Saturday, August 4, 2018

மருத்துவ இடங்கள் நிரம்பின இன்று மாணவர் சேர்க்கை இல்லை

Added : ஆக 04, 2018 00:04

சென்னை:தமிழகத்தில், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பின. இதனால், இன்று நடைபெறுவதாக இருந்த மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசு, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பி, வகுப்புகள் நடைபெறுகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டில், 516 எம்.பி.பி.எஸ்., - 715 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங், ஜூலை, 30, 31ல் நடந்தது.
இந்த கவுன்சிலிங்கில் நிரம்பாத, 128 இடங்களுக்கான கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று நடந்தது. இதில், பகல், 12:30 மணிக்குள் அனைத்து இடங்களும் நிரம்பின. இதனால், இன்று நடைபெற இருந்த கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவ தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பு:நிர்வாக ஒதுக்கீட்டில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. இதனால், இன்று நடைபெற இருந்த கவுன்சிலிங் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் யாரும் வர வேண்டாம். இன்றைய கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டிருந்த மாணவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ராமாயண காவிய யாத்திரை ரயில் ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு

Added : ஆக 03, 2018 23:39 |


சென்னை: ராமஜென்ம பூமியான அயோத்திக்கு, ராமாயண காவிய யாத்திரை என்ற, 'ஏசி' சிறப்பு ரயிலை, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது. இந்த யாத்திரை ரயில், கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து, வரும், 31ல் புறப்பட்டு, மதுரை, திருச்சி, சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுகிறது.

இப்பயணத்தில், ராமபிரான் வனவாசம் தொடங்கிய, மத்திய பிரதேசத்தில் உள்ள சித்திரக்கூடம், அகலிகை சாபவிமோசனம் பெற்ற இடமான, உத்தர பிரதேசத்தில் உள்ள சிருங்கவெற்பூர் மற்றும், துளசிதாசர் ராமாயணம் இயற்றிய, துளசி மானசமந்திர் சென்று வரலாம்.

பீஹார் மாநிலத்தில் உள்ள பழமையான மிதிலை நகரான தர்பங்கா, சீதை பிறந்ததாக கருதப்படும் சீதாமார்ஹி, ராமர் பிறந்த உத்தர பிரதேசம், அயோத்தி, சீதை தங்கியிருந்த மஹாராஷ்டிரா மாநிலம் பஞ்சவடி, ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற, தமிழகத்தின் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிபட்டினம் உட்பட, பல புனித தலங்களுக்கு சென்று வரலாம்.

மொத்தம், 12 நாட்கள் சுற்றுலாவிற்கு, 'ஏசி' மூன்றடுக்கு பெட்டியில் பயணம் செய்ய, ஒருவருக்கு, 39 ஆயிரத்து, 350 ரூபாய் கட்டணம்.மேலும் தகவலுக்கு, சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40681, 98409 02919 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அண்ணா பல்கலையில் ஊழலுக்கு இடமில்லை: துணைவேந்தர் உறுதி

Added : ஆக 03, 2018 14:21 |


  சென்னை: அண்ணா பல்கலையில் ஊழலுக்கு இடமில்லை என துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார்.

சஸ்பெண்ட்

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளுக்கு தேர்வு நடத்தும் தேர்வுத் துறையில் விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு நடந்ததாக புகார்எழுந்தது. அதிக மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் தலா 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரி முதல்வர் விஜயகுமார் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, உமா, விஜயகுமார், அண்ணா பல்கலையில் கணிதத்துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் சிவக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 19 மாணவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் பெற்ற 19 மாணவர்களுக்கு சம்மன் அனுப்பி லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், துணைவேந்தர் சூரப்பா கூறுகையில், மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது; முறைகேட்டில்ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழலுக்கு இடமளிக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

பறிமுதல்

இது தொடர்பாக அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா கூறுகையில், அண்ணா பல்கலையில் ஊழலுக்கு இடமில்லை. விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு புகாரில் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரியாது. புகார் குறித்து விரிவான , வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் தொடர்புள்ளவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் முறைகேடு தொடர்பாக சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோப்பையும் கவனமாக பரிசீலனை செய்து வருவதாக கூறினார்.

நடவடிக்கை

அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், பேராசரியை உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிருபணமாகியுள்ளதாகவும், ஆய்வுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இந்தியாவில் முதன்முறையாக தினமலர் ஐ பேப்பர் அறிமுகம்

Updated : ஆக 03, 2018 15:51 | Added : ஆக 03, 2018 12:50 |



சென்னை: இந்தியாவில், முதல்முறையாக ஐ பேப்பர் ஆப்பை தினமலர் அறிமுகம் செய்துள்ளது என்பதை வாசகர்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். பத்திரிகை உலகில் தொழில்நுட்ப ரீதியில் தினமலர் எப்போதும் முதன்மை நிறுவனமாக சிறந்து விளங்கி வருகிறது. பல்வேறு தொழில்நுட்ப யுக்திகளை வாசகர்களுக்கு வழங்குவதில் தினமலர் எப்போதும் முதலிடத்தை பிடிக்கும்.

வீடியோவை நேரடியாக பார்க்கலாம்

ஆன்லைன் செய்திகளில் பெரும் புரட்சி செய்து வரும் தினமலர், புதிதாக ஐபேப்பர் எனும் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது. செய்திகளின் இடையே வீடியோவும், புகைப்பட தொகுப்புகளும் இடம்பெறும். இதனை நேரடியாக பார்த்து கொள்ளலாம்.

தினமலர் நாளிதழை ஆண்ட்ராய்டு போன் மூலம் எளிதில் முழுமையாக வாசிக்கும் வகையில் இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தினமலர் ஐ பேப்பர் படிக்க ipaper.dinamalar.com
அப்ளிக்கேஷனை பதிவிறக்கம் செய்ய கீழ்க்காணும் லிங்கை பயன்படுத்தலாம் : https://play.google.com/store/apps/details?id=com.ipaper.dinamalar

முதல்கட்டமாக ஆண்ட்ராய்டு போன்களுக்காக அறிமுகமாகியிருக்கும் இந்த அப்ளிகேஷன், விரைவில் ஐபோன், ஐபாட்களுக்காகவும் அறிமுகப் படுத்தப்படவுள்ளது.
மாநில செய்திகள்

பயணிகள் சேவையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த வைகை எக்ஸ்பிரஸ்





பயணிகள் சேவையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த வைகை எக்ஸ்பிரஸ்

பதிவு: ஆகஸ்ட் 04, 2018 04:45 AM

சென்னை,

பயணிகள் சேவையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சுதந்திர தினத்தன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறது. 1977-ம் ஆண்டிலேயே 105 கி.மீ. வேகத்தில் சென்ற அதிவிரைவு ரெயில் இதுவாகும்.

தமிழகத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்றைக்கு அதிகம் இயக்கப்பட்டு வந்தாலும், வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தனி சிறப்புகள் உண்டு. மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் இந்த ரெயில் 1977-ம் ஆண்டு சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது.

ரெயில் பெட்டிகள் அப்போது மஞ்சள் மற்றும் பச்சை வர்ணம் பூசப்பட்டிருந்தன. கனடா நாட்டில் தயாரிக்கப்பட்ட 1,850 குதிரைதிறன் கொண்ட ‘ஒய்.டி. எம்.4.ஏ’ என்ற டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த காலத்திலேயே மீட்டர்கேஜ் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்றது.

இந்த ரெயிலை இயக்குவதற்காகவே வேம்படையான், வெங்கடாசலம் என்ற 2 டிரைவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது இந்தியாவில் அதிவேகமாக (மணிக்கு 100 கி.மீ.) சென்ற ராஜஸ்தான்-டெல்லி ‘பிங்க் சிட்டி’ எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முடிந்ததும் மதுரை திரும்பிய அவர்கள் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை நீராவி என்ஜினில் சோதனை செய்தபோது வேகம் கிடைக்காததால் டீசல் என்ஜினை பொருத்தி மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் இயக்கினர். எனவே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் தனது முதல் பயணத்தை டீசல் என்ஜினுடனேயே தொடங்கியது. இதற்கான அனுமதியை ‘லோகோ’ இன்ஸ்பெக்டர் சேவியர் வழங்கினார்.

ரெயிலில் தலா 8 முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளும் இணைக்கப்பட்டிருந்தன. ரெயிலை வேம்படையான், வெங்கடாசலம் ஆகிய இருவரும் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் இயக்கி புதிய சாதனை படைத்தனர். அவர்களைப்போல பால்டேவிட் சாம் உள்பட 6 பேர் கொண்ட டிரைவர் குழுவினர் ஷிப்டு முறையில் அந்த ரெயிலை இயக்கினர். இன்றைக்கும் அதே 105 கி.மீ. வேகத்திலேயே இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட ஏ.சி. பெட்டி முதல் முறையாக 1984-ம் ஆண்டு இந்த ரெயிலில் தான் இணைக்கப்பட்டது. தெற்கு ரெயில்வேயில் நவீன ஜன்னல், கண்ணாடி ஜன்னல், டியூப்-லைட் போன்ற வசதிகளும் இந்த ரெயிலில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதிக திறன்கொண்ட முதல் என்ஜின் இந்த ரெயிலில் தான் பொருத்தப்பட்டது. 1980-ம் ஆண்டில் 2 குழல் கொண்டு ஒலியை எழுப்பும் ‘ஹாரன்’கள் இந்த ரெயிலில் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது.

வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை அப்போது இயக்கிய டிரைவர்களில் பால்டேவிட் சாம், ‘லோகோ’ இன்ஸ்பெக்டர் சேவியர் ஆகியோர் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்தநாள் ஞாபகங்கள் குறித்து 85 வயதை கடந்த பால்டேவிட் சாம் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

1970-ம் ஆண்டுகளில் தமிழக ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 70 முதல் 75 கி.மீ. தான் இருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் தான் வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த காலத்தில் ‘டோக்கன் சிக்னல்’ முறைதான் இருந்தது. டென்னிஸ் பேட் வடிவில் இருக்கும் டோக்கனை ஒரு ரெயில் நிலையத்தை ரெயில் கடக்கும்போது டிரைவர் தூக்கி எறிந்துவிட்டு, அந்த ரெயில் நிலையத்தில் வேறொரு டோக்கனை ஓடும் ரெயிலில் நின்றபடியே வாங்கிச்செல்ல வேண்டும்.

ஆனால் வேகமாக செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அது முடியாது என்பதால், இதற்காகவே என்ஜினில் நவீனகருவி பொருத்தப்பட்டிருக்கும். இன்னும் குறைந்த நேரத்திற்குள்ளாகவே மதுரை-சென்னை இடையே இந்த ரெயிலை இயக்க முடியும். அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் ரசிகர் சென்னையை சேர்ந்த அருண் பாண்டியன் கூறும்போது, “சேத்துப்பட்டு பாலத்தில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் அசுரவேகத்தில் புழுதியை கிளப்பிக்கொண்டு செல்வதை பார்க்கவே சந்தோஷமாக இருக்கும். இந்த ரெயிலின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் எனது நண்பரும், இந்த ரெயிலின் முதல் டிரைவர் குழுவில் உள்ளவருமான பால்டேவிட் சாமின் மகன் கிறிஸ்டோபருடன் இணைந்து மதுரை ரெயில் நிலையத்தில் ‘கேக்’ வெட்டி கொண்டாடுவது வழக்கம். அன்றைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் இருந்த மஞ்சள் - பச்சை நிறத்திலேயே மீண்டும் வர்ணம் பூச வேண்டும் என்பது எங்கள் ஆசை” என்றார்.
தலையங்கம்

முதிர்வயதில் பராமரிப்பு



முதுமை என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, அத்தனை உயிர்களுக்கும் துயர்தருவது. நெற்றியில் சுருக்கங்களும், உடலில் உபாதைகளும், நடையில் தளர்ச்சியும் ஏற்படும் நேரம்.

ஆகஸ்ட் 04 2018, 03:00

முதுமை என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, அத்தனை உயிர்களுக்கும் துயர்தருவது. நெற்றியில் சுருக்கங்களும், உடலில் உபாதைகளும், நடையில் தளர்ச்சியும் ஏற்படும் நேரம். இந்தநேரத்தில் ஆலமரம் கீழே விழுந்துவிடாமல் இருக்க விழுதுகள் தாங்குவது போல, முதிர்வயதில் அவர்களை பெற்ற பிள்ளைகள் காப்பாற்றுவது கடமையாகும். அரசு பணிகளில் ஓய்வுபெற்றவர்களுக்கு மாதாந்திர பென்‌ஷன் வரும், தங்கள் காலில் தாங்களே நிற்கமுடியும். தனியார் நிறுவனங்களில் மாதச்சம்பளம் பெறுபவர்களுக்கு ஓய்வுபெறும் நேரத்தில் பணிக்கொடை, ‘பிராவிடண்ட் பண்டு’ என்று பணம் வரும். ஆனால் அன்றாடங் காய்ச்சிகளுக்கு தினமும் சாப்பிட செலவழிப்பதற்குத் தான், தொட்டுக்கோ, துடைத்துக்கோ என்று பணம் இருக்குமேதவிர, சேமிப்புக்கு பணம் இருக்காது. பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்திருப்பார்கள். ஆனால் படித்தவர்களோ, படிக்காதவர்களோ, பணம் படைத்தவர்களோ–பாமரர்களோ தங்களை பெற்ற பெற்றோரை முதிர்வயதில் கவனிக்காத சூழ்நிலை பல இடங்களில் இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் நாம், மன வேதனையுடன் பார்த்து வருகிற ஒரு பிரச்சினைக்கு, அசாம் மாநிலம் தீர்வுகாண முயன்று இருக்கிறது. முதிர்வயதில், தம் பிள்ளைகளால் கைவிடப்பட்டு, ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் (வாடும்) பெரியவர்களுக்கு மன ஆறுதலைத் தருகிறவகையில், ‘பிரணாம்’ என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அசாம் மாநில அரசு ஊழியர்கள், தமது பெற்றோரிடம் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதற்கான வழிமுறைகள் சட்டம் 2017 (சுருக்கமாக ‘பிரணாம்’ சட்டம்) வருகிற அக்டோபர் 2–ந்தேதி காந்தி ஜெயந்தி முதல் அமலுக்கு வருகிறது. இப்போதைக்கு இந்தச் சட்டம், மாநில அரசு ஊழியர்களை மட்டுமே கட்டுப்படுத்தும். நாளடைவில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று, அசாம் அரசின், அதிகாரபூர்வ இணையதளம் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்ட பெற்றோர், தம் பிள்ளைகளுக்கு எதிராகப் புகார் அளிக்க இந்தச் சட்டம் வழி வகுக்கிறது. அதன் மீது, உரிய அலுவலரால் விசாரணை நடத்தப்படும். பிள்ளைகளின் மாத சம்பளத்தில், 10 முதல் 15 சதவீத சம்பளத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, பெற்றோர் அல்லது மாற்றுத் திறன் கொண்ட அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப் படும். இந்தியாவிலேயே முதன்முறையாக, அசாம் மாநிலத்தில்தான் இது அறிமுகம் ஆகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் புகார் தெரிவிக்கிற பெற்றோர், வேறு ஏதும் வருமானம் அல்லது ஓய்வூதியம் பெறுகிறவராக இருத்தல் கூடாது. அத்தகைய பெற்றோருக்கு இந்தச் சட்டம் பொருந்தாது.


அசாம் மாநிலத்தின் இந்தச் சட்டம் மூலம், சுமார் 4 லட்சம் பெற்றோர் உடனடியாகப் பலன் பெறுவார்கள். சுமார் 3 கோடி மக்கள் வாழும் அசாம் மாநிலத்திலேயே இத்தனை பேர் பயன் பெறுவார்கள் என்றால், 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட, பட்டி தொட்டிகளில்கூட, அரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில், மாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், அனைத்து மக்களும் தங்கள் பெற்றோரை கவனிக்கும்வகையில் இந்த சட்டம் கொண்டுவந்தால் பயன் பெறுகிறவர்கள் எத்தனை கோடி இருப்பார்கள்? ஆகவே மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிமுகப்படுத்துவதில், அமலாக்குவதில் இந்தியாவுக்கே வழி காட்டுகிற நிலையில் உள்ள தமிழகம், உடனடியாக ‘பிரணாம்’ சட்டத்தை தமிழ்நாட்டிலும் நிறைவேற்ற முடியுமா? என்று பரிசீலிக்க வேண்டும். பெற்றோர் இன்றி, அறிவேது? உயர்வேது? வாழ்வேது? வேர் இன்றி, தண்டு ஏது? கிளை ஏது? பழம்தான் ஏது..?

Friday, August 3, 2018

DVAC to examine students in revaluation marks scam

CHENNAI, AUGUST 03, 2018 00:00 IST



At the epicentre:Investigators perused at least 75 answer scripts of Anna University students. 

Will probe printing of marksheets disproportionate to need



The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) will examine engineering students who reportedly benefited in the alleged revaluation marks scandal that has rocked Anna University.

After perusing at least 75 answer scripts in which the marks awarded in the third revaluation were found to be grossly disproportionate to the original score, investigators have decided to record the statements of students in the sensational bribery case involving academicians of the varsity, including its former Controller of Examinations G.V. Uma, sources in the agency said.

Pattern studied

“We studied the pattern of pass or enhanced marks that were given to students in April/May 2017. There is clear suspicion since students who scored single-digit marks in the first valuation were awarded 10 times more in the third valuation. Thousands of answer scripts that were forged by the suspects to favour students were destroyed,” a DVAC official said. After establishing the prime facie offence, the DVAC registered a case of criminal misconduct, forgery, cheating and conspiracy against 10 professors/assistant professors.

No student named so far

“We have not named any student as accused so far. Preliminary investigation revealed that the students paid Rs. 10,000 for boosting marks in the revaluation process. Investigating officers will also examine evaluators who were debarred for not cooperating with the suspects.”

Another scam

Meanwhile, another scam relating to the printing of empty mark statements over and above the requirement has surfaced in the university. The Department of Higher Education has formally lodged a complaint with the DVAC since the alleged scam involves several crores of rupees. The University varies its grading system with each regulation and the marksheets reflect the variations.

The allegation is that a work order was placed to print empty marksheets much more than the actual requirement. “Instead of printing the marksheets for one academic year, the order was given to stock the empty statements for at least nine academic years. This would be a waste since the grading, format, etc is bound to change...this has caused a huge loss to the State exchequer. A formal complaint has been lodged with the DVAC for appropriate action,” a senior official in the Department of Higher Education said on Thursday.

A source at the university said there was no need to print in such huge quantities as regulations change and the university had shifted to choice-based credit system. The scam itself was exposed after a petition was received by the higher education department several months ago. When contacted, University Vice-Chancellor M.K. Surappa said, “If people are guilty, I will certainly take action against them.”

(Inputs from R. Sujatha)

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...