Tuesday, April 14, 2015

கடும் நடவடிக்கைதான் தடுக்க முடியும்


logo

ஆழ்குழாய் கிணறுகளில் மழலைகள் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அடிக்கடி நடந்து, அனைவரையும் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்திவிடுகிறது. கடந்த 2012 முதல் தொடர்ந்து 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களும், அதிர்ஷ்டவசமாக ஓரிருவர் மரணத்தின் வாயிலுக்கு சென்று உயிர்தப்பியதும் நடந்து இருக்கிறது. இப்போது மீண்டும் நெஞ்சை கசக்கிப்பிழியும் ஒரு சோக சம்பவம் வேலூர் மாவட்டம், கூராம்பாடி கிராமத்தில் ஒரு விவசாயியின் நிலத்தில் தண்ணீர் வராத ஆழ்குழாய் கிணற்றில் தவறிவிழுந்த 2½ வயது பச்சிளம் குழந்தை மரணத்தால் ஏற்பட்டுள்ளது. 300 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வராததால், அதில் இருந்த பிளாஸ்டிக் குழாயை எடுத்துவிட்டு, பலகாலமாக கல்லை வைத்து மூடிஇருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இந்த ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா? என்று பார்க்க அந்த கல்லை எடுத்து பார்த்துவிட்டு தண்ணீர் இல்லை என்றவுடன், மீண்டும் கல்லை வைத்து மூடாமல் சென்று இருக்கிறார்கள். இந்த நிலையில், அந்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் தவறிவிழுந்து பல மணி நேர போராட்டத்துக்குப்பிறகு அவனை மீட்டும் உயிரைக்காப்பாற்ற முடியவில்லை.

தமிழ்நாடு ஒரு விவசாய மாநிலம். இங்கு ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை நிச்சயமாக நிறுத்தமுடியாது. ஆனால், ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை கடுமையாக்கவேண்டும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், சென்னை ஐகோர்ட்டு இதுபோன்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்கவேண்டிய அதிகாரிகள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து வாக்குமூலம் தாக்கல் செய்யச்சொல்லியது. ஆகஸ்டு மாதம் 12–ந் தேதி தமிழக சட்டசபையில் இதுபோல ஆழ்குழாய் கிணறுகளை தோண்டுவதற்கும், தண்ணீர் இல்லாததால் கைவிடப்படும் ஆழ்குழாய்கிணறுகளை மூடுவதற்கும் தொடர்புடைய சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேறியது. இந்த சட்டத்தின்கீழ் ஆழ்துளை கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளின் உரிமையாளர்கள் மற்றும் அத்தகைய கிணறுகளைத் தோண்டும் முகவாண்மைகளின் அக்கரையற்ற தன்மையினால், சிறு குழந்தைகளின் இறப்புக்குரிய விபத்துக்கள் மற்றும் இறப்புகள் நடக்கின்றன. இந்த சட்டத்தின் விதிகளுக்கு முரணாக இருப்பவர் யாராயினும் 3 ஆண்டுகளுக்கு குறையாத, ஆனால் 7 ஆண்டுகள்வரை நீடிக்கும் வகையிலான சிறைத்தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம்வரை அபராதம் விதிக்கமுடியும். உச்சநீதிமன்றம் ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க தெளிவான வழிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி, ஆழ்குழாய் கிணறுகளை தோண்டவோ, பழுதுபார்க்கவோ விரும்பினால், 15 நாட்களுக்கு முன்பாக மாவட்ட கலெக்டர், உள்ளாட்சி அமைப்புகள், நிலத்தடிநீர் துறை, பொதுசுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் தரைமட்டம்வரை சரியாக நிரப்பப்பட்டு, அதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பெறவேண்டும் என்பது உள்பட பல வழிமுறைகளை வகுத்துத்தந்துள்ளது.

அரசு ஏற்கனவே நிறைவேற்றிய சட்டத்தோடு, உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளையும் உடனடியாக நிறைவேற்றும் வகையில் சட்டதிருத்தமோ, விதிகளோ கொண்டுவரவேண்டும். நில உரிமையாளர்கள், தோண்டுபவர்களை மட்டுமல்லாமல், அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளையும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். எந்த பழுதுபார்க்கும் பணிகள் என்றாலும், கைவிடப்பட்ட ஆழ்குழாய்கிணறுகளில் தண்ணீர் இருக்கிறதா? என்று மீண்டும் பார்க்க வேண்டுமென்றால், அதிகாரிகளின் கண்காணிப்பில்தான் பார்க்க வேண்டும் என்று விதிகள் வகுத்து நிறைவேற்றவேண்டும். உடனடியாக தமிழ்நாடு முழுவதும் எத்தனை ஆழ்குழாய் கிணறுகள் இருக்கின்றன?, எத்தனை கைவிடப்பட்டுள்ளன? என்ற பட்டியலை எடுத்து, அனைத்தையும் அரசின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.

Monday, April 13, 2015

போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை: பாமக மகளிர் அணி துணை தலைவி உட்பட 3 பேர் கைது- மேலும் பலருக்கு வலை

பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப் பட்டனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் தட்சிணாமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘‘வழக்கறிஞர்களாக பணி புரிவதற்கு பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்காக பலர் விண்ணப்பம் கொடுத்திருந்தனர். அவற்றை ஆய்வு செய்தபோது, சென்னையை சேர்ந்த அருண் குமார் மற்றும் அழகிரி, மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் போலியான எல்எல்பி சான்றிதழ்களை கொடுத்திருப்பது தெரிந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

புகாரின்பேரில் காவல் உதவி ஆணையர் கண்ணன், ஆய்வாளர் கீதா மற்றும் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

போலி சான்றிதழ் கொடுத்த 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசா ரணையில் அவர்கள் ஒரே நபரிட மிருந்து போலியான சான்றிதழ் களை பெற்றிருப்பது தெரிந்தது. ஒரு பத்திரிகையில் வந்த விளம் பரத்தை பார்த்து அதில் இருந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, கோவை மாவட்டம் காந்திபுரம் 3-வது தெருவில் ‘ஹை மார்க்' என்ற பெயரில் ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் சண்முகசுந்தரி(32) என்பவர் பேசியிருக்கிறார். அவரை கோவைக்கே சென்று நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது சண்முகசுந்தரி, வகுப் புக்கே வர வேண்டாம். தேர்வு எழுத வேண்டாம். பணம் கொடுத் தால் எல்எல்பி படித்து முடித்ததற் கான சான்றிதழை வாங்கித் கொடுப்பதாக கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வரும் தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளனர். அதை பெற்றுக்கொண்ட சண்முகசுந்தரி, உத்தரப்பிரதேச மாநிலம் பந்தல்கண்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து கொடுக்கப்பட்டது போல எல்எல்பி சான்றிதழை போலியாக தயாரித்து கொடுத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து சண்முகசுந் தரியிடம் நடத்தப்பட்ட விசாரணை யில், அவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி துணைத் தலைவராக இருப்பது தெரிந்தது. இவர் தமிழ்நாடு முழு வதும் பல இடங்களில் கிளை களை வைத்து இதேபோல பல ருக்கு போலி சான்றிதழ்களை கொடுத்திருப்பதும் தெரியவந்தது. போலி சான்றிதழ்கள் தயாரிப்பதற் காக சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையை சேர்ந்த அருண் குமார்(36), சேலம் குரங்கு சாவடி நரசோதிபட்டி பகுதியை சேர்ந்த கணேஷ்பிரபு(28) ஆகி யோர் உதவி செய்திருப்பதும் தெரிந்தது.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து பலருக்கு போலியான சான்றிதழ் களை தயார் செய்து கொடுத்து, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித் துள்ளனர். சட்டம், பொறியியல், பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்., டிப்ளமோ என பல போலி சான்றிதழ்களை தயாரித்து அதன் தகுதிக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்து உள்ளனர்.

அவர்களிடமிருந்து லக்னோ, டெல்லி, கான்பூர், மேகாலயா என பல இடங்களில் உள்ள பல்கலைக்கழக போலி சான் றிதழ்களும், அவற்றை தயா ரிப்பதற்கான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து சண்முக சுந்தரி, அருண்குமார், கணேஷ்பிரபு ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்துவிட்டோம்.

போலி சான்றிதழ்கள் தயா ரிப்பு மோசடியில் மேலும் பலருக்கு தொடர்புள்ளது. இவர் களிடம் போலி சான்றிதழ்கள் வாங்கியவர்கள் குறித்த தகவ லையும் திரட்டி வருகிறோம். அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

தமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் விற்பனை அமோகம்: சிறிய ‘ஃபிரிட்ஜ்' விற்பனையும் சூடுபிடிக்கிறது


தமிழக தபால் நிலையங்களில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட குறைந்த விலை செல்போன் விற்பனை திட்டத்துக்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு சில வாரங்களிலேயே 5 ஆயிரம் செல்போன்கள் விற்பனை யாகியுள்ளன.

காலத்துக்கு ஏற்ப தபால் துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தபால் அலுவலகங்களில் தனியார் நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்யும் திட்டமும் அதில் ஒன்று. தமிழகத்தில் உள்ள பல்வேறு தலைமை தபால் நிலையங்கள், முக்கிய தபால் நிலையங்கள் என சுமார் 400 இடங்களில் கடந்த மாதம் 2-வது வாரத்திலிருந்து செல் போன் விற்பனையை தமிழக அஞ்சல்துறை தொடங்கியது. அதற்கு, பொது மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத் துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு அஞ்சலக வட்ட தலைமையக உயரதிகாரிகள் கூறியதாவது:

தபால் நிலையங்களில் செல் போன் விற்பனை தொடங்கியது முதலே அவை விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன. ஒரு மாதம் ஆவதற்குள்ளாகவே, 4,800-க்கும் அதிகமான செல்போன்கள் விற்பனையாகியுள்ளன. செல்போன் களை வாங்குவதற்காக ஏராளமானோர் வருகின்றனர். நாடு முழுவதும் பரவலாக இந்த செல்போன்களுக்கு நல்ல மவுசு இருப்பதால், அவற்றை சப்ளை செய்யும் நிறுவனத்தால் அதற்கேற்ப ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த செல்போன்களின் விலை குறைவு (ரூ.1999) என்பதாலும், அதில் 2 சிம்கார்டுகளைப் பயன்படுத்த முடியும் என்பதாலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ‘பிரீபெய்ட் சிம்’, 2 ஆயிரம் நிமிட இலவச ‘டாக்-டைம்’ உடன் தரப்படுவதாலும் அதை அனைவரும் விரும்பி வாங்குகின்றனர்.

இதுபோன்ற, தனியார் நிறு வனங்களின் தயாரிப்புகளை நாங்கள் விற்றுத் தருகிறோம். அதற்கான கமிஷன் தொகையை அந்நிறுவனங்கள் தருகின்றன. தரமான நிறுவனங்களின் தயாரிப்பு களை மட்டுமே நாங்கள் விற்பனை செய்கிறோம். விருப்பமுள்ளோர், அருகில் உள்ள தலைமை தபால் நிலையங்களை அணுகலாம்.

இன்வர்ட்டர் ‘ஃபிரிட்ஜ்’

இதேபோல, தபால் நிலையங்களில் விற்கப்படும் சிறிய (9 கிலோ) ‘சோட்டுக்கூல்‘ ஃபிரிட்ஜ்களின் விற்பனையும் சற்று அதிகரித்துள்ளது. பெட்டிக் கடைக்காரர்கள், ஒரே வீ்ட்டைப் பகிர்ந்து வசிக்கும் கல்லூரி மாணவ-மாணவியர், இளம் சாப்ட்வேர் துறையினர் போன்றோர் அதனை விரும்பி வாங்குகின்றனர். மேலும், இன்வர்ட்டர் மூலமாகவும் அதை இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இவை பல்வேறு வண்ணங்களில் ரூ.5300 முதல் ரூ.6,000 வரையிலான விலைகளில் கிடைக்கும். சூரியமின்சக்தி விளக்குகளும் ரூ.500 முதல் விற்கப்படுகின்றன.

கல்லூரி புத்தகங்கள்

இதுதவிர, அண்ணா பல்கலைக் கழகம், ஐஐடி, சென்னைப் பல் கலைக்கழகம் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் அங்கு பயிலும் வெளியூர் மாண வர்களின் புத்தகங்களை ‘பேக்’ செய்து அவர்களது வீடுகளுக்குப் பாதுகாப்பாக அனுப்புவதற்காக, சிறப்பு முகாம்கள் விரைவில் நடைபெறவுள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

Medical Council wants accreditation power for colleges

NAGPUR: Medical Council of India (MCI) may be the apex and autonomous body to monitor medical education in the country, but unlike all other higher education regulatory bodies, it does not have an independent body of its own for accreditation of medical colleges. Hence, it has forwarded this demand for consideration by the government of India as a step towards improving the standard of medical education as per international norms.

The MCI general body has put this and some more such suggestions in the form of GB resolutions to the government recently. Speaking to reporters at 'Meet the Press' organized by Nagpur Union of Working Journalists, Academic Council chairman of MCI Dr Ved Prakash Mishra said like University Grants Commission (UGC) has National Assessment and Accreditation Council (NAAC), and All India Council for Technical Education (AICTE) has National Board for Accreditation (NBA), MCI too should have a similar independent body for accreditation of the colleges.

"But this is not possible without an amendment in the basic Indian Medical Council (IMC) Act. Hence, MCI passed a resolution demanding a National Accreditation Board for medical education and has sent it to the Centre through an amendment in IMC. It is high time MCI moved beyond 'recognition' to colleges," said Dr Mishra.

Besides, MCI has also raised issues of giving power to it to make its own notifications on various decisions taken by the council so that it doesn't have to wait for the 3-5 years gestation period the government otherwise takes for issuing notifications. The GB of MCI has also demanded a provision of financial support for development projects like the grants given by UGC to different universities on a five-yearly basis.

A big issue haunting MCI for long is the absence of any designated agency for fixing the salary and service norms for medical teachers. At present it is as per UGC system. But the council feels this needs a change and should be done by the council. There is no uniformity in even the retirement age in different states for teachers.

A big change being demanded by the council is a 'national development perspective plan' for medical education in the country for bringing uniformity in quality of education as well as various other issues like grant of permission for new medical colleges. Indian constitution expects uniform development in all states based in the socio-economic standard of the state or the area. But unfortunately most medical colleges are concentrated in southern states, including Maharashtra. The applications should be scrutinized to have even distribution in the geographical area.

"Another issue worrying MCI is that the government has withdrawn its hands from medical education which is not a good sign as it may restrict the privilege of medical education only for the rich," Dr Mishra lamented.

Fact file

India is the biggest manpower generator in medical field in world. It has the highest intake capacity of 56,000 students annually, 60,000 medical teachers, 28,000 PG seats, 401 medical colleges.

Exit test introduced to open avenues for those planning to practise or study in other states or abroad. But it's voluntary.

Like the University Grants Commission (UGC) which distributes development grants to various universities, MCI should also have access to such funds and the authority to distribute it to medical colleges.

There is no regulatory authority as yet for laying the service conditions and the pay scales of medical teachers.

There is no agency or body to regulate setting up of new medical colleges distributed evenly across the country in various states or in underdeveloped states.

Of the 220 new colleges started in last two decades, 183 are in private sector.

The National Entrance Eligibility cum Entrance Test (NEET) now to be applicable to even the NRI quota (NRI students need to clear the test).

Private colleges too to pay stipend as per the state or central government norms, what ever suits them to their post graduate students.

Every medical college to compulsorily have a research cell.

Every college should have the Students' Council head on the college council and be allowed to be a part of all decision making processes.

MCI has made it mandatory for state medical councils to resolve all ethical issues/cases within six months with a quantum of punishment which may vary from six months suspension to six months to two years or even two years or more.

Be careful while transferring money

When was the last time you went to a bank to transfer money? Today, 80-85% of NEFT and RTGS transactions happen through netbanking or apps. Online transfers are convenient, fast and cost nothing extra. All you have to do is register a person as a beneficiary by giving their account number and bank IFSC code and you can transfer money real time. But what if you accidentally send money to a wrong bank account?

To reduce the possibility of errors, customers have to key in the beneficiary account number twice. Also, if there is a mismatch between the account number and the IFSC code, the system will not accept the entry. Moreover, post adding a beneficiary, there is also a cooling period of 30 minutes during which you cannot transact.

During the cooling period, some banks send customers text notifications on their registered mobile numbers, confirming the account number of the beneficiary they have added. Customers can reconfirm the number at this stage. Some give you the option of adding the beneficiary's mobile number when you register so that they can be intimated via sms.

However, chances of errors still persist. If you accidentally put one digit wrong and it doesn't correspond to the account holder's name, the transaction can still go through.

It is also possible that you had the wrong account number to begin with. You can also mistakenly put an extra zero to the amount to be transferred.

According to the RBI, responsibility to provide correct inputs in the payment instructions, particularly the beneficiary account number information, rests with the remitter or originator. So, the onus of the mistake will solely be on you. Inform the bank immediately.

The turnaround time also depends on how quickly the customer alerts the bank, the banks involved and the stage at which the transaction is at. "If the remitter and beneficiary accounts are with the same bank, the process is quicker. If you alert the bank within an hour, the money could be reversed immediately," says Jairam Sridharan, President, Retail Lending and Payments, Axis Bank.

The beneficiary has to be intimidated as well. Without the beneficiary's permission, the bank cannot reverse the transaction. If the beneficiary refuses to cooperate, then you will have to take legal recourse.

The RBI clearly states that, "In cases where it is found that credit has been afforded to a wrong account, banks need to establish a robust, transparent and quick grievance redressal mechanism to reverse such credits and set right the mistake". However, this is not a regular procedure for banks. "Since the occurrences are pretty low, say two to three cases a quarter, most banks do not have a formal redressal process in place," says Sridharan. It is important that you take precautions. Checks like sending a smaller amount, copy-pasting rather than typing the account numbers will save you a lot of trouble later.

வேண்டாம் "முகமூடி' உறவு

By எம். சடகோபன்

உலகில் உறவுக்கு என்று ஒரு தனி அர்த்தம் உள்ளது. ஆனால், நவீன தொழில்நுட்பக் காலத்தில் உறவுகள் அனைத்தும் முகம் இல்லாமல் தொடர்கின்றன என்பதுதான் யதார்த்த உண்மை. மாயாஜால உலகில் எல்லாமே முகமூடி அணிந்த உறவுகளாகத் தொடர்வதுதான் அதைவிட வேதனை.

தாய்-தந்தை, அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, மாமனார்-மாமியார், சகோதரன்-சகோதரி, தாத்தா-பாட்டி, பேரன்-பேத்தி என்று உறவுகளின் வரிசை நீண்டு கொண்டே செல்கிறது.

மேலும், உற்ற நண்பன், உற்ற நண்பி என்று அலுவலகங்களிலும் நட்பு என்ற பெயரிலும் உறவுகள் தொடர்கின்றன. எல்லாமே பணம் என்று ஆகிவிட்ட இந்த உலகில் உறவுகள் அனைத்தும் முகமூடி அணியத் தொடங்கிவிட்டன.

தந்தை, தாயை ஏமாற்றும் பிள்ளை. பணத்துக்காக சகோதரனை வசைபாடும் சகோதரி. தன் சொந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மாமனார்-மாமியாரை உதறிவிடத் துடிக்கும் மருமகள். தன் ஆணவத்துக்கு அடங்காத மருமகளை விரட்டத் துடிக்கும் மாமியார். ஏதேதோ காரணங்களைக் கூறி, தாலி கட்டிய கணவனைக்கூட மறக்கத் துணியும் மனைவி.

இதேபோல், அலுவலகங்களில் நட்புடன் பழகுவதுபோல் காட்டிக் கொள்ளும் பலர், ஒருவரை ஒருவர் புறம் பேசி தான் மட்டும் முன்னேற்றம் காண முகமூடி அணிகிறார்கள். இவ்வாறு அனைவரும் முகமூடியுடன் உறவுகளைத் தொடர்கின்றனர்.

சகோதரி ஸ்தானத்தில் வைத்து பேசிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, பலர் முன்னிலையில் நகைச்சுவை என்ற பெயரில் விமர்சித்துக் கேலிப் பொருளாக்குவது, பிற ஆண்களுடன் இணைத்துப் பேசுவது போன்றவற்றை தன் உடன் பிறந்த சகோதரிக்கும் செய்ய முனைவார்களா..? இல்லையே..!

உடன் பிறப்பின் மானத்தை மட்டும்தான் காப்பார்கள் - பிற பெண்களின் மானத்தைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லையா?

அண்ணன்-தம்பியுடன் பிறந்த பெண்கள் மற்ற ஆண்களுடன் இயல்பாகப் பேசுவதற்குத் தயங்கமாட்டார்கள். தங்களைவிட மூத்தவர்களை அண்ணன் என்றும், இளையவர்களை பெயர் சொல்லியோ, தம்பி என்றோ அழைப்பார்கள்.

ஆனால், கூடப் பிறந்தவர்கள் அனைவரும் பெண்களாக இருந்துவிட்டால் எளிதில் வெளி ஆண்களுடன் பழக மாட்டார்கள் என்று நினைக்கிறோம்.

ஆனால், இந்தக் கலியுக காலத்தில் அப்படி இல்லையே..! பொதுவாக அண்ணனுடன் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால், மகளிடம் அம்மா சொல்வாள், அண்ணன்னு கூப்பிடு என்று. அப்படித்தான் நடக்கும்.

ஆனால், நாளடைவில் அண்ணனுடன் வந்தவர்களில் ஒருவரைக் காதலித்து கைப்பிடிக்கும் மகளின் அறியாமையை எண்ணி சொல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளாகும் ஏராளமான தாய்மார்களைக் காண்கிறோமே.

இது இப்படி இருக்கையில், உறவுகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பண்பு தெரிந்த ஒருவர் "முகமூடி' போட்டுக் கொள்ளாதவராகத்தான் இருப்பார். "தன்னைக் குறித்து யாரும், எதுவும் சொல்லிவிட்டுப் போகட்டும்-கவலை இல்லை.

நான், நானாகத்தான் இருப்பேன்' என்று சொல்லிக் கொள்ளும் அவர், முகமூடி அணிந்து மனத்துக்குள் வக்கிர எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் அவர் வித்தியாசமானவராகத்தான் இருப்பார்.

தாலி கட்டிய கணவனுடன் மனைவியும், மனைவியுடன் கணவனும் "முகமூடி' அணிந்து உறவைத் தொடரும் பலரை பார்க்கத்தான் செய்கிறோம்.

இது ஒருபுறம் இருக்க, தன் வீட்டாரின் செயலை நியாயப்படுத்த கணவனிடம் மனைவியும், மனைவியிடம் கணவனும் முகமூடி அணிகிறார்கள். சாயம் வெளுத்தபிறகு உறவைக் கிழிக்கிறது "முகமூடி'.

சகோதர பாசம் சாதாரணமானது அல்ல. அண்ணனை தந்தை போன்றும், தம்பியை மகன் போன்றும் பாவிக்கிறவள் பெண். உடன் பிறந்தவர், அடுத்தவர் என்ற பேதம் சகோதர பாசத்துக்குக் கிடையாது.

அண்ணன் என்றால் அண்ணன்தான் - அதைத் தவிர்த்து வேறு எதையும் சிந்தித்துக்கூட பார்க்கமாட்டாள் ஒரு நல்ல பெண். ஒரு குழந்தைபோல விஷயங்களைப் பகிர்வதற்கும், சிக்கல் நிறைந்த பிரச்னை குறித்துச் சொல்வதற்கும் முதலில் பெண்கள் நாடுவது சகோதரனையே.

நட்புகளிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ள மிகவும் யோசிக்கும் பெண், "சகோதர பாசம் துரோகம் இழைக்காது' என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், தன்னை சகோதரி என்று அழைக்கும் ஆணிடம் தயங்காமல் கூறிவிடுவாள்.

ஆனால், அதையே தனக்கோ, தனது மனைவிக்காகவோ சாதகமாக்கிக் கொண்டு ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். முகமூடி தெரிந்த பிறகு அப்பெண் சொல்வது "குட்பை' தானே.

உன்னத உறவு-சுயநலம் இல்லாதது. சகோதர உறவு-ஆதரவாகத் தோள்கொடுக்கும். இவை இரண்டும் அமையப்பெற்றவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்தான். ஆனால், இதே உறவை சிலர் தங்கள் விருப்பம் போலக் கையாளும்போதுதான் முகமூடி உறவாக மாறுகிறது.

இதன்மூலம், கிடைத்த நல்ல உறவை தக்கவைத்துக் கொள்ள பலர் தவறிவிடுகின்றனர்.

எதிர்பார்ப்பு எதுவும் இன்றி தன்னை நேசிக்கும் உன்னத உறவை ஈகோ, போட்டி, பொறாமை, சுயநலம், தற்பெருமை போன்றவற்றுக்காக இழந்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

"நேரத்துக்கும், இடத்துக்கும் தகுந்தாற்போல ஆளுக்கொரு வேஷம் தரிக்கும் முகமூடி உறவுக்காரர்கள், "பிறரை மட்டும் அல்ல; தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்' என்பதுதான் உண்மையிலும் உண்மை...!

உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசும் உறவுகளை

ஒவ்வொன்றாக

களைய முயன்றால்

அநாதையாகிவிடுவேன்

ஒருவருமின்றி..!

என்ற கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

Sunday, April 12, 2015

சாலையில் தறிகெட்டு வரும் தண்ணீர் லாரி எமன் ... கோடை கால உஷார்!

ண்ணீர் லாரி...தாகத்தால் தவிப்போருக்கு தண்ணீர் தந்து உயிர் காக்கும் தண்ணீர் லாரிகள் இப்போதெல்லாம் உயிர்பறிக்கும் சாலை எமனாக மாறி  அச்ச மூட்டுகின்றன.குடிநீர் சேவைக்கு வந்த லாரிகள், குடிமக்களின் உயிரெடுக்கும் கொடுமையை செய்வதால் சாலையில் பயணிப்போர் அன்றாடம் பயந்து பயந்து போகவேண்டிய அசாதாரண சூழல் நிச்சயம் தவிர்க்கப்படவேண்டும்.
   
நேற்று பல்லாவரம் வாரச் சந்தை..ஷாப்பிங் மால்களும், ஏ.சி. வைத்த பெரிய காய்கறி கடைகளும் நிறைந்த சென்னையில், கிராம மணம் மாறாமல் இன்றளவும் பல ஆண்டுகளாக வாரச் சந்தை நடக்கும் இடம். காய்கறி முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்துப் பொருட்களும் வாங்கலாம் என்பதே வாடிக்கையாளர்கள் அறிந்த செய்தி. ஆனால் சந்தைக்குப் போனால் உயிரையும் இழக்க நேரிடும் என்பது புதிய பயம் தரும் செய்தி.
பல்லாவரம் வாரச் சந்தை நடக்கும் சாலையில், தவறாக வந்த கன்டோன்மென்ட் தண்ணீர் லாரி மோதி, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட, ஐந்து பேர் இறந்த சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை நிரப்பியுள்ளது. இவ்விபத்துக்கு தண்ணீர் லாரியின் அதிவேகமே காரணம் என்று கூறப்படுகிறது.

பல்லாவரம் பழைய டிரங்க் சாலையில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. நேற்று காலை பொழிச்சலூர் பத்மநாப நகர்  மகேஷ் தனது மனைவி பிரீத்தி,அவர்களின்  இரண்டரை வயது மகள் தியா மற்றும் மகேஷின் தாய் சரோஜா ஆகிய நான்கு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்றனர்.

சந்தை நடந்த சாலையில் கீழ்க்கட்டளை - பல்லாவரம் மேம்பாலம் இறங்கும் இடத்திற்கு அருகே சென்றபோது, சந்தையில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பிவிட்டு, கன்டோன்மென்ட் தண்ணீர் லாரி ஒன்று, தவறான பாதையில் எதிரே வேகமாக வந்துள்ளது. அந்த  லாரியை கன்டோன்மென்ட் பல்லாவரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையில்  திரும்பிய லாரி கட்டுப்பாட்டை இழந்து, பல்லாவரத்தை சேர்ந்த குகன் என்பவரின் கார் மீது லேசாக மோதிய லாரி, சாலையோரம் நின்றிருந்த குரோம்பேட்டையை சேர்ந்த விஜயகுமார்  என்ற பள்ளி மாணவர் மீதும், அதை தொடர்ந்து மகேஷின் வாகனம் மீதும் மோதிவிட்டு வேகமாகச்  சென்று நின்றது.
இந்த விபத்தில், மகேஷின் குடும்பத்தினர் உள்ளிட்ட ஐந்து பேரும் படுகாயமடைந்தனர். பிரீத்தி உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே இறந்தார். மகேஷும், மற்றொரு நபரும் குரோம்பேட்டை மருத்துவமனைக்குக்  கொண்டு செல்லும்  வழியில் இறந்தனர்.படுகாயமடைந்த குழந்தை தியாவும், அவரது பாட்டி சரோஜாவும், சென்னை அரசு பொது மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இறந்தனர்.மாணவர் விஜயகுமார், நேற்று தான்  பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதி முடித்து விட்டு, சந்தையில் வாகன கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருத நிலையில் இறந்தார்.
இந்த விபத்து  பல்லாவரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தை உண்டாக்கிய  லாரி ஓட்டுனர் சுரேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.

கன்டோன்மென்ட் லாரியை ஓட்டியவர் சுரேஷ். அவர் தற்காலிக ஊழியர் என்று கூறப்படுகிறது. வார சந்தை நடைபெறும்  வெள்ளிக்கிழமை தோறும், அந்த லாரி, சந்தையில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி விட்டு, தவறான பாதை வழியாகவே அலுவலகத்திற்கு வழக்கமாகச் செல்லும் .நேற்று காலையும் அதே பாணியில் ஓ ட்டுனர் தவறான பாதையில் சென்றது மட்டுமின்றி, அதிவேகத்திலும் சென்றிருக்கிறார். அது தான் இந்தக் கோர விபத்திற்குக்  காரணம்.


ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட ஐந்து பேரை பலி கொண்ட, லாரிநிறுவனத்தின் மீதும், ஓட்டுனர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி இதுபோன்ற கொடுமையான விபத்துக்கள் எங்கும் நடக்கவே கூடாது.இது கோடைகாலம்.தண்ணீர் பற்றாக்குறையால் சாலைகளில் அதிவேகமாக லாரிகள் செல்லும்.எனவே அதைக் கட்டுப்படுத்தவும்,கண்காணிக்கவும் தனிக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களையும், பைக் ரேஸ் ஓட்டுபவர்களையும் சாலைகளில் மடக்கிப் பிடித்து சட்ட ரீதியிலான நடவ டிக்கை  எடுக்கும் போக்குவரத்துக் காவல்துறையினர் தண்ணீர் லாரிகள் தறிகெட்டு ஓடுவதையும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பல்லாவரத்தில் நடக்கும் சந்தைக்கு வருவோரின் வாகனங்களை  போக்குவரத்து போலீசார் கண்ட இடத்தில் நிறுத்த அனுமதிக்கின்றனர்.இதனால்  டிரங்க் சாலை ஜி.எஸ்.டி. சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாரந்தோறும் நிலவும் இந்த பிரச்னையை தீர்க்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.


ஆனால் இது குறித்து போக்குவரத்து போலீசார், பழைய டிரங்க் சாலையில் வாகன வசதிக்காக கீழ்க்கட்டளை - பல்லாவரம் மேம்பாலத்தில் இருந்து 250 மீ ,  திரிசூலம் ரயில்வே கேட்டில் இருந்து 250 மீ., இடைவெளி விட்டு  அதற்கு இடைப்பட்ட இடத்தில்  வார சந்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அதை மீறி, மேம்பாலம் ஏறும் இடம் வரை, கடைகள் போடப்படுகின்றன. இதுவே, அந்த சாலையில் கடும் நெரிசல் ஏற்பட காரணம்.மேலும், அந்த வழியாக, சந்தைக்குச்  செல்லாத வாகனங்களைக்  கூட வலுக்கட்டாயமாக மடக்கி  கட்டணம் வசூலிக்கின்றனர். கட்டணம் வசூலிக்க, சிறுவர்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். கன்டோன்மென்ட் நிர்வாகம் இதை கண்டுகொள்வதில்லை என்று புகார் கூறுகின்றனர்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...