Saturday, March 16, 2019

என்னது... தேர்தலா... கலெக்டர் அதிர்ச்சி

Added : மார் 16, 2019 04:39

சேலம்:'தேர்தல் எப்போது' எனக் கேட்டதற்கு, மக்கள், 'தெரியாது' என, பதில் அளித்ததால், சேலம் கலெக்டர் அதிர்ச்சியடைந்தார்.
சேலம் கலெக்டர் ரோகிணி, தர்மபுரி லோக்சபா தொகுதியில் அடங்கிய, கொளத்துார் அடுத்த, கருங்கல்லுாரில், பதற்றமான ஓட்டுச்சாவடியை, நேற்று பார்வையிட்டார். அப்போது, கூடி நின்ற மக்களை பார்த்து, 'தேர்தல் எந்த தேதியில் நடக்கிறது' எனக் கேட்டார். அவர்கள், 'தேர்தலா... எப்போ... எங்களுக்கே தெரியாதே' என, பதிலளித்தனர்.

அதிர்ச்சியடைந்த ரோகிணி, 'மக்களுக்கு தேர்தல் நடக்கும் தேதி கூட தெரியலையே' என, அருகில் நின்றிருந்த அலுவலரிடம் கூறி, வேதனைப்பட்டார்.பின், 'ஏப்., 18ல் தேர்தல் நடக்கிறது. அனைவரும் தவறாமல் ஓட்டு போட வேண்டும்' எனக் கூறி, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...