Saturday, May 4, 2019

‘Those who try to answer all questions will score poorly’

TIMES NEWS NETWORK

4.5.2019

Those who try to answer all questions will end up getting low marks in NEET, said C Akash, a first year MBBS student, Kilpauk Medical College, Chennai.

The student who got 416 out 720 last year said students need to be smart in answering the questions.

“If we divide the time based on number of questions, a student would get just one minute for a question. So, it is ideal to answer the questions they know. The exam also have negative marking. So, they need to avoid giving wrong answers,” he said.

He also advised to the NEET aspirants to answer biology questions first.

“Usually, physics questions will be tough and time consuming. So, students should answer them at the end. Biology questions are straight and easy to answer,” he added.

Biology section will have 90 questions and each question carries four marks.

Aksh further said students need to check every now and then whether they are grading the correct question. “Once they grade an answer, they cannot change it. Plus, they also should not fold or scribble on the OMR answer sheet,” he warned.

It is important for candidates to have a good night's sleep and reach the exam centre early. Possibly two hours early.
Early warning, well-planned response limit Fani toll to 6
Improved IMD System, Massive Evacuation Save Many Lives


Vishwa Mohan & Rajani Yadav

4.5.2019

Coastal Odisha on Friday faced the wrath of “extremely severe” cyclonic storm ‘Fani’, but India Meteorological Department’s improved warning system, successful evacuation of lakhs of people, better Centre-state coordination and the highest

ever deployment by NDRF limited casualties. Government authorities confirmed six deaths, though news agencies reported eight.

Areas in Fani’s path were battered. There was extensive damage to kuccha houses in Puri, 160 people were admitted to hospital for treatment, the residence of the SP and DM were badly damaged and there was a serious disruption of power supply.

However, IMD’s new regional hurricane model helped avert a higher toll and showed how accuracy in tracking and forecasting landfall has progressed since the 1999 super cyclone that killed close to 10,000 people.



11.5L people evacuated in Odisha, AP and WB

After success in responding to the more recent Phailin (October 2013) and Hudhud (October 2014) cyclones, central agencies and state governments were able to manage a massive evacuation. Repeated warnings reduced casualties at sea and infrastructure by way of storm bunkers was available, particularly in states like Odisha and Andhra Pradesh that are seen to be more vulnerable.

Local disaster management authorities in Odisha and the National Disaster Response Force (NDRF) were on their toes. The NDRF, in fact, made its highest ever deployment by putting 65 teams on the ground with 38 in Odisha. Over 11.5 lakh people were evacuated in Odisha, Andhra Pradesh and West Bengal in the past three days.

IMD’s systems came in for praise. “It’s a very significant achievement for IMD. I wrote a congratulatory note to its director general (K J Ramesh) today for averting a major crisis. The department has successfully used its regional hurricane model in addition to other existing models,” said Madhavan Rajeevan, ministry of earth sciences’ (MoES) secretary.

Rajeevan told TOI that the new regional model, having ocean components in addition to atmospheric ones in other models, could track the cyclone better. Cyclone ‘Fani’ is only the second storm in the past over 126 years to form over the Bay of Bengal and cross India’s mainland in April. The last severe cyclone Nargis, formed in April over the Bay of Bengal, had devastated Myanmar in 2008.

Full report on www.toi.in

FULL COVERAGE: P 7 & 10

›Preparations on a war footing, P 10

Friday, May 3, 2019

Once Notice Of Voluntary Retirement Is Accepted, Employee Has No Locus To Withdraw Notice: Bombay HC [Read Order]

Once Notice Of Voluntary Retirement Is Accepted, Employee Has No Locus To Withdraw Notice: Bombay HC [Read Order]: The Bombay High Court has held that once the notice of voluntary retirement is accepted, it cannot be withdrawn as the relationship between an employer and an employee comes to an end. A...
தாலி கட்டினார்; ஒரு மாதம் வாழ்க்கை' - 15 வயது சிறுமியால் கம்பி எண்ணும் இரும்புக்கடைக்காரர்

எஸ்.மகேஷ்

சென்னையில் இரும்புக்கடை வைத்திருந்த இதயதிலகம், 15 வயது சிறுமிக்குத் தாலிகட்டி ஒரு மாதம் குடும்பம் நடத்தியுள்ளார். அவரை போலீஸார் கைது செய்து, சிறுமியை மீட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் இதயதிலகம். இவர், சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே பழைய இரும்புக்கடை நடத்திவந்தார். அப்போது அவருக்கும் 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தத் தகவல் சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்ததும் இதயதிலகத்தைக் கண்டித்தனர். சிறுமிக்கும் புத்திமதி கூறினர். ஆனால், எதிர்ப்பை மீறி இருவரும் காதலித்தனர்.

இந்தநிலையில், கடந்த 25.3.2019-ல் இருவரும் மாயமாகினர். இதனால் மகளைக் கண்டுபிடித்துத் தரும்படி சிறுமியின் தந்தை பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் நந்தினி மற்றும் போலீஸார் சிறுமியைத் தேடினர். இந்தச் சமயத்தில்தான் சிறுமியும் இதயதிலகமும் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் தங்கியிருக்கும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் இருவரையும் சென்னை அழைத்து வந்தனர். சிறுமிக்கு 15 வயதாகுவதால் மைனர் பெண்ணைக் கடத்திய குற்றத்துக்காக இதயதிலகம் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குபதிவு செய்தனர். பிறகு, இதயதிலகத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிறுமியை முதன்முதலில் அந்தப் பகுதியில் நடந்த கோயில் திருவிழாவின்போது இதயதிலகம் சந்தித்துள்ளார். அதன்பிறகு சிறுமி, ஸ்கூலுக்குச் செல்லும்போது இதயதிலகம் அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். நாளடைவில் இருவரும் காதலித்துள்ளனர். 8-ம் வகுப்புக்கு மேல் சிறுமி படிக்கவில்லை. இதயதிலகத்துக்கு அப்பா இல்லை. அவரின் அம்மா, சொந்த ஊரில் இருக்கிறார். சென்னையில் தனியாக இருந்த இதயதிலகம், சிறுமியை உயிருக்கு உயிராகக் காதலித்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் சென்னையிலிருந்து மும்பைக்குச் சென்றுள்ளார். அப்போதும் இருவரும் போனில் பேசிவந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் சிறுமியின் குடும்பத்துக்குத் தெரிந்ததும் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறுமிக்கு அவரின் குடும்பத்தினர் அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், அவர் கேட்கவில்லை.

இந்தச் சமயத்தில்தான் சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய இதயதிலகம், அவரை சென்னையிலிருந்து தூத்துக்குடி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமிக்குத் தாலிகட்டியுள்ளார். உடன்குடி பகுதியில் இதயதிலகமும் சிறுமியும் ஒரு மாதம் குடியிருந்துள்ளனர். அங்கு கூலி வேலை செய்து வந்துள்ளார் இதயதிலகம். இந்தத் தகவல் எங்களுக்குக் கிடைத்ததும் இதயதிலகத்தைக் கைது செய்து சிறுமியை மீட்டுள்ளோம். தற்போது சிறுமி, காப்பகத்தில் தங்கியுள்ளார். சிறுமியின் அப்பா, அண்ணாசாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்துவருகிறார். சென்னைக்கு அழைத்துவரப்பட்ட சிறுமிக்கு, மருத்துவ பரிசோதனை நடத்தியுள்ளோம். அதன் அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும்போது இதயதிலகத்துக்குக் கடும் தண்டனை கிடைக்கும்" என்றனர்.

சிறுமியை சொந்த ஊருக்கு இதயதிலகம் அழைத்துச் சென்றபோது அவரின் உறவினர்கள் விவரம் கேட்டுள்ளனர். அப்போது இதயதிலகம், சிறுமிக்கு 18 வயதாகிவிட்டது, அவளைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாகச் சொல்லியுள்ளார். இதயதிலகத்தின் அம்மாவும் வேறுவழியின்றி சம்மதித்துள்ளார். சென்னை போலீஸார், இதயதிலகத்தைப் பிடித்தபோதுதான் உண்மை வெளியில் தெரிந்துள்ளது.

பீர்க்கன்கரணை காவல் நிலையத்துக்கு இதயதிலகத்தையும் சிறுமியையும் அழைத்து வந்த போலீஸார் இருவரிடமும் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி, இதயதிலகத்துடன் சேர்ந்து வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், சிறுமியிடம், உனக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை. இதனால் உனக்கு நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்று கூறியுள்ளனர். போலீஸார் கூறிய அறிவுரைகளை சிறுமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து இதயதிலகத்தை கைது செய்யப்போகும் தகவல் சிறுமிக்குத் தெரிந்ததும் அவர் காவல் நிலையத்திலேயே கதறி அழுதுள்ளார். அதைப்பார்த்து இதயதிலகமும் கண்ணீர்விட்டுள்ளார். இதையடுத்து சிறுமியை போலீஸார் காப்பகத்தில் சேர்த்தனர். சிறுமியைப் பிரிந்து செல்ல மனமில்லாத இதயதிலகம், உனக்காகக் காத்திருப்பேன் என்று கூறிவிட்டு சிறைக்குச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
படித்தது இன்ஜினீயரிங்... பார்ப்பது தள்ளுவண்டியில் உணவு விற்பனை! - கரூர் இளைஞரின் கதை

vikatan

துரை.வேம்பையன்


நா.ராஜமுருகன்


"இப்போ கடைக்கு கஸ்டமர்கள் அதிகமாகி, செலவு போக மாசம் 20,000 வரை சம்பாதிக்கிறேன். இப்போதான், எங்கம்மாவுக்கு என்மீது நம்பிக்கை வந்திருக்கு. 'உதவாத வேலையைப் பார்க்குறியோன்னு நினைச்சேன். பரவாயில்லை. நல்ல வழியிலதான் போயிருக்க'னு சொல்றாங்க."

'படிப்புக்கேற்ற நல்ல வேலையில் இருந்த கரூர் இளைஞரான ஜெய்சுந்தர், வேலை தந்த அலுப்பில், பார்த்த வேலையை உதறித்தள்ளிவிட்டு, இப்போது கரூர் நகரில் தள்ளுவண்டியில் கரம் உணவு விற்கிறார். மாடர்ன் இளைஞரான அவர், தள்ளுவண்டியில் கரம் உணவு விற்பனை செய்து, மாதம் 20,000 வரை சம்பாதிக்கிறார். விற்பனை முடிந்து, தள்ளுவண்டியைக் கரூர் நகர பிரதான சாலையில் தள்ளிக்கொண்டிருந்த ஜெய்சுந்தரை யதேச்சையாகத்தான் சந்தித்தோம். ஆச்சர்யமாகி, அப்படியே அவரை ஓரங்கட்டிப் பேசினோம்.





"நான் கரூர் தின்னப்பா நகரைச் சேர்ந்தவன். அப்பா இல்லை. எனக்கு அம்மா மட்டும்தான். அவங்க பேரு சித்ரா. அவங்க தனியார் பள்ளியில் ஆசிரியையா இருந்து, கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வச்சாங்க. டிப்ளமோ இ.சி.இ, பி.டெக் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் படிப்புகள் படிச்சேன். 2011-ல் பிரபல தனியார் செல் நெட்வொர்க் கம்பெனியில 9,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். அதன் பிறகு, கோயம்புத்தூர்ல உள்ள ப்ரீகால் ஆட்டோமொபைல் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். 10,000 ரூபாய் சம்பளம் வாங்கினேன். நடுவில் எங்கம்மா, டீச்சர் வேலைக்கு சில விஷயங்களால் போக முடியாத சூழல். அப்புறம், குடும்ப பாரம் முழுவதும் என்மீது வந்தது. இருந்தாலும், அம்மா வீட்டுல மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தாங்க. இதற்கிடையில், புகளூர் அரசு காகித ஆலையில் ஒப்பந்தம் அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்தேன். 15,000 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. 'அந்த வேலை நிரந்தரம் ஆயிரும்'னு சொன்னாங்க. ஆனா, அதுமாதிரி தெரியலை. வேலையும் கஷ்டமா இருந்துச்சு. வாழ்க்கையே கஷ்டமா தெரிஞ்சுச்சு.

வேலை முடிஞ்சதும், தினமும் கரூர் பஜார்ல இருக்கிற மதுங்கிறவர் போட்டிருக்கிற கரம் ஸ்டால்ல கரம் வகை நொறுக்கு உணவுகளை வாங்கிச் சாப்பிடுவேன். நல்ல ருசியா இருக்கும். ஒருநாள் அப்படிச் சாப்பிட்டுகிட்டு இருந்தப்ப, 'நானும் உங்களை மாதிரி கரம் ஸ்டால் போடபோறேன்'னு சொன்னதும், மது அதிர்ச்சியாயிட்டார். 'உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. பார்க்குற வேலையை ஒழுங்கா பாரு'னு சொன்னார். எங்கம்மாகிட்டயும் சொன்னேன். அவங்களும் தாம்தூம்னு குதிச்சாங்க. 'பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்கேன். உனக்கு கல்யாணம் பண்ணணும். இப்போ போய் வேண்டாத வேலை பார்க்காத'னு சொன்னாங்க. ஆனா, நான் விடாப்பிடியா இருந்து, கடந்த வருஷம் பிப்ரவரி மாசம், 'கரூவூர் கரம்'ங்கிற பேர்ல தள்ளுவண்டியில கடையை ஆரம்பிச்சுட்டேன். என்னோட உறுதியைப் பார்த்துட்டு, மது சாரும் எனக்கு கரம் தயாரிப்பு பத்தி பயிற்சி கொடுத்தார். ஆரம்பத்துல ரொம்ப சிரமப்பட்டேன். தள்ளுவண்டியைத் தள்ளும்போது, மனசுக்குள்ள கில்ட்டியா ஃபீல் பண்றது ஒருபக்கம்னா, இன்னொருபக்கம், 'தேவையில்லாத வேலை பார்க்கிறோமோ'னு உள்ளுக்குள் உதறலா இருக்கும்.



இருந்தாலும், தன்னம்பிக்கையை விடலை. முதல் ஆறு மாசம், மாசம் 4,000 கிடைக்கிறதே பெருசுங்கிற நிலைமையா இருந்துச்சு. நாங்க வாடகை வீட்டுல இருப்பதால், அந்தப் பணம் வாடகைக்கே போயிரும். மத்த செலவுகளுக்கு சிரமப்பட்டோம். அப்போதான், நான் இப்போ கரம் ஸ்டால் வச்சுருக்கும் இந்த ஜூஸ் கடையோட ஓனர் கோபிநாத் பெரிய உதவி பண்ணினார். தனது ஜூஸ் கடை முன்பு வாடகை கேட்காம, என்னை கரம் ஸ்டாலைப் போட அனுமதித்தார். அதன்பிறகு, கொஞ்சம் கொஞ்சமா கஸ்டமர்கள் வர ஆரம்பிச்சாங்க. கல்லூரி மாணவர்கள், மாணவிகள், குடும்பத்தோடு வருபவர்கள்னு எனக்கு ரெகுலர் கஸ்டமர்கள் அதிமானாங்க.



இப்போ கடைக்கு கஸ்டமர்கள் அதிகமாகி, செலவு போக மாசம் 20,000 வரை சம்பாதிக்கிறேன். இப்போதான், எங்கம்மாவுக்கு என்மீது நம்பிக்கை வந்திருக்கு. 'உதவாத வேலையைப் பார்க்குறியோன்னு நினைச்சேன். பரவாயில்லை. நல்ல வழியிலதான் போயிருக்க'னு சொல்றாங்க. இங்க உள்ள பிரபல ஹோட்டல்காரங்களும், 'படிச்சுட்டு இப்படித் தள்ளுவண்டியில உணவு விற்கிறியே. சபாஷ். இதை இன்னும் டெவலெப் பண்ணு'னு ஊக்குவிக்கிறாங்க. மாலை 5 மணிக்குத் தொடங்கி, இரவு 10.30 மணி வரை வியாபாரம் பார்ப்பேன். அப்புறம், இந்தத் தள்ளுவண்டியிலேயே அனைத்தையும் பேக் செய்து, தள்ளிக்கொண்டு போய் அருகில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டுல வச்சுருவேன். என் கடையில் சாதா கரம், முட்டை கரம், சம்சா கரம், எள்ளடைக் கரம், அப்பளக் கரம், முறுக்கு கரம், போண்டா கரம்னு கரம் நொறுக்குத்தீனிகளை விற்கிறேன்.

 தவிர, தட்டுவடை செட்டு, முறுக்குச் செட்டு, அப்பளச் செட்டு, சம்சா செட்டுனு செட்டு வகை நொறுக்குத்தீனிகளையும் விற்கிறேன். அதோடு, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கூடவே பர்மா உணவுகளான அத்தோ, கவுஸ்வே, மொகிங்கா, வாழைத்தண்டு சூப்னு விற்பனை செய்கிறேன். எல்லா உணவு பொருள்களையும் தரமா விற்கிற கடைகளில்தான் வாங்குறேன். அதோடு, பள்ளி, கல்லூரிகளில நடக்கும் விழாக்களின்போது, சம்பந்தப்பட்ட கல்விநிலைய நிர்வாகத்தின் அனுமதியோடு, கரம் ஸ்டாலைப் போடுவேன். அதேபோல், திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின் பேரில் ஐஸ்க்ரீம், பீடா உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறேன். அதோடு, கருவூர் கரம் ஸ்டாலை இன்னும் பல இடங்களில் அமைக்கும் முயற்சியிலும் இருக்கிறேன்.



படிப்புக்கேத்த வேலை பார்த்தபோது, வேலை அதிகம், சம்பளம் கம்மிங்கிற நிலைமை. ஆனா, 365 நாள்களும் அவங்களுக்காக இயங்கணும். இதுல அப்படி இல்லை. கொஞ்ச நேரம்தான் பிஸினஸ். நிறைவான லாபம். கடந்த நாடாளுமன்றத் தேர்தல்ல காசு வாங்காத வாக்காளர்களுக்கு, கரம் உணவுகள்ல 50 சதவிகிதம் ஆஃபர் போட்டேன். 'உழைப்புக்கேத்த வருமானம்; மனசுக்கேத்த சமூக சேவை பணிகள்'னு வாழ்க்கை அர்த்தமுள்ளதா, ஆனந்தமா போய்ட்டு இருக்கு அண்ணே..!" என்று முடிக்கிறார் மகிழ்ச்சியாக.

கரம் ஸ்டால் உணவு தொழிலில் கலக்கும் ஜெய்சுந்தரை, 'கரம்'பற்றி வாழ்த்திவிட்டு வந்தோம்.
கத்திரி வெயில் நாளை தொடக்கம்: வேலூரில் 112 டிகிரியை கடந்த வெப்பம்

By DIN | Published on : 03rd May 2019 04:13 AM |

வேலூரில் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள குடைபிடித்துச் செல்லும் பெண்கள்.
velur
கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை தொடங்க உள்ள நிலையில், வேலூரில் வியாழக்கிழமை உச்சகட்டமாக 112 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.

சூரியனுக்கு அருகில் வான்வெளியில் மேஷம் எனும் நட்சத்திர மண்டலப் பகுதிகள் வருவதையே வெப்பம் மிகுந்த காலமாக உணர்கிறோம்.
இந்தக் காலகட்டத்தை அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனக் கூறுகிறோம். ஆண்டுதோறும் 21 நாள்கள் முதல் 28 நாள்கள் வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகும். 21-ஆவது நாளில் வெயில் உச்சத்தைத் தொடும். அதன்பிறகு படிப்படியாக வெயில் குறையத் தொடங்கும். இவ்வாண்டு அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை (மே 4) தொடங்கி 29-ஆம் தேதி வரை மொத்தம் 26 நாள்கள் நீடிக்கிறது.
இந்நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வேலூரில் உச்சகட்டமாக வியாழக்கிழமை 112 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கோடைக்காலம் தொடங்கும் முன்பாக பிப்ரவரி இறுதியில் இருந்தே வேலூரில் வெயிலின் அளவு அதிகரித்துக் காணப்பட்டது. மார்ச் மாதத்திலேயே 100 டிகிரியை கடந்து வெப்பம் பதிவான நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் காணப்பட்டது.

கடந்த சில நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட போதிலும் வெயிலின் தாக்கம் குறையாமல் அனல் காற்று வீசி வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இந்தாண்டில் அதிகபட்சமாக 112 டிகிரி வெப்பம் பதிவானது. இதன்காரணமாக, பகலில் கடுமையான அனல் காற்று வீசியதால் மக்கள் வெளியில் நடமாடவும், வாகனங்களில் செல்லவும் கடும் அச்சமடைந்தனர்.
வேலூரில் அதிகபட்சமாக கடந்த 2000-ஆம் ஆண்டில் 112 டிகிரி வெயில் பதிவானது. அதன்பிறகு, இதுவரை இந்த வெப்ப நிலைக்கு அதிகமாக வெப்பம் பதிவாகாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு இரு நாள்களுக்கு முன்பாகவே 112 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதால் கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் 112 டிகிரியை கடந்து புதிய உச்சம் தொட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள பகல்நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், பருத்தி ஆடைகளை அணியவும், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிக அளவில் உட்கொள்ளவும் வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நன்றி கெட்ட மனிதர்கள்...நன்றியுள்ள நாய்கள்! 

dinamani

By கே.பி. மாரிக்குமார் | Published on : 03rd May 2019 01:47 AM |

சேலத்தில் ஒரே நாளில் 63 பேரை வெறி நாய் ஒன்று விரட்டி விரட்டிக் கடித்த செய்தி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாகவே நாய்கள் என்றாலே அவற்றை அருவருப்புடன் கல்லெடுத்து அணுகும் பொதுமக்கள், இப்போது இன்னும் ஒருபடி மேலேபோய் உச்ச உக்கிரத்துடன் அப்பாவி நாய்களைத் தாக்கும் நிலைமை உருவாகியிருக்கிறது. அந்தக் கருப்புநிற சேலத்து நாயை சில இளைஞர்கள் தேடிக் கண்டுபிடித்து அடித்தே கொன்றதாகத் தகவல்.

மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை. அதற்கு மாற்றுக் கருத்தில்லை. உலகெங்கும் குறிப்பாக, வளர்ந்துவரும் நாடுகளில் நாகரிகம், முன்னேற்றம் என்ற பெயரில் சுற்றுச்சூழலைப் பாழாக்கி, இயற்கை வளங்களைச் சீரழித்து, சூழலிய பல்லுயிர்கள் அனைத்தையும் துரிதமாகத் துடைத்துப்போடும் ஒரு போக்கு உருவாகியிருக்கும் இந்த நேரத்தில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் தெரு நாய்கள் விரோதப் போக்கு சரியானதா?

சேலம் மாவட்டத்தில் தெரு நாய் ஒன்று 63 பேரை கடித்ததற்கான நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் அனைத்து நாய்களையும் பிடிக்க முடிவு என்று கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) வந்தது. இந்தக் கட்செவி அஞ்சல், கடந்த 2016-ஆம் ஆண்டு கேரளத்தில் அரசு மற்றும் உச்சநீதிமன்ற அனுமதியோடு கொத்துக் கொத்தாக தெரு நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம்போல தமிழ்நாட்டிலும் நடப்பதற்கு அச்சாரம் இடுகிறதோ என்ற பதற்றம் உருவான நேரத்தில், அதே சேலத்தில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் பன்றி போன்ற விலங்குகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட செய்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதே போல், சிவகங்கை மாவட்டத்திலும் நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தியா முழுவதும் உள்ள தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்திப் பாதுகாக்க, கருத்தடை மற்றும் ரேபீஸ் தடுப்பூசி முறையை மத்திய-மாநில அரசின் ஒருங்கிணைந்த பணியாக அமல்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் 2001-ஆம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தது.
2001-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும், 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து தனியார் விலங்குகள் நல அமைப்புகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அனைத்துத் தெரு நாய்களுக்கும் கருத்தடையும், ரேபீஸ் தடுப்பூசியும் போடும் பணி சரியாக நடந்திருக்குமேயானால், சேலத்தில் எப்படி வெறி நாய் ஒன்று திடீரென்று தோன்றியிருக்க முடியும்?

தவறு செய்கின்ற மனிதர்கள் அதிகாரிகளாக, மருத்துவர்களாக புத்திசாலித்தனமாக தப்பித்துக்கொள்ள, ஏதோ ஒரு நாய் கடிக்க... எதிர்பாராமல் வெறிநாய்க் கடிக்கு ஆளானவர்கள் துடிக்க, மனிதர்களின் நண்பர்களாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பயணித்த அப்பாவி நாய்களைக் கொல்வது பற்றிச் சிந்திப்பதும், பேசுவதும் மானுட மாண்புக்கு அழகா?
ஏற்கெனவே வளர்ச்சி என்ற பெயரில் மண்புழுவில் ஆரம்பித்து சிட்டுக்குருவி வரை அழிக்கத் துணிந்திட்ட நாம், மண்ணுக்குப் பொருந்தாத அயல்நாட்டு நாய்களை செல்லப் பிள்ளைகளாக ஆக்கிக்கொண்டு மண்ணின் மைந்தர்களை தெரு நாய்களாக, வெறி நாய்களாக மாற்றி அவற்றையும் அழிக்க நினைப்பது சரியா?

உயிராய் பிறப்பது எல்லாம் சாகும் என்பது இயற்கை. அதனடிப்படையில் மனிதர்களின் மரணத்துக்கு விபத்துகள், கொலைகள் உள்பட எத்தனையோ காரணிகள் இருக்கின்றன. மனித இனத்தை அழிக்கும் ஆற்றல் படைத்த சாலைகள், வாகனங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவை குறித்து இதுவரை நாம் குரல் எழுப்பவில்லையோ, அதே அணுகுமுறை மற்றும் நியாயத்தைத்தான் தெரு நாய்கள் மற்றும் இன்னபிற உயிர்கள் விஷயத்திலும் மனசாட்சியுள்ள மனிதர்களாக நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு தெருவிலும் அப்பாவியாக படுத்துறங்கும் நாய்களை கல்லால் அடிப்பது, குடியிருப்புப் பகுதிகளில் நாய்கள் இருப்பதே அசிங்கம் என்று கருதுகிற மனநிலைக்கு மனிதர்கள் வந்திருக்கின்றனர். புறக்கணிப்பட்ட இந்த தெரு நாய்களுக்கு பிறக்கும் குட்டிகளில் ஒன்றிரண்டு ஆண் நாய்கள் மட்டும் வளர்ப்புக்கும், ஒரு சில ஆண் நாய்கள் ஒரு சில வணிகபுத்தி மனிதர்களால் விற்பனைக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆனால், பெண் குட்டிகளின் கதியோ... பரிதாபமாக இருக்கிறது.

நமக்கு தாயாக, சகோதரியாக, மகளாக, காதலியாக, மனைவியாக எல்லாம் பெண் வேண்டும். ஆனால், நாய் குட்டிகள் மட்டும் பெண்ணாக இருக்கக் கூடாது. வியாபார நோக்கில் வளர்க்கப்படும் அயல்நாட்டு நாய்களில் பெண் நாய்க்கு அமோக வரவேற்பு இருக்கிறது என்பது பணமுரண் சொல்லும் தனிக் கதை.

ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய்தான். வேட்டையாடும் பிற மிருகங்களுக்கு இல்லாத நற்குணம் நாய்க்கு இருக்கிறது. நாயிடம் இருக்கும் அந்த அன்பும் நன்றியுணர்வும்தான் இன்று நாயை தெருவில் அலைய விட்டிருக்கிறது. அந்த வகையில், அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்.
நாய்கள் குரைப்பதில் கோபமும், ஆத்திரமும் மட்டும் இருப்பதில்லை. அதில் அன்பிருக்கிறது, ஏக்கமிருக்கிறது, வலியிருக்கிறது. நாய்களின் குரைப்பு... அதன் மொழி. அதைக் கண்டு மனிதர்கள் அஞ்சுவது அறியாமை.
உடுத்தும் உடை, உண்ணும் உணவு, வசிக்கும் வீடு, வளர்க்கும் பிராணிகள் என்று எதையெடுத்தாலும் அந்நிய மோகம் பிடித்தாட்டும் தேசம் நம் தேசம்.

 அதே அடிப்படையில் அந்நிய இன நாய்களை இறக்குமதி செய்யும் மனிதர்களின் இந்த நாட்டு நாய் விரோதப் போக்கினால், ஒருவேளை... தெரு நாய்கள் இல்லாமல் போனால், இதனால் உயிர்ச்சங்கிலி எனும் உன்னதமான ஒன்று அறுபட்டு அதன் எதிர்விளைவாக, அந்தந்தப் பகுதிகளில் வாழும் அனைத்து உயிரினங்களுக்குமே ஏதாவது ஒரு பாதிப்பு வரவே செய்யும்.
மனிதர்களின் இந்தப் பல்லுயிர் விரோதப் போக்கு இதே அளவில் நீடித்தால், மனித இனம் மட்டும் எப்படி தனித்து வாழ்ந்து விடும் என்ற இயற்கை மற்றும் சூழலிய ஆர்வலர்களின் கேள்வியில் உண்மை இல்லாமலில்லை.
காவல் துறைக்கு நாய்கள் சிறந்த துப்பறிவாளன் மட்டுமல்ல; பொது சமூகத்துக்கும், உள்ளாட்சி, சுகாதாரத் துறைக்கும் கைதேர்ந்த துப்புரவுப் பணியாளரும்கூட.

நாட்டார் தெய்வங்களுள் பிரதானமானவரும், தமிழர்கள், தமிழின கலாசாரத்தில் முன்னோடி காவல் தெய்வமான கருப்பசாமியின் வாகனம் நாய். இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் பைரவர், காலபைரவர் மற்றும் வைரவர்கள் என்ற பெயரில் புனிதமாக நாய் அழைக்கப்படுகிறது. என் தேசத்தில், என் மதத்தில் ஒரு நாய்கூட உணவின்றித் தவிக்குமேயானால்...அது தேசமுமல்ல, அங்கு இருப்பது மதமும் அல்ல என்பது சுவாமி விவேகானந்தரின் ஆணித்தரமான கூற்று.

தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் தன் வளர்ப்பு நாயான பப்பி எனும் ஆண் நாயோடு அவரது தோட்டத்தில் வழக்கமான நடைப்பயிற்சிக்கு அண்மையில் சென்றபோது, ஐந்தரை அடி நீள நல்ல பாம்பு சீறி வந்துவிட, விசுவாசமான பப்பி அந்த நல்ல பாம்பை கடித்துக் குதறி, தன் முதலாளி நடராஜனின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி எந்த கல் நெஞ்சையும் கரையச் செய்யும். வளர்ப்பு நாய்களின் விசுவாசத்தை, அன்பை இதுபோன்ற ஆயிரமாயிரம் சம்பவங்களால் நாம் பட்டியலிட முடியும்.
தெருவில் பிறந்து மனிதர்களின் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும் எல்லா நாய்களும் வளர்ப்பு நாய்கள்தான்;

செல்லப் பிராணிகள்தான். வீட்டில் வளர்க்கப்பட்டு மனிதர்களின் சுயநல காரணங்களுக்காக ஆதரவின்றி தெருவில் விடப்படும் நாய்கள் எல்லாம் தெருநாய்கள்தான். இங்கு மனிதர்களின் ஆதரவும் அரவணைப்பும்தான் நாய்களின் நிலையை, அந்தஸ்தை தீர்மானிக்கின்றன.

அப்பாவி மனிதர்களைக் கடித்த சேலத்தின் வெறி நாய்க்கு தண்டனை கொடுத்தாயிற்று. வெறிநாய் தடுப்பூசி திட்டம் 18 ஆண்டுகள் இருந்தும், தங்கள் பணியைச் சரிவர செய்யாமல் இன்றும் ஒரு சில நாய்களை வெறி நாய்களாக்கும் அரசு கால்நடை நிர்வாகத்துக்கும், அப்பாவி நாய்களை வதைக்கும் கொடூர மனிதர்களுக்கும் யார் தண்டனை கொடுப்பது? நாய்கள் உள்பட அனைத்து உயிரினங்களுக்கும் சேர்த்துத்தான்

இந்த பூமி. கட்டுரையாளர்:

ஒருங்கிணைப்பாளர்,
நன்றி மறவேல்
(தெரு மற்றும் நாட்டு நாய்களைப் பாதுகாக்கும் கூட்டமைப்பு).

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...