Thursday, July 27, 2017

PM to launch train from Rameswaram to Ayodhya
Ramanathapuram:
TNN 
 


Prime Minister Narendra Modi will flag off a new weekly train from Rameswaram to Faizabad via Ayodhya on Thursday during his visit to inaugurate the memorial of late President, A P J Abdul Kalam.
 
He will be flagging off the inaugural special at Mandapam in Ramanathapuram district through video-conferencing.
The inaugural special, train no. 06793 will leave Rameswaram at 12.30pm on Thursday, Chennai Egmore at 3.20am on Friday and re ach Faizabad at 11pm on Saturday . Advance reservation for the inaugural is open.The regular train will be numbered 1679316794, according to a statement from the railways.

Regular service of train no. 1679316794 Rameswaram-Faizabad-Rameswaram Weekly Express via Ayodhya will begin on August 6, Sunday from Rameswaram and on August 9, Wednesday from Faizabad. Train no.16793 will leave Rameswaram on Sundays at 11.50pm and reach Faizabad at 8.30am on Wednesdays.


Can't delay counselling, MCI tells Pondy CM
Puducherry: 
 


`MBBS Classes Should Begin On August 1' 
 
The Medical council of India (MCI) turned down the request of chief mini ster V Narayana samy to postpone the first round of counselling to fill up MBBS seats under management quota in three private me ment quota in three private medical colleges and hospitals in the Union territory of Puducherry beyond the July 24 deadline.
 
MCI secretary (in-charge) Reena Nayyar while replying to Narayanasamy's letter cited a Supreme Court judgement and urged him to ensure that the statutory time schedule for completion of admission process is `strictly complied with' and `no deviations' made. Narayanasamy in a letter dated July 23 addressed to the Union health and family welfare minister Jagat Prakash Nadda, marking a copy to MCI chairperson, sought permission to allow the centralized admission committee (Centac) to continue first round of counselling to fill up MBBS seats under management quota in three private colleges beyond July 24.

Nayyar said the Supreme Court in an order dated July 5 readjusted the dates of various stages of admission to MBBS course following delay in publishing the results of National eligibility cum entrance test (NEET). But the Supreme Court declared that the last date (August 31) up to which the students can be admitted to MBBS course against the vacancies by the deemed universities and medical institutions remains unchanged.

The government claimed that the decision to seek postponement was taken following a representation from various students and parents association that Tamil Nadu students will get maximum seats in Puducherry under management quota as the admission has been stalled in Tamil Nadu.

A spokesperson of the students-parents association V Balasubramanian said ironically both students and private college managements gain out of postponement as Pondy students need not compete with Tamil Nadu students and private colleges too have time to focus on next course of action. As per the readjusted dates, the first round of counselling for MBBS seats under state and management quotas must be completed between July 16 and 24. Centac held the first round of counselling to fill up MBBS seats under government quota on July 22 and 23. But the committee postponed counselling to fill up MBBS seats under management quota on July 24 after Nayaranasamy's July 23 letter to Nadda and MCI chairperson.

Puducherry government might face the wrath of the topmost court, which can initiate contempt proceedings for failing to honour its order by holding the first round of counselling before July 24. As per the readjusted schedule, the students allotted seats in the first round of counselling must join the colleges by July 31.

The committee must hold the second round of counselling from August 1to 7 for the all India quota and from August 8 to 19 for state and management quotas. Classes for the first year MBBS programme must commence from August 1 and the last date for admission should be August 31.
Secure 50% quota in MBBS seats: Bedi

Puducherry:Lt governor Kiran Bedi on Wednesday urged the Congress government to pass a resolution in the legislative assembly earmarking 50% of MBBS seats in private medical colleges and hospitals under state quota. She insisted the government pass the resolution for the benefit of the students in the Union territory. She regretted that the government did not do so in the last assembly session.

“If the government passes a resolution in the assembly I will forward it to the Union government for immediate approval,“ she said. Bedi is of the opinion that such a resolution will put an end to the stalemate in sharing of seats between the government and managements of private colleges every year. TNN
Discussed ordinance path for NEET exemption with Centre: Health min
TIMES NEWS NETWORK 
 


Tamil Nadu To Seek Consent From Union Home Ministry Before Making Any Move 
 
Making last-ditch ef forts to convince the Centre to exempt Tamil Nadu from the National Eligibility Cum Entrance Test (NEET), at least for two years, the state is considering several options, including the promulgation of an ordinance, health minister C Vijaya Baskar said.
 
“We discussed the idea for an ordinance in New Delhi. The ordinance will exempt state-run medical colleges from NEET for at least two years,“ he said.

The minister, who returned from New Delhi on Tuesday after meeting Prime Minister Narendra Modi and Union ministers, said the state tried to push for the Act passed by the TN assembly , but the Centre had yet to respond favourably . “The priority is the get the President's nod. We are hoping to arrive at a decision in two days,“ he said. “We have given the Centre details to queries it sent.“

Unlike the Act, an ordinance will require a prior consent from the Union home ministry . After the nod, the ordinance can be promulgated and sent for the governor's signature.
Legal experts say the state government is now left with three options if it wants to avoid NEET: presidential assent for its bill, ordinance and 85% reservation for state board students. But given the circumstances, a presidential nod for the two laws enacted earlier this year is near impossible.

On January 31, the assembly passed an Act to exclude Tamil Nadu from NEET. Since then, the state has been waiting for the President's assent without which the law cannot be enforced. The Centre has sent at least two sets of questions to the health department, but has not conveyed its final decision even after chief minister Edappadi K Palaniswami met Modi twice.

A team of five state ministers visited Union ministers and senior officials in the health, HRD, law and home ministries twice in the past 10 days to obtain the President's nod. Senior health department officials, including health secretary J Radhakrishnan, had been camping in New Delhi. But officials in the Centre said the file was with home minister Rajnath Singh.

“No decision has been taken.The delay is because we believe there may be huge legal and political ramifications,“ a senior official said.

But during discussions with Union law minister Ravi Shankar Prasad, legal experts suggested that the state should take the ordinance route as medical education is a concurrent subject. Prasad said the Centre may consider a temporary exemption from NEET for TN.

“For nearly 10 years, we have not had any competitive exams, unlike any other state,“ Vijaya Baskar said.“If we have to change, we will need to give our teachers and students a little time to adapt.“



வயதான கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யலாமா : அரசுக்கு உத்தரவு

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
23:41

மதுரை: வயதான கைதிகளுக்காக அனைத்து சிறைகளிலும் அறிவுரை குழுமம் அமைக்க தாக்கலான வழக்கில், உள்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை சின்ன சொக்கிகுளம் ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகளில் ஆயுள் கைதிகள் உள்ளனர். இவர்களில் 55 வயதிற்கு மேல் பெண்கள், 65 வயதிற்கு மேல் ஆண் கைதிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தண்டனை காலத்தில் இரண்டரை ஆண்டுகள் பூர்த்தி செய்திருந்தால், சிறை அதிகாரிகள் அடையாளம் கண்டு, அறிவுரை குழுமம் முன் ஆஜர்படுத்த வேண்டும். முன்கூட்டியே விடுதலை செய்ய சிறை விதிகளில் இடமுண்டு. இதை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை.
வயதான கைதிகளுக்காக அனைத்து சிறைகளிலும் அறிவுரை குழுமம் அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.

அரசு வழக்கறிஞர்: அனைத்து மாவட்ட சிறைகளிலும் அறிவுரை குழுமங்கள் செயல்படுகின்றன. சிறைகளுக்கு தனி விதிகள் உள்ளன. அனைத்து கைதிகளையும் சமமாக பார்க்க
முடியாது.

உச்சநீதிமன்றம், 'விதிகளுக்குட்பட்டு கைதிகள் விவகாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் அரசாணை பிறப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டுள்ளது. கைதிகள் விவகாரத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம், சிறை விதிகளுக்குட்பட்டுத்தான் முடிவெடுக்க முடியும், என்றார்.
நீதிபதிகள்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து உள்துறை செயலர் (சிறைத்துறை) ஆக.,9ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றனர்.
ஏழு மாதங்களில் 71 போலி டாக்டர்கள் கைது

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
23:06

தமிழகம் முழுவதும், ஏழு மாதங்களில், 71 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும், போலி டாக்டர்கள் நடமாட்டம் குறித்து, சுகாதார பணிகள் குழு கண்காணித்து, நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏழு மாதங்களில், 71 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து, மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் அலுவலக கண்காணிப்பாளர், கமலகண்ணன் கூறியதாவது: போலி டாக்டர்கள் பெயர் பலகை வைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் தரும் மருந்து சீட்டிலும், அவர்களின் பெயர் இருக்காது. மேலும், மருத்துவ கவுன்சில் பதிவு எண், ஐந்து அல்லது ஆறு இலக்கு எண்களாக இருக்கும். இதற்கு குறைவான எண்கள் இருந்தால், அவர்கள் போலி டாக்டர்கள் என, அடையாளம் காண முடியும்.போலி டாக்டர்கள் குறித்து, '104' என்ற எண்ணில், பொதுமக்கள் தகவல் தரலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
12:45



புதுடில்லி : ரூ.2000 நோட்டுக்களைத் தொடர்ந்து ரூ.200 நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. புதிய ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை வெளியிட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் முதலீடு மற்றும் கரென்சி துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல்கட்டமாக ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி ஜூன் மாதம் துவங்கப்பட்டது. 21 நாட்களில் இப்பணி முடிவடைந்தது. இதனால் அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

மேலும் ரூ.500 நோட்டுக்களை அதிக அளவில் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.200 நோட்டு வெளியீட்டிற்கு பிறகு ரூபாய் நோட்டு தட்டுப்பாடு குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் - சென்னை பகல் ரயில் : கலாம் கனவு நனவாகுமா

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
23:34


ராமநாதபுரம்: 'ராமேஸ்வரம்- சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும்' என்ற கலாமின் கனவை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும்.
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக மாலை 5:00 மணிக்கும், அரியலுார், விருத்தாசலம் வழியாக இரவு 8:15க்கும் தினமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஞாயிறு தோறும் ராமேஸ்வரம்- -புவனேஸ்வர் ரயில், புதன் தோறும் ராமேஸ்வரம்- வாரணாசி ரயில் சென்னை வழியாக செல்கிறது.

பாம்பன் கடலில் 2.3 கி.மீ., க்கு ரயில் துாக்கு பாலம் 1914ல் அமைக்கப்பட்டது. இப்பாலத்தின் நுாற்றாண்டு விழா 2014 ஜன.,28ல் நடந்தது. விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தலைமை வகித்து நுாற்றாண்டு விழா கல்வெட்டை திறந்து வைத்தார்.

அவர் பேசுகையில், ''ஆர்ப்பரிக்கும் கடல். மேலே வானம். இரண்டிற்கும் நடுவே பாலத்தில் ரயில் செல்லும் போது தென்றல் காற்று இதமாக வீசும். அதில் தெய்வீக சங்கீத ஓசை கேட்கும். தொழில்நுட்ப பெருமை பெற்ற இப்பாலம் என் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது. இவ்விழாவில், ரயில்வே நிர்வாகத்திற்கு ஒரு கோரிக்கை விடுக்கிறேன். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் பாம்பன் விரைவு ரயில் ஒன்றை இயக்க வேண்டும். அந்த ரயிலில் மீன்களை பதப்படுத்தும் வசதியுடன் கூடிய ஒரு பெட்டியும் இணைக்க வேண்டும்,'' என்றார்.

ஆனால், அவரது கோரிக்கை நிறைவேறவில்லை. இது கலாமின் கோரிக்கை மட்டுமல்ல; வர்த்தகர், மீனவர்களின் கோரிக்கையும்தான்.
'இன்று நடக்கும் நினைவக திறப்பு விழாவில், பிரதமர் மோடி அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்' என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
பொது மக்கள் பணம் கட்டி ரயில் நிலையம் மீண்டும் திறப்பு

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
23:33

நாகர்கோவில் : பொது மக்கள் பணம் கட்டி மூடிய ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 18.81 லட்சம் ரூபாய் ரயில்வேக்கு செலுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில்- திருநெல்வேலி ரயில் பாதை போக்குவரத்து கடந்த 1981-ம் ஆண்டு ஏப்ரல் எட்டாம் தேதி தொடங்கியது. ஆரல்வாய்மொழி மற்றும் வள்ளியூர் ரயில் நிலையங்களுக்கு இடையே காவல்கிணறு ரயில் நிலையம் அமைந்திருந்தது. இது இந்த பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக இருந்தாலும் வியாபார நோக்கில் வருமானம் கிடைக்காமல் நஷ்டத்தை சந்தித்து வந்தது.

இதனால் 1994-ல் இந்த நிலையம் நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது இந்த ரயில் நிலையத்த்தின் சமீபம் மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ. மற்றும் ஏராளமான தனியார் பொறியியல் கல்லுாரிகள் உள்ளது. எனவே இதனை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. காவல்கிணறு ரயில் மீட்புக்குழு உருவாக்கப்பட்டு கடந்த 23 ஆண்டுகளாக அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சந்தித்து முறையிட்டனர். இதற்காக பல பேராட்டங்களும் நடைபெற்றது. இதை தொடர்ந்து ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க முன்வந்த ரயில்வே துறை, 18 லட்சத்து 81 ஆயிரத்து 250 ரூபாய் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து நிர்வாகம், ரயில் மீட்புக்குழு, நுகர்வோர் சங்கம் இணைந்து கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்தை அணுகி கோரிக்கை விடுத்தனர். கூடங்குளம் அணுமின்நிலையம் சார்பில் 10 லட்சம் ரூபாய் ரயில்வேக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள 8 லட்சத்து 81 ஆயிரத்து 250 ரூபாயை ரயில்வேக்கு பொதுமக்கள் நன்கொடை மூலம் செலுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து ரயில் நிலையத்தை திறக்க ரயில்வேதுறை உத்தரவிட்டுள்ளது. தற்போது இங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் நடைமேடை அமைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மின் இணைப்பு பெற 4.25 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. புதிய ரயில்வே கால அட்டவணை அமலுக்கு வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்த ரயில் நிலையம் செயல்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படுவதால் காவல்கிணறு சுற்று வட்டார மக்கள் மகிழ்ச்சி அடைந்து்ளளனர்.
ராமேஸ்வரம் - அயோத்தி ரயில் அட்டவணை அறிவிப்பு

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
22:45

ராமநாதபுரம்: பிரதமர் மோடி துவக்கி வைக்கும் ராமேஸ்வரம்- - அயோத்தி வாராந்திர விரைவு ரயில் புறப்படும், சென்றடையும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - அயோத்தி ஆகிய புனித தலங்களை இணைக்கும் வகையில், வாராந்திர விரைவு ரயிலை, பிரதமர் மோடி இன்று
துவக்கி வைக்கிறார்.ஞாயிறுதோறும் இந்த ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து, ஞாயிறுதோறும், இரவு, 11:50 மணிக்கு புறப்படும். மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், சென்னை, கூடூர், விஜயவாடா, வாராங்கல், பாலர்ஷா, இட்டார்சி, ஜபல்பூர், பாட்னா, அலகாபாத், ஜான்பூர் ஆகிய நிலையங்களில் நின்று, புதன் காலை, 8:00 மணிக்கு அயோத்தி சென்றடையும். அங்கிருந்து, 8:30 மணிக்கு பைசியாபாத் வரை செல்லும்.

ஏமாற்றம் : மறு மார்க்கத்தில், புதன் இரவு, 11:55 மணிக்கு, அயோத்தியில் புறப்பட்டு, சனி காலை, 8:50 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடையும். இந்த ரயில் வெள்ளி மாலை, 6:50க்கு சென்னைக்கும், சனி காலை, 8:50க்கு ராமேஸ்வரத்திற்கும் வரும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட தலைநகரான ராமநாதபுரம், வர்த்தக நகரமான பரமக்குடியில் இந்த ரயில் நிற்காதது, அந்த பகுதி மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
முற்றிலும் சரியானது 'நீட்' : சாதித்த மாணவர்கள் சான்று

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
21:57


கோவை: 'நீட் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் தான், மருத்துவ மாணவர்களை சேர்க்க வேண்டும்; விலக்கு கோரும் செயல்பாடுகளை, தமிழக அரசு நிறுத்த வேண்டும்' என, தனியார் பள்ளி மாணவர்கள், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

'நீட் தேர்வில், தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என, பல்வேறு கட்சிகள், கோரிக்கை விடுத்து வருகின்றன. இதைக் கண்டித்து, கோவையில், 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற, தனியார் பள்ளி மாணவர்கள், 30க்கும் மேற்பட்டோர், தங்கள் பெற்றோருடன், நேற்று, பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

மாணவர் சிரில் ராஜன் கூறுகையில், ''நீட் தேர்வில், நல்ல மதிப்பெண் பெற்று காத்திருக்கும் நிலையில், தேர்விலிருந்து விலக்கு கோரும் செயல்பாடு ஏற்புடையதல்ல. மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்த, ஒரு சிலர் மட்டுமே விலக்கு கோருகின்றனர்.

'நீட்' தேர்வுக்கு விலக்கு பெறும் செயல்பாடுகளை, மாநில அரசு தொடர்ந்தால், நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுஉள்ளோம்,'' என்றார்.
பெற்றோர் தரப்பில், முனுசாமி என்பவர் கூறுகையில், ''பிளஸ் 1, பிளஸ் 2வில், அனைத்து பாடங்களையும் முழுமையாக படிக்கும் மாணவர்களால் மட்டுமே, 'நீட்' தேர்வை எதிர்கொள்ள முடியும்.

''இத்தேர்வு முறை முற்றிலும் சரியானது. தமிழக அரசியல்வாதிகளுக்கு, இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. 'நீட்' தேர்விலிருந்து விலக்கு பெறும் செயல்பாடுகளை, உடனடியாக கைவிட வேண்டும்,'' என்றார்.
எலக்ட்ரானிக்ஸ் கடைகளாக மாறும் காஞ்சி பட்டு கடைகள்

பதிவு செய்த நாள் 27 ஜூலை
2017
02:01

பட்டு நெசவுத் தொழில் நலிவால், காஞ்சிபுரத்தில், நெசவுத் தொழிலுக்கு மூலப்பொருட்களை விற்று வந்த, பட்டு கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகளாக மாறி வருகின்றன.

கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரத்தில் பட்டு நெசவு தொழில் உச்சத்தில் இருந்தது. தனியார், கூட்டுறவு சங்க நெசவாளர்களும் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்தனர்.தற்போது, நெசவுத்தொழில் நலிவால், நெசவாளர்களும், நெசவு தொழிலை சார்ந்து, தொழில் செய்தவர்களும், தற்போது நலிவடைந்துள்ளனர்.கடந்த, 1990ம் ஆண்டுகளில், காஞ்சிபுரத்தில், பட்டு நெசவுக்கு தேவையான பட்டு, கோறா, சப்புரி, ஜரிகை போன்ற பொருட்களை விற்பனை செய்யும், கடைகள், 500க்கும் மேற்பட்டவை நல்ல முறையில் லாபகரமாக இயங்கின.

தற்போது, 50க்கும் குறைவான கடைகளே உள்ளன. குறிப்பாக சங்கூசா பேட்டை, எண்ணெய்காரத்தெருவில், வீட்டின் மாடிக்கு செல்லும் படியின் கீழ், சிறிய இடம் இருந்தாலும், அந்த இடத்திற்கும், வாடகைக்கு இடம் கிடைப்பதில் போட்டாபோட்டி நிலவியது.அந்த அளவிற்கு, இப்பகுதியில், பட்டு கடைகளே அதிகளவில் ஆக்ரமித்திருந்தன. கடை உரிமையாளர்களில் சிலர், தங்களின் பெயர்களுக்கு முன், 'பட்டுக்கடை'என, அடைமொழியாக வைத்துக்கொண்டவர்களும் உண்டு.

பட்டு நெசவு தொழில் நலிவடைந்ததால், பெரும்பாலான நெசவாளர்களும், நெசவு தொழில் சார்ந்தவர்களும் தற்போது மாற்றுத்தொழிலுக்கு நாடிச்சென்றனர்.அதுபோல, பட்டுநெசவுக்கு தேவையான மூலப்பொருட்களை விற்பனை செய்து வந்த பட்டு கடைகள் எல்லாம், தற்போது மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கும் கடைகளாக மாறி விட்டன.
- நமது நிருபர் -
2 ஆண்டுகளுக்கு 'நீட்' விலக்கு?

'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவை, மத்திய அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை.

இதனால், மருத்துவ படிப்புகளில், மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதமும், இதர பாடத்திட்ட மாணவர்களுக்கு, 15 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை பிறப் பித்தது.இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. தமிழக அரசின் மேல்முறை யீட்டு மனு, விசாரணையில் உள்ளது. இந்நிலை யில், 'நீட்' தேர்வில் விலக்கு கோரும்

சட்டத்துக்கு ஒப்புதல் பெற, முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

நிரந்தர விலக்கு அளிக்கும், தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு, மத்திய அரசு அனுமதி வழங்க மறுத் துள்ளது. எனினும், மாணவர்களின் நலன் கருதி, இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க, மத்திய அரசு முன் வந்துஉள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து,சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறிய தாவது: 'இந்தாண்டு மட்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க, சட்டத்தில்



வாய்ப்புள்ளதா என, பரிசீலிக்கப் படும்' என, மத்திய அரசு கூறியுள்ளது. இதற் காக, சட்ட நிபுணர்களுடன், தமிழக அதிகாரிகள், ஆலோசித்து வருகின்றனர். அத்துடன், குறைந் தது இரண்டு ஆண்டுகள் விலக்கு பெறும் முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
மருத்துவ கவுன்சில் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்




சென்னை போலீஸ் கமிஷனருக்கு, நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 27, 2017, 04:15 AM

சென்னை,


போலி ஆவணங்கள் மூலமும், ஆள்மாறாட்டம் செய்தும் ஹோமியோபதி டாக்டர்களாக பலர் பதிவு செய்துள்ளது குறித்து கொடுக்கப்பட்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனருக்கு, நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஹோமியோபதி டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலில், தலைவராக முன்பு பதவி வகித்துள்ளேன். மத்திய அரசின் ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சிலில் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், மத்திய மருந்தக தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளேன்.

இந்தநிலையில், தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலில், ஆள்மாறாட்டம் செய்து, போலி சான்றிதழ் மூலம் பலர் ஹோமியோபதி டாக்டராக பதிவு செய்துள்ளதாக கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன்.

என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மீண்டும் புகார் மனுவை போலீசாரிடம் வழங்கவேண்டும் என்றும் அந்த புகார் மனு மீது ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி, அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் 2013-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி உத்தரவிட்டது.

இதன்படி நான் கொடுத்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல், குற்றச்சாட்டுக்கு ஆளான தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலின் அப்போதைய தலைவர் டாக்டர் ஜி.பி.ஹனிமன் கொடுத்த விளக்க கடிதத்தின் அடிப்படையில், 2014-ம் ஆண்டு புகாரை முடித்து வைத்து விட்டார்.

டாக்டர் ஜி.பி.ஹனிமன் கொடுத்த புகாரில் ஏராளமான குளறுபடிகளும், பொய்யான தகவல்களும் இருந்தன. இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பினேன்.

இந்தநிலையில், போலி சான்றிதழ் கொடுத்தும், ஆள்மாறாட்டம் செய்தும் பலர் ஹோமியோபதி டாக்டராக பதிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளரிடம், தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் பதிவாளர் கடந்த ஆண்டு புகார் செய்துள்ளார். இதை பரிசீலித்த முதன்மை செயலாளர், இந்த மோசடி குறித்து போலீசில் புகார் செய்யும்படி பதிவாளருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ந் தேதி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பதிவாளரும் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம், புகார் அளித்துள்ளார்.

இந்த விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று, இந்த மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தமிழக முதல்-அமைச்சருக்கு மீண்டும் புகார் மனு அனுப்பினேன். ஹோமியோபதி மருத்துவ பதிவாளர் புகார் செய்து ஒரு ஆண்டு கடந்த பின்னரும், இதுவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

எனவே, ஆள் மாறாட்டம் செய்தும், போலி சான்றிதழ் கொடுத்தும் ஹோமியோபதி டாக்டராக பதிவு செய்துள்ளவர்கள் குறித்து ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யும்படி சென்னை போலீஸ் கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு (மோசடி வழக்குகளை விசாரிக்கும்) இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு வருகிற ஆகஸ்டு 2-ந் தேதிக்குள் சென்னை போலீஸ் கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை ஆகஸ்டு 2-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.







VIDEO : தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 6 பேர் கைது - காவல் துறை இணை ஆணையர் அன்பு







All Videos
























Sponsored by Revcontent










15 Celebs Who Got Disgustingly Fat and Ugly
Viral IQ







25 Photos North Korea Doesn't Want You To See. 3 Will Break Your Heart
SnoopyPlanet







Your Lost Hair Can Be Regrown in Days - Try This Simple Trick
FollicleRX







Diet for Lazy Ones! Just 1 Glass of This Before Bed - Fat Will Go Away in 7 Days
NUTRALYFE







How to Cure Arthritis? You Can Do It With This Remedy in 14 Days
ArthroNEO







86% Can't See Whats Wrong With These Pictures - Can You?
Viral IQ










ஆசிரியரின் தேர்வுகள்...



1. காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவர் சபீர்ஷா திடீர் கைது


2. “கலாம் சலாம்” பாடலை மோடியுடன் இணைந்து 5 கோடி மாணவ மாணவிகள் பாடுகின்றனர்


3. இரு தரப்பு உறவுகளின் பிம்பத்தை காட்டி சார்க் மாநாட்டை இந்தியா சீர்குலைக்கிறது; நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு


4. எல்லையில் இந்திய படைகள் ஊடுருவியிருப்பதாக சீனா குற்றம்சாட்டு


5. ஜனாதிபதி ராம்நாத்கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு




அதிகம் வாசிக்கப்பட்டவை



1. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை


2. ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம்


3. தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்க அவசர சட்டம்


4. கல்வி நிறுவனங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை ஒலிபரப்ப வேண்டும்


5. தனியார் நிறுவனங்களின் பாலை பரிசோதிக்க தமிழக அரசுக்கு தடை





மாவட்ட செய்திகள்

ஊதிய குறைப்பு நடவடிக்கையை கண்டித்து அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முற்றுகை








ஊதிய குறைப்பு நடவடிக்கையை கண்டித்து அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜூலை 26, 2017, 03:45 AM

சிதம்பரம்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுடமையாக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் சீர்திருத்த நடவடிக்கையின்படி அதிகப்படியான செலவினங்களை குறைப்பது, ஆட்கள் மற்றும் ஊதிய குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, ஏராளமான ஊழியர்களை தமிழகம் முழுவதும் உள்ள அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு பணியிட மாற்றம் செய்து வருகிறது. நிதி நெருக்கடியை குறைக்க தற்போது ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பு செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் படிப்பு மைய அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரி சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊதிய குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பு நடவடிக்கையை கண்டித்து நேற்று காலை 10.30 மணி அளவில் படிப்பு மைய அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரி சங்கத்தை சேர்ந்த 500–க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் பதிவாளர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து, கோ‌ஷங்களை எழுப்பி தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா, பதிவாளர் ஆறுமுகம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்கள், ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கக்கூடாது என்று முறையிட்டனர். இதற்கு பதில் அளித்த பதிவாளர் ஆறுமுகம், எங்களது உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி தான் செயல்பட முடியும் என்று கூறினார்.

இதனை கேட்ட போராட்டக்காரர்கள் பதிவாளர் அலுவலகம் முன்பே சிறிது நேரம் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். பின்னர், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.













சோமங்கலத்தில் அமைச்சர் படங்களை ஆபாசமாக சித்தரித்து ‘வாட்ஸ் அப்’பில் வெளியீடு 3 பேர் கைது

சோமங்கலத்தில் அமைச்சர் படங்களை ஆபாசமாக சித்தரித்து ‘வாட்ஸ் அப்’பில் வெளியீடு 3 பேர் கைது
 
காஞ்சீபுரம் மாவட்டம் மணிமங்கலத்தை சேர்ந்தவர் சிங்காரவேலன். இவர், நேற்று முன்தினம் சோமங்கலம் பகுதியில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு அங்குள்ள கடையில் டீ குடிக்க சென்றார். 
 
பூந்தமல்லி,

அப்போது அந்த டீ கடையை நடத்தி வரும் ரமேஷ் (வயது 39) என்பவர் தனது தம்பி மற்றும் நண்பருடன் சேர்ந்து தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் படங்களை ஆபாசமாக சித்தரித்து ‘வாட்ஸ் அப்’பில் உள்ள தனது நண்பர்களுக்கும், மற்ற குழுவுக்கும் அனுப்பினர்.

இது குறித்து சோமங்கலம் போலீசில் சிங்காரவேலன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ரமேஷ், அவருடைய தம்பி செந்தில்குமார் (37), இவர்களுடைய நண்பர் குணசேகரன் (27) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், அமைச்சர் ஜெயக்குமாரின் படங்களை ஆபாசமாக சித்தரித்து ‘வாட்ஸ் அப்’பில் பலருக்கு அனுப்பி இருப்பதும், இவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து தொழில்நுட்ப தகவல் சட்டத்தின் இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், குணசேகரன், செந்தில்குமார், ரமேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல் இனி ‘அரியர்ஸ்’ என்பதே கிடையாது

என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

ஜூலை 27, 2017, 05:15 AM

சென்னை,

என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் எடுத்த துறை தவிர, வேறு துறைகளில் உள்ள 2 விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேலும் ‘அரியர்ஸ்’ இல்லாத புதிய தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 4 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும். 2013-ம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இது குறித்து ஆலோசனை நடத்த சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்விக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிபால், தமிழ்நாடு தொழில்நுட்பக்குழு ஆணையர் ராஜேந்திர ரத்னு, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி டீன் டி.வி.கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் கல்விக்குழு டீன் டி.வி.கீதா நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 கல்லூரிகளிலும், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல் ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் போது அவர் வேறு ஒரு துறையில் கண்டிப்பாக அவரது விருப்பப்படி 2 பாடங்களை தேர்ந்து எடுத்து படிக்க வேண்டும். இந்த முறை ஏற்கனவே இந்த 4 கல்லூரிகளிலும் அமலில் உள்ளது.
ந்த கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள 518 என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலைகளில் பயிற்சி, கம்ப்யூட்டர் அறிவு ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.

புதிய பாடத்திட்டத்தின்படி ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் மாணவர்கள் மற்றொரு துறையில் குறைந்தது 2 விருப்ப பாடங்களையாவது படிக்க வேண்டும். இது விருப்பத்தின் அடிப்படையில் படிக்கும் முறை என்று அழைக்கப்படுகிறது.

உதாரணமாக மெக்கானிக்கல் பிரிவை எடுத்து படிக்கும் மாணவர், மெக்கானிக்கல் பிரிவில் உள்ள 2 பாடங்களுக்கு பதிலாக கணினி அறிவியல் பாடத்தில் ஏதாவது இரு பாடங்களை எடுத்து படிக்க வேண்டும். இது கட்டாயம். பி.இ. படிக்கும் போது 3-வது ஆண்டு கடைசியில் மாணவர்கள் 8.5 கிரேடு மதிப்பெண்கள் எடுத்திருந்து, அவர்கள் கடைசி ஆண்டு படிக்க முடியாவிட்டால் 5-வது ஆண்டு கல்லூரிக்கு வந்து 4-வது வருட படிப்பை தொடரலாம்.

இனி ‘அரியர்ஸ்’ என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒரு மாணவர் பி.இ. முதல் பருவ தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவருடைய ‘இன்டர்னல்’ மதிப்பெண் ரத்து ஆகிவிடும். அவர் மீண்டும் 3-வது பருவ தேர்வில் தேர்ச்சி பெறாத முதல் பருவத்திற்கான ‘இன்டர்னல்’ தேர்வை எழுத வேண்டும். பிறகு அவர் பருவ தேர்வை எழுத வேண்டும். அவர் விரும்பினால் தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய வகுப்பில் உட்கார்ந்து கேட்கலாம்.

தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய ‘இன்டர்னல்’, பருவ தேர்வை 7 ஆண்டுக்குள் எழுதலாம். இதனால் ‘அரியர்ஸ்’ என்ற வார்த்தை ஒழிக்கப்படுகிறது.

தற்போது சிறிய அளவில் கிரேடு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

‘0’ என்றால் மிகச்சிறப்பு. 10 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 91 முதல் 100 வரை.

‘ஏ+’ என்றால் சிறப்பு. 9 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 81 முதல் 90 வரை.

‘ஏ’ என்றால் மிகவும் நல்லது. 8 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 71 முதல் 80 வரை.

‘பி+’ என்றால் நல்லது. 7 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 61 முதல் 70 வரை.

‘பி’ என்றால் சராசரி நிலை. 6 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 50 முதல் 60 வரை.

50 மதிப்பெண்களுக்கு கீழே உள்ளவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்.

இவ்வாறு டி.வி.கீதா தெரிவித்தார்.

பேட்டியின் போது கல்விக்குழு துணை இயக்குனர் ஜி.கீதா உடன் இருந்தார்.

Wednesday, July 26, 2017

பிறப்பு சான்றுக்கு பதிலாக இறப்பு சான்று வழங்கிய பஞ்சாயத்து: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்த மாணவி

Published : 26 Jul 2017 10:29 IST

காசர்கோடு

கேரளாவில் காசர்கோடு மாவட் டத்தைச் சேர்ந்த பெல்லூர் பஞ்சாயத்து, பிறப்புச் சான்றித ழுக்குப் பதிலாக இறப்புச் சான்றிதழை வழங்கியுள்ளது. தற்போது 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு தவறை கண்டுபிடித்துள் ளார்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டம் பெல்லூர் பஞ்சாயத்து கின்னிங்கர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ரமணா பூஜாரி, லட்சுமி. அவர்களின் மகள் சுவேதா பூஜாரி. அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.


பள்ளி பதிவேட்டில் அவரது பிறந்த தேதி தவறாக குறிப்பிடப் பட்டிருந்ததால் அதில் திருத்தம் செய்ய சுவேதா கோரினார். அதற்காக மாணவியின் பிறப்புச் சான்றிதழை கொண்டு வரும்படி ஆசிரியை அறிவுறுத்தினார்.

அதன்படி தனது பிறப்புச் சான்றிதழை ஆசிரியையிடம் சுவேதா அளித்தார். அதைச் சரிபார்த்தபோது 14 ஆண்டுகளுக்கு முன்பு சுவேதா இறந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்து ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார். மாணவி சுவேதா அப்படியே அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.

நடந்தது என்ன?

கடந்த 2002 செப்டம்பர் 12-ம் தேதி சுவேதா பிறந்தார். அவரது தந்தை ரமணா பூஜாரி, மகளுக்கு பிறப்புச் சான்றிதழ் கோரி பெல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார். நான்கு மாத காலதாமதத்துக்குப் பிறகு 2003 பிப்ரவரியில் பஞ்சாயத்து நிர்வாகம் சான்றிதழை வழங்கியது.

ரமணா பூஜாரி எழுத, படிக்கத் தெரியாதவர். அவரால் மகளின் சான்றிதழில் என்ன எழுதியிருக்கிறது என்பதை படித்து அறிய முடியவில்லை. எனினும் சான்றிதழை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வந்தார்.

ஆரம்ப கல்வியின்போது அந்த சான்றிதழைப் பயன்படுத்தியே மகளை பள்ளியில் சேர்த்துள்ளார். சுவேதா 10-ம் வகுப்புக்கு வந்தபிறகுதான், பஞ்சாயத்து நிர்வாகம் பிறப்புச் சான்றிதழுக்குப் பதிலாக இறப்புச் சான்றிதழ் வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பஞ்சாயத்து நிர்வாகம் வருத்தம்

இந்த விவகாரம் குறித்து பெல்லூர் பஞ்சாயத்து செயலாளர் அச்சுதா மணியானி கூறியபோது, ‘‘மாணவியின் பிறப்புச் சான்றிதழில் தவறு நேர்ந்திருக்கிறது. அதற்காக வருந்துகிறோம். அந்த தவறை சரிசெய்து புதிய சான்றிதழ் வழங்கப்படும். எனது அனுபவத்தில் இதுபோன்ற தவறை பார்த்தது இல்லை’’ என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

Published : 26 Jul 2017 13:32 IST



கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையோடு தவளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதத்தில் நல்ல மழைப் பொழிவைச் சந்தித்த யாத்கிர் மாவட்டம், ஜூலையில் 31.02 மி.மீ. மழையையே சந்தித்தது. ஜூன் மாத மழை காரணமாக குறுகிய காலப் பயிர் வகைகளாக பருப்பு வகைகளை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். ஆனால் ஜூலையின் குறைவான மழையின் காரணமாக விளைச்சல் கடுமையாக சரிய வாய்ப்புள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். இதனால் கடவுளுக்கு சிறப்பு பூஜைகளை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

அத்தகைய சம்பவங்களில் ஒன்றாக தவளைக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வு செவ்வாய்க்கிழமை அன்று நாய்க்கல் கிராமத்தில் நடைபெற்றது.

திருமணத்தின்போது ஊர் மக்கள் அனைவரும் பாடல்களைப் பாடிக் கொண்டாடினர். இதுகுறித்துப் பேசிய பெண், ''எங்களால் மழை வேண்டி கடவுளிடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறோன்றும் செய்ய முடியாது'' என்றார்.

அனைத்து சடங்குகளும் முடிந்தபின்னர், புதிதாகத் திருமணம் ஆன தவளை ஜோடிகள் அதன் போக்கில் விடப்பட்டன.

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தம்: விரைவில் புதிய ரூ.200 நோட்டுகள்
By DIN | Published on : 26th July 2017 12:30 PM |




ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை மைசூரு பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ரூ.200 நோட்டுக்கள் அச்சிடுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பழைய ரூ,500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து அதனை ஈடு செய்யும் வகையில் ரூ.7.4 டிரில்லியன் மதிப்பிலான 3.7 பில்லியன் புதிய ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளன. புதிய ரூ.2000 நோட்டுகளை வெளியிட்டதன் மூலம் பொதுமக்கள் பெருமளவில் சில்லறைக்காக அவதிபட்டு வந்தனர்.

இந்நிலையில், ரூ.200 நோட்டுக்கள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனை ஈடு செய்யும் வகையில் புதிய ரூ.200 ரூபாய் நோட்டுகள் பற்றாக்குறையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை அடுத்த மாதத்தில் சுழற்சி முறையில் வெளி வர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் புள்ளி விபர கணக்கின்படி, ஜூலை 14 வரை ரூ.15.22 டிரில்லியன் அளலான பணம் புழக்கம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்காக ஒரு பில்லியன் ரூ.200 நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வருகிறது. ரூ.2000 நோட்டுக்களின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக இதுவரை சுமார் 14 பில்லியன் புதிய ரூ.500 நோட்டுக்கள் அதிகம் அச்சிடப்பட்டுள்ளன.

கடந்த 40 நாட்களாக ரூ.500 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அதிகம் புழக்கத்தில் விட்டு வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

தற்போதைய நிதியாண்டில் ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவதற்கு வாய்ப்பில்லை என்று மத்திய வங்கி தெரியவித்துள்ளது.

நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம்

By கா. அய்யநாதன்  |   Published on : 25th July 2017 02:15 AM  |  
Ayyanathan
Ads by Kiosked
புணேயில் இயங்கிவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இருபந்தைந்து வயதே ஆன பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த இளைஞர், அப்பணியில் இருந்து நீக்கப்பட்டதனால் மனமுடைந்து, அவர் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதியின் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
தற்கொலை என்பது நமது நாட்டில் இன்று அன்றாட செய்தியாகிவிட்டது என்றாலும், பொறியியல் பட்டம் பெற்ற ஓர் இளைஞர், வேலை இழப்பினால் மனமுடைந்து தனது வாழ்வையே முடித்துக்கொள்ள முற்பட்டது ஏன் என்பதை ஆராயாமல் கடந்து செல்ல முடியவில்லை.
அந்த இளைஞர் எழுதிவைத்த கடிதத்தில், தனது முடிவிற்கு யாரும் காரணமில்லை என்றும், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைக்கு உத்தரவாதம் இல்லை, எப்படி எனது குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று தெரியவில்லை என்றும் எழுதியுள்ளார்.
ஒரு வேலை போனால் இன்னோர் இடத்தில் வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை இந்த இளைஞருக்கு இல்லாமல் போனதேன் என்பதுதான் இங்கு ஆழந்து கவனிக்கத்தக்க விடயமாகும்.
ஆண்டொன்றுக்கு இலட்சக்கணக்கான தகவல் தொழில்நுட்பப் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளி வழங்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இன்று உலகளவில் ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப மேம்பாட்டு நெருக்கடியால் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன.
ஒரு பக்கம் புதிதாக பணியாளர்களை பணிக்கு அமர்த்துவதை முற்றிலுமாக நிறுத்தியுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மற்றொரு பக்கத்தில் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க இயலாதவர்கள் என்று கூறி, தங்கள் பணியாளர்களில் கணிசமான எண்ணிக்கையினரை பணி நீக்கமும் செய்து வருகின்றன.
எடுத்துக்காட்டாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் நான்கு முதன்மை நிறுவனங்களான டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல். ஆகியன கடந்த ஆண்டு பணியில் சேர்த்துக்கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் - டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதத்தில் - 21 விழுக்காடு குறைவாக பணியாளர்களையே சேர்த்திருக்கின்றன.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தைப் பொருத்தவரை 18 விழுக்காடு பணியாளர் சேர்ப்பு குறைக்கப்பட்டுள்ள நிலையில், பணியில் இருந்தோரில் 9 விழுக்காட்டினர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு 17,856 பேருக்கு புதிதாக வேலையளித்த இந்நிறுவனம், இந்த ஆண்டு 6,320 பேருக்கு மட்டுமே புதிதாக வேலையளித்துள்ளது. டி.சி.எஸ். நிறுவனம் 2015-ஆம் ஆண்டில் தனது மொத்த பணியாளர்களில் 16.7 விடுக்காட்டினரை பணிநீக்கம் செய்துள்ளது. 2016-ஆம் ஆண்டில் மேலும் 12.1 விழுக்காட்டினரை பணிநீக்கம் செய்துள்ளது.
மேலும் இதுபோல் காங்னிசன்ட் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் பலவும் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது தகவல் தொழில்நுட்பத் தகுதியை மட்டுமே பெற்றுள்ள பொறியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இத்துறையில் உலக அளவில் ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்ற வகையில் தங்களை தகவமைத்துக்கொள்ளவே எண்ணிக்கையை குறைத்து வருவதாக கூறும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தற்போது பணியில் இருக்கும் பொறியாளர்களின் தகுதி மேம்பாட்டை அதிகரிக்க உரிய பயிற்சிகளை அளித்து வருவதாகவும் கூறியுள்ளன.
விரைவில் மீண்டும் பணி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான 'நாஸ்காம்' தெரிவித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக திறம்பட பணியாற்றி தங்கள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியவர்களுக்கு பணிநீக்கம் என்பது மன ரீதியிலான பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கால் நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னர் இப்படிப்பட்ட ஒரு சூழல் ஏற்பட்டபோது அரசு தலையிட்டு, பணி இழப்பு ஏற்படா வண்ணம் காத்தது. ஆனால் இன்றைய அரசுகள் 'தொழிலில் தலையிடா' கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன.
சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இயங்கிவந்த நோக்கியா நிறுவனத்தில் உருவான சிக்கலால் கதவடைப்பு செய்தபோது அதில் பணியாற்றி வந்த 8,000 பேர் வேலையிழந்தனர். நட்டாற்றில் விடப்பட்ட நிலையை எண்ணி பணியிழந்தோர் போராடினர்.
எந்த அரசும் அவர்களுக்கு கைகொடுக்க முன்வரவில்லை. இன்றைய அரசுகள் கடைபிடிக்கும் கொள்கைகள் நிறுவனங்களுக்கு நிகரற்ற சுதந்திரத்தை தருகின்றன. வேலை இழந்தவர்கள் தொழில் தகராறு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரலாம் என்று மட்டும் தொழிலாளர் நலத்துறை ஆலோசனை கூறிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். நடந்ததா?
இன்றைக்கு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் கூட வேலைவாய்ப்பு பெருகவில்லை.
2015-ஆம் ஆண்டில் 1.55 இலட்சம் பேருக்கும், 2016-ஆம் ஆண்டில் 2.31 இலட்சம் பேருக்கும் மட்டுமே புதிதாக வேலை வாய்ப்புகள் உருவானதாக இந்திய ஒன்றிய அரசின் தொழிலாளர் நலத்துறை புள்ளிவிவரம் கூறுகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி - பொருளாதார வளர்ச்சிக்கான குறியீடு - மார்ச் மாதத்தோடு முடிந்த காலாண்டில் 6.1 விழுக்காடு வளர்ந்துள்ளது. ஆனால் வேலைவாய்ப்புக்கள் அதற்கு ஏற்ப வளரவில்லை! இதனை வேலையற்ற வளர்ச்சி (Jobless Growth) என்று கூறுகின்றனர். ஏன் இந்த நிலை? நம் நாட்டிலும், அயல் நாடுகளிலும் தகவல் தொழில்நுட்பத் துறை உட்பட பல்வேறு தொழில் துறைகளில் பணியாற்றி இன்று வேலையிழப்பை சந்திக்கும் இந்த இளைஞர்கள் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் தாங்கள் ஈட்டிய ஊதியத்தில் 20 முதல் 30 விழுக்காடு வரை தனி நபர் வருமான வரியாக கட்டினார்கள்.
இன்றைக்கு வேலை இழப்பை எதிர்நோக்கும் இவர்களுக்கு எந்த விதத்திலாவது வரி வசூலித்த நமது நாட்டு அரசு உதவித்தொகை ஏதும் வழங்குமா? சட்டத்தில் இடம் இல்லையென்பார்கள். அயல்நாடுகளில் வரியும் வசூலிக்கிறார்கள், வேலை இழப்பை சந்தித்தால் வாழ்வை ஈடேற்றும் அளவிற்கு உதவித் தொகையும் வழங்குகிறார்கள்.
இந்நாட்டின் இளைய சமூதாயத்தின் எண்ணிக்கைதான் மக்கள்தொகையில் பெரும் பங்கு என்று புள்ளிவிவரம் கூறுகிறது. அது இந்நாட்டின் பெரும் அறிவு, உழைப்புச் சொத்து என்று விவரிக்கிறது. அந்தச் சொத்து வருவாய் ஈட்டும்போது வரி வசூலிப்பதும், வருவாய் அற்றுப் போகும் நிலையில் நிர்கதியாய் விட்டு விடுவதும் சரியா?
தனது வருவாயில் வரி வசூலித்த நாடு, இக்கட்டான நிலையில் தன்னைத் தாங்கும் என்ற நிலை இந்நாட்டில் இருந்தால் பொறியியல் பட்டம் பெற்ற ஓர் இளைஞன் வாழ்வை முடித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமா?
ஆயினும் நன்கு படித்து, பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்கள் ஒரு வேலை போய்விட்டால் அதனால் எதிர்காலமே இருண்டுவிட்டதாக எண்ணிடலாமா? பெரும் செலவு செய்து படிக்க வைத்து, உங்கள் முன்னேற்றத்தில் தங்கள் எதிர்காலத்தைக் காண காத்திருக்கும் குடும்பத்தினரை அதிர்ச்சிக்கும் வேதனைக்கு ஆளாக்குவது அறிவுடைமை ஆகுமா?
படித்த படிப்பினால் பெற்ற பட்டமும் அறிவும் மட்டும்தான் ஒரு மனிதன் என்றால், படிக்க வகையில்லாமல், பட்டம் பெறாமல், கல்வி வாசனையே ஏதுமின்றி இந்நாட்டில் பல கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்றனரே, அவர்களெல்லாம் உடல் உழைப்பின் மூலம் தாங்கள் வாழும் வாழ்க்கைக்கானத் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு வாழவில்லையா?
அந்த உழைப்பின் பயனாக இந்நாட்டின் உற்பத்தி பெருகவில்லையா? நீங்கள் பணியாற்றிடும் அமைப்புச் சார்ந்த தொழில்களில் இந்நாட்டினர் 18 விழுக்காடுதான் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர் என்பதும், அமைப்புச் சாரா (Un-organised sector)  தொழில்களில்தான் 80 விழுக்காட்டினர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர் என்பதும், அவர்களுக்கு எந்த வேலை உத்தரவாதமும் கிடையாது என்பதும் நீங்கள் அறிவீர்களா?
அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களுக்கு நம்பிக்கையே வாழ்வாகிறது. இப்படி தற்கொலை செய்து கொள்கிறவர்கள் பெரும்பாலும் தங்களின் புறத்தகுதிகளை மட்டுமே நம்பி வாழ்கிறவர்களாக உள்ளனர். நாம் பெறும் கல்வி நமக்கு புற உலகைப் பற்றிய அறிதலையும் புரிதலையும் தருகிறது என்பது உண்மையே.
ஆனால் அதுவே நமது வாழ்விற்குப் போதுமான பலமாக ஆவதில்லை. மானுடப் பிறப்பான நமக்கு பிறவியின் அடிப்படையில் பல ஆற்றல்கள் உள்ளன. இதனை ஆழ்ந்துணர்ந்து செயல்படுவதே நமக்கு மேன்மையைத் தரும். இதுவே அக நம்பிக்கையாகும், இதையே தன்னம்பிக்கை என்றும் கூறலாம்.
ஆற்றலே மனிதருக்கு ஆதாரம், அவையும் எப்போதெனில் அவனிடம் அசைக்க இயலாத நம்பிக்கை உள்ளதுபோது மட்டுமேயாகும். இளைஞர்கள், மாணவர்கள் இதனை உணர்ந்து துணிவுடன் வாழ்வை எதிர்கொள்ள வேண்டும்.

Breaking: SC Quashes Appointment Of 1.78 Lakh Assistant Teachers In UP [Read Judgment] | Live Law

Breaking: SC Quashes Appointment Of 1.78 Lakh Assistant Teachers In UP [Read Judgment] | Live Law: A two Judge Bench of the Supreme Court on Tuesday quashed the appointment of 1.78 Lakh Assistant Teachers in Junior Basic Schools. The appointments were done by the Government by absorbing of Shiksha Mitras into the regular service. The Bench of Justices AK Goel and UU Lalit was hearing appeals against the judgment of the …

Even If Wife Leaves Husband, It Doesn’t Absolve Him Of Duty To Provide Maintenance To Minor Child: Bombay HC [Read Judgment] | Live Law

Even If Wife Leaves Husband, It Doesn’t Absolve Him Of Duty To Provide Maintenance To Minor Child: Bombay HC [Read Judgment] | Live Law: Imposing a cost of Rs. 25,000 on one Nirajkumar Kapurchand Jain who has a 7-year-old son, the Nagpur bench of Bombay High Court has said a father cannot run away from the responsibility nor can he be allowed to skip his obligation to maintain his son or daughter and father is duty-bound to provide all …
கவிதை திருட்டு வழக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
00:00


மதுரை: கவிதை திருட்டு வழக்கில், கல்லுாரி மாணவர் வருத்தம் தெரிவித்து, கவிதையை உண்மையில் இயற்றிய மற்றொரு கல்லுாரி பேராசிரியருக்கு கடிதம் எழுதி, விழா மலரில் பிரசுரிக்க வேண்டும், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் திருவிதாங்கோட்டில் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். 1994 ல் கல்லுாரி சார்பில் வெளியான இதழில் 'கூந்தலைத் தட்டி முடி,' தலைப்பில் கவிதை எழுதியிருந்தார்.

மார்த்தாண்டத்திலுள்ள ஒரு கல்லுாரியின் 1996-97 ஆண்டுவிழா மலரில், 'கூந்தலை தட்டி முடி' கவிதை எவ்வித மாற்றமும் செய்யப்படாமல், மாணவர் எட்வின் ஜிஜி பெயரில் வெளியானது.
மலரின் ஆசிரியராக இருந்த லின்சா
ரத்தினலால், அக்கவிதையை
பிரசுரித்தார்.

செல்வராஜ்,'எனது கவிதை அனுமதியின்றி, மாற்றம் செய்யாமல் அப்படியே எட்வின் ஜிஜி பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இலக்கியத் திருட்டு நடந்துள்ளது. எனக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்,' என பதிப்புரிமைச் சட்டப்படி
நிவாரணம் கோரி, நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு செய்தார். செல்வராஜிற்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து எட்வின் ஜிஜி உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதி சி.வி.கார்த்திகேயன்
உத்தரவு:

மிகவும் சிரமப்பட்டு, அழகான மொழி நடையில் செல்வராஜ் கவிதை எழுதியுள்ளார். கவிதை என்பது இலக்கியப் படைப்பு. படைப்பாளிகளுக்கு கவுரவம் அளிக்க வேண்டும். கவிதை திருட்டு நியாயமற்றது.
மனுதாரர் வருத்தம் தெரிவித்து, செல்வராஜிற்கு கடிதம் அனுப்ப வேண்டும். கவிதை பிரசுரமான விழா மலரில், திருத்தம் செய்ய வேண்டும். வருத்தம் தெரிவித்த கடிதத்தை,
அதே விழா மலரில் பேராசிரியர் லின்சா
ரத்தினலால் பிரசுரிக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில், கீழமை நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படும்,
என்றார்.
பள்ளி, கல்லூரிகளில் 'வந்தே மாதரம்' பாடல் : சென்னை ஐகோர்ட் உத்தரவு


பதிவு செய்த நாள் 25 ஜூலை
2017
23:55

சென்னை: பள்ளி, கல்லுாரிகளில், வாரம் ஒரு முறை, 'வந்தே மாதரம்' பாடலை ஒலிபரப்பவும், பாடவும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதிய, வீரமணி தாக்கல் செய்த மனு:
ஆசிரியர் பணிக்கான தேர்வில், 'வந்தே மாதரம் பாடல், முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது?' என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது. அதற்கு, 'வங்க மொழி, உருது, மராத்தி, சமஸ்கிருதம்' என, விடைகள் அளிக்கப்பட்டிருந்தன. நான், 'வங்க மொழி' என, விடை அளித்தேன். ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த விடையில், 'சமஸ்கிருதம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
அனைத்து புத்தகங்களிலும், 'வங்க மொழி' என்பதே விடையாக அளிக்கப்பட்டிருந்தது; சமஸ்கிருதம் என, எங்கும் குறிப்பிடப்படவில்லை. சரியான விடை அளித்த எனக்கு, கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களில், ஒரு இடத்தை காலியாக வைக்க, உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவு:
வந்தே மாதரம், முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்பது குறித்து வழக்கறிஞர்கள், எஸ்.சுஜாதா, பிலால், அண்ணாதுரை ஆகியோர் கடுமையான முயற்சிகளை எடுத்து, தகவல்களை திரட்டி அளித்துள்ளனர். அவர்களை, இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் இருந்து, வந்தே மாதரம் பாடல், வங்க மொழியில் எழுதப்பட்டது உறுதியாகிறது.
பின், இந்தப் பாடல் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பாடலில், சமஸ்கிருத மொழி பயன்படுத்தப்பட்டாலும், வங்க மொழியில் எழுதப்பட்டது என்பதை ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. சரியான விடை அளித்ததற்காக, கூடுதலாக ஒரு மதிப்பெண் பெற, மனுதாரருக்கு உரிமையுள்ளது. அவருக்கு, ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும்.
ஆதி திராவிடர் பொதுப் பிரிவை சேர்ந்த மாணவர் ஒருவர், 54.12 மதிப்பெண் பெற்று, பணி நியமனம் பெற்றிருப்பதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மனுதாரரை பொறுத்தவரை, 58.57 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆதிதிராவிடர் பொதுப் பிரிவில், ஏதாவது காலியிடத்தில், மனுதாரரை நியமிக்க வேண்டும்.
நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், தேச பக்தி மிக முக்கியம். சுதந்திர போராட்டத்திற்காக, பலர் தங்கள் உயிரை, குடும்பத்தை தியாகம் செய்துள்ளனர். வந்தே மாதரம் போன்ற தேச பக்தி பாடல்கள், மக்கள் மத்தியில் மன உறுதியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். இந்த நவீன உலகில், நம் வாழ்க்கை முறை மாறியுள்ளது.
சில நேரங்களில், நம் தேசத்தை நாம் மறந்து விடுகிறோம். அதை உணர்ந்து தான், சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிக்கவும், அதற்கு மரியாதை செலுத்தவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, பொது நலன் கருதி, ஒவ்வொரு மக்களின் மனதிலும், தேச பக்தி உணர்வை ஊட்டும் விதத்தில், கீழ்க்கண்ட உத்தரவுகளை இந்த நீதிமன்றம் பிறப்பிக்கிறது.
* அனைத்து பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில், வந்தே மாதரம் பாடலை ஒலிபரப்ப வேண்டும்; பாட வேண்டும். வாரத்தில் ஒரு நாளாக, திங்கள் அல்லது வெள்ளியில் இதை மேற்கொள்ள வேண்டும்
* மாதம் ஒரு முறையாவது, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும்; ஒலிபரப்ப வேண்டும்
* வந்தே மாதரம் பாடலின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்பை, அரசு இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்ய, பொது தகவல் துறை இயக்குனருக்கு உத்தரவிடப்படுகிறது
* இந்த உத்தரவின் நகல், அரசின் தலைமை செயலாளருக்கு அனுப்ப வேண்டும். அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்
* வந்தே மாதரம் பாடலை பாடுவதில் அல்லது ஒலிபரப்புவதில், யாருக்காவது அல்லது எந்த அமைப்புக்காவது பிரச்னை இருந்தால், அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆனால், அவ்வாறு பாடாமல் இருப்பதற்கு உகந்த காரணங்கள் இருக்க வேண்டும்
* இளைய சமுதாயம் தான், நம் நாட்டின் எதிர்காலம். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, சரியான உணர்வுடன், பின்பற்றுவர் என நம்புகிறேன்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
'ரூ.1,500 கோடியை செலுத்துங்க!': சுப்ரதா ராய்க்கு கோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
04:49



புதுடில்லி: முதலீட்டாளர்களிடம் வாங்கிய, 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ரூபாயை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக, சஹாரா குழும நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய், 2014ல், கைது செய்யப்பட்டார்.

முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பிக் கொடுப்பதாக, சுப்ரதா ராய் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து, அந்த பணத்தை திரட்டுவதற்காக, அவருக்கு சுப்ரீம் கோர்ட், 'பரோல்' வழங்கியது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

சுப்ரதா ராய் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், கபில் சிபல் கூறியதாவது: முதலீட்டாளர்களின் பணத்தை, 'செபி'யிடம், செலுத்துவதாக கூறிய, 1,500 கோடி ரூபாயில், முதல் தவணையாக, 552 கோடி ரூபாயை செலுத்துவதாக, சுப்ரதா ராய் தெரிவித்திருந்தார். ஆனால், 247 கோடி ரூபாயை மட்டுமே செலுத்த முடிந்தது. மீதமுள்ள தொகையை, ஆகஸ்டுக்குள் செலுத்தி விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

இதன்பின், நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:சுப்ரதா ராய், மீதமுள்ள தொகையை அவர் கூறியபடி செலுத்தலாம்; எனினும், ஜூன் மாத்திற்குள் செலுத்துவதாக கூறிய, 1,500 கோடி ரூபாயை, செப்., 7க்குள் செலுத்த வேண்டும்; அதற்கு மேல் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
'ஆதார்' இல்லாத சிறுமிக்கு பள்ளியில் சேர்க்கை மறுப்பு

பதிவு செய்த நாள் 25 ஜூலை
2017
21:14




புதுடில்லி: டில்லியில், 'ஆதார்' பதிவு இல்லாத சிறுமியை, அரசு பள்ளியில் சேர்க்க மறுத்த சம்பவத்தால், பெற்றோர் அதிர்ச்சி

அடைந்துள்ளனர்.டில்லியில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இங்கு வசிப்பவர், அஜீஸ் கான். டிரைவரான இவருக்கு, மூன்று குழந்தைகள் உள்ளன. குழந்தைகள் மூவரும், தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

தனியார் பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடியாததால், அரசு பள்ளியில் சேர்க்க, அஜீஸ் கான் முடிவு செய்தார். அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில், குழந்தைகளைச் சேர்ப்பதற்காக சென்ற போது, விண்ணப்பத்துடன், குழந்தைகளின் ஆதார் அட்டையும் இணைக்கும்படி கூறியுள்ளனர்.
இதையடுத்து, அங்குள்ள ஆதார் அட்டை பதிவு முகாமிற்கு, தன் குழந்தைகளுடன் அஜீஸ் கான் சென்றார். அங்கு, மூத்த மகள் மற்றும் மகனுக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இளைய மகள், தானாஸ், 7, கைவிரல் ரேகைகள் தெளிவாக இல்லாததால், ஆதார் பதிவு செய்ய முடியவில்லை.

இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கூறிய போது, 'ஆதார் அட்டை இல்லாமல் சேர்க்க முடியாது' என, கண்டிப்புடன் கூறிவிட்டனர். இதனால், அந்த குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கல்லூரி மாணவர்களுக்கு இலவச வைஃபை!


ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனமானது இந்தியா முழுவதும் சுமார் 3 கோடி கல்லூரி  மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச வைஃபை வசதியை அறிமுகம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் தனது தொலைத் தொடர்புச் சேவையைத் தொடங்கியது. பல்வேறு இலவசச் சலுகைகளை வழங்கி அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது. இலவச டேட்டா, இலவச எஸ்.எம்.எஸ்., இலவச அழைப்பு வசதி போன்றவற்றை வழங்கி வந்த ஜியோ தற்போது இலவச வைஃபை சேவையை வழங்கவிருக்கிறது. இதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் ஒப்புதல் கோரியுள்ளது.

இச்சேவையின்படி, நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் கல்லூரி பயிலும் சுமார் 3 கோடி மாணவர்கள் வைஃபை வசதியைப் பெற்றுப் பயன்பெறுவார்கள். ரிலையன்ஸ் ஜியோவின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பிற நெட்வொர்க் நிறுவனங்களையும் இத்திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த மற்றொரு அறிவிப்பில் இலவச மொபைல் போன்கள் வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த 4ஜி போன்களில் ஃபேஸ்புக் பயன்படுத்த முடியும்; ஆனால், வாட்ஸ் ஆப் பயன்படுத்தவியலாது

'ஓபி' அதிகாரிகள் 381 பேர் மீது நடவடிக்கை பாய்ந்தது!!!


சரியாகவும், திறம்படவும் வேலை செய்யாத, 24 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 381 மத்திய அரசு உயரதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், மத்திய அரசு பணிகளுக்கான மனிதவள மேம்பாட்டில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, மத்திய அரசின் பணியாளர் நலத்துறை தாக்கல் செய்துள்ளது.இது குறித்து, மத்திய அரசின் பணியாளர் நலத்துறை உயரதிகாரிகள் கூறியதாவது:

சிறப்பாக செயல்பட்டால்

சரியாக வேலை செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, அரசு பணியில் தொடர முடியும் நிலை உருவாகி உள்ளது.

நாடு முழுவதும் பணியாற்றும், 2,953 ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,அதிகாரிகள் உட்பட, 11 ஆயிரத்து, 828 உயரதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து, சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதே போல், இவர்களுக்கு அடுத்த வரிசையில் பணியாற்றும், 19 ஆயிரத்து, 714 அதிகாரிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

பணித் திறனை மேம்படுத்தும் நிலை

இதில், சரியாக வேலை செய்யாத, 24 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 381 பொது சேவை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பணிநீக்கம், கட்டாய ஓய்வு உள்ளிட்டநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.
இதன் மூலம், அரசு அதிகாரிகளுக்கு, சிறப்பாக செயல்படாவிட்டால் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது; அது, அவர்களுடைய பணித் திறனை மேம்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது.

சம்பள உயர்வு குறைப்பு

ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி, இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 124 அதிகாரிகளுக்கு, பணி நிறைவு காலத்துக்கு முன்பாகவே ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.மேலும், 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 21 அதிகாரிகள், தங்கள் பதவியை ராஜினாமா செய்ததாக எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. இதை தவிர, எட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 199 அதிகாரிகளுக்கு, சம்பள உயர்வு குறைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
You need not always complete full course of antibiotics: Doctors 

Durgesh Nandan Jha | TNN | Jul 26, 2017, 06:01 AM IST

Highlights

In many situations, stopping antibiotics sooner is a safe way to reduce antibiotic overuse, said a paper published in the British Medical Journal.

Dr Randeep Guleria, director, AIIMS, however, warned patients against stopping antibiotics on their own.

NEW DELHI: Is it important to complete a full course of an antibiotic? Yes, according to conventional wisdom, which says stopping a course mid-way could lead to drug resistance. But several scientists have now challenged this claim.

In many situations, stopping antibiotics sooner is a safe way to reduce antibiotic overuse, said a paper published in the British Medical Journal. "Patients are put at unnecessary risk from antibiotic resistance when treatment is longer than necessary," said the authors from Brighton and Sussex Medical School in the UK.

Dr Randeep Guleria, director, AIIMS, however, warned patients against stopping antibiotics on their own.

Stopping or extending a course of antibiotics "is a clinician's call", the AIIMS director said, while agreeing that there was a need to critically look at prescription patterns.

Dr Suranjit Chatterjee, senior consultant, internal medicine at Apollo hospital said an antibiotic course need not be treated as sacrosanct. "It can be de-escalated or stopped if patient's condition improves," he said.

Chatterjee said antibiotics are prescribed to many patients on an empirical basis if they have high fever or diarrhea. "If tests reveal he or she does not have typhoid or other serious infections as suspected and this is reflected in his clinical condition, antibiotic course can be altered," the doctor said.

Guleria and Chatterjee said in diseases such as tuberculosis and typhoid, a patient may feel better after a few days but the antibiotic course still needs to be completed because not doing so increases the risk of relapse and emergence of resistant bacteria.

Traditionally, antibiotics are prescribed for recommended duration or courses, say for five to 10 days or more, depending on the condition.

The BMJ article argued that fundamental to the concept of an antibiotic course is the notion that shorter treatment will be inferior. But the scientists pointed out that studies to identify minimum effective treatment duration have simply not been performed for most conditions.

"For example, pyelonephritis (inflammation of kidney due to bacterial infection) has historically been treated for two weeks. Trials have shown shorter courses of quinolones are effective (seven days for ciprofloxacin and five days for levofloxacin), but no such data exist for B-lactams which are the main antibiotic class used," the BMJ study said. It added that current international guidelines recommend 10-14 days' treatment with B-lactams, based purely on absence of data for shorter courses.

The experts also argued that the concept of an antibiotic course ignores the fact that patients may respond differently to the same antibiotic, depending on diverse patient and disease factors.

Many bacteria, for example Staphylococcus aureus, live harmlessly in our body (the gut, skin or mucus membranes). When a patient takes antibiotics for any reason, species and strains sensitive to it are replaced by resistant species and strains ready to cause infection in the future. "The longer the antibiotic exposure these opportunistic bacteria are subjected to, the greater the pressure to select for antibiotic resistance," the BMJ article explains.

Dr Anoop Mishra, chairman, Fortis C-Doc, said concerns about antibiotic resistance due to overuse are important but they shouldn't be allowed to prejudice the minds of patients to unilaterally alter the antibiotic course. "The compliance rate of medicine prescription is already very low in India. It is a major cause of emergence of drug-resistant tuberculosis, for example," he said.

NEET aptitude test on July 30


Spectra Academy in association with ‘The Hindu in School’ will conduct NEET aptitude test-2017 in the city on July 30.
The event will be held at 9.30 a.m. at the Bhuvana auditorium of Jairam College of Arts and Science, Chinna Tirupathi, here.
Questions
The aptitude test is open for students of classes XI and XII only. The test will comprise general aptitude questions. The participating students should report at the venue at 9 a.m. Entry is free.
Cash prize
Top scorers will be given cash prize and all the participants will get free Quiz Review and Question Bank.
Interested students can register their names by contacting the phone numbers: 0427 4973232 / 93621 23729 / 99434 87999 / 84289 82429.
Jairam College of Arts and Science is the venue partner.

NEWS TODAY 25.12.2025