Wednesday, May 16, 2018

விலை உயர்வால் செங்கலுக்கு மாற்றாக மானாமதுரையில் தயாரிக்கப்படும் பிளைஆஷ் கற்கள்



செங்கல் விலை உயர்வால், அதற்கு மாற்றாகவும், விலையை சமாளிக்கும் வகையிலும் மானாமதுரையில் தற்போது பிளைஆஷ் கற்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மே 14, 2018, 03:30 AM

மானாமதுரை,

மண்பானை தயாரிப்பதற்கு பெயர் பெற்ற நகரமாக மானாமதுரை திகழ்ந்து வருகிறது. இதுதவிர தற்போது கட்டுமான பணிகளுக்கும் முக்கியத்துவமாக இந்நகரம் திகழ்கிறது. இங்குள்ள செங்கல் சேம்பரில் செங்கலுக்கு மாற்றாக பிளைஆஷ் கற்கள் தயாரிப்பு தற்போது அதிகரித்துள்ளது. தற்போது கட்டுமான தொழிலில் செங்கல் விலை அதிகரித்து வருவதால் மக்கள் செங்கலுக்கு பதிலாக பிளைஆஷ் கற்களுக்கு மாறி வருகின்றனர். மானாமதுரையில் 30–க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தற்போது மணல் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டால் செங்கல் உற்பத்திக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் அதற்கு மாற்றாக உற்பத்தி செலவு குறைந்த பிளைஆஷ் கற்கள் தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த கற்கள் தயாரிப்பின் போது நிலக்கரி சாம்பல் மற்றும் கிரசர் பொடி போன்ற கழிவுகள் மூலப்பொருட்களாக சேர்க்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும், இந்த கற்களால் கட்டப்படும் கட்டிடங்கள் கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் கதகதப்புடனும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாறுகிறது.

செங்கலுடன் இந்த கல்லை ஒப்பிடும்போது அதன் விலை மற்றும் எடையும் குறைவு. இந்த கல்லை கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் போது அதற்கேற்ப சிமெண்டு தேவையும் மிக குறைவாக உள்ளது என்று கட்டிட வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் கற்களை இணைக்க மட்டுமே சிமெண்டு கலவை தேவை எனவும், மேல்பூச்சு தேவை இல்லை என்பதும் இதன் தனிச்சிறப்பாக உள்ளது. செங்கலைவிட பல்வேறு நல்ல அம்சங்கள் உள்ளதால் இந்த பிளைஆஷ் கற்களை கட்டுமான நிறுவனத்தினர் மற்றும் வீடு கட்டும் பொதுமக்கள் அதிக அளவு வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து பிளைஆஷ் கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி போஸ் என்பவர் கூறும்போது, கட்டுமான பணிகளுக்கு பிளைஆஷ் கல்லை பயன்படுத்தும்போது அதன் செலவு குறைவாக இருக்கும். இதில் கிரசர் பொடி, நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் மற்றும் சிமெண்டு ஆகிய மூலப்பொருட்கள் சேர்ப்பதால் பிளைஆஷ் கற்களை சுலபமாக கட்டிட பணிக்கு பயன்படுத்தலாம். செங்கல் உற்பத்திக்கு விறகு அதிக அளவில் தேவைப்படுவது போல் இந்த கற்கள் தயாரிப்பதற்கு விறகு தேவை இல்லை. இந்த கற்களை வெயிலில் உலர வைப்பதால் சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. தற்போது இந்த கல்லுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.
தலையங்கம்

ரெயில் பயணிகளுக்கு மருத்துவ சிகிச்சை





மக்களுக்கு போக்குவரத்து என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. இதில், ரெயில்வே மிகமுக்கிய பங்காற்றுகிறது.

மே 16 2018, 03:00
மக்களுக்கு போக்குவரத்து என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. இதில், ரெயில்வே மிகமுக்கிய பங்காற்றுகிறது. இந்தியா முழுவதும் 12 ஆயிரத்து 617 ரெயில்கள் தினமும் ஏறத்தாழ 2 கோடியே 20 லட்சம் பயணிகளை ஏற்றிக்கொண்டு, 7 ஆயிரத்து 216 ரெயில் நிலையங்கள் வழியாக சென்றுகொண்டிருக்கின்றன. ரெயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்துகொண்டிருந்தாலும், பயணத்தின்போது பயணிகளில் யாருக்காவது திடீர் உடல்நலக்குறைவு ஏற்படுகின்ற நேரத்தில் என்ன செய்வதென்று அவர்களும், அவர்களுடன் வரும் சக பயணிகளும் திக்குமுக்காடி போய்விடுகிறார்கள். விமானத்தில் ஏதாவது ஒரு பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் யாராவது டாக்டர்கள் பயணம் செய்கிறார்களா என்று ஒலிபெருக்கியில் கேட்டு ஏற்பாடு செய்வார்கள். பயணியின் உடல்நிலை மிகமோசமாக இருந்தால் அருகிலுள்ள விமானநிலையத்தில் இறக்கி மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார்கள்.


ஆனால் ரெயில்களை பொறுத்தமட்டில், பல பெட்டிகள் இருப்பதால் ஏதாவது ஒரு பெட்டியில் டாக்டர்கள் பயணம் செய்கிறார்களா? என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அதிலும் மாரடைப்பு போன்ற உடனடியாக சிகிச்சை தேவைப்படும் பயணிகளுக்கு மருத்துவ உதவிகள் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருப்பதால், பலநேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதுபோன்ற நிலைமைகளை தவிர்க்க, தற்போது ரெயிலில் பயணம் செய்யும் டிக்கெட் பரிசோதகர்கள் மருத்துவ உதவி தேவைப்படும் பயணிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை அவர்களுக்கு பொறுப்பு கடமையாக சுமத்தப்பட்டுள்ளது. யாராவது பயணிக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் குறிப்பாக மூச்சுத்திணறல், மாரடைப்பு போன்ற அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் டிக்கெட் பரிசோதகர்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது அடுத்த ரெயில்நிலைய ஸ்டே‌ஷன் மாஸ்டருக்கோ தகவல் தெரிவிக்கவேண்டும். ஒவ்வொரு ஸ்டே‌ஷன் மாஸ்டர்களும் அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளோடு தொடர்புகொண்டு உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவேண்டும். இதுதவிர, எல்லா எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முதலுதவிபெட்டி இருக்கவேண்டும். டிக்கெட் பரிசோதகர்களுக்கும் முதலுதவி அளிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 138 என்ற ஹெல்ப் லைனிலும் பயணிகள் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள் நிச்சயமாக வரவேற்கக்கூடியது. ஆனால், பல பயணிகளுக்கு இந்த வசதிகள் இருப்பதெல்லாம் தெரியாது என்பதால், ரெயில் பெட்டிகளிலும் இதை குறிப்பிடவேண்டும். முடிந்தால் ரெயில் டிக்கெட்களிலும் இந்த ஏற்பாடுகள் பற்றிய விவரங்கள் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு ரெயிலிலும் பயணம் செய்பவர்களில் டாக்டர்கள் யார்–யார், அவர்கள் எந்த பெட்டியில் பயணம் செய்கிறார்கள் என்ற விவரங்களை பதிவு விவரங்களில் இருந்து திரட்டி அனைத்து டிக்கெட் பரிசோதகர்களுக்கும் தெரிவித்தால் அவசர சிகிச்சைக்கு அவர்கள் உதவியையும் பெற வசதியாக இருக்கும். இதுபோல, எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்யும் யாராவது பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அது வழக்கமாக நிற்கும் அடுத்த ரெயில் நிலையம்வரை காத்திருக்காமல், இடையில் மருத்துவ வசதி உள்ள ஊர்களில் ரெயிலை நிறுத்தி பயணிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும்.
மாநில செய்திகள்

9 லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்–2 தேர்வு முடிவு இன்று வெளியீடு



9 லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்–2 தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. #ExamResult

மே 16, 2018, 06:53 AM

சென்னை,

தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். வழக்கம் போல மாணவிகள் தான் அதிகம். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர்.

அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. இன்று (புதன் கிழமை) பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.

முதல் முதலாக தேர்வு முடிவு வெளியிடும் தேதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பே பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், www.dge.tn.nic.in,www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம்.
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை 3 -ஆம் நாளாக தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் கவலை



பெட்ரோல், டீசல் விலை 3 ஆம் நாளாக தொடர்ந்து உயர்வடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். #PetrolPrice #DieselPrice

மே 16, 2018, 06:40 AM

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன்காரணமாக அவ்வப்போது பெட்ரோல்-டீசல் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் மே 13-ந்தேதி நள்ளிரவு வரை 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்ததாக கூறப்பட்டது.

இதை உறுதி செய்யும்வகையில் கர்நாடக தேர்தலுக்கு பின்னர், பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கர்நாடக தேர்தல் முடிவடைந்த நிலையில் 13-ந்தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதாக பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

அதாவது, 13-ந்தேதி நள்ளிரவுக்கு முன்னதாக பல நாட்களாக சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.77.39-ம், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.69.52-ம் ஆக இருந்தது. ஆனால், 13-ந்தேதி நள்ளிரவு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.22 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.61 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 0.27 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.69.79 ஆக நிர்ணயிக்கப்பட்டது.14-ந்தேதி நள்ளிரவு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.16 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.77 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 0.23 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.70.02 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில், 15-ஆம் தேதி நள்ளிரவு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.16 காசுகள் உயர்ந்து ரூ.77.93 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு 0.23 காசுகள் உயர்ந்து ரூ.70.25 ஆக விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது நாளாக உயர்வடைந்துள்ளது வாகன ஒட்டிகளை கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 50 காசுகளும் டீசல் விலை 69 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
தேசிய செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை ஆட்சியை பிடிக்க கடும் போட்டி



கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக பாரதீய ஜனதா கட்சி 104. மதசார்பற்ற ஜனதாதளம் ஆதரவுடன் காங்கிரஸ் அணி 115. ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. #KarnatakaElections2018 #Congress #BJP

மே 16, 2018, 05:45 AM
பெங்களூரு,

முதல்-மந்திரி சித்த ராமையா தலைமை யில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த கர்நாடக சட்ட சபையின் பதவிக் காலம் வருகிற 28-ந் தேதியுடன் முடிகிறது.

இதன் காரணமாக 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பெங்களூரு ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதியிலும், முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

எஞ்சிய 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

“காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்று பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருவதால், கர்நாடகத்தில் இந்த தேர்தல் மூலம் காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்பட்டு விடுமோ என்ற பரபரப்பு உருவானது.

ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு நடைபெற்ற முதல் தேர்தல், கர்நாடக சட்டசபை தேர்தல் என்பதால், அந்த கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

அனைத்துக்கும் மேலாக அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு, கர்நாடக சட்டசபை தேர்தல் முன்னோட்டமாக அமையும் என்பதால், இந்த தேர்தல் முடிவை நாடே ஆவலுடன் எதிர்பார்த்தது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி 38 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் ஒரு மணி நேரத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தன.

நேரம் ஆக ஆக, காங்கிரசை முந்திவிட்டு பா.ஜனதா ஏறுமுகத்தில் நடைபோடத் தொடங்கியது. 11 மணி அளவில் பெரும்பான்மைக்கு தேவையான 112 தொகுதிகளை தாண்டி பா.ஜனதா சுமார் 117 இடங்களில் முன்னிலை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் அக்கட்சி தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தொண்டர்கள் வெற்றியை கொண்டாட தொடங்கினர். சொந்த பலத்தில் ஆட்சி அமைப்போம் என்று அந்த கட்சியினர் அறிவித்தனர்.

இதனால் கர்நாடகத்தில் பா.ஜனதா தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் முன்னணி பெற்றிருந்தது.

ஆனால் நேரம் ஆக ஆக பா.ஜனதாவின் முன்னணி நிலவரம் குறையத் தொடங்கியது. இறுதியில் தொங்கு சட்டசபை அமைந்தது. 104 இடங்களைக் கைப்பற்றி, பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக வந்தது.

காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

முல்பாகல் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளரும், ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளரும், ஒரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றனர். முல்பாகல் தொகுதியில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் காங்கிரசின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தலைவர்களில், 2 தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சித்தராமையா தனது சொந்த ஊரான சாமுண்டீஸ்வரியில் 36 ஆயிரத்து 42 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

அதே நேரத்தில் பாதாமி தொகுதியில் அவர் 1,696 வாக்குகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றார்.

கர்நாடக பா.ஜனதா தலைவரும், முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருமான எடியூரப்பா சிகாரிப்புரா தொகுதியில் 35 ஆயிரத்து 394 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜனதா தளம் (எஸ்) தலைவர் குமாரசாமி, ராமநகர், சென்னபட்டணா ஆகிய 2 தொகுதியிலும் வெற்றி வாகை சூடினார். அவற்றில் ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்வார்.

எனவே 221 இடங்களில் மெஜாரிட்டி பலம் பெறுவதற்கு 111 இடங்கள் தேவை. இதில் 104 இடங்களை கைப்பற்றி உள்ள பாரதீய ஜனதா கட்சிக்கு தனிப்பெரும்பான்மை பெற 7 இடங்கள் தேவைப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ள ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே, கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைக்க ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி நேற்று அவசர அவசரமாக அறிவித்தது.

அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், பா.ஜனதா ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-மந்திரி பதவியை ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் முன்வந்தது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் கூறுகையில், “கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. இதுகுறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோருடன் நாங்கள் தொலைபேசி வாயிலாக பேசினோம். அவர்கள் இதை ஏற்றுக்கொண்டனர். இரு கட்சி தலைவர்களும் நேரடியாக சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார். காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் பெற்று உள்ள மொத்த இடங்கள் 115 ஆகும்.

அதே நேரத்தில் தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ள பா.ஜனதா ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது.

ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஆதரவை பெற பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர், ஜே.பி.நட்டா ஆகியோரை கர்நாடகத்திற்கு அனுப்பிவைத்தார்.

இதற்கு இடையே கவர்னர் வஜூபாய் வாலாவை நேற்று மாலை பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா சந்தித்து பேசினார். அப்போது தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ள நிலையில், தங்களைத்தான் முதலில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அவர் கவர்னரிடம் உரிமை கோரினார்.

இதே போன்று காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்று உள்ள ஜனதா தளம் (எஸ்) கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் குமாரசாமியும், கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூரமாக வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதாவும், அதே சமயம் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமையக்கூடாது என்ற நோக்கத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு வழங்க முன்வந்து இருப்பதால், புதிய ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா யாரை அழைப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்து உள்ளது.

Tuesday, May 15, 2018

உலகை ஆட்டுவிக்கும் புதிய பயங்கர நோய்

Published : 11 Apr 2015 16:23 IST

டாக்டர் ஆ. காட்சன்






நாகலாந்திலுள்ள திமாபூரில் பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட கைதியை, ஆயிரக்கணக்கானோர் அடங்கிய கும்பல் சிறைக்குள் புகுந்து வெளிக்கொண்டுவந்தது. அத்துடன் நிற்கவில்லை, அந்த நபரைப் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அடித்து இழுத்துக்கொண்டு சென்று கொன்ற சம்பவம் கலவரக் கும்பல் மனநிலைக்கு (Mob behaviour) மற்றுமொரு சிறந்த உதாரணம்.

சமீபத்தில் ஆப்கனில் குரானைச் சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு பெண், இது போன்ற கும்பலால்தான் கொன்று எரிக்கப்பட்டார். ஆச்சரியம் என்னவென்றால், இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் பலருக்குத் தங்களுக்குக் கிடைத்த தகவல்களின் நம்பகத்தன்மையோ அல்லது தங்களுடைய செயல்பாட்டின் முடிவு எப்படி இருக்கும் என்பதுகூடத் தெரியாமல் இருப்பதுதான்.

கலவரக் கும்பல்

கலவரக் கும்பல் மனநிலைக்கு மாறுவது என்பது உலகின் ஏதோவொரு மூலையில் நடக்கும் விஷயமல்ல. கல்லூரி மாணவர்கள் திடீரென நிர்வாகத்துக்கு எதிராகப் போராடுவது, மடிகணினி கிடைக்கவில்லை எனப் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிடுவது, பள்ளி மாணவியை ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்துவிட்டார் எனக் கூறிப் பெற்றோர் மற்றும் கட்சியினர் பள்ளியை முற்றுகையிடுவது, மர்மக் கொலைகாரன் எனக் கருதித் தெருவில் திரியும் மனநோயாளி தாக்கப்படுவது என நாள்தோறும் நமக்கு அருகிலேயே பல கலவரக் கும்பல் நடவடிக்கைகள் நடந்தேறி வருகின்றன.

இது ஆரோக்கியமான ஒன்றா அல்லது ஆரோக்கியமற்ற கலாசாரமா என்பது நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். அதுவும் சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்திகளின் அடிப்படையில் ஏற்படும் தகவல் பரிமாற்றங்கள் பல பயனுள்ளதாக இருந்தாலும், சில வேளைகளில் மேற்கூறிய ஆபத்தையும் உருவாக்க வாய்ப்புள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

சற்றுப் பழைய செய்தி என்றாலும் வரலாற்றில் மறக்க, மறைக்க இயலாத ஒரு நிகழ்வு அது. ஒரு தவறான செய்தி எப்படிப் பரவுகிறது, அது எப்படி ஒரு சாதாரண மனிதனையும் கலவரக் கும்பலில் ஒருவராக மாற்றுகிறது, அதன் விளைவுகள் என்ன என்பதற்கு, இதைவிட உகந்த உதாரணம் இருக்க முடியாது. அதுவும் கடித அளவில் மட்டுமே தகவல் தொடர்பு இருந்த காலத்தில் நடந்த சம்பவம். ஆனால், அது கற்றுக்கொடுத்த பாடம் மிகப் பெரியது

சாலெம் சூனியக் கலவரம்

அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் (தற்போதைய டென்வர்) பகுதியில் 1692-ம் ஆண்டு இளம் சிறுமிகள் சிலருக்குத் திடீரென்று ஆக்ரோஷம், வலிப்பு, பேய் பிடித்தது போலப் பேசுதல் போன்ற அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. அவர்களை மருத்துவர் பரிசோதித்தபோது அந்தச் சிறுமிகள், பில்லிசூனியத்தால்தான் தாங்கள் அப்படி மாறியதாகக் கூறியதுடன், அந்நகரத்திலுள்ள சில பெண்கள்தான் தங்களுக்குச் சூனியம் வைத்துவிட்டதாகவும் கூறினர்.

அங்கே ஆரம்பித்தது வினை. ஏற்கெனவே, மனநோய்களுக்குச் சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்படாத காலமாக இருந்ததாலும், மதரீதியாகப் பில்லி சூனியம் போன்ற நம்பிக்கைகளில் மக்கள் ஊறியிருந்ததாலும் இந்தச் செய்தி காட்டுத்தீ போல நகரம், சுற்றுப்புறத்தில் பரவ ஆரம்பித்தது.

இதைத் தொடர்ந்து சூனியம் வைத்ததாகச் சொல்லப்பட்ட சில பெண்களும், ஏற்கெனவே தனியாக ஆதரவின்றி வாழ்ந்துகொண்டிருந்த பல பெண்களும் சூனியக்காரிகளாகக் கருதப்பட்டு மக்களால் சிறை பிடிக்கப்பட்டனர். தாங்களும் இதனால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று சந்தேகத்துக்கு உட்பட்டவர்களைச் சூனியக்காரிகள் என்று தீர்மானித்து, சுமார் 200 பேரைச் சிறைபிடித்தனர்.

சாலெம் சூனியத் தீர்ப்பு (Salem witch trial)

நிலைமை மோசமாவதை உணர்ந்த அப்பகுதி ஆளுநர் வில்லியம் ஃபிலிப் ஒரு தனி நீதிமன்றம் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். ஒரு வருடத்துக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறைபிடிப்பு சம்பவங்களும், விசாரணையும் நடந்து வந்தன. இதில் உச்சகட்டக் கொடுமையாக இதை விசாரித்த நீதிபதிகளும் பில்லி சூனியத்தால்தான் அச்சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக முடிவு செய்து, பில்லிசூனியத்தில் ஈடுபட்டவர்கள் எனக் கூறப்பட்ட 20 பேரைத் தூக்கிலிட உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து கலவரக் கும்பல் அவர்களைப் பொது இடத்தில் தூக்கிலிட்டதுடன், தூக்கில் ஏற முரண்டுபிடித்த ஒரு பெண்ணை கல்லால் அடித்தும் கொன்று, தன் வெறியைத் தீர்த்துக்கொண்டது.

கலவரக் கும்பல்

மேற்கூறிய வரலாற்றுச் சம்பவம், சாதாரண மக்கள் கும்பல் எப்படி இத்தனைக் கொடூரக் கலவரக் கும்பலாக மாற வாய்ப்புள்ளது என்பதற்குச் சிறந்த உதாரணம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உருவாகும் இந்தக் கலவரக் கும்பலுக்கு மாப் (Mob) என்று பெயர். அதில் ஈடுபடுபவர்களின் மனநிலையில் அந்த நேரத்தில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்துச் சிக்மண்ட் ஃபிராய்ட், லெபான் உட்படப் பல உளவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

யார் இவர்கள்?

திடீரென்று உருவாகும் கலவரக் கும்பலுக்குத் தலைவர் யார் என்பது, அதில் பங்கேற்பவர்களுக்கே தெரியாது. இவர்கள் ஒரு குறிப்பிட்ட தலைமையின் கீழோ அல்லது குறிக்கோளுடனோ இயங்குவதைவிட வதந்திகளின் அடிப்படையிலும், உணர்ச்சிப் பெருக்கின் உந்துதலினாலுமே இயங்குகின்றனர். இக்கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவரை முன்பே அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும், ஒவ்வொருவரும் தங்கள் தனித்தன்மையை இழப்பதால், சாதாரணமாகச் சாதுவான குணம் கொண்டவர்கள்கூட, இந்தக் கலவரக் கும்பலில் சேரும்போது மூர்க்கமாக மாறிவிடுகின்றனர். நோய்க்கிருமிகள் பரவுவது போல ஒருவருடைய கோபமோ, வெறியோ மற்றவரைப் பற்றிக்கொள்கிறது. இவர்கள் படிப்பு ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, அறிவுத்திறன் ரீதியாகவோ வேறுபட்டிருந்தாலும் எண்ணம், செயல்பாடுகளில் ஒருமித்துக் கட்டுக்கடங்காமல் செயல்படுவது ஆச்சரியத்தின் உச்சகட்டம்.

உளவியல் காரணங்கள்

ஏதேனும் ஒரு தகவலைக் கேட்டு அதை உறுதிப்படுத்துவதைவிட, உணர்ச்சிப்பெருக்கின் உந்துதலுக்கு அதிக இடம் கொடுப்பது, அந்த விஷயத்தைப் பகுத்தாராயும் தர்க்க அறிவுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது ஆகிய இரண்டு மனநிலைகளின் விளைவே கட்டுக்கடங்காத கலவரக் கும்பல் உருவாக முக்கியக் காரணம்.

இந்தக் கலவரக் கும்பலில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கு உருவாகும் "எல்லோரும் ஈடுபடும் விஷயத்தில்தானே நாமும் ஈடுபடுகிறோம்" என்ற பொறுப்பற்ற தன்மையும், "இத்தனை பெரிய கூட்டத்தில் நாம் செய்வதை யார் கவனிக்கப் போகிறார்கள்" என்ற அநாமதேயமான எண்ணமும், கும்பல் கொடுக்கும் உற்சாகம் மற்றும் வலிமையும் மேலோங்கும்போது, சாதுவான ஒருவர்கூடப் பிறரைச் சாகடிக்கும் மனநிலைக்கு மாறிவிடுகிறார். இந்த மனநிலையில் இருப்பதால்தான் இதுபோன்ற கலவரக் கும்பலுக்குச் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் அளவுக்குத் துணிச்சலும், எதிர்ப்புகளைச் சமாளிக்கும் உத்வேகமும் ஏற்படுகிறது.

தடுக்க முடியமா?

பொதுவாக ஒரு கலவரக் கும்பல் என்பது ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த மூன்று வட்டங்களைப் போன்றது. உள்வட்டத்தில் தீவிரமான, ஆக்ரோஷமான நபர்களும், அதற்கு வெளிவட்டத்தில் சற்றுத் தீவிரம் குறைந்த, அவ்வப்போது எழுச்சியடையும் கூட்டமும், மூன்றாம் வட்டம் வெளிப் பகுதியில் வேடிக்கை பார்க்கும் அல்லது நிகழ்வுகளைப் பார்க்க விரும்பும், ஆனால் ஈடுபட விரும்பாத ஒரு கூட்டமும் இருக்கும்.

எந்தக் கலவரக் கும்பலும் இதற்கு விதிவிலக்கல்ல. இது போன்ற கும்பலான நடவடிக்கைகள் உருவாகும் முன் தடுப்பதுதான் சிறந்த, எளிய வழி. ஆனால், உருவாகிவிட்டால் கட்டுக்குள் கொண்டுவருவது எளிதல்ல. அது போன்ற நேரங்களில் இந்த மூன்றடுக்கு முறையை முழுமையாகப் புரிந்துகொண்ட பாதுகாப்புக் குழுவால் மட்டுமே குறைந்தபட்சத் தடுப்பு நடவடிக்கைகளாவது மேற்கொள்ள முடியும்.

நிரந்தர வலியாகும் உண்மைகள்

எல்லா ஆக்ரோஷமான கூட்டத்தினரின் அணுகுமுறையும் நியாயமானது என்று சொல்ல முடியாது. சாலெம் சூனியக் கலவரத் தீர்ப்பை ஆராய்ந்த ஒரு அறிவியல் நாளிதழ் 1976-ம் ஆண்டு ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் சாலெம் நகரச் சிறுமிகள் மனநிலை பாதிக்கப்பட்டதற்கு அவர்கள் உண்ட தானியத்தில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஒருவித பூஞ்சைக் காளானின் தாக்கம் இருந்ததே காரணம் எனக் குறிப்பிடுகிறது.

எனவே, கண்ணால் காண்பது, காதால் கேட்பதைவிட தீர விசாரித்தலே சரியானது என முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை. அதனால், எந்த அடிப்படையும் இல்லாமல் சமூகத்தின் மனதில் படிந்துபோய்விட்ட அழுக்கை நீக்குகிறோம் என்ற பெயரில், பொய்யான காரணங்களைச் சொல்லிக் கலவரத்தில் ஈடுபடுவது முட்டாள்தனமான அழிவுக்கே வழிவகுக்கும்.

கட்டுரையாளர், திருநெல்வேலி மனநல மருத்துவர் மற்றும் மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

Chennai girl is third in ISC examination

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN

Published May 15, 2018, 1:24 am IST


CISCE has released the results for ISC (class 12) and Indian Certificate for Secondary Education (ICSE- class 10) exams on Monday.

Simran Avinash Somalinga.

Chennai: Simran Avinash Somalinga from Sishya School in Chennai has secured all India third rank in Indian School Certificate (ISC) examinations conducted by Council for the Indian School Certificate Examinations (CISCE).

CISCE has released the results for ISC (class 12) and Indian Certificate for Secondary Education (ICSE- class 10) exams on Monday. Totally, 1,83,387 students appeared for ICSE and 80,880 students for ISC exams from India and abroad. Of these students, 98.51% have cleared the ICSE and 96.21% cleared the ISC exams this year.

In the region-wise results, the southern region has performed better compared to other regions. It has registered 99.69% pass percentage in ICSE exams and 98.38% in ISC exams.

Speaking to Deccan Chronicle, Simran said, “I wanted to pursue bio-engineering and biotechnology abroad. I have applied to some universities and awaiting the results.” She has secured 97 in English and Physics, 99 in Chemistry and 100 in Maths and Biology. She has also appeared in the NEET exam. Her father S.M. Avinash and mother Kapila Avinash are freelancing interior designers.

From Tamil Nadu, 1,278 students from 43 schools appeared for ISC exams and from 77 schools 3,280 students for ICSE exams. In ICSE, the state registered 99.79% pass percentage and in ISC 99.3%. At the state level, Pavan Siddharth E from Virudhunagar TSM Manickam Nadar and Janaki Ammal School secured the second rank with 98.75% and Sarah Christopher from IDA Scudder School in Vellore, Manan Goenka from Sishya School in Chennai, C.Sethukumar from St.Jude’s public school and Junior College in Kotagiri secured third rank with 98.5% marks.

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...