Tuesday, April 14, 2015

'தயவு செய்து என்னை மறந்திடு!'

'cinema.vikatan.com


தயவு செய்து என்னை மறந்திடு..!'- இப்படி நாம் ஓட்டுப் போட்டு மந்திரியான அரசியல்வாதி, நம்மை பார்த்து சொல்லலாம், கடன் வாங்கியவர் சொல்லலாம், காதலர்களுக்கிடையே சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நம் மனமே நம்மை நோக்கி, 'சில பிரச்னைகளை மறந்திடு!' என்று சொன்னால் தயவு செய்து கட்டாயம் மறக்கத்தான் வேண்டும்.

அன்றாடம் செய்திகளில் தற்கொலை இல்லாமல் செய்திகள் வருவதில்லை. அதிலும் குற்றவாளிகள் நிம்மதியாக தூங்க, நேர்மையானவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அதிக உடல், மன பலம் கொண்ட ராணுவ வீரர் கூட தற்கொலை செய்கின்றனர். அறிவில் சிறந்த மாணவர்கள் படிக்கும் ஐஐடி யில் படிப்பவர்கள் கூட, மனம் தளர்ந்து தற்கொலை செய்து கொள்வது கொடுமையின் உச்சம். பள்ளிக் கல்வியில் ஏற்படும் தோல்வியால் மனம் உடைந்து போவோரும் அதிகம்.

கடவுள் மனிதனுக்கு மூன்று வரம் கொடுத்துள்ளார் 1. தூக்கம் 2.மறதி 3. சிரிப்பு. இவை மூன்றும் குறையும் போது மனிதன் இயல்பு வாழ்க்கையை இழக்கின்றான் என்றால் மிகையாகாது.

உலகிலேயே இந்தியர்கள்தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் மண்ணோடு போராடும் உழைக்கும் வர்க்கமான உழவர்கள் மனம் ஒடிந்து தற்கொலை செய்து கொள்வது அதிகம் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்தியாவிலேயே அதிகமான அளவு கேரளாவில் தற்கொலை நடக்கிறது. சமீபத்தில் காரைக்குடியில் ஒருவர் தனது குழந்தை, மனைவியோடு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது மன விரக்தியின் உச்சம்.

மன அழுத்தம் பல வழிகளில் நம்மைத் தாக்கும்.

.தன்னம்பிக்கை இல்லாமை, விரக்தி மனப்பான்மை வேலைப்பளு, குடும்ப பிரச்சனை, பேராசையால் ஏற்பட்ட நஷ்டம் , ,அடுத்தவர் நிலை போல மாற ஆசைப்படுதல் போன்றவையே முக்கிய காரணிகள்.
அதிலும் குறிப்பாக நம்மை சூழ்ந்துள்ள நண்பர்கள், உறவினர்கள் போல நாமும் பணக்காரனாக மாற வேண்டும் என கடன் வாங்கி காணாமல் போனவர்கள் அதிகம். நாம் நாமாக இருப்பதே நம் வாழ்விற்கு நல்லது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட …

1. உணர்ச்சியை உறங்க வை :

உணர்ச்சிக்கு அடிமையாகி கட்சித் தலைவர் சிறையில் இருந்தாலும் மனம் ஒடிந்து சாவை விரும்புபவர்கள் முட்டாள்கள் தான். சிறையில் இருக்கும் தலைவருக்கு பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு பல கோடி சொத்துக்கள் இருக்கும். அப்பாவி இவர் செத்தால் குடும்பம் நடுத்தெருவில் தான் நிற்கும். உணர்ச்சியை உறங்க விடுவதே தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட முதல் படி.

2. தன்னம்பிக்கை வளர்த்தல் :

எப்போதும் எந்த விஷயத்தையும் நேர்மறையாக பேசவும்,செய்ய முடியும் என தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். எதிர்மறை விவாதங்களை நம் மனதில் புகுத்த கூடாது.

3. வேலைப்பளு குறைப்பு :

வேலை நேரத்தில் வேலையை செய்து விட்டு மற்ற நேரங்களில் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேச வேண்டும். முடிந்தால் கோவில், சுற்றுலா செல்லலாம். நம் மனதிற்கு மகிழ்ச்சி ,ஓய்வு வேண்டும் என்றால் விடுமுறை கூட .எடுத்துக்கொள்வதில் தவறில்லை.

4.. பணம் :

நம் பணம் நமக்கு உபகாரமாக இருக்க வேண்டுமே தவிர நம் பணமே நமக்கு எதிரியாக மாறக்கூடாது. உதாரணமாக மாதம் 30 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் வங்கியில் ரூ. 6000 ரூபாய் வீதம் மாதம் கடன் செலுத்தும் தகுதி பெறுகிறார். அவர் மேற்கொண்டு நகை,சொத்துக்களை அடமானம் வைத்து சொத்து சேர்க்க வேண்டும் என நினைப்பது தவறல்ல....ஆனால் நிரந்தரமில்லாத முதலீடு செய்வது, அதிக வட்டியுடன் அல்லல்படும் போது அவர் பணம் அவருக்கே எதிரியாக மாறும்.நாம் மற்றவர் போல சொத்து சேர்க்க வேண்டும் என நினைப்பதை விட நிம்மதியாக இருப்பதே மேல்.

5. தூக்கம், நகைச்சுவை உணர்வு:

சுமார் 6 மணி நேரத் தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல நம் மனதிற்கும் புத்துணர்வைத் தரும். கட்டாயம் இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நகைசுவை உணர்வோடு பேசுவது நம் மனதிற்கு சக்தியூட்டும், பிரச்னைகளை மறக்கடிக்கும்.

6. ஆன்மிகம் :

நமது மனதை ஒழுங்குபடுத்தும் பக்திப்பாடல்கள் கேட்பது, இறைவன் நாமத்தை சொல்லுவது,தியானம் செய்வது நம் மனதை வலுவாக்கும்.

7. உடற்பயிற்சி, உணவுப்பழக்கம்:

தினமும் எளிய நடைப்பயிற்சி, யோகா செய்வது மனதை இதமாக்கும் மருந்து. நம் உணவே நம் மனதை நிர்ணயிக்கிறது வாழைப் பழத்தில் உள்ள "செரோடொனின்" என்னும் வேதிப் பொருள் நம் மனதை சந்தோஷமாக வைக்க உதவுகிறது. குடி, போதைக்கு அடிமையானவன் மூளையை மலடாக்கி , மன நோயாளியாக மாற்றுகிறது. அது போல நாம் வலிமை தரும் சைவ உணவுகளை உண்ணும் போது மனம் வலிமையாக இருக்கும்.

8. மறதி :

கட்டாயம் கெட்ட நினைவுகளை மறக்க வேண்டும். தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டுமே தவிர தோல்வியை மறக்க வேண்டும். சூழ்நிலையால் ஏற்பட்ட குடும்ப பிரச்னைகளை உடனுக்குடன் மறந்து இயல்பாக நடக்க வேண்டும்.




9. பழகும் விதம் :

அனைவரிடத்திலும் நிறை, குறைகள் இருக்கும். அனைவரிடமும் நட்புடன் பழக வேண்டும். எல்லோரிடமும் நண்பர்களாக இருக்க முடியாவிட்டாலும் எதிரிகள் இல்லாமல் இருக்க வேண்டாம்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, நமது குழந்தைகள் நமது வயதான பெற்றோரை மதிக்க கற்றுக் கொடுப்பதும், நமக்காக பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற தன் நம்பிக்கையை வளர்ப்பதும், புகை, குடி போதை இல்லாமல் இருப்பதும் மன அழுத்தத்தில் இருந்து வருங்கால சமுதாயத்தை பாதுகாக்கும்.

வெற்றியும், தோல்வியும் கடிகாரத்தின் பெரிய முள், சிறிய முள் போன்றவை, ஒன்றை ஒன்று விரட்டித் தான் வரும் என்பதை புரிந்து நடக்கச் சொல்ல வேண்டும். வெற்றிக்குத் தேவை உழைப்பு மட்டுமே என்பதை புரிய வைத்தால் தயவு செய்து பிரச்னைகளை மனமே மறந்திடு !!

- எஸ். அசோக்

தமிழகத்தில் தொடரும் அரசு ஊழியர்கள் தற்கொலை: அதிகாரி மிரட்டலால் நடந்த விபரீதம்!

ராமநாதபுரம்: அதிகாரியின் மிரட்டலுக்கு பயந்து சத்துணவு பிரிவு அலுவலக உதவியாளர் ஒருவர் அலுவலகத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு பிரிவு அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர் சண்முகவேலு (57). ராமநாதபுரம் அரசு ஊழியர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் நேற்று திடீரென அலுவலக வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சக ஊழியர்கள் இது குறித்து காவல்துறையினர் புகார் செய்தனர்.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் சண்முகவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சத்துணவு பிரிவில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் மதிவாணன் என்பர்தான் சண்முகவேலு தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என சண்முகவேலுவின் குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர்.

விடுமுறை தினமான கடந்த ஞாயிற்று கிழமை சண்முகவேலுவுக்கு போன் செய்த மதிவாணன், உடனடியாக நீ ஆபிஸுக்கு வரனும். அப்படி வரலைன்னா கலெக்டரிடம் கம்ப்ளைண்ட் செஞ்சு உன்னோட வேலையை காலி செஞ்சிருவேன்’’ என கூறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது பேரக்குழந்தைகளை வெளியூருக்கு அழைத்து சென்றிருந்ததால் சண்முகவேலு அலுவலகம் செல்லாத நிலையில் நேற்று காலை சென்ற அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தற்கொலைக்கு காரணமான மதிவாணனை கைது செய்ய சொல்லி சண்முகவேலுவின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சண்முகவேலுவின் உடலை வாங்க மாட்டோம் எனவும் அறிவித்துள்ளனர். இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

-இரா.மோகன்

காணாமல் போன தியேட்டர்கள் ( மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - 9) -தமிழ்மகன்


cinema.vikatan.com
சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, கிருஷ்ணவேணி, சித்ரா, கெயிட்டி, காசினோ, பிளாசா, பைலட், அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிகண்ட், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி, மேகலா, உமா ராக்ஸி, சரவணா, பாலாஜி, சரஸ்வதி, லட்சுமி, அலங்கார், சபையர், ஆனந்த் போன்றவை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயசங்கர், ரவிசந்திரன், கமல், ரஜினியின் ஆரம்ப காலங்கள் வரை இந்தத் திரையரங்குகள் படு பிஸியாக இருந்தவைதான். இதில் மேகலா, சரவணா, சித்ரா, வெலிங்டன், பிராட்வே திரையரங்குகள் எம்.ஜி.ஆர் படங்களை ரிலீஸ் செய்யும். சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டர்கள் எப்போதும் சிவாஜி திரைப்படங்களை வெளியிடும். வெகு சில நேரங்களில் மட்டும்தான் இது மாறும்.இதில் பெரும்பாலான தியேட்டர்கள் இப்போது ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸாகவோ, அல்லது குடோனாகவோ, பூட்டியோ கிடக்கின்றன. 

நாங்கள் அப்போது ஓட்டேரி பகுதியில் குடியிருந்தோம். எங்கள் வீட்டைச் சுற்றி தியேட்டர்கள்தான். சரஸ்வதி (இ), மகாலட்சுமி, புவனேஸ்வரி (இ), வசந்தி (இ), ராக்ஸி (இ), மேகலா (இ), உமா (இ). இ என குறிப்பிடப்பட்டவை எதுவும் இப்போது இல்லை. அத்தனை இல்லைகள். பலவும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகிவிட்டன. அயனாவரத்தில் இருந்த சயானி திரையரங்கும் அடுக்குமாடி குடியிருப்பாகிவிட்டது.

சென்னையை அலங்கரித்த இந்த கலைக் கூடங்களில் இப்போது 90 சதவிகித தியேட்டர்கள் உயிருடன் இல்லை. அவற்றுக்கு உயிர் இருந்தது என்று ரசிகன் நம்பினான். சென்னை புரசைவாக்கத்தில் இருந்த ராக்ஸி இப்போது சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை ஆகிவிட்டது. கே. பாலசந்தர் இயக்கிய படங்கள் அங்கே ரிலீஸ் ஆகும். மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் என எல்லா படங்களும் அங்கே வெளியாகின. பாக்யராஜ், டி.ராஜேந்தர் படங்கள் கடைசியாக சக்கை போடு போட்டன. ஏனோ அது இயக்குநர்களுக்கு முக்கியத்துவம் தந்த திரையரங்காகவே என்னுள் பதிந்திருக்கிறது.
அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலைக்குச் செல்வதற்குள் நாம் கடக்கும் திரையரங்குகள்... சபையர், புளூ டைமண்ட், எமரால்டு, ஆனந்த், லிட்டில் ஆனந்த், அலங்கார், வெலிங்க்டன், தேவி பாரடைஸ், சித்ரா, கெயிட்டி, காசினோ, பாரகன்... இந்த தியேட்டர்களில் எஞ்சி நிற்பது தேவி காம்ப்ளக்ஸ், காசினோ மட்டும்தான். சாந்தி தியேட்டருக்கும் நாள் குறித்துவிட்டார்கள்.

ப்ளூ டைமண்ட் தியேட்டரில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் படத்தில் சென்று அமரலாம் என்ற சிஸ்டம் இருந்தது. படம் முடிய பத்து நிமிடம் இருக்கும்போதுகூட போய் அமரலாம். அடுத்த காட்சி ஆரம்பிக்கும்போது அப்படியே தொடர்ந்து அமர்ந்திருக்கலாம். டால்ஸ்டாயின் அன்னா கரீனினா போன்ற படங்கள் அதில் எந்த நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும். முதல் காட்சியில் உள்ளே போய் இரவுக் காட்சி முடிந்து வெளியே வருபவர்களும் உண்டு. அது ஒரு வித்தியாசமான சிஸ்டம்.

கெயிட்டி, சென்னையின் பழைய திரையரங்கம். 1930-களில் இருந்து இருக்கும் தியேட்டர். அந்த தியேட்டருக்கு என விசேஷமான ரசிகக் கூட்டம் உண்டு. கடைசி கால கட்டத்தில் செக்ஸ் பட தியேட்டர் ஆகி, அஞ்சரைக்குள்ள வண்டி, சாரி டீச்சர் போன்ற படங்களை வெளியிட்டு, ரகசிய ரசிகர்களை நம்பி காலத்தை ஓட்டினார்கள்.

ராயப்பேட்டையில் ஒடியன், உட்லண்ட்ஸ், லியோ, பைலட் தியேட்டர்களில் இப்போது ஊசலாட்டத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது உட்லண்ட்ஸ் தியேட்டர். மற்றவை மூடப்பட்டுவிட்டன. மயிலாப்பூரில் காமதேனு தியேட்டர் இருந்தது. தி.நகரில் ராஜகுமாரி, கிருஷ்ணவேணி திரையரங்குகள். நடிகை டி.ஆர். ராஜகுமாரியின் இந்த திரையரங்கம் இப்போது மெகா மார்ட் கடையாகிவிட்டது. நாகேஷ் திரையரங்கம் கல்யாண மண்டபமாகிவிட்டது. 

வட சென்னை பகுதியில், மின்ட் பகுதியில் இருந்து திருவொற்றியூர் வரை வரிசையாக 15 திரையரங்குகளுக்கு மேல் இருந்தன. ஶ்ரீ கிருஷ்ணா, கிரௌன் இரண்டும் மின்ட் பஸ் ஸ்டாண்டு அருகில் இருந்தன. சற்று தள்ளி முருகன் திரையரங்கம் இருந்தது. இதில் தியாகராஜ பாகவதர் படங்கள் எல்லாம் திரையிடப்பட்டன. இவை மூன்றும் இப்போது இல்லை. பாண்டியன், அகஸ்தியா, மகாராணி, தமிழ்நாடு, பத்மநாபா தியேட்டர்களில் பாதி இப்போது இல்லை. இந்தத் தியேட்டர்கள் எல்லாமே கடந்த 15 ஆண்டுகளுக்குள் காணாமல் போனவை.

15 ஆண்டுகளுக்குள் திரையரங்குகளுக்கு என்ன ஆனது? டி.வி-யின் வருகை பாதித்திருக்கலாம். திருட்டு விசிடி ஆபத்து நெருக்கி இருக்கலாம். சினிமாவின் வர்த்தகத்தில் ஏற்பட்ட ஏதோ ஒரு ஆபத்து அதற்குக் காரணமாகியிருக்கலாம்.


இது பின் குறிப்பு அல்ல... முன் குறிப்பு!
----------------------------------------------
இந்தத் திரையரங்குகளுக்கு எல்லாம் முன் சென்னையில் கட்டப்பட்ட திரையரங்கு எலெக்ட்ரிக் தியேட்டர். அந்த தியேட்டர் எங்கே இருக்கிறது தெரியுமா? சாந்தி தியேட்டர் எதிரில். சாந்தி தியேட்டர் எதிரில் இருக்கும் பழைய போஸ்ட் ஆபிஸ்தான். அந்த எலெக்ட்ரிக் தியேட்டர். திரையரங்கு இருந்ததற்கான அடையாளமாக இப்போதும் அங்கே ஒரு கவுன்டர் மட்டும் சாட்சியாக இருக்கிறது.

நீங்கள் வாங்கும் தங்கம்... தங்கமே இல்லை..!'- அதிர்ச்சி தகவல்

cinema.vikatan.com'
யிரக்கணக்கான ரூபாய் செலவழித்து தங்கம் வாங்கும் நுகர்வோரே, சற்றே சிந்தியுங்கள்.
நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற தரமான, சரியான எடையுள்ள தங்கம் கிடைக்கிறதா? என்று பார்த்தால் 99.99 சதவிகிதம் இல்லை.." என்று அதிர வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் தேசிகன்.

சென்னை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ''உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 600 டன் அளவுக்கும் மேல் தங்கம்  இறக்குமதி செய்யப்படுகிறது. காரணம், மற்ற நாட்டினரைக் காட்டிலும் நம் நாட்டில் ஏமாளிகள் அதிகம் என்ற ஒன்று மட்டுமே. தங்கம் வாங்காமல் இன்றைக்கு யாரும் இருப்பது கிடையாது. அந்தளவுக்கு தங்கம் நமக்கு தவிர்க்க முடியாத மிக முக்கியப் பொருளாகிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், தங்கம் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்துள்ளோம். 

பணக்காரர்கள் ஏமாந்தால் அது அவர்களுக்கு ஒரு விஷயமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால், தினம் தினம் உழைத்து குருவி சேர்ப்பதுபோல் சேர்த்த பணத்தில் தங்கம் வாங்கும் ஏழைகள் ஏமாறுவது எந்த விதத்தில் நியாயம். இன்றைக்கு தினமும் அதுதான் நடந்து வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில்தான் அதிகமானோர் தங்கம் வாங்குகிறார்கள். அதனால், இன்றைக்கு அதிகமான நகைக் கடைகள், தரமான நகை, அது இது என்று சொல்லி மக்களை ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. 

'ஹால்மார்க்' முத்திரையோடு விற்கிறோம் என்று சொல்கிறார்கள். மக்களும் அதை நம்பி வாங்குகிறார்கள். உண்மையில் இன்றைக்கு விற்கப்படும் தங்கத்தில் சராசரியாக 100-க்கு 60 சதவிகிதம் மட்டுமே தங்கம் உள்ளது. 40 சதவிகிதம் கலப்படம் செய்து விற்கப்படுகிறது. கலப்படத்திலும் இன்றைக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்களை கலந்து விற்பனை செய்கிறார்கள் என்பது உச்சகட்ட கொடூரம். நாமும் இதெல்லாம் தெரியாமல் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவது வேதனையிலும் வேதனையான ஒன்று. 

எனவே, இதை முடிந்தவரை தடுத்து நிறுத்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கம் குறித்த போதிய விழிப்புணர்வை பெறவேண்டியது மிகமுக்கியம். அதற்காகத்தான் நாங்கள் இந்த ஆய்வை மேற்கொண்டோம். முடிந்தவரை தங்கம் வாங்குவதை தவிருங்கள். இப்போது அரசாங்கத்திடம் இதுபோன்ற குற்றங்களை தடுத்து நிறுத்த 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனு ஒன்றை கொடுக்க உள்ளோம். மும்பை போன்ற இடங்களில் தங்கம் விற்பனையில் பல கட்டுப்பாடுகள் இருப்பதுபோல், இங்கேயும் வந்தால் தங்கம் விஷயத்தில் இனியும் மக்கள் ஏமாறுவதை தடுக்கலாம்" என்றவர்,

''வரும் 21-ம் தேதி தங்கம் வாங்க உகந்த நாள் என்று சொல்லப்படும் அக்க்ஷய திரிதியை கொண்டாடப்படவிருக்கிறது. இதனால் தங்கம் விஷயத்தில் இன்னும் பலவித ஏமாற்றங்களும், மோசடிகளும் நடக்கக்கூடும். எனவே, மக்கள் ஒவ்வொருவரும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.." என்று கோரிக்கை வைத்தவர்,  தங்கம் குறித்த இன்னும் பல அதிர்ச்சித் தகவல்களையும் பட்டியலிட்டார்.

-சா.வடிவரசு

SIA to operate charity flight for 300 disadvantaged people to celebrate SG50 -

SINGAPORE - Singapore Airlines (SIA) will be organising a special charity flight as part of its activities to mark Singapore's 50th birthday this year.

About 300 Community Chest beneficiaries, including children with special needs, adults with disabilities, as well as disadvantaged elderly and families, will get a three-hour return joy ride on the Airbus 380 superjumbo on May 29.

For many, it will be the first time on an aircraft, SIA said on Tuesday.

Apart from enjoying an in-flight meal service and entertainment system, beneficiaries will also be treated to special performances by SIA's cabin crew during the special flight.

Singapore to toughen laws against unruly air travellers

TROUBLEMAKERS on Singapore-bound flights will not be let off the hook in the future simply because of a lack of jurisdiction.

The Civil Aviation Authority of Singapore (CAAS) has told The Straits Times that they will face the music even if the offences are committed outside the Republic's air space.

As part of a global push to deal with the growing problem of unruly passengers, Singapore will amend its laws to give police and other legal bodies here the authority to charge and prosecute wrongdoers - a process expected to take about two years.

Under current international civil aviation laws - stipulated by the Tokyo Convention - Singapore is able to take action only if the culprit arrives on Singapore Airlines or other Singapore carriers.

As a result, troublemakers on foreign carriers usually escape unaffected.

The Montreal Protocol 2014, drafted by the global aviation community last year, aims to plug this gap.

Among the offences it lists is refusing to comply with safety instructions and physically or verbally abusing cabin crew.

A CAAS spokesman said that the new protocol will provide better protection for travellers and air crew.

She said: "The ability to take law enforcement action in such cases would be a strong deterrence against unruly behaviour on board aircraft arriving in Singapore. This would enhance Singapore's status as a safe and secure air hub."

The authority is working with government agencies to ratify the Montreal Protocol, which requires an amendment of current legislation through Parliament.

At least 22 states must ratify the protocol before the stricter laws can be enforced. So far, only Congo has done so.

Mr Tim Colehan, assistant director for member and external relations at the International Air Transport Association, said there has been a rise in unruly behaviour on aircraft in recent years.

In 2013, airlines reported more than 8,000 incidents, or one for every 1,370 flights.

From 2007 to 2013, the average was one per 1,600 flights.

SIA spokesman Nicholas Ionides confirmed an increasing number of such incidents but did not provide figures. He added that flight crew are trained to detect and deal with such cases.

"Some of these methods include politely declining to serve drinks if the crew discern that the passenger has had too much to drink," he said. "In extreme cases where passengers turn physically violent, our crew are also trained to handle them appropriately."

Mr Colehan said: "It is possible that the worsening situation simply reflects societal changes where antisocial behaviour is increasingly prevalent. However, what is deemed acceptable on the ground takes on a completely different complexion in the confined environment of an aircraft cabin at 35,000 feet."

If ratified by enough nations, the Montreal Protocol will also hold the culprit responsible for costs incurred if a plane needs to be diverted to an alternative airport, which could cost anything from US$6,000 (S$8,200) to US$200,000, Mr Colehan said.

He added: "In some cases, unruly behaviour can be detected at check-in or during screening, and this is where ground handlers and security personnel can assist by alerting the airline, so that it can make an informed decision on whether or not to accept the passenger for boarding."

karam@sph.com.sg

தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்த திராவிடர் கழகத்துக்கு அனுமதி

logo

தாலி அகற்றும் நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் திராவிடர் கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல, இந்த நிகழ்ச்சிக்கு தகுந்த பாதுகாப்பினை போலீசார் வழங்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், திராவிடர் கழகத்தின் துணை தலைவர் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தடையை நீக்க வேண்டும்

டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஏப்ரல் 14-ந்தேதி தாலி அகற்றும் நிகழ்ச்சியை, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடத்த திட்டமிட்டோம்.

இதற்கிடையில், கடந்த 12-ந்தேதி நாங்கள் நடத்தும் தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு தடை விதித்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக இந்த தடையை போலீசார் பிறப்பித்துள்ளனர். எனவே, அந்த தடை உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தன்னிச்சை முடிவு

இந்த மனு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்பு நேற்று மாலை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கவேண்டும் என்று சிறுபான்மையினர் அமைப்பை சேர்ந்தவரும், இந்து மகாசபா சார்பிலும் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் அரசு தரப்பில் அட்வகேட்ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் தியாகராஜன், டி.வீரசேகரன் உட்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள். அப்போது நடந்த விவாதம் பின்வருமாறு:-

மூத்த வக்கீல் தியாகராஜன்:- தாலி அகற்ற வேண்டும் என்ற எண்ணங்களை கொண்டவர்கள், இது தொடர்பான ஒத்த கருத்தை கொண்டவர்கள் கலந்து கொள்ளும் தனியார் நிகழ்ச்சியாகும். இது பொதுக்கூட்டம் இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள யாருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் மட்டும்தான் கலந்து கொள்ள முடியும். பெண்கள் தாலியை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊர்வலம் எதுவும் நாங்கள் செல்லவில்லை. ஆனால், போலீசார் இந்த நிகழ்ச்சியை தவறாக புரிந்துக் கொண்டு, தன்னிச்சையான உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.

சட்டஒழுங்கு முக்கியம்

அட்வகேட் ஜெனரல் சோமயாஜி:- சென்னை சிட்டி போலீஸ் சட்டத்தின்படி, தனியார் இடத்தில் நிகழ்ச்சி நடத்தினாலும், போலீஸ் அனுமதி தேவை. மேலும், போலீஸ் கமிஷனர் 15 நாட்களுக்கு பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றுக்கு தடை விதித்து பொதுவாகத்தான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு மனுதாரர் அமைப்புக்கு மட்டும் பிறப்பிக்கவில்லை. உளவுப்பிரிவு அறிக்கையின் அடிப்படையில், சட்ட ஒழுங்கு பிரச்சினையை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களை பொருத்தவரை கருத்துச் சுதந்திரம் என்பதை விட, சட்டஒழுங்குத்தான் முக்கியமானது.

கருத்து சுதந்திரம் முக்கியம்

நீதிபதி:- என்னை பொருத்தவரை கருத்துச்சுதந்திரம்தான் முக்கியமானது. அதனால்தான் இந்த வழக்கை இரவு வரை விசாரிக்கின்றேன். இந்த மனுதாரர் மட்டுமல்ல, நாளை இந்த கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்து மகாசபா நிர்வாகிகள், நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசுவதற்கும், காந்தியை விமர்சித்து பேசுவதற்கும் அனுமதிக் கேட்டால், அதற்கு அனுமதி வழங்கத்தான் செய்வேன். அரசியலமைப்பு சட்டத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை வழங்கப்பட்டுள்ளது. சட்டஒழுங்குதான் முக்கியம் என்று சொல்கிறீர்கள். இந்த தாலி பிரச்சினையில், டி.வி. நிறுவனம் மீது தாக்குதல் நடந்ததே, அதை போலீசாரால் தடுக்க முடிந்ததா? இந்த பிரச்சினையால், தாலி தொடர்பான நிகழ்ச்சி ஒளிப்பரப்பவே இல்லையே? தாலி அகற்றும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடப்பதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளதே?

மாட்டுக்கறி

சோமயாஜி:- அவர்கள் 1987 முதல் 1995-ம் ஆண்டு வரை நடத்தியதாக ஏதோ ஒரு போட்டோ, செய்தித்தாள் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். ஆனால், அது போதுமான ஆதரமாக இல்லை. இந்த நிகழ்ச்சி மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியினால் சட்டஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று உளவுப்பிரிவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும், நிகழ்ச்சி முடிவில் மாட்டுக்கறி வழங்கப்படுவதாகவும் தெரிகிறது.

நீதிபதி:- அதனால் யாரும் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று சொல்கிறீர்களா?

சோமயாஜி:- அப்படியில்லை. சட்டஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது. அதுதான் போலீசாரின் எண்ணம்.

இவ்வாறு விவாதம் நடந்தது. இந்த விவாதம் இரவு 7 மணி வரை நடந்தது.

உத்தரவு ரத்து

இதன்பின்னர் இரவு 9 மணிக்கு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் நடத்தவுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதித்து போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். மனுதாரர், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சியை ஏப்ரல் 14-ந்தேதி (இன்று) நடத்திக்கொள்ளலாம். அதேநேரம், இந்த நிகழ்ச்சிகளை மனுதாரர் அமைப்பு அமைதியான முறையில் நடத்த வேண்டும். இந்த நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெறும் விதமாக, தேவையான அனைத்து பாதுகாப்பினையும் போலீசார் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...