Friday, April 21, 2017

தலையங்கம்
பாராட்டுக்குரிய பிரதமர், முதல்–அமைச்சர்


ஏப்ரல் 21, 03:00 AM

ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிந்து ஆண்டுகள் பல உருண்டோடினாலும், இன்னமும் அவர்களது ஆதிக்கத்திலிருந்தபோது பின்பற்றப்பட்ட பல வி.ஐ.பி. கலாசாரங்கள் அமலில் இருக்கிறது. அதில் ஒன்றுதான் மிக முக்கிய பிரமுகர்கள். அதாவது, வி.ஐ.பி. என்ற அந்தஸ்தில் இருக்கும் தலைவர்கள் தங்கள் கார்களில் சுழலும் சிவப்பு விளக்குகளை சைரன்கள் அலற பொருத்திக்கொண்டு செல்வதாகும். மோட்டார் வாகன விதிப்படி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், துணைபிரதமர், பாராளுமன்ற, சட்டசபை சபாநாயகர்கள், மத்திய–மாநில அமைச்சர்கள், திட்டக்கமி‌ஷன் துணைத்தலைவர், மாநில கவர்னர்கள், நீதிபதிகள், முதல்–அமைச்சர்கள், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட உயர் அதிகாரிகள் மற்றும் சிலர் மட்டுமே பொருத்திக்கொள்ளலாம். ஆனால், நடைமுறையில் இவர்கள் மட்டுமல்லாமல், சில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் போன்ற அரசியல்வாதிகள், போலீஸ் டி.எஸ்.பி.க்கள், ஏன் பஞ்சாயத்து தலைவர்கள் வரை எல்லோருமே அந்தஸ்தின் அடையாளமாக சிவப்பு விளக்குகளை தங்கள் வாகனங்களில் பொருத்திக்கொள்கிறார்கள். பலநேரங்களில் இவ்வாறு தவறாக பயன்படுத்தப்படும் வாகனங்களை பார்த்தவுடன், யார் வருகிறார்கள்? என்று தெரியாமல், விரைப்பாக ‘சல்யூட்’ அடித்து மற்ற வாகனங்களை போலீசார் நிறுத்திவிடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, பிரதமர் இதுதொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்தார். நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக்கூட்டத்தில், ஜனாதிபதி முதல் பிரதமரிலிருந்து யாருமே இனி சுழலும் சிவப்பு விளக்குகளை கார்களில் பொருத்தக்கூடாது. இதற்கான அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இத்தகைய சுழலும் சிவப்பு விளக்குகள் பொருத்துவது என்பது வி.ஐ.பி. கலாசார அடையாளமாக கருதப்படுகிறது. ஜனநாயக பண்பை வளர்க்கும் வகையில், மத்திய அரசாங்கம் இந்த சரித்திரம் வாய்ந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அவசரகால மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபடும் அனைத்து வாகனங்கள், ஆம்புலன்ஸ், தீயணைக்கும்படை போன்ற வாகனங்கள் தங்கள் கார்களில் நீலநிற விளக்குகளையும், சைரனையும் பொருத்திக்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆக, இனி வி.ஐ.பி. கலாசாரம் அடியோடு நாட்டிலிருந்து ஒழிக்கப்படுகிறது. மத்திய மந்திரி வெங்கையா நாயுடு எப்போதுமே தன் காரில் சுழலும் சிவப்புவிளக்கை பொருத்துவதில்லை. அதேபோல, டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான மாநில அரசிலும், அம்ரிந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் மாநில அரசிலும், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேசத்திலும் முதல்–மந்திரிகளோ, மற்ற அமைச்சர்களோ தங்கள் கார்களில் சுழலும் சிவப்பு விளக்குகளை பொருத்துவதில்லை. அரசாங்கம் எடுத்த இந்த நடவடிக்கையை குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அனைவரிடத்திலிருந்தும் வி.ஐ.பி. என்று ஒரு தனிப்பிரிவு சுழலும் சிவப்புவிளக்கு கொண்ட மற்றும் சைரன்களை தங்கள் கார்களில் பொருத்திக்கொண்டு தனித்துவமாக இயங்குவது அமைச்சரவை முடிவின் மூலம் விலக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியரும் ஸ்பெ‌ஷல்தான், ஒவ்வொரு இந்தியரும் வி.ஐ.பி.தான் என்று குறிப்பிட்டிருப்பது, நிச்சயமாக ஒவ்வொரு இந்தியரையும் பெருமைகொள்ள வைக்கிறது.

பிரதமர் எடுத்தமுடிவு உத்தரவாகவோ, சுற்றறிக்கையாகவோ வரும்முன்பே, நேற்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் காரிலிருந்து சுழலும் சிவப்புவிளக்கை அகற்றிவிட்டார். அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் கார்களில் சிவப்புவிளக்கை பொருத்தமாட்டார்கள் என்று அறிவித்துவிட்டார். முதல்–அமைச்சர் தன் காரிலிருந்து அகற்றியவுடன், அடுத்த சிலநிமிடங்களிலேயே அமைச்சர்களும், உயர்அதிகாரிகளும் தங்கள் கார்களிலிருந்து சிவப்பு விளக்கை அகற்றிவிட்டனர். வரலாற்று சிறப்புமிகுந்த இந்த நடவடிக்கையை எடுத்த பிரதமரும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நிச்சயமாக பாராட்டுதலுக்குரியவர்கள். இனி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் சுழலும் சிவப்புவிளக்கு கொண்ட கார்களை பார்க்கமுடியாது. இதற்கு முன்உதாரணம் தமிழகம்தான்.
கடலை மிட்டாய் விற்பவர் கற்றுக்கொடுத்த அனுபவப் பாடம்! #MorningMotivation

க. பாலாஜி





காலையிலிருந்து சென்னை மக்களை வேகாத வெயிலில் அலையவிட்டு விட்டு அத்தனை அமைதியாக மேற்கில் மறைந்து கொண்டிருந்தது சூரியன். வேலை முடித்து வீட்டுக்கு கிளம்புபவர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் என அத்தனை கூட்டம் எழும்பூர் ரயில் நிலையத்தில். சுண்டல், வேர்க்கடலை, சமோசா விற்பனை ஜோராக நடந்து கொண்டிருந்தது. அத்துடன் புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களின் பாட்டுச் சத்தமும் சேர்ந்து கொண்டு ரயில் நிலையமே திருவிழா திடல் போல காட்சியளித்தது. சென்னை பீச் ஸ்டேஷனிலிருந்து தாம்பரம் செல்லும் ரயிலில் ஏறி ஜன்னல் ஓரமாக இருக்கிறதா என நோட்டம் விட்டால் எல்லாவற்றிலும் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். சரி, 'ஏதாச்சும் ஒரு இடத்துல உட்காருவோம்' என நினைத்துக்கொண்டு, நடக்கும் பாதையை ஒட்டிய ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ரயில் சேத்துப்பட்டை தாண்டியிருந்தது. ஓர் அக்கா கூடை நிறைய ஆரஞ்சு பழங்களை வைத்துக் கொண்டு "அஞ்சு பழம் அம்பது ரூவா, வாங்கிக்கோ வாங்கிக்கோ" என கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தார். இன்னோர் அண்ணன் "10 பிஸ்கட் 20 ரூபா சூடா இருக்கு வேணுமா சார்" என ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு குட்டி அலுமினிய வளையத்துக்குள் தன் உடலை நுழைத்து, அதிலிருந்து வெளியே வந்து உதவி கேட்டுக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. கதவு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பூ கட்டிக் கொண்டிருந்தார்கள் சில பெண்கள். செய்தித்தாள்களை கீழே மடித்து போட்டு அதில் அமர்ந்து தங்களது அன்றாட நிகழ்வுகள் குறித்து பேசி சிரித்துக் கொண்டு வந்தார்கள் சிலர். கல்லூரி இளைஞர்கள் சிலர் ஃபுட் போர்டில் தொங்கிக் கொண்டு வந்தார்கள்.

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தாலும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. யாருக்கும் நிற்ககூட இடமில்லாத நிலைமை. ரயில் மாம்பலம் நிலையத்தில் நின்று புதிதாக நிறைய பயணிகளை ஏற்றிக் கொண்டு நகரும் பொழுதுதான் அந்த மனிதரை பார்த்தேன். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார். ஒரு கையில் ஸ்டிக்குடன், வண்ண வண்ணமாக நீளமான பேனாக்களையும் வைத்திருந்தார். இன்னொரு கையில் நிறைய வேர்க்கடலை பர்ஃபி பாக்கெட்டுகளையும் வைத்திருந்தார். தோளில் ஒரு பை கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. சிகப்பு வண்ண உடையும் முகத்தில் மாஸ்க்கும் மாட்டியிருந்தால் அப்படியே சான்டாகிளாஸ் போலத்தான் இருந்திருப்பார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு "சுவீட்டான வேர்க்கடலை ரெண்டு பாக்கெட் பத்து சார் வாங்கிக்கங்க" எனச் சொல்லி ஒவ்வொரு அடியாக முன்னேறி வந்து கொண்டிருந்தார். முகத்தில் அத்தனை சந்தோஷம், வழக்கமாக அந்த ரயிலில் பயணிக்கும் சிலர் அவரிடம் "என்னய்யா இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க போலையே.." என்று கேட்க "இன்னிக்குதான் என்னை நீ பாக்குறியா? புதுசா கேக்குற? நாம எப்பவுமே ஹாப்பி தான்யா!" - அந்த குரல் வந்த பக்கம் திரும்பி அவர் பதில் சொல்ல அந்த இடமே கலகலப்பாகியது. ஒரு கடலை பாக்கெட்கூட விற்கவில்லை.



என் பக்கத்தில் வந்ததும் கையிலிருந்த பேனாக்களையும், வேர்க்கடலை பாக்கெட்டுகளையும் மொத்தமாக என் கையில் கொடுத்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாம்தான் எதுவுமே கேட்கவில்லையே நம் கையில் அத்தனையையும் கொடுக்கிறாரே என குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் தொண்டையை செருமிக் கொண்டு.

"சைலன்ஸ் ப்ளீஸ்" எனச் சொல்ல எல்லோரும் பேச்சை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தார்கள். அவரிடம் பேசிக் கொண்டிருந்தவர்களோ இன்னும் உற்சாகமாகி "சைலன்ஸ் ப்ளீஸ்.. சைலன்ஸ் ப்ளீஸ்" எனச் சத்தம்போட மொத்தப் பெட்டியும் அமைதியான நொடியில்...

"ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான். என்ன அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்..." என சத்தம் போட்டு பாடி நிறுத்த அவர்கள் சிவாஜியோடு கோரஸ் பாடும் நண்பர்களைப் போல கோரஸ் போட்டார்கள்.

"உலகம் எந்தன் கைகளிலே.. உருளும் பணமும் பைகளிலே..." என்று பாடி தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த சில்லறைகளை ஆட்டிக் காண்பித்தபோது எங்கும் சிரிப்பலை எழுந்தது.

"யோசிச்சுப் பார்த்தா நானே ராஜா..." எனப் பாடி கொஞ்சம் யோசித்துவிட்டு "இன்னிக்கு குரல் சரியில்லை மீதியை நாளைக்கு பாடுறேன்" எனச் சொல்லி என்னிடமிருந்த வேர்க்கடலை மிட்டாய் பாக்கெட்டுகளையும் வாங்கிக் கொண்டிருக்கையில் எல்லோரும் கை தட்ட ஆரம்பித்திருந்தோம். அவருடைய கையிலிருந்த வேர்க்கடலை மிட்டாய்கள் மளமளவென விற்க தொடங்கியிருந்தன. மீதமிருந்த பர்ஃபி பாக்கெட்டுகளை கையில் பிடித்துக் கொண்டு கதவருகில் நின்று கொண்டிருந்தவரிடம் நானும் இரண்டு பர்ஃபி பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். "ரொம்ப நல்லா பாடுனீங்க... உங்க குரல்ல அவ்ளோ சந்தோஷம். சூப்பர் சார்'னு சொல்ல.. அமைதியாக என் பக்கம் திரும்பி புன்னகைத்தவர் "மனசுல சந்தோஷம் இருந்தா, அது நம்ம வார்த்தைகள்லயும் வெளிப்படும் சார். அது மட்டுமில்லாம ஏற்கெனவே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு யோசனையோட போய்கிட்டு இருப்பாங்க. நாமளும் சோகமா மூஞ்ச வைச்சுக்கிட்டு பர்ஃபி வாங்கிக்கங்கன்னு போய் நின்னா எப்படி வாங்குவாங்க. அதான் நீங்க சந்தோஷப்படுற மாதிரி ஒரு பாட்டை எடுத்துவிட்டேன். இதுவும் பிஸினஸ் ட்ரிக்ஸ்தான் சார்!" எனச் சொல்லிய பொழுது ரயில் குரோம்பேட்டையில் நின்றிருந்தது. வேகமாக ரயிலில் இருந்து இறங்கியவர் எதிரே பீச்சுக்கு போகும் ரயிலை பிடிக்க ஸ்டிக்கை கீழே தட்டி தட்டி நடந்து கொண்டிருந்தார்..!



நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மனிதரிடமும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா!? "யார் பேச்சையும் நின்று கவனிக்க நேரமே கிடைப்பதில்லை" எனப் புலம்பும் அதே நேரத்தில் வாட்ஸ்அப் குரூப்பில் வந்த பழைய மொக்கை மெசேஜை இன்னொரு குரூப்புக்கு ஃபார்வேர்ட் செய்து கொண்டிருப்போம். அல்லது, நம் நண்பர் "டிராவலிங் டூ ஊட்டி வித் மை ஃபேமிலி" என போட்ட ஸ்டேட்டஸுக்கு கமென்ட் போட்டுக் கொண்டிருப்போம். ஆனால், 'சூரியன்' படத்தில் கவுண்டமணி சொல்வது போல "நான் இங்கே ரொம்ப பிஸி" டையலாக்கைச் செல்லாதவர்கள் ரொம்பவே குறைவுதான். ஆயிரம் புத்தகங்களில் இருந்து கற்றுக் கொள்ளும் அறிவை ஒருவருடைய அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ள முடியும் எனச் சொல்வார்கள். அதே போலத்தான் கடலை மிட்டாய் விற்பவரும் வருடக்கணக்கில் எம்.பி.ஏ மாணவர்கள் படிக்கும் பிசினஸ் சூட்சுமத்தை எளிதாக சொல்லிவிட்டார் தானே!?

Thursday, April 20, 2017

ஆங்கிலம் அறிவோமே - 156: பழமொழிகளை ‘மாற்ற’ முடியாது!

ஜி.எஸ்.எஸ்.




கேட்டாரே ஒரு கேள்வி

பிஞ்சிலே பழுத்தவன் என்பதை எப்படிக் குறிப்பிடலாம்?

இளம் வயதிலேயே தனித்துவமான அதீதத் திறமையோடு விளங்குபவரை prodigy என்று குறிப்பிடுவதுண்டு. He was a child prodigy in chess and he soon became the national chess champion.

ஆனால் பிஞ்சில் பழுத்தவன் என்பதைக் கொஞ்சம் எதிர்மறையான அர்த்தத்தில் தான் நாம் பயன்படுத்துகிறோம். அதாவது ‘தேவையில்லாததை எல்லாம் தெரிஞ்சக்கிட்டு இருக்கான்’ என்ற பொருளில். A precocious boy எனும்போது பிஞ்சிலே பழுத்தவன் என்பதை நாம் உணர்த்துகிறோம். அதாவது prematurely developed என்ற பொருளும் இந்த வார்த்தைக்கு உண்டு.

Differently என்பதற்கும், Indifferent என்பதற்கும் என்ன வித்தியாசம்?

Difference என்றால் வித்தியாசம். Different என்றால் வித்தியாசமான.

Indifferent என்பதன் பொருள் ஆர்வம் காட்டாத அல்லது கவலைப்படாத. Indifferent person, indifferent organization.

He was indifferent to the proposal since it did not affect him.

தரமற்ற என்ற அர்த்தத்திலும் indifferent பயன்படுத்தப்படுகிறது. Indifferent roads.



“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு” இந்தப் பழமொழியை ஆங்கிலப் பழமொழியாக எப்படி மாற்றுவது?

நண்பரே, பழமொழிகளை ‘மாற்ற’ முடியாது. அப்படி மாற்றினால் அது புது மொழிதான். “You can die at the age of six. Or you can die at the age of 100” என்று மொழிபெயர்த்தால் அது ‘ஆங்கிலப் பழமொழி’யாகிவிடாது.

நண்பர் குறிப்பிட்ட தமிழ்ப் பழமொழியை ‘Death is inevitable. No one is immortal, Death can come at anytime’ என்று மூன்று விதமாக மொழிபெயர்க்கலாம். ஆனால், ஈடான ஆங்கிலப் பழமொழி உண்டு. Death does not blow a trumpet (அதாவது இறப்பு முன்னறிவிப்பு செய்துவிட்டு வருவதில்லை).

இப்படித்தான் ஆங்கிலத்தில் சில பழமொழிகளும், தமிழில் சில பழமொழிகளும் உள்ளன. அவை இரண்டும் நேரடி மொழி பெயர்ப்புகளாக இருக்காது. ஆனால் அவற்றின் சாரம்சம் அப்படியே இரண்டிலும் இருக்கும். கீழே உள்ள ஆங்கிலப் பழமொழிகளின் அர்த்தத்தை அப்படியே அளிக்கும் தமிழ்ப் பழமொழிகளை எழுதி அனுப்புங்களேன். ஐந்து நாட்களுக்குள் அனுப்புங்கள். உங்கள் பெயர், ஊர் இரண்டையும் குறிப்பிடுங்கள். நீங்களாகவே ‘பழமொழிகளை’ உருவாக்கக் கூடாது.

1) When the cat is away, the mice will play.

2) A thousand pounds and a bottle of hay are just the same at doomsday.

3) The squeaky wheel gets the grease.

4) No man is an Island.

5) Heaven is the help of helpless.

6) As you sow, so shall you reap.


“So என்றால் எனவே. Because என்றால் ஏனென்றால். எனவே என்றாலும் ஏனென்றால் என்றாலும் ஒரே அர்த்தம்தான். அப்படியானால் She fell ill; so she went to the doctor என்றாலும் She fell ill because she went to the doctor என்றாலும் ஒரே அர்த்தமா?”

இப்படி ஒரு நண்பர் கேட்டிருக்கிறார். அதெப்படி? அந்த வாக்கியங்களுக்கு ஒரே அர்த்தம் அல்ல. நேரெதிர் அர்த்தம்! உடல் நலமில்லாததால் மருத்துவரிடம் போவதற்கும், மருத்துவரிடம் போனதனாலேயே உடல்நலம் குறைந்ததற்கும் வேறுபாடு இல்லையா?

நண்பரின் தர்க்கத்தில் தவறு இருக்கிறது. So, because ஆகிய வார்த்தைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்ததுதான் அவற்றின் அர்த்தம்! அதாவது cause, effect ஆகிய இரு (முரணான) விதங்களிலும் அவை பயன்படுத்தப்படலாம்.

She fell ill; so she went to the doctor எனும் வாக்கியம் உணர்த்தும் அதே அர்த்தம் because என்பதைப் பயன்படுத்தும்போதும் வர வேண்டுமென்றால் Because she fell ill, she went to the doctor என்றுதான் கூற வேண்டியிருக்கும்!

போட்டியில் கேட்டுவிட்டால்?

Doing the job by hand is very __________ compared with doing it by machine. It wastes lot of time.

a) Efficient

b) Efficiency

c) Inefficient

d) Unefficient

e) Delicate

மேலோட்டமாகப் பார்த்தால் delicate சரியென்று தோன்றுகிறது. அதாவது ஒரு கருவியைக் கொண்டு குறிப்பிட்ட வேலையைச் செய்வதைவிட கையால் அதைச் செய்வது நுட்பமானது. ஆனால் கொடுக்கப்பட்டுள்ள இரண்டாவது வாக்கியம் முதல் வாக்கியத்திலுள்ள தகவலை இழிவுபடுத்துகிறது. எனவே மீதி வார்த்தைகளைப் பார்ப்போம்.

கையால் அந்தச் செயலைச் செய்வது திறமையானதாக இருந்தால், அதனால் நேரம் வீணாகாது. எனவே efficient என்பது சரியல்ல.

Doing the job என்று தொடங்கும் இந்த வாக்கியத்தில் கோடிட்ட இடத்தில் ஒரு noun இடம் பெறாது. எனவே efficiency என்ற சொல் பொருந்தாது.

Unefficient என்று ஒரு வார்த்தையே கிடையாது.

Inefficient என்ற வார்த்தை முழுமையாகப் பொருந்துகிறது. Doing the job by hand is so inefficient compared with doing it by machine. It wastes lot of time.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)
குறள் இனிது: பேச்சில் கவனம் வேணும்..!

சோம.வீரப்பன்

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்

(குறள்: 712)

எனது நண்பர் ஒருவர் சென்னை வங்கி ஒன்றின் கிளை மேலாளர். வங்கியின் வளர்ச்சிக்காக ஓயாது உழைப்பவர். வைப்பு நிதி கேட்பதில், அவர் காலையில் நடைப் பயிற்சிக்கு வருபவர்களைக் கூட விட்டு வைப்பதில்லை!

ஆனால் அரசாங்கத்திலும் சரி, சமூக சேவை செய்யும் நிறுவனங்களிலும் சரி, உயரதிகாரிகளைப் பார்ப்பது அவருக்குக் கடினமாக இருந்தது. தன்னை அவர்கள் மதிப்பதில்லை, எனக் கவலைப்பட்ட அவர், தனது உயரதிகாரியான கோட்ட மேலாளரை அழைத்துச் சென்று வாடிக்கையாளர்களைப் பார்க்க முடிவு செய்தார்.

கோட்ட மேலாளரின் பெயரா? குமார் தான். இல்லைன்னா விட மாட்டீங்களே!

குமார் ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம்! வெள்ளை நிறமுடைய எந்த வெளி நாட்டவரைப் பார்த்தாலும் நம்மில் பலரும் அவரை ஆங்கிலேயர் என்றே நினைப்போம். ஆனால் குமாரோ இத்தாலியர், பிரெஞ்சுக்காரர், ஜெர்மானியர் என்று அவர்களைப் பார்த்த உடனேயே சொல்லி விடுவார்! ஆப்பிரிக்க ஐரோப்பிய வரலாறுகளைக் கூடக் கரைத்துக் குடித்தவர்!

நம்ம நண்பர் ஒரு பெரிய தொண்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரியைப் பார்க்க குமாருடன் சென்றார். குமார் வங்கியின் வளர்ச்சிக்கு அந்தத் தொண்டு நிறுவனங்கள் போன்றவர்களே காரணம் என்றார். நிறுவன அதிகாரி மகிழ்ந்து போனார். புதிதாய் 10 லட்சம் ரூபாய் போடுவதாகச் சொன்னார்.

தேநீர் வர நேரமானதால் பேச்சு தொடர்ந்தது. மேஜை மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய கொடியைக் கவனித்த குமார் அதைக் கையில் எடுத்தார்.

உடனே அந்த அதிகாரி தான் ஒரு ஆப்பிரிக்க நாட்டிற்கு கௌரவத் தூதர் என்றும் அந்த நாட்டின் கொடி இது என்றும் பெருமையாகக் கூறினார். குமார் உடனே இந்தக் கொடியின் வரலாறு தெரியுமா எனக் கேட்டார். அவர் தற்போதுள்ள அரசாங்கத்தில் உள்ளவர்கள் போராடிப் பெற்ற வெற்றியின் நினைவாகச் சில வர்ணங்கள் சேர்க்கப்பட்டதாகச் சொன்னார்.

ஆரம்பித்தது வினை! குமார் அந்தப் போராட்டமே நியாயமற்றது என்றார். அதற்கான பல விபரங்களையும் தேதி வாரியாகச் சொன்னார். அந்த அதிகாரியோ பாவம், தனக்குத் தெரிந்த சிலவற்றைச் சொல்லி அப்போதிருந்த அரசாங்கம் நல்லதே எனச் சொல்லி பேச்சை முடிக்கப் பார்த்தார். கிளை மேலாளர் தேநீர் வேண்டாம் ,நேரமாயிற்று கிளம்புவோம் எனச் சொல்லிப் பார்த்தார். ஆனால் குமாரோ தொடர்ந்து வாதாடினார்.

குமார் சொல்லிய விபரங்களும் கருத்தும் சரியானவையாகவே இருந்தாலும், போன வேலையை விட்டு விட்டு அவர் அந்தப் பஞ்சாயத்துக்குப் போனது சரியா? அவர்கள் திரும்பிய பின், முன்பிருந்த வைப்பு நிதிகளும் இல்லாமல் போனதுதான் பலன்!

அண்ணே, நமக்கு நிறைய விஷயங்கள் தெரிந்து இருந்தாலும், கேட்பவரின் மனப்பாங்கையும் நமது பேச்சின் குறிக்கோளையும் மனதில் கொண்டு பேச வேண்டும் இல்லையா?

சொல்லைப் பயன்படுத்துபவர், அதன் போக்கை அறிந்து, பேசும் பொழுதே கேட்போரின் நிலையைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பேச வேண்டுமென்கிறது குறள்!

- somaiah.veerappan@gmail.com

KAPV medical college gets 48 more PG seats

With this, the number of PG seats at the college will go up to 65 from 17

The Medical Council of India (MCI) has permitted the K.A.P. Viswanatham Government Medical College to offer 48 more Post Graduate seats from 2017-18. With this, the number of PG seats at the college will go up to 65 from 17.
Speaking to reporters, Marry Lilly, Dean of the college, said that it had got communication from the MCI and the State government to increase PG seats. It had enabled the college to increase the MS (General Surgery) seats from 4 to 16. Similarly, MD (General Medicine) would go up to 14 from 4. MD (Anaesthesia) would be increased to 13 from 4. MD (Paediatric) seats would be increased to 9 from 2. The number of PG seats in Obstetrics and Gynaecology (MS O&G) would go up to 9 from 2. The college has one PG seat in psychiatry. It would be increased to 4.
Stating that increase in PG seats would be a boon to aspiring students, she said the college had set up all needed infrastructure for admitting additional PG students. The nod was given based on a proposal sent to MCI recently. She said one more proposal had been sent to MCI for starting new PG courses in MS (Orthopaedics), MS (Ophthalmology), M.D (Anatomy), M.D (Microbiology) and M.D. (Pathology). It had been asked to permit 26 PG seats in the new courses.
The new main building, which was sanctioned by former Chief Minister Jayalalithaa had been brought to optimum utilisation. Nine super speciality departments such as cardiology, neurology, neuro surgery, nephrology, urology, paediatrics, plastic surgery and oncology had been functioning in the main building. Except nephrology, oncology and neuro surgery, all other departments had been functioning with required with full staff (a professor and two assistant professors). Other departments had one specialist. Steps had been initiated to fill vacancies.
Dr. Lilly added that to provide treatment to cancer patients, out-patients section had been functioning on Monday, Wednesday and Friday. The medical college hospital had facility to treat cancer patients with chemotherapy. The X-ray section had been digitised to enable doctors to view the image of patients on monitor within a few seconds of taking X-ray. Similarly, it had acquired new endoscope and colonoscopy to treat patients with stomach diseases.

Medical officers attached to PHCs boycott outpatient services

Protest scrapping of 50 % quota in PG courses for doctors serving in rural areas

Boycotting outpatient services, Medical Officers attached to Primary Health Centres (PHCs) in the district thronged the Collectorate here on Wednesday and protested against the scrapping of 50 % reserved quota in postgraduate (PG) courses for doctors, who served in rural areas from this academic year.
Medical services in rural areas were hit as more than 50 medical officers, who were members of the Tamil Nadu Medical Officers’ Association staged the protest, stating that they were aggrieved by the Madras High Court order, scrapping the quota and urged the State government to file an appeal against the order.
Dr. B. Manikandan, district general secretary and Dr. V. Ebinezer, organising secretary of the association who led the protest said the medical officers were motivated to serve in rural areas to seek admission to PG courses under the 50 % quota and the scrapping of the same would demoralise doctors to serve in rural areas.
There were times when most of the 57 PHCs in the district had no doctors and only after the State government introduced the quota system, doctors came forward to serve in the PHCs, they said.
Presently, more than 130 medical officers, including women doctors, were serving in the PHCs in the district, they said.
The High Court order came as a rude shock for them, they said.
Even after it became clear that they should take the National Eligibility-cum- Entrance Test (NEET) to seek admission to postgraduate courses, the government maintained that they would be entitled for the 50% quota, but the court order dashed their hopes, they said.
The doctors urged Collector S. Natarajan to forward their representation to the government for necessary action.

Imposing MCI regulations for PG course admissions unfair’

TNGDA says it will also stage a State-wide protest today

Tamil Nadu Government Doctors’ Association (TNGDA) has registered its concern over Madras High Court’s ruling on Tuesday upholding Medical Council of India’s (MCI) regulation in awarding incentive marks to service doctors working in remote or difficult areas in admission to postgraduate (PG) courses.
The ruling had nullified regulations already in force in Tamil Nadu for the award of incentive marks.
The TNGDA said while existing TN rules for incentive marks gave justified advantage to doctors working in hilly/remote or difficult areas, the MCI regulations provided disproportionate advantage to them by awarding up to 30% of their National Eligibility-cum-Entrance Test (NEET) score as incentive in preparation of merit list.
Stating that it would appeal against the High Court’s ruling, the TNGDA said it would also stage a State-wide protest on Thursday by boycotting outpatient consultation from 7 a.m. to 9.30 a.m.
K. Senthil, State president, TNGDA, said the present TN regulations for PG admissions gave one mark for every year of service in rural areas, two marks for every year of service in hilly and difficult/remote areas, limited to a maximum of 10 marks.
“The merit list will be drawn for 100 marks, of which 90 marks will be based on the candidates NEET score,” he said.
“The MCI regulations, however, gave 10% of the NEET marks as incentive to service doctors for every year of service in hilly/remote or difficult areas, limited to a maximum of 30% of the marks,” he pointed out, adding that such a huge incentive would unfairly boost the ranking of such candidates.
‘Incentive unnecessary’
Arguing that the MCI regulation was brought in by having the disparities in the availability of doctors in remote areas in many North and North-eastern States, Dr. Senthil said such an incentive was unnecessary in Tamil Nadu.
A PG aspirant working in a primary health centre in Madurai, speaking on anonymity, said imposing MCI regulations in Tamil Nadu would lead to increased demand and consequently corruption for getting posted to the few hospitals, classified as remote or difficult in the State.
Madras High Court, in its ruling, had pointed out that Tamil Nadu’s regulations, which were mentioned for this year’s prospectus for PG admissions, could not be enforced since Tamil Nadu Admission to Postgraduate Courses in Medicine and Dentistry Act, 2017, brought in to avoid NEET, had not received President of India’s assent.

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...