Sunday, April 12, 2015

ஊர்மணம்- புதுக்கோட்டை: 17 ஆண்டுகளுக்குப் பிறகு!....by கே.சுரேஷ்


Return to frontpage


மால் திரையரங்காக மாறியிருக்கும் ‘வெஸ்ட்’

கைபேசியில்கூட இன்று முழு திரைப்படமொன்றைப் பார்த்துவிட முடிகிறது. இந்தத் தொழில்நுட்பத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறிய பல திரையரங்கங்கள் மூச்சை நிறுத்திக்கொண்டன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உருவான முதல் திரையரங்கம், 17 ஆண்டுகளுக்குப் பின் நவீனத் தொழில்நுட்பத்தோடு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் கிழக்கு இரண்டாம் வீதியின் முக்கிய அடையாளமாக இருந்தது வெஸ்ட் திரையரங்கம். அதேபோல் வடக்கு ராஜவீதியில் ராஜா திரையரங்கம். இந்தத் திரையரங்குகளை ராயவரத்தைச் சேர்ந்த சிதம்பரம் செட்டியார் என்பவர் கடந்த 1930-ம் ஆண்டில் தொடங்கினார்.

இத்திரையரங்குகளில் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி, பி.யூ. சின்னப்பா நடித்த ஜெகதலப் பிரதாபன் ஆகிய படங்கள் 125 வாரங்கள் ஓடிச் சாதனை படைத்தன. தொடர்ந்து, நாடோடி மன்னன், வீரபாண்டிய கட்டபொம்மன், சகலகலா வல்லவன், தர்மதுரை போன்ற படங்கள் நூறு நாட்களைக் கடந்து ஓடின.

ஆனாலும் சரியான ஆதரவு இல்லாததால் வெஸ்ட் திரையரங்கம் 1998-ல் மூடப்பட்டது. மூடப்பட்ட திரையரங்கம் கடந்த காலத்தின் நினைவுகளைச் சுமந்துகொண்டு கடந்து செல்லும் உள்ளூர்வாசிகளின் கண்களுக்கு ஒரு சோகச் சாட்சியாக நின்றுகொண்டிருந்தது.

இந்நிலையில், புதிதாகக் கட்டப்பட்ட வணிக வளாகங்களுடன் கூடிய கட்டிடத்தில் கடந்த 2015 மார்ச் 22-ம் தேதி மீண்டும் வெஸ்ட் திரையரங்கம் நவீன வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட திரையரங்கில் பழமையை நினைத்துப் பார்க்கும் விதமாக எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தை முதலில் திரையிட்டபோது, ரசிகர்கள் திரண்டுவந்து படத்தைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

கைபேசிக்குக் கட்டுப்படும் வீடு...by ரிஷி

Return to frontpage

வீடுகளின் உருவாக்கம் காலம்தோறும் பல மாறுதல்களைச் சந்தித்துவருகிறது. நவீனத் தொழில்நுட்பம் வளர வளர அதன் சாதகமான அம்சங்களை, வீடுகளின் உருவாக்கத்தில் பயன்படுத்த கட்டுமான நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமானது. ஆட்டோமேஷன் எனும் தொழில்நுட்பம் பெரிய அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் பயன்பட்டு வருகிறது.

இந்தத் தொழில்நுட்பத்தின் உதவியால் அனைத்துக் கருவிகளையும் உபகரணங்களையும் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் இயலும் என்கிறார்கள் நிபுணர்கள். இந்த ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை தாங்கள் உருவாக்கும் புது வீட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தி நுகர்வோரைக் கட்டுமான நிறுவனங்கள் கவர்ந்திழுக்க விரும்புகின்றன. இத்தகைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட வீடுகள் ஸ்மார்ட்டானவை என்பதால் அவை ஸ்மார்ட் ஹோம்கள். ஸ்வீட் ஹோம் என்பது ஸ்மார்ட்டாக மாறுவது இனிப்பான செய்திதானே.

அப்படியென்ன வழக்கமான வீடுகளில் இல்லாத சிறப்பான அம்சங்கள் இந்த ஸ்மார்ட் வீடுகளில் உள்ளன என்று தோன்றுகிறதா. பல சமயங்களில் வீட்டைப் பூட்டினோமா இல்லையா? வீட்டில் ஏசியை நிறுத்தினோமா இல்லையா எனும் சந்தேகம் அலுவலம் செல்லும் வழியில் ஏற்படும். அந்த நாள் முழுவதும் மனதில் ஒரு மூலையில் இந்த எண்ணம் அரித்துக்கொண்டேயிருக்கும்.

மாலையில் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தால் எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கும். ஆனால் அந்த நாள் முழுவதையும் நாம் பதற்றத்துடனேயே கழித்திருப்போம். இது சாதாரணமாக வீடுகளில் நமக்கு ஏற்படும் அனுபவமே. இதுவே ஸ்மார்ட் ஹோமாக இருந்தால் இந்தச் சிக்கலே இல்லை. ஏனெனில் உங்கள் வீட்டை நீங்கள் உங்கள் மொபைலிலிருந்தே கட்டுப்படுத்த முடியும். வீட்டில் உள்ள மின்சார, மின்னணுச் சாதனங்களை ஸ்மார்ட் ஃபோனின் உதவியுடன் கட்டுப்படுத்திவிடலாம்.

அலுவல் காரணமாக வீட்டுக்கு வெளியே நாம் இருக்கும்போது வீடு தொடர்பாக நமக்கு ஏற்படும் பெரும்பாலான கவலையிலிருந்து நம்மை விடுவிக்கிறது இந்தத் தொழில்நுட்பம் என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள். இதைப் போன்ற ஸ்மார்ட் ஹோம்கள் கொண்ட அடுக்குமாடி வீடுகள் பெங்களூரு, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் உருவாக்கப்பட்டுவருகின்றன.

நாம் இல்லாத நேரத்தில் நமது வீட்டுக்கு நெடு நாளைய நண்பர் ஒருவர் நம்மை ஆச்சரியப்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் வந்துவிட்டால் நாம் எங்கிருந்தாலும் உடனே வீட்டுக்குப் போக வேண்டிய நிலைமை இந்த ஸ்மார்ட் ஹோமில் இல்லவே இல்லை. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயிருந்தபடியே உங்கள் நண்பரை உங்கள் வீட்டுக்குள் அனுப்பிவிடலாம்.

அது எப்படி முடியும்? வீடு பூட்டியிருக்குமே என நினைக்கிறீர்களா? அது பற்றிய கவலையே வேண்டாம். வீட்டின் கதவைப் பூட்டவும், திறக்கவுமான வசதிகள் உள்ளன. யார் வந்திருக்கிறாரே அந்த நண்பரைக் கண்காணிப்பு கேமரா வழியாக நாம் பார்த்துவிட்டு அவரை வீட்டுக்குள் அனுமதித்துவிடலாம்.

இது மட்டுமல்ல கோடை காலத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரத்தில் வீட்டின் ஏசியை இயக்கிவிட்டு வீட்டுக்குச் செல்லலாம். வீட்டுக்குள் நுழையும்போதே நமது அறை குளுகுளுவென நம்மை வரவேற்கும். இந்த வசதிகளை எல்லாம் கேட்கும்போது இது ஏதோ தேவலோகத்தில் நடக்கும் கற்பனை என நினைக்கத் தோன்றுகிறதா?

ஆனால் இவை எல்லாமே நிஜத்தில் சாத்தியமாகிவருகிறது எனக் கட்டுமான நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையினர் இது போன்ற வீடுகளை அதிகம் விரும்புவதால் அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இத்தகைய வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் ஹோம்களுக்கான தேவை அதிக அளவில் உள்ளது.

வசதிகள் எல்லாம் சரிதான். ஏற்கெனவே வீடு வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது. இப்படியான வசதிகள் அதிகச் செலவை இழுத்துவைத்துவிடுமோ என்ற பயம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் ஒரு அடுக்குமாடி வீட்டின் மொத்த விலையில் 3-4 சதவீதம் வரை இதற்குச் செலவாகும் எனக் கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன.

ஆனால் இதில் உள்ள ஒரே தொல்லை இணையத் தொடர்பின்மைதான். 24 மணி நேரமும் இணைய வசதி இருக்க வேண்டும். வலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டால் வீட்டுக்கும் நமது ஸ்மார்ட் ஃபோனுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும்.

லண்டன் வேலையை உதறிவிட்டு விவசாயத்தைக் காதலிக்கும் இளைஞர்



லண்டனில் எம்.எஸ் படித்துவிட்டு அங்கேயே கணினிப் பொறியாளராக வேலை பார்த்துவந்த விவசாயியின் மகன், சொந்தக் கிராமத்துக்குத் திரும்பி வெள்ளரி சாகுபடியில் சாதித்து வருகிறார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது உடுக்கம்பாளையம் கிராமம். நகரத்து வாகனங்களின் இரைச்சல் இல்லாத இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சண்முகவேல். இவருடைய மூத்த மகன் எஸ். செல்வா பழனியில் பொறியியல் படித்துவிட்டு, லண்டனில் எம்.எஸ். படிப்பில் சேர்ந்தார்.

பிறகு அங்கேயே கணினிப் பொறியாளர் ஆனார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, சிறு வயது முதல் பார்த்துப் பார்த்து வளர்ந்த மண்ணின் மீது கொண்ட நேசம் காரணமாக வேலையை உதறிவிட்டுத் தாய்நாடு திரும்பினார். தற்போது உடுக்கம்பாளையத்தல் வெள்ளரி சாகுபடி செய்துவரும் அவர் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

மண் பாசம்

"சில மாதங்களுக்கு முன் லண்டனில் இருந்து திரும்பி, விவசாயம் செய்ய விரும்பு கிறேன் எனப் பெற்றோரிடம் தெரிவித்தேன். அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத் துள்ளது. விவசாயத்தைப் பற்றி உனக்குத் தெரியாது.

அதனால் விவசாயம் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும் என்று சொன்னார்கள். குறைந்தபட்சம் திருமணம் வரையிலாவது வெளிநாட்டு வேலையில் இருக்குமாறு சொன்னார்கள். நான் என்னுடைய முடிவில் தீர்மானமாக இருந்தேன். அடுத்து என்ன விவசாயம் செய்வது என்று யோசித்தேன்.

அப்பாவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், வேளாண் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தேன். அவர்களுடைய ஆலோசனைக்கு ஏற்பப் பசுங்குடில் அமைத்து வெள்ளரி விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். எங்களுடைய தென்னந் தோப்புக்குள் 25 சென்ட் பரப்பளவில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தி, நிலத்தைச் சமன் செய்தேன்.

அதில் ரூ. 10 லட்சம் செலவில், புற ஊதாக் கதிர்களைத் தாங்கி சமன் செய்யும் பாலி எத்திலீன் பொருளைக் கொண்டு 2,500 சதுர அடி பரப்பளவில் கூடாரம் அமைத்து, கலப்பின வெள்ளரி ரகம் சாகுபடி செய்துள்ளேன்.

மானியத்தில் மாற்றம்

இதில் 40 நாட்கள் தொடங்கி 120 நாட்கள்வரை 12 டன் விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். முழுவதும் ரசாயன உரமாக இல்லாமல், 50 சதவீதம் இயற்கை உரம் கலந்து பயன்படுத்தி யுள்ளேன். தோட்டக்கலைத் துறை மூலம் பசுங்குடில்களுக்கு 50 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது.

அதேநேரம் பசுங்குடிலைச் சொந்தச் செலவில் செய்து முடிக்க வேண்டும். முதல் அறுவடைக்குப் பின்புதான் மானியம் வழங்கப்படும் என்று தற்போதுள்ள நிலையை மாற்றி, ஒவ்வொரு கட்டமாக மானியத்தை அரசு வழங்கினால், என்னைப் போலவே பலரும் விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபாடு காட்டுவார்கள்" என்கிறார் இளம் விவசாயி செல்வா.

எதிர்காலத்தில் அதே கூடாரத்தில் பலவேறு காய்கறி வகைகளைச் சாகுபடி செய்யவும், அவற்றை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

விவசாயி செல்வா தொடர்புக்கு: 9698443675

கொழுப்பு அதிகமாகிப் போச்சா?



‘உனக்குக் கொழுப்பு அதிகமா போச்சு!’ என்று நம்மைப் பார்த்து யாராவது சொன்னால் கோபம் வரும். ஆனால் அதையே மருத்துவர் சொன்னால் பயம் வரும், கவலை வரும்; அப்படித்தான் வர வேண்டும்.

நோயாளியின் உடலமைப்பைப் பார்த்தே பல விஷயங்களை மருத்துவர்கள் ஊகித்துவிடுவார்கள். மறைந்த டாக்டர் ரங்காச்சாரி இந்தத் திறமையை அதிகம் பெற்றிருந்தார் என்று சொல்வார்கள். நோயாளி தன்னை நோக்கி நடந்துவருகிற தினுசைப் பார்த்தே, அவருக்கு என்ன கோளாறுகள் என்று கண்டுபிடித்துவிடுவாராம். சென்னை அரசு பொது மருத்துவமனை வாயிலில் அவருக்குச் சிலை வைத்துப் பெருமைப்படுத்தியிருக்கிறார்கள்.

எனது மருத்துவ நண்பருக்கு நோயாளியின் இடுப்பிலும் பிட்டத்திலும் கவனம் அதிகமாகப் பதியும். பெரிய தொப்பையும் மெலிந்த கால்களும் கொண்டவர்களை அவர் ‘பம்பரம்’ என்று குறிப்பிடுவார். இடுப்புவரை மெலிந்தும் அதற்குக் கீழே பிட்டங்களும் தொடைகளும் பெருத்திருப்பவர்களை ‘சுரைக்காய்’ என்று அழைப்பார்.

வயது, உயரம், எடை, உடல்நலம் போன்றவையெல்லாம் சமமாக உள்ளவர்களில், சுரைக்காய் மனிதர்களைவிட பம்பர வடிவ மனிதர்களுக்கு உடல் நலக் கோளாறுகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன என்று அவர் கூறுகிறார்.

நல்லதும் கெட்டதும்

பொதுவாக ஆண்களுக்கே பம்பர வடிவம் அதிகமாக அமைகிறது. பெரும்பாலான பெண்கள் சுரைக்காய் வடிவத்தில் இருக்கிறார்கள். ஆகவே, சராசரியாக ஆண்களைவிடப் பெண்கள் குறைவான உடல்நலக் குறைகளுடன் இருக்கிறார்கள்.

உடலில் கொழுப்புச்சத்து உபரியாகிறபோது, அது ஆண்களுக்குத் தொப்புளைச் சுற்றித் திரளும். இது மிகவும் ஆபத்தான விஷயம். ஆனால், பெண்களின் உடலில் உபரியாக உருவாகும் கொழுப்பு பிட்டங்களிலும் தொடைகளிலும் போய்ச் சேருகிறது.

இதயக் கோளாறுகள், ரத்தக் குழாய் அடைப்பு, நீரிழிவு போன்றவை தாக்கும் வாய்ப்புகளைக் கண்டறிய ஓர் எளிய உத்தியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நேராக நின்றுகொண்டு தொப்புள் மட்டத்தில் இடுப்புச் சுற்றளவையும், பிட்டங்கள் பெருத்திருக்கிற இடத்தின் சுற்றளவையும் அளக்க வேண்டும்.

இடுப்புச் சுற்றளவைப் பிட்டச் சுற்றளவால் வகுத்தால் இடுப்பு-பிட்டத் தகவு என்ற எண் கிடைக்கும். ஆண்களுக்கு இது அதிகபட்சமாக 0.85 முதல் 0.9 வரை இருக்கலாம். பெண்களுக்கு அதிகபட்சமாக 0.75 முதல் 0.8 வரை இருக்கலாம். இந்த உச்சவரம்புகளைவிடக் குறைவாயிருப்பதே நல்லது. உச்சவரம்பை மீறினால் உபத்திரவம்தான்.

கொழுப்பு ஆபத்து

ஆண்களுக்குத் தொப்புள் பகுதியில் கொழுப்பு சேருவது ஆபத்தான விஷயம். ஆனால், பெண்களுக்குப் பிட்டத்திலும் தொடையிலும் சேருவதால் பெரிய தீங்கேதும் ஏற்படாது. சில பேருக்குக் கால்களில் ரத்தக் குழாய்கள் பெருத்து முண்டும் முடிச்சுமாகத் தெரியலாம். மற்றவர்கள் அதைக் கவனிக்கும்போது கூச்சமாயிருக்கும். அதை எளிதாகச் சரி செய்துவிடலாம்.

பெண்களின் உடலில் பிட்டத்திலும் தொடைகளிலும் தோலுக்குச் சற்றுக் கீழே மட்டுமே கொழுப்பு திரளும். ஆனால் ஆண்களின் தொப்பையில் கொழுப்பு அடி வயிற்றுப் புழையிலும் சிறுகுடல் பகுதியிலும் திரளும். தோலின் அடியில் திரளும் கொழுப்பு கொஞ்சம்தான். தொப்புளுக்கு அருகில் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் பயன்படுத்திக் கிள்ளிப் பார்க்கிறபோது ஒரு அங்குலத் தடிமனுக்கு மேல் சதை சிக்கினால் கொழுப்பு ஏறிவிட்டதாக அர்த்தம்.

வயிறு முழுக்க பெண்களுக்கு இடுப்பைச் சுற்றிக் கொழுப்பு சேர்ந்தாலும் அதேநேரம் பிட்டத்திலும் சேர்ந்து பிட்டம் பெருத்துவிடுவதால் இடுப்பு-பிட்டத் தகவு அதிகமாகாது. பெண்களின் தோலுக்கும் தசைச் சுவருக்கும் இடையில்தான் கொழுப்பு அதிகமாகச் சேரும்.

கிள்ளினால் மடிப்பு தடிமனாக இருக்கும். கொழுப்பு அடிவயிற்றுப் புழைக்கு வெளியில்தான் சேர்ந்திருக்கும். ஆண்களுக்கோ கொழுப்பு தசைச் சுவர்களுக்கு உள்ளேயும் பரவி, அடிவயிற்றுப் புழையில் குடல்களையும் மற்ற உறுப்புகளையும் மூடியிருக்கும்.

அவ்வாறானவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய நேரும் மருத்துவர்களுக்கு எரிச்சலாக வரும். வயிற்றைத் திறந்து பார்க்கிறபோது எல்லா உள்ளுறுப்புகளையும் மஞ்சள் நிறத்தில் கொழுப்புப் படலம் பாளம் பாளமாக மூடியிருக்கும். குடல் வாலையோ, பிற பகுதிகளையோ தொட்டுப் பார்க்க முடியாமல் இடைஞ்சல் செய்யும். அதை அறுப்பதும் கடினம், தைப்பதும் கடினம்.

இதய நோய்

குடல்களை மூடியவாறு பெரிடோனியம் என்ற சவ்வு உறை உள்ளது. அதில் பிரிஅடிபோசைட்டுகள் எனும் செல்கள் உள்ளன. அடிவயிற்றில் கொழுப்பு சேரும்போது அவற்றில் டிரைகிளிசரைடுகள் என்ற கொழுப்பு அமிலங்களும், கொலஸ்ட்ராலும் நிறைந்து பெரிடோனியம் ஆங்காங்கே வீங்கித் தடித்துவிடும். இவ்வாறு கொழுப்பேறிவிட்ட பின், அந்தச் செல்களின் சுறுசுறுப்பும் வீரியமும் அதிகமாகிவிடும். அவை கல்லீரலுக்குச் செல்கிற ரத்தக் குழாய்களுக்குள் புகுந்தால் ஆபத்து ஆரம்பமாகிறது.

கல்லீரலுக்குள் கூடுதலாகக் கொழுப்பு அமிலங்கள் வந்து சேரும்போது, அது குறைந்த அடர்த்தியுள்ள லிப்போ புரதங்களைக் கூடுதலாக உற்பத்தி செய்து ரத்தக் குழாய்கள் மூலம் இதயத்துக்கும் நுரையீரல்களுக்கும் அனுப்பும். லிப்போ புரதங்களில் ஒரு பகுதி கெட்ட கொலஸ்ட்ராலாக மாறி ரத்தக் குழாய்களின் உட்பரப்பில் படியும். அதன் காரணமாக ரத்தக் குழாய்கள் சேதமடைந்து இதய நோய்களுக்கு வழிகோலும்.

இடுப்பு-பிட்டத் தகவு அதிகமாயிருப்பவர்களுக்கு இவ்வாறான கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் வரும் வாய்ப்புகள் அதிகம். உடல் எடையைக் குறைத்தால் அவை குறையும்.

தேவை கவனம்

பல பெண்களுக்கு எவ்வளவு முயன்றாலும் பிட்டங்களும் தொடைகளும் இளைக்காது. அவ்விடங்களில் உள்ள கொழுப்பு செல்கள் விடாப்பிடியானவை. தாய்மையுற்றுச் சிசுவுக்குப் பாலூட்டும்போது மட்டுமே பால் உற்பத்திக்காகத் தமது கொழுப்பு அமிலங்களைத் தந்து உதவும். சிசுக்களின் பாதுகாப்புக்காக இயற்கை, இம்மாதிரி ஓர் ஏற்பாட்டைச் செய்துள்ளது.

ஊட்டப் பற்றாக்குறை காரணமாகத் தாயின் உடலில் கொழுப்பு இருப்பு குறைந்து, பாலிலும் சத்து குறைகிற நிலை ஏற்படுமானால் பிட்டங்களிலும் தொடைகளிலுமுள்ள செல்களிலிருந்து கொழுப்பு அமிலங்கள் விடுவிக்கப்பட்டுச் சத்துக் குறைபாட்டை ஈடுசெய்கிறது.

எனவே, பெண்களைப் பொறுத்தவரை கொழுப்பு என்பது மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை. ஆனால், ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும். இதயம், நீரிழிவு சார்ந்த நோய்கள் அவர்களை அதிகம் தாக்க வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும்.

கட்டுரையாளர், ஓய்வு பெற்ற பேராசிரியர்

விமான சக்கரத்தில் மறைந்து பயணம் செய்த இளைஞர்: இந்தோனேசியாவில் நூதன சம்பவம்



இந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் விமானத்தின் முன் சக்கர பகுதியில் (லேண்டிங் கியர்) மறைந்து கொண்டு பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். சாகசம் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இருந்து தலைநகர் ஜகார்த் தாவுக்கு நேற்று சரக்கு விமானம் ஒன்று வந்தது. அது தரையிறங்கிய பிறகு அதன் முன் சக்கர பகுதியில் இருந்து ஒரு இளைஞர் வெளியே வந்தார். இதைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

அவரைப் பிடித்து விசாரித்த போது அவரது பெயர் மரியோ ஸ்டீவ் அப்ரிடா(21) என்பது தெரிய வந்தது. விமானம் சுமத்ராவில் கிளம்புவதற்கு முன்பு முன் சக்கர பகுதியில் சென்று மறைந்து கொண்டுள்ளார். விமானங்களில் பொதுவாக தரையிறக்கும்போது சக்கரம் வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த இளைஞர் விமானத்தின் முன் சக்கரம் உள்பகுதியில் புகுந்து மறைந்திருந்துள்ளார்.

விமானம் சுமார் 2 மணி நேரம் வானத்தில் பறந்துள்ளது. மேலும் 34 ஆயிரம் அடி உயரம் வரை சென்றதால் அப்போது அவருக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதும் சிரமமாக இருந்திருக்கும். வெப்ப நிலை மைனஸில் இருந்ததால், கடும் குளிர் காரணமாகவும் அவர் மரணமடைந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இவற்றையெல்லாம் தாக்குப் பிடித்து அந்த இளைஞர் உயிருடன் தரையிறங்கிவிட்டார்.

விமானத்தில் இருந்து இறங்கி யபோது அவரது காதில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கியது. சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்துவிட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தை விபத்துக்குள் ளாக்க முயற்சித்தது உள்ளிட்ட பல பிரிவுகளில் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அவருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

பள்ளிக் கல்விக்கு பாடம் சொல்லும் மாணவர் கொண்டாட்டம்!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முடிவடைந்துவிட்டன. கடைசி தேர்வின் அறையை விட்டு வெளியேறியதும் மாணவர்கள் மத்தியில் அப்படி ஒரு கொண்டாட்டம். சுதந்திரம் அடைந்துவிட்டதைப் போன்ற ஆனந்தத் தாண்டவம்.

பள்ளி வாழ்க்கையில் இருந்து விடுபடுவது வரம் என்ற நினைப்புதான் இந்தக் கொண்டாட்டங்களுக்குக் காரணமா? அல்லது இயல்பான மகிழ்ச்சி தானா? மனப்பாடத்துக்கு முக்கியத்துவம் இருப்பதால் மன அழுத்தம் தரும் கல்வி முறையில் இருந்து மீள்வதன் வெளிப்பாடா? பள்ளி ஆசிரியர் சூழ் உலகில் இருந்து விடுபடும் நினைப்பா? என்று பள்ளிக் கல்வி சார்ந்தவர்களிடம் கேட்டேன்.

ரா.தாமோதரன், பள்ளி ஆசிரியர், தஞ்சை:

"நீங்கள் குறிப்பிட்ட அனைத்துமே இவற்றுக்குக் காரணம்தான். மாணவர்களின் எல்லையற்ற மகிழ்ச்சிக்கு முக்கியக் காரணமே வெறுப்பின் வெளிப்பாடுதான். சில பள்ளிகளில் தேர்வு முடிந்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி முடிக்கும் வரை ஆசிரியர்களிடையே ஒருவிதமான பதற்றம் நீடித்தது. அத்தகைய பள்ளிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதும் இங்கே கவனிக்கத்தக்கது.

கல்வி முறை, பாடத்திட்டங்கள் சார்ந்தும் மதிப்பெண்கள் சார்ந்தும் மாறிப்போய் விட்டது. எப்படியாவது படித்துத் தேர்ச்சி அடைய வேண்டுமென்ற நிர்பந்தம். மாலையில் வகுப்பு முடிந்ததும் சிறப்பு வகுப்புகள், வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை என்றால் அறிவுரை, வீட்டில் இருந்து பெற்றோர்களை அழைத்து வரச் சொல்வது போன்றவை மாணவரை, படிப்பின் மீதே ஒரு வித அழுத்தத்தை ஏற்படச் செய்கின்றன. இதற்கு மாற்று என்றால், மதிப்பெண் முறையை விடுத்து, தரநிலை மதிப்பீட்டு முறையை கொண்டுவரலாம்.

அடிப்படைக் கல்வித் திட்டம், தேர்ச்சி முறைக் கல்வித் திட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. சரியான விடையை எழுதியவர்களுக்கும், எழுதாதவர்களுக்கும் ஒரே வித்தியாசம்தான். புத்திசாலித்தனம் அங்கேதான் நிர்ணயிக்கப்படுகிறது. கல்வி என்பது ஒன்றை அறிவது; புரிந்துகொள்வது. மனப்பாடம் செய்து ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை.

ஆசிரியர்கள் திலீப், விஜயலட்சுமி, தாமோதரன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு

ஒரு மாணவர், கல்வியின் பின்புலத்தை அறிந்துகொள்ள வேண்டும். சாலைப் போக்குவரத்து குறித்துப் படிக்கிறோம் என்றால், அதை வாழ்வியலில் பயன்படுத்த வேண்டும். மொத்தத்தில் வாழ்க்கையை தைரியமாய் எதிர்கொள்ள வேண்டிய திறன்களை வளர்க்கும் விதமான மாற்றுக் கல்வித் திட்டம் அவசியமாகிறது.

டி.விஜயலட்சுமி, ஆசிரியை, கண்ணமங்கலம்:

"மாணவர்களின் கொண்டாட்டத்தில் எந்தத் தவறும் இல்லை. தேர்வு குறித்த அச்சங்கள் நீங்கிய மாணவர்களின் இயல்பான கொண்டாட்டங்களாகத்தான் இதைப் பார்க்கிறேன். அம்மாக்கள் சமையல் அறையில் வேலை முடிந்தவுடன் ஆசுவாசம் அடைவது போலத்தான் இதுவும். காலையில் பள்ளிக்குச் செல்ல வேண்டும், படிக்க வேண்டும், மாலையில்தான் விளையாட முடியும் என்ற அன்றாட நிர்பந்தங்களில் இருந்து விடுபட்டு நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் செய்ய முடிகிற நிலை வரும்போது மாணவர்கள் குதூகலமடைகின்றனர்.

இன்றைய சமுதாயம் பொருளாதார அளவில் பெரும் மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் சந்தித்து வருகிறது. எதற்கெடுத்தாலும் ட்ரீட் என்னும் கலாச்சாரம் பரவி வருகிறது. சிறு விஷயங்களைக் கூடப் பெரிதாய்க் கொண்டாடுகிறோம். இந்தக் காலகட்டத்துக்கு ஏற்றாற்போல இப்போதைய மாணவர்களும் பொதுத் தேர்வுகள் முடிவதைக் கொண்டாடுகிறார்கள்."

ஸ்ரீதிலீப், பள்ளி ஆசிரியர், சத்தியமங்கலம்

"இந்த வயதிலேயே இதுமாதிரியாக கொண்டாட்டங்கள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளின் மீதும், மதிப்பெண்கள் மீதும் வைக்கப்படுகின்ற அழுத்தங்கள்தான் மாணவர்களை நெருக்குதலுக்கு ஆளாக்குகிறது. இவற்றுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை மற்ற எல்லாத் தேர்வுகளுக்கும் கொடுத்தால் மாணவர்கள் தேவையில்லாத பதற்றத்துக்கு ஆளாகமாட்டார்கள்.

மாணவர்கள், இது தேர்வு மட்டுமே என்ற மனநிலையோடு அணுக வேண்டும். தேர்வையே சுகமாக எழுதினால், தேர்வு முடியும்போது கொண்டாட்ட மனநிலை ஏற்படாது. மாறாக, அற்புதமான பள்ளி நினைவுகளைச் சுமந்துகொண்டு, பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பிரியாவிடை தருவார்கள்."

பிரின்ஸ் கஜேந்திர பாபு, கல்வியாளர்:

"இது உண்மையான, மகிழ்ச்சிகரமான கொண்டாட்டமே இல்லை. ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்குப் போகும் நிரந்தமில்லாத ஒரு விஷயத்தைக் கொண்டாடுகிறார்கள். நமது கல்வி முறையில் எதற்காக, எப்படி மகிழ்வது என்று கூடச் சொல்லித் தரவில்லை. அடக்குமுறையில் இருந்து விடுதலை அடைவதாகத்தான் இது மாணவர்களால் பார்க்கப்படுகிறது. தேர்வுகள், நிறைவு கொடுக்கக் கூடியவையாக இருந்தால், அடுத்தத் தேர்வு குறித்த தேடல் இருக்கும்.

'விடுதலை அடையும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியை உணர்வதுதான் தேர்வு' என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். மதிப்பெண்கள் குறித்த மிரட்டலில் கட்டுண்டு கிடக்கும் மாணவர்கள், வெளியே வரும் சுகமாகத்தான் தேர்வைப் பார்க்கிறார்கள். சமுதாயத்தில் இருக்கும் பிரச்சினைகள் எவற்றையும் மாணவர்கள் உணரவில்லை. உணரும் விதமாகக் கல்வி அமைப்பு இல்லை. நமது கல்வி, சகோதரத்துவத்தை, ஜனநாயகத்தை, மெய்யான கல்வியைக் கற்றுத் தரவேண்டும்."

Colleges can expel drunk students, says Madras HC

A college student who was found drunk in a gurukul-style campus that puts a premium on discipline is set to lose an academic year, as the Madras high court has upheld the decision of Vivekanantha College in Thiruvedagam, Madurai district, to either expel the student or debar him from its campus for one year.

Justice S Vaidyanathan, highlighting every youth's duty towards the nation, cited the Supreme Court rulings and said: “If a student does not behave properly , and should there be any act of indiscipline, which is not conducive to the interests of the institution, the schoolcollege authorities have every right to send that student out of the college.“

The matter relates to a third year BA economics student Thennarasu who was disallowed from writing his final semester examination along with two arrear papers as he was found drunk while returning to hostel on March 15. His father had been summoned and inquiries held. At the end of the exercise, there were only two options before him: One, he could move out of the college by taking transfer certificate (TC) and join some other; Two, skip the course for one year.

In a writ petition, Thennarasu said he had already paid fee for his final semester examination, and that his debar , ment at this stage would adversely affect his prospects.

The college management said that ever since its incep, tion in 1971, the college had been following the `Guruku lam pattern' of education and discipline is primarily inculcated. Noting that misconduct committed by students cannot be tolerated, it said even at the time of admission, each student and parent are informed that consuming alcohol will lead to dismissal. Denying any discrimination, it said the same punishment is usually given for such misconduct. Justice Vaidyanathan agreed with the management's stand, and said: “The conten tion of the college principal that if the rules and regula tions are relaxed and diluted to suit the convenience of an in dividual student, then the fu ture of the Gurukula institute will be at peril, cannot be , brushed aside.“

Dismissing the petition as being devoid of merits, the ; judge said he was refraining from imposing an exemplary costs on the student only because of the fact that his par ent would have to bear the costs for the misconduct com mitted by him.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...