Friday, May 26, 2017

“நான் நிரந்தரமானவன்; அழிவதில்லை..!” - பகுதி 2
vikatan

26. மலையாளத் திரைப்படமான 'ராக சங்கமம்' படத்தில், கிஷோர் இசையில், 'படைச்சோன்தன்னை ரட்சிக்கணும்...' என்ற பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ்.

27. சமையல் செய்வதில் நிபுணர் டி.எம்.எஸ். முன்னெல்லாம் ஓய்வு கிடைத்தால், இவரது பொழுதுபோக்கே வீட்டில் சமையல் செய்வதில் ஈடுபடுவதுதான். டி.எம்.எஸ். ரசம் வைத்தால், வீடு முழுக்க அந்த வாசனை கமகமக்கும்.

28. பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள், செயின்களை அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர் டி.எம்.எஸ். "இல்லாட்டா ஒருத்தனும் மதிக்கமாட்டான்யா! 'பாவம், டி.எம்.எஸ்ஸுக்கு என்ன கஷ்டமோ!'ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளி வேஷம் தேவையா இருக்கு" என்பார். வீட்டுக்கு வந்ததும் முதல் காரியமாக அத்தனை நகைகளையும் கழற்றி வைத்துவிடுவார்.

29. சாண்டோ சின்னப்பா தேவருக்கு டி.எம்.எஸ். மீது அளவற்ற அன்பு உண்டு. எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்கள் தயாரித்துள்ளவர் தேவர். 'நல்ல நேரம்' படத்தின்போது, டி.எம்.எஸ். மீது அப்போது எழுந்த ஒரு கோபத்தில், அவரைத் தவிர வேறு யாரையாவது பாட வைக்கும்படி எம்.ஜி.ஆர். சொல்ல, உறுதியாக மறுத்துவிட்டார் தேவர். "அப்படின்னா இந்தப் படத்தை நான் தயாரிக்கவே இல்லே! கேன்ஸல்!" என்று அவர் தீர்மானமாகச் சொன்னதைக் கண்டு, எம்.ஜி.ஆரே வியந்துபோனார். தன் பிடிவாதத்தைக் கைவிட்டார். 'நல்ல நேரம்' படத்தில் டி.எம்.எஸ். பாடிய அத்தனைப் பாடல்களும் சூப்பர்டூப்பர் ஹிட்!

30. ‘ஜெயபேரி’ என்னும் படத்தில் நாகேஸ்வரராவுக்கு ஒரு பாடல். ‘தெய்வம் நீ வேணா... தர்மம் நீ வேணா...’ என்கிற கிளைமாக்ஸ் பாடலான இதை ஹை-பிட்ச்சில் பாடவேண்டும். பாடகர் கண்டசாலா, இசையமைப்பாளர் பென்டியாலா நாகேஸ்வரராவைக் (இவர் நடிகர் நாகேஸ்வரராவ் அல்ல!) கையெடுத்துக் கும்பிட்டு, “இது நம்மால ஆகாதுங்க. டி.எம்.எஸ்ஸைக் கூப்பிட்டுப் பாட வைங்க. அற்புதமா பாடித் தருவார்” என்று சிபாரிசு செய்ய, தமிழைத் தவிர வேறு மொழிகளில் பாட அதிகம் விருப்பம் காட்டாத டி.எம்.எஸ்ஸை வற்புறுத்தி அழைத்துப் போய்ப் பாட வைத்தார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் என யாருக்கும் பாடாத ஒரு புதுக் குரலில், நடிகர் நாகேஸ்வரராவுக்குக் கச்சிதமாகப் பாடித் தந்து அசத்திவிட்டார் டி.எம்.எஸ்.

31. சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர, தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி.எம்.எஸ்ஸுக்கு எதுவும் இல்லை. பாடல்... பாடல்... பாடல்... இதைத் தவிர, வேறு பொழுதுபோக்கோ, அரட்டையோ இல்லாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர் டி.எம்.எஸ்.

32. கவிஞர் வாலியைத் திரையுலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ்தான். அது மட்டுமல்ல, அவரை எம்.ஜி.ஆர். உள்பட பல திரையுலகப் பிரபலங்களிடம் அழைத்துப்போய் அறிமுகப்படுத்தி வைத்து, சான்ஸ் வாங்கித் தந்தவர் டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்றுவரையிலும் மறவாமல், 'இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ். போட்டது' என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்ச்சியுடன் கூறுவார் வாலி.

33. ஜெயலலிதாவுடன் இணைந்து, 'சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்...', 'ஓ... மேரி தில்ரூபா...', 'கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்ஸ்' என மூன்று பாடல்களைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ்.

34. 'மரியாதைராமன் கதா' என்னும் தெலுங்குப் படத்தில் டி.எம்.எஸ். பாடியுள்ளார். இந்தப் படத்தில்தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிமுகமானார்.

35. சிவாஜிகணேசனுக்கு பிரபல பாடகர் சி.எஸ்.ஜெயராமனைத்தான் தனக்குப் பின்னணி பாட வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால், சி.எஸ்.ஜெயராமன் தனக்குக் கொடுக்கும் சம்பளம் போதாது என்று பாட மறுத்துவிட்டதால், அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் பாடும் வாய்ப்பு டி.எம்.எஸ்ஸுக்குக் கிடைத்தது. அவரும் பாடிக்கொடுக்க, அத்தனைப் பாடல்களும் பயங்கர ஹிட்! சிவாஜிகணேசன் மகிழ்ந்துபோய், அன்றிலிருந்து தனக்கு டி.எம்.எஸ்ஸே பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்தப் படம்தான் 'தூக்குத் தூக்கி'.

36. 'தூக்குத் தூக்கி' படத்துக்கு முன்பே சிவாஜிக்கு 'கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக்கிளி ஆக்கிவிட்டு...' என்ற பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக்கிளி'யில் இடம்பெற்ற பாடல் அது. அதைக் கேட்டுவிட்டுத்தான் 'மலைக்கள்ளன்' படத்தில் தனக்கு டி.எம்.எஸ்ஸைப் பின்னணி பாட வைக்கும்படி சிபாரிசு செய்தார் எம்.ஜி.ஆர்.

37. பல காதல் டூயட்டுகளைப் பாடிய டி.எம்.எஸ்ஸுக்கும் காதல் தோல்வி உண்டு. தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், வறுமைக் கோட்டில் இருந்த டி.எம்.எஸ்ஸுக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக்கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்.

38. பெண் கவிஞர் ரோஷனாரா பேகம் எழுதிய ஒரே ஒரு சினிமா பாடல்... 'குங்குமப் பொட்டின் மங்கலம்'. அதைப் பாடியவர் டி.எம்.எஸ்.

39. பாடலை வாங்கிப் படித்து, இசையமைப்பாளர் சொன்ன ராகத்தில் பாடிக் கொடுப்பது மட்டுமே தன் கடமை என்று நினைக்காமல், அதை மேலும் சிறப்பாகச் செய்வதற்கான தனது யோசனைகளையும் சொல்வது டி.எம்.எஸ்ஸின் வழக்கம். இப்படித்தான், 'வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு ‘எக்கோ எஃபெக்ட்’ (எதிரொலி) வைக்கச் சொன்னார். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் டி.எம்.எஸ். அதன்படியே வைக்கப்பட்டது. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு, டி.எம்.எஸ். சொன்ன யோசனை எத்தனை புத்திசாலித்தனமானது என்று உணர்ந்து வியந்தார் தயாரிப்பாளர்.

40. மு.க.முத்து நடித்த பட விழா ஒன்றில், "மந்திரிகுமாரிக்குப் பாடிய டி.எம்.எஸ். இந்த மந்திரி குமாரனுக்கும் பாடியிருக்கிறார்" என்று சிலேடையாகப் புகழ்ந்தார் முதல்வர் மு.கருணாநிதி.

41. 'நாடோ டி மன்னன்' படத்தில் இடம்பெறும் 'தூங்காதே தம்பி தூங்காதே' பாடலுக்குப் பரம ரசிகர் இந்திப் பாடகர் முகம்மது ரஃபி. அந்தப் பாடலில், 'விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்' என்கிற வரியில் 'ஓ...' என்று ராகம் இழுப்பார் டி.எம்.எஸ். இந்தப் படம் இந்தியில் தயாரானபோது, இந்தப் பாடல் வரியைக் கேட்ட முகம்மது ரஃபி, "ஹம் மர் ஜாயேங்கே" (இதைப் பாடினா என் உயிர் போயிடும்" என்றாராம். பின்னர், அவருக்கேற்ப டியூனை மாற்றிக் கொடுத்தார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. அதேபோல், 'ஓராயிரம் பாடலிலே' பாடலைக் கேட்டு உருகிய ரஃபி, டி.எம்.எஸ்ஸின் தொண்டைப் பகுதியை வருடி, "ஆஹா... இங்கிருந்துதானா அந்தக் குரல் வருது" என்று வியந்திருக்கிறார்.

42. வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் 'யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு'. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததைவிட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ். இந்தப் பாடலைக் கேட்டு மயங்கிய சிவாஜி, இந்தக் காட்சியில் தன் பங்களிப்பும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகப் படப்பிடிப்பையே பல நாள் தள்ளிப் போட்டு, வெவ்வேறு விதமாக நடித்து ரிகர்சல் பார்த்தார்.

43. காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாயிபாபா இருவரிடமும் மிகுந்த பக்தி கொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாயிபாபா ஒருமுறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை 'கற்பகவல்லி' பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார் டி.எம்.எஸ்.

44. கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். இதனால் ஒருமுறை அவர், எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்காகக் கண்ணதாசன் எழுதிய 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்; அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்' என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் அந்த வரியை 'வாட வேண்டும்' என்று மாற்றித் தந்த பிறகே பாடித் தந்தார்.

45. பாடல் வரிகளில் உள்ள தமிழ் வார்த்தைகளைச் சரியாக உச்சரித்துப் பாடுவதில் தேர்ந்தவர் டி.எம்.எஸ். இதை டாக்டர் மு.வரதராசனாரே குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்.
46. பாடலின் பொருளை முழுமையாக உணர்ந்து, உள்வாங்கிக்கொண்டால்தான், அதை உயிர்ப்போடு பாடமுடியும் என்பதில் நம்பிக்கை உள்ளவர் டி.எம்.எஸ். அருணகிரிநாதரின் திருப்புகழான 'முத்தைத்தரு பத்தித் திருநகை' பாடலைப் பாட வேண்டி வந்தபோது, அதன் பொருள் அங்கிருந்த ஒருவருக்கும் தெரியவில்லை. எனவே, டி.எம்.எஸ். நேரே கிருபானந்தவாரியாரிடம் சென்று, அந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் தெளிவாக அர்த்தம் தெரிந்துகொண்டு வந்த பின்பே, அதைப் பாடினார்.

47. தான் பாடுகின்ற பாடல், அந்தக் கதைச் சூழ்நிலைக்கேற்பப் பக்காவாகப் பொருந்த வேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கிடுபவர் டி.எம்.எஸ். 'உயர்ந்த மனிதன்' படத்தில் சிவாஜி ஓடிக்கொண்டே பாடுகிற காட்சி என்பதால், தானே ஒலிப்பதிவுக் கூடத்தை மூச்சுவாங்க இரண்டு சுற்று ஓடிவந்து டி.எம்.எஸ். மூச்சு வாங்கிப் பாடிய பாடல்தான் 'அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே...'

48. கவிஞர் வாலி முதன்முதல் எழுதியது, 'கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...' என்ற பக்திப் பாடல். ஒரு தபால் கார்டில் இந்தப் பாடலை எழுதி டி.எம்.எஸ்ஸுக்கு அனுப்பினார் வாலி. அதற்கு இசையமைத்து ஹிட் ஆக்கினார் டி.எம்.எஸ். வாலிக்குத் திரையுலக வாசலைத் திறந்து வைத்த பாடல் இது என்றால் மிகையாகாது.

49. நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும்பொருட்டு கோயமுத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டு, பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார் டி.எம்.எஸ். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போதுதான்.

50. டி.எம்.எஸ். - சுமித்ரா திருமணப் பத்திரிகையில் ஒரு வேடிக்கையான அடிக் குறிப்பு போடப்பட்டது. 'தங்கள் பங்கான ரேஷன் அரிசியை திருமணத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே கிடைக்குமாறு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்பதுதான் அந்தக் குறிப்பு. திருமணத்தில் கலந்துகொள்கிறவர்கள் நிஜமாகவே அரிசி அனுப்பவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அரிசித் தட்டுப்பாடு கடுமையாக நிலவிய காலகட்டம் அது. எனவே, 'இத்தனை பேருக்கு உணவளிக்க எங்கிருந்து உங்களுக்கு அரிசி கிடைத்தது?' என்று அதிகாரிகள் கேட்டால், அவர்களுக்குப் பதில் சொல்வதற்காகப் போடப்பட்ட ஒரு கண்துடைப்பு வாசகம்தான் அது.
நான் நிரந்தரமானவன்; அழிவதில்லை..!” - பகுதி 1

- ரவிபிரகாஷ்

தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் நான்கு தலைமுறைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்த எழிலிசை வேந்தன்; தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்; ராகத்தோடு உணர்ச்சியையும் குழைத்துப் பாடல் வரிகளுக்கு உயிரூட்டிய இசை பிரம்மா…

91 வயதில் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை- பில்ராத் மருத்துவமனையிலும் பின்பு இசபெல்லா மருத்துவமனையிலும் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்ந்து, சற்றே குணமாகி, சென்னை- ஹேமமாலினி திருமண மண்டபத்தில் 22.5.2013 அன்று நடந்த அவரது பேரன் செந்தூரனின் திருமண நிகழ்விலும் கலந்துகொண்டுவிட்டு, , மந்தைவெளியில் உள்ள தனது இல்லத்தில் முருகனடி சேர்ந்தார். அவரது நினைவைப் போற்றும்விதமாக டி.எம்.எஸ். பற்றிய நினைவலைகளை 100 தகவல்களாக இங்கே தொகுத்துள்ளேன்.

1. டி.எம்.எஸ். என்பதில் உள்ள 'எஸ்' சௌந்தரராஜனையும், 'எம்' என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்காரையும் குறிக்கும். 'டி' என்பது அவரின் குடும்பப் பெயர் 'தொகுளுவா' என்பதைக் குறிக்கும். கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு உடம்பில் பலம் உண்டாக்கக்கூடிய சத்து மாவு தயாரித்துத் தருவதில் அந்தக் குடும்பம் பேர் பெற்றது.

2. பிறந்தது மதுரையில். ஒரு அக்கா, ஒரு அண்ணன் உண்டு. டி.எம்.எஸ். மூன்றாவது குழந்தை. இவருக்கு அடுத்துப் பிறந்த ஒரு தம்பி கிருஷ்ணமூர்த்தி ஐயங்கார் மட்டும் இப்போது மதுரை, ஆனைமலையில் மிருதங்க வித்வானாக இருக்கிறார்.

3. எஸ்.எஸ்.எல்.சி படித்துள்ளார். ஆறாம் வகுப்பு வரை மதுரை செயின்ட் மேரிஸ் ஸ்கூலிலும், மேல்நிலைப் படிப்பை சௌராஷ்டிரா பள்ளியிலும் முடித்தார்.

4. டி.எம்.எஸ்-ஸுக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார் டி.எம்.எஸ்.

5. 1946-ல் வெளியான 'கிருஷ்ண விஜயம்' படத்தில் நரசிம்ம பாரதிக்குப் பாடிய 'ராதே என்னை விட்டு ஓடாதேடி' பாடல்தான் டி.எம்.எஸ் முதன்முதலாக பின்னணி பாடிய பாடல்.

6. டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, 'இமயத்துடன்' என்னும் தன்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுத் தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக் கிடந்த அந்த இடங்களில், அதே பழைய ஒலிப்பதிவு அறையைக் கண்டுபிடித்து, அங்கே நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்து, பழைய நினைவுகளில் ஊறித் திளைத்த பாக்கியம் அநேகமாக வேறு எந்தப் பாடகருக்குமே கிடைத்திராத ஒன்று!

7. டி.எம்.எஸ். வறுமையில் வாடிய ஆரம்பக் காலத்தில், கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்த எம்.கே.டி. பாகவதருக்கு உதவியாளராகச் சேரும் வாய்ப்பு ஒன்று வந்தது. அவரைப் போல் தானே ஒரு நாள் பேரும் புகழும் அடைய முடியும் என்ற நம்பிக்கையில், உறுதியோடு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் டி.எம்.எஸ்.

8. மதுரை வரதராஜ பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். நல்ல குரலெடுத்து பஜனைப் பாடல்கள் பாடுவதிலும் அவர் வல்லவர். அந்தத் திறமை இயல்பிலேயே டி.எம்.எஸ்ஸிடமும் இருந்தது.

9. டி.எம்.எஸ்ஸும் மதுரை வரதராஜ பெருமாளுக்குச் சேவை செய்துள்ளார். மேல் வருமானத்துக்காக, அந்தக் கோயில் மண்டபத்திலேயே, 'தெற்குப் பெருமாள் மேஸ்திரி தெரு இந்திப் பிரசார சபா' என்னும் பெயரில் ஒரு இந்திப் பள்ளியையும் தொடங்கி, மாணவர்களுக்கு இந்தி சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.

10. இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்ததில்லை டி.எம்.எஸ். மற்றபடி எல்லாக் கோயில் விசேஷங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை, பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது.

11. டி.எம்.எஸ்ஸுக்குச் சரளமாக இந்தி பேசவும், படிக்கவும், எழுதவும் தெரியும். அவரது அபிமான இந்திப் பாடகர் முகம்மது ரஃபியிடம் அவர் பாடிய பாடல்களை, அவரைப் போலவே அச்சு அசலாகப் பாடிக் காண்பித்து அசத்தியிருக்கிறார்.

12. டி.எம்.எஸ்ஸுக்கு முதன்முதலில் பாடும் வாய்ப்பை அளித்தவர், அந்நாளில் பிரபல திரைப்பட இயக்குநராக இருந்த சுந்தர்லால் நட்கர்னி. அவரிடம் எப்படியும் பின்னணி பாடும் வாய்ப்பு பெற்றுவிடும் உத்தேசத்தில், அவரது வீட்டில் பணியாளராகவே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் டி.எம்.எஸ்.

13. தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். (அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.)

14. டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்..., உள்ளம் உருகுதய்யா முருகா, சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா, மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப் பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியது டி.எம்.எஸ்தான்!

15. டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடலாகத் திகழ்கிறது. இந்தப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்திருப்பார் டி.எம்.எஸ். கர்னாடக இசை மேதை செம்மங்குடியே இதைச் சிலாகித்துப் பாராட்டியிருக்கிறார்.

16. சென்னை, நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சர்வராகப் பணி செய்து வந்தவர் குழந்தைவேலன். நெற்றியில் திருநீறு, குங்குமம், சுத்தமான உடை, நடவடிக்கைகளில் பணிவு என இருந்த அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க, அவர் தங்கியிருந்த அறைக்கே சென்றார் டி.எம்.எஸ். ஒரு நோட்டுப் புத்தகத்தில் தான் எழுதி வைத்திருந்த பக்திப் பாடல்களைக் காட்டினார் அவர். அதில் ஒரு பாட்டு டி.எம்.எஸ்ஸுக்கு மிகவும் பிடித்துப்போக, அதற்குத் தானே இசையமைத்துப் பாடினார். பாட்டு ஹிட்! அந்தப் பாடல்தான்... 'உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை...'

17. 'அடிமைப் பெண்' படத்தின்போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். படத்துக்கான பாடலைப் பாடிக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட, மகள் திருமணத்தைவிட சினிமா பெரிதல்ல என்று கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு, அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்து, அவருக்குப் புகழை அள்ளிக் கொடுத்தது. அந்தப் பாடல்தான், 'ஆயிரம் நிலவே வா...'.

18. மகள் திருமணம் முடிந்து வந்த பின்பு, டி.எம்.எஸ்ஸை அழைத்து, மீண்டும் தனக்குப் பின்னணி பாடுமாறு கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். டி.எம்.எஸ்ஸும் கோபத்தையும் வருத்தத்தையும் மறந்து, தொடர்ந்து எம்.ஜி.ஆருக்குப் பாடத் தொடங்கினார்.


##~~##
19. 'அடிமைப் பெண்' படம் வரையில், ஒரு பாடலுக்கு டி.எம்.எஸ். வாங்கிய தொகை வெறும் 500 ரூபாய்தான். (அதன்பின்பு, குறைந்தது ஆயிரம் ரூபாயாவது தரவேண்டும் என்று கேட்டுப் பெற்றார்.) என்னதான் டி.எம்.எஸ். ஒரே டேக்கில் சரியாகப் பாடினாலும், மற்ற பாடகர்கள் உச்சரிப்பில் செய்கிற தவறு, இசைக் குழுவினரில் யாரோ ஒருவர் செய்கிற தவறு போன்ற பல காரணங்களால், அந்தக் காலத்தில் ஒரே பாட்டை மீண்டும் மீண்டும் பத்துப் பன்னிரண்டு தடவைக்கு மேல் பாடவேண்டியிருக்கும். அத்தனைக்கும் சேர்த்துத்தான் அந்தத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

20. 'சிந்தனை செய் மனமே' பாடலின் இரண்டாவது பகுதியாகத் தொடரும் 'வடிவேலும் மயிலும் துணை' என்கிற பாடலில் மூச்சு விடாமல் தொடர்ந்து பாடிச் சாதனை செய்திருப்பார் டி.எம்.எஸ்.

21. எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மட்டுமல்ல; எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் என ஒவ்வொரு நடிகருக்கேற்பவும் குரல் மாற்றிப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அவரது பாடல்களை உன்னிப்பாகக் கேட்டு ரசிக்கும் நேயர்களுக்கு இது புரியும்.

22. 'உயர்ந்த மனிதன்' பாடல்களை அதன் தயாரிப்பாளர் ஏவி.எம்-முக்குப் போட்டுக் காண்பித்தார்கள். 'வெள்ளிக்கிண்ணம்தான்...', 'என் கேள்விக்கென்ன பதில்...' இரண்டையும் கேட்டுவிட்டு ஏவி.எம். கேட்ட முதல் கேள்வி, "என் கேள்விக்கென்ன பாடல், இளம் நடிகர் சிவகுமாருக்கானது என்று டி.எம்.எஸ்ஸிடம் சொன்னீர்களா?" என்பதுதான். அவர் நினைத்ததுபோல் டி.எம்.எஸ்ஸுக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கவில்லை. சொல்லியிருந்தால், சிவகுமாருக்கேற்ப தன் குரலைக் குழைத்து மென்மையாக்கிக்கொண்டு பாடியிருப்பார் டி.எம்.எஸ். என்பதில் ஏவி.எம்முக்கு அத்தனை நம்பிக்கை. பின்னர், இந்தத் தகவல் டி.எம்.எஸ்ஸுக்குத் தெரிவிக்கப்பட்டு, சிவகுமாருக்கேற்ப மீண்டும் அதே பாடலை குழைவும் நெகிழ்வுமாகப் பாடித் தந்தார் டி.எம்.எஸ்.

23. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். முதன்முதல் பாடிய பாடல், 'மலைக்கள்ளன்' படத்தில் இடம்பெறும் 'எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'. சிவாஜிகணேசனுக்கு டி.எம்.எஸ். முதன்முதல் பாடிய பாடல், ‘ஏறாத மலைதனிலே…’ படம்: தூக்குத்தூக்கி

24. அதற்கு முன்பே எம்.ஜி.ஆரின் 'மந்திரிகுமாரி' படத்தில் 'அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே' என்ற பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். (எம்.ஜி.ஆருக்கு அல்ல!) ஆனால், அந்த சினிமா டைட்டிலில் டி.எம்.எஸ். பெயர் இடம்பெறவில்லை. அதேபோல், 'பல்லாண்டு வாழ்க' படத்திலும் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்கிற பாரதிதாசன் பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். அந்தப் பட டைட்டிலிலும் டி.எம்.எஸ். பெயர் இடம்பெறவில்லை.

25. இலங்கைக்கும் டி.எம்.எஸ்ஸுக்கும் அப்படி ஒரு பொருத்தம் உண்டு. வானொலி உலகில் முதன்முதலில் டி.எம்.எஸ்ஸின் இசைத்தட்டை ஒலிக்கவிட்ட பெருமை இலங்கை வானொலியையே சேரும். ஆம். டி.எம்.எஸ். பாடிய 'அன்னம் இட்ட வீட்டிலே...' பாடலை முதன்முதலாக ஒலிபரப்பி, காற்றலைகளில் அவரது காந்தர்வக் குரலைப் பரப்பியது இலங்கை வானொலிதான்! டி.எம்.எஸ்ஸுக்கு முதல் பாராட்டுக் கடிதம் வந்தது இலங்கை, மட்டக்கிளப்பிலிருந்து! டி.எம்.எஸ்ஸுக்குக் கடிதம் எழுதிய முதல் ரசிகர் ஓர் இலங்கைத் தமிழர்.
Posted Date : 07:57 (25/05/2017)

என்னைப் பத்தி படமெடுக்க என்ன இருக்கு?’ - மறுத்த டி.எம்.எஸ்.. விடாத விஜயராஜ்! #TMS

த.கதிரவன்

‘சந்திர ஈரமும் சூரிய வீரியமும்

சேர்த்துச் செய்த சுடர்கவிதை

டி.எம்.சௌந்தர்ராஜன்!' - பாடகர் திலகம் டி.எம்.சௌந்தர்ராஜனின் சிம்மக்குரலுக்கு அடிமையான கோடானுகோடி ரசிகர்களில் ஒருவரின் கவிதை இது!

தெள்ளத்தெளிவான தமிழ் உச்சரிப்புடன் தமிழ்த் திரையுலகை இன்றைக்கும் ஆட்கொண்டிருக்கும் இசை ஆளுமை டி.எம்.எஸ் அவர்களின் நினைவுநாள் இன்று.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் என ஆரம்பித்து, சத்யராஜ், விஜய்காந்த் வரைக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகர் ஒவ்வொருவருக்கும் பொருத்தமாகத் தனித்தனிக் குரலில் பின்னணி பாடி, காலத்தால் அழியாத கலைஞனாக நிலைத்துநிற்கிறார் டி.எம்.எஸ்!

சௌராஷ்டிரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, ஒட்டுமொத்த உலகத் தமிழர்களையும் தனது கந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட மாபெரும் கலைஞன். இந்தாண்டு ஜனவரி மாதம், அவரின் உருவம் பதித்த தபால்தலையை வெளியிட்டுக் கௌரவித்துள்ளது மத்திய அரசு.

அவரது சாதனையை ஆவணப்படுத்தும்விதமாக, ‘இமயத்துடன்!’ என்ற தலைப்பில், தொலைக்காட்சி நெடுந்தொடர் ஒன்றைத் தயாரித்து இயக்கியுள்ளார் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த விஜயராஜ்.

டி.எம்.எஸ்-ஸின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவுசெய்யும் பணிக்காக, கிட்டத்தட்ட 13 வருடங்கள் அந்த மாபெரும் கலைஞனுடனேயே உண்டு, உறங்கி, நெடுந்தொலைவு பயணித்தவர் விஜயராஜ். டி.எம்.எஸ்-ஸின் சாதனைகள் குறித்த திரைத்துறைப் பிரபலங்களின் பெருமைகளையும் இந்த நெடுந்தொடரில் பதிவுசெய்துள்ளார். மறக்க முடியாத அந்த நாள்களை மகிழ்வும் நெகிழ்வுமாக மீட்டெடுக்கிறார்...

'‘ ‘தமிழ்நாடு அரசுத் திரைப்படக் கல்லூரியில் நடிப்பு, ஒளிப்பதிவு முடித்து 1996-ம் ஆண்டில் வெளியே வந்தேன். ‘சினிமா போன்று இல்லாமல் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தில் இருந்தேன். அப்போதுதான், டி.எம்.எஸ்-ஸோட வாழ்க்கை வரலாற்றை அவரை வைத்தே ஆவணப் பதிப்பாகப் பண்ணவேண்டும் என்ற எண்ணம் வந்தது. உடனே, டி.எம்.எஸ் ஐயாவைச் சந்தித்துப் பேசினேன். ஆனால், அவரோ சற்றும் பிடிகொடுக்கவில்லை. ‘என்னைப் பற்றி படம் எடுக்க என்ன இருக்கு? செத்தா தூக்கிப்போட்டுட்டுப் போங்க. அதான், நான் பாடிய பாடல்கள் இருக்கே. ரசிகர்களுக்கு அது போதும்!’ எனச் சொல்லிவிட்டார். ஆனாலும், எட்டு மாதங்கள் தொடர்ந்து அவரோடு அலைந்து திரிந்து, அவரை ஒருவழியாகச் சம்மதிக்க வைத்தேன்.

‘டி.எம்.எஸ். ஒரு சகாப்தம்’ என்ற பெயரில், 13 வாரத் தொடர் ஒன்றை முதன்முதலில் எடுத்தேன். டி.எம்.எஸ். அவர்கள் கதை சொல்வதுபோல் அமைந்திருந்த இந்தத் தொடரை 1999-ல் பார்த்த, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரொம்பவே பாராட்டினாங்க. ‘டி.எம்.எஸ். அவர்கள் நம் தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். எனவே, அவரைப் பற்றி இன்னும் விரிவா, பொக்கிஷம் மாதிரியான பயோகிராஃபி ஒன்றை ஒரு மெகா தொடரா பண்ணுங்க….’ என்று சொல்லி ஊக்குவித்து, எங்கள் உழைப்பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றவர் அவர்தான்.



(டி.எம்.எஸ், இளையராஜா ஆகியோருடன் விஜயராஜ்)

அதன்பிறகு 2001-லிருந்து 2013 வரை பதின்மூன்று வருடங்களில் பல்வேறு சிரமங்கள், போராட்டங்களுக்கிடையே கடும் உழைப்போடு ‘இமயத்துடன்….’ என்ற தலைப்பில் 150 வாரத் தொடரை எடுத்து முடித்தோம்’’ என்று பெருமை பொங்கச் சொல்லும் விஜயராஜ், இத் தொடரைத் தயாரிப்பதற்கான பெரும்பங்கு பண உதவியை நண்பர்கள் செய்தனர் என நன்றியோடு குறிப்பிடுகிறார்.

டி.எம்.எஸ். முதன்முதலில் மைக் முன் நின்று பாடிய பாடலில் ஆரம்பித்து, எம்.ஜி.ஆர். – சிவாஜியின் திரைப் பாடல்களுக்கு உயிர் கொடுத்து முன்னணித் திரை இசைக் கலைஞராக ஜொலித்தது வரையிலான அனைத்துக் காலகட்டங்களும் ‘இமயத்துடன்…’ தொடரில் பதிவாகியிருக்கின்றன. 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் டி.எம்.எஸ்.ஸோடு பழகியவர்கள், நண்பர்கள், பல்துறைச் சாதனையாளர்களையெல்லாம் சம்பவ இடத்துக்கே சென்று சந்தித்து, அவர்களோடு டி.எம்.சௌந்தரராஜனைக் கலந்துரையாடச் செய்து படமாக்கியிருப்பதுதான் இத்தொடரின் ஸ்பெஷல்!

‘‘டி.எம்.சௌந்தர்ராஜன் பிறந்து வளர்ந்த வீடு, அவர் படித்த செயின்ட் மேரிஸ் ஸ்கூல், வரதராஜ பெருமாள் கோயில்…. என மதுரையில் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். 1946-ல் ‘கிருஷ்ண விஜயம்’ படத்துக்காக கோவையிலுள்ள சென்ட்ரல் ஸ்டூடியோவில்தான் டி.எம்.எஸ். தனது முதல் திரைப் பாடலைப் பாடினார். இப்போது அந்த ஸ்டூடியோ பூட்டப்பட்டு புதர்மண்டி சிதிலமடைந்து கிடக்கிறது. அந்த ஸ்டூடியோவில் அவர் பாடிய அறையில் மறுபடியும் டி.எம்.எஸ்.ஸைப் பாடவைத்துப் படம்பிடிக்க முடிவுசெய்தோம். இதற்காகச் சுமார் ஒன்றரை வருடங்கள் அலைந்து திரிந்து அனுமதி வாங்கி, ஸ்டூடியோவைத் திறந்து சுத்தம் செய்து, அதே அறையில் டி.எம்.எஸ். அவர்களை பாட வைத்தோம். 50 வருடங்களுக்கு முன் தனது கலையுலகப் பிரவேசத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட அந்த இடத்தில் அவரை மறுபடியும் நிற்கவைத்தபோது, அவரது முகத்தில் பரவிய பரவச உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. உணர்ச்சிபூர்வமான அந்தத் தருணங்களை அப்படியே பதிவுசெய்திருக்கிறோம். பின்னர், அதே கோவையில் உள்ள ‘பட்சி ராஜா ஸ்டூடியோ’விலும் பாட வைத்தோம். இந்த ஸ்டூடியோவில்தான் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலில், ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…’ பாடலைப் பாடியிருந்தார் டி.எம்.எஸ்.



சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் படமாக்கவும் பல காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. ‘தேவகி’ படத்தில் அவர் நடித்த ஸ்டூடியோவிலும் ஷூட் செய்தோம்.

கேரளாவிலுள்ள எம்.ஜி.ஆரின் சொந்த ஊரான ‘குழல் மன்னம்’ (பாலக்காடு) பகுதியில், எம்.ஜி.ஆர். தமது மனைவி சதானந்ததேவியோடு வாழ்ந்த வீட்டிலும் படப்பிடிப்பு நடத்தினோம். எம்.ஜி.ஆர். அரசியலுக்குச் சென்றபிறகு ‘தன்னை சரியாகக் கவனிக்கவில்லை’ என்ற வருத்தம் டி.எம்.எஸ்ஸுக்கு இருந்தது. ஆனாலும், எம்.ஜி.ஆரோடு பழகிய நினைவுகளில் ஆழ்ந்ததில், டி.எம்.எஸ். அவர்கள் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுவிட்டார். எம்.ஜி.ஆரின் உறவுகளோடு கலகலப்பாகப் பேசிச் சிரித்ததில் பழைய வருத்தங்கள் எல்லாம் மறைந்துவிட்டன. எந்த இடத்திலும் டாக்குமென்டரி ஃபீல் வந்துவிடக்கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டு எடுத்திருக்கிறோம். சுருக்கமாகச் சொன்னால், இந்த மெகா தொடர் டி.எம்.எஸ். என்கிற தனி ஆளுமையின் சரித்திரமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் வரலாற்றையே சொல்வதுபோல் இருக்கும்.’’ – ஒரு சாதனையாளனின் சரித்திரத்தைச் சரியாகவும் முழுமையாகவும் பதிவுசெய்துவிட்ட திருப்தியோடு பேசுகிறார் விஜயராஜ்.

திரையுலகில் டி.எம்.சௌந்தர்ராஜனோடு முரண்பட்டு இருந்ததாகச் சொல்லப்படும் டி.ராஜேந்தர், இளையராஜா ஆகியோரோடும் டி.எம்.எஸ்-ஸை உரையாட வைத்து, வதந்திகளை உடைத்தெறிந்திருப்பதைப் பெருமையாகவே நினைக்கிறார் விஜயராஜ்.

‘‘டி.எம்.எஸ். பாடிய பாடல்களின் பழைய ஆடியோ, வீடியோக்கள் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. யாரேனும் வைத்திருந்தாலும், தர மனம் இருக்காது. ஆனால், மலேசியாவிலுள்ள தாமஸ் என்கிற தமிழர், பீட்டா டேப்பில் டி.எம்.எஸ்-ஸின் எல்லா ரெக்கார்டுகளையும் பத்திரப்படுத்தி வைத்திருந்ததைக் கேள்விப்பட்டு, அங்கே சென்றோம். தன்னிடமிருந்த அத்தனை பாடல்களையும் எங்களுக்குத் தந்து உதவியதோடு, ‘டி.எம்.எஸ். ஐயா அவர்களின் பாடல்களை வைத்துதான் நாங்கள் பிழைக்கிறோம். அதனால், இந்த ஆடியோ - வீடியோ கிளிப்ஸ்களை உங்களுக்குத் தருவது உதவி அல்ல; நாங்க அவருக்குச் செய்ற கைம்மாறு’ என்று தாமஸ் சொன்னது எங்களை நெகிழவைத்தது'' என்று உணர்ச்சிப் வசப்படுகிறார் விஜயராஜ்.

லதாமங்கேஷ்கர் – டி.எம்.எஸ் சந்திப்பின்போது, ‘'நான் சிவாஜி கணேசனின் ரசிகை. அவர் எங்கள் குடும்ப நண்பர். அவரோட குரலிலேயே பாடி, அவரின் பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் நீங்க. அதனால, உங்கமேலே எப்பவுமே எனக்குப் பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு’' என்று உணர்ச்சிவசப்பட்டாராம் லதாமங்கேஷ்கர்.

‘‘திரைப் படங்கள், சீரியல்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் எனக்கு நிறைய வந்தன. எல்லாவற்றையும் மறுத்து ஒதுக்கிவிட்டு ஒரு தவம் போல் வைராக்கியத்தோடு இந்தத் தொடரை இயக்கியிருக்கிறேன். இதை முழுமையாக முடித்து வெளியிடுவதில் இருந்த தடங்கல்கள் யாவும் நீங்கிவிட்டன. விரைவில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ‘இமயத்துடன்….’ தொடரை ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம். டி.எம்.எஸ். அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இப்படியொரு பெருமுயற்சியைச் செய்துமுடித்ததும், அதனை டி.எம்.எஸ். அவர்களே பார்த்துப் பாராட்டியதுமே எனக்குப் பெரும் மனநிறைவாக இருக்கிறது’’ என்கிறார் விஜயராஜ் கண்கள் பனிக்க.

தமிழ்த் திரை இசையுலகின் சகாப்தமாக விளங்கிய டி.எம்.சௌந்தர்ராஜன் எனும் மாபெரும் கலைஞனுக்கு மறைவு என்பதே கிடையாது. காற்றுள்ளவரை இந்தக் கந்தர்வக் குரலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்!
இந்தியாவிலேயே நீளமான பாலம்; மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..!

MUTHUKRISHNAN S

அசாம் மாநிலம் கவுகாத்தியிலுள்ள சாதியா என்ற இடத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநகரிலுள்ள தோலா இடையே பிரம்மபுத்திரா, லோஹித் ஆறுகளில் குறுக்கே சுமார் 9.2 கி.மீ தொலைவில் கட்டப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இந்தப் பாலம் இந்தியாவிலேயே மிக நீண்ட பாலம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.




இந்த பாலம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் அசாம், அருணாச்சல மாநிலங்கள் இடையேயான போக்குவரத்து நேரம் 4 மணி நேரமாகக் குறையும். இந்தப் பாலம் இரு மாநிலங்களுக்கிடையே நடைபெறும் வர்த்தகப் போக்குவரத்திற்கும் பயனுள்ளதாக அமையும். ராணுவ டாங்குகளையும் தாங்கும் சக்தியுடன் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைக்கு மிக அருகாமையில் இந்தப் பாலம் அமைந்துள்ளதால் பாதுகாப்பு ரீதியாகவும் இந்தப் பாலம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

workinf for Rs. 2 per day


PG medical counselling postponed indefinitely


By Express News Service  |   Published: 26th May 2017 04:34 AM  |  
|  
CHENNAI: The Directorate of Medical Education has postponed indefinitely counselling to fill post graduation medical seats in government medical colleges and self-financing colleges scheduled for May 27, which is the last day of second phase of counselling.
“Candidates must join college on May 29. If candidates don’t join, we will get those seats on the next day. So we planned to conduct the counselling after those seats are surrendered. So we postponed the counselling,” said G Selvaraj, secretary, selection committee.
Meanwhile, counselling must be finished on or before  May 31 as per MCI instructions.
On Thursday, a few non-service doctors staged a demonstration at the PG medical counselling conducted  at the Government Multi Super-Speciality Hospital in the city.
Ads by ZINC
“In-service doctors have secured maximum number of seats, because of government tactics to pacify government doctors who were protesting against the Madras HC order recently. The government notified the rural areas as remote areas, because of this many government doctors benefitted. But, non-service doctors who scored well in NEET could not get seats. Because of adding incentive marks, the score of the in-service doctors increased,” said N Karthikeyan, who secured good marks in NEET, but could secure only diploma seat.

MCI gives Tamil Nadu nod for 305 additional PG medical seats


By Sinduja Jane  |  Express News Service  |   Published: 26th May 2017 05:53 AM  |  

CHENNAI: In a big boost to medical education in Tamil Nadu, the Medical Council of India (MCI) has given approval for 305 additional post-graduation masters degree seats in government medical colleges in the State, almost a 40 per cent increase from current numbers.
“This is a big number… These additional seats were added to the matrix for admissions this year,” a senior health department official told Express. The State has also applied for additional seats in super-speciality courses. “We are waiting for the approval,” the official added. Of the 23 government medical colleges in the State, 13 offer PG degree.
In all, there were 1,188 postgraduate medical seats in these colleges last year. Of these, 792 seats were for master degree courses (Master of Surgery, Doctor of Medicine), while the remaining 396 were diploma seats. With the addition of these 305 PG seats, the number of PG degree seats has gone up to 1,097.
For the eligible in-service doctors who were upset over losing 50 per cent reservation in admission to postgraduate degree courses in government colleges following an order by Madras High Court, this comes as a huge relief, as more in-service candidates would get seats.
The Madras High Court had recently directed the State health department to follow MCI regulations for PG medical admissions. Under this, there is no provision for 50 per cent reservation for in-service government doctors in admissions to PG degree courses, other than to the doctors serving in remote and hilly areas.
The court said admission should be based on NEET marks and incentive to the in-service doctors served in remote and hilly areas. This triggered protests by government doctors across the State for nearly a month.
Following this, the State government notified some rural areas as remote, and began counselling for postgraduate medical seats.

7வது ஊதியக்குழு பரிந்துரை கருத்துக்கேட்பு கூட்டம்! 4 நாட்கள் நடக்கிறது!!

7வது ஊதியக்குழு பரிந்துரை தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை லேடிவெலிங்டன் கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நடைபெற இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது  ஊதியக்குழு பரிந்துரைகளை கடந்த ஆண்டு அமல்படுத்தியது. அந்த 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழக அரசும் செயல்படுத்த அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதுகுறித்து கடந்த பிப்ரவரி 22ந்தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவில் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்தத்துறை செயலாளர் மற்றும் உறுப்பினர் செயலாளராக டாக்டர் P. உமாநாத் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்த குழுவினர் மத்திய அரசின் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து சென்னை லேடி வெலிங்டன் கல்லூரியில் 4 நாட்களாக கருத்து கேட்பு முகாம் நடைபெற உள்ளது.

நாளை தொடங்கி, சனிக்கிழமை (27ந்தேதி), மற்றும் 02.06.2017 (திங்கட்கிழமை), 03.06.2017 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.
இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் நிதியமைச்சர் ஜெயக்குமார், மற்றும் ஊதியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

அரசு வேலைக்காக முயற்சி செய்பவரா நீங்க? முதல்ல இதைப் படிங்க...!

எந்தத் தேர்வு எந்த நாட்களில் நடக்கிறது என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்திகிறோம். இதே உங்களுக்காக.

அரசு வேலையில் சேர வேண்டும் என்கிற விருப்பம் உள்ளவர்கள் அரசு தேர்வுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். எந்தத் தேர்வு எந்த நாள் நடைபெறுகிறது என உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.
எப்படியாவது அரசு வேலைக்கு போக வேண்டும் என்கின்ற விருப்பம் உள்ளவர்கள் அரசு நடத்தும் போட்டித்தேர்வுகள் அனைத்திலுமே பெரும்பாலும் கலந்து கொள்கின்றனர்.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயன்படும் வகையில் தேர்வு நாட்களை உங்களுக்க ஞாபகப்படுத்துகிறோம்.

ஜூன் 3 மற்றும் 4ந் தேதிகளில் - நேஷனல் இன்சூரன்ஸ் ஏ.ஓ.தேர்வு நடைபெறுகிறது.

ஜூன் 4ந் தேதி - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ. மெயின் தேர்வு நடைபெறுகிறது.

ஜூன் 4ந் தேதி - எஸ்எஸ்சி - சிஜிஎல் தேர்வு நடைபெறுகிறது

ஜூன் 18ந் தேதி - யூபிஎஸ்சி சிவில் சர்விசஸ் முதல் கட்ட தேர்வு நடைபெறுகிறது.

ஜூன் 18ந் தேதி - இந்திய வன சேவை முதல் கட்ட தேர்வு நடைபெறுகிறது.

ஜூலை 2ந் தேதி - டிஎன்பிஎஸ்சி - உதவி வேளாண் அலுவலர் தேர்வு நடைபெறுகிறது.

ஜூலை 2ந் தேதி - டிஆர்பி முதுநிலை ஆசிரியர் தேர்வு நடைபெறுகிறது

பிளஸ் 1 மாணவர்கள், 'ஆல் பாஸ்' !!

இந்த ஆண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை பரிந்துரைப்படி, தமிழகத்தில், பிளஸ் 1 பாடத்துக்கு கட்டாய பொதுத் தேர்வு, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தேர்வு நேரம், மதிப்பெண் முறையிலும், மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

'இந்த ஆண்டு, மார்ச்சில் தேர்வு எழுதிய, பிளஸ் 1 மாணவர்களில், யாராவது தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, துணைத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும்' என்றும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

KARNATAKA

Health Department on aggressive drive to hire doctors on call

1,401 doctors’ posts vacant at health centres in State, of which 994 are for specialists

Faced with a shortage of 1,400 doctors at its healthcare centres, the State Health Department is going all out to hire them on call.
The department is widely publicising its decision to hire doctors on call and on contract. While a monthly remuneration of Rs. 1 lakh to Rs. 1.2 lakh has been fixed for doctors opting to take up a job on contract, a retention fee of Rs. 10,000 apart from a daily out-patient fee of Rs. 2,000 has been fixed for those who are on call. These on call doctors will also get a fixed amount for every procedure they conduct. The fee for every procedure has been fixed and notified in a Government Order issued on March 3.
Principal Secretary (Health and Family Welfare) Shalini Rajneesh told The Hinduthat ever since the department started publicising the scheme in the last one week, 142 candidates had sent their biodata and 109 enquiry calls were made.
Notices inviting on call doctors have been put up on the campus of Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) and Karnataka Medical Council (KMC) where medical graduates and professionals visit frequently, she said.
“We have realised that the poor response from doctors is mostly because they are not aware that such a scheme exists. So, we are now publicising the scheme in places where it will attract doctors’ attention. Anyone interested can call our Arogya Sahayavani 104 for more details, or email their biodata with choice of place to oncallspecialistskar@gmail.com,” she said.
Despite enhanced salaries and incentives, there are not many takers for medical posts in the department. The department’s recruitment drive conducted through KPSC last year has only validated this. Of 1,122 applicants, only 597 reported for duty.
This is striking, especially when the number of applicants is many times the existing posts in other government departments.

High Court puts rider on RGUHS tender

Says further proceedings would be subject to the final order on a PIL petition

The High Court of Karnataka on Thursday put a rider on a process initiated by the Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) to procure hardware of a particular specification for end-to-end computerisation at a cost of several crores of rupees even as the required software is still under development.
A vacation Division Bench comprising Justice Ravi Malimath and Justice John Michael Cunha, in an interim order, made it clear that all further proceedings on the tender process initiated by the RGUHS on February 13, 2017 would be subject to the final order on a PIL petition filed by Silicon Educational and Charitable Trust.
The petitioner contends that the tender process violates provisions of the Karnataka Transparency in Public Procurements Act. Also, it claims, the university is going against the advice given on May 3, 2017 by the State government asking the former not to proceed with procurement of hardware till completion of development of software by the National Informatics Centre.
The petitioner claimed that the university had on May 11, 2017 opened the financial bids and it appears that three companies had quoted prices in the range of Rs. 66 crore to Rs. 107 crore though the cost of the required hardware may not exceed Rs. 10 crore. The vice-chancellor of the university is hastily trying to complete the tender process before expiry of his tenure in July, the petitioner alleged.

Old hospital to be converted into PHC

Minister announces that it will function with many facilities

The old government hospital premises located at Chengam Road-Thandarampattu Road Junction in Tiruvannamalai is set to see the light of the day finally.
Health Minister C.Vijaya Baskar, who visited the complex that once accommodated a 500-bed hospital on Thursday, announced that an Urban Primary Health Centre (Urban PHC) would be set up on the premises, particularly for the benefit of devotees who perform Girivalam.
Ever since the Government Tiruvannamalai Medical College was shifted to the new complex on outer ring road, the old hospital premises had been neglected.
The people of Tiruvannamalai town and villages on the western and southern side of the town faced hardship, especially at night, in reaching the medical college. Parties like the DMK and the CPI (M) and youth organizations staged protests demanding the government to start a government hospital on the old premises.
The Minister’s announcement comes as a relief to the people of Tiruvannamalai and adjacent villages. Dr. Vijaya Baskar said the proposed Urban PHC would consist of an outpatient ward, casualty ward, siddha medical unit and a specialised ward for the aged. On Girivalam days, the proposed PHC would function as a full-fledged hospital round-the-clock, he said. He inspected the additional building being built in Government Tiruvannamalai Medical College Hospital at a cost of Rs. 26 crore to accommodate another 200 beds. R. Jayanthi, Dean, Government Tiruvannamalai Medical College, accompanied the Minister during his visit.

Power shutdown today and tomorrow

Power supply would be suspended from 9 a.m. to 5 p.m. on Friday in the following areas as the Tangedco has planned to replace the high tension power cable in the Kalkandarkottai section: Mela Kalkandarkottai, Keezha Kalkandarkottai, Keezhakurichi, Nathamadipatti, Alathur, Ponmalaipatti, Indira Nagar, parts of Kottapattu, Thiru Nagar and Adaikala Annai Nagar.
Power supply would be suspended from 9 a.m. to 5 p.m. on Saturday in the following areas of the city as the Tangedco has planned to replace the high tension power cable in the Kattur section: South Kattur Gandhi Salai, Gandhi Nagar IV Street to VII Street in North Kattur and Vasantha Nagar.

Power shutdown

There will be no power supply in the following areas from 9 a.m. to 2 p.m. on Friday (May 26) due to maintenance works on the Nethimedu sub-station: Nethimedu; Annathanapatti; Shevvaipet; Chathiram; Arisipalayam; Four roads; Guhai; Linemedu; Thadagapatti; Dasanayakkanpatti; Kondalampatti; Neikkarapatti; Uthamacholapuram; Poolavari; Suramangalam; Meyyanur; Sinnerivayal; Pallapatti; and Saminathapuram.
Mecheri sub-station (9 a.m. to 5 p.m.): Mecheri; Suriyanur; Thettigiripatti; Amaram; Mallikuntham; Pallipatti; Aandikarai; Pottaneri; Koonandiyur; Keerakkaranur; Sengattur; Kuthiraikaranur; Parakkallur and M. Kalipatti.
Thumbal sub-station ( 9 a.m. to 3 p.m.): Thumbal; Panaimadal; Edappatti; Mamanji; Selur; Pappanayakkanpatti; Vellalapatti; Sekkadipatti; Thandanur; Eachangadu; Mannur; Karumanthurai; U. Kumarapalayam; Kalakkampadi, Pagadupattu and surrounding areas.
Puthiragoundanpalayam sub-station (9 a.m. to 4 p.m.):Puthiragoundapalayam; Yethapur; Abinavam; Veeragoundanur; Gandhinagar; Dalavaipatti; Thennampalayur; Ottapatti; Olappadi; Umaiyalpuram; Ariyapalayam; Pethanayakkanpalayam; Erumasamuthiram; Sinnamasamuthiram; Kalyanagiri; Kalleripatti; Vaithiyagoundanpudur; Periyakrishnapuram; Kothambadi; Kalpaganur; and Rasinagar.

Power shutdown

     Madurai
There will be a power shutdown in the following areas between 9 a.m. and 2 p.m. on Monday as the TANGEDCO plans to undertake maintenance work at its T. Kallupatti sub-station:
T. Kallupatti, Kunnathur, Kadaneri, M. Subbalapuram, Villoor, Kallikudi, Puliyampatti, Puliyankulam, Vaiyoor, Chennampatti and Aavalsooranpatti.

Dental care facility upgraded in GRH

Dean inaugurates a dental ceramic lab

The dental care facility at Government Rajaji Hospital here has been upgraded with the inauguration of a dental ceramic lab on Thursday.
Inaugurating the facility, M. R. Vairamuthu Raju, Dean, said that the Dental Surgery department would henceforth provide root canal treatment as well for patients.
The upgrading of treatment facilities and creation of new infrastructure follows an order a few months back by the Madurai Bench of Madras High Court, which, based on a public interest litigation filed by Madurai-based health rights activist C. Anandaraj, had asked the State government to improve dental care facilities in all government hospitals.
GRH doctors said that while the root canal treatment would be provided free of cost to patients, a nominal fee of Rs. 300 would be charged for making the ‘crown’ or ‘cap’ for the tooth at the dental ceramic lab.
According to GRH sources, the new facility has been set up at a cost of around Rs. 11 lakh, of which nearly Rs. 7.5 lakh was spent on the procurement of materials and equipment.
Stating that roughly 100 patients were expected to avail themselves of root canal treatment at the new facility, doctors said that the hospital would have to incur an additional operational expenditure of around Rs. 1.5 to 2 lakh for providing this treatment.
The new facility has been set up at a cost of around Rs. 11 lakh, of which nearly Rs. 7.5 lakh was spent on the procurement of materials and equipment

Blocked ration cards stand cancelled, says government

Families have been asked to apply afresh at the taluk ofifice

Despite earlier assurances that the ration cards blocked for non-linking of Aadhaar cards will be unblocked later, the district administration has now asked all the blocked card-holders to apply afresh for getting smart ration cards.
According to notices put up at the District Supply Office in the Collectorate here, people whose ration cards were blocked should apply for smart cards online or through e-service centres with Aadhaar cards of all family members and address proof.
Of around 9.5 lakh ration cards, nearly 1 lakh ration cards in which not even the Aadhaar of the family head was linked, were blocked in the district late last year as part of a State-wide action. According to officials, the number of ration card holders in the district is now 8.52 lakh with 30.73 lakh consumers.
The list of blocked cards was displayed in the respective ration shops and cardholders were asked to approach the taluk office for unblocking the cards by linking Aadhaar.
Though a large number of people thronged taluk offices and underwent a tedious process to get their cards unblocked, the process was stopped abruptly without any announcement from the third week of March, ahead of the issuance of smart cards, which began on April 1. “We also thought that the option to unblock the cards will be enabled again. However, the government has now ruled that out and instead asked the public to apply afresh,” said an official from Madurai North taluk office.
A senior official from the District Supply Office said that of the 1 lakh cards that were blocked, more than 15,000 families had already unblocked their cards till March. “A majority of the remaining cards will be bogus cards. For instance, a family might have had ration cards in two different places, in which case it could link the Aadhaar with just one card,” the official said.
“Hence, those who are really dependent on the ration cards will not get affected by the decision. Anyway, with easing of the procedure to apply for smart ration cards, it is not very difficult to get a new one,” the official added.
Those who are really dependent on the ration cards will not get affected by the decision

Hospital gets NABH accreditation


The Kalyani Kidney Care Centre here ranks among 33 private hospitals in the State and is first in the district to secure NABH (National Accreditation Board for Hospitals & Healthcare Providers) accreditation.
The hospital has received a certification from the NABH stating that the accreditation, granted based on various parameters under patient safety and quality of care, will be effective from May 22, 2017, to May 21, 2020.
The NABH is a constituent board of Quality Council of India, set up to establish and operate accreditation programme for healthcare organisations.
The board, structured to cater to needs of the consumers and set benchmarks for progress of health industry, is an institutional member of the International Society for Quality in Health Care (ISQUA), an international apex body which grants approval to Accreditation Bodies in the area of healthcare.
Quality
Congratulating the hospital on obtaining the accreditation, an NABH communication appreciated the adoption of Quality Management Systems in Healthcare overcoming the challenges in this sector.
According to official statistics, only 458 out of 79,145 hospitals are accredited in then country. Of them, 33 are in Tamil Nadu. The accredited hospitals are empaneled with Medical Tourism Facilitators approved by NABH.

HC stays criminal proceedings against Pachamuthu

The Madras High Court has stayed all further proceedings in connection with a cheque bounce case pending against SRM University Chancellor T.R. Pachamuthu before a Metropolitan Magistrate Court, Chennai.
Justice S. Vimala, granted the interim relief on a criminal original petition moved by Mr. Pachamuthu besides dispensing with his appearance before the Magistrate Court.
According the petitioner, Gagan Bothra on behalf of S. Mukanchand Bothra filed a criminal complaint before the VII Metropolitan Magistrate, Chennai against the petitioner seeking to punish him for an offence under Section 138 (cheque bounce) of the Negotiable Instruments Act.
As per the complaint, Mr. Pachamuthu, as a partner in Vendhar Movies Production, had borrowed Rs. 7.50 crore from the complainant. In return of the debt, the firm had issued two cheques for Rs. 2.60 crore, which was dishonoured by the bank concerned for want of funds.
Based on the complaint, the Magistrate initiated criminal proceedings and issued summons to the petitioner. Challenging the summons, Mr. Pachamuthu approached the Court submitting that he was never a partner of Vendhar Movies Production and he had no connection with the company.

NEWS TODAY 21.12.2025