Saturday, April 11, 2015

சி.பி.சி.ஐ.டி. மீது நம்பிக்கை

இப்போதெல்லாம் எந்த கொலையோ, கொள்ளையோ நடந்தாலும், உடனடியாக மக்கள் சி.பி.ஐ. விசாரணைவேண்டும் என்று கேட்பது வாடிக்கையாகிவிட்டது. பொதுவாக ஒரு குற்றம் நடந்தால், மாநில போலீசார்தான் விசாரிப்பார்கள். சற்று கொந்தளிப்பை ஏற்படுத்திய குற்றம் என்றால், உடனடியாக மாநில அரசு நாங்கள் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடுகிறோம் என்று கூறுவது வழக்கம். சில நேரங்களில் அதிலும் மக்கள் திருப்தியடையாமல், சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்பது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்படி உணர்வு ஏற்படுவது நல்லதல்ல.

ஆனால், சி.பி.சி.ஐ.டி.யும் எல்லா வழக்குகளையும் புலன்விசாரணை செய்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை இருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. சமீபத்தில் சமூகஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சி.பி.சி.ஐ.டி.யில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்ற கேள்விகளை குறிப்பிட்டு, அதோடு சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும் பல முக்கியமான வழக்குகளைப்பற்றியும் கேட்டிருந்தார். ஆனால், சி.பி.சி.ஐ.டி. சார்பில் ஒரேவரியில், தகவல்களை அளிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி முடித்துவிட்டார்கள். பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால் வழக்குகளுக்குள் செல்லாமல் பொதுவான விவரங்களை அளிக்க ஒரு கட்டாயம் இருக்கவேண்டும். இதற்கு அடுத்தநாள், ஐகோர்ட்டு மதுரை கிளையில் வந்த ஒரு வழக்குத்தான், எல்லோரையும் மனக்குறைக்கு ஆளாக்கியுள்ளது.

விருதுநகரில் 2005–ம் ஆண்டு நடந்த ஓய்வுபெற்ற வருமானவரித்துறை ஆணையர் எபநேசர் பால், அவர் மனைவி ஷீலா கொலை வழக்கில் குற்றவாளிகளின் கைரேகை கிடைத்தபிறகும், 9 அதிகாரிகள் புலன்விசாரணை செய்த நிலையிலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியாமல் கைவிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சி.பி.ஐ. விசாரணைக்கோரி வழக்கு போடப்பட்டு இருந்தது. நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி.யின் பணி அளவை கருத்தில்கொண்டால், மேலும் பல அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள் என்று சூப்பிரண்டு அன்பு தெரிவித்த கருத்தும், தொடர்ந்து நீதிபதி அளித்த தீர்ப்பும் நிச்சயமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டியதாகும்.

சி.பி.சி.ஐ.டி. முதன்மையான புலன்விசாரணை அமைப்பாகும். மக்கள் சி.பி.சி.ஐ.டி. மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வேகமான புலன்விசாரணை முடிந்து, நீதி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால், அவர்களாலேயே குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால், தங்கள் குறைகளை தீர்க்க மக்கள் எங்கே போவார்கள்? என்றுதான் எனக்கு தெரியவில்லை. சமீபகாலமாக பல வழக்குகளில், பொதுமக்கள் சி.பி.ஐ. விசாரணைவேண்டும் என்று கேட்கிறார்கள். இந்த உணர்வு இப்படி வளர்வது தமிழக போலீசுக்கு நல்லதல்ல என்று கூறிய நீதிபதி எஸ்.நாகமுத்து, உடனடியாக சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து இந்த வழக்கை மீண்டும் விரைவாக புலன்விசாரணை செய்யவேண்டும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்கவேண்டுமென உத்தரவிட்டுள்ளார். ஆக, இந்த நிலையில், உடனடியாக சி.பி.சி.ஐ.டி.யின் உள்கட்டமைப்பு வசதிகளும், திறமைவாய்ந்த அதிகாரிகள், போலீசாரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு, இந்த படையை வலுப்படுத்தவேண்டும். இதுபோல, ஐகோர்ட்டு நீதிபதி குறைகளை சுட்டிக்காட்டும் அளவுக்கு இல்லாமல், தமிழக காவல்துறையும், தமிழக அரசும் இனி எந்த வழக்கும் புலன்விசாரணை செய்யமுடியாமல், குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியாமல் கைவிடப்பட்டது என்ற நிலையை உருவாக்கிவிடாமல், ஒவ்வொரு வழக்கும் எவ்வளவு நாட்களுக்குள் கண்டுபிடிக்கவேண்டும் என்ற காலக்கெடுவை நிர்ணயிக்கவேண்டும். தமிழக போலீசார், ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் என்ற பெயரை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

Friday, April 10, 2015

1960களின் அற்புதங்கள்: சிரிப்புக்குப் பஞ்சமில்லை

’காதலிக்க நேரமில்லை’ படத்தில்

அப்போதெல்லாம் திரைப்படக் கொட்டகைக்கு வரும் ரசிகர்கள், கதாநாயகன், கதாநாயகிக்குப் பிறகு படத்தில் ‘டமாஷ்’ நடிகர் யார் என்றுதான் துழாவுவார்கள். அவர்களை ஏமாற்ற விரும்பாமல் நகைச்சுவை நடிகர் - இடமிருந்தால் - நடிகையும் சுவரொட்டியில் இடம்பெறுவார்கள். டைட்டில் போடும்போது கதாநாயகனுக்கு விசிலும் கைதட்டலும் பறக்கும். அதில் பத்தில் ஒரு பங்கு நகைச்சுவை நடிகருக்கும் உண்டு. கதாநாயகிக்குக்கூட சீட்டியோ கைதட்டலோ அதிகம் இருந்ததில்லை. (அந்தக் காலத்திலேயே அவ்வளவு ஆணாதிக்கம், ஹூம்..)

பாலய்யா, எம்.ஆர். ராதா, எஸ்.வி. சகஸ்ரநாமம் போன்ற குணச்சித்திர நடிகர்களுடன் தங்கவேலு, நாகேஷ், சோ, வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா, வி,கே. ராமசாமி, சச்சு போன்றவர்கள் இணைந்து சிரிக்கவைத்த வழங்கிய காலம் 1960கள். நாகேஷின் ஆக்கிரமிப்பு இருந்த பத்தாண்டு இது. நகைச்சுவைக் காட்சிகளைத் தனியாகத் தயாரித்து இணைக்கும் என்.எஸ். கிருஷ்ணன் பாணி சற்றே ஓய்வெடுத்துக்கொண்ட காலம் .

நினைத்து நினைத்துச் சிரிக்க

அடுத்த வீட்டுப் பெண் (1960-61) அறுபதுகளின் நகைச்சுவைப் போக்கைத் தொடங்கிவைத்த படம் என்று சொல்லலாம். கதாநாயகன் ராமாராவ், நாயகி அஞ்சலி தேவி. அடுத்த வீட்டுப் பெண்ணான அஞ்சலி தேவியைக் காதலிக்கவும் கைப்பிடிக்கவும் அவருக்கு உதவுகிறார்கள் ‘காரியம் கைகூடும் சங்கம்’ (‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்துக்கு முன்னோடி!) அமைப்பைச் சேர்ந்த தங்கவேலு, கருணாநிதி, பிரண்ட் ராமசாமி உள்ளிட்ட நால்வர் அணி. இந்தப் படத்தில் பாட்டு வாத்தியார் புலவர் பூவரசன்தான் காமெடி வில்லன். இன்றைக்கும் பார்த்தும் நினைத்தும் சிரிக்க முடிகிற படம்.

தெய்வப் பிறவி திரைப்படத்தின் தங்கவேலு நகைச்சுவை தனி இசைத்தட்டாக வெளிவந்து சக்கைபோடு போட்டது. நாள் முழுக்க நண்பர்களுடன் சீட்டாடுவது, மனைவி பக்கத்து வீட்டுப் பெண்களுடன் ஊர் வம்பு பேசுவது என்று குடும்பம் சீரழிய அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் அம்மா, அப்பா விளையாட்டாகவே அதை நடிப்பதை சிரிக்கச் சிரிக்கச் சொன்னார் தங்கவேலு. ஆபாச வசனங்களைப் பேசாத அற்புதக் கலைஞர் தங்கவேலு. அவருடைய குரலின் ஏற்ற இறக்கமே காட்சிக்கும் வசனத்துக்கும் தனி பலத்தைத் தந்துவிடும்.

முழுமையான நகைச்சுவை

காதலிக்க நேரமில்லை. எவ்வளவுதான் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சி ஒரு நகைச்சுவைப் படத்தை எடுத்துவிட முடியுமா என்று சவால்விடும் நகைச்சுவைக் காவியம். கதை எங்க கிடைக்கும்? அட ஹாலிவுட்டிலோ பாலிவுட்டிலோகூடக் கிடைத்துவிடும். பாலய்யா, நாகேஷுக்கு எங்க சார் போவீங்க? தன்னால் உதாசீனப்படுத்தப்பட்ட அசோகன் என்னும் இளைஞன் பணக்கார வீட்டுப் பிள்ளை என்று தெரிந்ததும், ‘அசோகர் உங்க மகரா?’ என்று புதிய சொல்லாட்சியையே படைத்துவிட்டாரே பாலய்யா!

‘டேய் செல்லப்பா, உன் படத்துடைய கதையைக் கொஞ்சம் சொல்லு பாப்பம்’ என்று வம்பில் போய் மாட்டிக்கொள்ளும்போதும் சரி, பீதியில் ஆழ்ந்து கதை போதும் என்று சொல்லி நிறுத்திய பிறகு பணமும் கிடையாது ஒண்ணும் கிடையாது என்று இயல்பு நிலைக்கு வரும்போதும் சரி, எங்கேயோ கொண்டுபோய்விடுகிறாரே?

‘என் கதை என்னோட மடியட்டும்’ என்று செல்லப்பா (நாகேஷ்) சொன்னபோது சிரித்துத் தொலைத்தோமே, அதனால்தான் இன்னொரு கா.நே. நமக்குக் கிடைக்கவில்லை.

நாயக நடிகர்களின் நகைச்சுவை

நாயகனே நகைச்சுவையிலும் வெளுத்துக் கட்டுவது அப்போது தோன்றிய பழக்கம்தான். சிவாஜி கணேசன் அப்படிப் பல படங்களில் நடித்திருக்கிறார். பலே பாண்டியா அதில் ஒன்று. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விரும்பும் வில்லனின் கண்ணில் படுகிறான் அப்பாவி பாண்டியன்.

30 நாள் மட்டுமே வாழ்ந்துவிட்டுச் செத்துப்போவதாக வாக்குறுதி கொடுக்கும் அப்பாவி, பணக்காரக் காதலி கிடைத்ததும் வாக்குறுதி தவறுகிறான். வில்லனைப் போலவே தோற்றம் கொண்டவர்தான் காதலியின் தந்தை என்று தெரியாமல் அவர் வீட்டுக்குப் போய், ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்று பாடத் தொடங்கி முத்தாய்ப்பாக முகத்தைப் பார்த்து ஓடும் காட்சியை இருக்கையில் உட்கார்ந்து பார்க்க முடியும் என்றா நினைக்கிறீர்கள்?

எங்கும் பரவிய நகைச்சுவை வாசம்

முழு நகைச்சுவைப் படங்கள் ஒருபுறம் வந்தவண்ணம் இருக்க, வேறு வகையான படங்களிலும் அங்கத ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது. 1964-ல் வெளியான நவராத்திரி, சிவாஜியின் நவரச நடிப்பாற்றலையும் சாவித்திரி ஒரு நடிகையர் திலகம் என்பதையும் வெளிப்படுத்தியது.

திருவிளையாடல் படத்தில் தருமிக்குப் பொற்கிழி கொடுக்கவும், ஹேமநாத பாகவதரை மதுரையை விட்டுக் கிளப்பவும் சிவன் செய்த திரு விளையாடல்களை நகைச்சுவை கலந்து சொன்னார் ஏ.பி. நாகராஜன். தருமி – சிவன் உரையாடல் அற்புதமான தமிழ் விருந்து. சுறா மீனை சிவன் வதம் செய்யும் காட்சியும் அதற்குப் பிறகு கடற்கரை மணலில் அவர் டஜிங் டஜிங் என்று நடப்பதும் - எதில்தான் நகைச்சுவை இல்லை போங்கள்!

தேன் நிலவு - ஸ்ரீதரின் அற்புதமான கதை, இயக்கத்தில் உருவான மெலிதான நகைச்சுவைப் படம். நாகேஷும் சோவும் சேர்ந்து நகைச்சுவையை மழையாகப் பெய்த படம்.

ஊட்டிவரை உறவு திரைப்படம் காதல், நகைச்சுவை, குடும்பக்கதை என்று எல்லாமும் சரிவிகித கலவையில் கலந்த படம்.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை நகைச்சுவைப் படமாக வகைப்படுத்த முடியாது. ஆனால் தரமான கைச்சுவைக்கு உதாரணமான படம். பாலய்யா, சாரங்கபாணி, நாகேஷ், மனோரமா, ராமாராவ், தங்கவேலு, மனோரமா எல்லோரும் ஒரு படத்தில் இருந்தால் வேறு எப்படி இருக்கும்.

நீலகிரி எக்ஸ்பிரஸ் திகிலான நகைச்சுவைப்படம். சோ ஜெய்சங்கருடன் சேர்ந்து கலக்கியிருப்பார்.

அப்படியே விட்டுவிடுங்கள்

இது ரீமேக் யுகம். பல படங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் திரும்ப எடுக்கிறார்கள். குறைந்த பட்சம் தலைப்புகளையாவது தூக்கிவிடுகிறார்கள். ஆனால் அறுபதுகளின் மாசற்ற நகைச்சுவையை இப்போது மீண்டும் திரையில் கட்டமைக்க முடியாது. காரணம், சமூகக் கட்டமைப்பு அடியோடு மாறிவிட்டது.

பாட்டிலைத் திறக்காமல், வாட்ஸ்அப்பில் கடலை போடாமல், யாரையும் கேவலமாகத் திட்டாமல் சிரிக்கவைக்க முடியாது என்று ஆகிவிட்ட காலம் இது. எனவே, அறுபதுகளின் நகைச்சுவைச் சித்திரங்களின் அசல் வடிவங்களையே பார்ப்பதுதான் நல்லது. இதன் மூலம் அந்தக் காலம் எப்படியிருந்தது என்றும் புரிந்துகொள்ளலாம்.

புதிய திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு அன்பு வேண்டுகோள்: துளியும் முகம் சுளிக்காமல் இன்றும் சிரிக்கவைக்கும் இந்தப் படங்களைப் போல் படம் எடுக்கச் சொந்தமாக முயற்சிசெய்து பாருங்கள். இந்தப் படங்களை அப்படியே விட்டுவிடுங்கள். அதுவே தமிழ்த் திரையுலகுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.

சித்திரை மலரில் (2015) வெளியாகியிருக்கும் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்

கமிஷன் தொகையை உயர்த்த கோரி போராட்டம் பெட்ரோல் பங்க்குகள் நாளை, பகலில் மட்டுமே இயங்கும் டீலர்கள் சங்கம் அறிவிப்பு



பெட்ரோல்–டீசல் கமிஷன் தொகையை அதிகரிக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் நாளை(சனிக்கிழமை) பகலில் மட்டும் இயங்கும் என்று விற்பனை டீலர்கள் அறிவித்துள்ளனர்.

கமிஷன் தொகை

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள்(டீலர்கள்) சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி, பொதுச் செயலாளர் எம்.ஹைதர் அலி ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

கடந்த 2010–ம் ஆண்டு அபூர்வா சந்திரா கமிட்டி குழு, 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3.50–ம், டீசலுக்கு ரூ.2–ம் கமிஷன் தொகையாக பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு வழங்க பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் இந்த பரிந்துரையை செயல்படுத்தாமல் 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2–ம், டீசலுக்கு ரூ.1.20–ம் கமிஷனாக வழங்கி வருகிறது.

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்திடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த காலக்கெடு கடந்த மார்ச் 31–ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது. எனவே உடனடியாக பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு நியாயமான விளிம்புத் தொகையை வழங்கிட வேண்டும்.

புதிய பங்க்குகள்

நாட்டில் 53 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இந்தநிலையில் எண்ணெய் நிறுவனங்கள் புதிதாக 33 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளை திறக்க விளம்பரம் செய்துள்ளனர். இது தேசிய அளவிலான பெட்ரோலிய பொருட்களின் விற்பனை வளர்ச்சிக்கும், புதிய விற்பனை நிலையங்களின் அறிவிப்புக்கும் எந்தவித பொருத்தமும் இல்லை. எனவே புதிய பெட்ரோல் பங்க்குகள் நிறுவுவதை நெறிமுறைப்படுத்திட வேண்டும்.

எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனையாளர்கள் கொடுத்துள்ள குத்தகை நிலத்தை திரும்ப பெறுவதற்கான கொள்கை வரைவினை எளிதாக்க வேண்டும்.

விற்பனை நிலையங்களில் பெட்ரோல்–டீசல் எண்ணெய் நிறுவன லாரிகளில் இருந்து பெறப்படும்போது, அதன் அளவினை கண்காணித்திட ரசீதுடன் கூடிய அளவீட்டு கருவியை எண்ணெய் நிறுவனங்கள் நிறுவிட வேண்டும்.

கொள்முதல் நிறுத்தம்

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை மாறும் தேதி குறித்து, முன் அட்டவணையின்படி கால நிர்ணயம் செய்திட வேண்டும். சில்லறை விற்பனை நிலைய உரிமையாளர்களின் குடும்ப உறுப்பினருக்கு விற்பனை நிலையத்தின் உரிமத்தினை மாற்றிடும்போது, புதிய கட்டணம் வசூலிப்பதில் விலக்களித்திட வேண்டும்.

பெட்ரோல்–டீசல் இரண்டு பொருட்களை வெவ்வேறு இடங்களில் ஒரே உரிமத்தில் விற்பனை செய்து வருபவர்களை, அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஒரே இடத்தில் விற்பனை நிலையத்தினை அமைத்திட வழிவகை செய்திட வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, முதற் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 53 ஆயிரம் பெட்ரோல் பங்க்கில் 10–ந்தேதி(நாளை) ஒரு நாள் பெட்ரோல்–டீசல் கொள்முதலை நிறுத்தப்படும்.

ரூ.1,025 கோடி இழப்பு

மேலும் அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் பங்குகள் செயல்படும். பெட்ரோல்–டீசல் கொள்முதலை நிறுத்துவதன் மூலம் ரூ.300 கோடியும், பகுதி நேரமாக பெட்ரோல் பங்க்கை இயக்குவதன் மூலம் ரூ.725 கோடியும் இழப்பு ஏற்படும். தமிழ்நாடு–புதுச்சேரியில் உள்ள 4 ஆயிரத்து 500 பங்க்குகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

லோக் ஆயுக்தாதான் நிரந்தர தீர்வு

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜோ பிடன், தொடர்ந்து இருமுறையாக ஒபாமாவுடன் ஒன்றாக பணியாற்றுபவர். ஊழலுக்கு எதிரான கொள்கையுடையவர். ஊழலை எதிர்ப்பது சிறந்த நிர்வாகம் மட்டுமல்ல, அது சுய பாதுகாப்பு; அது நாட்டுப்பற்று என்பது அவர் உதிர்த்த பிரகடனம். தமிழ்நாட்டில் அதை கடைப்பிடித்து தன்னுயிர் ஈத்த ஒரு அதிகாரியின் மரணத்துக்கு இப்போது பரிகார நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. திருநெல்வேலியில் வேளாண்மைத்துறையில் உதவி செயற்பொறியாளராக வேலைபார்த்தவர் முத்துக்குமாரசாமி. பதவியில் இருந்து ஓய்வுபெற 8 மாதங்களே இருந்த முத்துக்குமாரசாமி, தன் பணிக்காலம் முழுவதுமே எந்த புகாருக்கும் இடமில்லாமல் வாழ்ந்தவர். அப்படிப்பட்ட அதிகாரி தன்னுடைய துறையில் 7 டிரைவர்களை நியமிக்கவேண்டிய நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து சீனியாரிட்டி லிஸ்ட் பெற்று, அதன்அடிப்படையில் தகுதியானவர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர் கருணாகரன் உத்தரவின்பேரில், உத்தரவையும் அனுப்பிவிட்டார்.

அவ்வளவுதான் சென்னையில் இருந்து அவருக்கு தொல்லைக்குமேல் தொல்லை, மிரட்டலுக்குமேல் மிரட்டல் அலை அலையாய் செல்போன் மூலம் வந்தது. ஒரு டிரைவருக்கு 1.75 லட்ச ரூபாயை வசூலித்துத்தா என்ற அச்சுறுத்தலைத்தாங்க முடியாமல், ரெயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வந்தது, எல்லோரையும் சோகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுவிட்டது. இதற்காக உடனடியாக போர்க்குரல் தொடுத்த அனைத்து அரசியல் கட்சிகளும், தங்கள் வீட்டில் ஒருவருக்கு நடந்த சம்பவம்போல இதை கருதி செயல்பட்டது. இதில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், அவரது உதவியாளர்களும், உயர் அதிகாரியும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று தகவல் கிடைத்தவுடன், அவரை முதலில் கட்சி பதவியில் இருந்து நீக்கிய அ.தி.மு.க. தலைமை, அடுத்து அமைச்சர் பதவியில் இருந்தும் தூக்கிஎறிந்தது. அந்த துறையின் தலைமை பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டுள்ளதால், அதிகாரிகளின் மத்தியிலும் ஒரு அச்சம் பிறந்துவிட்டது. செந்திலின் வாக்குமூலம் முத்துக்குமாரசாமியின் மரணத்துக்கு காரணமாக வெளிவந்த செய்திகளையெல்லாம் உறுதிப்படுத்தியுள்ளது. இப்போது தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற திருச்சி அரசு மருத்துவமனை உள்ளுறை மருத்துவர் டாக்டர் நேரு, அரசியல்வாதிகளின் தொல்லையால்தான் இந்த முடிவை எடுத்தேன் என்றது இந்த பரபரப்பின் வேகத்தை கூட்டியுள்ளது.

பொதுவாக அரசு ஊழியர்களின் நியமனத்திலும், இடமாறுதல்களிலும், பதவி உயர்வுகளிலும் நடக்கும் ஊழல்தான் அரசு நிர்வாகத்தில் ஊழலை பெருக்கெடுத்து ஓடச்செய்துவிடுகிறது. தாங்கள் கொடுத்த பணத்தை எப்படியும் மீட்டே தீரவேண்டும் என்ற வெறியில் முதலில் பணம் வாங்கத்தொடங்கும் அரசு ஊழியர்கள், பிறகு ருசிகண்ட பூனைகளாக மாறி ஊழலிலேயே திளைத்துவிடுகிறார்கள். இதையெல்லாம் தடுப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மசோதாதான் லோக்பால் மசோதா. ஆண்டாண்டுகாலமாக சொல்லப்பட்டு வந்தாலும், அன்னா ஹசாரே போராட்டத்துக்குப் பிறகுதான், பியூன் முதல் பிரதமர் வரை யார் மீதும் ஊழல் புகார் கொடுப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் வகைசெய்யும் லோக் பால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பும் ஏற்படுத்தப்படவேண்டும். அப்படி ஒரு அமைப்பு இருந்தால் முத்துக்குமாரசாமி போன்றவர்கள் இப்படி தற்கொலை செய்யவேண்டியது இல்லை. அங்குபோய் புகார் கொடுத்து இருக்கலாம். எனவே, ஒரு அமைச்சரையே கைது செய்த தமிழக அரசு, உடனடியாக லோக் ஆயுக்தா அமைப்பையும் அமைத்து, ஊழலை ஒழிக்க அசுர வேகம் எடுக்கவேண்டும். இனியும் யாரும் இப்படி முத்துக்குமாரசாமி போல தற்கொலை செய்துகொள்ள இடமளிக்காமல், என்னுடைய மனக்குறையை சொல்வதற்கு ஒரு அமைப்பு இருக்கிறது, அங்குபோய் நான் புகார் செய்வேன், எனக்கு நீதி கிடைக்கும் என்ற நிலையை அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்த லோக் ஆயுக்தாதான் சிறந்த வழி.

சமுதாய அக்கறையும் வேண்டும்

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு விடுக்கும் சிறிய வேண்டுகோள் என்னவெனில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது சிறிதளவாவது சமுதாய அக்கறையும் இருக்க வேண்டும் என்பதே.

இன்றைய நகர இளைஞர்களில் 100-க்கு 99 சதவீதத்தினர், ஏன்... 100-க்கு 100 சதவீதத்தினரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்று எந்த அயல் நாட்டில் இருந்தாலும் "ஸ்கைப்' தொழில்நுட்பம் மூலம் நேருக்குநேர் பேசிக்கொள்கின்றனர்.

முகநூல் (பேஸ்புக்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்), சுட்டுரை (டுவிட்டர்) என இன்றைய இளைஞர் சமுதாயம் புகுந்து விளையாடுகிறது. இதன் மூலம், தங்களது கருத்துகளை எளிதில் தெரிவித்து விடுகின்றனர்.

கிராமப்புற இளைஞர்களும் இந்த சமூக வளைதளங்களின் வலைவீச்சுக்குத் தப்பவில்லை. அந்த அளவுக்கு சமூக வலைதளங்கள் நமது இளைஞர்களை வளைத்துப் போட்டுவிட்டன.

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் செய்தித்தாள்களும், அதை விட்டால் வானொலிப் பெட்டியும் மட்டுமே காண முடியும். ஆனால், இன்றைய நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

கையில் ஆண்ட்ராய்டு எனப்படும் அதிநவீன வசதிகளைக் கொண்ட செல்லிடப்பேசி இல்லாத கிராமத்து இளைஞரைக் காண முடியாது.

ஆனால், அப்படிப்பட்ட அந்த இளைஞர் சமுதாயம் இதுபோன்ற சமூக வலைதளங்களை நல்ல முறையில் பயன்படுத்துகிறதா என்றால் அங்கு நிச்சயமாக ஒரு கேள்விக்குறி விழத்தான் செய்கிறது. காரணம், சமூக வலைதளங்கள் அந்த அளவுக்குத் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆபாசப் படங்களை அனுப்புவது, அடுத்தவர் மனம் புண்படும்படியாகக் கருத்துகளை வெளியிடுவது, பிரபலங்களை விமர்சனம் செய்வது, அரசியல்வாதிகளை அநியாயத்துக்கு காலை வாருவது என சமூக வலைதள பிரியர்களின் விமர்சனங்களுக்கு ஓர் எல்லையே இல்லாமல் போய் விட்டது.

இன்னும் சிலர், திரைப்படத்தைப் பார்க்காமலேயே நண்பர்கள் சொல்வதைக் கேட்டோ அல்லது தனக்குப் பிடிக்காத நடிகராக இருந்தாலோ அந்தத் திரைப்படம் மொக்கை, கடி, சுமார் ரகம் என "ஸ்டேட்டஸ்' போடுகின்றனர்.

உண்மையிலேயே அது நல்ல படமாக இருந்தாலும், இவர்களின் விமர்சனத்தால் அந்தப் படம் தோல்வியடைந்து விடுகிறது. இதனால், கோடிகளைக் கொட்டி அந்தத் திரைப்படத்தை எடுத்தவர் தெருக் கோடிக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது.

அதேபோல, கிரிக்கெட்டில் ஒரு வீரர் சரியாக விளையாடாவிட்டால், அதற்குக் காரணம் அவரது காதலிதான் என்று தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சனம் செய்கின்றனர். இதனால், அந்த வீரர் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார் என்பதைப் பற்றியெல்லாம் இவர்கள் சிந்திப்பதே இல்லை.

இது ஒருபுறம் இருக்க, ஆசிரியர் பணியை அறப் பணியாகக் கொண்ட ஆசிரியர்களும், கண்ணியமிக்க காவல் துறையில் பணிபுரிபவர்களும்கூட இந்த சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்துவதை நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தேர்வறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஓர் ஆசிரியர், பிளஸ் 2 கணித வினாத்தாளை செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து, அதை கட்செவி அஞ்சல் மூலம் பிற ஆசிரியர்களுக்குப் பரப்புகிறார்.

சென்னை காவல் துறையில் உயர் அதிகாரி ஒருவர் பெண் காவலரிடம் பேசியதைப் பதிவு செய்து கட்செவி அஞ்சல் மூலம் பரப்புகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களால்தான் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு நீதிமன்றம் கடிவாளம் போட்டது. அதாவது, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது அத்துமீறி செயல்படக் கூடாது; அடுத்தவர் மனம் நோகும்படி, தரம் தாழ்ந்த விமர்சனம் செய்யக் கூடாது; எதற்கும் ஒரு வரையறை உண்டு என்ற ரீதியில் சமூக வலைதளப் பிரியர்களின் கையைக் கட்டிப்போட்டது நீதிமன்றம்.

13 வயதுச் சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 2013 மார்ச் 24-ஆம் தேதியே தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது இங்கு நினைவுகூரத்தக்கது. இதனால், சமூக வலைதளப் பிரியர்களின் கொட்டம் கொஞ்சம் அடங்கத்தான் செய்தது.

இந்த நிலையில்தான், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்கான கட்டுப்பாடுகளை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரத்தைப் பொருத்தவரை இது ஒருபுறம் வரவேற்கத்தக்க விஷயமாக இருந்தாலும், அதன் முழு பலனும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணம், நோக்கம், சிந்தனை ஆகியவற்றில்தான் அடங்கியுள்ளது.

குறிப்பாக, சிலர் இதுபோன்ற சமூக வலைதளங்களை பல நன்மைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். அதாவது, விபத்தில் சிக்கியவருக்கு ரத்த தானம் செய்யக் கோருவது, உடலுறுப்பு மாற்றம் தேவைப்படுபவர்களுக்கு உதவக் கோருவது என நல்ல பல விஷயங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

உதாரணமாக, சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த தாமோதரன்- சுந்தரி தம்பதியரின் மகன் சிவமணி (23), தனது 7 வயதில் பெற்றோரைத் தொலைத்தார்.

16 ஆண்டுகள் கடந்த நிலையில், தனது பெற்றோரைக் கண்டறிய விரும்பிய அவர், கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் தகவல் கொடுத்தார். விளைவு நீ...ண்ட இடைவெளிக்குப் பிறகு தனது பெற்றோருடன் இணைந்து விட்டார்.

எந்த ஒரு விஷயமானாலும், அதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். அன்னப் பறவை எப்படி பாலில் உள்ள தண்ணீரை விட்டுவிடுகிறதோ அதுபோல நாமும் சமூக வலைதளங்களில் தவறான செயல்பாடுகளைக் கைவிட்டு நல்லவற்றுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

AICTE cracks whip, denies approval for 588 colleges

The All India Council for Technical Education (AICTE) has denied 588 technical institutions across the country approval to run various programmes. Bad infrastructure, shortage of faculty and poor academic performance are the main reasons, people involved in the approval process said. Thirty-one of these institutions are in Tamil Nadu.
Technical institutions across the country , including engineering, polytechnic, management and pharmacy colleges, have to apply for approval from the AICTE every year. The colleges have to upload the details on a portal, which are verified by the apex body . The approval is mandatory for technical institutions to commence a new academic year.
When technical institutions sought approval for their courses for the academic year 2015-16, the AICTE found that 588 institutions did not satisfy the norms. “This is a routine process and every institution is expected to upload relevant documents while applying for approval. If documents pertaining to any norm are not available or not satisfactory , the application is rejected,“ an AICTE official said.
Asked about the reasons, the official said most institutions did not satisfy the infrastructure norms or were short on faculty . “From 2011-12 to 2014-15, many institutions have applied for an increase in intake. We have found problems like shortage of faculty and lack of enough classrooms and laboratories in many of the colleges,“ the official said.
Uttar Pradesh tops the list with 107 institutions being denied approval, followed by Maharashtra with 88. Tamil Nadu, the state with the high est number of technical institutions in the country , has 31 institutions that have been denied approval.
Principal of one of these colleges in Tamil Nadu said, “The demand for the course was depleting, and last year we had applied to reduce the intake. This year we have asked the AICTE to scrap the department itself.“
While there are some top institutions on the list, experts say it is because one of their courses has been denied approval. Educational consult ant J P Gandhi said, “It is not only the college infrastructure and faculty shortage that matter. Performance of faculty , recruitment of fresh faculty , implementation of biometric attendance system for faculty and research activities are also considered. Some institutions think if they have the required number of teachers it is enough. But, AICTE now looks at yearly performance too.“
Experts say this is an indication of AICTE's attempts to improve quality in engineering education.

Thursday, April 9, 2015

MUHS told to accept exam forms

PUNE: The Bombay high court has directed the Maharashtra University of Health Sciences (MUHS) to accept the examination forms of as many as 45 postgraduate Masters in Dental Surgery (MDS) students, who were admitted against minority quota seats by the M A Rangoonwala Dental College here in 2014-15 on the basis of an institutional level common entrance test (CET) held on February 9, 2014.

In an ad-interim relief granted on April 1, the bench of Justices Anoop Mohta and K R Shriram directed the MUHS to approve the title and synopsis and accept the thesis of the 45 admitted students.

It also directed the university to accept their examination forms, issue them hall tickets, allow them to appear for exams, declare their results and issue them mark lists to enable them to pursue further studies.

On February 10, the Pravesh Niyantran Samiti (PNS) had expressed its inability to approve admissions of these students and on March 23, the MUHS had refused to accept their exam forms. Incidentally, the admissions were effected on the basis of the PG-CET that was allowed by the high court through an interim order passed on February 4, 2014.

Since 2013-14, the Rangoonwala College run by the Maharashtra Cosmopolitan Education Society, a Muslim minority institution headed by educationist P A Inamdar, is engaged in a legal dispute with the PNS on whether there is any provision for a separate entrance test for minority institutions in view of the Supreme Court judgment in 2003 in the Islamic Academy of Education vs State of Karnataka.

The apex court, in that case, had dealt with the rights of minority institutions.

In November 2013, the PNS had refused permission to the college to conduct the PG-CET on the grounds that such a separate CET was against the SC orders and that the 231 other minority institutions in the state would make similar demands. The college then moved the high court against the PNS order by pointing out that it was conducting the CET with the Samiti's clearance since 2007. This petition is pending final disposal.

After the PNS rejected its application for approval of the 2014-15 MDS admissions, Inamdar moved a civil application as part of the petition pending before the court. The lawyers appearing for PNS argued on April 1 that the Samiti was not concerned with checking, controlling or approving admission of such students.

The bench, however, observed that the college had conducted the PG-CET and admissions based on the court's order. "There is no reason at this stage to hamper the students' career for the controversy so raised and specifically when considering that submissions raised by the PNS based upon the SC judgment in Islamic Academy and the earlier orders passed by this court as well as SC, this court has only granted limited prayers."

The bench pointed out that considering the arguments of the PNS vis-a-vis SC orders, it had granted only limited prayers to the extent of conduct of CET and admissions. The larger issues are still kept open. "The aspect of grant of orders passed by this court was totally overlooked. There is nothing on record to show that the PNS has no authority to admit such students. The petitioners as well as students cannot be at the eleventh hour confronted with such a situation where all are helpless in spite of the fact that this court has granted permission to petitioners to conduct the course based upon the earlier orders passed by this court."

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...