Thursday, June 1, 2017

தி சென்னை சில்க்ஸில் பயங்கர தீ: தீயை அணைக்க நாள் முழுதும் போராட்டம்














சென்னை: சென்னை, தி.நகரில் உள்ள, பிரபல ஜவுளி நிறுவனமான, சென்னை சிலக்ஸ் கட்டடத்தில், நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.



தீ மளமளவென பரவியதில், அக்கட்டடத்தில் உள்ள ஏழு மாடிகளும் பற்றி எரிந்தன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துணிகள், தங்க நகைகள், தீயில் கருகின. கட்டுக்கடங்காத தீயை கட்டுப்படுத்த, தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் நாள் முழுவதும் போராடினர்.

சென்னை, தி.நகர், உஸ்மான் சாலையில், ஏழு மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டடத்தில், குமரன் தங்க மாளிகை என்ற நகை கடையும், சென்னை சில்க்ஸ் என்ற ஜவுளி கடையும் செயல்பட்டு வருகின்றன.இரண்டு கடைகளுக்கும், தனித்தனி நுழைவு வாயில்கள் உள்ளன. ஒரே கட்டடத்தில், இரண்டு கடைகள் இருந்த போதிலும், குமரன் தங்க மாளிகைக்கு என, தடுப்பு அமைக்கப்பட்டு, இரண்டு மாடிகளில் நகை கடை செயல்பட்டு வந்தது.

எனினும், வாடிக்கையாளர்கள், இரண்டு கடைகளுக்கும் செல்வதற்கு ஏற்ப, உட்பகுதியில் வாயில்கள் உள்ளன. அடித்தளத்தில் தேவையற்ற, மரச்சாமான்கள், 'ஜெனரேட்டர்' மற்றும் டீசல் பேரல்கள் இருந்துள்ளன.

மொட்டை மாடியில், கல்நார் கூரையால் வேயப்பட்ட, 'கேன்டீன்' உள்ளது. அங்கு, தங்கம் மற்றும் ஜவுளி கடை ஊழியர்களுக்கு, காலை மற்றும் மதிய உணவு தயாரிக்க, 14 பேர் தங்கி வேலை பார்த்து வந்தனர். அவர்களின் வசதிக்காக, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களும் இருந்தன. இரவு காவலாளிகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், குமரன் தங்க மாளிகை கடைக்கு கீழே, அடித்தளத்தில் திடீரென தீ பற்றி எரிந்து உள்ளது. தீ மளமளவென பரவியதால், தங்கம் மற்றும் ஜவுளி கடை என, ஏழு மாடிகளும் கொளுந்துவிட்டு எரிந்தன.இதனால், மொட்டை மாடியில் உள்ள, கேன்டீனில் இருந்தோர், உயிர் பயத்தில் அலறினர். செய்வதறியாது தவித்த, இரவு காவலாளி, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளார். உடனடியாக, தீயணைப்பு வீரர்கள், தி.நகர், அசோக் நகர் என, நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும், 'ஸ்கை லிப்ட்' எனப்படும் இயந்திர ஏணியுடன் கூடிய வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது, ஏழு மாடிகளிலும் இருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ஜவுளிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலாகி கொண்டு இருப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.பின், ஆறு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

தகவல் அறிந்து, சென்னை கலெக்டர் அன்புச்செல்வன், தீயணைப்பு துறை இயக்குனர், ஜார்ஜ், சென்னை போலீஸ் கமிஷனர், விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர், சங்கர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின், தி.நகர் உஸ்மான் சாலை முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் அருகே உள்ள கட்டடங்கள் மற்றும் வீடுகளில் இருந்தோர், உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அதன்பின், தீயணைப்பு வீரர்கள், போலீசார், மெட்ரோ ரயில் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். புகை மூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின், ஆக்சிஜன் உதவியுடன், தீயை அணைக்க முயன்றனர்; அதுவும் பலன் அளிக்கவில்லை.பின், அதிநவீன இயந்திரம் வாயிலாக, கட்டடத்தின் பின்பக்க சுவரில் துளையிட்டு, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. 'ஸ்கை லிப்ட்' வாகனம் வாயிலாக, கட்டடத்தின் பக்கவாட்டு பகுதிகளில், பல இடங்களில் துளையிடப்பட்டு, அதன் வழியாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அப்போதும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

பின், போலீசார், தண்ணீரை அதிவேகமாக பீய்ச்சி அடிக்க கூடிய, 'வஜ்ரா' வாகனம் வாயிலாக, தீயை அணைக்க முயன்றனர். அப்போதும், தீ கொளுந்துவிட்டு எரிந்தபடி இருந்தது. கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் அபாயமும் ஏற்பட்டது. மொட்டை மாடி கேன்டீனில் இருந்த சிலிண்டர்களும் வெடித்து சிதறின.

இதனால், தீயணைப்பு வீரர்கள், கட்டடத்தின் மேல் பகுதியிலும், தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மற்ற கட்டடங்களிலும் தீ பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் கடுமையாக போராடினர்.தி.நகர் முழுவதும், புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இச்சம்பவம் குறித்து, மேற்கு மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தீயணைப்பு வீரர்கள் திணறல்

* தீயணைப்பு பணியில், அதிநவீன வசதி கொண்ட, இரு ஸ்கை லிப்ட் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன

* ஐம்பது தீயணைப்பு வாகனங்களுடன், 200 தீயணைப்பு வீரர்கள், தீயுடன் போராடினர். அவர்களுடன், போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் என, ஏராளமானோர் இருந்தனர்

* தீயணைப்பு வீரர்களுக்கு, அதிநவீன வசதிகள்

கொண்ட உபகரணங்கள் இல்லை. போதிய கவச உடைகள் கூட இல்லாததால், தீயணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக, தி.நக ரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்குள்ள மேம்பாலத்திற் கும், 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது சென்னை குடிநீர் வாரிய லாரிகளில் இருந்த தண்ணீர், தீ விபத்துக்கு பயன்படுத்தப்பட்ட தால், தி.நகரில் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது

* தீ விபத்துக்கான காரணம் தெரியாமல், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் திணறி வருகின் றனர். கட்டடத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, டீசல் பேரல்கள் தீ பற்றி, இந்த விபத்து நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது

* இரவு முழுவதும் தீ அணைப்பு பணிகளை மேற்கொள்ள, உஸ்மான் சாலையில், கூடுதல் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. மின் தடை நேர்ந்தால் சமாளிக்க, ஜெனரேட்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன

* புகை மூட்டம் காரணமாக, மூச்சுத் திணறல் ஏற்பட்டு வருவதால், அருகில் வசிக்கும் வீடுகளில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதி யோர்கள், உறவினர் வீடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

தாமதமே காரணம்!

தீ விபத்து பற்றி தெரிய வந்ததும், காலை, 4:00 மணிக்கெல்லாம், தீயணைப்பு துறைக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 15 நிமிடங்களில், தீயணைப்பு படை வீரர்கள் வந்து விட்டனர். 'பேஸ் மென்ட்' எனப்படும் அடித்தளத்தில் தான், தீ பிடித்திருப்பதாக, அவர்களுக்கு தெரிவிக்கப் பட்டது.ஆனால், தீ எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடித்த பிறகே, அணைப்புநடவடிக்கையில் இறங்க முடியும் என, காலம் கடத்தி விட்டனர். எங்கிருந்து தீ வருகிறது என, அவர்கள் ஆராய்வதற்கே, ஒன்றரை மணி நேரம் போய் விட்டது.

அதற்குள் தீ பரவத் துவங்கியதை பார்த்ததும், அணைக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால், அவர்கள் கொண்டு வந்த வண்டியில் போதுமான தண்ணீர் இல்லை. வெளியிடங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரலாம் என்றால், டீசல் இல்லை என இழுத்தடித்துள்ளனர்.

இதற்கிடையில், சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அவர் முதல் தளம் வரை சென்று பார்த்த பிறகு தான், போலீஸ் படையை வரவழைத்துள்ளார்.
அதன் பிறகே, தீயணைப்பு நடவடிக்கை துரிதமாகி இருக்கிறது.

தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு வந்த நேரத்திலேயே, தீயை அணைக்க முயன்றிருந்தால், இந்தளவுக்கு போராட வேண்டிய அவசியம், தீயணைப்பு படையினருக்கு ஏற்பட்டிருக்காது என
கூறப்படுகிறது.

தீ தடுப்புக்கு அடுக்கு மாடிகளில்இருக்க வேண்டிய வசதிகள் என்ன

தி.நகரில் உள்ள, சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, அடுக்குமாடி கட்டடங்களில் இருக்க வேண்டிய, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கேள்வி எழுந்துள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் விதிமுறைகளின்படி கட்டடங்களில் கடைபிடிக்க வேண்டிய தீ தடுப்பு வசதிகள்:

* தீ விபத்து ஏற்பட்டால், மீட்புக்கு தீயணைப்புத் துறையின் லேடர் வாகனம் வந்து செல்லும் அளவுக்கு, பக்கவாட்டில் காலி இடம் இருக்க வேண்டும்

* அவசர காலங்களில், கட்டடத்தில் உள்ளோர் உடனே வெளியேற, வெளிப்புறமாக தனி படிக்கட்டுகள் அமைக்கப்பட வேண்டும்

* கட்டடத்தின் மேல் தளத்தில், தீ விபத்தின் போது பயன்படுத்த, பிரத்யேகமான தண்ணீர் தொட்டி அமைத்து, போதிய அளவு நீர் இருப்பு வைக்க வேண்டும்

* ஒவ்வொரு தளத்திலும், தீ விபத்தின் போது தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்கான, 'ஹோஸ்' குழாய் வசதி இருக்க வேண்டும்

* அறைகள், நடைபாதைகளில் தீ விபத்து ஏற்பட் டால், அதை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைப்பதற் கான, 'ஸ்பிரிங்க்சர்'கள் அமைப்பது அவசியம்

* அடுக்குமாடி கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனே எச்சரிக்கும், புகை கண்டுபிடிப்பான் கருவி அறைகள், நடைபாதைகளில் அமைக்க வேண்டும்

* கட்டடத்தின் உயரம், 45 மீட்டருக்கு மேல் சென் றால், அவசர கால மீட்பு பணிகளுக்கு கட்டடத்தின் மேல் பகுதியில், 'ஹெலிபேட்' அமைக்கலாம்.

சி.எம்.டி.ஏ.,வின் முழுமை திட்ட அடிப்படையிலான வளர்ச்சி விதிகளில், இந்த பாதுகாப்பு அம்சங்கள் வலியுறுத்தப்பட்டு உள்ளன.

மீட்பு பணிகள் மும்முரம்

வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர், உதயகுமார் கூறுகையில், ''இந்த தீ விபத்தில், உயிர் இழப்புகள் எதுவும் இல்லை. தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வர, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்,'' என்றார்.

மருத்துவ முகாம்

நிதியமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: இந்த கட்டடத்தில், தீ தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு இருந்தனவா, விதிமீறல் கட்டடமா என்பது குறித்து, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இப்பகுதி வாசிகளுக்கு, மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தீ முழுவதும் கட்டுப்படுத் தப்பட்ட பின், கட்டடம் பயன்பாட்டிற்கு உகந்ததா என்பது பற்றி, ஆய்வு செய்த பின்னரே, உரிமை யாளரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தீயணைப்புத்துறை மீது சென்னை சில்க்ஸ் புகார்

'தீயணைப்புத்துறையின் அலட்சியத்தால், கட்டடத் தின் கீழ் தளத்தில் ஏற்பட்ட தீ, மற்ற தளங்களுக்கும் பரவி, பெரிய விபத்தானது' என, சென்னை சில்க்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர், மாணிக்கம் கூறியதாவது:கட்டடத்தின்

அடித்தளத்தில், பரிசு பொருட்கள் இருப்பு வைக்கும் இடத்தின் அருகே, அதிகாலை, 3:45 மணிக்கு புகை வர ஆரம்பித்தது. தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தோம்; 4:00 மணிக்கு தீயணைப்பு வாகனங்கள் வந்தன. புகை அதிகம் வந்த, கட்டட அடித்தளத்தை காண்பித்தோம்.

தண்ணீர் அடிக்காமல், 'தீ எரியும் இடத்தை காட்டுங் கள்; அங்கு தான் தண்ணீர் அடிப்போம்' என, தீயணைப்பு வீரர்கள் கூறினர்.வண்டியில், தண்ணீர் குறைவு; டீசல் பற்றாக்குறை; நான்கு ஆக்சிஜன் சிலிண்டர்களில் ஒன்று மட்டுமே வேலை செய்தது போன்ற, ஒருங்கிணைப்பு இல்லாத தால், மீட்பு பணிகள் தாமதமாயின.

காலை, 6:00 மணிக்கு தான், ஜவுளிகள் இருக்கும் இடத்துக்கு, தீ பரவியது. அப்போதும், தண்ணீரை அதிகம் பீய்ச்சி அடிக்காமல், தீயணைப்பு வீரர்கள் அலட்சியம் காட்டியதால், கட்டடத்தின் அடுத்தடுத்த தளங்களுக்கும் தீ பரவியது. பகல், 12:00 மணிக்கு, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், நேரில் வந்து ஆய்வு செய்தார். அவரிடம், தீயணைப்புத்துறை யின் அலட்சிய போக்கு குறித்து புகார் செய்தோம்.

அவர், மற்ற அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு களை பிறப்பித்த பிறகே, அதிக எண்ணிக்கை யில் தீயணைப்பு வாகனங்களும், வீரர்களும் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டன.ஆரம்ப நிலையிலேயே கட்டுப் படுத்தி இருக்க வேண்டிய தீ, பிற இடங்களுக் கும் பரவ தீயணைப்புத்துறையின் அலட்சியமே காரணம். அவர்களின் செயல்பாடு வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புகையால் குழந்தைகளுக்கு ஆபத்து: அலட்சியம் வேண்டாம்

''புகையால் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்,'' என, தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர், டாக்டர் இளங்கோ கூறினார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

சென்னையில், ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தால், அதிக புகை வெளியேறுகிறது. நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடையில் தீ விபத்து நடந்திருப்பதால், வேதிபொருட்கள் மற்றும் நச்சு வாயு, 5 கி.மீ., வரை பரவி இருக்கும்.இதை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு, மூச்சு திணறல், நுரையீரல் பாதிப்பு, அடிக்கடி சளி தொல்லை, போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பெரியவர்களுக்கு தலைவலி, மயக்கம், கண் எரிச்சல், காது பிரச்னை, இருமல் போன்றவை உடனே வரலாம். நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா, ஒவ்வாமை, சளியுடன் ரத்தம் வரு தல் போன்ற நீண்ட கால பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதுபோன்ற பாதிப் புள்ளோர், உடனே டாக்டரை அணுகி, உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்.

காற்று மாசு ஆய்வு

புகையால் ஏற்பட்ட காற்று மாசு அளவிடும் பணியை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டது.இதுகுறித்து, வாரிய அதிகாரி கள் கூறுகையில், 'நடமாடும் காற்று தர கண் காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், அளவிடப்பட்ட காற்று மாசு குறித்த ஆய்வறிக்கை, இன்று வெளியிடப்படும்' என்றனர்.

மீட்பு பணிகள் மும்முரம்

வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர், உதயகுமார் கூறுகையில், ''இந்த தீ விபத்தில், உயிர் இழப்புகள் எதுவும் இல்லை. தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வர, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன,'' என்றார்.

சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் கூறிய தாவது:பொது மக்கள் யாரும், இந்த பகுதிக்கு வர வேண்டாம். தி.நகர்வாசிகள், எவ்வித அச்சமோ, பயமோ கொள்ள வேண்டாம். கட்டடம் இடிந்து விழாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

2,500 கட்டடங்களில் தீயணைப்பு வசதி இல்லை

சென்னையில் தற்போது, 2,500 கட்டடங்களுக்கு மேல், 'மக்கள் பயன்படுத்தலாம்' என்ற, தீயணைப்புத் துறையின் உரிமம் இன்றி பயன் பாட்டில் உள்ளது தெரிய வந்துள்ளது. நகர மைப்பு சட்டப்படி, மூன்று தளங்களுக்கு மேலான கட்டடங்களுக்கு, திட்ட அனுமதி வழங்கும்போது, வரைபட நிலையிலேயே, தீ விபத்து கால மீட்பு பணிக்கான இட வசதி உள் ளதை உறுதி செய்ய வேண்டும்.கட்டி முடிக் கப்படும் நிலையில், கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலும், தீ தடுப்பு வசதிகள் இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே, அந்த கட்டடத்தை தீயணைப்புத் துறை ஆய்வு செய்து, மக்கள் பயன்பாட்டுக் கான உரிமம் வழங்கும்.இதன்படி முறையான தீ தடுப்பு வசதிகள், விதிமுறைகள் பின்பற்றா ததால், 2,500 கட்டடங்களுக்கு மக்கள் பயன் பாட்டுக்கான உரிமம் வழங்கப்பட வில்லை.

'இந்த கட்டடங்களை, மக்கள் பயன்படுத்த ஏன் தடை விதிக்கக் கூடாது; ஏன், 'சீல்' வைக்கக் கூடாது' என, விளக்கம் கேட்டு தீயணைப்புத் துறையும், சி.எம்.டி.ஏ.,வும் நோட்டீஸ் அனுப்பி யுள்ளன. ஆனால், அதோடு நடவடிக்கை முடங்கி விட்டது.

இது குறித்து, தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல தனியார் வணிக வளாகத்தில், 2008ல், தீ விபத்து ஏற்பட்டு, இரண்டு ஊழியர்கள் உயிரி ழந்தனர். இதையடுத்து, இங்குள்ள கட்டடங் களின் பாதுகாப்பு குறித்து, அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம்.ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை பகுதிகளில் உள்ள, 90 சதவீத வணிக வளாகங்களில், தீயணைப்பு வசதிகள் இல்லாதது, ஆய்வுகளில் உறுதியானது. நகர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தீயணைப்புத் துறையின் உரிமம் பெறாமல், 2,500 கட்டடங்கள், மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

எந்த பகுதிகள்?

இதில், தி.நகர், ஜார்ஜ் டவுன், மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, பிரபல வணிக வளாகங்கள், பிரதானமாக உள் ளன. இந்த கட்டடங்களில், ஸ்மோக் டிடெக்டர், அனைத்து தளங்களிலும் தீயணைப்புக்காக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் குழாய் வசதிகள் அமைத்தல், அவசர கால வழிகளை ஏற்படுத்த வும் வுறுத்தப்பட்டுஉள்ளது.சி.எம்.டி.ஏ.,வும், மாநகராட்சி நிர்வாகங்களும் தான், இந்த கட்ட டங்கள் மீது, சீல் வைப்பு உள்ளிட்ட நடவடிக் கைகள் எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு நாளை 'ரிசல்ட்' வெளியீடு?
பதிவு செய்த நாள்31மே2017 21:47

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், மார்ச்சில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 28ல் வெளியானது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த தேர்வில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், 10ம் வகுப்பு தேர்விலும், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதும், 8.8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்வு முடிவுகள், நேற்று வெளியாவதாக இருந்தது; ஆனால், மதிப்பெண் பட்டியல் இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, நாளை தேர்வு முடிவு வெளியாகும் வாய்ப்பு உள்ளது. அதிலும் தாமதம் ஏற்பட்டால், ஜூன், 4ல் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்வு முடிவுகளை,www.results.nic.in, www.cbseresults.nic.in, மற்றும் www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

- நமது நிருபர் -
சட்ட படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பம்
பதிவு செய்த நாள்31மே2017 20:48

சென்னை: மூன்று புதிய கல்லுாரி கள் உட்பட, ஒன்பது அரசு சட்டக் கல்லுாரிகளில், விண்ணப்ப வினியோகம், நாளை துவங்குகிறது. தமிழகத்தில், ஆறு அரசு சட்டக் கல்லுாரி கள் செயல்பட்டு வந்த நிலையில், விழுப்புரம், தர்மபுரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில், புதிய சட்டக் கல்லுாரிகள் துவங்கப்பட உள்ளன. இவை உட்பட, ஒன்பது கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை, அம்பேத்கர் சட்ட பல்கலை துவக்கியுள்ளது. இந்த ஆண்டு, எந்த வயதைச் சேர்ந்தவர்களும், சட்டம் படிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள், நாளை முதல் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னை, அடையாறில் உள்ள சட்டப் பல்கலை மற்றும் அந்தந்த சட்டக் கல்லுாரிகளில், உரிய கட்டணம் செலுத்தி, விண்ணப்பங்களை பெறலாம். 

மூன்று புதிய கல்லுாரிகளுக்கு, கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்பம் கிடைக்கும். ஐந்தாண்டு பி.ஏ., - எல்.எல்.பி., படிப்புக்கு மட்டும், இன்று முதல், 23 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். மூன்றாண்டு படிப்புக்கு, ஜூன், 7 முதல், 17 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
ஐந்தாண்டு படிப்புக்கு, பிளஸ் 2வும்; மூன்றாண்டு படிப்புக்கு, இளநிலை பட்டப் படிப்பும் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்களை, http://tndalu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு மாத விடுமுறைக்கு பின் ஐகோர்ட் இன்று திறப்பு

பதிவு செய்த நாள்31மே2017 23:06

சென்னை: ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை, இன்று முதல் வழக்கம் போல் இயங்கும். கடந்த காலம் போல இல்லாமல், இந்த கோடை விடுமுறையில், நீதிபதிகள் அதிகம் பேர் பணியாற்றினர்.

உயர் நீதிமன்றத்துக்கு, மே மாதம், கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். அப்போது, விடுமுறை கால நீதிமன்றங்கள், வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் இயங்கும்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலின் படி, இந்த கோடை விடுமுறையில் பணியாற்ற, 20க்கும் மேற்பட்ட நீதிபதிகள் விருப்பம் தெரிவித்திருந்தனர். 

அவர்கள், உயர் நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் வழக்குகளை விசாரித்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்', அங்கீகார மற்ற வீட்டு மனைகள் தொடர்பான வழக்கில், இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. 

முதுகலை மருத்துவ படிப்பில், மருத்துவ கவுன்சில் விதிமுறையை பின்பற்றுவது தொடர்பான வழக்கில், மாறுபட்ட உத்தரவை, நீதிபதிகள் சசிதரன், எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்ததால், மூன்றாவதாக, நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்தார்.

மருத்துவ நுழைவு தகுதி தேர்வான, 'நீட்' முடிவை வெளியிட தடை, சந்தை யில் மாடு விற்பனையை ஒழுங்குபடுத்தும் விதிக்கு தடை என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுகளை பிறப்பித்தது.

இவ்வாறு, கோடை விடுமுறையின் போது, பல முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. விடுமுறை தினமான ஞாயிறு கூட, நீதிபதி கிருபாகரன், வழக்குகளை விசாரித்தார்.

ஒரு மாத கோடை விடுமுறை, நேற்றுடன் முடிந்தது; இன்று முதல், உயர் நீதிமன்றம் வழக்கம் போல் இயங்கும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை கோரிய வழக்கு, அங்கீகாரமற்ற வீட்டு மனை தொடர்பான வழக்கு என, பல முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன.

மே மாதத்தில், நான்கு நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். 49 நீதிபதிகளை கொண்டு, உயர் நீதிமன்றம் இயங்க உள்ளது. உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 75; காலியிடங்களின் எண்ணிக்கை, 26.
தபால் துறை தேர்வு முறைகேடு : சி.பி.ஐ., அதிரடி விசாரணை

பதிவு செய்த நாள்31மே2017 22:21

புதுடில்லி: தமிழ்நாடு தபால் துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு நடந்த தேர்வில், ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்றது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
தமிழ்நாடு வட்ட தபால் துறையில் காலியாக உள்ள தபால்காரர் உள்ளிட்ட இடங்களுக்கு, 2016, டிச., 11ல், 'ஆன்லைன்' மூலம் தேர்வு நடந்தது.
இதில், பொது அறிவு, கணிதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள், இந்த ஆண்டு, மார்ச்சில் வெளியிடப்பட்டன.

அப்போது, இந்தத் தேர்வை எழுதிய ஹரியானாவைச் சேர்ந்தவர்களும், ஹரியானாவில் இருந்து தேர்வு எழுதிய பஞ்சாப், மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதுவும், இதுவரை தமிழைப் படித்திராத அவர்கள், தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இது தொடர்பாக, தபால் துறை அளித்த புகாரின் அடிப்படையில், சி.பி.ஐ., விசாரணையை துவக்கியுள்ளது. அதில், ஹரியானாவில் ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டர் முகவரியில் இருந்து, 47 பேர் தேர்வு எழுதியுள்ளதும், 36 பேருக்கு, ஒரே இ - மெயில் முகவரி இருப்பதும் தெரியவந்துள்ளது.

'அரசு அதிகாரிகள் உதவியுடன், சிலர் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்களை நெருங்கி விட்டோம்' என, சி.பி.ஐ., அதிகாரிகள்
கூறியுள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில்ஜாதிகள் பட்டியலில் மாற்றம்
சென்னை: போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவில், ஜாதிகளின் பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வு களில் பங்கேற்க, அதன் இணையதளத்தில், ஒருமுறை பதிவு முறையில், ஆன்லைனில் தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.

இதில், தேர்வரின் அனைத்து விபரங்களையும் பதிவுசெய்ய வேண்டும். இதில், முந்தைய, 'குரூப் - 2' தேர்வு அறிவித்த போது, ஒருமுறை பதிவுபட்டியலில் இருந்த,நத்தமன், மலையமன்

ஆகிய ஜாதிகளின் பெயர், தற்போதைய தேர்வின் போது இல்லை என, தேர்வர்கள் தெரிவித் தனர். இது குறித்து, நமதுநாளிதழில் செய்தி வெளியானது.



இதை தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. செயலர், விஜயக்குமார் அனுப்பிய விளக்கத்தில், 'தேர்வர்கள் குறிப்பிடும் நத்தமன், மலையமன்ஆகிய இரு ,

ஜாதிகளும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், பார்கவகுலம் பட்டியலில் இணைக்கப் பட்டு உள்ளது. 'எனவே, தேர்வர்கள் பார்கவ குலத்தில் தங்கள் ஜாதிகளைப் பார்த்து விண்ணப்பிக்க லாம்' என தெரிவித்துள்ளார்.
மாநில செய்திகள்
சுவாதி கொலை வழக்கு சினிமா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் டி.ஜி.பி. அலுவலகத்தில் தந்தை மனு



சுவாதி கொலை வழக்கு சினிமா படத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் சுவாதியின் தந்தை மனு கொடுத்தார்.
ஜூன் 01, 2017, 03:45 AM

சென்னை,

கடந்த 2016-ம் ஆண்டு இதே ஜூன் மாதம் தமிழகத்தை உலுக்கிய படுகொலை சம்பவம், சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்தது. சுவாதி என்ற பெண் என்ஜினீயர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சென்னை புழல் மத்திய சிறையில் மின்சாரத்தை உடலில் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.

அத்துடன் இந்த வழக்கும் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் சுவாதி கொலை வழக்கு என்ற தலைப்பில் சினிமா படமாக இந்த வழக்கு உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜெய சுபஸ்ரீ புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம், இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் முன்னோடி காட்சிகள் (டிரெய்லர்) பரபரப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

தடை கோரி தந்தை மனு

இந்த நிலையில், இந்த படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்றும், தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து, கொலை செய்யப்பட்ட பெண் என்ஜினீயர் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நேற்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

மனு கொடுத்து விட்டு, பத்திரிகையாளர்கள் யாரையும் சந்திக்காமல் அவர் சென்று விட்டார். இந்த படம் வெளிவந்தால், எனக்கும், எனது குடும்பத்திற்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும், எனது முன் அனுமதி இல்லாமல் இந்த படம் தயாரிக்கப்படுவதாகவும் மனுவில், சந்தான கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

போலீசாரும் எதிர்ப்பு

சுவாதி கொலை வழக்கு படத்தின் முன்னோடி காட்சிகளில் உண்மைக்கு மாறான சம்பவங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த படத்தை வெளியிட போலீஸ் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுவாதி கொலை வழக்கு குற்றவாளி ராம்குமாரை போலீசார் கைது செய்தபோது, அவர் தன்னைத்தானே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் போலீசார்தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்ததாக புகார் சொல்லப்பட்டது. இந்த சர்ச்சைக்குரிய சம்பவம், இந்த சினிமா படத்தில், போலீசார் ராம்குமாரின் கழுத்தை அறுப்பது போன்ற காட்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு போலீஸ் தரப்பில் இப்போதே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டெல்லி தனிக்கோட்டில் டி.டி.வி.தினகரனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இன்று வழங்கப்படுகிறது.

ஜூன் 01, 2017, 04:45 AM

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விசாரணைக்கு பின்னர் அவர்கள் அங்குள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுடைய நீதிமன்ற காவல் வருகிற 12–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனுவை ஏற்கனவே தனிக்கோர்ட்டு நிராகரித்துவிட்டது.ஜாமீன் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு

டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான இரு தரப்பு வாதங்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவடைந்தது. அந்த மனுக்கள் மீது புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பூனம் சவுத்ரி தெரிவித்து இருந்தார்.

இதனால் தீர்ப்பை அறிந்துகொள்வதற்காக தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரியின் கோர்ட்டு அறையில் நேற்று டெல்லி போலீஸ் தரப்பிலும், தினகரன் தரப்பிலும் ஆவலுடன் கூடி இருந்தனர். பிற்பகல் 2 மணிக்கு கோர்ட்டு தொடங்கியதும், தீர்ப்பை தட்டச்சு செய்ய வேண்டிய உதவியாளர் விடுப்பில் உள்ளதால் நாளைக்கு (இன்று) தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

எனவே ஜாமீன் மனுக்கள் மீது இன்று (வியாழக்கிழமை) நீதிபதி தீர்ப்பை வழங்குகிறார். தினகரனுக்கும், மல்லிகார்ஜூனாவுக்கும் ஜாமீன் கிடைக்குமா? இன்று தெரிந்துவிடும்.
தலையங்கம்
ஆற்றல் உள்ளவர்களை கொண்டுவரும் அவசர சட்டம்



பழங்கால சீன முதுமொழி ஒன்று இன்றும் உலகம் முழுவதும் எண்ணிப்பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான கருத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஜூன் 01, 03:00 AM

பழங்கால சீன முதுமொழி ஒன்று இன்றும் உலகம் முழுவதும் எண்ணிப்பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான கருத்தை எடுத்துக்காட்டுகிறது. ‘‘ஒரு ஆண்டைப்பற்றி நீ திட்டமிட வேண்டும் என்றால், நெல் பயிரிடு, 10 ஆண்டு களைப்பற்றி திட்டமிட வேண்டும் என்றால், மரக்கன்றுகளை நடு, 100 ஆண்டுகளைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்றால் மக்களுக்கு கல்வி புகட்டு’’ என்பதுதான் அந்த முதுமொழி யாகும். அந்தவகையில், ஒரு சமுதாயத்தின் உயர்வே கல்வியில் இருக்கிறது. அதிலும் உயர்கல்விதான் தனிநபரின் வாழ்க்கையின் வாசலையும் திறந்து வைக்கிறது. சமுதாய முன்னேற்றத்தின் வழியைக்காட்டுகிறது. இதில், பல்கலைக்கழகங்களின் பணி மிகவும் இன்றியமையாதது. ஒரு பல்கலைக்கழகத்தின் உயர்வோ தாழ்வோ அதற்கு தலைமை தாங்கி நடத்தும் துணைவேந்தர்கள் கையில்தான் உள்ளது.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்பது பழமொழி. பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் இது பொருந்தும். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவேண்டும். ஆனால், சமீப காலங்களாக பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனத்திலும் ஒருசில பல்கலைக்கழக துணைவேந்தர்கள்மீதும் நிறைய ஊழல் புகார்கள் கூறப்பட்டன. ஊழல் புகாரில் ஒரு பல்கலைக்கழக துணைவேந்தருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, அப்பழுக்கு இல்லாத கல்வியாளர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுத்துவந்தது. இந்தநிலையில், பல்கலைக்கழக வேந்த ரான தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மிகவும் துணிச்சலாக தேர்வுக்குழுவால் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் பரிந்துரை செய்யப்பட்ட 3 பேர்களையும் நேர்முகத்தேர்வு வைத்து தேர்வு செய்தார். மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் இவ்வாறு நேர்முகத்தேர்வு வைத்துத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேர்வுக்குழு பரிந்துரை செய்த 3 பேர்களையும் நிராகரித்தார். அடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக பி.பி.செல்லத் துரையும், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பி.துரைசாமியையும் நியமனம் செய்தார். இந்த நியமனம் செய்த அன்றே கவர்னர், எதிர்காலத்தில் நியமிக்கப்பட இருக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் தகுதி மற்றும் தேர்வுக்குழு அமைக்கும் காலவரையறை எல்லா வற்றையும் வைத்து ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்தார். இதன்படி, ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே தேர்வுக்குழு அமைக்கப்படவேண்டும். செனட் மற்றும் சிண்டிகேட் பிரதிநிதிகள் தேர்வு 2 மாதங்களுக்குள் முடிக்கப்படவேண்டும். இந்த தேர்வுக்குழு அமைக்கப்பட்டு 4 மாதங்களுக்குள் பெயர்கள் பரிந்துரைக்கப்படவேண்டும்.

துணைவேந்தரின் பதவிகாலம் முடிவதற்கு ஒரு நாளைக்கு முன்போ அல்லது முடிந்த உடனோ புது துணைவேந்தரின் பெயரை கவர்னர் வெளியிடுவார்.
ஆக, எதிர்காலத்தில் துணைவேந்தர் பதவி காலியாகவே இருக்காது. தேர்வுக்குழுவும், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அரசு சார்பில் பிரதிநிதியாக ஓய்வு பெற்ற முதன்மை செயலாளர் பதவிக்கு குறையாத அதிகாரி ஒருவர் அல்லது புகழ்வாய்ந்த கல்வி நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக சிறப்புவாய்ந்த கல்வியாளர் ஒருவர் நியமிக்கப்படுவார். இதுபோல, யார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்பதற்கும், பல்கலைக்கழக மானியக்குழு நிர்ண யித்துள்ள தகுதிகளே தமிழகத்துக்கும் நிர்ணயிக்கப்பட இருக்கிறது. இந்த அவசர சட்டம் பிறப்பித்த உடனேயே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்வுக்குழுவுக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி லோதாவை கவர்னர் நியமித்துவிட்டார். ஆக, இனி தமிழ் நாட்டில் உள்ள துணைவேந்தர்கள் எல்லோரும் அப்பழுக் கற்ற, ஆற்றல் அதிகம் உள்ள, தொலைநோக்கு பார்வை கொண்ட, தமிழ்நாட்டில் கல்லூரிகளின் கல்வித்தரம் எல்லாம் உயர்த்தவல்ல சிறந்த கல்வியாளர்களாகத்தான் இருப்பார்கள். அதற்கு இந்த அவசர சட்டம் வழிகாட்டிவிட்டது என்பதுதான் கல்வியாளர்களின் கருத்தாகும்.
மாநில செய்திகள்
ரஜினிகாந்த் ஆலோசனை அரசியலுக்கு வருவது குறித்து கருத்து கேட்கிறார்


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து முக்கிய அரசியல் பிரமுகர்களிடமும், நடிகர்களிடமும் கருத்து கேட்டு வருகிறார்.

ஜூன் 01, 2017, 05:15 AM
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை திரட்டி, “சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன் என்றும், போருக்கு அனைவரும் தயாராக இருங்கள்” என்றும் அதிரடி அறிவிப்பு வெளியிட்டதால் தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்பாகி இருக்கிறது. ரஜினிகாந்தை சந்தித்து பேசிய அவரது நண்பர் ராஜ்பகதூர், தமிழருவி மணியன் ஆகியோரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நிச்சயம் என்று உறுதிப்படுத்தி உள்ளனர்.

அரசியலுக்கு முன்னோட்டமாக ஒன்றிய, நகர, மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரசிகர் மன்ற அமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ரஜினிகாந்த் ஆரம்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. கட்டுப்பாட்டை மீறும் ரசிகர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கும் நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன.

கருத்து கேட்பு

காலா படப்பிடிப்பு மூன்று, நான்கு மாதங்களில் முடிவடைந்து விடும் என்றும், அதன்பிறகு அரசியலுக்கு வருவது குறித்த அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்பது குறித்து தனது நலம் விரும்பிகள், அரசியல் பிரமுகர்கள், மூத்த நடிகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரிடம் நேரிலும், போனிலும் ரஜினிகாந்த் கருத்து கேட்டு ஆலோசனை நடத்தி வருகிறார்.

காலா படப்பிடிப்புக்காக மும்பை புறப்படுவதற்கு முன் தனது வீட்டில் பலரை இது தொடர்பாக அவர் சந்தித்து கருத்து கேட்டார். அப்போது சிலர் நீங்கள் கட்சி தொடங்கினால் அதில் சேர தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆந்திராவில் தனி கட்சி தொடங்கி அனுபவப்பட்ட தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோரிடமும் போனில் கருத்து கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிரஞ்சீவி-அமிதாப்பச்சன்

சிரஞ்சீவி அரசியல் ஆசையில் பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் தோல்வி அடைந்ததும் காங்கிரசில் கட்சியை இணைத்து மத்திய மந்திரி பதவியை பெற்றார். தனி கட்சி தொடங்குவதால் என்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று அவரிடம் ரஜினிகாந்த் விவாதித்ததாக தெரிகிறது.

நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவரிடம் தனி கட்சி ஆரம்பித்தால் மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கும்? என்று கேட்டு அறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் தற்போது காலா படப்பிடிப்புக்காக மும்பையில் முகாமிட்டு இருப்பதால், அமிதாப்பச்சன் மற்றும் அங்குள்ள அரசியல் பிரமுகர்களிடமும் கட்சி ஆரம்பிப்பது குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி

இதற்கிடையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் அவரை வளைத்து போட்டு கூட்டணி அமைப்பதற்கான வியூகங்களை தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கி உள்ளன. பா.ஜ.க, ரஜினி கூட்டணிக்கு ஆர்வமாக இருக்கிறது. தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்று உள்ளன. விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

குடும்ப சூழ்நிலைக்கேற்ப வேறு வேலை தேடுவது தவறில்லை : உயர்நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள்31மே2017 23:46

மதுரை: 'குடும்ப சூழ்நிலையை கருதி, தற்போதுள்ள வேலையைவிட, வேறு நல்ல வேலையைத் தேட முயற்சிப்பதில் குறை காண முடியாது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் தாய்க்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க பரிசீலிக்க வேண்டும்,' என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்துார் அருகே ராணி மகாராஜபுரம் மகேஸ்வரி. பிளஸ் 2 முடித்துள்ளார். கணவர் இறந்துவிட்டார். மனவளர்ச்சி குன்றிய 2 குழந்தைகள் உள்ளனர். ராணி மகாராஜபுரம் இந்து துவக்கப் பள்ளியில் உதவி சமையலர் பணியில் மகேஸ்வரி சேர்ந்தார். சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்திற்கு அறிவிப்பு வெளியானது. மகேஸ்வரி விண்ணப்பித்தார். வலவிளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி சத்துணவு அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். உதவி சமையலர் பணியை ராஜினாமா செய்வதாக, துாத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினார்.
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முன், உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. பணி விதிகளை மீறியுள்ளார் எனக்கூறி, மகேஸ்வரியின் ராஜினாமாவை துாத்துக்குடி கலெக்டர் நிராகரித்தார்.

மகேஸ்வரி,'கலெக்டரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என்னை உதவி சமையலர் பணியிலிருந்து விடுவித்து, சத்துணவு அமைப்பாளர் பணியில் சேர அனுமதிக்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.
அரசுத் தரப்பில்,'மனுதாரர் ஏற்கனவே வேறு பணியில் உள்ளார். சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முன், அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. உதவி சமையலர் பணி ராஜினாமா கடிதத்தை பின்தேதியிட்டு மனுதாரர் அனுப்பியுள்ளார். அது எங்களுக்கு தாமதமாக கிடைத்தது. சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

நீதிபதி உத்தரவு: மனுதாரர் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முன், அதிகாரிகளிடம் அனுமதிபெறவில்லை; விதிகளை மீறியுள்ளார் என்பது சரியே. ஆனால், அறியாமையால் செய்ததை கடுமையான செயலாக பார்க்கக்கூடாது. இதுபோன்ற வழக்குகளில் சந்தர்ப்ப சூழ்நிலையை, கருத்தில் கொள்ள வேண்டும். நடுநிலையாகத்தான் நீதி வழங்க முடியும்.
மனுதாரரின் 2 குழந்தைகள் மனவளர்ச்சி குன்றியுள்ளனர். குடும்ப சூழ்நிலையை கருதி, தற்போதுள்ள வேலையைவிட, வேறு நல்ல வேலையைத் தேட மனுதாரர் முயற்சித்துள்ளார். இதில் குறை காண முடியாது. இதனால் யாருக்கும், எந்த பாதிப்பும் இல்லை.
கலெக்டரின் கடிதத்தை பார்க்கையில், மனுதாரர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளது தெரிகிறது. அறியாமையால் செய்த தவறை, முக்கியக் குற்றமாகக் கருத முடியாது.

மனுதாரர் தகுதியானவராக இருந்தால், சட்டரீதியான தடை ஏதுவும் இல்லாதபட்சத்தில் மனுவை பரிசீலித்து, சத்துணவு அமைப்பாளர் பணி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, தற்போதைய உதவி சமையலர் பணிக்கு எவ்வித இடையூறும்
அதிகாரிகள் ஏற்படுத்தக்கூடாது என்றார்.
ஆள் இல்லாமல் ஓடிய ரயில் இன்ஜினால் பரபரப்பு

பதிவு செய்த நாள்31மே2017 22:54




திருச்சி: பழுதான ரயில் இன்ஜினை இழுத்து சென்ற, மாற்று இன்ஜினில் ஆள் இல்லாமல், 10 கி.மீ.,க்கு மேல் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சியிலிருந்து காலை, 6:10 மணிக்கு, கரூர் செல்லும் பயணிகள் ரயிலை இழுத்துச் செல்ல வந்த, இன்ஜின் பழுதடைந்தது. இதையடுத்து, மாற்று இன்ஜின் மூலம் அது, மாற்றுப்பாதைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மாற்று இன்ஜினில் பழுது ஏற்பட்டது. அதன் டிரைவர், இறங்கி சரி பார்த்துக் கொண்டிருந்த போது, அந்த இன்ஜின் எதிர்பாராதவிதமாக நகர துவங்கியது. இதனால், இரு இன்ஜின்களும் ஆள் இல்லாமல் ஓடத் துவங்கின. இதைப்பார்த்த டிரைவர், அவற்றை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டு, பிளாட்பாரத்தில் நின்ற அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கியில் தகவல் கொடுத்துள்ளார். அதற்குள் இன்ஜின் வேகமெடுத்து, 30 கிலோமீட்டர் வேகத்தில், கரூர் மார்க்கத்தில் ஓடத்துவங்கியது. இதையடுத்து பாலக்கரை, கோட்டை ரயில் நிலையங்களில் வழித்தடங்கள் நேராக்கப்பட்டு, இன்ஜின்கள் விபத்தில்லாமல் செல்லவும், எதிரே எந்த ரயிலும் வராமலும் பார்த்துக் கொள்ளப்பட்டது. பின், கோட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கட்டைகளை வைத்து, இன்ஜின்களை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இன்ஜின்கள் நிற்கவில்லை. ரயில்வே தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஒருவர், கோட்டை ரயில் நிலையத்தில் வேகமாக ஓடிச் சென்று, முதல் இன்ஜினில் ஏறி விட்டார். 

சிறிது நேரம் போராடி, குடமுருட்டி பாலம் தாண்டிய பின், ரயில் இன்ஜின் மேடான பகுதியில் மெதுவாக சென்றபோது, சாதுர்யமாக தடுத்து நிறுத்தி உள்ளார். இரு ரயில் இன்ஜின்கள் ஆள் இல்லாமல், 10 கி.மீ.,க்கு மேல் ஓடியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், எதிரே எந்த ரயிலும் வராமல் தடுக்கப்பட்டதால், பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது.

இன்ஜினியரிங் படிப்பதில், தமிழக மாணவர் களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.

இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற் பதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று முடிந்தது. அதில், இரண்டு லட்சம் இடங்களுக்கு, 1.50 லட்சம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட, 30 ஆயிரம் பேர் குறை வாக பதிவு செய்துள்ளனர்; அதே நேரத்தில், கலை, அறிவியல் படிப்புகளில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க் கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, மே, 1 முதல், 'ஆன் லைன்' விண்ணப்ப பதிவு துவங்கி, நேற்று முடிந்தது. இதில், 1.50 லட்சம் பேர், கவுன்சிலிங் கில் பங்கேற்க முன்வந்துள்ளனர். கடந்த ஆண்டு, 1.84 லட்சம் பேர் பதிவு செய்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 30 ஆயிரம்

பேர் குறைவாக விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம், மாணவர்களிடம் இன்ஜி., படிக்கும் ஆர்வம் குறைந்திருப்பது தெரிய வந்துள் ளது. இன்ஜி., முடிக்கும் மாணவர்களுக்கு, 'கேம்பஸ் இன்டர்வியூ'வில் வேலை வாய்ப்பு குறைந்துள் ளது தான் இதற்கு காரணம். ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆட்குறைப்பில் இறங்கி உள்ளன.

அப்படியே வேலை கிடைத்தாலும், பி.பி.ஓ., என்ற வெளிநாட்டு நிறுவனங்களுக் கான, 'அவுட் சோர் சிங்' பணியாகத் தான் இருக்கிறது. அவற்றிலும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே, பல ஆண்டுகளுக்கு பணியில் நீடிக்கும் வாய்ப்பும், சம்பள உயர்வும் கிடைக்கிறது.

மற்றவர்களுக்கு, பணியில் சேர்ந்து, சில ஆண்டுகள் ஆகிவிட்டால், சம்பளம் குறைக்கப் படுவதுடன்,'லே ஆப்' முறையில் வெளி




யேற் றப்படுகின்றனர். அதனால், இன்ஜி., படிப் பில்ஆர்வம் குறைந்து,வணிகம், பொருளியல் மற்றும் ஆசிரியர் பணிக்கான கலை, அறிவி யல் படிப்புகளில், மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.

தமிழக பாடத்திட்டத்திலும், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்திலும், வணிகவியல் பிரிவில்,அதிக மாணவர்கள் படித்ததும், இன்ஜி., மாணவர் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணம் என,கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்
.
நிர்வாக ஒதுக்கீட்டில் ஆர்வம்

கடந்த ஆண்டு கவுன்சிலிங்கில், 97 ஆயிரம் இன்ஜி., இடங்கள், காலியாக இருந்தன. இந்த ஆண்டு, காலியிடங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை எட்டும் என தெரிகிறது.

கவுன்சிலிங் கில், தாங்கள் விரும்பும் கல்லுாரி யில், விரும் பும் பாடப்பிரிவு கிடைக்காது என்பதால், பல மாணவர்கள், நிர்வாக ஒதுக்கீட் டில், நேரடியாக, 'அட்மிஷன்' பெற்றுள்ளனர். பல இன்ஜி., கல்லுாரிகள், நன்கொடையை குறைத்துக் கொண்டதும், இதற்கு முக்கிய காரணம்.

- நமது நிருபர் -

Wednesday, May 31, 2017

விளம்பரத்துக்கு பலகோடி- ஆனால் அந்த விஷயத்துல கோட்டை விட்டதால் தீயில் சிக்கி சிதைந்த சென்னை சில்க்ஸ்?

சென்னை : லேட்டஸ்ட் சினிமா பிரபலங்களை வைத்து லட்சக்கணக்கில் விளம்பரத்திற்காக செலவு செய்யும் தி சென்னை சில்க்ஸ் தீ விபத்து தடுக்கும் பாதுகாப்பு அம்சத்தில் கோட்டை விட்டதே விபத்திற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

மனசுக்கு புடிச்ச ஷாப்பிங்னா அது சென்னை சில்க்ஸ் தான் என்று லேட்டஸ்ட் சினிமா நடிகை கீர்த்தி சுரேஷை வைத்து லட்சக்கணக்கில் விளம்பரம் செய்திருந்தது. கீர்த்தி சுரேஷ் மட்டுமல்ல ஸ்ரீவித்யா, காஜல் அகர்வால் என்று பணத்தை கொட்டிக் கொடுத்து விளம்பரம் செய்வதை மற்ற ஜவுளிக்கடைகளுக்கு போட்டியாக தி சென்னை சில்க்ஸ்ம் போட்டி போட்டு செய்யும்.

ஆனால் வாடிக்கையாளர்களை ஈர்க்க இத்தனை பணச்செலவில் விளம்பரம் செய்த நிறுவனம், தனது கட்டிடத்திற்கான அடிப்படை பாதுகாப்பு அம்சங்களில் கோட்டை விட்டுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. மின்கசிவு காரணமாக காலை 4.30 மணியளவில் சென்னை தி.நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

ஒரு தளத்திற்குள் இன்னொரு தளம் லிப்ட், எஸ்கலேட்டர் வசதிகள் கொண்ட தி சென்னை சில்க்ஸ் கட்டிடம் கனம் குறைவான அதாவது ஹாலோ பிரிக்ஸ் என்று சொல்லப்படும் கற்களைவிட வெயிட் குறைவான மெலிதான கல்லில் கட்டப்பட்டுள்ளதாம். மேலும் ஒவ்வொரு தளத்திலும் செய்யப்பட்டுள்ள ஃபால்ஸ் சீலிங்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களால் செய்யப்பட்டுள்ளதால் தீ ஜூவாலை கொழுந்து விட்டு எரிகிறதாம்.

தி.நகரில் உள்ள கடைகளின் விதிமீறல்கள் ஒவ்வொரு தீ விபத்தின் போது ஓங்கி ஒலிப்பது ஒன்றும் புதிதல்ல. அதே போன்று இந்த சென்னை சில்க்ஸ் கட்டிடமும் இரண்டு கட்டிடங்களுக்கு மத்தியில் விடப்படும் இடைவெளி குறித்த விதிகளை பின்பற்றவேயில்லையாம். மேலும் விபத்தின் போது தீயணைப்பு வீரர்கள் சென்று வர முன், பின்புற வாசல்களில் செய்யும் வசதிகளும் இல்லாததோடு விதிமுறைகள் என்றால் என்ன என்று கேட்கும் வகையில் அந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாம்.

இதெல்லாம் கூட பரவாயில்லங்க, ஆனால் ஒரு கட்டிடம் தீ பிடிச்சா உடனே அணைந்து போகிற மாதிரி தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் சிறு சிறு பைப்புகள் ஒவ்வொரு தளத்திலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் பொருத்தப்பட்டிருக்கும். அதெல்லாம் கடையில் உள்ளதாம் ஆனால் அந்த பைப்புல தண்ணி தான் இல்லையாம், இதுவும் தீ விபத்து மேலும் உக்கிரமடையக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கடைக்காரங்க செஞ்சதை பார்த்தா தில் படத்துல விவேக் சொன்ன காமெடி தான் நினைவுக்கு வருது. செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை ஜாலி ஷாப்பிங்னு சொல்றதால தான உங்க கடைக்கு வர்றோம். ஆனா நீங்களே இப்படி சொதப்பினா எப்படிங்க. தீ விபத்து அதிகாலையில நடந்ததால வாடிக்கையாளர்கள் தப்பிச்சாங்க, இல்லாட்டி எத்தனை உயிர் பலிபோயிருக்குமோ. இனிமேலாவது வணிக நிறுவனங்கள் தீ தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் அலட்சியம் இல்லாமல் இருக்குமா என்று தான் தெரியவில்லை.

தீயில் எரியும் சென்னை சில்க்ஸ்.. கொளுத்தும் வெயில்... கரண்ட் இல்லாமல் தவிக்கும் தி.நகர் மக்கள்!

சென்னை: தியாகராயர் நகரில் சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் புழுங்கும் அனலில் ஃபேன் கூட போட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸின் குமரன் தங்க மாளிகைக் கடையில் இன்று அதிகாலை 4 மணிக்கு தீப்பற்றியது. 7 அடுக்குகளை கொண்ட அந்த மாடியில் தரைத்தளத்தில் பற்றிய தீ மெல்ல மெல்ல மேல் தளங்களுக்கும் பற்றியது.

10 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரியும் சென்னை சில்க்ஸ் கட்டிடம் அபாயகரத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. நவீன கருவிகள் மூலம் புகை வெளியே கொண்டுவரப்பட்டு வருகிறது.

தீ கட்டுப்படுத்த முடியாத அளவில் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. கட்டட பகுதியில் உள்ள மக்கள் 100 மீட்டருக்கு அப்பால் வெளியேற்றப்படுகின்றனர்.

ஏற்கனவே இப்பகுதி அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தீ எரிந்து வரும் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதால் சுவரை இடித்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தியாகராயர் நகர் உஸ்மான் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கட்டடம் உள்ள பகுதியில் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்துக்காரணமாக காலை முதலே அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் ஏசி, ஃபேன் இல்லாமல் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

அருகில் உள்ள மற்ற வணிக நிறுவனங்களும் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டரை வைத்து ஓட்டி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி நடைபாதி வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Secretariat

தலைமைச் செயலகத்தில் ஒரே நாளில் 45 பேர் ஓய்வு... பிரிவுபச்சார விழாக்களால் பரபரப்பு!

Oneindia

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று ஒரே நாளில் 45 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

தமிழக தலைமைச் செயலகத்தில் 34 துறைகள் உள்ளன. இங்கு செயலர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சட்டசபை பேரவை செயலர் ஜலாலுதீன் இன்று ஓய்வு பெற்றனர். இவருடன் அதே துறையை சேர்ந்த 9 பேரும், நிதித்துறையில் 10 பேரும், பொதுத் துறையில் 8 பேரும், சட்டத்துறையில் இருவரும், சிறப்பு திட்ட செயலாக்கம், கால்நடைத் துறை இந்நிலையில் தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் முதல் செயலர் வரை 21 துறைகளைச் சேர்ந்த 45 பேர் இன்று ஓய்வு பெற்றனர்.

சட்டசபை கூடுதல் செயலர், துணைச் செயலர் நிலையில் உள்ளவர்களும் ஓய்வு பெறுகின்றனர். ஜலாலுதீன் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, கூடுதல் செயலராக இருந்த பூபதி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவுள்ளது. மேலும் புதியவர்களும் தேர்வு செய்யப்படுவர் என தெரிகிறது.

இவர்கள் ஓய்வு பெறுவதால் பிரிவு உபசார விழா என தலைமைச் செயலகமே பரபரப்பாக உள்ளது.

source: oneindia.com

Dailyhunt

Chennai Silks

சென்னை சில்க்ஸ் தீ விபத்தை வேடிக்கை பார்க்க ஒரே கூட்டம்..வஜ்ரா மூலம் துரத்தும் போலீஸ்!

Oneindia

சென்னை: சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர். போலீசார் எச்சரித்தும் மக்கள் செல்லாததால் வஜ்ரா வாகம் மூலம் கூட்டதை கலைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் குழுமத்துக்கு சொந்தமான குமரன் தங்க மாளிகையில் இன்று அதிகடிர பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 10 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

தீயை அணைக்கும பணியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தவித்து வருகின்றனர். இந்த விபத்துக் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காணப்படுகிறது.

ஸ்கை லிப்ட் மூலம் தீயை கட்டுப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. கடையின் சுவர்கள் இடிக்கப்பட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

விபத்துக் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் இந்த தீ விபத்தை நேரில் காண ஏராளமான மக்கள் திருவிழா பார்ப்பது போல் குவிந்து வருகின்றனர். காவல்துறையினர் பல முறை எச்சரித்தும் மக்கள் தொடர்ந்து அத்துமீறிகின்றனர்.

இதையடுத்து வஜ்ரா வாகனம் மூலம் போலீசார் கூட்டத்தை கலைத்து வருகின்றனர். சூழ்நிலையை புரிந்துகொண்டு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

புயல், மழை, சாலை விபத்துகள், சாலையில் ஏற்படும் பள்ளம் என எதையும் விட்டு வைக்காமல் செல்பி எடுக்கும் நம் மக்கள் இப்படி ஒரு தீ விபத்தை மட்டும் விட்டுவார்களா என்ன? விபத்தை ரசித்து வேடிக்கை பார்த்து செல்பி எடுத்து தங்களின் சமூக வலைதள பக்கங்களில் விடாமல் இருக்க முடியுமா அவர்களால்?

Chennai Silks

சென்னை சில்க்ஸ் விபத்து சொல்லும் பாடம்.. விதிமீறல் கட்டடங்களை இடிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: சென்னை சில்க்ஸ் விபத்து சொல்லும் பாடம் என்னவென்றால், அப்பகுதியில் உள்ள விதிமீறல் கட்டடங்களை இடிக்க வேண்டும் என்பதுதான் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீயை 10 மணி நேரத்திற்கு மேலாகியும் கட்டுப்படுத்த முடியவில்லை. தீயால் பாதிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள கட்டடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு ஆட்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

ஆனால், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புத் துறையினர் உயிரைக் கொடுத்து போராட வேண்டியிருந்தது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் அருகில் கூட தீயணைப்பு வாகனங்களால் செல்ல முடியவில்லை. கட்டடத்தின் தரைத்தளத்தில் தான் தீ விபத்து ஏற்பட்டு மற்ற மாடிகளுக்கும் பரவியது. இத்தகைய சூழலில் தரைத்தளத்தின் அருகில் தீயணைப்பு வாகனங்களால் செல்ல முடிந்திருந்தால் ஒரு மணி நேரத்திற்குள் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். அதன்மூலம் கட்டடம் மற்றும் அதிலிருந்த பொருட்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பையும் குறைத்திருக்க முடியும்.

ஆனால், ஒருபுறம் மேம்பாலம், மறுபுறம் அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வழக்கமாக பெரிய அளவிலான கட்டிடங்கள் கட்டப்படும் போது அதன் மொத்த நிலப்பரப்பில் 10 விழுக்காடு திறந்தவெளிப் பரப்பாக ஒதுக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, பல அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்படும் போது சாலையிலிருந்து குறைந்தபட்சம் 6 மீட்டர் தொலைவுக்கு அப்பால் தான் கட்டடம் கட்டப்பட வேண்டும். அத்துடன், பக்கவாட்டில் தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியாக குறைந்தபட்சம் 20 அடி அகலத்திற்கு பாதைக்காக நிலம் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இந்த விதிகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. இவ்வளவு விதிமீறல்களுக்குப் பிறகும் சென்னை சில்க்ஸ் கட்டடத்திற்கு அனைத்துத் துறைகளும் அனுமதி அளித்ததன் பின்னணியில் பெரும் ஊழல் நடந்துள்ளது.

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் 4 தளங்கள் மட்டுமே கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், விதிகளை மீறி 8 தளங்கள் கட்டப்பட்டிருந்தன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2007-ஆம் ஆண்டு விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டன. ஆனாலும், அடுத்த சில மாதங்களில் இடிக்கப்பட்ட தளங்கள் மீண்டும் கட்டப்பட்டன. இவ்வாறு விதிமீறல் தொடர்ந்ததால் தான் விபத்துக்களும், சேதங்கள் தடுக்க முடியாதவையாகிவிட்டன.

கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை தியாகராய நகர் அரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் ஏற்பட்ட பயங்கர தீயையும் அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதற்குக் காரணமும் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டது தான். சென்னையில் ஏராளமான கட்டடங்கள் இப்படித் தான் எந்த விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பட்டிருக்கின்றன. தியாகராயர்நகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்களில் வணிக நேரத்தின் போது ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படும். அந்த அளவுக்கு சென்னை மாநகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள், குறிப்பாக நெரிசலான பகுதிகளில் உள்ள வணிகக் கட்டடங்கள் பாதுகாப்பற்றவையாக உள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் சென்னை வாழத்தகுதியற்ற நகரம் என்று கடந்த 2006-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னையிலுள்ள விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது என்பது ஊழலுக்கு வழிவகுக்கும். மாறாக, அவற்றை இடித்து விட்டு விதிகளுக்குட்பட்டு கட்டுவது தான் சரியானதாக இருக்கும். அப்போது இதுபோன்ற தீ விபத்துக்கள் ஏற்படும் போது சேதத்தையும், உயிரிழப்புகளையும் தடுக்க முடியும். எனவே, சென்னை சில்க்ஸ் தீ விபத்தை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் அனைத்தையும் இடித்துவிட்டு கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Dailyhunt

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...