Wednesday, May 6, 2015

வரக்கூடாத காதல்!

ஆசிரியர் பணி அறப்பணி; அதற்கு உன்னை அர்ப்பணி’ என்பது ஆண்டாண்டுகாலமாக கூறப்படும் நன்மொழி. ஒரு குழந்தை பிறந்து 5 ஆண்டுகள் வரைக்கும்தான் பெற்றோரின் வழிகாட்டுதலில் இருப்பார்கள். அதுவும் இப்போது 3 ஆண்டுகளாக குறைந்துவிட்டது. ஆக, 3 வயதில் இருந்து, வாழ்க்கையை தானே தொடங்கும்வரை, மழலை வகுப்பில் இருந்து கல்லூரி படிப்பை முடிக்கும் 18 ஆண்டுகளுக்கு மேலாக, கல்வி புகட்டுவதில் இருந்து ஒழுக்க நெறிகளை கற்றுக்கொடுப்பது, சிறந்த குணநலன்களை அவர்களுக்குள் விதைத்து சமுதாயத்துக்கு சிறந்த மக்களை தரும் பொறுப்பு ஆசிரியர்களுக்குத்தான் இருக்கிறது. ஆசிரியர்களின் பிரதிபலிப்பாகத்தான் மாணவர்கள் அறிவு, ஆற்றல், குணநலன்களில் மிளிருவார்கள். ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு முன்மாதிரிகள் (ரோல்மாடல்கள்). இந்த அருமையான சமூகவலைக்கு பங்கம் ஏற்பட்டுவிடுமோ? என்று அஞ்சும் வகையில், சமீபகாலங்களாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் ஆசிரியர்களால் அரங்கேற்றப்படுவது வேதனையாக இருக்கிறது.

தன்னிடம் படிக்கவரும் பிஞ்சு மலர்களையே கசக்கி எறிவதுபோல, சிலர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறார்கள். பட்டம்பெற்று ஆசிரியர் பொறுப்புக்கு வரும் இளம் ஆசிரியைகள் தன்னிடம் படிக்கும் ‘டீன் ஏஜ்’ என்று கூறப்படும் பதின் பருவம், அதாவது 15, 18 வயது மாணவர்களையே தன் காதல் வலையில் வீழ்த்தி, தகாத உறவுகளை கற்றுக்கொடுத்து இழுத்துக்கொண்டு ஓடி, சில நேரங்களில் மாலையும் கழுத்துமாக மணமக்களாக வலம்வரும் காட்சியைப் பார்க்கும்போது, நிச்சயமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய காலத்தின் கட்டாயம் வந்துவிட்டது. இப்போதுதான் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் பையன்களையும், பெண்களையும் படிக்க அனுப்ப மும்முரமாக இருக்கும் நேரத்தில், இப்படி சம்பவங்கள் பெற்றோரை அச்சப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஓர் ஆசிரியர் சங்கம், ஆசிரியர்களுக்கு உடை கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும், பெண் ஆசிரியர்களை ‘ஓவர் கோட்டு’ அணியச்சொல்லவேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறது. உடை கட்டுப்பாடெல்லாம் கொண்டு வருவதால் எந்த பயனும் ஏற்பட்டுவிடாது. மாணவர்களை வேண்டுமானால் சலனப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், ஆசிரியர்களின் மனதில் கறைபடியாமல் இருக்கவேண்டுமானால், ஆசிரியர் பயிற்சி கல்வியில் ஒழுக்க நெறிமுறைகளை பாடத்திட்டத்தில் முக்கியமாக சேர்க்கவேண்டும். புதிதாக எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள பாடத்திட்டத்தில், மருத்துவ தொழில் முக்கியத்துவத்தோடு, மருத்துவர்களின் நெறிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளதுபோல, ஆசிரியர்களின் மனோபாவத்தில் தூய்மை நிலவும் பாடத்திட்டங்களை சேர்க்கவேண்டும். 18 வயதில் திருமணம் செய்வது சட்டப்பூர்வமானது என்றாலும், இப்படி ஆசிரியர்–மாணவர் திருமணம் ஆசிரியர்களின் ஒழுக்க நெறிமுறைகளுக்கு மாறானது என்ற வகையில், ஆசிரியர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பணிநெறிமுறையில் சேர்த்து, மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளதுபோல, நல்ல ஒழுக்கம் இல்லாமல் ஒரு ஆசிரியர் இருக்கமுடியாது. அது இல்லை என்றால் அவர்கள் உப்புத்தன்மை இல்லாத உப்பை போலத்தான் இருப்பார்கள். ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள், அந்த உயர்ந்த நிலையில் இருந்து அவர்கள் கீழ்நிலைக்கு வந்துவிடக்கூடாது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதுபோல, நன்னடத்தைக்கு எடுத்துக்காட்டாக ஆசிரியர்கள் திகழவேண்டும். அவர்கள் பொறுப்பில் நம்பிக்கையோடு விடப்பட்டுள்ள மாணவர்களுக்கு நற்குணங்களை ஊட்டவேண்டும். நீதிபதி எஸ்.வைத்தியநாதன் சொன்னது, அதில் அர்த்தமுள்ளது. இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு அனுப்பி பொன்மொழியாக பின்பற்ற சொல்லவேண்டும்.

Tuesday, May 5, 2015

கைவிட்ட உறவுகள்... கைகொடுத்த விகடன்...களத்தில் இறங்கிய டாக்டர்!

ன்றைக்கு மதியம் சேலம் அரசு மருத்துவமனையின் பக்கம் சென்றிருந்தோம்.

மருத்துவமனையின் உள்ளே இருந்த (நுழைவாயிலுக்கு அருகிலேயே)... சாக்கடைத் தொட்டிக்குள்  அசைவற்ற நிலையில் படுத்திருந்தார் ஒரு மூதாட்டி. அவர் முகத்தில் மிகப்பெரிய கட்டி ஒன்று இருந்தது. அவரது முகத்தையே மறைத்திருந்தது அந்த கட்டி. ஒட்டிய உடலில் வெறும் எலும்பு மட்டுமே தெரிகிறது. அந்த மூதாட்டியின் உடலில் இருந்து மூச்சுக்காற்று மட்டுமே வெளிவருகிறது. மற்றபடி எந்தவிதமான அசைவுகளும் இல்லை. செருப்பு இல்லாமல் தரையில் காலைக்கூட வைக்க முடியாத அளவுக்கு வெயில் அடித்துக்கொண்டிருக்க, கட்டியால் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டியின் முகம் வெயிலால் கொதித்துக் கிடந்த சிமெண்ட் கட்டையில் படிந்திருந்தது. மருத்துவமனையில் கேட்பாரற்று கிடந்தார் ஆதரவற்ற மூதாட்டி.
 
நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், ஆயிரக்கணக்கான நோயாளிகள், பார்வையாளர்கள் என அந்த நுழைவாயிலின் வழியாக  மருத்துவமனையின் உள்ளே செல்லும் அத்தனை மனிதர்களும்(!) அந்த மூதாட்டியை பார்த்துவிட்டுத்தான் போயாக வேண்டும். சிலர் பார்த்தும் பார்க்காதது போல தலையை திருப்பிக் கொண்டு சென்றார்கள். இன்னும் சிலரோ..  'ஐயோ பாவம்..!' என்று வாயிலேயே வைத்தியம் பார்த்துவிட்டு சென்றார்கள். ஆனால், அவரை நிழலில் தூக்கி போடக் கூட ஆள் இல்லை. இந்த அவலத்தை நாம் கண்டது ஓர் உயிர் காக்கும் மருத்துவமனையில் என்பதுதான் வேதனை.

உடனடியாக மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ. டாக்டர் செல்வகளஞ்சியத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னோம்.  "வெளியில் இருக்கும் 108 ஆம்புலன்சிடம் சொல்லி, அவரை உள்ளே அழைத்துவரச் சொல்லுங்கள் உடனடியாக சிகிச்சை கொடுப்போம்!" என்றார். சும்மாவே நின்ற ஆம்புலன்ஸ்காரர்கள், மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே உள்ள வெறும் 10 அடி தூரத்துக்கு வருவதற்கு,  "நீங்க 108க்கு கால் பண்ணுங்க. அவுங்க சொன்னாதான் நாங்க வர முடியும்!" னு பதில் தந்தார்கள். 
 

 
ஆனால், அடுத்த ஐந்து  நிமிடத்திற்குள்ளாக வெளியில் ஓடிவந்தார் டாக்டர் செல்வகளஞ்சியம். ஆம்புலன்சை அழைத்தார். "எங்கே இருக்கிறார் அந்த மூதாட்டி?" என்று நம்மை அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு ஓடி வந்தார். மூதாட்டியின் உடம்பு அழுக்கு நிறைந்திருந்தது. ஆடையில்லாமல் கிடந்தது. ஆனால், சற்றும் யோசிக்கவில்லை அவர். ஒரு உதவியாளரை கூப்பிட்டு அவரே அந்த மூதாட்டியை மேலே தூக்கி வைத்தார். ஸ்ட்ரெக்ச்சர் கொண்டுவரப்பட்டு மூதாட்டியை உள்ளே அழைத்துச் சென்று அனுமதித்து சிகிச்சையளித்தார் டாக்டர் செல்வகளஞ்சியம்.

சில மணி நேரம் கழித்து டாக்டர் செல்வகளஞ்சியத்திடம் பேசினோம்.
"இப்போதுதான் அந்த மூதாட்டியை குளிக்க வைத்தோம். அவருக்கு கன்னத்தில் இருக்கும் எச்சில் சுரப்பியில் கட்டி இருக்கிறது. தவிர காதும் கேட்கவில்லை. அவருடைய உறவினர்கள் யாரோதான் இங்கு கொண்டுவந்து விட்டுவிட்டு போயிருக்கிறார்கள். அவரை பெட்டில் சேர்த்து சிகிச்சையளித்து வருகிறோம். ஆனால் கட்டியை அகற்றுவது கடினம். அது கேன்சர் கட்டியாக கூட இருக்கலாம். ஆனால் எங்களால் முடிந்தவரை முயற்சி பண்ணுகிறோம்" என்றார். 

ஏழைகளுக்கு டாக்டர்தானே கடவுள்...!


- எம்.புண்ணியமூர்த்தி

படங்கள்: 
எம்.விஜயகுமார்

பிளஸ் 2: எப்படிப்பட்ட தேர்வு முடிவுக்கும் கவலை வேண்டாம்!

Return to frontpage
எஸ்.எஸ்.லெனின்

பள்ளி மாணவர்களைத் தேர்வுக்கு தயார் செய்வது ஒரு கலை என்றால், தேர்வு முடிவுகளை எதிர்கொள்ள ஆயத்தம் செய்வதும் ஒரு கலைதான். முன்னதற்கு வருடம் முழுக்க உழைப்பைக் கொட்டும் மாணவரின் குடும்பத்தினர், பின்னதை அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், அதற்குக் கொடுக்கும் விலை சில நேரம் மோசமான விளைவைத் தந்துவிடலாம்.

காரணம் தேர்வு முடிவுகளில் தோல்வியை உணர்வது ஆளாளுக்கு மாறும். ’ஜஸ்ட் பாஸ்’ என்பது சில மாணவர்களுக்கு உற்சாக வெற்றியாகவும், உச்ச மதிப்பெண்ணில் ஒன்றிரண்டு குறைந்துபோவது பலருக்கு துவளச்செய்யும் தோல்வியாகவும் உணரப்படுவது இந்த வகையில்தான்.

சொச்ச மதிப்பெண் இழப்பால் குறிப்பிட்ட உயர்கல்வி படிப்புக்கான வாய்ப்பை இழக்கும் நெருக்கடி, இன்றைய மாணவர்களை அதிகளவில் அச்சுறுத்துகிறது. அந்த வகையில் தேர்வுத் தோல்விக்காக முந்தைய தலைமுறையினர் மேற்கொண்ட தவறான முடிவை, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை எனத் தற்போது எடுக்கும் உணர்வுபூர்வமானவர்கள் அதிகரித்துவிட்டார்கள். தேர்வு முடிவை எதிர்கொள்வது, உயர்கல்வி தொடர்பான முடிவை எடுப்பது போன்ற நெருக்கடி மிகுந்த ‘தங்கத் தருணங்களை’க் கையாளும் மன நல மேலாண்மை குறித்து ஆலோசனை வழங்குகிறார் திருச்சி மன நல ஆலோசகர் டயஸ்:

முடிவுகளை நொந்து பயனில்லை

தேர்வு முடிவுகள் பெரும்பாலும் அறுதியிடப்பட்டவை. வருடம் முழுக்க மாணவர் உழைத்ததற்கான பலாபலன்தான் தேர்வு முடிவு. தேர்வு முடிவு இன்னதென்று மாணவர் மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தினரும் முன்கூட்டியே அனுமானிக்க இயலும். அப்படியிருக்கும்போது தேர்வு முடிவு வெளியானதும் பெரிதாகப் பதற்றப்படுவதால், ஆகப்போவது ஒன்றுமில்லை.

ஒரு வேளை பாதகமான தேர்வு முடிவாக இருப்பினும், அந்த முடிவுகள் மாணவரை முடக்கிவிடாமல் தற்காப்பதும், அதிலிருந்து மீள்வதற்கு உதவுவதும் ஆரோக்கியமான போக்கு. வாழ்வின் அடுத்தகட்டத்துக்கான, ஒரு இனிய தொடக்கத்துக்கான வாய்ப்பை, தேர்வு முடிவு அப்போதைக்கு நழுவச் செய்திருக்கலாம்; ஆனால், எந்த வகையிலும் அதுவே வாழ்க்கையின் முடிவாக மாற வாய்ப்பு தரக் கூடாது.

99 சதவீதம் தோல்வியாளர்களே!

தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டதும் தன்னை முழு வெற்றியாளராக மெச்சிக்கொள்பவர்கள் மிகக் குறைவு. முதன்மை வெற்றியாளர்களை அணுகிக் கேட்டால், தாங்கள் எதிர்பார்த்ததிலிருந்து ஒரு சில மதிப்பெண்களை இழந்திருப்பதை ஒப்புக்கொள்வார்கள். அதாவது தேர்வு முடிவுகளில் 99 விழுக்காட்டினர் தனிப்பட்ட வகையில் தோல்வியாளர்களே!

வெளிப்பார்வைக்கு வெற்றி பெற்றிருந்தும் விரும்பிய தொழிற்கல்வி அல்லது பாடப்பிரிவு கைநழுவும் கவலையில் மன அழுத்தம் உள்ளிட்ட மன நலப் பிரச்சினைகளோ, விளிம்பு நிலை உந்துதல்களோ அந்த நேரம் மாணவர்களை அலைக் கழிக்கலாம். ஆகவே, நன்றாகப் படிக்கும் மாணவரின் குடும்பத்தினரும் இது தொடர்பாக உரிய ஆயத்தங்களை மேற்கொள்வது அத்தியாவசியம்.

குடும்பத்தினர் அரவணைப்பு

வெற்றியோ தோல்வியோ அந்தத் தருணத்தில் குடும்பத்தினரின் அரவணைப்பைத்தான் மாணவர்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள். அதைச் சரியாக வழங்க குடும்பத்தினர் கூடிப் பேசி, தங்களுக்குள் முதலில் தெளிவைப் பெற வேண்டும். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்வது அல்லது அவற்றை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பது மாணவருக்கு இயல்பான சூழலை உருவாக்கும்.

தேர்வு எழுதும்வரை தங்கள் எதிர்பார்ப்புகளை மாணவர்கள் உணரச்செய்வது, ஒரு வகையில் நியாயமானது. ஆனால், அதையே தேர்வு முடிவுவரை பிடித்து இழுத்துக்கொண்டிருப்பது, மாணவர்களைக் கடும் மன நெருக்கடிக்குத் தள்ளும். மாறாக மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை; அதில் சறுக்கியவர்கள்கூடப் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள் என்பதை மாணவர்கள் உணரச் செய்யலாம்.

மீண்டு வர அவகாசம்

தேர்வு முடிவில் ஒரு வேளை எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் போனால், உடனடியாகப் பெற்றோர் தங்கள் குமுறலை வெளிப்படுத்த வேண்டாம். அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. எதிர்பார்ப்புகளும், அது பொய்க்கும்போது உருவாகும் ஏமாற்றமும் எந்த வகையிலும் புறக்கணிக்கக்கூடியதல்ல.

அதேநேரம், அப்போதைக்கு அதைத் தள்ளிவைத்து, தேர்வு முடிவு ஆரவாரம் அடங்கிய பிறகு, அதைப் பற்றி ஆரோக்கியமாகப் பகிர்வது எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க உதவும். இழப்பு மற்றும் வருத்தத்தில் கரைந்து போனதில் இருந்து மீண்டு வரும் மாணவர்கள், தோல்வி அல்லது சறுக்கல் குறித்து விவாதிக்கவும் ஆலோசனை பெறவும் அவர்களாகவே முன்வருவார்கள்.

எதிர்மறையாளர்களை விலக்குங்கள்

தேர்வு முடிவு நேரத்தில் அனைவரது வீடுகளிலும் இந்த அபத்தம் அதிகம் நடக்கும். ஆளாளுக்கு விசாரிக்கிறேன் பேர்வழி என்று அபத்த வாதங்களையும் அறிவுரைகளையும் அள்ளி வழங்குவார்கள். சில குதர்க்கவாதிகள் குத்திக்காட்டுவதும் உண்டு. முக்கியமாக, பள்ளியில் உடன் படிக்கும் அல்லது அருகில் குடியிருக்கும் சக மாணவர்கள், உங்கள் நண்பர்களின் வீடுகளில் உள்ள மாணவர்களை ஒப்பிட்டு உங்கள் பிள்ளைகளைக் கடிந்து கொள்ளாதீர்கள்.

அது அந்த நேரத்தில் அவர்களை உடையச் செய்யும். எதிர்மறையாளர்கள் முதலில் இந்த அஸ்திரத்தை எடுத்து வீசுவார்கள். அப்படியானவர்களை ஒரு சில நாட்களாவது அண்ட விடாமல் பார்த்துக்கொள்வதுடன், அவர்களுடைய தொலைபேசி விசாரிப்புகளையும் குடும்பத்தினரே எதிர்கொள்வது நல்லது. தேர்வு முடிவு பிள்ளைகளை அதிகம் பாதித்திருந்தால், இடத்தை மாற்றுவதுகூட நல்லது.

தேர்வு முடிவில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் இல்லாது போனால் மறு கூட்டல், திருத்தல் முறையிடல் மூலமாகச் சரி செய்ய வாய்ப்புண்டு. அல்லது அதற்கு உரிய ஆயத்தங்களை மேற்கொள்வதன் மூலம், விரக்தி விலகி அப்போதைய நம்பிக்கை கீற்றுக்கு வாய்ப்பளிக்கலாம். அதே நேரம் மிகையான அல்லது பாவனையான ஆறுதல்களைப் பிள்ளைகள் உணர்ந்தால், மேலும் உடைந்து போக அதுவே காரணமாகிவிடும்.

உள்ளக் கிடக்கையை உணருங்கள்

தேர்வு முடிவுக்கு முன்னும் பின்னும் உள்ள நாட்களில் மாணவர்கள் அதிகம் தனித்திருக்கும் வாய்ப்புகளைத் தவிர்க்க வேண்டும். அவர்களுடைய நலம் நாடும் முதிர்ச்சியானவர்கள் அருகிலிருப்பது அவசியம். நாம் பேசுவதைவிட, அவர்கள் பேச வாய்ப்பளிக்க வேண்டும். உள்ளக் கிடக்கை அவர்களை அறியாது வெளிப்படும்போது, அதற்கேற்றவாறு எதிர்வினையாற்றுவது குடும்பத்தினருக்கு எளிதாக இருக்கும்.

பெண் குழந்தைகளை அழ அனுமதிக்கும் நம் சமுதாய அமைப்பு, ஆண்களுக்கு அந்த வாய்ப்புகளை வழங்குவதில்லை. இதனால், பையன்கள் மிகுந்த மன அழுத்தத்தை உணருவார்கள். மனம் விட்டுப் பேச வைப்பது அவர்கள் மனசை லேசாக்கும்.

இந்த நேரத்தில் அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள், உணர்த்தும் குறிப்புகள் அவர்களின் மனப்போக்கைக் கண்ணாடியாகக் காட்டும். குடும்பத்தினர் அவற்றை உற்றுக் கவனித்து, தேவையான அனுசரணையை வழங்குவது அவசியம். ஏனென்றால், எந்தவொரு தவறான முடிவும், அதற்கான எச்சரிக்கைக் குறிப்புகளைச் சுற்றி இருப்பவர்களுக்கு முன்னதாகவே வழங்கும்.

மற்ற பாதிப்புகள்

தேர்வில் தோல்வி அல்லது சறுக்கல் என்பது பல மன நலப் பாதிப்புகளை மாணவர்களிடையே விதைக்கப் பார்க்கும். அவற்றைக் கவனிக்காது விட்டால் பழக்க வழக்கங்கள் மற்றும் சுபாவத்தில் சில மாறுதல்களை உருவாக்கி மீள வாய்ப்பில்லாத புதைகுழிக்குள் இழுத்துவிடும். முக்கியமாக, தன்னம்பிக்கையை இழப்பார்கள். தாழ்வு மனப்பான்மை கவ்வப் பார்க்கும்.

உயர்கல்வியில் சேர்ந்த பின்னர் படிப்பில் முன்புபோல் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள். மாணவரின் நட்பு வட்டம் மாறுவதுடன், அது தவறான புதிய பழக்கங்களுக்கு வித்திடவும் கூடும். ஒரு சிலர் போதை மற்றும் அதற்கு நிகரானவற்றைப் பரிசோதிப்பார்கள். மன ஆறுதலுக்கு வாய்ப்பளிக்கும் நண்பர் குழாமை அதிகம் ஆதரிப்பார்கள். அவர்கள் தரும் அழுத்தத்துக்கு ஏற்ப மாறுவார்கள். இதே ஆறுதலுக்காக சிலர் எதிர்பாலினக் கவர்ச்சியில் இடறுவார்கள்.

இவற்றையெல்லாம் குடும்பத்தினர் அறிந்து வைத்திருப்பதும் அவற்றுக்கான வாய்ப்பில்லாத வகையில் இதமான அரவணைப்பைத் தருவதும், அவர்களைப் பழையபடி மீட்கும். இதற்கு, நேர்மறையான உத்திகள் மட்டுமே பலனளிக்கும். மாணவர்களின் மற்ற திறமைகள், முந்தைய வெற்றிகள் ஆகியவற்றை நினைவுபடுத்துவதுடன், பிரகாசமான எதிர்காலத்துக்கு மிச்சமிருக்கும் உருப்படியான உயர்கல்வி வாய்ப்புகளை உணரச் செய்யலாம்.

அவசியமென்றால் மனநல ஆலோசகர் உதவியையும் நாடலாம். அதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை.

பேஸ்புக்கில் தேடப்படும் குற்றவாளியின் படம் வெளியீடு: லைக் செய்து மாட்டிக் கொண்ட திருடன்

அமெரிக்காவின் காஸ்காதே நகரத்தைச் சேர்ந்த லேவி சார்லஸ் ரியர்டன் என்பவனை திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளி என்று பேஸ்புக்கில் காவல்துறை வெளியிட, அந்த படத்துக்கு லைக் செய்ததன் மூலம் அவரே காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களில் தேடப்பட்டு வந்த ரியர்டன், தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பேஸ்புக்கில் காவல்துறை வெளியிட்டதைப் பார்த்ததும், குறும்பாக, அதற்கு லைக் செய்துள்ளான்.

அவன் லைக் செய்ததை வைத்து இணையதள முகவரியின் அடிப்படையில், காவல்துறையினர், அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து கையில் விளங்கை மாட்டிவிட்டனர்.

இதைத் தான் தன் தலையில் தானே மணலை வாறிப் போட்டுக் கொள்வது என்பார்களோ...

மயான புத்ரி! ஆச்சர்யமூட்டும் ஜெயந்தி

cinema.vikatan.com
ன்று, பெண்கள் செய்யாத வேலை என்று எதுவும் இல்லை. அந்த வகையில், மின்மயானத்தில் சிதையூட்டும் பெண்ணாக நிமிர்ந்து பார்க்க வைக்கிறார், நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயந்தி. நாமக்கல் நகராட்சியும், யுனைடெட் வெல்ஃபேர் அறக்கட்டளையும் இணைந்து நடத்திவரும் மின்மயானத்தில் மேனேஜராகவும், சிதையூட்டும் பணியாளராகவும் வேலை செய்து வரும் ஜெயந்தி, பிராமண இனத்தைச் சேர்ந்த பெண்!
‘‘இந்த பாடியை முடிச்சிட்டு வந்துடறேன்...’’ என்ற ஜெயந்தி, அரை மணி நேரத்தில் வந்தார்.
‘‘பக்கத்துல இருக்கிற கூலிப்பட்டி கிராமத்துல பிறந்தவ நான். அப்பா பட்டுகுருக்கள், சிவன் கோயில் அர்ச்சகர். எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க. நான்தான் கடைசிங்கிறதால, அப்பாவுக்கு என் மேல ரொம்ப பாசம். எம்.ஏ முடிச்ச நேரத்துல வேற ஜாதியைச் சேர்ந்த வாசுதேவனைக் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்கம்மா, அக்கா எல்லோரும் என்னை ஒதுக்க, அப்பா மட்டும் எதிர்க்கல. கணவர் வீட்டுல என்னை ஏத்துக்கிட்டாங்க. எனக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறந்தன.
 என் அப்பா திடீர்னு இறந்துட்டாரு. அவரை அடக்கம் பண்ணும்போது, பெண்ணா இருந்தாலும் நான் அங்கே இருந்தேன். அப்போ ஓர் உடலா இல்லாம, தெய்வமாதான் தெரிஞ்சாரு எங்கப்பா. நான் தையல் வேலை கத்துக்கிட்டு, அதை செய்திட்டிருந்தேன். தையல் மெஷினை மிதிக்க மிதிக்க வயித்துவலி அதிகமாக... டாக்டர், வயித்துல ரெண்டரை கிலோ கட்டி இருக்கிறதா சொன்னாங்க. சீரியஸான நிலையில ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனேன். உயிர் பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. எங்கப்பாதான் தெய்வமா இருந்து அறுவை சிகிச்சையில் என்னைக் காப்பாத்திக் கொடுத்தார்.
வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் என்ற குடும்பச் சூழலில்தான், நாலு வருஷத்துக்கு முன்ன இந்த மின்மயானத்துல தோட்டப் பராமரிப்பு வேலைக்காக வந்தேன். இடிபாடுகளாவும், மண்டை ஓடு, எலும்புகளாவும் இருந்த இடத்தை, நானும், மலர்னு ஒரு பெண்ணும் சேர்ந்து மூணே மாசத்துல பச்சைப்பசேல் தோட்டமா மாத்தினோம். சில மாசங்கள்ல, சிதையூட்டிட்டு இருந்த ஆண்கள் வேலையை விட்டுப் போக, நான் அந்த வேலையைச் செய்றேன்னு நிர்வாகத்துக்கிட்ட கேட்டேன். ‘உன்னோட கணவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தா வேலை தர்றோம்'னு சொல்லிட்டாங்க. வீட்டுல எல்லாரையும் சம்மதிக்க வெச்சு இந்த வேலையில சேர்ந்தேன். என்னோட பணி நேர்த்தியைப் பார்த்து, ஒரே வருஷத்துக்குள்ள, என்னையே இந்த மின்மயானததுக்கு மேனேஜர் ஆக்கிச்சு நிர்வாகம்’’ என்ற ஜெயந்தி, தொடர்ந்தார்.
‘‘இறந்தவங்களோட உறவினர்களை எல்லாம் வெளிய அனுப்பிட்டு, நான், எனக்கு உதவியா மலர்னு ரெண்டு பொம் பளைங்க மட்டும், டிராலியில உடலை வைக்கிறதுல இருந்து, கடைசி வரைக்கும் எல்லா வேலைகளையும் செய்தாலும், கொஞ்சம்கூட பயந்ததில்ல. அதுக்காக சிதையூட்டும் வேலை சுலபமானதும் இல்ல. இயற்கை மரணம் எய்தினவங்களை சிதையூட்டும்போது, 45 நிமிஷத்துல சாம்பலை எடுத்திடலாம். ஆனா, போஸ்ட் மார்ட்டம் பண்ணின உடலா இருந்தா, சிதையூட்டின கொஞ்ச நேரத்துலயே, சூட்டுல எல்லா உறுப்புகளும் தனியா சிதறி விழும். அதை எல்லாம் மறுபடியும் எடுத்து, மரக்கட்டை மேல போடணும். சிரமமான அந்த வேலைகளை, தைரியமா பண்ணியிருக்கேன்.
ஒரு நாளில் அதிகபட்சமா 9 உடல்கள் வரை, பின்னிரவு வரைகூட இருந்து சிதையூட்டி இருக்கேன். அநாதைப் பிணங்களை இலவசமா சிதையூட்டுவேன். சின்ன வயசுல, பக்கத்துல யாராச்சும் முட்டை சாப்பிட்டாகூட மூக்கை மூடிக்குவேன். இப்போ பிண வாடை பழகிப் போச்சு. அதான் வாழ்க்கை!’’ என்ற ஜெயந்தியின் கண்களிலும் படர்கிறது சிரிப்பு.
‘‘பிணங்கள் எனக்குப் பயம் தராததுக்குக் காரணம், என் அப்பாவை நான் சவமா பார்த்த காட்சிதான். அப்படி இங்க வர்ற சவங்கள் எல்லாம் யாரோட அப்பாவோ, அம்மாவோ, கணவரோ, பிள்ளையோனு நினைக்கும்போது, பயமா இருக்காது... பாவமாதான் இருக்கும். எங்கப்பா போலவே எல்லாரையும் தெய்வமா நினைச்சிக்குவேன். பேய், பிசாசுனு எதிர்மறையா நினைச்சதில்ல. அப்படி நினைக்கிறவங்களால, அடுத்த நொடி இந்த வேலையைப் பார்க்க முடியாம போயிடும்!’’ என்று அழகாக உளவியலும் பேசுகிறார் ஜெயந்தி.
‘‘இப்போ மயானத்துல எனக்கு உதவியா கலாராணி, சாரதானு ரெண்டு பெண்கள் இருக்காங்க’’ என்ற ஜெயந்தி, அந்தப் பெண்களை அறிமுகப்படுத்த, ‘‘ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பரமசிவம் தவிர, நாங்க மூணு பேரும்தான் எல்லா வேலைகளையும் செய்துட்டு இருக்கோம்’’ என்றார் கலாராணி.
‘‘சார், ஆம்பளைங்க செய்ற எல்லா வேலைகளையும் இப்போ பொம்பளைங்களும் செய்றாங்கங்கிறது சந்தோஷமான விஷயம். ஆனா, இது அதைவிட ஸ்பெஷல். ஏன்னா, எல்லா ஆம்பளைங்களாலயும் செய்ய முடியாத வேலை இது. அந்த வகையில நாங்க எல்லாம் சூப்பர்உமன்!’’ என்று துள்ளலுடன் பேசும் சாரதாவுக்கு, வயது 23!
சபாஷ்!

தமிழ்நாட்டிலும் இருக்கிறது மத்திய பல்கலைகழகம்..!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தங்கள் பிள்ளைகள் அடுத்த என்ன படிக்கலாம் என பெற்றோர்களும், தான் என்ன படிக்க வேண்டும் என்பதை பிள்ளைகளும் இணையத்தையும், சுற்றத்தாரையும் நாடி தெரிந்து கொண்டிருக்கின்றனர்.
“இந்த கல்லூரி சிறந்தது, அந்த கல்வி நிறுவனம் சூப்பர்...இங்கே படித்தால் உடனே வேலை கிடைக்கும், அங்கு படித்தால் எல்லோரும்  கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகலாம்...' என விளம்பரங்கள் சூழ்ந்து கொண்டிருக்க, நாம் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் அதிக குழப்பம் நிலவுகிறது.  

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், வழக்கம்போல் அதிகம் பேரின் விருப்பம் டாக்டர், என்ஜினியர் கோர்ஸ்கள்தான். ஆனால், இவற்றையும் தாண்டி பட்டப்படிப்பு என ஒன்று இருக்கிறது அல்லவா ? அதற்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது - தமிழ்நாடு மத்தியப் பல்கலைகழகம் ( CUTN - Central University of Tamil Nadu ).  

அப்படின்னா என்ன...அதுல என்ன ஸ்பெஷல் ? 

மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மத்தியப் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் 42 மத்திய பல்கலை கழகங்கள் இயங்கி வருகின்றன. அரசாங்கத்தின் முதன்மை கல்வி நிறுவனங்களான IIT போன்ற முக்கிய கல்விநிறுவனங்கள் வரிசையில் மத்திய பல்கலைகழகமும் இடம் பெறுகிறது.  இதில் படித்து நாம் பெறுகிற பட்டம் என்பது மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அத்தகைய பல்கலைகழகம் தமிழகத்தில் அமைந்திருப்பது பலரும் அறியாததாக இருப்பதுதான் அறியாமையின் உச்சம். ஏனெனில், தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது தமிழக மக்கள் கல்வியில் முதிர்ச்சி அடைய வேண்டும் என்கிற காரணத்தினால். ஆனால், இங்கு படிக்கக் கூடிய தமிழ் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.  மற்ற மாநில மாணவர்கள் அதிகம் படித்தாலும் அவர்களோடு போட்டி போட்டு படிக்கும் திறன் படைத்த தமிழ் மாணவர்கள் இதை பற்றி அறியாமலே பல்வேறு வகையில் தங்கள் வட்டத்தை சுருக்கி கொள்கின்றனர்.

விவசாயத்தை பெரும்பாலும் நம்பி இருக்கக் கூடிய திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கக் கூடியது தான் இந்த மத்திய பல்கலைக்கழகம் (CUTN - Central University of Tamil Nadu ) . திருவாரூருக்கு செல்லக் கூடிய மயிலாடுதுறை சாலை, கும்பகோணம் சாலை இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆற்றாங்கரை ஓரம் அமைந்திருக்கக் கூடியது சியுடிஎன். திருவாரூர் மாவட்டத்தில் நீலக்குடி, நாகக்குடி எனும் இரு கிராமத்தில் 516 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது சியுடிஎன். சுற்றுப்புற பகுதிகளுக்கு ஒத்துவராத, உயர் தர வடிவமைப்பிலான கட்டடங்கள், சியுடிஎன் என காட்டுகின்றன.
சுற்று வட்டாரத்தில் இப்படி ஒரு வடிவமைப்பு எங்கும் காணப்படவில்லை. செக் போஸ்ட் தாண்டி நேரே உள்ளே சென்றால், அங்கே பறந்து நிற்கிறது நிர்வாக அலுவலகம். அதை சூழ்ந்து நிற்கும் கட்டடங்கள் என்ன? அங்கே என்ன படிக்கலாம்? அதனால் என்ன வாய்ப்புகள் கிடைக்கிறது?
ஹாஸ்டல் வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன? போன்ற முழு விவரங்களையும் அறிந்துகொள்ள உதவினர் இதன் துணைவேந்தர் (பொ) முனைவர் பேராசிரியர் செங்கதிர் மற்றும் ஊடகம் & தகவல் தொடர்பியல் துறை தலைவர் பேரா. ஆதி ராமானுஜமும் வந்தார்.

பல்கலைகழகத்தில் ஹாஸ்டல் வசதி உள்ளது.  இதில் இரண்டு பேருக்கு ஒரு அறை எனும் விகிதத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், வெந்நீர் குளிர் நீர் என வகைபடுத்தி தண்ணீர் தாரளமாக கிடைக்கிறது.  உணவுக்கு தட்டுப்பாடு இல்லை.  ஹாஸ்டலில் தங்குபவர்களுக்கு மெஸ் தனியாக வைக்கப்பட்டுள்ளது. ஹாஸ்டல் வாசிகளுக்கு உணவுக்குத் தான் கொஞ்சம் செலவாகிறது. மற்றபடி செலவு இங்கு குறைவாக இருக்கிறது. பிஹெச்டி படிக்கக் கூடிய மாணவர்களுக்கு தனித் தனியாக வீடுகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் திருமணம் ஆனவர்கள் தங்கள் துணைகளுடன் இருந்தும் படிக்கலாம் என்ற ஒரு முறையும் பின்பற்றப்படுகிறது.

சியுடிஎன் கேம்பஸ்ஸில் வைபை இணைய வசதி  தரப்பட்டுள்ளது. பல்கலை முழுமையும் வெளிச்சமான காற்றோட்டமான அறைகள் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் க்ளாஸ் ரூம் முறை பின்பற்றப்படுகிறது. அறிவியல் ஆய்வகங்கள் முழு வசதிகளுடான் தரப்பட்டுள்ளன. இலவச இணைய வசதி நூலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பாடம் தொடர்பான புத்தகங்கள் எண்ணிக்கையில் அடங்காத அளவிற்கு உள்ளன. இரவு பகல் என வித்தியாசம் பாராது ஏதேனும் ஒரு நிகழ்வு பல்கலை வளாகத்தினுள் நடந்து கொண்டிருப்பதை காண முடிகிறது. 'அல்லைட்' எனும் துணைப் பாடங்களை தானே தேர்ந்தெடுக்கும் முறையும் இங்கு மாணவர்களுக்கு தரப்பட இருக்கிறது. இன்னும் பல்கலைகழகத்தில் பொறியியல் கொண்டு வரவில்லையே என கேட்டதற்கு, அதுதான் எல்லா இடங்களிலும் இருக்கிறதே என பதில் வருகிறது. இந்த வருடத்திலிருந்து எம்.டெக் கோர்ஸ்கள் கூட ஆரம்பமாகிறது.

பல்கலைகழகம் நேரடியாக மத்திய அரசின் கீழ் இயங்குவதால் ஏராளமான வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். இங்கு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பெறும் செம்மொழி தமிழ் எம் ஏ படிப்பிறகு குறிப்பிட்ட அளவு ஸ்டைபண்ட் வழங்கப்பெறுகிறது. இது மட்டுமில்லாமல் ஆய்வக வசதிகள் அதிகம் நிறைந்து காணப்படுகின்றன. எம் ஏ ஊடகம் தகவல் தொடர்பியல் துறைக்கு அதிகமான தொழில் நுட்பபொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை மாணவர்களால் இலகுவாக கையாளவும் கற்றுத் தரப்படுகிறது. கேமரா, வீடியோ மிக்சர் என பல வகைகளிலும் இந்த துறை மாணவர்களுக்கு நன்றாக பயிற்சி அளிக்கப்படுவதாக அந்த துறை தலைவர் பேரா. ஆதி ராமானுஜம் தெரிவித்தார்.

தினமும் ஏதாவது கருத்தரங்கம் (கான்பரன்ஸ்) நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு இருக்கக் கூடிய பேராசிரியர்கள் அனைவரும் கல்வியில் முதன்மை இடம் பிடித்துள்ளவர்கள். வெளி நாட்டில் பிஎஹ்டி க்கு மேலே படித்தவர்களும் இங்கு வேலை பார்கின்றனர். வெளி நாட்டு அறிஞர்களின் தொடர்புகள் இங்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு எளிதில் கிட்டுகிறது.  எல்லா மாநிலத்து மாணவர்களும் இங்கு படிப்பதால் கலாச்சார ஒற்றுமை மேம்படுகிறது. பயிற்று மொழி ஆங்கிலமாக உள்ளது.

இதில் என்ன கோர்ஸ் இருக்கிறது பார்க்கும் போது, ஐந்து வருட எம்.எஸ்ஸி இன்டக்ரேட்டட் பிரிவும், இரண்டு வருட எம்.ஏ பிரிவும் இரண்டு வருட எம்.எஸ்ஸி பிரிவும் பிஎஹ்டி படிப்பும் இருக்கிறது. சியுடிஎன் பின் வரும் நிறுவனங்களுடன் சில கற்றல் நிலைகளை ஒப்பந்த முறையில் கொண்டு சில படிப்புகளை வழங்குகிறது, அவை: Madras School of Economics (MSE) , Central Institute of Classial Tamil   (CICT) National Law School of India (NLSIU) and Tamil Nadu Agricultrual University (TNAU).

 
என்னவெல்லாம் கோர்ஸ்கள் இருக்கின்றன? 


Five Years M.Sc  Integrated Courses (after 10+2)

                Integrated MSc. Chemistry

                Integrated MSc. Economics *

                Integrated MSc. Life Sciences

                Integrated MSc. Mathematics

                Integrated MSc. Physics

 
Two Year M.Sc Couses (after graduation)

               MSc. Chemistry

               MSc General Economics**

               MSc Financial Economics**

              MSc Acturarial Economics**

              MSc Environmental Economics**

              MSc Aplied Quantitative Finance **

 

Two Year M.Tech Courses *** ( after graduation)

M.Tech Material Science & Nano Technology

M.Tech Energy & Environmental Technology

 

Two Year M. A Courses ( after graduation)


M.A English Studies

M.A HIndhi

M.A Media & Communication

M.A Social Work

M.A Tamil

 

Ph D ( after post graduation)

Ph D in Chemistry

Ph D in Economics

Ph D in English

Ph D in Lifescience

Ph D in Mathematics

Ph D in Physics

Ph D in Tamil

    

*Academic Mentoring by Madras School of Economics, Chennai

**  Conducted at Madras School of Ecoonomics (MSE) Chennai

*** Programmes provisionallu proposed from the academic year 2015-2016

 

 இங்கு படிக்கும் அனுபவம் எப்படி என சில மாணவர்களிடம் கேட்டபோது...

பிந்துஜா ( எம்.ஏ ஊடகம் தகவல் தொடர்பியல் இரண்டாமாண்டு, கேரளா)

கேரள மத்திய பல்கலை கழகத்தில் படிக்க முயற்சி செய்தேன்.  ஆனால், சியுடிஎன் சீட் கிடைச்சது. கிட்டத்தட்ட மலையாளம் தமிழ் போல, ஆகவே, இங்கே எனக்கு ஒத்து வரும் என்று தோன்றியது. எல்லாரும் நல்லா பழகுவாங்க. நாமேளே எல்லா பொருட்களையும் இலகுவாக உபயோகப்படுத்தலாம். இங்கே படிக்கறது கொஞ்சம் ஜாலிதான் என கொஞ்சும் குரலில் முடித்தார்.

 
அருண் குமார் ( எம்.ஏ தமிழ் இரண்டாமாண்டு, திருவண்ணாமலை) 

நான் சென்னையில் ஜர்னலிசம் படித்தேன். பின் அச்சு ஊடகம் மீது ஆர்வம் இருந்ததால் எனக்கு தமிழ் படிக்க ஆசை. அதனால் இங்க தமிழ் தேர்ந்தெடுத்தேன்.  எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. முடிச்சிட்டு தில்லியில் எம்.பில் பண்ணப் போறேன்.  இங்க படிப்பதால் நிறைய அறிஞர்களின் தொடர்புகள் கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் ஸ்டைபன்ட் வேற உண்டு. நல்ல காற்றோட்டமான வகுப்பு, ஹாஸ்டல் ரூம் இதை தவிர வேற என்ன வேணும் பாஸ்.

 
ஜெய்கரன் ( கணிதம் மூன்றாமாண்டு, உ.பி.) 

நான் நாலைந்து இடங்களில் விண்ணப்பம் போட்டிருந்தேன். இங்க வந்து மூன்று வருடம் முடியப் போகுது. ஹாஸ்டல் வசதி எல்லாம் பரவாயில்லை. நல்ல செமினாரெல்லாம் கண்டக்ட் பண்ணுவாங்க.பயனுள்ளதாக இருக்கும். இப்போதுதான் வளர்ந்து வரதால சியுடிஎன்-க்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. மாணவர்கள் நிறைய கற்றுக் கொள்ள இங்க இருக்க உபகரணங்கள் உதவும்.

வெங்கடேஸ்வரி (வேதியியல் இரண்டாமாண்டு, தஞ்சாவூர்) 

நான் ப்ளஸ் டூவில் 75%க்கு மேல  மார்க் எடுத்தேன். இங்க படிச்சா நல்லா இருக்கும்ன்னு சொன்னங்க. இருந்தாலும், 'ஹாஸ்டல் ஒத்துக்குமா? அஞ்சு வருடம் தொடர்ந்து படிக்கணுமே...?'ன்னு  கேள்வி வந்துச்சு. சேர்ந்ததுக்கு அப்புறம் அந்த கவலை இல்லை. நான் சேர்ந்தப்ப 3௦ சீட் ஒரு கிளாசுக்கு.  Sc/St 15 பேர்,  Obc 8 பேர்,  General Quota 7 பேர் என்ற முறையில்தான் சேர்த்தாங்க. இப்பவும் அந்த சிஸ்டம் இருக்குன்னு நினைக்கிறேன். இன்னும் மூணு வருசத்துக்கு படிப்பு சம்பந்தமா கவலை இல்லை.

நுழைவுத் தேர்வில் தேர்வாகிற நபர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதில் தேர்வாகிற நபர்கள் இங்கு படிக்க தகுதியுடையவர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒருகிணைந்த முதுகலை படிப்பில் ஒரு வகுப்பிற்கு 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்" என்றார். 

ஏப்ரல் ஆறாம் தேதி துவங்குகிற ஆன்லைன் விண்ணப்பம் மே ஐந்தாம் தேதியோடு முடிவடைகிறது.  நுழைவு தேர்வுக்கான அட்மிட் கார்டு 21.௦5.2௦15 முதல் தரப்படுகிறது. மத்திய பல்கலை கழகத்துக்கான நுழைவுத் தேர்வு ஜூன் ௦6 & ௦7 தேதி. ஜூன் 2௦ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியீடு. இந்த தேர்வு முறை  பெரும்பாலும் அப்ஜெக்டிவ் டைப் தேர்வாகவே இருக்கும். 

 மற்ற மாநிலங்களில் மத்திய பல்கலைகழகம் இருந்தாலும் அங்கே போட்டி அதிகம் காணப்படும். அங்கே நுழைவு தேர்வு எழுதி மாணவர்கள் இங்கு வந்து படிக்கலாகின்றனர். அவர்களுக்கு போட்டியாக நாளைய தமிழகத்தை தாங்கப் போகிற, இந்தியாவை வலுப்படுத்தப் போகிற தமிழகத்து மாணவர்களும் நிறைய பேர் இதற்கு விண்ணபித்து சியுடிஎன்-னை நிரப்புவார்கள் என்கிற நம்பிக்கையில் அந்த வளாகத்தை விட்டு வெளி ஏறினோம். சவாலை சந்தியுங்கள்.

 மத்திய பல்கலை நுழைவுக்கான இணையதளம் :http://www.cucet2015.co.in/ 


-த.க.தமிழ் பாரதன் (மாணவ பத்திரிகையாளர்)

புகைப்படங்கள்:க.சதீஷ்குமார்

Major scam of leaking AIPMT question paper unearthed in Haryana

CHANDIGARH: The Haryana police has unearthed a major scam with the arrest of a gang specializing in leaking question papers of All India Pre-Medical and Pre-Dental Test (AIPMT) and taking hefty fees from students whom they helped.

The cops have so far arrested two dental surgeons and an MBBS student of the prestigious Post Graduate Institute of Medical Sciences, all of whom were based in Rohtak.

Gang leader Roop Kumar Dangi, also a resident of Rohtak, is on the run. Investigators say he is most likely a suspended employee of the Haryana government's food and civil supplies department but they are in the process of getting more details. They have also arrested a local small-time businessman.

According to the police, the gang had succeeded in leaking the AIPMT exam paper on Sunday at Rohtak. The members had made deals with nine students and offered to help them for fees ranging between Rs 15 lakh and Rs 20 lakh.

While the accused student has been identified as Ravi Kumar, the doctors are Bhupender Sangwan, who runs a clinic at Rohtak, and Sanjeet Kumar, who cleared his bachelor in dental surgery from a Yamunanagar institute in 2012.

A resident of Greater Noida, Ravi had got admission to the MBBS course in 2007 and has cleared just one year in the past eight years. Police suspect he may have been involved in a few other paper leaks as well and are questioning him to get more details.

The fourth accomplice, Rajesh Kumar, ran a business of money transfer and share-dealing at Rohtak. All four were produced in a Rohtak court on Monday from where they were sent to the police remand for four days.

Suspecting foul play, Rohtak's newly appointed inspector general of police Shrikant Jadhav had set up a team of officials to keep an eye on the exam but the gang succeeded in leaking the question paper. By following their cellphone locations, police tracked down and arrested the four men while they were in a car.

The men revealed during interrogation that they had already sent answer keys for all 90 questions to nine students through Whatsapp just before the exam started. They had also provided electronic equipment which was supposedly to be used to solve the question paper.

As per the deal, the students had to make the payment after the result of the exam on June 5.

The modus operandi

The police have recovered mobile phones, Bluetooth devices, three under-shirts, three bras along with chips from the accused. "A device called 'makhi' (housefly) was put in an ear while installing another in the under-shirt or bra. This equipment works like a cellphone. As per the plan, the gang members would tell students answer keys through their mobile phones from a distant place," said inspector Vijay Kumar, who is part of the investigation team.

NEWS TODAY 12.12.2025