Monday, April 27, 2015

India bans overseas recruitment of nurses by private agencies Daniel George, TNN | Mar 19, 2015, 03.57PM IST..TOI



CHENNAI: The central government has issued an order banning overseas recruitment of nurses by private agencies.

The government order, which will come into effect on April 30, has stated that only an authorized government agency can conduct nursing recruitments.

According to the GO issued on Wednesday, nursing recruitments to a foreign country from India can be done only through a government agency from respective states.

NORKA Roots and the Overseas Development and Employment Promotion Council (ODEPC) will be entrusted with the job in Kerala. Currently, recruitments to Saudi Arabia are done through the ODEPC.

The decision by the central government is expected to put an end to large-scale corruption and cheating by private agencies who recruit nurses from India to various foreign countries, including all the Gulf Cooperation Council (GCC) countries, after taking huge sums as bribes and commission.

Agents in Qatar, the UAE, Saudi Arabia and Bahrain allegedly take huge sums from job aspirants in collusion with their counterparts in India. Many nurses recruited by private agents lost their jobs after a few months.

Speaking to TOI over phone, the Indian ambassador to Kuwait, Sunil Jain, said: "Ever since the issue surfaced, we were trying to persuade the overseas Indian affairs ministry to ban recruitment by private agencies. The poor nurses were shelling out thousands of rupees to these unscrupulous agents who exploited them.''

The Indian embassy in Kuwait had requested the Centre to put an end to this malpractice. The Kerala government had requested the Centre to appoint a nodal government agency to conduct overseas recruitment of nurses from India to avoid large-scale corruption and cheating.

"It is a very good decision by the government. We hope that from now on these women don't pay a single penny to get a job in Kuwait and recruitments will become transparent and corruption-free," Jain added.

Welcoming the move, Indian consul general in Jeddah (Saudi Arabia) B S Mubarak said, "It is a step in the right direction and it will safeguard the interest of nurses who seek a better future abroad. It will put an end to middlemen who exploit these poor women.''

Low pay, a deterrent for nursing aspirants

The president of the Indian Nursing Council T. Dileep Kumar has stressed the need for a strong media campaign on the immense employment potential for nurses in India and abroad in view of the declining demand for entry into nursing schools and colleges in the country.

Speaking on the `Nursing Scenario in India’ at the National Conference on `Innovations in Nursing: A Key to Professional Excellence’ organised by the College of Nursing of the Christian Medical College at the CMC campus here on Tuesday, Mr. Dileep Kumar said that the demand for admission to nursing institutions was declining owing to poor pay for nurses in the private sector compared to the government sector. Besides, on completion of their courses, the nurses were unable to repay their educational loan on account of the poor pay. Another problem faced by the nurses was the practice of health institutions in enforcing the bond system and withholding certificates, and the unsatisfactory working conditions in the private sector.

The INC president said that under these circumstances, the Ministry of Health and Family Welfare has allocated Rs.150 crores for nursing for undertaking various measures such as training, strengthening of institutions, upgradation of three central institutions and funding of major research projects under the 12th Plan.

Y. Prasannakumari, Deputy Director of Nursing Education, Directorate of Medical Education, Kerala urged the need for a concerted effort to address the challenges arising from globalisation through development of global nursing education standards for preparation of a competent nursing work force.

The availability of excess nursing work force in certain parts of the country and scarcity of the work force in many others are among the challenges in nursing. Similarly, the distribution of nursing educational institutions is also skewed.

While there is mushrooming of institutions in certain parts, there is inadequate number in some other parts. There is lack of adequate facility/competent faculty to develop desired competencies resulting in dilution of quality.

The Deputy Director said that the present educational programme is not adequate and appropriate to meet the health care challenges posed by globalisation. Most nursing education programmes do not prepare nurses to respond effectively to public health threats in their communities.

There are significant disparities between existing health care requirements and preparedness of nurses.

Delivering the valedictory address on Sunday, Dr. Jayarani Premkumar, Nursing Superintendent of the CMC Hospital stressed the need for innovation for excellence in nursing with the aim of improving patient care. “Innovation does not need any genius, but only hard work”, she said.

T.S. Ravikumar, Professor of Emergency Nursing, CMC said that the CMC followed the triage system from 1996, under which patients coming to the outpatient department were prioritised based on the criticality of their condition, and given treatment. Selva Titus Chacko, Dean, College of Nursing, CMC welcomed the gathering.

Health institutions enforce bond system and withhold certificates

Another challenge is availability of excess work force in certain parts and scarcity in others

Colleges to have 80% approved staff: MUHS

NASHIK: The Maharashtra University of Health Science ( MUHS) has decided to have 80% of its approved staffers and the rest of the officials in its affiliated colleges as per the norms stated under various councils to improve upon the quality of health education in the state.

This was decided in the first academic council of the year held on the university premises on Friday, making the norms stricter for colleges affiliated to it.

University vice-chancellor Arun Jamkar said the institute has decided to step up the quality of education for the past four years and the new decision was a part of it . "It has been decided that compared to previous years, the colleges affiliated to the university will have to fill 80% of the staffers approved by the university. The remaining 20% will have to be filled as per the norms of central councils like Dental Council of India (DCI), Medical Council of India (MCI) and others," he said.

Jamkar said this would ensure that the necessary staffers were made available in each college and the teachers could spend their working time efficiently and qualitatively for teaching as required by the university. It would be mandatory on the part of a teacher to complete 200 hours of teaching in a single academic year, he added.

The VC said that the university was also focusing on improving quality through the academic audit held every year. "Apart from inspecting infrastructure, the teams appointed for the academic audit are also checking what has been taught to students in colleges. The university is also focusing on food, hostel and other facilities provided by the colleges," Jamkar told TOI.

University registrar Kashinath Garkal said during the 2012-13 academic year, the academic council had allowed 65% of the staff in affiliated colleges, which was increased to 70% in 2013-14. "The number of staffers to be hired was further increased 75% for the 2014-15 academic year. It has been extended to 80% this year," he added.

Garkal said there was no defined number of teachers to be hired in some colleges from central councils and hence, such institutes would have to fill 90% of the total staff capacity.

ஆள் விழுங்கிக் கிணறுகளா?

ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் உயிரிழப்புச் சம்பவங்கள் அண்மைக் காலமாக தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. நாளேடுகளைத் திறந்தால், ஆழ்துளைக் கிணறுகளில் நிகழும் உயிரிழப்புச் சம்பவங்கள் அடிக்கடி கண்ணில்படும் செய்தியாகி விட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேவி என்ற சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் என்ற சிறுவன் கடந்த 13-ஆம் தேதி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இவை சில உதாரணங்கள் மட்டுமே. இன்னும் எத்தனை எத்தனையோ உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழக்கக் காரணம்தான் என்ன?

ஆரம்பக் காலங்களில் நகரம் முதல் கிராமம்வரை தண்ணீர்த் தேவைக்காக கிணறுகளை வெட்டினர். அந்தக் கிணறுகளைச் சுற்றிலும் கல் வைத்தும், கைப்பிடிச் சுவர் வைத்தும் கட்டினர்.

நாளடைவில் இதுவும் மாறிப்போனது. பெரிய கிணறு என்ற நிலை மாறி, "உறை கிணறு' என்று கூறும் அளவுக்கு சிறிய அளவிலான கிணறுகள் வெட்டப்பட்டன. இதற்கு விலைவாசி, கூலி உயர்வு மட்டும் காரணமல்ல. விலைவாசி உயர்ந்த அளவுக்கு விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான விலை கூடுதலாகக் கிடைக்காததும்தான்.

இந்த நிலையில்தான், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இது ஒருவகையில் விவசாயிகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருந்தது.

ஏனெனில், ஒரு கிணறு வெட்டுவதற்கு விவசாயிகள் பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. அதேசமயம், கிணறு தோண்ட ஆகும் செலவைவிட ஓர் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் செலவு குறைவு என்பதால், ஆழ்துளைக் கிணறுகளின் மீதான மோகம் விவசாயிகளிடையே நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

முன்பெல்லாம், ஆழ்துளைக் கிணறுகள் நாலரை அங்குலம், ஆறரை அங்குலம் என்ற அளவிலேயே அமைக்கப்பட்டு வந்தன. இவற்றின் துவாரங்கள் அளவில் சிறியதாக இருந்ததால் குழந்தைகள் தவறி விழுவது போன்ற அபாயம் ஏற்படவில்லை.

ஆனால். தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால், எட்டரை அங்குலம், பத்தரை அங்குலம் என்ற அளவுகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதான் தற்போதைய அசம்பாவிதங்களுக்குக் காரணமாகும்.

சிறு குழந்தைகள் தவறி உள்ளே விழுந்துவிடும் அளவுக்கு இந்த ஆழ்துளைக் கிணறுகள் அளவில் பெரியதாக இருக்கின்றன. அவ்வாறு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும்போது தண்ணீர் வந்துவிட்டால் பிரச்னை இல்லை. உடனடியாக அதில் மோட்டார், குழாய்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

ஆனால், தண்ணீர் வராவிட்டால்தான் பிரச்னையே. பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்தும் தண்ணீர் வரவில்லையே என்ற விரக்தியில், அந்த ஆழ்துளைக் கிணற்றை அப்படியே விவசாயிகள் கைவிட்டு விடுகின்றனர்.

விளைவு? எதேச்சையாக அந்தப் பக்கம் விளையாடுவதற்காகச் செல்லும் குழந்தைகள் தவறி அந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழக்கும் அபாயம் நிகழ்ந்து விடுகிறது. இதுதான் தற்போதைய பிரச்னைக்கு வித்திட்டுவிட்டது. சிறுமி தேவி, சிறுவன் தமிழரசன் ஆகியோரின் உயிரிழப்புகளும் இப்படி நிகழ்ந்ததுதான்.

எனவேதான், இதுதொடர்பாக சென்னை ஐ.சி.எஃப். பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.சிவகாமி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார். அதில், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இதற்கு, தமிழக அரசு அளித்துள்ள பதிலில், தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994, சென்னை பெருநகர் பகுதி நிலத்தடி நீர் (வரன்முறை) திருத்தச் சட்டம் 2014 ஆகியவற்றில் கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது நீதி

மன்றம்.

அதாவது, ஆழ்துளைக் கிணறுகள் முறைப்படுத்துதல் சட்டம் என்ற ஒரு புதிய சட்டத்தை தமிழக அரசு 2014-இல் கொண்டு வந்துள்ளது. அந்தச் சட்டத்தின் சில சாராம்சங்கள் இதோ:

ஆழ்துளைக் கிணறு, குழாய்க் கிணறு அமைக்கப்படும் நிலம், திறந்தவெளிக் கிணறுகள் உள்ள இடம் ஆகியவற்றைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். பழுதுபார்க்கும் சமயங்களில் கிணறுகளை மூடி வைக்க வேண்டும். திறந்தவெளிக் கிணற்றின் கைப்பிடிச் சுவருக்கு மேல் இரும்பு அல்லது உறுதியான ஸ்டீல் தகட்டினால் ஆன மூடி அமைக்க வேண்டும்.

பணிகள் முடிந்தவுடன் ஏற்படும் பள்ளங்களை மேல்மட்டம் வரை கற்கள், மணல், சரளை, சகதி, மண் ஆகியவற்றைக் கொண்டு நிரப்பி சமன் செய்ய வேண்டும்.

இவ்வாறாக நீள்கிறது அந்த புதிய நடைமுறைகள்.

இந்தச் சட்டமும், வழிகாட்டுதல்களும் நடைமுறைக்கு வந்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்பது உண்மைதான். ஆனால், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததா? தற்போது கிணறுகளை புனரமைப்பவர்களும், ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பவர்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றுகிறார்களா என்றால்... பெரும்பாலும் இல்லை என்றே சொல்லிவிடலாம்.

எந்த ஒரு சட்டத்தையும் இயற்றுவது பெரிய விஷயமல்ல, அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதில்தான் அந்தச் சட்டத்தின் வெற்றியும், தோல்வியும் இருக்கிறது. சட்டமும், தண்டனையும் கடுமையாக்கப்பட்டால்தான் தவறுகள் குறையும் என்பார்கள்.

அதுபோல, ஆழ்துளைக் கிணறுகள் முறைப்படுத்துதல் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தால்தான் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.

பாமாயிலும் பாதிப்புகளும்!,,,,,,,By இடைமருதூர் கி. மஞ்சுளா



சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்புவரை அதிக அளவில் பாமாயில் பயன்பாடு தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து வந்தது. இடையில் சிறிது காலம் இதன் பயன்பாடு குறைந்திருந்தது.

தற்போது, பிற எண்ணெய்களின் விலை ஏற்றத்தைப் பார்த்து மிரண்டுபோன நடுத்தர வர்க்கத்தினர், குறைந்த விலையில் கிடைக்கும் பாமாயிலை சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர்.

இந்த எண்ணெய் எப்படித் தயாரிக்கப்படுகிறது? எங்கிருந்து நமக்குக் கிடைக்கிறது? பாமாயில் உடலுக்கு ஓரளவு நன்மை செய்தாலும், இதன் தயாரிப்பால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன, பாதிக்கப்படும் உயிரினங்கள் எவை என்பன பற்றி எல்லாம் நம்மில் பெரும்பாலோர் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் கூடக் காட்டுவதில்லை. நியாய விலைக் கடைகளில் (ரேஷன்) குறைந்த விலையில் கிடைத்தால் போதும் என்று வாங்கிச் செல்கின்றனர்.

பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய்ப் பனை என்பது பனை மர குடும்பத்தைச் சார்ந்தது. இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், மலேசியா முதலிய நாடுகளில் தென்னை மரத்தில் லாபம் இல்லையென்று தென்னையை அழித்துவிட்டு, செம்பனை என்ற குட்டை பாமாயில் மரங்களை வளர்க்கிறார்கள்.

பாமாயில் ஏற்றுமதியில் மலேசியாவும், இறக்குமதியில் இந்தியாவும் முதலிடம் வகிக்கின்றன.

இந்தோனேசியாவில் 20.6.2013-இல் ஒரு வாரத்துக்கும் மேலாக சுமத்ரா தீவு பகுதியில் உள்ள காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீப் புகையால், சிங்கப்பூர், மலேசியா கடும் பாதிப்பைச் சந்தித்தது உலகமறிந்த நிகழ்வு. இந்தோனேசிய காடுகளில் இதுபோன்று அடிக்கடி தீப் பிடிக்கும். இந்தக் காட்டுத் தீ எதனால் ஏற்படுகிறது?

பாமாயில் மரங்கள் மூலம் அதிக லாபம் கிடைப்பதால், விவசாயிகள் தங்கள் பகுதியில் முற்றிய மரங்களை அழித்து, பாமாயில் மர விவசாயத்துக்காகத் தயார் செய்கிறார்கள். காடுகளை அழித்து அவற்றைக் கொளுத்திவிட்டு, அங்கே பாம் எண்ணெய் மரங்களை நடுவது ஆண்டுதோறும் ஜூனில் துவங்கி நடைபெறுகிறது.

இது அதிகம் லாபம் தருவதால் சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள பெரும் நிறுவனங்கள் காட்டுத் தீயை ஏற்படுத்தி இந்தோனேசிய காடுகளை அழித்து, அங்கு பாமாயில் மரங்களை வளர்க்க ஊக்கப்படுத்துகிறார்கள்.

இந்தோனேசியா ஏழ்மையான நாடு. எனவே, அங்குள்ள விவசாயிகளும் வருமானம் வந்தால் போதும் என்ற அளவில்தான் செயல்படுகிறார்கள்.

சிங்கப்பூரும், இந்தோனேசியாவும் அண்டை நாடுகள் மட்டுமல்ல, இந்தோனேசியாவில் ஏற்படும் காட்டுத் தீயால் வெளிவரும் புகை மண்டலம், அருகிலுள்ள சிங்கப்பூரின் சுற்றுச்சூழலைப் பாதித்து காற்று மாசுவின் அளவைக் கணிசமாக அதிகரித்தும் விட்டிருக்கிறது.

"அவ்வப்போது ஏற்படும் காட்டுத் தீயால் வெளிவரும் புகையைக் கட்டுப்படுத்த ஏதாவது செய்யுங்கள்' என்று சிங்கப்பூர் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தோனேசியாவைக் கேட்க, அவர்களோ "எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். ஆனால், அதற்கு எங்கள் நாட்டில் முதலீடு செய்துள்ள சிங்கப்பூர், மலேசிய தொழிலதிபர்களும் ஒத்துழைக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

மலேசியாவின் பரப்பளவில் கிட்டத்தட்ட பாதி அளவு பாமாயில் மர விவசாயம்தான் நடைபெறுகிறது. சமையல் எண்ணெய் நிறுவனங்கள் மலேசியா முழுவதும் பாம் எண்ணெய் மரங்களை நட்டு விளைச்சல் பார்த்தது போதாது என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தோனேசிய காடுகளிலும் கை வைத்துள்ளனர். இவற்றில் முதலீடு செய்துள்ளவர்கள் பெரும்பாலும் சிங்கப்பூர், மலேசியாவைச் சேர்ந்தவர்கள்தான்.

பாமாயில் ஏற்றுமதியை நிறுத்திவிட்டால், தங்கள் பொருளாதாரமே ஸ்தம்பித்துவிடும் என்பதால் மலேசியாவும், இந்தோனேசியாவும் காடுகளை அழித்து பாமாயில் உற்பத்தி செய்வதைத் தடுக்க முன்வராது.

பாமாயில் வாங்குவதை மற்ற நாடுகள் நிறுத்தினால் ஒருவேளை, காடுகள் பாமாயில் பண்ணைகளாக மாற்றப்படுவதைத் தடுக்கலாம்.

இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் பயன்பாட்டை நாம் தவிர்க்க வேண்டும். இந்தோனேசிய காடுகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய காடுகளான இந்தோனேசிய காடுகள் 12 கோடி ஹெக்டேர் பரப்பளவு கொண்டவை. சுமார் 90 சதவீதம் ஒரங்குட்டான் (Orangutan) குரங்குகள் இந்தக் காடுகளில் வசிக்கின்றன. 10 சதவீதம் மலேசியாவின் சாபா, சரவாக் காடுகளில் உள்ளன.

பாமாயில் தேவைக்காக ஒரங்குட்டானின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் இந்தோனேசிய காடுகள் முழுவதும் பரவியிருந்த ஒரங்குட்டான்கள், தற்போது 60 ஆயிரமே இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 5 ஆயிரம் ஒரங்குட்டான்கள் அழிந்து வருகின்றன.

இதைத் தடுக்க வழி இருக்கிறது. ஒரங்குட்டான் வசிக்கும் காடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பாமாயிலை விலக்க வேண்டும். "இந்தோனேசிய காடுகளில் இருந்து தயாரிக்கப்படவில்லை' என்று சான்று பெற்ற பாமாயில் உற்பத்தி, பிரிட்டனில் வெற்றி பெற்றிருக்கிறது.

அது சரியாக நடைபெறும்போது, இந்தியாவிலும் அதை ஏன் நடைமுறைப்படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்புகிறார் செய்தியாளர் பஹர் தத். தன் செய்தி சேகரிப்பு அனுபவங்களை "கிரீன் வார்ஸ்' (Green Wars) என்ற புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.

இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய அரசுகள் இணைந்து பாமாயிலுக்காக முதலீடு செய்யப்படுவதைத் தடுத்தால் எரியும் காடுகளைத் தடுக்கலாம். அங்கு வாழும் அரிய வகை ஒரங்குட்டான்களையும் காக்கலாம்.

நடுங்க வைக்கும் நடுக்கம்!

Dinamani

நேபாளம் சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நேர்கொண்டிருக்கும் மிகப்பெரும் நிலநடுக்கத்தால் 2,350-க்கும் மேற்பட்டோர் பலியாகிருப்பதும், 6,000-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்திருப்பதும், லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழிடம் இல்லாது வீதிக்கு வந்திருப்பதும் உலக மக்கள் அனைவருக்கும் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் மட்டுமன்றி, வட இந்தியாவில் பிகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 55-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இமயமலையையும் விட்டுவைக்கவில்லை. அதிர்வின் காரணமாக பனிச்சரிவு ஏற்பட்டு எவரெஸ்ட் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்களின் முகாம்களை மூழ்கடித்ததில், 22 பேர் இறந்துள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.

கோடை காலம் என்பதால், காத்மாண்டு மற்றும் நேபாளத்தின் சுற்றுலாத் தலங்களுக்கு உலகம் முழுவதிலிருந்தும் பயணிகள் வந்துள்ள நேரத்தில் தாக்கி இருக்கிறது இந்தப் பேரிடர். வேதனையில் துடிக்கும் தமது மக்களைக் காப்பாற்றும் கடமையுடன், தங்கள் மண்ணுக்கு வந்த விருந்தினர் நலம் காக்கும் பொறுப்புச் சுமை நேபாளத்துக்கு கூடுதலாகி இருக்கிறது.

காத்மாண்டுவின் அழகை 60 மீட்டர் உயரத்திலிருந்து கண்டு களிக்கும் வகையில் 1832-இல் கட்டப்பட்ட தரஹரா கோபுரம் நிலநடுக்கத்தால் இடிந்து நொறுங்கியதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 180 பேர் இறந்துள்ளனர். 1934-ஆம் ஆண்டிலும் இந்தக் கோபுரம் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. மீண்டும் கட்டப்பட்ட இந்தக் கோபுரம் தற்போது மறுபடியும் தரைமட்டமாகியுள்ளது. இடுபாடுகளில் சிக்கி இறந்த வெளிநாட்டுப் பயணிகளை அடையாளம் காண்பதும், உடல்களை அவர்தம் நாட்டுக்கு அனுப்புவதும், உயிர் பிழைத்தோரைப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பதும் மிகச் சிறிய நேபாள அரசு எதிர்கொள்ளும் பெரும் பொறுப்பு.

உலக நாடுகள் அனைத்தும் உதவிக் கரம் நீட்டியுள்ளன.

இந்தியா தனது விமானப் படை வீரர்களை அனுப்பி மீட்புப் பணியை முடுக்கிவிட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து உணவுப் பொருள், குடிநீர், மருந்துகள், மருத்துவர்கள் என எல்லா உதவிகளும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா முதல்கட்டமாக 10 லட்சம் டாலர் நிவாரண நிதி அளித்துள்ளது. நார்வே 39 லட்சம் டாலர் நிதியுதவி அளித்துள்ளது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையான உதவியைக் கொண்டு வந்து களத்தில் இறக்கிக்கொண்டே இருக்கின்றன. மீட்புப் பணிக்கு வருவோரையும் அச்சுறுத்தும் வகையில், மறுநாளே மற்றொரு நிலஅதிர்வு - 6.7 ரிக்டர் அளவுக்கு நேபாளத்தை உலுக்கியது.

நேபாளம் தனது முந்தைய எழில்முகத்தைப் பெற இரண்டொரு ஆண்டுகள் ஆகும். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மட்டுமே நேபாளத்தின் கணிசமான பொருளாதாரம் உள்ள சூழலில் இவர்களுக்குத் தாற்காலிக மாற்றுத் தொழில், நிதியுதவி, புதிய குடியிருப்புகள் போன்றன அவசியம். வெறுமனே நிதியுதவியோடு நில்லாமல், இத்தகைய தொடர் வாழ்வாதார மீட்புப் பணிகளிலும் உலக நாடுகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகள் நேபாளத்துக்கு மிகமிக இன்றியமையாதவை. சகோதர இந்தியா அந்தப் பொறுப்பை ஏற்கும் என்பதும் திண்ணம். ஏற்றும் வருகின்றது.

இந்திய அரசு மட்டுமன்றி, இந்தியாவில் உள்ள நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புகளும் சேர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம். குறிப்பாக, மருத்துவச் சுற்றுலா மூலம் பயன் அடையும் மருத்துவப் பெருநிறுவனங்கள் தாமாகவே நேபாளம் சென்று, சிகிச்சை அளிக்கவும், முகாம் அமைக்கவும், கூடுதல் அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோரை இந்தியாவுக்கு அழைத்துவந்து இலவசமாக சேவை அளிக்கவும் முன்வர வேண்டும்.

நேபாளத்தில் இந்தப் பேரிடர் நிகழ்ந்த அதே காலகட்டத்தில், சிலி நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக உறக்கநிலையில் இருந்த கல்புகோ எரிமலை தனது நெருப்பையும் சாம்பலையும் தூற்றியது. 20 கி.மீ. சுற்றளவில் வசித்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். வான்வெளி முழுதும் சாம்பல் பரவியதால் ஐரோப்பாவுக்கான விமான சேவை ரத்து செய்யும் அளவுக்கு நிலைமை இருந்தது. பூமித் தாயின் வயிற்றில் ஏற்படும் மாறுதல்களின் ஏதுநிகழ்வா? இதைக் கொண்டு பிற இடங்களில் நிலநடுக்கத்தைக் கணிக்க முடியுமா? ஆராய்ச்சி தேவை.

இதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் சிட்னி பகுதியில் மிகப் பெரிய அளவில் பனிக்கட்டி மழை பொழிந்து வீடுகள், வாகனங்கள், கிடங்குகளைச் சேதப்படுத்தியுள்ளது.

மண்ணுக்கு அடியிலிருந்து பெட்ரோலிய பொருள்களையும், நிலக்கரியையும், பல கனிமப் பொருள்களையும் எடுப்பதுடன், எல்லாவற்றுக்கும் மேலாக ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி நிலத்தடி நீரையும் எந்தவிதக் கட்டுப்பாடும், வரைமுறையும், எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் உறிஞ்சி பூமித் தாயின் அடிவயிற்றை சுருக்கச் செய்வதால், அதன் விளைவுகளை பூமியின் மேற்புறத்தில் சந்திக்கிறோம். காடுகள் அழித்து, கானுயிர் அழித்து, வானக் குடையில் ஓட்டை போட்டு, வெப்பம் கூடி அவதிப்படுகிறோம்.

இயற்கையை, இந்த பூமியை மனிதன் மதிக்காதபோது, அவையும் மனித உயிருக்கு மதிப்பு தரப் போவதில்லை. ஊழிக்கூத்து நிகழ்த்தவே செய்யும் என்பதை எப்போதுதான் உலகம் உணரப்போகிறதோ தெரியவில்லை. உலகம் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் திண்ணம்.

தண்டனை முக்கியம் அல்ல: நல்வழி காட்டுவதுதான்!

logo

மத்திய அமைச்சரவை சில தினங்களுக்கு முன்பு எடுத்த ஒரு முடிவு, நாடு முழுவதும் ஒரு பெரிய எண்ண அலசலை உருவாக்கிவிட்டது. 2012–ம் ஆண்டு நிர்பயா கற்பழிப்பு வழக்கில் ஒரு குற்றவாளி 18 வயதிற்கு குறைவானவன் ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டால், அவனை ஜெயிலில் அடைக்காமல் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்து திருத்த வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான். இது நாடு முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த கொடூர குற்றத்தை செய்தவன் சிறுவன் என்ற போர்வையில் தப்பித்து விடுவதா? அவனையும் மற்ற குற்றவாளிகளுக்கு இணையான குற்றவாளியாக கருதியல்லவா தண்டனை அளித்திருக்க வேண்டும் என்று ஒரு பக்கமும், இல்லை... இல்லை... சட்டத்தின் அடிப்படையில் அவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்து திருத்த எடுத்துக்கொண்ட முயற்சிதான் சரியானது என்றும் கருத்துகள் உலவின. 

இந்த நிலையில், 16 முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள் கொலை, கற்பழிப்பு போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களை மற்ற குற்றவாளிகளுக்கு இணையாக கருதி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி தண்டனை வழங்க ஒரு திருத்த மசோதா தயாரிக்கப்பட்டது. இதை மத்திய அமைச்சரவை தீவிரமாக ஆய்வு செய்து சில பரிந்துரைகளையும் சேர்த்துள்ளது. அந்த சிறுவர்கள் செய்த குற்றம் சிறியதா?, கடுமையானதா? மிக கொடூரமானதா? என்பதை மனவியல் மற்றும் சமூக நிபுணர்களின் துணையோடு இளம் சிறார் நீதி வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் சிறுவன் என்ற வகையிலா, பெரியவர்கள் என்ற வகையிலா இந்த குற்றத்தை செய்தார்கள்? என்ற அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும். அதன்படி நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளது. இது நடைமுறைக்கு நிச்சயமாக சாத்தியமில்லை.

விடலைப்பருவம் என்பது குழந்தை பருவத்தில் இருந்து இளைஞர்கள் என்ற பருவத்திற்கு செல்லும் வழியில் உள்ள சில ஆண்டுகளின் இடைக்கால பருவம்தான். வெறும் மணலால் பாத்திரங்களை உருவாக்க முடியாது. களிமண்ணில் நீர்குழைத்து அதன் பிறகு உருவாக்கும்போதுதான் மண்பாண்டங்கள் உருவாகிறது. அதை உருவாக்குவது குயவர்களின் கையில்தான் இருக்கிறது. அதுபோல், தண்ணீர் ஊற்றி களிமண்ணாக உள்ள இந்த விடலை பருவத்தில் அவர்களை உருவாக்க வேண்டியது சமுதாயத்தின் பொறுப்புதான். அந்த பொறுப்பில் இருந்து தவறிவிட்ட சமுதாயம் இப்போது அவர்களை தண்டிக்க துடிப்பது நியாயம் அல்ல. இத்தகைய விடலை பருவ குற்றவாளிகளை திருத்தி நல்வழிப்படுத்த வேண்டியதுதான் சமுதாயத்தின் கடமையே தவிர, தண்டித்து ஜெயிலில் அடைப்பது அல்ல. மேலும், ஏற்கனவே சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்ட கைதிகளில் பெரும்பாலானோர் திருந்தி வெளியே வந்ததாக சரித்திரமே இல்லாத நிலையில், இப்படிப்பட்ட இளம் சிறார்களை ஜெயிலில் கொண்டுபோய் அடைத்தால், அங்குள்ள குற்றவாளிகள் இவர்களுக்கு ஆசான்களாக மாறி இவர்கள் திருந்தி வெளியே வருவதற்கு பதிலாக, பயிற்சி பெற்ற கைதேர்ந்த கிரிமினல்களாகத்தான் நிச்சயமாக வெளியே வரமுடியும். அது சமுதாயத்துக்கு இன்னும் கேடாக உருவாகும். ஆக, இந்த அபாயத்தை மனதில் கொண்டு அவர்கள் இந்த குற்றங்களை செய்யாத வகையில் புதிய வழிகளை காணவும், அதையும் மீறி செய்தவர்களை புனிதர்களாக திருத்தி வெளியே அனுப்புவதற்கான வழியையும் காண்பதுதான் சிறந்தது என்ற வகையில் அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்.

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer  The new SOP requires official government mandates, structured trai...