Sunday, August 5, 2018

Court orders renewal of hospital’s licence 

Staff Reporter 


CHENNAI, August 05, 2018 00:00 IST

Says FIR has only implicated the names of donors and recipients

The Madras High Court has directed the Principal Secretary (Health and Family Welfare Department) and the Directorate of Medical and Rural Health Services to renew M.R. Hospital’s licence to perform renal transplant within four weeks from the date of receipt of a copy of the order.

The hospital, following the suspension of its licence to perform renal transplantation on January 27, 2014, filed a writ petition seeking quashing of the order passed by the Directorate of Medical Services. It filed another writ petition seeking a direction to the State Appropriate Authority to process the renewal application for a period of five years.

Two of its patients, N. Chandra (recipient) and donor J. Saraswathi, and B. Jeyamani (recipient) and donor M. Devi, produced relevant documents stating that they were second degree relative donors. Since their documents were duly signed and attested by one of the relevant authorities, a notary public, the hospital forwarded it for clearance after conducting various tests and examination of medical fitness.

In its order dated July 25, the court observed that the FIR implicated only the names of the donors and recipients under Sections 420, 465, 468 and 471 of the IPC and the name of the petitioner hospital had not been shown.
செல்போனில் ரகசிய செயலியை பதிவேற்றி உறவுப் பெண்ணை கண்காணித்த இளைஞர்

Published : 02 Aug 2018 18:26 IST

ராமநாதபுரம்

 

கைதான தினேஷ்குமார், செல்போன் பேசும் பென் சித்தரிப்பு காட்சி

ராமநாதபுரத்தில் தனது உறவுக்கார பெண்ணின் செல்போனில் ரகசிய செயலியை பதிவேற்றி அதன் மூலம் உறவுப்பெண்ணை கண்காணித்த இளைஞர் அதை வைத்து மிரட்டும்போது போலீஸிடம் சிக்கி கம்பி எண்ணுகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள தாமரை ஊரணியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(30). எம்.சி.ஏ. பட்டதாரி. கம்ப்யூட்டரின், செல்போன்களின் தற்போதைய நிலைத்தகவல்கள் அத்தனையும் அத்துப்படி.

இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தனது சகோதரி முறையுள்ள உறவுப்பெண்ணை சந்தித்துள்ளார். அவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். மனைவிக்கு புது ஆன்டராய்டு போனை அனுப்பியுள்ளார். அதை எப்படி இயக்குவது என்பது தெரியாததால் தினேஷ்குமாரை பார்த்தவுடன் சகோதரன் என்ற எண்ணத்தில் இந்தா புதுப்போன் வந்துள்ளது, அதில் வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற முக்கியமான ஆப்ஸ் எல்லாம் ஏற்றிக்கொடு என்று கூறி போனை கொடுத்துள்ளார்.

போனை வாங்கிய தினேஷ்குமார் அதில் மற்ற ஆப்ஸ்களை ஏற்றும்போதே நைசாக செல்போனை கண்காணிக்கும் ஒரு செயலியையும் ஏற்றியுள்ளார். இதை அறியாத அவரது உறவுக்கார பெண் தனது போனை பயன்படுத்தியுள்ளார். ஆனால் தினேஷ்குமார் அந்த செயலி மூலம் அவரது உறவுப்பெண்ணின் அனைத்து நடவடிக்கைகளையும் ரெக்கார்ட் செய்துள்ளார்.

அவரது கணவருடன் பேசுவது, அவரது அந்தரங்க புகைப்படம், அவரது கணவருக்கு அனுப்பிய வீடியோக்கள் அனைத்தையும் தனது லேப்டாப்பில் ஏற்றிவிட்டு அதை வைத்து அந்த பெண்ணை வேறொரு நபர் போல் மிரட்டியுள்ளார். உனது அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்கள் என்னிடம் உள்ளது என்று சில புகைப்படங்களை அனுப்பி தனக்கு இணங்கும்படி மிரட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த அப்பெண் இதுகுறித்து தனது உறவினர்களிடம் கூற அவர்கள் கூறியபடி நடப்பதுபோல் நடிக்க சொல்லி அலோசனை கூறியுள்ளனர்.அவரும் அதே போல் நடக்க ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு தினேஷ் வரச்சொல்ல அங்கு அந்தப்பெண் போக பின்னாடியே ரக்சியமாக உறவினர்களும் செல்ல குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொல்லிய நபரை சந்தித்த அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அடப்பாவி அக்கா முறைவேண்டும், உன் புத்தி ஏன் இப்படி போக வேண்டும் என்று அடித்து தேவிபட்டினம் போலீஸில் ஒப்படைத்துள்ளனர். போலீஸார் தினேஷ்குமாரைப் பிடித்து தீவிரமாக விசாரித்தபோது அவர் திடுக்கிடும் பல தகவல்களை கூறியுள்ளார்.

தினேஷ்குமார் இதுபோன்று செல்போன் செயலிகளை பற்றி தெரிந்துக்கொண்டு அதை தனக்கு தெரிந்த பெண்கள் செல்போனில் அவர்களுக்கு தெரியாமல் ஏற்றிவிடுவார், பின்னர் அவர்களது அத்தனை புகைப்படங்கள், வீடியோக்களை அவரது லாப்டாப்பில் சேகரிப்பார். பின்னர் அவர்களை மிரட்டுவார், தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொள்வார்.

ஒரு கட்டத்தில் தான் செய்வது தவறு என்ற மனநிலையையும் கடந்து தனது உறவுப் பெண்களிடம் கூட அதே மனநிலையில் பார்க்க ஆரம்பித்துள்ளார். அவர்களையும் மிரட்டி தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். அவர் வீட்டில் லேப்டாப்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

தன்னுடைய மிரட்டலுக்கு இணங்காத பெண்களின் வீடியோக்களை ஆன்லைன் மூலம் வெளிநாடுகளில் உள்ள ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்யும் வேலையையும் செய்துள்ளார்.

தினேஷ்குமாரிடம் அதிகம் இருந்தது உறவினர்கள் தெரிந்த பெண்களின் காட்சிகள், அவர்களது அந்தரங்க உரையாடல்களே இருந்துள்ளது. இது ஒருவகை மன நோய் இவ்வித நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகம் கணிணி பயன்படுத்துபவர்களாக இருந்தால் அதில் வரும் ஆபாச பக்கங்களுக்கு இரையாகி அதேபோன்ற மன நிலையில் இருப்பார்கள். இவர்களுக்கு வித்யாசம் தெரியாது என்பதுபோல் அனைத்து பெண்களையும் நெருங்கிய உறவுப்பெண்களையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள்.

இது எவ்வகையான மன நோய், பெண்கள் இதிலிருந்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும், எப்படி இப்படிப்பட்ட நபர்களை கண்டறிவது என்பது குறித்த மனநல மருத்துவரின் குறிப்பை அடுத்த பதிவில் பார்ப்போம்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான்: தனியார் விடுதிக் காப்பாளர் புனிதா ஒப்புதல்

Published : 05 Aug 2018 07:57 IST

கோவை

கோவை கணபதி மாநகரைச் சேர்ந்த ஜெகநாதன்(48), பீளமேடு பாலரங்கநாதபுரம் ஜீவா வீதியில் தர்ஷனா என்ற பெயரில் மகளிர் தங்கும் விடுதி நடத்தி வந்தார். இங்கு பீளமேடு பகுதியைத் சேர்ந்த புனிதா (32) வார்டனாகப் பணியாற்றினார்.

இந்த விடுதியில் 150-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். கடந்த மாதம் ஜெகநாதனுக்குப் பிறந்த நாள் என்று கூறி, விடுதியில் இருந்த 5 மாணவிகளை, நட்சத்திர ஹோட்டலுக்கு வார்டன் புனிதா அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மது அருந்துமாறும், வாட்ஸ்-அப் மூலம் ஜெகநாதனிடம் பேசுமாறும் அந்த மாணவிகளை புனிதா வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. வாட்ஸ்-அப் மூலம் ஜாலி

யாகப் பேசுமாறும், அவர் மகிழ்ச்சியடையும் வகையில் செயல்பட்டால், விடுதிக் கட்டணம் கூட கட்ட வேண்டாமெனவும் புனிதா தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த மாணவிகள், தங்களது பெற்றோருக்கு தகவல் அறித்தனர். இதுதொடர்பாக பீளமேடு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் தேடப்பட்ட ஜெகநாதன், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில், கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கோவை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண். 6-ல் சரணடைந்த புனிதா, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை காவலில் எடுத்து விசாரித்த போலீஸார் கூறியது: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான் என புனிதா ஒப்புக் கொண்டுள்ளார். தான் சென்னையில் தலைமறைவாக இருந்ததாகவும், ஜெகநாதன் இறந்தை நாளிதழ்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டதாகவும் கூறினார் என்றனர். இதற்கிடையில், புனிதாவை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், வரும் 14-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அவரை மத்திய சிறையில் அடைத்தனர்.
பெற்றோர் நலன்: தமிழக அரசு - பின்பற்றுமா..? பின்தங்குமா...?

Published : 05 Aug 2018 07:34 IST

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
 





அவ்வப்போது, ஆங்காங்கே நாம் கண்கூடாக பார்த்து வரும் ஒரு சமூகப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண முயன்றுள்ளது அசாம் மாநிலம். இதற்காக ஒரு சட்டம் இயற்றி இருக்கிறது.

முதியவர்கள் முன் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினையே, ‘சம்பாத்தியம்' இல்லை. தான் சம்பாதித்ததை எல்லாம், பிள்ளைகளின் படிப்பு, ஆரோக்கியம், நல்வாழ்வுக்காகச் செலவு செய்து விட்டு, முதிய வயதில், வருமானத்துக்கு வழியின்றி, தமது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பிள்ளைகளை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெற்றோர்கள் ஏராளம்.

பிள்ளைகளும் ஆதரிக்காதபோது, தள்ளாத வயதில் ஒரு வேளை சாப்பாட்டுக்கும் மருத்துவ செலவுக்கும் என்னதான் செய்வார்கள்? யாரிடம் போய்க் கேட்பது? இந்தச் சிக்கலுக்கு விடை காணும் முயற்சிதான் அசாம் அரசின் ‘பிரணாம்' சட்டம். இரு கரம் கூப்பி, சற்றே குனிந்து, பெரியவர்களுக்கு ‘வணக்கம்' சொல்கிறோம் அல்லவா...? இதுதான் வட மொழியில், ‘பிரணாம்' எனப்படுகிறது. வரும் அக்டோபர் 2-ம் தேதி, மகாத்மா காந்தி பிறந்த நாள் முதல், இச்சட்டம் அமலுக்கு வருகிறது.

மாநில அரசு ஊழியர்களை மட்டுமே கட்டுப்படுத்தும் இந்தச் சட்டம் நாளடைவில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ஓய்வூதியம் அல்லது வருமானம் இல்லாத பெற்றோர், தம் பிள்ளை பணிபுரியும் துறையின் உள்ளூர் தலைமை அதிகாரி முன்பு கோரிக்கை வைக்க இந்தச் சட்டம் வழி வகுக்கிறது.

அவர், இரு பக்க நியாயங்களையும் கேட்டறிந்து, இறுதி முடிவு எடுப்பார். பெற்றோரின் கோரிக்கை நியாயமானதாக இருப்பின், பிள்ளைகளின் மாத சம்பளத்தில், 10 முதல் 15 சதவீதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, பெற்றோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

நாட்டிலேயே முதன் முறையாக அசாம் மாநிலத்தில்தான் இது அறிமுகம் ஆகிறது. இந்த நோக்கத்துக்காக, ‘பிரணாம் ஆணையம்' அமைக்கப்படும். கூடுதல் முதன்மைச் செயலாளர்நிலையில் உள்ள ஒருவர், முதன்மை ஆணையராக நியமிக்கப்படுவார். இவருடன் சமூக சேவகர்கள் (அ) ஆணையர் நிலையில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் இரண்டு பேரும், ஆணையர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்த ஆணையம், ஒரு ‘குவாஸி’ நீதிமன்றம் போன்றது. அதாவது, நீதிமன்ற அதிகாரங்களுடன், முழுவதும் தன்னிச்சையாக செயல்படும் நிர்வாக அமைப்பு.

பிள்ளைகள் பணிபுரியும் அலுவலகத்தில், சம்பளம் வழங்கும் அலுவலரிடம் மனு கொடுத்தால் போதுமானது. ஒரு மாதத்துக்குள் அவர் முடிவு எடுக்க வேண்டும். தவறினால், அல்லது சரியான நிவாரணம் கிடைக்கவில்லை என்று கருதினால், அந்தத் துறையின் இயக்குநரிடம் முறையிடலாம். இதன் மீது அவர், 2 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.

இங்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றால், ‘பிரணாம்' ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யலாம். மூன்று மாதங்களுக்குள் ஆணையம், இறுதி முடிவை எடுத்தாக வேண்டும். இந்தச் சட்டத்தின் மூலம், சுமார் 4 லட்சம் பேர் (பெற்றோர்) உடனடியாக பலன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் (சட்டம்) காரணமாக, அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை எதுவும் இல்லை. சமூக நலத் திட்டங்களை வடிவமைப்போர் இதுபோலதான் சிந்திக்க வேண்டும். தனி நபர்கள் ஆற்ற வேண்டிய கடமைக்கு அவர்களையே பொறுப்பாக்குவதுதான் ஆரோக்கியமான வழிமுறை. இதை தமிழக அரசும் ஏன் இதனைப் பின்பற்றக் கூடாது? என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. மிக அதிக எண்ணிக்கையில் அரசு ஊழியர்களைக் கொண்ட மாநிலம் தமிழகம். அதேபோல, பிள்ளைகளால் கைவிடப்படும் முதியோரின் எண்ணிக்கையும் மிகுந்துள்ள மாநிலம்.

எந்தவொரு சமூக நலத் திட்டமாக இருந்தாலும், அதை முன்னெடுப்பதில், முனைப்புடன் செயல்படுத்துவதில், தமிழ்நாடு எப்போதுமே முதலிடம் வகித்து வருகிறது. ஆகவே, தமிழக அரசும் உடனடியாக, ‘பிரணாம்' சட்டத்தின் தமிழ் வடிவத்தைக் கொண்டு வந்து, முதியோர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி ஏற்றலாம்.

கல்வித் துறையில் பல நல்ல முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. முதியோர் நலன் சார்ந்த சட்டத்துக்கும் முன்னுரிமை தந்து நிறைவேற்றினால் சிறப்பாக இருக்கும். ஆதரவற்ற முதியோருக்கு உதவும் இலவசத் திட்டம் ஏற்கெனவே இருக்கிறது. ஆனால் போதாது. காரணம், பல முதியவர்களின் தன்மானம், இலவச திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுக்கிறது.

‘பிரணாம்' சட்டம், இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. தாம் வளர்த்த, தாம் மிகவும் நேசிக்கிற, பிள்ளைகளிடம் இருந்தே, வருமானம் பெற்றுத் தருகிறது; அவர்களின் கடமையை, ஒரு வகையில், சட்ட உரிமை ஆக்குகிறது. இதுதான் இந்தச் சட்டத்தின் ஆகப் பெரிய வெற்றி. தொழில் துறையில் நன்கு முன்னேறிய, தனியார் துறையில் கணிசமானோர் பணிபுரியும் மாநிலமாக நாம் உள்ளதால், அசாம் மாநிலம் போல் அல்லாது, தொடக்க நிலையிலேயே, பொதுத்துறை, தனியார் ஊழியர்களையும் உள்ளடக்கியதாக தமிழகச் சட்டம் அமையலாம்.
அண்ணா பல்கலை விடைத்தாள் மோசடி: முறைகேட்டில் மிக மோசமான விஷயம் இதுதான்!

By DIN | Published on : 04th August 2018 05:49 PM |




சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்த முறைகேட்டை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணையில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் கடந்த 2017 ஏப்ரல், மே மாதங்களில் பருவத் தேர்வில், 3.02 லட்சம் பேர் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். இவர்களில் 73,733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 16,636 பேருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்திருந்தது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார்: இந்நிலையில் மறுமதிப்பீடு தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் வரத் தொடங்கின.

அதிக மதிப்பெண் பெற தகுதியிருந்தும், குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தகுதி இல்லாத மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்றிருப்பது குறித்தும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் இருந்து இப்புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

இதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், மறுமதிப்பீட்டில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் விடைத் தாள்களை மீண்டும் ஆய்வுக்குட்படுத்தினர். அதில் அதிக மதிப்பெண்கள் பெற தகுதி இருந்தும் குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதில் முறைகேடு நடந்தது ஏனோ தனோவென்று இல்லாமல் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

அதாவது ஒரு மாணவன் தேர்வில் 10 மதிப்பெண்கள்தான் எடுத்துள்ளான். அதனை 99 மதிப்பெண்களாக எப்படி மாற்ற முடியும். ஒரே சுற்றில் மாற்ற முடியாதல்லவா?

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு விதிகளில், மறு மதிப்பீட்டில் ஒரு விடைத்தாளுக்கு 15 மதிப்பெண்களுக்கு மேல் அதிக மதிப்பெண் வழங்கப்பட்டால் இரண்டாவது முறையாக மறுமதிப்பீடு செய்ய வேண்டும். இரண்டாவது முறையிலும் 15 மதிப்பெண்களுக்குக் கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டால், அது இரண்டிலும் எது அதிக மதிப்பெண்ணோ அதையே வழங்க வேண்டும் என்று உள்ளது.

அதன்படி, ஒரு 10 மதிப்பெண் எடுத்த மாணவனின் விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்குச் செல்லும் போது அதனை முதல் முறை மறுமதிப்பீடு செய்பவர் 50 மதிப்பெண் வழங்குவார். விதிப்படி இந்த விடைத்தாள் 2வது முறை மறு மதிப்பீட்டுக்குச் செல்ல வேண்டும். அதன்படி 2வது முறை மறுமதிப்பீடு செய்பவர் 99 மதிப்பெண்களை வழங்குவார். விதிப்படி அந்த விடைத்தாளுக்கு 99 மதிப்பெண்கள் கிடைக்கும். இந்த முறையில் மதிப்பெண் வழங்கப்படுவதால் யாராலும் அவ்வளவு எளிதில் முறைகேட்டைக் கண்டுபிடிக்க முடியாது என்று பல்கலையின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

இதில் மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், அந்த விடைத்தாளை முதல் முறை திருத்தியவர் (10 மதிப்பெண் அளித்தவர்), விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவார். எந்த குற்றமும் செய்யாத ஒருநபர், இந்த முறைகேட்டால் குற்றவாளியாக்கப்படுவார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு அவர்களில் முதல்கட்டமாக 100 பேரின் விடைத்தாள்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதில் தகுதியற்ற விடைகளுக்கும் அதிக மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் உறுதி செய்தனர்.

10 பேர் மீது வழக்கு: அதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், முறைகேடு நடைபெறும்போது அண்ணா பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த ஜி.வி.உமா, மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த பேராசிரியர் பி.விஜயகுமார், உதவிப் பேராசிரியர் ஆர்.சிவக்குமார் உள்பட 10 பேர் மீது 8 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் ஒரு விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் லஞ்சமாக பெற்றுக் கொண்டு, கூடுதல் மதிப்பெண் வழங்கியிருப்பது தெரியவந்தது.

வீடுகள், அலுவலகங்களில் சோதனை: அதைத் தொடர்ந்து வழக்குத் தொடர்பான சோதனையில், அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள உமாவின் அறை, கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீடு, உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் உமா, வீட்டில் இருந்து சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தெரிவித்தனர்.

லஞ்சம் கொடுத்த மாணவர்களிடம் விசாரணை: விடைத்தாள் மோசடி தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகளை தயார் செய்யும் வகையில் மறுமதிப்பீட்டின்போது லஞ்சம் கொடுத்து அதிக மதிப்பெண் பெற்றதாக முதல்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட 100 மாணவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களில் 50 பேரிடம் தற்போது விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணை மேலும் சில நாள்கள் நீடிக்கும் எனத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து மறுமதிப்பீடு பணியில் ஈடுபட்ட பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
ஆக. 7 -இல் பலத்த மழைக்கு வாய்ப்பு

By DIN | Published on : 05th August 2018 02:05 AM |

கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மாலை மற்றும் இரவில் இடி, மின்னல் ஏற்படக் கூடும்.

மேற்கு திசை காற்று வலுவடையும் என்பதால், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மன்னார்குடியில் 50 மி.மீ. : தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 50 மி.மீ. மழை பதிவானது. காஞ்சிபுரம் மாவட்டம் சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 40 மி.மீ., தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தலா 30 மி.மீ. மழை பதிவானது என்றார் அவர்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 25 கி.மீ முதல் 45 கி.மீ. வேகத்தில் பலமான காற்று வீசக் கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகளில் தென் மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 25-35 கி.மீ. முதல் 45-55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடலூரில் 101டிகிரி: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. அதிகபட்சமாக, கடலூரில் 101 டிகிரி வெப்பநிலை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், வேலூரில் தலா 99 டிகிரியும், பரங்கிபேட்டை, திருச்சிராப்பள்ளியில் தலா 98 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.
பைலட் அறைக்குள் நுழைய முயன்ற பயணி

Added : ஆக 05, 2018 03:00

புதுடில்லி:இத்தாலியில் இருந்து புறப்பட்ட விமானத்தில், ஒரு பயணி, பைலட் அறைக்குள் நுழைய முயன்றதால், 'ஏர் - இந்தியா' விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் இருந்து, ௨ல், டில்லிக்கு, ௨௫௦ பயணியருடன், 'ஏர் - இந்தியா' விமானம் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், குர்பீரீத் சிங் என்ற பயணி, பைலட் அறைக்குள் நுழைய முயன்றார்.இதனால், விமானத்துக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது; கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து, விமானம் மீண்டும் மிலன் நகரில் தரை இறக்கப்பட்டது.

மிலன் போலீசாரிடம், குர்பிரீத் சிங் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும், அவர் விமானத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டது. பின், மூன்று மணி நேரம் தாமதமாக, அந்த விமானம், டில்லிக்கு புறப்பட்டது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...