Saturday, August 5, 2017

”நாங்க இப்ப யாசகம் கேட்பதில்லை சாமி..” - காணாமல் போகும் பூம் பூம் மாடுகள்

திருஷ்டிகழிக்கும் பொருட்கள் தயாரிப்பில் | பழனியம்மாள்
‘நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது..’ இப்படி நல்லதாய் நாலு வார்த்தை சொல்லும் பூம் பூம் மாட்டுக் காரர்களை இப்போதெல்லாம் பார்ப்பதே அரிதாகிவிட்டது. விசாரித்தால், “தொல்லை தாங்கமுடியல.. தொழிலை மாத்திக்கிட்டோம்” என்கிறார்கள்!
தொட்டி நாயக்கர் சமூகத்தின் ஒரு பிரிவினர்தான் பூம் பூம் மாடுகளை பிடித்தபடி வந்து நமக்கு நல்ல காலம் சொன்னவர்கள். திருச்சி காந்தி நகர் ஆதியன் குடியிருப்பின் அரசு தொகுப்பு வீடுகளில் சுமார் 150 குடும்பங்கள் தொட்டி நாயக்கர் சமூகத்தினர் வசிக்கின்றனர். மாடுகளை வளர்க்க தனி இடம், தீவனத்துக்காக ஆகும் செலவு, பராமரிப்புச் செலவு, மாடுகளை அலங்கரிக்கும் பொருட்களுக்கான செலவு உள்ளிட்ட காரணங்களாலும் தேவையற்ற விசாரணைகளுக்கு ஆளாக முடியாமலும் பூம் பூம் மாடுகளுக்கு குட்பை சொல்லிவிட்டார்கள் இவர்கள். திருஷ்டிகழிக்கும் பொருட்களை விற்பதுதான் இவர்களின் இப்போதைய தொழில்.
“என்ன இருந்தாலும், மாட்டைப் பிடிச்சுட்டுப் போயி நாலு வார்த்தை சொல்லி காசு கேக்குறது யாசகம் கேட்பது மாதிரித்தானே.. ஆனா, இப்ப நாங்க யாருக்கிட்டயும் யாசகம் கேட்கிறதில்ல சாமி.. இந்தப் பொருட்களை விற்று கவுரவமா வாழறோம். கடல் சங்கு, படிகாரம், வில்வக் காய், காடுகளில் விளையும் வெள்ளெருக்கு வேர், கம்பளி திரி இதையெல்லாம் தேடிப் பிடித்து வாங்கிவந்து மஞ்சள் தடவிய நூலில் கோர்த்து திருஷ்டிகழிக்கும் பொருட்களை தயாரிக்கிறோம். அவங்கவங்க வசதிக்கேற்ப எங்கக்கிட்ட 20 -லிருந்து 200 ரூபாய் வரைக்கும் திருஷ்டி பொருட்கள் இருக்கு. லாபம் பெருசா இல்லைன்னாலும் கவுரவமா பொழைக்க முடியுதே” என்று சொல்லும் பொன்னு, திருஷ்டி போக்கும் பொருட்களின் மகத்துவங்களை மளமளவென ஒப்பிக்கிறார்.
அவரைத் தொடர்ந்த பழனியம்மாள், “எங்கள்ல யாரும் சாதி மாறி கல்யாணம் செஞ்சுக்க முடியாது. அப்படி செஞ்சுக்கிட்டா அவங்கள நாங்க ஒதுக்கி வைச்சிருவோம். அவங்களோட யாராச்சும் தொடர்பு வெச்சா அவங்களயும் ஒதுக்கிருவோம். சம்பந்தப்பட்ட நபர் தப்பை உணர்ந்து மன்னிப்புக் கேட்டால், அவங்களுக்கு ஆயிரமோ ரெண்டாயிரமோ அபராதம் போடுவார் நாட்டார் (ஊர் தலைவர்). அபராதத் தொகையை கோயில் வரவுல சேர்த்துருவோம்” என்றவர், “முன்பு, யாசகம் கேட்ட நாங்கள் இப்ப, இந்தத் தொழிலைச் செய்யுறோம். எங்கள் பிள்ளைங்களுக்கு இதுவும் வேண்டாம். அவங்களாச்சும் படிச்சு முன்னுக்குவரணும். அதுக்காகத்தான் அவங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறோம்” என்று முடித்தார்.
பழமையில் ஊறிப்போன சம்பிரதாயங்கள்
என்னதான் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடந்தாலும், இந்த சமூகத்தில் சிறுவயது திருமணங்கள் இன்னமும் நடக்கத்தான் செய்கின்றன. நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் மாப்பிள்ளை வீட்டார் கருகமணி அணிவிக்கிறார்கள். கருகஅனி அணிந்த பெண், திருமணம் முடியும் வரை வேற்று ஆண்களுடன் பேசக்கூடாது. தங்களது இஷ்டதெய்வமான காளியம்மனை சாட்சியாக வைத்து, திருமணத்தை நடத்துகிறார்கள். மணப்பெண்ணுக்கு மணமகன் தங்க மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்து மனைவியாக ஏற்றுக் கொள்கிறார். குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டால் குலதெய்வக் குத்தமாகிவிடும் என்ற நம்பிக்கையும் இவர்களிடம் இருக்கிறது.

ஊரே கொண்டாடும் நேர்மையான ரேஷன் கடை அதிகாரி

ரேஷன் அதிகாரி நாகராஜன்.   -  படம்: என்.பாஸ்கரன்
ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் கடை மூடியிருப்பதைப் பார்த்து சீல் வைக்க முயற்சி செய்ய, ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அவரைத் தடுத்த சம்பவம் யாருக்காவது தெரியுமா?
அது தெரியும் என்றால் உங்களுக்கு நாகராஜனையும் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கிராமத்தில் நேர்மையாகப் பணிபுரிந்த ரேஷன் அதிகாரி.
பொது விநியோகப் பொருட்கள் கையிருப்பில் இருக்கும்போதே தீர்ந்துவிட்டதாகப் பொதுமக்களைத் திருப்பி அனுப்புவது, ரேஷன் பொருட்களைப் பெற வரும்போது ஆதார் கட்டாயம் என்று கூறி, பொருட்களை வழங்க மறுப்பது அல்லது ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்கப் பணம் பெறுவது ஆகியவை பெரும்பாலான ரேஷன் கடைகளில் பழக்கமான ஒன்று.
ஆனால் ரேஷன் கடை மேற்பார்வையாளரான நாகராஜன், அவர்களில் இருந்து வித்தியாசமானவராக இருந்தார். நாகராஜனின் தன்னலமற்ற சேவை குறித்துப் பொதுமக்களே கூறுகின்றனர்
''கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தள்ளி வட்டத்தில் உள்ள கிராமம் தாக்கட்டி. அங்கு பொது விநியோக சேவையின் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தவர்... இல்லை சேவையாற்றியவர் நாகராஜன். 53 வயதான நாகராஜன் அங்கு சம்பாதித்தது கிராம மக்களாகிய எங்களின் அன்பை மட்டுமே.
மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் ஒன்றான தளி வட்டத்தில் இருக்கும் சுமார் 1,350 ஏழைக் குடும்பங்களுக்கு விரைவாகவும், சீராகவும் ரேஷன் பொருட்களைப் பெற்றுத் தந்தவர் நாகராஜன். காலை 7.30 மணிக்கு சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள தேன்கனிக்கோட்டையில் இருந்து கிளம்பி, 8.45 மணிக்கு எங்கள் ஊரை அடைவார். தினமும் சரியாக காலை 9 மணிக்குக் கடை திறக்கப்படும். மாலை 6 மணி வரை கடை இயங்கும்.
நிறைய இடங்களில், ரேஷன் அட்டைதாரர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் பல முறை பயணிக்க வேண்டும். ஆனால் நாகராஜனின் கடையில் ஒருவர் ஒருமுறை வந்தாலே போதும். அவர் அனைத்துப் பொருட்களையும் வாங்கிச் செல்ல முடியும்.
இதற்காக அனைத்து அட்டைதாரர்களின் தொலைபேசி எண்களையும் வாங்கி வைத்துவிடுவார் நாகராஜன். பொருட்கள் வந்தபிறகு, அனைவருக்கும் தகவல் சொல்லி, அரசு வழங்கிய எல்லாப் பொருட்களையும் ஒரேமுறையில் வழங்கிவிடுவது அவரின் வழக்கம். அத்துடன் கடைசித் தேதி வரை பொருட்கள் வாங்காதவர்களுக்கு நியாபகப்படுத்துவார்'' என்கின்றனர் பொதுமக்கள்.
இதுகுறித்து பேசும் நாகராஜன், ''நிறையப் பேர் சுமார் 5 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டெல்லாம் பொருட்களை வாங்க வருவர். அவர்களை அலைக்கழிப்பது முறையாகாது. அத்துடன் அன்றாடப் பாட்டில் ரேஷன் வாங்க மறந்துவிடுபவர்களும் இருப்பார்கள். அவர்கள் யாரும் பொருட்கள் கிடைக்காமல் பட்டினியாக இருக்கக்கூடாது'' என்கிறார்.
நாகராஜன் வழக்கமான பணியோடு மட்டும் நின்றுவிடவில்லை. அந்தாயோதயா அன்னா யோஜனா அட்டைகளைப் பெறத் தகுதியுள்ள குடும்பங்களுக்கு அதைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இதன்மூலம் ஒரு குடும்பம் 35 கிலோ அரிசியைப் பெறமுடியும். அதைப் பெறும் பழங்குடிகள் தங்களுக்குள் அதைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
இவை அனைத்துக்கும் மேலாக ஒன்று நடந்திருக்கிறது. அதுகுறித்து நினைவு கூர்கிறார் ஊர்க்காரரான சங்கே கெளடு.
''அது 2009-ம் ஆண்டின் ஒரு ஞாயிற்றுக்கிழமை. ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொள்ள வந்தார் மாவட்ட ஆட்சியர். அந்த நேரம் பார்த்து நாகராஜன் தன் நோயாளி மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். கடை மூடியிருப்பதைப் பார்த்து ஆட்சியர், கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
கைவசம் பூட்டு இல்லாததால் உடனே அதிகாரிகள் கிராம மக்களிடம் கடைக்கு சீல் வைக்கப் பூட்டைக் கேட்டனர். ஆனால் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பூட்டு வழங்க மறுத்தனர். எங்களுக்கு இந்த ஊரில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அதிகாரிகளிடம் வாதிட்டனர். பின்னர் எங்கிருந்தோ ஒரு பூட்டைப் பெற்ற அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்துச் சென்றனர்'' என்கிறார்.
ஆனால் அடுத்த நாள் நாகராஜனைப் பற்றிக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர், நாகராஜனிடம் புன்னகையுடன் சாவியைக் கொடுத்தது அவரின் நேர்மையைப் பறைசாற்றியதாக மகிழ்கின்றனர் ஊர் மக்கள்.
தமிழில்: ரமணி பிரபா தேவி
2 colleges offer medical courses without MCI nodTNN | Updated: Aug 4, 2017, 10:29 AM IST



COIMBATORE: Amid the prevailing uncertainty over the National Eligibility-cum-Entrance Test (NEET), two colleges in Coimbatore are offering undergraduate and post-graduate courses in medicine without Medical Council of India approval. TIPS Global Institute in Kovilpalayam and KSG College of Arts and Science charge between 60 lakh and 1 crore for the courses.

While MCI vice-president Dr CV Bhirmanandham said, "The state authorities should initiate action against the two colleges for violating MCI norms and running illegal courses," the colleges maintain they have not violated any norm. "All students need eligibility certificate to leave India and study MBBS. Since these institutions are not recognised, the students wont get the certificate. They cant sit for the screening test here after the course and so they won't be able to practice medicine," Dr Bhirmanandham said.

TIPS Global Institute on Karuvalur Road in Kovilpalayam had published advertisements inviting applications for the MBBS course.

When a TOI reporter approached the institute posing as a 'guardian', the institute said the course would have three stages - three years at TIPS Global Institute in Coimbatore, two years at an institution on Aruba, a Dutch-Caribbean Island, and the final two years at Xavier University in the United States.

The admission officer said that the first three years will be BSc in human biology, the degree for which will be issued by Bharathiar University, Coimbatore.

"This part of education is called pre-med study. If the student is academically sound, he can finish the B.Sc human biology course in one and half years and fly to Aruba for six more semisters. This includes the USMLE (United States Medical Licensing Examination). If the student is weak in English, we will provide the coaching for it too. Our fees is about 1 crore. This will cover books, accommodation, health insurance, malpractice insurance and flight fares," the officer said.

MCI secretary Reena Nayar said the courses such as MBBS could not be run in India by any institution without the councils approval. "Also, this year admission in India without NEET qualification is illegal," she said.

But TIPS Globals admission co-ordinator Indu Priya said there was no need for the institute to obtain permission from the MCI.

"Xavier University is the institution that will offer the undergraduate degree in medicine," she said.

doctors facing charges

 | Aug 4, 2017, 11:45 PM IST

Indore: After the Medical Council of India (MCI) released orders to suspend eight senior doctors of MY Hospital over allegations of unethical drug trials, their fate now lies with MCI's state unit.



The doctors in question have decided to approach the high court seeking a stay against the suspension and are only waiting for the lawyers' strike to come to an end.



Simultaneously, MGM Medical College is looking into other options in case the state body of MCI suspends the doctors.



While Dr VS Pal holds the post of superintendent of MY Hospital, Dr Hemant Jain is superintendent of Chacha Nehru Children Hospital. Dr Anil Bharani and Dr Asheesh Patel are professor and assistant professor respectively in the Medicine Department.



Dr Anil Bharani said, "I only came to know about this information through newspapers and no copy from MCI has reached to me. If I do receive it, I will think about going to court."



Apart from Dr Pal serving as superintendent of Government Mental Hospital, Dr Ujjav Sardesai, Dr Ajay Paliwal and Dr Pali Rastogi are from the psychiatry department. Dr Ram Ghulam Razdan was recently removed from the post of superintendent of Government Mental Hospital after his name surfaced for allegedly giving 'wrong' information to the media about the deaths at MYH due to an alleged shortage of oxygen reported a month ago.



Dr VS Pal said, "I did not receive any official information regarding any action of suspension from MCI. When I receive it, I will decide my further course of action."

The suspension of these doctors, who also take care of administrative work and teach students, will be a matter of great concern for the college administration.


"MCI has instructed the state body of the medical council and now only the action is left. The decision has not been communicated to us," Dean Dr Sharad Thora told TOI.



He added that in case an order is arrived at, the work of the psychiatry department will be affected the most as almost all the doctors will face a three-month suspension.



"In this case, we will seek directions from the state medical council for alternative arrangements so that patients, students and the administrative works will not be affected," Dr Thora said.

இஎஸ்ஐ ஊழியர்களின் வாரிசுகளுக்கான எம்பிபிஎஸ் கலந்தாய்வு நாளை தொடக்கம்

By DIN  |   Published on : 04th August 2017 02:48 AM  |  
இஎஸ்ஐ செலுத்தும் ஊழியர்களின் வாரிசுகளுக்கான எம்பிபிஎஸ் இரண்டாம்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.5) தொடங்க உள்ளது.
தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தின்(இஎஸ்ஐசி) சார்பில் நாடு முழுவதும் 6 மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஹரியானா மாநிலம் 'ஃ'பாரிதாபாத், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் குல்பர்கா , தமிழகத்தில் சென்னை கே.கே.நகர் என 6 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் ஹிமாச்சல பிரதேசம் மண்டி, கேரள மாநிலம் கொல்லம், தமிழகத்தில் கோவை ஆகிய இடங்களில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் அந்தந்த மாநில அரசால் நடத்தப்பட்டாலும், இஎஸ்ஐ செலுத்தும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அந்த வகையில், இந்தக் கல்லூரிகளில் மொத்தம் 332 எம்.பி.பி.எஸ். இடங்களும், 22 பிடிஎஸ் இடங்களும் இஎஸ்ஐ ஊழியர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வையும் மத்திய அரசே (டிஜிஹெஎஸ்) நடத்துகிறது.
இதற்கான முதற்கட்ட கலந்தாய்வில் 326 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள இடங்களுக்கும், முதற்கட்ட கலந்தாய்வில் இடங்களைப் பெற்று, குறிப்பிட்டக் கல்லூரிகளில் சேராமல், நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்குமான இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5 முதல் 7 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கான முடிவு ஆகஸ்ட் 8 -ஆம் தேதி வெளியிடப்படும்.
கட்டணம்: கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெறுவோருக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.24 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் படித்து முடித்து 3 ஆண்டுகள் இஎஸ்ஐ மருத்துவமனையில் கட்டாயம் பணியாற்றுவதற்கான ஒப்பந்தத்தையும் அவர்கள் அளிக்க வேண்டும்.
ஒருவேளை படிப்பில் இருந்து பாதியில் சென்றாலோ, கட்டாயம் பணியாற்றுவதைத் தவிர்த்தாலோ ரூ.10 லட்சத்தை இஎஸ்ஐ நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்டாக் பிடிஎஸ் பாடப் பிரிவுக்கு ஆகஸ்ட் 6-இல் முதல்கட்ட கலந்தாய்வு

By புதுச்சேரி,  |   Published on : 04th August 2017 08:24 AM  |   
புதுச்சேரி சென்டாக் பல் மருத்துவ (பிடிஎஸ் ) பாடப் பிரிவுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
பல் மருத்துவப் பாடப் பிரிவில் உள்ள 129 இடங்களை நிரப்புவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு புதுவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அதன்படி, காலை 9 மணிக்கு தியாகிகளின் பிள்ளைகளுக்கும், 9.15 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கும், 9.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கும், 9.45 மணிக்கு விளையாட்டு வீரர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு நீட் தேர்வில் 567 முதல் 240 வரையும், 11 மணிக்கு 239 முதல் 201 வரையும், மதியம் 12 மணிக்கு 200 முதல் 175 வரையும், 2 மணிக்கு 174 முதல் 158 வரையும் மதிப்பெண் எடுத்த புதுச்சேரி அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 704 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
அதன்படி, மாலை 3 மணிக்கு நீட் தேர்வில் 656 முதல் 489 வரையும், 4 மணிக்கு 488 முதல் 454 வரையும் மதிப்பெண்கள் பெற்ற 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதள முகவரி www.centaconline.in-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாமல் தரவரிசைப் பட்டியல் மதிப்பெண்கள் வரம்புக்குள் வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல், நகல் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நாள் நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
மேலும், கலந்தாய்வில் பங்கேற்கும் எஸ்சி மற்றும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர் ரூ. 350-க்கும், இதர பிரிவினர் ரூ. 750-க்கும் வரைவோலையை பட்ங் இர்ய்ஸ்ங்ய்ர்ழ், இஉசபஅஇ என்ற பெயரில் புதுச்சேரியில் செலுத்தத் தக்க வகையில் கொண்டு வரவேண்டும்.
மேலும், கலந்தாய்வுக் கட்டணத்தை மாணவர்கள் ரொக்கமாகவும் செலுத்தலாம். விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் இடங்கள்: மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி: பொது - 15, ஓபிசி - 3, எம்பிசி - 5, எஸ்சி - 5, பிசிஎம் - 1.
மாகே பல் மருத்துவக் கல்லூரி: பொது - 25, ஓபிசி - 6, எம்பிசி - 9, எஸ்சி - 8, பிசிஎம் - 1, ஈபிசி - 1.
வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி: பொது - 25, ஓபிசி - 5, எம்பிசி - 9, எஸ்சி - 8, பிசிஎம் - 1, இபிசி - 1, பிடி -1.

பி.இ.: பிற மாநில மாணவர்கள் 36 பேர் சேர்க்கை

By DIN  |   Published on : 05th August 2017 02:27 AM  |  
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 36 மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. ஜூலை 17 இல் தொடங்கிய இந்த சேர்க்கை ஆகஸ்ட் 11-இல் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில், பிற மாநில மாணவர்களை தமிழக கல்லூரிகளில் சேர்ப்பதற்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவர்களுக்கென 100 பி.இ. இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இதற்கு விண்ணப்பித்தவர்களில் 52 பேர் சேர்க்கைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 36 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர்.

60 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் பி.இ. மாணவர் சேர்க்கை: 6 நாள்களில் முடிகிறது கலந்தாய்வு

By எம். மார்க் நெல்சன்  |   Published on : 05th August 2017 03:28 AM  |   
counseling

பொறியியல் கலந்தாய்வு முடிய இன்னும் ஆறு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கை நடைபெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதுபோல், பி.இ. இயந்திரவியல், கட்டுமானப் பொறியியல் (சிவில்) படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்துள்ளது. கணினி அறிவியல், மின்னணுவியல் -தொடர்பியல் பொறியியல் படிப்புகளில் அதிகமானோர் சேர்ந்துள்ளனர் என்றபோதும், கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது அதுவும் குறைவுதான் என்கின்றனர் பொறியியல் சேர்க்கை அதிகாரிகள்.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்காக இந்த முறை 570 -க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் 1.75 லட்சம் பி.இ. இடங்கள் அளிக்கப்பட்டிருந்தன. ஜூலை 17 கலந்தாய்வு தொடங்கியது. இந்த ஆண்டு சேர்க்கை தொடங்கியது முதல் கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் படிப்புகளில் அதிக மாணவர்கள் சேர்க்கை பெற்று வந்தனர்.
கடந்த ஆண்டுகளில், இதுபோன்று கலந்தாய்வு தொடக்கத்தில் கணினி அறிவியல், மின்னணுவியல் - தொடர்பியல் பொறியியல் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும். பின்னர், படிப்படியாக அதிக மாணவர்கள் சேர்ந்த பிரிவாக இயந்திரவியல் பிரிவு மாறிவிடும். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த நிலைதான் நீடித்து வந்தது.
இயந்திரவியல், சிவில் பிரிவுகளில் குறைந்தது ஆர்வம்: இந்த நிலையில், 2017 -18 பி.இ. கலந்தாய்வு முடிய இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், தொடக்க நாள் முதல் அதிக மாணவர்கள் தேர்வு செய்யும் பிரிவுகளாக கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் பிரிவுகளே இருந்து வருகின்றன.
பி.இ. கணினி அறிவியல் பிரிவில் மொத்தமுள்ள 27,695 இடங்களில் இதுவரை 9,500 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் பிரிவில் மொத்தமுள்ள 33,881 இடங்களில் இதுவரை 12,000 பேர் சேர்ந்துள்ளனர்.
ஆனால், பி.இ. இயந்திரவியல் பிரிவில் மிக அதிகமாக 38,333 இடங்கள் உள்ளன. இதில் 11,000 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். அதுபோல பி.இ. சிவில் பிரிவில் 25,237 இடங்களில் 5,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில்...: ஒற்றைச் சாளர கலந்தாய்வு முடிவடைய இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது என்கின்றனர் பொறியியல் சேர்க்கை அதிகாரிகள். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பி.இ. இயந்திரவியல், பி.இ. சிவில் பிரிவுகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சேர்க்கை நடைபெற்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 115 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 116 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 120 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
திருவள்ளூரில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 122 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 140 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 65 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
கன்னியாகுமரியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 111 இடங்களும், சிவில் பிரிவில் 72 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 72 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 38 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 72 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 73 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 74 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
இதேபோல, விழுப்புரம், திருச்சி, நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கையும், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இயந்திரவியல், சிவில் பிரிவுகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கையும் நடைபெற்றிருப்பது அண்ணா பல்கலைக்கழக புள்ளி விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

    ஊதிய உயர்வு சரியா?: எம்எல்ஏ.க்கள் மனசாட்சிப்படி முடிவு எடுக்கட்டும்

    By DIN  |   Published on : 05th August 2017 01:33 AM  |  
    ஊதிய உயர்வு சரியானதா என்பதை சட்டப் பேரவை உறுப்பினர்களே முடிவு செய்யட்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்துள்ளது.
    சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஊதிய உயர்வுக்கு எதிரான மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
    தமிழக சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஜூலை 19 ஆம் தேதி ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியானது. இதில் மாத ஊதியம் மற்றும் இதரப் படிகள் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு வழங்கும் ஆணையை நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
    அதில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வறட்சியால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துள்ளனர். பல அரசுத்துறைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. இந்நிலையில், சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
    இந்த மனு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
    தமிழகம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு தேவையற்றது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
    விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இது தேவையா என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளனர். சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஊதிய உயர்வு அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால், அந்தக் கொள்கை முடிவு தவறாக இருக்கும் பட்சத்தில் நீதிமன்றம் தலையிடுவதில் தவறில்லை. இந்த விவகாரத்தில் அரசு தான் நீதிமன்றமாகச் செயல்பட வேண்டும். அரசு எடுக்கும் கொள்கை முடிவின் மீது ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்களது பொறுப்பு, பணி உள்ளிட்டவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. முதல்வர் பிறப்பித்த உத்தரவை சட்டப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊதிய உயர்வு சரியா, தவறா என்று சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே கேள்வி எழுப்பிக் கொள்வது அவசியம். அவர்களது மனசாட்சிக்கே இந்தப் பிரச்னையை விட்டுவிடுகிறோம். அவர்களே முடிவு செய்யட்டும். இந்திய அரசியலமைப்பின்படி நிர்வாகம், நீதி, சட்டப் பேரவை எல்லாம் தனித்தனி துறைகள். நிர்வாகத்தின் முடிவுக்கு சட்டப் பேரவை ஒப்புதல் அளிக்கலாம். அது சட்டப் பூர்வமாகச் சரியா என்பதை மட்டுமே நீதித்துறையால் பார்க்க முடியும்.
    இந்த வழக்கில் மனுதாரர் தனது கோரிக்கையை சட்டப்பூர்வமாக முன்வைக்காமல் தார்மீக அடிப்படையில் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் நீதித்துறை இதில் தலையிடலாமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இயற்கையிடம் கற்போம்

    By ச. கந்தசாமி  |   Published on : 05th August 2017 01:17 AM  |   
    கொடிய விலங்குகளான சிங்கம், புலி, கரடி, சிறுத்தை முதலானவை காடுகளில் பகலில் கூட்டம் கூட்டமாக அலைவதைக் காண முடியாது. இரவு நேரங்களில் மட்டுமே, இவற்றின் நடமாட்டத்தைக் காணலாம். பகல் நேரங்களில் மறைவிடங்களில் ஒளிந்தே கிடப்பன.
    சாது விலங்குகளான மான், முயல், குதிரை, ஆடு போன்றவை பகலில் மட்டும் கூட்டம் கூட்டமாகத் திரிவதும், இரவில் இருப்பிடங்களில் ஓய்வெடுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன.
    பறவைகளிலும் இத்தகைய வாழ்க்கை முறையைக் காணலாம். புறா, மயில், கிளி, குருவி, கொக்கு போன்றவை பகலில் மந்தை மந்தையாகச் சேர்ந்தலைவதும், இரவில் மரக்கிளைகளில் துயில்வதையும் காணலாம். எறும்புகள் தேனீக்கள் பட்டாம்பூச்சிகள் கூட்டமாக அன்றித் தனித்துக் காண்பது அரிது.
    கழுகு, பருந்து, வல்லூறு, ஆந்தை முதலான பறவைகளும் தேள், பூரான், பாம்பு முதலான ஊர்வனவும் கொடிய உயிர் வாழினங்கள். இவை தனித்தனியே திரிவதல்லாமல் கூட்டம் கூட்டமாகப் பலர் கண் படுமாறு அலைவன அல்ல.
    கடல், மலைகள், காடுகள், பாலைவனம் முதலான இடங்களில் வாழும் உயிரினங்களின் வாழ்வு முறை இயற்கையோடு ஒன்றியிருக்க, மனித இனம் மட்டுமே இயற்கைக்குப் புறம்பான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறது.
    மனிதனைத் தவிர்த்துப் பிற உயிரினங்களிடையே இயற்கைக்குப் பிறழ்வான வாழ்வுமுறையில்லை.
    உயிரினங்களில் எவையும் விதிக்கப்பட்ட வாழ்வு முறைகளில் பிறழ்ந்து இயற்கையைச் சிதைப்பதோ மாசுபடுத்துவதோ இல்லை. உயிரினப் பெருக்கம் மண்வளப் பெருக்கம் அனைத்திலும் இயற்கையைச் சார்ந்தே பங்காற்றுகின்றன.
    காற்றில்லையெனச் செயற்கைக் காற்றையோ, இருண்டு கிடக்கிறதெனச் செயற்கை ஒளியையோ தோற்றுவிக்க முயல்வதில்லை. குடியிருப்புக்கென மரங்களையும் மலைகளையும் சிதைப்பதில்லை.
    நாகரிகம், எல்லையற்ற நுகர்வு, காட்சிப் பொருள்கள், உணர்வுகளின் வேட்கை, அனைத்தையும் அடையத் துடிக்கும் வெறி இவற்றால் வாழும் பூமியைச் சிதைப்பதும் அகழ்வதும் இல்லை.
    'எரிபொருள் உற்பத்தி, பூமிக்கடியில் ஆய்வு' எனப் பூமியின் கட்டமைப்பைக் குலைப்பதில்லை. சிற்சில உயிர்கள் இப் பூமியைக் குடைவதன் காரணம் வாழ்விடம் அமைக்கவே.
    மரங்களைச் சிதைக்காமல், கேடு விளைவிக்காமல் கூடுகள் கட்டிக் கொள்ளும் பறவைகள், மண்ணை மிருதுவாக்கி உரம் செய்வதுடன் தம் வாழ்விடங்களையும் அமைத்துக் கொள்ளும் கரையான்கள், பயிர்களின் இனப்பெருக்கத்திற்கு வழிசெய்து, உணவாகத் தேனையும் மலர்களிலிருந்து சேகரிக்கும் தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், இவற்றால் உயிர்ச்சேதம், அழிவுகள் இயற்கைச் சேதம் நிகழ்ந்ததில்லை.
    இயற்கையின் போக்கில் தீமை விளைவிக்கும் மாற்றங்கள் நிகழ்த்துவது மனிதன் மட்டும்தான். மனித சமூகத்தில் மட்டுமே தலைகீழான நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. சமூக விரோதிகளின் பகிரங்க நடமாட்டம் போல நல்லவர்களின் தலைகாட்டுதல் கண்களுக்குப் புலப்படவில்லை.
    அலுவலகம், தொழிற்கூடங்கள், பொது இடங்களில் சகஜமாகப் புகைப்பவர்களின் எண்ணிக்கை 90 விழுக்காடு. புகைப்பழக்கம் இல்லாதவர்கள் பத்து விழுக்காட்டினர் மட்டுமே. பத்து விழுக்காட்டினர் நடமாட்டம் அப்படித்தான். சலனமற்ற முகங்கள் இல்லை.
    அலுவலக ஓய்வறையைப் புகை மண்டல மாக்குவது அதிக விழுக்காட்டினர்தாம். புகைத்தல் இல்லாத ஓரிருவர் சேர்ந்து கலந்துரையாடுவதே அதிசய நிகழ்வாகும். மேலதிகாரியும் புகைப்பவராக இருந்தால் புகைப் பிரியர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.
    அலுவலக நேரத்தைச் சரியாகப் பின்பற்றுவோர் பத்து விழுக்காட்டினர்தாம். அலுவலகத்தையே தூக்கி நிறுத்தும் இவர்களை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. இருக்கும் ஐந்து பேர்களும் ஒருவருக்கொருவர் கருத்துகள் பரிமாறிக் கொள்வதில்லை. உதவிகள் செய்யவும் அச்சமும் தயக்கமும் காட்டுவர்.
    அலுவலகத்தை மதிக்காத 90 விழுக்காட்டினர் வைத்ததே சட்டம். இவர்களில் ஒருவர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமானால் தேனீக்களாக மொய்த்து விடுவர்.
    லஞ்சம் ஊழல் தொடர்புள்ளவர்களே அலுவலகங்களில் மிகுதியாகவும், மற்றவர்கள் ஒரு சிலராகவே இருப்பர். ஊழல் செய்பவர்கள், லஞ்சம் வாங்குபவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை நேர்மையாளர்களிடம் இல்லை.
    ஊழல்வாதிகளைக் கண்டு நிர்வாகம் அஞ்சுகிறது. ஒதுங்குகிறது. நேர்மையாளர்களுக்கே நெருக்கடி மற்றும் பனிச்சுமைகளை ஏற்றுகிறது.
    குடிப் பிரியர்கள், ஊழல்வாதிகள், ரெளடிகள், கொலைக் குற்றவாளிகள் தலைமைப் பீடத்தில் உயர்ந்த இடத்தில் நிற்கிறார்கள். சமுதாயத்தில் அவர்களுக்குப் பயம் கலந்த மரியாதை நிறையவே உண்டு.
    மாலை மரியாதைகளுடன் கெளரவப் பட்டங்களும் அவர்களுக்கே. ஆனால் நல்லவர்களும் நேர்மையாளர்களும் தனித்துவிடப் படுகிறார்கள். சமுதாயத்தால் ஓரங்கட்டப்படுகிறார்கள்.
    நாட்டின் இத்தகைய வளர்ச்சி ஆரோக்கியமானதல்ல. பொருளாதாரம் அறிவியலில் தன்னிறைவு எட்டியதாகத் தோன்றினாலும் நிரந்தரமான தன்னிறைவாகாது. நல்லவர்கள் வீதிகளில் வலம் வரவும் பாம்பு போன்றவர்கள் வீதிகளில் வலம் வர அச்சப்படவும் வேண்டும். இந்த மாற்றம் ஏற்படுமா?
    ஊழல்பேர்வழிகளுக்கே மரியாதை செய்யப்படுவதும், நேர்மையாளர்கள் ஓரங்கட்டப்படுவதும் தொடர்ந்து நிகழும் சமுதாயத்தில் வளரும் இளஞ்சிறார்களும், இளைஞர்களும் எப்படி நல்லவர்களாக உருவாக்கப்படுவார்கள்? '
    புறவளர்ச்சியை வெளிச்சமிடும் ஆட்சியாளர்கள் அகவளர்ச்சியால்தான் சமுதாயம் சீரான அமைதி வாழ்வு காணமுடியும் என்று தெளிவு பெறுவார்களாக.

    HC grants bail to Madhan

    Justice P.N. Prakash granted bail to Madhan on executing a bond for Rs. 50,000 with two sureties.
    The judge also observed that PMLA is a welcome legislation, “but it is a sledge-hammer and should not be used to crack nuts, lest, it should earn the wrath of the common man. It should be used against sharks and not shrimps.”
    Madhan was arrested in a higher education scam, where he allegedly collected Rs. 91 crore from parents of students seeking admission to SRM Medical College in 2016.

    Colleges, universities seek GST exemption for outsourced services

     | Aug 4, 2017, 10:36 AM IST

    Representative imageRepresentative image
    CHENNAI: In the wake of the introduction of the goods and services tax, several higher educational institutions in the state are seeking tax exemption on certain educational services, particularly those which are outsourced.


    Until 2013-14, educational institutions were exempted from service tax and when the tax was introduced, auxiliary services were exempted. These included transportation of students, faculty and staff, catering, including mid-day meals scheme, security and services relating to admission or conduct of examination among others. Institutions in the state are now urging for the exemption to continue under the new GST regime.


    The Vellore Institute of Technology is the latest institute to send a representation to the central government in this regard. The memorandum sent this week states that several construction activities as well as catering services for students and staff are outsourced by institutions. "With GST now chargeable at 18%, it puts enormous strain for us, as we cannot take input credit due to lack of taxable output service. This will enhance financial burden for students and parents," it said. Earlier, Sastra University , Thanjavur, sent a similar representation to the Centre.


    Vaidhyasubramaniam, dean, planning and development, Sastra University , said GST on auxiliary educational services would either dilute the focus of institutions from their core academic activities, or increase the unit cost of education and affect the gross enrollment ratio, adding that this was not in sync with the national policy on higher education. Prof Ganesh Subramaniam of SRM University said some universities may be able to handle the cost increase but it would eventually impact students as varsities may make up for the cost expenditure by hiking fee structures. However, Kala Vijayakumar of SSN College for Engineering said, "With the fee committee having fixed a ceiling on the academic fee, many colleges may not have the freedom to hike it.This will mean incurring higher costs for administrations."

    Madras HC dismisses PIL challenging hike in MLAs’ salaries

    L Saravanan| TNN | Aug 4, 2017, 03:02 PM IST

    (MADURAI: The Maduraibench of the Madras high court on Friday dismissed a public interest litigation filed against the hike in the salaries of MLAs in Tamil Nadu from Rs 55,000 to Rs 1.05 lakh.

    The PIL filed by K K Ramesh of Madurai came up for admission before the division bench of justices KK Sasidharan and GR Swaminathan.

    The petitioner said lakhs of agriculturists have lost their livelihoods due to monsoon failure last year. They were unable to repay their debts, and the government had not helped them properly, he said.

    He also said, "Since expenditure is higher than the income in the state, many departments, including electricity and transport, have been affected. The government has a debt of Rs 45,119 crore. In these circumstances, the hike in salaries and allowances of MLAs is not acceptable, which is against the welfare state and economy."

    A representation was sent to the principal secretary, state's chief secretary, finance secretary and Tamil Nadu Legislative Assembly secretary on July 21. But there was no response from them, he said.

    Dismissing the petition, the court said there was no proof to substantiate the petitioner's claim and also that the court could not intervene in the business of the assembly.

    NEWS TODAY 25.12.2025