Monday, October 3, 2016


ஒருதலை காதலா? தறுதலை காதலா?

By மருத்துவர் ச. இராமதாசு | Last Updated on : 03rd October 2016 01:55 AM | அ+அ அ- |


கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது தமிழ்ச் சமூகம் பல்வேறு களங்களிலும் பின்னடைவுகளைச் சந்திக்கத் தொடங்கி விட்டது. அதிலும் குறிப்பாக வணிகமயமாகிவிட்ட கல்வி, வேலையில்லாத் திண்டாட்டம், திரைப்படம் மற்றும் கிரிக்கெட் போன்றவற்றை மையமாகக் கொண்டு இயங்குகின்ற பொழுதுபோக்கு மனப்பான்மை, தொழில்துறையிலும், வேளாண்மையிலும் அக்கறையே காட்டாத தொலைநோக்குப் பார்வை ஏதுமற்ற அரசுகள் போன்றவை நமது இன்றைய வீழ்ச்சி நிலைக்கான காரணங்களாக அமைந்தன. மிகவும் குறிப்பாக நமது தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சிக்குப் பெருங் காரணமாக அமைந்தது கட்டற்ற மது வணிகம்.
இளைஞர்களுக்கு மது போதையூட்ட தெருக்கள் தோறும் மதுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. காதல் போதையூட்டுவதற்கு திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவர்கள் பெண்களைக் கேலி செய்து பகடிப் பாடல்களைப் பாடுவதற்கு, பாடல்கள் எழுதிப் பதிவு செய்யப்பட்டு சந்து பொந்துகளில் எல்லாம் கூட அவை பெரும் இரைச்சலோடு ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
பொறுக்கியாகவே, போக்கிரியாகவோ இருந்து கொண்டு வெறுமனே ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்ற எவன் ஒருவனும் அவன் பார்க்க நேருகின்ற எந்தப் பெண்ணையும் துரத்தித் துரத்திக் காதலிக்கலாம் என்கிற பொதுக் கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு வகையான சுய முன்னேற்றச் சிந்தனைகளை மனதிற் கொண்டே நமது தமிழ்நாட்டின் பெண் பிள்ளைகள் மிகவும் குறிப்பாக கிராம, பேரூர், நகரப் பகுதிகளின் பெண் பிள்ளைகள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அவர்களைப் பற்றிய வண்ண வண்ணக் கனவுகளோடு தான், பெற்றோர்களும் அவர்களைக் கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் ஒருதலைக்காதல் என்ற முகமூடியோடு அத்தகைய பெண்களைச் சுற்றிச் சுற்றி வருகின்ற தறுதலைகளுக்கு, சம்பந்தப்பட்ட மாணவிகளின் லட்சியங்களும், அந்த மாணவிகளைப் பெற்றவர்கள், தங்களது மகளைக் குறித்துக் காண்கின்ற எதிர்காலக் கனவுகளும் ஒரு பொருட்டாகத் தெரிவதேயில்லை.
தறுதலைக் காதலர்களின் நோக்கம் முழுவதும் காமக் குரூரமாகவும், காதல் என்ற பெயரில் பணம் பறிக்கிற கபடத்திட்டமாகவும் இருப்பதால் எத்தகைய இழிவான எல்லைக்கும் அவர்கள் செல்லத் துணிகிறார்கள், மிகவும் கொடூரமான வன்முறைகளால் அவர்கள் அடைய விரும்பிய பெண்களை கொலை செய்கிறார்கள்.
கொஞ்சமும் ஈவு இரக்கமின்றிப் பெண்பிள்ளைகளின் உயிர்களைப் பறிக்கின்ற இத்தகைய போக்கு, ஒட்டுமொத்தச் சமூகத்தையும் நிலைக்குலைய வைத்திருக்கிறது. மிகவும் குறிப்பாகப் பெண்களையும், அதிலும் குறிப்பாக படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் முன் வருகின்ற இளம் பெண்களையும் அச்சுறுத்தி நடுங்க வைப்பதாக மாறியிருக்கிறது.
இதன் விளைவாக நிகழ்காலத்தில் இளம் தலைமுறைப் பெண்கள் மீண்டும் வீட்டுக்குள்ளேயே தங்களை முடக்கிக் கொள்ள வேண்டியவர்களாக மாறுகின்றனர்.
இளம்பெண்கள், ஒருதலைக் காதல் தறுதலைகளால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக நேரும்போது, அதை அவர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்ப உறவுகளிடம் தெரிவிக்காமல் மனதுக்குள்ளேயே நினைத்து நினைத்துக் குமைந்து கொண்டு கிடக்கின்றனர்.
அப்படித் தெரிவித்தால் தங்களது படிப்பும், பணி வாய்ப்பும் துண்டிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்க நேரிடும் என்று அவர்கள் எண்ணுவதே அதற்குக் காரணமாகும்.
எந்த நேரமும் தன்னையே பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கின்ற ஒரு தறுதலையை, ஒரு பெண் நிராகரித்தால் அந்த நிராகரிப்பை அந்தத் தறுதலையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் அந்தப் பெண்ணைக் கொலை செய்து விடுகிறான்.
ஓர் ஆணும் பெண்ணும் பழக ஆரம்பித்த பின், அந்த ஆண் ஒரு கேடு கெட்ட தறுதலையாக இருப்பதை உணர்ந்துவிடுகின்ற அந்தப் பெண் அவன் வேண்டாம் என்று நிராகரிக்கும்போதும் அந்த பெண்ணை அவன் கொலை செய்து விடுகிறான். அதிலும் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு பையனைப் பார்த்து நிச்சயம் செய்து விட்டது தெரிந்துவிட்டால் அந்தப் பெண் அவளது பழைய தறுதலையால் உடனடியாகக் கொலை செய்யப்பட்டு விடுகிறாள்.
தன்னை எப்போதும் ஒருவன் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பதாக ஒரு பெண் காவல் நிலையத்திலோ தனது உறவுக்காரர்களிடமோ புகார் செய்தால், அப்போது அந்தத் தறுதலையின் கோபம் மேலும் அதிகமாகி விடுகிறது.
அந்தப் பெண் மீதும் தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, பல்வேறு வகையான கேள்விகளுக்கும், அறிவுரைகளுக்கும், அவமானங்களுக்கும் அவள் ஆளாக்கப்படுகிறாள். தான் நம்பிய ஒரு தறுதலை தன்னை ஏமாற்றிச் சுகங்கண்டு விட்டு விலகிப் போகும்போதும் அந்த அவமானம் தாங்காமல் தன்னையே மாய்த்துக் கொண்டு அந்தப் பெண் இறந்து போகிறாள்.
ஆக தறுதலைக் காதலாக இருந்தாலும், இருதலைக் காதலாக இருந்தாலும் அதன் பொருட்டு பாதிக்கப்படுவோரும், கொலை செய்யப்படுவோரும் இளம் பெண்களே ஆவர்.
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டிப்பாளையத்தில் நவீனா என்ற 15 வயது பெண்ணை 30 வயது குடிகாரன் ஒருவன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தான். அவன் கடைந்தெடுத்த ஒரு போக்கிரி என்பது அவனது ஊராரும், காவல்துறை வட்டாரங்களும் அறிந்த உண்மை.
ஒருமுறை குடிபோதையில் அவன் ரயில் தண்டவாளத்தில் விழுந்துவிட ரயில் சக்கரங்களில் சிதைந்து அவனது வலது கையும், வலது காலும் துண்டிக்கப்பட்டு விட்டன. மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு அவன் வெளியே வந்தவுடன் அவனைச் சுற்றி வளைத்த ஒரு குழுவினர், அவன் காதலித்த பெண்ணின் சாதிக்காரர்கள் அந்தக் காதலனின் கையையும், காலையும் வெட்டி விட்டதாகக் கதைக் கட்டி அந்தக் கதையை ஊடகங்களுக்குக் கொடுத்து விட்டு காவல் நிலையத்திலும் அதையே புகாராகக் கொடுத்தனர்.
இன்னும் ஒரு படி மேலே சென்று ஒரு தொலைக்காட்சியின் விவாத அரங்கில் அந்தக் காதலனை ஒரு கை ஒரு காலோடு அமர வைத்து சமூக ஆர்வலர்களையும் உடன் அமர வைத்துக் கொண்டு விவாத அரங்கை நடத்தினர்.
அந்த நிகழ்ச்சியைப் பார்த்த பலரும் அடடா இது என்ன கொடுமை இப்படியா சாதி வெறி பிடித்து காதலர்களைப் பிரிப்பது என்றெல்லாம் அநியாயத்துக்கு வருத்தப்பட்டார்கள். ஆனால் அந்த தொலைக்காட்சி நாடகத்திற்குப் பிறகான காவல்துறை விசாரணையிலும், மருத்துவ ஆவணங்களிலும், உண்மை அறியும் குழுவின் அறிக்கையிலும் அவன் குடித்துவிட்டு ரயிலில் விழுந்து தான் தன் கை, காலை இழந்தான் என்பது வெட்ட வெளிச்சமானது.
உண்மை என்னவென்று வெட்ட வெளிச்சமானபின், தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள், தாங்கள் நடத்திய அந்த நயவஞ்சக நாடகத்திற்கு மெல்லிய குரலில் வருத்தப்பட்டுக் கொண்டு அமைதியாகி விட்டனர். பல காதல் ஆதரவு நாடகங்களில் இப்படியெல்லாம் பொய்களும் புரட்டுகளும் கரைபுரண்டு ஓடியுள்ளன.
நீ எனக்கு வேண்டும். நான் உன்னை அடைந்தே தீருவேன். என்னைத் தவிர வேறு யாரும் உன்னை அடைய முடியாது என்றெல்லாம் ஒரு பெண்ணிடம் தொடர்ந்து வம்பு செய்து வருகின்ற ஒரு போக்கிரி, ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணைக் கொலையும் செய்து விடுகிறான்.
ஒரு பெண் தனக்குப் பிடிக்காதவனை நிராகரிக்கும் உரிமையற்றவளாகி உயிரை இழக்கிறாள் என்றால், இது சாதிப் பிரச்னையோ, காதல் பிரச்னையோ, ஒருதலைக் காதல் பிரச்னையோ, ஆண் - பெண் காதல் உரிமை பிரச்னையோ அல்ல.
இது முழுக்க முழுக்க ஒரு சமூகப் பிரச்னை. மகளிர் பாதுகாப்பினை கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாக்குகின்ற பிரச்னை. மகளிருக்கான கல்வி உரிமைகளையும், வேலை செய்யும் உரிமைகளையும் மறைமுகமாக அச்சுறுத்துகிற பிரச்னை.
இத்தகைய புரிதல்கள் ஏதும் இல்லாமல் போக்கிரிக் கும்பல்களை காதலன்களாகவும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிப் போகிறவர்களாகவும் சித்திரித்து அவர்களுக்கு வக்காலத்து வாங்கி பேசுவது என்பது நாகரிக சமூகத்துக்கும், பெண் இனத்துக்கும் செய்யப்படுகின்ற இழிவானதொரு இரண்டகமாகும்.
இத்தகைய இரண்டகர்களை முறியடித்து அம்பலப்படுத்த வேண்டியது மனச்சாட்சியுள்ள, பெண்களின் மேன்மையை விரும்புகின்ற அனைவரது உரிமையும் கடமையும் ஆகும்.
என்னை நிராகரிப்பவள், எனக்கு கிடைக்காமல் வேறு எவனுக்கோ கிடைக்கப் போகிறவள், இந்த உலகில் வாழவே கூடாது என்றெண்ணிக் கொலை செய்கின்ற, காதல் எனும் பெயரில் பெண்களை கடத்துகின்ற, காதல் கட்டப் பஞ்சாயத்துகளில் பணம் பறிக்கின்ற கும்பல்களுக்கு எப்படிப் பாடம் புகட்டப் போகிறீர்கள் என்று இளம்பெண்களின் கல்லறைகளில் இருந்து கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடை காண வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும்
இருக்கிறது.

Sunday, October 2, 2016

HC rejects plea to ban private practice of government doctors

  • SPECIAL CORRESPONDENT
THE HINDU
Petitioner has not mentioned where there is a legal bar on their pratice in private hospitals’

The Madras High Court Bench here has dismissed a public interest litigation petition seeking a direction to the State government and Tamil Nadu Medical Council to ban private practice of government doctors in all cadres in order to help them concentrate more on treating patients at government hospitals.

A Division Bench of Justices S. Nagamuthu and M.V. Muralidaran rejected the plea on the ground that the petitioner had not mentioned any specific instance of a government doctor involved in private practice of medicine and where there was any legal bar for government doctors to practice in private hospitals and nursing homes.

V Aarthi of North Gandhi Gramam near Karur district had filed the PIL petition in 2012 on the ground that it was not appropriate to permit government doctors alone to take up private practice when all other government servants including the policemen were regulated by a code of conduct which prohibited them from engaging in private businesses for profit.


“All government servants including doctors should be treated alike without any partiality,” she said and claimed that private practice by government doctors was banned in many States including Jammu and Kashmir.

Stating that a government woman doctor was hacked to death in her clinic in Thoothukudi in 2012 by the husband of a pregnant woman who died, the petitioner claimed that the doctor had to face such a serious consequence because of her failure to concentrate on treating the patient due to overwork.

“Government doctors should render their full service to the patients coming to the government hospitals but they unfortunately tended to focus on private practice and hence it should be immediately banned,” she said.



×

Saturday, October 1, 2016

மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியம்?!


மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இன்று காலை புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மறைந்த தங்களது முன்னோர்களை நினைத்து, பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து நீர்நிலைகளில் நீராடி, எள்ளும் தண்ணீரும் அர்ப்பணித்தனர்.

மற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான்.

அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.



மஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றாகல், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம்.



மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது.

மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.

மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன.

1ம் நாள் - பிரதமை - செல்வம் சேரும்

2ம் நாள் - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம்.

3ம் நாள் - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும்

4ம் நாள் - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம்.

5ம் நாள் - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும்.

6ம் நாள் - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும்.

7ம்நாள் - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும்.

8ம் நாள் - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும்.

9ம் நாள் நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும்.

10ம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும்.

11ம் நாள் - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும்.

12ம் நாள் - துவாதசி - ஆபரணங்கள் சேரும்.

13ம் நாள் - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும்.

14ம் நாள் - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும்.

15ம் நாள் - மஹாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.



இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

-ரா.வளன் படம்: உ.பாண்டி

எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு தரவிருந்த பொறுப்பு....அவிழ்க்கப்படாத அரசியல் ரகசியம்! 

vikatan.com


நடிகர் திலகத்தின் 89 வது பிறந்தநாள் இன்று...அவரைப்பற்றிய சுவாரஸ்யங்கள் சில....

நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் எடுத்துக்கொண்டிருந்த அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு ஒருநாள் பங்குதாரரான தயாரிப்பாளரின் நண்பர் அவரைப் பார்க்க வந்திருந்தார். படத்தின் கதாநாயகனுக்கு அதுதான் முதற்படம். படப்பிடிப்பை கொஞ்சநேரம் பார்த்த அவர், 'இந்த குதிரைமூஞ்சிக்காரனையா கதாநாயகனா போட்டிருக்க...வாயை இப்படி பிளக்கிறானேய்யா, படம் விளங்கினாப்லதான்' என அந்த நடிகரின் காதுபடவே பேசிவிட்டுச்சென்றார். அதைக்கேட்டுக்கொண்டிருந்த அந்த அறிமுக நடிகர் நொந்துபோனார். கவலைப்படாதய்யா எனஅவரை தேற்றிய தயாரிப்பாளர், படப்பிடிப்பை அத்துடன் நிறுத்தி அவரை சில மாதங்களுக்கு தனது சொந்த செலவில் சுற்றுலாத்தலம் ஒன்றுக்கு அனுப்பிவைத்தார். எல்லா செலவுகளும் தயாரிப்பாளருடையது.

திரும்பிவந்த சிவாஜியைப்பார்த்த தயாரிப்பாளரின் நண்பர் 'யாருப்பா இது புது கதாநாயகனா என்றார்...விபரத்தைச்சொன்னதும் அந்த தம்பியா இது...'என ஆச்சர்யத்தில் உச்சிக்கே போனார் தயாரிப்பாளர். அந்தளவுக்கு பொலிவாய் மாறியிருந்தார் அந்த அறிமுகநடிகர். நண்பரின் சொன்னதற்காக தன்னை படத்திலிருந்து நீக்காமல் தொடர்ந்து நடிக்க தனக்கு அளித்த அந்த தயாரிப்பாளரை தன் இறுதிக்காலம் வரை ஆண்டுதோறும் பொங்கலன்று அவரது சொந்த ஊரான வேலுாருக்கு சென்று ஆசிர்வாதம் பெற்று திரும்புவதை வழக்கமாக்கிக்கொண்டார் அந்த நடிகர். 1952 ல் வெளியாகி தமிழ்சினிமாவிற்கு புதியதொரு பாதையை வகுத்த அந்த திரைப்படம் பராசக்தி...அந்த கதாநாயகன் பின்னாளில் உலகப்புகழ்பெற்ற சிவாஜிகணேசன்...இப்படி சிவாஜியின் நடிப்பு வாழ்க்கையின் துவக்கமே ஒரு தன்னம்பிக்கைக்கதை...

விழுப்புரம் சின்னய்யா கணேசன் என்பதுதான் வி.சி கணேசன்...அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்துசாம்ராஜயம் என்ற நாடகத்தில் சிவாஜி கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்ததால், நாடகத்தின் நுாறாவது அரங்கேற்றத்தில் பெரியார், கணேசன் இனி சிவாஜி கணேசன் என பட்டம் வழங்கினார் . அந்த நாடகத்தில் நடிக்க தனக்கு வந்த வாய்ப்பை மறுத்து கணேசனுக்கு பரிந்துரைத்தது எம்.ஜி.ஆர் என்பது இன்னொரு சிறப்பு.



தியாகராஜபாகவதர்,பியு சின்னப்பா என சொந்தக்குரலில் பாடி நடிக்கும் நடிகர்களின் காலம் முடிந்தசமயம் சிவாஜி, எம்.ஜி.ஆர் கே.ஆர் ராமசாமி, எஸ்.எஸ்.ஆர் ஜெமினி கணேசன் என அடுத்த தலைமுறை நடிகர்கள் உருவானார்கள். அதில் தெளிவான தமிழ் உச்சரிப்பு, அழுத்தமான பாத்திர வடிவமைப்பு, உருக்கமான நடிப்பு என முதல்வரிசையில் நின்றவர் சிவாஜி.
எம்.ஜி.ஆரைப்போன்றே சிவாஜியும் அண்ணா மீது அளவற்ற காதல் கொண்டவர். ஆனால் அண்ணாவின் மற்ற தம்பிகள் அவருக்கு உரிய இடம் கிடைக்காமல் பார்த்துக்கொண்டனர். பின்னாளில் அவர் திருப்பதி சென்று வந்த விஷயத்தை பெரிதாக்கி மனஉளைச்சலை ஏற்படுத்தினர். நொந்துபோய் திமுகவிலிருந்து வெளியேறினார் சிவாஜி.

திருப்பதி சென்றால் திருப்பம் நேரும் என்பார்கள். சிவாஜிக்கு திருப்பதி 2 விதத்தில் திருப்புமுனையானது. அங்குதான் அவரது திருமணம் நடைபெற்றது. இறுதிவரை தன் மனைவியுடன் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சிவாஜி. ஆனால் அரசியலைப்பொறுத்தவரை அவருக்கு வேறு திருப்பம் நிகழ்ந்தது. அண்ணாவிடம் ஈர்ப்பு கொண்டு திமுகவில் இணைந்து பணியாற்றிய சிவாஜி, 50 களின் மத்தியில் திருப்பதி சென்றார். திரும்பிவந்தபோது அரசியல் களம் அதகளப்பட்டது. திருப்பதி கணேசா திரும்பிப்போ கணேசா என அவரது பட பாணியிலேயே போஸ்டர் ஒட்டி திமுகவினர் எதிர்ப்பு கிளப்பினர். நாத்திகக் கட்சியில் இருந்துகொண்டு திருப்பதி போனதால் இந்த எதிர்ப்பு. தியாகி குடும்பத்தை சேர்ந்தவரான அவரை காங்கிரஸ் அணைத்துக்கொண்டது.

திரையுலகிலும் அரசயலிலும், எதிரும் புதிருமாக எம்.ஜி.ஆர்-சிவாஜி விளங்கினாலும் தனிப்பட்ட முறையில் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டிக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். அமெரிக்கா அரசின் அழைப்பின்பேரில் அஙகு சென்று வந்த சிவாஜிக்கு நடிகர் சங்கம் சார்பில் பெரும் வரவேற்பை நிகழ்த்தினார் எம்.ஜி.ஆர். விமான நிலையத்திலிருந்து அவரை மாலை மரியாதையுடன் சாரட் வண்டியில் அழைத்துவந்தார். சிவாஜி- எம்.ஜி.ஆர் இடையே தொழிற்போட்டி உச்சத்தில் இருப்பதாக பத்திரிகைகள் எழுதிவந்த நேரத்தில் இந்த நிகழ்வு அதற்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தது. இதற்கென ஒரு சிறப்பு மலரை வெளியிட்ட எம்.ஜி.ஆர், அதில் எந்த நடிகனுக்கும் கிடைக்காத பேறு இது என்றும், சிவாஜி ஒரு மகாநடிகன் எனவும் ஈகோ இன்றி பாராட்டித்தள்ளினார். இறுதிக்காலம் வரை ஒருவர் வீட்டு நிகழ்ச்சியில் இன்னொருவர் பங்குகொள்வதை இருவரும் தவறாமல் கடைபிடித்தனர். சிவாஜி வீட்டுப்பிள்ளைகள் எம்.ஜி.ஆரை பெரியப்பா என்றே அழைப்பர். அத்தனை நட்பை பேணிவந்தனர் திரையுலகில்.



படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட மறுநிமிடத்திலிருந்து அந்த கதாபாத்திரதோடு ஒன்றிவிடுவார் சிவாஜி. தன் அருகில் இருப்பவர்களை கண்களால் அளவெடுப்பதுமனிதர்களை அவ்வப்போது உற்று கவனிப்பார். அவர்களுக்கு சிவாஜி ஏன் தன்னை அபபடி கவனிக்கிறார் என குழம்புவார்கள். அவரது திரைப்படம் வெளியாகும்போது அதற்கான விடை கிடைக்கும். ஆம். அவர்களின் உடல்மொழியை படத்தில அற்புதமாக வெளிப்படுத்தி பாத்திரத்துக்கு உயிர்கொடுத்திருப்பார். திருவருட்செல்வர் திரைப்படத்தில் சிவாஜியின் நடிப்புக்கு ஆதாரமானவர் காஞ்சி சங்கராச்சாரியார்.

நடித்துக்கொண்டிருக்கும்போதே தான் இறந்துவிடவேண்டும் என்பது சிவாஜியின் பெரும் ஆசையாக இருந்தது. அப்படி இறப்பதே தனக்கு பெருமையளிப்பதாகும் என தன் நெருங்கிய நண்பர்களிடம் சொல்வார். படப்பிடிப்புக்கு சென்றபோது எதிர்பாராமல் மரணமடைந்த முத்துராமனுக்கு நிகழ்ந்த இரங்கல் கூட்டத்தில் முத்துராமன் நம்மையெல்லாம் விட சிறந்த நடிகன்...அதனால்தான் தொழிலுக்கு சென்ற இடத்தில் இறந்தார் என நெகிழ்ந்தார் சிவாஜி. ஆனால் சிவாஜியின் இந்த ஆசை நிறைவேறாமல் போனது.



குடும்பத்தினர் மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தவர் சிவாஜி. தன் 2 சகோதரர்கள் குடும்பங்கள் உட்பட அனைவரும் இறுதிவரை ஒன்றாகவே வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது. மாபெரும் நடிகன் என்றாலும் அவருக்கு கணக்கு வழக்கு தெரியாது. தன் படத்தில் தன் சம்பளம் என்னவென்று கூட கேட்டு அறிந்துகொள்ள மாட்டார். எல்லாவற்றையும் அவர் தம்பி சண்முகம் பார்த்துக்கொள்வார். தன் சகோதரர்கள் மீது அளவற்ற அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார் சிவாஜி.

சிவாஜி தீவிர வேட்டைப்பிரியர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சொந்த ஊருக்கு செல்லும்போது தனது நெருங்கிய நண்பர், வேட்டைக்காரன் புதுார் மாணிக்கத்துடன் துப்பாக்கி தோட்டா சகிதம் கம்பீரமாக காட்டுக்கு புறப்படுவது அவருக்கு பிடித்த விஷயம்.
சிவாஜியின் தந்தை காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்று சுதந்திரப்போரில் பங்கேற்ற தியாகி. ஆனால் சிவாஜிக்கு திராவிட இயக்கத்தின் மீதுதான் ஆசை உண்டானது. அண்ணாவின் தலைமை, முரண்பட்டு காமராஜர் தலைமை, காமராஜரின் மரணத்திற்கு பிறகு ஜனதா தளம் என பயணப்பட்டு தன் சேவைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காத விரக்தியில் இறுதியாக தமிழக முன்னேற்ற முன்னணியை துவங்கினார். திரையுலகில் ஈடில்லா புகழ்பெற்ற அவரால் அரசியலில் ஜொலிக்கமுடியவில்லை.



அமெரிக்கா சென்ற சிவாஜி விரும்பி பார்க்க விரும்பியது ஹாலிவுட் மார்லன் பிராண்டோவைத்தான். பார்த்ததும் அவரை பாராட்டித்தள்ளவேண்டும் என்ற கற்பனையுடன் சென்றவருக்கு இன்ப அதிர்ச்சி, சந்திப்பின்போது சிவாஜியை மார்லன் பிராண்டோ பாராட்டித்தள்ளிவிட்டார். நெகிழ்ச்சியின் விளிம்பிற்கு போனார் சிவாஜி.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் படத்திற்காக எகிப்து அதிபர் நாசர் கெய்ரோவிக்கு வர சிவாஜிக்கு அழைப்பு விடுத்தார். அங்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் ஒருநாள் மேயராக சிவாஜிக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அதன் சாட்சியாக அவருக்கு அந்நாட்டின் சின்னம் பொறித்த சாவியை வழங்கினார் எகிப்து அரசு. இந்த கவுரவம் பெற்ற ஒரு திரைக்கலைஞர் சிவாஜி மட்டுமே.



கட்சியிலும் ஆட்சியிலும் தன் கைமீறி நடந்த பல சம்பவங்களால் மனமும் உடலும் தளர்ந்து உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த எம்.ஜி.ஆரை அவரது இறுதிக்காலத்தில் சந்தித்தார் சிவாஜி. அப்போது தம்பி உனக்கு ஒரு பொறுப்பை தரப்போகிறேன். நாளை வா அதுபற்றி பேசலாம் என்றார் எம்.ஜி.ஆர். ஆனால் சிலவேலைகளால் சிவாஜியால் போகமுடியவில்லை. சில நாட்களில் எம்.ஜி.ஆரின் மரணம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு என்ன பொறுப்பை தர எண்ணியிருந்திருப்பார் என்ற ரகசியம் அந்த இரு திலகங்களுக்குள் முடிந்துபோனது.

- எஸ்.கிருபாகரன்

புதையல் ஆசை... நிர்வாண பூஜை..! திருச்சி திகில் கொலைகள்


திருச்சி மாவட்டத்தில் புதையல் ஆசை காட்டி 8 பேரை கொலை செய்தவர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிர்வாண பூஜை நடத்தி தந்தை உள்பட 8 பேரை கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த வேங்கூரைச் சேர்ந்தவர் தங்கதுரை. தி.மு.க பிரமுகர் ஒருவரின் உறவினர். இவர், கடந்த 7ம் தேதி மாயமானார். இவரது உடல் நிர்வாண நிலையில் கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் உள்ள வாய்க்காலில் கிடந்தது. அவரது மரணம் தொடர்பாக திருவெறும்பூர் போலீஸார் விசாரித்தனர். அப்போது தங்கதுரையின் நண்பர் சப்பாணியிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விசாரணையின் போது சப்பாணி, தங்கதுரையை மட்டுமல்லாமல் தன்னுடைய தந்தை உள்பட 8 பேரை கொலை செய்ததை போலீஸாரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு சப்பாணியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் சொன்ன இடங்களுக்கு சென்று ஒவ்வொரு உடல்களை தோண்டி போலீஸார் எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், கடந்த 2012ல் திருவெறும்பூர் மேல குமரேசபுரத்தைச் சேர்ந்த கோகிலா (70), பாப்பாக்குறிச்சி அற்புதசாமி (70), 2015ல் கீழ குமரேசபுரம் விஜய் விக்டர் (27), கிருஷ்ணசமுத்திரம் தெக்கன் (75), 2016ல் கூத்தைப்பார் வடக்கு ஹரிஜனத் தெருவைச் சேர்ந்த சத்தியநாதன் (45), உப்பிலியபுரம் வடகாடு குமரேசன் (50) ஆகியோரை சப்பாணி கொலை செய்துள்ளார். அடுத்து சப்பாணி, தன்னுடைய தந்தை தெக்கனையும் (75) கொலை செய்துள்ளார். பணம், நகைகளை கொள்ளையடிக்க சப்பாணி இந்த கொலைகளை செய்துள்ளார்" என்றனர்.

8 பேரையும் சப்பாணி கொலை செய்த ஸ்டைலே தனி என்கிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். "கோயிலுக்கு வரும் நபர்களிடம் சப்பாணி, முதலில் பேச்சுக் கொடுப்பார். அப்போது அவர்களின் வேண்டுதல்களை தெரிந்து கொள்வார். அதில் பணம் தேவைக்காக வருபவர்களிடம் காட்டில் புதையல் இருக்கிறது. பூஜை செய்தால் அதை எடுத்துவிடலாம் என்று ஆசைவார்த்தை கூறுவார். சப்பாணியின் பேச்சை நம்புபவர்கள் அந்த பூஜையில் கலந்து கொள்வார்கள். அவ்வாறு பூஜைக்கு சென்றவர்களை கொன்று நிர்வாணமாக புதைப்பதை சப்பாணி ஒரு வேலையாக வைத்துள்ளார். அவரது பேச்சு, நடவடிக்கை எல்லாம் பார்க்கும் போது சைக்கோ போல தெரிகிறது. சப்பாணி சொன்ன தகவலின்படி கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளோம். பிறகு டி.என்.ஏ பரிசோதனை நடத்தி சம்பந்தப்பட்டவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும். 7 பேரை கொன்ற சப்பாணி, தன்னுடைய தந்தை தெக்கனையும் கொலை செய்துள்ளார். அவரையும் புதையல் ஆசை காட்டி கொலை செய்தாரா என்று விசாரித்து வருகிறோம்" என்றார்.

கொலை செய்வது எப்படி?

புதையல் ஆசையில் சப்பாணியுடன் செல்லுபவர்களிடம் நிர்வாணமாக இருந்து பூஜை செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்று சொல்வார் சப்பாணி. அதன்படி அவர்களும் நிர்வாணமாகவே பூஜையில் கலந்து கொள்வர். மந்திரங்கள் கூறியப்பிறகு சாமி கும்பிட கண்களை அவர்கள் மூடும் போது கல்லை தூக்கிப் போட்டு அவர்களை கொலை செய்துவிடுவாராம் சப்பாணி. இதன்பிறகு அவர்களிடமிருந்த பணம், நகை உள்ளிட்டவைகள் கொள்ளையடித்து விட்டு உடலையும் காட்டுப்பகுதியில் புதைத்து விடுவாராம். இதனால் சப்பாணி செய்த கொலைகள் யாருக்கும் தெரியவில்லை. தங்கதுரை கொலையில் சிக்கியபிறகே அவரது முழு சுயரூபமும் போலீசுக்கு தெரியவந்துள்ளது. சப்பாணிக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். மேலும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

எஸ்.மகேஷ்

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் சுதிர் குப்தா... யார் இவர்...?


vikatan.com

சுவாதி கொலை வழக்கில் போலீஸார் குற்றம்சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ராம்குமார். அவர், கடந்த 18-ம் தேதி மின்கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டார் என போலீஸார் தெரிவித்தனர். முதலில், அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் பின்னர், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்த அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய முடிவுசெய்யப்பட்டது. ஆனால், ராம்குமாரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், ‘இது போலீஸாரின் திட்டமிட்ட கொலை’ என்று கூறி பிரேதப் பரிசோதனை செய்ய மறுத்தனர். அதுமட்டுமின்றி, ‘தமிழக அரசு சார்பில் உள்ள மருத்துவர்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றால்... உண்மை வெளியே வராது. எனவே, ராம்குமார் தரப்பில் ஒரு தனியார் மருத்துவர் இருக்க வேண்டும்’ என்று கோரினர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.


நீதிமன்றத்தை நாடிய ராம்குமார் தரப்பு!

இதனைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர் ராம்குமார் தரப்பினர். இதனை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. ‘வேண்டும் என்றால் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்யலாம்’ என்று உத்தரவிட்டார். அதிலும் திருப்தி அடையாத ராம்குமார் தரப்பு, உச்ச நீதிமன்றம் சென்றது. அப்போது, ‘இந்த மனுவை விசாரிக்கத் தேவையில்லை’ என்று அது தள்ளுபடி செய்தது. மேலும், தனியார் மருத்துவரை அனுமதிப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரைச் சேர்த்து அக்டோபர் 1-ம் தேதிக்குள் பிரேதப் பரிசோதனையை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணி முதல் ராம்குமார் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பிரேதப் பரிசோதனை, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சுதிர்குப்தா குழுவுடன் தொடங்கியுள்ளது. இதில் பாலசுப்ரமணியம், செல்வகுமார் உள்பட 5 மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

யார் இந்த சுதிர் குப்தா?

உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி ராம்குமார் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய உள்ள குழுவில் இணைந்துள்ள சுதிர் குமார் குப்தா எய்மஸ் மருத்துவமனையின் மருத்துவர் ஆவார். இவர், எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவராக இருந்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. பின்னர் வழக்கில் சுனந்தா உடலை பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர் சுதிர் குப்தா, ‘சுனந்தாவின் கைகள் மற்றும் கன்னத்தில் காயங்கள் இருந்ததாக’ அஞ்சாமல் அறிக்கை கொடுத்து அதிரவைத்தார். சில மாதங்கள் கடந்த நிலையில், ‘சுனந்தாவின் மரணம் இயற்கையானது’ என அறிக்கை அளிக்குமாறு தமக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக சுதிர் குப்தா கூறினார். அதற்காக, ‘தம்மீது எய்ம்ஸ் மருத்துவமனை நடவடிக்கை எடுத்தால் அதைக் கண்டு தாம் அஞ்சப்போவது இல்லை’ என்றும் தெரிவித்தார். சுதிர் குப்தா சொன்ன அறிக்கையைத் தொடர்ந்தே இந்த வழக்கு சூடுபிடித்தது. பின்னர், எய்ம்ஸ் மருத்துவமனை தடயவியல் துறைத் தலைவர் பொறுப்பிலிருந்தும் சுதிர் குப்தா நீக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தர்மபுரியில் மர்மமான முறையில் மரணமடைந்த தர்மபுரி இளவரசன் பிரேதப் பரிசோதனையில் பிரச்னை எழுந்தபோது, உயர் நீதிமன்றம் நியமித்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் குழுவிலும் சுதிர் குப்தா இருந்தார்.

‘‘சரவணன் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை!’’

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்துவந்தார் திருப்பூர் மாணவரான சரவணன். அவர், கல்லூரியில் சேர்ந்து 10 நாட்களில் விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். சரவணன் உயிரிழப்பு தற்கொலை என்று கூறப்பட்டது. ஆனால், பிரேதப் பரிசோதனை செய்த சுதிர் குப்தா தலைமையிலான மருத்துவர் குழு, ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சரவணன் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. சரவணன் உடலில் யாரோ விஷ ஊசியைச் செலுத்தியிருக்க வேண்டும். மருத்துவம் தெரிந்தவராலேயே இந்த ஊசியைச் செலுத்த முடியும்’’ என்று தெரிவித்திருந்தது.

ராம்குமார் உடலை பிரேதப் பரிசோதனை செய்யும் குழுவிலும் குப்தா இணைந்திருப்பது இந்த வழக்கில் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஈடுபட்டுள்ள குப்தா என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவக் குழுவினர் மற்றும் மேஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி ஆகியோர் ராம்குமார் பெற்றோரைப் பார்த்து, ‘‘எங்களுடைய பரிசோதனை நேர்மையாக இருக்கும்’’ என்று கூறியதாக ராம்குமார் ஆதரவாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

‘‘ராம்குமார் உடலில் காயங்கள் உள்ளன!’


’இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ராயப்பேட்டையில் உள்ள ராம்குமாரின் உடலைப் போய் பார்த்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ‘‘ராம்குமார் உடலில் காயங்கள் இருப்பதாக மேஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வியிடம் புகார் அளித்துள்ளோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை, வீடியோ பதிவை இன்றே வழங்க வேண்டும். ராம்குமார் மரணம் தொடர்பாக சிறைத் துறை நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது’’ என்றார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால், மட்டுமே இந்த வழக்கின் அடுத்த நகர்வு என்ன என்பது தெரியவரும்.

- கே.புவனேஸ்வ
ரி

உள்ளாட்சி 5: உங்கள் ஒரு ரூபாயில் 86 பைசா எங்கே?


உங்கள் அதிகாரத்தைத் தெரிந்துக்கொண்டீர்கள். சரி, என்றைக்காவது அதனைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? உங்கள் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ஒருமுறையேனும் கலந்து கொண்டிருக்கிறீர்களா? அங்கே மக்கள் பிரச்சினை குறித்து கேள்வி எழுப் பியிருக்கிறீர்களா? ‘இல்லை’ என்பவர் கள் இனியாவது அதை செய்யுங்கள். “அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத் தும்போது மக்கள் அனைவரும் அதிகார வர்க்கத்தை எதிர்ப்பதற்கான தகுதியைப் பெறுவதே உண்மையான சுயாட்சி” என்றார் மகாத்மா காந்தி.

காந்தி இதனைச் சொன்ன காலகட்டத்தில் அதிகார வர்க்கத்துக்கு பத்து, இருபது தலைகளே இருந்தன. இன்று கூரிய கொம்புகளுடன் ஆயிரம் தலைகள் முளைத்துவிட்டன. இந்தச் சூழலில் அதிகார வர்க்கம் தவறு இழைக்கும்போது எதிர்ப்பது அவரவர் முடிவு. அனைவரும் சசி பெருமாள் ஆக முடியாதுதான்; அனைவரும் டிராஃபிக் ராமசாமி ஆக முடியாதுதான். ஆனால், அனைவரும் கேள்வி எழுப்பலாம், இல்லையா?

நாட்டுக்காக வேண்டாம். குறைந் தது, உங்கள் வீட்டுக்காகக் கேள்வி கேளுங்கள். உங்கள் வீட்டுக்கு பாது காக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை யா? கேள்வி கேளுங்கள். மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லையா? கேள்வி கேளுங்கள். உங்கள் குழந்தை படிக்க அரசுப் பள்ளி இல்லையா? கேள்வி கேளுங்கள். உங்கள் வீட்டுக்கு முன் பாக சாக்கடை அடைத்துக்கொண் டுள்ளதா? கேள்வி கேளுங்கள். குப்பை அள்ள ஆள் வரவில்லையா? கேள்வி கேளுங்கள். அருகில் இருக்கும் மதுக்கடை அச்சுறுத்தலாக இருக் கிறதா? கேள்வி கேளுங்கள். கேட்பதில் என்ன தயக்க வேண்டிக்கிடக்கிறது?

உலகம் உயிர்ப்புடன் இருக்கிற தென்றால் காரணம் கேள்விகளே. கேள்விகளுக்கு உயிர் உண்டு. கேள்விகள் தனித்து பிறப்பதில்லை. அவை துணைக் கேள்விகளுடனே பிறக்கின்றன. பிறக்கும் ஒவ்வொரு கேள்வியும் நிறைய குட்டிகளைப் போடுகின்றன. முடிவுறாத கேள்வி களின் இயக்கமே உலகத்தின் இயக் கம். கேள்விகளால் உருவானதுதான் மனித சமூகத்தின் வளர்ச்சி. கேள்விகள் எழுப்பாத சமூகம் பகுத்தறிவற்ற சமூகம். அது தேங்கிவிடும்.

நீங்கள் எழுப்பும் தனிநபர் கேள்வியே சமூகத்தின் கேள்விகளா கின்றன. சமூகங்களின் கேள்விகளே கிராமத்தின் கேள்விகளாகின்றன. கிராமங்களின் கேள்விகளே நகரங் களின் கேள்விகளாகின்றன. நகரங் களின் கேள்விகளே நம் தேசத்தின் கேள்விகளாகின்றன. தேசங்களின் கேள்விகளே சர்வதேசங்களையும் கட்டுப்படுத்துகின்றன. இங்கே கேட் காமல் எதுவும் கிடைக்காது. தட்டாமல் எதுவும் திறக்காது. பதில்கள் உடனே கிடைக்காது. ஆனால், கிடைக்காமலே போகாது.

இந்த இடத்தில், “எல்லாம் சரி, கிராம சபைக் கூட்டம் நடப்பதே எங்க ளுக்கு தெரிவதில்லையே...” என்கிற உங்கள் முணுமுணுப்பும் கேட்கிறது. அதையும் உங்கள் கேள்வியின் மூலமே முறியடிக்க இயலும். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 3(2)-ன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சியும் ஆறு மாதங்களுக்குக் குறையாத இடைவெளியில் கிராம சபையைக் கூட்ட வேண்டியது கட்டாயம். மிக மிகக் கட்டாயமாக ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கூட்டப்பட வேண்டும்.

கிராம சபைக் கூட்டம் கூட்டப்படுவதற்கு ஏழு நாட்கள் முன்பு கூட்டம் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும். கூட்டம் நடத்தப்படும் இடம், நாள், நேரம் மற்றும் கூட்டத்தில் விவாதிக்கப் படும் விஷயங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை பஞ்சாயத்து அலுவல கம், பள்ளிகள், கோயில்கள், மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சத்துணவு மையம், தொலைக்காட்சி அறை உள் ளிட்ட பொது இடங்களில் ஒட்ட வேண் டும். தண்டோரா அடித்து தகவல் சொல்ல வேண்டும். ஒலிப்பெருக்கியில் அறிவிக்க வேண்டும்.

வார்டு உறுப்பினர்கள் வீடுதோறும் சென்று மக்களை அழைக்க வேண் டும். ஒருவேளை உங்கள் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் கிராம சபைக் கூட்டத்தை நடத்த மறுத்தால் துணைத் தலைவர் கூட்டம் கூட்ட வேண்டும். அவரும் மறுத்தால் உங்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகார பூர்வமாக தகவல் சொல்லுங்கள். அவர் வந்து கிராம சபையைக் கூட்டுவார். கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் 72 மணி நேரத்துக்குள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும்.

ஜனவரி 26-ம் தேதியில் கூட்டப் படும் கூட்டத்தில் உங்கள் கிராமத்துக்கு என்னென்ன வளர்ச்சிப் பணிகள் வேண்டும் என்பது பட்டியலிடப்படும். ஊருக்கு என்ன வேண்டும் என்று நீங் கள் கேட்கலாம். திட்டகளுக்கான அடுத்த நிதியாண்டு திட்ட அறிக்கை மற்றும் வரவு செலவு திட்டத்தைச் சபை யில் வைத்து ஒப்புதல் பெறுவார்கள். அதனையும் பார்க்கலாம்.

மே 1-ல் கூட்டப்படும் கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களில் பயன் பெறும் பயனாளிகளின் பட்டியலை வாசித்து ஒப்புதல் பெற வேண்டும். அதில் போலிகள் சேர்க்கப்பட்டிருக் கலாம். உங்கள் பெயர் நீக்கப்பட்டிருக் கலாம். இவற்றை எல்லாம் நீங்கள் கலந்துக்கொள்வதின் மூலமே சரி செய்ய இயலும். தவிர, அன்றைய நாள் கூட்டத்தில்தான் அந்த வருடம் கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் பெற வேண்டும்.

ஆகஸ்ட் 15-ல் வறுமை ஒழிக்கும் புதுவாழ்வுத் திட்டம், தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம் (தாய்), பசுமை வீடுகள் திட்டம், ஊரக குடியிருப்புத் திட்டம், மகளிர் திட்டம், மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உட்பட அனைத்து துறைகளிலும் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பார்கள்.

அப்படி யாரும் எடுத்துரைக்க வில்லை எனில் கேட்டுத் தெரிந்துக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. அக்டோபர் 2-ல் கிராமப் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் அரசின் இதரத் துறைகள் மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகள் மீதான ஆய்வு நடக்கும். பஞ்சாயத்தின் முந்தைய ஆண்டு வரவு செலவு கணக்குகள் மீதான தணிக்கைக் குறிப்புகளை ஆய்வு செய்வார்கள். இவற்றிலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தாராளமாகக் கேட்கலாம்.

இவற்றை எல்லாம் ஏன் கேட்க வேண்டும்? ஏனெனில் அந்தத் திட்டங் களுக்கான நிதி உங்கள் வரிப்பணத் தில் இருந்து வருகிறது. அதனாலேயே அவற்றை ஆய்வு செய்யும் உரிமை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இவற்றை எல்லாம் இத்தனை காலமாக கேள்வி கேட்காமல் இருந்த தின் விளைவு என்ன தெரியுமா? ஒவ் வோர் ஐந்தாண்டுத் திட்டங்களிலும் மத்திய, மாநில அரசுகள் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.5 அல்லது 6 கோடி வரை ஒதுக்குகிறது.

உங்களுக்காக அரசு ஒதுக்கும் இந்த நிதியின் ஒரு ரூபாயில் 0.14 பைசா மட்டுமே உங்களை வந்தடை கிறது. மீதமுள்ள 86 பைசா ஊழலிலும் நிர்வாகச் செலவுகளிலுமே கரைந்துப்போகிறது. இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய திட்டக்குழு ஆகிய அமைப்புகள் நடத்திய இருவேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட உண்மை இது!

NEWS TODAY 02.01.2026