Wednesday, November 7, 2018

இருமடங்கு சம்பளம்: மகிழ்ச்சியில் துள்ளிய ஊழியர்களுக்கு நிகழ்ந்த ஏமாற்றம்
Published : 05 Nov 2018 18:25 IST

பிடிஐ





அமிர்தசரஸில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளமாக இரு மடங்கு ஊதியம் அளிக்கப்பட்டது. தீபாவளிப் பரிசு என்று எண்ணி மகிழ்ந்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

இயந்திரக் கோளாறால் தவறுதலாக இரு மடங்குப் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் அதை யாரும் எடுக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலை மாவட்ட கருவூல அதிகாரி ஏ.கே.மைனி உறுதி செய்தார். ''அமிர்தசரஸில் மட்டுமல்ல, பஞ்சாப்பின் பெரும்பாலான அனைத்து அலுவலகங்களிலும் இயந்திரக் கோளாறு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விரைவில் ஒரு மாத ஊதியம் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும்.

அமிர்தசரஸில் மட்டும் ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை அதிகமாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது'' என்றார் மைனி.

Tuesday, November 6, 2018

தேசிய செய்திகள்

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒரு பொருள் போலியானது -ஆய்வில் தகவல்





ஆன்லைனில் விற்கப்படும் ஐந்தில் ஒரு பொருள் போலியானது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது

பதிவு: நவம்பர் 05, 2018 12:51 PM

பெங்களூரு

ஆனலைன் விற்பனையில் ஒவ்வொரு ஐந்து பொருட்களுக்கும் ஒன்று போலியாக உள்ளது என கூறப்படுகிறது இதில் அதிக்மமானவை ஒப்பனை மற்றும் வாசனை திரவியங்களுக்கான பொருட்கள் ஆகும்.

ஆன்லைன் விற்பனை தொடர்பாக லோக்கல் சர்க்கிள் என்ற இணையதளம் சுமார் 30 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆன் லைன் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 6 மாதங்களில், ஆன்லைன் மூலம் போலியான பொருள்கள் தங்களிடம் விற்கப்பட்டதாக 20 சதவீத வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எந்தெந்த ஆன்லைன் நிறுவனங்கள் அதிகளவில் போலி பொருட்களை விற்பனை செய்கின்றன என்ற கேள்விக்கு ஸ்னாப்டீல் என 37 சதவிகிதம் பேரும், பிளிப்கார்ட் என 22 சதவிகிதம் பேரும், பேடிஎம் மால் என 21 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர். 20 சதவிகிதம் பேர் அமேசான் நிறுவனம் போலியான பொருட்களை விற்பதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நறுமண மற்றும் ஒப்பனை பொருட்கள் 35 சதவீதம் போலியானவை என்றும் 22 சதவீதம் விளையாட்டுக்கு தேவையான பொருட்கள் என்றும், 5 சதவீதம் பைகள் ஆகியவை தான் போலியானவையாக இருக்கின்றன என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது போலியான பொருட்களை வழங்கும் நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் தீபாவளியின் வரலாறு!


இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் குடியேறியவர்கள் தங்கள் கலாச்சாரத்தையும் இங்கு கொண்டு வந்தனர்.
அதில் ஒன்று தீபாவளி கொண்டாட்டம்.

1929ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தீபாவளி அதிகாரபூர்வப் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிராங்கூன், சிலிகி, ரோச்சர் வட்டாரங்களில் தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கின.
1985 ஆம் ஆண்டு லிட்டில் இந்தியா - சிராங்கூன் வட்டாரத்தில் ஒளியூட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற ஆரம்பித்தன. அதைக் காண்பதற்காகவே சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வருவதுண்டு.


2002ஆம் ஆண்டிலிருந்து தீபாவளியை முன்னிட்டு எஸ்பிளனேட் - கடலோரக் கலையரங்குகளில் கலா உற்சவம் எனும் இந்தியக் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்று வருகிறது. ஆடல், பாடல், கதை சொல்லும் நிகழ்ச்சி என பல்வேறு அங்கங்கள் அதில் இடம்பெறும். அந்நிகழ்ச்சிகளைக் காண ஆண்டுதோறும் சுமார் 40,000 பார்வையாளர்கள் கூடுவர்.

தீபாவளியை முன்னிட்டு வியக்கவைக்கும் 8 சலுகைகளை அறிவித்த ஜியோ.! உடனே முந்துங்கள்.!


ஜியோ நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மட்டும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி தீபாவளியை முன்னிட்டு 8 சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். மேலும் இந்த சிறப்பு சலுகைகளை பல்வேறு

மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி தீபாவளி பரிசாக Diwali Dhamaka என்னும் பெயரில் தான் இந்த சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 100 சதவீதம் கேஷ்பேக் பரிசு பின்பு போன் பரிசு என பல சலுகைகளை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம்.

சலுகை-1:
ஜியோ ரூ.1699 வருடாந்திர திட்டம்: இந்த சிறப்பு வருடாந்திர திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் குரல் அழைப்புகளை பெற முடியும்.


 சலுகை-2:
100 சதவீதம் கேஷ்பேக்: ரூ.149 மற்றும் அதற்கு மேற்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் டிஜிட்டல் கூப்பன் வடிவில் முழு பணமும் திரும்பியளிக்கப்படும்.


 சலுகை-3
ரூ.2200 உடனடி கேஷ்பேக்: மை ஜியோ ஆப் மூலம் ரூ.50-க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களில் தகுதியானவர்களுக்கு 44 கேஷ்பேக் வவுச்சர்கள் வடிவில் ரூ.2200-வரை பணம் திரும்பியளிக்கப்படும்.


 சலுகை-4:
வேலட் ஆஃபர்: ஜியோவுடன் கூட்டு வைத்திருக்கும் பிரபல ஆன்லைன் வேலட் நிறுவனங்களுடன் ரீசார்ஜ் செய்கையில் வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.300 வரை பணம் திரும்பப்பெருவர்.


 சலுகை-5:
ஜியோ கிப்ட் கார்ட்: ரூ.1095 மதிப்பிளான ஜியோபோன் கிப்ட் கார்ட் ஆனது, 6 மாதகாலத்திற்கு இலவச வரம்பற்ற அழைப்பு வசதிஇ டேட்டா வசதி மற்றும் ஜியோபோனை வழங்குகிறது.


 சலுகை-6:
ஜியோபோன் 2: ரூ.2999 மதிப்பில் ஜியோபோன் 2 மற்றும் ரூ.200 வரையிலான கேஷ்பேக் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.


 சலுகை-7:
மடிக்கணினிகளை வாங்கும் பயனாளர்கள்jioFi மற்றும் ரூ 3,000 ரூ 3,000 மதிப்புள்ள தரவு சலுகைகளை பெறுமுடியும்.


 சலுகை-8:
எல்ஜி ஸ்மார்ட் டிவி வாங்கும் வாடிக்கையாளர்கள் JioFi மற்றும் ரூ 2,000 மதிப்புள்ள தரவு நன்மைகளை பெறமுடியும்.
 
தீபாவளி மது விற்பனை ரூ.350 கோடிக்கு இலக்கு: தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையால் எதிர்பார்ப்பு

Published : 05 Nov 2018 15:41 IST

சென்னை
 


மதுவிற்பனை - கோப்புப் படம்

தமிழகத்தில் மதுபான விற்பனைக்கு ரூ.350 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நான்கு நாட்கள் தொடர் விற்பனை காரணமாக விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சுமார் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் மூலம் அரசுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.80 கோடி அளவிலும், ஆண்டுக்கு சுமார் ரூ. 20 ஆயிரம் கோடி அளவிலும் வருவாய் கிடைக்கிறது. வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் டாஸ்மாக் நிர்வாகம் விற்பனை இலக்கு நிர்ணயிப்பது வழக்கம்.

அதேபோன்று இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி ரூ.350 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அனைத்து மதுபானக் கடைகளிலும் போதுமான அளவு மது பாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக ஆண்டுதோறும் தீபாவளி நாளன்று மட்டும் ரூ.150 கோடி மது விற்பனையாகும் அதே அளவு இந்த ஆண்டும் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயித்து விற்பனை செய்து வருவதும், மதுப்பிரியர்கள் அதிகரித்து வருவதும் கவலையளிக்கக்கூடிய விஷயமாக சமூக ஆர்வலர்கள் பார்க்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் தீபாவளி விடுமுறை வரும். இந்தமுறை 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் மது விற்பனை கடந்த ஆண்டை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் என இரண்டு நாளிலும் ரூ.245 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு மதுவுக்கு எதிரான தீவிரப் போராட்டம் காரணமாக 20 சதவிகிதம் தீபாவளி விற்பனை குறைந்து, ரூ.223 கோடி அளவிற்கே விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக மது விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தீபாவளிக்கு மது விற்பனை குறித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மதுவிலக்குப் போராட்டத்தில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி கிருபாகரன் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, “மாதம் இவ்வளவு மதுபானம் விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுவது வேதனை அளிக்கிறது.

தீபாவளிப் பண்டிகை வருகிறது. இந்தப் பண்டிகையின்போது மது எவ்வளவு விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? மாதம் தோறும் இலக்கு நிர்ணயித்து தமிழக அரசு மது விற்பனை செய்வது வேதனை அளிக்கிறது” எனத் தெரிவித்தது. இதேபோன்ற நிலை இந்த ஆண்டும் தொடர்கிறது.
நெல்லை, கும்பகோணத்தில் மர்ம காய்ச்சலில் 3 பேர் மரணம்

Published : 06 Nov 2018 08:11 IST




டெங்கு காய்ச்சல் - கோப்புப்படம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேரும், கும்பகோணத்தில் ஒரு பெண்ணும் நேற்று உயிரிழந்தனர்.

திருநெல்வேலி சிந்துபூந்துறையைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி அமலி பிச்சுமணி(55). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.

திருநெல்வேலி அருகே உள்ள நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி(47) என்பவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “பன்றிக் காய்ச்சல் நோயைக் கண்டறியும் பரிசோதனை வசதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிலும் உள்ளன. இம்மாவட்டத்தில் வேறு இடங்களில் இந்த வசதி இல்லை. 2 பேர் உயிரிழப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்றனர்.கும்பகோணம்கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை சோழன் நகரைச் சேர்ந்தவர் திருமாவளவன். இவரது மனைவி சிவரஞ்சனி(36). இவர்களுக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிவரஞ்சனி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.இதையடுத்து, கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சிவரஞ்சனி உயிரிழந்தார்.
இவர்களுக்கு தீபாவளி இல்லையா?

Published : 06 Nov 2018 08:30 IST

புது டெல்லி
 



பொதுவாக டி.வி.யில் விளம்பரங்கள் தோன்றும்போது நாம் பெரும்பாலும் வேறு வேலை பார்க்கப் போய்விடுவோம். ஆனால் வெகு அபூர்வமாக சில விளம்பரங்கள் நமது மனதை வெகுவாக பாதித்துவிடும்.

அந்த வகையில் ஹியூலெட் பக்கார்ட் (ஹெச்பி) நிறுவனம் தனது பிரிண்டரை பிரபலப்படுத்த தயாரித்துள்ள விளம்பர படம் நிச்சயம் அனைவரைது நெஞ்சையும் உலுக்கிவிடும்.

ஒரு வட இந்திய பெண்மணி, சாலையோரம் அகல் விளக்குகள் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார். அந்த வழியாக செல்வோர் பலரும் அவரை பார்த்தபடியே சென்று கொண்டிருப்பர்.

மார்கெட்டிற்கு தனது தாயுடன் வந்த சிறுவன், தனது அம்மாவிடம் அகல் விளக்கு வாங்கலாமா? என்பான், ஆனால் அவனது தாய் அவனை இழுத்துச் சென்றுவிடுவார். அவன் ஓடி வந்து சில அகல் விளக்குகளை அவரிடம் வாங்கி, ``இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா'' என்று கூறுவான். அதற்கு அந்த பெண்ணோ, எங்களுக்கு ஏது தீபாவளி, இவ்வளவு அகல் விளக்குகளும் விற்பனையானால்தான் எங்களுடைய வீடுகளில் விளக்கு எரியும் என்பார்.

உடனே தன்னிடம் உள்ள போனில் அவரை புகைப்படம் எடுப்பான். அவரும் கவலை தோய்ந்த முகத்துடன் போஸ் கொடுப்பார்.

வீட்டிற்கு வந்த அந்த சிறுவனோ தான் எடுத்த புகைப்படத்தை கம்ப்யூட்டரில் பெரிதுபடுத்தி, அத்துடன் ``இனிய தீபாவளி, அம்மாவின் தீபாவளி'' என்ற வாசகத்துடன் அவர் அமர்ந்திருக்கும் மார்கெட் பகுதி முகவரியைப் போட்டு, இங்கு அகல் விளக்குகள் கிடைக்கும் என்ற செய்தியோடு பிரிண்ட் எடுப்பான். பல பிரிண்ட் எடுத்து சைக்கிளில் சில வீடுகளுக்கும், கடை களுக்கு வருவோர் போவோருக்கும் விநி யோகிப்பான்.

அடுத்த சில மணி நேரங்களில் பலரும் வந்து அகல் விளக்குகளை வாங்கிச் செல்வர்.

இரவு நேரம் வரும்போது அந்த சிறுவன் மீண்டும் வந்து அகல் விளக்கு விற்பனை செய்த அந்த பெண்மணியிடம் , அகல் விளக்கு இருக்கிறதா என்று கேட்பான். அவரோ எல்லாம் விற்பனையாகிவிட்டது என்பார். நான்தான் காலையில் சொன்னேனே, இரவிற்குள் அனைத்தும் விற்றுவிடும் என்று கூறியபடி சைக்கிளில் செல்வான். கேட்ட குரலாக இருக்கிறதே என்று அவர் திரும்பிப் பார்க்கும்போது அவன் செல்வது மட்டும் தெரியும். ஓடிச் செல்ல அவர் முயலும்போது, அந்த சிறுவன் எடுத்த பிரிண்ட் நகல் ஒன்று அவர் காலில் தட்டுப்படும். அதை எடுத்துப் பார்க்கும்போதுதான் சிறுவனின் முயற்சி புரியும். இவர்களுக்கு தீபாவளி கிடையாதா, சாலையோர வியாபாரிகளையும் கவனியுங்கள் என்பதாக வாசகம் இருக்கும்.

நான்கு நாளில் இந்த வீடியோவை 23 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்க்கும் முன்பு கையில் கைக்குட்டையை வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் கண் கலங்குவீர்கள் என்ற தலைப்பில் வெளியான செய்தி பொய்யல்ல உண்மை என்பது இதைப் பார்த்த பிறகு நீங்களும் உணர்வீர்கள்.

பெரிய கடைகளை நோக்கி படையெடுக்கும் உங்களைப் போன்ற பலரையும் இனி சாலையோர வியாபாரிகளையும் திரும்பிப் பார்க்க வைக்கும் மண்ணின் மனிதர்களுக்காக பன்னாட்டு நிறுவனம் எடுத்த விளம்பரப் படம்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...