a two-month period.

Amiya Kesavan, the woman's mother, told TOI that her daughter Kamala Kesavan Witowsky and her husband James Witowsky, both US nationals, arrived in Chennai from the US on February 25. After spending a few days in her mother's house in Chennai, Kamala and her husband took a flight to Kunming, in southwest China's Yunnan Province, where they planned to visit friends.

Trouble was waiting for the couple in Kunming airport, from where they had tickets to fly to Chennai via Kolkata on March 11, with airline staff informing them that they could not allow them to board the aircraft because of the ban on foreign nationals visiting India a second time within two months.

After missing their flight, the Wittowskys contacted officials at the Indian mission in China, who informed them that the Centre had enforced the ban in view of the Mumbai terror attack. They said the government had lifted the ban and, anyway, it had only been applicable only to citizens of Afghanistan, Iran, Pakistan, Iraq, Sudan, Bangladesh and China, and stateless persons.

Immigration officials failed to communicate to airlines that the government had revoked the ban, so officials did not allow her daughter and son-in-law to return to India, Kesavan said.

"They were stuck in China for three days before they decided to return to the US directly from China," she said. "Kamala and her husband attempted in vain to contact immigration officials in both New Delhi and Chennai. Nobody answered their calls."

As a result, she said, they could not use or cancel the tickets they booked for the flight from Kunming to Chennai via Kolkata, causing them both distress and unnecessary financial loss.

Immigration officials were not available for comment.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...