Sunday, August 11, 2019

ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள்கோவில் 6 வழி சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக படுத்திருக்கும் மாடுகள்




ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள்கோவில் 6 வழி சாலையில் மாடுகள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக படுத்திருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 11, 2019 03:25 AM

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 6 வழி சாலைகளில் முக்கிய சாலையாக சிங்கபெருமாள்கோவில்- ஸ்ரீபெரும்புதூர் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் நாள் தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் முதல் இலகுரக வாகனங்கள் வரை செல்கிறது. இந்தநிலையில் ஒரகடம், வல்லக்கோட்டை போன்ற பகுதிகளில் மாடுகள் அதிகமாக சுற்றி திரிகின்றன மேலும் ஒரகடம் வல்லக்கோட்டை பகுதிகளில் 6 வழி சாலையை ஆக்கிரமித்து சாலையின் நடுவில் அதிகமாக மாடுகள் படுத்துக் கொள்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனும் செல்கின்றனர்.

அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் ஒரகடம் பகுதி உள்ளது. ஆகவே இந்த மாடுகளை பிடித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025