Thursday, May 4, 2017

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த உத்தரவு

சென்னை: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சசிகலா, பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ. டிவி ஆகியவற்றின் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது. இந்த வழக்கு 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் பெங்களூர் பரப்பனா அக்ரஹாரா சிறையில் சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா எழும்பூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் தனது உடல் நலம் மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறையில் காணொலி காட்சி மூலம் பங்குபெற அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இன்று மனுவை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ஜாகீன் உசேன் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

எனினும் பெங்களூரு சிறை நிர்வாகம் ஒப்புதல் தந்தால்தான் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த முடியும் எனவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Dailyhunt

நிர்பயா வழக்கில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு

புதுதில்லி: நிர்பயா வழக்கில் நாளை பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

தில்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா, தனது ஆண் நண்பருடன் பேருந்து ஒன்றில் சென்றபோது, ஆறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடன் வந்த ஆண் நண்பரையும் சரமாரியாகத் தாக்கிய அந்தக் கும்பல் இருவரையும் பின்னர் சாலையோரத்தில் வீசிச் சென்றது.

இதில் படுகாயமடைந்த அந்தப் பெண் இரண்டு வாரங்கள் சிகிச்சைக்குப்பின் சிங்கப்பூர் மருத்துவமனையில் டிசம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார். இந்த வழக்கில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மற்றொரு குற்றவாளி சிறுவன் என்று நிரூபிக்கப்பட்டதால் அந்த இளம் குற்றவாளி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகள் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம் 8 மணிநேரம் விசாரணை நிறைவு

அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவிடம் நடைபெற்ற வருமான வரித் துறையினரின் விசாரணை நிறைவடைந்தது.

அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவுக்கு வருமான வரித்துறையினர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து ரம்யா வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து 8 மணி நேரம் அவரிடம் நடைபெற்ற விசாரணை முடிவடைந்தது. விசாரணையின் போது, வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணப்பரிவர்த்தனை குறித்த ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாகவும் ,அவர் அளித்த பதில்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

8 மணி நேர விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் மேலும் உரிய ஆவணங்களுடன் மீண்டும் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Apex court to hear St John's college plea on PG medical admission

New Delhi, DH News Service, May 3 2017, 3:08 IST 
 
 The Supreme Court has agreed to consider a petition filed by Bengaluru’s St John’s National Academy of Health Sciences against a ruling given by the High Court of Karnataka that called its postgraduate medical admi­s­sion process violative of common counselling regulations.

A three-judge bench headed by Justice Dipak Misra issued notices to the Union government and the Medical Council of India on Tuesday.

The court sought their responses by Thursday on the special leave petition filed by the college, which is an unaided minority educational institution.

In an urgent mentioning, senior advocate Kapil Sibal, appearing for the college, said the high court had cancelled the entire admission process on the petition of a student who was otherwise not qualified.
The bench, also comprising Justices A M Khanwilkar and Mohan M Shantanagoundar, asked Additional Solicitor General P S Narasimha to take notice on behalf of the Union government and respond to the college’s petition.

Section 10D of the Indian Medical Council Act, 1956, and Regulations 9 & 9A of the Postgraduate Medical Education Regulations, 2000, provide for a mechanism for merit-based selection to all postgraduate courses in all medical institutions in the country on the basis of the merit list of the National Eligibility-cum-Entrance Test (NEET).

Dr Rachana Kishore Ubrangala, a candidate, had filed a writ petition before the high court for quashing the admission process adopted by the college. On 13 April, the court held that admission to any postgraduate course for the academic year 2017-2018, if contrary to Regulation 9A, was void.

Common counselling
 
The high court, however, allowed the college to participate in the common counselling provided in Regulation 9A and admit students for the academic year 2017-2018 on allotment of seats by the common counselling authority.

As regards the college’s petition that it is an unaided minority institution, the high court had said that such institutions were entitled to indicate their choice of preferences to the common counselling authority in admitting students, to the extent of their entire sanctioned intake, in conformity with their rights under Article 30(1) (right of minorities to establish institution) of the Constitution.

It had further said the common counselling authority should make allotment by following the principle of inter se merit within the categories of students the institution is at liberty to choose from.
DH News Service

Plea to HC for weightage to 'Plus 2' marks in MBBS admission

Thu, 4 May 2017-09:10pm , PTI
 
The Madras High Court today sought the Medical Council of India's stand on a plea for factoring in both the NEET and the higher secondary examination marks of students for admitting them to the MBBS course in the state.

A vacation bench of justices N Kirubakaran and V Parthiban sought the stands of MCI and other respondents, issuing them notices for tomorrow, when the matter will again come up for the hearing.
The plea to take into account the marks of both the 'plus 2' and the National Eligibility-cum Entrance Test for the admission to the under-graduate medical courses in the state was made to the court by Dr P Ramachandran of Kattumannarkoil in Cuddalore district.

Petitioner Ramachandran said the clause V of the MCI's notification dated December 21, 2010 had said all admissions shall be made solely on the basis of the marks secured in the NEET.
The petitioner prayed for a direction to the MCI to modify this in the interest of the students coming from backward states like Tamil Nadu.

(This article has not been edited by DNA's editorial team and is auto-generated from an agency feed.)
20 இளைஞர்கள் வெட்டிய மூன்று கிணறுகள்! காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது? பகுதி -3 #Cauvery #Hogenakkal

மு.நியாஸ் அகமது


நம் உடலில் இருக்கும் ஆன்மாவுக்கு நிகரானது ஆற்றில் ஓடும் நீர்'' என்பார் தத்துவஞானி ஹென்றி. அப்படியானால், நீரை மாசுப்படுத்துவது என்பது நம் ஆன்மாவை மாசுப்படுத்துவதாகும்தானே...? இதையே இப்படி யோசித்துப்பாருங்கள், அந்த நீரைக் கைப்பற்றுவது அது, ஓடும் நிலப்பரப்பில் வாழும் அத்தனை உயிர்களையும் கைப்பற்றுவதுதானே...? ஆம், நீரெனப்படுவது அதிகாரம். நீரைக் கைப்பற்றினால் எல்லாவற்றையும் கைப்பற்றிவிடலாம். நீரை விஷமாக்கினால், அதிகாரத்தை நிலைகுலையச் செய்யலாம். அதனால்தான், 18-ம் நூற்றாண்டில் சென்னையைக் கைப்பற்ற சென்னை மின்ட் பகுதியில் உள்ள ஏழுக்கிணற்றில் விஷம் கலக்கத் துடித்தான் நவாப். அதே ஏழுக்கிணற்றை முற்றும் முழுவதுமாகத் தனதாக்கிக்கொள்ள மக்கள் மீது வன்முறையை ஏவினான் ஆங்கிலேயன். தாகத்தை மட்டும் தீர்க்கவல்லதல்ல நீர், அதிகாரப்பசியைத் தீர்க்கவல்லது நீர்தான். இதை நாம் சரியாகப் புரிந்திருக்கிறோமா... உணர்ந்திருக்கிறோமா என்று தெரியவில்லை. ஆனால், தர்மபுரியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் மிகச்சரியாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான், நீரைப் பரவலாக்க அதாவது அதிகாரத்தைப் பரவலாக்க உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

“முப்பது நாள்கள்... இருபது இளைஞர்கள்... மூன்று கிணறுகள்!”

 
சென்ற அத்தியாயத்தில் ஐந்து தனி நபர்கள் இணைந்து ஆறு ஏரிகளை, ஓர் ஓடையை புனரமைத்ததைப் பார்த்தோம்தானே...? உங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகமும், தயக்கமும் எழுந்திருக்கும்... “அவர்களால் சாத்தியமாகி இருக்கிறது. இது எப்படி எங்களால் சாத்தியமாகும்? அதிகாரத்தை எதிர்த்து, ஆட்களைத் திரட்டி... மக்களை இணைத்து ஏரிகளை மீட்டெடுப்பது எங்களால் இயலாது. அதற்கு அதிக நேரம் தேவை. பணத்தைக்கூடச் செலவழித்துவிடலாம். ஆனால், நேரத்தைச் செலவழிப்பது முடியாத காரியம்” என்று யோசித்திருப்பீர்கள். என்னிடம் பேசிய பலரும் இதைத்தான் சொன்னார்கள். இந்தத் தயக்கங்களுக்கு எளிய தீர்வைச் சொல்கிறார்கள்... இருபது இளைஞர்கள்.

''நீரை மீட்க... நிலத்தடி நீரை உயர்த்த அதிக உழைப்பு எல்லாம் தேவையில்லை. காலையில் கொஞ்சம் ஓய்வுநேரத்தையும், குறைந்த உழைப்பையும் செலவிட்டாலே போதும்'' என்கிறார்கள் தர்மபுரி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.

இவர்கள் செய்ததெல்லாம் என்னவோ எளிய விஷயம்தான். ஆனால், கிடைத்ததெல்லாம் மகத்தான பலன். ஆம், இருபது இளைஞர்கள்... முப்பது நாட்கள் தொடர்ந்து உழைத்து... மூன்று கிணறுகளை வெட்டி இருக்கிறார்கள்.

இனி அவர்கள் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்...

“சில ஆண்டுகளுக்கு முன், எங்கள் பகுதியில் ஒரு தோல் தொழிற்சாலை ல்பட்டுவந்தது. 'தொழிற்சாலை வந்தால் நல்லதுதானே... அதனால் வேலை வாய்ப்புக் கிடைக்கும்' என்று முதலில் மகிழ்ந்தோம். ஆனால், அந்தத் தொழிற்சாலை சில ஆண்டுகளிலேயே விஷத்தை உமிழத் தொடங்கியது... நிலத்தடி நீரை உறிஞ்சியது. அத்துடன், அந்த நீரையும் மாசுப்படுத்தியது. தண்ணீரில் உப்பு ஏறி, அந்தத் தண்ணீர் டி.டி.எஸ் 2,300-க்கு மேல் உயர்ந்தது. சராசரியாக, 500 டி.டி.எஸ் உள்ள தண்ணீர்தான் குடிக்க உகந்தது. இந்தப் பகுதி நீர் முழுவதும் குடிக்கப் பயனற்றதாகிப் போனது. என்ன செய்யலாம் என்று பலருடன் உரையாடியபோது, அவர்கள் சொன்ன ஆலோசனை 'கிணறு வெட்டுங்கள்' என்பதுதான்.

முதலில் பெரிதாக எந்த நம்பிக்கையும் இல்லாமல்தான் பணியைத் தொடங்கினோம். அதிக நபர்கள் எல்லாம் இல்லை. இருபது பேர் தினமும் மூன்று மணி நேரம் செலவிட்டு முப்பது அடியில் கிணறு வெட்டினோம். அந்தச் சமயத்தில் சரியாக மழையும் பெய்தது. மழை நீர் கீழே இறங்க இறங்க... நிலத்தடி நீரும் உயர்ந்தது. தண்ணீரின் டி.டி.எஸும் குறையத் தொடங்கி இருக்கிறது” என்கிறார் தர்மபுரி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி.

இந்த அனுபவம் தந்த உற்சாகத்தில், இவர்கள் தொடர்ந்து பொது இடங்களில் கிணறு வெட்டும் பணியில் இறங்கி இருக்கிறார்கள். இந்த அமைப்பைச் சேர்ந்த மற்றொரு ஒருங்கிணைப்பளர் உமாசங்கர், “இதே டி.டி.எஸ் பிரச்னை இந்தப் பகுதியில் பல இடங்களில் இருக்கிறது. அதனால், சில இடங்களை அடையாளம் கண்டு அங்கு கிணறு வெட்டத் தொடங்கி இருக்கிறோம். இப்போது, இந்தப் பணி அதே தர்மபுரியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நடந்துகொண்டிருக்கிறது. மழை பெய்தால், இந்தப் பகுதியில் ஆங்காங்கே தேங்கும் நீர் இந்தக் கிணற்றை வந்து அடைவதுபோல வடிவமைத்திருக்கிறோம். இதற்கு நல்ல பயனும் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது” என்கிறார் அவர்.

“கிணறு வைத்த வீடு!”

முன்பெல்லாம் அனைத்து ஊர்களிலும், வீடுகளிலும் கிணறுகள் இருந்தன. பொதுக் கிணறுகள் பெருமிதங்களின் சின்னமாக இருந்தன. ஆனால், எந்தப் புள்ளியில் அது தன் பெருமிதங்களை உதிர்த்தன என்று தெரியவில்லை. இரண்டு தசாப்தங்களில் கிணறுகள் அனைத்தும் தொலைந்து, அந்த இடங்களை ஆழ்துளைக் கிணறுகள் பிடித்தன. அனைத்தையும் பணமாகவே பார்க்கும் நிறுவனங்களும், நிறுவனமயமாகி... நிறுவனங்களுக்காக மட்டுமே பணி செய்யும் அரசுகளும் ஆழ்துளைக் கிணறுகளை ஊக்குவித்தன. பெரும்பசியுடன் இயங்கிய ஆழ்துளைக் கிணறுகள், அந்தப் பகுதியில் இருந்த அனைத்து நீர்வளங்களையும் உறிஞ்சி நம் நிலத்தைப் பாலையாகிவிட்டுச் சென்றுவிட்டன. கிணறுகள் இல்லாமல், ஆழ்துளைக் கிணறுகள் வற்றி, ஏரிகள், குளங்கள் தூர்ந்த நிலையில் இப்போது நாம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்ற பெயரில் காவிரியிலிருந்து உறிஞ்சிக்கொண்டிருக்கிறோம். இன்று காவிரியும் வற்றத் தொடங்கிவிட்டது... நாளை என்ன செய்யப் போகிறோம்...?

காவிரியை மீட்டல் என்பது... ஆழ்துளைக் கிணறுகளை ஒழிப்பதிலும், மீண்டும் கிணறுகள் வெட்டுவதிலும்... பொதுக் கிணறுகள் பயன்பாட்டைக் கொண்டுவருவதிலும் இருக்கிறது. இதை இன்று... இப்போதே தொடங்காமல் போனால், நம் நிலம் பாலையாகத்தான் போகும்!

இருபது இளைஞர்கள், முப்பது நாள்கள் செலவிட்டு, மூன்று கிணறுகளை வெட்டி இருக்கிறார்கள். இந்த இளைஞர்களின் படிப்பினைகளை அப்படியே உள்வாங்கி, பரப்புவோம். வாருங்கள், புதுக் கிணறுகள் செய்வோம். அப்படியே, இருக்கும் கிணறுகளையும் தூர்வார்வோம்.

"மனநல சிகிச்சை என்பது கர்ணனுக்கான சலுகை!" - நீதியரசர் சந்துரு


உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ள கர்ணனுக்கும் இடையே மோதல் வலுத்துவருகிறது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துருவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

''நீதிபதி கர்ணனுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடையே வலுத்துள்ள இந்த மோதல் எதைக் காட்டுகிறது?''  

''ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியோ அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியோ தவறிழைத்தால் அவரைப் பதவி நீக்கம் செய்யக்கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் அப்படிப்பட்ட வேலை பாதுகாப்பை அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. ஆனால், நாடாளுமன்ற கண்டனத் தீர்மானத்தைத் தவிர்த்து வேறு ஏதேனும் தண்டனையை அளிக்க முடியுமென்றால், அதற்குச் சட்டத்தில் இடமில்லை. மேலும், நீதிபதிகள் தாங்கள் அளிக்கும் தீர்ப்புகளுக்காக அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் குற்ற வழக்குகளை யாரும் தொடர முடியாது. அப்படியான பாதுகாப்பு வளையம் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு உள்ளாகும்போது நீதிபதிகளுக்குக் கிடைக்காது. தொடர்ந்து தவறு செய்துவரும் நீதிபதி கர்ணனைச் சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு இடமாற்றம் செய்தபிறகும் அதே தவறுகளைச் செய்துவருகிறார். அவர் மீது சென்னை உயர் நீதிமன்றமே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டிய வேதனையான நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி, மூத்த நீதிபதியின் மனைவி ஒருவர் அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். 3 தலித் நீதிபதிகள் உட்பட 21 நீதிபதிகள் அவர் மீது எழுத்துமூலமான புகார்களை நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். இவற்றையெல்லாம் சரியான நேரத்தில் விசாரிக்க வேண்டிய உச்ச நீதிமன்றம் அதற்கு முன்னுரிமை கொடுத்து விசாரிக்கத்  தவறியதன் விளைவே தற்போது அதற்கான பலனை அனுபவித்து வருகிறது."

''இந்த மோதல் உருவாக மையப்புள்ளியாக எதனைக் கருதுகிறீர்கள்?''

"ஒருவருடைய பின்னணியை முறையாக விசாரிக்காமல், நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதுதான் இத்தனை குழப்பங்களுக்கும் மையப்புள்ளி. நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் நடைமுறையை இந்தச் சம்பவம் மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அவரது நியமனத்துக்குப் பரிந்துரை செய்த உயர் நீதிமன்றத்தின் கொலிஜியம் நீதிபதிகளான முகோபாத்தியாயா, மிஸ்ரா, கங்குலி ஆகிய மூன்று பேரும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கர்ணனுடைய நியமனத்துக்கு ஒப்புதல் அளித்த இந்தியத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், 'தனக்கு அவரது பின்னணி பற்றித் தெரியாது' என்று கூறியுள்ளார். எனவே, கொலிஜிய நடைமுறையைக் கைவிட்டுவிட்டு நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு உருவாக்குவதே இத்தகைய கேலிக்கூத்துகளைத் தவிர்க்க முடியும்."

''உச்ச நீதிமன்றம் வரம்பை மீறுகிறதா?''  

''கர்ணன் மீது தொடுத்துள்ள நீதிமன்ற அவதூறு வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 7 மூத்த நீதிபதிகள் விசாரித்து வருகிறார்கள். இன்னும் வழக்கு முடியவில்லை. இதில், வரம்பை மீறுவதற்கு என்ன செயல்பாடு நடந்துள்ளது? கர்ணன் குறித்து புகார் வந்தவுடனேயே உச்ச நீதிமன்றம் உள்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். ஆனால், தற்போது எடுத்துள்ள நடவடிக்கை அவதூறு குற்றத்துக்கானது. அதில், கர்ணன் குற்றவாளியா... இல்லையா என்பதை இனிமேல்தான் முடிவு செய்ய வேண்டும். அந்த வழக்குக்கான ஒத்துழைப்பைத் தராமல் கர்ணன் தன்னுடைய வழியில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அதற்கு ஊடகங்களும் அதீத முக்கியத்துவம் அளித்து அதனைப் பெரிதாக்கி வருகின்றன. உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் 7 பேரின் உத்தரவுகளுக்கும், லெட்டர் பேடில் 4 வரி எழுதி கர்ணன் கையெழுத்திட்டுக் கொடுக்கும் அறிக்கைக்கும் ஒரே அளவு முக்கியத்துவம் கொடுத்துவருவது எந்த விதத்தில் நியாயமாகும்?"

கர்ணன்

''நீதிபதி கர்ணன் என்ன செய்திருக்க வேண்டும்... என்ன செய்திருக்கக் கூடாது?''  

"தலித் சமூகத்திலிருந்து வந்த நீதிபதியான ஒருவர், தன்னுடைய பதவியையும் அதிகாரத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் நீதிபதியே ஆஜரானது இதுவே முதல்முறை. சேம்பரில் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிப்பது, தலைமை நீதிபதிகளிடம் தனக்கு குறிப்பிட்ட அதிகாரப் பங்கீடு அளிக்க வேண்டும் என்று மிரட்டுவது போன்ற பல்வேறு தவறானச் செயல்களைச் செய்துள்ளார். மேலும், நீதிபதிகளின் மனைவிகளை அசிங்கமாகப் பேசுவது... அதனைத் தட்டிக் கேட்பவர்களை எதிர்த்து 'வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் புகார் அளிப்பேன்' என்று கூறி மிரட்டியிருக்கிறார். இதுபோன்ற தவறானச் செயல்களைத் தவிர்த்துவிட்டு நீதிபரிபாலனை செய்திருந்தால் அவரை யார் குறைகூறுவார்கள்?"

''நீதிபதி ஒருவர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவருடைய கருத்தையும், புகாரையும் தெரிவிக்க அவருக்கு உரிமையில்லையா?''

''அரசமைப்புச் சட்டம் 222-வது பிரிவின் கீழ் ஓர் உயர் நீதிமன்றத்தில் நியமனம் செய்யப்பட்ட நீதிபதியை வேறோர் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. கர்ணன் இடமாற்றம் செய்யப்பட்ட கொல்கத்தா நீதிமன்றமும் பாரம்பர்யம் மிக்க நீதிமன்றம்தான். தனது ஊர்மாற்றத்தை எதிர்த்து அன்றைய தலைமை நீதிபதியிடம் அவர் முறையீடு செய்தார். அது, ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தன்னுடைய நீதிமன்ற மாற்றத்தை எதிர்த்து அவர் வழக்குத் தொடர்ந்திருக்கலாம். அப்படி வழக்குத் தொடர்ந்தாலும் வெற்றிபெற்றிருப்பாரா என்பது சந்தேகம்தான். பதவியிலிருக்கும் நீதிபதி தனது கருத்துகளையும் புகார்களையும் தெரிவிப்பதற்கு முறையான வழிகள் உள்ளன. அவற்றை நீதிபதி கர்ணன் கடைப்பிடிக்கவில்லை. அவருக்குக் கிடைத்த ஆலோசகர்கள் அப்படி. அதனால் அப்படித்தான் நடந்துகொள்வார்.''
நீதிபதி சந்துரு

''நீதிபதிகள் பதிலடி கொடுக்கும் இந்த மனநிலையைப் பார்க்கும்போது, நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையைக் கேள்விகுறியாக்கும் அல்லவா?''


"கர்ணனின் மனநலன் நலமாக உள்ளதா என்று அறியும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அது அவருக்குக் காட்டப்பட்ட சலுகை. அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவக்குழு அறிக்கை அளிக்க முன்வந்தால், அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய தண்டனையை உச்ச நீதிமன்றம் ஒருவேளை தவிர்த்திருக்கும். ஆனால், கர்ணன் உச்ச நீதிமன்ற 7 மூத்த நீதிபதிகளின் மனநிலையையே கேள்விக்குள்ளாக்கிவிட்டார். மருத்துவச் சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள மாட்டேன் என்று கூறியதன் மூலம் அவர் மீது அனுதாபம் கொள்ளக்கூடிய சூழ்நிலையைத் தவிர்த்துவிட்டார். எனவே, அவருக்குரிய தண்டனையை உச்ச நீதிமன்றம் வழங்கப்போவது உறுதியாகிவிட்டது."

''இந்த மோதல் முடிவுக்கு வர என்ன செய்ய வேண்டும்?''

"சாதாரண இந்தியக் குடிமகன் ஒருவர் கர்ணனைப் போன்று செயல்களைச் செய்திருந்தால் 1971-ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி 6 மாத சிறைத்தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கலாம். இது ஓர் அவதூறுக்கான தண்டனை. ஒவ்வோர் அவதூறும் தனித்தனி தண்டனைக்கு உள்ளாக்கப்படலாம். இதுவரை கர்ணன், 'தன்னை நாடாளுமன்ற கண்டனத் தீர்மானத்தின் மூலமே பதவி நீக்க முடியும்' என்று கூறிவந்துள்ளார். மே 23-ம் தேதி ஓய்வடையப்போகும் அவருக்கு அப்படிப்பட்ட நடைமுறையைக் கடைப்பிடிப்பதற்கான வழிகள் இல்லை. ஒருவேளை, அதைவைத்தும் அவர் இவ்வாறு பேசி வரலாம். அதனால் மே 24-ம் தேதி முதல் அவரும் ஒரு சாதாரண குடிமகன்தான். எனவே, அரசமைப்பு பாதுகாப்பு இன்றி நிராயுதபாணியாக நிற்கப்போகும் நமது மகாபாரத கதாநாயகனின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்பதுதான் எனது கணிப்பு.''

படங்கள்: தி.ஹரிஹரன்

ஒரு ஆட்டோ... ஒரு ட்வீட்.. அடித்தது அதிர்ஷ்டம்! #Mahindra

யார் கவனிக்கப்போகிறார்கள் என்றெல்லாம் எண்ணாமல், ரசனை சார்ந்து வாழ்பவர்களுக்கு அதற்குண்டான அங்கீகாரம் எப்போதாவது கிடைக்கத்தான் செய்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மார்ச் 19-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த ‘யாரோ ஒரு’ அனில் என்பவர், வழியில் ‘யாரோ ஒருவர்’ தன் ரசனைக்கேற்ப டிசைன் செய்த ஆட்டோவைப் பார்க்கிறார். கிட்டத்தட்ட மஹிந்திரா கம்பெனியின் ஸ்கார்ப்பியோ போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது அந்த ஆட்டோ. அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

அனில், மஹிந்திரா குழுமத்தில் பணிபுரிபவர்.  எடுத்த படத்தை ‘நல்லாருக்குல்ல சார்..?  நம்ம டிசைன் இந்தியன் ரோட்ல எவ்ளோ பாப்புலர் பாருங்க’ என்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கு Tag செய்து ட்விட்டரில் போடுகிறார்
ஆட்டோ
பத்து நிமிடத்தில் ரிப்ளை வருகிறது ஆனந்திடமிருந்து. “அட... செம.. அவர் யார்னு பிடிச்சுக் குடுங்களேன். இந்த ஆட்டோவை நான் வாங்க ஆசைப்படறேன்.  பதிலுக்கு அவருக்கு ஒரு 4 வீலர் தர்றேனே...” 
Scorpio Auto
பாஸுக்கெல்லாம் பாஸு சொன்னதாச்சே... கொச்சி மஹிந்திரா டீலரில் பணிபுரிகிறவர்கள், ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு கேரளாவின் ஒரு கிராமத்தில் இருக்கும் அந்த  ஆட்டோக்காரர் சுனிலைக்  கண்டுபிடித்துவிடுகிறார்கள். ’அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்’ என்று அவரும் ஒப்புக்கொள்ள, இப்போது அவர் மஹிந்திரா சூப்பர் மினி வேனின் உரிமையாளர்.
மஹிந்திரா

நேற்றைக்கு இதை ட்விட்டரில் போட்டு நன்றி தெரிவித்திருக்கிறார் ஆனந்த். இவரைக் கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

Anand Mahindra
ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன், ரெனோ, செவர்லே என்று எக்கச்சக்க வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு மத்தியில், இந்திய நிறுவனமான மஹிந்திராவுக்கு இந்தியர்களிடத்தில் செம மவுசு உண்டு. விற்பனையைத் தாண்டி இன்னொரு விஷயமும் இதில் அடங்கியிருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த், வித்தியாசமாக முயற்சி செய்பவர்களையும், வெற்றியாளர்களையும் ஊக்குவிப்பதில் ரொம்ப ஆர்வம் கொண்டவர்.  ஆனந்த்துக்குப் பிடித்து விட்டால், அடுத்த நிமிடம் உரியவரின் வீட்டில் மஹிந்திரா கார் நிற்கும்.

அப்படி மஹிந்திராவின் கார்களை ஷோரூம் போய் காசு கொடுத்து வாங்கியவர்களுக்கு இணையாக, பரிசாக வாங்கிய வி.ஐ.பி.க்கள் பட்டியல், சாக்‌ஷி மலிக், பி.வி.சிந்து, மாரியப்பன் தங்கவேலு என்று  பெருசு. சாக்‌ஷி மலிக், ஆனந்த்  பரிசாகக் கொடுத்த தார் ஜீப்பில்தான் இப்போது பயணிக்கிறாராம்.‘‘சாக்‌ஷி, இப்போது இந்தியாவின் மிகப் பெரிய மல்யுத்த வீராங்கனை. அவருடைய ஸ்டைலுக்கும், தன்மைக்கும் ‘தார்’ போன்ற ஆஃப்ரோடு கார்களில் பயணிப்பதுதான் அவருக்குச் சிறந்த கௌரவமாக இருக்கும். அவருக்கு தார் 4 வீல் டிரைவ் மாடலைப் பரிசாக அளிப்பதில் மஹிந்திரா கௌரவப்படுகிறது!’’ என்று அப்போது சொன்னார் ஆனந்த் மஹிந்திரா.  அதாவது, திறமையாளர்களின் தேவை அறிந்து பரிசு கொடுப்பதுதான் ஆனந்தின் ஸ்டைல். சுனிலுக்கு ஸ்கார்ப்பியோ மிகப் பிடிக்கும் என்பதால்தான், தனது ஆட்டோவை ஸ்கார்ப்பியோ ஸ்டைலிலேயே ரீ-டிசைன் செய்திருக்கிறார்.

ஆனந்த் நினைத்தால், சுனிலுக்கு ஸ்கார்ப்பியோவையே பரிசாகக் கொடுத்திருக்கலாம்தான். ஆனால், ஷேர் ஆட்டோவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்; மினி ட்ரக் ஆகவும் லோடு அடித்துக் கொள்ளலாம் என்பது சுப்ரோவின் ஸ்பெஷல் என்பதால்தான், ஆட்டோக்காரரான சுனிலுக்கு  5.50 லட்சம் மதிப்புள்ள சுப்ரோ வேனைப் பரிசாக இறக்கியிருக்கிறார் ஆனந்த்.
பிடிச்சதைச் செய்ங்க.. அதிர்ஷ்டம் ஆகாசத்துல இருந்து இல்ல... ஆனந்த்கிட்ட இருந்துகூட வரும்!

மின் கட்டணத்தையும் ஆதாருடன் இணைக்கும் உ.பி அரசு...

Yogi Adityanath

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதில் இருந்து, குடிமக்கள் அனைத்து வித மானியங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கும் ஆதார் உபயோகத்தைக் கட்டாயப்படுத்தி வருகிறது. அனைத்துக்கும் ஆதார் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளது. இருந்தும், மத்திய அரசு விடாப்பிடியாக ஆதார் உபயோகத்தை பரவலாக்கும் முனைப்போடு இருக்கிறது.

இந்நிலையில், பா.ஜ.க ஆட்சி அரியணையில் இருக்கும் உத்தரப் பிரதேசத்தில், மின் கட்டணத்தை ஆதாருடன் இணைக்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு, மாநிலத்தில் நிகழும் மின் திருட்டைத் தடுக்க குறைந்தபட்சம் 75 காவல்நிலையங்களையாவது அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளது. மின் திருட்டில் யாராவது பிடிபட்டால், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.   

'கத்தரி வெயில்' என்பதன் உண்மை அர்த்தம் என்ன?


"கத்தரி வெயில் தொடங்கியது", "அக்னி நட்சத்திரம் ஆரம்பமானது" போன்ற செய்தித் தலைப்புகளை, ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின் தொடக்கத்தில் படித்திருப்போம். ஆனால், இந்த வார்த்தைகளை வானிலை ஆய்வு மையம் பயன்படுத்துவதில்லை. இவை அறிவியல்பூர்வமான வார்த்தைகள் கிடையாது என்பது தான் காரணம்.

‘காற்றழுத்த தாழ்வுப் பகுதி’, ‘வெப்ப சலனம்’, ‘காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்’, ‘வளி மண்டல மேல் அடுக்கு’ போன்ற வானிலை சார்ந்த கலைச்சொற்களைப் பயன்படுத்தி மக்கள் மனதில் இடம்பெற்றவர் ஓய்வு பெற்ற சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன். அவர் இதுகுறித்து, 'அக்னி நட்சத்திரம், கத்தரி வெயில் போன்ற வார்த்தைகள் வானிலை ஆய்வாளர்களின் பயன்பாட்டில் இல்லை. கத்தரி வெயில் என்பது 100 சதவிகிதம் வானிலை துறையின் வார்த்தை கிடையாது. அது பஞ்சாங்கத்தின் வார்த்தை. வானிலை துறையானது ராசியின் அடிப்படையில் இயங்குவதில்லை. மே மாதம் வெப்பம் அதிகரிக்கும் தான். இது ஒவ்வொரு ஆண்டும் நிகழும் இயல்பான செயல். எனவே, கத்தரி வெயில் எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்று வானிலை துறை கூறுவதில்லை' என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின் படி, பரணி நட்சத்திரம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை சூரியனின் பயண காலமே அக்னி நட்சத்திரம் எனவும், கத்தரி வெயில் எனவும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'மிஞ்சியது எதுவும் இல்லை... எஞ்சியது வெறுங்கைதான்!' - சவுதியிலிருந்து திரும்பியவர்கள் நிலை

எம்.குமரேசன்
 
வுதி அரேபியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து பணிபுரிபவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க, அந்நாட்டு அரசு வழங்கிய பொது மன்னிப்பைப் பயன்படுத்தி, 20 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்.
   சவுதியில் இருந்து வெளியேறும் இந்தியர்கள்
வளைகுடா நாடான சவுதி அரேபியாவில், லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர்.  ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த பல்வேறு நாட்டு மக்களுக்கும் வளைகுடா நாடுகள் வேலைவாய்ப்பை வழங்குகின்றன. தாய்நாட்டில் பிழைக்க வழி இல்லாத நிலையில், வளைகுடா நாடுகளில் கூலித்தொழிலுக்குச் சென்று, சொற்ப சம்பளத்துக்காக  லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். விசா காலம் முடிந்த பிறகும் இந்தியர்கள் ஏராளமானோர் சவுதியில் தங்கியிருப்பதாகப் புகார் எழுந்தது. அப்படித்  தங்கியிருப்பவர்கள் பிடிபட்டால், கடுமையான தண்டனை வழங்கப்படும். சிறைத் தண்டனைக்குப் பிறகே தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

இப்போதெல்லாம் சட்டப்படி தண்டனை வழங்கி சிறையில் அடைப்பதைவிட, 'பொது மன்னிப்பு ' கொடுத்துவிடவே சவுதி அரசு விரும்புகிறது. 'விசா முடிந்தும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்கள், வொர்க் பெர்மிட் இல்லாமல் பணிபுரிபவர்கள் எனச் சட்டத்துக்குப் புறம்பாகத் தங்கியிருப்பவர்கள் 90 நாள்களுக்குள் தாங்களே முன்வந்து ஒப்புக்கொண்டுவிட்டால், தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்; எந்தப் பிரச்னையும் இல்லாமல் தாயகம் திரும்பலாம் ' என சவுதி அரசு அறிவித்திருந்தது. சவுதி அரசின் இந்த அறிவிப்புக்கு, அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த மே 1-ம் தேதி வரை சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 20,321 இந்தியர்கள், தாய்நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர். இதில், 1,500 தமிழர்களும் உள்ளனர்.

விண்ணப்பித்தவர்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம். கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் கடைநிலைத் தொழிலாளர்கள் இவர்கள். ரியால், ரூபாயாக மாறும்போது கிடைக்கும் கூடுதல் தொகைக்கு ஆசைப்பட்டு சவுதி சென்றவர்கள்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச்  சேர்ந்த முருகவேல் கலீஜ் `டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், 'சவுதியில் விசா காலம் முடிந்த பிறகும் நான்கு ஆண்டுகள் தங்கி பல இடங்களில் வேலை பார்த்துவிட்டேன். யாருமே முறையான சம்பளம் தரவில்லை.  இங்கே  இருப்பதைக் காட்டிலும் தாயகம் திரும்புவது நல்லது என முடிவுசெய்துவிட்டேன். கிடைக்க வேண்டிய சம்பளமும் கிடைக்கவில்லை; தங்கியிருந்த இடமும் படுமோசம். நல்ல சாப்பாடுகூட சாப்பிடவில்லை. இத்தனை ஆண்டுகளாக இங்கே தங்கியிருந்து நான் சம்பாதித்தது என்று எதுவுமே இல்லை. கஷ்டப்பட்டு வேலைபார்த்தால்  குடும்பத்தைக் கரை சேர்த்துவிடலாம் என்ற நினைப்பில்தான் இங்கே வந்தேன். எனது நினைப்பில் மண் விழுந்துவிட்டது. வெறுங்கையுடன்தான் தமிழ்நாட்டுக்குப் போகிறேன். அங்கே போய் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை' என்று வேதனையுடன் கூறியுள்ளார். முருகவேல் மட்டுமல்ல, சவுதியில் கூலிவேலைக்குச் சென்றிருக்கும் இந்தியர்களின் உண்மைநிலை இதுதான். மிஞ்சியது என்று எதுவும் இல்லை; எஞ்சியது வெறுங்கைதான்.

சவுதியில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு, பொது மன்னிப்பு வழங்குமாறு இந்திய அரசு  கேட்டுக்கொண்டது. இதை ஏற்றுதான் சவுதி அரசு 'பொது மன்னிப்பு' அறிவித்தது. விண்ணப்பிப்பவர்கள் அவர்களது சொந்த பணத்தில்தான் நாடு திரும்ப வேண்டும். பாஸ்போர்ட் இல்லாத நிலையில் அவர்களுக்கு நாட்டைவிட்டு வெளியேறும் வகையில் இந்தியத் தூதரகம் வழியாகப் போக்குவரத்துக்கான சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும். சவுதியில் உள்ள இந்தியத் தூதரகம் தேவையான உதவிகளை இந்தியர்களுக்குச் செய்துவருகிறது.

சவுதியில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி அனில் கூறுகையில், ``சவுதி முழுவதும் 21 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை இந்தியர்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். கடந்த 2013-ம் ஆண்டும்  பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது பயன்படுத்திக்கொள்ள முன்வராதவர்கள், இப்போதாவது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.  இந்தியத் தூதரகத்தில் அனைத்து உதவிகளும் கிடைக்கும் '' எனத் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் காப்போம்

By பாறப்புறத் இராதாகிருஷ்ணன்  |   Published on : 04th May 2017 01:22 AM  | 
 
இன்று இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பல்வேறு காரணிகளில் நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகையே அச்சுறுத்தும் பிரச்னையாக இது உருவெடுத்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக கண்ணைக் கவரும் பிளாஸ்டிக் பொருள்களின் ஆதிக்கத்தில் மூழ்கி பூமியைத் தத்தளிக்க வைத்து வருகிறோம்.

பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்பாட்டால் சுற்றுப்புறச் சூழல் மாசு, கடல் வளம், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, மண் வளம், விலங்கினங்களுக்கு ஆபத்து என்பது தொடர் கதையாகி விட்டது. நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகி பூமிப் பந்தை அசுத்தமாக்கி வருகின்றன.

பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் மக்க பல ஆண்டுகளாகும். மழை நீர் மண்ணில் புக முடியாமல் போவதோடு, நிலத்தடி நீர் ஊற்றுக் கண்களை மறைத்து, தாவரங்கள் வளராமல் தடுப்பதற்கும், மழை இன்மைக்கும் காரணமாகிறது.

இதனால், சுற்றுச்சூழல் பாதிப்படைந்து மனிதர்களுக்கு பல நோய்கள் வர காரணமாவதுடன், கால்நடைகள் உட்பட இந்தப் பூமியில் வாழும் எண்ணற்ற உயிரினங்கள் மெல்ல அழிந்து வருகின்றன.

முன்பெல்லாம் கடைகளுக்குப் போனால் துணிப் பையுடன் போவோம்.கடைக்காரரும் செய்தித் தாள்களில் பொருள்களை லாவகமாக மடித்து சணல் கயிற்றில் கட்டிக் கொடுப்பார்.

இன்று, சூப்பர் ஸ்டோர்களும், மால்களும் பெருகி விட்ட நிலையில், ஏற்கெனவே பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி வைக்கப்பட்ட பொருள்களை சுயசேவையின் மூலமே எடுத்து கணினி மூலமாக விலைப் பட்டியல் பெற்று பின்னர் பணம் கொடுத்து வாங்கி வருகிறோம்.

முன்பெல்லாம் உணவகங்களில் உணவுப் பொருள்களை இலையில் மடித்துக் கொடுப்பார்கள். அவைகளை தூர எறிந்தாலும் எளிதில் மக்கி விடும். இட்லி, தோசை போன்ற உணவு வகைகளை இலையில் மடித்தும், சாம்பார், ரசம், சட்னி, தேநீர் போன்ற திரவ உணவுகளை பாத்திரம் மற்றும் குவளைகளில் ஊற்றியும் கொடுத்தக் காலம் மறைந்து விட்டது.
பெரும்பாலான உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பாலிதீன் தாள்களும், பைகளுமே பயன்படுத்தப்படுகின்றன.

வாழை இலையில் உணவு சாப்பிட்டால் வயிறு உபாதைகள் ஏற்படாது. இலையில் உள்ள பச்சையம் குடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும். சில உணவகங்களில் மருத்துவ குணம் கொண்ட வாழை இலைக்குப் பதில் மெல்லிய பாலிதீன் தாள்களில் உணவு வழங்கப்படுகிறது. இதில் சாப்பிடுவோர் ஒவ்வாமை, வயிற்றுப் போக்கால் அவதிப்படுகின்றனர்.
அதாவது, சூடான உணவுப் பொருள்களை பிளாஸ்டிக், பாலிதீன் பைகளில் கொண்டு செல்வதால், சூடு மற்றும் எண்ணெய் காரணமாக பிளாஸ்டிக்கில் உள்ள ஆபத்தான வேதிப் பொருள்கள் உணவு பொருள்களுடன் கலந்து அவை புற்றுநோய், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் தைராய்டு நோய் ஏற்படவும் காரணமாகிறது.

சில உணவகங்களில் வாழை இலை போன்ற பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்துகின்றனர். இதில் சூடான உணவுகளை பரிமாறும்போது, அதிலுள்ள மெழுகு உணவுடன் கலக்கிறது. பச்சை நிற சாயம் உணவுடன் கலந்து உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.

இந்தப் பச்சை செயற்கை இலைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், பிளாஸ்டிக் தாளில் சூடாக உணவு பொருள்களை வைத்து உட்கொள்வது தவறு என்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடைகளில் மட்டுமே அவசரத் தேவைகளுக்காக விற்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் இன்று கெளரவப் பொருளாகி திருமணம் உட்பட அனைத்து விழாக்களிலும் புகுந்துவிட்டது.

பயன்படுத்தபட்டு மீதமுள்ள நீருடன் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களால், கிடைத்தற்கரிய நீரும் வீணாவதுடன் அந்தப் பாட்டில்களுக்குள் கொசுக்களும் புகுந்து சுற்றுப் புறங்களில் வாழும் மக்களுக்கு பல்வேறு நோய்களைத் தருகின்றன.

உலகில் சீனாவும், பங்களாதேஷும் பாலிதீன் பைகள் உபயோகப்படுத்துவதை தடை செய்துள்ளன. இந்தியாவில் 40 மைக்ரானுக்கும் குறைவான பாலிதீன் பைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பழங்கால கட்டடங்கள், கோயில்கள் போன்றவற்றில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளிலும் பாலிதீன் பைகளின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், சபரிமலையில் பிளாஸ்டிக் பொருள்கள், பாலீதீன் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல நடவடிக்கையை அனைத்துத் திருக்கோயில்களிலும் பின்பற்றலாம்.

எதிர்கால சந்ததியினரையும், பூமியையும் காக்க வேண்டுமென்றால் பொருள்கள் வாங்க கடைக்குச் செல்லும் போது துணி பைகளையே எடுத்துச் செல்ல வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவில்லையெனில், கடல் வளமும், நில வளமும், நீர் வளமும் முற்றிலும் அழிந்து விடும்.

குழந்தைகளுக்கும் பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகளைக் கற்றுத் தர வேண்டும். அரசும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கவும், தூய்மையான இந்தியாவை உருவாக்கவும், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பாலீதீன் பைகளை, மெழுகு தடவிய கப்களை உபயோகப்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
இயற்கையும், சுற்றுச் சூழலும் மாசடையாமல் இருக்க பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை தவிர்ப்போம்; தூய்மை இந்தியா உருவாகப் பாடுபடுவோம்.

Jet Airways to launch Chennai-Paris flights

| | Updated: May 3, 2017, 07.09 PM IST
 
(Representative image)(
 
CHENNAI: Jet Airways on Wednesday announced that it would launch daily direct flights from Chennai to Paris and Bengaluru to Amsterdam starting October 29.

The new flight -- Jet Airways 9W128 -- from Chennai will depart at 1.45am and arrive in Paris at 8.10am local time. In the return direction, 9W 127 will depart from Paris at 10.10am and arrive in Chennai at 12.15am.


The airline has opened a five-day sale of tickets for the Paris flight at an all-inclusive introductory fare of Rs 33,999 for economy and Rs 1,29,000 for premier class for the new flight.

The new service is being planned to capitalise on the growing demand for outbound leisure and business travel and also to tap the inbound tourists from Europe to the southern region of India through Chennai.

There is also an industry connection due to the presence of companies like BNB Paribas, Michelin and Renault in Chennai.

Jet Airways 9W236 from Bengaluru will depart at 2.25am and arrive in Amsterdam at 8.35am local time. In the return direction, the flight 9W 235 will depart from Amsterdam at 10.50am and arrive in Bengaluru at 12.40am.
IN FOR OF NEET - Booklet on NEET launched in city
Chennai:
TIMES NEWS NETWORK


An organisation Change India released a booklet named `In support of NEET Medical Test'on Wednesday the director of organisation, Padam A Narayanan. It includes arguments put up by the Tamil Nadu state government which claims that it is against the federal right of the state and that bringing in NEET would rattle the previously existing system of meritbased counselling.

It also touched upon other common allegations like NEET being undemocratic towards rural and government school students. “The 15 page booklet was written after careful consideration of several allegations raised against NE ET exam. But for the nearly 85,000 NEET applicants this year from the state, this is the most organised and transparent way of admitting students into medical seats,“ said Narayanan. He explained that while a marks-dependent admission system can be riddled with human subjectivity . But a computerised correction system followed in NEET, which also has negative marking, is a more efficient way .

M Anandhakrishnan, former vice chancellor and Arulrhaj, former president of Indian Medical Association (IMA) and former chairperson of Commonwealth Medical Association were also present at the launch and expressed their solidarity . “Instead of having a separate entrance for every single college, NEET gives one unified platform,“ said Anandakrishnan.
HIGHER EDUCATION - SRM univ counselling starts from May 14
Chennai:
TIMES NEWS NETWORK 
 


Counselling sessions for admission in SRM University's engineering and technology programmes across its campuses (Kattankalathur, Haryana and Amaravati) will start on May 14 and will go until May 22. SRMJEE -the entrance exam for admission into for the engineering and technology (UGPG) courses -was conducted bet ween April 1to May 1, across 118 centres in the country and three in the Middle East for NRI candidates. Counselling for admission to MTech will be held on May 23 along with BTech sessions at the Kattankulathur campus.The rank card and counselling call letter of students can be downloaded from the official website. On the first day , candidates who have secured ranks from 1to 10000 will be called.
 
Those who secured ranks from 10,001to 70,000 are scheduled to be called on subsequent dates. Meanwhile, the top 100 students will get 100% waiver of tuition and hostel fees; rank 101 to 500 will get a 75% tuition fee waiver and rank 501 to 1000 will get a 50% tuition fee waiver
Verdict split, PG med intake on the edge
Chennai:


Third Judge To Hear Case Today 
 
Post-graduate medical course admissions in Tamil Nadu will remain stuck in legal quagmire for some more time, as a specially constituted division bench of Madras high court failed to reach a consensus on the issue and instead ended up delivering a split verdict on Wednesday . The matter has now been referred to Justice M Sathyanarayanan, who will be the third judge to hear the case. His views will now decide the fate of the appeals filed by the state government and individual candidates.

After Justice K K Sasidharan and Justice S M Subramanian adopted divergent views on the issue of Tamil Nadu government reserving seats for in-service candidates aspiring for post-graduate medical admissions and awarding incentive marks to them, the case was referred to Chief Justice Indira Banerjee to be posted before a third judge. By evening, Justice Sathyanarayanan was named as third judge, and he is to hear the appeals on Thursday .

The appeals are against an April 17 order of a single judge, who said the state government must adhere to only the MCImandated method of awarding incentive marks to in-service candidates serving in difficult and remote areas. While the state awards one mark each to all in-service, and non-service candidates as experience marks, besides additional marks to those employed in notified areas, MCI envisages award of 10% of a candidate's NEET mark per year of service in remote areas, to the maximum of 30%.

On Wednesday , Justice Sasidharan ruled that the methodology adopted by the state for giving weightage marks for inservice candidates was not in conflict with the method evolved by MCI, and said: “The MCI and the state are committed to promote rural service. The method of awarding incentive marks alone is different. The state seeks to benefit all doctors, who have opted for difficult and remote area service. The state clearly demonstrated that the method adopted all these years would benefit all doctors working in notified areas and there would not be any kind of undue advantage to a section of doctors. There is absolutely no conflict between the Central regulation and the state policy on account of different criteria followed for awarding incentive marks.“

When MCI's senior counsel sought to question clauses in the prospectus, the bench said prospectus had not been challenged at all. “We are of the view that there is no need to consider the legality and correctness of the prospectus fixing 50% each for the in-service candidates and the award of uniform marks for both service and non-service candidates for experience, in the present batch of intra-court appeals,“ said Justice Sasidharan.

Respectfully disagreeing with him, Justice S M Subramaniam ruled that three clauses in the prospectus ­ clauses 16, 17 and 33(b) ­ were inconsistent or repugnant to Regulation 9 of the Post-Graduate Medical Regulation, 2000 issued by the Medical Council of India, and accordingly quashed.

He directed the Tamil Nadu government to formulate the admission procedure in accordance with Regulation 9 and 9(IV) of the PG Medical Regulation, 2000 issued by MCI. He also directed the government to prepare a merit list for admission to post-graduate degree and diploma courses for all government colleges, and government seats in self-financing colleges affiliated to the state university , besides the Annamalai University . Preparation of merit list and admission process should be completed as per the original time frame, he stipulated.
CRACKING THE WHIP - HC does corrective surgery, clips wings of deemed univs


Varsities Must Follow MCI Medical Admission Norms: Court 
 
The free run of deemed universi ties, which offer medical courses but do not surrender to the jurisdiction of Medical Council of India (MCI), ended on Tuesday when the Madras high court said the MCI would be the boss when it comes to medical courses at all institutions, including deemed universities.
 
The immediate effect of the ruling will be that deemed universities that offer medical education must surrender 50% of their postgraduate medical course seats to the state government for the state quota and then allow the government to conduct counselling for the remaining 50% of the management quota seats. In fact, since they are now regulated by both the Medical Council Act and the UGC Act, deemed universities are barred from collecting capitation fees since the Act bans it.

Justice N Kirubakaran, unmasking deemed universities that never surrendered the mandatory 50% of their postgraduate medical seats nor subjected themselves for common counselling, said: “It is very clear that right from starting a medical institutioncollege, to laying down standard for medical education, to making inspections at the time of examination and [obtaining] information regarding THE the course of study from the medical institutions, the MCI alone is the authority for medical education. Deemed universities cannot, on their own, declare that they are not bound by MCI regulations.“

Making it clearer, the judge said: “Irrespective of their status as deemed universities, they are merely medical institutions like any other medical college before the MCI and no special status can be claimed by deemed universities. By donning the mask of a deemed university, they cannot escape from MCI regulations. If they ask for such protection, they cannot be called medical institutions at all.“
As for the arguments of deemed universities that they are under Section 3 of the UGC Act, 1956 and that Medical Council of India regulations do not apply to them, Justice ING Kirubakaran said the Medical Council Act clearly said no person shall establish a medical college or open a new course of study or training or increase its admission capacity except with the previous permission of the central government.

Justice Kirubakaran pointed out that the act mentioned educational institutions including private, aided or unaided institutions, that meant and included deemed universities too.MCI disowned its regulation with mala fide intention, says judge

MCI suffered the ignominy of being asked to pay an `exemplary cost' of `1 crore by the Madras high court for not enforcing its own code on the mandatory seatsharing formula for all institutions offering medical education. “If, from 2000 onwards, seats were shared...thousands of seats would have been available to poor meritorious students... MCI deliberately failed to discharge its obligation and went against the interest of the public,“ said Justice N Kirubakaran.

The judge said in his 130-page order: “This court has got every reason to believe that without any legality, the MCI is trying to disown the Regulation 9(2) andor 9(vi). If the regulation is not enforced, the beneficiaries would be non-governmental medical institutions.Hence, the MCI with a mala fide intention to help the private medical lobby, which sells medical seats for crores of rupees, is disowning its own regulation.“
Blaming the MCI for “worrisome and dangerous trends in medical education“, Justice Kirubakaran said: “It is a known fact that some institutions have been selling medical seats through brokers [at] rates fixed by them, dehors merits, thereby more meritorious students were shunted out...“ TNN



முதுகலை மருத்துவ படிப்பு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் : நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பால் ௩வது நீதிபதி விசாரணை

பதிவு செய்த நாள் 03 மே  2017  23:07

சென்னை: 'முதுகலை மருத்துவப் படிப்புகளில், அரசு பணியில் உள்ள டாக்டர்கள் சேர, தமிழக அரசு கொண்டு வந்த, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடும் முறை செல்லும்' என, ஒரு நீதிபதியும், மருத்துவ கவுன்சில் விதி முறையை பின்பற்றும்படி, மற்றொரு நீதிபதியும், மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர். இதனால், மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு, இந்த வழக்கு செல்கிறது.முதுகலை மருத்துவப் படிப்புகளில், அரசு பணியில் உள்ள டாக்டர்கள் சேர இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்த விதிமுறைகளை பின்பற்றும்படி, சென்னை உயர் நீதிமன்றம், ஏப்., 17ல் உத்தரவிட்டது. இதில் 'மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி, தொலைதுார பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு, 'நீட்' தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன், 10 முதல், 30 சதவீதம் வரை, கூடுதல் மதிப்பெண்களை கணக்கிட வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுக்களில், 'தமிழக அரசு வெளியிட்ட விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும்; பல ஆண்டுகளாக, இந்த நடை முறையே அமலில் உள்ளது. எனவே, மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை பின்பற்ற கூடாது' என, கூறப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க, நீதிபதிகள், சசிதரன், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, 'சிறப்பு பெஞ்ச்' அமைக்கப்பட்டது. அரசு டாக்டர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.வில்சன், வழக்கறிஞர்கள், எல்.சந்திரகுமார், திலகவதி, ஜி.சங்கரன் உள்ளிட்டோரும் அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர், சிறப்பு பிளீடர் டி.என்.ராஜகோபாலன், மருத்துவ கவுன்சில் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், வழக்கறிஞர், வி.பி.ராமன் ஆகியோர் ஆஜராகினர்.

இந்த வழக்கில், நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: கிராமப்புறங்களில் டாக்டர்கள் பணியாற்றுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதில் மருத்துவ கவுன்சிலும், மாநில அரசும் உறுதியாக உள்ளன. அதற்காக, ஊக்க மதிப்பெண் வழங்கும் முறையே, வெவ்வேறாக உள்ளது. வரையறுக்கப்பட்ட பகுதிகளில், பணியாற்றும் டாக்டர்கள் அனைவரும் பலன் பெற, பல ஆண்டுகளாக இந்த நடைமுறையை, மாநில அரசு பின்பற்றுகிறது. ஊக்க மதிப்பெண் வழங்குவதில், வெவ்வேறு நடைமுறையை பின்பற்றுவதன் மூலம், மத்திய அரசு விதிமுறைக்கும் மாநில அரசின் கொள்கைக்கும் எந்த முரண்பாடும் இல்லை. எனவே மாநில அரசு பின்பற்றும் நடைமுறை செல்லும். மாநில அரசு வெளியிட்ட விளக்க குறிப்பேட்டை எதிர்த்து, இங்கே வழக்கு தொடரப்படவில்லை.

அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்தது சரியா என்ற கேள்விக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி, பதில் மனு பெற்று, முடிவு செய்ய வேண்டும். இந்த வழக்கில், அதை பரிசீலிக்க தேவையில்லை. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாநில அரசின் விளக்க குறிப்பேட்டில் கூறியுள்ள வழிமுறைகளின்படி, வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:கல்வியில் குறைந்தபட்ச தரத்தை உறுதி செய்து, அனை வருக்கும் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும். எனவே இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைக்கு முரணாக மாநில அரசின் விளக்க குறிப்பேட்டில் உள்ள சில பிரிவுகள், ரத்து செய்யப்படுகின்றன.மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, மாணவர்கள் சேர்க்கைக்கான நடைமுறையை மாநில அரசு வகுக்க வேண்டும். அதன்படி முதுகலை மருத்துவப் படிப்புக்கான, தரவரிசை பட்டியலை தயாரிக்க வேண்டும். மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்ததால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு இந்த வழக்கு செல்கிறது. மூன்றாவது நீதிபதியின் உத்தரவைப் பொறுத்து, இந்த வழக்கில் முடிவு ஏற்படும்.
அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம் வருமான வரித்துறையினர் 'கிடுக்கிப்பிடி'

பதிவு செய்த நாள் 03 மே 2017 22:57

அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். துணை வேந்தர் கீதாலட்சுமியிடமும் விசாரணை
நடந்தது.

தமிழக சுகாதார துறை அமைச்சர், விஜயபாஸ்கரின் வீடு மற்றும் நண்பர்களின் வீடுகளில், ஏப்., 7ல், வருமான வரி சோதனை நடந்தது. அதில், ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர், அவர் மூலமாக பிரசாரம் செய்ய பேரம் பேசியதாக, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரிடமும், அவரது மனைவி ராதிகாவிடமும் விசாரணை நடந்தது. சோதனையில் சிக்கிய, முன்னாள் எம்.பி., ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம், இரண்டு முறை விசாரணை நடந்தது. இந்நிலையில், நேற்று அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி, ரம்யாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள், 'கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தினர். அவரிடம், ஆறு மணி நேரங்களுக்கு மேலாக, விசாரணை நடந்தது.

இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வழக்கில் தொடர்புடைய சிலர், தொடர் விசாரணையில் உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, விஜயபாஸ்கர் மனைவியிடம் விசாரணை நடத்தினோம். அவர், சில முக்கிய தகவல்களை கூறியுள்ளார். அதன் அடிப்படையில், மேலும் சிலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

அதேபோல, துணைவேந்தர் கீதாலட்சுமியிடமும், நேற்று பல மணி நேரம் விசாரணை நடந்தது. அமைச்சர், விஜயபாஸ்கரை மீண்டும் விசாரிப்போம். இது ஒரு தொடர் நிகழ்வு. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சேலம் - கரூர் பயணிகள் ரயிலை நிறுத்த முடிவு?

பதிவு செய்த நாள் 03 மே
2017
22:18

கரூர்: சேலத்தில் இருந்து, கரூர் வரை இயக்கப்படும் பயணியர் ரயிலில், பயணியரின் வருகை மிகக் குறைவாக இருப்பதால், அந்த ரயிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் - கரூர் இடையே, 2013 முதல் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு, சேலம் - கரூர் இடையே பயணியர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும், காலை, 6:00 மணி மற்றும் 11:30 மணி, மாலை, 5:30 மணி ஆகிய நேரங்களில், சேலத்தில் இருந்து புறப்பட்டு, கரூர் சென்றடையும். பயணியரிடம் வரவேற்பு இல்லாததால், இந்த ரயில் சேவையை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, தென்னகரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சேலம் - கரூர் பயணியர் ரயிலில், பயணியர் வருகை, 13 முதல், 21 சதவீதம் மட்டும் உள்ளது. இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதனால், வரும் காலத்தில், இந்த ரயில் சேவை நிறுத்தப்படும். இருந்தும், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, திருச்சி வரை இந்த பயணியர் ரயிலை நீட்டித்தால் மட்டுமே, தொடர்ந்து இயக்குவதற்கான வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, திருச்சியில் இருந்து கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்பட்ட கிருஷ்ணராஜபுரம் ரயில், சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்கள், பயணியரிடையே வரவேற்பு இல்லாததால், சமீபத்தில் நிறுத்தப்பட்டன. இவ்வாறு கூறினர்.
ஆர்.டி.ஐ., சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு

பதிவு செய்த நாள் 03 மே
2017
21:54

மதுரை: 'தகவலறியும் உரிமை சட்டத்தில், தகவல் கேட்பவர் இறந்துவிட்டால், தகவல் அளிக்காமல் மனு முடித்து வைக்கப்படும்' என்ற புதிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த சட்டத் திருத்தம், தகவலறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கொல்லப்படுவதை ஊக்குவிக்கும் என்பது, எதிர்ப்பாளர்களின் வாதம் .இந்நிலையில், இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக, சமூக ஆர்வலர்கள், www.change.org என்ற இணையதளத்தில் புகார் மனு ஒன்றை, சில நாட்களுக்கு முன் துவங்கினர். மத்திய அரசுக்கு அளிக்கப்படவுள்ள இம்மனுவில் இதுவரை, அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட, 1.23 லட்சம் பேர் கையெழுத்திட்டு உள்ளனர்.
மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாமுத்தையா மருத்துவமனை டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மே 04, 03:45 AM

சிதம்பரம்,

மருத்துவ பட்ட மேற்படிப்பில் தமிழ்நாடு அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ததை மீண்டும் பெற்றுத்தர வேண்டும், மேலும் அந்த இட ஒதுக்கீட்டுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்குதல், சுகாதார துறைக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்தல், கிராப்புற மருத்துவ சேவை தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுத்தல், அரசு டாக்டர்களின் உரிமைகளை பறிக்க கூடாது, கிராமங்களில் அரசு டாக்டர்கள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.ஆர்ப்பாட்டம்

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் அவர்களது சட்டை பையில் கருப்பு பட்டை அணிந்து, நேற்று ஒருமணி நேரம் பணியை புறக்கணித்து, அங்குள்ள நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு முதல் 9 மணி வரைக்கும் நடந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட டாக்டர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் டாக்டர்கள் பாலாஜி, ஜேம்ஸ், ரஞ்சித், அமுதா, சரவணகுமார் உள்ளிட்ட பல்வேறு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

ஒருமணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்பினார்கள். மேலும் நாளை(வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மாநில செய்திகள்

காதாரத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி போராட்டம் தொடரும் என டாக்டர்கள் அறிவிப்பு



சுகாதாரத்துறை அமைச்சருடன் டாக்டர்கள் நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்தது.

மே 04, 04:45 AM

சென்னை,

சுகாதாரத்துறை அமைச்சருடன் டாக்டர்கள் நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்தது. இதனால் போராட்டம் தொடரும் என டாக்டர்கள் அறிவித்தனர்.

டாக்டர்கள் போராட்டம்

அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு வழங்கப்பட்டுவந்த மருத்துவம், பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கையில் 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஐகோர்ட்டு விதித்த தடையை ரத்துசெய்ய வேண்டும், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் கடந்த மாதம் 19-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகள் மட்டுமே நடந்தது. மற்ற அனைத்துவிதமான சிகிச்சைகளும் தள்ளிவைக்கப்பட்டது. அறுவை சிகிச்சைகளும் நடைபெறவில்லை. இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.

பேச்சுவார்த்தை தோல்வி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் 27-ந்தேதி அரசு டாக்டர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் தொடர்ந்தது. நேற்று 15-வது நாளாக டாக்டர்களின் போராட்டம் நீடித்தது.

தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினர், துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலை 5.40 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை இரவு 7 மணி வரையிலும் நீடித்தது. இருதரப்பினரும் சுமுகமான முடிவுக்கு வராததால் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது.

போராட்டம் தொடரும்

பேச்சுவார்த்தைக்கு பின்னர் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க மாநில செயலாளர் டாக்டர் கதிர்வேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநில இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்பில் ஏற்கனவே அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் அந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து 15 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். 50 சதவீத இடஒதுக்கீடு நிரந்தரமாக்கப்படும் வரை எங்களின் போராட்டம் தொடரும்.

சிகிச்சை பாதிக்கவில்லை

அவசர சிகிச்சை, முக்கிய சிகிச்சை எதையும் நாங்கள் விட்டுக்கொடுப்பதில்லை. அறுவை சிகிச்சையையும் நிறுத்தவில்லை. மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ சேவைகள் தொடர்ந்து கிடைக்கின்றன. சட்டரீதியான தீர்வு ஓரிரு நாளில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

மத்திய அரசும் விரைவாக சட்டத்திருத்தம் கொண்டுவந்து எதிர்காலத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடவுளுக்கு மனு

முன்னதாக நேற்று தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் டாக்டர்கள் கருப்பு பலூன்கள் மூலம் கடவுளுக்கு மனு அனுப்பும் போராட்டத்தை நடத்தினார்கள். திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையிலும் போராட்டம் நடந்தது.
தேசிய செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா மறுஆய்வு மனு



  பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மே 04, 05:15 AM

புதுடெல்லி,

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.சொத்து குவிப்பு வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 66 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 4 பேரின் தண்டனையையும் முழுவதுமாக தள்ளுபடி செய்தார்.சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் கீழ்க்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கினார்கள்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.மறுஆய்வு மனு

இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரில் ஜெயலலிதா மட்டுமே அரசு பதவி வகித்து வந்தார். அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியும்.

அவருடைய மரணத்தை தொடர்ந்து அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரை தண்டிப்பது முறையானது அல்ல. ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.தீர்ப்பு விவரங்கள்

இது சம்பந்தமாக ஏற்கனவே இதேபோன்ற வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட சில தீர்ப்புகள் குறித்த விவரங்களும் மனுவில் சேர்க்கப்பட்டுள்ளன.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் இந்த மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Wednesday, May 3, 2017

 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' காமெடிக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தம் இருக்கு...!
ஜெ.வி.பிரவீன்குமார்









ஊத்தப்பம்

வடிவேலு ஒரு படத்துல ஹோட்டல்  சப்ளையர்கிட்ட,  'ஒரு சொம்பு தண்ணியை எடுத்து தோசைக்கல்லுல  ஊத்தி, அதுக்குனு வழக்கமா வச்சிருக்க வெளக்கமாத்தால க்ளீன்பண்ணிட்டு ஒரு கிண்ணம் நிறைய மாவை எடுத்து  ஊத்தி, சின்ன ரவுண்டாவும் இல்லாம பெரிய ரவுண்டாவும் இல்லாம பொதுவா ஒரு ரவுண்டை ஊத்தி, நாலு அஞ்சு வெங்காயத்தையும்  கேரட்டையும் எடுத்து, அப்படியே பொடிபொடிபொடிபொடியா  நறுக்கி பரபரபரபரன்னு தூவிவிட்டு, நெய்யை ரெண்டு பக்கமும் ஊத்தி இட்லிபொடியை மழைச்சாரல் மாதிரி அப்டியே பெய்யவிட்டு, பொத்துனாப்புல... அப்படி ஒரு  புரட்டு, இப்படி ஒரு  புரட்டு புரட்டி, 'கமகம'ன்னு ஒரு ஊத்தப்பத்தை எடுத்துட்டு வாங்கன்னு ஆர்டர் பண்ணுவார். ஆனா அவ்வளவையும் கேட்டுட்டு அதைல்லாம் கொஞ்சம்கூட கண்டுக்காமல் கடைசியில, 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்...' னு அசால்ட்டா சொல்லிட்டுப்போயிடுவார் சப்ளையர். ஏன் எதுக்குன்னு தெரியலை. மக்கள் வைக்கிற கோரிக்கைகளையும் அதுக்கு அரசாங்கத்தோட ரியாக்சனையும் பார்க்கும்போது அந்தக்காமெடிதான் ஞாபகத்துக்கு வருது மக்களே....
கரூர் குஸ்தி... மருத்துவக் கல்லூரி மல்லுக்கட்டு!
துரை.வேம்பையன்


‘‘எனக்கு நல்ல பேர் கிடைத்துவிடும் என தம்பிதுரையும் விஜயபாஸ்கரும் அஞ்சுகிறார்கள்’’ - செந்தில்பாலாஜி

‘‘நிலத்தின் ரேட்டை ராக்கெட் வேகத்தில் ஏற்றுவதுதான் செந்தில்பாலாஜியின் திட்டம்’’ - விஜயபாஸ்கர்

‘கரூர் அரசு மருத்துவக் கல்லூரியை எங்கே அமைப்பது?’ என்பதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இந்நாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் நடக்கும் மல்லுக்கட்டு யுத்தத்தில் மாவுக்கட்டு போடாததுதான் குறை. இந்த கரூர் குஸ்தி, ஆளுங்கட்சியின் கோஷ்டிப் பூசலை அப்பட்டமாக்கியிருக்கிறது.

அரசின் முடிவை எதிர்த்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வே கோதாவில் குதித்திருக்கிறார். ‘குப்புச்சிப்பாளையத்தில் மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும்’ என உயர் நீதிமன்றம் வரை போய் உண்ணாவிரதத்துக்கு அனுமதி வாங்கியிருக்கும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜியிடம் பேசினோம்.



“நான் அமைச்சராக இருந்தபோது, 12.8.2014 அன்று கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க அறிவிப்பு வெளியிட்டார் அம்மா. மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டுவர முயற்சி செய்தேன். குப்புச்சிப்பாளையத்தில் அமைக்க, 25 ஏக்கர் நிலமும் பெறப்பட்டு 229.46 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்து, அடிக்கல்லும் நாட்டினார் அம்மா. இந்தச் சமயத்தில் அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திறப்பு விழாவே நடத்திவிட்டார்கள். ஆனால், கரூரில் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. இதற்குக் காரணம் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும்தான். குப்புச்சிப்பாளையத்தில் இருந்து காந்தி கிராமம் அருகே உள்ள சணப்பிரட்டிக்கு திட்டத்தை மாற்றிவிட்டார்கள். அந்த இடத்தின் பரப்பு, 15 ஏக்கர்தான். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க குறைந்தபட்சம் 25 ஏக்கர் நிலம் வேண்டும். அதோடு, சணப்பிரட்டி இடம் நகராட்சிக்கு சொந்தமானது. கரூர் நகர பாதாள சாக்கடை திட்டத்துக்காக உள்ள இடம். அங்கே போய்வர சரியான போக்குவரத்து வசதியும் இல்லை. அதனால், அங்கே இது அமைவதை யாருமே விரும்பவில்லை. மாவட்டம் முழுக்க உள்ள அனைத்துப் பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வந்துபோக ஏற்றது, குப்புச்சிப்பாளையம்தான்.

இது குப்புச்சிப்பாளையத்தில் அமைந்தால், எனக்கு நல்ல பேர் கிடைத்துவிடும் என்பதால்தான் அவர்கள் இடத்தை மாற்றத் துடிக்கிறார்கள். தம்பிதுரை, விஜயபாஸ்கர் ஆகியோரின் மக்கள் விரோதப்போக்கை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்” என்றார் ஆவேசமாக.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்ன சொல்கிறார்? அவரிடம் பேசினோம். ‘‘கரூரில் உள்ள மக்கள், வர்த்தகர் சங்கம் என யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். ஒருவராவது, ‘குப்புச்சிப்பாளையத்தில் அமைக்கணும்’ எனச் சொன்னால்... நாங்கள் ஒதுங்கிக்கொள்கிறோம். கரூர் நகர மக்களுககு மட்டுமில்லை... செந்தில்பாலாஜியின் அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கும், மருத்துவமனைக்கு வந்துபோக சணப்பிரட்டிதான் வசதி. குப்புச்சிப்பாளையம், கரூர் நகரத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரம். சரியான போக்குவரத்து வசதிகளும் இல்லை.

அவர் கொண்டுவந்த திட்டம் என்பதால், தவறான இடத்தில் அமைக்கத் துடிக்கும் அவரின் செயலை இப்போது அமைச்சராக இருக்கும் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. அம்மா அடிக்கல் நாட்டியபோதே, செந்தில்பாலாஜியின் சுயநலம் புரிந்து, சணப்பிரட்டிக்கு திட்டத்தை மாற்றினார்கள். ஆனால், அந்த உண்மையை அவர் மறைக்கப் பார்க்கிறார். இப்போது உள்ள அரசியல் அசாதாரண சூழலைப் பயன்படுத்தி, ஆட்சியில் இருப்பவர்களை மிரட்டி, தான் நினைத்த காரியத்தை அடையத் துடிக்கிறார். சுயநலத்துக்காக மக்களுக்குச் சிரமம் தரக்கூடிய இடத்தில் அமைக்க நினைப்பதை, மனசாட்சியுள்ள நாங்கள் எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்?

குப்புச்சிப்பாளையம் அருகேதான் அவரின் சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டி இருக்கிறது. அங்கே அவரும், அவருக்கு வேண்டியவர்களும், தி.மு.க-வினர் சிலரும் பல ஏக்கர் நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். அவற்றின் ரேட்டை ராக்கெட் வேகத்தில் ஏற்றத்தான், அங்கே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைக்கத் துடிக்கிறார்கள். அவரின் இந்த விபரீத எண்ணம் புரியாமல், அவருடன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ சுப்ரமணியன் உள்ளிட்ட பலரும் இப்போது செந்தில்பாலாஜியின் கபட நாடகத்தைப் புரிந்துகொண்டு, ஒதுங்கிவிட்டார்கள். அண்ணன் தம்பிதுரை பெயரையும் இதில் இழுத்து, தேவையில்லாமல் அரசியல் செய்கிறார் செந்தில்பாலாஜி. தலையால் தண்ணீர் குடித்தாலும், செந்தில்பாலாஜி நினைக்கிற, மக்கள் விரும்பாத குப்புச்சிப்பாளையத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைய ஒருபோதும் விடமாட்டோம்” என்றார் அமைச்சர் அதிரடியாக!

- துரை.வேம்பையன்
படங்கள்: நா.ராஜமுருகன்
மணமகன் வைத்த செக்! திருப்பியடித்த மணமகள்! 

ராகினி ஆத்ம வெண்டி மு.

மணமகளின் கல்வித் தகுதியை சோதிக்க மணமகன் நடத்திய தேர்வில் அவரே ஃபெயில் ஆன கதையை கேட்டதுண்டா?




உத்தரப்பிரதேச மாநிலம் மணிப்பூரி கிராமத்தில் பெற்றோர்கள் நிச்சயித்த திருமணத்தில் இந்த அட்ராசிட்டி அரங்கேறியுள்ளது. நம்ம மாப்பிள்ளை +2 வரையில் படித்தவர். ஆனால், கல்யாணப் பொண்ணு வெறும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதால் மாப்பிள்ளை வீட்டு அதிகாரம் கொஞ்சம் தூக்கலாகவே இருந்துள்ளது.

அதே அதிகாரத்துடன் மணமகளுக்கு எழுத படிக்க வருமா என மணமகன் ஒரு சின்ன ஹிந்தி டெஸ்ட் நடத்தியுள்ளார். இதில், நூற்றுக்கு நூறு பெற்று மணமகள் பாஸாக, போனால் போகிறது என திருமணத்துக்கு ஓகே சொல்லியுள்ளார் மணமகன்.

அடுத்து இதே டெஸ்ட் மணமகனுக்கும் நடத்த வேண்டுமென கல்யாணப்பொண்ணு திருப்பியடிக்க, இந்த ட்விஸ்ட்டை சற்றும் எதிர்பார்க்காத மணமகன் கொஞ்சம் ஜெர்க் ஆனாலும் பரிட்சைக்கு சம்மதம் தெரிவித்தார். ஹிந்தியில் ஐந்தே ஐந்து வார்த்தைகளுக்கு ‘ஸ்பெல்லிங்’ டெஸ்ட் வைத்தார் மணமகள்.

பாஸ் மார்க்காவது எடுத்துவிடுவார் என சுற்றமும் நட்பும் காத்திருந்தனர். ஆனால், திருமண வீட்டார் சற்றும் எதிர்பார்க்காதவாறு மாப்பிள்ளை 'பிரகஸ்பதி' எடுத்த மதிப்பெண் என்ன தெரியுமா... ‘பூஜ்ஜியம்’. அடுத்து என்ன, இரு வீட்டாரும் எவ்வளவோ சமாதானங்கள் கூறினாலும், மாப்பிள்ளைக்கு ‘கெட் அவுட்’ சொல்லிவிட்டார் அந்த 'கெத்து' மணப்பெண்.

நாட்டிலேயே முதன்முறையாக, வெளிமாநிலப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு : கேரள அரசு முடிவு!


பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பலர் தங்களது சொந்த ஊரை விட்டுவிட்டு, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில்தான் பணிபுரிந்துவருகின்றனர். பொதுவாக, மாநில அரசுகளின் காப்பீடு என்பது, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என இருந்துவருகிறது. இந்த நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக, கேரளாவில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர்களுக்கும் காப்பீட்டுத் திட்டத்தை, அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

Kerala Goverment


கேரளாவில், சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தவர்கள் பணிபுரிந்துவருகின்றனர். அதன்படி, அங்கு குறிப்பிடப்பட்ட சில மருத்துவமனைகளில் ரூ.15,000 வரை மருத்துவ சிகிச்சை பெறும் காப்பீட்டுத் திட்டத்தை, மாநில அரசு கொண்டுவர உள்ளது. அதேபோல, விபத்துகளில் உயிரிழக்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, தலா ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

கேரள அரசு இதற்காக, 10 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. விரைவில் இந்தத் திட்டம் அமலுக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கேரளாவில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நோக்கியாவின் ஆண்ட்ராய்டு போன்கள், ஜூன் மாதம் ரிலீஸ்! 

இரா. குருபிரசாத்

இந்தியாவில், ரீ-என்ட்ரி கொடுக்கும் பணியில் நோக்கியா நிறுவனம் தற்போது பிஸியாகியுள்ளது. குறிப்பாக, இந்த முறை ஆண்ட்ராய்டுடன் என்ட்ரி ஆவதால், எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறியுள்ளன. இந்த நிலையில், சீனாவில் நோக்கியா 6 ஆண்ட்ராய்டு போன்களின் விற்பனை, ஆன்லைனில் நொடிப் பொழுதில் விற்றுத் தீர்ந்தன. இதையடுத்து, இந்தியாவில் நோக்கியா எப்போது ரிலீஸ் ஆகும்? என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!






வரும் ஜூன் மாதம், நோக்கியா ஆண்டராய்டு போன்கள் இந்தியாவில் வெளியாக உள்ளன. நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3 ஆகிய மூன்று ஆண்டராய்டு போன்களும், ஜூனில்தான் ரிலீஸ் ஆகின்றன. அதேபோல நோக்கியாவின் லெஜென்ட் போன் மாடலான 3310 போனும், ஜூனில் என்ட்ரி கொடுக்கிறது.

குறிப்பாக, சில மாற்றங்களுடன் 3310 வெளியாக உள்ளது. இந்திய மதிப்பில் நோக்கியா 3 போன் ரூ.12,400, நோக்கியா 6 போன் ரூ.19,000, நோக்கியா 5 போன் ரூ. 15,700-க்கு விற்பனைக்கு வர உள்ளன. அதேபோல 3310 போன், 4,900 ரூபாய்க்கு விற்பனைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

#Alert - சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம், வருகின்ற 4-ம் தேதி துவங்குகிறது! 

இரா. குருபிரசாத்

பருவமழை பொய்த்ததால், இந்தியா முழுவதும் இந்தாண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் மழை இல்லாததால், தமிழகத்தில், இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் முதலே கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது.

குறிப்பாக, கடந்த மாதம் முதல் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 பாரன்ஹீட்டுக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெப்பச்சலனம் காரணமாக, நேற்று கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.



ஆனாலும் சென்னை, நெல்லை, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வெயில் நிலவியது. அதேபோல் வட மாநிலங்களிலும் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், கத்தரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் வருகின்ற 4-ம் தேதி (நாளை மறுநாள்) துவங்குகிறது. இதற்கிடையே, வருகின்ற 7-ம் தேதி வரை, தமிழகத்தில் இதே நிலை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘கூல்ட்ரிங்ஸ் குடிக்கும்போதெல்லாம் அந்த ஞாபகம்தானே வரும்..!’ - வடிவேலுவின் வெயில் காமெடிகள்

விக்னேஷ் சி செல்வராஜ்


கத்திரி வெயில் அதிகாரப்பூர்வமா ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே வெயில் கொளுத்த ஆரம்பிச்சிடுச்சு. வீட்டை விட்டு வெளியே போனால், திரும்பி வரும்போது மெரினா பீச்ல இருக்கிற கண்ணகி சிலை கலருக்கு மாறிடுவோம் போல... அப்படி இருக்கு வானிலை. அப்படித் தகிக்கும் இந்தக் கோடையை கொஞ்சம் சுமூகமாகக் கடக்க இந்த வடிவேலு, கவுண்டமணி, செந்தில் போன்ற மகான்கள் நமக்குத் துணையாக இருப்பார்கள். கோடை வெயிலுக்கு இதமாக இந்த சம்மர் ஸ்பெஷல் காமெடிகள் சிலவற்றைப் பார்க்கலாம்...



ஷ்ஷப்பா... என்னா வெயிலு

பார்த்திபன், முரளி ஆகியோர் நடித்த 'வெற்றிக்கொடி கட்டு' திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடி டிராக் அசத்தலாக இருக்கும். குடும்பச் சுமைகளைக் குறைப்பதற்காக வெளிநாட்டு வேலைக்குச் செல்ல நினைத்தவர்கள் ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட, பார்த்திபன் வீட்டுக்கு முரளியும், முரளி வீட்டுக்குப் பார்த்திபனும் மாற்றி மாற்றி உதவுவதற்காகச் செல்வார்கள். பார்த்திபன் சென்ற முரளி ஊரில்தான் நம்ம வைகைப்புயலின் என்ட்ரி. துபாய் ரிட்டர்ன் மைனராக சில்க் ஜிப்பா போட்டு ஊர்க்காரர்களை என்டர்டெயின் செய்வார். அவர் பார்த்திபனிடம் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமாகும் காட்சிகள் நகைச்சுவைக்கு கியாரண்டி. பெஞ்சமினிடம் மாட்டிக்கொண்ட பின்னர், தூரத்தில் பார்த்திபனைப் பார்த்ததும் துணிமணிகளை எல்லாம் கழற்றிவீசிவிட்டு வந்த பாதையிலேயே திரும்பவும் ஓடிப்போய் பஸ்ஸில் ஏறிக் கிளம்பும் காட்சிகள் எல்லாம் அதகளம்தான். #வெயிலுக்கு காட்டன் சட்டை போடணும்!

வீடு பத்தி எரிஞ்சா பயர் சர்வீஸு... வயிறு பத்தி எரிஞ்சா எளநி சர்வீஸு..!

கவுண்டமணி - செந்தில் - வடிவேலு என நகைச்சுவை மும்மூர்த்திகளும் இணைந்து நடித்த 'கோயில்காளை' படம் கோடைகால காமெடிக்கு இன்னுமொரு உதாரணம். வெயில்காலத்தில், சூரியன் நம் தலையில் ஸ்ட்ரா போட்டு நீரை உறிஞ்ச, ஜில்லுனு எதையாவது குடிச்சாதான் சூடு தணியும். கோடைகாலத்தில் சூரியனின் இம்சையைக் குறைத்து வெயிலுக்கு ஈடுகொடுக்க இளநீர்க்கடை போடுவார் கவுண்டமணி. குலைகுலையாய் இளநீரை இறக்கி, மரத்தடியில் போட்டு விற்பார்கள். அந்தக் காட்சியில்தான், தன்னிடம் சிக்கிக்கொண்ட ஒருவரிடம், 'அவன் அவன் ஒன்னுக்கு வரலைன்னு வருத்தப்படுறான். இவனுக்கு எளநியில தண்ணி வரலையாம்' எனும் அரும்பெரும் தத்துவத்தைச் சொல்வார் கவுண்டமணி. அப்புறம் செந்திலும், வடிவேலும் கூட்டுச்சதித் திட்டம் தீட்டி கயிறு போட்டுக் கவுண்டமணியில் இளநீரைத் திருடி சீப் ரேட்டுக்கு விற்று, மாட்டிக் கொள்வார்கள். 'தண்ணி இல்லாம பின்னே... எளநியில என்ன தயிரா இருக்கும்..?', 'நாங்க மட்டும் என்ன எளநிய ஆலமரத்துல இருந்தா புடுங்குறோம்..?' போன்ற நினைத்தாலே குலுங்கிச் சிரிக்கவைக்கும் வசனங்களும் இந்தப் படத்தில் இருப்பவை. அந்தக் காட்சியை கீழே பார்க்கலாம்.

பச்சைல ஒரு எளநி... செகப்புல ஒரு எளநி சாம்பிள் கொடு

வெயிலில் அலைந்து திரியும் வடிவேலுவுக்கு ரோட்டோரத்தில் அல்வா வாசுவின் எளநிக்கடையைப் பார்த்ததும் உச்சி குளிரும். ஆனால், அஞ்சு ரூபாய் மட்டுமே சட்டையின் உள்பாக்கெட்டில் வைத்திருப்பவருக்கு 'அவன் என்ன விலை சொன்னா நமக்கென்ன... நம்ம விலைக்கு அவனைக் கொண்டு வந்துருவோம்...' எனக் கங்கணம் கட்டிக்கொண்டு பேச்சுவார்த்தையில் குதிப்பார். அரிசிக்கடையில் ஏப்பம் விட்ட பழக்கத்தில் வழக்கம்போல இங்கேயும் நம்ம ஆள் எளநி சாம்பிள் கேட்க, அரிவாளை ஓங்குவார் அல்வா வாசு. அப்புறம் வடிவேலு வாயாலேயே வியாபாரத்தை முடித்து ஓசியிலேயே எளநியையும் குடித்து விடுவார். அப்போது அவர் சொன்ன அட்ரஸை தான் இன்னும் இளநீர்க்கடை வாசு தேடிக் கொண்டிருக்கிறாராம். தென்னந்தோப்பு, வத்தலகுண்டு, வாடிப்பட்டி ரோடு, வாணியம்பாடி தெரு, சென்னை-13, சேலம் - 21.

கூல்ட்ரிங்ஸ் குடிக்கும்போதெல்லாம் அந்த ஞாபகம்தானே வரும்..!

கோடைகாலத்துக்கும் சோடாவுக்கும் எக்கச்சக்கத் தொடர்புகள் உண்டு. வெயிலுக்கு ஆற்றமாட்டாமல் கூல்ட்ரிங்ஸ் கடைக்குப்போன வடிவேலுவுக்கும், பின்னாட்களில் அரசியல் களத்தில் வைகைப்புயலை வறுத்தெடுத்த சிங்கமுத்துவுக்கும் பகையை மூட்டியதில் இந்த கூல்ட்ரிங்ஸ் கடை ஓனருக்கும், கடைக்கு முன்னால் இருந்த குப்பைத்தொட்டிக்கும் ரொம்பவே பங்கு உண்டு. ஒரு மிடறு கூல்ட்ரிங்க்ஸ் குடித்தவர், அதை வைத்துவிட்டு விஷாலுக்கு போன் போட்டு விபரம் சொல்வதற்குள் கூல்ட்ரிங் பாட்டில் காணாமல் போயிருக்கும். அதேநேரம், சிங்கமுத்து அதே போன்ற பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டிருப்பார். அது தான் வாங்கி வைத்திருந்த பாட்டில் என நினைத்து வடிவேலு வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவிட, அப்புறம் தான் தெரிய அந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டில் கை தவறிக் குப்பைத் தொட்டிக்குள் விழுந்து கிடப்பது தெரியவரும். பிறகு, பேசிய பேச்சுக்குக் கிடைத்த பின்விளைவு இன்னும் மோசம்... ஷ்ஷப்பா..! என்னா வெயிலு..?
10 ஆயிரம் அமெரிக்கர்களைப் பணிக்கு எடுக்கிறது இன்ஃபோசிஸ்! ஏன்?

எம்.குமரேசன்


இந்தியாவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம், இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் அமெரிக்கர்களைப் பணிக்கு அமர்த்துகிறது.



`ஹெச் 1பி விசா' எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்ததையடுத்து, இந்திய நிறுவனங்களுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய ஐ.டி நிறுவனங்களின் 60 சதவிகித வாடிக்கையாளர்கள், வட அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் . ஐரோப்பிய நாடுகளில் 20 சதவிகித வாடிக்கையாளர்களும் மற்ற நாடுகளில் 20 சதவிகித வாடிக்கையாளர்களும் உள்ளனர். சுமார் 150 பில்லியன் டாலர் அளவில் டர்ன்ஓவர் கொண்ட இந்திய ஐ.டி நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக, இங்கு இருந்து ஐ.டி ஊழியர்களை அனுப்புவதை வழக்கமாகக்கொண்டிருக்கின்றன. இந்திய ஐ.டி நிபுணர்கள் ஆயிரக்கணக்கானோர், வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.

இந்திய ஐ.டி துறைக்குச் சரிவை ஏற்படுத்தும் வகையில், ஹெச்.பி-1 விசா எண்ணிக்கையைக் குறைத்தது அமெரிக்க அரசு. இதனால், இந்திய ஐ.டி நிபுணர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று பணிபுரியும் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள்கூட இந்திய ஐ.டி நிபுணர்களுக்கு விசா வழங்குவதைக் குறைக்கத் தொடங்கிவிட்டன. இதன் எதிரொலியாக, 'விப்ரோ' போன்ற பெரிய நிறுவனங்கள்கூட சுமார் 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க, இன்ஃபோசிஸ் நிறுவனம் வேறு வழிகளைப் பின்பற்ற முடிவுசெய்துள்ளது. வழக்கமாக, க்ளையன்ட் சர்வீஸ் செய்ய இந்தியர்கள் அமெரிக்கா செல்லும் முறையைத் தவிர்க்கும் முடிவுதான் அது. அதற்குப் பதிலாக, அந்தப் பணியைச் செய்ய அமெரிக்க ஐ.டி நிபுணர்களையே பணிக்கு எடுக்க முடிவுசெய்துள்ளது. மொத்தம் 10 ஆயிரம் அமெரிக்கப் பணியாளர்களை இன்ஃபோசிஸ் நிறுவனம் பணிக்கு அமர்த்தப்போகிறது. இவர்களையே financial services, manufacturing, healthcare, retail and energy போன்ற பிரிவுகளில் பணியாற்றவைக்கவும் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, இண்டியானாவில் இன்ஃபோசிஸ் முதல் தொழில்நுட்ப மையத்தை அமைக்கிறது. மேலும், மூன்று நகரங்களில் விரைவில் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இரு மாதங்களுக்கு முன்பு `இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி போன்ற நிறுவனங்கள், ஹெச் 1 பி விசா பெறுவதில் முறைகேட்டில் ஈடுபடுகின்றன' என அமெரிக்கா குற்றம்சாட்டியது. மேலும், `லாட்டரி முறையில் அதிக ஹெச்1 பி விசாக்களைப் பெறும்வகையில், அதிக விண்ணப்பங்களை அனுப்புகிறது' எனவும் அமெரிக்கா குறை கூறியிருந்தது. ஒவ்வோர் ஆண்டும் 85 ஆயிரம் ஹெச் 1 பி விசாக்களை இந்தியாவுக்கு ஒதுக்குகிறது அமெரிக்கா. இதில் 65 ஆயிரம் விசாக்கள் ஐ.டி ஊழியர்களுக்கும், அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றவர்களுக்கு 20 ஆயிரம் விசாக்களும் வழங்கப்படுகின்றன. 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, இன்ஃபோசிஸ், டாடா நிறுவனங்கள் சேர்ந்து 7,504 ஹெச் 1 பி விசாக்களைப் பெற்றிருக்கின்றன. மொத்த விசாக்களில் இது 8.8 சதவிகிதம்.

இதுகுறித்து இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா கூறுகையில், ''அமெரிக்கர்களுக்குப் பணி வழங்க, இண்டியானாவில் ஆகஸ்ட் மாதம் முதல் தொழில்நுட்ப மையம் செயல்படத் தொடங்குகிறது. ஐ.டி. தொழில்நுட்பத்தை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டியக் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். சர்வதேச வல்லுநர்களுடன் மண்ணின் மைந்தர்களும் இணைந்து பணியாற்றுவது வர்த்தகரீதியில் ஆரோக்கியமான விஷயம்'' எனத் தெரிவித்துள்ளார்.

  இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விஷால் சிக்கா பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரு ஆண்டுகளில் ஏற்கெனவே இரண்டு ஆயிரம் அமெரிக்கர்களைப் பணிக்கு எடுத்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் உள்ள 2,500 கல்வி மையங்களில் 1,34,000 மாணவர்களுக்கும் 2,500 ஆசிரியர்களுக்கும் இன்ஃபோசிஸ் அறக்கட்டளை பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

NEWS TODAY 21.12.2025