Friday, November 3, 2017


சித்தா டாக்டர்கள் கைது வேண்டாம் : கலெக்டர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
'சித்தா டாக்டர்களை, போலி டாக்டர்கள் என கைது செய்யக்கூடாது. அவர்கள், அலோபதி சிகிச்சை அளித்தால், துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கலாம்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அலோபதி மருத்துவத்தில், டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்களை குணப்படுத்த, மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, சித்த மருத்துவத்தில், நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு வழங்கப்படுகிறது.

நிலவேம்பு குடிநீர் : இந்நிலையில், 'இந்திய மருத்துவ முறை டாக்டர்கள், காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடாது; நோயாளிகளை, அலோபதி டாக்டர்களிடம் பரிந்துரைக்க வேண்டும்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை, ஜூலையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி, ஆயுஷ் டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 
இதுகுறித்து, ஆயுஷ் டாக்டர்கள் நல சங்க தலைவர், செந்தமிழ்செல்வன் கூறியதாவது:
இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் சட்டம், 1970ன், 17வது பிரிவில், சித்தா டக்டர்கள் அலோபதி மருத்துவம் அளிக்க அனுமதி உள்ளது. மேலும், டெங்கு போன்ற காய்ச்சலுக்கு, அலோபதியில் மருந்துகள் இல்லாத நிலையில், சித்தா தான் கைகொடுத்துள்ளது. சித்த மருத்துவமான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவற்றை, அலோபதி டாக்டர்கள் தருகின்றனர். அவர்களை, போலி டாக்டர்கள் என, கைது செய்யவில்லை. தமிழக அரசு, ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், எங்களுக்கு உரிமைகள் இருந்தும், எங்களை வஞ்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

போலி டாக்டர்கள் : சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெங்கு காய்ச்சலுக்கு, சித்தா டாக்டர்கள் உள்ளிட்ட, ஆயுஷ் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கலாம்; அவர்களை, போலி டாக்டர்கள் என, கைது செய்யக்கூடாது. அவர்கள், அலோபதி சிகிச்சை அளித்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சித்தா டாக்டர்கள், அலோபதி சிகிச்சை அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, அலட்சியமாக செயல்படும் பொறியாளர்களை, மின் வாரியம், 'டிஸ்மிஸ்' செய்ய முடிவு செய்துள்ளது.



புதிய மின் இணைப்புக்கு லஞ்சம், பணியில் அலட்சியம் உள்ளிட்ட, ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள், பொறியாளர்கள் மீது, மின் வாரியம், இடமாறுதல், 'சஸ்பெண்ட்' ஆகிய நடவடிக்கைகளை எடுக்கிறது. சஸ்பெண்ட் செய்யும் நபர், அரசியல் சிபாரிசுடன், சில தினங்களில், மீண்டும் பணியில் சேர்ந்து விடுகிறார். இதனால், நடவடிக்கை என்பது, கண்துடைப்பு நாடகமாக இருப்பதாக, மக்கள் கருதுகின்றனர்.

சென்னை, கொடுங்கையூரில், நேற்று முன்தினம் நடந்த மின் விபத்தில் சிக்கி,

இரு சிறுமியர் உயிரிழந்தது, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.அதற்கு காரணமான, மூன்று பொறியாளர்கள், ஐந்து ஊழியர்களை, மின் வாரியம் சஸ்பெண்ட் செய்தது. இதற்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்து, 'டிஸ்மிஸ்' செய்யும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
சென்னை, தலைமை செயலகத்தில், கொடுங்கையூர் மின் விபத்து தொடர்பாக, மின் துறை அமைச்சர், தங்கமணி மற்றும் மின் வாரிய அதிகாரிகளுடன், நேற்று, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில், மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, அலட்சியமாக செயல்படும் பொறியாளர்களை, 'டிஸ்மிஸ்' செய்ய, மின் வாரியத்திற்கு, அரசு தரப்பில் ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான், தவறுகள் குறையும். ஆனால், மின் வாரியத் தில், சஸ்பெண்ட் செய்யும் நபர், ஆட்சியாளர் களின் உதவியுடன், இரு தினங்களில்

வேலைக்கு வந்து விடுகிறார். அந்த விபரம், பலருக்கு தெரியாது.இதனால், வழக்கம்போல் பலர் அலட்சியமாக உள்ளனர். இதனால், வாரியத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்பட காரணமாகும் பொறியாளர், ஊழியர்கள் மீது, உச்சபட்ச தண்டனையாக, 'டிஸ்மிஸ்' செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்:

சென்னை, கொடுங்கையூரில், மழைநீரில் மின் வினியோக பெட்டி மூழ்கி இருந்தது. அதில் ஏற்பட்ட மின் கசிவால், மழைநீரில் மின்சாரம் பாய்ந்தது. இது தெரியாமல், மழைநீரில் நடந்து சென்ற, பாவனா மற்றும் யுவஸ்ரீ என்ற சிறுமியர், மின்சாரம் தாக்கி, பரிதாபமாக உயிரி ழந்தனர். இந்த சம்பவம் குறித்து, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், வழக்கறிஞர், ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையிட்டார்.

இதையடுத்து, 'அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது?' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. அதற்கு, சிறப்பு பிளீடர், ராஜகோபாலன், ''மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என, 8 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். பலியான சிறுமியரின் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்கப்படுகிறது,'' என்றார். 

அதைத் தொடர்ந்து, நீதிபதிகள், 'மனித உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை, அரசு உறுதி செய்ய வேண்டும். இழப்பீடு வழங்குவது உட்பட, சம்பவம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்' என, அரசுக்கு உத்தரவிட்டனர். விசாரணை, இன்றும் தொடர்கிறது. 

- நமது நிருபர் -

டாக்டரின் பரிந்துரை சீட்டு இன்றி மருந்து விற்றால் கடை உரிமம் ரத்து!


டாக்டர்,பரிந்துரை,சீட்டு,இல்லாமல்,மருந்து,விற்றால்,கடை உரிமம்,ரத்து
'டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இன்றி, மருந்து கொடுக்கும் கடைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. 

வட கிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதால், காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொற்றுநோய்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு, டாக்டர்களின் ஆலோசனை பெறாமல், பொதுமக்கள் தாமாக மருந்து, மாத்திரை வாங்கி உட்கொள்வதால், நோய் வீரியம் பெற்று, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 
உத்தரவு:

இந்நிலையில், 'டாக்டர்களின் அனுமதி சீட்டு இல்லாமல், மருந்துகள் விற்கக் கூடாது' என, சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டார். ஆனாலும், மருந்து கடைகளே, நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப, மருந்துகளை விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது.
நடவடிக்கை:

இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 52 ஆயிரம் மொத்த, சில்லரை மருந்து விற்பனை கடைகள் உள்ளன. டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இன்றி, மருந்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி, மருந்துகளை விற்பனை செய்யும் கடைகளின் அங்கீகாரத்தை, ரத்து செய்ய திட்டமிட்டு உள்ளோம். மருந்து கடைகளை கண்காணிக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

மத்திய அரசு ஊழியர்களின் கல்வி செலவு படி அதிகரிப்பு


புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படும் படியை உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின், குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஒரு குறிப்பிட்ட தொகை, சிறப்பு படியாக வழங்கப்படுகிறது. 
அரசு ஊழியர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அந்த தொகையை, 54 ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது; இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்த தொகையில், 54 ஆயிரம் ரூபாய் வரை திரும்ப பெற முடியும். 
மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் இருவரும், மத்திய அரசு ஊழியராக இருந்தால், அவர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே இந்த தொகை கோரி விண்ணப்பிக்க முடியும்.

சென்னை மழை பாதிப்பு: களத்தில் இறங்க தயாராகும் இளைஞர்கள்...!


Chennai,rain,சென்னை,மழை
சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் என பலர் களத்தில் இறங்க தயாராகி வருகின்றனர். 

சென்னையில் நேற்று மாலை தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் பெய்த கன மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு, வாகன நெரிசல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 

கடந்த 2015ம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது மக்களுக்கு உதவ நேரடியாக இளைஞர்களும், தன்னார்வலர்களும் களமிறங்கியது போல் தற்போது அது போன்ற சூழ்நிலையே நிலவுவதால் நேற்று இரவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகளை செய்ய இளைஞர்கள் களத்தில் இறங்கினர். பலர் தங்கள் சமூக வலைதளத்தில் தங்கள் வீடுகளில் இடம் இருப்பதாகவும், தேவைபடுவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் பதிவிட துவங்கினர். பலர் நிவாரண பணிகள்,பொருட்கள் சேகரிப்பது, விநியோகிப்பது குறித்தும் ஆலோசிக்க துவங்கினர். 

பல வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் சென்னை மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் நிவாரண உதவிகள் பெறப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நேற்று இரவு நடிகர் விஷால் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார். 

மேலும் இன்று பல இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர், என பலர் களத்தில் இறங்கி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: இன்று அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை

சென்னை: இன்று அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை
சென்னை: சென்னை, காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் இன்று(நவ.,3) விடுமுறை அளிக்க வருவாய் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கூறியிருப்பதாவது: வெள்ளத்தில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் தத்தளித்து வருகிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இன்று(நவ.,3) விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காவிட்டால் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் விடிய விடிய கொட்டிய கனமழை

சென்னை,கனமழை
சென்னை: சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டியது. பல பகுதிகளையும் வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தொடர்மழை:

வங்க கடலின் மத்திய மேற்கு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது காரணமாக கடந்த 29ம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை துவங்கிய மழை விடாமல் நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்து பெய்தது. விடிய விடிய கனமழை பெய்தததால் சென்னை முழுவதும் போக்குவரத்து அடியோடு முடங்கியது. வாகனங்கள் செல்ல முடியாதபடி பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. பல பகுதிகளிலும் வீட்டினுள் வெள்ள நீர் புகுந்தது.
அறிவுறுத்தல்:

தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறும்படி தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியது. பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்களும் அறிவிக்கப்பட்டன.
விடுமுறை:

தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை:

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இன்று(நவ.,3) விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், விடுமுறை அளிக்காவிட்டால் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் வருவாய் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு:

இன்று நடைபெறவிருந்த தேர்வுகளை அண்ணா பல்கலை., ஒத்திவைத்துள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை., நிர்வாகம் அறிவித்துள்ளது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...