Friday, July 5, 2019

Power shutdown for maintenance tomorrow

Chennai:05.07.2019

Power supply will be suspended in the following areas from 9am to 4pm on Saturday for maintenance work. Supply will be resumed before 4pm if the works are completed.

Seven Wells: Nattu Pillaiyar Koil, Thatha Muthaiappan, Arumugam St, Manikanda St, Seenu Mudali St, Ramakrishnan St, Karuppanna St, Somasundaram St, Vardha Muthaiyappan St, Achariyappan St, Buddhi Sahib St, Sahib Azarath St, Muthu Naicken St, Gate St, Subramani St, Sambu Iyer St, Govindappa St, Amman Koil St, Nattu Pillaiyar St, Krishna Iyer St, Arumugam St, Govindhappa Naicken St, MK Garden, Mint St, Anaikaran St, Girigori St among several other streets and areas.

Pallavaram: Eswari Nagar, Rajaji Nagar, Sanjai Gandhi Nagar, Ganapathy Nagar and 200 Feet Road.

Keelkattalai: Big St, Baskar Nagar, Ranga Nagar, Ambal Nagar (part), Anbu Nagar, Gandhi St, Arul Murugan Nagar, Kirubananda Varrier St, Kumaran Nagar, Sudukadu St, and others.

Pammal: Santhi Road, Muthamizh Nagar, Ranganathan St, Krishna Nagar & Abdul Park St.

Melur: Minjur, TH Road, Theradi St, Seemapuram, RR Palayam/Ariyanvoyal, Pudhpedu, Nadhiyambakkam, Melur, Pattamandhiri, Valloor, Athipattu and other areas in Melur.

Kamaraj Nagar: Kamaraj Nagar, NM Road, Avadi TNHB Area, Vasantham Nagar, Govarthangiri, Paruthipet, Kannapalayam,PHRoad,AvadiMarket,Kumaran Nagar, Periyar Nagar, Anandam Nagar.

Ayanavaram: Raju St, Mettu St, Solaiamman St, Sabhapathi St, Veerasamy St, Palani Andaver Koil St, Elumalai St, NMK St, Muthamman Koil St, Chetty St, Kuppusamy St, SS Devar 1-6 st, and other places.

MMDA Colony: A- Block to RBlock, Kamala Nehru Nagar 1st and 2nd St, Sidco, Ashoka Nagar, Subbarao Nagar, Veerapandi Nagar, Rani Annanagar, Kalki Nagar,100 Feet Road.

Arumbakkam: Metha Nagar, NM Road, MH Colony, Railway Colony, Ampa Skywalk, Franko India, Vaishnav College, Govindan St, Collectrate Colony, Ayyavo Colony, Gayathri Devi, Razak Garden, JD Durai Raj Nagar, Azad Nagar, VGA Nagar, Sbi Officers Colony.

Choolaimedu: Sakthi Nagar 1st to 5th St, Thiruvalluvapuram 1st and 2nd St, Thiruvengadapuram 1st and 2nd St, Nelson Manikam Road, West Namachivayapuram, Choolaimedu High Road, Gill Nagar, Abdulla St, Basha St, Neela Kandan St, Khan St.

Kodambakkam: Bajanai Koil 3rd and 4th St. TNN
HC summons home secretary, former DGP in contempt case

TIMES NEWS NETWORK

Chennai:5.7.2019

The Madras high court has ordered statutory notices to the Tamil Nadu home secretary Niranjan Mardi and former director general of police (DGP) T K Rajendran in connection with a contempt of court proceeding.

Both the officers were directed to appear in the court and explain why a court order dated January 10, 2017 directing the authorities to regularise the services of 168 grade-II constables was not implemented. Justice T Raja passed the interim order on a contempt plea moved by the constables whose services were not yet regularised.

When the plea came up for hearing, additional advocate general submitted that the order was not implemented since the government has filed an appeal against the order and sought the court to adjourn the contempt plea. Refusing to accept the submission, the judge said, “There is no justification for making such a prayer to defer the compliance of the order passed by this court long time back. Since such a prayer can never be entertained, this court is constrained to issue statutory notice.”

The issue pertains to a batch of pleas moved by R Rajakumar and 167 others seeking to regularise their service.

The petitioners joined the state police as grade-II constables in 2011 under category-3 of the Tamil Nadu special police and they received two yearly increments in 2012 and 2013. They had been given earned leave, gratuity and other benefits from 2011. As per the service condition, if such grade-II constables work for 10 years in category-3 in special police they would be transferred to category-2, armed reserve police, with continuity of service and pay protection together with seniority.

Accordingly, the department called for applications from petitioners for entering into category-2 by way of appearing in the examination. After obtaining no objection certificates from their heads of departments, the petitioners appeared and got selected. In the notification inviting applications, the department specifically provided a clause safeguarding their seniority.

However, after selection and granting two yearly increments up to 2013, they were informed that their seniority could be counted only from 2013 and their basic pay would also start from 2013 only while giving all other benefits with continuity from the year 2011.

Aggrieved, the petitioners moved the high court. On January 10, 2017 the court allowed their pleas and directed the authorities to grant continuity of service with all attendant benefits.

Both officers were directed to appear in court and explain why an order directing authorities to regularise services of constables was not implemented

Thursday, July 4, 2019


இந்தியாவின் கண்டு பிடிப்புகளுக்கு காப்புரிமை பெற தவறி விட்டோம்'

Updated : ஜூலை 03, 2019 06:32 | Added : ஜூலை 03, 2019 06:30



சென்னை: ''இந்தியாவின் கண்டுபிடிப்புகளுக்கு, காப்புரிமை பெற தவறி விட்டோம்,'' என, விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், அறிவுசார் சொத்துரிமை குறித்த, இரண்டு நாள் பயிலரங்கம், நேற்று துவங்கியது. மருத்துவ பல்கலை துணைவேந்தர், சுதா சேஷய்யன் தலைமை வகித்தார். இதில், விஞ்ஞானியும், மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில், துணைத் தலைவருமான, மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:




இந்தியாவில், எத்தனையோ கண்டு பிடிப்புகளும், கலைகளும் படைக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்துக்கும், காப்புரிமை பெற்று, காப்பாற்ற நாம் தவறி விட்டோம். ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர், ஸ்டீவ் ஜாப்ஸ், 299 பொருட்களுக்கு காப்புரிமை பெற்றிருந்தார்.

ஆப்பிள் போன்களுக்கு பயன்படுத்தப்படும், சார்ஜர்களின் முனையில் உள்ள, 'பின்'களுக்கும், அவர் காப்புரிமை பெற்றிருந்தார். அதனால் தான், அந்த வகையான பின்களை, பிற நிறுவனங்கள் தயாரிக்க முடியவில்லை. அதுதான், அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அறிவுசார் சொத்துரிமை என்பது, புதிய படைப்புகளை பாதுகாப்பதற்கு மட்டுமின்றி, அதை வர்த்தகப்படுத்தவும் வழிவகுக்கும். இதுபோன்ற சட்டங்களும், நடைமுறைகளும், பல நுாற்றாண்டுகளுக்கு முன் இருந்திருந்தால், உலகத்திற்கு நீதி நெறியை போதித்த திருவள்ளுவர், 1,330 குறள்களுக்கும் காப்புரிமை பெற்றிருப்பார்.

இந்தியாவின் முகவரியாக, வரும் காலங்களில், தொழில்நுட்பம் தான் இருக்கும். எனவே, தொழில்நுட்பங்களை, அடுத்த தலைமுறையிடம் சேர்க்க வேண்டுமானால், அதற்கு காப்புரிமை அவசியம் என்பதை உணர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
இந்தியாவில் முகநூல் சேவை திடீர் பாதிப்பு 

By DIN | Published on : 04th July 2019 02:50 AM |

இந்தியாவில் பிரபல சமூகவலைதளங்களான முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாக்ராம் ஆகியவற்றின் சேவைகள் புதன்கிழமை திடீரென பாதிக்கப்பட்டன.

இதேபோல், மேற்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, தென் அமெரிக்க நாடுகள், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் மேற்கண்ட 3 சமூகவலைதளங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதுகுறித்து முகநூல் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எங்களது செயலிகள் மூலம் படங்களை பதிவேற்றம் செய்தல், விடியோக்களை அனுப்புதல், பிற கோப்புகளை அனுப்புதல் ஆகிய சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதை கூடிய விரைவில் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
"பல்கலைக்கழக முறைகேட்டில் தொடர்புடையவர்கள் அரசியல் செல்வாக்கால் தப்ப முயற்சி' By மதுரை | Published on : 04th July 2019 07:37 AM

  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற முறைகேட்டில் தொடர்புடைய 3 பேரும் அரசியல் பின்புலத்தால் தப்ப முயற்சிப்பதாக தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்புக்குழு புதன்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்புக்குழு விடுத்துள்ள அறிக்கை விவரம்: மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் கடந்த 2014 முதல் 2017 வரை நடந்துள்ள முறைகேடு வெளியே வந்துள்ளது.

500-க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தொலைநிலைக்கல்வி இயக்ககம் மூலம் மதிப்பெண் பட்டியல்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மாணவர்கள் பட்டப்படிப்பில் சேராமலேயே அவர்கள் படித்தார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் எல்லாத் தகவல்களும் திருத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுடைய முகவரிகள், புகைப்படம், தொலைபேசி எண் ஆகியவை அவர்களுடைய விண்ணப்பங்களில் இல்லை.

மேலும் மாணவர்கள் யாரும் பதிவுக் கட்டணம் செலுத்தவில்லை என்று வங்கிகளும் தெரிவித்துள்ளன. கேரளத்தில் உள்ள சில பல்கலைக்கழக மையங்கள் மூலமாக இந்த ஊழல் நடத்தப்பட்டு இருந்தாலும், இவை அனைத்திற்கும் மூல காரணமாக கூடுதல் தேர்வாணையரை லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிடுகிறது.

இந்த முறைகேட்டில் ஏறக்குறைய ரூ.50 கோடி வரை லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. ஏற்கெனவே கூடுதல் தேர்வாணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு கோரியிருந்தது.

அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை நடத்த பல்கலைக்கழக ஆட்சிக்குழு இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்தது. ஆனால் அரசியல் தலையீட்டால் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கவிருக்கிறது. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் அரசியல் பின்புலத்தால் பதவிகளில் இருந்து பணியிடைநீக்கம் செய்யப்படாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல வேலைகளை செய்து வருகின்றனர்.

எனவே முறைகேட்டில் ஈடுபட்ட 3 பேர் மீதும் லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிழைக்குமா ?
பி.எஸ்.என்.எல்., நிறுவனம்   4.7.2019  dinamalar


புதுடில்லி : கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும், பி.எஸ்.என்.எல்., - எம்.டி.என்.எல்., ஆகிய நிறுவனங்களை மீட்கும் வகையில், மத்திய அரசு, 74 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவிக்கான ஏற்பாடுகளுக்காக திட்டமிட்டு வருகிறது.




இத்திட்டத்தில், விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு, 5 சதவீதம் அளவுக்கு கூடுதல் இழப்பீடு தொகை வழங்குவது, 4ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் மூலதன செலவினங்களுக்காக நிதி வழங்குதல் என, பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டில், அரசுக்கு, மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும் நிறுவனங்களில், பி.எஸ்.என்.எல்., முதலாவது இடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டின் முடிவில், இந்நிறுவனத்தின் நஷ்டம், 13 ஆயிரத்து 804 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து, 398 கோடி

ரூபாய் இழப்புடன், எம்.டி.என்.எல்., நிறுவனம், மூன்றாவது இடத்தில் உள்ளது. அரசுக்கு அதிக இழப்பை ஏற்படுத்துவதில், இரண்டாவது இடத்தில், ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது. இந்நிலையில் இந்த இரு தொலைதொடர்பு நிறுவனங்களையும் மீட்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளது.

இது குறித்து, தொலைதொடர்பு துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., - எம்.டி.என்.எல்., நிறுவனங்களை மீட்டெடுக்கும் திட்டத்தின்படி, 4ஜி ஸ்பெக்ட்ரமுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாயும், விருப்ப ஓய்வூதிய திட்டம் மற்றும் முன்கூட்டிய ஓய்வூதிய சலுகைகள் ஆகியவற்றுக்காக, 40 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.

இவைதவிர, இந்த இரண்டு பொதுத் துறை நிறுவனங்களின் மூலதனச் செலவுக்கு, 13 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும், நிறுவன ஊழியர்களின் ஓய்வுக்கான வயதை, 60லிருந்து, 58 ஆக குறைத்து, அவர்களுக்கு நியாயமான ஓய்வூதிய சலுகையை வழங்கவும் திட்டமிடப்படுகிறது. இதன் மூலம், நஷ்டத்தில் இயங்கி வரும் இந்நிறுவனங்களின் சுமையை, கணிசமாகக் குறைக்க முடியும் என அரசு கருதுகிறது. அடுத்து, இந்நிறுவனங்களின் சொத்துக்கள், தொலை தொடர்பு கோபுரங்கள், கைவசம் உள்ள நிலம் ஆகியவற்றின் மூலம் நிதியைத் திரட்டுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.


தொலை தொடர்பு துறையினரைப் பொறுத்த வரை, இந்த இரண்டு நிறுவனங்களை மூடுவதை விட, மீட்பு நடவடிக்கையே சிறந்த வழி என, கருதுகிறார்கள். இதற்காக, 1.2 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களில் அதிக நிதி அழுத்தத்தை வைத்துக் கொண்டு, பங்குவிலக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்குவதும் கடினம். தற்போதுள்ள சிக்கல்களிலிருந்து மீள, இந்த இரு நிறுவனங்களும் இணைந்து, ஒரு கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்துவதும் ஒரு வாய்ப்பாக அமையும்.
காஞ்சி அத்தி வரதர் வைபவம்; மாலை நேர சிறப்பு நுழைவு, இனி கிடையாது

Added : ஜூலை 04, 2019 00:40




காஞ்சிபுரம் : காஞ்சி அத்தி வரதர் வைபவத்திற்கு, உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாலை நேர சிறப்பு நுழைவு, இனி கிடையாது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், திங்கட்கிழமை துவங்கியது. வெளியூர் பக்தர்கள்இந்நிகழ்வு, 40 ஆண்டுகளுக்கு பின், நடைபெறுவதால், அன்றாடம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வந்து, அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.காஞ்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்த பக்தர்கள், கோடை உற்சவம், கருடசேவை உற்சவம் போன்ற உற்சவ நாட்கள் தவிர, மாலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.மாலை, 5:00 மணிக்கு மேல், வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்திருந்தனர்.

ஆனால், மாலை நேரத்தில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் வருவதால், அவர்களுக்கு அனுமதி மறுக்க கோவில் நிர்வாகம் தயங்கியது. இதனால், மாலை நேரத்திலும், அத்தி வரதரை தரிசிக்க, வெளியூர் பக்தர்களுக்கு நேற்று முதல், அனுமதி வழங்கப்படுகிறது.

வருத்தம்:

உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட மாலை, 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை தரிசன நேரத்தில், வெளியூர் பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.இதனால், உள்ளூர் பக்தர்களுக்கு எந்த சிறப்பு நுழைவும் இனி கிடையாது. மாலை நேரத்தில், சிறப்பு நுழைவு கிடையாது என்பதால், ஆதார் அட்டையை பதிவு செய்து, ரசீது பெற, உதவி மையங்களில் கால் கடுக்க நின்ற பக்தர்கள், வருத்தம் தெரிவிக்கின்றனர்.

5:00 மணி வரை மட்டுமே தரிசனம்:

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில், கோடை உற்சவம் இன்று துவங்குவதால், அத்தி வரதரை, மாலை, 5:00 மணி வரை மட்டுமே, பக்தர்கள் தரிசிக்க முடியும். வரும், 10ம் தேதி வரை, கோடை உற்சவமும், 11ல், ஆனி கருடசேவையும், 25 முதல் ஆக., 4 வரை, ஆடி பூரம் உற்சவமும், ஆக., 13 மற்றும் 14ல், ஆளவந்தார் சாற்றுமுறையும், 15ல், ஆடி கருடசேவையும் நடைபெற உள்ளது. இந்த நாட்களில், மாலை, 5:00 மணி வரை மட்டுமே அத்தி வரதரை தரிசிக்க முடியும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...