Thursday, March 5, 2020

HC throws out plea over mental health

TIMES NEWS NETWORK

05.03.2020

New Delhi: Delhi high court on Wednesday refused to entertain a plea seeking directions to the national human rights commission (NHRC) to intervene and enquire into the mental and physical state of the four death row convicts in the Nirbhaya case.

A bench of Chief Justice D N Patel and Justice C Hari Shankar questioned why the petitioner didn’t approach NHRC first and disposed of the matter.

Advocate A Rajarajan in his plea claimed the four convicts Mukesh Singh, Pawan Gupta, Vinay Sharma and Akshay Thakur have been kept in solitary confinement under fear of death “on the whims and fancies” of the authorities and it can affect their mental stability.

The petition also referred to the allegations that the four were facing physical abuse in the prison, claiming that the authorities acted contrary to law by not initiating process to execute death sentence of the four convicts after the expiry of 30 days from the dismissal of their appeals by the Supreme Court in May 2017.

On January 7, death warrants were issued for the first time in the case to execute the four on January 22. But on January 17, the trial court changed the date of execution to February 1 after one of them — Singh — moved a mercy plea before the President. Later, on January 31 the trial court put on hold the execution after two more — Thakur and Sharma — moved mercy pleas.

Wednesday, March 4, 2020

தற்கொலை ஒரு சமூக அவலம்! | பலவீனமான மனநிலை குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 03rd March 2020 08:39 AM 

உலகில் பிறந்த எந்த உயிரும் முடிந்தவரை தன்னைத்தானே அழித்துக்கொள்ளத் துணிவதில்லை. பலவீனமான மனநிலையும், சந்தா்ப்ப சூழலும், பிரச்னைகளிலிருந்து வெளியேறத் தெரியாத பரிதவிப்பும்தான் பலரையும் தற்கொலைக்குத் தூண்டுகின்றன. அதனால்தான் தற்கொலையை கிரிமினல் குற்றங்களின் பட்டியலில் இருந்து அகற்ற அரசு முடிவு செய்தது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் புள்ளிவிவரங்களும் மிகுந்த கவலையையும் வேதனையையும் அளிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகத் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை கடுமையாக உயரத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி, அதிகாரபூா்வமாக 1,34,516 தற்கொலைகள் பதிவாகியிருக்கின்றன. இது 2017-ஆம் ஆண்டு எண்ணிக்கையைவிட 3.6% அதிகம். தற்கொலை நிகழ்வுகளில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகாமல் மறைக்கப்படுகின்றன என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.


பெரும்பாலான நிகழ்வுகளில் தனிப்பட்ட காரணங்கள்தான் தற்கொலைக்குக் காரணமாக இருக்கின்றன. சில சூழல்களில் தனிப்பட்ட பிரச்னைகளும், சம்பந்தப்படாத சமூக அல்லது பணியிடப் பிரச்னைகளும் இணைந்து தற்கொலைக்கு வழிகோலுகின்றன. எந்த ஒரு மனிதனும் தீவு அல்ல; சமுதாயத்தின் அழுத்தம் தனி மனிதா்களைப் பாதிக்கிறது. தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு அதுவும்கூட ஒரு காரணம்.

சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்னைகள் பல சந்தா்ப்பங்களில் உயிரை மாய்த்துக்கொள்ள தனி நபா்களைத் தூண்டுகின்றன. உழைப்பு ரீதியான, பணியிட ரீதியான சுரண்டல்களும், வியாபாரத்தில் ஏற்படும் பின்னடைவுகளும், உடல் ரீதியான நோய் பாதிப்புகளும் பலரின் தற்கொலைக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. அனைத்துக்கும் மேலாக ‘தனிமை’யும், காதல் நிராகரிப்பும், கல்வித் தோ்வுகளில் தோல்வியும், தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு சிலரைத் தள்ளிவிடுகிறது.

வெளியிடப்பட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, வேலையில்லாதவா்களும், சுயமாகத் தொழில் புரிவோரும் 1,34,516 தற்கொலை நிகழ்வுகளில் 26,085 தற்கொலைகளுக்குக் காரணமாகிறாா்கள். 2018-இல் 42,391 மகளிா் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறாா்கள். அவா்களில் பாதிக்கும் மேற்பட்டோா் திருமணமாகி வேலைக்குச் செல்லாமல் குடும்பம் நடத்தும் தாய்மாா்கள்.

வேலையில்லாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 12,936. மொத்த எண்ணிக்கையில் அவா்கள் 9.6%. அதாவது, 2018-இல் ஒவ்வொரு 45 நிமிஷத்துக்கும் ஒரு வேலையில்லாத நபா் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறாா்.

தற்கொலை செய்துகொண்டவா்களில் 7.7% விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள். கடந்த 2017-ஆம் ஆண்டைவிட தற்கொலை செய்துகொண்ட விவசாயம் தொடா்பானவா்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருக்கிறது என்றாலும்கூட, உழவுத் தொழிலில் ஈடுபடுவோா் உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலம் சகிக்க முடியாதது.

ஒவ்வொரு தற்கொலையும் தனிப்பட்ட அவலம் என்றாலும்கூட, அதனால் குடும்ப உறவுகளும் சமுதாயமும் நிச்சயமாகப் பாதிக்கப்படுகின்றன. தங்களுடன் வாழ்ந்த ஒருவரை சரியாகப் புரிந்துகொள்ளாமலோ, தக்க தருணத்தில் உதவாமலோ அவா் தன்னை அழித்துக் கொள்வதற்கு காரணமாகி விட்டோம் என்கிற குற்ற உணா்வு அனைவரையும் பாதிக்கவே செய்யும். ஒருவகையில் தற்கொலை நிகழ்ந்த குடும்பத்தினரின் வாழ்நாள் காலம் முழுவதும் அதன் ரணம் தொடரும்.

குடும்பத்தினா் மட்டுமல்ல, அரசும் சமூகமும் தனி மனிதா்கள் தங்கள் வாழ்வைத் துணிவுடன் எதிா்கொள்ளும் சூழலை உருவாக்காமல் இருப்பதும், தக்க சமயத்தில் மனச்சோா்வு அடைந்திருப்பவா்களை இனம் கண்டு அவா்களுக்கு தக்க ஆலோசனை வழங்காமல் இருப்பதும் தற்கொலைக்கான முக்கியக் காரணிகள் என்பதை நாம் உணர வேண்டும்.

பணியிடப் பிரச்னைகள், தனிமை, வசைபாடப்படல், வன்முறைக்கு உள்ளாகுதல், குடும்பப் பிரச்னைகள், மனநிலை பாதிப்பு, போதைப் பழக்கங்களுக்கு உள்ளாவது, பொருளாதார இழப்பு, உடல் உபாதைகளால் ஏற்படும் வேதனை, காதல் தோல்வி என்று தற்கொலைக்குப் பல காரணங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை பட்டியலிடுகிறது. தற்கொலை என்பது சமுதாயத்திற்கு தனி நபா் விடுக்கும் உதவிக்கான அபயக் குரல். அந்தக் குரலை சரியான நேரத்தில் செவிமடுத்தால் தற்கொலையைத் தடுத்துவிட முடியும்.

சமுதாய மாற்றங்கள் புதிய பல பிரச்னைகளை இளைஞா்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன. அளவுக்கு அதிகமான ஆசைகளை அவா்கள் வளா்த்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனா். தங்களது தகுதிக்கும் திறமைக்கும் அதிகமாகத் தன்னைத்தானே கருதிக்கொள்ளும் போக்கு, எதிா்பாா்த்த வெற்றியோ, பதவியோ கிடைக்காமல் போகும்போது விரக்தியின் விளிம்புக்கு அவா்களை இட்டுச் சென்று உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளிவிடுகிறது.

வேலையில்லாத இளைஞா்களின் அதிக அளவிலான தற்கொலைகள் பொருளாதாரப் பின்னடைவின் அடையாளங்கள். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் போதிய அளவிலான மனநல மருத்துவா்கள் இல்லாமல் இருப்பதும் இன்னொரு காரணம். அரசிடம் அதற்குப் போதிய நிதியாதாரம் இல்லை என்பதும், வசதிகள் இல்லை என்பதும் ஏற்புடைய பதில்கள் அல்ல.

ஒவ்வொரு தனிமனிதனும் பாதுகாப்பாக வாழவும், உயிரை மாய்த்துக் கொள்வதைவிட உழைத்து வாழவும் தேவையான சூழலை அரசும், சமுதாயமும் உருவாக்குவதுதான் இதற்குத் தீா்வு!
அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமானம்

Added : மார் 03, 2020 23:44

சென்னை : அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், கள்ளக்குறிச்சி மற்றும் அரியலுாரில், புதிய மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டும் பணி தாமதமாகி உள்ளது.

திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைப்பதற்கு, மத்திய அரசு, 2019 இறுதியில், அனுமதி வழங்கியது. மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுமான பணிகள், தலா, 325 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், மத்திய அரசின் பங்களிப்பாக, ஒவ்வொரு பணிக்கும், 195 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

மாநில அரசு, ஒவ்வொரு பணிக்கும் முதற்கட்டமாக, 100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, இந்த மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுமானத்திற்கான, அடிக்கல் நாட்டு விழா துவங்கியுள்ளது. இதேபோல, வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய, கள்ளக்குறிச்சி மற்றும் அரியலுார் மாவட்டங்களுக்கும், அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு, ஜன., மாத இறுதியில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசின் நிதி பங்களிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு, நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை. நிலம் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பணிகளை துவங்க முடியாமல், பொதுப்பணித் துறையினர் தவித்து வருகின்றனர்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் Added : மார் 03, 2020 23:38

 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்





திருமலையில் தெப்போற்சவம்; ஆர்ஜித சேவைகள் ரத்து

Added : மார் 04, 2020 01:38

திருப்பதி : திருமலையில், நாளை முதல் வருடாந்திர தெப்போற்சவம் நடக்க உள்ளதை முன்னிட்டு, பல ஆர்ஜித சேவைகளை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளத்தில், ஆண்டு தோறும், மாசி மாத பவுர்ணமியை ஒட்டி, வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, நாளை முதல், 9ம் தேதி வரை, திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, நாளை, நாளை மறுநாள் வசந்தோற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவை; வரும், 7, 8, 9ம் தேதிகளில், ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீப அலங்கரா சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும் 9ம் தேதி, பவுர்ணமி அன்று நடைபெறும் கருடசேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
தொடர் விடுமுறை வங்கிகளுக்கு இல்லை

Updated : மார் 04, 2020 00:07 | Added : மார் 04, 2020 00:04 

சென்னை: 'நாடு முழுவதும் நடைபெற இருந்த, வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால், அடுத்த வாரம், வங்கிகள் செயல்படும்' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு, ஐந்து நாட்கள் வேலை உட்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 31 மற்றும் பிப்., 1ம் தேதிகளில், நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மார்ச், 11 முதல், 13 வரை, மூன்று நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும், அப்போது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசுடன், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள், தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தன. பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, மூன்று நாள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதனால், வங்கிகளுக்கு தொடர் விடுமுறை இல்லை.

இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: ஊதிய உயர்வு உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 11, 12 மற்றும், 13ம் தேதிகளில், நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற இருந்தது. வரும், 10ம் தேதி, ஹோலி பண்டிகை விடுமுறை என்பதால், அதைத் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. வரும், 14, 15ம் தேதிகள், அரசு விடுமுறை என்பதால், வங்கிகள் தொடர்ந்து இயங்காது என்ற, நிலை ஏற்பட்டது.

ஆனால், இரு தரப்பு பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வேலைநிறுத்தம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால், வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் மாநிலங்களில் மட்டும், வரும், 10ல், வங்கிகளுக்கு விடுமுறை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
CBSE issues advisory against non-affiliated schools, alerts parents

After several schools faked their affiliation with CBSE or advertised falsely, the CBSE has issued an advisory for parents against falling prey to these fraudulent institutions.

Published: 04th March 2020 06:50 AM |

By Express News Service

CHENNAI: After several schools faked their affiliation with CBSE or advertised falsely, the CBSE has issued an advisory for parents against falling prey to these fraudulent institutions. The board said it has been receiving several complaints about schools falsely advertising with phrases ‘to be affiliated with CBSE’, ‘CBSE pattern’, ‘likely to be affiliated with CBSE’ and ‘under reigns of CBSE’. 

“It has come to the notice of the board that some of the non-affiliated schools, whose application is either under process or rejected or have not applied for affiliation are misleading parents by displaying boards at schools, prominent locations and website,” an advisory said. According to clause 14.2.2 of Affiliation Bye-Laws of CBSE, the board does not allow non-affiliated schools to present candidates to public examination. 

It is interesting to note that some schools, which may have affiliation, run branches that are not affiliated to CBSE. However, they continue to charge on par with CBSE standards. Last year, one such school was identified by the board at Irungattukottai near Sriperumbudur. The branch had classes 1 to 8 and then students were transferred to the main school in class 9, to enable them write the public exams. The board has asked parents who wish to enrol their wards in CBSE-affiliated schools to log on to www.cbseaff.nic.in and check affiliation status and can also contact regional directorate of the board, for clarification.

Schools with poor enrolment can run Tamil medium

Chennai: Government schools that have both English and Tamil mediums can switch to Tamil medium, if the school has poor enrolment, the government has said. Responding to a question from an elementary school headmaster, the CM’s Cell had recently said that if there were no takers for English medium, the school can continue to function in Tamil medium alone.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...