Tuesday, November 6, 2018

மாவட்ட செய்திகள்

ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகைக்கடை ஊழியரிடம் ரூ.30 லட்சம் திருட்டு; வாலிபர் கைது






ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகைக்கடை ஊழியரிடம் ரூ.30 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: நவம்பர் 04, 2018 04:15 AM

ராஜபாளையம்,

நெல்லை மாவட்டம் தென்காசி மெயின்ரோட்டில் உள்ள நகைக்கடையில் ஊழியராக வேலை பார்ப்பவர் பாலசுப்பிரமணியன் (வயது 48). இவர் சென்னை சென்று நகை வாங்குவதற்காக கடையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார். இதற்காக ரூ.30 லட்சத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அரசு பஸ்சில் புறப்பட்டார். தென்காசியில் இருந்து சென்னை செல்லும் அந்த பஸ், நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1½ மணிக்கு ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் வந்தது.

அங்கு பஸ் நின்றதும் பாலசுப்பிரமணியன் கீழே இறங்கினார். அப்போது பணப்பையை பஸ்சுக்குள்ளேயே வைத்திருந்தார். சிறிதுநேரத்தில் அந்த பையை ஒரு வாலிபர் நைசாக திருடிவிட்டு பஸ்சில் இருந்து இறங்கினார். இதை கவனித்து விட்ட பாலசுப்பிரமணியன், திருடன், திருடன் என கூச்சல் போட்டார். இதைகேட்டதும் பணப்பையுடன் அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். ஆனால் அதற்குள் அங்கு நின்ற சக பயணிகள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் சேக் முகமது (35) என்பதும், கடையநல்லூர் அருகே உள்ள இடைக்காலை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவருடன் ஹைதர் அலி(40) என்பவரும் வந்துள்ளார். 2 பேரும் சேர்ந்து பாலசுப்பிரமணியன் பயணம் செய்த பஸ்சில் அவரது அருகிலேயே இருந்து பயணித்துள்ளனர்.

தகுந்த நேரம் பார்த்து பணப்பையை அபேஸ் செய்ய திட்டமிட்டு ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் கீழே இறங்கிறதும் பணப்பையை எடுத்துள்ளனர். ஆனால் சேக் முகமது பிடிபட்டு விட்டார். ஹைதர் அலி தப்பியோடிவிட்டார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஹைதர் அலியை வலைவீசி தேடி வருகின்றனர்.
மாவட்ட செய்திகள்

கோட்ட நத்தம் பஞ்சாயத்து ஊழியரின்: ஊதிய நிலுவைத்தொகை வழங்க ஐகோர்ட்டு உத்தரவு



விருதுநகர் யூனியன் கோட்டநத்தம் பஞ்சாயத்து ஊழியரின் பணியை வரன்முறை படுத்துவதுடன் ஊதிய நிலுவையை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பதிவு: நவம்பர் 06, 2018 03:45 AM

விருதுநகர்,

விருதுநகர் யூனியன் கோட்டநத்தம் பஞ்சாயத்தில் கண்ணன் என்பவர் மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு அப்போது இருந்த பஞ்சாயத்து குழுவினரால் நியமனம் பெற்றுள்ளார். பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு பஞ்சாயத்து நிர்வாகம் இவருடைய மாத ஊதியத்தை ரூ.2 ஆயிரமாக நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்றிஉள்ளது. அதன் பின்னர் இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாத ஊதியம் மற்றும் இதர பலன்கள் வழங்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து கோட்டநத்தம் பஞ்சாயத்து மேல்நிலை குடிநீர் தொட்டி, மோட்டார் இயக்கும் பணி மேற்கொண்டு வரும் கண்ணன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் தனது பணியை வரன்முறை படுத்த வேண்டும் என்றும் தனக்கு சேரவேண்டிய ஊதிய நிலுவை தொகை மற்றும் இதர பணப்பலன்களை வழங்க வேண்டும் எனக் கோரி கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி கலெக்டரிடம் மனு கொடுத்ததாகவும் ஆனால் அந்த மனுமீது நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் தனது பணியை வரன்முறை படுத்தவும் ஊதிய நிலுவை மற்றும் இதர பணப்பலன்களை வழங்க உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரரின் கோரிக்கையை முழுமையாக ஆய்வு செய்ய தேவையில்லாத நிலையில் மாவட்ட கலெக்டர் மனுதாரரின் மனுவை தொடர்புடைய அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி விசாரணை நடத்தி வேறு ஏதும் பிரச்சினை இல்லாத நிலையில் இந்த உத்தரவு கிடைத்த 2 மாதங்களில் அவரது பணியை வரன்முறை படுத்தவும் ஊதிய நிலுவை தொகை மற்றும் இதர பணப்பலன்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மாவட்ட செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குனர் திடீர் ஆய்வு






சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குனர் தாரேஸ் அகமது திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பதிவு: நவம்பர் 06, 2018 04:15 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குனர் தாரேஸ் அகமது நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது, அவர் சேலம் மாவட்டத்தில் இதுவரை டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்கள் குறித்தும், காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் ரோகிணி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், சிறப்பு வார்டில் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து டாக்டர்களிடம் தாரேஸ் அகமது கேட்டறிந்தார்.

இதன்பிறகு தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குனர் தாரேஸ் அகமது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுவரை 180 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து, மாத்திரைகள் தேவையான அளவில் இருப்பு வைப்பதற்கு அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி காய்ச்சல் அறிகுறி வந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தாரேஸ் அகமது கூறினார்.

முன்னதாக டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி, அரசு ஆஸ்பத்திரி டீன் ராஜேந்திரன், கண்காணிப்பாளர் தனபால், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, மாநகர நகர்நல அலுவலர் பார்த்திபன் மற்றும் டாக்டர்களுடன் தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குனர் தாரேஸ் அகமது ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட செய்திகள்

கூடுவாஞ்சேரி சினிமா தியேட்டரில் ‘சர்கார்’ படத்துக்கு டிக்கெட் வாங்கும்போது தள்ளுமுள்ளு ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி





கூடுவாஞ்சேரியில் சினிமா தியேட்டரில் ‘சர்கார்’ படத்துக்கு டிக்கெட் வாங்கும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

பதிவு: நவம்பர் 06, 2018 04:00 AM

காஞ்சீபுரம்


கூடுவாஞ்சேரியில் சினிமா தியேட்டரில் ‘சர்கார்’ படத்துக்கு டிக்கெட் வாங்கும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.


நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் இன்று(செவ்வாய்க்கிழமை) தீபாவளிக்கு தமிழக முழுவதும் வெளியாகிறது. காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள வெங்கடேஸ்வரா தியோட்டரிலும் ‘சர்கார்’ படம் வெளியிடப்படுகிறது.

  இன்று திரையிடப்படும் அனைத்து காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் நேற்று காலை 10 மணிக்கு வழங்கப்படும் தியேட்டர் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக நேற்று காலை 9 மணி முதலே வெங்கடேஸ்வரா தியேட்டரில் டிக்கெட் வாங்குவதற்காக விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

ரசிகர்களின் கூட்டத்தை தியேட்டர் ஊழியர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் காலை 10 மணிக்கு டிக்கெட் வழங்குவதாக இருந்த டிக்கெட்டுகளை 9.30 மணிக்கே தியேட்டர் ஊழியர்கள் வழங்க தொடங்கினர். ஆனால் ரசிகர்கள் ஒழுங்காக வரிசையில் நின்று டிக்கெட் வாங்கவில்லை. ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு டிக்கெட் வாங்க முயன்றனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஒரே நேரத்தில் பல பேர் டிக்கெட் கவுண்ட்டருக்குள் கையை விட்டு டிக்கெட் வாங்க முயன்றனர். டிக்கெட் வழங்க முடியாமல் ஊழியர்கள் திணறினர்.

ஒரு சில ரசிகர்கள் தங்களுக்கு 5 டிக்கெட் வழங்கவேண்டும். நாங்கள் உள்ளூர்க்காரர்கள் என்று டிக்கெட் வழங்கும் ஊழியரிடம் தகராறு செய்தனர். அப்போது சில ரசிகர்கள், டிக்கெட் கவுண்ட்டரின் கண்ணாடியை திடீரென உடைத்தனர். இதனால் தியேட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் பயந்து போன தியேட்டர் ஊழியர்கள், உடனே கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் திலீப்குமார், டிக்கெட் வாங்குவதற்கு முண்டியடித்துக்கொண்டிருந்த விஜய் ரசிகர்களை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்தார்.

ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து கலாட்டா செய்துக்கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சப்–இன்ஸ்பெக்டர் திலீப்குமார் திடீரென தனது கையில் வைத்திருந்த லத்தியால் விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தார். தடியடிக்கு பயந்து ரசிகர்கள், பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். ஒரு சில ரசிகர்கள், தியேட்டர் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடினார்கள்.

இதையடுத்து டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டு, கவுண்ட்டரும் மூடப்பட்டது. இதனால் விஜய் படத்தை முதல் நாளில் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் வந்த பொதுமக்கள் சிலர் டிக்கெட் வாங்க முடியாமல் நீண்ட நேரமாக தியேட்டார் வாசலில் காத்திருந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலையங்கம்

முட்டையின் விலை ரூ.15 ஆகிவிடுமா?





சமீபத்தில் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 06 2018, 03:30

எந்தவொரு புதிய கோழிப்பண்ணை தொடங்கப்பட்டாலும் கூண்டுகளை உபயோகிக்காமல் இருப்பதை மத்திய அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கோழிப்பண்ணைகளில் முட்டை கோழிகளை கூண்டுகளில் அடைத்து வளர்க்க தடைசெய்யப்பட்டுள்ளது என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது கோழிப்பண்ணை தொடங்கி, அதன்மூலம் வருமானம் ஈட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஏராளமான வேலையில்லாத இளைஞர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களில் இன்றுகூட வீட்டின் முட்டை தேவைக்காக கோழிவளர்ப்பவர்கள் வீடுகளில் கோழிக்கூண்டு வைத்திருப்பார்கள். அந்தக்கூண்டிலிருந்து காலையில் கோழிகளை வெளியே திறந்துவிட்டால், அருகிலுள்ள இடங்களில் மேய்ந்தபிறகு மாலையில் அதுவே கூண்டுக்கு வந்துவிடும். இல்லையென்றால், வீட்டில் உள்ளவர்களே கோழிகளை விரட்டி கூண்டுக்குள் அடைத்துவிடுவார்கள்.

வீடுகளில் மட்டுமே வளர்க்கப்பட்டு வந்த கோழிவளர்ப்பு, வியாபார ரீதியில் பண்ணை முறையில் நடத்தப்படும் தொழிலாக வளர்ந்துவிட்டது. தமிழ்நாட்டிலுள்ள 11 கோடியே 73 லட்சம் கோழிகளின் எண்ணிக்கையில், 10 கோடியே 34 லட்சம் கோழிகள் கோழிப்பண்ணைகளில் தான் வளர்க்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தினமும் 4 கோடி முட்டைகள் இந்தப்பண்ணைகளில் இருந்து கிடைக்கிறது. தமிழக அரசும் கோழிப்பண்ணை தொடங்குபவர்களுக்கு மானியம் கொடுத்து ஊக்குவிக்கிறது. 5 ஆயிரம் கோழிகள் கொண்ட கறிக்கோழி பண்ணை ஒரு குடும்பத்தினுடைய உழைப்பை மட்டுமே கொண்டு லாபகரமாக செயல்படும். இந்தத்திட்டத்தின்கீழ் மாநில அரசின் 25 சதவீத மானியமாக ரூ.2 லட்சத்து 68,750 ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்படுகிறது. மேலும் நாட்டுக்கோழி வளர்த்தால் ஒவ்வொரு பயனாளிக்கும் 250 கோழிகளை வளர்ப்பதற்கு 25 சதவீத தமிழக அரசின் மானியமாக ரூ.38,750 வழங்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், தமிழக அரசு ஏழை குடும்பங்களுக்கு 50 நாட்டுக்கோழி குஞ்சுகள் கொடுப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கும், கோழிமுட்டைக்கும் நல்லகிராக்கி இருப்பதால், கோழிவளர்ப்பு தொழிலை எல்லா மாநிலங்களும் ஊக்குவித்துக்கொண்டிருக்கும் நிலையில், புதிதாக கோழிப்பண்ணை தொடங்குபவர்கள் கூண்டில் வைத்து வளர்க்கக்கூடாது. திறந்தவெளியில்தான் வளர்க்கவேண்டும் என்றால் நிச்சயமாக நடைமுறையில் சாத்தியமில்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் ஆயிரம் கோழிகளை வேண்டுமானால் திறந்தவெளியில் வளர்க்கமுடியும். ஆனால், அதற்கு தீவனம் போடுவது, தண்ணீர் வைப்பது, முட்டைகளை உடையாமல் எடுப்பது என்பதெல்லாம் மிகவும் கஷ்டமான ஒன்றாகும். மேலும் அரசின் மானியத்தைப்பெற்று கோழிப்பண்ணைகளை தொடங்கும் வேலையில்லா பட்டதாரிகள் எல்லாருக்கும், ஏக்கர்கணக்கில் நிலம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. இந்தநிலையில், இதுபோன்ற தடைகளை விதித்தால் யாரும் கோழிப்பண்ணைகளை தொடங்க முடியாது. சுப்ரீம்கோர்ட்டு விதித்துள்ள இடைக்காலத்தடை நீடிக்கும் பட்சத்தில் ஒரு முட்டையின் விலை ரூ.15 ஆக உயரும் என்று தமிழ்நாடு முட்டைக்கோழி சம்மேளனத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியுள்ளார். எப்படி பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தவுடன், தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனுதாக்கல் செய்ததோ, அதுபோல இந்தவழக்கிலும் உடனடியாக சீராய்வு மனுதாக்கல் செய்யவேண்டும். முட்டைக்கோழி பண்ணையாளர்களும் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்யவேண்டும். கோழிகளை கூண்டில் வளர்க்க தடைவிதிப்பதை சுப்ரீம்கோர்ட்டும் மறுபரிசீலனை செய்யவேண்டும்.
தேசிய செய்திகள்
 
சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் போலீஸ் குவிப்பு சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு

சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் போலீஸ் குவிப்பு சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு
 
சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 
 
திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரும் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில், ஐப்பசி மாத வழிபாட்டுக்காக கடந்த மாதம் 17–ந்தேதி முதல் 22–ந் தேதி வரை 5 நாட்கள் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோவிலுக்கு வந்த இளம்பெண்களை அய்யப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அந்த பெண்கள் திரும்பி அனுப்பப்பட்டனர். இதன் காரணமாக பதற்றம் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டம், வன்முறையில் ஈடுபட்டதாக 3,731 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் ஆகியோர் கோவில் நடையை திறந்தனர்.

அய்யப்ப தர்மசேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள் சிலர் நேற்று சன்னிதானத்துக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர்.

10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் யாரும் வராததால், அசம்பாவிதம் எதுவும் இன்றி நேற்று கோவிலில் பூஜை அமைதியாக நடைபெற்றது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவது என்று தீர்மானித்துள்ள முதல்–மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக அரசு, பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முறையும் போராட்டங்கள் நடைபெறலாம் என்று கருதி சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருக்கிறது. 

பாதுகாப்புக்காக கோவில் சன்னிதானம், நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அதிரடிப்படை கமாண்டோ வீரர்கள் 20 பேர் மற்றும் கலவர தடுப்பு போலீசார் உள்பட 2,300–க்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணிக்கு கேரள அரசு நியமித்து உள்ளது. 

சன்னிதானம் பகுதியில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண் போலீசார் 15 பேர் நிறுத்தப்பட்டு உள்ளனர். சபரிமலை கோவிலில் பெண் போலீசார் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

செல்போன் சேவையை முடக்குவதற்காக, கோவிலில் தந்திரி கண்டரரு ராஜீவரு அறையின் முன்பும் மற்றும் சில இடங்களிலும் ‘ஜாமர்’ கருவிகள் வைக்கப்பட்டு உள்ளன. பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்கு தந்திரிக்கு போலீசார் தடை விதித்து உள்ளனர். கோவில் வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலை பகுதியில் 3 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நிலக்கல்லில் இருந்து பம்பை செல்லும் வழி முழுவதும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

எருமேலிக்கு நேற்று முன்தினம் மாலை வந்து சேர்ந்த பக்தர்கள் சிலர் அங்கேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பம்பைக்கு செல்ல தங்களை அனுமதிக்கவேண்டும் என்று அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று காலை அவர்கள், அய்யப்ப சரணம் கோ‌ஷங்களை முழங்கியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காலை 10 மணி அளவில் அவர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வாகனங்களில் வந்த பக்தர்களை நிலக்கல்லில் போலீசார் தடுத்து நிறுத்தி, அரசு பஸ்களில் பம்பைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். பஸ்கள் கிடைக்காததால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பம்பைக்கு நடந்து சென்றனர். பலத்த சோதனைக்கு பின்னரே பக்தர்களை போலீசார் அனுமதித்தனர்.

கோவிலுக்கு செல்ல போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதாகவும், நிலக்கல்லில் இருந்து 

பம்பைக்கு செல்ல அரசு போதிய பஸ் வசதி செய்து கொடுக்கவில்லை என்றும் கூறி கேரளாவில் பல இடங்களில் பாரதீய ஜனதா கட்சியினரும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தினார்கள். அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பும் போராட்டங்கள் நடைபெற்றன.

சபரிமலைக்கு செய்தி சேகரிப்பதற்காக பெண் பத்திரிகையாளர்களை அனுப்பி வைக்க வேண்டாம் என்று ஊடகங்களை சபரிமலை கர்மா சமிதி என்ற அமைப்பு ஏற்கனவே கேட்டுக் கொண்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தி சேகரிப்பதற்காக வந்த பத்திரிகையாளர்கள் நிலக்கல்லிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். பம்பைக்கு செல்ல அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. பின்னர் சில பெண் பத்திரிகையாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பம்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கேரளாவில் உள்ள செருதலா என்ற இடத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற 25 வயது இளம்பெண் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன், சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக நேற்று பம்பைக்கு வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். சன்னிதானம் செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என்று அவர் போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார். அவரது பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

பூஜைக்கு பின்னர் நேற்று இரவு 10 மணி அளவில் கோவில் நடை சாத்தப்பட்டது. திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மீண்டும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பூஜைக்கு பின்னர் இன்று இரவு 10 மணி அளவில் நடை சாத்தப்படும்.

அதன்பிறகு மண்டல பூஜை, மகரவிளக்கு வழிபாட்டுக்காக வருகிற 16–ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். 

இதற்கிடையே, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், சபரிமலை அய்யப்பன் கோவிலின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என்று கேரள அரசுக்கும், முதல்–மந்திரிக்கும் உத்தரவிடவேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த கேரள ஐகோர்ட்டு, சட்டம்–ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றபோதிலும் பக்தர்களும், பத்திரிகையாளர்களும் கோவிலுக்கு செல்வதை தடுக்கக்கூடாது என்றும், கோவிலின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் உரிமை அரசுக்கு இல்லை என்றும் கூறியது. அத்துடன் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்றுவதாக கூறி பக்தர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் கூறியது.

கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் பெயர் மற்றும் முகவரியை போலீசார் கேட்டு எழுதுவதற்கும் கண்டனம் தெரிவித்தது.

Chitlapakkam issue yet to subside

DECCAN CHRONICLE. | R LENIN

PublishedNov 5, 2018, 1:45 am IST

“Two days after the police filed the case against us, the board describing work order details was put up in the same place,”



The channel dug up in Chitlapakkam. (DC)


CHENNAI: A few days ago, the southern suburb Chitlapakkam had hit the headlines. The reason: Four residents of Chitlapakkam questioned unapproved civic works that civic officials of Chitlapakkam town panchayat had taken up on two streets.

Of the four activists, two from the flood-prone Chitlapakkam were arrested, after officials filed a case in Chitlapakkam police station and subsequently, the police slapped FIR against four activists - Kumar, Balachandar, Sunil Jayaram and Shivakumar. Later, Balachandar and Kumar were taken to Puzhal prison.

Speaking to Deccan Chronicle, Sunil Jayaram, one of the activists, said, “We asked basic questions only. However, the officials on purpose filed a case against us. The case was fabricated. Even as we first filed a case, the police miserably failed to act on the complaint, however, they took the side of the officials.” This was a deliberate attempt to muzzle dissenting voices, he noted.

Sunil also said that the arrested activists were struggling even after they were released as both of them were instructed to sign in the registrar twice a day in Manimangalam police station. “Two days after the police filed the case against us, the board describing work order details was put up in the same place,” he noted.

Similarly, Jayaram Venkatesan, convener of Arappor Iyakkam, an organisation that fights for eliminating corruption, said, “The officials concerned should know the fact that every citizen has a right to ask questions. For merely questioning government officials, citizens should not be punished. We will continue our struggle to eradicate irregularities in any kind of work.” Justice would be done in this case, he said, exuding confidence.


P. Viswanathan, coordinator of Chitlapakkam Residents Welfare Association said, “All water channels in Chitlapakkam and adjacent areas should be restored, as they are hugely encroached. Surplus rainwater during the season would be stored in the nearby lakes and floods would also be avoided.” When contacted by Deccan Chronicle, P. Ponnaiah, District Collector of Kancheepuram, said that he was not pressurising police to file the cases against activists. “I thoroughly enquired with the civic officials and based on their complaints, I informed police to file case. As far as works are concerned, every work in Chitlapakkam is properly done as per norms,” he pointed out.

It may be noted that the quartet asked questions on the work orders for the storm water project on October 19, while the officials kept digging the road in Sethunarayanan and Ramanan streets.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...