Wednesday, May 10, 2017

SC pushes for an all-India NEET-like test to pick judges
New Delhi: 
 


Pushing for major judicial reforms to bring uniformity in the selection process and curb the practice of favouritism and nepotism in selection of judges in lower judiciary, the Supreme Court has decided in principle to introduce a common test for selection and sought suggestions from states and Union Territories on the mode of implementing it. Although creation of All India Judicial Services was proposed way back in 1960, it could not be implemented due to stiff opposition from various state governments. Even the Law Commission in its various re ports has favoured creation of AIJS but it was not considered to be practical by some of the state governments and high courts and the proposal was shelved.

As the state governments and HCs have not been able to fill up vacancies in lower judiciary and there have been allegations for favouritism in selection process, the Supreme Court favoured to introduce a central selection mechanism under which a common test would be conducted on all-India level by a central agency which will prepare a merit list of aspiring judges.

Taking suo motu cognisance of a letter written by the Centre to the apex court asking it to introduce single window test for selection of judges, a bench of Chief Justice J S Khehar and Justices A K Goel and A M Khanwilkar said it had held consultations on the issue and decided in favour of the common test. Referring to common medical examination NEET, the bench said test for judges in lower judiciary would also be conducted on the same pattern.It said the central agency would be tasked to conduct the test and prepare a merit list. It, however, made it clear that appointment of judges would be done by respective state governments or high courts and holding common test would not take away their right to appoint judges.

“We want a centralised system for selection process. But the common test would not tamper with the federal structure and appointment would be done by states,“ the bench said.It sought response from states and UTs on introducing the one-window test.

The court noted that there was no uniformity in selection process and the common test would set a common minimum standard for judges across the country . It said students after clearing the exam could opt for the state of their choice and state governments would appoint them. The bench asked Solicitor General Ranjit Kumar whether it should go the “whole hog“ in implementing the common test or should it be implemented in a phased manner.
Kumar and senior advocate Ajit Sinha, appearing for Jharkhand government, strongly favoured the SC's initiative and told the bench that common test be applied at one go and not in different phases.

The bench said it would pass a judicial order for implementing common test for selection of judges and posted the case for hearing to July 10.

The total sanctioned strength of judicial officers in district and subordinate courts is 21,320 as on June 30, 2016. Of these, 16,383 have been filled, leaving 4,937 vacancies. Lack of sufficient number of judges in lower courts has resulted in staggering number of pendency of cases. As per the National Judicial Data Grid, the pendency in district courts is around 2.8 crore and around ten per cent of them -2,32,3781-have been pending over 10 years.



கணவன் முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.

“அடியேய்... நானும், நீயும் அமொரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் கணவர் ..
அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.

அதற்கு கணவர், “என்னடி தொரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!
'நீட்' தேர்வு அத்துமீறல்:  4 ஆசிரியைகள் 'சஸ்பெண்ட்'

கண்ணுார்: கேரளாவில், 'நீட்' எனப்படும், தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியரிடம், சோதனை என்ற பெயரில் மிகக் கடுமையாக நடந்து கொண்ட, நான்கு ஆசிரியைகள், 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டுள்ளனர்.




'நீட்' எனப்படும், தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும், ஞாயிற்றுக் கிழமை நடந்தது. அப்போது, கேரளா, தமிழகம் உட்பட, பல்வேறு மாநிலங்களில், தேர்வு எழுத, தேர்வு மையங்களுக்கு வந்த மாணவ, மாணவியரிடம், கண்காணிப்பாளர்கள் மிகக் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முழுக்கைச் சட்டை அணிந்த மாணவர்கள், கம்மல், மூக்குத்தி, கால் கொலுசு அணிந்து வந்த மாணவியர், தேர்வு அறைக்குள் அனுமதிக்கப் படவில்லை. இதனால், முழுக் கைச் சட்டையை பல மாண வர்கள், அரைக்கை சட்டையாக பிளேடால் வெட்டிக் கொண்டு, தேர்வு எழுதச் சென்றனர். மாணவியர், கம்மல், மூக்குத்தி, கொலுசு போன்றவற்றை கழற்றி, பெற்றோரிடம் தந்து விட்டு புலம்பியபடி, தேர்வு எழுதினர்.

விசாரணை :

கேரளாவில், கண்ணுாரில் உள்ள ஒரு தேர்வு ,

மையத்தில், ஒரு மாணவியின் உள்ளாடையில் உலோகத்தாலான கொக்கி இருந்ததால், அதை கழற்றினால்தான் தேர்வு எழுத அனுமதிப்பேன் என, ஒரு கண்காணிப்பாளர் கண்டிப்பாக கூறிய சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யது. இது தொடர்பாக, பெற்றோர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறினர்.

இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு, கேரள மாநில குழந்தைகள் உரிமைக் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. கேரள மாநில மனித உரிமைக் கமிஷன், தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. உள்ளாடையை கழற்றச் சொன்ன சம்பவம் குறித்து,உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என, மனித உரிமை கமிஷன் வலியு றுத்தி உள்ளது.

இந்த நிலையில், கண்ணுாரில், 'நீட்' தேர்வு நடந்த ஒரு பள்ளியின் முதல்வர் ஜமாலுதீன், நிருபர் களிடம் நேற்று கூறியதாவது:'நீட்' தேர்வு கண் காணிப்பாளர்களின் அத்துமீறல்கள் தொடர் பாக, முறையான புகார், எங்களுக்கு வரவில்லை. இருப் பினும், 'நீட்' தேர்வு எழுத வந்த மாணவியரி டம் மிக மோசமாக நடந்து கொண்ட, நான்கு ஆசிரி யைகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அவர் களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபையிலும் எதிரொலித்தது :

தேர்வு கண்காணிப்பாளர்களின் அத்துமீறல் சம்பவங்கள் குறித்த விவாதம், கேரள மாநில சட்டசபையிலும் எதிரொலித்தது. அப்போது, மார்க். கம்யூ., கட்சியை சேர்ந்த, மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: தேர்வு மையத்தில், கண் காணிப்பாளர்கள் அத்துமீறி நடந்து கொண்டது குறித்து, மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச்

செல்லப்படும். இந்த சம்பவங்கள் குறித்து, தக்க விசாரணை நடத்தும்படி போலீஸ்அதிகாரிகள் கேட்டு கொள்ளப் பட்டுள்ளனர். மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்து சட்ட நடவ டிக்கை எடுக்கப் படும். பாதிக்கப்பட்ட மாணவி யின் பெற்றோரை நேரில் சந்தித்து பேசும் படி, போலீஸ் அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது.இவ்வாறு அவர் பேசினார்.

அதீத ஆர்வக்கோளாறு! :

கேரளாவில், 'நீட்' தேர்வுஎழுதசென்ற மாணவி யின் உள்ளாடையை கழற்றச் சொன்ன கண் காணிப்பாளர், அதீத ஆர்வக் கோளாறால் அவ்வாறு நடந்து கொண் டதாக, சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., எனப் படும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், நேற்று கூறியதாவது:கேரள மாநிலம், கண்ணுா ரில், நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன சம்பவம், துரதிருஷ்ட வசமானது. அதீத ஆர்வக் கோளாறால், அந்த அதிகாரி அவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தால், மாணவியருக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு, சி.பி.எஸ்.இ., வருத்தம் தெரிவிக்கிறது.தேர்வு நடப்பதற்கு முன்பே, முறைகேடுகளை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, எஸ்.எம்.எஸ்., - இ-மெயில், அனுமதி அட்டை, இணையதளங்
கள் உள்ளிட்டவற்றில், விளக்கமாக தெரிவிக் கப்பட்டுள்ளது. நீட் தேர்வின் முக்கி யத்துவம் கருதி, எந்த வகையிலும், முறைகேடுகள் நடக்கக் கூடாது என்ற எண்ணத்திலும், நேர்மை யான மாணவர் களுக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மட்டுமே, பல்வேறு கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.
Min holds review meet with VCs
Chennai:
TIMES NEWS NETWORK 
 


The higher education department on Tuesday conducted a review meeting with Vice-chancellors and senior officials of 13 Universities under its administrative control. The meeting was held from 10am to 5pm at the Tamil Nadu State Council for Higher Education (TANSCHE) building.
 
Higher Education Minister KP Anbalagan attended the meeting, which reviewed a host of issues including the implementation of schemes, examination reforms, functioning of syndicate, senate and academic council of all universities and best practices of institutes.

During the meeting, the Universities were asked to give a list of vacancies of teaching and non-teaching staff within two weeks to the government to facilitate the re-deployment of excess Annamalai University staff for a period of three years on deputation.

Anbalagan enquired about the research projects in universities and discussed the UGC regulation which restricts the number of research scholars that can be guided by professors.

With increasing enrolment rate in the state, he asked VCs if there were enough professors to guide PhD students without flouting the UGC guidelines.

A senior official from a University said that such review meetings would be held once in three months henceforth to discuss issues common to all institutes.
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. 
 
புதுடெல்லி,

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 61). இவர் பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி தப்பி விட்டார்.

அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்து, தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்கு மறுத்து விட்டார். இதன் காரணமாக ராஜ்யரீதியிலான அவரது பாஸ்போர்ட்டு முடக்கப்பட்டது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

இந்த நிலையில், தனது நிறுவன பங்குகளை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டாஜியோ நிறுவனத்திடம் விற்று கிடைத்த பணத்தில் 40 மில்லியன் டாலரை (சுமார் ரூ.260 கோடி), நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தனது மகன் சித்தார்த் மல்லையா, மகள்கள் லீனா மல்லையா, தான்யா மல்லையா ஆகியோருக்கு விஜய் மல்லையா மாற்றி, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார்.

இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு விசாரணை

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வங்கிகள் கூட்டமைப்பின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியும், மூத்த வக்கீல் சியாம் திவானும் ஆஜராகினர். விஜய் மல்லையா தரப்பில் மற்றொரு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜர் ஆனார்.

வழக்கு விசாரணையின்போது, விஜய் மல்லையாவை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறினார்.

‘கடவுள்தான் அறிவார்’

கடன் மீட்பு நடுவர் மன்றம், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை பிறப்பித்துள்ள பல்வேறு உத்தரவுகளை சியாம் திவான் சுட்டிக்காட்டி னார். விஜய் மல்லையாவிடம் இருந்து வசூலிக்க வேண்டிய சுமார் ரூ.9 ஆயிரத்து 200 கோடியை வசூலிப்பதற்காக வங்கிகளுக்கு ஆதரவாக கடன் மீட்பு நடுவர் மன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதைக்கேட்ட நீதிபதிகள், அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியிடம், “விஜய் மல்லையாவிடம் இருந்து ரூ.9 ஆயிரத்து 200 கோடியை வசூலிக்க கடன் மீட்பு நடுவர் மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எப்படி செயல்படுத்தப்போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “அந்தப் பணத்தை எப்படி திரும்ப வசூலிப்பது என்பதை கடவுள்தான் அறிவார்” என பதில் அளித்தார்.

குற்றவாளி என அறிவிப்பு

அதே நேரத்தில் விஜய் மல்லையாவின் வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள 40 மில்லியன் டாலர் (சுமார் ரூ.260 கோடி) வரவில்லை என கூறினார். ஆனால் அதை கோர்ட்டு ஏற்கவில்லை.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் முடிவில், “இந்த வழக்கில் எதிர்வழக்குதாரராக சேர்க்கப்பட்டுள்ள மூன்றாவது நபர் (விஜய் மல்லையா) நீதிமன்ற அவமதிப்பு குற்றவாளி” என அறிவித்தனர்.

நேரில் ஆஜராக உத்தரவு

அதைத் தொடர்ந்து வழக்கில் வழங்கப்பட உள்ள தண்டனை தொடர்பாக தனது தரப்பு கருத்தை கூறுவதற்கு ஜூலை மாதம் 10-ந் தேதி விஜய் மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.





தலையங்கம்
ஆற்று மணல் அல்ல, இனி மாற்று மணல் தான்



துபாய் நாட்டின் முக்கிய வருவாய் சுற்றுலா பயணிகளால்தான். துபாய் என்றவுடனேயே, சுற்றுலா பயணிகள் பார்க்கும் பட்டியலில் முதல் இடத்தை பெறுவது ‘புர்ஜ் கலிபா’ என்று கூறப்படும் மிகஉயரமான 163 மாடி கட்டிடம்தான். மேகத்தை தாண்டிநிற்கும் இந்த கட்டிடம் 2,717 அடி உயரமானதாகும். இவ்வளவு பெரிய கட்டிடத்தை எப்படி கட்டினார்கள்?, எப்படி இவ்வளவு வலிமையாக நிற்கிறது? என்று காரணம் கேட்டால், இதை ஆற்று மணலைக்கொண்டு கட்டவில்லை. மாற்று மணல் என்று கூறப்படும் ‘எம் சாண்ட்’ என்று அழைக்கிறோமே, அந்த வகையிலான கருங்கல் ஜல்லி மணலைக்கொண்டு கட்டப்பட்டது என்று கேள்விப்படும்போது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்கள், பல நாடுகளில் மாற்று மணலைக்கொண்டுதான் கட்டிடப்பணிகளை மேற்கொள்கிறார்கள். தமிழ்நாட்டிலும் மொத்தமுள்ள 33 ஆறுகளில் இருக்கும் மணலை எல்லாம் கொள்ளையடித்து கட்டாந்தரையாக்கிவிட்ட நிலையில், இப்போது அதற்கும் கீழே சுரண்டி ஆற்றின் நீரோட்டமே பாதிக்கப்பட்டு, நிலத்தடிநீரும் இல்லாமல், மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டின் நீர்வளமே மிகமோசமான நிலைமைக்கு போனதற்கு காரணம், இந்த ஆற்று மணல் கொள்ளைதான். கேரளாவில் ஆற்றில் மணல் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் இந்த தடையை கொண்டுவந்து, மாற்று மணலை பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. எம்.அப்பாவு ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்த நேரத்தில் மாற்று மணலை பயன்படுத்துவது தொடர்பாக அரசு ஏற்கனவே பரிசீலித்துக்கொண்டு இருப்பதைக் குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கியது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை ஏற்கனவே கடந்த 30.8.2012 அன்று அனுப்பிய சுற்றறிக்கையில் கட்டுமான பணிகளுக்கு கருங்கல் ஜல்லி, குவாரி துகள்களை பயன்படுத்துமாறு குறிப்பிட்டிருந்தது.

இப்போது மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, பாராட்டத்தக்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் இனி அரசே முழுமையாக எடுத்து செயல்படுத்தும். லோடு காண்டிராக்ட் அதாவது, மணலை அள்ளி நிரப்புவது, மணலை சேமித்துவைப்பது அனைத்துமே அரசின் மேற்பார்வையில்தான் செயல்படுத்தப்படும். இதுபோல, பொதுமக்களும் இனி தாங்கள் கட்டும் கட்டிடங்களுக்கு மாற்று மணலைத்தான் பயன்படுத்தவேண்டும் என்றும், கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் படிப்படியாக மாற்று மணலுக்கு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுமட்டுமல்லாமல், இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஆற்றில் மணல் அள்ளுவது முழுமையாக நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். முதல்–அமைச்சரின் இந்த அறிவிப்பை, தமிழக மக்கள் வரவேற்கிறார்கள். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, குவாரிகள் வைத்திருப்பவர்கள் அனைவரும் ‘எம் சாண்ட்’ என்று அழைக்கப்படும் மாற்று மணலை தயாரிக்கும் வகையில், கருங்கற்களை அரைத்து தூளாக்கும் பணியில் மிகத்தீவிரமாக ஈடுபடவேண்டும். தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் தேவைக்கு இது தாராளமாக போதும். அரசும் இதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஆற்றுமணலுக்கு நிகராக மாற்று மணல் கிடைக்க அரசு உன்னிப்பாக செயல்படவேண்டும். ஆற்றில் மணல் அள்ளுவது முழுமையாக நிறுத்த இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும் என்று கூறினாலும், உடனடியாக ஒருபக்கம் மாற்று மணல் உற்பத்தியை அதிகரித்து, மறுபக்கம் ஆற்று மணல் எடுப்பதை பெருமளவில் குறைக்கவேண்டும். இரண்டு மூன்று ஆண்டுகள் என்றில்லாமல், எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக ஆற்று மணல் அள்ளுவதை அடியோடு நிறுத்தவேண்டும். இது நீர்வளத்துக்கு நல்லது.

















































Tuesday, May 9, 2017

'உள்ளாடைல ஹுக் இருந்தா, 'பீப்' சத்தம் கேக்கத்தான் செய்யும்!''- நீட் தேர்வில் கதறிய மாணவி

எம்.குமரேசன்

VIKATAN 

‘சார்... 'உள்ளாடைல ஹுக் இருந்தா, மெட்டல் டிடெக்டர்ல 'பீப்' சத்தம் கேக்கத்தான் செய்யும்!''- அந்தக் கண்காணிப்பாளருக்கு மாணவி விளக்கம் கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. 'அதெல்லாம் முடியாது பீப் சத்தம் வந்தா உள்ளே விட மாட்டோம்' எனக் கறாராக பதில் கிடைத்துள்ளது. பக்கத்தில் கழிவறை கூட இல்லை. தேர்வுக்கு இன்னும் 10 நிமிடங்கள்தான் இருக்கின்றன. கழிவறை இல்லாத நிலையில், மறைவிடம் சென்று, உள்ளாடையைக் கழற்றிவிட்டு தாயைத் தேடி ஓடியுள்ளார்.





தேர்வறைக்கு வெளியே இருந்த தாயைக் கண்டுபிடித்து அவரிடம் உள்ளாடையைக் கொடுக்க, அவருக்கோ என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. மூச்சு வாங்க தேர்வறைக்குள் நுழைந்த 18 வயது மாணவியால், எப்படி தேர்வை நல்ல முறையில் எழுதியிருக்க முடியும்? பயங்கர அனுபவத்தையையும் அவஸ்தையையும் சந்தித்த அந்த மாணவி தனது பெயரைக் கூறவோ... முகத்தைக் காட்டவோ விரும்பவில்லை. சம்பவம் நடந்தது கேரளத்தின் கண்ணூரில். எதற்கெடுத்தாலும் மனிதஉரிமை பற்றி பேசும் நகரம் இது.

மற்றொரு மாணவி ஜீன்ஸ் அணிந்தவாறு தேர்வுக்கு சென்றுள்ளார். ஜீன்ஸ் பேன்ட்டில், இரும்பு பட்டன்தானே இருக்கும். உடனே, அதனை பிடுங்க உத்தரவிட்டுள்ளனர். மாணவியின் தந்தை 3 கி.மீ தொலைவு அவசரம் அவசரமாக ஓடிச் சென்று புதிய உடை வாங்கி வந்துள்ளார். அதனை அணிந்து கொண்டு, மாணவி தேர்வு எழுதியுள்ளார். 'இந்த சம்பவத்தால் என் மகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி, தேர்வு கூட சரியாக எழுதவில்லை' என குற்றம் சாட்டுகிறார் மாணவியின் தந்தை.

கேரளாவில், பல மாணவிகளுக்கும் நீட் தேர்வு பயங்கர அனுபவத்தைக் கொடுத்துள்ளது. தேர்வு நடந்தது, ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. திறக்கும் கடைகள்கூட காலை 9 மணியளவில் அடைத்து கிடந்துள்ளன. இதனால், மாணவிகளும் பெற்றோர்களும் கடும் அவஸ்தைக்குள்ளாகி இருக்கின்றனர். ஆனால், எதையும் பற்றி அலட்டிக் கொள்ளாத அதிகாரிகள் மெட்டல் டிடெக்டர்' பீப்' சத்தம் கொடுத்தால் போதும் அதைக் கழற்று... இதைக் கழற்று என கட்டளையிட்டுள்ளனர்.

தேர்வு மைய கண்காணிப்பாளர்களின் அடாவடி நடவடிக்கைகள் மாணவிகள், பெற்றோரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தந்தை ஒருவர் கண்ணூர் போலீசில் புகார் அளித்துள்ளார். பெற்றோர்கள் பலரும் புகார் அளித்துள்ள நிலையில், கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆடைக் கட்டுப்பாடு என்ற பெயரில் நடந்த அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து மூன்று வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு சிபிஎஸ்இ தென்மண்டல இயக்குநருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரள மாநிலக் குழந்தைகள் உரிமைகள் ஆணையமும் விளக்கம் கேட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன், 'ஆடைக் கட்டுப்பாடு என்கிற பெயரில் நடந்துள்ள அத்துமீறல்களை எந்த நாகரிகமான சமுதாயமும் ஏற்றுக்கொள்ளாது. குழந்தைகளுக்கு இப்படி தொந்தரவு கொடுத்திருப்பது அவர்களை மனதளவில் பாதிப்புக்குள்ளாக்கும் செயல்'' என கண்டித்துள்ளார்.

மாணவியின் உள்ளாடையை கழற்றச் சொன்ன சம்பவம் நடந்த, கண்ணூர் பள்ளியின் முதல்வரோ,' மெட்டல் டிடெக்டர் 'பீப்' சத்தம் வந்தால், நிச்சயம் உள்ளே அனுமாதிக்காதீர்கள்' என எங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. சிபி.எஸ்இ நிர்வாகம் தந்த உத்தரவை எங்களால் எப்படி மீறி முடியும்' என கேள்வி எழுப்புகிறார். மாணவ -மாணவிகள் காப்பியடிப்பதை சாத்தியமான முறையில் தடுப்பதை விட்டு விட்டு, இப்போது சாக்குபோக்கு சொல்வதாக பெற்றோர்கள் குமுறுகின்றனர்.

இதையும் விளையாட்டா எடுத்துக்காதீங்க!

யுகன்
பன்னிரண்டாம் வகுப்பின் தேர்வு முடிவுகள் வரவிருக்கின்றன. தேர்வு முடிவைப் பார்த்து, “படிக்கும்போது விளையாட்டுத்தனமா இருக்காதேடான்னு சொன்னேனே கேட்டியா, பார் இப்போ மார்க் குறைஞ்சிடிச்சி…” என்பது போன்ற உரையாடல்கள் வீட்டில் எழும். படிப்பை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதேநேரம், விளையாட்டையே ஒருவர் படிப்பாக எடுத்துக்கொண்டாலோ, விளையாட்டில் தனிக் கவனம் செலுத்தி நிபுணத்துவம் பெற்றாலோ மேற்படிப்பு, வேலை என அவருக்கும் எதிர்காலம் பிரகாசமாகத்தான் இருக்கும்.

விளையாட்டுப் பிள்ளையா?
ஒரு மாணவன்/மாணவி ஆறு-ஏழாம் வகுப்புப் படிக்கும்போதே, பிடித்த விளையாட்டைத் தேர்வு செய்து அதில் முறையாகப் பயிற்சி பெற்றிருந்தால், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது குறைந்தபட்சம் மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்றதற்கான சான்றிதழ்களும் பரிசுகளும் நிறைந்திருக்கும். இப்படிப்பட்ட மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் விளையாட்டுக்குரிய இடஒதுக்கீடு எளிதாகக் கிடைக்கும்.

எப்போதும் படி படி என்று வலியுறுத்தாமல் விளையாட்டில் ஆர்வம் இருக்கும் மாணவர்களை அரசு சார்பிலும், விளையாட்டுக் கழகங்கள் சார்பிலும் நடைபெறும் வட்டம், மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும். பிளஸ் டூ தேர்வில் மாணவர் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும் விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற சான்றிதழ்கள், பதக்கங்கள் உயர்கல்வி கற்பதற்குப் பெரிதும் உதவும்.

அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகள்
கபடி, ஹாக்கி, பூப்பந்து, கால்பந்து, ஜூடோ, மல்யுத்தம், டேக்வாண்டோ, ஸ்குவாஷ், நீச்சல், கோகோ, வாலிபால், இறகுப் பந்து, தடகளம், கூடைப்பந்து, கிரிக்கெட், சதுரங்கம் உள்ளிட்ட 32 விளையாட்டுகளுக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு இடையே திறனாய்வுப் போட்டிகளை அரசு நடத்துகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க இலவசப் பயிற்சியும் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகின்றன. மாணவ மாணவிகளுக்கு என அரசு தனித்தனியே விளையாட்டு விடுதிகளைப் பராமரித்து வருகிறது. இவற்றில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு இலவசக் கல்வி, இருப்பிடம், உணவு ஆகியவற்றை அரசு வழங்குகிறது.

ஆடியே ஜெயிக்கலாம்
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மாணவர், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது. உதாரணமாக விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மாணவர், அனைத்து பாடங்களிலும் சேர்த்து 720 மதிப்பெண்கள் பெற்றால், மாவட்ட அளவிலான போட்டிக்கு 25 மதிப்பெண்கள், மாநில அளவிலான போட்டிகளுக்கு 75 மதிப்பெண்கள்வரை சராசரியாக அளிக்கின்றனர். இதனால், விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களின் மதிப்பெண்களும் அவர்களுக்கு உரிய ‘கட் ஆஃப்’ கிடைத்துவிடும்.

வேலைவாய்ப்பு
உடற்கல்வியியல் படிப்பு படித்திருந்தால் (பி.பி.எட்.) பள்ளிகளில் பி.இ.டி. மாஸ்டர் ஆகலாம். இப்போது அனைத்துப் பள்ளிகளிலும் பி.இ.டி. ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. எனவே பி.பி.எட். முடித்தபின் வேலை தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது. எம்.பி.எட். முடித்தவர்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பணிபுரியலாம்.
பி.பி.எட். முடித்தவர்கள் உடற்கல்வி ஆசிரியர்களாகத்தான் ஆக வேண்டும் என்றில்லை. உடல்தகுதி நிபுணர் உள்ளிட்ட பல பணிகளில் சேரலாம். இப்போது ஒவ்வொரு விளையாட்டிலும் பயிற்சியாளர் போல, தனியாக ஒரு உடல்தகுதி நிபுணரும் நியமிக்கப்படுகிறார். பயிற்சியாளர் ஆட்ட நுணுக்கங்கள் உள்ளிட்டவற்றை கவனித்துக் கொண்டால், உடம்பைக் கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்வதற்கு ஏற்ற உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை உடல்தகுதி நிபுணர்களே நிர்ணயிக்கிறார்கள்.

இண்டர் ஸ்கூல் சாம்பியனாவதும் முக்கியம்!
பிளஸ் 2 தேர்வான மாணவர்களுக்குத் தற்போது மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வு இருப்பதால், ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’ அவர்களுக்கு இருக்காது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, இண்டர் ஸ்கூல் பிரிவில் ஒரு விளையாட்டில் வெற்றி பெற்றவர் முதல் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கெடுக்கும் வீரர்கள்வரை அனைவருமே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். ஏறக்குறைய 54 விளையாட்டுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஸ்போர்ட்ஸ் கோட்டா பிரிவில் இருக்கின்றன.
பாரதியார் நாள் விளையாட்டுப் போட்டிகள் (பி.டி.எஸ்), ரிபப்ளிக் டே ஸ்போர்ட்ஸ் மீட் (ஆர்.டி.எஸ்), பைக்கா முதல் அமைச்சர் கோப்பை உள்ளிட்ட ஆறு விதமான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மத்திய, மாநில அரசுகள் நடத்துகின்றன. இண்டர் ஸ்கூல் நேஷனல் போட்டிகளிலும் இவர்கள் பங்கெடுப்பார்கள். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் படிப்படியாக மண்டலம், மாவட்டம், மாநிலம், தேசியப் போட்டிகளில் பங்கெடுப்பார்கள். ஸ்கூல் கேம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா பட்டியலில் கபடி, செஸ், கேரம், யோகா உள்ளிட்ட 37 விளையாட்டுகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.
- ஜாக்சன் சுதர்சிங் 
(ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் 

மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்)

குறள் இனிது: அறிஞர் அவையில் பேச முந்தலாமா...?

சோம.வீரப்பன்

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு
(குறள் 715)
வங்கிகளில் பெரிய கடன்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான தற்போதைய நடைமுறை தெரியுமா உங்களுக்கு? அண்ணே, எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், யாரும் யாருக்கும் தனி ஒருவராகக் கடன் கொடுத்து விட முடியாது!

கடன் தொகையைப் பொறுத்து, வங்கியின் வெவ்வேறு நிலைகளில் கடன் ஒப்புதல் வழங்க குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதுபோல் அமைக்கப்படும் குழுக்களில் உறுப்பினர்கள் ரிஸ்க் மேலாண்மையில், வங்கியின் கடன் கொள்கை போன்றவற்றில் அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள். பல சமயங்களில் சிமெண்ட், இரும்பு போன்ற பல்வேறு தொழில்களுக்குக் கடன் கொடுத்து நேரடி அனுபவம் பெற்றவர்கள் இருப்பார்கள்.

அத்துடன் அந்தக் கோப்பைக் கையாளும் இளநிலை அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருப்பார்கள். கடன் ஒப்புதல் வழங்குவதற்கு இக்குழு கூடி விண்ணப்பத்தின் நன்மை தீமைகள் குறித்து விவாதிக்கும். இதனால் கடன் விண்ணப்பத்தைப் பல கோணங்களில் தீர ஆராய்ந்து நல்ல முடிவெடுக்க முடியும். நம்ம குமார் அவரது வங்கியின் தலைமை அலுவலகத்தில் கடன் துறையில் மேலாளர். அவரது பணி அங்கு வரும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து மேலதிகாரிகளிடம் அனுப்ப வேண்டியது.

அதிகார வரம்பில் குமார் குறைவானவரே என்றாலும், அந்தக் கோப்பைக் கையாளுபவர் எனும் முறையில் அவரும் மேலே குறிப்பிட்ட குழுக்களில் உறுப்பினர். கோடிக்கணக்கான ரூபாய் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்ற குழுவில் உறுப்பினராக இருப்பது அவருக்கு பெருமகிழ்ச்சி அளித்தது. முதல் கூட்டம் தொடங்கியது. நிர்வாக இயக்குநர் தலைமை தாங்கினார். நம்ம குமாரிடம் உற்சாகம் கொப்பளித்தது. அவரால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. இந்தக் கடனுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து விட வேண்டியதுதான் என படபடவென பேசிக் கொட்டினார்.

ஆனால் அங்கிருந்தவர்கள் சாதாரணப்பட்டவர்களா என்ன? அந்த விண்ணப்பம் சர்க்கரை ஆலைக்கு என்றும், அரசின் கொள்கைகளால், அவற்றில் நிரந்தரத் தன்மையின்மையால் லாபத்தில் நடத்துவது மிகக் கடினம் என்று செய்தித்தாள்களில் வந்த மேற்கோள்களுடன் ஒரு பொது மேலாளர் சொன்னார். அடுத்தவரோ அந்நிறுவனத்தில் கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரையின் சதவிகிதம் மற்ற தொழிற்சாலைகளை விடக் குறைவு என புள்ளி விபரங்களுடன் விவரித்தார்.

இன்னொருவர் வங்கியில் ஏற்கெனவே நிறைய சர்க்கரை ஆலைகளுக்குக் கடன் கொடுத்திருப்பதால் இனியும் கொடுக்க வேண்டாம் என்றார். இதையெல்லாம் கேட்ட பின் குமாருக்குத் தலை சுற்றியது. கடனுக்கு ஒப்புதல் கிடைக்காததுடன் குமாரின் அறியாமையே அதிகம் வெளிப்பட்டிருந்தது!
‘நீங்கள் பேசும் பொழுது, உங்களுக்குத் தெரிந்ததைத் திருப்பிச் சொல்லலாமே தவிர, மற்றவர்கள் பேச்சைக் கேட்கும் பொழுது தான் எதையாவது புதிதாகத் தெரிந்து கொள்ள முடியும்’ என்கிறார் தலாய் லாமா! அண்ணே, அவையில் இருப்போர் தம்மைவிட அறிஞர்களாக இருக்கும் பொழுது முந்திரிக் கொட்டையாக முந்தலாமோ? தன்னிலும் சிறந்த அறிஞர் அவையில், முந்திப்பேசாத அடக்கம், மிக நல்லதாகும் என்கிறது குறள்!
somaiah.veerappan@gmail.com

வானவில் பெண்கள்: அஞ்சா நெஞ்சமும் அசாத்திய துணிச்சலும்

சரஸ்வதி

ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றால் பொதுவாக நம் நினைவுக்கு வரும் பிம்பம் ஓர் ஆணுடையதாகத்தான் இருக்கிறது. ஆனால் இனி வரும் காலங்களில் இந்தப் பிம்பம் தகர்ந்து போய்விடும். அரசின் நேரடி அதிகார மையமான குடிமையியல் பணிகளில் (சிவில் சர்வீஸ் துறை) கணிசமான பெண்கள் நுழைந்து, குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துவருகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை இருபதுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. நாட்டின் பதினோராவது குடிமையியல் தினம் கொண்டாடப்பட்ட இந்த நேரத்தில் சவால்களை எதிர்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வரும் சில பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்ப்போம்.

சஞ்சுக்தா பரஷார்
சஞ்சுக்தா பரஷார் யூ.பி.எஸ்.சி. தேர்வில் 85-வது இடத்தைப் பிடித்தவர். அஞ்சா நெஞ்சமும் அசாத்தியத் துணிச்சலும் கொண்டவர். தற்போது காவல் துறையில் பணியாற்றிவருகிறார். சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் 16 தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றுள்ளார். 64 தீவிரவாதிகளையும் ஆயிரக்கணக்கான ஆயுதங்களையும் கைப்பற்றியிருக்கிறார். போபால் - உஜ்ஜைன் ரயில் குண்டு வெடிப்பு குறித்து தற்போது ஆய்வு நடத்திவருகிறார்.

ரஜினி ஷெக்ரி சிபல்
ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நிச்சயம் தண்டனை பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். அது மாநில முதல்வராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சாதவர். ஹரியாணா மாநிலத்தில் நடந்த ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உள்ளிட்ட 55 பேரைச் சிறையில் அடைத்த பெருமைக்குச் சொந்தக்காரர்.

துர்கா சக்தி நாக்பால்
அகில இந்திய அளவில் 2009-ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் இருபதாவது இடத்தைப் பிடித்தார். முதல் பணியின்போதே யமுனா, ஹின்டன் ஆறுகளில் நடைபெற்று வந்த மணல் கொள்ளையைக் கண்டுபிடிக்கச் சிறப்புக் குழுவை அமைத்து, குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தினார். அரசியல்வாதிகள் இவர் மீது கோபம்கொண்டு பணியிடை நீக்கம் செய்ய வைத்தனர். இதனால் பிரச்சினைகள் ஏற்படும் என்று அஞ்சிய உத்தரபிரதேச அரசு பின்னர் பணியிடை நீக்கத்தைத் திரும்பப் பெற்றது.

பூனம் மாலகொண்டையா
துணிச்சலான செயல்களுக்காகவே ஏழு ஆண்டுகளில் ஏழு முறை பணி மாற்றம் செய்யப்பட்டவர். எந்தச் சூழ்நிலையிலும் எதற்கும் விட்டுக்கொடுக்காமல் தன் கடமையைச் செய்பவர். மரபணு மாற்றப்பட்ட விதைகளால் விவசாயிகளுக்கும் விவசாய நிலத்துக்கும் பெரும் பாதிப்பு உண்டாகியுள்ளது. இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளை அறிமுகப்படுத்திய மான்சாண்டோ அமெரிக்க நிறுவனத்தைக் கேள்வி கேட்கத் தயங்கிய அரசியல் சூழ்நிலையில், அதிக விலையில் விதைகளை விற்றதற்காக Monopolies and Restrictive Trade Practices ஆணையத்தின் முன் நிறுத்தியவர்.

இ சேவை மையங்கள் மூடல்: சான்றிதழ் பெறமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு

தாம்பரம், பல்லாவரம் பகுதியில் இ சேவை மையங்கள் மூடப்பட்டுள்ள தால் சான்றிதழ் பெறமுடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

மக்கள் தங்குதடையின்றி அரசின் பல்வேறு சான்றிதழ்களை மிக எளிதாக பெறும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாலுகா வாரியாக இ சேவை மையங்களை தொடங்கி னார்.
இம்மையங்களில் வருமானம், சாதி, இருப்பிடம், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், விதவையர் மகள் திருமண நிதி உதவி திட்டம், விதவை மறுமண நிதி உதவி திட்டம், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், திருமண நிதி உதவி திட்டம், கலப்பு திருமண சான்று, ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டங்களுக்கான சான்றுகளை எளிதில் பெற முடியும்.

மேலும் பொதுமக்கள் சிரமமில்லாமல் வந்து செல்லும் வகையில் ஒவ்வோரு தாலுகாவிலும் பல்வேறு பகுதிகளில் இ சேவை மையங்கள் தொடங்கப் பட்டன. எல்காட் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனம் ஆகியவை இந்த இ-சேவை மையங்களை நடத்தி வந்தன. இதில் எல்காட் நிறுவனம் பல இடங்களில் சேவை அளித்து வந்தது. அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் ஒரு சில இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டது.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு பயனளித்து வந்த எல்காட் இ சேவை மையங்கள் அனைத்தும் திடீரென மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தற்போது ஒவ்வொரு தாலுகா அலுவலகத்துக்கும் ஒரு இ-சேவை மையம் மட்டுமே உள்ளது. இதனால் குறித்த நேரத்தில் சான்றிதழ் கிடைப்ப தில்லை. தற்போது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், அரசின் உதவித் தொகை பெறுவதற்கும் சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. இவை தாலுகா அலுவலகத்தில் குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை. ஒரு மையத்தில் இரண்டு கணினி மட்டும் இருப்பதால் மக்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது.முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சிரமம் தொடர்கிறது.

இது குறித்து மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவன வட்டாட்சியர் கூறியதாவது:

எல்காட் நிறுவனம் மூலம் பல இடங்களில் இ-சேவை மையங்கள் இயங்கி வந்தது. அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் முழுமையாக இந்த சேவை வழங்கப்படவுள்ளதால் எல்காட் மூலம் இயங்கி வந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் தாலுகா அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் புதியதாக சேவை மையங்கள் ஓரிரு தினங்களில் தொடங்கப்படவுள்ளன என்றார்.

பல ஆண்டுகளாக உயர்த்தப்படாத ஓய்வூதியம்; தள்ளாடும் வயதில் அவதிப்படும் தமிழக அரசு முன்னாள் ஊழியர்கள்

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த கோரிக்கை

தமிழக அரசில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள ஊழியர்கள் பலருக்கு ரூ. 3000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படு வதால் வயதான காலத்தில் அல்லல்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள சுமார் 7 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தி யுள்ளது. இந்த பரிந்துரைகளை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய நிதித் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் கே. சண்முகம் தலை மையில் குழு அமைக்கப்பட் டுள்ளது. இந்த குழுவினர் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வுபெற்ற வர்களுக்கு ஓய்வூதியம் ஆகி யவை குறித்து அரசுக்கு பரிந் துரைகளை அளிக்கவுள்ளனர்.
வரும் ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் தனது அறிக் கையை அரசுக்கு இந்த குழு அளிக்கவுள்ளது. இந்த நிலை யில் குறைந்தபட்ச ஓய்வூதி யத்தை தற்போதுள்ள ரூ.3,050-ல் இருந்து ரூ. 9 ஆயிரமாக உயர்த்த வேண்டும், மருத்துவப் படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றனர் ஓய்வூதியர்கள்.
ஓய்வூதியர்களின் பிரச் சினைகள் மற்றும் கோரிக்கை கள் குறித்து அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷ னர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஏ.சாமிநாதன் கூறி யது:
2006-ம் ஆண்டுக்கு முன்பு வரை மத்திய அரசு பணி யாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3,500 இருந் தது. தமிழக அரசும் ரூ.3,500 என நிர்ணயித்து இருந்தது. ஆனால் 2006 ஜனவரி மாதத் தில் பல்வேறு காரணங்களை சொல்லி தமிழக அரசு குறைந்த பட்ச ஓய்வூதியத்தை மேலும் குறைத்து, ரூ. 3,050-ஆக நிர்ண யித்தது.
2006 முதல் தற்போது வரை யிலான இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசு ஓய்வூதியர்களுக் கான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000-ஆக அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் அப் படியே இருக்கிறது. இதற்கு காரணம் தமிழக அரசு ஊழியர் களுக்கான அடிப்படை ஊதி யம் ரூ.6,100 என இருப்பதே ஆகும். தமிழக அரசில் ரூ. 6,100-ஐ அடிப்படை ஊதியமாக பெறும் ஊழியர் செய்யும் அதே வேலையை செய்கிற மத்திய அரசு ஊழியருக்கு ரூ. 18000 அடிப்படை ஊதியம். மத்திய அரசு ஓய்வூதியர்கள் தற்போதுள்ள ரூ. 9 ஆயிரத்தை உயர்த்தித் தர வேண்டும் என கோரி வருகின்றனர். ஆனால் நாங்களோ, அந்த ரூ. 9 ஆயி ரத்தையாவது கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
மாதாந்திர மருத்துவச் செலவுகளுக்கு தமிழக அரசு ரூ.100 மட்டுமே தருகிறது. 8 ஆண்டுகளாக இதே தொகையே கிடைக்கிறது. மருத்துவ காப்பீடு என ஓய்வூ தியத்தில் இருந்து ரூ. 150 பிடித் தம் செய்கிறார்கள். இதன் மூலம் மருத்துவ சிகிச்சையை பணம் செலுத்தாமல் பெற்றுக் கொள்ளலாம் (கேஷ்லெஸ் ட்ரீட்மென்ட்) என கூறுகிறார் கள். ஆனால் மருத்துவமனை களில் பணம் கேட்கிறார்கள். அதற்கான ரசீது கொடுப்ப தில்லை. இது போன்ற பல்வேறு கோரிக்கைகள் பல ஆண்டு களாக நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன.
நல்ல ஊதியத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓரளவு நல்ல ஓய்வூதியம் கிடைக்கிறது. ஆனால் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி கடைநிலை ஊழிய ராக இருந்தவர்களுக்கு குறைந் தபட்ச ஓய்வூதியமே (ரூ.3,050) வழங்கப்படுகிறது. இதனால் வயதான காலத்தில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கே.சண்முகம் குழுவினர் அறிக் கையை அரசுக்கு தாக்கல் செய் வதற்கு முன்னர் ஓய்வூதியர் களின் நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.

நீட் தேர்வின்போது ஆடையைக் கழட்டச் சொன்ன விவகாரம்: 4 கேரள ஆசிரியர்கள் இடைநீக்கம்

மாணவிகளிடம் சோதனையிடும் ஆசிரியர். படம்: ஏ.எம்.ஃபரூக்

மொகமது நசீர்

நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையைக் கழட்டச் சொன்ன விவகாரத்தில், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள குன்கிமங்கலம் பள்ளி ஆசிரியர்கள் நால்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மே 7-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நடத்திய மத்திய பள்ளிக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), முறைகேடுகளை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், குன்கிமங்கலத்தில் உள்ள கொவ்வாபுரம் தனியார் பள்ளியில் நீட் தேர்வு நடந்தது. அங்கு தேர்வெழுத வந்த ஒரு மாணவியிடம் மேல் உள்ளாடையை கழட்டுமாறு சில ஆசிரியர்கள் நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஆசிரியர்கள் ஷீஜா, ஷஃபீனா, பிந்து மற்றும் ஷாகினா ஆகிய நான்கு பேரை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

மாணவி தனது உள்ளாடையைக் கழட்டி மையத்துக்கு வெளியே இருந்த தாயிடம் கொடுத்துவிட்டு வந்த பிறகே, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோல ஏராளமான மாணவிகளின் ஆடைகளை மாற்றச் சொன்ன சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

நாடு முழுவதும் அதிர்வலைகள்

இத்தகைய சம்பவங்கள் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. ஏராளமான மாணவர் இயக்கங்களும், அரசியல் தலைவர்களும் இவற்றுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு, தேர்வு மையத்துக்குச் செல்லும் முன்னர் மாணவர்கள் எதிர்கொண்ட அவமானத்துக்கு எதிராக இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடத்தியது. கேரள மனித உரிமைகள் ஆணையம் நடந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

யாரோ சிலரின் தனிப்பட்ட ஆர்வமிகுதி': நீட் சோதனை சர்ச்சைக்கு சிபிஎஸ்இ விளக்கம்

பிடிஐ
நீட் தேர்வு எழுதுவதற்கு முன்னர் மாணவிகளை சோதனையிடும் காண்காணிப்பாளர்கள் | படம்: சி.எச். விஜய பாஸ்கர்

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதவந்த மாணவியின் உள்ளாடையை அகற்றுமாறு கண்காணிப்பாளர் உத்தரவிட்டது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது யாரோ சில கண்காணிப்பாளர்களின் தனிப்பட்ட ஆர்வமிகுதியின் விளைவு என தேர்வை நடத்திய சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தத் தேர்வை நடத்திய மத்திய பள்ளிக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), முறைகேடுகளை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரியரம் மையத்தில் தேர்வு எழுத வந்த ஒரு மாணவியிடம் மேல் உள்ளாடையை கழட்டுமாறு தேர்வு கூட கண்காணிப்பாளர் கூறியுள்ளார். அம்மாணவி தனது உள்ளாடயை தனது தாயாரிடத்தில் கொடுத்த பிறகே அவரை தேர்வு எழுத கண்காணிப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக சிபிஎஸ்இ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ வாரியம் செய்தித் தொடர்பாளர் ராமா ஷர்மா கூறும்போது, "கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் நீட் தேர்வின்போது நடத்த இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது. இது யாரோ சில கண்காணிப்பாளர்களின் தனிப்பட்ட ஆர்வமிகுதியின் காரணமாக ஏற்பட்ட விளைவு. தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது வருத்தத்தக்கது

தேசிய அளவிலான தேர்வுகளுக்கு நுழைவதற்கு முன்னர் எடுக்கப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து இணையதளங்கள், மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ் மூலம் தேர்வு எழுத வருபவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது" என்று விளக்கம் அளித்துள்ளார்.


லாலுவிடம் மீண்டும் விசாரிக்க உத்தரவு: நிதீஷ் குமாருக்கு நெருக்கடி

பதிவு: மே 09, 2017 15:15

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவிடம் மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து கூட்டணி ஆட்சியில் உள்ள முதல்-மந்திரி நிதீஷ் குமாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.



புதுடெல்லி:

ரூ.900 கோடி மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலுபிரசாத் யாதவுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. அவர் தேர்தலில் நிற்கவும் தடைவிதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சில மாதங்கள் ஜெயிலில் இருந்த லாலு பிரசாத் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தண்டனையை எதிர்த்து லாலுபிரசாத் யாதவ் அப்பீல் செய்துள்ளார்.

அதே சமயம் லாலு பிரசாத் யாதவ், ஜெகநாத் மிஸ்ரா, முன்னாள் தலைமைச் செயலாளர் சாஜல் சக்ரவர்த்தி ஆகியோர் மீதான மற்ற 4 வழக்குகளை ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு லாலுபிரசாத், ஜெகநாத் மிஸ்ரா மீதான வழக்குகளை ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு மீண்டும் தனியாக விசாரித்து 9 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



இது லாலுபிரசாத்துக்கு பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியதுடன் பீகாரில் லாலு கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தும் முதல்-மந்திரி நிதீஷ் குமாருக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள லாலுபிரசாத் யாதவுடன் நிதிஷ்குமார் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா? என்று மாநில பா.ஜனதா தலைவர் சுஷில் குமார் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். இதில் நிதீஷ்குமார் கூட்டணியை முறித்துக் கொண்டால் பா.ஜனதா மேலிடம் அடுத்த நடவடிக்கை எடுக்கும். பலவீனமான லாலுபிரசாத் மற்றும் அவரது மகன்களுடன் நிதீஷ்குமார் நீண்ட நாள் நீடித்து இருக்க மாட்டார் என்றும் சுஷில்குமார் மோடி தெரிவித்தார்.


நீதிபதி கர்ணன் பிறப்பிக்கும் உத்தரவுகளை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் திடீர் தடை


பதிவு: மே 09, 2017 12:58

சுப்ரீம் கோர்ட்டால் ஆறுமாத சிறை தண்டனைக்கு உள்ளாகி இருக்கும் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் பிறப்பிக்கும் உத்தரவு தொடர்பான செய்திகளை வெளியிட கூடாது என தொலைக்காட்சி, மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று தடை விதித்துள்ளது.





புதுடெல்லி:

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் கூறியதையடுத்து, கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவர் நீதிபதி பணியை செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந்தேதி உத்தரவிட்டது. மேலும், கடந்த 4–ந்தேதி அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. ஆனால், நீதிபதி கர்ணன் அதற்கு மறுத்து விட்டார்.

இந்நிலையில், நீதிபதி கர்ணன் நேற்று ஓர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தனக்கு எதிரான அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோருக்கும், தன்னை நீதிபதி பணியாற்ற தடை விதித்த நீதிபதி பானுமதிக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தன் வீட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக கோர்ட்டில் இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றங்களை அவர்கள் செய்துள்ளதால், இந்த தண்டனைக்கான உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.





தண்டனைக்குள்ளான நீதிபதிகள் ஒரு வாரத்துக்குள் தலா ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராதம் செலுத்தாவிட்டால், கூடுதலாக 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவு இந்திய நீதித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி என்பதால் சிறைதண்டனையில் இருந்து கர்ணன் தப்பிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு உச்ச நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சுப்ரீம் கோர்ட்டால் ஆறுமாத சிறை தண்டனைக்கு உள்ளாகி இருக்கும் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் பிறப்பிக்கும் உத்தரவு தொடர்பான செய்திகளை வெளியிட கூடாது என தொலைக்காட்சி, மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

NEET 2017: Girls forced to remove bra, buttons in Kerala; politicians irked

Business Standard
The authorities allegedly forcing a girl to remove the button of her jeans and another to remove her bra in a bid to 'stop cheating and irregularities' in one of the centres where the Eligibility and Entrance Test (NEET) exam was conducted in Kerala has invited the ire of many politicians across the country.
The social activists and politicians have demanded for an investigation against the officials who committed the aforementioned.
Congress leader Sangeeta Sharma said, "Such kind of investigation during examination especially with girls is very wrong. If such kind of investigation is needed, then it should be conducted only by women. I condemn such things. This is very shameful for whole country and to all the women. If such kind of checking during examination starts to happen, then for sure women will start stop giving exams."
Bharatiya Janata Party (BJP) leader V.V. Rajesh said, "It is reported that some unfortunate things happened yesterday with candidates, who appeared for the NEET exam. I think the investigation has already been started to find out the actual culprits and stringent action will be taken against the person who has directed the invigilators to remove the clothes of the candidates. It is unfortunate and the BJP's stand is very clear on this."
Communist Party of India (CPI) leader Annie Raja told ANI, "This is a very shameful thing. There needs to be a proper investigation against the person who has given such instructions. Instead of having metal detector at the venue, the children were asked to take off their clothes; their clothes were torn off. Those involved in this must be given punishment."
Earlier on Sunday, the authorities allegedly forced a girl to remove the button of her jeans which was metallic. Another 17-year-old student was forced to remove her bra as a part of stringent measures to "stop cheating and irregularities" in the medical entrance examination.
Many students faced the same issue. In one of the reported cases, the sleeves of their clothes were also torn off, citing it was against the issued norms.
The incident has triggered a controversy in the state and the state human rights commission said it would look into the issue.

COURT DIRECTS TECHIE TO REPAY EDUCATIONAL LOAN


762 seats in Phase I


BE Graduate ordered to repay edu loan


High drama marks PG medical counselling as Tamil Nadu doctors protest

By Express News Service  |   Published: 09th May 2017 04:23 AM  |  

CHENNAI: Counselling for post-graduate medical courses commenced on Monday with the physically- challenged category being taken up first. But it was not without drama with the in-service doctors, who did not get the 50 per cent reservation benefit, attempting to disrupt the counselling. They were detained and let off later.
Protesting members of the Tamil Nadu Medical Officers Association raising slogans at the Government Multi Super-Speciality Hospital at Omandurar Estate, on Monday | Express
However, they have decided to continue their protest at the district and zonal levels for the next 90 days after duty hours and not cooperate with the government, till their demands are met.

Out of the 11 physically-challenged candidates called for the counselling, 10 attended it.

“There are 19 seats for the physically-challenged in government quota. After allotting the 10 seats, the remaining nine would go to the general category,” said Dr G Selvaraj, Secretary, selection committee. Counselling for general category would start at the Government Multi Super-Speciality Hospital,
Omandurar Estate, at 9 am on Tuesday.

It is for 562 post-graduate courses and 200 PG diploma courses. Meanwhile, Tamil Nadu  Medical Officers Association (TNMOA), Doctors’ Association for Social Equality, and others tried to stage a protest at the venue to stall the counselling. Around 60 doctors were raising slogans at the venue. However, they were bundled into two vehicles before the commencement of counselling and let off at Chepauk.
Later, those from Service Doctors and Post Graduates Association (SDPGA) entered the counselling hall and tried to protest. They were removed by police and taken for talks with the Selection Secretary and other officials. Police also argued with reporters and TV cameramen, asking them to leave the counselling venue.

They were later let in after getting permission from the Directorate of Medical Education officials.
Meanwhile, speaking to Express, Dr N Gnana Prakasam, president, Tamil Nadu Medical Officers Association said, “We will continue our protest for the next 90 days, at one district every day. We will stop attending review meetings and other important discussions,” he added.
Gnana Prakasam said the association would continue to fight until other service doctors also were assured of the 50 per cent quota.

Members of the Service Doctors and Post Graduates Association (SDPGA) would continue their protest in a democratic way involving communities till their demands were met. They would also conduct human chains, rallies, conferences, said state organising secretary, Dr A Ramalingam.

The Doctors’ Association for Social Equality also participated in the protest at the medical counselling venue.

2 MBBS students among five held for NEET scam


III-year student cannot seek loan for fee paid in second year: HC

  The Madras High Court Bench here has concurred with a nationalised bank that education loan cannot be granted to reimburse fee paid by a student before progressing from one academic year to the next. The court agreed with the bank that a student in the third year of a course could not seek loan for the first or second year of the course.

Justice V. Parthiban dismissed a writ petition filed by a Kanniyakumari based homoeopath pursuing her third year post graduate degree in psychiatry at a private medical college in Salem seeking education loan for the second as well as third year of her course after recording the submission of Indian Overseas Bank that the loan could be offered only for third year.


Though the petitioner had sought for a direction to the bank to consider her representation for sanctioning a loan amount of Rs. 3.49 lakh towards second and third year tuition fee, the bank told the court that she was eligible for Rs. 1.59 lakh to meet out the expenses for the third year of study alone since she had already completed the second year of the course.

After extracting the contents of the bank’s counter affidavit, the judge said: “It is clearly mentioned that since the petitioner had successfully completed two years, the question of granting loan for the second year does not arise. In view of the categorical statement made by the respondents/bank, I do not think that the prayer in the writ petition can be granted.”

 PG medical counselling on amid protests

 Service Doctors and Post Graduates Association wants to know the seat matrix

Counselling for seats in postgraduate courses in government medical colleges was stalled for nearly two hours on Monday following protests by government doctors.

The Directorate of Medical Education had prepared for counselling to fill the 3% quota seats under the category for candidates with disabilities. Counselling was scheduled for noon but two groups of doctors — the Tamil Nadu Medical Officers’ Association and the Service Doctors and Post Graduates Association — disrupted the process. While the SDPGA squatted inside the hall where counselling was to be held, the TNMOA protested outside the venue.

The police evicted both groups. The DME officials later met with the SDPGA members. The association had wanted to know the urgency in conducting the counselling. To this the officials said the government was following the Supreme Court order. As to whether the admission of students was final, the officials said the government had approached the court with a special leave petition and its outcome was awaited. The protesters also wanted to know the status of seat matrix to which the officials said they were awaiting details from the private institutions.

Counselling finally began around 2 p.m. For the 23 seats available under the category, only 11 candidates had been called. Since one candidate opted to take a seat under the All India Quota, counselling was held for 10 seats.


On Monday, four service candidates and six non-service candidates were admitted to various PG courses.

Selection Secretary G. Selvarajan said that the government was expecting the private medical institutions and deemed universities to surrender 50% of their seats by evening after which the seat matrix would be displayed on the tnhealth.org website.

On Tuesday, counselling for general category candidates is expected to be held. The Supreme Court has mandated that counselling for the first phase be completed by May 11.
The last date for submission of application for PG courses under NRI quota in self-financing medical colleges and colleges under deemed universities is May 11.

NEWS TODAY 21.12.2025