Wednesday, July 5, 2017

இரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த சிட்லப்பாக்கம் குப்பைக் கிடங்கு

2017-07-05@ 01:52:27



* தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
* புகை மண்டலத்தால் மக்கள் திணறல்

தாம்பரம்: சிட்லப்பாக்கத்தில் இரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த குப்பை கிடங்கால் புகை மண்டலம் ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் விடிய விடிய புகை மூட்டம் கிளம்பியதால் பரபரப்பு நிலவியது. சென்னை சிட்லப்பாக்கம், 2வது பிரதான சாலையில் சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. குப்பை கிடங்கின் அருகில் பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், அரசு பள்ளிகள், சிட்லப்பாக்கம் பெரிய ஏரி மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குப்பை கிடங்கில் சிட்லப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குப்பை கழிவுகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அருகில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் முதல் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வரை என அனைத்து பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் அருகில் உள்ள பெரிய ஏரியும் மாசடைந்து வருகிறது. சுற்றுப்புற நிலத்தடி நீரும் கெட்டு விட்டது. இதுதவிர குப்பை கிடங்கில் அடிக்கடி தீவிபத்துகள் ஏற்படுவதால் இப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து சுவாச கோளாறு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குப்பை கிடங்கு திடீரென தீப்பிடித்துஎரிய தொடங்கியது. பின்னர் மளமளவென தீ குப்பைக்கிடங்கு முழுவதும் பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுப்புற குடியிருப்புவாசிகள் என அனைவருக்கும் மூச்சு திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் அங்கிருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள்
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு வாகனங்களால் அணைக்க முடியாததால் மேலும் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், நேற்று காலையிலும் குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ந்து புகை வந்து கொண்டிருந்ததால் வாகனஓட்டிகள் அந்த பகுதியை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

அடிக்கடி எரியும் மர்மம் என்ன?

சிட்லபாக்கம் குப்பை கிடங்கு அடிக்கடி தீப்பிடித்து எரியும் மர்மம் பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘சிட்லபாக்கம் குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது. இது, மர்மமாக இருக்கிறது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. சமூகவிரோதிகள்தான் இந்த செயலை செய்து வருகிறார்கள் என்கின்றனர். ஆனால், உண்மையில் இந்த குப்பை கிடங்கில் அதிக அளவில் சேரும் குப்பையை யாருக்கும் தெரியாமல் பேரூராட்சி நிர்வாகமே தொடர்ந்து அடிக்கடி தீவைத்து எரித்து விடுவதாக சந்தேகம் எழுகிறது. இதுபோன்று அவர்கள் தொடர்ந்து செய்து வருவதால் சுற்றுப்புற பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்’’ என்றனர்.

No comments:

Post a Comment

MP High Court Orders Medical College To Return Original Documents Of Student Who Wished To Leave His Seat & Return To Home State

MP High Court Orders Medical College To Return Original Documents Of Student Who Wished To Leave His Seat & Return To Home State Anukrit...