Sunday, August 5, 2018

கொடுமுடியில் 'பித்ரு தர்ப்பணம்' ஆடி அமாவாசையன்று சிறப்பு ஏற்பாடு

Added : ஆக 05, 2018 01:43

சேலம்:கொடுமுடி ஏமகண்டனுார் காவிரியாற்றங்கரையில், விசேஷமான, ஆக., 11, ஆடி அமாவாசை தினத்தில், பித்ரு தர்ப்பணம் செய்ய, காலைக்கதிர், 'ஆன்மிகக்கதிர்' வார இதழ் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூரியன் செல்லும் திசையை அடிப்படையாக வைத்து, தட்சிணாயனம், உத்திராயனம் என, பிரித்துள்ளனர். இதில், ஆடி மாதத்தில் துவங்கும் தட்சிணாயனம் மிக உன்னத காலமாக கருதப்படுகிறது.

விரதங்கள்

ஆடி வெள்ளி, அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை, ஆடித்தபசு, வியாச பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம், கருட பஞ்சமி, ஆண்டாள் அவதார தினம், ஹயக்கிரீவர் ஜெயந்தி, கோவர்த்தன விரதம், குமார சஷ்டி, வாராஹி விரதம் என விரதங்களும், பண்டிகைகளும் நிறைந்த மாதம்.

தேவர்களுடைய இரவு நேரத்தின் தொடக்க மாதம் என, ஆடியை புராணங்கள் சிறப்பிக்கின்றன. இம்மாதத்தில், பித்ரு லோகத்தில் வசிக்கும் நம் முன்னோர், பூலோகத்துக்கு வருவதாக நம்பப்படுகிறது.ஆவலோடு தங்களது சந்ததிகளை காணவரும் பித்ருக்களை, வணங்கி வழிபட்டால், எல்லா தோஷங்களும் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.

குறிப்பாக நதி, குளம், கடல் போன்ற புண்ணிய நீர்நிலைகளில் நீராடி திதி கொடுப்பது நல்லது. அதிலும், ஆடி அமாவாசையில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிக விசேஷமானது.இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, 'காலைக்கதிர்' ஆன்மிகக் கதிர் வார இதழ் சார்பில், ஆடி அமாவாசை தினமான, ஆக., 11ல், கொடுமுடி ஏமகண்டனுார் காவிரியாற்றங்கரையில், 'சமஷ்டி தர்ப்பணம்' நடக்கிறது.

கட்டணம்

இதில், கணபதி பூஜை, அமாவாசை சங்கல்பம், வருண கலச பூஜை, நவகிரக பூஜை, பித்ரு பூஜை, பித்ரு பிண்ட பூஜை, தர்ப்பணம், தீபாராதனை, சூரிய நமஸ்காரம், பித்ரு பிரசாத ஆசீர்வாதம், பித்ருக்களுக்கான சமஷ்டி ஹோமம் ஆகியவை நடக்கிறது. பங்கேற்க கட்டணம் உண்டு.ஆடி அமாவாசை தினந்தன்று, ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஏமகண்டனுார் காவிரியாற்றங்கரையில், காலை, 6:30 முதல், 7:00 மணி; 7:15 முதல், 7:45; 8:00 முதல், 8:30; 8:45 முதல், 9:15; 9:30 முதல், 10:00 மணி வரை என, ஐந்து பிரிவுகளாக சமஷ்டி ஹோமம் நடக்கிறது.

இதில், பங்கேற்க விறுவிறுப்பாக முன்பதிவு நடந்து வருகிறது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை. 95976 66400 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, ஆகஸ்ட், 8 மாலை, 5:00 மணிக்குள் முன் பதிவு செய்யலாம்.

னுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே... : இன்று உலக நண்பர்கள் தினம்

Added : ஆக 05, 2018 01:31



நமது வாழ்க்கையில் பல உறவுகள் இருந்தாலும், அனைவருக்கும் இருக்கும் ஒரே உறவு 'நண்பர்கள்'. மற்ற உறவுகள் இயற்கையாக வருவது. நண்பர்கள் மட்டுமே நாம் தேர்வுசெய்யக்கூடியது.

அனைவரது வாழ்க்கையிலும் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பல வேறுபாடுகளை கடந்தது நட்பு மட்டுமே. சொத்துகளை அதிகம் சேர்ப்பதை விட, நண்பர்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். நண்பன் இருந்தால், அந்த வானமும் நமக்கு தொடும் துாரம் தான். வாழ்க்கையின் இன்ப துன்பங்களை பகிர்ந்துகொள்ள அனைவருக்கும் நட்பு அவசியம்.

உருவான வரலாறு:

நண்பர்கள் தினம், பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. 1919ல் இருந்தே தென் அமெரிக்க நாடுகளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. 1935ல் அமெரிக்காவில் கடைபிடிக்கப்பட்டது. 1958ல் பராகுவே சார்பாக முதன்முறையாக உலக நண்பர்கள் தினம் உருவாக்கப்பட்டது. நட்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐ.நா., 2011 ஏப்., 27ம் தேதி ஆண்டுதோறும் ஜூலை 30, உலக நண்பர்கள் தினம் என அறிவித்தது. இருப்பினும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு (ஆக., 5) நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

எப்போதும் ஒன்றாக

இன்றைய வேகமான உலகில் குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை நண்பர்களுக்குள் தான் பகிர்ந்து கொள்ள முடிகிறது. மனதின் துன்பத்துக்கு மருந்தாக நண்பர்கள் விளங்குகின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும், புதிய நண்பர்களின் பழக்கம் கிடைக்கும். இப்படிப்பட்ட நண்பர்களை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் அலைபேசி, சமூக வலைதளம், ஆகியவற்றின் மூலம், அவர்களுடன் அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவேண்டும். புதிய நண்பர்களை ஏற்கும் நேரத்தில், பழைய நண்பர்களை மறந்துவிடக்கூடாது. நட்புக்குள் வரக்கூடாது பிரிவு. பிரிந்த நட்பை உயிர்ப்பிக்கும் நாளாகவும் இந்நாள் அமைகிறது. கருத்து வேற்றுமையினால் நண்பர்களுக்கு பிரிவு வருவது இயற்கைதான், ஆனால் அதை அடுத்த சில மணி நேரங்களில் உணர்ந்து தாமாக பேச முன்வர வேண்டும். நட்பு எந்த ஒரு மனிதனும் தனி தீவாக ஒதுங்கிவிடாமல் காப்பாற்றுகிறது.

அரசு ஊழியர்கள் மீது பழனிசாமி பாய்ச்சல் வலைதளங்களில் வரவேற்பும், எதிர்ப்பும் 



dinamalar 5.8.2018

அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசிய, 'ஆடியோ' பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும்பாலானோரிடம் வரவேற்பையும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் பழனிசாமி, சமீபத்தில் சேலத்தில் நடந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் போராட்டம் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் போன்றவற்றை, கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசியதாவது: எட்டு வழி சாலை அமைப்பதை எதிர்த்து, தி.மு.க., - பா.ம.க.,கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் குரல்கொடுக்கின்றனர். அரசியல் ஆதாயம் தேட, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சியினர், எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பர். இந்தியாவில் அதிக போராட்டம் நடந்த மாநிலம், தமிழகம். ஆட்சியை கலைக்க பார்த்தனர்; களங்கம் கற்பிக்க பார்த்தனர். அனைத்தையும் முறியடித்தோம். அரசு ஊழியர்களை குத்தி விட்டு, வேடிக்கை பார்த்தனர். நன்றாக சிந்தித்து பாருங்கள்...

ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், 82 ஆயிரம் ரூபாய், சம்பளம் வாங்குகிறார். நம்ம வீட்டு பையன், மண்டி போட்டு படித்து,எம்.இ., முடித்து, வேலையில் சேர்ந்தால், 10 ஆண்டு கள் தாண்டினால் கூட, 50 ஆயிரம் சம்பளத்தை தாண்டுவதில்லை. அவர்களுக்கு, 160 நாட்கள் விடுமுறை. எட்டாம் வகுப்பு வரை, 'பாஸ், பெயில்' கிடையாது. இவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டு போராடினால், யார் ஏற்றுக் கொள்வர்? கடந்த ஆண்டு மட்டும், 14 ஆயிரத்து, 719 கோடி ரூபாய், சம்பள உயர்வு வழங்கி உள்ளோம். இவ்வளவு பணத்தை வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துவது, எந்த வகையில் நியாயம்? அதிகமாக ஊதிய உயர்வு தரப்பட்டுள்ளது. 30 ஆயிரம் சம்பளம் வாங்கியவர், 60 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். என்னுடைய, பி.ஏ., 65 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தார்; தற்போது, 1.10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இன்னும் என்ன கொடுக்கிறது? எல்லா பணத்தையும் இவர்களுக்கு கொடுத்தால், மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும்; இதை நீங்கள் புரிந்து கொண்டு, மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். தி.மு.க., ஆட்சியிலிருந்த போது, போக்குவரத்து பணிமனைகளை அடமானம் வைத்தனர். அவர்கள் வைத்த கடன் சுமையை, நாம் சுமக்கிறோம். தற்போது, என்னை சந்தித்து, 'அரசுக்கு ஆலோசனை சொல்கிறேன்' எனக்கூறி, பெரிய புத்தகத்தை கொடுக்கின்றனர். அதை, அவர்கள் ஆட்சியில் செய்திருக்கலாமே! நமக்கு ஒன்றும் தெரியாதது போல, நமக்கு ஆலோசனை கூறுகின்றனர்.

நான் இரவு, 11:00 மணி வரை படிக்கிறேன். என் துறைகள் மட்டுமின்றி, மற்ற துறைகள் குறித்தும், தினமும் படிக்கிறேன். ஆட்சியை கவிழ்க்க வேண்டும்; கட்சியை உடைக்க வேண்டும் என, நினைக்கின்றனர். ஆ, ஊ என்றால், ஸ்டாலின், 'ராஜினாமா செய்' என்கிறார். இந்த நாற்காலி மீது, ஸ்டாலினுக்கு அதிக ஆசை; மக்கள் கொடுத்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு முதல்வர் பேசிய, 'ஆடியோ' பதிவு, சமூக வலைதளங்களில், வேகமாக பரவியது. இது, பொது மக்களிடம் வரவேற்பையும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -

ரேஷன் கார்டுகளில் பிழைஅலைக்கழிக்கப்படும் மக்கள்

Added : ஆக 04, 2018 23:49

பிழை திருத்தங்களுடன் உள்ள, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகளுக்கு மாற்றாக, புதிய கார்டுகள் வழங்க கோரி, உணவு வழங்கல் துறை அலுவலகங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மத்திய அரசின், 'ஆதார்' விபரங்களுடன், தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதுவரை, 1.96 கோடி குடும்பங்களுக்கு, அந்த கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பல கார்டுகளில், உறுப்பினர் பெயரில் தவறு, தவறான முகவரி, குடும்ப தலைவர் பெயரில் தவறு என, ஏராளமான பிழைகள் உள்ளன.

அவற்றை சரி செய்து, அரசு, 'இ - சேவை' மையங்களில், மாற்று கார்டுகள் பெற்று கொள்ளும் வசதி இருந்தது.இ - சேவை மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு நிர்ணயித்த, 30 ரூபாய் கட்டணத்துடன், கூடுதல் பணம் வசூலித்தனர்.

எனவே, அங்கு மாற்று கார்டுகள் வழங்குவதை, அரசு சமீபத்தில் நிறுத்தியது. இதனால், உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில், மாற்று கார்டு கேட்டு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஸ்மார்ட் கார்டில் உள்ள பிழைகளை, பொது வினியோக திட்ட இணையதளத்தில் சரி செய்தால், புதிதாக மாறி விடும்; ஏற்கனவே உள்ள கார்டை பயன்படுத்தி, பொருட்கள் வாங்குவதில் பிரச்னை இல்லை என்றும், மக்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்காத பலர், இ - சேவை மையங்களில், 30 ரூபாய் வாங்கி கொண்டு, மாற்று கார்டை வழங்கியது போல, உணவு வழங்கல் அலுவலகங்களிலும் வழங்கும்படி கேட்கின்றனர். ஒரு அலுவலகத்திற்கு, ஒரு நாளைக்கு, 50 மனுதாரர்கள் வருகின்றனர் என்றால், 45 பேர், மாற்று கார்டுக்காக வருகின்றனர்; பிரச்னைகளும் செய்கின்றனர். எனவே, மாற்று கார்டு வழங்க, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்




தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பதிவு: ஆகஸ்ட் 05, 2018 05:15 AM
சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக்கடை (ரேஷன் கடை) அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரேஷன் கடை ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டங் களை நடத்தி வருகிறோம்.

கடந்த பிப்ரவரி 24-ந் தேதி கூடிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டத்தின் தீர்மானத்தின் படி, மார்ச் 9-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்வது என்றும், அதற்கு முன்னதாக மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த தயாரிப்பு மண்டல மாநாடுகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 24-ந் தேதி வரை 10 மண்டல மாநாடுகள் நடைபெற்றது. விருகம்பாக்கம் மாநாட்டில், ஆகஸ்டு 6-ந் தேதி(நாளை) திங்கட்கிழமை வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், ரேஷன் கடை ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ள சம வேலைக்கு சம ஊதியம், ஒரே துறை, எடை குறைவு இல்லாமல் பொருட்கள் வழங்குதல், சேதாரக் கழிவு அனுமதித்தல், பணி வரன்முறை, மானியத் தொகை விடுவித்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் அனைவரும் 6-ந் தேதி(நாளை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். எனவே அன்று ரேஷன் கடைகள் திறக்கப்பட மாட்டாது.
மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள்: கோவை-சேலம் பயணிகள் ரெயில் 13 நாட்கள் ரத்து



 

 தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கோவை-சேலம் பயணிகள் ரெயில் 13 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

பதிவு: ஆகஸ்ட் 05, 2018 04:15 AM

சூரமங்கலம்,

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள தண்டவாள பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கோவையில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரெயில்(வண்டி எண் 66602) மற்றும் சேலத்தில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகள் ரெயில்(வண்டி எண் 66603) 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 13 நாட்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் நாளை மறுநாள் மற்றும் 8-ந் தேதிகளில் ஆழப்புலா-தன்பாத்(வண்டி எண் 13352) எக்ஸ்பிரஸ் ரெயில் கோவை, திருப்பூர் ரெயில் நிலையங்களிடையே 1¼ மணி நேரம் நின்று தாமதமாக செல்லும். எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு செல்லும்(வண்டி எண் 12678) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், கோவை-திருப்பூர் ரெயில் நிலையம் இடையே 40 நிமிடம் நின்று செல்லும்.

11-ந் தேதி கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 12676) கோவை- திருப்பூர் ரெயில் நிலையங்களிடையே 1 மணி நேரம் நின்று செல்லும். கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 12244) கோவை-திருப்பூர் ரெயில் நிலையங்களிடையே 40 நிமிடம் நின்று தாமதமாக செல்லும்.

12-ந் தேதி பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 22644) ஜோலார்பேட்டை-ஈரோடு ரெயில் நிலையங்களுக்கு இடையே 1¼ மணி நேரம் நின்று தாமதமாக செல்லும். இந்த பணிகள் காரணமாக 22-ந் தேதி வரை முக்கிய ரெயில்கள் குறிப்பிட்ட இடங்களில் நின்று செல்லும்.இந்த தகவலை சேலம் கோட்ட அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்

கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.806 ஆக உயர்வு





கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்னையில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.806 ஆக உயர்ந்து உள்ளது. வங்கிக்கணக்கில் மானியமாக ரூ.336 செலுத்தப்படும்.

பதிவு: ஆகஸ்ட் 05, 2018 05:00 AM

சென்னை,

சென்னையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.806 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு கடந்த சில மாதங்களை விட அதிகமாகும். 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் கடந்த ஜூலை மாதம் ரூ.770.50-க்கும், ஜூன் மாதம் ரூ.712.50-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த மாதம் (ஆகஸ்டு) கியாஸ் சிலிண்டர் விலை, ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், ரூ.35.50 உயர்ந்துள்ளது.

தற்போது சிலிண்டர் விலை ரூ.806 ஆக உள்ளது. இதில் ரூ.470 சிலிண்டர் விலையாகும். ரூ.336 மானியமாகும். இந்த தொகை சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட ஒரு சில நாட்களில் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு விடும்.

கொல்கத்தாவில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.817 ஆகவும், மும்பையில் ரூ.764 ஆகவும், டெல்லியில் ரூ.789 ஆகவும் உள்ளது.

8 மாதங்களில் இல்லாத அளவுக்கு...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரி மாதம்) கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.750.50 ஆக இருந்தது. கடந்த 8 மாதங்களில் சிலிண்டர் விலை ரூ.800-யை தொட்டதில்லை. தற்போது சிலிண்டர் விலை ரூ.800-யை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2017-ம் ஆண்டு நவம்பரில் ரூ.665.50 ஆகவும், டிசம்பர் இறுதியில் ரூ.750 ஆகவும் இருந்தது.

அதேநேரத்தில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர்கள் விலை கடந்த மாதம் போலவே அதே விலையில் (ரூ.1,424) நீடிக்கிறது.

கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்கள்

சென்னையில் வீடுகளில் சிலிண்டர்களை வினியோகம் செய்யும் ஏஜென்சி ஊழியர்கள் சிலிண்டர் விலையுடன் சேர்ந்து ரூ.30 முதல் ரூ.40 வரை கூடுதலாக பெறுகின்றனர். இது குறித்து பொது மக்கள் பல முறை ஏஜென்சிகளுக்கு புகார் தெரிவித்தாலும் ஏனோ அவர்கள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...