Sunday, July 9, 2017


பெருமாளே... மனசு வலிக்குது! 



பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகம் செய்வதால் 150 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் சொல்வது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.

பிசினஸ் செய்பவர்கள்தான் நஷ்டம் என்னும் வார்த்தையை உபயோகிப்பார்கள்.

நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் காணிக்கையாய் வரும் செல்வச் செழிப்பான தெய்வீக திருத்தலம் திருப்பதி. தரிசனக் கட்டணம் 500, 1000 என்றாலும் பக்தர்கள் டிக்கெட் எடுக்க அலைமோதுகிறார்கள்.

பேங்குகளில் டெபாசிட் செய்யப் பட்டுள்ள கோயில் பணத்திற்கு வட்டி கோடிக் கணக்கில் வருகிறது. தலைமுடி விற்பனயில் மட்டும் வருடந்தோறும் 200 கோடி ரூபாய் கிடைப்பதாக செய்தி.

இப்படி எல்லா வகையிலும் கோயிலுக்கு வருமானம் வரும் போது நஷ்டம் என்று சொல்லலாமா?

ஏதாவது பிசினஸில் பணத்தை முதலீடு செய்பவர்கள்தான் லாப நஷ்ட கணக்கு

பார்ப்பார்கள். தேவஸ்தான நிர்வாகிகள் யாராவது தங்களுடைய சொந்தப் பணத்தை கோயிலுக்காக முதலீடு செய்துள்ளார்களா?

அறிய ஆவல்.

திருப்பதி தேவஸ்தானம் 'நஷ்டம்' என்னும் வார்த்தையை பயன்படுத்தியது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

- ராஜேஷ்குமார்

எழுத்தாளர்

source: oneindia.com
 
Dailyhunt

திருப்பதியில், வார இறுதி நாட்களில் மலை பாதை தரிசனம் இனி இல்லை!


திருமலை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திவ்ய தரிசனம் எனப்படும் மலைப்பாதை பக்தர்களுக்கான தரிசனம் வார இறுதிகளில் ரத்து செய்யப்படும் திட்டத்தை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்த பெற்ற கோயிலாகும். இங்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

அதிக வருவாயைத் தரும் பணக்கார கடவுளாக கருதப்படும் வெங்கடாஜலபதி, ஏழைகளின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை மக்களிடையே காணப்படுகிறது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பொதுவாக அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினம் என்பதால் வெள்ளிக்கிழமை மாலை முதல் திருப்பதியில் ஞாயிற்றுக்கிழமை வரை கூட்டம் அதிகமாகவே காணப்படும். இதிலும் வார இறுதி நாள்களுக்கு முன்போ, பின்போ அதாவது வெள்ளி மற்றும் திங்கள் ஆகிய நாள்களில் விடுமுறை வந்தால் கேட்கவே வேண்டாம். கூட்டம் அலைமோதும்.

இதேபோல் கோடை விடுமுறையின்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வைகுண்டம் காம்ப்ளக்ஸ்களில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வெளியே 1 கி.மீ. தூரத்துக்கு கூட்டம் அலைமோதும். இதனால் பக்தர்களின் தரிசனம் நேரமும் அதிகரிக்கும். தற்போது விஐபி தரிசனம், ரூ.50 கட்டண தரிசனம் (தேவஸ்தான மையங்களில் மட்டுமே கிடைக்கும்), ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் ஆகிய வகைகளில் ஏழுமலையானை மக்கள் தரிசித்து வருகின்றனர்.


திவ்ய தரிசனம் என்பது மலை பாதை வழியாக நடந்தே சென்று சுவாமியை தரிசிப்பதாகும். இதில் இரு வழிகள் உள்ளன. ஒன்று அலிபிரி வழியாக திருமலை சென்றடைவது, மற்றொன்று ஸ்ரீ வாரி மெட்டு வழியாக செல்வதாகும். இதில் அலிபிரி என்பது 3550 படிக்கட்டுகளை கொண்டது. இங்கிருந்து மேலே செல்ல 11 கி.மீ. தூரம் ஆகும். மற்றொன்று, திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து 19 கீ.மீ. தூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாரி மெட்டு. 3 கி.மீ. தூரம் கொண்ட ஸ்ரீ வாரி மெட்டில் வழியாக திருமலை செல்ல 2384 படிக்கட்டுகள் மட்டுமே உள்ளன.
இந்த இரு வழியாகவும் நடந்து செல்லும் பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கில் பிரத்யேக தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இதன் மூலம் திருமலையில் கூட்டத்துக்கு தகுந்தபடி மற்றவர் தரிசன முறைகளைக் காட்டிலும் இதில் விரைந்து சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம். இதனால் பெரும்பாலானோர் இந்த வழியை தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் ஸ்ரீவாரி மெட்டு குறைந்த தூரம் கொண்டதால் அதிகபட்சம் திருமலையை அடைய ஒரு மணிநேரம் மட்டுமே ஆகும் என்பதால் இந்த பாதையில் மக்கள் பயணம் செய்கின்றனர். மேலும் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்ட ஏழுமலையான் இப்பாதை வழியாக திருமலையை சென்றடைந்தார் என்பது ஐதீகம்.


வார இறுதி நாள்களில் பெரும்பாலானோர் திவ்ய தரிசனத்தை தேர்ந்தெடுப்பதால் மற்ற தரிசன முறைகளின் நேரம் அதிகரிக்கிறது. மேலும் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இதனால் சோதனை ஓட்டமாக ஜூலை 7-ஆம் தேதி முதல் வார இறுதி நாள்களில் திவ்ய தரிசன நேரத்தை ரத்து செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.

அதன்படி நேற்று நள்ளிரவு முதல் இனி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் மலை பாதை தரிசனத்தை ரத்து செய்தது. எனினும் மற்ற நாள்களில் இந்த வழியாக தரிசனம் செய்வதற்கு அனுமதி உண்டு. இதன் மூலம் ரூ.300 தரிசனம், குறிப்பாக சர்வ தரிசனம் என சொல்லப்படும் இலவச தரிசனத்தில் வருவோர் விரைந்து சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும்
 என்று நம்பப்படுகிறது.


ஜூலை 14 அன்று வெளியாகும் நான்கு படங்கள்!



விக்ரம் வேதா, பண்டிகை, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், கூட்டத்தில் ஒருத்தன்...

இந்த நான்கு படங்களும் அடுத்த வாரம் ஜூலை 14 அன்று வெளிவரவுள்ளது.

விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து நடித்துள்ள படம் விக்ரம் வேதா. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்தப் படம் ஜூலை 7-ம் தேதி வெளிவருவதாக இருந்தது. பிறகு அதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் தணிக்கையில் மறு ஆய்வுக்கு விண்ணப்பித்துள்ளது. யூ/ஏ கிடைக்கும் பட்சத்தில் இந்தப் படமும் ஜூலை 14 அன்று நிச்சயம் வெளிவரவுள்ளது.

விக்ரம் வேதா படத்தை சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வரலட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இசை - சாம் சி.எஸ். ஆக்ஷன் த்ரில்லர் வகையில் இப்படம் அமைந்துள்ளது.

ஒரே நாளில் நான்கு படங்களும் வெளிவருவதால் ஒவ்வொரு படமும் மற்ற படத்தால் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. அதிலும் விக்ரம் வேதா படம் வெளிவருகிற பட்சத்தில் மற்ற 3 சிறிய படங்களும் பாதிக்கப்படும் என்றறியப்படுகிறது. இதனால் கடைசி சமயத்தில் ஒன்றிரண்டு படங்களி வெளியீடு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
ஆங்கிலம் தெரியாது ஆனாலும்... போயிங் 777 விமானம் இயக்கிய முதல் இளம் பெண் கமாண்டர் 
 


கேப்டன் அனி திவ்யா (30 வயது), இவர் பதான்கோட்டில் பிறந்தாலும் தன் குழந்தைப் பருவம் முதலே ஆந்திரபிரதேச மாநிலத்தின் விஜயவாடாவில் வசித்து வருகிறார். இவரது தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார்.

இந்நிலையில், போயிங் 777 ரக விமானத்தை இயக்கிய முதல் இளம் கமாண்டர் என்ற சாதனையைப் படைத்தார் அனி திவ்யா.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் எனது பெற்றோர், ஆசிரியருக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பல தடைகளைக் கடந்து, ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து கடின முயற்சியின் மூலமாக இந்த இடத்தை தற்போது அடைந்துள்ளேன்.

சிறு வயது முதலே பொருளாதார சிக்கல், மொழிப் பிரச்னை, கலச்சார வேற்றுமை ஆகியவற்றை வெற்றியுடன் கடந்து வந்ததற்கு எனது பெற்றோரும், நண்பர்களும் பெரிதும் உதவினர்.

நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால், பைலட் பயிற்சி பெற போதுமான அளவு பண வசதி இல்லை. இருப்பினும், எனது பெற்றோர் என் மீது நம்பிக்கை வைத்து பல சங்கடங்களுக்கு இடையில் பைலட் பயிற்சி பெற வைத்தனர். அவர்கள் இதற்காக செலவு செய்த பணத்தை அவ்வளவு எளிதில் என்னால் சம்பாதித்து விட முடியாது.

இதற்கிடையில் பலர் என்னை கேலி செய்தனர். அதிலும் குறிப்பாக எனக்கு ஆங்கிலம் தெரியாது. ஏனென்றால், விஜயவாடாவில் யாரும் ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது. ஆகவே எனக்கும் முழுமையாக தெரியாது.

நான் சிறு வயது முதலே, தெலுங்கு மொழியில் தான் எழுதி, படித்து, பேசிக்கொண்டிருந்தேன். மற்ற இடங்களிலும் தெலுங்கு மொழியே பிரதானமாக இருந்தது.

ஆனால், இந்த மொழிப் பிரச்னையில் இருந்து வெளிவர எனது பயிற்சி மையம் பெரிதும் உதவியது. சரியாக ஆங்கிலத்தை உச்சரிக்கவும், புரிந்துகொள்ளவும் சிறிது சிரமப்பட்டேன். பிறகு அவற்றை சரி செய்து கொண்டேன். இருந்தாலும், அதை நினைத்து நான் வருந்திய நாட்கள் அதிகம்.

எனது பைலட் பயிற்சி மையம் மிகவும் தரமானது. அங்குதான் விமானியாக அனைத்து திறமைகளையும் வளர்த்துக்கொண்டேன். இப்போது பைலட்டாக பணியாற்றுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் வாழ்நாள் கனவு நிறைவேறியது என்றார்.

Dailyhunt

இந்திய சினிமாவுக்கு உலக முகம் கொடுத்தவர் கே. பாலச்சந்தர் கவிஞர் வைரமுத்து புகழாரம்

திருவாரூர்: இந்திய சினிமாவுக்கு ஓர் உலக முகம் கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் என்றார் கவிஞர் வைரமுத்து.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடியில் இயக்குநர் சிகரம் மறைந்த கே. பாலச்சந்தருக்கு மார்பளவு வெண்கலச் சிலை வைக்க கவிஞர் வைரமுத்து ஏற்பாடு செய்துள்ளார். சிலைத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை.9") மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை கவிஞர் வைரமுத்து சிலை வைக்கப்பட்ட இடம் மற்றும் விழா முன்னேற்பாடுகள் குறித்து பார்வையிட்ட போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 

இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் பிறந்த ஊரில், பிறந்த தெருவில், அவர் வீட்டு வாசலில் இப்போது நான் நிற்கிறேன். பிறந்த வீடு தற்போது பள்ளியாக செயல்படுகிறது. அவரது வீட்டு வளாகத்தில் அவரது சிலை நிறுவப்படுகிறது. இந்திய சினிமாவுக்கு ஓர் உலக முகம் கொடுத்தவர். தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு தனி நிறம் கொடுத்தவர்.

பாலச்சந்தருக்கு முன்னும், பாலச்சந்தருக்கு பின்னும் ஒரு திரை வரலாறு எழுதப்படலாம். அப்படிபட்ட மாமேதையை பெற்றுக்கொடுத்த மண் இந்த மண்.
அவர் பிறந்த வீட்டில், பிறந்த மண்ணில் இந்த விழா கொண்டாடப்படுவதான் நாங்கள் பெருமையாக கருதுகிறோம். மார்பளவு வெண்கலச் சிலையை இயக்குநர் சிகரத்தின் துணைவியார் ராஜம் பாலச்சந்தர் திறந்து வைக்கிறார்.

கலைஞானி பத்மபூசன் விருது பெற்ற நடிகர் கமலஹாசன், இயக்குநர்கள் மணிரத்தினம், வசந்த் எஸ். சாய், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், நானும் புகழுரை நிகழ்த்துகிறோம். விழாவில் பெருமைக்குரியவர்கள் சிறப்பு பெறுகிறார்கள்.
இந்த விழாவை நான் எப்படி கருதுகிறேன் என்றால் அறிவு கொண்டாடப்பட வேண்டும், கலை உலகத்தின் முன்னோடிகள் மதிக்கப்பட வேண்டும். இதனால் இளைய தலைமுறை புதிய எழுச்சிப் பெற வேண்டும்.

திரை உலகில் தடம் பதித்த ஒருவர் எதிர் காலத்தில் கொண்டாடப்படுவார்கள் என்ற நம்பிக்கை இளைய தலைமுறையினருக்கு வரவேண்டும். பாலச்சந்தர் படத்தைப் பொருத்த வரையில் நான் அவரது படங்களை பாடங்கள் என்று கருதுகிறேன்.

இயக்குநர்கள், கதாசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், நடன இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், பாடலாசி ரியர்கள், இசை அமைப்பாளர்கள் அத்தனை பேரும் பாலச்சந்தரின் படத்தைப் பார்த்தால் கற்றுக்கொள்ளலாம். அவர் கற்றுக் கொடுக்கும் ஒரு ஆசான். அந்த மாமனிதரின் திருவிழா நடைபெறுகிறது.

தமிழகத்தின் கலை ரசிக பெருமக்களையும், ஒருங்கிணை ந்த தஞ்சை மாவட்ட தமிழ் அன்பர்களும் வருக வருக என வரவேற்கிறேன்.

உள்ளூர் மக்கள் அனைவரும் உங்கள் வீட்டு விழாவுக்கு எல்லோரும் வரவேண்டும். ஊடகத்துறையினர் இந்த விழாவை உலக விழாவாக மாற்றிக்கொடுக்க வேண்டும். எங்கள் பாலச்சந்தர் என்ற தமிழ்நாட்டுக் கலைஞரை உலக கலைஞராக உயர்த்திப் பிடியுங்கள் என்றார் வைரமுத்து.
பிரபல நாளிதழ், வார இதழ்களை இணையத்தில் திருடியவர் கைது! -பிரான்ஸ் கூட்டாளியும் சிக்குகிறார்

பிரபல நாளிதழ் மற்றும் வார இதழ்களை இணையத்தில் திருடி, பல லட்சக் கணக்கில் சம்பாதித்த, ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஆனந்த் (23). இவர் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் பிரபல தனியார் தமிழ், ஆங்கிலம் நாளிதழ் மற்றும் வார இதழ்களை இணையத்தில் திருடி, அதை magnet.com என்ற இணையதளம் மூலம் புழக்கத்தில் விட்டு, பல லட்சக் கணக்கில் பணம் சம்பாதித்து வந்தார்.

இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் இவருக்கு சம்பந்தம் இருப்பதை அறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆனந்தை இன்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஃபிரான்ஸ் நாட்டில் பணிபுரிந்து வரும் முகமது இஸ்மாயில் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.



இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் ஃபிரான்ஸ் தூதரகம் மூலம் முகமது இஸ்மாயிலிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இன்று கைது செய்யப்பட்ட ஆனந்த், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Dailyhunt

மதுரையில் 50-வது நாளை நோக்கி 'ராஜாபார்ட் ரங்கதுரை'! 



டெக்னிக்கலில் மிரட்டும், மாறுபட்ட கோணங்களில் காட்சிப்படுத்தப்பட்ட, பெரிய ஸ்டார்கள் நடித்த படங்கள் ஒருவாரம் ஓடினாலே வெற்றிப்படம் என்று கொண்டாடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், நாற்பது வருடங்களுக்கு முன்பு சிவாஜி கணேசன் நடித்த 'ராஜபார்ட் ரங்கதுரை', தற்போது மதுரை மீனாட்சி பாரடைஸில் ஐம்பதாவது நாளை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது.

மதுரையில் பழைய படங்கள் பார்ப்பதற்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. உடல் உழைப்பு தொழிலாளர்கள் நிறைந்திருக்கும், வில்லாபுரம், அவனியாபுரம், சுப்ரமணியபுரம், ஜெய்ஹிந்துபுரம், செல்லூர், தெற்குவாசல் பகுதிகளில் அமைந்துள்ள திரையரங்குகளில் தியாகராஜபாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், நாகேசுவரராவ், என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர் நடித்த பழைய படங்கள் அடிக்கடி திரையிடப்படும். 75 முதல் 80 களில் ரஜினி, கமல் நடித்த படங்களும், ஐம்பது வயது தாண்டியவர்களுக்காக திரையிடப்படுகின்றன.

மாலை வேளைகளில் குடும்பமாகவோ, நண்பர்களுடனோ இதுபோன்ற பழைய படங்கள் பார்க்க வருகிற மக்கள் மதுரையில் நிறைந்திருப்பதால்தான், 'ராஜபார்ட் ரங்கதுரை' தற்போது ஐம்பதாவது நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. தினமும் மாலை மற்றும் இரவு காட்சியாக இப்படம் திரையிடப்பட்டு வருகிறது.



இதுபற்றி படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவரிடம் கேட்டால், ''சிவாஜி நடித்த மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. சிவாஜியின் நடிப்புக்கு இணையே இல்லை. நாடக நடிகராக அவர் நடித்திருக்கும் இப்படத்தில் உறவுகளால் ஏமாற்றப்படுவதுதான் கதை. இந்த படத்தின் கதையை அடிப்படையாக வைத்து பல தமிழ் படங்கள் வந்ததன. அதெல்லாம் இதுபோல இல்லை. இப்படத்தின் பாடல்களும் அவ்வளவு அருமையானது. அதனால்தான் திரும்பத் திரும்ப படம் பார்க்க வருகிறோம்'' என்றார்.

வருகிற ஒன்பதாம் தேதி இப்படத்தின் ஐம்பதாவது நாள் விழாவை பெரிய அளவில் கொண்டாட மீனாட்சி பாரடைஸ் திரையரங்க உரிமையாளரும், சிவாஜி ரசிகர்களும் முடிவு செய்திருக்கிறார்கள். அன்றைய தினம் படம் பார்க்க வருகிற ரசிகர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

Dailyhunt


s

முடிவுக்கு வரும் ஆஃபர்கள்... ஜியோ வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ந்தியத் தொலைதொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தையே ஜியோ ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதியிலிருந்து ஜியோ தனது நெட்வொர்க் சேவையைத் தொடங்கியது. இலவச டேட்டா, கால்ஸ் எனத் தொடக்கம் முதலே ஆஃபர்களை அள்ளிவீசும் அந்நிறுவனம், நெட்வொர்க் சேவையைத் தொடங்கி ஆறே மாதத்தில் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று உலகையே வியக்க வைத்தது. ஜியோ இல்லாத ஊரே கிடையாது எனச் சொல்லும் அளவுக்கு அந்த நெட்வொர்க் தற்போது நாடு முழுவதும் வளர்ந்துள்ளது.

ஜியோ

தொடக்கத்தில் 2016-ம் ஆண்டு இறுதிவரை இலவச கால் மற்றும் டேட்டா ஆஃபரை அறிவித்த அந்நிறுவனம், அதன்பின் இந்த இலவச ஆஃபரை அடுத்தாண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நீட்டித்தது. மார்ச் மாதம் இந்த ஆஃபர் முடிவடைவதற்குள் ரூ.99 செலுத்தி ஜியோ பிரைம் சேவையில் இணைந்து கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் அறிவுறுத்தியது. பிரைம் சேவையில் உறுப்பினராகும் வாடிக்கையாளர்கள், ஒரு வருடத்திற்கு ஜியோ வழங்கும் அதிரடி ஆஃபர்களைப் பெறலாம். பிரைம் சேவையில் இணைந்துகொள்ளும் கால அவகாசமும் அதன்பின் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் இலவச ஆஃபரைப் பயன்படுத்தியவர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பேர் தற்போது ஜியோ பிரைம் சேவையில் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தடுமாறும் இணைய வேகம் :
4G சிக்னல்கள் தடையில்லாமல் கிடைத்தாலும், டேட்டா ஸ்பீடு விஷயத்தில் ஜியோ கவனம் செலுத்தியே ஆகவேண்டும். லண்டனைச் சேர்ந்த 'ஓபன்சிக்னல்' என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், ஜியோ நிறுவனத்தின் சராசரி டேட்டா டவுன்லோடு ஸ்பீடு 3.92 Mbps ஆகப் பதிவாகியுள்ளது. இது 3G சேவையின் உலக சராசரியான 4.4 Mbps என்பதைவிடக் குறைவாகும். சில சமயம் 2ஜியை விட பொறுமையாக இருக்கிறது ஜியோ.
ஜியோ

ஆஃபர்கள் ஒரு ப்ளாஷ்பேக் :

பிரைம் சேவையில் இணைந்து ரூ.303 செலுத்துபவர்களுக்கு 'சம்மர் சர்ப்ரைஸ்' என்ற பெயரில் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச ஆஃபர் வழங்கியது அந்நிறுவனம்.  இதன்படி, ரூ.303-க்கு ரீசார்ஜ் செய்தவர்களுக்கு, இலவசமாக  நாளொன்றுக்கு ஒரு ஜி.பி அளவுக்கு 4G டேட்டாவும் மற்ற ஜியோ சேவைகளும் வழங்கப்பட்டன. ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்குள் ரூ.303-க்கு ஒருவர் ரீசார்ஜ் செய்திருந்தால், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு (ஒவ்வொரு மாதமும் தலா 28 நாள்கள் வேலிடிட்டி) இதற்கு முன்னர் அனுபவித்த இலவச சேவைகள் தொடரும். ஏப்ரல் மாதம் செலுத்தியிருந்த ரூ.303 தொகையை ஜூலை மாதத்திற்கான ப்ரீபெய்ட் தொகையாக ஜியோ கணக்கெடுத்துக்கொள்ளும். உதாரணமாக ஏப்ரல் மாதம் 1-ம் தேதி ஒருவர் ரூ.303 செலுத்தியிருந்தால், அவரது 'சம்மர் சர்ப்ரைஸ்' ஆஃபரின் வேலிடிட்டியானது ஜூலை 20-ம் தேதியோடு முடிவடையும்.
ஜியோ அறிவித்த இந்த இலவச ஆஃபர் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் விதிமுறைகளுக்கு எதிரானது என மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புகாரளித்தன. இதையடுத்து, இந்த சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரைக் கைவிடும்படி ட்ராய், ஜியோ நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, ஏற்கெனவே இந்த ஆஃபரில் இணைந்தவர்களுக்கு மட்டும் இலவச சேவைகள் தொடரும் என ஜியோ
 கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி அறிவித்தது.

Jio - Dhan Dhana Dhan

ஏப்ரல் 7-ம் தேதியிலிருந்து புதிதாக ஜியோ நெட்வொர்க்கில் இணைபவர்களும், பிரைம் சேவையைத் தொடர்பவர்களும் ரூ.309 அல்லது ரூ.509 செலுத்தி 'ஜியோ தன் தனா தன்' என்ற ஆஃபரில் இலவச சேவைகளைப் பெறலாம் என ஜியோ அறிவித்தது. ரூ.309 செலுத்துபவர்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜி.பி 4G டேட்டாவும், ரூ.509 செலுத்தியவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜி.பி 4G டேட்டாவும் இந்த ஆஃபரில் இலவசமாக வழங்கப்பட்டது.

வேலிடிட்டி முடியும் நாள் :

இந்நிலையில், 'சம்மர் சர்ப்ரைஸ்' மற்றும் 'தன் தனா தன்' ஆகிய இரண்டு ஆஃபர்களின் வேலிடிட்டி இந்த மாதத்தோடு முடிவடையப்போகிறது. இதன்பிறகு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஜியோவின் சேவைகளைப் பெறமுடியும். ஜியோவின் நெட்வொர்க் பிடிக்காதவர்கள் இதன்பிறகு ரீசார்ஜ் செய்யாமல் விலகிக்கொள்ளலாம். சேவையில் தொடர விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களது வேலிடிட்டி முடியும் நாளை 'மை ஜியோ (MyJio)' ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆப்பில் மொபைல் நம்பர் கொடுத்து லாகின் செய்துகொள்ள வேண்டும். அதன்பின் மெனுவில் உள்ள 'My Plans' ஆப்ஷனை கிளிக் செய்தால், எந்த ஆஃபரின் கீழ் நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற விவரத்தைக் காண்பிக்கும். அதன் கீழே அந்த ஆஃபரின் வேலிடிட்டி தேதியும் காண்பிக்கப்படும். இந்தத் தேதிக்குள் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ப்ளான்களில் ஒன்றைத் தேர்வுசெய்து, வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும்.
ஜியோ நிறுவனத்தின் இலவச ஆஃபர்கள் முடிவடைந்த பின்னர்தான், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களோடு அதன் சேவையை ஒப்பிட முடியும் என்பதால், இந்த மாதம் முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்.
எம்.ஜி.ஆருக்கு நுாற்றாண்டு விழா... தலைமைச்செயலாளருக்கு நோட்டிஸ்! - மதுரை சோகம் 

சே.சின்னதுரை



மதுரையில் அரசு நடத்திய எம்.ஜி.ஆர் நுாற்றாண்டு விழாவில் அனுமதியின்றி ஃபிளக்ஸ் பேனர்கள் வைத்ததை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழக தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

மதுரையில் கடந்த ஜூன் 30ம் தேதி முன்னாள் முதல்வர் எம்.ஜி,ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது . முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட இந்த விழாவிற்காக மதுரை முழுவதும் ஃபிளக்ஸ் பேனர்கள் , ராட்சத பலூன்கள், போஸ்டர்கள் என அ.தி.முக அமைச்சர்கள் மதுரையை கலங்கடித்துவிட்டனர். நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் பேனர்கள் பொதுமக்களுக்கு தொந்தரவாக இருந்ததோடு முறையாக அனுமதியின்றியும் வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

விளம்பர பேனர்கள் ஒருபக்கம் என்றால் இதையொட்டி நடந்த ஊர்வலமும், இசைக் கச்சேரி ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் அ.தி.மு.க வினருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, பொதுமக்களை பெரும் தொந்தரவுக்குள்ளாக்கியது. இதனைத் தொடந்து முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி ஃபிளக்ஸ் போர்டு வைத்ததாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இதில், “ ஜூன் 30ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மற்றும் திண்டுக்கல்லில் அனுமதியற்று விளம்பர போர்டுகள் அதிகமாக வைக்கப்பட்டு இருந்தன. அனுமதியின்றி ஃபிளக்ஸ் போர்டுகள் வைத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. எனவே அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த பேனர்களை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள், மதுரை மாநகரக் காவல்துறை ஆணையாளர், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பி இருந்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காத அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

  இந்த மனு, நீதிபதிகள் சசிதரன்- சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை ஜூலை 24ம் தேதிக்கு ஒத்தியும் வைத்தனர்.

Move to merge Central Institute of Classical Tamil with Tiruvarur central varsity ?

By T Muruganandham  |  Express News Service  |   Published: 07th July 2017 01:25 AM  |  

CHENNAI: After the furore over alleged imposition of Hindi and Sanskrit, the Centre is wading into another controversy with a proposal to merge the Central Institute of Classical Tamil (CICT), Chennai, with the Central University of Tamil Nadu (CUT) at Tiruvarur.

This, detractors say, would reduce the autonomous institute of higher research functioning under the Ministry of Human Resources Development into just another department with limited functional flexibility.

The proposal was mooted by the central think-tank, Niti Aayog, which the MHRD has forwarded to the university.


Sources told Express the executive council of the CUT that met last week discussed this as part of the agenda.“The Niti Aayog has floated this idea for many institutions, and CICT is indeed one among them. The HRD ministry had sent this proposal to the institutions, but it is only at the discussion level; a final decision is yet to be taken,” sources said.
 
When the matter came up for discussion, one of the executive council members of CUT reportedly cautioned top officials that this move would trigger vehement protest from Tamil Nadu. When contacted, the office the VC of the CUT was tight-lipped about it.

It was the UPA government, in which DMK was among the biggest partners, that accorded classical language status to Tamil in 2004. From March 2006 to May 18, 2008, the institute was functioning from the Central Institute of Indian Languages campus in Mysuru. Then it was called Centre for Excellence of Classical Tamil. After much efforts by the then CM and DMK president M Karunanidhi, it was shifted to Chennai, and upgraded into the Central Institute of Classical Tamil from May 19, 2008.

Karunanidhi was the first chairperson of CICT, and now Chief Minister ‘Edappadi’ K Palaniswami occupies the position.

“The CICT has powers to undertake many a research works in topics as varied as agriculture, epigraphy, folklore, anthropology etc., and the governing council of the CICT has powers to take policy decisions. In short, the autonomy of this institution will go,” said Dr R Kothandaraman, former Senior Fellow of CICT, explaining the drawbacks of the proposed merger.
Though the four Dravidian languages, Tamil, Telugu, Kannada and Malayalam, got classical language status, this is the only institute that is exclusive for a language, he added. “This identity will be lost if it becomes part of the Central University of Tamil Nadu,” said the 81-year-old expert. VCK general secretary and writer D Ravikumar told Express that merging the CICT with CUT would curtail the administrative and financial autonomy  of CICT.
Ads by Kiosked

‘Adhere only to UGC 2010 fiat while naming aided college principals’ 

By Ram M Sundaram  |  Express News Service  |   Published: 07th July 2017 01:30 AM  |  
 
CHENNAI: Putting an end to the uncertainty over norms for appointment of principals in government-aided colleges across Tamil Nadu, the Madras High Court has directed the State higher education department to invariably follow UGC Regulations, 2010 in this regard.

Though the University Grants Commission (UGC), the apex regulator body for higher education in the country replaced Regulations of 2000 with subsequent regulation of 2010, several government and aided colleges adopted  UGC Regulations, 2000 for appointing teachers and other academic staff.

In one such instance, Ethiraj College for Women in Chennai appointed M Thilakavathy, professor from department of history and tourism as the Principal of the college in 2014. A group of senior and meritorious professors, who were far-more qualified, challenged this appointment of a junior person as principal in the Madras High Court on the ground that selection had been made following UGC Regulations 2000, even though the regulations were superseded by UGC Regulations, 2010.
 
The three-member selection committee constituted to select the principal had not considered Academic Performance Indicators (API) Scores and Performance Based Appraisal System (PBAS) as mandated by UGC Regulations, 2010, claimed the petitioners. “Professor S Vittal, one of the three selection committee members was absent on the day of selection”. In response to this, the college management argued that API scores were meant only for screening purpose and UGC Regulations and appointment was made based on UGC Regulations, 2000, which states that discretion in this regard lies only with the chairperson of the said committee.

After hearing arguments from both the sides, Justice M M Sundresh in January 2015 set aside the appointment of Thilakavathy as principal and directed the college to follow the selection procedure as contemplated under UGC Regulations, 2010. The court, however, allowed Thilakavathy to continue as principal until a fresh selection was made. The chairman board of trustees, Ethiraj College went on an appeal and a comprising Justices Huluvadi G Ramesh and Teeka Raman on June 22 upheld the single judge’s verdict and directed the college management to select the principal on the basis of UGC Regulations 2010 (based on merit, ability and seniority)

The court also directed the State government to take all necessary steps for framing rules and regulations and communicate it to all universities, which in turn should frame guidelines for constitution of necessary committees within a reasonable time.

Five pedestrian subways yet to take off due to lack of bidders

By Venkatesan Parthasarathy  |  Express News Service  |   Published: 08th July 2017 07:28 AM  |  

The pedestrian subway near AG Church on GST Road is yet to be made | martin louis
CHENNAI: The signal momentarily turned red, on a pleasant Friday morning, and pedestrians standing opposite the New Life AG Church (near Little Mount) quickly seized the opportunity to cross the vehicle-choked Anna Salai. But they might have been spared the waiting time if only the proposed pedestrian subway, sanctioned about four years back, had come up.

The State Highways Department had planned five pedestrian subways in the city, including the aforementioned one but they are yet to take off. Several attempts to find bidders for the projects have failed, forcing department officials to rework the original design.

All of them figure under the Chennai Metropolitan Development Plan, which utilises State budgetary allocation to build infrastructure in Chennai metropolitan area as per the second master plan of Chennai Metropolitan Development Authority for the years 2010-2026. Officials say the State government had accorded administrative sanction at a cost of `19 crore for the subways. The project was to be implemented in 2013-2014 but so far not even a stone has been broken.

When asked about the status, a highway official told Express: “For the pedestrian subways at Ekkaduthangal and near Kasi Theatre, we had floated tenders six times. But no party has expressed interest citing difficulties in shifting underground utilities.”

Since the Chennai metro corridor passes through that route, Highways Department has now requested CMRL officials for undertaking a joint inspection to identify new locations for the pedestrian subways.


Similarly, the ones proposed at MKN Road-GST Road junction in Guindy and near New Life AG Church has been deemed as not feasible. “We are now looking into the possibility of converting them to foot overbridges,” the official said.
 
At the MKN Road-GST Road junction, a link for pedestrians to cross over to either side is essential. At present, there is one subway, packed during peak hours, which connects Guindy Railway station with Guindy Industrial Estate.

As far as the fifth delayed subway, slated to come up near CMBT, the official said: “We can finalise its design only after the completion of the grade separator, for which work is underway there. However, a pedestrian subway has been included as part of the grade separator project.”

Bio ethics unit opened at medical college

“Principles of bioethics would help bring about transparency in health care”

A nodal centre of the International Network of UNESCO Chair in Bioethics, Haifa, was inaugurated at the Chennai Medical College Hospital and Research Centre at Irungalur near Tiruchi on Friday.
A three-day training programme on bioethics in health sciences education also got underway along with the opening of the unit. Around 50 health science faculty members from six medical colleges in the country were participating the programme.

The programme aims at training medical teaching faculty to impart bio-ethical knowledge to their students and enable them to emerge as ethically bound health professionals, according a college press release.

The bioethics unit and the training was inaugurated by S. Geethalakshmi, Vice Chancellor, Tamil Nadu Dr. MGR University, in the presence of Russell D’Souza, Head, Asia Pacific Bioethics Division, UNESCO Chair in Bioethics, Haifa, and faculty members of Chennai Medical College Hospital and Research Centre.

Speaking on the occasion, Dr. Geethalakshmi observed that adopting the principles of bioethics would help bring about transparency in health care and medical research.
“In our pursuit of knowledge, it is important to maintain integrity of human and animal rights as they are fundamental tenets of society,” Dr. Geethalakshmi said in her address.

Nod for flights from Salem, Hosur, Neyveli

Efforts have been taken by the government to operate flights from Salem, Hosur and Neyveli, said Transport Minister M.R.Vijayabhaskar on Saturday.

Responding to a query of deputy leader of the DMK Legislature Party, Durai Murugan, on the introduction of flights from Vellore, Mr. Vijayabhaskar said the Union Ministry of Civil Aviation has approved operation of flights from Salem, Hosur, Neyveli under the ‘Ude Desh ka Aam Naagrik’ (UDAN) or regional connectivity scheme
.
The Civil Aviation officials had held discussion with Chief Minister Edappadi K. Palaniswami recently. “Consultations will be held to extend flight operations to wherever it is commercially viable. Steps have been expedited to select location for greenfield airport in Chennai,” the Transport Minister said.

The Minister also said that arrears would be disbursed to retired employees of transport corporations before September and to the serving personnel in a phased manner.

Nursing college celebrates silver jubilee

 Speakers highlight role of nurses

The Omayal Achi College of Nursing celebrated its silver jubilee on Saturday. After the inauguration of the ceremony, students of the college enacted its history as Villu Pattu, said Valli Alagappan, managing trustee of the college.

Representatives from the universities the college has partnered with — the University of Saskatchewan, Canada and Queen Margaret University, Edinburgh — too attended the function and gave words of encouragement.

Soumya Swaminathan, Director General, Indian Council for Medical Research, and Arjun Rajagopalan, trustee and advisor, Sundaram Medical Foundation, highlighted the role of nurses in healthcare.

 Bills to streamline V-C appointment introduced

They specify qualifications and the time frame

Two Bills introduced in the Assembly on Saturday specify qualifications to be possessed by academicians to be appointed as V-Cs of State-run universities and further set a time limit of six months within which the entire process towards their appointments shall be made.

The Bills — ‘Chennai University (Amendment) Bill, 2017’ and ‘Tamil Nadu Universities Laws (Amendment) Bill, 2017’ — introduced by Higher Education Minister K.P. Anbalagan also specify qualifications required for persons in the Search Committee that would recommend a panel of names from which the Chancellor would select one for appointment as V-C. According to the Bills, the process to nominate members of the Committee shall begin six months before the occurrence of the vacancy in the office of the Vice-Chancellor and shall be completed four months before that date.
The process of preparing the panel of suitable persons for appointment as V-Cs shall begin at least four months before the occurrence of the vacancy.

“If the Committee does not submit its recommendations to the Chancellor within the said period [four months], the Chancellor may grant further time to the Committee to submit its recommendation or take steps to constitute another Committee..,” the Bills stated.

In case of the University of Madras and few other universities, one of the members of the Search Committee would be a nominee of the Chancellor, who shall be a retired High Court judge or the Supreme Court or any High Court or an eminent educationalist.

The Senate and the Syndicate of the university concerned shall have one nominee each in the Search Committee.

For some universities, nominees are from the government, university’s Academic Committee and Executive Council.

At present, the Universty of Madras Act, 1923 and relevant Acts of 12 other universities in the State do not prescribe for qualifications for members of the Search Committee and for the Vice-Chancellor and further no time limit has been fixed for the Committee to recommend names for the Governor over appointing the Vice-Chancellor.

Tamil Nadu Universities Laws (Amendment) Bill, 2017 would replace the Tamil Nadu Universities Laws (Amendment) Ordinance, 2017 promulgated by the Governor on May 27.

Tamil Nadu Universities Laws (Amendment) Bill, 2017 would apply to the appointment of Vice-Chancellors in Madurai Kamaraj University, Anna University, Bharathiar University, Bharathidasan University, Mother Teresa Women’s University, Alagappa University, Manonmaniam Sundaranar University, Periyar University, Tamil Nadu Open University, Thiruvalluvar University, Tamil Nadu Teachers Education University and Annamalai University.

Process to nominate members of search panel will begin six months before occurrence of the vacancy in the office of the Vice-Chancellor
`Delta crew broke wine bottle over rowdy flyer's head'
Seattle:
AP 
 


A flight attendant broke a wine bottle over the head of a man who lunged for an exit door and fought with other flyers during a Delta Air Lines flight from Seattle to Beijing, but it didn't faze him, an FBI agent wrote in charging papers filed Friday.
 
Joseph Daniel Hudek IV , 23, of Tampa, Florida, appeared in the US District Court, wearing a beige jail uniform and sporting a scrape or bruise below his right eye.

Hudek was arrested Thursday night after causing the disturbance that forced the plane to return to the Seattle-Tacoma International Airport. Hudek did not speak during the hearing. His attorney , Robert Flennaugh II, declined to comment.

Hudek was charged with interfering with a flight crew, which carries a possible sentence of up to 20 years in prison and a $250,000 fine. He is expected to remain in custody at least until a detention hearing on July 13.

A probable cause statement written by FBI special agent Caryn Highley said Hudek was sitting in the first row of the Boeing 767's first-class section. He asked a flight attendant for a beer before takeoff. He was served one, but exhibited no sign of being intoxicated and ordered no more alcoholic drinks, the flight attendant told authorities.

About an hour into the flight, while the plane was over the Pacific Ocean northwest of Vancouver Island, Hudek went into the forward restroom, came out quickly , asked the attendant a question, and went back in.

When he came out again two minutes later, he suddenly lunged for the exit door, grabbed the handle and tried to open it, Highley wrote. Two flight attendants grabbed him, but he pushed them away, and they signaled for help from several passengers and notified the cockpit by phone, the complaint said.
Hudek punched one flight attendant twice in the face and struck at least one passenger on the head with a desert red wine bottle. As the struggle continued, a flight attendant grabbed two wine bottles and hit Hudek over the head with each -breaking at least one of them.

According to one flight attendant: “Hudek did not seem impacted by the breaking of a full litre red wine bottle over his head, and instead shouted, `Do you know who I am?' or something to that extent,“ the complaint said.

One passenger got him in a head-lock, but he broke out of it, until finally several passengers held him long enough to place zip-tie restraints on him. Even then he remained combative, Highley said, and it took multiple passengers to keep him restrained until the plane landed and Port of Seattle police arrested him.
All Delhiites can get free surgeries at pvt hospitals
New Delhi:
TIMES NEWS NETWORK 
 


STATES GRAPPLE WITH SHORTAGE OF DOCS, HIGH MED BILLS 
 
Residents of Delhi who are unable to have surgeries at any city government hospital can now get free surgery in 48 private hospitals without having to worry about huge bills. The bills, for which no upper limit has been set, will be paid by the Delhi government. “We lay emphasis on health and education, there will be no dearth of funds for this scheme,“ CM Arvind Kejriwal said while launching the scheme at Talkatora Stadium on Saturday .
 
A patient undergoing treatment at any of the 24 Delhi government hospitals where she is scheduled for surgery which cannot be performed at the government hospital within 30 days because of an overload or if the hospital does not have infrastructure can be referred to a private hospital. The free surgery can be conducted within a fortnight.

The patient needs to submit residence proof with the OPD slip (containing referral to private hospital) with an authorisation form (available at the hospital) to the nodal officer of the Delhi Arogya Kosh from where she will get the authorisation letter allowing treatment at private hospital. The hospital administration will assist the patients' family in the process.
HC quashes rape case filed by girl against dad, brother
Chennai:
TIMES NEWS NETWORK 
 


Says `Victim' Lied To Cops, Mentally Ill
A sexual abuse case initiated by a Class IX girl against her father and brother has been quashed by the Madras high court which found that she had lied to police, copied a complaint available with a child helpline and also suffered from schizophrenic disorders.
It turned out that the girl lodged the complaint because her father was strict and often reprimanded her for poor academic performance. She wanted to leave her home and stay in a hostel.
The Reddiarpalayam police in Puducherry , however, had registered a case under Protec tion of Children from Sexual Offences (POCSO) Act, 2012, and arrested the father in April 2016.

Justice R Mahadevan, quashing the FIR, said: “ A plain reading of the FIR would show that the entire proceeding is maliciously instituted with ulterior motive to wreak vengeance against them. Furthermore, the findings rendered by the Schizophrenia Research Foundation, Chennai for psychological evaluation (psychotic treatment) would show that the girl did not have capacity to think about the outcome of her behaviour and that she copied the complaint verbatim from a Child Helpline volunteer Sharmi. It is also seen that she wanted to stay in a hostel and wrote a complaint against her father and brother, and she did not think about the consequence of her action.

 In view of the above stated circumstances the impugned FIR pending on the file of the Reddiyarpalayam police is quashed.“ In her complaint, the girl al leged that her father had sexually abused her before she attained puberty and that her brother had taken photographs while she was taking a bath. Police booked the case for offences punishable Section 6 of POCSO Act, and arrested her father. It was the high court which found something amiss, as the complaint was too neat, without any mistake and any overwriting. It asked the police to produce the girl before it on June 14, 2016, when it found that she was not even able to read the complaint properly .

Then the court referred the girl for conducting psychiatric tests and found out that she actually wanted to stay in a hostel away from home and that she copied the complaint written by a helpline volunteer, whom the girl met at an awareness programme in her school. The court found she was intellectually below average and did not have the capacity to think about the consequences of her acts and behaviour.

The father's counsel told the court that she had to change three schools due to poor academic performance and that she found her present school too strict. The girl was unable to differentiate between right and wrong acts, he said.Quashing the FIR, the judge said there was no pornographic picture available so as to implicate the father and brother.
Over 51K applications for medical courses this year
Chennai:
TNN 
 


At least 12 MBBSaspirants will compete for a seat in government medical colleges in Tamil Nadu, and double that number will vie for government quota seats in self-financing colleges.
 
On Saturday , the last date for submission of filled-in applications, the state selection committee in-charge of MBBSBDS admissions, said it had received 50,558 applications, of which 31,323 were admissions to 2,594 seats in 23 state-run medical colleges.

The remaining 19,235 applications were for admissions in the 783 government quota seats in 10 self-financing colleges affiliated to the state university .“This is more than twice the applications we received last year. But this year, in a first, we are doing counselling for management quota seats as well,“ said selection committee secretary Dr G Selvarajan. The state had sold over 43,206 application forms from its medical college and others were downloaded.

The committee is expected to release the rank list on July 14 and begin counselling on July 17. Over 80,000 students wrote NEET 2017 conducted by the CBSE in May . The CBSE is yet to share data such as pass percentage, category wise and language-wise qualifiers with the state government. “We have deputed additional staff to verify every application manually,“ he said. The last day saw more than 1,000 students rushing in to drop their filled in applications at the Directorate of Medical Education, Kilpauk. Students faced difficulties in getting their applications attested by a gazetted officer and sourcing postcards as stipulated in the prospectus. A huge crowd was seen at the venue from 10am to 2pm, but a 30-minute extension of time worked to the advantage of many students. The state government will reserve 85% of government quota seats for state board students in MBBS, BDS admissions. Of the 4,350 seats in 22 government medical colleges, state-managed Raja Muthiah Medical College of Annamalai University and 10 self-financing institutions, 973 will be surrendered to the allIndia quota. Of the remaining 3,377 seats, 2,867, including 2,094 in government colleges, will be reserved for state board students. In dental admissions, state board students will have 1,011seats.



TIMES OF INDIA

imggallery
Private doctors can now do angioplasty in TN govt hosps
Chennai: 
 


Private sector cardiologists can soon do life-saving stenting and angioplasty in Tamil Nadu government hospitals.
 
As of now, cath labs in government hospitals are open only between 8am and 3pm, but by inviting private doctors to its facilities when there is no government doctor for emergencies, the state will be able to offer round-the-clock care.

As a part of its cardiac care policy, aimed at reducing the incidence of deaths due to heart diseases, the state plans to add at least 11cath labs, where non-surgical cardiac procedures such as angiogram and angioplasty are done. Presently, five cath labs are operational in Stanley Medical College Hospital and Government mulch-speciality Hospitals in Chennai, Rajaji Government General Hospital in Madurai and Salem Government General Hospital.

The state now plans to pay government doctors to do these procedures beyond duty hours and empanel private doctors to work in its facilities. Labs like the ones in Chen nai can do at least 10 angioplasties and another six angiograms a day if we put them to optimum use. But we don't have adequate doctors working round the clock, the utilisation comes down. In smaller cities, there may not be adequate doctors sometimes even through the day.Our intension is to scale this up,“ said Tamil Nadu Medical Service Corporation managing director P Umanath.

The state plans to pay government doctors to do these procedures beyond duty hours and empanel private doctors to work in its facilities. They will be paid either through health insurance or by the health department. “The amount may not equal what private hospitals offer, but with volume, we will be able to match the pay at least in long term.“

It is hoped that the number of patients being taken to private hospitals can be reduced through state health insurance even for elective surgeries. The state has already been using gynaecologists and anaesthetists for emergency C-sections in rural PHCs when government doctors are not available.
State health insurance data shows only 7% of the total procedures were for treatment of heart diseases but accounted for a quarter of the money spent. Additional Public Health director Dr T S Selvavinayagam said `270 crore was spent for stenting and angioplasty procedures, 95% in private hospitals.

After a pilot study , the state decided on a hub and spoke model of care for heart diseases.
Spokes, or small hospitals, use standardised ECG to diagnose ST-elevation myocardial infarction (STEMI), where a clot in a heart vessel slowsstops blood flow. Test results are shared with doctors at hubs, or hospitals with cath lab, for confirmation. A patient testing positive is given blood thinners and lipid-lowering medication followed by another drug to dissolve the clot. In 324 hours, the patient is sent to a speciality hospital and wheeled in for angioplasty stenting, said state health secretary J Radhakrishnan.
பேரறிவாளனுக்கு 'பரோல்' பரிசீலிப்பதாக முதல்வர் தகவல்

பதிவு செய்த நாள் 09 ஜூலை
2017
00:01


சென்னை, ''ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, 'பரோல்' வழங்குவதில், அனைவருடைய உணர்வுகளையும், அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வலியுறுத்தி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட பலர், சட்டசபையில் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, முதல்வர் பழனிசாமி அளித்த பதில்:

எம்.எல்.ஏ.,க்கள் கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி, துணை சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டவர்கள், தங்கள் உணர்வுகளை பிரதிபலிக்கிற விதத்தில், 'பேரறிவாளனை பரோலில் விட வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.
ஏற்கனவே, 15 நாட்களுக்கு முன், தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர், என் அறைக்கு வந்து, இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

இது குறித்து, சட்ட அமைச்சர், சி.வி.சண்முகத்துடன் கலந்து பேசினேன்.
பின், அந்த மனு, தலைமை வழக்கறிஞருக்கு அனுப்பி, சட்ட ஆலோசனை பெற்று, பரிசீலித்து கொண்டிருக்கிேறாம்.

மீண்டும் அந்த பிரச்னையை, எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய போது, 'பரிசீலிக்கப்படும்' என, தெரிவித்தேன். அனைவருடைய உணர்வுகளையும், அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
இதே நாளில் அன்று

பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
21:49



1930 ஜூலை 9

கே.பாலசந்தர், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடியில், கைலாசம் - காமாட்சியம்மாள் தம்பதிக்கு மகனாக, 1930, ஜூலை 9 ல் பிறந்தார். அண்ணாமலை பல்கலையில், பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தார். மேடை நாடகத் துறையில் இருந்து திரைத் துறைக்கு வந்தவர். 1965ல், நாகேஷ் கதாநாயகனாக நடித்த, நீர்க்குமிழி இவர் இயக்கிய முதல் படம். முன்னணி நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை அறிமுகம் செய்தவர். 1990க்கு பின், 'கையளவு மனசு' போன்ற பெரும் வரவேற்பை பெற்ற, 'டிவி' தொடர்களையும் இயக்கினார்.
'படாபட்' ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா, விஜயகுமார், ஜெய்கணேஷ், ராதாரவி, டில்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தவரும் இவரே.பத்மஸ்ரீ, தாதா சாகிப் பால்கே விருதுகளை பெற்றவர். 2014 டிச., 23ல் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.
வியர்த்தால் வெளியேறுகிறது ரத்தம் அதிசய சிறுமியால் டாக்டர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
22:39



ஐதராபாத், ஐதராபாத்தைச் சேர்ந்த, 3 வயது சிறுமியின் உடலில் இருந்து, வியர்வைக்கு பதில் ரத்தம் வெளியேறுவதை பார்த்து, பெற்றோர் மற்றும் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகர் ஐதராபாத்தில் வசிப்பவர், முகமது அப்சலின் மகள் அஹானா, 3. இந்த சிறுமியின் உடலில் இருந்து, வியர்வைக்கு பதில் ரத்தம் வந்ததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அஹானாவுக்கு சிகிச்சையளிக்கும், டாக்டர் சிரிஷா கூறியதாவது:

அஹானாவுக்கு, 2 வயதில், நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. அதற்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதன்பின், வாய், காது, மூக்கு என, அனைத்து துவாரங்களில் இருந்தும் அடிக்கடி ரத்தம் வரத் துவங்கியது.

தற்போது, அஹானாவின் உடலின் மேல் தோலில் உள்ள வியர்வை துவாரங்களில் இருந்தும், ரத்தம் வெளியேறுகிறது. அஹானாவுக்கு, 'ஹெமடிடிரோசிஸ்' எனப்படும், அரிய நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, ரத்தப் போக்கு ஏற்படுகிறது. சிகிச்சைக்கு பின், தற்போது ரத்தப் போக்கு குறைந்துள்ளது. இந்த நோய்க்கு தொடர் சிகிச்சை மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், தன் மகளின் சிகிச்சைக்கு, மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டுமென, அப்சல் கோரிக்கை
விடுத்துள்ளார்.
முடங்கி போன புற்றுநோய் சிகிச்சை பிரிவு முதல்வர் மாவட்டத்தில் நோயாளிகள் அவதி

பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
18:57

சேலம், சேலம் அரசு மருத்துவமனையில், டாக்டர்கள், பணியாளர்கள் இன்றி, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, பெயரளவில் செயல்படுவதால், நோயாளிகள், கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். 'முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில், முடங்கியுள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவை, செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஏழு பேர்

சேலம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளது. இப்பிரிவில், துறைத் தலைவர் தலைமையில், உதவி பேராசிரியர்கள், உதவி டாக்டர்கள் என, ஏழு பேர் பணியாற்ற வேண்டும். தற்போது, உதவி பேராசிரியர் வெங்கடேசன் மட்டுமே பணியாற்றி வருகிறார்.துறைத் தலைவர் மற்றும் ஆறு பணியிடங்கள், பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. அத்துடன், தொழில்நுட்ப பணியாளர்களும் இல்லை. நுண் கதிரியக்க பிரிவு பணியாளர், மாற்றுப் பணியாக, கதிரியக்க பிரிவில் பணியாற்றுவதால், புற்றுநோய் சிகிச்சை பிரிவு, பெயரளவில் செயல்படுகிறது.கடந்த, 2014ல், ஆண், பெண் முறையே, 400; 520 பேர், 2015ல், 344; 424 பேர், 2016ல், 363; 430 பேர், புற்றுநோய்க்காக தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். கடந்தாண்டில், வெளிப்புற நோயாளியாக ஆண்கள், 5,665 பேரும், பெண்கள், 9,438 பேரும், புற்றுநோய் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.டாக்டர்கள் பற்றாக்குறையால், 40 நோயாளிகளுக்கு மட்டுமே, தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும், 'கோபால்தெரபி' மிஷின் இயக்குவதற்கான டாக்டர் இல்லாததால், அது, பயன்பாடின்றி கிடக்கிறது. எனவே, வெளிப்புற மற்றும் புதிய நோயாளிகள், 150 பேர் வரை, சிகிச்சை பெறுவது சிரமமாக உள்ளது.அவர்களை, காஞ்சிபுரம், சென்னை, கோவை அரசு மருத்துவமனைகளுக்கு, பரிந்துரை செய்து அனுப்புகின்றனர். நோய் பாதித்தவர்கள், வறுமை காரணமாக, அருகில் உள்ள அரசு மருத்துவமனையை நாடும் போது, டாக்டர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி, பெரு நகரங்களுக்கு பரிந்துரை செய்து அனுப்பும் போது, மேலும், பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

மேலும், இங்கு, புற்றுநோயாளிகளுக்கு தனியாக சிகிச்சை வார்டு கிடையாது. அவசர, அவசிய தேவைக்காக, பிரசவ வார்டின் ஒரு பகுதியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர். 'கோமா' நிலையில் கிடக்கும் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு போதிய டாக்டர்கள், பணியாளர்கள், இனியும் நியமிக்கவில்லை என்றால், மூடும் நிலைக்கு தள்ளப்படும் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.அறிக்கை'டீன்' கனகராஜ்கூறுகையில், ''இது தொடர்பாக, அரசுக்கு, பலமுறை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும், அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்,'' என்றார்.'முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில், சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை பிரிவு முடங்கி கிடக்கிறது. அப்பிரிவு முழுமையாக இயங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பெண்களை துரத்தும் மனஅழுத்தம்

2017-07-05@ 12:52:33


இன்று மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சர்வசாதாரணமாக டிப்ரெஷன் என்கிற வார்த்தையை உபயோகிப்பதைப் பார்க்கிறோம். மன அழுத்தம் அதிகரிக்கிறபோது அது வெறும் மனதை மட்டுமே பாதிப்பதில்லை. உடலிலும் வித்தியாச அறிகுறிகளைக் காட்டும் என்கிறார் மருத்துவர் நிவேதிதா. ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிற அந்த அறிகுறிகள் பற்றி விளக்குகிறார் அவர்.

மன அழுத்தத்தை மனதோடும் மண்டையோடும் மட்டும் தொடர்புப்படுத்திப் பார்க்காதீர்கள். அது அவற்றையெல்லாம் விட அதிகமாக உடலோடு தொடர்புடையது. குறிப்பாக வயிற்றோடு. திடீரென உடலில் உணர்கிற பிரச்னைகளை பல பெண்களுக்கும் மன அழுத்தத்துடன் தொடர்புப்படுத்திப் பார்க்கத் தோன்றுவதில்லை.

மன அழுத்தம் என்னவெல்லாம் செய்யும்?

- முதல் வேலையாக நரம்பு செல்களின் செயல்திறனைப் பாதிக்கும். மூளையுடன் தொடர்புடைய உணர்வுகளுக்கான ஏரியாவை பாதிக்கும். உடல் வலியைத் தூண்டும். மன அழுத்தம்ஏற்படுத்துகிற வலியானது, மன அழுத்தம் இல்லாதபோது ஏற்படுகிற உடல் வலிகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமாகவும் இருக்கும்.

*தலைவலி தொடர்ந்துகொண்டே இருக்கும். மைக்ரேன் எனப்படுகிற ஒற்றைத்தலைவலி பிரச்னை உள்ளவர்களுக்கு வலியின் தீவிரம் மிகவும் அதிகமாகும்.

*சம்பந்தமே இல்லாமல் முதுகு வலி ஏற்படும்.

*மூட்டுகளிலும் எலும்பு இணைப்புகளிலும் வலியை உணர்வார்கள்.

*திடீரென நெஞ்சு வலி ஏற்படும். வயிற்றுக் கோளாறு, நெஞ்செரிச்சல் அல்லது ஏற்கனவே உள்ள இதய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இது போன்ற திடீர் நெஞ்சு வலி வரலாம். ஆனால் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு அதே நெஞ்சு வலி கூடுதல் சிரமத்தைத் தருவதை உணர்வார்கள்.

*செரிமானக் கோளாறுகளுக்கும் மன அழுத்தம் முக்கிய காரணமாகிறது. வாந்தி அல்லது வயிற்றைப் புரட்டுதல், பசியின்மை போன்றவை இருக்கலாம். சிலருக்கு வயிற்றுப்போக்கோ, கடுமையான மலச்சிக்கலோகூட ஏற்படலாம்.

*மன அழுத்தம் உள்ள பெண்களுக்குப் போதுமான அளவு தூக்கம் கிடைத்தாலும் எப்போதும் களைப்பாகவும் ஓய்வற்ற மனநிலையிலுமே இருப்பார்கள். மற்றவர்களைவிட அதிக நேரம் தூங்கினாலும் காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருப்பதும் அடுத்தடுத்த வேலைகளைத் தொடர்வதும் அவர்களுக்கு மிகப் பெரிய போராட்டமாகவே இருக்கும்.

*இதற்கு நேரெதிராக பல பெண்களுக்குத் தூக்கமின்மைப் பிரச்னை நிரந்தரமாகும். மிகத் தாமதமாகத் தூங்கச் செல்வது, பாதித்தூக்கத்தில் விழித்துக்கொள்வது, மீண்டும் தூக்கத்தைத் தொடர முடியாதது, ஆழ்ந்த உறக்கத்துக்குள் போக முடியாதது போன்றவற்றை எதிர்கொள்வார்கள்.

*மன அழுத்தம் உள்ள சில பெண்களுக்கு உணவின் மீதான நாட்டம் குறையும். அதன் விளைவாக உடல் இளைக்கும். இன்னும் சிலருக்கோ உணவின் மீது நாட்டம் அதிகரிக்கும். விதம் விதமான உணவுகளின் மீதான தேடல் அதிகரிக்கும்.கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள். எடைஅதிகரிப்பால் அவதிப்படுவார்கள்.

*காரணமே இல்லாமல் தலைசுற்றல் இருக்கும், மயக்கமாக உணர்வார்கள்.மேற்கூறிய அறிகுறிகள் பெரும்பாலும் பெண்களுக்கு அவர்களது வயதுக்கேற்ப ஏற்படுகிற உடல் மாற்றங்களுடன் தொடர்புப்படுத்தியே பார்க்கப்படுபவை.

அதனால் மன அழுத்தத்துக்கான அறிகுறிகள் என சந்தேகப்பட வைப்பதில்லை. ஆரோக்கியமான உடல்வாகுள்ள பெண்களுக்கு திடீரென வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்தால் மன அழுத்தம் உண்டாகி, அதன் தொடர்ச்சியாக இந்த அறிகுறிகளில் ஒன்றோ, ஒன்றுக்கு
மேற்பட்டவையோ தோன்றினால் எச்சரிக்கை அவசியம்.

மருத்துவரை அணுகி மனஅழுத்தம் இருப்பதைப் பற்றியும் பேசி, உடல் சந்திக்கிற பிரச்னைகளையும் சொல்ல வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளையும் மனப்பயிற்சிகளையும் மேற்கொண்டு, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை எதிர்கொண்டாலே
எல்லாம் சரியாகும்.

அவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு உடல் வலிக்கும், தலைசுற்றலுக்கும், வயிற்றுப்போக்குக்கும் சுயமாக மருந்துகள் வாங்கிச் சாப்பிடுவது மன அழுத்தத்தையும் குறைக்காது. அது ஏற்படுத்திய உடல்ரீதியான பிரச்னைகளையும் குணப்படுத்தாது. மாறாக மருந்துகளின் பக்கவிளைவினால் தேவையற்ற வேறு சில புதிய பிரச்னைகள்தான் உருவாகும்.

நிகர்நிலை மருத்துவ பல்கலை அவமதிப்பு மனு முடித்து வைப்பு

பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
23:40

சென்னை, புதுச்சேரியில் உள்ள நிகர்நிலை மருத்துவ பல்கலை கழகங்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம்
கைவிட்டது.சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் மேனன் தொடர்ந்த வழக்கை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. புதுச்சேரியில் உள்ள, நிகர்நிலை மருத்துவ பல்கலைகளில், மருத்துவப் படிப்புக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, விரைவில் குழு அமைக்கவும், அதுவரை, முதுகலை மருத்துவ படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களிடம், 10 லட்சம் ரூபாயை கட்டணமாக பெறவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.இந்த இடைக்கால உத்தரவு, 2017 ஜூன், 16ல் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை சேர்ப்பதற்கு, நிகர்நிலை பல்கலைகள் மறுப்பதாகவும், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால், அவர்களை தண்டிக்கும்படியும், உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு மனுவை, வழக்கறிஞர் மேனன் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:

நிகர்நிலை பல்கலைகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கு முன், இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன; ஒரு சில இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன' என, கூறப்பட்டுள்ளது.நீதிமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில், வேண்டுமென்றே உத்தரவு மீறப்பட்டுள்ளதா என்பதை மட்டுமே, அவமதிப்பு வழக்கில் பார்க்க முடியும்.இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் போது, நான்கு இடங்கள் தவிர, வேறு காலியிடங்கள் இல்லை. எனவே, நீதிமன்ற
உத்தரவை, நிகர்நிலை பல்கலைகள் மீறியதாக கூற முடியாது. அதனால், அவர்களுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு, கைவிடப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
'டூவீலர்' வாங்க நல்ல நேரம் இது ஜி.எஸ்.டி.,யால் ரூ.4000 வரை விலை சரிவு

பதிவு செய்த நாள் 09 ஜூலை
2017
01:22

 மதுரை, ஜி.எஸ்.டி.,யால் டூவீலர்கள் விலை குறைந்துவிட்டது. எந்தெந்த நிறுவனங்களின் மாடல்கள் எவ்வளவு விலை குறைந்துள்ளது என, மதுரையில் உள்ள டீலர்கள் கூறியதாவது:

ேஹாண்டா

சீத்தராமன், பொதுமேலாளர், கல்யாணி ேஹாண்டா : 'பர்சேஸ் ' விலையைப் பொறுத்தவரை 2 சதவீதம் குறைந்து விட்டது. ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் ஆக்டிவா டூவீலருக்கு ரூ.969, ஆக்டிவா 125 மாடல் ரூ.1,273 குறைந்துள்ளது. சி.பி.யூனிகார்ன் 160 ன் விலை ரூ. 1,689, சி.பி., கார்னெட் ரூ.1,934 குறைந்துள்ளது. இதை விட பெரிய டூவீலர்களுக்கு அதிகபட்சமாக ரூ.4,000 வரை விலை குறைகிறது. டூவீலர் விற்பனை கூடவோ, குறையவோ இல்லை. கடந்த மாதமே ஆக்டிவா வாங்கி வைத்து விட்டோம். ஆனால் விலை குறைவாக விற்பனை செய்வதால் வாடிக்கையாளருக்கு லாபம்.

யமாஹா

கணேசன், பங்குதாரர், பிரனீல் ஜி மோட்டார்ஸ்: ஸ்கூட்டர் மாடலில் யமாஹா ரே இசட், ரே இசட் ஆர், பெசினோ, ஆல்பா ரகங்கள் ரூ.1,500 வரை குறைந்துள்ளன. எப் இசட் வி2, ஆர்ஒன் 5, எப்இசட் 25 மாடல்கள் ரூ.3,000 வரை குறைந்துள்ளன. ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கு பின், விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. வாடிக்கையாளருக்கு குறைந்தளவு விற்பனை விலைக்கு தருவதால், அதற்கான ஈட்டுத்தொகையை யமாஹா உற்பத்தியாளர்களே தந்து விடுகின்றனர். எங்களுக்கும் நஷ்டமில்லை. இதனால் வாடிக்கையாளருக்கு மட்டும் கூடுதல் லாபம்.

டிவிஎஸ்

விஜயன், சத்யஜோதி மோட்டார்ஸ் (பி) லிட் பொதுமேலாளர் : டிவிஎஸ்., எக்ஸல் 100 ரகத்திற்கு ரூ.250 குறைந்துள்ளது. ஸ்கூட்டி, பெப், இசட் இ எஸ், வீகோ, ஜூபிடர் ரகங்களுக்கு ரூ.1,000 வரையும், ஸ்டார் சிட்டி, ஸ்போர்ட்ஸ், விக்டர் ரகங்களுக்கு ரூ.750 ம், அப்பாச்சி 150 சிசி ரகங்களுக்கு ரூ.2,000 குறைந்துள்ளது. வரிக்குறைவு இன்னும் வாடிக்கையாளர்களை சென்றடையவில்லை. இது வாடிக்கையாளர்களுக்கான நல்ல தருணம். ஸ்பேர் பார்ட்ஸ் விலையும் குறைந்துள்ளது.

பஜாஜ்

ஹரீஷ் அகர்வால், உரிமையாளர், ஆர்.கே.பஜாஜ் : ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் இன்னும் வர்த்தகம் முழுமையாக சீராகவில்லை. தொலைநோக்கு பார்வையில் பார்த்தால் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் ஆட்டோமொபைல் வளர்ச்சி அதிகரிக்கும். சிடி100, பிளாட்டினா ரூ.1,000 வரையும், அவெஞ்சர் மாடல் ரூ.2000, பல்சர் ரூ.2,500 வரை குறைந்துள்ளது. டாமினர் 400 மற்றும் கே.டி.எம்., மாடல் 350 சி.சி., க்கு மேற்பட்ட டூவீலர்களுக்கு 3 சதவீத வரி அதிகரித்து ரூ. 3,000 ரூபாய் அதிகரித்துள்ளது. 350 சி.சி., க்கு மேற்பட்ட வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 6,000 அதிகரித்திருந்தாலும் விற்பனை குறையவில்லை.
தென்காசி எலுமிச்சை கிலோ ரூ.50 க்கு விற்பனை

பதிவு செய்த நாள் 09 ஜூலை
2017
00:35

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலத்தில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வந்திருந்தன. அதேபோன்று தென்காசி புளியங்குடி பகுதியில் இருந்து எலுமிச்சை பழங்களும் விற்பனைக்கு வந்திருந்தன. சிறிய வகை எலுமிச்சை பழங்கள் கிலோ ரூ 40க்கும், பெரிய பழங்கள் ரூ 50க்கும் விற்பனை செய்யப்பட்டன. இந்த எலுமிச்சை பழங்கள் ஊறுகாய் தயாரிப்பிற்கு ஏற்ற தன்மையுடையதாக இருந்ததால் அதிகளவில் விவசாயிகள் வாங்கிச் சென்றனர்.
திருடர்களிடமிருந்து காப்பாற்றிய நாகப்பாம்பு...நன்றிக்காக நினைவு மண்டபம் எழுப்பிய தம்பதியர்

பதிவு செய்த நாள் 09 ஜூலை
2017
00:07

காரியாபட்டி :பண்டைய காலத்தில் அதிசயம், ஆச்சரியமூட்டும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.பெரும்பாலான வரலாறுகள் எப்படியாவது தெரிந்துவிடும். சில வரலாறுகள் வெளியில் வராமல் காணாமல் போய்விடும். ஆனால் அப்படிப்பட்ட வரலாறும் எப்படியாவது சில நேரங்களில் வெளிச்சத்திற்கு வரும் போது, நமக்கு ஆச்சரியமாக இருக்கும். அந்த வகையில், காரியாபட்டி மாங்குளத்தில் ஒரு நினைவு மண்டபம் பாழடைந்து, மாடு கட்டும் இடமாக கிடந்தது. யாரால், எதற்காக நினைவு மண்டபம் கட்டப்பட்டது என விசாரித்த போது, பலருக்கு அதுபற்றிய விபரங்கள் தெரியவில்லை.

அங்குள்ள பெரியவரிடம் கேட்டபோது, மண்டபம் கட்டியதற்கான கருவை மட்டும் தெரிவித்தார். முழுவிபரம் தெரியாவிட்டாலும், அவர் சொன்ன வரலாறு மிகவும் அருமையானதாக இருந்தது. அது என்னவென்றால், ராணிமங்கமாள் காலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் பாதையிருந்தது. அதில் ஒரு பாதை மாங்குளம் வழியாக திருமங்கலம் வரை செல்கிறது.

தலைதெறிக்க ஓட்டம்
பாதசாரிகள் தங்கி ஓய்வெடுக்க ஆங்காங்கே மண்டபம், பசியாற அன்னதான சத்திரம், தாகம் தீர்க்க கிணறு போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தன. வாணிபத்திற்கோ, உறவினர்களின் வீடுகளுக்கோ செல்ல ஒரு வாரம், பத்து நாட்கள் என நடந்து சென்று வருவது வழக்கம். அப்படி வாணிபத்திற்காக மதுரைக்கு வந்த செட்டியார் தம்பதியினர், மாங்குளத்தை வந்தடைந்த போது இரவாகிவிட்டது. இதற்கு மேல் நடந்து சென்றால் திருடர்களிடம் சிக்கிக் கொள்வோம் என யோசித்து, அங்கிருந்த அன்னதான சத்திரத்தில் உணவு சாப்பிட்டு அங்கேயே ஓய்வெடுக்க முடிவு செய்தனர். அவ்வாறு சாப்பிட்டு ஓய்வெடுத்த போது, நடு இரவில் திருடர்கள் இவர்களை சுழ்ந்துள்ளனர். அப்போது, ஒரு நாகப் பாம்பு துாங்கிக் கொண்டிருந்த தம்பதியரின் அருகில் தலையை துாக்கி நின்றுகொண்டிருந்ததை பார்த்த திருடர்கள், தலைதெறிக்க ஓடினர். விடியும் வரை எங்கும் நகராமல் பாம்பு அங்கேயே நின்றிருந்தது.
இன்றளவும் பேசுகிறது


காலையில் எழுந்து பார்த்த போது, பாம்பு மெதுவாக நகர்ந்து சென்று மறைந்தது. இந்த அதிர்விலிருந்து மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த தம்பதியினர் அங்கேயே தங்கினர். அப்போது, ஒரு நாள், இரவில் நடந்த சம்பவத்தை திருடன் ஒருவன் கூறியதை கண்டு ஆச்சரியமடைந்தனர் தம்பதியர். தங்களுக்கு அரணாக இருந்த நாகப் பாம்புக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக காலமெல்லாம் இவற்றை நினைவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த இடத்தில் நினைவு மண்டபம் எழுப்பி வழிபட்டு வந்துள்ளனர். தனது வருமானத்தில் ஒருபகுதியை அங்கிருக்கும் அன்னதானத்திற்கு வழங்கினர்.

இன்று சிதலமடைந்து, மாடுகள் கட்டும் இடமாக இருந்தாலும், அவர்களது நினைவை இன்றளவும் பேச வைத்திருக்கிறது. ஒரு துாணில் அந்த தம்பதியரின் சிலையும் வடிக்கப்பட்டு உள்ளது. ஊருக்கு மேற்கு பக்கத்தில் உள்ள இந்த நினைவு மண்டபம் இன்றும் நன்றிக்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறது.
காது கேளாத ஊழியருக்கும் ரூ.1,000 பயணப்படி

பதிவு செய்த நாள் 08 ஜூலை
2017
19:32

காது கேளாத அரசு ஊழியர்களுக்கும், 1,000 ரூபாய் பயணப்படி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு ஊழியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோரில், பார்வையற்றோர், கை, கால் ஊனமுற்றோருக்கு, 1989ல் இருந்து பயணப்படியாக, 50 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. 2010ல், பயணப்படி, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. .இந்த படி, தற்போது, காது கேளாத ஊழியர்களுக்கும் வழங்க, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், 'காது கேளாத ஊழியர்கள், அரசு மருத்துவமனையில் சான்று பெற்று வழங்கினால், படியை அனுமதிக்கலாம். பணிபுரியாத காலங்கள், மருத்துவ விடுப்பின் போது பயணப்படி வழங்கக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -
காரைக்காலில் மாங்கனி திருவிழா மாம்பழங்களை அள்ளிய பக்தர்கள்


காரைக்கால், காரைக்கால் அம்மையார் கோவிலில் நடந்த, மாங்கனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்காலில், 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில், ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான மாங்கனி திருவிழா,6ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.

நேற்று முன்தினம் காரைக்கால் அம்மையார் பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடும், இரவு திருமண முடிந்த காரைக்கால் அம்மையார் பரமதத்தர் முத்து பல்லக்கில் வீதி உலா நடந்தது.

நேற்று அதிகாலை பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. நான்கு திசையிலும் வேதபாராயணங்கள், மேள தாளம் முழங்க, காலை, 6:30 மணிக்கு பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா வந்தார்.

அப்போது, சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்தனர். பின், வீட்டு மாடியில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, மாங்கனிகளை பிடிக்க போட்டாபோட்டியில் ஈடுபட்டனர்.
ஆதார் - பான் இணைப்பால் போலிகள் 'காலி' ஒரு நபர், பல முகம் இனி இருக்காது!

பதிவு செய்த நாள் 09 ஜூலை
2017
03:35



திருப்பூர் : 'பான்' கார்டுடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், பல நன்மைகள் இருப்பதாகவும், கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்போர் மாட்டிக் கொள்வர் எனவும் ஆடிட்டர்கள், தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வங்கி கணக்கில், 'பான்' எண், ஆதார் இணைக்கப்பட்டுள்ளன; ஜி.எஸ்.டி.,யிலும், இவ்விரண்டும் இணைக்கப்பட்டுள்ளன. அதுபோல், பான் கார்டுடன் ஆதார் இணைப்பதும், கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுக்கோப்பான முறைகளால், வரிஏய்ப்பு செய்வோரைகண்டறிவது, அரசுக்கு எளிதாகி விடுகிறது.

திருப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர், தனஞ்செயன் கூறியதாவது:பணம் மறுசீரமைப்பின் போது, பான் கார்டு வழங்கினால், சிக்கலாகும் என்பதற்காக, பலரும், ஆதார் எண் வழங்கி, பணம் செலுத்தியுள்ளனர். பான் கார்டு, ஆதார் இணைப்பால், கறுப்பு பணம் செலுத்தியோர் சிக்கிக்கொள்வர்.

வரி ஏய்ப்பு நோக்கத்துக்காக, போலி பான் கார்டுகள் பெறப்படுகின்றன; ஆதார், பான் இணைப்பால், இதுபோன்ற முறைகேடுகளும் தடுக்கப்படும். நேர்மையானவர்களுக்கு, இதனால் நன்மையும் இல்லை, தீமையும் இல்லை. அதேநேரம், முறைகேடுகளில் ஈடுபட நினைப்போர், பயந்து தான் ஆகவேண்டும். எதிர்காலத்தில், கறுப்புப் பணம் உருவாகாமல் இருக்கவும், இந்த கட்டமைப்புகள் உதவிகரமாக அமையும்.இவ்வாறு ஆடிட்டர் தனஞ்செயன் கூறினார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர், ராஜாசண்முகம் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரே நபர், வெவ்வேறு பெயர், முகவரிகளில் பான் கார்டு பெறுகின்றனர். ஆதார்,- பான் இணைப்பால், ஒரு நபர்; பல முகம் என்கிற நிலை ஒழிந்துவிடும். வருமான வரி, வர்த்தகம் சார்ந்த வரி ஏய்ப்புகள் தடுக்கப்படும்.

சில தொழில் துறைகளில், பண பரிவர்த்தனைகள் மறைமுகத் தன்மை கொண்டுள்ளன; அவையெல்லாம் இனி, வெளிப்படை தன்மையுடன் தான் நடந்தாக வேண்டும். சீர்திருத்த நடவடிக்கைகளால், நீண்ட கால அடிப்படையில், பல நன்மைகள் கிடைக்கும்.

அரசுக்கு வரி வருவாய் அதிகரித்து, மக்களுக்கு பயனளிக்கும் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை உருவாக்க, வழி பிறக்கும். சிலர், பான் கார்டு, ஆதார் இணைப்பை எதிர்க்கின்றனர்; இதற்கு அவசியமே இல்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. தவறு செய்வோர் தான் பயப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கூறினார்.
- நமது நிருபர் -

NEWS TODAY 25.12.2025