Wednesday, May 5, 2021

மத்திய அரசு அலுவலகம் கட்டுப்பாடுகள் தொடரும்


மத்திய அரசு அலுவலகம் கட்டுப்பாடுகள் தொடரும்

Added : மே 04, 2021 22:13

புதுடில்லி  கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளதால், மத்திய அரசு அலுவலகங்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட வேலை நேரம், 50 சதவீத ஊழியர் மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள், மாத இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 'ஊழியர்கள் மாறுபட்ட வேலை நேரங்களில் பணியாற்றலாம்; 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வர வேண்டும்' என, அறிவிக்கப் பட்டு இருந்தது.'இந்தக் கட்டுப்பாடுகள்,இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது. அனைத்து துறைகளுக்கும் இது பொருந்தும்' என, மத்திய பணியாளர் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பைவிட, அதனால் ஏற்பட்டுள்ள அச்சம், மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், புதிய வழிகாட்டியை வெளியிட்டுள்ளது.கொரோனா குறித்த அச்சத்தை நீக்கும் வகையில், 'எப்படி செயல்பட வேண்டும்' என, தொற்று ஏற்பட்டுள்ளோர், அவருடைய குடும்பத்தார், முன்கள பணியாளர்களுக்கு என, தனித்தனியாக, வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

முதல்வரின் முதல் கையெழுத்து; அதிகரிக்கிறது எதிர்பார்ப்பு

முதல்வரின் முதல் கையெழுத்து; அதிகரிக்கிறது எதிர்பார்ப்பு

Updated : மே 05, 2021 05:15 | Added : மே 05, 2021 05:13 

சென்னை : முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதும், எந்த திட்டத்தை செயல்படுத்த, முதல் கையெழுத்திடுவார் என்ற, எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க., பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உரிமைத் தொகை; கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன் கடைகளில், ஜூன், 3ம் தேதி, 4,000 ரூபாய் உதவித்தொகை. காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம்; எரிபொருள் விலை, 5 ரூபாய் வரை குறைப்பு; ஆவின் பால் லிட்டருக்கு, 3 ரூபாய் குறைப்பு; அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச அனுமதி உள்ளிட்ட, பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றன.

இதுமட்டுமின்றி, ஒவ்வொரு தொகுதியிலும், பொது மக்களிடம் புகார் மனுக்களை ஸ்டாலின் வாங்கினார். ஆட்சி பொறுப்பேற்ற, 100 நாட்களில், இந்த மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியையும், ஸ்டாலின் அளித்துள்ளார். இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வரும், 7ம் தேதி, முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். அதன்பின், தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் அறைக்கு சென்று, பணிகளை துவங்கவுள்ளார்.

அப்போது, தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தபடி, எந்த திட்டத்தை செயல்படுத்த, அவர் முதல் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு, தி.மு.க.,வினர் மட்டுமின்றி, பொது மக்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை, இலவச பஸ் பயண அனுமதி ஆகிய திட்டத்தை செயல்படுத்த, அவர் முதல் கையெழுத்திட, அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Tuesday, May 4, 2021

நர்ஸ் மகளுக்கு கருணை பணி பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

நர்ஸ் மகளுக்கு கருணை பணி பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

Added : மே 04, 2021 00:37

மதுரை:அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ் கொலை செய்யப்பட்டதால், ஆதரவற்ற நிலையில் உள்ள மகள், கருணைப் பணி நியமனம் கோரியதில், தமிழக அரசு பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸாக பணிபுரிந்தவர் முருகேஸ்வரி. இவரை, 2006ல் அவரது கணவர் கொலை செய்து, ஆயுள் கைதியாக சிறையில் உள்ளார்.கருணைப் பணி நியமனம் கோரி, முருகேஸ்வரியின் மகள் கீதாஞ்சலி, தமிழக அரசுக்கு விண்ணப்பித்தார். பரிசீலிக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து, கீதாஞ்சலி மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.சுகாதாரத் துறை தரப்பு, 'மனுதாரரின் தாய் இறந்த மூன்று ஆண்டுகளுக்கு பின், பணிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இம்மனு ஏற்புடையதல்ல' என தெரிவித்தது.

மனுதாரர் தரப்பு, 'இதை விசித்திரமான வழக்காக கருதி, பரிசீலிக்க வேண்டும். மனுதாரரை விட்டு, அவரது சகோதரர் வெளியேறி விட்டார். எங்கு உள்ளார் என தெரியவில்லை' என தெரிவித்தது.நீதிபதிகள் உத்தரவு:தாய் இறந்தபோது, மனுதாரருக்கு வயது 11. அவர் பணிக் குரிய வயதை, 2013ல் அடைந்துள்ளார். மனுதாரர், அவரது சகோதரர் ஆகியோர் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரர் மீண்டும் ஆவணங்களுடன், அரசிடம் மனு அளிக்க வேண்டும். அதை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கக இயக்குனர், தகுதி அடிப்படையில் பரிசீலித்து, இரண்டு மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ரூ. 4,000 கொரோனா நிவாரணம் கேட்டு ரேஷன் கடைகளுக்கு படையெடுப்பு

ரூ. 4,000 கொரோனா நிவாரணம் கேட்டு ரேஷன் கடைகளுக்கு படையெடுப்பு

Added : மே 03, 2021 23:07

சென்னை:சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதால், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, 4,000 ரூபாய் கொரோனா நிவாரண தொகையை கேட்டு, கார்டுதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, 2020 மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வராக இருந்த இ.பி.எஸ்., உத்தரவில், அந்த ஆண்டு ஏப்ரலில், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கொரோனா ஊரடங்கு தடுப்பு கால நிவாரணமாக, தலா, 1,000 ரூபாய் வழங்கப்பட்டது.சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'கொரோனா தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த, அரிசி கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக, 4,000 ரூபாய் வழங்கப்படும்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க.,வினர், வாக்காளர்களை கவர, நிவாரண தொகை வழங்குவதாக கூறி, தாங்களே அச்சிட்ட, 'டோக்கன்'களை வழங்கினர். ஓட்டுப்பதிவு முடிந்த மறுநாளே, அந்த டோக்கனை ரேஷன் கடைகளுக்கு எடுத்து சென்று, கார்டுதாரர்கள், நிவாரண தொகை கேட்டனர்.அவர்களிடம், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தான் நிவாரண தொகை கிடைக்கும்; தற்போது கிடையாது' எனக்கூறி, ரேஷன் ஊழியர்கள் திருப்பி அனுப்பினர்.

ஓட்டு எண்ணிக்கையில், தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து, நேற்று ரேஷன் கடைகளுக்கு சென்று, கார்டுதாரர்கள், 4,000 ரூபாய் நிவாரணம் வழங்குமாறு கேட்டனர்.இது குறித்து, கடை ஊழியர்கள் கூறுகையில், 'ரேஷன் கடைகளுக்கு வந்த கார்டுதாரர்கள், 4,000 ரூபாய் கொரோனா நிவாரண தொகை வழங்குமாறு கேட்டனர்.'ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும், விரைவில் நிவாரண தொகை வழங்கப்படும் எனக்கூறி, அவர்களை திருப்பி அனுப்பினோம்' என்றனர்.

கொரோனா தடுப்பு மருத்துவ பணியாளர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

கொரோனா தடுப்பு மருத்துவ பணியாளர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

Updated : மே 04, 2021 07:21 | Added : மே 04, 2021 07:20

புதுடில்லி: 'கொரோனா தொற்றை தடுக்கும் மருத்துவப் பணிகளில், 100 நாட்கள் வரையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு, வருங்காலங்களில், அரசு பணி வேலைவாய்ப்புகளின்போது, முன்னுரிமை வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா தொற்றை எதிர்த்து, நாடு முழுவதும் நடந்து வரும் போரில், ஏராளமான மருத்துவ பணியாளர்கள், தங்களை அர்ப்பணித்து, உறுதியுடன் போராடி வருகின்றனர்.

அங்கீகாரம்

இவர்களுக்கு ஊக்கமளிக்கவும், இப்பணிகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையையும், போதுமான அளவில் உறுதிப்படுத்தும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி, சில முக்கிய நடவடிக்கை களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்.இதன்படி, முதுநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, அடுத்த நான்கு மாதங்களுக்காவது ஒத்திவைக்கப்படும். தேர்வு தேதிக்கு முன்பாக, ஒரு மாதம் அவகாசம் அளித்து, புதிய அறிவிப்பு வெளியாகும்.

கொரோனா தொற்றை தடுக்கும் பணிகளில், மருத்துவ பணியாளர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில், தொடர்ந்து, 100 நாட்கள் மருத்துவ பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு, எதிர்காலத்தில், அரசு பணி வேலை வாய்ப்புகளின்போது, முன்னுரிமை வழங்கப்படும்.படிப்பு முடித்து பயிற்சி யில் உள்ள மாணவர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.

துறைத்தலைவர்கள், பேராசிரியர்களின் கீழ், அவர்களது வழிகாட்டுதலின்படி, மருத்துவ பணிகளில் இறங்கலாம்.இறுதி ஆண்டு படிக்கும், எம்.பி.பி.எஸ்., மருத்துவ மாணவர்களையும், மருத்துவ பணிகளில் ஈடுபடுத்தலாம்.பி.எஸ்.சி., நர்சிங் படித்து, உரிய தகுதிகளுடன் இருக்கும் நர்சுகளை, கொரோனா தொற்று வார்டுகளில், மூத்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல்களின்படி, பணிகளில் ஈடுபடுத்தலாம்.

விருது

தொடர்ந்து, 100 நாட்கள் கொரோனோ தடுப்பு மருத்துவ பணிகளில் ஈடுபட்டிருந்த மருத்துவ பணியாளர்களின் மதிப்புமிகு சேவையை பாராட்டி, கவுரவிக்கும் வகையில், பிரதமர் சார்பில், தேசிய விருதுகள் வழங்கப்படும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பின் காரணமாக, முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, வரும் ஆக., 31 க்கு முன் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

- நமது டில்லி நிருபர் -

Steroid sales rise 10-fold in Covid second wave

Steroid sales rise 10-fold in Covid second wave

Niyati Parikh & Parth Shastri TNN

Ahmedabad:04.05.2021

With increasing number of Covid patients requiring oxygen in the ongoing second wave of infections, the sale of steroids has also increased along with other Covid-related medication. Estimates by Federation of Chemists and Druggists Association (FGSCDA) suggest that sales of steroids particularly dexamethasone and methyl prednisolone, have gone up by a good 10-fold in April.

“Rise in cases have surely caused an increase in the sale of steroids. However, steroids are life-saving medicines and are not typically prescribed to all patients. But in the ongoing second wave of Covid-19 infections, at least seven in ten patients are prescribed these two steroids very frequently. This is against an estimated two in ten patients who were prescribed steroids and that too at a later stage,” said Alpesh Patel, president, FGSCDA.

Patel also explained that most patients were given steroids after at least a week of getting infected and that too usually at the hospital, during the first wave. However, the treatment approach has now changed drastically.

Ankur Aggarwal, founder, Medkart, said, “The sale of steroids are booming because patients are often prescribed these medicines at a much early stage. We’ve come across patients who have just contracted Covid and are prescribed steroids, to avert further complications. This was not the case in the earlier wave of Covid infections.”

Industry players said that in the first wave, there was no shortage of critical medicines or access to hospitals and healthcare facilities, or even oxygen and thus, complications, if any, were handled at hospitals.

“Such is not the case now. Therefore, the prescription of steroids has gone up,” said a city-based chemist.

During the first wave, steroids were given at end of first week, now they are being prescribed in one or two days in bid to save lung damage

Heavy crowds at vaccination centres

Heavy crowds at vaccination centres

TIMES NEWS NETWORK

Ahmedabad:04.05.2021

Amid confusion at the Tagore Hall vaccination centre — where police were called at around 10.30am to maintain calm among those queued up to get vaccinated — and at two other centres in western Ahmedabad, vaccination went peacefully. Several Amdavadis complained that they had no idea about how many people would turn up at a centre.

“Vaccination itself will become a super spreader event. Information on how many people will come to a particular centre and at what time is key to arrest further spread of Covid.,” said Jay Shukla, a 25-year-old banker.

Till evening, according to the CoWIN dashboard, some 22,077 Amdavadis got their jabs. Enthusiastic youngsters and those in their early forties were seen lining up. At around 11am, the drive reached its peak with 7,029 getting vaccinated. By 10.30am registrations were closed at 55 of the 210 centres Satish Chawbey from the Jodhpur area, who had gone to a local government school for vaccination, said, “Paramedics at the vaccination centre spend several minutes uploading information on to CoWIN and forget that the icebox won’t maintain the proper temperature for the vaccine for that long. This bureaucratic process should have a better way out. It could have serious implications.”

AMC officials in wards like Stadium, Navrangpura and Naranpura claimed that many people had turned up for offline registration at the 32 vaccination centres and made the situation next to impossible.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...