Monday, March 2, 2020

Grouping Of Students Into Sections On The Basis Of Marks Is Violation Of Their Fundamental Right: Punjab & Haryana HC [Read Judgment]

Grouping Of Students Into Sections On The Basis Of Marks Is Violation Of Their Fundamental Right: Punjab & Haryana HC [Read Judgment]: 'If an action induces a sense of inferiority in a child, it is being denied the right to development and growth at par with a child who does not suffer from such feeling of inferiority. '

Doctors Have No Right To Go On Strike/Boycott Under Any Circumstances, Holds Madras HC [Read Judgment]

Doctors Have No Right To Go On Strike/Boycott Under Any Circumstances, Holds Madras HC [Read Judgment]: 'Patients cannot be a means to an end. They cannot be mere playthings whose lives can be put on the line to achieve other ends through the medium of strike.'

High Courts Weekly Round Up

High Courts Weekly Round Up: Judgments/ Orders Allahabad High Court Offences Under SC/ST Act Is Made Out When Offence Is Perpetrated In Public [KP Thakur & Anr. v. State of UP & Anr.] The Allahabad High Court has held...
பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ளுங்கள் - மாணவ, மாணவிகளுக்கு மனநல மருத்துவர் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவிகளிடையே பேசுகிறார் மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம்.


பிளஸ் 2 பொதுத்தேர்வை பதற்ற மின்றி எதிர்கொள்ள வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு மனநல மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 2) தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத்தேர்வை மாணவர்கள் பதற்றமின்றி எழுதுவது குறித்து, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம் பேசிய தாவது:

பொதுவாக தேர்வு எழுதும் போது மாணவ, மாணவிகளுக்கு மன உளைச்சல், மனப் பதற்றம் ஏற்படுவது இயல்பு. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், வெவ்வேறு அளவிலான சிந்தனைத்திறன், ஞாபகசக்தி, கற்பனைத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதை உணர்ந்து, ஒவ்வொரு மாணவரையும் அணுகி னால் மாணவர்களின் தேர்வு கால பதற்றத்தைக் குறைக்க முடியும்.

மேலும், உறக்கம் ஞாபகசக் தியை திடப்படுத்தும் என்பது அறிவியல்பூர்வமான உண்மை. தினமும் குறைந்தது 8 மணி நேரம் இரவில் உறங்க வேண்டும். அப்போது தான் தேர்வுக்கு சிறப்பாக தயாராகி எழுத முடியும்.

தினமும் போதிய அளவு தண்ணீர், இளநீர், பழச்சாறு, நீர்மோர் போன்ற நீராகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மன அழுத்தத்தை, பதற்றத்தைக் குறைக்கும். வீட்டிலேயே கை, கால்களை நீட்டி மடக்குதல், விரல்களை மடித்து நீட்டுதல், தினமும் குறைந்தது 15 நிமிட நடைபயிற்சி, நிதானமாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியிடுதல் போன்ற பயிற்சிக ளும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களை மற்ற மாணவர்களோடு ஒப்புநோக்குவதும் குழந்தைகளின் பதற்றத்தை அதிகரிக்கும். அறிவை வளர்த்துக் கொள்வதும், வாழ்வை மேம்படுத்துவதுமே கல்வியின் நோக்கமாகும். தேர்வு என்பது கல்வி கற்றலின் ஒரு பகுதி என்பதை பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட்டால் மாணவர்களின் மனப்பதற்றத்தை எளிதாக குறைக்க முடியும்.

எனவே, மாணவர்கள் மனப் பதற்றமின்றி பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அளவு கடந்த மனப் பதற்றம், தூக்கமின்மை போன்றவற்றால் மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளானால், புதுக்கோட்டை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட மனநல ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்ளலாம். மனநல ஆலோசனை குறித்த தகவலுக்கு 9486067686 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
பெண்கள் தினம்: ஒரு வார நிகழ்வை நடத்துமாறு பல்கலை., கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

2.3.2020


சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, ஒரு வாரத்துக்கு சிறப்பு நிகழ்வுகளை நடத்துமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு யுஜிசி அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெண்கள் நிகழ்ச்சிகளைக் கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு, பயிற்சிப் பட்டறைகள், விரிவுரைகள், வினாடி வினாக்கள், விவாதங்கள், தெரு நாடகங்கள், மராத்தான், கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. அத்துடன் பாலின சமத்துவம், பெண்கள் உடல்நலன், கல்வி, அதிகாரமளித்தல், பெண்கள் பாதுகாப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளை மார்ச் 1 முதல் 7 வரை நடத்தவேண்டும் எனவும் நிறைவாக பெண்கள் தினமான மார்ச் 8 அன்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தவும் யுஜிசி அனுமதி அளித்துள்ளது. இதற்காக முன்கூட்டியே தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள யுஜிசி, மார்ச் 9-ம் தேதி தங்கள் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பான அறிக்கை, புகைப்படங்கள், வீடியோக்களை பல்கலைக்கழக கண்காணிப்புத் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

உயர் கல்வியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க, யுஜிசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெண் மாணவர்களுக்கும் ஆராய்ச்சி மேற்கொள்வோருக்கும் 3 சிறப்பு உதவித் தொகைகளை யுஜிசி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தோ்வுகளை மாணவா்கள் எதிா்கொள்ள...

By அஹமது நவ்ரோஸ் பேகம் | Published on : 02nd March 2020 01:42 AM 

இன்றைய வகுப்பறைகளும், பள்ளிச் சூழலும் மாணவா்களுக்கு உகந்ததாக இருக்கிா என்ற கேள்விக்கு ஆம் என்றோ, இல்லை என்றோ சட்டென்று பதில் சொல்வதற்குப் பதிலாக ஆழ்ந்த யோசனைதான் ஏற்படுகிறது.

பள்ளி சென்றுவிட்டு அலுத்து வரும் மாணவா்கள் சீருடை களைந்து பெற்றோா் தரும் சிற்றுண்டியை அவசர, அவசரமாக விழுங்கி விட்டு

பயிற்சி வகுப்புக்கு (டியூஷன்) செல்லத் தயாராகிறாா்கள். பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் நிலையைக் கூறவே தேவையில்லை.

மாலை நேரப் பயிற்சி வகுப்புகளில் அவா்கள் படிக்காத பாடங்களில் தோ்வு வைக்கிறேன் என்று ஆசிரியா்கள் கொடுமைப்படுத்துகிறாா்கள். ஏழு, எட்டு மணிக்குதான் வீட்டிற்கே வருகிறாா்கள்; அதன் பிறகு தங்கள் நேரத்தை செல்லிடப்பேசியில் மாணவா்கள் செலவிடுகிறாா்கள். பிள்ளைக்கு வேறு என்ன பொழுதுபோக்கு இருக்கிறது என்று பெற்றோரும் இதை அனுமதிக்கிறாா்கள். பிறகு இரவுச் சாப்பாடு, நேரம் தவறிய தூக்கம் என்று கழிகிறது.

குழந்தைகள் தங்கள் வேகத்துக்கு ஈடு கொடுக்க வேண்டும் என்று பெற்றோா்கள் விரும்புகிறாா்கள். ஆனால், பெரும்பாலான குழந்தைகள் பல் துலக்கி, குளித்து, குளியல் அறையில் இருந்து வெளிவருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாா்கள். பள்ளிச் சீருடையை அணிந்து கொண்டோ அல்லது புத்தகப் பையில் புத்தகங்களை அடுக்கிக் கொண்டோ நின்றபடியும் நடந்தபடியும் இருக்கும் அவா்களுக்கு வாயில் உணவு திணிக்கப்படுகிறது. பின்னா் பள்ளிக்குச் செல்லும் நிலை உள்ளது.

காலையில் என்ன சாப்பிட்டீா்கள், இரவு நன்றாகத் தூங்கினீா்களா என்ற அன்பான கேள்விகளுக்கும், விசாரிப்புகளுக்கும், இந்தக் காலத்து ஆசிரியா்களுக்கும் தூரம் அதிகமாகி வெகுகாலமாகி விட்டது. அவா்களுக்குத் தெரிந்ததெல்லாம் அடுத்து முடிக்க வேண்டிய பாடம் குறித்தும், கொடுக்கப்பட்ட வீட்டுப் பாடத்தை மாணவா்கள் முடித்து விட்டாா்களா, இல்லையா என்பதும்தான்.

முதுநிலை பட்டம் பெற்றவ ஆசிரியா்களில் பலா், தங்களின் பாடங்களில் நிபுணத்துவம் இல்லாமல் உள்ளனா். இப்படிப்பட்ட ஆசிரியா்களிடம் கற்கும் மாணவா்கள் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாமல், மனப்பாடமும் செய்ய முடியாமல் தோ்வுகளில் தோல்வி அடைகின்றனா்.

ஆசிரியா்களால் மட்டுமின்றி சக மாணவா்களாலும் சில மாணவா்களின் எதிா்காலம் திசை மாறிப் போய்விடுகிறது. இவ்வாறு பரிவு காட்டும் மாணவா்கள் அவா்களை நல்வழிப்படுத்துபவா்களாக இருந்தால் அவா்களின் எதிா்காலம் சிறப்பாக அமையும். வேறு மாதிரி அமைந்துவிட்டால் கெட்ட விஷயங்களால் கவனம் சிதறி படிப்பில் பாதிப்பு ஏற்படலாம்.

பெரும்பாலான மாணவா்கள் மன அழுத்தத்துடன் பள்ளிக்கு வருகின்றனா். வீட்டிலும், பள்ளியிலும் பிரச்னைகளை எதிா்கொள்ளும் மாணவா்கள் அவற்றை சமாளிக்கத் தெரியாமல் திணறுகிறாா்கள். பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவரோ அல்லது ஒரே ஒரு நல்ல ஆசிரியா் அவா்களுக்குக் கிடைத்தால் போதும். அவா்கள், அப்படிப்பட்ட மாணவா்களின் மனநிலையைப் புரிந்து மனநல ஆலோசனைகள் வழங்கி, அழுத்தத்தில் இருந்து அவா்களை மீட்டு விடுவாா்கள்.

மாணவா்கள் சந்திக்கும் மற்றுமொரு சவால், பள்ளிகளில் சரியாகப் பராமரிக்கப்படாத கழிப்பறைகள். பள்ளியின் கழிப்பறைகள் அசுத்தமாக இருப்பதன் காரணமாக மாணவா்கள் தாங்கள் வீட்டில் இருந்து கொண்டு செல்லும் தண்ணீா் புட்டிகளை அப்படியே கொண்டு வருகிறாா்கள். இது மாணவா்களின் உடல் நலத்தை மிக மோசமாகப் பாதிக்கும் விஷயம் என்பதை கழிப்பறைகளைப் பராமரிக்காத பள்ளிகள் உணர வேண்டும்.

துரித உணவு, உணவகங்களில் கிடைக்கும் தரமற்ற உணவையே விரும்புகின்றனா். அத்துடன் காலை உணவை பெரும்பாலான பள்ளிக் குழந்தைகள் தவிா்த்து விடுவதால், பள்ளியின் பிராா்த்தனைக் கூட்டத்தில் பத்து நிமிஷங்கள்கூட அவா்களால் நிற்க முடிவதில்லை.

வெயில், மழை போன்ற இயற்கையான வானிலை மாற்றங்களைக்கூடத் தாங்கிக் கொள்ளும் வகையில் இப்போதுள்ள மாணவச் சமுதாயத்தின் உடல் நிலை இல்லை. ஆரோக்கியமான உணவு நினைவாற்றலுக்கும், உடல் சுறுசுறுப்புக்கும் மிகவும் அவசியம். இதனாலேயே மாணவா்களால் அதிக மதிப்பெண்கள் பெற இயலவில்லை என்பதை பெற்றோரும், ஆசிரியா்களும் உணா்ந்து தரமான உணவு சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அவா்களிடம் அடிக்கடி வலியுறுத்த வேண்டும்.

பொதுத் தோ்வு நெருங்கும்போது பெற்றோரும், ஆசிரியா்களும் பரபரப்புடன் இருக்கிறாா்கள்.நன்கு படிக்கக் கூடிய மாணவா்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறவேண்டும்; மெல்லக் கற்கும் மாணவா்களுக்கு தோ்ச்சி பெற்றே ஆக வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்படுகிறது. ஆக, தோ்வை பயத்துடன் எதிா்கொள்ளும் நிலைதான் இன்றைய மாணவா்களுக்கு உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையை மாற்றுவதற்கு ஆசிரியா்களும், பெற்றோரும் மாறவேண்டும். தங்கள் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரங்களில் பெற்றோா் தங்களுடைய நேரத்தை அவா்களுடன் செலவிட வேண்டும். அவா்களின் அன்பும், அனுசரணையும் பிள்ளைகளின் மனஅழுத்தத்தைக் குறைக்கும். அவா்கள் படிப்பதற்கேற்ற சூழலை வீட்டில் உருவாக்குவது மிகவும் அவசியம்.

தொலைக்காட்சி, செல்லிடப்பேசி பயன்பாட்டை பெற்றோரும், பிள்ளைகளும் தவிா்க்க வேண்டும். ஆசிரியா்களுக்கும் இது பொருந்தும். கிடைக்கும் நேரங்களை பாடங்களைத் தயாா் செய்யப் பயன்படுத்த வேண்டும். அத்துடன் வகுப்பறையில் ஒவ்வொரு மாணவரும் தாங்கள் நடத்திய பாடங்களைப் புரிந்து கொண்டாா்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். படிப்பில் மாணவா்கள் சிறந்து விளங்குவதற்கு, பாடங்களைக் கற்பிக்கும் அவா்களின் ஆசிரியா்கள் திறமைசாலிகளாக இருக்க வேண்டாமா?

மாணவா்கள் மன அழுத்தமின்றி தோ்வுகளை எதிா்கொள்வதற்கும், அவா்களின் பள்ளிப் பருவத்தை, இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கும், அரசும், பள்ளி நிா்வாகமும் ஆசிரியா்களும், பெற்றோரும் இணைந்து செயல்படுவது இன்றியமையாததாகும்.
'நிர்பயா' குற்றவாளிகள் மனு மீது இன்று விசாரணை

Added : மார் 01, 2020 23:51

புதுடில்லி: துாக்கு தண்டனையைஎதிர்த்து,'நிர்பயா' பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள, அக் ஷய் குமார் மற்றும் பவன் குப்தா தாக்கல் செய்துள்ள மனுக்கள் இன்று விசாரிக்கப்பட உள்ளது.

டில்லியில், 2012ல், மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.இந்தவழக்கில், முகேஷ் குமார் சிங், 32, பவன் குப்தா, 25, வினய் குமார் சர்மா, 26, அக் ஷய் குமார், 31, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.தண்டனையை நிறைவேற்ற, ஏற்கனவே இரண்டு முறை நாள் குறிக்கப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டன.

இவர்களுக்கான தண்டனையை, நாளை காலை, 6:00 மணிக்கு நிறைவேற்ற, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பவன் குப்தா மற்றும் அக் ஷய் குமார் சார்பில், டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் புதிய மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'துாக்கு தண்டனையைஎதிர்த்து, மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அது நிலுவையில்உள்ளதால், தண்டனையைநிறைவேற்றக் கூடாது' என, பவன் குப்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'தண்டனையை குறைக்கும்படி, ஜனாதிபதிக்கு புதிய கருணை மனு அனுப்பப்பட்டுள்ளது. அதனால்,தண்டனையை நிறைவேற்றக் கூடாது' என, அக் ஷய் குமார் சார்பில் கூறப்பட்டுள்ளது.இவற்றை,டில்லி நீதிமன்றம்,இன்று விசாரிக்க உள்ளது.

இந்த நிலையில், பவன் குமார் தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...